Friday, September 29, 2017

தமிழக சின்ன பாசக அன்புமணி இராமதாசு

தமிழகத்தில் சாதிவாரியாக மக்களை பிளவுபடுத்தி அவர்களுக்குள் சண்டையை மூட்டி அடித்துகொள்ள வைத்து குளிர் காய்வது சங்கபரிவாரம். அந்த சங்கபரிவாரம் இதை ஆட்சியிலேயே உட்கார்ந்துக்கொண்டு செய்ய முடியாது என ஆட்சியில் அமர்பவர் பெயர் பாசக, ஆனால் அவர் நாங்கள் என்ன செய்கின்றோமோ அதையே தான் செய்வார் ஆனால் அவர் சங்கபரிவாரம் இல்லை, எங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் கிடையாது என்று மூச்சுக்கு 300 தடவை சொல்வார்கள்.

முதலில் சாதி சங்கம் என்றும் பின்னர் அதை பாசக என்ற பெயரில் அரசியல் கட்சி என்ற போர்வையில் வந்த அதே பாணியில் தான் பாமகவும் பயணிக்கின்றது. ஊருக்கு ஊர் சங்கமும் அந்த சங்கத்தின் பெயரால் இன தூய்மையை செய்வோம் என்று கடந்த சில ஆண்டுகளில் கௌரவ கொலைகளிலும் ஈடு பட்டது இந்த பாமக என்றது நினைவில் இருக்கலாம்.

திராவிட கட்சிகளும் அதன் வழித்தோன்றல்களினால் எந்த பலனும் தமிழகத்துக்கு விளையவில்லை என்றும் தன்னை முதல்வராக தேர்ந்து எடுத்தால் நல்ல ஆட்சியினை வழங்க முடியும் என்றும் சென்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது இந்த பாமக.

இன சுத்திகரிப்பு வேலைகளை சங்கபரிவார கும்பல்கள் செய்வதை விட கேவலமா எங்களாலும் செய்யமுடியும் என்று காட்டிவிட்டு வாக்குகளை கேட்டது இந்த பாமக.

சங்கபரிவாரம் ஆட்சிக்கு வந்தால் என்ன என்ன தீமைகளை செய்து சமூகத்தை அழித்தொழிக்க முடியுமோ அத்தனையும் செய்யும் இந்த சாதிவெறி பாமக.

இதே அன்புமணியும் சரி இராமதாசும் சரி சங்கபரிவாரங்கள் செய்யும் எந்த ஒரு அட்டூழியங்களையும் தட்டிக்கேட்டதும் இல்லை கேட்க்கப்போவதும் இல்லை.

ஒரு வேளை தமிழக பாசகவிற்கு நிர்மலா சீத்தாராமன் முதல்வராக வருவது பிடிக்கவில்லை என்றால் குறைந்தது அன்புமணி இரமதாசு வரவேண்டும் என்று எதிர்காலத்தில் சொன்னாலும் சொல்லும் அளவிற்கு நடந்துகொள்கிறார்கள் தமிழக பாசகவினர்கள்.

பாசகவும் பாமகவும் ஒருவரை ஒருவர் இது வரையில் தாக்கி பேசிக்கொண்டது இல்லை என்றது மக்கள் ஓர்ந்து பார்க்கலாம்.

ஆக தமிழக்த்தில் பாமக இருக்கும் வரையில் இன்னும் ஒரு பாசக தேவை இருக்காது........

Tuesday, September 26, 2017

கார்த்திக் சிதம்பரம் - சங்கபரிவார அரசே திரைபடங்களில் பார்ப்பது போல் குடும்பத்தாரை மிரட்டும் செயல்

அனேகமாக அனைத்து திரைபடங்களிலும் வில்லன் சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொள்வான் என்ற நிலை வந்ததும், சாட்சிகளும் விசாரணை அதிகாரிகளின் வீட்டு பெண்களையும் பிளைகளையும் துப்பாகி முனையில் பிடித்து வைத்துக்கொண்டு "நீ மட்டும் நான் சொன்னபடி நீதிமன்றத்தில் வந்து சொல்லல உன் பிள்ளை அவ்வளவு தான், இல்ல உன் மனைவி அவ்வளவு தான், உனக்கு வயசு வந்த பெண் இருக்குது அவ்வளவு தான்" என்று மிரட்டும் காட்சிகள் இடம் பெற்று இருக்கும்.

அந்த காட்சிகளில் வரும் வில்லனாக நடிப்பவர் கருப்பாக இருப்பார், இல்லையேம் ஆம்பர் என்று பெயர் வைத்து இருப்பார் இல்லை இசுலாமிய பெயரை கொண்டவராக இருப்பார்.

இப்போது அதே காட்சியில் சங்கபர்வார சாமியார்கள் நிற்கிறார்கள். அலைக்கற்றை ஊழல் வழக்கில் தீர்ப்பு 3 மாதங்களுக்கு முன்னே வந்து இருக்க வேண்டும் ஆனால் மாதாமாதம் அடுத்த மாதம் என்று வழக்கு தள்ளி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு முறை தள்ளுதளுக்கு பின்னால், சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் என்று யாரேனும் ஒருவரை இந்த வழக்கில் சாட்சியாக ஆக்கி அந்த சாட்சியின் பால் பாதக தீர்ப்பை பெற்று எடுத்து ஒரு புதிய இந்தியாவை பெற்று எடுக்க சங்கபரிவாரம் ஆசைப்படுகின்றது.

அதனால் திரைபட வில்லன் மிரட்டுவது போல் மிரட்டி அதன் கோரப்பிடிகளில் வைத்துக்கொண்டு சொல் இல்லையே கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகின்றது.

மைய அரசின் பொருளாதாரம் பற்றியோ அல்லது நிர்மலா சீதாராமன் மொத்த இந்தியாவின் இராணுவ தேவைகளையும் அமெரிக்க இராணுவ தளவாட நிறுவனங்களுக்கு தாரை வார்க்கிறார் என்று சொன்னாலோ உங்களது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் தொழிலும் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்று மிரட்டி பார்க்கிறார்கள்.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் முறட்டு உலகமடா என்று அன்றைக்கு பாடிய பாடல் எவ்வளவு உண்மை என்று இந்த சங்கபரிவார அரசு வந்ததும் தான் தெரிகின்றது.

இந்த தீர்ப்பைதான் தமிழிசை மேடைகள் தோறும் தீர்ப்பு வரும் இல்ல என்று அதிர்ந்தும் வியந்தும் குறிப்பிடுகின்றார். பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று........

Monday, September 25, 2017

கீரைகாரி மற்றும் தயிர்காரி இவர்களிடம் இருந்து சுருட்டிய 50,000 கோடியை அம்பாணிக்கும் அதாணியும் கொடுக்கின்றது பாசக அரசு

கீரைகாரி, தயிர்காரி, இட்லி சுட்டுவிற்கும் ஆயா, வடை சுட்டு விற்கும் ஆயாக்களை மிரட்டி பணத்தை வங்கியில் போடவில்லை என்றால் அவ்வளவும் சொல்லாத பணமாகவும் கள்ளப்பணமாகவும் அறிவிக்கப்படும் என்று மிரட்டோ மிரட்டு என்று மிரட்டி பிடிங்கிய பணத்தை அதாணிக்கும் அம்பாணிக்கு கொடுக்கப்போவதாக பாசக அரசு அறிவித்து இருக்கிறது.

மோடியின் பொருளாதார கொள்கையும் அவரது 15 ஆண்டுகால முதல்வர் பணியின் அனுபவங்களையும் உலக பொருளாதார பல்கலைகழகங்கள் கற்றுக்கொள்ள சிறந்த பாடம் என்றும். உலகில் மோடியை போன்றதொரு அறிவாளியோ மற்றும் புன்னியம் செய்தவர்களோ உலகில் வேறு யாரும் இல்லை என்றதும் பாசகவின் அதன் பின்னால் இருந்து ஆட்டி வைக்கும் சங்க பரிவாரங்களின் கருத்துமாக தொடர்ந்து வைக்கப்படுகின்றது.

இப்படி ஈடு இணையில்லா தலைவரின் பொருளாதார சீர் திருத்தங்களின் விளைவாக சரிந்து கிடக்கும் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த 50,000 கோடியை செலவு செய்யும் என்று அருண் செட்லி அறிவித்துள்ளார்.

பொதுவாக இந்திய அரசு இலங்கையின் உதவிக்காக கப்பல் துறைமுக அமைப்பதில் உதவ 50,000 கோடி ரூபாய்கள் உதவிகள் வழங்குகின்றது என்ற ஒரு அறிவிப்பு வந்தால், அந்த துறைமுகம் அமைக்கும் பொறுப்பை அதாணிக்கோ அல்லது அம்பாணிக்கோ இலங்கை அரசு ஒப்பந்தம் வழங்கும்.

அதாவது இலங்கையின் உதவிக்காக இந்தியா அறிவித்த 50,000 கோடி ரூபாய் நேராக அவர்களின் பைக்கு செல்லும். செய்த வேலைக்கு தானே பணம் கொடுக்கிறார்கள் அதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்க கூடும்.

இலங்கைக்கோ மியான்மர்கோ நேபாளத்திற்கோ ஆப்ரிக்க நாடுகளோ இந்தியா எங்களுக்கு இவ்வளவு பண உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்பது கிடையாது. அப்படி கேட்காத இடங்களில் இவர்களே ஏன் பணத்தை அள்ளிக்கொண்டு போய் கொட்டுகிறார்கள் என்றது அவர்களுக்கே வெளிச்சம். இந்த கேள்வியை எச்சி ராசாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு தான் ஆண்டி இந்தியன் என்று அவர் விளிக்க துவங்கினார்.

அந்த வகையில் இந்த முறை 50,000 கோடியை அள்ளி வீசி சரிந்துகிடக்கும் பொருளாதாரத்தை உயர்த்தி பிடிப்போம் என்று அருண் செட்லி அறிவித்து இருக்கிறார்.

இது பாசகாவின் கொள்கை முடிவு அதில் தலையிட நீதிமன்றங்களுக்கோ அல்லது எவருக்கும் உரிமை இல்லை என்று தான் சங்க பரிவாரங்கள் நம்புகின்றது, நாங்களும் அதை ஒப்புக்கொள்கின்றோம் வேறு வழியில்லாமல்.

ஆனால் இந்த 50,000 கோடி எங்கு இருந்து எடுத்து செலவுக்கு வீசப்போகின்றது சங்க பரிவாரங்கள். அவர்களின் சொந்த பணமாக இருந்தால் ஒருவரும் கேள்வி கேட்க தேவை இல்லை தான், அமெரிக்காவில் 3.79 லிட்டர் பெட்ரோல் ரூ 146.25 விற்கிறது. மிஞ்சிப்போனால் 3.79 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 16 சந்தையின் விலையை பொருத்து மாறுகின்றது. ஆனால் இந்தியாவில் இதே 3.79 லிட்டர் பெட்ரோல் ரூ 265.30க்கு விற்கின்றது. ஏன் அமெரிக்க விலையைவிட இந்தியாவின் பெற்றோல்லுக்கு இவ்வளவு விலை என்று கேட்டதற்கு சங்க பரிவார அரசு நிறைய கழிப்பறைகளை கட்டியது இன்னும் அதிகம் கட்ட வேண்டி இருக்கிறது அந்த திட்டத்திற்கு பணம் சேர்க்கவே இந்த அதி அதிக பெட்ரோல் விலை என்று வியாக்கியானம் சொல்கின்றது.

ஒன்றும் இல்லாத கழிப்பறைகளை கட்டவே மக்கள் இவ்வளவு பணம் செலவு செய்ய வைக்கப்படுகின்றார்கள் என்றால் இந்த 50,000 கோடி ரூபாயை எங்கே இருந்து பெறப்பட போகின்றது என்றால். கீரைகாரி, தயிர்காரி, இட்லி விற்கும் ஆயா, வடை சுட்டு விற்கும் ஆயாவை மிரட்டி வங்கியில் வலுக்கட்டாயமாக வைப்பு வைக்கப்பட்ட பணத்தையும் அளவுக்கு அதிகமாக விற்கப்படும் விலைவாசிகளிலும் பெறப்பட்ட பணத்தை திட்டங்களின் பெயரில் சங்கபரிவார அரசு கொட்டி வீணடிக்கப்படுகின்றது சுவாக.

Friday, September 22, 2017

இந்தியாவின் புல்லட் இரயில் விளங்காமத்தான் போகும் இது பாசகவின் மொழி

இந்த இரயில் திட்டத்தை அமைத்து தரப்போவது சப்பான், பசுக்கறி உண்ணும் பாவமக்களால் உருவாக்கப்போகும் இந்த புல்லட் இரயில் என்ன நல்லாவா இருக்கப்போகின்றது என்று பாசகவின் மன ஒலி உங்களுக்கு எல்லாம் கேட்கவில்லை போலும். அதனால் தான் ஒரு சொன்ன குண்டூசியை எடுத்து வச்சாலே பாகுபாலி அளவுக்கு புகழ்கின்ற மோடிக்கூட்டம் இந்த புல்லட் இரயில் பற்றியோ அதன் 20 ஆண்டு வளர்ச்சி பாதையை பற்றியோ, உலகிலேயே முதன் முதலில் புல்லட் இரயில் விட்டது மோடியால் மட்டும் தான் என்று எழுத மாட்டேன் என்கிறார்கள் கவனியுங்கள்.

Thursday, September 21, 2017

கேப்டன் விசயகாந்தும் பிரமர் மோடியும் நல்ல நடிகர்கள் மட்டுமே தலைவர்கள் அல்ல

விசயகாந்து நடிகராக திரையில் தோன்றும் போது நீதிமன்றங்களில் அவருடைய பேச்சுக்கு மறு பேச்சு இருக்காது, சாட்சியாக வந்தாக்கூட நீதிபதியையே கிண்டலாக பேசுவார். 20, 30 ஆட்கள் அவரை தாக்க வரும்போதும் ஒரே கையால் அந்த 20, 30 பேரையும் காற்றில் பறக்கவிட்டு முழங்காலிட்டு தலையை மெல்ல தூக்கி ஒரு சல்யூட் வைப்பார். பெண்களை கிண்டல் செய்யும் அல்லது துன்புறுத்தும் கூட்டங்களைக்கண்டால் விரட்டி விரட்டி அடித்தே கொல்வார். ஏழைகளை கண்டால் கையில் இருக்கும் பொருளோ பணமோ கொடுத்துவிட்டு அவர்கள் வீட்டு கூழ் கஞ்சியினை வாங்கி ருசிப்பார்.

நாடுன்னா என்னான்னு தெரியுமா என்று துவங்கி மருத்துவமனையில் நடக்கும் ஊழலில் தொடங்கி ஏசிஎப் என்ற ஒரு அணியை உருவாக்கி ஊழையும் அதன் சார்ந்தவர்களையும் வேறோடு அழிப்பார். இப்படி விசயகாந்தை பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.

ஆனால் விசயகாந்தை திரையில் இல்லாமல் நேரில் சந்தித்த மக்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள். ஒரு 4 வரிகளை தொடர்ந்து பேச அவரால் முடியவில்லை. 5 செய்திகளை கோர்வையாக பேச தெரியவில்லை. அது மட்டும் அல்லாது அவருக்கு பேச தெரியவில்லை என்றது அந்த இடத்தை அவரது வீட்டம்மா பயன்படுத்திக்கொண்டு எவ்வளவு மோசமாக பேச முடியுமோ அவ்வளது மோசமாக பொது மேடைகளில் அசிங்கபடுத்தினார்.

இந்த எல்லாம் மக்களை முகம்சுழிக்க வைத்ததே அன்றி எந்த விதத்திலும் பாராட்ட வைக்கவில்லை. சென்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு விசயகாந்தை பொது இடங்களிலோ பொது மேடைகளிலோ ஏன் தொகாவிலோ கூட காணமுடியவில்லை.

திரையிலே இயக்குனர்களால் கட்டி எழுப்பப்பட்ட அந்த பிம்பம் நேரில் செயலில் வரும் போது அந்த பிம்பத்தின் 1000 ஒரு பகுதி கூட உண்மை இல்லை என்று தெளிவுபடுத்தியது.

விசயகாந்து செய்த குற்றம் என்ன, தன்னுடையக கதைக்கு ஏற்றவாறு அவரை மிகப்பொருத்தமாக நடிக்க வைத்து அழகு பார்த்தார்கள் இயக்குனர்கள். அந்த பிம்பத்தை உண்மை என்று ஒரு கூட்டம் நம்பியது இது அவர்களின் அறிவின்மையே அன்றி எப்படி விசயகாந்தின் குற்றமாகும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அந்த பிம்பம் உண்மை என்று விசயகாந்தே நம்பியதின் விளைவு தான் இவ்வளவு அவமானங்களை அவர் பொது வெளியில் சந்திக்கின்றார்.

இந்த விசயகாந்தை போன்று தான் பிரதமர் மோடியும், பின்னால் இருந்து இயக்கும் கூட்டம் கொடுக்கும் வசனங்களை மேடைகளிலிலே அழகாக அரிதாரம் பூசி கை கால்களை ஆட்டி கிட்ட தட்ட நடனமாடி வசனம் பேசுவார்.

வானத்தை வில்லாக வலைப்பேன் என்பார், மணலை கயிறாக திரிப்பேன் என்பார், வலது பக்கம் திரும்பினால் ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் 15 இலட்ச ரூபாய் வீடு தேடி வரும் ஒரே ஒரு ஓட்டு மட்டும் போடு என்பார். இடது பக்கம் திரும்பினால் இந்தியாவை குறி வைக்கும் எதிரி நாடுகள் தொடை கை கால் நடுங்கி தன் நாட்டை நரகாசுரன் பூமியை பாய் போல சுறுட்டி கடலுக்கடியில் ஒளித்து வைத்தது போல் தங்களது நாட்டை பாயாக சுறுட்டி கொண்டு இந்தியாவை விட்டு வெகு தொலைவில் கண்காணாத இடத்திற்கு கொண்டு மறைவாக வாழ்வார்கள்.

இந்தியாவின் ஏழை மக்கள் எல்லாம் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பார்கள், ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடோ அல்லது மத சாதி பாகுபாடோ இல்லாமல் நிம்மதியாக இருப்பார்கள் என்றும். பொருளாதாரம் அமெரிக்காவையே மிஞ்சி அமெரிக்கர்களே இனி இந்திய ரூபாயில் தான் வர்த்தகம் செய்யவேண்டும் என்று சொல்வார்கள் என்றும். இந்தியாவையே இல்லை இல்லை உலகையே காக்க அவதரித்த கடவுள் என்றும் அந்த கூட்டம் கதை திரைக்கதை வசனம் பாடல் இசை ஒளிப்பதிவு பின்னணி குரல் என்று அனைத்து தரப்பிலும் வேலையில் இறங்கி கட்டமைத்தது இன்னும் அதை மீண்டு நிறுவ பார்க்கிறது.

ஆனால் உண்மையில் நாட்டில் நடப்பது என்ன, கருப்பு பணத்தை ஒழிக்கின்றேன் 50 நாட்கள் மட்டுமே பொறுத்து கொள்ளுங்கள் நான் செய்வது தவறாக இருந்தால் என்னை தீயிட்டு கொளுத்துங்கள் என்றார் இன்றைக்கு மக்களுக்கு கொளுத்தனும் என்ற ஆவல் இருந்தாலும் அந்த அளவிற்கு விலை கொடுத்து பெற்றோல் வாங்க வசதியில்லாமல் மக்கள் தயங்குகிறார்கள். இல்லை என்றால் ஊர்க்கு ஊர் தொட்டிகளை நிறப்பி அந்த செயல் எங்கள் ஊரில் நடக்கட்டும் என்று திருவிழாவே எடுப்பார்கள் போலும்.

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க பசு மாட்டையும் அதன் கழிவுகளில் எப்படி தங்கம் உட்பட பல தயாரிப்புகளை செய்யலாம் என்ற ஆராய்ச்சிகளுக்கு கோடான கோடி மக்கள் வரிப்பணத்தை இறைத்து அது அமெரிக்க பல்கலைகள் வரை பல் இளித்துக்கொண்டு நிற்கின்றது.

பசுவின் பெயரில் சட்டம் இயற்றுவதும் அதன் பாதுகாப்பின் பெயரில் சாதாரண மக்கள் பொது இடங்களில் அடித்து கொல்வதும் அது பசுக்கறி தானா என்ற அறிய ஒரு அறிவியல் அறிஞர் சாதணம் வடிவத்தவரை வந்து நிற்கின்றது.

இப்படி வரி விதித்தால் மக்கள் பலனடைவார்கள் என்று சொல்லி சாதாரண மக்கள் 100 ரூபாய் கொடுத்த இடங்களில் 130 ரூபாய் கொடுக்க வைத்து ஏழைகள் எல்லாம் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்றும் அதை எதிர்ப்பவர்கள் எல்லாம் கள்ளப்பணம் வைத்து இருப்பவர்கள் என்று புரட்டு பேசியும் மகிழ்ந்ததை மக்கள் இரசிக்கவில்லை.

கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வருகின்றேன் என்ற பெயரில் நாட்டில் இயங்கிக்கொண்டு இருந்த கல்வி அமைப்பை மடை மாற்றி விடுவதையும் மக்கள் இரசிக்கவில்லை.

ஏன் ஐயா இப்படி எல்லாம் சொத்தப்பல் திட்டங்கள் தவிர உங்களிடம் வேறு எந்த திட்டமும் இல்லையா என்றால் அந்த சொதப்பல் திட்டங்கள் எல்லாம் காங்கிரசு அரசால் கொண்டுவரப்படு நிலுவையில் உள்ளவைகளே, நாங்கள் செயல்படுத்தினோம் நீங்கள் காங்கிரசை தான் திட்டவேண்டுமே தவிர எங்களை இல்லை என்று சொல்கிறார்கள். தெரியாமல் தான் கேட்கின்றோம் பசுவும் பசு சார்ந்த திட்டங்கள் தவிர உங்களுக்கு வேறு எந்த திட்டங்களும் வகுக்க தெரியாதா இல்லை தெரியாது போல் நடிக்கிறீர்களா.... அது சரி சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வருவதற்கு.

அப்போ திரையில் அடுத்தவர் எழுதி இயக்கிய கதா நாயகனும் அடுத்தவர் எழுதிக்கொடுத்ததை மேடைகள் தோறு அடவு கட்டி ஆடிய உங்களுக்கும் என்ன வித்தியாசம். இந்த பொம்மை நாயகனை இன்னமும் இணையத்தில் பிரதமரின் செய்கையை நீதிமன்றம் கூட கேள்வி கேட்க துணியவில்லை என்று எழுதி மகிழ்கின்றது.

தினமும் தொகாவில் வரும் விசயகந்து போதையில் தள்ளாடும் நிகழ்வுகளும் சரி மோடியும் அவரது கூட்டமும் உளரி கொட்டுவதும் ஒன்றாகத்தான் மக்களுக்கு தெரிகின்றது.

நீங்கள் இருவரும் திரையிலும் மேடையிலும் நன்றாக நடிக்க மட்டுமே தெரிந்தவர்கள் என்றும் தலைவர்கள் இல்லை என்றும் மக்கள் நன்றாக புரிந்துக்கொண்டுள்ளார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்தால் உலகில் புன்னியம் பெருகி பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொன்ன மோடியின் அடிபொடிகளில் ஒருவரான ராம் செத்மலானியின் வாக்கு மூலம் இணையத்தில் பரவுகின்றது அதை படித்து பாருங்கள் நாங்கள் சொல்வது எவ்வளவு உண்மை என்று உங்களுக்கே தெரியும்.

Wednesday, September 20, 2017

திருமுருகன் விடுவிப்பு புயலுக்கு முன் அமைதியா

நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்திருக்கும் திருமுருகனுக்கும் அவரது தோழர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

சாதாரணமாக இப்படி வழக்கில் எல்லாம் விடுவிப்பது அபூர்வம், என்ன என்ன காரணங்களை எல்லாம் சொல்ல முடியுமோ அவைகளை எல்லாம் பூடகமாக வாய்வழி வாதமாக வைத்துவிட்டு அவைகளை எழுத்துபூர்வமாக கொடுக்க கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டு ஆண்டுகளை எளிதாக கடத்த முடியும்.

அதுவும் மைய அரசும் மா நில அரசும் சேர்ந்து நடத்திய நாடகம் என்றதால் என்ன என்ன தில்லு முல்லுகளை செய்யலாமோ அவ்வளவும் செய்ய அவர்களுக்கு முழு பலமும் ஆசிர்வாதமும் உண்டு.

இருப்பினும் எப்படி இவ்வளவு விரைவில் வெளியே விட சம்மதித்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை இப்போதைக்கு விடுங்கள் நாளை எங்காவது ஊருக்கு போகும் போது அங்கே பொது சொத்துக்கு தீயை வைத்துவிட்டு திருமுருகன் தான் வைத்தார் என்று அள்ளிக்கொண்டு வருவோம் என்ற திட்டத்தில் வெளியில் விட்டார்களா என்று தெரியவில்லை.

பொங்கல் சென்று தீபாவளி நெருங்கிக்கொண்டு இருக்கிறது இன்னமும் அந்த சல்லிகட்டு போராட்டத்தில் தீ வைத்த நல்லவர்கள் யார் என்றும் அவர்களுக்கு என்ன தண்டனை என்றும் இது வரையில் தெரியவில்லை. ஆனால் அதற்குள்ளாக போராட்ட குழுவை 6 மாதம் சிறையில் வைத்தாகிவிட்டது.

திருமுருகன் உள்ளே இருந்த நாட்களில் நீட்டும் அது சார்ந்தும் நிறைய நடந்துவிட்டது. நீட் சம்பந்தமாக என்ன என்ன செய்ய போகிறார் என்று பார்ப்போம்.

Tuesday, September 19, 2017

இளையராசாவையும் மே 17ஐயும் ஞாபகப்படுத்திய டன்கிரிக்கு(Dunkirk) படம்

பொதுவாக ஒரு நல்ல படம் பார்த்தால் அந்த படத்தின் பாதிப்பு மனதை விட்டு அவ்வளவு எளிதில் நீங்காது. அதுவும் மனதில் ஏற்கனவே பார்த்த பல விடயங்களை கண்ணுக்கு முன்னே கொண்டு வந்து நிறுத்தவும் செய்யும்.

இந்த டன்கிரிக்கு படமும் அப்படி ஒருபடம்.

போர் சம்மந்தமான படம் என்றால் நிறைய காட்டி மக்களை கட்டி போட்டு வைக்க முடியாது. முதலில் காட்சியின் விரிவுக்கு என்று ஒரு பிரமாண்டத்தை காட்டுவார்கள், பிறகு கதைக்கு சம்பந்தமான சிலரையும் அவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்று காட்டுவதும் தான் இயல்பு. அந்த வகையில் இந்த படமும் வரலாறில் யார் யார் எல்லாம் பதிவு பெற்றார்களோ அவர்களை மட்டும் ஆங்காங்கே காட்டி திரைகதையில் பதிக்கிறார் இயக்குனர்.

படத்தின் நாயகன் இசை தான், முதன் முதலில் ஆள் அரவம் இல்லாமல் இருக்கும் மையான அமைதியான ஊரில் அந்த வீரர்கள் நடக்கும் இடத்தில் மெல்லிதாக ஒலிக்கும் அமானுசிய ஒலி மெல்ல மெல்ல திகில் இசையாக் சீற்றம் கொள்கிறது.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று கடற்கரைக்கு வரும் காட்சியில் இன்னும் வீரியம் கொள்கின்றது. விரக்தியுன் உச்சத்தில் இருக்கும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தும் ஏதும் பேசிக்கொள்ளவோ என்ன ஆச்சு என்று விசாரித்துத்துகொள்ள முடியாத அளவிற்கு ஒரு விரக்தி. எப்போது தாக்குதல் நடக்கும் அடுத்த வினாடி என்ன நடக்கும் என்று ஊகிக்க முடியாத மர்மமாய் அடுத்தடுத்து நகர்கின்றது.

கொஞ்சம் கொஞ்சமாக இசை அங்கே தீவிரமாக அதே சமயத்தில் மெல்லிதாகவும் ஒலிக்கின்றது.

பிறகு அங்கே நடக்கும் தாக்குதலுக்கு பிறகு ருத்ர தாண்டவம் ஆடுகின்றது இசை. சிறப்பு சத்தமும் பின்னணி இசையும் அற்புதமாக நடனமாடுகின்றது படம் இறுதி வரை.

படம் முடிந்த பிறகு இந்த மாதிரி ஒரு ருத்ரதாண்டவ இசையை இதற்கு முன் எங்கேயோ கேட்டோமே என்று நினைக்கையில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் நினைவுக்கு வந்தது.

முதல் காட்சியில் துவங்கும் இசை பின்பு மெல்ல மெல்ல உக்கிரமாகி பிறகு கரைபுரண்டு ஓடும். கிட்டதட்ட ஒரு போர் படத்தின் இசையின் அத்தனை பாகங்களையும் கொண்டு இருந்தது அந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் இசை.

இன்னும் கொஞ்ச நாளில் அந்த ஓ நாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் இசையுடன் இணைத்து இரசிகர்கள் காட்சிகளை வெளியிடப்போவது உறுதி.

மே 17ல் கொத்து கொத்தாய் எங்கே மனிதர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்துக்கொண்டு எப்படி குண்டு வீசி கொன்றார்கள் என்று ஆவனங்கள் கூட நமக்கு காட்டவில்லை. ஆனால் இப்படி தான் கொன்றார்கள் என்று அழகாக இந்த படம் காட்டியுள்ளது.

போர் நடவடிக்கைகளில் செஞ்சிலுவை வாகனங்களை தாக்க கூடாது என்ற விதி அனைவரும் கடைபிடித்தே ஆகவேண்டிய ஒன்று ஆனால் டன்கிரிக்கில் முதலில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது அந்த செஞ்சிலுவை கப்பல் தான் என்று பார்க்கும் போது எப்படி பட்ட போர் அது என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

இந்த படதிற்கு சிறந்த படம், சிறந்த இயக்கம் இந்த இரண்டு பிரிவிலும் விருது கிடைக்க வாய்போ இல்லை. காரணம் எந்த ஒரு இடத்திலும் இராணுவம் பயன்படுத்தும் ரேடியோவை காட்டவில்லை. அது மட்டும் இல்லாது ஒரு குண்டு தாக்கிய 20 வினாடியில் கப்பல்கள் மூழ்குவதாகவும் காட்டியுள்ளார்கள். நல்ல ஆவணப்படம் என்றும் கூட சொல்ல முடியாது காரணம், படத்தில் தொழி நுட்ப முறையில் சேத்துள்ள கடலும் வானமும் சேர்ந்த காட்சிகளில் நிறைய சித்தரிக்கப்பட்டது போல் இருகின்றது.

வலுக்கட்டாயமாக காட்சிகளை திணித்தது போல் கையாண்டு இருக்கிறார்கள்.

2017ஆம் ஆண்டிற்கான ஆசுகர் விருதில் இசைக்கு மட்டுமாவாது போட்டியில் எடுப்பார்கள் மற்ற வகையில் சந்தேகம் தான்.


Monday, September 18, 2017

இராசீவ்காந்தியும் தூர்தர்சனும் மோடியும் நவோதயாவும்

முன்னொரு காலத்தில் இப்படி ஒரு சிரிப்பு தமிழ் நாளிதழில் வந்தது. மன நல மருத்துவரிடம் கணவனை மனைவி அழைத்து வந்து சொல்வார், "டிவி பாக்கும் போது கரண்டு போனா உடனே இராசீவ் காந்தி படத்தையே பார்த்துகிட்டு இருக்கார்ன்னு" சொல்வதாக இருக்கும் அந்த நகைப்பு.

அந்த கால கட்டத்தில் தூர்தர்சனை விட்ட வேற நாதியில்ல ஆகையால் என்னை நீங்க பார்த்து தான் தொலையனும் என்று எப்போது பார்த்தாலும் இராசீவின் படத்தையே காட்டியதன் விளைவு இந்த நகைப்பில் வந்து நின்றது.

பிறகு இந்தி நிகழ்சிகளை தேசிய நிகழ்ச்சிகள் என்ற பெயரில் திணித்தார்கள். வயலும் வாழ்வும் செய்தியும் முடிந்த பிறகு தேசிய நிகழ்ச்சிகள் என்று இரவு 9:00 வரை காக்க வைத்துவிட்டு பிறகு பாருங்கள் என்று சொல்வார்கள்.

ஞாயிறு இரவில் ஒரு படம் காட்டுவார்கள், அந்த படமோ மிகவும் பாடாவதியான படமாக இருந்தாலும் முடிவு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள இரவு 9:00 வரையில் காத்துகிடக்கனும்.

எங்க ஆட்சி எங்கள் முடியு நீங்கள் எல்லாம் என்ன செஞ்சாலும் இப்படியாது இந்திய கற்றுக்கொள் என்று அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்சனில் இவர்கள் படுத்திய பாடு கொஞ்சமா நஞ்சமா. விளம்பரம் கூட இந்தியில் தான் வரும். என்னே கொடுமை என்று தமிழக மக்களுக்கும் இருந்து விட்டு போனார்கள்.

ஆனால் இன்றைக்கு அந்த தூர்தர்சனும் அகில இந்திய வானொலியின் செய்திகளைக்கூட மக்கள் காது கொடுத்து கேட்க தயாராக இல்லை. 2 நிமிடத்திற்கு ஒரு முறை அமிதாப் வடக்கின் ஒரு குக்கிராமத்தில் இயற்கை உபாதைக்காக போகின்றவனை விசில் அடித்து இங்கே வா என்று கூப்பிடும் சொத்த பாரத்து விளம்பரம் மட்டும் தான் ஒளிபரப்பாகின்றது. அவ்வப்போது 30 ஆணுகளுக்கு முன்னால் ஒளிபரப்பிய படங்கள் மறைந்த இயக்குனர்களின் அந்தகால பேட்டி என்று காலாவதியான நிகழ்ச்சிகளாகவே வழங்குகின்றது.

ஒரு வேளை நவோதயா பள்ளியில் இந்தியில் பயின்றால் தான் மருத்துவம் என்று மோடி திணிக்கும் கால் தமிழகத்தில் இன்னும் 20 ஆண்டுகளில் சொத்த பாரத்துக்கு விளம்பரம் போட்ட நவோதயா ஆசிரியர்கள் தயாராக்குகின்றது என்றது மட்டுமே பொருள்.

தமிழகத்தில் மோடியைவிட அதிக அதிகார சம்பத்தை எல்லாம் செயலலிதாவின் ஆட்டத்தில் கண்டவர்கள் நாம், கிட்டதட்ட 25 ஆண்டுகளி அவர் கொடுத்த கசப்பு மருந்தை விழுங்கியவர்கள் நாம். நீங்கள் செய்யும் பந்தாக்களை விட 1000 மடங்கு பந்தாக்களை எல்லாம் தனது முதலாவது ஆட்சிகாலத்தில் நிகழ்த்தி மக்களின் சாபத்தை வாங்கிக்கட்டி கொண்ட செயலலிதாவின் காட்டாட்சி போல் இருக்கிறது உங்களி பேயாட்சி.

நாமும் மிரட்டினோம் அவர்களும் மிரண்டுவிட்டார்கள் என்று எண்ணாதீர்கள்.

இன்னும் 20 ஆண்டுகளில் நவோதயா பள்ளிகளில் பசுமாடுகளை கட்டி பராமரிக்கும் பகுதி நேர மைய அரசு ஆசிரியர்கள் ஏக் காவும் மே ஏக் கிசான் ரகுதாத்தா என்று சொல்வதை கற்பனையில் பார்க்கவே வேடிக்கையாக இருக்கின்றது...........

Saturday, September 16, 2017

எங்களுக்கு நவோதயா பள்ளிகள் வேண்டாம் கிருத்துவ மற்றும் முசுலீம் கல்வி அறக்கட்டளைகள் போதும்

இந்தியா போன்ற ஏழை நாடுகளின் உணவு பஞ்சத்தின் போது தங்களால் ஆன உதவிகளை கிருத்துவ மற்றும் முசுலீம் அறக்கட்டளைகள் வழங்கி வந்துள்ளது வரலாறு. அப்படி வந்தவர்கள் அதோடு நிற்காமல் கல்வியில் பஞ்சம் கண்டு நிற்கும் பின் தங்கிய இடங்களில் தங்களது கல்வி அறக்கட்டளைகளை நிறுவி கல்வியையும் வழங்கி வருகின்றது.

எந்த ஒரு படிப்புக்கும் வேண்டிய தயாரிப்புகளை பெறுவதிலும் செயலாற்றுவதிலும் தியாக உள்ளம் கொண்ட சேவர்களை கொண்ட அமைப்புகள் அவை. எந்த ஒரு இலாப நோக்கும் இல்லாமல் கடவுளுக்கு செய்யும் சேவையாக செய்யும் அவர்களின் சேவை தமிழகத்து ஏழை மக்களுக்கு மிகவும் அவசிமாக இருக்கிற நாட்கள் இப்போது.

மதவாத மைய அரசு உருட்டலும் மிரடட்டலுமாக எங்களுக்கு கும்பிடு போடு இல்லையேல் உனக்கு படிப்போ வேலையோ வாழ்வோ கிடையாது. மீறி எதிர்த்து எதுவும் பேசினால் என்ன நடக்கும் என்று கர்னாடகாவில் கொல்லப்பட்ட எழுத்தாளர்களே சாட்சி என்றும் மிரட்டுகிறது.

குறைந்தது இன்னும் ஒரு 4 வருடங்களுக்கு தமிழகம் தகப்பனை இழந்த குடும்பம் தவிக்கும் குடும்பமாக எடுப்பார் கைப்பிள்ளையாக ஆக்கப்பட்டுவிடும். எந்த தயாரிப்பும் இல்லாமல் மேலும் பல அனிதாக்களை பலிகொடுக்கம் வலிமையோ, புரண்டு வரும் வெள்ளமாக புரட்சி நடத்தவோ இந்த ஏழை மக்களுக்கு நாதி இல்லை.

ஒரு காலத்தில் சங்கதம் பேசினால் அல்ல காதில் கேட்டால் கூட காதில் ஈயத்தை காச்சி ஊற்றப்படும் என்று சொல்லி சொல்லி சங்கதத்தை அழித்துவிட்டு. இன்றைக்கு அதன் அனாதை பிள்ளையான இந்தியை படிக்கவில்லை என்றால் மருத்துவம் படிக்க முடியாது என்று பயமுறுத்தி தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை நிறுவி இந்தியும் இந்துத்வமும் திணிக்க முற்பட்டு நிறிகிறார்கள். தலைக்கு 15 இலட்ச ரூபாய் கொடுப்போம் என்று சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பி அவர்களுக்கு வாக்களித்தவர்கள் இன்றைக்கு செய்வதற்கறியாமல் கையை பிசைந்துக்கொண்டு நிற்கிறார்கள்.

இந்த அறிவு பஞ்சத்தை போக்க கிருத்துவ மற்றும் முசுலீம் அறக்கட்டளைகளை உதவும்படி வேண்டுதல்களை வைக்கின்றோம்.

யேசு நாதர் யார் என்றே தெரியாமல் இருந்த ஊரில் கிருத்துவம் சொல்லிக்கொடுத்து அதனுடன் கல்வியையும் வழங்கிய உங்களின் சேவையும் நிகரற்றது. உங்களின் பாதையில் கல்வி அறக்கட்டளைகளை நிறுவி கல்வி சேவையாற்றும் முசுலீம் அறக்கட்டளைகளும் உங்களுடன் எங்களுக்காக நிற்கின்றது. வாருங்கள் வந்து இந்த ஏழை இந்தியாவின் உண்மையான ஏழை மக்களின் கல்விக்கும் ஏதிர்காலத்திற்கும் உதவுங்கள்.

Wednesday, September 13, 2017

செயலலிதா மரணத்தின் மர்மம் வெளியிட்டார் போலி மருத்துவர் தமிழிசை

செயலலிதாவிற்கு மருத்துவம் வழங்கிய மருத்துவர்கள் யாவரும் போலி மருத்துவர்கள் என்றும் நீட் பரீட்சையில் தேர்வு பெறாத மருத்துவர்களால் எப்படி தரமான மருத்துவம் கொடுக்க முடியும். ஆகையால் போலி மருத்துவர்களை கொண்டு கொடுக்கப்பட்ட சிகிச்சை தோல்வியுறுவதில் ஒன்றும் அதிசயம் இல்லை என்று போலி மருத்துவர் தமிழிசை சௌந்தர்ராசன் தெரிவித்துள்ளார்.

Thursday, September 7, 2017

பரமாத்த குருவும் அவரது சீடர்களும் - பாசகவும்

அந்த காலத்தில் பரமாத்த குரு என்று ஒரு கதையை சொல்வார்கள். அதில் அடி முட்டாளாக ஒரு குருவும் அதைவிட மகா மட்டமாக முட்டாளாக அவரது சீடர்களும் என்று ஒரு கதை சொல்வார்கள்.

சின்ன சின்ன செய்கைகளில் கூட எவ்வளவு முட்டாள் தனமாக நடந்துகொள்ள முடியுமோ அவ்வளவு முட்டாள் தனமாக நடந்து காட்டுவது இந்த குருவின் இயல்பாக இருக்கும். அதற்கு ஆமாம் சாமி போடும் சீடர்கள் என்று கதை நகரும். படிக்க நகைப்பாக இருந்தாலும் மிகவும் வேதனையான கதைகள் அவைகள், இப்படி கூடவா ஒரு அடி முட்டாள் இருப்பான் என்று நினைக்க வைக்கும் கதை பாத்திரங்கள் அவைகள்.

ஆனால் ஆச்சர்யம் அந்த கதைகளில் வருவது போல் இருக்கிறது மோடியும் அவரது அமைச்சரவையும். பணமதிப்பிழப்பு இந்த செய்கைகளில் ஒரு சிறந்த உதாரணம்.

இது வரையில் 2.8 இலட்சம் கோடி பணத்தை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்து இருப்பதாக மோடியின் சீடர் அருண் செட்லி தெரிவித்துள்ளார்.

இந்த 2.8 இலட்சம கோடியில் வருமான வரி துறையின் தனிக்கையையும் தாண்டி முக்கால் வாசி பணமும் வெளியே வந்துவிடும் என்றதில் ஐயம் இல்லை. இருந்தாலும் பரமாத்த குரு என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

வெறும் மாடும் மத வெறியும் பழைய காங்கிரசு வகுத்த திட்டம் தவிர பாசகவிற்கு ஒன்றும் தெரியவில்லை. எதைக்கேட்டாலும் இது 2010ல் காங்கிரசு கொண்டுவந்த திட்டம் அதை ஆதரித்தது திமுக என்று மட்டுமே சொல்கிறார்கள். அப்படி என்றால் இது வரையில் பாசகவால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எல்லாம் என்ன என்றால் இந்த பரமாத்த குரு திட்டங்களை சொல்லி சல்லியடிப்பார்கள் சிங்கிகள்.

Tuesday, September 5, 2017

பாசக - நீட் தேர்வால் ஏழை மக்கள் எல்லாம் எவ்வளவு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்

நீட் தேர்வு வந்ததால் தகுதியான அறிவாய்ந்த மக்கள் மட்டுமே தான் இனி மருத்துவ படிப்பு படிக்க முடியும் என்றும் இது தமிழக்த்தின் ஏழை மாணவர்களையும் ஏழை சமூகத்தையும் மனதில் வைத்து தான் இந்த முடிவை பாசக அரசு எடுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு கள்ளப்பணம் வைத்து இருப்பவரை குறிவைத்து எடுக்கப்பட்ட முடிவு, இதனால் பலன் பெறப்போவது என்னவோ தமிழகத்தின் ஏழை எளிய மக்கள் தான்.

இந்த நீட் தேர்வு திணிப்பு முடிவை எடுப்பதற்கு முன் பாசகவின் தலைமை எத்தனை நாள் தூக்கம் இல்லாமல் தவித்து இருக்கிறது தெரியுமா. இந்த நீட் தேர்வின் பலன் இன்னும் 50 நாட்களில் தெரிய ஆரம்பித்துவிடும்.

 நீங்களும் படிக்கிறீர்கள் கள்ளப்பணம் வைத்து இருப்பவனும் படிக்கிறான் ஆனால் பாருங்கள் கடைசியில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ படிப்பை அவன் அந்த கள்ளப்பணம் வைத்து வாங்கிக்கொண்டுவிட்டு ஏழை எளியவர்களை மருத்துவ படிப்பு படிக்க முடியாமல் செய்து வந்தார்கள். இப்போது இந்த நீட் தேர்வு வந்ததால் இனி ஏழை எளிய மாணவர்கள் எல்லாம் இந்த ஆண்டு முதல் உலகத்திலே வேறு எங்குமே காணமுடியாத அதிசயமாக அதிக அளவில் மருத்துவம் படிக்க இருக்கிறார்கள்.

இந்த தமிழக ஏழை எளிய மக்கள் மருத்துவம் படிக்க வாப்பு கிடைத்தது என்ற பொறாமையில் கள்ளப்பணம் வைத்து இருப்பவர்கள் தான் போராட்டம் அது இது என்று ஆடுகிறார்கள். மற்றப்படி ஏழை எளிய மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் நண்பர்களும் உறவினர்களும் எவ்வளவும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கிறார்கள் என்று தமிழகம் சென்று பார்க்கும் படி இந்தியாவின் மற்ற மாநில மக்களை பாசக கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் நீட் தேர்வை திணித்ததில் திக்கு முக்காடி போய் தமிழகத்தின் ஏழை எளிய மக்கள் வீதிகளில் வந்து கண்ணில் கண்ட மக்களுக்கு எல்லாம் இலட்டு கொடுத்து கொண்டாடும் காட்சிகளை வீதி எங்கும் திருவிழாப்போல் தமிழகத்தில் பார்க்க முடிவதாக தமிழக பாசக தலைவர்கள் தொகாவிலும் செய்தி ஊடகங்களிலும் தெரிவித்து மகிழ்கிறார்கள்.

தமிழகத்தில் பாசக ஆட்சி இல்லாத போதே இவ்வளவு நல்லகாரியங்களை செய்யும் பாசக மட்டும் தமிழகத்தை ஆளும் மா நிலமாக வந்தால் நிலைமை எவ்வளவு மேம்படும் என்று குறிப்பிட்டு அகமகிழ்ந்தார்கள் என்று தினசரிகளை படித்தாலே தெரியும் என்றும், தமிழகத்தில் தாரமரை மலர்ந்தே தீரும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.