Wednesday, October 24, 2012

பாவம் அமெரிக்கா யார் கையில் மாட்டி சின்னா பின்னமாக போகிறதோ....

அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் போட்டியாளர்கள் விவாதித்துக்கொண்டதில் ஒன்று உறுதியாக தெரிகின்றது.

சென்ற முறை மொக்கைனை பலியாடாக அனுப்பியது போல் இந்த முறை இராம்னியை அனுப்பி இருக்கிறார்கள்.

சென்ற முறை மொக்கைனை பலியாடாக அனுப்பியது போல் இந்த முறை இராம்னியை அனுப்பி இருக்கிறார்கள்.

நமது ஊரில் வேடிக்கைக்காக சொல்வது போல் தேர்வுக்கு பசு மாட்டின் கட்டுரையை மனப்பாடம் செய்துகொண்டு போனவனை தெண்ணை மரத்தை பற்றி எழுத சொன்னதற்கு, பசு மாட்டை பற்றி முழுவது எழுதிவிட்டு அந்த மாட்டை இந்த தெண்ணை மரத்தில் தான் கட்டுவார்கள் என்று எழுதியது போல் இருந்தது இரம்னியின் பேச்சு.

இதிலே கேள்விகளை மட்டும் தொடுத்துவிட்டு பதிலிக்கு இது என்ன அது என்ன தெரியுமா என்று ஒபாமா கேட்டல் என்னை தாக்குவதில் எந்த பயனும் இல்லை என்று புலம்பியதையும் பார்க்க முடிந்தது.

 இன்றைய அமெரிக்க பொருளாதாரம் தடுமாறம் கொள்ள காரணமே முதலாளிகள் கொள்ளை இலாபத்தை மனதில் கொண்டு சேவைகளை அயலகத்திற்கு அனுப்பிவிட்டு, உள்ளூரில் வேலையும் இல்லை, செலவு செய்ய காசும் இல்லை.

கிளாடியேட்டர் படத்தின் இறுதி சண்டைக்கு முன்பு அந்த பொடியன் நாயகனின் கையை குத்தி அசைக்க முடியாதபடி ஆக்கிவிட்டு, மக்களின் முன் ஒரே வீச்சில் அவனை கொன்று காட்ட நினைப்பான். ஆனால் நடந்ததோ வேறு, வலது கை இல்லை என்றாலும் ஒரு வீரன் வெற்றி கொள்வான் என்று காட்டி செல்லும் அந்த பாத்திரம்.

அது போல, நாட்டையே பிச்சை பாத்திரம் ஏந்த வைத்துவிட்டு. மக்களை ஏமாற்றியது போதாது என்று ஓய்வு பெற்றவர்களுக்கு கொடுக்கும் மருத்துவ உதவிகளிலும் பங்கு வேண்டும் என்று மனதாற சொல்லும் முதலாளிகளின் வார்த்தைகளில் என்ன நீதியை எதிபார்க்க முடியும்.

இந்த 4 ஆண்டுகளில் பாக்கிட்தானம் ஆட்டம் போடாமல் அமைதியாக இருப்பதற்கு காரணம், அவர்களின் திரை மறைவு வேலைகளை கண்டித்து, அவர்களது அணு ஆயுதங்களின் வெடிப்பான்களை இசுரேலும் அமெரிக்க கடற்படையும் பிடுங்கி வைத்துள்ளதை திருப்பி கொடுக்க சொல்கிறார் போலும்.

பேச்சின் துவக்கத்தில் ஆசிரியர்களை தேவை இல்லாதவர்கள் என்று சொல்லிவிட்டு, பிறகு கடைசியில் ஆசிரியர்களை எனக்கும் பிடிக்கும் என்று சொன்ன அந்த நயவஞ்சக வார்த்தைகளை மக்கள் எப்படி விட்டு கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.

 நாளைய சமுதாயத்தை அறிவுள்ள சமூகமாக படைக்க வேண்டும், அது தான் அமெரிக்காவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல போகிறது என்று சொன்னால், படிப்பு எல்லாம் மக்களுக்கு தேவை இல்லை, அதை விடுத்து இராணுவத்திற்கு இன்னமும் நிறைய ஆட்களை எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.

வேலை பார்க்க தெரியவில்லை, குறைந்த அளவிற்கு பேச தெரிந்த ஆளாவது பார்த்து முதலாளி கட்சி அனுப்பி இருக்கலாம். பாவம் இராம்னி அடுத்த சார பாலின் ஆகப்போகிறார்.

Tuesday, October 23, 2012

ஸ்ரீவித்தியா அம்மா ஆறாம் ஆண்டு நினைவு




நீ இல்லா இவ்வுலகில் ஆறாம் ஆண்டு
மௌனமாய் மறையும் ஆண்டுகள்
இன்னமும் ஆழாமாய் பதிக்கும் வடுக்கள்
நிம்மதியாய் நீ இரு, அங்கே நானும் வரும் வரை



http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=pef1AxG-6tc