Tuesday, March 13, 2018

இது தான் புதிய இந்தியா

ஒவ்வொரு நாடும் வளர்ந்து இருக்கிறது என்றதை எந்த அளவுகோள் கொண்டு அளக்கும். பணம் எவ்வளவு வங்கிகளில் சேர்கிறது என்றா அல்லது மக்கள் கட்டிய வரிப்பணம் உயரும் போது அடடா நாடும் அதன் பொருளாதாரமும் வளர்ந்து இருக்கிறது என்று புள்ளியிலில் காட்டுவதா. இல்லை உலக பணக்காரர்களில் இந்தியர்கள் எத்தனை பேர் இடம்பெற்று இருக்கிறார்கள் என்றா.......எப்படி கணிப்பது.

அன்றைக்கு சென்னையை வெள்ளம் தாக்கிய போது அங்கே நடக்கும் அவலம் பார்க்க பொறுக்காமல் கையில் இருக்கும் பணத்தில் என்ன என்ன வாங்க முடியுமோ அவைகளை எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து நின்றார்களே மக்கள் அதில் இருக்கிறது நாட்டின் முன்னேற்றம். சென்னையில் தான் வெள்ளம் நமக்கு என்ன என்று இருக்காமல் தமிழகத்தின் மற்ற பகுதிமக்களும் நிவாரணம் கொண்டு வந்து குவித்தார்களே அதில் இருக்கிறது முன்னேற்றம். சென்னையில் வெள்ளம் வந்தால் எங்களுக்கு என்ன என்று இருக்காமல் பெங்களூருவில் இருந்தும் வந்தார்களே அதில் இருக்கிறது நாட்டின் முன்னேற்றம்.

மெரினாவில் கூடிய அந்த கூட்டத்திற்கு போராட்ட இறுதி நாள் வரை உணவு நீரை கொண்டு வந்து கொடுத்தார்களே அதில் இருக்கிறது தேசத்தின் முன்னேற்றம்.

அன்று அந்த முகம் தெரியா சகோதர சகோதரிகள் கொட்டிய பணத்திற்கு இவ்வளவு செலவு செய்தேன் என்று இது வரையில் கணக்குகளை வெளியிடாமல் இருக்கிறார்களே அதில் இருக்கிறது இந்தியாவின் முன்னேற்றம்.

நேற்று மும்பையை நோக்கி வந்த விவசாயிகளுக்கும் அதே போல் மருத்துவம் முதல் மைல் கணக்கில் நடந்து வந்த காலில் அணிய புதிய காலணிகள் உட்பட கொண்டு வந்து கொடுத்து இருக்கிறார்களே அது முன்னேற்றம்.

மற்றபடி அவன் முன்னேறுகிறான் பார் முன்னேறவிடலாமா என்ற பேச்சுக்குகளை எல்லாம் மக்கள் புறம் தள்ளித்தான் வாழ்கிறார்கள் என்ற உண்மையை என்றைக்கு தான் இந்த பாழாய் போன அரசியல் சமூகம் புரிந்துகொள்ள போகின்றதோ...........

நீங்க வல்லரசு ஆகுங்க ஆகாம போங்க ஆனால் இந்தியாவின் இந்த அபரிவிதமான வளர்ச்சி மிகவும் அவசியமான வளர்சி அந்த வகையில் இந்தியா முன்னேறிய இந்த புதிய இந்தியாவை போற்றி மகிழ்வோம்.......வாழ்க சகோதரத்தும்........

0 comments: