Thursday, March 8, 2018

மோடி விரைவில் பாராளுமன்ற தேர்தல் வரும் என்று சொன்னதின் பின்னணி இது தான் போலும்

ஏன்டா சிலைகளை உடைகிறீங்க என்று கேட்டால், லெனின் சிலையை நாங்கள் உடைப்பதற்கும் அதை போல் எங்களுடைய கட்சி/இயக்கம் தவிர மற்ற எல்லா கட்சி/இயக்கம்/மதம் சார்ந்த சிலைகளுக்கும் அடையாளங்களுக்கும் இதே கதி தான் விளையும். காரணம் லெனின் சிலை இரசியாவில் நடந்தது போல் நாங்கள் செய்கின்றோம். அது மட்டும் அல்ல மேலை நாடுகளில் சகிப்புத்தன்மை குறைந்துக்கொண்டு வருகின்றது அதன் காரணமாக எல்லா இடங்களிலும் தங்களின் இயக்கம்/சித்தாந்தம் இல்லா மற்ற எல்லாவற்றையும் அழித்து ஒழித்து தான் வருகிறார்கள் என்று சொல்கிறார்கள். ஒரு வேளை குசராத்தை தான் உலகம் என்று நம்பிக்கொண்டு இருக்கிறர்கள் இந்த அடிப்பொடிகள்.

சரி இந்த அடிபொடிகள் சொல்வது போல் மேலை நாடுகளிலும் வளர்ந்துவரும் நாடுகளிலும் உலகின் வல்லரசு நாடுகளிலும் நடப்பதுலாயே இவர்களும் செய்வார்கள் என்றதை வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும். கீழே இருக்கும் படங்களில் காட்டி இருப்பது போல் அதே மேலை நாடுகளிலும் நாகரீகம் மிக்க நாடுகளிலும் வல்லரசு நாடுகளிலும் செய்கிறார்கள் என்று செய்தால் பாசகவிற்கும் அதன் அடி பொடிகளுக்கும் சம்மதம் என்று தான் சொல்வார்கள் பாருங்கள்.





விவாத களத்தில் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்குமே படிக்காமல் வந்து செய்முறை வைவாவுக்கு பதில் அளிப்பது போல், கேட்ட கேள்விகளை தவிர மற்ற எல்லா செய்திகளையும் விளக்கு விளக்கு என்று விளக்குகிறார்கள். அப்படி விளக்கும் விளக்களத்தில் அள்ளிவிடும் செய்திகளுக்கு ஆதாரம் என்று கேட்டால் எத்தனையோ இருக்கு, எனக்கு அவுங்க சொன்னாங்க இவுங்க சொன்னாங்க என்று சொல்கிறார்கள். அவர்களை எல்லாம் பார்க்கவே பாவமாக இருக்கிறது.

0 comments: