Thursday, July 27, 2017

இந்தியா சீனா போர் வருமா வராதா

சமீப காலமாக செய்திகளில் இடம்பிடிக்கும் செய்தி இது. அதுவும் எப்படி 10 நாளைக்கு மேல் வெடி பொருட்கள் இருக்காது. சும்மா சீண்டிப்பார்க்காதே என்று சீனா அறிவித்து இருக்கிறது. சீன எல்லையில் பதற்றம். சீன அதிபரும் மோடியும் சீ20 மாநாட்டில் சந்தித்து பேசினார்கள், இல்லை பேசவில்லை......

ஆக மொத்தத்தில் சீனாவுடம் போருக்கு இந்தியா தயாராவது போல் ஒரு கண்ணோட்டம் செய்திகளில் உலா வருவரை கவனிக்கலாம்.

எந்த ஒரு சுதந்திர நாட்டின் செய்தி ஊடகங்களுக்கு தனது கணிப்பை செய்தியாக வெளியிட உரிமை உண்டு என்று வைத்துகொண்டாலும். தேச நலனுக்கு எதிராக எழுதும் பரப்பும் பரப்புகளை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. ஆனால அரசாங்க எதிர்ப்பு எதுவுமே எழாமலும் மறுப்புகள் எதுவும் எழாத வண்ணமாக நாளொருமேணியும் பொழுதொரு வண்ணமாக செய்திகள் வருவது மட்டும் நிறபாடில்லை.

ஆக இது திட்டம் இட்டு அரசால் பரப்ப படும் ஒரு போர் பற்றிய தகவல் என்று சந்தேகம இல்லாமல் தெளிவு பெறுகின்றது.

சரி அப்படி ஒரு போர் வர சாத்தியமா என்றும் அந்த செய்திகளை படித்து அப்பாவி மக்கள் பதற்றம் அடைவார்களா என்றால் அதுவும் இல்லை. பிறகு எதற்காக இந்த செய்தி பரப்ப படுகின்றது.

ஊழலை முழுவதும் ஒழித்துவிட்ட இந்தியா, தூய்மையான இந்தியா, கருப்பு பணம் என்ற பேச்சுக்கே இடமில்லாத இந்தியா, மேக் இன் இந்தியா, என்று ஏகப்பட்ட இந்தியாக்களை இந்தியர்களின் முன் மோடியும் அவரது கூட்டமும் அலையவிட்டு இருக்கிறது. அந்த இந்தியாக்களை இந்தியர்கள் இப்போது எங்கே என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தினம் மனம் போன போக்கில் ஒரு அறிவிப்பை புதிய இந்தியாவின் பிறப்பாக வெளியிடுவதும் அடுத்த நொடியே அந்த இந்தியா அநாதையாக தெருவில் திரிவதையும் மக்கள் பார்த்துகொண்டு தானே இருக்கிறார்கள்.

இது வரையில் மதத்தின் பெயராலும் சாதிகளின் பெயராலும் வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதிலும், சமூக அவலங்களை கட்டவிழ்த்துவிடுவதுமாக தான் இந்த அரசு பயணிக்கின்றதே தவிர உருப்படியாக எதுவும் செய்துவிடவில்லை.

முன் எப்பவும் இல்லாத அளவிற்கு எல்லா வியாபாரங்களிலும் தனியார் பெருமுதலாளிகள் கொடிக்கட்டி பறக்கும் இந்த நாளிலா போர் வரப்போகின்றது. அப்படி போர் மூண்டால் இந்த முதலாளிகளின் முதலும் வியாபாரமும் போய் தெருவுக்கு வந்துவிடுவார்கள் என்று அந்த ஆட்களுக்கு தெரியாதா என்ன.

நாட்டின் எல்லைகள் போனாலும் தனது பணம் போய்விடக்கூடது என்று காப்பவர்கள் அல்லவா அந்த முதலாளிகள். அப்படி இருக்க சீனாவுடனான போர் இல்லை ஒரு எறும்பு கூட கூட போர் வர வாய்பு இல்லை.

பிறகு எதற்கு போர்பற்றி செய்திகள் பரப்ப வேண்டும், மிகவும் எளிதான கணிப்பு. ஒன்று மக்களை திசை திருப்ப மற்றும் இந்த போரை காரணம் காட்டி அமெரிக்கா முதல் இலங்கை வரை இந்த வல்லரசு இந்தியா ஆயுதம் வாங்கி குவிக்க தான். ஆயுதம் என்றால் நாட்டின் பாதுகாப்புக்கான ஆயுதங்கள் இல்லை மக்களே, அரசில் இருக்கும் மக்களின் தனிப்பட்ட தேவைக்கு தேவைப்படும் ஆயுதங்கள் வாங்கத்தான்.

மறுபடியும் மோடி இலங்கை முதல் அமெரிக்கா வரை சென்று முதன் முதலாக இலங்கையிடம் ஆயுதம் வாங்கிய இந்திய முதல் பிரதமர் நான் தான் என்றும், இதற்கு முன்னால் இருந்த காங்கிரசு அரசுக்கு இலங்கையிடம் எப்படி ஆயுதம் வாங்க வேண்டும் என்று தெரிய கூட இல்லை என்றும் சொல்லி செலிபி எடுப்பார் அந்த செல்பிமகான் மோடி. ஆகா ஓகோ என்று சங்களி சிங்கி அடைப்பார்கள் பார்க்கனுமே......

மோடியின் அடுத்த நள்ளிரவு தாக்குதல் - இட ஒதுகீடு செல்லாது

இராம்நாத்து கோவிந்தை முன்னிறுத்தியதில் இருந்து தெளிவாக தெரிந்துக்கொள்ள வேண்டியது இந்த துல்லிய தாக்குதான் அடுத்தது என்று.

இந்த முறை மோடிக்கு பதில் இராம் நாத்து கோவிந்து மக்களின் முன் தொகாவில் நள்ளிரவில் தோன்றி நாளை முதல் இட ஒதுகீட்டு செல்லாது என்று அறிவிப்பதோடு சமூகத்தில் இருந்த ஏற்ற தாழ்வுகளை களைந்து இன்று முதல் ஒரு புதிய இந்தியா பிறந்துவிட்டது என்று ஒரு சங்கை ஒலிப்பார்.

மோடி, அமித்து சா, அருண் செட்லி எல்லாம் இலட்டு கொடுத்து கொண்டாடுவார்கள்.

கலாம் குடியரசு தலைவராக தேவைப்பட்டது முசுலீம்களை கொன்று குவிக்கும் போது, இப்போது இடஒதுகீட்டை அழிக்க இராம்நாத்து கோவிந்து தேவைபடுகிறார்.

சங்கிகளுக்கு கொண்டாட்டமே ஆனால் பாதிக்கப்படும் மக்கள் என்ன செய்வார்கள், நெடுவாசலிலும், நீட் தேர்விலும் என்ன நடந்ததோ அதே தான் இங்கேயும் நடக்கும்.

இணைய புலிகள் கொஞ்சம் பாய்வார்கள், வளர்மதி திருமுருகனை போல் இன்னும் இருக்கும் களப்போராளிகளை கைது செய்தது போல் கைது நடந்தால் அடங்கிப்போவார்கள்.

பிறகு இடஒதுகீட்டை ஒழித்ததின் மூலம் ஒரே இந்தியாவை பெற்றோம் இனி யாரும் நம்மை சமூக ரீதியில் பாகுபடுத்தி பேச மாட்டார்கள் என்று மேடைக்கு மேடை மோடியும் அவரது சங்கிகளும் அடவுகட்டி ஆடுவார்கள்.

எதிர்த்து கேள்வி கேட்போர் எல்லாம் தேசதுரோகியாக அறியப்பட்டு உங்களது வீட்டு வாசலிலே தூக்கிலிட்டு கொல்லப்படுவீர்கள்.

பழையபடி பாசக சாதி இருக்கும் ஆனால் சமூக பாகுபாடு இருக்காது என்று உளருவார்கள்.

பிறகு என்ன மெல்ல இட்லர் மற்றும் இலங்கை வழியில் மக்களை சட்டங்களின் பெயரில் பிரிப்பார்கள், நேரே கொண்டு சென்று தனிமைபடுத்துவார்கள், பிறகு பட்டி பட்டியாக கொன்று குவிப்பார்கள். கேட்டால் ஒரு நாட்டிற்காக ஒரு மாநிலத்தையே இழக்கலாம் என்று உங்கள் மகாத்துமா காந்தியே சொல்லி இருக்கிறார். ஆகவே இது காங்கிரசு செய்ய இருந்தது தான் ஆகையால் யாரும் கூவ வேண்டாம் என்று வியாக்கியானம் பேசுவார்கள்.

Saturday, July 22, 2017

ஒழுகுகின்ற வீடு அடுத்து மெழுகுவர்த்தி வெளிச்சதில படிச்சதா - இராம்நாத் கோவிந்து

கலாம் ஐயா எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர் அதும் மட்டும் அல்லாது படிப்பும் ஆற்றலும் இருந்தால் நல்ல வேலை மட்டும் இல்லை நாட்டின் குடியரசு தலைவராக கூட ஆகலாம் என்று உதாரணமாக திகழ்பவர். இவருக்கு முன் அந்த பதவியில் அமர்ந்த ஆசிரியர் போல் இவரும் சொலித்தார்.

எளிமையான குடும்பம் என்றால் அவர்காலத்தில் மின் வசதி இருக்காது, பகட்டான ஆடை இருக்காது, மைல் கணக்கில் நடந்து தான் வருவார்கள் என்ற ஒரு நெடிய வரலாறு உண்டு.

இந்த நிலை எல்லாம் அவரின் இளமை காலத்தில் அவரது பெற்றோர்கள் இவரை பராமரித்து வாழ்ந்த காலத்தில். ஆனால் ஐயா கலாமை நாடு கண்டு வியந்தது அவரது எளிமையான பள்ளி காலத்தில் இல்லை. நாட்டின் குடியரசு தலைவரான பிறகும் அவர் கொண்ட எளிமையான வாழ்க்கைக்கு தான்.

குடியரசு தலைவராக ஆனாலும் தான் வகித்த அறிவியல் துறையில் நாடு இன்னும் எவ்வளவு தொலைவு பயணிக்க வேண்டி இருக்கிறது என்று திட்டமிட வழிவகுத்தவரும் இன்னும் என்ன என்ன பாதையில் இந்திய அறிவியல் துறையில் பயணிக்க வேண்டியுள்ளது என்றது மட்டும் இல்லாது இன்னும் நிறைய துறைகளில் அவரி அனுபவம் பயன்படுத்தப்பட்டது.

கலாம் ஐயா போற்றப்படுவது அவர் வாழ்ந்த அந்த அர்பணிப்பு வாழ்க்கைக்கு தான் என்று இராம்நாத் கோவிந்துக்கும் அவரை சார்ந்து இருக்கும் விளம்பர பிரியர்களுக்கும் இது புரியுமா என்று பார்ப்போம்.

மழையில் ஒழுகுகின்ற வீடு என்று இன்றைக்கு ஆரம்பித்து இருக்கும் இவர்கள் படிப்படியாக மெழுகுவர்த்தி வெளிச்சம், காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்தார், 2 சட்டை துணிமணிகள் தான் அவரிடம் உள்ளது(ஆனால் கோடிக்கணக்கில் விற்கும் கார் 20 உள்ளது), பல்கலைகழக விடுதியில் பகுதி நேர வேலைப்பார்த்து தான் சங்கபரிவாரங்களுக்கு சோறு வாங்கி கொடுத்தார் என்று எல்லாம் இனி எழுதும் முன் நினைத்து பாருங்கள்.

புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போல் ஆக்காதீர்கள் சங்கிகளே.......

இவர் என்ன தான் செய்தாலும் அப்துல் கலாம் ஐயா போல் போற்றவோ பாராட்டவோ பட போவதில்லை காரணம் இவர் வளர்ந்ததும் இருப்பதும் பாசக என்னும் நச்சு கூட்டத்தில். அந்த நஞ்சை உண்டு வளர்ந்தவரிட்டத்தில் அமிர்தமா விளையும்

Thursday, July 20, 2017

இன்றைகு புதிதாக பிறந்த ரௌடி இந்தியா - ஐயோ பாவம் இந்தியர்கள்

பாசகவின் வெற்றிகளை மோடி இப்படி தான் சொல்வார், ஒரு வரியை திருத்தி அமைத்தாலே இந்தியா இன்று புதிதாக பிறந்தது என்று சொல்லும் இவர்களால் மொத்த அதிகாரமும் கைக்கு வந்ததை எப்படி புதிய இந்தியா பிறந்தாக சொல்லாமல் இருக்க முடியும்.

ஏற்கனவே இருக்கும் அசுரபலத்தை வைத்துக்கொண்டு இந்தியாவை ஆட்டி வைத்தார்கள் இந்த பிரிவினைவாத பாசகவினர், இனி என்ன என்ன எல்லாம் செய்யப்போகிறார்களோ.

பாசகவின் குடியரசு தலைவர் இனி வரிசையாக செய்யவிருக்கும் காரியங்கள் இவைகளாக இருக்கும்.

1) ஒத்து வராத மாநிலங்களை வருத்து எடுப்பது மற்றும் ஆட்சியை கலைப்பது

2) மதவாதமும் பிரிவினைவாதமும் பரப்பும் கலவரங்களும் கலவரகாரர்களும் இனி சட்டத்தின் துணையுடன் அதிக பாச்சலில் செயல்படுவார்கள்.

3) சிறுபான்மையினர்கள் வசிக்கும் இடங்களில் இனி அதிகமாக குண்டுகள் வெடிக்கும், சிறுபான்மையினர்கள் அதிக அளவில் கொல்லப்படுவார்கள்.

4) சமூக நீதிக்காக போராடுவோர்கள் மீது கருப்பு சட்டங்கள் பாய்ந்து 20 ஆண்டுகள் சிறையும், சரிவராத மக்களை கொத்து கொத்தாக கொல்ல துப்பாக்கி சூடுகள் நடத்தப்படும்.

5) ஒரு ஆணையில் இந்தியாவின் பணம் செல்லாது என்று சொன்னது போல் எந்த ஒரு விவாதமும் இல்லாமல் இட ஒதுக்கீடு கலைப்படும்.

6) வாய் மொழி உத்தரவாக எல்லா மைய மற்றும் மாநில அரசு அலுவலகங்களிலும் சமூக பாகுபாடுகள் போற்றி வளர்க்கப்படும்.

7) அனைவரும் வழிபடும் கோவில்களில் இன்ன இன்ன நேரங்களில் இன்ன இன்ன மக்கள் தரிசிக்கலாம் என்று ஆரம்பித்து இன்ன இன்னவர்கள் இங்கே இருந்து தான் தரிசிக்க வேண்டும் என்ற வரைவரும், அதுவும் காசு கொடுத்தால் மட்டுமே என்றும் வரும்.

8) இராமர் பிறந்த இடம், வளர்ந்த இடம், சீதையை கொளுத்திய இடம் என்று ஊர் ஊராக நினைவிடங்கள் அமைத்து வழிபட தொடங்கப்படும்.

9) இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற நிலைக்கு அனைவரும் தள்ளப்படுவார்கள்.

10) மீதம் இருக்கும் 2 ஆண்டுகளும் இனி இந்தியா கலவர பூமியாக திகழும், இலங்கையில் நடந்தது போல் அதை எதிர்த்து அரவழியில் போராட வீதிக்கு செல்லுவோர் வீடு திரும்ப மாட்டார்கள்.

11) என்ன என்ன காரங்கள் சொல்லி எளியவர்களின் பணம் எல்லாம் பறிக்க முடியுமோ அவை அனைத்தையும் பறிக்கப்படும்.

12) தொகா விவாதங்களில் பேசும் வாதங்களுக்கு வருடக்கணக்கில் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

13) பேச்சு உரிமை எழுத்து உரிமைகளை ஒரே இரவில் பொடா போன்ற சட்டங்களை கொண்டு மக்களின் குரல் நெறிக்கப்படும்.

14) கோயில்கள் மட்டும் இல்லை இனி எங்கேயும் இந்தியாவில் எளிய மக்கள் விரும்பும் உணவோ உடையோ அணிய முடியாது. யார் யார் என்ன என்ன உண்ண வேண்டும் உடுத்த வேண்டும் என்ற அட்டவணைகள் வெளியிடப்படும் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும்.

15) வடக்கு கோவில்களுக்கு செல்லும் இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடப்பது போல் திருப்பதி வரை இந்த தீவிரவாதம் நடக்கும்.

16) ஒரே இரவில் இந்த இந்த ஆதார் ஏண்கள் எல்லாம் இது இது எல்லாம் செய்யமுடியாது என்று படிப்படியாக உரிமைகள் பிடுங்கப்படும்.

17) மோடி எந்த நாட்டிற்கு எல்லாம் முதல் முதலில் சென்று நான் நான் என்று பேசினாரோ அந்த நாடுகளுக்கு குடியரசு அதிபர் சென்று அதே அறிக்கையை நான் நான் என்று முழங்குவார் அது மட்டும் இல்லாது காங்கிரசு அரசை அந்த அந்த வெளி நாடுகளில் வைத்து மோடிப்போல் இவரும் விமர்சனம் செய்வார்.

18) அதாணியும் அம்பாணியும் குடியரசு தலைவரும் கோல்பு விலையாட்டு விளையாடுவதாக அன்றாட செய்தகள் வரும்.

19) திருப்பதி முதல் கேதார்நாத்வரை தினமும் ஒரு கோவிலுக்கு இந்த குடியரசு தலைவர் செல்வார் எலிக்காப்டர்லில் சென்று தரிசித்துவிட்டு தான் தனது பணியை தொடருவார்.

20) பாசக அரசு அல்லாத மாநிலங்களில் அடிக்கடி இந்த குடியரசு தலைவர் வந்து போவார், கூட்டம் நடத்துவார்.

இப்படி ஒரு கட்டப்பஞ்சாயத்தும் தண்டல்காரனான இந்தியா இன்று பிறந்துவிடதே என்று வருந்துவோம். அதோடு மட்டும் இல்லை இன்னும் 10 ஆண்டுகளுக்கு இந்த ரௌடி இந்தியாவில் நடக்க இருக்கும் வன்முறைகளை கடவுளிடம் கூட சென்று முறையிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டீர்களே மக்கா அனுபவிங்க மக்கா நல்லா அனுபவிங்க. வெறு 15 இலட்சம் பணம் தருவதாக சொன்ன பொய்யை நம்பி ஓட்டு போட்டவர்களே பாருங்கள் உங்களின் பரிதாப நிலையை.......

Thursday, July 13, 2017

பாசக அமைச்சர் மகேசு சர்மாவுக்கு கண் பரிசோதணை செய்யவும் - மோடி காந்தியாம்

இந்த மனிதன் மகேசு சர்மாவுக்கு கண் தெரியவில்லை என்றதை எவ்வளவு கவிதையாக சொல்லியுள்ளார் பாருங்கள். மோடியை பார்த்தால் வழுக்கை தலை பொக்கை வாய்யாய் கூன் விழுத்த கிழவனாய் தெரியுதாம்.

எனக்கு தெரிந்து 56 இஞ்சு மார்பனை இவ்வளவு கீழ்தரமாய் இப்படி யாரும் விமர்சித்து இல்லை.....

அசத்துகிறார்ரப்பா இந்த பாசக அமைச்சர்

அமர்நாத் படுகொலை இன்னும் ஒரு கோத்ராவா

சமீபத்தில் தான் இப்படி ஒரு பதிவை வெளியிட்டோம், நான் மட்டும் அல்ல நிறைய பதிவர்களும் இப்படி ஒரு கவலையை தெரிவித்து இருந்தார்கள்.

கொஞ்ச நாளில் இந்து பக்தர்களை முசுலீம் மக்கள் கொன்றதாக செய்தி வருகின்றது. ஆமதாபாத் அலகாபாத்து அல்லது கங்கை என்றால் கோத்ரா சூதிரமாக இருக்கும் என்று மக்கள் எளிதாக கணக்கிட்டு விடுவார்கள் என்று காசுமீரத்தில் நடத்தி இருக்கிறார்கள் பாசகவினர்(RSS).

இது வெறும் யூகம் இல்லை

1) தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பிடிபடவில்லை
2) பார்த்தவர்களும் சாட்சி சொல்பவர்களும் இந்து பக்தர்கள்
3) தாக்குதல் நடந்து கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் உச்சகட்ட பாதுகாப்பும் ஒரு குறிப்பிட்ட இயக்கம் தான் நடத்தியதாக தீர்ப்பே வந்துவிட்டது
4) ஒன்றே ஒன்று தான் பாக்கி இந்த தாக்குதலின் பெயரால் இன்னும் நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மையினர்களையும் கொளுத்தும் வேலை மட்டும் தான் பாக்கி

மறுபடியும் சொல்கின்றோம் வெளிப்படையான எந்த ஒரு விசாரணையும் இருக்காது, மெல்ல மெல்ல இந்த சம்பவத்தின் பெயரால் கலவரம் வெடிக்கும் மக்கள் பலியாகபடுவார்கள்.

என்ன பாசக வந்தால் தான் மோட்சம் கிடைக்கும் என்று ஓட்டு போட்ட வடக்கத்தியர்கள் தான் மறுபடியும் இரயில் பெட்டியில் வைத்து வறுத்து எடுக்கபடுவார்கள்......

மக்களே கூட்டமாக இருக்கும் இடங்களை தவிர்த்துகொள்ளுங்கள். சர்ச்சைக்குறிய செய்திகளை பொது இடங்களில் விவாதிக்காதீர்கள்.

பொன்னார் இந்துக்களின் மீது திணிக்கப்படும் வன்முறைக்கு பதிலடி கொடுப்போம் என்று கொக்கறித்திருப்பதை கவனிக்கவும்......

Tuesday, July 11, 2017

இப்படி எல்லாம் செஞ்சா இந்தியா எப்படி வல்லரசாகும் அதுவும் விரைவில்

மோடி அமெரிக்க சென்றார் இராணுவ தளவாடங்களை இத்தனை இலட்சம் கோடி டாலருக்கு வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

மோடி இரசியா நாட்டிற்கு சென்றார் அங்கே இத்தனை கோடி செலவில் இராணுவ தளவாடங்களை வாங்கினார்.

மோடி செர்மனி சென்றார் அங்கே இத்தனை கோடிக்கு இராணுவ தளவாடங்கள்.

இப்படி இது வரை இந்த 3 ஆண்டுகளில் சென்ற 64 நாடுகளிலும் இராணுவ தளவாடங்களை வாங்குகின்றார்.

இன்னும் இலங்கை நேபாளம் வங்களா தேசம் பாக்கிட்தானம் தவிர மற்ற எல்லா நாடுகளிடமும் ஒன்று இராணுவ தளவாடங்களை வாங்குவது அல்லது ஏற்கனவே வாங்கிய தளவாடங்களுக்கு மாற்று பாகங்களை வாங்க வேண்டியது என்று தான் அவரது பயணம் செல்கின்றது.

10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னே அணு ஆயுதத்தை பயன்படுத்தியது புராணங்களில் உள்ளது என்று சொல்லிக்கொள்ளும் நாடு இப்படி உலகில் ஆயுதம் விற்கும் அனைத்து நாடுகளிடமும் இந்தியாவிற்கு ஒரு விமானம் பார்சல் என்று வாங்கும் அளவிற்கு இருக்கிறது இந்தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சி.

இதிலே 130 செயற்கை கோளை விடுறாங்கலாம் எதுக்குபா அத்தனையும் இப்படி ஊர் ஊரா சென்று ஐயா ஆயுதம் கொடுங்க என்று கையேந்தவா, உள் நாட்டு தயாரிப்புகளான ஆகாசு, பிரம்மோசு, ஆயோக்கு எல்லாம் அவ்வளவு தானா.

பாசகவின் ஆட்சியில் இந்தியில் இந்தியன் இரயில்வே என்றும் ஏர் இந்தியா என்றும் எழுதுவதோடு போதும் என்று நினைகின்றார்கள் போலும்.

அதான் படிக்கும் இடங்களில் எல்லாம் பசுவை பற்றிமட்டும் போதித்தாலும் செயல்பட்டாலும் மட்டும் போதும் என்கின்றதே பாசக பிறகு எப்படி முன்னேறுவதாம்...........

மிச்சம் இருக்கும் நாட்களில் நாடு நாடுகளாக சென்று சட்டைக்கு தைக்க பொத்தான் வாங்கவும் மோடி சென்றால் கூட ஆச்சர்யம் இல்லை தான்.....

ஆயுதங்கள் வாங்கும் போது அவைகளை இயக்கவும் ஆட்களை வாங்கிவரவும், துல்லிய தாக்குதலை துல்லியமாக தாக்கலாம் மோடி.

Monday, July 10, 2017

GST பாசக நசகைச்சுவை நக்கலுக்கு அளவே இல்லையா

நேற்றைய செய்திகளில் சென்னையில் நடந்த GST கருத்தரங்கில் மத்திய அமைச்சர் வெளியிட்டு இருக்கும் கேணத்தனமான அறிக்கை. இப்படி அறிவு கொண்டவர் எல்லாம் நம்மை ஆட்சி செய்யும் அவலம்.

"சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது: 

எந்த ஒரு மாற்றம் வந்தாலும் அதில் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். முறையாக வரி கட்டுபவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஜிஎஸ்டி-யால் பாதிப்பு இருக்காது. முறை யாக வரி கட்டாதவர்கள்தான் பாதிக்கப் படுவார்கள். 

ஜிஎஸ்டி-யால் வருவாய் அதிகரிப்ப தோடு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் (ஜிடிபி) அதிகரிக்கும். ஜிஎஸ்டி-யால் வணிகர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் மக்களிடம் வரியை வசூலித்து அரசிடம் அளிக்க உள்ளனர்.

ஜிஎஸ்டி-யை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து கட்சித் தலைவர் களிடமும் ஆலோசனை நடத்தினோம். அதேபோன்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் நான் ஆலோசனை நடத்தியபோது, “தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி-யால் தொடக்கத்தில் பயன் இருக்காது. தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா போன்ற உற்பத்தி மாநிலங்களுக்கு தொடக்கத்தில் வருவாய் இழப்பு இருக்கும். எனவே, தமிழகத்துக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு இழப்பீட்டை அளிக்கும்” என்று தெரிவித்தேன். அதற்கு அவர், ‘ஜிஎஸ்டி சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அதிமுக குறுக்கே நிற்காது’ என்று தெரிவித்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். "

இதில் கேணத்தனம் என்ன இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள், இதோ அந்த கேணத்தனம்

 "ஏனெனில் அவர்கள் மக்களிடம் வரியை வசூலித்து அரசிடம் அளிக்க உள்ளனர்"

இதில் தவறு என்ன இருக்கிறது என்று தானே நினைக்கிறீர்கள் அடுத்த வாசகத்தையும் கவனியுங்கள்

"எனவே, தமிழகத்துக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு இழப்பீட்டை அளிக்கும்” என்று தெரிவித்தேன்"

எப்படி இவர்கள் கொண்டுவந்த கோமாளி தனமான வரிவசூலிப்பு முறையால் ஒன்று 10ஆக வரிகட்டி ஏமாந்தவர்கள் தமிழக மக்கள், ஆனால் இழப்பீடை தமிழக அரசுக்கு மைய அரசு கொடுக்கும்மாம்.....

கேட்பவர்கள் கேனையாக இருந்தால் எலி எரோப்பிளேன் ஓட்டுதுன்னு சொல்லுவானுக என்று ஒரு சொல்லாடல் உண்டு அது இது தான் போலும்.

இல்லை தமிழக மக்களுக்கு கொடுப்பதாகத்தான் சொன்னேன் என்று கேணத்தனமாக இன்னும் ஒரு அறிக்கை வராமல் இருந்தால் சரி. அப்படியே தமிழக மக்களுக்கு இந்த புதியவரி வசூலால் அடைந்த நட்டத்தை ஈடு செய்வதாக இருந்தால் எப்படி செய்வார்கள் மைய அரசு...

50 நாளில் தங்கள் வங்கி கணக்குகள் உள்ள வங்கியில் இந்த சூலை 1 முதல் செய்த செலவுகளின் இசேவைகளில் செய்த செலவுகளை கணக்கெடுத்து அவைகளை டக் அன்ட் லூயி முறைபடி நட்டஈடு கொடுக்க சொல்வார்கள் இந்த ஈன அரசு. உழைத்து கொண்டு வந்த பணத்தை பார்த்து கொக்கரித்த அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.....
 

GSTயால் உருவான இணை பொருளாதாரத்தை எப்படி சமாளிக்க போகிறார்கள்

கள்ளப்பணம், கருப்புபணம், கணக்கில் வரா பணம், பதுக்கல் பணம் என்று எல்லாம் கூறி இந்தியாவின் பெருமளவு பணத்தை பணமதிப்பிழப்பாக அறிவித்தது பிரிவினைவாத பாசக அரசு.

இந்த நடவடிக்கையின் தேவை என்ன என்று ஏழை எளிய மக்கள் கேட்டதற்கு இந்தியாவில் 1000 ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டால் 250 நோட்டுகள் மட்டும் தான் திரும்பி வருகின்றது மிச்சம் எல்லாம் பதுக்கல் ஆகுகின்றது, பிறகு இந்த பதுக்கல் பணமே இணை பொருளாதாரமாற உருவெடுத்து நாட்டின் வளர்ச்சியையே கொல்கின்றது என்று ஒரு வாதம் இணையத்தில் பரப்ப படுகின்றது.

நானும் தான் அலசி பார்க்கின்றேன் நாட்டின் மொத்த பணத்தில் 75% பணத்தை இப்படி அமுக்கி வைத்தால் இருக்கின்ற 25% பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி மற்ற காரியங்கள் எல்லாம் நடக்கின்றது என்று. எப்படி கணக்கிட்டாலும் 75% சதவிகிதம் என்றது மிகவும் மிகைப்படுத்தபட்ட அளவே.

தவிர இப்படி பதுக்குபவர்கள் எல்லாம் தொழிலில் சம்பாதித்த பணம் என்ற கொசுரு தகவல் வேறு தறுகிறார்கள்.

ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும், ஒன்றுமே தெரியாத மக்கள் தான் கிடைத்த பணத்தை பதுக்கிவைத்து இருப்பார்கள், ஆனால் தொழில்புரிவோர் அப்படி வைக்க சாத்தியம் இல்லை, இல்லவே இல்லை.

அவனிடம் இருக்கும் உபரி பணத்தை அமுக்கி வைத்து இருக்க எந்த அளவில் தொழில் செய்யும் முதலாளியும் முட்டாள்கள் இல்லை. பிறகு எப்படி இந்தியாவில் அச்சடித்து வெளியிடும் இந்திய ரூபாயில் 75% சதவிகிதம் பதுக்குகின்றார்கள் என்று பரப்புகிறார்கள், அதுவும் துக்ளக் போன்ற செய்தி ஊடகங்களில்....

இணை பொருளாதாரம் நடத்தும் தொழில்கள் எல்லாம் யார் யார் என்று கேட்டால் குருமூர்த்தி சொல்லும் பட்டியல்கள் இவைகள் தாம்.

தண்டல்காரன், வட்டிக்கு விடுபவர்கள், வார சந்தைகளில் வியாபாரம் நடத்துபவர்கள், அண்ணாச்சி கடை நடத்துபவர்கள், தெருவில் கீரை, தயிர், பால் விற்பவர்கள் என்று மனசாட்சியே இல்லாமல் பட்டியலை அடுக்குகிறார்.

குருமூர்த்திகளின் கருத்துப்படி இவர்கள் தான் இந்தியாவின் 75% சதவிகித பணத்தை கையாளும் தொழில் முதலாளிகளா???

இந்தியாவின் ஆய்வறிகைகளின் படி வருமான வரிக்கட்டுவோர் வெறும் 15% மட்டுமே. இது சம்பளம் வாங்கி அந்த பணத்தில் வருமான வரிக்கட்டுபவர்களும் தொழில் நடத்தும் மக்களும் அடக்கம்.

அப்படி என்றால் மீதம் இருக்கும் 85% விகிதமக்கள் எல்லாம் இவர்களின் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களா???? கணக்கு இடிக்கின்றதே.......

தற்பொழுது அறிவித்து இருக்கும் GST வரியால் அனேகமாக அனைத்து வியாபாரிகளும் தனது எண்ணத்திற்கு தகுந்தாற்போல் அல்லவா வசூலிக்கிறார்கள். கேட்டால் இன்றையில் இருந்து இவ்வளவு என்று நள்ளிரவு கூத்தில் அறிவித்தது உங்களுக்கு தெரியாதா என்று நக்கலாக கேட்கிறார்கள்.

இந்த புதிய GST வரியால் விலை எல்லாம் குறையும் என்று தான் சொல்கிறது அரசு, இந்த 10 நாட்களில் எந்த பொருளின் விளையும் குறையவே இல்லை, மாறாக தாறுமாறாக ஏகிறித்தான் இருக்கின்றது.

500, 1000 நோட்டுகள் செல்லாது என்று சொன்னபோது கைக்கட்டி வேடிக்கை பார்த்தது போல் தான் இப்போதும் மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் அது மட்டும் இல்லாது எப்படி எல்லாம் இந்த புதிய GST வரியின் பாதிப்பில் இருந்து தப்பிப்பது என்று செலவுகளை குறைத்துகொள்ள மட்டுமே செய்திகளை பரப்புகிறார்கள்.

இதில் மிகப்பெரிய வியப்பு என்றால் இந்த வரிவிதிப்பினால் ஏறிய விலைவாசிகளை கட்டுப்படுத்தாமல் விட்டதையும், அது சீர் செய்யும் வரை இந்த புதிய வரிவிதிப்பை நிறுத்திவைக்க சொல்லி இது வரையில் ஒருவர் கூட நீதிமன்றத்தை நாடாமல் இருப்பது மிகவும் வியப்பாகவும் வேதணையாகவும் விந்தையாகவும் இருக்கிறது.

மக்களும் விழித்துகொள்ளப்போவதும் இல்லை, கொள்ளையர்களும் நிறுத்தப்போவதும் இல்லை, அரசும் புதிய அறிவிப்பு செய்ததோடு சரி வேறு எதுவும் செய்யப்போவதும் இல்லை.

இப்படி கொள்ளை அடித்து வளர்ப்பது தான் இணை பொருளாதாரம் மற்றப்படி குருமூர்த்திகள் சொல்வது போல் வளர்வது இல்லை இணை பொருளாதாரம்.

நல்லா நடத்துராங்கையா அரசு, முதலில் இந்த வரிவிதிப்புகளை கையாளும் முறைகளை முறைமை படுத்திவிட்டு தானே இந்த வரிவிதிப்பை கொண்டு வந்து இருக்க வேண்டும் அதைவிடுத்து, விலை குறையும் குறையும் என்று கூவினால் மட்டும் போதுமா........என்ன என்ன விலைகள் இது வரையில் குறைந்து இருக்கிறது என்று மக்களில் ஒருவராவது சொல்லட்டுமே பார்க்கலாம்.

இந்த இண்டேன் கேசு போடுவேன் என்று சொல்லும் எச்சி ராசா, தமிழிசை, வானதி, பொன்னாரு, குருமூர்த்தி, நாராயணன் இன்னும் சல்லியடிக்கு சங்கிகள் இது வரையில் பதுங்கி இருப்பதும் ஏனோ தெரியவில்லை. எங்கே தைரியம் இருந்தால் வந்து விளக்குங்களேன் பார்ப்போம். நீங்களும் உங்க இணை பொருளாதார விளக்கங்களும்......ஊழலை ஒழிக்க வந்த அவதாரங்களே விளக்குங்கள்...

இதிலே அமெரிக்காவில் 95% மக்கள் வரிக்கட்டுகிறார்கள் என்ற பொய் தகவல் வேறு, அமெரிக்காவில் 95% மக்கள் வருமான வரி கணக்கை தான் கொடுக்கிறார்களே அன்றி வரி எல்லாம் கட்டுவது இல்லை. வருமானம் இவ்வளவு செலவீனம் இவ்வளவு ஆகையால் வரிக்கட்ட தேவையில்லை என்று கணக்கு காட்டுவார்கள். இதிலே பெயருக்கு ஒரு உப்புமா நிறுவனங்களை தொடங்கி அதன் பெயரில் நடக்கு வரி ஏய்புகள் ஏராளம். கடந்த பொருளாதார மந்த காலங்களில் கலிபோர்னியா மாகனம் முழுதும் போன்டியான கதை எத்தனை இந்தியர்களுக்கு தெரியும் எந்த தைரியம் தான் இந்த குருமூர்த்திகளை இப்படி பேச வைக்கின்றது.

Saturday, July 8, 2017

இந்திய பணத்தை இந்தியர்களே அவமானபடுத்தும் அவலம்

ஒவ்வொரு முறை கப்ப வசூல் ராசாக்கள் சளிக்காமல் மிச்சப்பணத்தில் ஒரே ஒரு 10 ரூபாய் நாயணயத்தையாவது வைத்துக்கொடுத்தாலும் வரும் அத்தனை மக்களும் உங்க நாணயம் வேணாம் தாளே கொடு என்று வாங்கி போகின்றார்கள்.

வங்கிகளிலோ 500ரூபாய் கட்டுகளை வாங்கிக்கொள்கிறீர்களா என்று கேட்டுவிட்டு கொடுக்கிறார்கள். 2000 தாளை வங்கியில் கொடுத்தாலும் சில்லரையாக கொடுங்கள் என்று வாடிக்கையாளர்கள் கேட்கிறார்கள்.

எங்கே எந்த கடையில் எது வாங்கினாலும் பணமா கார்டா என்று கேட்கிறார்கள்.

GST வந்ததில் இருந்து விலை குறையும் என்று தான் சொன்னார்கள் ஆனால் உணவு விடுதியில் இருந்து திரைபடம் வரை ஏற்கனவே கொடுத்த விலைக்கு மேல் தான் கேட்கிறார்களே அன்றி குறைவாக இல்லை. இதிலே நொடிக்கு நூறு விளம்பரம் ஒரே நாடு ஒரே வரி என்று.....

யாரை யார் ஏமாற்றுகிறார்கள், கள்ளபணத்தை ஒழிப்பதாக சொல்லி இப்போது ஒரு பெரிய கள்ள சந்தையை உருவாக்கிவிட்டிருக்கிறார்கள். விரைவில் மித்ரோன் என்று நள்ளிரவு மசாலாவுக்கு தயாராகுங்கள் மக்கா.....

Wednesday, July 5, 2017

டீயும் பொறையும் தான் இனி இந்திய தேசிய உணவு என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை

மோடி சிறு வயதில் டீ வித்த கடையை கோயிலாக மாற்றி தினமும் டீயும் பொறையும் பிரசாதமாக கொடுக்க ஆரம்பகட்டமாக 100 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டு இருப்பதாக மைய அரசு தெரிவித்துள்ளது.

படிப்படியாக அடுத்து அமித்துசா ஓடி விளையாடிய வீடு, அத்வாணி பிறந்த மாநிலம் என்று பட்டியல்கள் நீண்டுக்கொண்டே போகின்றது.

நல்லவேளை பாசகவோ இல்லை அவர்களது சித்தாந்த இயகங்களான ஆர் எசு எசு இயக்கமோ இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கோ அல்லது ஆதரிக்கவோ இல்லை. மாறாக எதிர்த்தது.

ஒரு வேளை போராடி இருந்திருந்தால் இந்தெ 3 ஆண்டுகளுக்குள் ஆர் எசு எசு உருப்பிணர்கள் வீடும் ஊரும் மாநிலங்களமும் கோயிலாக மாற்றி அனைவருக்கும் டீயும் பொறையும் கொடுக்க ஏற்பாடாகி இருக்கும்.

பிறகு நொடிக்கு நூறு முறை சொச்ச பாரத்து என்று வடக்கத்தியர் ஆய் போவதை காட்டுவது போல் டீயும் பொறையும் காட்டுவார்கள்.

டீயும் பொறையும் தான் இனி இந்திய தேசிய உணவு என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை....

இன்னும் ஒரு கோத்ரா இரயிலை கொளுத்த பாசக தயாராகிவிட்டது - சங்கிகளின் சிங்கிகள் ஆர்ப்பரிக்கிறது

சென்னையை சேர்ந்தவர் வசூலித்த மற்றும் அவரது பங்காக என்று மொத்தம் 5.65 இலட்ச ரூபாயை ஐஎசு இயக்கத்திற்கு இராணுவ தளபாடங்களையும் அதி நவீன ஆயுதங்களையும் செயற்கை கோள்களையும் வாங்கி குவிக்க பணம் கொடுத்து உதவினார் என்ற செய்தியும் அதற்காக கைது செய்யப்பட்டதாகவும் இன்றைய செய்தி.

கூடவே இந்த 5.65 இலட்ச ரூபாயில் 65 ஆயிரம் ரூபாயில் பல பேர் சேர்ந்து திரட்டியதாகவும், அந்த நபர்களை எல்லாம் கண்டறிந்து தக்க தண்டனையையும், இன்னமும் எவ்வளவு சில்லரை காசுகளை அவர்கள் நன்கொடையாக வசூலித்தார்கள் என்றும் விசாரிப்பதாகவும் செய்தி.

என்னே ஒரு கொடுமை, சென்னை தேர்தலில் 90 கோடி ரூபாய் புதிய 2000 நோட்டுகளில் கொடுத்தாக சொல்லி தேர்தலையே நிறுத்தி வைத்தார்கள் 4 மாதங்கள் இருக்கும், அந்த 90 கோடி கொடுத்தவரையோ அல்லது அந்த பணம் எப்படி பெறப்பட்டது என்றடையோ கண்டுபிடிக்கவோ அல்லது கண்டுபிடிக்க வேண்டும் என்று கூட இது வரையில் ஒரு அறிக்கை பேருக்காவது வந்ததா என்றால் இல்லை.

இது வரையில் காசுமீரத்தல் மட்டுமே மிதந்து வந்த இந்த இசுலாமிய தீவிரவாதம் இப்போது தமிழகத்தின் சில்லரை காசு வசூலித்தாக கைதில் வந்து நிற்கிறது.

மோடி அமெரிக்கா செல்கிறார் திரும்பியவுடன் காசுமீர போராளிகள் தாக்குதல் நடத்துவோம் என்ற கொக்கரிப்பு அதை தொடர்ந்து சில்லரை காசு வசூலித்தாக கைத்து, இந்த அழகில் நேற்று இசுரேலுக்கு 56 இன்சு மார்பன் பயணம் வேறு. 70 ஆண்டுகளாக காத்துக்கிடந்தாக இசுரேல் பிரதமர் சொன்னதாக தகவல் செய்தி தாள்களில்.

வரப்பின் மேல் வாயை வைத்து தேய்கிறார்கள் பாசகவினர், 3 ஆண்டுகளில் காசுமீரம் தவிர மற்ற இடங்களில் இது வரையில் ஒரு பட்டாசு கூட வெடித்தது இல்லை, அந்த ஆற்றாமைக்காக பாசக அரசு வரப்பின் மேல் வாய் வைத்து தேய்த்து பார்க்கிறது.

ஒரு வெங்காயமும் நடக்கப்போவது இல்லை, எவ்வளவு தான் வம்பிழுத்தாலும் ஆவப்போவது ஒன்றும் இல்லை. மறுபடியும் வயதான முதியவர்களை பாசகவே சபர்மதி இரயில் வண்டியில் வைத்து கொளுத்தியது போல் கொளுத்தினால் தான் உண்டு.

Tuesday, July 4, 2017

ஆதார் தான் ஆதாரம் - இன்னும் 30 ஆண்டுகளுக்கு பாசக ஆட்சி தான், அனைத்து மாநிலங்களிலும் பாசக தான்

ஆதாரை வாங்கு இல்லைனா குடிக்க தண்ணீர் கூட வாங்க முடியாத நிலைமையைத் தள்ளப்படுவாய் என்று சொல்கிறது பாசக அரசு. மக்களும் மிகவும் குழம்பிப்போய் தான் நிற்கிறார்கள்.

ரேசன் அட்டை இல்லாமல் எதுவும் கிடையாது என்றார்கள், பிறகு யாரோ ஒருவருக்கோ அல்லது ஒரு குழுவினருக்கோ வாக்காளர் அட்டை அடித்து தரும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. உடனே வாக்காளர் அட்டை இல்லாமல் எதுவுமே கிடைக்காது வாங்கு வாங்கு என்று கூவினார்கள். அந்த ஒப்பந்தகாரர்கள் கேட்போருக்கு கிலோ கணக்கில் விற்றது தான் மிச்சமாக வந்தது.

அதன் பிறகு இந்த ஓட்டுனர் உரிமம் அச்சடிக்க புதிய இயந்திரங்களை மா நில அரசுகள் வாங்கியது. அந்த இந்திரங்களை வாங்கியும் பழய உரிமம் இருந்தவர்கள் காலம் வரும் போது புதுபித்து கொள்ளலாம் என்று இருந்தவர்களை புகைபடத்துடன் கூடிய ஓட்டுனர் உரிமம் இருந்தால் தான் எல்லாம் கிடைக்கும் இல்லை என்றால் ஒன்றும் கிடையாது என்று அரசு அறிவித்தது.

பிறகு மைய அரசு 25,000 ரூபாய்க்கு மோல் பணபரிவர்த்தனைக்கு பான் கார்டுகளை பயன்படுத்த வேண்டும் என்று ஒரு விதியை கொண்டு வந்தது. இந்த சட்டம் வரும் போது 25,000 ஒரு பெரிய தொகை, அனால் இன்றோ கையேந்தி பவனில் இரவு உணவு சாப்பிட்டாலே 300 ரூபாவை தாண்டுகிறது என்ன கணக்கோ நிதியமைச்சரை கேட்டால் தான் தெரியும்.

பிறகு இப்போ ஆதார் அட்டையை அடிச்சு கொடுக்கிற ஒப்பந்தத்தை யாருக்கு கொடுத்தானுவலோ லோ லோன்னு எல்லாத்துக்கும் ஆதார் அட்டை இல்லைனா திருப்பதி லட்டு கூட கிடைக்காதுன்னு நிலைமை.

இப்படி ஆதார் ஆதார்ன்னு அலைய ஒப்பந்தகாரர்கள் மட்டும் காரணம் இல்லை, மாறாக படிப்படியாக மக்களை ஆதார் இல்லை என்றால் குறிப்பிட்ட பொருளோ அல்லது செயலோ செய்வதற்கு இல்லை என்று மெதுவாக பழக்கப்படுத்தி வருகிறார்கள் பாசகவினர்.

 நாளை தேர்தல் நடக்க இருக்கும் நாட்களுக்கு முன் ஆதார் அட்டை இல்லாதவர்கள் ஓட்டு போட முடியாது என்று அறிவிப்பார்கள் இவர்கள். மைய அரசின் கொள்கை முடிவில் மக்கள் உரிமை மீறப்படுகின்றது என்று எந்த எந்த நீதிபதிகள் எல்லாம் கூறினார்களோ அவர்களை எல்லாம் மாற்றிவிட்டு ஆமாம் சாமி போடும் நீதிபதிகளாக களம் இறக்கியுள்ளார்கள் பாசகவினர்.

 நாளையே நீதிமன்றம் சென்று ஆதார் அட்டையை தேர்தலுக்கு கட்டாயம் ஆக்க கூடாது என்று கேட்டால், 5 வருடமாக ஆதார் அட்டையை பெற முடியவில்லை என்றால் அவர்களுக்கு தேர்தலில் விருப்பம் இல்லை என்று தான் சொல்வார்களே அன்றி திணிப்பது தவறு என்று சொல்ல மாட்டார்கள்.

திருப்பதியில் இலட்டு வாங்க ஆதார் அட்டை எதற்கு ஒரு ஞாயமான காரணத்தை சொல்லுங்கள் பார்ப்போம். கள்ள வழியில் இலட்டு விற்பதை தடுக்க என்று மட்டும் சொல்வார்கள் பிறகு சட்டம் ஒழுங்கு வருமான வரித்துறை என்று எல்லாம் எதற்கு ஐயா சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆள் வைத்து இருக்கிறீர்கள் என்று கேளுங்கள், ஒரு ஆதார் அட்டைய வாங்க உங்களுக்கு இவ்வளவு கடினமா என்று நம்மையே திருப்பி கேட்பார்கள்.

ஆதார் அட்டையை கட்டாயாமாக்கிவிட்டால் ஒரு ஊரில் மொத்தம் 300 ஓட்டு என்றால் 299 ஓட்டுகள் வரை பதிவானது என்று எல்லாம் இனிமேல் வர வாய்ப்பு இல்லை என்று சந்தோசப்படலாம்.

ஆனால் எந்தனை மக்களின் ஆதார் அட்டைகள் தேர்தல் நாளன்று வேலை செய்யாமல் போகும் என்றது உங்களுக்கு தெரியுமா, இப்பவே வயதானவர்களின் கை ரேகைகளை எடுக்கமுடியாமல் அலை பேசிக்கு இணைப்புக்கூட கொடுக்க முடியாமல் விழி பிதுங்குகிறது ஆதார் அட்டையை கொண்டு இணைப்பு கொடுப்பவர்களால். பிறகு தேர்தல் நேரத்தில் மட்டும் எப்படி இந்த ஆதார் அட்டைகள் வேலை பார்க்கும்.

ஆக அந்த ஊரின் 300 ஓட்டுகளில் கிட்டதட்ட 150 ஓட்டுகள் தான் தேறும். அப்படியே தேறிய ஓட்டில் பாசக அல்லாத ஓட்டுக்களை பெயர் முகவரி படங்கள் வைத்து ஊருக்கு ஊர் அடையாளம் காண்பது எளிது.

அப்படி அடையாளம் காணப்பட்ட வாக்காளர்களின் ஆதார் அட்டைகள் தேர்தல் நாளன்று வேலை செய்யவிடாமல் தடுப்பதற்கு ஒன்றும் பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்ய தேவை இல்லை. ஒரே ஒரு டேட்டா பேசு அப்டேட்டு மூலமாக ஊர் ஊராக அழகாக கவித்து விட முடியும்.

தேர்தல் முடிந்து முடிவுகள் செல்லாது என்று அறிவிக்க நீதிமன்றம் சென்றால் அன்றைக்கு மோடி புதிதாக ஒரு இந்தியாவை பெற்று எடுத்திருப்பார், அந்த புதிய இந்தியாவில் ஆதார் இல்லாதவர்கள் எல்லாம் ஏற்கனவே பாக்கிட்தானத்திற்கு போக மோடியின் சம்பந்தி நவாசு சரீப்பிடம் சொல்லி பாசுபோர்டு விசா எல்லாம் வாங்கியாச்சு என்று ஒரு நடு இரவு மசாலாவில் மோடி அடவு கட்டி ஆடுவார்.

பிறகு என்ன மறுபடியும் ஒரு 5 ஆண்டுகள் உருண்டோடும், 5 ஆண்டுகள் நடக்கப்போகும் அந்த வழக்கில் இனி வரும் தேர்தல்களில் இந்த இந்த விதி முறைகளை எல்லாம் கடைபிடிக்க நீதிமன்றம் நிபந்தனைகள் விதிக்கும், பாசக அவைகளை எல்லாம் அப்படியே எடுத்துகொள்ளத் தேவை இல்லை என்று அழகாக சொல்லும். பிறகு பரோட்டா சோக்கு மாதிரி மறுபடியும் முதல்ல இருந்து. இப்படியே சளிக்க சளிக்க அட்சி செஞ்சு அவர்களுக்குள் ஒரு துரோகி கிளம்பி வெளியில் வந்தால் தான் எல்லாம் முடியும். அந்த துரோகிக்காக இந்தியா இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்துகிடக்க வேண்டி இருக்குமோ......

பயணிகளை காட்டி உணவு விடுதியில் பிச்சை எடுக்கும் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்

வெறும் 70 கிலோ மீட்டர் பயணம், அதுவும் சென்றடையும் ஊருக்கு 15 கிலோமீட்டர் தொலைவில் வண்டியை 35 நிமிடம் போட்டு வைத்து ஓசியில் டீயும் பொறையும் வாங்கி திங்கிதுங்க இந்த பிச்சைகார ஓட்டுனரும் நடத்துனரும். ஏன் என்று கேட்டதுக்கு அந்த ஓட்டுனர் நேற்றைய இரவு 3 மணிக்கு வண்டிய எடுத்தானாம் இப்போ மணி இரவு 2 ஆச்சாம் அதானாம்.

என்னவோ நேற்றைய இரவு 3:00 வண்டி எடுத்த இத்தனை மணி நேரத்திற்கு பிறகு இவ்வளவு நேர ஓய்வு என்று அழகாக நேரம் ஒதுக்கி தான் இவர்களுக்கு அட்டவணை எல்லாம் கொடுக்கிறார்கள். இருந்தாலும் இந்த பிச்சைகார பயலுக ஓய்வெடுக்க குடுகிற நேரத்தை வீணாக்கிவிட்டு நம்மள காட்டி இல்ல பிச்சை எடுக்குதுங்க.........உங்களுக்கு எல்லாம் வெட்கம் மானம் சூடு சொறனை எல்லாம் எதுமே இல்லை போல......வீடு வாசல் எல்லா இல்ல......

எல்லோரும் தான் வேலைக்கு போறாங்க உங்களை மாதிரியா நடுரோட்டுல வண்டிய போட்டுட்டு திங்குராங்க. அவனவன் வீட்டுல பொண்டட்டி சமையல் செஞ்சு குடுத்துவிடல. அதை அழகா சாப்பிடுகிற நேரத்தில் அவனவன் சாபிடல. உங்களுக்கு மட்டும் ஏன்யா இந்த ஈன புத்தி, அந்த 50 ரூவா காசுல பங்களாவ கட்டபோரீங்க பிச்சைகார பயல்வுலா.........

காசுமீரில் இருக்கும் தீவிரவாத அமைப்பை என்ன செய்யனும்னு டிரம்பு சொல்லனுமாக்கும்

தனம் தினம் ஒரு புதிய இந்தியாவை பெத்து போட்டுட்டு மோடி ஊர் சுத்த போயிடுவாரு உதவாக்கரை அப்பன் மாதிரி, அந்த புதிய இந்தியாவில் அதுவும் வடக்கில் நாளுக்கு நாள் கொலைகளை நடப்பதை என்னவோ கத்திரிக்காய் விலை ஏறியது போல் மோடியும் பிரணாப்பு முகர்சியும் கண்டிகிறார்கள். ஏம்பா இனிமே கத்திரிக்கா விலை எல்லாம் ஏத்தாதீங்கப்பான்னு சொல்வதை போல் இந்த கொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாதாம். எவனெவன் கண்டுபிடிச்சு தூக்குல ஏத்துரத விட்டுப்புட்டு ஒப்புக்க முடியாது, மாட்டே அப்படி இப்படின்னு பசப்பு வார்த்தைகள்....

இதிலே அமெரிக்காவுல 1000 கார் படை சூழ ஊர்வலமா மோடி சென்றார்ன்னு சங்கிகளின் சிங்கி வேற. அப்பா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா யாராவது வந்து கொஞ்சம் கொசுவிரட்டி மருந்து அடிங்கப்பா.....

அமெரிக்காவின் காயலாங்கடையில் போட்டு வைத்து இருக்கும் பழைய மற்றும் எதுக்கும் உதவாத இராணுவ தளவாடங்களை அதி நவீன ஆயுதமாக இந்தியாவுக்கு சொல்லி ஒரு விலை போட்டு எடுத்துட்டு போ என்றதும். இதோ வருது பிரம்மாசு, அதோ வருது விசுனுசு, இங்கே பார் பசு, அங்கே பார் பசு சாணி என்று பழையபாடல்களை எல்லாம் பாடி வாங்கி வந்த கையோட காசுமீர போராளிகளிடம் இருந்து இப்படி ஒரு செய்தியை தலைப்பு செய்தியக......இன்றைய நாளிதழ்களில்.......

சென்ற முறை கார்கில் இதே பிரிவினைவாத பாசக ஆட்சியில் இந்த முறை எங்கேயோ, எப்படியோ போரின் பெயரை சொல்லி சிங்கி அடிப்பது, மா நிலங்கள் தோரும் வசூலிப்பது. பிறகு பிரம்மாசு விட்டோம் விசுனூசு விட்டோம்னு கதைவிடுரது துல்லிய தாக்குதல் மாதிரி. இது வரையில் பாக்கிட்தானத்தின் எந்த எல்லையில் எவ்வளவு தூரம் உள்ளே சென்று அடித்தார்கள் என்று தெளிவுபடுத்தவில்லை.

மோடியின் சம்பந்தி நாவாசு சரீப்பு கூட அப்படி எதுவும் நடந்தா விளையாட்டுக்கு கூட சொல்லவில்லை.

ஒன்றை நன்றாக புரிந்து கொள்வோம், ஒரு நாட்டின் இராணுவ எல்லைக்குள் இன்னொறு நாட்டின் இராணுவம் நுழையுமானால் போர் வெடிக்கும். என்னவோ இவனுங்க போனாங்களாம், அவனுங்க எல்லாம் பீடா சாப்பிட்டுகிட்டு தம்மடிச்சுகிட்டு இருந்தானுவனாம், இவனுங்க அடி அடி என்று அடித்தானுங்களாம் அவனுங்க வலிக்குது அப்புரம் அழுதுடுவேன்னு சொன்னாங்களாம் அதை உலகம் அங்கரிச்சுடிச்சுன்னு மோடி அவருக்கு அவரே நற்சான்றிதழ் கொடுத்துகிறார்.

முதல்ல அப்படி ஏதாவது நடந்தால் தானே கண்டிக்க அப்படி எதுவுமே நடக்காத போது கண்டிக்க மற்றவர்கள் எல்லாம் என்ன பாசகவை சேர்ந்தவர்களா என்ன.........

திருவாளர் மோடி போய் அடுத்த புதிய இந்தியாவை பெத்துக்க என்ன திட்டம் என்று அந்த ஆயோக்கியர்களை போய் கேளும் அதை விடுத்து சும்ம சிரிப்பு காட்டிக்கிட்டு......

Saturday, July 1, 2017

எத்தனை முறை அடி வாங்கினாலும் திருந்தாத ப சிதம்பரம்

சென்ற முறை நடத்திய நல்லிரவு மசாலாவை பற்றி விமர்சித்த சிதம்பரத்தையும் அவரது மகனையும் படாதபாடு படுத்தியது இந்த பிரிவினைவாத பாசக அரசு. இவ்வளவு வாங்கியும் ஒரு வரி அமலுக்கு வந்த முதல் நாளே விமர்சிக்கின்றார்.

தமிழக அரசை பாருங்கள் கை வாய் பொத்தி இன்னமும் குனிந்தே இருக்கிறார்கள் அவர்களை பார்த்தாவது கற்றுக்கொள்ள கூடாதா.

வீட்டில் இருக்கும் சின்ன குழந்தை ஒரு சிறு பொம்மையை எடுத்து அடுத்த இடத்தில் வைக்கும், உடனே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த குழந்தையை பார்த்து அட இங்க பாரேன் எவ்வளவு பெரிய பொருளை எடுத்து அங்க வச்சிடான் என்று புகழுவார்கள், அவரை தொடர்ந்து வீட்டில் இருக்கும் அனைவரும் அந்த குழந்தையை தூக்கு அந்த அற்ப காரியத்திற்கு முத்தம் கொடுப்பது முதல் இன்னும் என்ன என்ன எல்லாம் கொடுக்க முடியுமோ அத்தனையும் செய்வார்கள்.

அது போல இருக்கிறது இந்த பிரிவினைவாத பாசக அரசு செயல், ஒரு அற்ப அறிவிப்பு அதை தெரிவித்துவிட்டு போகவேண்டியது தானே, அதை என்னவோ சிறுபிள்ளையின் பொம்மை விளையாட்டை பெரியவர்கள் புகழ்வது போல் இவர்களே தம்பட்டம் அடிக்கிறார்கள். மேலும் உலகிலேயே முதன் முறையாக என்ற வசனம் வேறு அப்பப்பா இந்த பிரிவினைவாத சிறுகுழந்தை எப்போது தான் பெரிதாக வளருமோ. நாட்டு மக்களின் வரிப்பணம் என்றைக்கு தான் சரியான செலவுக்கு பயன்படுத்த படுமோ எப்போதுமே வெறும் தம்பட்டத்திற்கு மட்டும் எவ்வளவு தான் செலவு செய்வார்கள் இந்த தற்பெருமை ஆயோக்கியர்கள்.......

இவர்களின் அடிவருடி தனமலரில் 12வது பக்கத்தில் வந்து இருக்கிறது இந்த ஒரு வரி செய்தி. அவ்வளவு தான் மதிப்பு இந்த செய்திக்கு. இதற்கு ஏன் இவ்வளவு வெட்டி செலவு யோகம் தினம் அன்று ஒரு நாள் மட்டும் யோகம் செய்ய கோடி கோடியா கொட்டி அழித்தை போல்.........