Monday, March 5, 2018

பொய் சொல்லும் எச்ச சர்மா - தமிழகத்தில் பாசக ஆட்சி அமையும்

தமிழக வாக்காளர் எண்ணைக்கையையும் திரிபுரா எண்ணிக்கையையும் ஒப்பிட்டால் தமிழக வாக்களர்களில் வெறும் 4.3% மட்டுமே மொத்த வாக்காளர்களாக கொண்ட மக்களிடம் வாக்குகள் வாங்கி வெற்றி பெற்ற பாசக அதே போல் தமிழகத்தில்லு வெற்றி பெரும் என்ற கனவை வித்தைத்து இருக்கிறார் சாதி மத அராய்சியாளர் மற்றும் நிபுணர் எச்ச சர்மா.

55 இலட்சம் வாக்காளர்கள் மட்டுமே உள்ள ஒரு மாநிலத்தில் 2 வீட்டிற்கு ஒருவர் என்று அமர்த்தி, வாரத்தில் 4 நாட்கள் வீட்டிற்கு வந்து. பாருங்க சாலைகள் சரியில்லை, பல இடங்களில் சாலைகளே இல்லை. மேலும் உங்கள் வீட்டு பெண்கள் படிக்க பள்ளிகள் கூட இல்லை. மழைக்கு ஒதுங்க ஒரு இடம் கூட இல்லை. வண்டியோ பேருந்தோ கூட இல்லை. இப்படி பட்ட ஒரு வாழ்க்கையா நீங்கள் வாழ்வது என்று சமயம் கிடைகும் போது எல்லாம் ஆடு நனைகின்றதே என்று ஓநாய் அழுததை போல் அழ வைத்தார்கள்.

இன்னும் இதைவிட கேவலமாக குசராத்தில் வாழும் இதே எழுத்தர் உங்களை போல் உள்ளவர்களின் வங்கி கணக்கில் 15 இலட்சம் பணம் இருக்கிறது. அவரவர் கார்களையும் வீடுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள். ஆனால் பாருங்கள் உங்களுக்கோ கூரை வீடு, ஒழுகும் பேருந்து, சகதியுடம் சாலை என்று உதடு பிதுங்க விரக்தியாக கதை சொன்னார்கள்.

வட கிழக்கு மாநிலங்கள் இது வரையில் சொன்ன புகார்களிலே மிகவும் அதிகமாக இடம் பிடித்தது இந்திய அரசு எங்களை எல்லாவிதத்திலும் வஞ்சிக்கிறது மற்றும் எங்களுக்கு என்று எதையும் கொடுப்பது இல்லை என்றும் சொல்லும் குற்றசாட்டுக்கள் எவ்வளவு உண்மை என்று இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது.

நேர்மை நாணயம் உழைப்பு என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பாசக அந்த 3 சொற்களும் ஆட்சியை பிடிக்க பயன் படுத்திய அலங்கார வார்த்தைகள் மட்டுமே என்று 4 ஆண்டுகளாக நிரூபித்து வந்த செய்திகள் கூட வட கிழக்கு மாநிலங்களுக்கு இது வரையில் எட்டவில்லை என்று தெளிவாக அறிவிக்கின்றது இந்த பாசக வெற்றி.

2014ல் மொத்த இந்தியாவும் பாசக வந்ததும் தேவலோக இந்திரன் வானத்தில் இருந்து இறங்கி வந்து பாலாறும் தேனாறும் ஓட விடுவதோடு வீட்டு முற்றத்தில் மேயும் கோழியை காதில் இருக்கும் காதட்டியை கழட்டி வீசி எறிந்து ஓட்டும் நிலையும் வரும் என்றும் தான் மக்களை நம்பவைக்கப்பட்டது.

ஆனால் நடந்ததோ பாசகவின் முதலாளிகள் பொதுமக்களின் பணத்தையும் செல்வத்தையும் கொள்ளையடிதுக்கொண்டு வெளி நாடுகளுக்கு ஓடுவதும் அந்த நட்டத்தை பல்வேறு வகையில் பொதுமக்களிடம் பாசக வசூலிப்பதையும் மக்கள் கண்டு வெறுத்து போயி இருக்கும் நிலையில் பாவம் வடகிழக்கு மாநிலங்கள் இப்போது தான் அந்த மின்மினி பூச்சின் வெளிச்சத்தை நம்பி பாலாறும் தேனாறும் வரும் என்று நம்பி ஏமாந்து இருக்கிறார்கள்.

இனி இந்த மாநிலங்கள் இன்னும் ஒரு 100 ஆண்டுகளுக்கு பொருளாதார அளவிலும் தனி மனித அளவிலும் பின்னுக்கு தள்ளப்பட்டு எல்லோரும் ஓடு ஏந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு வெகு எளிதாக தள்ளும் பாசக. இனி மாடு, மற்றும் கோமிய அரசியல் மட்டுமே அங்கே நடக்கும், வேறு ஒரு மாற்றமும் விளையபோவது இல்லை, இந்தியாவின் மற்ற மாநிலங்கள் போலே.

திருவாளர் சாதி மத அராய்சியாளர் மற்றும் நிபுணர் எச்ச சர்மாவுக்கு இன்னமும் அதோ பார் பசு, இதோ பார் சாணம், அங்கே பார் பசு மூதிரம், இங்கே பார் பசு கறி என்று சொல்லி. ஆடு மாடு பன்றி கோழி நாய் பூனை போன்றவைகளை காட்டுவிலங்காக மாற்றியும், தமிழர்கள் அதிகம் சாப்பிடும் காய்கறிகளை அரிய இன வகை காய்கள் பட்டியலில் சேர்த்து தடை செய்தும் மக்களை வாட்டலாம் என்றும் திட்டம் இருக்கும் போல. அந்த திட்டதின் கனவு தான் அவரை இப்படி எல்லாம் பேச வைக்கின்றது.

எச்ச சர்மா உங்களோடு சேர்ந்து நாங்களும் சொல்கின்றோம் தமிழகத்தில் பாசக ஆட்சி தான் அடுத்த 4 ஆண்டுகளுக்கு. எப்போது அதிமுகவை கலைக்கிறீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும். அந்த வழியில் பாசக தமிழகத்தை ஆளப்போவது உறுதி.

0 comments: