Friday, December 30, 2016

இந்துவும் இரத்தமும் Bloodம் மற்றும் இயக்குனர் பாலாவும்

தமிழ் சினிமா 2016: நம்பிக்கை தகர்த்த ஐவர்! என்று தமிழிலும்

The Revenant: a pure, visceral experience என்று ஆங்கிலத்திலும் இந்து இதழ் செய்திகளை வெளியிட்டு இருக்கிறது.

இதோ முதலில் ஆங்கில செய்திகளை இங்கே எடுத்து வைப்போம் பிறகு காணாமலும் போகலாம்.

This is a Man vs Wild survival drama, a revenge saga and an existential journey, besides its artistic politicking. And at times, you feel it is too much to meld into a coherent film. Viewers looking for an overall emotional impact may be disappointed. It works not so much as a movie with a message but as a pure, visceral experience.

DiCaprio’s daredevilry as an actor and the extreme conditions with which the film has been made has made The Revenant this year’s biggest Oscar special movie event. That may have irked the inner cynics within fans of Inarritu, who is somewhat an iconoclast. But these scenes really are groundbreaking, each beat and nuance executed with supreme cinematic control – the scene where Glass escapes from the French and falls off a cliff with his horse is a heart-stopper.

அப்படியே இந்த ஆங்கிலப்படத்தை பற்றி என்ன அருமை ஆகா ஓகோ அப்படி இருக்கிறது இப்படி இருக்கிறது என்று எழுதி இருக்கிறது இந்து. முழுவதையும் படிக்க அந்த தளத்தில் சென்று வாசித்துக்கொள்ளுங்கள்.

இதே இந்து தமிழில் என்ன எழுதி இருக்கிறது பாருங்கள்....

பாலா 
 
'சேது' படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர். ஆனால், 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் விரும்பிப் பார்த்தவர்களைக் கூட திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு செய்துவிட்டார். ரத்தம் தெறித்தல், குரல்வளை நெறித்தல், வினோதமான பழிவாங்கும் படலம்தான் பாலாவின் படம் என்று காலப்போக்கில் மாறிப்போனது. தாரை தப்பட்டை, கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை உண்மையும் உருக்கமுமாக சொல்வார் என நம்பி தியேட்டருக்குள் போனால் இந்த முறையும் ரசிகர்களின் குரல்வளையைக் கடித்து துப்பிதான் பாலா அனுப்பினார். 

கதைக்கோ திரைக்கதைக்கோ தேவை இருக்கிறதோ இல்லையோ அதைக் காட்டிலும் அதிகமான குரூரம், வன்முறை, குரோதம் போன்றவற்றை வெளிப்படுத்தித்தான் மனித நேயத்தை உணரவைக்க வேண்டும் என்பதில் பாலா உறுதியாக இருப்பது எதனால் என்பதை இன்னமும் ரசிகர்களால் புரிந்துகொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை.

'தாரை தப்பட்டை' பாலாவுக்கு ஏழாவது படம். ஆனால், எண்ணிக்கையை மனதில் கொள்ளாமல் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆளுமையாக பாலாவை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அனுராக் காஷ்யப், ராஜ்குமார் ஹிரானி முதலான இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் கண்டு வியக்கிறார்கள். அப்படிப்பட்ட முக்கிய சினிமா படைப்பாளி காட்சிப்படுத்துதலில் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு.

ரிவரண்ட் படம் ஆசுகர் படம் என்றதால் அனேக மக்கள் பார்த்திருக்க வாய்பு இருக்கிறது.

அந்த படம் துவங்வது துப்பாக்கி சூடில் தான், அந்த முதல் தோட்டாவில் இருந்து கடைசியில் கத்தியில் குத்தி குதறி ஆற்றில் வீசி பிறது அவனை இன்னும் ஒருவன் பிடித்து அவனது பாணியில் கழுத்தை அறுத்து நீரில் முக்கி இறக்க வைக்கும் காட்சியில் முடிகின்றது.

வெள்ளை பனி தரையில் தாரை தாரையாக சிவப்பு இரத்தம் அந்த கடைசி காட்சியில். கொட்டவனின் விரலை வெட்டிவதில் ஊற்ற தொடங்கும் இரத்தம் கடைசியில் ஓடும் குளிர் நீரில் முழுவதுமாக கழுவி முடிவதில் முடிகின்றது அந்த இரத்த கறைகள்.

ஓடும் குதிரையோடு ஒரு 100 அடியில் விழுவான் நாயகன் இருவரும் விழுந்து நிலைகுலைவதை மலையின் மேல் காற்றில் பறந்து காட்டுவார்கள் அதை தான் இந்து ஆங்கிலத்தில் இப்படி குறிப்பிடுகிறது.

"The Revenant is a very visual film, a technical marvel and a feast to the senses. Inarritu’s long-time collaborator, Lubezki has always brought out the holistic, spiritual soul of his films. Here he meditates on the wilderness, filming in natural light in magic hours and giving us some of the most stunning images we have seen in the movies in the recent past."

அப்படி மலையில் இருந்து விழுந்த குதிரையை கிழித்து உடலில் இருக்கும் பகுதிகளை நீக்கி விட்டு அதில் பதுங்கி உறங்கி உயிர் தப்பிப்பது என்று எக்கச்சக்க இரத்த சமாச்சாரங்கள் நிறைந்த படம் தான் இந்த ரிவரண்ட்.

அப்போ ஆங்கிலத்தில் Blood வந்தால்  very visual film, and giving us some of the most stunning images we have seen in the movies in the recent past.

தமிழில் இரத்தம் வந்தால்  "கதைக்கோ திரைக்கதைக்கோ தேவை இருக்கிறதோ இல்லையோ அதைக் காட்டிலும் அதிகமான குரூரம், வன்முறை, குரோதம் போன்றவற்றை வெளிப்படுத்தித்தான் மனித நேயத்தை உணரவைக்க வேண்டும்"

என்னையா நீங்களும் உங்கள் ஞாயமும்.

தற்பொழுது உலகத்தில் நல்லவர்களுக்கு ஒரு விளக்கம் சொல்கிறார்கள் இப்படி

ஏங்க அவன் தான் அப்படின்னு உங்களுக்கு தெரியும், ஆனால் நீங்க நல்லவங்களாச்சே இப்படி எல்லாம் பேசவோ செய்யவோ மாட்டீங்களே. போனா போகுது விட்டு கொடுத்துடுங்க......

தனக்கு ஞாயமாக கிடைக்க வேண்டிய எல்லாத்தையும் கெட்டவர்கள் தன்னிடம் இருத்து பிடுங்கும் போது உங்களுக்கு உலகம் சொல்லும் நீதி இது.

அதை தான் இந்துவும் கடைபிடிக்கிறது போலும்.

ரிவரண்டைவிட தாரை தப்பட்டையில் வன்முறை மிகக்கம்மி. ஒரு மூலையில் கோழியை முடக்குங்கள் அதுவரை ஓடிய கோழி நம்மீது பாயும், கோழிக்கே அப்படி என்றால் மனிதனுக்கு எப்படி இருக்கும்.

அதுவும் தான் காதலித்த பெண் நல்லா இருக்கட்டும் என்று விட்டுக்கொடுக்க வைக்கப்பட்ட பெண், அவளாது நல்லா இருக்கட்டுமே என்று அனுபியவளை இப்படி காசுக்காக கசாப்பு செஞ்சதை பார்த்துக்கொண்டு எந்த ஆண் சும்மா இருப்பான் என்று இந்து இதழ் தான் விளக்க வேண்டும்.

அது மட்டும் இல்லை ஏன் இந்த இரத்த வாடையை பற்றி ரிவரண்ட் பட விமர்சனத்தில் ஒரு வரிக்கூட எழுதவில்லை என்றதையும் விளக்கினால் நாம் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

Thursday, December 29, 2016

மோடியையும் அவரது அரசையும் கேலி பேசும் ப சிதம்பரத்தை வன்மையாக கண்டிப்போம்

என்னமோ மோடி கையாலாகதவர் போல் சித்தரித்து பேட்டியளித்து வருகிறார் ப சிதம்பரம்.

சமீபத்தில் ஒரே மாதிரியான கேள்விகளுக்கு ஒரே மாதிரியான பதிலை திரும்ப திரும்ப தமிழில் இருக்கும் ஊடகங்களுக்கு கேள்வி பதிலாக அளித்து வருகிறார் ப சிதம்பரம்.

சிதம்பரம் சிலாக்கித்து சொல்லும் செய்திகளுல் உள் குத்துகள் இவைகள்

1) மோடிக்கோ மோடி அரசுக்குகோ திட்டமிடல் என்றால் என்ன என்றே தெரியாது என்று இந்த செல்லா நோட்டு விவகாரத்தில் காட்டி இருக்கிறார்கள் என்று பொருள் பட மிகவும் நக்கலாக பதிலுரைக்கிறார், இதிலே பாரத பிரதமரை நான் நக்கல் செய்யமாட்டேன் என்று முகவுரை வேறு

2) மோடியும் மோடி அரசும் மூச்சுக்கு 300 தடவை பொய் சொல்கிறார்கள், அவர்கள் சொல்லும் எதையும் நம்புவதற்கு இல்லை என்று சொல்கிறார்.

3) மோடியும் மோடி அரசும் வெறும் வசனம் மட்டுமே பேசுபவர்கள் அவர்களுக்கு செயல் எதுவும் செய்ய துப்பு கெட்டவர்கள் என்றும், உதாரணமாக இந்த செல்லா நோட்டு விவகாரத்தில் கருப்பு பணம் ஒழியும் என்று சொன்னார்கள், எங்கே கருப்பு பணம் என்று நாங்களும் மக்களோடு சேர்ந்து கேட்கையில், இல்லை இது ஊழலை ஒழிக்க என்று சொன்னார்கள். புது நோட்டிலேயே இலஞ்சபணம் பிடிப்பட்டதே என்று சொன்னதும் பணமில்லா வர்த்தகம் என்று சொல்கிறார்கள் என்று பொய்யான புகார்களை அடுக்குகிறார்.

4) 50 நாளில் இந்த இடர்பாடுகள் நீங்கவில்லை என்றால் என்னை தீயில் இட்டு கொளுத்துங்கள் என்று பெரும் நம்பிக்கையில் மோடி சொன்னதை அப்படி செய்யலாமா என்று கேட்க்காது தான் சொச்சம் மற்றபடி சுற்றி வளைத்து அங்கே கொண்டு வந்து விடுகிறார்

5) மோடிக்கும் மோடி அரசுக்கும் கருப்பு பணம் என்றால் என்ன என்றே தெரியவில்லை என்று வேறு குறிப்பிடுகிறார், கருப்பு பணம் என்றால் என்ன என்றே தெரியாமல் எப்படி கருப்பு பணத்தை ஒழிப்பார்கள் என்று வேற நக்கல் பேசுகிறார்.

6) 100ரூ பொருளை நான் எதற்கு 102ரூக்கு வாங்கனும் என்று வேற வியாக்கானம் பேசுகிறார், மக்கள் இப்போது 10ரூ சில்லரையை கூட கேட்டு வாங்குவது இல்லை என்று ப சிதம்பரத்திற்கு தெரியாமல் போனது ஏனோ, மோடி கூப்பிட்டு தான் விளக்கனும் போலும்.

7) நாட்டில் கள்ளப்பணம் எப்படி உருவாகுகிறது என்று எளிமையாக சொல்கிறேன் என்று மருத்துவ கல்லூரி, மருத்துவர்கள் மற்றும் வக்கீல்களை உதாரணமாக சொல்கிறார்.

8) இது வரையில் சும்மா கொஞ்சோண்டு கிடைத்த 500 கோடி புது நோட்டுக்களை என்னவோ மோடியும் மோடி அரசும் கொண்டு போய் அந்த பிடி பட்டவர்களிடம் கொடுத்ததை போல் சித்தரித்து பேசுகின்றார்.

9) மோடியும் மோடி அரசும் நாட்டின் எல்லையில் மட்டும் பாதுகாப்பு வீரர்கள் நின்றால் பத்தாது வீட்டில் இருக்கும் அனைவரும் நாட்டின் காவலர்கள் ஆகவேண்டும் என்ற உண்ணதமான நோக்கில் பணம் எடுக்கின்றேன் என்ற போர்வையில் உள் நாட்டை பாதுகாக்கும் பணியில் இலவசமாக தாய் நாட்டுற்கு கடமையாற்றுபவர்களை, பணம் இல்லாமல் மக்கள் வங்கி வங்கியா பணம் தேடி அலைகிறார்கள் என்று கேலி செய்கிறார்.

10) ப சிதம்பரத்திற்கே ஒரு சின்ன அளவிற்கு தான் 2000 நோட்டு கிடைத்ததாம், பிறகு எப்படி அடுத்தவர்களுக்கு கிடைக்கும் என்று பொய் சொல்லுகிறார். முன்னமே சொன்னது போல் அரசு அதிகாரிகளே 500 கோடிகளுக்கு புது பணம் வைத்து இருக்கும் போது ஒரு அரசியல்வாதி அதுவும் நிதியமைச்சராக இருந்தவர் அவருக்கா தேவை என்றால் பணம் பெற்றுக்கொள்ள தெரியாது. யாரை ஏமாற்றுகிறீர்கள் சிதம்பரம் விளக்கம் சொல்லுங்கள்.

11) இவைகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல் இந்த பண தட்டுப்பாடு நீங்க இன்னனும் 6 மாதம் ஆகுமாம், பொருத்து இருந்து பாருங்கள் சிதம்பரம். மோடியும் மோடி அரசும் சனவரி 1 கூட இல்லை 31லேயே இந்த பண தட்டுப்பாட்டை ஓர் இரவில் நீக்குகிறார்களா இல்லையா என்று பாருங்கள்.

12) வங்கி கணக்கில் பணம் இருக்கிறது பணம் எடுக்கப்போனால் தர மறுக்கிறார்கள் இது சட்ட மீறல் என்றும் நக்கலடிகிறார்கள். போகிற போக்கில் நாட்டின் எல்லையில் இராணுவ வீரர்களை குளிரில் நிறுத்தி துன்புறுத்துகிறார் மோடியும் மோடி அரசும் என்று சொல்வார் போல. எல்லையில் இருக்கும் இராணுவ வீரர்கள் எப்படி கேள்வி கேட்க்க கூடாதோ அதே போல் மோடி அரசில் நாட்டில் வாழும் யாரும் கேள்வி கேட்க்க கூடாது என்ற அடிப்படை கூட புரியாத மனிதர் இந்த ப சிதம்பரம்

போங்கையா போய் வேறு வேலை ஏதாவது இருந்தால் பாருங்கள்.

பாசகவின் செய்தி தொடர்பாளர்கள் சொன்னது போல் இன்னும் 100 ஆண்டு காலம் மட்டும் இல்லை இந்த பூமி அழியும் வரை நிரந்தர பிரதமர் மோடி தான். ஏன் நாளை காங்கிரசே ஆட்சிக்கு வந்தாலும் மோடி தான் பிரதமர் அவர் சொல்வது தான் சட்டம். இந்த சாதாரண செய்தியை கூட புரிந்து கொள்ள பொருத்துக்கொள முடியாத மனிதர் ஐயா நீங்கள்........என்ன அரசியல்வாதியோ நீங்கள்..........

2017ல் பாசக அரசு செய்யவிருக்கும் அசுரதனங்கள்

மக்களை பயமுறுத்தி கையில் இருக்கும் திருப்பதி உண்டியல் வரை உள்ள கடைசி பணத்தையும் மிரட்டி வங்கியில் அடைத்த அரசு சாதாரண மக்களின் மீது வேறு என்ன என்ன எல்லாம் செய்த்தால் துன்பப்படுவார்கள் என்று ஆராய்ந்து சொல்ல "சாதார்ண் சன் துக்க யோசனா ஆயோக்கு" என்ற ஆணையத்தை அமைத்து அவர்கள் சொல்லும் பரிந்துரைகளை ஏற்று செயல்படவுள்ளார்.

இந்த சாதார்ண் சன் துக்க யோசனா ஆயோக் ஆணையத்தின் வேலையே சாதாரண மக்களை எப்படி எல்லாம் துக்கத்தில் ஆழ்த்துவது என்று ஆராய்ந்து இம்சை அரசன் 23ம் புலிகேசியினிடம் ஒ ஓ மன்னிகனும் பிரதமரிடம் சொல்லும்.

இந்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசியும் மன்னிகனும் பிரதமரும் அதை ஒரு முறைக்கு ஆயிரம் முறையேனும் சிந்தித்து பார்ப்பார். கோடி சாதாரண மக்கள் கொல்லப்பட்டால் கூட பரவாயில்லை ஆனால் ஒரு பாசகவை ஆதரிக்கும் பணக்காரர்களுக்கு கூட எந்த பாதிப்பும் வந்துவிட கூடாது என்று ஆயிரம் முறை மனதுக்குள்ளே ஒரு Monkey Bathதை அவருக்கு மட்டுமே ஓட்டி பார்ப்பார்.

அப்படி சாதாரண மக்கள் தெருத்தெருவாக அலைவதையும் தங்களது கையால் ஆகா தனத்தால் விழி பிதுங்கி செய்வது அறியாது கோபத்தை எல்லாம் விழுங்கிவிட்டு மாலையில் அக்கடான்னு இருக்கும் வேளையில் மோடி தொகவில் தோன்றி எனது சாதார்ண மக்கள் ஏழைகள் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்று மிகவும் அக்கரையாக சொல்வார்.

இந்த கையால் ஆகாக சாதார்ண மக்கள் நினைத்துக்கொள்வார்கள் அட நமக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் கொடுமைகள் போலும் மோடி சொல்வது போல் மற்ற ஏழை மக்கள் எல்லாம் நிம்மதியாக தூங்கிறார்கள் போல் தான் இருக்கிறது. நாம் மட்டும் ஏன் கோபப்பட வேண்டும் ஆகையால் நாளைக்கு எங்கே சென்று அலையலாம் என்று மனதுக்குள் ஒரு உத்தேச திட்டத்தை தீட்டிவிட்டு மயங்கி போய் தூங்குவான்.

50 நாட்களாக பிச்சைகாரர்கள் போல் தெருவில் அலைந்து திரிந்த மக்களும் சரி, அவர்கள் சென்று வேலைக்கு சென்று வரும் நிறுவனங்களும் சரி பணம் வாங்க போனேன் என்று சொன்னால் கடிந்துகொள்வதோ இல்லை நடவடிக்கை எடுத்தால் இம்சை அரசனிடம் இருந்து நடவடிக்கை பாயுமோ என்று அமைதியாக இருக்கிறார்கள் அல்லது பொருத்து கொள்கிறார்கள் தற்பொழுது.

சாதார்ண் சன் துக்க யோசனா ஆயோக் ஆணையம் பரிந்துரைத்திருப்பது இது தான்

1) வங்கியில் மக்கள் செலுத்தியுள்ள பணம் 2016ல் உள்ள பணம், 2016ல் இரண்டு மாதம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தின் வருமானமாக கருதி அதன் அடிப்படையில் 2016ஆம் ஆண்டின் ஆண்டு வருமானம் என்ன என்று பார்த்து வங்கியில் மிச்சம் இருக்கும் பணத்தில் வருமான வரியாக அப்படியே எடுத்துகொள்வது.

2) வருமான வரி செலுத்த முடியாத அளவிற்கு பணம் செலுத்தியவர்களின் பண அட்டையில் இந்த 2 மாதம் செலவழித்த தொகையை கொண்டு அவர்களது தோராய வருமானத்தை கணக்கிட்டு சனவரிக்குள் இந்த வருமான வரியை கட்டாவிட்டால் உங்களை சிறையில் தள்ளுவோம் என்று வருமான வரி துறையை வைத்து அறிக்கை அனுப்புவது.

3) இந்த இரண்டு மாத காலத்தில் நகையோ இடமோ பொருளோ வாங்கி இருந்தால் அவைகளையும் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தையும் ஒன்றாக சேர்த்து வருட வருமானத்தை கணக்கிட்டு அந்த பெரும் தொகைக்கு வருமான வரியை கட்டு இல்லை என்றால் சிறை என்று அறிக்கை அனுப்புவது.

4) பணம் எடுக்க போனேன் என்று வேலைக்கு தாமதமாக வருபவர்களுக்கு 2 முறை மட்டும் மிக கருணையாக மன்னிப்பதும் பிறகு வேலையை விட்டே அனுப்புமாறு இரகசிய அறிக்கையை வேலை நிறுவனங்களுக்கு அனுப்புவது.

என்று இந்த 4 அறிவிப்புகளை சனவரியில் அனுப்ப சாதார்ண் சன் துக்க யோசனா ஆயோக்கின் ஆயோகியர்கள் பரிந்துரை அனுப்பியுள்ளார்கள்.

இந்த ஆயோக்கியர்களின் ஆலோசனை பாசகவின் பணக்காரமக்களை எந்தவிதத்திலும் இம்மியளவும் பாதிக்காது என்று ஆராய்ந்த பிறகு சாதார்ண மக்களின் மீது பாய்ந்து குத்தி குதறி எடுக்க பாசக அரசு தயாராகி வருகின்றது.

சனவரியில் இம்சையரசன் 23ம் புலிகேசி மன்னிக்கனும் பிரதமர் மோடி தொகாவில் தோன்றி சாதார்ண ஏழைமக்கள் இப்போது தான் நிம்மதி பொருமூச்சி விட்டிருக்கிறார்கள் என்று அழுதுக்கொண்டே சொல்வார்.

இதை கேட்கும் சாதார்ண மக்கள் அட நாம் மட்டும் தான் துன்பம் அனுபவிக்கிறோம் போல மற்ற சாதார்ண மக்கள் ஏழைமக்கள் எல்லாம் நிம்மதியாகத்தான் இருக்கிறார்கள் என்று அடுத்த நாள் எந்த தெருவில் வேலைக்கு பங்கம் இல்லாமல் சென்று அலைவது என்று திட்டமிட்டுக்கொண்டே மயக்கம் வரும் வரையில் சிந்தித்து புலம்பிவிட்டு தூங்குவான்.

Wednesday, December 21, 2016

இந்திய மக்களே இனி அமெரிக்க டாலருக்கு மாறுங்கள் இந்திய பணத்தில் பரிவர்த்தனைகள் வேண்டாம்

இந்திய மக்களே இனி அமெரிக்க டாலருக்கு மாறுங்கள் இந்திய பணத்தில் பரிவர்த்தனைகள் வேண்டாம்.

உலகில் பொருட்செல்வத்தில் மிகவும் பலவீனமாக உள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள் பொதுவாக தெருக்களில் விற்கும் பொருட்களை கூட அமெரிக்க டாலருக்கு தான் விற்பார்கள்.

அது மட்டும் இல்லாது இன்றைக்கு இரவு 9:00க்கு மேல் இந்த நோட்டுகள் எல்லாம் செல்லாது என்று அமெரிக்க அறிவித்ததும் இல்லை அறிவிக்க போவதும் இல்லை.

ஆக இந்திய மக்கள் அனைவரும் இனி வங்கிகளில் அமெரிக்க டாலரில் சேமிக்கவும், கையில் செலவுக்கு அமெரிக்க டாலரையே எடுத்து செல்வதும் தான் பாதுகாப்பு.

இப்படி அமெரிக்க டாலரில் வியாபாரம் செய்வது சாத்தியமா என்று நீங்கள் கேட்கலாம்.

இன்று இந்தியாவில் விற்கும் பொருட்கள் அனைத்துமே அமெரிக்க டாலரின் விலையில் எவ்வளவு விற்கிறார்களோ அதே விலைக்கு தான் விற்கிறார்கள் இந்தியாவிலும். ஆக விலையில் ஒன்று கூட குறைய கொடுக்க போவது இல்லை.

என்ன ஒவ்வொரு முறையும் ரூபாயில் இருந்து அமெரிக்க டாலருக்கு மாற்றும் போதும் மாற்ற கட்டணம் வசூலிப்பார்கள்.

ஒரு கட்டத்தில் அனைத்து மக்களும் அமெரிக்க டாலரே கொடுத்து அமெரிக்க டாலரை வாங்கும் நிலை வந்ததும் அதற்கு அப்பால் மாற்று கட்டணம் கட்ட தேவை இருக்காது (கையில் இருக்கும் உங்கள் பணத்தை இப்போது எடுக்க முடியாது என்று இந்த அரசு சொல்லாம் ஆனால் பிறகு நாளைக்கு எடுக்கவே முடியாது என்று கூட வந்து தண்ணிச்சையாக சொல்லாம்).

காவிகளின் கோமாளி தனத்தால் நாம் ஏன் பலியாக வேண்டும், ஆகவே நம்பிக்கையான வங்கிகளில் எங்களுக்கு அமெரிக்க டாலர் வேண்டும் என்று சொல்லுங்கள். 1,5,10,20 அமெரிக்க டாலர்களாக மாற்றிக்கொள்ளுங்கள்.

பிறகு அனேக இடங்களில் 1 அமெரிக்க டாலர் தாள்களே போதுமானதாக இருக்கும். மற்ற இடங்களில் தேவைக்கு ஏற்ப 5 அல்லது 10 முதல் 20 அமெரிக்க டாலர்களை பயன் படுத்தலாம்.

அமெரிக்க டாலர்களில் இந்திய பணத்தை மாற்றி கொடுக்க கட்டுப்பாடு உள்ளது. இருந்தாலும் இப்போது இருக்கும் நிலையில் இந்திய பணம் பெறுவதை விட எளிதாக அமெரிக்க டாலரை பெறமுடியும். ஆகவே உங்களுக்கு தெரிந்த நன்கு அறிந்த மக்களை கொண்டு இந்த மாற்றங்களை செய்யுங்கள்.

இனி மிச்சம் இருக்கும் பாசக அரசு காலம் வரை அமெரிக்க டாலரிலே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள்.

இந்த பதிவை பார்த்ததும் காவிக்கூட்டம் நாட்டு துரோகம் என்று ஆரம்பிப்பார்கள், அவர்களுக்கும் உங்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்கின்றேன். இன்றைக்கு அமெரிக்காவுடன் மென் பொருளிலும் மற்ற வர்த்தகத்திலும் ஈடுபடும் அனைத்து பெரு நிறுவனங்களும் அமெரிக்க டாலரில் தான் பரிவர்த்தனைகள் செய்கின்றது. ஆக நீங்களும் இனி பெரு நிறுவனங்களை போல் அமெரிக்க டாலரில் பரிவர்த்தனை செய்யுங்கள்.

அமெரிக்க டாலரை ஈட்டி தருவதனால் அந்த பெரு நிறுவனங்களுக்கு நிறைய சலுகைகள் உண்டு. வருமான வரியிலும் அப்படி தான், நீங்களும் அமெரிக்க டாலரில் பர்வர்த்தனைகள் செய்வதால் நாளை மோடி அரசு உங்களுக்கு வருமான வரி சலுகைகள்  கூட அளிக்கலாம். இல்லை எப்போதும் போல் இளிச்சவாயன் நடுத்தரவர்க்கம் ஆனதால் ஏதோ ஒரு காரணத்தால் உங்களது அமெரிக்க டாலரும் கூட எதற்கும் தகுதி இல்லாத பணமாக கூட அவர் அறிவிக்கலாம்.

எது எப்படி போனாலும் உங்களிடம் இருக்க போகும் அமெரிக்க டாலர் செல்லாது என்று சொல்லவோ அவைகளை மாற்றமுடியாமல் புது நோட்டு இல்லை பழைய நோட்டு என்று சொல்லவோ மோடி அரசால் முடியாது. ஆக அமெரிக்க டாலராக உங்க இந்திய பணத்தை மாற்றுங்கள். இனி அமெரிக்க டாலரிலேயே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள்.

சிறு பிள்ளை தனமாக மோடி தரமாட்டேன் போ என்று சொல்வதற்கு பெரிய மனித தனமாக வேண்டாம் நீயே வச்சுகோ என்று திருப்பி சொல்லுங்கள்.......

அரசு உங்கள் மேல் திணித்து இருக்கும் அரசபயங்கரவாதத்தை அவர்களுக்கே திருப்பி கொடுங்கள்.

ஏடியமிலும் இந்திய வங்கிகளின் வாசலிலும் நிற்பதை நிறுத்துவிட்டு அமெரிக்க டாலர் கிடைக்கு இடங்களுக்கு சென்று கேளுங்கள், இன்றைக்கு நோட்டு இல்லை என்றால் நாளையே கிடைக்க மின்னல் வேகத்தில் அமெரிக்க டாலரை கொண்டு வந்து இறக்கும் அமெரிக்க அரசு. அமெரிக்க அரசு டாலரை இந்தியாவில் இறக்க கூடாது என்று சொல்ல மோடிக்கு திராணி இல்லை என்றது வெளிப்படை.

Saturday, December 17, 2016

ஏன் சசிகலா அதிமுக முதல்வராக கூடாது

சசி தலைவராவதும் முதல்வராவதும் அவரது மற்றும் அதிமுகவின் தொண்டர்கள் விருப்பம். இதிலே பாசக ஒன்றும் அறிவுரை செல்ல தேவையில்லை.

என்னமோ நல்லவர்கள் போல் குறுக்கு வழியில் பதவிக்கு வரவேண்டிய தேவை எல்லாம் எங்களுக்கு இல்லை என்று எச்சி ராசா பதில் சொன்னார்.

அதை தொடர்ந்து குருமூர்த்தி வழக்கு தொடுக்கிறார், சேகர் கருத்து சொல்கிறார். இவர்களின் அல்ல கைகள் இணையத்தில் நகைப்பாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் அதிமுகவிற்கு தெரியும் யாரை தேர்ந்தெடுப்பது என்று.

இதிலே சாக்குலேட்டுடன் ஒட்டி இருந்தால் அந்த அட்டையை யாரும் சாப்பிடமாட்டாங்க என்ற நக்கல் வேறு.

 நாமும் தெரியமல் தான் கேட்ப்போம், செயலலிதிலா எந்த அரசியல் பாரம்பரியத்தில் வந்தவர். எந்த எந்த இயக்கங்களில் சேவையாற்றி இருக்கிறார். அவருடைய அரசியல் நம்பிக்கைகள் என்ன. அல்லது நோக்கங்கள் தான் என்ன.

முன்னால் முதல்வரின் ஆசை நாயகியாக இருந்தவர், முதல் முறை ஆட்சி கிடைத்ததும் என்ன செய்வதென்றே தெரியாமல் நடராசனிடன் ஆட்சியை ஒப்படைத்து  விட்டு தோழியுடன் ஓய்வெடுத்தவர். சித்தன் போக்கு சிவன் போக்கு என்று நடராசனோ எங்கே எல்லாம் காசு வருகின்றதோ அங்கே எல்லாம் கல்லாகட்ட கடைசியில் சுடுகாட்டு ஊழல் வரை கதை நீண்டதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

அதன் பிறகு வந்த ஆட்சியில் எல்லாம் திமுக தொடங்கி முடிக்கும் தருவாயில் இருக்கும் திட்டங்களுக்கு பெயர் மாற்றுவது இல்லை திமுகவின் பழைய திட்டங்களை புதிய என்ற பெயருடன் செய்வதை தவிர செயா இது வரையில் வேறு எதையுமே செய்தவர் இல்லை.

என்னமோ இரும்பு பெண்மணியாம், அசைக்க முடியாதவராம். அரசியல் ஞானம் கொண்டவராம். எவ்வளவுடா அளந்து விடுவீங்க அதுவும் பாசகவின் சார்பில். அதிமுக அடிக்கின்ற சால்ராவைவிட உங்கள் சால்ரா தாங்கமுடியவில்லை சகிக்கவும் இல்லை.

சசியின் பிடியில் சிக்கி வெளிவர முடியாமல் சண்டை வரும் போது எல்லாம் வனவாசம் போகின்றேன் என்று ஆளுனருக்கு கடிதம் அனுப்பியது எல்லாம் பாசகவிற்கு தெரியாது போலும்.

செயா இறக்கும் வரையில் சசியிடம் இருந்து யாராலும் பிரிக்கமுடியாத தோழியாக வைத்துக்கொண்ட இரும்பு பெண்மணி சசி.

அன்றைக்கு எப்படி எந்த தகுதியும் இல்லாமல் இறக்கும் வரை முதல்வராக இருந்தாரோ அதே போல் சசியாலும் இருக்கமுடியும்.

அதிமுகவை பொருத்த வரையில் மக்கள் பார்க்க ஒரு பெண்ணின் காலில் விழுந்தால் கோடி கோடியாக கிடைக்கும் என்றால் காலிலேயே விழுந்தே கிடக்க கூட அவர்கள் தயார். அதில் உங்களுக்கு என்ன சங்கடம்.

தமிழகத்தில் திமுகவை எதிர்த்து நிற்க ஒரு ஆள் வேண்டும் அவ்வளவு தான் அது யார் என்றது எல்லாம் முக்கியம் இல்லை.

ஏன் அன்புமணி, விசயகாந்து, சீமான் எல்லாம் ஆசைபடலியா. அந்த மாதிரி ஆசைபடலாம் ஆனால் எத்தனை பேரால் பதவிக்கு வரமுடியும்.

அதிமுக ஆட்சிகாலத்தில் எப்படி எல்லாம் திட்டம் தீட்டப்பட்டது எங்கே என்ன பேச வேண்டும், யார் யார் எல்லாம் வேலை முடித்து கொடுப்பார்கள். எந்த எந்த ஆளுக்கு என்ன என்ன கொடுக்க வேண்டும் என்று நரசிம்ம ராவு காலத்தில் இருந்து மோடி காலம் வரை கூடவே இருந்து பார்த்த அனுபவம் கொண்டவர் சசி.

ஆகவே அரசாள கொடுத்தால் கடைசிவரையில் காலம் ஓட்ட தெரிந்தவர் சசி. செயா எப்போதாவது வெளியில் வந்து அண்ணா நாமம் வாழ்க புரட்சி தலைவர் வாழ்க என்று சொன்னது போல் சசியால் செயல்பட முடியாதா என்ன.

அதே நடராசன் இருக்கிறான், அன்றைக்கு செயாவிற்கு தப்பு தப்பாக சொல்லி கொடுத்த அல்ல கைகளும் இருக்கிறார்கள் அவர்கள் சேர்ந்து சசியை ஒழிக்கனும் என்று நினைத்தாலும் அந்த கால அனுபவத்தை மனதில் வைத்து கடைசிவரை மாட்டாமல் எப்படி தப்பிப்பது என்று சசிக்கு தெரியும்.

அப்படியேதும் மாட்டினால் கொமாரசாமி கிடைக்காமலா போய்விட போகிறார்கள். 2+2= 0 என்று சொல்ல ஒரு பெங்களூரு கணக்கி கிடைக்காமலா போய்விட போகின்றது.

மரியாதையா போய் உங்கள் வேலையை பாருங்கள், சசி தமிழகத்திற்கு மட்டும் தலைவியாக போவது இல்லை இந்தியாவை ஆளப்போகும் இரும்பு பெண்மணி. அவரை பற்றி எல்லாம் தப்பும் தவறுமாக பேசுவதையும் எழுதுவதையும் நிறுத்திக்கொள்ளுங்கள் வயிற்றெரிச்சல்காரர்களே......

Friday, December 16, 2016

மோடி 340 கோடி யார் அப்பன் வீட்டு பணம் எடுத்து உங்க ஏழைகளுக்கு கொடுக்க

"பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை ஊக்குவிக்கும் விதமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோருக்கு ரூ.340 கோடி அளவிலான தினசரி, வாராந்திர ரொக்கப் பரிசை நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் அறிவித்துள்ளார்.

 இது கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் முதல் தொடங்கி ஏப்ரல் 14-ம் தேதி வரை நீடிக்கும்."

இது யார் அப்பன் வீட்டு பணம் மைய நிதி ஆணையம் எடுத்து உங்கள் ஏழைகளுக்கு இறைக்க.

பணமில்லா வர்த்தகம் புரிவோரும் அதில் வாங்குபவர்களும் என்ன கையில் இருக்கும் கடைசி பணத்தாள் வரை வங்கியில் போட்டுவிட்டு எப்போது எடுக்கலாம் என்று வீட்டும் வங்கிக்கும் அலையும் குடியானவனுக்கா கிடைக்க போகுது.

ஞாயமா இப்படி பணத்தை கட்டாயப்படுத்தி பிடுங்கி வைத்த இத்தணை நாளுக்கும் அவர்களுக்கு வட்டி கொடுப்பதை விட்டுவிட்டு சொகுசாக வாழும் மக்களுக்கும் அவர்களுக்காக குளுகுளு அறையமைத்து வியாபாரம் செய்பவனுக்குமா இந்த 340 கோடி.

என்ன ஒரு திமிர் நடவடிக்கை அதுவும் உங்கள் பணத்தை பிடுங்கி அதிலே உங்களுக்கே என்ன அழகாக மோடி வித்தை காட்டுகிறார்.

மைய நிதி ஆணையம் இந்த பணம் எந்த நிதியில் இருந்து பெறப்பட்டது என்றும் எந்த எந்த பொது மக்களுக்கு போய் சேர்ந்தது என்றும் கணக்கு காட்ட கடமைபட்டவர்கள்.

இப்போ தெரியுதா கருப்பு பணம் எவ்வளவு பெரிய ஊழல் என்று. ப சிதம்பரம் சும்மா பேசினால் பத்தாது, இதை நீதிமன்றம் வரை கொண்டு போய் இந்த கள்ள ஆட்ட மோடியை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் இது போல் பாசகவின் சதுரங்க ஆட்டம் ஓயப்போவது இல்லை.

ஒரு வேளை S.V சேகர் நாட்டுக்காக அவர் பணத்தை கொடுத்து இருப்பாரோ.........

Thursday, December 15, 2016

மோடிக்கு பதில் அதிமுக சி பொன்னையனை பிரதமராக்கி இருக்கலாம்

இளிச்சவாயன் இந்தியன் திருப்பி கேள்வி கேட்க கூட தயங்குகின்ற இந்தியர்கள் இருக்கும் வரையில் உங்கள் பணத்தையே பிடுங்கி அதில் உங்களுக்கே பப்பர மிட்டாய் வாங்கி கொடுத்து நன்றாக சப்பு கொட்டி சாப்பிடுங்கள் என்று அழக்காக சொல்வார்கள் இந்த பாசகவினர்.

சி பொன்னையன் நிதி அமைச்சராக இருந்த சமயம் தமிழகத்தில் கடும் நிதி பற்றாகுறை. எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருந்த சமயத்தில் இந்த பொருளாதார மேதையான பொன்னையன் ஒரு யோசனையை சொல்லி அதை வலுகட்டாயமாக செயல்படுத்தவும் செய்தார்.

அரசாங்கத்திடம் வேலைபார்க்கும் மக்கள் தங்களது ஓய்வூதிய வைப்பை அப்படியே அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிடித்து வைத்துக்கொண்டு அரசாங்க வருமானமாக கணக்கு காட்டி சமாளிப்போம் என்று சொன்னது மட்டும் இல்லாது.

அந்த பணத்தை நம்பி பல நல்லகாரியங்கள் ஏழை எளியவர்களின் வீட்டில் நடக்கும், அவைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் எகத்தாளாமாக பேசியும் ஏன் என்று கேட்டவர்களை ஏகவசனங்களில் விமர்சிக்கவும் செய்தார் இந்த பொருளாதார மேதை சி பொன்னையன்.

இதே திட்டத்தை முன்னோடியாக எடுத்துக்கொண்ட நம்ப இந்த காலத்து பொருளாதார மேதை மோடி அதை இந்தியா முழுக்க செயல்படுத்தியுள்ளார்.

கருப்பு பணத்தை ஒழிப்பதாக சொல்லிக்கொண்டு ஏழை எளியவர்களின் பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று பொய் சொல்லி வங்கியில் போட சொன்னதுடன். உங்க பணமாகவே இருந்தாலும் நீங்களும் கூட அதை திரும்ப எடுக்கமுடியாது என்றும் பிறகு சொல்லி இருக்கிறார்.

சாதரணமாக இப்படி வங்கிகளில் வைக்கப்படும் நிதிக்கு வட்டி கொடுப்பார்கள். அந்த வைப்பு பணத்தை வங்கி முதலீட வைத்துக்கொண்டு அதன் தொழிலை செய்து வருவதும் தான் வங்கியின் வர்த்தகம்.

ஆனால் இந்த இக்கட்டான காலகட்டத்தில் வலுகட்டாயமாக வைக்கப்பட்ட பணத்திற்கு என்ன வட்டி கொடுக்கப்போகிறார்கள் இந்த பணத்தை வலுகட்டாயமாக வங்கியில் போட சொன்னவர்கள்.

எங்கே எடுத்து உபயோகப்படுத்த படுகின்றது உங்கள் பணம்,யாரேனும் ஒருவராது சொன்னார்களா...

உங்கள் பணத்தை செலவு செய்ய வரம்ப்பை நிர்நயிக்க அரசாங்கத்திற்கு என்ன உரிமை இருக்கிறது. அல்லது அவர்கள் சொன்ன வரம்புக்குள் உங்கள் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்துகொள்ளும் அளவுக்கு அது சரியான தொகையாக இருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் உங்களும் உதவாது உங்கள் பணம் பூதம் காத்த புதையலாக வங்கியில் ஏன் போய் வட்டியில்ல கடனாக நீங்கள் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டும்.

பாசக அரசுக்கு நிதி திரட்ட வேறு வழியே தெரியவில்லையா, ஏழை எளியவரிடம் தான் பிடுங்கி தின்று 35 இலட்ச ரூபாய்கு கோட்டும் சூட்டும் தைத்துக்கொண்டு செல்பி படம் எடுத்து காட்டவேண்டுமா....

சென்றமுறை பாசக அரசு வந்தபோது கச்சா எண்ணை பரிவர்த்தனைகளில் பிடித்த சொகுசு வரியை கொண்டு மண்ணெணையும் டீசலும் குறைந்த விலையில் கொடுத்துக்கொண்டு வந்ததை காண பொருக்காகதவர்களாக. அந்த பணத்தை அப்படியே எடுத்து காலி செய்து தங்க பாதை திட்டம் என்று அழித்தார்கள்.

ஐயய்யோ போச்சே என்று மக்கள் புலம்பிய போது இந்த சாலைகள் அமைப்பதினால் பாருங்கள் இந்தியாவின் பொருளாதாரமும் ஏழைகளின் வாழ்வும் எப்படி மேம்பட போகின்றது என்று சொன்னார்கள். வழக்கம் போல மக்களும் இனிமேல் இந்தியாவில் எல்லாம் சல்லீசாக கிடைக்கபோகுதுன்னு வாய் பிளந்தார்கள்.

இந்த பணத்தை பாசக அரசு ஏப்பம் விடும் முன் 5 ரூபாய்கு மாலையில் சிற்றுண்டியே முடிக்கலாம் ஆனால் இன்று வெளியில் சைக்கில் நிறுத்த கூட இந்த பணம் இன்று உதவாது.

ஆனால் அன்றைக்கு 1000 கோடிகளில் வியாபாரம் செய்து கொண்டிருந்த முதலாளிகள் எல்லாம் இன்றைக்கு இலட்சம் கோடிகளுக்கு வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அந்த ஏழைகளை வாழ வைக்க உண்மையான ஏழைகளின் வயிற்றில் அடித்து தான் பிழைக்க வேண்டுமா என்ன.....

அதே போல் இன்றைக்கு வேறு எந்த எந்த ஏழைகளை பிழைக்க வைக்க உழைக்கும் மக்களின் பணத்தை வங்கியிலே வலுகட்டாயமாக பிடிங்கியது மட்டும் இல்லாது இப்போது தான் ஏழைகள் நிம்மதியாத தூங்குகின்றனர் என்று மேடையில் அடவு கட்டி கூத்தாடினார் மோடி.

நேர்மைனா என்னம்மா என்று குழந்தை கேட்க அமாம்டா கண்ணுன்னு அம்மா சொல்வது போல் நேர்மை தேசப்பற்று என்று எல்லாம் இனிமே பாசக கண்ணுன்னு அந்த அம்மாவை வைதே சொல்ல வைத்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை.

Tuesday, December 13, 2016

அடுத்த அமைய இருக்கும் பாசகவின் தமிழக முதல்வர் யாராக இருக்கும்

தமிழக பாசகவை பொருத்த அளவில் வெளியில் பெயர் தெரியும் அளவிற்கு இருப்பவர்கள்

தமிழிசை - பாசகவினால் தான் இந்தியாவில் மட்டும் அல்ல உலகிலேயே தங்கமும் எண்ணைவிலையும் குறைந்துள்ளது என்று அறிவார்ந்த வாதம் புரிந்தவர். இது தவிர நாள்தோரும் அவர் கொடுக்கும் பேட்டியை படித்தீர்கள் ஆனால் முதல்வர் பதவிக்கு இவர் எவ்வளவு தகுதியானவர் என்று தெரியும்.

வானதி சீனிவாசன் - இவர் தொழில் முறையில் வழக்குரைஞர் ஆகையால் அந்த புலமையை எல்லாவற்றிலும் அழக்காக காட்ட கூடியவர். சென்ற பொங்களுக்கு எப்படின்னு சொல்ல மாட்டேன் ஆனால் சல்லிக்கட்டு நடக்குதா இல்லையான்னு பாருங்க என்று முதலில் தந்தி ரங்கராசுகும் அதை தொடர்ந்து தமிழகத்துக்கும் அல்வாவை அள்ளி வீசிய வாய் சொல் வீரங்கனை இவர். வார்த்தைகளிலேயே மோடி மேடையில் அடவு கட்டி ஆடும் கூத்தை வார்த்தையிலேயே அழகாக ஆட தெரிந்தவர்.

பொன் இராதாகிருட்ணன் - இவர் அதிகம் பேசவதில்லை இருந்தாலும் சத்தம் போடாமல் அதாணியின் வேலைகளை சிவனேன்னு சிரத்தில் ஏற்றி சத்தமே இல்லாமல் தமிழகத்தில் நிறைவேற்றி முதலளிக்கு சாமரம் வீசும் விசுவாசி.

குருமூர்த்தி - ஏழை எளியவரின் தங்கத்தை பிடுங்கி வைத்துக்கொண்டு பாரதத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்று பாசக வென்றதும் மக்களுக்கு இந்து மற்றும் தினமணியில் மிக தைரியமாக செய்தி சொன்னவர். அவர் சொன்ன பாதையில் தான் இப்போது கட்சியும் பயணிக்கின்றது.

எச்சி இராசா - பேசவும் தெரியாது கேள்வி கேட்கவும் தெரியாது. 2 நிமிடத்திற்குள் தான் என்ன சொன்னோம் என்ற ஞாபகம் கூட இல்லாமல் சொல்லவே இல்லையே என்று தன் மானத்தையே தானே மக்கள் முன் வாங்கிகொள்ளும் அறிவாளி. இந்த அழகில் இவர் தான் பாசகவின் தேச தலைவர் அந்த பதவிக்கு என்ன மதிப்பு என்று இவரை வைத்தே தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

இவர்களை தவிர மற்ற ஒருவரையும் பாசக என்று சொன்னால் கூட தமிழகத்தில் ஒருவரும் நம்ப மாட்டார்கள். இவர்கள் தவிர இன்னும் சில மக்கள் தொகவில் விவாதத்திற்கு வருவது உண்டு. அப்படி வருபவர்கள் அனைவருமே கையில் ஒரு நீதிமன்ற தீர்பை கையில் வைத்து இருப்பார்கள், நாம் ஏதாவது கேட்டால் நீதிமன்ற தீர்ப்பில் சொல்லி இருக்கிறது என்று சொல்வார்கள். சரி நீதிமன்றதில் செயலலிதா குற்றமற்றவர் என்றும் தான் சொல்லி இருக்கிறார்கள் நீங்கள் ஒத்துகொள்கிறீர்களா என்றால் இல்லை என்பார்கள்.

ஆகையால் அவர்களை எல்லாம் இந்த எடுபிடி வேலைகள் தவிர மற்ற உயர் பதவிக்கு எல்லாம் கூப்பிடுவார்கள் எந்த சந்தேகமும் வேண்டாம் அவர்கள் எல்லாம் கடைசிவரையில் நிறுவன விளம்பரங்களில் தொடங்கி விளம்பரங்களிலே வாழ்கை முடியும் விளம்பர நடிகர்களாக மட்டும் கொள்வோம்.

ஆக போட்டி இந்த 4வருக்கும் தான், யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. தமிழிசையும் எச்சி ராசாவும் ஒரே இரகம் உளரி கொட்டுவதில் கை தேர்ந்தவர்கள் ஆக அவர்களுக்கு அடவு கட்டி மேடைகளில் மோடி போல் கூத்தாட எல்லாம் தெரியாது என்றது வெளிச்சம்.

குருமூர்த்தி இந்திய நிதி அமைச்சர் பதவிக்கு தகுதியானவராக தன்னை நினைத்து கொள்பவர் ஆக முதல்வர் பதவியே ஆனாலும் தனக்கு வேண்டாம் என்று சொல்லும் குணமுடையவர்.

மீதம் இருப்பது பொன்ராவும் வானதியும் தான், இதில் வானதி இதுவரையில் எந்த முதலாளியின் வேலையாளாய் கடமை நிறைவேற்றியவர் இல்லை ஆனாலும் மோடி மேடையில் ஆடும் கூத்தை தாளம் தப்பாமல் இவரும் வார்த்தைகளிலேயே ஆட கூடியவர். ஆனாலும் சசியை முன்னிருத்தும் எண்ணம் ஒரு சாராருக்கு இருப்பதால் மீண்டும் இரு மகளீர் போட்டியா என்ற கேள்வியில் இவருக்கு வாய்ப்பு குறைவு தான்.

அனேகமாக பொன்ராவுக்கு தான் அந்த வாய்ப்பு வழங்கப்படும்.

தமிழகத்தில் இனி எல்லோரும் குர்த்தாவும் பைசாமாவும் தான் அணிவார்கள், பேசும் போது எல்லாம் வாங்க்ச்சி போங்கச்சி என்று தான் பேசுவார்கள். திருமண வைபவங்களில் அந்த லட்டுச்சியை கொஞ்சம் இந்த இலைச்சியில் வைங்கச்சி என்று பேசி அகமகிழ்வார்கள்.

எல்ல தெருக்களிலும் திடீர் திடீர் என கணேசும் அனுமாரும் தோன்றுவார்கள், மக்கள் எல்லாம் நெற்றியில் செந்தூரமை நாமமாம இட்டுக்கொண்டும் வாயில் பீடாவை கொதப்பியபடி தான் அலைவார்கள்.

வட நாட்டில் இருந்து வருபவர்கள் எல்லாம் என்ன ஏதோ ஒரு நாடோடி கூட்டத்தில வந்து மாட்டிகிட்ட மாதிரி இருக்கு என்று பேந்த பேந்த முழிப்பார்கள்.

கிட்டதட்ட கல்கத்தா கலவரத்திற்கு பிறகு கல்கத்தா எப்படி தன்னை கீழ்தரமான ஒரு மத கலவரத்துக்கு தயார்படுத்திக்கொண்டதோ அப்படி ஒரு தோற்றத்திற்கு பாசக தமிழகத்தை இழுத்து சென்று, போதை நல்லா ஏறிகிச்சி இப்ப கைஎழுத்து போட சொல்லு நீட்டுர இடத்துல எல்லாம் போடுவான் பார்ன்னு சொல்லி சிரிப்பார்கள்.

இது புரியாம பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் மாணவர்களுக்கு பாசக வந்தால் ஊழல் ஒழியும் உங்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும் மற்றும் வீட்டில் உள்ள அனைவரும் தனியாக வங்கி கணக்கு தொடங்கி அதில் இந்திய அரசு சார்பில் 15 இலட்சமும் தமிழக அரசு சார்ப்பில் 20 இலட்சமும் கொடுப்பப்படும் என்று பரப்புரை செய்வார்கள். அவர்களும் அப்படியே வாய் பிளந்து கனவில் அலைந்து திரிந்து எங்கே எத்தனை இடம் வாங்குவது என்ற கணக்கில் ஓட்டுகளை அள்ளிவிடும்.

பாசகவின் 5 ஆண்டு ஆட்சிக்கு பிறகு பீகாருக்கு தமிழ் மக்கள் மறுபடியும் கூலி வேலை பார்க்க கிளம்ப வேண்டியது தான் தயாராய் இருங்கள்.

பாசக நல்லவங்க எல்லோரும் வராங்க உடமைகளை எடுத்து பத்திரமா வச்சுகுங்க இல்ல கள்ள சொத்து இல்லை கள்ள பணமும் சொல்லி பிடிங்கிகிட்டு போய் 120 கோடி 69 கோடின்னு வச்சுகிட்டு நமக்கு வாட்சப்புலே படம் எடுத்து அனுப்புவானுக.......

Saturday, December 10, 2016

நல்ல வேளை மோடிக்கு கல்யாணம் குடும்பம்னு ஆகுல

பொதுவா குடிகார தந்தையையும் ஊதாரி கவணனை குடும்பத்தில் ஒருவனுக்கும் பிடிக்காது. காரணம் அவன் குடிக்கிறான் என்றோ அல்லது ஊதாரியாக திரிகின்றானோ என்றோ அல்ல.

பிறகு ஏன் இவ்வளவு கெட்ட பெயர் அவனுக்கு

வீட்டுக்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத அந்த மனிதன் போதையில் ஆட வீட்டில் இருக்கும் நண்டு சுண்டு வரை களை வெட்டி காசு கொண்டு வந்து கொடுத்தால் அந்த காசிலே குடித்துவிட்டு திங்க அத கொண்டு வா இந்த கொண்டு வான்னு ஆடுவானுக. அதனால் தான் யாருக்கும் பிடிக்காது.

சுருங்க சொன்னா கணவன் என்ற ஒரே காரணத்திற்காக அவனது உல்லாச வாழ்வுக்கு குடும்பத்தையே பலி கொடுக்கும் இயல்பை கொண்டவர்கள் அவர்கள்

இவனுக்கு வாக்க பட்ட பெண்களிடம் கேளுங்கள் எல்லாம் விதி, பெத்தவங்க இந்த சனியனை என் தலையில கட்டிட்டுடாங்க என்ன செய்யுரது விதியேன்னு வாழறேன் சொல்லுவாங்க

ஒரு வேளை மோடிக்கு குடும்பம் குழந்தைகள் என்று இருந்து இருந்தா இப்படி தான் இரவும் பகலும் நாட்டுகாக என்று சொல்லி வெய்யிலிலும் மழையிலும் சோறு தண்ணியில்லாம் சாகடித்து இருப்பார் நம்மை எல்லாம் சாகடிப்பது போல்.

தப்பிச்சுது ஒரு குடும்பம் ஆனா நாம் தான் நல்லா மாட்டிகிட்டோம்......

15 இலட்ச ரூபாய் கிடைக்கும் என்று சொன்னதும் ஆப்பசைத்த குரங்கின் கதையா இல்ல ஆகிப்போச்சு நம்ம நிலைமை


Wednesday, December 7, 2016

அதிமுக மொத்தமாக பாசகவிற்கு விற்கப்படுவிட்டது

தமிழகத்தில் அதிமுக தோற்றமும் அவசியமும் இன்றைக்கு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில். அடுத்த தலைவர் யார் என்ற விவாதம் கூட எழாத நேரத்தில் பன்னீர் அடுத்த முதல்வராக பதவி ஏற்பதும் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்று அழக்காக காட்டுகின்றது.

 நாங்கள் நினைப்பது தான் நடக்க வேண்டும் என்று அதிமுகவை மறைமுகமாக இயக்கிய கூட்டத்திற்கு இனி எந்த முகமுடியும் தேவை இருக்காது. மாறாக பாசகவாகவே இனி வலம் வருவார்கள்.

அது மட்டும் இல்லை அதிமுகவை மெல்ல பாசகவில் கரைத்து பாசகவும் அதிமுகவும் இரட்டை இலையும் ஒன்று தான் என்று நிறுவார்கள்.

சரி அதிமுகவை எப்படி முழுவதுமாக விலை பேசி விற்கமுடியும். யார் விற்று இருப்பார்கள் எவ்வளவிற்கு விற்று இருப்பார்கள்.

இனி அதிமுகன்னோ அல்லது செயலலிதா அப்படி இப்படி சொல்லிக்கொண்டு கட்சி இனி எந்த செயலையும் செய்யக்கூடாது.

உடல் நிலையை காரணம் காட்டி முதல் கட்ட தலைவர்கள் எல்லாம் ஒதுங்குவார்கள் இல்லை பாசகவில் இணைவார்கள்

பிறகு ஒரு 3 முதல் 6 மாத காலத்தில் ஒத்துவராதவர்கள் எல்லாம் ஊழல் அடிப்படையில் சிறையில் அடைத்த பிறகு இன்று இரவு முதல் தமிழக அரசு செல்லாது என்ற அறிவிப்பு வரும். காரணம் கேட்டல் சட்டம் ஒழுங்கு சரி இல்லை, ஏழைகளால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்று சொல்வார்கள்

பிறகு அதே MGR பெயரிலும் செயலலிதா பெயரிலும் பாசக ஓட்டு கேட்கும் ஆட்சியை பிடிக்கும்

ஒத்து வருபவர்களின் கருப்பு பணம் வெள்ளையாக மாற்றிக்கொடுக்கப்படும், மாட்டேன் என்கிறவர்கள் கருப்பாடுகளாக கருப்பு பண முதலைகளாகவும் திகாரில் அடைக்கப்படுவோர்.

சில ஆயிரம் வைத்து இருக்கும் தொடண்டன் முதல் பல கோடி வைத்து இருக்கும் அமைச்சர்கள் வரை இந்த பேரத்திற்கு படியாத ஆளே இல்லை

அம்மையாரின் மறைவு தமிழகத்தை அழிவு பாதையை நோக்கி திருப்பி விட்டதே ஐயோ பாவம் தமிழகம்.

இனி நாள்தோரும் தாத்ரி பாணியில் மக்கள் தெருக்களில் அடித்து கொல்லப்படுவார்களே கடவுளே யார் காப்பாற்றுவார்கள் இனி தமிழகத்தை

Friday, December 2, 2016

மோடி ஆதரவாளர்கள் உருவாக்கிவரும் இராணுவ வீரர்கள் நகைப்புகள் சர்த்தார் நகைப்புக்கு இணையாக

மோடி ஆதரவாளர்களும் மோடியும் மட்டும் தான் தேசபக்தர்கள் மற்ற அனைத்து மக்களும் தேச துரோகிகள் என்று அவர்களுக்கு எண்ணம்.

எதை எடுத்தாலும் தேச துரோகம் என்று கதரும் இந்த கூட்டம் உருவக்கி வரும் இந்திய இராணுவ வீரர்கள் நகைப்பு சர்த்தார் நகைப்புகளையும் மிஞ்சும் போல இருக்கு.

வஞ்ச புகழ்ச்சி அணியில் தான் இவர்கள் இதை எழுதி இருக்கோனும்

இந்திய இராணுவ வீரன் சொன்னானாம் எனக்கும் பாக்கிட்தானத்திற்கும் எந்த பகையும் இல்லை என்று சொன்னானாம்.

ஏன் மோடி ஒருத்தருக்கும் சொல்லாமா திருட்டுதனமா அங்கே போய் கல்யாண விருந்து சாப்பிட்டு வந்ததால அது சம்பந்தி நாடு ஆயிடுச்சோ இவருக்கு.

இல்ல இராணுவத்தில பாசக பாராளுமன்றதிற்கு சொன்று ஆட்சி நடத்தாம வெறும் சாதி மத பிரச்சாரம் மட்டு செஞ்சுட்டு நாட்டை சுரண்டி முதலாளிகங்க கைல குடுக்கிற மாதிரி வெட்டி வேலை பார்க்கலாம்ன்னு எந்த கேணை பயலாவது சொல்லி அனுபிச்சானுகளான்னு தெரியல

பள்ளிக்கு போன படிக்கனும், மரம் வெட்ட போன மரம் வெட்டனும், மீன் பிடிக்க போன மீன் பிடிக்கனும் அது போல இராணுவத்துக்கு போன சுடனும்னு உங்களுக்கு எல்லாம் படிக்கும் போது சொல்லிக்கொடுக்கல போல இருக்கு எங்கேபா படிச்சிங்க கேந்திர வித்யாலயா

 நாட்டில இன்னும் பாக்கிட்தானத்து மேல போரே அறிவிக்கல அதுக்குள்ள உண்ணை யாருயா அங்கே போய் சுட சொன்னது இல்ல வேலை இல்லன்னு நீயா அங்க போனியா

இராணுவத்துல போய் சப்பாத்தி சுடலாம்னு இருந்திருப்பார் போலும் அவரை போய் துப்பாக்கியால சுட சொல்லி பயந்து பாக்கிட்தானம் பாக்கிட்தானம்ன்னு சொன்னா தேச பக்த்தர்ன்னு நம்பி நிறைய பணம் கொடுப்பாங்கன்னு கவி பட சொல்லி அனுபிச்சுதா

இல்ல இந்திய இராணுவ வீர்களும் நாட்ட காப்பாத்துர வேலையெல்லாம் விட்டுட்டு வங்கி வாசல்ல நோட்டு மாத்த நிக்க வச்ச வைதெரிச்சல்ல பேசுராரு போலும்

 நல்லா பாருங்கபா அது கூர்க்காவா இருக்க போது எதிரி நாடு எதுன்னு வடக்க உள்ள கேந்திரவித்யாலயா பாலர் பள்ளியில கேட்ட கூட பாக்கிட்தானம் என்று அழகாக தெரியுமே இந்த ஆள் என்ன மழைக்குகூட கேந்திர வித்யாலயா பக்கம் போயி இருக்க மாட்டார் போலும்.

இனி இப்படி எல்லாம் இந்திய இராணுவ வீரர் நகைப்புகள் வர போகுது, தடம் போட்டு கொடுத்த பாசகவிற்கு தான் நன்றிய சொல்லனும். குசுவந்து சிங்கு சர்த்தார் நகைப்பு என்று தொகுத்து புத்தகமா வெளியிட்டது போல் வராமல் இருந்தால் சரி

 நாட்டு நட்டப்பும் தெரியல அடுத்தவன் வேதனையும் புரியலனா அவன் கட்டாயம் பாசகவினராக தான் இருக்கனும். இன்னும் இது மாதிரி இந்திய இராணுவ வீரர்களை கேணைபயல்களாக வர்ணித்து எழுதி அனுப்பவும் அவர்கள் பார்த்து பூரித்து போவார்கள். ஏன் கேட்ட பாரத்து சவான்கீ சேன்னு சொன்னா போச்சு அவ்வளவு தானே....






https://1.bp.blogspot.com/-gypMmblfYuU/WD-MhzuGxOI/AAAAAAAANJU/s8lyVyY1DnoDO-bBE_LmtN0S0mglHvWTgCLcB/s1600/IMG-20161129-WA0118.jpg