Wednesday, October 31, 2018

ரபேல் விமான இரகசியம் சீனா தான் காரணமா

ரபேல் விமான ஒப்பந்தம் பற்றிய செய்திகளை இரகசியம் என்றும் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான செய்தியாகையால் விபரங்களை வெளியிட முடியாது என்றும் கூறும் இரகசியம் இதுவாக தான் இருக்க முடியும்.

இந்த ஒப்பந்தம் வெளியாகும் முன் மோடி சீனா சென்று வந்தது மக்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இந்தியாவின் விமானப்படை வலுப்பெறுவதை சீனா விரும்பவில்லை. ஆகையால் விமான படையின் வலிமையை காக்கும் விதமாக வாங்க இருக்கும் விமானங்களையும் மற்ற தவாடங்களையும் வாங்க கூடாது என்று மோடி சீனாவில் மிரட்டப்பட்டு இருக்கனும்.

அப்படி மிரட்டப்பட்டு மிரண்டு போன மோடி நாடு திரும்பியதும், தனக்கு சீனாவால் இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றும் நிமித்தமாக 128 விமானமாக இருந்த ஒப்பந்தத்தை வேண்டாம் என்று முடிவு எடுத்தது. பிறகு எதிர்கட்சிகளும் செய்தியாளர்களும் கேள்வி கேட்ப்பார்களே என்று ஒப்புக்கு 36 விமானங்கள் மட்டும் வாங்குவதாக அறிவிப்புகளை வெளியிட்டது.

அந்த 36 விமானங்களும் பொம்மை விமானங்களை கூட தயாரித்த அனுபவம் இல்லாத நிறுவனத்திடம் கொடுத்து எந்த விதமான தரமும் திரனும் இல்லாத பொம்மை விமானங்களாக தான் இருக்க வேண்டும் என்ற சீனாவின் மிரட்டலுக்கு கட்டுப்பட்ட மோடி அவ்வாரே செய்தார்.

படிப்படியாக இதே போல் இந்தியாவின் பாதுகாப்பு துறையை முற்றிலுமாக வலுவிழக்க செய்யுமாறும் மோடி மிரட்டப்பட்டுள்ளார். அதன் பொறுட்டு பிரான்சு, இசுரேல் மற்றும் இரசியாவிடம் இருந்து எந்த விதமான பயனும் இல்லாத ஆயுதங்களை மட்டும் கண்துடைப்புக்காக வாங்குவதாக சீனாவின் ஆணைக்காக செய்து இருக்கிறார் பிரதமர் மோடி.

இது புரியாமல் எதிர்கட்சிகளும் செய்தியாளர்களும் ரபேல் ஊழல் என்று பிதற்றுகிறார்கள். அதுவும் சிதம்பரமும் இதே போல் பேசுவது எரிச்சலை வரவழைக்கிறது.

இனி காலத்திற்கும் இந்தியா சீனாவின் அடிமையாக இருக்கும் படியாக பாசக சத்தம் இல்லாமல் செய்துவிட்டு, மோடி ஒருவரை பார்த்து அமெரிக்கா பயப்படுகிறது என்று தனது சங்கிகளை விட்டு செய்தி பரப்ப செய்கின்றது.......

Tuesday, October 30, 2018

இதுக்கு பேசாம தமிழக முதல்வராக்கி இருக்கலாம் - ராசபட்சே

அமெரிக்க உளவாளி சுசாமி மகிந்த ராட்சபட்சேயை இந்தியாவுக்கு வான்னு சொன்னராம், அவரும் வந்தாராம். வந்ததும் எப்படி இலங்கையின் பாராளமன்றத்தை கலைத்து ராசபட்சே பிரதமர் ஆவது என்று சுசாமி இரகசியம் சொல்லி கொடுத்தாராம்.

இலங்கை சென்ற அவர் நேர கடமையாக இதை செய்தாராம், மோடியின் இராசதந்திரம் பலித்துவிட்டதாம். சீனாவும் அமெரிக்காவும் இனி எப்படி மோடியை மிரட்டுவது என்று விழி பிதுங்கி இருப்பதாக பாசகவின் ஊதுகுழல்கள் செய்திகளை கசிந்துவிட்டுக்கொண்டு இருக்கிறது.....

இதுக்கு பேசாம இராசபட்சேவை தமிழக முதல்வராக ஆக்கி இருக்கலாம் பாசக........

Monday, October 22, 2018

அன்னை ஸ்ரீவித்யா அவர்களின் நினைவாக

பூவுலகை விட்டு மறைந்தாலும் எங்கள் நெஞ்சில் என்றும் வாழும் அன்னையே. நீ கொண்ட நிம்மதி கொண்டு அமைதியாய் இருந்து எங்களை வாழ்த்து.

Thursday, October 18, 2018

குசராத்து மாதிரி கேரளாவில் கலவரம் - தூத்துகுடி துணை தாசில்தார் எங்கே

சபரிமலைக்கு வரும் பெண்களின் பின்னணியை ஆராயவேண்டும் என்று எச்ச சர்மா தெரிவித்துள்ளார். இன்று மோகன் பகாவத்து சபரிமலையை கலவர பூமியாக அந்த தீர்பு மாற்றிவிட்டதாக உச்ச நீதிமன்றத்தை குற்றம் சாற்றுகின்றார்.

குசராத்து கலவரத்துக்காக தனது சொந்த மக்களையே கொன்று குவித்துவிட்டு அதை இசுலாமியர்கள் தான் செய்தார்கள் என்று பொய் பரப்புரையை பரப்பிவிட்டு 6 நாட்களில் ஒன்னறை இலட்சம் மக்களை கொன்று குவித்தது போல் கேரளத்தில் நடத்த பாசக சதிகளில் ஈடுபட்டு வருவதை எச்ச சர்மா மற்றும் மோகன் பகாவத்தின் குற்ற சாற்றுகளில் இருந்து தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

யார் வேண்டும் என்றாலும் அர்சகராக ஆகலாம் என்று முதன் முதலில் நிறுவிய அரசையும் அந்த கட்சியையும் நாட்டைவிட்டே ஒழிப்பது தான் இவர்களது திட்டம்.

தூத்துகுடியில் துப்பாக்கி சூடுக்கு ஆணையை வழங்கிய துணை தாசில்தாரை பாசக தேடிக்கொண்டு இருக்கிறது. அவரை அவசர அவசரமாக சபரிமலைக்கு அனுப்பி துப்பாக்கி சூடு நடத்த ஆணையை வழங்குமாறும் ஏற்பாடுகள் ஆகிகொண்டு இருக்கிறது.

கேரளாவில் இருப்பது ஒன்றும் பழனிசாமியின் பொம்மை அரசு ஒன்றும் இல்லை என்று நிரூபிப்பார்களா என்று பொருத்து இருந்து பார்ப்போம்.

Tuesday, October 16, 2018

மோடியின் செல்வாக்கு இவ்வளவு தானா - ஒரு வேளை அம்பானி முயன்று இருந்தால்

கச்சா எண்ணையை வாங்க இந்திய ரூபாயில் வர்த்தகம் புரிய வேண்டும் என்று வைத்த யோசனாவை முழுக்க எண்ணய் விற்கும் நிறுவனங்கள் நிராகரித்து விட்டதாக தகவல் வந்துக்கொண்டு இருக்கிறது. மோடி பிரதமரானால் எல்லோரையும் தூக்கி போட்டு பந்தாடுவார் என்று வர்ணித்தார்கள் சங்கிகள். ஆனால் இந்தியாவின் ரூபாயில் எல்லாம் வர்த்தம் செய்யமுடியாது வேண்டும் என்றால் அமெரிக்க டாலரோ அல்லாது யூரோவாகவோ தந்தால் சரி என்று நினைக்கிறார்கள் போலும்.

அது சரி நாளை ஒரு இரவு தொலைகாட்சியில் தோன்றி எண்ணை வாக்க கொடுத்த ரூபாய் எல்லாம் செல்லாது என்று மோடி பதவி இறங்கும் போது சொல்ல மாட்டார் என்று எந்த நிச்சயமும் இல்லை என்று நினைத்து இருப்பார்கள் போலும், அப்படி இல்லை என்றால் அம்பானியிடம் கொடுக்க அரபு நாடுகளில் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிந்து இருக்கும் போலும்.........

Thursday, October 11, 2018

பொக்ரான் ( பார்மனு ) - பாசகவின் இந்தி பிரச்சார படம்

பாசகவின் சாதனைகள் என்று பிரச்சாரம் செய்யும் விதமாக எடுக்கப்பட்ட படம் இந்த பொக்ரான் இந்திபடம்.

படம் துவங்கும் போது அமெரிக்கா அணு குண்டு வெடிச்சது வல்லரசு ஆனது, சீனா அணு குண்டு வெடிச்சது வல்லரசு ஆனது. அது போல நாமும் அணு குண்டு வெடித்தால் வல்லரசு ஆகலாம் என்று துவங்கும்.

வல்லரசு - இது பாசகவின் பிரச்சாரகளில் பிரதானமாக அடிக்கடி சொல்லப்படும் வார்த்தைகளில் ஒன்று.

1995ஆம் ஆண்டில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இப்படி சொன்னவுடன் வரும் சமோசாவை சாப்பிட அலையும் கூட்டம் முன்னே பேசினோமே என்று வருத்தப்படும் காட்சி வைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது நாடும் நாட்டுப்பற்றும் பாசவிற்கு தான் சொந்தம் என்றும் மற்றவர்களுக்கு சமோசாவும் நாடும் ஒன்று என்று சொல்வதாக காட்சி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் அந்த குறித்த நேரத்தில் வேலைகள் எல்லாம் முடித்த பின்பும் ஆபிரகாம் போ என்று சொல்லும் வரையில் இராணுவ வீரர்கள் நிற்பது போலவும், இவன் கையை காட்டும் போது தான் விளக்கை அனைப்பதாக காட்டுவதும் சிறுபிள்ளை தனமாக இருக்கிறது. அங்கு இருக்கும் அனைவருக்கும் அந்த குறித்த நேரத்தில் வேலைகள் முடிக்க வேண்டும் என்று தெரிந்தும் ஆபிரகாமை எல்லா நொடிக்கும் எதிர்பார்ப்பதை எப்படி பின் சொல்வது...

பஞ்சபாண்டவர்கள் என்றும் பாரதம் என்றும் பாசகவின் வசனங்கள் வியூகம் அமைக்கும் போதே வந்து போகின்றது.

இவ்வளவுக்கும் நடுவில் பாசவின் ஆட்சியிலும் பாக்கிட்தாணில் இருந்து  இராசதானில் வந்து சர்வ சாதாரணமாக உளவு பார்ப்பதாக காட்டி பாசகவை காட்டி கொடுத்துள்ளார்கள் ஆபிரகாம் குழுவினர்.....

அந்த அணு குண்டு எப்போது வெடிக்கும் என்ற எதிர்பார்ப்பு படம் முடியும் வரையில் இவைகள் அனைத்தும் தாண்டி படத்தில் எதிர்பார்க்க வைப்பது படத்தின் பலம்.

இன்னும் இது போல பணமதிப்பிழப்பு பற்றியும் ஆபிரகாம் குழுவினர் படம் எடுத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும்.........

Wednesday, October 10, 2018

நக்கீரன் கோபாலன் வழக்கில் பாசக சங்கிகள் இப்படி தான் பேசுவார்கள்

அமெரிக்கா போன்ற மிக முன்னேறிய நாடுகளில் எல்லாம் ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் எழுதும் செய்தி ஊடகங்களும் அதன் கட்டுரையாளர்கள் முதல் செய்தி ஆசிரியர்கள் வரை தேசதுரோக வழக்கில் உள்ளே தள்ளி சாக அடிப்பது தான் வழக்கம் அப்படி தான் இந்திய அரசும் நடந்துக்கொண்டுள்ளது, இதில் என்ன தவறு என்று கோலாகல சீனீவாசன் முதல் மற்ற அடி பொடிகள் வரை கேட்பார்கள் பார்க்கனும்....

Tuesday, September 4, 2018

நல்ல வேளை காந்தி திருப்பூர் குமரன் எல்லாம் இப்போது இல்லை

காந்தி திருப்பூர் குமரன் எல்லாம் பொது வெளியில் தான் போராட்டம் எல்லாம் செய்தார்கள், தங்களது வீடுகளில் அல்ல. ஆனால் பாசக சொல்கிறது போராட்டம் என்றால் தங்களின் வீடுகளில் தான் நடத்த வேண்டுமாம். விதிகளுக்கு உட்பட்டு என்று தமிழிசை சொல்வதை பார்த்தா புதிய தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் வந்துவிட்டார் என்று எல்லாம் நினைக்காதீர்கள் என்று எச்சரிப்பது போல் இருக்கிறது.

தமிழிசை சௌந்தராசன் இவ்வளவு பெரிய முட்டாளா

ஒரு முட்டாளுக்கு கூட தெரியும் ஒழிக என்ற வாக்கியம் கொலை மிரட்டலோ அல்லது வேறு எந்த கொலை குற்றமும் ஆகாது என்று. ஆனால் இந்த அடி முட்டாள் தமிழிசை சௌந்தர்ராசனுக்கு ஏனோ இவைகள் புரியவில்லை போலும். பொது அமைதி கெட்டுவிட்டதாம், அவரை கொலை செய்வதாக மிரட்டினாராம் சோபியா........இவ்வளவு பயம் இருந்தால் ஏன் அந்த தீவிரவாத இயக்கத்தில் தமிழிசை சேரவேண்டும் என்று தெரியவில்லை.

Saturday, July 21, 2018

இராகுல் காந்தி கொட்டியிருக்கும் பொய்கள்

GST வரி விதிப்பின் மூலம் பொருட்களின் விலை குறையும் என்று சொன்னார்கள் -- அன்றைக்கு 2 ஒரு காபி 20 ரூபாக்கு விற்றது, இன்றைக்கு அதே காபி வெறும் ரூபாய் 26 விற்கிறது. விலை குறைந்தது இராகுலின் கண்களுக்கு தெரியவில்லை போலும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்புக்களை உருவாக்குவோம் -- கடந்த ஆண்டு 4 இலட்சம் வேலை வாய்புகள் மட்டுமே என்று சொல்கிறார் இராகுல் -- பாசக ஆண்டிற்கு 2 கோடி என்று தான் சொன்னதே தவிர ஒரு ஆண்டுக்கு என்று சொல்லவில்லை, இதே அளவில் வேலை வாய்புகளை உருவாக்கினால் 50 ஆண்டுகளில் 2 கோடி வேலை வாய்புகளை உருவக்க முடியும் என்றது 5ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கும் கணக்கு போட தெரிந்த ஒன்று, இராகுலுக்கு கணக்கும் போட தெரியவில்லை என்று நிறுபித்துவிட்டார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தோல்வி -- யார் சொன்னது இராகுல், இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இரண்டே ஆண்டுகளில் சுட்சர்லாந்து நாட்டில் காங்கிரசு ஆண்ட 70 ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட தொகையைவிட வெறும் இரண்டு மடங்கு பணம் மட்டுமே இரண்டே ஆண்டுகளில் அதிகம் சேர்ந்ததாக சுட்சர்லாந்து நாடு தெரிவிக்கின்றது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மட்டும் இல்லை என்றால் இதுவே 1000 மடங்கு அல்லவா அதிகரித்து இருக்கும் அதுவும் பாசக ஆட்சியில் 1000 மடங்கு அதிர்கரித்தது என்று அல்லவா வரலாறு பேசும்.

அது மட்டுமா தங்கம் வாங்க விற்க, மாடுகள் வாங்க விற்க ஆதார் எண் அவசியம் என்று கொண்டு வந்தால் தான் தமிழ் நாட்டில் பிடிபட்ட சேகர் ரெட்டி மற்றும் அருப்புக்கோட்டையில் வெறும் 250 கிலோ, 120 கிலோ தங்கம் மட்டும் சேர்த்து வைத்து இருந்தார்கள். அப்படி ஆதார் எண் அவசியம் இல்லை என்று இருந்தால் பட்டி தொட்டி எல்லாம் இருக்கும் குப்பனும் சுப்பனும் அவனவன் வீட்டில் 10 முதல் 20 கிலோ வரையில் அல்லவா தங்கம் வாங்கி குவித்து இருப்பார்கள். தங்கம் தொழிலதிபர்கள் மட்டுமே வாங்கும் பொருள் அதை எப்படி, மற்றவர்கள் வாங்கலாம் இராகுல் உங்களுக்கு விவத்தையே இல்லையே.

தமிழகத்தில் இன்று அரசு பேருந்துகளில் 5 பேர் செல்ல கொடுக்கும் பணத்தில் தனியாக ஒரு காரை அமர்த்தி கொண்டு சென்றுவிடலாம் என்ற நிலை. இந்த விலை வாசியில் சுங்கம் என்ற பெயரில் ஒவ்வொருவரிடமும் வரிடத்திற்கு 180 கிலோமீட்டருக்கு ரூபாய் 15,000 வரை சுங்கம் எதற்கு செலுத்த வேண்டும் என்று அனியாயமாக இராகுல் கேட்கிறார் -- பிறகு நாட்டில் இருக்கும் குப்பன் சுப்பன் எல்லாம் ஏதோ TVS 50 தான் வாங்குகிறார்கள் என்று பார்த்தால் இப்போது கார் எல்லாம் வாங்கிக்கொண்டு வாரமானால் கூட்டம் கூட்டமாக ஊர் சுற்ற கிளம்பினால் எப்படி. அது எல்லாம் பணக்காரர்கள் செய்யும் வேலை அதை எப்படி குப்பனும் சுப்பனும் செய்யலாம், இது கூடவா தெரியாது இராகுல். அது தான் சுங்கம், பெட்ரோலிய விலை, மற்றும் அதிக டிக்கட்டுகள்.

நாளை தமிழகத்தை ஆளப்போகும் நிர்மலா சீத்தாராமன் பொய் சொல்வாரா இல்லை வெறும் பிரான்சை ஆளும் அதிபர் பொய் சொல்வாரா -- இது கூட தெரியவில்லையே இராகுல். ஆதாரத்துடன் நிர்மலா நிரூபித்துவிட்டாரே அந்த பிரான்சு அதிபர் தன் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்ளப்போகிறார்.

இராகுல் சொன்னதிலே மிகவும் பெரும் பொய் இது தான் - பிரதமர் நாட்டின் பெரும் முதல்வர்களுடன் தான் உறவாடுகிறார் என்றது. உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதான் இராகுல் 2016ல் டிசம்பர் 8ற்கு பிறகு பிரதமர் சொன்ன முதல் அறிக்கையில் இப்போது தான் ஏழைகள் எல்லாம் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்றது. அன்றைக்கு முதல் இன்றைக்கு வரை ATM ஏடிஎம் வாசலில் நிற்பது அதாணியும் அம்பானியும் தானே தவிர ஏழைகளோ அல்லது நடுத்தர வர்க மக்களோ கிடையாது. பிரதமரின் அந்த ஏழைகளின் அபிமானத்தையே கிண்டல் செய்துள்ளார் இராகுல்.

பிரதமர் எப்போதும் கோட்டு சூட்டு போட்டவர்களிடம் மட்டுமே பேசுகிறாராம் - இராகுல் பன்னீர் செல்வத்தை பார்த்து இருக்கிறீர்களா அவரை மட்டும் 2 மாதங்களில் 50க்கும் மேற்பட்ட வரை பார்த்து இருக்கிறார். பன்னீர் எவ்வளவு எளிமையான மற்றும் ஏழை என்றது நாட்டிற்கே தெரியும். அந்த மாதிரியான தியாகிகளை சந்திப்பதை மட்டுமே தனது கொள்கையாக கொண்டுள்ள மோடியை கிண்டல் எல்லாம் அடிக்காதீர் இராகுல்.

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லையாம் -- நாட்டில் பாசகவிற்கு ஓட்டு போட்டு தேர்ந்து எடுக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் முதலில் தள்ளுபடி செய்யபடுவது விவசாயி கடனை தான். பாசகவை தேர்ந்து எடுக்காதது அந்த அந்த மாநிலங்களின் தனிப்பட்ட பிரச்சனை. பாருங்கள் அருகில் இருக்கும் குட்டி குட்டி நாடுகள் எல்லாம் மோடி புகழ் பாடுகிறார்கள், மொத்த தென்னகத்து மக்களுக்கும் தேவைபடும் 10 ஆண்டுகளுக்கு உண்டான பணத்தை எடுத்து அந்த நாடுகளின் பெயரில் அதாணிக்கும் அம்பானிக்கும் மோடி வழங்குவது எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை போலும். இப்படி புலம்புவதை விட பாசகவிற்கு வாக்கு அளிக்க சொல்லி அந்த மக்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லுங்கள் இராகுல்.

 நன்றாக ஞாபம் வைத்துக்கொள்ளுங்கள் இராகுல் மோடி ஒரு ஏழை தாயின் மகன், எப்படி ஒரு ஏழை தாயின் மகன் கல்லூரியில் சேர்ந்த உடன் தனது வகுப்பில் படிக்கும் பணக்கார மாணவர்களின் நண்பனாக ஆக்கிக்கொண்டு அவர்களை போல் இவனும் உண்ண உடுத்த தனது ஏழை தாயிடம் ccc புத்தகம் வாங்க பணம் வேண்டும் என்று பொய் சொல்லி வாங்கிய கதை எல்லாம் உங்களுக்கு தெரியாதா. ccc புத்தகம் என்றால் சினிமா சிகிரெட்டு காப்பி என்று தெரியவில்லை என்றால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் இராகுல். இப்படி ஒரு ஏழை தாயின் மகன் பணக்காரர்களுடன் தானும் பரம்பரை பணக்காரர் போல் பழகுவதை பார்த்து பொறாமை கொள்ளாதீர்கள் இராகுல். ஏழைகளின் பிரச்சனை உங்களுக்கு புரியாது இராகுல்....

Friday, July 13, 2018

சுசாமி சொல்வது போல் சசிதரூருக்கு மனநிலை சரி இல்லை தான்

கடந்த 4 ஆண்டுகால பாசக ஆட்சியில் பாலாறும் தேனாறும் நாட்டில் பாய்ந்து ஓடியதாகவும், இனி 2019ல் பாசக மறுபடியும் வென்றால் தான் இந்து பாக்கிட்தானமாக மாறும் என்றும் பிதற்றியுள்ளார் சசிதரூர்.

ஐயா சசிதரூர் இந்திய இரயில்வேயுக்கு சொந்தமான வண்டிகளின் எஞ்சின்களை இன்னும் பார்க்கவில்லையா. என்னவோ அமெரிக்கா, சீனா, பாக்கிட்தானத்திற்கும் இன்ன பிற நாடுகளுக்கு போய் திரும்பி வரும் வண்டிகளை போல் எல்லா வண்டியிலும் இந்தியாவின் மூவர்ணக்கொடி. கொஞ்சம் விட்டா இரயிலில் பாசுபோர்டை காட்டு அப்போதான் டிக்கட்டு கொடுப்போம் இல்லைனா ஓடு என்று சொல்லும் அளவிற்கு இந்து நாடாக விளங்கி வருகிறது இந்தியா.

திருப்பதியில் இலட்டு வேண்டும் என்றாலும் கைரேகை வைக்காமல் கொடுக்க மாட்டேன் என்று சொல்கின்ற நிலைமை.

தன்னிடம் இருக்கும் பணம், வாங்கி வைத்து இருக்கும் நிலவுடமைகள் எல்லாம் எப்போது பரிபோகும் என்று தெரியாத நிலையில் மக்கள்.

ஏன்னையா இப்படி செய்கிறீர்கள் என்று போராட்டம் கூட இல்லை வாட்சப்பில் ஒரு வரி செய்தி போட்டால் கூட கைது, மாத கணக்கில் தனிமை சிறை, கொசுக்கடி, ஆள் கடத்தல் என்று மிரள வைத்துக்கொண்டு இருக்கிறது இந்திய அரசாங்கம்.

2050ல் நிலாவில் வீடு நிலம் எல்லாம் வாங்கலாமாம் என்று ஒரு கற்பனை கதையை ஒரு கதாசிரியர் எழுதினார் அந்த கற்பனையில் வர இருக்கும் சியோ பல்கலைகழகத்திற்கு 2018ல் உலகத்தில் மிகசிறந்த உயர்தர ஒரு லட்சம் கோடி ஆண்டுகளுக்கு மூன்னே நீட்டு பரீட்சையில் தேறி கட்டமைத்தவர்கள் என்று சொல்லி 10,000 கோடி ரூபாய்களை அள்ளி வீசும் பாசக அரசு. இதைவிட ஒரு சர்வதிகார அரசு உலகில் எங்கேயும் இருக்க முடியாத நிலையில் இனிமேல் தான் நடக்கும் என்று சொல்ல சசிதரூர் மனநிலை பிழன்றவராகத்தான் இருக்க முடியும்.

2019 பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் போது யார் யார் எல்லாம் ஓட்டு போட தகுதியானவர்கள், யார் யார் எல்லாம் இனி காலத்திற்கும் ஓட்டே போட முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவிக்க இருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தையும் நம்மையையும் கருதி இனி இவர்கள் எல்லா ஓட்டளிக்க தடைவிதிக்கிறது என்று நேரடியாக உச்ச நீதிமன்றம் அறிவிக்கும். பிறகு என்ன இப்போது போராட்ட மக்களை சிறையில் தள்ளி வேடிக்கைபார்க்கும் அரசை தூர நின்று வெறும் வேடிக்கை மட்டும் பார்க்கும் எலிகளாக மாறியது போல் அப்போது நடு நடுங்கிய எலியாக பார்த்துவிட்டு ஒளிந்துகொள்ள வேண்டியது தான் இணையபுலிகளான நாம். மன்னனு வாக்கு எந்திரங்களை சந்தேகிப்பதோ புகார் சொல்வதோ கொலை குற்றத்திற்கு ஈடான குற்றம் என்றும், மரண தண்டனை வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவிக்கும்.

இந்தியாவில் இனி சம்பாதிக்கும் பணமெல்லாம் சுங்கமாகவும், வரியாகவும் நடுத்தர மக்கள் அழுது சாக வேண்டியது தான். பணக்காரர்களுக்கு தொழிலில் மிகவும் நலிவடைந்து இருப்பதால் அவர்களும் வரியும் கிடையாது வட்டியும் கிடையாது. மிகவும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் வங்கியில் பணத்தை எல்லாம் எடுத்து கொடுத்து ஐரோப்பா இல்லை அமெரிக்காவிற்கு இலவசமாக இந்த பாசக அரசு அனுப்பி வைக்கும் என்று தெரிவிப்பார்கள் உச்ச நீதிமன்றம் மூலம். பிறகு என்ன விமர்சனமும் செய்யமுடியாது கேள்வியும் கேட்கவும் முடியாது.

Tuesday, July 10, 2018

சிறுநீர் கட்சியாக மாறிய பாசக

முதலில் மூத்திர திட்டம் இப்போ சிறுநீர் பாசன திட்டம். அசத்துது பாசகவும் அதன் தொண்டர்களும்.

Wednesday, July 4, 2018

இளிச்சவாய் இந்தியன் இருக்கும் வரை இதுவும் சொல்வார் இன்னமும் சொல்வார் நிதின் கட்காரி

சாலைகள் வேண்டும் என்றால் சுங்கம் கட்டணுமாம், பிறகு எதுக்கையா வரி கட்டூரீங்க வைர மோடிக்கும் கிரிகெட்டு மோடிக்கும் கொடுக்கிறதுக்கா.

சுங்க சாலைகளை அமைத்துள்ள அமெரிக்க நாட்டில் சுங்கம் செலுத்தி செல்ல ஒரு சாலையும் அதே தரத்தில் சுங்கம் இல்லாமல் செல்ல சாலையும் உண்டு.

அதுவும் இங்கே இருப்பது போல் ஒவ்வொரு சுங்க சாவடியிலும் 20 முதல் 30 நிமிடம் வரை நிற்க தேவை இல்லை. சுங்கத்தை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் இருந்து எடுத்துக்கொள்ளும் தொழில் நுட்பமும் அவர்களிடம் உண்டு.

சென்னை செல்லும் நேரத்தை பாதியாக குறைக்கத்தான் சுங்கவழி சாலைகள் என்று சொல்லிவிட்டு சுங்க சாவடிகளில் 2 மணி நேரம் நிற்க வைத்து அதே தாமதமான நேரத்தில் செல்ல ஆண்டுக்கு நாங்கள் எதற்கு 15,000 சுங்கம் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டும். இன்னும் நிறை மோடிகள் பணத்தை சுறுட்டிக்கொண்டு ஓட வசதியாக இருக்கும் என்றா.....

 நீதிமன்றத்தில் நாம் செலுத்திய வரியில் அமைத்த சுங்கம் இல்லா சாலைகள் எங்கே என்று கேட்டு வழக்கு தொடுக்க வேண்டும். அப்படி அரசு பதில் சொல்லாத பட்சத்தில் வீட்டில் ஒருவருக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் என்று கணக்கிட்டு அரசு வழங்கும்படி உத்தரவிட மக்கள் கேட்க வேண்டும்.

மக்களுக்கு அந்த சுங்கம் இல்லா சாலைகளை அமைக்கும் வரை சுங்க சாலைகளை பொது மக்களுக்கு திறந்துவிடவும் ஆனையிட நீதிமன்றத்தில் கேட்க வேண்டும்.

Tuesday, July 3, 2018

70 ஆண்டுகளில் இல்லாத சாதனை பாசக வெறும் 2 ஆண்டுகளில் சாதித்து இருக்கிறது

2016ஆம் ஆண்டிற்கு பிறகு சுட்சர்லாந்தின் வங்கியில் இந்தியர்களால் சேமிக்கப்படும் நல்லப்பணம் 70 ஆண்டுகளில் சேர்த்த தொகையைவிட இரண்டே ஆண்டுகளில் 50% கூடியதாக சுட்சர்லாந்து வங்கி நிறுவனம் பாசக அரசை வாழ்த்தி இருக்கிறது.

அது மட்டும் அல்லாது சுட்சர்லாந்து வங்கிக்கு வரும் பணம் எல்லாம் கள்ளப்பணம் என்று உலகமே பரிகாசிக்கும் நிலையில், இந்தியர்கள் சுட்சர்லாந்து வங்கிக்கு கொண்டுவந்து கொட்டும் பணம்  எல்லாம் நல்லப்பணம் என்று இந்திய அரசு சாண்றிதழ்களோடு கொடுப்பதில் சுட்சர்லாந்து வங்கி மகிழ்ச்சியையும் நன்றியையும் வழங்கியுள்ளது.

2016ஆம் ஆண்டின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு டிசிட்டல் பண பரிவர்த்தனைகள் கூடி இருப்பதாக பாசக அரசு செய்திகள் குறிப்பிடுவதும் இந்த சுட்சர்லாந்து பண பரிவர்த்தனைகளை தான் சொல்கிறார்கள்.

பாராட்டுக்கள் மோடி இன்னும் இது போல் நிறைய நடவடிக்கைகளை எடுத்து நாட்டில் இருக்கும் கள்ள பணத்தை எல்லாம் நல்லபணமாக மாற்றி கொடுங்கள்.......

Tuesday, June 26, 2018

அவசர நிலையை பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது

சிறுபான்மையினர் அச்சத்தில் வாழ்வது, உரிமைகள் மறுக்கப்படுவது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தனது விருப்பம் போல் செயல்படுவது பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல். எந்த வித ஞாய தர்மங்களுக்கும் கட்டுப்படாமல் தான் தோன்றி தனமாக செயல்படுவது.

நாட்டின் வளங்களை ஏகாதிபத்தியமாக ஒரு சில முதளாலிகளுக்கு உரிமையை கொடுத்து ஏன் இப்படி என்று கேட்டால் கேட்பவரின் வாயிலேயே சுட்டுக்கொல்வது. இந்தியாவின் வளங்களை வெளி நாட்டு மக்களுக்கு விற்பது, ஏன் என்று கேட்டால் நள்ளிரவில் வீடு புகுந்து சிறைப்பிடித்து வெளியே வரமுடியா வண்ணம் அடைத்தல்.

வானொலியையும் தொலைக்காட்சியையும் கையில் வைத்துக்கொண்டு புளுகுவது. பாட புத்தகங்களில் உண்மைக்கு புறம்பாக வரலாறுகளை திரித்து எழுதுவது. மக்களின் அடிப்படை தேவைகளை தேவைக்கள் அதிகரிக்கும் போது கள்ள சந்தையில் விற்பது போல் அரசே அதிகவிலைக்கு விற்பது, பெட்ரோல் பொருட்களைப் போல்.

நாட்டின் முதுகெலும்பு விவசாயம், அவர்களின் ஆதாரங்களை அழித்து வெளி நாட்டு முதளாலிகளின் வர்த்தகத்தை கொண்டு வந்து நடத்த மறைமுகமாக ஆதரவு அளிப்பது.

நாட்டில் படிப்புகளில் இந்த இந்த படிப்புகளை இவரிவர்கள் தான் படிக்க வேண்டும் என்ற ரீதியில் ஒழிக்க திட்டங்களை நிறைவேற்றுவது.

எவனோ ஒரு வெளி நாட்டு முதாளாலி தான் இந்தியாவில் வாங்கி இருக்கும் கஞ்ச மலையில் இருக்கும் தாதுகளை விரைவாக சென்னை துறைமுகத்திற்கு எடுத்து செல்ல 10,000 கோடி செலவில் பசுமைகளை அழித்து ஒரு சாலையை நிறுவுவது.....

சட்ட சபை தேர்ததில் வெற்றி பெற்ற கட்சிகளை விட்டு விட்டு தோற்று போன கட்சிகளை தங்களின் கட்சிகாரர்களை கொண்டு ஆட்சி அமைக்க அழைப்பது.

இப்படி மோடி பற்பல மக்களாட்சி முறைகளை எல்லாம் நிலை நாட்டி வரும் வேளையில் அவசர நிலை குறித்து பேசுவது மிகவும் பொருத்தமாகவும் அழக்காகவும் இருக்கிறது.......

Friday, June 22, 2018

இந்தி பேசாமலும் கருப்பாகவும் ஆங்கிலம் பேசுபவனாக இருந்தால் அவன் தமிழன்

சிக்காக்கோ விமான நிலையத்தில் நடந்த நிகழ்வு இது. ஒரு வயதான எழுதபடிக்க தெரியாத வடக்கதிய பெண்மணி தனியாக இந்தியா செல்லுகிறார். அவரை சரியான விமானம் பிடித்து செல்லும் வகையில் அவருக்கு சர்க்கர நாற்காலி சேவை வேண்டும் என்று கேட்டு கொடுத்துள்ளார்கள் அவரை தனியாக இந்தியா செல்ல அனுப்பியவர்கள்.

அந்த எழுதபடிக்க தெரியாத வடக்கத்திய பெண்மணி அவளை ஏற்றிக்கொண்டு நெடுந்தூரம் அவரை தள்ளிக்கொண்டு வரும் போது தொடர்ந்து இந்தியில் அவனுடன் இந்த பெண்மணி பேசுகிறார். அந்த கருப்பர் இனத்தை சேர்ந்த 19 அல்லது 20 வயது மதிக்கத்தக்க இளைஞனோ ஆங்கிலத்தில் சொல்லவும் என்று மறுபடியும் மறுபடியும் வேண்ட, இவரோ வம்படியாக இந்தியில் பேச ஒரு கட்டத்தில் அந்த பெண்மணி அந்த கருப்பர் இன இளைஞனை பார்த்து நீ தமிழா என்று கேட்க நாங்கள் எல்லோரும் வாய்விட்டு சத்தமாக சிரிக்க அந்த பெண்மணி ஏன் சிரித்தோம் என்று தெரியாமல் கோபத்தில் இந்தியில் திட்டுவதை அவதானிக்க முடிந்தது.

தமிழன் என்றால் கருப்பாக இருப்பான், ஆங்கிலத்தில் பேசுவான் அதுவும் அமெரிக்கர்கள் பேசுவது போல் நவமாகவும் நாகரீகமாகவும் பேசுவான், ஆனால் இந்தி தெரியாது என்றது வடக்கத்தியர்களின் விளக்கம் போலும்.

Sunday, June 3, 2018

இளையராசா - இளமை இசையின் 75ஆம் பிறந்த நாள்

அம்மாவின் பாசத்தை விவரிக்க முடியுமா இல்லை அப்பாவின் அன்பை தான் அளவிடமுடியுமா. அது போலத்தான் இளையராசாவின் இசையும், அதை உணரமட்டும் தான் முடியும். உயிர் இருந்து உடலை இயக்குவது போல் உள்ளத்தில் இருந்து மனதை இயக்கும் மந்திரம் அவரின் இசை. நீண்ட நெடுந்தூர பயணம் கூட அதுக்குள் முடிந்துவிட்டதா என்று உணரவைக்கும் பாடல்கள் என்னுடன் இருக்கும் வரையில். அடடா இன்னும் இவ்வளவு பாடல்கள் இருக்கின்றதோ எப்போது கேட்டு முடிப்போம் என்று இருக்கும்.

காலை மாலை இரவு அதிகாலை என்று பிரித்தாலும் வருவது என்னவோ இவரது இசையே. பின் இரவில் மட்டும் கருப்புவெள்ளை பாடல்கள் இல்லை என்றால் விடியும் வரை விழித்து இருப்பது உறுதி. பலமுறை முயன்று பார்த்த தோல்வியின் பாடங்களாய் கருப்புவெள்ளை பாடல்கள் பின்னிரவில் மட்டும்.

வயது எல்லாம் ஒரு எண்ணிக்கையே, படைப்புகள் என்றால் அது வயதாக இருப்பதே படைப்புகள். இளையராசாவின் இசை அந்த வரிசையில் சேர்ந்து பல பத்தாண்டுகளை கடந்துவிட்டது. இரண்டு தலைமுறை என்று மட்டும் எழுதுகிறார்கள். அது இன்னும் எத்தனை தலைமுறையை கடக்கப்போகின்றது என்று இருந்து பார்க்கவேண்டும் போல் இருக்கிறது..........

Friday, June 1, 2018

சல்லிக்கட்டு போராட்டத்தில் காவலர்கள் சீருடையில் வந்த தீவிரவாதிகள் - Gujarat Model

சென்னையில் நடந்த சல்லிக்கட்டு போராட்டத்தில் காவலர்ளின் உடையணிந்து வந்து வாகனங்களுக்கும் கூரைவீடுகளுக்கும் தீ வைத்த சீருடை தீவிரவாதிகளை பற்றி தலைவரும் அவரது எசமானர்களான தமிழிசையும் இது வரையில் வாய்திறக்காமல் இருப்பதன் மர்மம் என்ன என்று சொல்லமுடியுமா....

அன்றைக்கு காவலர்களின் சீருடையில் வந்த அந்த தீவிரவாதிகள் இன்றைக்கு தூத்துகுடியில் சீருடையில்லாமல் வந்து கலவரம் செய்து இருக்கிறார்கள்.

எங்கே பொதுமக்கள் பார்த்துவிடுவார்களோ என்று மக்களிடம் இருக்கும் அத்தனை கருவிகளையும் அலைபேசிகளையும் பிடுங்கி வைத்துவிட்ட பிறகு நடந்து தான் வன்முறை.

அது எப்படி ஒரு பத்திரிகை நண்பர்கள் கூட படம் எடுக்கமுடியாமல் போனது விளக்குவார்களா........

இதே கூட்டம் நாளை இந்துக்கள் போராட்டத்தில் தலையில் குல்லாய்யுடனும், முசுலீம்களின் போராட்டங்களில் காவி உடையணிந்தும் வந்து வன்முறையில் ஈடுபடும்.

அப்படியே குசராத்து கலவர வடிவம் தூத்துகுடியில் அதே பாணியில் பிறகு காவலர்கள் என்ன பார்த்துக்கொண்டா இருப்பார்கள் எனேற கேள்வி வேறு.............

Thursday, May 31, 2018

யார் அந்த சமூக விரோதிகள் - தலைவரும் தமிழிசையும் யாரை சொல்கிறார்கள்

முதன் முதலில் தமிழக போராட்டங்களில் சமூக விரோதிகளும் பயங்கரவாதிகளும் தீவிரவாதிகளும் கலந்துவிட்டார்கள் என்று மைய அமைச்சர்கள் சல்லிக்கட்டு போராட்டத்தின் போது திருவாய் மலர்ந்தார்கள். அதன் தொடர்ச்சியாக தூத்துகுடியிலும் அப்படி நடந்ததாக சொல்கிறார்கள் தமிழிசையும் அவர் கட்சியின் முதல்வர் வேட்பாளர் தலைவரும்.

பாசகவின் பொம்மலாட்ட அரசியல் முதல்வர் பொம்மைகள் ஏற்கனவே சமூகவிரோதிகள் என்று சிரித்துக்கொண்டே மக்கள் இறந்ததை சொல்லும் அந்த வெட்கம் கெட்டவார்களின் செயல்களை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

சென்ற போராட்டத்தில் காலிகாவலர்களை கொண்டு வன்முறையை துவங்கியதை மக்கள் படம் பிடித்து வெளியிட்ட அனுபவத்தை கணக்கில் கொண்டு இந்த முறை யாரும் படம் எடுக்க முடியாதபடி மக்களை விரட்டியடித்ததும். இணையத்தை முடக்கியபிறகு அரசு மட்டும் வெளியிடும் படங்கள் வெளியாகி இருப்பது சந்தேகத்தை இன்னமும் உறுதி செய்கின்றது.

குசராத்தில் துவங்கிய அரச பயங்கரவாதத்தை பாசக மெல்ல தமிழகத்தில் அரங்கேற்றி வருகின்றது. இனி யாராவது போராட்டத்தை நடத்தினால் வாயிலேயே சுட்டுக்கொள்வோம் என்று நிறுவியுள்ளார்கள்.

வேதாந்தா வீசிய ரோட்டி துண்டுக்கு பாசக பொதுமக்களை கொன்று குவித்துள்ளது தனது பொம்மலாட்ட அரசை கொண்டு.......

Wednesday, May 30, 2018

பாசக கலந்து கொள்ளாத போராட்டத்தில் எப்படி பயங்கரவாதிகள் - தமிழிசை

தமிழிசை சொல்கிறார் சமூக விரோதிகளும் தீவிரவாதிகளும் தூத்துகுடி போராட்டத்தில் புகுந்துவிட்டார்களாம். அது தான் பாசக இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லையே பிறகு எப்படி சமூக விரோதிகளும் பயங்கரவாதிகளும் இந்த போராட்டத்தில் வந்திருக்க முடியும். தமிழிசை உறுதியாக சொல்வதை பார்த்தால் திட்டமிட்டு வெளியில் தெரியாமல் பாசக மற்றும் சங்க பரிவாரங்களை ஊடுருவ செய்து வன்முறையை தூண்டிவிட்டு போராளிகளின் மேல் பழியை போடுகிறார்கள் போலும்........

Friday, May 25, 2018

இந்திய சுதந்திர போராட்டத்தை ஞாபகபடுத்தும் போராட்டங்கள்

இந்திய சுதந்திர போராட்டங்களை வரலாறு பாடத்திலும், படங்களிலும் கதைகளிலும் மட்டும் தான் அறிய இருந்தோம் இது வரை.

மக்களின் நலனுக்கு எதிராக அல்லது மக்களை கணக்கிலே எடுத்துக்கொள்ளாத நடவடிக்கைகளை எதிர்க்கவோ அல்லது போராடவோ உரிமையில்லாத நிலையை தான் அடிமை நிலைமை என்று அறிஞர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்கள் இது வரை.

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு என்ன செய்தாலும் கேள்வி கேட்கவோ அல்லது எதிர்த்து பேசவோ என்ந்த உரிமையும் இல்லை என்று சொல்ல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்ன உரிமை இருக்க முடியும்.

யார் யாருக்கு என்ன என்ன உரிமைகள் இருக்கிறது என்று விளிக்கும் விதமாக அல்லவா இருக்கிறது அரசின் நடவடிக்கைகள்.

என் வீட்டு பெணகளையும் உன் வீட்டு பெண்களையும் நீதிபதிகளின் வீட்டு பெண்களையும் பொதுவாக அசிங்கப்படுத்திவிட்டு என்னை முன் பிணையில் விடுவிக்க வேண்டும் என்று சேகர் உச்ச நீதிமன்றம் வரை செல்ல முடிக்கின்றது. ஆனால் உயிருக்கு ஆபத்து, இது வரை நடந்தது என்ன இனிமேல் அதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று கோறும் மக்களின் பிரதினிதிகளை குறி பார்த்து கொல்லும் அரசின் செயலை கேள்வி கூட கேட்க முடியவில்லையே.....

இந்திய சுதந்திரத்திற்கு முன்பு இம் என்றால் சிறை ஏன் என்றால் வனவாசம் என்று தான் இருந்தாக படித்து இருக்கிறோம் ஆனோல் இன்றைக்கு நேரில் பார்க்கும் கொடுமை.... அதற்கு மேல் உயிரையே எடுக்கும் நிலை....

காலவர்களே பொது சொத்துகளை கொளுத்துவதும் அதை போராட்டகாரர்கள் தான் கொளுதினார்கள் என்று  நீதிமன்றதில் சொல்வதும் அதை உண்மை என்று நீதிமன்றம் அங்கிகரிப்பதும் யாரை கேலி செய்யும் செயல்கள் என்று தான் புரியவில்லை.....

என்ன தான் அழுது புலம்பினாலும் மாண்டார் வரப்போவதில்லை, அந்த 13 உயிர்களின் பலிக்கு என்ன பதிலை வைத்துள்ளோம்..... அவர்களை பிர்ந்து தவிக்கும் குடும்பங்களை சுமக்க போவது யார்......

மலர்ந்தும் மலாராத மலர்களாக பிரிந்தவர்களும், மரமாகி நிழாக நின்றவர்களும் இன்று நம்மோடு இல்லை.......அவர்களை தங்களின் எதிர் காலமாக நினைத்து வாழ்ந்த மக்களுக்கு என்ன சொல்ல போகின்றோம் நாம்..........

இப்படி விடையே தெரியாத கேள்விகளாத்தான் இருந்தது இந்திய சுதந்திர போராட்டம்..........

அதன் நவீன வடிவமாக் ஈழ மக்கள் அழிக்கப்பட்டதை மிக அருகாமையில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் நாம்.......

தனக்கு சட்டம் வழங்கி இருக்கும் உரிமையில் போராட சென்ற ஆண்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள் முதலில்......

என்ன ஆனாலும் போராடுவோம் என்று சென்றவர்களின் குடும்பமும் உடமைகளும் தீக்கிரையாக ஆக்கப்பட்டது பிறகு. போராடம் சென்று விட்டு வீடு திரும்பினால் வீடோ சொந்தமோ இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள் ஈழத்தவர்கள்.....

அரசு நினைத்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யும் என்று சூளுரைத்தார்கள் ஆட்சியாளர்கள்....கிட்டத்தட்ட அவர் பல்கலையின் வேந்தர் அவருக்கு தான் உரிமை இருக்கிறது அவர் யாரை வேண்டும் என்றாலும் பதவில் அமர்த்துவார் நீங்கள் வேடிக்கை மட்டும் பருங்கள் என்று தமிழிசை சௌந்தராசன் சொல்வது போல் சொன்னார்கள்.

பிறகு தமிழர்கள் என்று தெருவில் கானும் அனைவரும் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள்..........

அரசை நம்புவதா இல்லை உரிமைக்காக போராடும் போராளிகளை நம்புவதா என்று குழம்பிய குழப்பத்தில் தப்பித்து பிழைத்த மிச்ச சொச்ச மக்கள் இந்த 11 ஆண்டுகளாக வதை முகாம்களுக்குள் முள்வேளிகளுக்குள் காட்சி பொருளாகவும் அகில உலக கண்காணிப்பாளர்களுக்கு சாட்சியாகவும் வாழவும் முடியாமலும் சாகவும் முடியாமலும் தவிக்கும் அந்த ஈழ மக்களின் நிலையும் வரலாறையும் நினைவில் கொண்டு வந்து நிறுத்துகின்றது..........

ஒற்றுமையாக இருந்த 4 மாடுகளை பசு, மாடு, சானி, பசு மூத்திரம் என்று பிரித்து தனித்தனியாக ஆக்கிய பின்பு அவர்களின் மீது பாய்ந்த புலியின் கதையாக அல்லவா ஆகி இருக்கிறது தூத்துக்குடி நிகழ்வுகள்........

இப்படியே இணையத்தில் எழுதிக்கொண்டும் பரிகாசம் செய்துக்கொண்டும் பொழுதை கழிப்போம்.... நமக்கான உனக்கான ஒரு தலைவன் வருவான் என்று கனவு காண்போம்..................

Thursday, May 24, 2018

இனி யாராவது போராட்டம் செய்வீங்க

எதுக்கு எடுத்தாலும் போராட்டம் எப்பவும் போராட்டம் என்றால் எப்படி. நடக்கிறது நடக்கட்டும் என்று இருந்துவிட்டு போகவேண்டியது தானே....

யாரோ சொன்னாங்கன்னு கொடிய தூக்கிகிட்டு வெற்றி வேல் வீர வேல்லுன்னு போய் கடைசியில 13 போர் பலி. யாரோ பெற்ற அந்த பிள்ளைகளை எதற்காக பலி கொடுக்க வேண்டும்....

தமிழ் நாட்டின் வளங்களை எல்லாம் கொள்ளை அடித்து வடநாட்டு முதலாளிகளுக்கும் வெளிநாட்டு மக்களுக்கும் இந்திய அரசு விற்றால் உங்களுக்கு என்ன என்று இருக்க வேண்டியது தானே.

தமிழகத்தில் இருக்கும் கனிம வளங்கள் மட்டும் இல்லை கல்வி வளங்களை கூட எடுத்து விற்றுவிட்டு தான் போகட்டுமே உனக்கு ஏன் இத்தனை கோபம்.

விட்டு விடுங்கள் போராட்டங்களை, விட்டு கொடுங்கள் தமிழகத்தை. பாரத மாதாகி சே, வாழ்க பாரதம்.

Thursday, May 17, 2018

நேர்மை என்றால் அது பாசக தான் - அவர்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்

என்ன நேர்மை, என்ன அரசியல் தூய்மை என்ன ஒரு அறிவு, என்ன ஒரு ஆழ்ந்த புலமை. ஒரு ஆளும் கட்சி என்றால் இப்படி அல்லவா இருக்கனும். முதலில் ஆளுனர்கள் நியமனம் அடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம். பிறகு என்ன அவர்கள் செய்வது தான் செயல், சொல்வது தான் ஞாயம் எல்லாம்.

மற்ற கட்சிகள் எல்லாம் வீன், அவ்வளவும் வீனே.

Tuesday, May 1, 2018

சின்னஞ்சிறு குழந்தைகளாக பேசும் பாசகவின் முதல்வர்கள் - கார்டூகள் படுத்தும் பாடு

சின்னஞ்சிறு வயதில் சூப்பர்மேன்(superman) பைடர்மேன்(spyderman) கீமேன்(Heman) தொடங்கி இராமாயணம் மகாபாரத கதைகளை கார்டூனாக பார்த்து இருப்போம்.

அந்த வயதில் அந்த பூனை எலியை விரட்டி பிடிக்கப்போய் அடி வாங்கும் காட்சிகளை பார்க்கும் போதும், தூங்கிக்கொண்டு இருக்கும் அந்த பெரிய நாய் வந்து அந்த பூனையை வெளுக்கும் போதும் மனதில் மகிழ்ச்சி மட்டும் அல்ல, நாய்கள் ஞாயமாக நடந்துக்கொள்பன, பூனைகள் முட்டாளானவை, எலி மிகவும் புத்திசாலி என்றும் மேலோட்டமாக மனது நம்பும். அடுத்த முறை அந்த விலங்குகளை பார்த்தால் அதே அபிப்பிராயத்தில் தான் பார்க்க தோன்றும்.

இது ஒரு புரம் இருந்தால் மற்றொருபுரம் சூப்பரமேன் துவங்கி இன்னும் என்ன என்ன மேன்கள் இருக்கிறார்களோ அத்தனை மேன்களும் நாட்டில் எங்கேனும் அநீதி நடந்தால் மாயமாக தோன்றி உதவுவார்கள் என்று நம்பிக்கையையும் தூவும் கதைகளாக தான் வலம் வந்தது.

இல்லை அநியாயம் நடந்தால் தட்டிக்கேட்கும் தன்மை மனிதர்களுக்குள் உதிக்க உதவியாகத்தான் இந்த கார்டூன் தொடர்கள் என்று அவர்கள் சொன்னாலும். எந்த வம்பு தும்புக்கும் போகாதீர்கள் என்று சொல்லித்தான் குழந்தைகளை வீட்டில் வளர்ப்பார்கள்.

எது உண்மை எது மிகைபடுத்தப்பட்டவை என்று அறியாபருவத்தில் பார்க்கும் கதைகளும் அதன் பொருட்டு மனதுக்குள் வரும் நல்ல எண்ணங்களை விதைத்தாலும் அந்த நிகழ்வுகள் எல்லாம் உண்மை அல்ல. மிகைபடுத்தப்பட்டவைகள் என்று வளர்ந்த அனைவரும் அறிவார்கள். இதன் தொடர்ச்சியாக வரும் திரைப்படங்களும் நாடகங்களும் கதைகளும் அந்த வகைகளே.

ஒரு மாநிலத்தின் முதல்வர், அந்த மாநிலத்தின் மக்களால், தங்களின் நலனுக்காக செயலாற்ற தேர்வு செய்யப்பட்டவர்கள். எவ்வளவு அறிவும் செயல் திறனும் கொண்டவர்களாக இருக்க வேண்டியவர்கள். அவர்கள் பேசும் பேச்சுகளை பாருங்கள், கார்டூன் குழந்தைகளாக அவர்கள் பிதற்றுவது நாள் தோறும் செய்திகளில் வருகின்றது.

இந்த அறிய பிள்ளைகளை தான் தனது கட்சியின் பிரதினிதிகளாக பெருமையாக சொல்லிக்கொள்ளும் பாசக எத்தனை பெரிய அறிவார்ந்த கட்சியாக இருக்கும்........

போய் பக்கோட சுட்டு விற்கும் வேலைக்கு செல்லுங்கள் பாசக மக்களே.......




Sunday, April 29, 2018

ஒரு தலை ராகம் - இன்றைய இளைஞர்கள் பார்த்தால் என்ன சொல்வார்கள்

ஒரு தலை ராகம் படத்தை இன்றைய இளைஞர்கள் பார்த்தால் என்ன சொல்வார்கள். புறனாணூற்று காதல் என்று தான் சொல்வார்கள்.

பெண்களை விடுங்கள் ஆண்களே தனக்கு உன்மேல் விருப்பம் காதல் என்று சொல்ல தயங்கிய காலத்தில் எடுக்கப்படம்.

ஒரு தலை ராகத்தில் பாடலிலும், இலைமறை காயாக தான் அவனின் காதல் வெளிப்பாடுகளை காட்டுவான். அதுவும் பணக்கார அப்பாவின் இரண்டாம் மனைவியின் மகன் என்ற தயக்கம் அவனுக்கு, அவளுக்கோ ஓடிப்போன அப்பா தனியாக தாய் வளர்க்கும் இரண்டு பெண்களில் ஒருவர் என்ற தயக்கம் படம் திரைக்கதையில் ஆங்காங்கே குறுக்கிடுவது கவிதையாய் அமைந்த படம்.

கோடை விடுமுறையில் கோவிலுக்கு செல்வதும் அங்கே இவனும் அவளும் மனதிலே பேசிக்கொள்ளும் காட்சிகளும் கவிதையே.....

அது அந்த காலம், இது குழந்தை பாடும் தாலாட்டு போல் தரமான பாடல்களும் இசையும் வந்துக்கொண்டிருந்த காலம். என்ன ஒரு பாடல் இன்றைக்கு நினைத்தால் கூட ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு இயலாமையை காட்ட அத்தனை இயலா காரியங்களையும் தொகுத்து எழுதிய கவிதையாய் அந்த பாடல்.

ஆருதலாக பேசும் தோழி எத்தனை பேருக்கு கிடைப்பார்கள், அதுவும் உடல் நிலை சரி இல்லை என்றது வீடு வரை வந்து விசாரித்துவிட்டு போகும் தோழி என்று அருமையான ஒரு பாத்திரம். புது புத்தகம் என்றதும் உரிமையுடன் வாங்கி பெயரை எழுதித்தரும் தோழியாய்......

கல்லூரியின் கடைசி நாள் அனேகமாக அனைவரின் மன நிலையும் அப்படி தான் இருந்திருக்கும். அது வரையில் எப்போது முடியும் வீட்டிற்கு போகலாம் என்று இருக்கும் மனது அன்றைக்கு இனிமே அவ்வளவு தான் என்று தெரியும் போது படும் வேதனையை வெளிப்படுத்த வார்த்தைகளே கிடையாது........

என்ன ஆனாலும் பரவாயில்லை என்று கடைசியில் தைரியமாக காதலை தெரிவிக்க வரும் அவள் போன்ற தைரியமான பெண்கள் என்றைக்கும் உண்டு என்று அன்றைக்கே காட்டிய படம்.

அவளின் மனது என்ன என்று ஆழகாக வருணித்து பாடும் வாசமில்ல மலரிது பாடல் என்னே ஒரு பொருத்தம்.

மயிலாடுதுறையின் பக்கத்தில் இருக்கும் வயல்வெளி, செம்மனார்கோவுல், மணல்மேடு மற்றும் பூம்புகார் இடங்களில் அழகாக படமாக்கி இருப்பார் பாடல்களை.

ஆங்காங்கே காவிரி நீர் வாய்க்காலில் பாசனத்திற்கு பாய்வதை பார்க்கும் போது ஏக்கமாகவும் இருக்கிறது.....

உண்மை தான் அந்த இரயிலும் படத்தின் ஒரு பாத்திரம் தான், பார்க்கும் பெண்களின் மீது எல்லாம் காமப்பார்வையும் வக்கிர பேச்சுக்களையும் வீசும் இரவீந்திரனை சென்று முகதிலே ஒரு விடு விட்டால் என்ன என்று தான் இருந்தது.

ஒரு பெண்ணை விரும்புகின்றேன் என்று சொல்ல இரண்டு ஆண்டுகள் ஆனது அப்போது, ஆனால் இன்றோ நிலைமையே வேறு என்று படத்திலும் கதைகளிலும் பார்க்கும் போது அப்படியா என்று இருக்கிறது...........

Saturday, April 28, 2018

2000 ரூபாய் தாள் பதுக்கமுடியாதவை என்று சொன்னது எல்லாம் பொய்

பழைய இந்திய 1000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் சொல்லாதவைகள் என்றும், புதிதாக வரும் 2000 மற்றும் 500 ரூபாய் தாள்களை பதுக்கவோ ஒளித்து வைக்கவோ முடியாதவை என்றும். அப்படி பதுக்கி இருக்கும் இடத்தை செயற்கைகோள் கொண்டு அறிந்துவிடமுடியும் என்று சிரிப்பு நடிகர் சேகர் இரண்டு 1000 தாளில் வருகடலையை கொரித்துக்கொண்டு கொக்கரித்தார்.

இன்றைய செய்திகளில் வங்கியில் கொடுக்கப்படும் 2000 தாள்கள் திரும்பி வருவதில்லை என்றும், எங்கே தான் அவைகள் செல்கின்றது என்றும் தெரியவில்லை என்றும் இந்திய ரிசர்வு வங்கி கவலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

புராணங்களையே எல்லவற்றிற்கும் உதாரணம் உபயும் பாசக புதிய 2000 மற்றும் 500 தாளிற்கும் அந்த புராணகதைகளையே துணையாக கொண்டு புளுகியுள்ளது தெரிகின்றது. போதிய சோதனைகளை கடந்து தான் மக்கள் பதுக்க துவங்கி இருக்க வேண்டும்.

இன்னும் கொஞ்ச காலத்தில் அதே சிரிப்பு நடிகர் சேகர், அந்த 2000 மற்றும் 500 தாள்கள் எல்லாம் இந்திய செயற்கைகோள் உணர் எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டதால் தான் கண்டுபிடிக்க முடியவில்லை. இல்லை என்றால் கண்டுபிடித்து இருக்கும் என்றும் கூட சொல்வார்.

பாசக ஆட்சிக்கு வந்ததும் நாடு கிடுகிடுவென வளர்ந்து வல்லரசாகி அனைவருக்கும் வேலை, இடம் குடி நீர் என்று மகிழ்ச்சியாக இருப்போம் என்று சொன்ன பரப்புரையில் ஒரு அங்கமாக 15 இலட்சம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் என்று சொன்ன பொய்யை நம்பிய மக்கள் அல்லவா அந்த 31%விகித இந்தியர்கள். காத்து இருங்கள், இந்த தேர்தலில் அந்த 15 + இன்னும் இப்போது பதுக்கப்பட்டு இருக்கும் பணத்தையும் கண்டுபிடித்து 30 இலட்சமாக கொடுப்போம் என்று வாக்கு கேட்பார்கள்....பார்த்துக்கொண்டே இருங்கள் இந்தியர்களே.......

Saturday, April 21, 2018

யாருக்காக அமைகிறது இராணுவதளவாட ஆலைகள் தமிழகத்தில்

நிர்மலா சீதாராமனும் மோடியும் மற்றும் தமிழக பாசகவும் தமிழகத்தில் அமையவிருக்கும் இராணுவதளவாட ஆலைகள் தமிழகத்தின் வேலை வாய்ப்பை பெருக்க மோடியின் பாசக அரசு எடுத்து இருக்கும் ஒரு இமாலய திட்டம் என்றும். இந்த திட்டத்தினால் தமிழகத்தின் வேலை வாய்ப்புகள் பெருக்குவதை மக்கள் மதிக்க வேண்டும் பாராட்ட வேண்டும் போற்ற வேண்டும் என்று தமிழக பாசக கருத்து தெரிவிக்கின்றது.

நம்ம எல்லோருக்குமே நன்றாக தெரியும் இராணுவதளவாடமாக இருந்தாலும் சரி இல்லை இராணுவ வேலைகள் சம்பந்தமாக எது இருந்தாலும் சரி அதற்கு இந்தி தெரிந்தால் தான் வேலை இல்லையேல் வேலை இல்லை என்று சொன்னது நமக்கு எல்லாம் நன்றாக தெரியும்.

வேலைக்கி விண்ணப்பிக சொல்வார்கள், பிறகு ஒருவருக்கும் இந்தி தெரியவில்லை என்ன செய்ய சொல்கிறீர்கள், உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது, தகுதி இல்லையே இப்படி என்ன என்ன விபரங்களை எல்லாம் சொல்ல முடியுமோ அவ்வளவையும் சொல்லிவிட்டு. வடக்கில் இருந்து இந்த 5 ஆலைகளுக்கும் ஆட்களை கொண்டு வந்து வேலை, தங்க வீடு, படிக்க பள்ளிக்கூடம், மருத்துவ கல்லூரி என்று வடக்கதியர்களுக்கு கொடுத்து அழகு பார்ப்பார்கள்.

அதோடு நில்லாமல் அந்த வடக்கத்தியருக்கு தேவைபடும் சப்பாத்தியும் பக்கோடாவும் செய்து விற்று பிழைத்துக்கொள்ளுங்கள் என்று பாசகவினர் நக்கல் பேசுவார்கள்.......

Friday, April 20, 2018

பத்திரிக்கையாளர் இலட்சுமி சுப்பிரமணியம் இவ்வளவு கேவலமானவரா

தமிழிசை எச்ச சர்ம்மாவை இந்தியாவின் தூதுவராக ஐநாவிற்கு அனுப்புங்கள்

எப்போதுமே தனிப்பட்ட கருத்துக்களை மட்டுமே தெரிவிக்கும் எச்ச சர்ம்மாவை இனி இந்தியாவிற்கான ஐநா மற்றும் வெளிநாடுகளுக்கு தூதுவராக பதவி கொடுக்க வேண்டும்.

இந்த எச்ச சர்ம்மாவின் கண்ணியமிகு கருத்துக்களும் பேச்சுகளும் உலகலாவிய மக்களுக்கானது. இந்தியாவின் பாரம்பரியத்தை காக்கவும் வளர்க்கவும் அவதாரம் எடுத்த மகான்.

எப்படி விவேகாநந்தர் இந்தியாவின் சார்பிலும் இத்து மதத்தின் சார்பிலும் சிக்காகோவில் உரையை நிகழ்தினாரோ அது போல் இந்த எச்ச சர்ம்மாவை அனுப்பி தனது கண்ணியமான பேச்சை பேச சொல்லி அனுப்புங்கள். உலகில் இந்து மதத்தை இவரின் கண்ணியமான பேச்சில் மயங்கி இன்னும் பலகோடி பேர் இந்து மதத்தை தழுவுவார்கள்.

நிர்மலா தேவி விவகாரத்தில் எச்ச சர்ம்மா அதிகம் சிக்கி இருப்பார் போல் தெரிகின்றது, அதனால் தான் இந்த கொதிப்பு கொதிக்கிறார் எச்ச சர்ம்மா.

எச்ச சர்ம்மா மட்டுமா, நாள் தோறும் ஆளுனருக்கு வால்பிடிக்கும் நபர்கள் எல்லோரும் சொல்லும் பேசும் விதமும் பதட்டத்தையும் பார்க்கும் போது பயமாக இருக்கிறது.

இவர்களின் அடி பொடி ஒருவர் கேரளத்தில் 'நல்ல வேளை அந்த சிறுமி 8 வயதில் இறந்தால் இல்லை என்றால் இந்தியாவின் மேல் குண்டு போட்டு இருப்பார்' என்று எழுதுகிறது.

ஆளுனர் தனது அதிகாரங்களை பயன்படுத்தி தான் இப்படி பட்ட நிர்மலா தேவி ஊழல்களில் ஈடுபட்டுள்ளார் என்றதிற்கு சான்றாக அண்ணா பல்கலை துணை வேந்தர் நியமனம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நான் நினைத்தால் யாருக்கும் என்ன பதவியும் உயர்கல்வி துறையில் வழங்க முடியும் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று ஆளுனர் தெரிவிப்பதில் இருந்தே நோக்கத்திற்காக அவரது அதிகாரத்தை பயன்படுத்தினார், பயன்படுத்துவார் என்று தெளிவாக தெரிகின்றது. அதோடு நிற்காமல் தன்மீது சுமத்தப்பட்டு இருக்கும் குற்றத்தை தானே விசாரித்து சொல்லவதாகவும் சொல்வது மிகவும் கேவலமான நடவடிக்கை.

நாட்டில் திட்டமிட்டு படுகொலைகளை நிகழ்த்திவிட்டு அவர்கள் சார்ந்த சித்தாந்தத்தை நம்பும் மனிதர்களின் மத வெறிக்கு மேன்மேலும் எண்ணையை ஊற்றிய மோடி பிரதமராவதும். விசாரித்த நீதிபதியை கொலை செய்துவிட்டு அதை சரியாக விசாரிக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று தலைமை நீதிபதி சொல்லும் இந்த இந்திய நாட்டில் நிர்மலாவுக்கோ அல்லது அதில் தொடர்புடைய ஆளுனர் வட்டாரங்களுக்கோ என்ன பெரிதாக தண்டனை கிடைத்துவிட போகின்றது.

கையில் வைத்து இருக்கும் பணம் எல்லாம் இனி செல்லாது என்று சொன்ன வேளையில் வங்களின் வாசலில் காத்து இருந்தது தவிர என்ன செய்ய முடிந்தது இந்த 132 கோடி மக்களால். வெறுமனே கையை பிசந்துக்கொண்டு தானே நின்றார்கள். இது வரை ஆட்சியில் இருந்த பொருளாதார வல்லுனர்கள் கூட நீதிமன்றத்தை அனுகி அப்படி எல்லாம் ஓர் இரவில் செய்ய கூடாது என்றோ அல்லது பொது மக்கள் எல்லாம் திண்டாகுகிறார்கள் என்றோ சொல்ல செய்தார்களா இல்லை சொல்லத்தான் முடிந்ததா.

மக்களிடம் இருக்கும் இந்த பயம் தான் இந்த மதவெறி கும்பலின் பலம். மக்களி இப்படி பயந்து கிடக்கும் வரை எச்ச சர்ம்மாக்கள் இப்படி தான் இழிவாக எழுதுவார்கள், பேசுவார்கள். என்ன இன்றைக்கு யாரையோ தானே சொல்கிறார்கள் என்று இருப்பவர்களும் நாளைக்கு பேசப்படும் போது தான் அதன் வலி தெரியும்.

எச்ச சர்ம்மா போங்கள் உங்களின் இந்த கண்ணியமான நடத்தையை காண உலகம் துடித்துக்கொண்டு இருக்கிறது, ஊர் குருவியாக உங்களின் திறமையை வீணாக்காமல் உககிற்கு உங்களின் திறமையை நிரூபியுங்கள்...............

Wednesday, April 18, 2018

எச்ச சர்மாவின் வாக்குமூலமும் தமிழிசையின் மெல்லிய வருடலும்

நிர்மலா தேவி விவகாரத்தில் முட்டுக்கொடுப்பதாக நினைத்துக்கொண்டு எச்ச சர்ம்மா வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். அமேசான் இணையதளத்தில் பொருட்களை வாங்குவது போல் நிர்மலா தேவியிடம் என்ன என்ன வேண்டும் என்று சொன்னால் வீட்டில் பொருட்கள் வருவது போல் ஒரு ஏற்பாடுகள் நடந்துள்ளது. அமேசானில் பொருட்களை வாங்கியவன் எனக்கு அமேசானின் முதளாலியை யார் என்றே தெரியாது என்று சொல்வது போல் வாக்கு மூலம் கொடுத்த ஆளுனருக்கு ஆமாம் ஆளுனர் வாக்குமூலம் தான் கொடுத்துள்ளார் என்று உறுதிபடுத்தும் விதமாக இப்படி பிளிப்கார்ட்டில் வாங்கியவர்களிடம் கேட்க முடியுமா என்று எச்ச சர்ம்மா வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.

இந்த பதிலில் எச்ச சர்ம்மா தனது வழக்கமான கீழ்த்தரமான வார்த்தைகளில் கொடுத்த வாக்குமூலத்தை கண்டிக்க திராணியற்று போய் வருத்தமாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார் தமிழிசை. சொல்ல வேண்டியது தானே இதுவும் எச்ச சர்ம்மாவின் தனிப்பட்ட கருத்து அதற்கும் பாசகவிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று. இப்போது மட்டும் என்ன வருத்தம் வேதணை என்று....... நாளை உங்களையும் எச்ச சர்ம்மா இப்படி தான் விமர்சிப்பார்.................

நிர்மலா தேவி வழக்கு என்ன ஆகும் - கன்னடஇசையும் எச்ச சர்ம்மாவும் சொல்வது போல்

தூக்கு எந்திரத்தின் கம்பி அறுந்து விழுந்ததினால் தான் அந்த சாலையோரவாசி இறந்தார் என்று சல்மான் விடுதலையானதும். சங்கர் ராமன் தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தான் இறந்து இருக்க வேண்டும் என்று விடுதலையானதும். டான்சி நில வழக்கில் ஆவணங்கள் எரிந்து சாம்பலாக போனதால் சாட்சியங்கள் போதுமானதாக நிரூபிக்க படவில்லை என்று தங்க தாரகை விடுதலையானதும். நீதிபது லோயா சாதகமாக தீர்பு எழுதமாட்டார் என்று தெரிந்ததும் மாயாமாக மாரடைப்பில் இறந்ததும் வழக்கில் இருந்து அமித்து சா விடுவிக்கப்பட்டதும். 6 நாட்கள் குசராத்தில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கலவரங்களை அழகாக திட்டமிட்டு நடத்தியும் போதிய சாட்சிகள் சொல்லியும் கூட மோடி அப்பழக்கற்றவர் என்று விடுவிக்கப்பட்டதும் இந்த இந்தியாவில் தான்.

அனைதிற்கும் சிகரம் வைத்தார் போல் எட்டி உதைக்கும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு பெண் கர்ப்பிணி என்று எப்படி தெரியும் என்று சொன்னது இந்த இந்திய நீதித்துறை தான்.

அதே வேளையில் சட்டசபையும் பாதிக்கப்பட்டவர்கள் விட்டு விடுங்கள் என்று சொல்லியும், தனக்கு வழங்கப்பட்டு இருக்கும் வானலாவிய அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் நளினியை விடுவிக்க முடியாது என்று சொன்னதும் இதே இந்திய நீதிமன்றம் தான்.

வள்ளுவர் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை என்று நாள் தோறும் நமக்கு உணர்த்துகிறது இந்த இந்திய நீதிமன்றங்கள் பொருள்ளில்லாருக்கு இவ்வுலகு இல்லை. பொருள் என்றால் பணம் மட்டும் இல்லை என்றது அனைவரும் அறிந்ததே அதும் இந்தியா போன்ற சாதி, மதம் பாகுபாடுகளை போற்றி வளர்க்கும் பிற்போக்கு தனமான நாட்டில் நிர்மலா தேவி நாளை இப்படி இரு தீர்ப்பில் விடுவிக்கப்பட்டால் ஆச்சர்யபட தேவை இல்லை 'அந்த மாணவிகள் நிர்மலா தேவியிடம் தங்களுக்கு பண உதவி வேண்டும் என்றும், தங்களுக்கு ஏற்பட்ட தவறான பழக்க வழக்கங்களினால் வாழ்க்கையை தொலைத்துவிட்டதாகவும், அதற்கு உதவுங்கள் என்று கேட்டதாகவும். அதன் பால் தான் நான் அவர்களுக்கு எப்படி எல்லாம் வழிகள் இருக்கிறது என்று தாயன்புடன் சொன்னதாகவும். அப்படி சொல்லப்பட்ட வழிகளை மீண்டும் ஒரு முறை நீங்கள் அந்த உரையாடலை கேட்டால் தெளிவாக புரியும் எப்படி பட்ட மேற்படிப்பு மற்றும் அதற்கான நிதியுதவிகள் மற்றும் அதை தொடர்ந்து அதற்கான வேலையை என்னால் வாங்கிக்கொடுக்க முடியும் என்றும். அதற்காக நீங்கள் கடுமையாக படித்து உழக்க வேண்டும் என்று தான் சொன்னேன்' மற்றபடி உங்கள் கற்பனைக்குள் வரும் அழுக்கு ஊகங்களை எல்லாம் என் மேல் திணித்தால் எப்படி என்று வாதிட்டு. மாணவிகளின் காவல் தெய்வம் என்று பட்டம் கொடுத்து அசாம், மிசோராம், நாகாலாந்து போன்ற இடங்களில் இருக்கும் பல்கலைக்கு மிகவும் கௌரவமாக மாற்றப்படுவார். அவ்வளவு தான் நடக்கும்.

Tuesday, April 17, 2018

மோடி மே 3ல் காவிரி பற்றி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவார்

இப்போது தான் ஏழை விவசாயிகள் எல்லாம் நிம்மதியாக தூங்குகிறார்கள். அப்படி இப்படி என்று சத்தம் போடுபவர்களும் போராட்டம் செய்பவர்களும் கள்ள விவசாயிகள்.

நாட்டின் நலமும் ஏழைகளின் வாழ்வும் பாசக அரசால் பாதுகாக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றமும், உலக வங்கியும், ஐ நா சபையும் பாராட்டி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது என்றும் சொல்வார்.

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் இனி எப்பொழுதும் தர தேவை இல்லை என்று உச்ச நீதி மன்றமே சொல்லிவிட்ட பிறகு என்ன செய்ய முடியும் நீங்களே சொல்லுங்கள் என்றும் சொல்வார்.

விவசாயம் பொய்த்து போன தமிழகத்தில் இனி மிச்சம் மீதி இருக்கிற இடங்களில் எல்லாம் நிலத்தடியில் தோண்டி என்ன என்ன எடுத்து அம்பாணி, மிட்டல், அதாணி என்ற ஏழைகளுக்கு கொடுப்பதில் எந்த கேடும் நாட்டிற்கு வந்துவிட போவது இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது என்றும் சொல்வார்.

அந்த வடகத்தியர்களின் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வரும் வடக்கதியற்களுக்கு பக்கோடாவும் சப்பாதியும் செய்து கொடுக்கும் சுய தொழில் வேலைகளை பாசக பெருமளவில் தமிழகத்திற்கு இதன் மூலம் செய்து கொடுக்க முடியும் என்றும் அவரது அறிக்கையில் சொல்வார்.

Monday, April 16, 2018

40 ஆண்டுகள் சிறை கிடைக்க பிரதமர் மற்றும் பாசக கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள்

சமீபமாக பாசகவும் அதன் தமிழக தலைவர்களும் சென்னைக்கு வந்த மோடியை கொல்ல சதி நடந்ததாக செய்தியை ஊடகங்களில் வெளிப்படுத்தி வருவதை பார்த்து இருப்பார்கள்.

சுப்பிரமணி சாமி மறுபடியும் ஒரு இந்திய பிரதமரை படு கொலை செய்யும் திட்டத்தில் இறங்கியதாகத்தான் அந்த செய்திகளை பார்க்க முடியும்.

ஆகவே இனிமேல் பாசக கூட்டும் கூட்டதிற்கோ அல்லது பிரதமர் கலந்துகொள்ளும் கூட்டதிற்கோ தங்கள் பிள்ளைகளை தயவு கூர்ந்து பெற்றோர்கள் அனுப்ப வேண்டாம் என்று வேண்டி கேட்டுக்கொள்கின்றோம்.

2019ல் பாசக முழுவதும் ஊத்திக்கொள்ளும் என்ற ஆரூடம் சொன்னதுமே எப்படி வெல்வோம் என்று திட்டம் தீட்டி செயல்படுகின்றது பாசக.

விசுவ இந்து பரிசித்து இயக்கத்தின் பிரவீன் தொகாடியா தனது பொருப்பில் இருந்து விலகி இருப்பதும் இதற்காகத்தான். எங்கே தங்களது மீது பழி விழுந்து விடுமோ என்று ஒதுங்குகிறார்கள்.

வயர் வாங்கி கொடுத்தான், பேட்டரி வாங்கி கொடுத்தான் என்று சுப்பிரமணி சாமியின் வாதங்களை வைத்து 40 ஆண்டுகள் முதல் உயிர் போகும் வரை சிறையில் அடைத்து தனது கைகளின் கறைகளை கழுவிக்கொள்வார் சுப்பிரமணி சாமி.

கோத்ராவில் தங்களது உறவினர்களையே தாங்களே கொளுத்திவிட்டு மாற்று மதத்தினர் தான் கொளுத்தினார்கள் என்று சொல்லி வன்முறை செய்தவர்களுக்கு இது எல்லாம் சாதாரணம். சிந்திப்பீர் தவிர்ப்பீர்.

Friday, April 13, 2018

என்னே அறிவு தமிழிசைக்கு மெய்சிலிர்க்க வைக்கின்றது

ஒரு நாட்டையும் கட்சியையும் ஒன்றாக நினைத்து பேசும் அளவிற்கு பித்துபிடித்து போய் இருக்கிறது. எதிர் கட்சிகள் ராக்கெட்டுகள் விட்டால் தீவிரவாதமாகும் என்றது குழந்தைகளுக்கு கூட தெரிந்த செய்தி. பாவம் ஒரு தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளராக தன்னை தானே கருதிக்கொள்ளும் இவர் இப்படி எல்லாம் பேசுவது அவர் வ்கிக்கும் பதவிக்கு அழகல்ல.

அது சரி திட்டம் என்றால் என்ன என்று வினவும் சாதாரண அறிவு கூட இல்லாத கட்சியின் உறுபினரிடம் வேறு என்ன உருப்படியான செயலை எதிர்பார்க்க முடியும்............காவிக்கும் அறிக்கும் தூரம் எப்பவும் அதிகம் தான் போலும்.........

Thursday, April 12, 2018

எச்ச சர்மா - ஆண்டாள் போராட்டம் நடத்திய 'இந்துக்கள்' மற்றும் சீயர்களையும் கொலை முயற்சியில் கைது செய்ய வேண்டும்

சோடா பாட்டிலை வீச சொல்லியும் வீசுவோம் என்று சொல்லியும் வன்முறையை தூண்டிய ஆண்டாள் போராளிகளான 'இந்துகள்' மற்றும் சீயர்களை கொலை முயற்சி வழக்கில் கைத்து செய்ய வேண்டும் என்று எச்ச சர்மா கூறியுள்ளார்.

தனக்கு கட்சிக்குள்ளும் 'இந்துகள்' மத்தியிலும் மரியாதை இல்லை என்ற ஆதங்கமும் பொறாமையுடம் கூடிய ஆதங்கமாக இருக்கும் என்று 'இந்துகள்' மற்றும் சோடாபாட்டில் சீயர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மோடி நாளை அதிமுக கட்சியை கலைக்கிறார்

அதிமுக கட்சியை விலைக்கு வாங்கிய பாசக இது வரையில் பொறுமையாக இருந்தது. இந்து மத கலவரம் ஒன்றை தூண்டி அதில் மாநிலம் பற்றி எரியும் போது தேர்தலை அறிவித்து. அந்த கையோடு அதிமுக கட்சியை கலைத்துவிட்டோம் என்று பன்னீரையும் பழனிசாமியையும் சொல்ல வைத்து விட்டு அன்றில் இருந்து அதிமுகவும் பாசகவும் ஒன்று தான் என்று அதிமுக அனுதாபிகள் எல்லாம் பாசகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பரப்புவதாக திட்டம் இருந்தது.

நேற்றைய கலவரங்கு பிறகு இன்னமும் காலம் தாழ்தினால் சரியாக இருக்காது என்று நாளை தமிழகம் வரும் மோடி, இராணுவ அணிவகுப்புகளை பார்வையிட்டபடியே அதிமுகவின் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக மோடியின் தலைமையில் பாசகவில் இணைவதும். ஒருவரும் இல்லாத அதிமுகவை கலைப்பதும் நாளை நடபெற போகின்றது.

இந்த இணைப்பில் அரும்பாடுபட்ட கன்னடஇசை சௌந்தர் ராசனுக்கு குசராத்தை ஆளும் வாய்ப்பை கொடுப்பார்கள்.

நிர்மலா சீதாராமன் தலைமையில் பாசக ஆட்சி பொறுப்பை ஏற்கும்.

எச்ச சர்மாவுக்கு குசராத்து முதல் காசுமீரம் வரை மேற்கில் இருக்கும் மேற்கு எல்லையோரத்தை காக்கும் பணியில் மோகன் பகாவத்து ஆட்களுடன் அனுப்பி வைக்கப்படுவார்.

நிர்மலா சீதராமன் இராம இராசியத்தை தமிழகத்தில் நிறுவி இராவணன் பூமியாம் இலங்கையின் மீது படை எடுத்து அழிப்பாராக.

Wednesday, April 11, 2018

மோடி -காவிரிகாக உண்ணா விரதம் இருக்க போகிறார்

காவிரிகாக நடக்கும் போராட்டங்களை தினமும் பார்த்து உணர்ச்சி வசப்பட்ட பிரதமர் மோடி என்ன செய்வது என்றே தெரியாமல் தானும் 12ஆம் தேதி உண்ணா விரதம் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

எல்லாம் இந்த பழனிசாமியின் மகிமை, முதல்வர் உண்ணா விரதம் இருக்கும் போது பிரதமர் இருந்தால் என்ன என்று தமிழக பாசகவின் அடிபொடிகள் நாளை முதல் சலம்புவார்கள் என்று தான் கவலையாக இருக்கிறது.

பாசக அதிமுகவை பார்த்து அவர்களை போலே இவர்களும் நடந்துகொள்கிறார்களே என்று மட்டும் யாரும் கேட்டுவிடாதீர்கள்......

நாளை சென்னையில் வந்து அண்ணா சாலையில் அமர்ந்து உண்ணா விரதம் இருந்தாலும் இருப்பார் பார்த்து இருங்கோ மக்களே.....

மோடி உண்ணா விரதம் முடித்த கையோடு இப்போது தான் தமிழக மக்கள் எல்லாம் நிம்மதியாக இருக்கிறார்கள் என்றும், தமிழக மக்களுக்கு காவிரி கிடைக்க கூடாது என்று திட்டம் தீட்டியவர்கள் தான் இனி தூக்கம் இல்லாமல் அலைவார்கள் என்றும் அறிக்கை விடுவார். கூடவே மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுக்கனும்........

ஆகவே மக்களே காவிரிக்காக உண்ணா விரதம் இருக்க சென்னை வரும் பிரதமருக்கு ஏகோபித்த ஆதரவை அலைகடலென அண்ணா சாலையில் திரள உதவுங்கள் என்று எச்ச சர்மாவும், கன்னட இசையும் தினமும் 300 தடவை தொகவில் காவிரிக்காக நிரந்தர தீர்வு ஒன்றை மங்களகரமாக கொண்டு வர தான் நமது மதிப்பிற்குறிய பிரதமர் உண்ணாவிரதம் இருக்க வருகிறார் ஆகவே 'இந்துகள்' எல்லோரும் வந்து ஆதரவு தரவேண்டும் என்றும். அப்படி ஆதரவு தராதவர்கள் எல்லாம் இந்திய விதோதிகள் என்று அலருவார்கள்.

Monday, April 9, 2018

சல்மான் கானை இப்படி சொல்லி மான் வேட்டை வழக்கில் விடுதலை செய்வார்கள்

சல்மான் கான் அன்று இரவு தூக்கம் வராமல் யாரும் இல்லாத காட்டு பகுதியில் நடைபயிற்சியில் இருந்த சமயம் இருட்டில் சலசலப்புடம் ஒரு விலங்கு தாக்க வந்தாகவும். அந்த அச்சத்தின் காரணமாக தனது சொந்த பாதுகாப்புக்காக கொண்டு வந்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டலாம் என்று வெகுகவனமாக கையாண்ட போதும், மிரட்டும் நடவடிக்கையாக பாதுகாப்பான தூர குண்டு போகும் படி கோணம் மாற்றி சுட்ட போது மான் பயத்தில் அந்த குண்டின் குறுக்கே பாய்ந்து உயிரை அனியாயமாக மாய்த்துக்கொண்டது. இந்த செயலில் வேட்டையாடும் நோக்கமோ அல்லது அந்த அரிய மானை கொல்லும் நோக்கமோ சல்மானுக்கு அரவே கிடையாது என்று சொல்லி சுத்த சன்மார்க்க மனிதராக சல்மான் மாலை அணிவித்து விடுதலை செய்யப்படுவார்.

பொருள் இல்லாருக்கு உவ்வுலகில்லை என்ற குறளின் வலிமை அன்றைக்கு மக்களுக்கு முன் வந்து நடனமாடும்...........வல்லரசு இந்தியா ஆடப்போகும் அந்த களிப்பு நடனத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளோம்.......

Saturday, April 7, 2018

பாசக தமிழகத்தின் காவிரிக்காக போராடாத ஒரே கட்சி

ஆண்டாள் என்று சொல்லிக்கொண்டு ஊருக்கு ஊர் சோடா பாட்டில்களை வீச மேடை அமைத்து கொடுத்து ஆங்கிலம் மற்றும் உள்ளூர் ஊடகங்களை வைத்துக்கொண்டு ஊது ஊது என்று ஊதிய பாசக மக்களின் வாழ்வாதார பிரச்சனையான காவிரிக்கு இது வரையில் ஒரு துரும்பை கூட கிள்ளி போட வில்லை.

மாற்றாக கடல் நீரை குடியுங்கள், கர்னாடகம் என்ன செய்யும், போராடுவது தவறு, அரசியல் ஆதாயம் தேடகிறார்கள் என்றெல்லாம் அறிக்கை விட்டுக்கொண்டு உல்லாச இன்ப சுற்றுலா சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த 'இந்துகள்' கட்சி தமிழகத்திற்கு என்ன எல்லாம் செய்யும் என்று இப்போதாவது புரிந்துகொண்டால் சரிதான்.

தமிழகத்தை ஒரு குசராத்து கட்சி தான் ஆள வேண்டும் என்று சொல்பவர்கள் தமிழக பல்கலைகழகத்திற்கு தமிழர்களையா கொண்டு வருவார்கள். அமெரிக்காவில் இருந்து டிரம்பை கூட்டி வந்து தமிழர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்றால் அமெரிக்க டிரம்பு தான் பல்கலை துணை வேந்தாரக வரவேண்டும் என்றும் கூட சொல்வார்கள் பொருத்து இருந்து பாருங்கள்.

Friday, April 6, 2018

ஆங்கிலம் தெரியாத பாசக அமைச்சர்களை வைத்துக்கொண்டு வேறு என்ன செய்ய முடியும்

இந்தி படியுங்கோ, தேசிய மொழி என்று ஒன்று நமக்கு கட்டாயம் வேண்டும், அந்நிய மொழியான ஆங்கிலம் நமக்கு எதற்கு என்ற ஓகோ வசனங்களை ஏன் இத்தனை காலம் வடக்கத்தியர்கள் பேசினார்கள் என்று இப்போதாவது தென்னக மக்களுக்கு புரித்தால் சரி.

உச்ச நீதிமன்றத்தின் தீர்பு ஆங்கிலத்தில் திட்டம் என்று எழுதிய வார்த்தையின் பொருள் என்ன என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தையே கேள்வி கேட்டு இருக்கிறது ஆங்கிலம் அறியா இந்த தற்குறி பாசக அரசு கேட்டுக்கொண்டு இருக்கிறது இன்று.

இப்படி ஒரு கேவலமான இழி நிலையை மிகவும் பெருமையாகவும் அகந்தையாகவும் அறிவிக்கவும் செய்கின்றது இந்த ஆங்கிலம் தெரியாத பாசக அரசு. இந்த அழகில் உலகிலேயே முதன்  முதலில் என்று வரிந்துகொண்டு வார்த்தைக்கு வார்த்தை பெருமை வேறு இந்த அரசுக்கு.......

போங்கப்பா போய் புள்ள குட்டிகளவாது ஒழுங்கா ஆங்கிலம் படிக்க சொல்லுங்க, இதிலே வல்லரசாக ஆக்க இந்தி படியுங்கோ இல்லை என்றால் தனிமைபட்டு விடுவீர்கள் என்ற எச்சரிக்கை வேறு இந்த வெட்கமில்லா மனிதர்களிடம் இருந்து.........

Thursday, April 5, 2018

எப்போது எல்லாம் தமிழகம் போராடுகின்றதோ அப்போது எல்லாம் இன்ப சுற்றுலா செல்லும் பாசக

முன்பெல்லாம் மறைமுகமகாக இன்ப சுற்றுலாவுக்கு செல்லும் பாசக இப்போது வெளிப்படையாகவே இன்ப சுற்றுலா சென்றுள்ளது.

சல்லிக்கட்டு போராட்டத்தின் போது இதே பாணியில் எங்கே இருக்கிறார்கள் பாசகவினர் என்று சல்லடை இட்டு சளித்து பார்க்கும் அளவிற்கு பதுங்கி இருந்தார்கள் பாசகவினர். அந்த நிலையிலும் எச்ச சர்மா தனது செய்திகளில் தமிழர்கள் பாசகவை தேர்ந்தெடுத்து இருந்தால் இன்னேரம் சல்லிக்கட்டு காளைகள் துள்ளி ஓடி இருக்கும் என்று அறிக்கை விட்டார். பிறகு மெல்ல தமிழக அரசு தான் இப்படி செய்ய வேண்டும் அப்படி செய்ய வேண்டும் என்றும் அறிக்கைகள் விட்டுக்கொண்டு இருந்தார்.

இந்த கரளோபகர அறிக்கைகளுக்கு நடுவே சல்லிக்கட்டு பறிபோக காரணம் காங்கிரசு மற்றும் திமுக தான் காரணம் என்ற பரப்புரை தான் மேலோங்கி இருந்ததே தவிர பிரச்சணையை தீர்க்க ஒரு வழியையோ அல்லது அவர்களது மைய அரசை நாடி ஒரு தீர்வை எட்ட ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.

ஆண்டாள் பிரச்சணை என்றதும் தமிழகத்தின் மூலை முடுக்கு எல்லாம் 'இந்துகளை' கொண்டு வந்து நிறுத்தி சோடா பாட்டிலை வீசி கலவரம் செய்வோம் என்று முழங்கியும் கூட்டத்தை கூட்டியும் காட்டி போராடிய பாசக இன்று இன்ப சுற்றுலா கிளம்பி சென்றுள்ளது.

அன்றைக்கு 'இந்துகள்' சோடாபாட்டிலை வீசினால் அது மக்களின் உரிமையை நிலை நாட்ட நடக்கும் போராட்டம் ஆனால் இன்றைக்கு தமிழகம் போராடினால் வீணாக மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள், அரசியல் இலாபம் அடைய பார்க்கிறார்கள், அறிவில்லாமல் போராடுகிறார்கள், தண்ணீர் வேண்டுமா காவிரி வேண்டுமா, மேலாண்மை வாரியமா அல்லது அதிகாரமே இல்லாத குழுவா, ஆங்கில சொல் திட்டம் என்ற சொல்லின் நீதிமன்ற பார்வை என்ன, தமிழக தலைவர்கள் சுயலாபம் ஈட்ட பார்க்கிறார்கள், தமிழகத்தில் பாசக ஆட்சியாக இருந்து இருந்தால் இன்னேரம் எல்லோர் வீட்டிலும் காவிரி நீர் பொட்டலம் கட்டி வீட்டில் கொண்டு வந்து கொடுத்து இருப்போம், உச்ச நீதிமன்றமே சொல்லிடிச்சு, சீதராமையாவும் காங்கிரசும் தான் காரணம், 44 ஆண்டுகள் பொருத்த தமிழகம் இன்னும் 40 ஆண்டுகாலம் பொருத்தால் என்ன பெரிதாக ஆகிவிட போகின்றது, தண்ணீர் இல்லாமல் பட்டு போன காவிரி டெல்டா இடங்களில் கெயில் குழாய்களை புதைத்து அதாணிக்கு பணம் வர வழி செய்தால் உங்களுக்கு ஏன் கோபம் வருகின்றது, தமிழக மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று தான் தேனி மாவட்டத்தை பாலைவனமாக மாற்ற உள்ளோம், என்று எல்லாம் எகத்தாளமாக அறிக்கை விடுகிறார்கள் பாசகவினர்.

இப்போ தெரிகின்றதா பாசக அவருக்காவும் எவைகளுக்காகவும் மட்டும் போராட்டம் நடத்தும் என்று. இந்த கட்சி தமிழக மக்களுக்கான கட்சியாம், 'இந்துகள்' என்று இவர்கள் சொல்வது போல் இனிமே 'தமிழர்கள்' என்று தான் எழுதனும் போல.

மதியிலும் மா நிலத்திலும் இந்த அராசக அரக்க பாசகவிற்கே வாக்களியுங்கள் மக்க வாக்களியுங்கோ............

Wednesday, April 4, 2018

அடுத்த மாமா வேலைக்கு தயாராகுகிறார் சுப்பிரமணிசாமி

சுப்பிரமணிசாமியை பொருத்த வரை அமெரிக்காவின் உளவாளியாக மட்டும் வேலை பார்த்து காசு பார்த்தது பத்தவில்லை போலும். இப்பொழுது இசுரேலில் தொடங்கி வேறு எங்குமே பயன்பாட்டில் இல்லாத கடல் நீரை குடி நீராக்கும் இயந்திரங்களை எங்கே விற்பது என்று தவித்துக்கொண்டு இருக்கும் நிறுவனத்திற்கு கவலை படாதே மாமா நான் இருக்கிறேன் என்று களத்தில் குதித்து எப்படியாவது சந்தில் சிந்து பாட நினைக்கிறார் மாமா சுப்பிரமணிசாமி.

 நாடு அழிந்தால் எனக்கு என்ன மக்கள் செத்தா எனக்கு என்ன, எனக்கு என்னோட கமிசன் தொகை கிடைசா சரிதான் என்று இருக்கும் மாமா சுப்பிரமணிசாமியை தான் தமிழகத்தை காப்பாற்றும் அரசியல் தலைவனாய் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று பாசகவும் அதன் அடி பொடிகளும் நாள் தோறும் கூவுகிறார்கள் தமிழகத்தில்.


Tuesday, April 3, 2018

இராமர் பாலம் இடிக்க கூடாது ஆனால் முருகன் மலை மட்டும் இடிக்கனுமா

இராமர் பாலம் இடிக்க கூடாது ஆனால் முருகன் மலை மட்டும் இடிக்கனுமா. குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடமாக குமரியத்தோர் வழிபடட்டும் என்று பார்வதியால் அருளிய வாக்கு. அவரின் வாக்கு பொருட்டு குன்றுகள் முதல் அனைத்து மலைகளிலும் முருகன் இருப்பதாக நம்புகின்றது தமிழகம். அந்த தமிழக மக்களின் நம்பிக்கையை குலைக்கா வண்ணம் நியூறினோ திட்டத்தை உத்திர பிரதேசம் தாண்டி வடக்கில் எங்கு வைத்தாலும் முருக பக்கதர்களுக்கு சம்மதமே.......

இராமர் பாலம் தீர்ப்பின் நகலோடு யாராவது உச்ச நீதிமன்றத்தை உடனடியாக நாடவில்லை என்றால் முருக மலையை காப்பாற்ற முடியாது.

Saturday, March 31, 2018

வாய் மணக்க பொய் சொல்லும் தமிழிசை

தாமதம் ஆகவே இல்லையாம் வெகு விரைவில் 9999ல் விரைவாக தீவு கானாப்படும் என்று பாசக சொன்னதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் நலனையும் மக்களையும் கணக்கில் கொண்டு மட்டுமே தான் இந்த முடிவை பாசக எடுத்துள்ளதாகவும், மேலும் வீட்டில் வைதிருக்கும் பணத்தை எல்லாம் மேலும் சில மோடிகள் கொள்ளை அடித்துக்கொண்டு போக வசதியாக இருக்கு பொருட்டும் வங்கியில் செல்லுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார தமிழிசை. ஆகவே தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் தமிழக மக்கள் பாசகவை நேரடியாக ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்றும் இப்படி பினாமி அரசாக பெயர் எடுக்க விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Friday, March 30, 2018

பாசக ஒரு நயவஞ்சக கட்சி என்று அப்பட்டமாக காவிரி பிரச்சனையில் காட்டி இருக்கிறது

 நயவஞ்சம் என்றால் நல்லவிதமாக பேசி நம்பவைத்து கழுத்தறுப்பது என்று அனைவருக்கும் தெரியும். தமிழக மக்களின் நலம் தான் தங்களுக்கு எல்லாம் என்று வெளியில் சொல்லிக்கொள்ளும் பாசகவின் தமிழிசை மற்றும் அனைவரும் தமிழகத்துக்கு ஏதாவது தேவை என்று வந்தால் முதலில் எங்களுக்கு வாக்களித்து அதிகாரத்தில் உட்கார வையுங்கள் பிறகு பார்க்கலாம் என்று கதைகளிலும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பணையமாக பெண்களையும் குழந்தைகளையும் பிடித்து வைத்துக்கொண்டு இதை செய் இல்லனா இவர்களை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவது போல் அல்லவா பாசக மிரட்டுகிறது.

சல்லிக்கட்டுக்கும் இப்படி தான் செய்தார்கள், நீட்டு பரீட்சைக்கு இப்படி தான் செய்தார்கள், கூடங்குளம், நியூற்றினோவுகும், தூத்துகுடிக்கும் இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் எங்களை ஆட்சியில் அமர்த்தவில்லை ஆதலால் பொம்மை அரசை வைத்து இப்படி தான் செய்வோம் என்று மிரட்டி வைக்கிறது பாசக அரசு.

தமிழகத்தில் இந்த பினாமி அரசை வைத்தே தமிழகத்தை குழி தோன்டி புதைத்துக்கொண்டு இருக்கிறது பாசக அரசு. இந்த பினாமி அரசு வீட்டிற்கு போவதற்குள் தமிழர்கள் அனைவரும் தமிழகத்திலேயே அகதிகளாக ஆக்கப்பட்டுவிடுவார்கள் போலும்.

இந்த இலட்சணத்தில் மூச்சு முன்நூறு தடவை தமிழகத்தின் நலனை பேணிகாக்கவும் வாழ்வாதாரங்களை மீட்டு எப்பதற்காத்தான் பாசக தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்று 'இந்துகளின்' பிரதினிதியாக எங்களை தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும் சொல்கிறது இந்த நயவஞ்சக மதவெறி கட்சி.

இப்படி எல்லாம் மட்டமான அரசியல் செய்ய கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல் எந்த மான வெட்கமும் இல்லாமல் எப்படி இந்த தமிழிசை வகையராக்கள் பொதுவெளியில் வந்து சிரித்துகொண்டு பேட்டி எல்லாம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த மானம் கெட்ட வருவாயில் வாங்கி திண்று வயிறு பிழைப்பதற்கு பதில் ........... அது கொஞ்சம் கௌரவமாக இருக்கும்.

ஒரு பினாமி அரசாக இருக்கும் போதே இவ்வளவு நயவஞ்சகமாக தமிழகத்தை அழிக்க முடியும் என்றால் ஆட்சிக்கு எதுவும் வந்தால் அவ்வளவு தான் மொத்தமாக தமிழ்கத்தை விலை பேசி விற்றுவிட்டு நம்மை எல்லாம் அகதிமுகாமில் அடைத்து வைத்துவிட்டு பசனை பாடவைத்து உண்டகட்டியை கையில் கொடுத்து சர்வம் கிருசுணா அர்பணம் என்று சொல்லி செல்வார்கள்..........சாக்குரதை மக்களே கவனம்.......

Tuesday, March 27, 2018

பாமகவும் பாசகவும் ஒன்று தான் என்று பாமகவே கொடுத்து இருக்கும் வாக்குமூலம்

பாசகவின் பேச்சாளர்களும் சரி அமைப்பாளர்களும் சரி இல்லை பொதுவாக பாசக என்றாலே சாதியை சொல்லாமல் ஒருவரையும் குறிப்பிடுவது இல்லை. பெரியாரை கூட இராமசாமி நாயகர் என்று தான் குறிப்பிடும் அளவிற்கு சாதி வெறியேறிய வெறியர்கள் பாசக.

எங்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்று சொல்லும் பாசகவின் அடியாளாக தயாராக இருக்கும் பாமகவின் சுவரொட்டியை பாருங்கள் அதே சாதி பெயரோடு பெயர்கள். கேட்டால் இல்லை அதனால் இதனால் என்று சப்பைகாட்டு கடுவார்கள்.







மாற்றம் முன்னேற்றம் என்று பாசக சொன்ன அதே பசப்பு வார்த்தைகள் தான் அன்புமணி மற்றும் இராமதாசின் மொழிகளும். மொத்தத்தில் அதே கூட்டு களவானி கும்பல் தான் இருவரும். இப்பவாது அடையாளம் கண்டுகொள்ளுங்க மக்காImage may contain: 2 people, people smiling

பாசக எடப்பாடி மற்றும் அனைத்து அதிமுக மக்களும் தூத்துகுடிக்கு குடிபெயறுகிறார்கள்

எடப்பாடி மற்றும் பாசக தூத்துகுடியில் தேவை இல்லாமல் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், தூத்துகுடி மிகவும் பாதுகாப்பாகவும் மக்கள் வசிக்க மிகவும் உகந்த இடம் என்றும் பரப்புரையை நிகழ்த்திவரும் இந்த நிலையில் அவர்கள் சொல்வது உண்மை என்று நிரூபிக்க டெர்லைட்டு நிறுவனத்தின் பாதுகாப்பான தூரம் என்றும் சொல்லும் இடத்தில் இவர்களின் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு இனி வாழ இருப்பதாக அறிவித்து இருக்கிறார்கள்.

அப்படி பாசகவும் அதிமுகவும் தூத்துகுடிக்கு குடி இருக்க வரும் போது மக்கள் குடி நீர்பெறும் இடங்களிலேயே இவர்களும் குடி நீரும் மற்றும் வாழ்வாதாரங்களையும் பெற்று தங்களது பிள்ளை பேரன் பேத்திகளையும் அங்கேயே கொண்டு சென்று வளர்கவும் உறுதி பூண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தூத்துகுடி வாழ் மக்கள் பாசக மற்றும் அதிமுக மக்களை டெர்லைட்டு ஆலைக்கு அவர்கள் பாதுகாப்பாக உள்ளது என்ற இடத்தில் அவர்களை குடியேத்தி வசதிகளை செய்து கொடுக்கும் படி கேட்டுக்கொள்கின்றோம்.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசக மக்கள் தங்களது சொத்துகளை எல்லாம் விற்றுவிட்டு தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் அமைத்தே தீருவோம் என்று சொல்லும் அனைத்து வடமா நில பாசக மக்களும் தங்களது சொத்துபத்துகளை தமிழக மக்களுக்கு கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக நியூட்ரினோ திட்டம் வரும் இடத்தில் தங்களது சொந்த பந்தங்களுடன் குடியேறி தூத்துக்குடி போல் வாழவும் இருக்கிறார்கள். தேனி மாவட்ட மக்களிடம் சொல்லி தாயுள்ளத்துடன் இவர்களை நியூட்ரினோ திட்டம் பாதுகாப்பு தூரத்தில் உள்ள இடத்தில் குடியமர்த்தவும்.

Saturday, March 24, 2018

பாசக 2Gயை எப்படி ஊதி ஊதி பெரிதாக்கியது என்று வெளியிட்டிக்கிறது துக்ளக்கு பதிப்பு


இந்த படத்தில் இராகுல் என்ற இடத்தில் வினோத்து ராய் என்றும், சந்திரபாபு என்ற இடத்தில் மோடி என்றும் மதிய பாசக அரசு என்ற இடத்தில் இந்திய வாக்காளர்கள் என்று இருந்தால் இதே படம் தத்துரூபமாக பாசக எப்படி 2Gயை ஊதி ஊதி பெருதாக்கி இப்போது வெடித்து காற்று வெளியேறிய பலூனாக நொந்து நூலாக பாசக தவிக்கின்றது என்று அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்கள் குருமூர்த்தி வகையராக்கள்.........





Tuesday, March 20, 2018

எடப்பாடி பழனிசாமி கமல் மற்றும் தலைவரின் ஆட்சியும் இப்படி தான் இருக்கும்

பாசக தனது ஆக்டோபசு கரங்களை இடத்திற்கு தகுந்தார்போல் நிறம் மாற்றி உருமாற்றி வலைவிரித்து காத்து இருந்தது. தகப்பன் இல்லாத வீடாக தமிழகம் இருக்கவே ஆளும் கட்சி கலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில். கலைத்துவிட்டு நாம் ஆட்சிக்கு வருவோம் என்று நினைத்து தேர்தலிலும் இறங்கியது. பிறகு தான் நோட்டாவை கூட தாண்டாத தனது நிலையை அறிந்த பாசக தனது வியூகத்தை மாற்றி கமல் விசயகாந்து மற்றும் தலைவர் மூலமாக தனது ஆக்டோபசு கரங்களை நிறம் மாற்றி உரு மாற்றி வெவேற பெயர்களில் அரசியலில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றது.

இந்த அழகில் எதற்கு ஆகாத எடப்பாடியை கைப்பாவையாக வைத்துக்கொண்டு நீட்டும் இடத்தில் எல்லாம் கையோப்பம் இடவைத்து அரசையும் சட்டத்தையும் கேலி செய்கிறது பாசக.

தமிழகத்தில் இருக்கும் இசுலாமிய மற்றும் கிருத்துவ தேவாலையங்களை அடித்து நொறுக்கும் துவக்கமாக தேர் பயணம் ஒன்றை ஓடவிட்டு வெள்ளோட்டம் பார்க்கிறது. மக்கள் கொதித்து எழவே ஊரங்கு உத்தரவை பிறபித்துவிட்டு ஊரங்கு உத்தரவு என்றால் அது உன்னை தான் என்னையோ இல்லை எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களோ இல்லை என்ற இந்துத்துவாவின் அடிப்படை கொள்கையை மறுபடியும் நிறுவி நிற்கிறது பாசகவின் அடிபொடி எடப்பாடி எடுபுடி அரசு.

எந்தவித நேரடி பங்குமே இல்லாத நிலையில் கலவரத்தை தூண்டி குளிர்காய நினைக்கும் பாசக ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல் மக்களை தெருவில் நிற்க வைப்பது திண்ணம்........

Friday, March 16, 2018

தெர்மகோல் அமைச்சர் செல்லூர் ராசு எங்க படிச்சி விஞ்ஞான பட்டம் வாங்கினார்

Institute Of Scientific Research On Vedas  நிறுவனத்தில் பெற்ற அறிவில் தான் அமைச்சர் செல்லூர் ராசு தனது தெர்மகோல் ஆராய்சி முடிவை மக்களுக்கு செய்து காட்டினார் போலும்.

வடிவேல் தனது வசனத்தில் சொன்னது போல் உங்களுக்கு தெரியாத செய்திகள் இல்லை நீங்களே தேடிப்பாருங்கள், அப்படி தேடி ஆதாரம் கிடைக்கவில்லை என்றால் வாருங்கள் ஆதாரம் தருகிறேன் என்று இந்த நிறுவனத்தை நிர்வகிக்கும் அமைச்சர் தெரிவித்து இருக்கிறார் அறிவியல் மாநாட்டில்.

தெர்மகோல் அமைச்சர் செல்லூர் ராசுக்கு இவர்தான் ஆசான் போலும். வாழ்க வளர்க உங்கள் அறிவியல் சேவை, அப்படியே இந்திய இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களையும் கண்டுபிடித்து அம்பாணி நிறுவனத்திற்கு கொடுத்து பிரான்சு நாட்டு ஏற்றுமதிக்கு கொடுக்க சொல்லுங்கப்பா............

தமிழகத்தில் டொனால்டு டிரம்பின் ஆட்சி மலர்ந்தே தீரும்

அமெரிகாவில் ஆட்சியில் இருக்கும் கட்சி, இந்தியாவின் அமெரிக்க தேவைகளை அளவுக்கு அதிக அக்கறையுடன் கவனித்து செய்ய வல்லவரை தலைவராக கொண்ட கட்சி. பணக்காரர்களுக்காகவும் உழைக்கும் மக்களுக்கு வேலைகள் என்றதில் கவனாமாக இருக்கும் கட்சி.

இது தவிர இந்தியாவின் பணம் செல்லவில்லை என்றால் கொண்டுவந்து என்னிடம் கொடுங்கள் பதிலுக்கு அமெரிக்க டாலர்களை தருகின்றேன் என்று சொல்லும் ஏழை பங்காளர்கள் நிறைந்த கட்சி. நாட்டின் நலனை மட்டுமே மனதில் கொண்டு செயலாற்றுகின்ற உலகின் பெரிய கட்சி என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

குடியரசு கட்சி என்று வெறுமனே பெயரில் மட்டும் அல்லாது செயலிலும் காட்டும் ஒரு மிக பெரிய உலக மக்களாட்சி கட்சி தமிழகத்தை ஆளுவதற்கு நாம் எல்லாம் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.

டொனால்டு டிரம்பின் ஆட்சி தமிழகத்தில் நடந்தால் தமிழகம் பெறப்போகும் நன்மைகள் எல்லாம் என்ன என்று பார்ப்போம்.

அமெரிக்கவில் வேலை கிடைக்கும், அமெரிக்க சம்பளத்தில் தமிழக வாழ்கையை அனுபவிக்கலாம்.

தற்பொழுது நீட் தேர்வை நடத்தும் அமெரிக்க நிறுவனம் தமிழகத்திற்கு என்று தமிழர்களை மனதில் கொண்டு மட்டும் நடத்தப்படும். இந்தி தெரிந்து இருக்க வேண்டும் என்று கட்டாயபடுத்தபட மாட்டாது. படிப்பு அமெரிக்காவில் படிக்க அந்த நீட் பரீட்சை. அங்கே மருத்துவ மேற்படிப்புக்கு செல்லும் மக்கள் தற்கொலை செய்துகொள்ள தேவை இருக்காது.

தமிழக மீனவர்கள் ஒருவரேனும் கொல்லப்பட்டால் இலங்கை அமெரிகாவின் எதிரி நாடாக கருத்தப்படும், விளைவு இலங்கையை எந்த ஒரு வர்த்தகமும் செய்யமுடியாமல் ஒதுக்கி வைப்பது மட்டும் அல்லாது தீவிரவாத நாடாக அறிவிக்கப்பட்டு அமெரிக்காவின் படை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்க இராணுவம் இலங்கையில் ஆட்சியை நடத்த வேண்டி வரும்.

தமிழகத்திற்கு தேவைபடும் அணுமின் உற்பதியை இலங்கையில் அணு உலைகளை நிறுவி கடலுக்கடியில் மின் கம்பிகளை புதைத்து பாதுகாப்பாக கொண்டு வந்து கொடுக்கும்.

தமிழகத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் டப்பா கார்களையும் பேருந்துகளையும் எண்ணை மற்றும் மின்சாரத்தில் ஓடும் வண்டிகளை கொண்டு மாற்றி அமைத்து மாசில்லா காற்று மண்டலமாக மாற்றி கொடுக்கும்.

தமிழகத்திற்கு GST வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு அமெரிக்காவின் வரிவிகிதத்தை செயல்படுத்துவார்கள்.ஏன் என்று எந்த மைய அராசாவது கேட்டால் தமிழகம் அமெரிகாவின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ள முடியும் என்று அமெரிக்க அதிபரிடம் இருந்து பதில் வரும்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களின் அனைத்து வியாபாரிகளின் ஏற்றுமதி தமிழகத்தின் வழியாக மட்டுமே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு நடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியும்.

அமெரிக்க பொது தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிக்கவும் வழி செய்யப்படும்.

தமிழகத்தின் தேவைகளை அனைத்தும் எந்த கேள்வியும் கேட்காமல் இந்திய அரசு செய்துகொடுக்கும், அமெரிகாவை பகைத்துக்கொள்ள இந்திய ஆட்சியர்கள் பயப்படுவார்கள்.

தமிழகத்தில் மற்ற மாநிலத்தவர்கள் உள்ளே வர அமெரிக்க அரசின் அனுமதியை பெற்று தான் வரவேண்டும் என்று சட்டம் இயற்றப்படும், இது தமிழகம் அமெரிக்காவின் பகுதியாக கருத போவதால் மக்களின் பாதுகாப்பு கருதி செய்யப்படும்.

தமிழகத்து சாலைகளும் வீடுகளும் அமெரிக்க தரத்திற்கு உயர்த்தபடும், ஊருக்கு ஊர் பயணிக்கும் சாலைகள் அதிவேக மற்றும் பாதுகாப்பான சாலைகளாக மாற்றப்படும். சுங்கவழி சாலை மற்றும் சுங்கமில்லா சாலைகளும் அமைக்கப்படும். கப்பம் கட்ட வேண்டாம் என்று நினைப்போர் சுங்கமில்லா சாலையில் தாராளமாக செல்லலாம்.

அடிப்படை தொழில் புரிவோருக்கு குறைந்தபட்ச சம்பளம் அமெரிக்காவின் தரத்திற்கு உயர்த்தப்படும்.

அமெரிக்க தயாரிப்புகளை நேரடியாக குறைந்த விலையில் தமிழகத்தில் கிடைக்க வழி செய்யமுடியும்.

தமிழர்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்க முப்படையும் தமிழகத்தை சுற்றி பாதுகாப்பிற்கு நிறுத்தி வைக்கும். இந்திய தீவிரவாதம் தமிழகத்தில் தலை எடுக்க முடியாது, மசூதியை இடிப்பேன், கிருத்துசபையை இடிப்பேன், சிலைகளை சிதைப்பேன் என்று உளருபவர்களும் கிளம்புவர்களும் தக்கபடி தண்டிக்கபடுவார்கள்.

தமிழர்களை கண்டபடி சுரண்டலாம் என்று மற்ற மாநில அரசியல்வாதிகள் இனி கனவுக்கூட கானமுடியாமல் திணருவார்கள்.

தமிழகம் மூன்றாம் தர நாட்டின் பட்டியலில் இருந்து முன்னேறிய நாட்டின் பட்டியலுக்கு செல்லும்.

தெற்காசியாவின் வல்லரசாக தமிழகம் மாறும்.

இவைகள் எல்லாம் நடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் தமிழகத்தில் டொனால்டு டிரம்பின் ஆட்சி மலர்ந்தே தீரவேண்டும் சிந்திப்பீர். யார் யார் எல்லாம் கட்சியில் சேரவிரும்புகிறார்களோ https://www.gop.com/ தளத்திற்கு சென்று உறுப்பினராக சேரவும்.

Wednesday, March 14, 2018

மோடியை விட யோகி மிகுந்த தலைமை பண்பு கொண்டவர் என்று மறுபடியும் நிரூபிதுள்ளார்

உபி இடை தேர்தல் முடிவுகள் வெளியானதும் வெற்றி பெற்ற மாற்று கட்சியினரை வாழ்த்தியது மட்டும் அல்லாது எதிர்கட்சிகளின் கூட்டணியை குறைவாக மதிப்பிட்டது தான் தோல்வியின் காரணம் எனவு தெரிவித்துள்ளார்.

எனக்கு தெரிந்த வரை மோடி எந்த ஒரு தோல்விக்கும் இந்த விதத்தில் பொறுப்பாக பதில் அளித்து பார்த்ததே கிடையாது. எப்போதும் நான் தான் என்ற அகந்தையுடன் தான் வலம் வருவார் மோடி.

அதுவும் ஏதேனும் வெற்றி என்று வந்துவிட்டால் இமாயல அளவிற்கு குதிப்பதும் தோல்வி என்று வந்தால் ஒன்று வெளி நாட்டிற்கு ஓடுவதும்(சின்ன சின்ன நாடுகளுக்கோ அல்லது ஏழை நாடுகளுக்கோ). இல்லை பேசவே தெரியாதவர் போல் ஒளிந்து கொள்வதும் தான் மோடியின் பண்பு. கிட்டதட்ட துவக்கப்பள்ளியில் பயிலும் சிறுவனின் குணம் அது.

ஆனால் யோகியோ மிகவும் தைரியமாக தோல்வியை ஒத்துகொள்வதும் மட்டும் அல்லாது காரணத்தையும் வெளியிடும் தைரியசாலியாகவும் இருக்கிறார். வாழ்த்துக்கள் யோகி பாசகவின் அடுத்த பிரதமர் வேட்பாளார் நிச்சயமாக நீங்கள் தான்.......

Tuesday, March 13, 2018

இது தான் புதிய இந்தியா

ஒவ்வொரு நாடும் வளர்ந்து இருக்கிறது என்றதை எந்த அளவுகோள் கொண்டு அளக்கும். பணம் எவ்வளவு வங்கிகளில் சேர்கிறது என்றா அல்லது மக்கள் கட்டிய வரிப்பணம் உயரும் போது அடடா நாடும் அதன் பொருளாதாரமும் வளர்ந்து இருக்கிறது என்று புள்ளியிலில் காட்டுவதா. இல்லை உலக பணக்காரர்களில் இந்தியர்கள் எத்தனை பேர் இடம்பெற்று இருக்கிறார்கள் என்றா.......எப்படி கணிப்பது.

அன்றைக்கு சென்னையை வெள்ளம் தாக்கிய போது அங்கே நடக்கும் அவலம் பார்க்க பொறுக்காமல் கையில் இருக்கும் பணத்தில் என்ன என்ன வாங்க முடியுமோ அவைகளை எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து நின்றார்களே மக்கள் அதில் இருக்கிறது நாட்டின் முன்னேற்றம். சென்னையில் தான் வெள்ளம் நமக்கு என்ன என்று இருக்காமல் தமிழகத்தின் மற்ற பகுதிமக்களும் நிவாரணம் கொண்டு வந்து குவித்தார்களே அதில் இருக்கிறது முன்னேற்றம். சென்னையில் வெள்ளம் வந்தால் எங்களுக்கு என்ன என்று இருக்காமல் பெங்களூருவில் இருந்தும் வந்தார்களே அதில் இருக்கிறது நாட்டின் முன்னேற்றம்.

மெரினாவில் கூடிய அந்த கூட்டத்திற்கு போராட்ட இறுதி நாள் வரை உணவு நீரை கொண்டு வந்து கொடுத்தார்களே அதில் இருக்கிறது தேசத்தின் முன்னேற்றம்.

அன்று அந்த முகம் தெரியா சகோதர சகோதரிகள் கொட்டிய பணத்திற்கு இவ்வளவு செலவு செய்தேன் என்று இது வரையில் கணக்குகளை வெளியிடாமல் இருக்கிறார்களே அதில் இருக்கிறது இந்தியாவின் முன்னேற்றம்.

நேற்று மும்பையை நோக்கி வந்த விவசாயிகளுக்கும் அதே போல் மருத்துவம் முதல் மைல் கணக்கில் நடந்து வந்த காலில் அணிய புதிய காலணிகள் உட்பட கொண்டு வந்து கொடுத்து இருக்கிறார்களே அது முன்னேற்றம்.

மற்றபடி அவன் முன்னேறுகிறான் பார் முன்னேறவிடலாமா என்ற பேச்சுக்குகளை எல்லாம் மக்கள் புறம் தள்ளித்தான் வாழ்கிறார்கள் என்ற உண்மையை என்றைக்கு தான் இந்த பாழாய் போன அரசியல் சமூகம் புரிந்துகொள்ள போகின்றதோ...........

நீங்க வல்லரசு ஆகுங்க ஆகாம போங்க ஆனால் இந்தியாவின் இந்த அபரிவிதமான வளர்ச்சி மிகவும் அவசியமான வளர்சி அந்த வகையில் இந்தியா முன்னேறிய இந்த புதிய இந்தியாவை போற்றி மகிழ்வோம்.......வாழ்க சகோதரத்தும்........

Monday, March 12, 2018

மீனவர்களை கடற்படை கொண்டு மீட்டது போல் விமான படை கொண்டு மாணவர்கள்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை கடற்படை கொண்டு கடைசி மீவர் மீட்கப்படும் என்று வெறும் வசனம் மட்டுமே பேசிய நிர்மலா சீத்தாரம் இப்போது தீ காட்டில் மாட்டி இருக்கும் மாணவர்களை மீட்ட விமான படையை பயன்படுத்த போகிறாராம். அன்று மீனவர்களை அந்த தினம் மட்டும் மீட்க உத்தரவிட்டது போல் இப்போது இந்த மாணவர்களை மீட்க உத்தரவிட்டுள்ளாராம்.

பாசகவின் பேச்சை காற்றில் தான் எழுதனும் என்று ஒவ்வொரு முறை நிரூபித்த பின்பும் இன்ன்மும் அறிகை விட்டுக்கொண்டு இருக்கிறார் நிர்மலா.

இனி தான் தன்னார்வ தொண்டர்கள் இன்னும் தீவிரமாக தேட ஆரம்பித்து இருப்பார்கள், இது வரை மீட்கப்பட்ட 27 பேர் போல் மீதம் இருப்பவர்களையும் தேடி மீட்பார்கள் என்று நம்புவோமாக.

 நிர்மலா சீத்தாராமன் பேசாம பூனை நாய் போன்ற வீட்டு விலங்குகளை எப்படி காட்டு விலங்காக இந்திய அரசியல் அமைப்பில் மாற்றி பீட்டா போடும் பேட்டாவை முறைவாசலாக எப்படி பெறுவது என்று ஆராய்ந்து முடிக்கவும் அதை விடுத்து சும்மனாச்சுக்கும் இந்த வசனம் எல்லாம் எதற்கு.

Sunday, March 11, 2018

மோடியின் பணக்காரர்கள் மும்பைக்கு ஊர்வலமாக சென்று இருக்கிறார்கள்

மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தினமும் சொன்ன செய்தி ஏழைகள் எல்லாம் நிம்மதியாகவும் அமைதியாகவுன் வீட்டில் தூங்குகின்றார்கள்.

அந்த ஏழைகளில் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்த ஏழைகள் எல்லாம் நாட்டைவிட்டு ஓடிப்போய் கொள்ளை கொண்ட பணத்தில் வெளிநாடுகளில் பஞ்ச பரதேசிகளாக தங்கியும் இருப்பதாகவும் மோடி அவ்வப்போது தெரிவித்துக்கொண்டும் இருக்கிறார்.

இந்த நிலையில் இந்தியாவின் திமிர் பிடித்த பணக்காரர்கள் மும்பை நகரை நோக்கி ஊர்வலமாக வந்துக்கொண்டு இருப்பதை ஊடகங்கள் வெளியிட்டு மோடியையும் பாசகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறார்கள் பாருங்கள்.

Thursday, March 8, 2018

இலங்கையை பார்த்து மனித குலமே பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

அன்றைக்கு தமிழர்களை சிங்களர்கள் படு கொலை செய்யும் போது, நாங்களும் தமிழர்களும் வேறு என்று ஒதுங்கி யாருக்கோ என்னமோ நடக்குது என்று இருந்தார்கள் இலங்கையில் ஒரு பிரிவினர்கள்.

இன்றைக்கு அந்த பிரிவினர்கள் தாக்கப்படும் போது உலகுக்கு தெரியாமல் மறைத்து இரும்பு திரையிட்டு பாசகவின் பாணியில் கலவரம் என்ற பெயரில் படுகொலைகள் நடந்துக்கொண்டு இருக்கின்றது.

இரத்த வெள்ளமாக படங்கள் வெளியான போது எல்லாம் வெற்றிலை பாக்கு கறைபடிந்தது போல் பாசாங்கு செய்தவர்களின் ஈர கொலையை அதே பாணியில் இன்று பாசகவின் பாணியில் பிடுங்கி எடுக்கப்படுகின்றது. கோத்ராவின் பெயரில் நடைபெற்ற கருவறுத்தல் போல் அந்த பிரிவினர்களின் கருவை அறுக்கிறார்கள் சிங்களவர்கள்.

தீ அடுத்தவன் வீட்டில் தானே எரிக்கின்றது நம்ம வீட்டுக்கு வரட்டும் தண்ணீர் ஊற்றுவோம் அது வரையில் வாளியில் தண்ணீரை நிறப்பி மட்டுமே வை என்று இருந்தால் நாளை உனக்கு என்ன நடக்கும் என்று காலம் இந்த கொடுமையான நிகழ்வால் உணர்த்துவது வேதனையாக இருக்கிறது.

இனிமேலாவது திருந்துவார்களா மனிதர்கள் இல்லை, பாசகவின் சூழ்சியிலே மாட்டி விட்டில் பூச்சாய் சாகத்தான் போகிறார்களா............

மோடி விரைவில் பாராளுமன்ற தேர்தல் வரும் என்று சொன்னதின் பின்னணி இது தான் போலும்

ஏன்டா சிலைகளை உடைகிறீங்க என்று கேட்டால், லெனின் சிலையை நாங்கள் உடைப்பதற்கும் அதை போல் எங்களுடைய கட்சி/இயக்கம் தவிர மற்ற எல்லா கட்சி/இயக்கம்/மதம் சார்ந்த சிலைகளுக்கும் அடையாளங்களுக்கும் இதே கதி தான் விளையும். காரணம் லெனின் சிலை இரசியாவில் நடந்தது போல் நாங்கள் செய்கின்றோம். அது மட்டும் அல்ல மேலை நாடுகளில் சகிப்புத்தன்மை குறைந்துக்கொண்டு வருகின்றது அதன் காரணமாக எல்லா இடங்களிலும் தங்களின் இயக்கம்/சித்தாந்தம் இல்லா மற்ற எல்லாவற்றையும் அழித்து ஒழித்து தான் வருகிறார்கள் என்று சொல்கிறார்கள். ஒரு வேளை குசராத்தை தான் உலகம் என்று நம்பிக்கொண்டு இருக்கிறர்கள் இந்த அடிப்பொடிகள்.

சரி இந்த அடிபொடிகள் சொல்வது போல் மேலை நாடுகளிலும் வளர்ந்துவரும் நாடுகளிலும் உலகின் வல்லரசு நாடுகளிலும் நடப்பதுலாயே இவர்களும் செய்வார்கள் என்றதை வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும். கீழே இருக்கும் படங்களில் காட்டி இருப்பது போல் அதே மேலை நாடுகளிலும் நாகரீகம் மிக்க நாடுகளிலும் வல்லரசு நாடுகளிலும் செய்கிறார்கள் என்று செய்தால் பாசகவிற்கும் அதன் அடி பொடிகளுக்கும் சம்மதம் என்று தான் சொல்வார்கள் பாருங்கள்.





விவாத களத்தில் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்குமே படிக்காமல் வந்து செய்முறை வைவாவுக்கு பதில் அளிப்பது போல், கேட்ட கேள்விகளை தவிர மற்ற எல்லா செய்திகளையும் விளக்கு விளக்கு என்று விளக்குகிறார்கள். அப்படி விளக்கும் விளக்களத்தில் அள்ளிவிடும் செய்திகளுக்கு ஆதாரம் என்று கேட்டால் எத்தனையோ இருக்கு, எனக்கு அவுங்க சொன்னாங்க இவுங்க சொன்னாங்க என்று சொல்கிறார்கள். அவர்களை எல்லாம் பார்க்கவே பாவமாக இருக்கிறது.

Wednesday, March 7, 2018

அறம் படமும் - The 33 படமும்

The 33 movie

அறம் படம் பார்த்ததும் எழுத வேண்டும் என்று இருந்தேன் மற்ற பதிவுகள் வந்ததில் தள்ளி போனது.

ஆங்கிலத்தில் வந்த The 33 படத்தை அப்படியே தமிழாக்கம் செய்து எடுத்துள்ளார்கள். தமிழாக்கம் என்று சொல்வதை விட கம்மனாக்கம் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

பெயர் போடும் காட்சியில் இருந்து கடைசியில் காட்டும் எழுத்துகள், இவர்கள் யாரும் தண்டிக்கபடவில்லை என்று சொல்லும் வரை அழகாக மாற்றி எழுதி எடுத்து இருப்பார்கள்.

ஆங்கிலத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஒரு சுரங்கத்தில் நடக்கும் விபத்தில் 33 பேர் உள்ளே மாட்டிக்கொள்வார்கள். அவர்களை எப்படி மீட்கிறார்கள் என்றது தான் கதை.

தமிழில் அழாக அதை ஒரே குழந்தையாக மாற்றிவிட்டார்கள்.

ஆங்கிலத்தில் நாட்டை ஆளுபவரின் மகன் அரசியலுக்கு புதிதாக வந்திருபவரின் முதல் கள அனுபவம். தமிழில் மாவட்ட ஆட்சியர் பெண் என்று அழகாக மாற்றியுள்ளார்கள்.

ஆங்கிலத்தில் எங்கள் அனுபவத்தில் இது மாதிரியான விபத்துகளில் அதை செய்வோம் இதை செய்வோம் என்று காலம் கடத்துவோம் பிறகு எல்லோரும் இறந்த பிறகு இரக்க செய்திகளை மட்டும் அலங்காரமாக வெளியிட்டு பணம் மட்டும் கொடுப்போம் என்று சொல்வார்கள்.

தமிழில் கிட்ட தட்ட அதே வசன பிரயோகங்களை பார்க்க முடியும்.

ஆங்கிலத்தில் அந்த முதல் காட்சியில் அந்த சுரங்க தொழிலாளிகளின் எளிய வாழ்கையை காட்சிபடுத்தி இருப்பார்கள் அதையே வறுமைக்கு பிறந்தவர்களாக தமிழில் காட்டி இருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் ஒரு கட்டதில் மீட்பு பணிகளை கைவிடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதும், பிறகு பாதிக்கப்பட்டவரின் அக்கா சொல்லும் வசனம், 'எப்பவுமே நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைத்து தான் செயல்படுவேன் ஆனால் என்னவோ அது எப்பவுமே தப்பியே போகின்றது. ஒரு வேளை எல்லாவற்றையும் தப்பியே செய்யும் பிரவியோ" என்று சொல்லும் வசனத்தில் துளிர்ந்து எழுந்து தப்பி போகின்றாபடியே துளையிட்டல் தான் அந்த அடைத்து இருக்கும் தூணைய் தவிர்த்து துளையிடமுடியும் என்று மீண்டும் ஒரு வழியில் துளையிட்டு வெற்றி காண்பார்கள்.

தமிழில் இனி ஒன்றும் செய்யமுடியாது என்றது ஏன் எதற்கு என்ற காரணமே இல்லாமல் நயன் அழுவதும் பிறகு அந்த பையனை துளைக்குள் அனுப்புவதும் என்று சொதப்பி இருப்பார்கள்.

ஆங்கிலத்தில் கிட்ட தட்ட அந்த போராட்டம் 1 1/2 மாதம் நடக்கும் அதனால் அவர்களின் சொந்த காரர்கள் அங்கேயே தங்கவும் படிக்கவும் வீட்டிற்கு சிலராக சேர்த்து வைத்து உணவு இடம் என்று காட்டி இருப்பார்கள். தமிழிலோ ஒரே நாள் வேலை முடிந்தது என்று காட்டி முடித்திருப்பார்கள்.

இப்போது இரண்டாம் பாகம் எடுப்பதாக வெளியிட்டு இருக்கிறார்கள் எந்த படம் என்று காத்திருந்து பார்ப்போம்.

அறம் படத்தில் அரசியல் சார்ந்த வசனங்களுக்கா பாராட்டியே தீர வேண்டும், அதுவும் வல்லரசு இந்தியாவின் மீட்பு கருவி வெறும் கயிறு மட்டும் தானா என்று கேட்கும் கேள்வி 60 ஆண்டுகால வளர்சியையும் மீண்டும் ஒரு முறை பரீசிக்க வேண்டிய கட்டாயத்தை காட்டியது.

எச்ச சர்மா இலங்கை மத கலவரத்திற்கு ஆள் பத்தலையாம் RSS ஆட்களை அனுப்பவும்

எச்ச சர்மா தான் தமிழ் பேசுவதால் தமிழர் என்று மக்கள் நினைத்துவிடுவார்கள் என்ற நினைப்பில் வலம் வந்துக்கொண்டு இருக்கும் ஒரு வடக்கத்தியர். அதனால் தான் குசராத்து கட்சி தமிழகத்தை ஆள வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்பவர்.

இந்தியா முழுவதும் கொழுந்துவிட்டு எரிய வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கும் பாசகவின் தமிழக ஆக்டோபசு கரமான எச்ச சர்மா தற்பொழுது இலங்கையில் கொழுந்துவிட்டு எரிக்கின்றது மதகலவரம்.

நீங்களும் நீங்கள் சேர்ந்த மதவாத பிரிவினைவாத இயக்கமான பாசகவின் சேவை இலங்கைக்கு இப்போது தேவை. வெறிபிடித்த உங்கள் ஆட்களை அனுப்புங்கள் இலங்கை அரசுடன் இணைந்து உங்கள் இயக்கத்தின் இரத்த தாகத்தை தணித்துக்கொள்ளலாம். இந்தியாவை விட்டு விடுங்கள்.

Tuesday, March 6, 2018

பிரிவினைவாத பயங்கரவாத பாசக நுட்பமான தாக்குதலை துவக்கி இருக்கிறது

தமிழகத்து எதற்கு குசராத்து கட்சியின் ஆட்சி என்று முதலின் எச்ச சர்மா விளக்கட்டும் பிறகு லெனின் எதற்கு என்று நாங்கள் விளக்குகின்றோம்.

வடகிழக்கு மாநிலத்தில் சென்று இராமர் கோவில் கட்டலாம் வாங்கள் கலவரம் செய்து அதை செய்வோம் என்று சொன்னால் வரமாட்டார்கள் அதனால் அங்கு சென்ற முறை ஆட்சியில் இருந்தவர்களை அடித்து நொருக்கி கொன்று கொலைகளை செய்ததோடு மட்டும் இல்லாது அவர்களது அரசியல் தலைவர்களின் சிலைகளையும் நொருக்கி ஆகாகா என்று அரக்கர்கள் சிரிப்பது போல் சிரித்து பேட்டி அளிக்கிறார்கள் இந்த பாசக அரக்கர்கள்.

கோராவில் தங்களின் மக்களை தாங்களே கொளுத்திவிட்டு மற்ற மதத்தினர் கொளுத்திவிட்டார்கள் என்று கூவி அன்றைக்கு கலவரம் என்ற பெயரில் மக்களை கொலை செய்து குவித்தார்கள். இன்று லெனினுக்கு இந்தியாவில் என்ன வேலை என்று கேட்கிறார்கள்.

அட மடையற்களே அதே தான் நாங்களும் கேட்கின்றோம் ரபேல் விமானமும் மிக் விமானங்களும் நமக்கு எதற்கு. தூக்கி குப்பையில் வீசி விட்டு வில் அம்பு கசாயுதம் கொண்டு இந்திய இராணுவத்தை சங்க பரிவாரம் கொண்டு காத்துகொடுங்கள். என்றைக்கு இந்த முடிவை நீங்கள் எடுக்கிறீர்களோ அன்றைக்கு இந்திய இராணுவ மற்றும் அது சார்ந்த அமைப்புகளும் பணியும் வேண்டும் சம்பளமும் வேண்டாம் என்று சொல்லி ஓடும்.

எந்த ஊரில் எந்த சரக்கு விற்கும் என்று தெரிந்து அந்த அந்த இடத்திற்கு தகுந்தார் போல் ஆக்டோபசு முறையில் பாசக தாக்க முயன்று வருகின்றது. இதற்கு நீதிதுறையின் துணையில் தான் பதில் அளிக்க வேண்டும், தவிர பாசக எதிர்பார்ப்பது போல் மற்றவர்களும் உணர்ச்சிவசப்பட்டு துவங்கினால் கோத்ராவின் தாக்குதலை தயங்காமல் நடத்த அனைத்து மாநிலத்திலும் ஆட்களை சங்க பரிவாரம் என்ற பெயரில் தயாராக நிறுத்தி வைத்து இருக்கும் பாசகவின் திட்டத்திற்கு துணை போனது போல் ஆகிவிடும். கட்சி வித்தியாசம் பார்க்காமல் வடகிழக்கு மாநில தாக்குதலுக்கு அனைவரும் கண்டம் தெரிவிப்பதோடு தங்கள் மாநிலங்களில் இந்த மாதிரியான மாயாசாலங்களை பாசக அரங்கேற்றாமல் தடுக்கவும் வேண்டும்.

Monday, March 5, 2018

பொய் சொல்லும் எச்ச சர்மா - தமிழகத்தில் பாசக ஆட்சி அமையும்

தமிழக வாக்காளர் எண்ணைக்கையையும் திரிபுரா எண்ணிக்கையையும் ஒப்பிட்டால் தமிழக வாக்களர்களில் வெறும் 4.3% மட்டுமே மொத்த வாக்காளர்களாக கொண்ட மக்களிடம் வாக்குகள் வாங்கி வெற்றி பெற்ற பாசக அதே போல் தமிழகத்தில்லு வெற்றி பெரும் என்ற கனவை வித்தைத்து இருக்கிறார் சாதி மத அராய்சியாளர் மற்றும் நிபுணர் எச்ச சர்மா.

55 இலட்சம் வாக்காளர்கள் மட்டுமே உள்ள ஒரு மாநிலத்தில் 2 வீட்டிற்கு ஒருவர் என்று அமர்த்தி, வாரத்தில் 4 நாட்கள் வீட்டிற்கு வந்து. பாருங்க சாலைகள் சரியில்லை, பல இடங்களில் சாலைகளே இல்லை. மேலும் உங்கள் வீட்டு பெண்கள் படிக்க பள்ளிகள் கூட இல்லை. மழைக்கு ஒதுங்க ஒரு இடம் கூட இல்லை. வண்டியோ பேருந்தோ கூட இல்லை. இப்படி பட்ட ஒரு வாழ்க்கையா நீங்கள் வாழ்வது என்று சமயம் கிடைகும் போது எல்லாம் ஆடு நனைகின்றதே என்று ஓநாய் அழுததை போல் அழ வைத்தார்கள்.

இன்னும் இதைவிட கேவலமாக குசராத்தில் வாழும் இதே எழுத்தர் உங்களை போல் உள்ளவர்களின் வங்கி கணக்கில் 15 இலட்சம் பணம் இருக்கிறது. அவரவர் கார்களையும் வீடுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள். ஆனால் பாருங்கள் உங்களுக்கோ கூரை வீடு, ஒழுகும் பேருந்து, சகதியுடம் சாலை என்று உதடு பிதுங்க விரக்தியாக கதை சொன்னார்கள்.

வட கிழக்கு மாநிலங்கள் இது வரையில் சொன்ன புகார்களிலே மிகவும் அதிகமாக இடம் பிடித்தது இந்திய அரசு எங்களை எல்லாவிதத்திலும் வஞ்சிக்கிறது மற்றும் எங்களுக்கு என்று எதையும் கொடுப்பது இல்லை என்றும் சொல்லும் குற்றசாட்டுக்கள் எவ்வளவு உண்மை என்று இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது.

நேர்மை நாணயம் உழைப்பு என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பாசக அந்த 3 சொற்களும் ஆட்சியை பிடிக்க பயன் படுத்திய அலங்கார வார்த்தைகள் மட்டுமே என்று 4 ஆண்டுகளாக நிரூபித்து வந்த செய்திகள் கூட வட கிழக்கு மாநிலங்களுக்கு இது வரையில் எட்டவில்லை என்று தெளிவாக அறிவிக்கின்றது இந்த பாசக வெற்றி.

2014ல் மொத்த இந்தியாவும் பாசக வந்ததும் தேவலோக இந்திரன் வானத்தில் இருந்து இறங்கி வந்து பாலாறும் தேனாறும் ஓட விடுவதோடு வீட்டு முற்றத்தில் மேயும் கோழியை காதில் இருக்கும் காதட்டியை கழட்டி வீசி எறிந்து ஓட்டும் நிலையும் வரும் என்றும் தான் மக்களை நம்பவைக்கப்பட்டது.

ஆனால் நடந்ததோ பாசகவின் முதலாளிகள் பொதுமக்களின் பணத்தையும் செல்வத்தையும் கொள்ளையடிதுக்கொண்டு வெளி நாடுகளுக்கு ஓடுவதும் அந்த நட்டத்தை பல்வேறு வகையில் பொதுமக்களிடம் பாசக வசூலிப்பதையும் மக்கள் கண்டு வெறுத்து போயி இருக்கும் நிலையில் பாவம் வடகிழக்கு மாநிலங்கள் இப்போது தான் அந்த மின்மினி பூச்சின் வெளிச்சத்தை நம்பி பாலாறும் தேனாறும் வரும் என்று நம்பி ஏமாந்து இருக்கிறார்கள்.

இனி இந்த மாநிலங்கள் இன்னும் ஒரு 100 ஆண்டுகளுக்கு பொருளாதார அளவிலும் தனி மனித அளவிலும் பின்னுக்கு தள்ளப்பட்டு எல்லோரும் ஓடு ஏந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு வெகு எளிதாக தள்ளும் பாசக. இனி மாடு, மற்றும் கோமிய அரசியல் மட்டுமே அங்கே நடக்கும், வேறு ஒரு மாற்றமும் விளையபோவது இல்லை, இந்தியாவின் மற்ற மாநிலங்கள் போலே.

திருவாளர் சாதி மத அராய்சியாளர் மற்றும் நிபுணர் எச்ச சர்மாவுக்கு இன்னமும் அதோ பார் பசு, இதோ பார் சாணம், அங்கே பார் பசு மூதிரம், இங்கே பார் பசு கறி என்று சொல்லி. ஆடு மாடு பன்றி கோழி நாய் பூனை போன்றவைகளை காட்டுவிலங்காக மாற்றியும், தமிழர்கள் அதிகம் சாப்பிடும் காய்கறிகளை அரிய இன வகை காய்கள் பட்டியலில் சேர்த்து தடை செய்தும் மக்களை வாட்டலாம் என்றும் திட்டம் இருக்கும் போல. அந்த திட்டதின் கனவு தான் அவரை இப்படி எல்லாம் பேச வைக்கின்றது.

எச்ச சர்மா உங்களோடு சேர்ந்து நாங்களும் சொல்கின்றோம் தமிழகத்தில் பாசக ஆட்சி தான் அடுத்த 4 ஆண்டுகளுக்கு. எப்போது அதிமுகவை கலைக்கிறீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும். அந்த வழியில் பாசக தமிழகத்தை ஆளப்போவது உறுதி.

Thursday, March 1, 2018

மோடி நீங்கள் சொல்வது எல்லாம் எச்ச சர்மாவுக்கு தெரியுமா - சோர்டான் மன்னர்

மோடி நீங்கள் சோர்டான் மன்னருக்கு செய்யும் பிரசங்கம் எல்லாம் எச்ச சர்மாவுக்கு தெரியுமா. சமீபமாக அவர் யார் யார் என்ன மதத்தை சார்ந்தவர்கள் என்றும் 'இந்துக்கள்' தவிர மற்ற அனைவரும் தீவிரவாதிகளும் மற்றும் பாக்கிட்தானத்திற்கு போய் வாழ வேண்டியவர்கள் என்றும் அல்லவா பேசி வருகிறார்.

வழக்கம் போல் உங்களின் உபதேசம் ஊருக்கு மட்டும் தான் என்றது எங்களு நன்றாக தெரியும். உங்களையும் சேர்த்து தான் சொல்கின்றோம்.

வெளி நாட்டில் இருந்து ஒருவர் வருகிறார் என்றால் எத்தனை பசப்பு வார்த்தைகள்.

"தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்பது எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல, இளைஞர்களை தவறாக வழி நடத்தும் மனநிலைக்கு எதிரானது." -- அதாவது பசு, பசு மூதிரம், பசு சாணம், பசு கறி என்று இளைஞர்களை வழி நடத்தில், நாளை சாலையில் யாராவது பையை தூக்கிக்கொண்டு வந்தால் அதில் பசுக்கறி இருக்கிறதா என்று கையில் குத்து வாலுடன் அலைய வைத்து இருப்பது போல்.

"இசுலாமில் உள்ள நல்ல மாண்புகளோடு இளைஞர்கள் தங்களை பொருத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் நவீனத்தினை அதனோடு இணைப்பது குறித்தும் சிந்திக வேண்டும்." -- அதாவது பையில் வைத்து இருக்கும் கறி பசுக்கறியா இல்லையா என்று ஆராய ஒரு அராய்ச்சி மாணவர் ஒரு கருவியை வடிவமைத்துக்கொண்டு வந்து நின்றாரே அவரை போல, ஆதார் விபரங்களை திரட்டுவதன் மூதல் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு சாவடிகள் தோரும் எவ்வளவு மதத்தினர் என்ன விகிதா சாரத்தில் இருக்கிறார்கள் என்ற தரவுகளை பெறலாம் என்று அலோசனை சொன்னதை போல். இணையத்தின் மூலமும் இன்னும் பிற தொலை தொடர்பு வழிகளிலும் படங்களை எடுத்து வெட்டி ஒட்டி அமெரிக்காவுல கொடுத்துனுவோ ஆப்பிர்காவுல கொடுத்தானுவோ என்று புளுகுவதை போலும் என்றும் சொல்ல வருகிறீர்களா மோடி.

சோர்டான் மன்னருக்கும் தெரியும் நீங்கள் எவ்வளவு பெரிய பொய்யர் என்று, யாரை ஏமாற்ற இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் என்று உங்களின் மனசாட்சிக்கு தெரிந்தால் சரி. அது சரி 6 நாட்களில் 1,30,000 இசுலாமியரை கர்பிணிகள் வயிற்றை அறுத்து கருவருத்தவர் ஆயிற்றே நீங்களி உங்களிடம் போய் மனசாட்சி பற்றி எல்லாம், கடவுளே.............

Wednesday, February 28, 2018

மோடி தமிழகம் வந்ததின் இரகசிய திட்டம் வெளிச்சத்திற்கு வருகின்றது

சமீபத்தில் எந்த அவசியமும் தேவையும் இல்லாமல் மோடி தமிழகத்துக்கு வந்து "பாரம்பரியமிக்கோவர்கலே, உங்க அப்பா ஊர் மேல போய் இருக்கான்னு" பேசி மக்களை மகிழ்வித்தார்.

தேர்தல் நடக்க இருப்பதோ கர்னாடகாவில், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக தீர்ப்பு வந்த பிறகும் மிகவும் தைரியமாக கர்னாடகாவிற்கு செல்லாமல் தமிழகம் வந்தார் மோடி.

என்னடா எங்கேயோ கணக்கு பிசக்குதே என்று பார்த்தால் இன்றைக்கு செய்திகளில் வருகிறது கார்த்திக்கு சிதம்பரம் கைது என்று வருகின்றது.

இப்ப உங்களுக்கு தெரியுதா இந்த கட்டிய ஏன் நான் வாங்கினேன் என்று.......

கார்த்திக்கு சிதம்பரத்தின் கணக்காய்வாளரை கைத்து செய்ததுமே தெரிந்தது அது இங்கே வந்து தான் நிற்கும் என்று.

இனி இது தான் நடக்கும்....

கார்த்திகு சிதம்பரத்தின் கைதினால் சிதம்பரம் இனி 31,600 கோடி வங்கி ஊழல் பற்றியோ அல்லது இனி வெளிவர இருக்கும் 17,000,000 ஆயிரம் கோடி ஊழல்களை பற்றியோ வாய் திறக்க மாட்டார்.

கார்த்திக்கு சிதம்பரத்தின் கைத்தில் திமுகவிற்கு என்ன பங்கு இருக்கிறது என்று செய்திகள் கசிய துவங்கும். கிடப்பில் போடப்பட்ட 1.76 ஆயிரம் கோடி ஊழல் மெல்ல ஊது குழலுக்குள் வரும். பிறகு என்ன பழைய குருடி கதவை திறடி என்று நாட்டையே உலுக்கிய 1.76 ஆயிரம் கோடி ஊழலை புரிந்த காங்கிரசும் திமுகவும் வேண்டுமா இல்லை ஊழலை ஒழித்து நல்ல ஆட்சியை கொடுத்துக்கொண்டு இருக்கும் பாசக@அதிமுக வேண்டுமா என்று பரப்புரைகள் வலையிலும் செய்தி ஊடகங்களிலும் வியாபித்து நிற்கும்.

கார்த்திக்கு சிதம்பரம் கைதாகி இருக்கும் வழக்கின் மொத்த தொகையே ரூ309 கோடி தான் அதில் ஊழல் எவ்வளவு நடந்து இருக்கும் அதில் கார்த்திக்கு சிதம்பரத்திற்கு எவ்வளவு வந்து இருக்கும் என்ற கேள்விகளை எல்லாம் கேட்டீர்களானால், அதோ பார் பசு, இதோ பார் கோமியம், அங்க பார் பசு சாணம், இங்க பார் இந்துக்கள், பின்னால பார் ஆண்டாள் என்று அள்ளி அள்ளி விடுவார்கள் செய்தி ஊடகங்களிலும் இணையத்திலும்.

குருமூர்த்தி இந்த ஊழலால் நாட்டின் பொருளாதாரம் 100 ஆண்டுகளுக்கு பின் தள்ளிவிட்டதாகவும். இது இந்தியாவை அழிக்கும் தீவிரவாத செயல் என்றும் அதற்காக காங்கிரசு கட்சியை நீதிமன்றம் தடை செய்து காங்கிரசு முன்னால் அமைச்சர்கள் நிர்வாகிகளை குண்டர் சட்டதில் கைது செய்து 100 ஆண்டுகளுக்கு சிறையில் தள்ள வேண்டும் என்று துக்ளக்கு ஊடகத்தின் 2ஆம் மாத நிறைவு விழாவை கூட்டி அந்த மேடையில் முழங்குவார்.

எச்ச சர்மாவோ நான் அன்னைக்கே சொன்னேன் பாருங்க சிதம்பரம் ஒரு தீவிரவாதின்னு இன்றைக்கு நீதிமன்றமும் சிபிஐயும் முறையா இதை விசாரணை செய்து தெளிவாக நாட்டு மக்களுக்கு தெரிவித்துவிட்டார்கள். இனி காங்கிரசையும் திமுகவையும் வெளியிலே வரவே முடியாதபடி சிறையில அடைக்கனும்கிறேன் என்று முக்குக்கு முக்கு கூட்டம் கூட்டி முழங்குவார்.

தமிழிசையோ மஞ்சள் புடவையில் பிரமலதாவின் பாணியில் கையை கீழ் இருந்து மேலாக ஆட்டி ஆட்டி காங்கிரசு சிறைக்கு போகிறதோ இல்லையோ திமுக சிறைக்கு போகிறதோ இல்லையோ தாமரை மலர்ந்தே தீரும் என்று அடவு கட்டி ஆடுவார்.

அதிமுக கட்சி கலைக்கப்பட்டு மோடியின் தலைமையில் பாசகவுடன் இணையும். பிறகு அடுத்த 4 ஆண்டுகளுக்கு பாசக ஆட்சி நடக்கும்.

அந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தை உத்திரபிரதேசத்தில் மக்களை அடித்துகொல்வதை போல் இங்கேயும் அடித்து கொல்லப்பட்டு ஒர் அச்சத்தை விளைவிப்பார்கள். கோத்ராவில் தூங்கும் பயணிகளை எரித்தது போல் தமிழகத்தில் இரவில் ஊர் அடங்கிய பிறகு ஊர் ஊராக திடீர் திடீர் என்று கூட்டம் கூட்டமாக 'இந்துகள்' அல்லாதவர்களை எரித்து கொல்லப்படுவார்கள். காரணம் கேட்டால் கலவரம் என்றும் 6 நாட்களுக்கு எங்களால் கட்டுபடுத்த முடியவில்லை என்று சொல்வார்கள்.

தமிழகத்தில் இருக்கும் பள்ளி முதல் கல்லூரி வரை கோட்சே தான் தேச தந்தை என்றும், காந்தி நேரு இன்ன பிற தேச தலைவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் என்றும் கற்பிக்கபடும்.

உபியில் உள்ளது போல் யார் யார் என்ன என்ன உடுத்த வேண்டும் முதல் என்ன என்ன சாப்பிட வேண்டும் என்றது வரையிலும். யார் யார் எல்லாம் என்ன என்ன எல்லாம் வாங்கலாம் தொடங்கி என்ன என்ன வேலைகளுக்கு செல்லாம் என்று வகுத்து தொகுத்து நிறுவுவார்கள்.

'இந்துக்கள்' அல்லாத கட்சியும் அதன் தலைவர்களையும் உபி பாணியில் என்கௌண்டர் முறையில் தீவிரவாதிகள் தேச துரோகிகள் என்று சொல்லி கொல்லப்படுவார்கள்.

5ஆம் ஆண்டின் முடிவில் கிழிந்த உடையணிந்து கிராமபுர மக்களும், அழுக்கு உடையில் நகர்புர மக்களும், வேட்டி தலைப்பாகையுடன் பெருநகரங்களிலும் மக்கள் நடமாடுவதை காண முடியும்.

அவர்களின் நடுவே வெள்ளையும் சொல்லையுமாக பலபலக்கும் வண்டிகளில் பாசக மக்கள் பவனி வருவார்கள் அவர்களை 'இந்துக்கள்' அல்லாத தமிழர்கள் எல்லாம் கும்புடுரேன் சாமி என்று தான் விளிக்கவேண்டும் என்று அப்படி சொல்லவில்லை என்றால் கொல்லப்படுவீர்கள் என்று கொன்றும் காட்டுவார்கள்.

மறந்தும் யாராவது கேள்வி கேட்டால் அதோ பார் பசு, இதோ பார் கோமியம், அங்க பார் பசு சாணம், இங்க பார் இந்துக்கள், பின்னால பார் ஆண்டாள் என்று அள்ளி அள்ளி விடுவார்கள......

தமிழகம் இனிமேல் தக்சின் பிரதேசு என்று பெயர் மாற்றம் பெற்று காஞ்சிபுரம் தலைநகரமாகும்.

எல்லா இடங்களிலும் விழாக்களிலும் மாக கணப்பதே முதல் சனனி சனனி வகையரா பாடல்களை பாடித்தான் நிகழ்ச்சிகளும் வேலைகளும் தொடங்குவார்கள்.

'இந்துகளின்' அடையாளங்கள் தவிர வேறு ஏதாவது மத அடையாளங்களையோ மத குருமார்களையோ கண்டால் அசாமில் கொளுத்தியது போல் ஊர் நடுவில் உயிருடன் தீயில் இட்டு கொளுத்தி சாக்கிரதை என்று சொல்லி செல்வார்கள்.

தமிழகத்தில் 'இந்துக்கள்' அல்லாதவர்கள் குடியிருக்கும் இடங்கள் ஆதார் அட்டை இல்லை, அப்படியே இருந்தாலும் அதில் கைரேகை சரியாக இல்லை என்று சொல்லி வடக்கத்தியர்களை கொண்டு வந்து குடியமர்த்துவார்கள். அந்த இடத்தையும் அந்த வடக்கதியருக்கு தான் சொந்தம் என்று சொல்வார்கள்.

இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமை தமிழகத்தில் தமிழர்களுக்கு பாசகவினால் ஏற்படும். பாரத மாதாக்கி சே........

Tuesday, February 27, 2018

சென்னை அமெரிக்க தூதரகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட சொல்வீங்க போல

இது சுசா கிளப்பி விட்டிருக்கும் வாதம். சென்னையில் அமைந்து இருப்பதனால் மட்டுமே எல்லா இடங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கள் பாட வேண்டும் என்று கேட்பதும் போராடுவதும் எள்ளி நகையாடுவதாக இருக்கிறது என்றும் சொல்கிறார்.

அவர் நக்கலாக சொல்வது போல் நாளையே சென்னையில் அமைந்து இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்று கொடிபிடிப்போமா இல்லை போராட்டம் தான் நடத்துவோமா.......

அது இருக்கட்டும் சுசாமி, தமிழகம் இதியாவில் அமைத்து இருக்கும் ஒரே காரணத்திற்காக இந்தியில் பேசி இந்தியில் எழுதி சமசுகிருதத்தில் எழுதி சமசுகிருதத்தில் படித்து தான் ஆக வேண்டுமா என்ன............

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் இந்தியிலும் சமசுகிருதத்திலும் பேசுங்களேன் யார் வேண்டாம் என்றது. பிரதமர் மோடியை தமிழக கூட்டங்களில் பாரம்பரியா மிக்குவர்காலே ஊர் மேல போய் இருக்கா என்று ஏன் பேசனும், பேசாம சமசுகிருதத்தில் உரையாற்றி விட்டு போக சொல்லுங்கள் மீம்சு மக்களாவது வேறு வேலைய பார்ப்பார்கள்......

ஆமாம் சுசாமி நடிகையின் இறப்பில் துப்பு துலக்கு நீங்கள் மோடியின் 11400 கோடி ஊழலை பற்றி இதுவரையில் வாய் திறக்காமல் இருப்பதன் மர்மம் தான் என்ன விளக்குவீர்களா.........

தமிழ் தெரியவில்லை என்று எந்த வடநாட்டுகாரனும் தற்கொலை செய்யவில்லை

ஒரு காலத்தில் வடக்கதிய மக்கள் சொல்லும் வாசகம் இது, தமிழ் நாட்டிலே இளநீர் விற்பவர் கூட ஆங்கிலம் பேசுகிறார் அதுவும் அழகாக பேசுகிறார் என்று சொல்வார்கள்.

தமிழே தெரியாமல் தமிழகத்தில் ஆண்டுகளாக தங்கி வாழ்கையை ஓட்ட முடியும் என்ற நிலையில் தான் இருக்கிறது. இது தென்னகத்தில் இருக்கும் அத்தனை மாநிலங்களுக்கும் பொருந்தும். பெங்களூருவில் கன்னடம் தெரியவில்லை என்றாலும் இரண்டு முறை அவர்கள் சொல்லும் போதே அது என்னவாக இருக்கும் என்று புரியும். தெலுகு கொஞ்சம் கடினம் இருந்தாலும் கேட்டு புரிந்துக்கொள்ளலாம். மலையாளம் அப்படியே எந்த மொழிமாற்றமும் இல்லாமல் புரியும் தென்னகத்தாருக்கு.

ஆனால் வடக்கில் இருந்து வருபவரும் அதே பாணியில் தென்னகத்து மொழிகள் அனைத்தையும் அதே போல் புரிந்துக்கொள்வதும் ஆச்சர்யமாக இருக்கிறது.

திரும்ப பேச தெரியவில்லை என்றாலும் தலையை ஆட்டி சமாளிப்பார்கள். தமிழ் பேசுகின்றேன் என்று மேலையில் சிலர் நாடகம் ஆடுவது போல் எல்லாம் நடிப்பது இல்லை அவர்கள், உண்மையிலே ஆர்வமாக தெரிந்துகொண்டு சொல்லும் ஒரு சில வார்த்தைகளால் பேசி செல்வார்கள்.

கல்லூரிகளில் தமிழ் தெரியாமல் வந்து சேரும் பிள்ளைகள் 4 ஆண்டுகள் கழித்து செல்லும் போது ஓர் அளவிற்கு தமிழ் பேச பழகி இருப்பார்கள்.

ஆனால் வடக்க படிக்க போகும் தமிழர்களுக்கு ஏன் இவ்வளவு மொழி இடர்பாடுகள். அதுவும் இந்தி தெரியவில்லை என்று ஒரு பட்ட மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்களின் தற்கொலைகளை புரிந்துகொள்ளவே முடியவில்லை. எனக்கு தெரிந்து கல்லூரிகளில் ஆங்கிலத்தில் தான் வகுப்பு எடுப்பார்கள், சென்னையில் இருந்து செல்லும் விமானத்தில் வம்படியாக இந்தியில் மட்டுமே தான் பேச வேண்டும் என்று போட்ட வாய் மொழி உத்தரவு போல் எதுவும் செய்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

அப்படி யாரோடு எல்லாம் இந்தியில் இவர்களால் பேச முடியவில்லை என்று இந்த அவமானமபடுக்கிறார்கள். பயிற்று மொழி ஆங்கிலம், பரீட்சை எழுதும் மொழியும் ஆங்கிலம். அங்கே நிறைய தமிழ் மாணவர்கள் இருப்பார்கள். அவர்களோடு, எல்லா இடங்களுக்கும் போகவர என்று துவங்கினால் பழகி போகும் பிறகு இவர்களே ஆயிரம் போருக்கு வழி சொல்வார்கள். பிறகு எங்கே முளைக்கிறது இந்த தற்கொலைகள்.

அப்படி என்ன தான் பேச முடியாமல் போய் இவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்கப்பா...............

Saturday, February 24, 2018

பாசகவின் 100 கோடியா இல்லை 1000 கோடியா என்றதில் முளைத்து இருக்கிறது கமலின் மநீம

தமிழகத்து ஆட்சியை எப்பாடு பட்டாவது பிடித்துவிடுவது என்ற நோக்கில் ஆக்டோபசு கரங்களை மக்களின் கவனத்திற்கு வராத வண்ணமாக பவ வடிவங்களில் நீட்டி மடக்க பார்கிறது பாசக.

மநீம முதலில் தொடங்கி இருப்பதன் காரணம் 10 படங்களில் என்ன சம்பாதிப்பீர்கள் அதை இப்போதே கொடுக்கின்றோம் பாசகவிற்காக விசுவரூபம் போல் ஒரு திரைக்கதையை எழுதி மக்களின் முன் அதை அரசியல் இயக்கமாக எடுத்துகொடுங்கள் என்ற பேரத்தில் 100 கோடி ரூபாய்கள் பரிமாறப்பட்டு மநீம மலர்ந்து இருக்கிறது.

யாரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைக்கதையை அரங்கேற்றிய அதே பாணியில் அரங்கேறி இருக்கிறது மநீம.

ஆனால் தலைவனின் 10 படங்களின் மதிப்பு 1000 கோடி என்றதால் இன்னும் பேரம் இழுத்துக்கொண்டு இருக்கிறது. அந்த 1000 கோடி கைமாறியதும் இதே போல் தலைவன் வள்ளி படத்தில் பேசிய ஞானகிருக்கன் பேச்சியை மேடையிலே அரங்கேற்றுவார்.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது அரங்கில் பேசிய அதே பாணியிலான வசங்களும். அந்த நடிகர்களின் நாடகத்தை உண்மை என்று நம்பி மக்கள் உணர்ச்சி பெருக்கில் வாக்களித்ததும் ஓவியா ஆர்மி என்று நிறுவியதும் இந்த 100 கோடி மநீம நாடகத்திலும் நடக்கும்.

என்ன இந்த 100 கோடி மேடை நாடகத்தில் நீதிக்கட்சியின் மக்களை அசிங்கபடுத்தி இருக்க வேண்டாம். பாவம் அவர்களும் இந்த ஓவியா ஆர்மியில் சேர்ந்தது போல் சேர்ந்து மேடை ஏறி அசிங்கப்பட்டிருக்க வேண்டாம்.

1000 கோடி பேரத்தின் முடிவில் தலைவர் இருப்பார் போலும் அதனால் தான் நாமும் பேசாமல் வேலையை பார்க்கலாம் என்று அறிக்கை விட்டுள்ளார்.

ஆமாம் இந்த 1100 கோடி ரூபாயை பாசக எங்கு இருந்து எடுத்து இந்த இரண்ட நடிகர்களின் மேடை நாடகத்திற்கு கொடுத்து இருக்கும்.

 நாளைக்கு தமிழகத்தின் எந்த வங்கி திவால் என்று அறிவிக்க போகின்றதோ, எந்த எந்த ஏழை எளிய மக்கள் எல்லாம் இந்த பாசகவின் மிரட்டலுக்கு பயந்து சேமித்து வைத்து இருக்கின்ற வங்கியோ. இன்றையில் இருந்து ஏர்செல் சேவை எல்லாம் கிடையாது என்றும், சேவை பாக்கி இருப்பவர்களுக்கு எல்லாம் மஞ்சள் கடுதாசி கொடுத்தாச்சு என்று சொன்னதையும் இங்கே நாம் இணைத்து பார்க்கலாம்.

Thursday, February 22, 2018

பாசக சொன்ன அந்த மாற்றமும் கமலின் மநீம சொல்லும் மாற்றங்களும் என்ன

2014ல் இந்திய நாட்டை காப்பற்றி மீட்டு எடுக்கவு, உலக அரங்கில் வல்லரசாக இந்தியாவை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயமும் இருப்பதாக சூளுரைத்தது பாசக.

2014ல் பொது தேர்தலில் அந்த தேவைக்கான மாற்றங்கள் எவைகள் என்றும் பட்டியலிட்டது.

அந்த பட்டியலில் முதலிடம் பிடித்த செய்திகள் நாட்டில் மக்களின் பணத்தையும் வளத்தையும் எப்படி காங்கிரசு பறித்து ஒரு சில செல்வந்தர்களிடம் கொடுத்ததும் அதற்கு கையூட்டாக பெற்றுக்கொண்ட செல்வங்களை அயல் நாடுகளில் பதுக்கி இந்தியாவிற்கு எந்த வித நம்மை பெற்றுவிடாத விதம் பதுக்கப்பட்டுள்ளது என்று வசனங்களை விதைத்தும் அதன்பால் கிடைக்கப்பெறும் பணத்தை ஒவ்வொரு இந்தியருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தது.

மேற் சொன்ன செயல்களை செய்துவிட்டு தான் மற்றவைகள் என்று முழங்கிய பாசகவை நம்பி அந்த மாற்றங்கள் இன்றைய தேவைகள் என்று எண்ணிய இந்தியர்கள் குறிப்பாக ஏழை மக்கள் தங்களின் வங்கி கணக்கில் நாளை அரசு கொடுக்க போகும் ஒவ்வொரு இந்தியருக்கும் 15 இலட்சம் பணமும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை அதுவும் மைய அரசு வேலை என்ற வசனங்களை நம்பியும் வாக்களித்தார்கள்.

பாசக பேசிய அந்த மாற்றங்கள் இன்று மாய மாற்றங்களாக மறைந்து இந்த 4 ஆண்டுகளில் அந்த பாசக அரசு நிகழ்த்தி இருக்கும் கொடுமைகளை என்ன என்ன என்று விரிவாக பார்ப்போம்.

தனக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நம்பி வாக்களித்த அந்த ஏழைகள், ஒன்றுமே வேண்டாம் நாங்கள் படித்து முன்னேறி கொள்கின்றோம் என்று இருந்த கல்வித்துறையில் இனி யார் யார் எல்லாம் எந்த எந்த படிப்புகள் படிக்க வேண்டும் என்றதை நாங்கள் தீர்மானித்து சொல்கின்றோம். வெறுமனே அரசு பள்ளிகளிலோ அல்லது எந்த வித குடும்ப பின்னணியோ இல்லாத குடும்பத்தில் இருந்து முதல் தலைமுறையாக படித்து பெரிய வேலைகளுக்கு எல்லாம் செல்லும் வேலை எல்லாம் இனிமே நடக்காது என்று நாடு முழுவதும் நீட்டு தேர்வை அமெரிக்க நிறுவனத்தை நடத்த சொல்லி அதில் பெரும் செல்வம் படைத்த மக்கள் படிக்கும் பயிற்சி மையங்களில்(மய்யம்களில் இல்லை) படிப்பவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்வி.

அப்போ இது வரையில் அரசு பள்ளிகளில் படித்து மருத்துவர்கள் ஆனது எல்லாம் என்ன என்று கேட்டதற்கு அந்த காலம் எல்லாம் இனிமேல் கிடையாது, கல்வி அதுவும் மருத்துவம் இனி ஏழைகளுக்கு கிடைக்காத கனி என்று பறித்த மாற்றம் தான் நடந்தது.

மருத்துவம் தவிர மற்ற படிப்புகள் படித்து நாட்டில் கிடைக்கும் வேலைகளை ஊர் விட்டு ஊர் வந்து ஆண்ணும் பெண்ணும் எந்த வித்தியாசமும் இல்லாமல் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று இந்தியாவின் எந்த ஒரு ஊருக்கும் சென்று வேலை பார்த்து வந்தார்கள். அப்படி இருக்கும் மக்களின் அன்றாட தேவைகளாக இருந்த உணவு ஒரு அடிப்படை தேவை.

கொஞ்சம் கொஞ்சமாக விலை ஏறிக்கொண்டு இருந்த உணவு சென்ற ஆண்டு கொண்டு வந்த ஒரே வரிவிதிப்பு என்ற பெயரில் ரூ100க்கு சாப்பிட்டால் ரூ130 வசூலிக்க படுகின்றது. இது என்ன ஐயா பகல் கொல்லையாக இருக்கின்றது என்ற கேள்விக்கு இந்த வரி விதிப்பினால் மக்கள் வாங்கும் பொருட்களின் விலை அதளபாதாள விலைக்கு கிடைக்கும் என்று கட்டியம் கூறி நடைமுறைபடுத்த பட்ட வரிவிதிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் என்னவோ ஏழை மக்களே. பழையபடி மக்கள் வீட்டில் இருந்து மத்திய உணவை கட்டிக்கொண்டும் செல்லும் செயலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். செல்வந்தர்களுக்கு ரூ130, ரூ100ம் ஒன்று தான் என்றதை இங்கே நாம் கவனிக்க வேண்டும்.

இத்த தொல்லைகள் எல்லாம் வேண்டாம் நாங்கள் சுதந்திரமாக எங்க நேரத்திற்கு கிளம்பி வேலைக்கோ கல்லூரிகளுக்கோ சென்று கொள்கின்றோம் என்று ஒவ்வொரு ஏழை மக்களும் தங்கள் வீட்டின் பெண்களு சிறிய வண்டிகளை வாங்கி கொடுத்து நிம்மதியாக இருந்தார்கள். இன்று பெட்ரோல் விலையை இமாயலய உயரத்திற்கு ஏற்றி நாங்கள் என்ன செய்ய சர்வ தேச சந்தையின் விலை ஏற்றத்தை நாங்கள் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்று கைவிரிக்கின்றது. அப்போ இது வரையில் இப்படி நிலைமை இல்லையே இப்போது மட்டும் ஏன்ற கேள்வியை முன் வைக்க அதற்கு இது வரையில் 60 ஆண்டுகாலம் பதவியில் இருந்த காங்கிரசு தான் காரணம் என்று சொல்லி ஒன்றும் செய்வதற்கு இல்லை இனி உங்கள் வீட்டு பெண்களை அரசு பேருந்துக்களை பயன் படுத்த சொல்லுங்கள் என்று சொல்லி சிரிக்கின்றது.

காங்கிரசு காலத்தில் பெட்ரோலிய பொருட்களில் அடிப்படை தேவைகளுக்கு இல்லாமல் சொகுசு தேவைகளுக்கு என்ற பயன்படுத்தும் பொருட்களின் மேல் விதித்து இருந்த வரியில் கிடைத்த பணத்தை ஒரு சேமிப்பு கணக்கில் சேர்த்து வந்தார்கள். அந்த பணத்திற்கு கிடைக்கும் வட்டியில் அவ்வப்போது ஏற்படும் கச்சா எண்ணையின் சர்வதேச விலை மாற்றம் நாட்டில் ஏழை மக்கள் பயன் பாட்டில் இருக்கும் டீசல் மண்ணெணையில் விலையை சரி செய்துக்கொண்டு இருந்தார்கள். இந்த சரி செய்யல் நடவடிக்கையால் நாட்டில் வளர்ந்து வந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலைகள் வானுயர எகிராமல் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது.

வாசிபாய் அரசு பதவி ஏற்றதும் தங்ககர சாலை என்று ஒன்றை நிறுவினார்கள், கேட்டதற்கு இந்த சாலைகள் அமைந்தால் இந்தியாவின் எதிர்காலத்தில் எல்லா பொருட்களின் விலைகளும் அதளபாதாளத்திற்கு தள்ளப்பட்டு ஏழை எளிய மக்கள் பெரும் பயனை அடைவார்கள் என்று ஆரூடம் கூறினார்கள். அந்த சாலைகளை அமைக்க இந்த பெட்ரோலிய சேமிப்பு பணம் பயன்படுத்தபட்டதன் விளைவு இன்றைக்கு எங்கள் வீட்டு பெண்கள் மறுபடியும் அரசு பேருந்துகளின் தயவில் பயணம் மேற்கொண்டு படிக்கவும் வேலைகும் செல்லும் நிலைக்கு தள்ளி இருக்கிறார்கள். இன்றும் இந்த விலை எல்லாம் ஒரு விலையா என்று அலட்டிக்கொள்ளாமல் செல்லும் செல்வந்தர்களையும் பார்கின்றோம்.

ஒரு பேட்டியில் எச்ச சர்மா சொல்கிறார், நான் ஏறி செல்லும் விமானத்தில் என்னைவிட உயர்ந்த விலையில் ஒரு பொதுவுடமை கட்சியின் தலைவர் செல்கிறார் என்ன எகத்தாளம் இருக்கும் என்று வெளிப்படையாகவே சொன்னார், பேட்டி தொகா பதிவு உடியுபில் கிடைக்கிறது தேடி பார்க்கவும்.

ஆதார எண் இல்லாதவர்களை சாக சொல்லுங்கள் என்று இன்றைக்கு சொல்கிறார்கள் பாசகவினர், ஏன் என்று கேட்டதற்கு இந்த எண் இல்லை என்றால் நாட்டில் கருப்பு பணமும் ஊழலும் மலிந்துவிடும் என்று வீர வசனம் பேசினார்கள். ஆனால் இன்றோ இந்த எண் பயன்பாட்டிற்கு வந்த பிறகும் எந்த சுவடுமே இல்லாமல் சுருட்டிய பணத்தோடு குடும்பம் குடும்பமாக செல்வந்தர்கள் வெளி நாடுகளுக்கு தப்பி செல்வதும் அதற்கு காரணம் காங்கிரசு தான் என்றும் இன்று பாசக சொல்லும் மாற்றங்களையும் பார்த்து வருகின்றோம்.

யார் யார் எந்த உணவை சாப்பிட வேண்டும், எந்த எந்த மதங்கள் எல்லாம் இருக்க வேண்டும். எந்த எந்த மக்கள் எல்லாம் என்ன என்ன படிக்க வேண்டும். எங்கே எப்படி வாழ வேண்டும் என்ற மாற்றதில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது பாசக.

இவைகள் வெளியில் தெரிபவைகள் மட்டுமே இன்னும் வெளியில் தெரியாத மாற்றங்கள் புதைந்துகிடக்கிறது அவைகளை நாம் பார்க்கும் போது இனி இந்தியாவில் நாம் எல்லாம் அகதிகளா என்று அதிரும் வகையில் தான் அவைகள் இருக்கும்.

நேற்றைக்கு மநீமவை தொடங்கி வைத்து கமலும் இப்படி ஒரு பிரச்சாரத்தை தான் முன்னெடுத்து பேசி இருக்கிறார்.

கமலின் மாற்றம் இந்த பாசகவின் மாற்றத்தின் நீட்சி என்றது மக்களுக்கு நன்றாக தெரிந்தாலும் மௌனமாக இருப்பவர்களும். இல்லை கமல் கொண்டு வரும் மாற்றம் தமிழகத்திற்கு தேவையான ஒன்று என்று வாதிடுவதையும் பார்க்கும் போது பகீர் என்று இருக்கிறது.

ஏழை எளியவர்களுக்கு மக்களாக பிறந்து கடினமாக உழைத்து படித்து பட்டம் வாங்கிய மக்களை இன்றைக்கு பக்கோட விற்க போ என்று சொன்ன பாசகவின் வசனத்தை கமலின் மநீம நாளை தமிழக மக்களை நோக்கு இன்னும் துல்லியமாக சொல்லும் என்றது உறுதி.

இப்படி பட்ட மாய மாற்றம் என்ற சொற்களை நம்பி ஏமாறாதீர்கள் மக்களே, உங்களின் அடுத்த தலைமுறையை இந்த பாதாள படுகுழியில் நீங்களே தள்ளிவிடாதீர்கள்.