Wednesday, April 18, 2018

நிர்மலா தேவி வழக்கு என்ன ஆகும் - கன்னடஇசையும் எச்ச சர்ம்மாவும் சொல்வது போல்

தூக்கு எந்திரத்தின் கம்பி அறுந்து விழுந்ததினால் தான் அந்த சாலையோரவாசி இறந்தார் என்று சல்மான் விடுதலையானதும். சங்கர் ராமன் தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தான் இறந்து இருக்க வேண்டும் என்று விடுதலையானதும். டான்சி நில வழக்கில் ஆவணங்கள் எரிந்து சாம்பலாக போனதால் சாட்சியங்கள் போதுமானதாக நிரூபிக்க படவில்லை என்று தங்க தாரகை விடுதலையானதும். நீதிபது லோயா சாதகமாக தீர்பு எழுதமாட்டார் என்று தெரிந்ததும் மாயாமாக மாரடைப்பில் இறந்ததும் வழக்கில் இருந்து அமித்து சா விடுவிக்கப்பட்டதும். 6 நாட்கள் குசராத்தில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கலவரங்களை அழகாக திட்டமிட்டு நடத்தியும் போதிய சாட்சிகள் சொல்லியும் கூட மோடி அப்பழக்கற்றவர் என்று விடுவிக்கப்பட்டதும் இந்த இந்தியாவில் தான்.

அனைதிற்கும் சிகரம் வைத்தார் போல் எட்டி உதைக்கும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு பெண் கர்ப்பிணி என்று எப்படி தெரியும் என்று சொன்னது இந்த இந்திய நீதித்துறை தான்.

அதே வேளையில் சட்டசபையும் பாதிக்கப்பட்டவர்கள் விட்டு விடுங்கள் என்று சொல்லியும், தனக்கு வழங்கப்பட்டு இருக்கும் வானலாவிய அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் நளினியை விடுவிக்க முடியாது என்று சொன்னதும் இதே இந்திய நீதிமன்றம் தான்.

வள்ளுவர் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை என்று நாள் தோறும் நமக்கு உணர்த்துகிறது இந்த இந்திய நீதிமன்றங்கள் பொருள்ளில்லாருக்கு இவ்வுலகு இல்லை. பொருள் என்றால் பணம் மட்டும் இல்லை என்றது அனைவரும் அறிந்ததே அதும் இந்தியா போன்ற சாதி, மதம் பாகுபாடுகளை போற்றி வளர்க்கும் பிற்போக்கு தனமான நாட்டில் நிர்மலா தேவி நாளை இப்படி இரு தீர்ப்பில் விடுவிக்கப்பட்டால் ஆச்சர்யபட தேவை இல்லை 'அந்த மாணவிகள் நிர்மலா தேவியிடம் தங்களுக்கு பண உதவி வேண்டும் என்றும், தங்களுக்கு ஏற்பட்ட தவறான பழக்க வழக்கங்களினால் வாழ்க்கையை தொலைத்துவிட்டதாகவும், அதற்கு உதவுங்கள் என்று கேட்டதாகவும். அதன் பால் தான் நான் அவர்களுக்கு எப்படி எல்லாம் வழிகள் இருக்கிறது என்று தாயன்புடன் சொன்னதாகவும். அப்படி சொல்லப்பட்ட வழிகளை மீண்டும் ஒரு முறை நீங்கள் அந்த உரையாடலை கேட்டால் தெளிவாக புரியும் எப்படி பட்ட மேற்படிப்பு மற்றும் அதற்கான நிதியுதவிகள் மற்றும் அதை தொடர்ந்து அதற்கான வேலையை என்னால் வாங்கிக்கொடுக்க முடியும் என்றும். அதற்காக நீங்கள் கடுமையாக படித்து உழக்க வேண்டும் என்று தான் சொன்னேன்' மற்றபடி உங்கள் கற்பனைக்குள் வரும் அழுக்கு ஊகங்களை எல்லாம் என் மேல் திணித்தால் எப்படி என்று வாதிட்டு. மாணவிகளின் காவல் தெய்வம் என்று பட்டம் கொடுத்து அசாம், மிசோராம், நாகாலாந்து போன்ற இடங்களில் இருக்கும் பல்கலைக்கு மிகவும் கௌரவமாக மாற்றப்படுவார். அவ்வளவு தான் நடக்கும்.

0 comments: