Tuesday, December 25, 2007

நரேந்திர மோடியின் வெற்றி நமக்கு எதை சொல்கிறது.

முதலில் தேர்தலி வெற்றி பெற்ற மோடி அவர்களுக்கு நமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம்.

பிறகு இந்த வெற்றி நமக்கு விட்டுஸ்செல்லும் செய்தி என்ன என்று பார்ப்போம். இந்த தேர்தலில் பொதுகூட்டங்களில் மோடி பேசியதாகவும், தெகல்கா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியும். இவர்களுக்கு ஒரு பின்னடைவாக இருந்து இருக்க வேண்டியவைகள் என்று அரசியர்கள் கருதும் காலத்தே அவைகளையே பலமாக கொண்டு அருதி பெருன்பாமையுடன் வென்று காட்டி இருக்கும் மோடியின் வெற்றி உணர்த்துவது ஒன்றே.

அது, எங்களது தேவைக்கா என்ன வேண்டுமானாலும் செய்வோம். அதை கேட்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. இன்றைக்கு எங்களுக்கு பிடிக்கவில்லை என்று ஒரு 3000 மக்களை கொன்றோம், பின்னாளில் தேவை பட்டால் பக்கத்து மா நிலத்தை கூட கலவரம் என்ற பெயரில் கொளுத்துவோம் என்று அல்லவா சொல்லி நிற்கிறது.

தமிழகத்தில் ஈழப்போராளிகளுக்கு ஆதரவாக பேசினார் என்று வைகோவை ஓராண்டு காலம் சிறையில் தள்ளி வேடிக்கை பார்த்தார் செயலலிதா. ஏன்று கேட்டால், அவர் தீவிரவாதிக்கு ஆதரவாக பேசினார் அதனால் சிறையிலிட்டோம் என்று சொன்னார்.

ஆனால், மோடியும் அவரது கூட்டாளிகளும், தன்னிலை விளக்கம் அளிப்பது போல் அவர்கள் செய்த கொலை குற்றத்தை ஆதாரத்துடன் வெளியிட்டத்துடன். அது தப்பா என்று மக்களை பார்த்து கேட்டதாகவும், அதற்கு கரவொளிகளை பதிலாக கொடுத்தார்கள் என்று செய்திகளில் படிக்கும் போது, எந்த அளவிற்கு அந்த கூட்டதிற்கு வெறி ஏற்றி இப்படி ஒரு கேள்வியை கேட்டு இருப்பார் என்று தெரிகிறது.

என்ன செய்து இருக்க வேண்டும், நடுவண் அரசும், தேர்தல் ஆணையமும். இந்த பேச்சுகளுக்காக அவரை அழைத்து விசாரித்தாவது இருக்க வேண்டாமா. இல்லை அது அவருக்கு தேர்தலில் அதிக ஓட்டுகளை வாங்க்கிக்கொடுக்கும் என்ற கணக்கு எல்லாம் சொன்னால், அந்த அரசை முதுகெலும்பு இல்லாத அரசு என்று தான் சொல்லவேண்டும்.

ஒரு கொலை செய்தால் கூட மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று வாதாடுவார்கள் வழக்குரைஞர்கள். 3000 கொலைகளை செவ்வனே செய்து முடித்துவிட்டு என்ன செய்வாய் என்று கேட்கும் இவருக்கு மீண்டும் முதல்வர் பதவி.

இந்தியா இன்னும் ஒரு இலங்கையாக ஆகும் அதன் துவக்கம் தான் இந்த 3000 கொலையின் துவக்கம். இன்றைக்கு, இசலாமியர்கள் தானே என்று மற்றவர்கள் நினைக்க கூடும். ஆனால் இன்றைக்கு அவர்களுக்கு நடப்பது தான் நாளை நமக்கு எல்லாம் நடக்கும்.

அழிவுப்பாதையில் இந்தியா பயணிப்பதை தான் சொல்கிறது, வேறு என்னவாக இருக்க முடியும்.

கீதை - 3

கைபேசியில் அலுவலகத்தில்ருந்தும் தொலைபேசியில் ஊரில் இருந்து அம்மாவும் அழைத்தனர். அம்மாவிடம் பிறகு பேசுகிறேன் என்றவாரு அலுவலகம் பயனித்தான். செல்லும் வழியிலே என்ன ஏது என்று கேட்டவாரே சென்றவனுக்கு என்ன நடந்து இருக்கும் என்று ஒரு அளவிற்கு ஊகிக்க முடிந்தது.

சென்று பார்த்தாலும் அவனது கனிப்பும் சரியே, அமர்ந்து ஆகவேண்டிய காரியங்களை பார்த்து கொண்டிருக்கையிலேயே, குழு தலை, மேளாலர், இயக்குனர், என்று ஒரு உயர் வட்ட பாதுகாப்பே அவனிடம் வந்து சேர்ந்தது. வேலை என்னமோ ஒரு அரை மணியில் முடித்துவிடலாம் என்று தான் நினைத்து இருந்தான். ஆனால் வந்த உயர்மட்ட குழுவோ இவனிடமும் இவனது குழுத்தகையிடமும் என்ன ஏது என்று விணாவி கொண்டு இருந்தார்கள். வேலை கொஞ்சம் விளக்கம் கொஞ்சம் என்று இவன் இருக்க. இவனது குழுத்தலையே, இவனிடம் கொஞ்சம், மற்றவரிடம் கொஞ்சம் என்று பேசி சமாதானங்களையும், இதற்கு முன் எப்போதெல்லாம் இப்படி நடந்தது என்று விளக்கியும். தங்களது தற்பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது என்றெல்லாம் விளக்கிகொண்டு இருந்தார்.

வந்த உயர் மட்ட குழுவிற்கு ஒரே குறிக்கேள் தான், நாளை காலை தங்களை கேட்டால் தவறு எங்கள் மீது இல்லை என்று சொல்ல வேண்டும். அத்ற்கு என்ன என்ன வேண்டுமே அந்த செய்திகளை மட்டுமே கேட்டு தெரிந்து கலைந்த வண்ணம் இருந்தனர். என்ன அவரவர் அளவுக்கு ஏற்றார்போல் நீட்டியும், மடக்கியும் கேட்டுவிட்டு போனார்கள்.

மும்முரமாக நிரலில் மூழ்கி இருந்தவனை குழு தலை கலைத்தது, என்ன சரி பார் சரி பார் என்று சொன்னேனே. இப்போ பார்த்தாயா எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டியதாயிற்று. இவனுக்கோ அவை எதுவும் காதில் விழவே இல்லை. நமது பக்கம் தவறு எதுவும் நடந்ததாக தெரியவில்லை பிறகு எப்படி இப்படி நடந்தது என்று தகவல்களை சரி பார்க்கும் போது தான் தெளிவாயிற்று எங்கே இருந்து இந்த பிழற்சி பிறக்கிறது என்று. கண்டு பிடித்ததில், இவனைவிட இவனது குழுத்தலைக்குத்தான் மிகவும் மகிழ்ச்சி.

உடனே எங்கே எல்லாம் தகவல்களை தட்டி சொல்ல வேண்டுமோ அங்கே எல்லாம் தட்டி சொல்லியாச்சு. அவனும் அவனது குழுதலையும் புறப்படும் போது மறுபடியும் உயர்மட்ட குழு அலோசனை நடத்தான் விட்டது. இவர்கள் வெளியே செல்லும் போது அவர்கள் வருவதை பார்த்ததும், குழு தலை நீ போ, நான் இவர்களுக்கு விளக்கிகொள்கிறேப் என்று சொல்ல, அப்பாடா என்று வெளியேறினான்.

ஒரு அரை மணியில் வந்து விடலாம் என்று வந்தவன் திரும்பும் போது இரவு 1:00ஐ தாண்டி இருந்தது. பசியோ வயிற்றை கிள்ளியது. எங்கேயாவது ஏதாவது கிடைகிறதா பார்க்கலாம் என்று சென்றான். பார்த்துகொண்டே வந்ததில் வெகு தூரம் வந்து விட்டு இருந்தான். கிடைத்ததை வாங்கி கொண்டு வீடு திரும்பும் போது மணி 2ஐ தாண்டி இருந்தது.

அவசர அவசரமாக உண்டவன் படுக்க போகும் முன் பார்த்தான், இன்னும் ஒரு தொலைபேசி செய்தி இருக்க. பார்த்தவன், அம்மாவை கூப்பிடுவதாக சொன்னது நினைவுக்கு வர. தொடர்பு கொள்ள, அம்மாவோ என்னபா இன்னமும் தூங்காம இருக்கிற, உடம்பு என்ன ஆகிறது படு நாளைக்கு பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி முடிக்க இருந்த தூக்கமும் தொலைந்தது அவனுக்கு.

என்னவாக இருக்கும் என்ற குழப்பம் ஒரு பக்கம் இருந்தாலும், எல்லாம் விட்டு இப்படி இங்கே வந்து கிடக்கவேண்டிய தேவை தான் என்ன என்று மனம் மறுபடியும் குழப்ப துவங்க. படுக்கையில் தலையை புதைத்துவைத்து கொண்டான்.

தொடரும்.....

வன்முறை ஒரு தொழிலாகுமா - 8

அரசு, அதிகாரம் என்று வந்தால் இருப்பதை காப்பது, வருவதை எதிர்கொள்வது மற்றும் எதிர்காலத்தை மனதில் கொண்டு வளர்சிதிட்டங்களில் ஈடுபடுது தான் முதலானதாகவும் முறையானதாகவும் பார்க்க முடிகின்றது. ஆனால் இந்த பழி தீர்க்கும் வழக்கம் எங்கே இருந்து இத மனித இனத்தில் தொற்றி இருக்கும்.

குடும்பத்துகுள்ளாகவே பார்த்தாலும் கூட அனைவரும் ஒரு மனதாய் சித்திபதும் இல்லை. அனைவரது முயற்சியும் ஒரே நோக்கத்திலோ அல்லது ஒரே தண்மையாகவும் இருப்பதில்லை.

கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடுவதை போல், பானையிலே பங்கு வச்சா பூனைகளும் சொந்தமடா, சோதனையில் பங்கு வச்சா சொந்தமெல்லாம் தூரமடா என்ற வழக்கு தான் நினைவில் வருகிறது. மனிதனாய் பிறந்த அனைவருக்கும் அவன் விரும்புகிறானோ இல்லையோ அவனுக்கு என்று கடமைகள் அவனுடனே பிறந்துவிடுகிறது.

அந்த கடமைகளை எவ்வளவு தூரம் நிறைவேற்றுகிறார்களோ அவ்வளவு முக்கத்துவம் பெறுவார்கள் அவர்களது குடும்பத்தில். தலைபிள்ளை தான் அனைத்திற்கும் பொறுப்பு என்று சொல்லி அவனிடமே எல்லாவற்றையும் எதிர்பார்ப்பது நமது இந்தியர்களுக்கு பழகிபோன ஒன்று. அப்படி அவனும் அவனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கருதி, எல்லா வகையான கடமைக்கும் தன்னை ஆட்படுத்திகொண்டு செவ்வனே செய்து முடிப்பதையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றோம்.

அப்படி தலைபிள்ளை சரியாக தலை எடுக்கமுடியாத போது அடுத்து யார் பொறுப்பாக இருக்கிறார்களோ அவர்களிடன் அந்த கடமைகள் செல்வதையும் பார்த்துக்கொண்டு தான் வருகின்றோம். அப்படி தன்னையும் மீறி தனது பதவி செல்கிறதே என்று எந்த குடும்பதிலாவது தலைபிள்ளைகள் சண்டைக்கு நிற்பதில்லை. அங்கே அவனால் முடியாத போது அடுத்தவனிடம் பதவி செல்வதை இவன் ஏற்றுக்கொள்வது அதற்கு காரணம்.

இந்த நிலைக்கும், ஆட்சி, அதிகாரம் இவைகளிலும் பதவி இடம் மாறுவதும் அப்படியே. பொதுவில் வேறு எந்த மாற்றமும் இருக்க முடியாது. இன்றைக்கும் கூட அண்ணன் தம்பி சண்டையில் அண்ணம் பக்கம் இவ்வளவும், தம்பியின் பக்கம் இவ்வளவும் என்று கொல்லப்படுவதையும் தான் பார்க்கிறோம். காரணம், தனக்குத்தான் பதவியும் பட்டமும் வரவேண்டும் என்று உரிமை கொண்டாடுவதுடன் நில்லாமல். அதை எதிர்க யாரும் இருக்கக்கூட கூடாது என்று செயல்படுவது தான் காரணம்.

இந்த நிகழ்வைத்தான் தேவர் மகன் திரைபடத்தில் அருமையாக படம் பிடித்து காட்டி இருப்பார்கள். ஊரே மதிகின்றது என்றால் மதிக்கும் படி இருக்கவேண்டும். அப்படி எதுமே செய்யமுடியாது, ஆனால் என்னை தான் அனைவரும் போற்றவும் பாராட்டவும் வேண்டும் என்றால் எப்படி.

தான் தேடும் பதவியின் கடமையறிந்து அவைகளில் பழக்கம் பெற்று அனுபவசாலி ஆன பிறகு போட்டி இட்டால் யார் வேண்டாம் என்று சொல்லப்போகிறர்கள். அதை விடுத்து, எடுத்தேன் கவிழ்தேன் என்று நான் தான், தான் என்றும் அறிக்கை விடுவதும். பணத்தை இறைத்து சாட்சிகளையும், வாக்குகளையும் விளைக்கு வாங்கியும் பதவிக்கு என்று வந்து நிற்போரை என்ன என்று சொல்லவது.

அப்படி கள்ளத்தணமாக பதவிக்கு வரும் நபரால் நாட்டுக்குத்தான் என்ன நன்மை விளைய போகுது. போன ஆட்சியர், கருவூலத்தை காலி செய்துவிட்டு போய்விட்டனர் அதனால் எல்லோரும் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக்கொண்டு அலையுங்கள். இதை என்னை தேர்ந்தெடுத்தர்கான கசப்பு மருந்தாக நினைத்து கொள்ளுங்கள் என்று புலம்புவதையும் பார்த்து வருகிறோம். முதல் 4 ஆண்டுகளில் எதையுமே செய்யாமால், வருகின்ற பொருள் செலவே ஆகிவிடக்கூடாது என்று இருந்த அரசு. பிறகு வந்த ஓராண்டில் 4 ஆண்டு சேமிப்பையும் கொட்டி கவிழ்த்ததுடன், வந்த தேர்தலில் பொய்யும் புரட்டும் ஆக புலம்பி தீர்த்ததையும் பார்க்க முடிந்தது.

ஆக மொத்தம் திறமையும், உழைப்பும் இல்லாத இடத்தில் தான் இந்த வித காழ்ப்புகளும், வன்முறைகளும் பிறக்கிறது என்று கொள்வோமா.

இப்படி பதவிகளும் பட்டங்களும் பெறும் மக்களால் எப்படி முறையாக நடந்துகொள்ள முடியும். என்ன செய்யவேண்டும் என்றே தெரியாது பிறகு எப்படி அரசு நடத்துவார்கள். நீட்டும் இடங்க்களில் பச்சை மையில் கையொப்பம் மட்டும் இட்டால் மாட்டும் போதுமா. எதற்காக என்றாவது குறைந்த பட்சம் தெரியவேண்டாம்.

இப்படி குறுக்குவழியில் வரும் அனைவரும் தான் வந்த பாதை போல் வேறு எவரும் வந்துவிட கூடாது என்று எச்சரிக்கையாக இந்த தாக்குதல்களை எடுக்கிறார்கள். இவைகளை ஒரு வரியில் சொன்னால் முடியாது. விளக்கமாக தருகிறேன்.

தொடரும்...................

Friday, December 21, 2007

வன்முறை ஒரு தொழிலாகுமா -7

ஆக ஆட்சி, அதிகாரம் இவைகளில் இருப்பவர்கள் மற்றவர்களை திறமையாக வேலை வாங்க வேண்டும். அது மட்டும் அல்லாது எப்படி பட்ட நிலைமை வந்தாலும் அந்த நிகழ்வுகளுக்கு தகுந்தது போல் செயல்பட்டு நிலைமையை சீர் செய்யவேண்டும். அந்த நீண்ட பட்டியலை பார்கையில், இப்படி ஒரு அமைப்பு ஏன் தோன்றியது என்ற காரணத்தை புறம்தள்ள வேண்டியதில்லை.

பொதுவாக ஆளுபவருக்கும் ஆளப்படுபவருக்கும் உள்ள ஆளுமை எவ்வளவு என்று பார்ப்போம்.

ஆளப்படுபவன் விரும்பும் வரையில் தான் ஆளுபவரின் ஆளுமை அவரிடம் செல்லும். ஆளப்படுபவனுக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டு விடவேண்டும் அவ்வளவு தான் தவிற வேறு விதியே இல்லை என்றெல்லாம் இல்லை. எந்த ஒரு மக்களாட்சி நாட்டிலும் இப்படி தான். மக்களாட்சி முறை மனிதனின் தனி சுதந்திரத்தை போற்றி பாதுகாப்பது இப்படி தான்.

ஒரு குமுகாயமோ அல்லது நாடோ, இந்த தனி மனிதர்களின் தொகுப்பு. அப்படி இருக்கும் போது, அத்தனை மக்களின் எண்ணங்களுக்கும் மதிப்பளிக்கும் விதமாக ஆட்சி அதிகாரம் இருக்கவேண்டும். ஆனால் அப்படி செய்வது இயலாவது காரியம். ஆதலால், பெரும்பான்மை மக்கள் என்ன விரும்புகிறார்களோ அவைகளை பொதுக்கொள்கையாக கொள்ளுவது செயலாக்கத்துக்கு வந்தது.

பின்னாளில் இதுவே, ஒரு கட்சியின் விருப்பத்தை எதிரொலிக்கும் ஆட்சியாகவும் மாற்றம் பெற்றவரையிலும் சரி. ஆனால் தற்பொழுது உலக அளவில், தனது விருப்பம்மாக மட்டும் இருந்தால் போதாது இந்த ஆட்சி அதிகாரம். மாறாக தனக்கு பிடிக்காதவைகளுக்கு எதிராகவும் வேண்டும் என்று வந்து நிற்கிறது. உதாரணமாக இலங்கையை எடுத்துக்கொள்வோம், இந்தியாவை தாரளமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இன்னம் சில விளக்கங்க்களுக்கு பிறகு இந்தியாவை பார்ப்போம்.

தனது மக்களுக்குத்தான் எல்லாம் என்று நின்று இருந்தால் பரவாயில்லை. ஆனால் எல்லாம் எனக்குமட்டும் தான், தன்னை தவிற பிறகு யாருக்கும் எதுவும் கிடைத்து விடக்கூடாது என்ற பொழுதில் அல்லவா ஆயுத போராட்டம் வரை அவர்களை செயலாற்ற வைத்துள்ளது.

ஆட்சியும் அதிகாரமும் எதற்காக, குமுகாயத்தில் இருக்கும் மக்களின் நலங்களையும், பாதுகாப்பையும் உறுதி படுத்துவதும். அந்த மக்களின் முன்னேற்றத்தையும் வளர்த்து, முன்னால் இருந்ததை விட அதிகம் முன்னேரிய மக்களை அந்த குமுகாயத்தில் விட்டு செல்வது தான் ஒரு ஆட்சியின் கடமை.

இதை ஒரு குடும்பம் கொண்டு விளக்கினால் நன்றாக இருக்கும். ஒரு கூலித்தொழிளர் குடும்பத்தில், அவர் அவரது பிள்ளைகளை கட்டாயம் தன்னை போல ஒரு தொழிளாலியாக வரவேண்டும் என்று நினைக்க மாட்டார். மாறாக தனக்கு மேல் பணியாற்றும் அலுவராகவாது பிள்ளை வரவேண்டும் என்று. திட்டமிட்டு பொருள் சேகரித்து, தேடித்தேடி அனைத்தை பிடித்து பிள்ளைகளை வளர்த்து எடுத்து. தனது அந்திம காலத்தில், தான் நட்ட மரம், இன்று காயும் கனியுமாக இருப்பதை பார்த்து கொண்டாடிவிட்டல்லவா செல்வார்.

இது எந்த பொருளாதாரத்தில் இருக்கும் குடும்பத்திற்கும் பொருந்தும். ஒரு குடும்பத்திலேயே இத்தகைய முன்னேற்றங்களை ஒரு தனி மனிதனால் உருவாக்க முடியும் என்றால். ஒரு ஒட்டு மொத்த குமுகாயத்தையும் ஆளுவோருக்கு எவ்வளவு கடமைகள் இருக்கும். தனது ஒரு வருவாயை மட்டுமே வைத்து இவ்வளவு முன்னேற்றத்தை ஒரு தனி மனிதனால் உருவாக்க முடியும் என்றால். ஒரு நாட்டினுடைய வருமானத்தை கொண்டு என்ன எல்லாம் சாதித்து காட்டமுடியும்.

சொல்லப்போனால், நாட்டின் ஒவ்வோரு மனிதன் ஈட்டும் பொருள் அரசாங்கத்தின் வருவாயே. அந்த மொத்த வருவாயையும் கொண்டு அரசு இயந்திரத்தை நடத்தி மீதம் இருக்கும் பொருளில் மக்களுக்கு வேண்டிய திட்டங்களை கொண்டு, பெற்ற பொருளை மக்களுக்கே திரும்ப கொடுத்து இன்னமு அதிகமாக அவர்களை பொருளீட்ட வைத்து. முதலில் கிடைத்ததைவிட அதிக வருவாயை கிடைக்க செய்வது யார் ஆட்சியில் இருந்தாலும் செய்யவேண்டிய கடமைகளில் ஒன்று.

ஆனால் இன்றைக்கு என்ன நடந்துக்கொண்டு இருக்கிறது...........

தொடரும்........

Thursday, December 20, 2007

கலைஞருக்கு என்னை கண்டு பயம் - திருவாளர் நடராசன்

"கலைஞருக்கு என் மீது இருப்பது ஒருவித பயம் கலந்த நட்பு....நடராசன் எதை செய்தாலும் சரியாத்தான் செய்வான். நம்மை எதுவும் செய்யாமல் இருந்தால் போதும்! என்று நினைத்து. ரொம்ப கவனமாக பயத்துடனே என் செயல்பாடுகளை அவர் கவனிப்பார். இது அச்சம் கலந்த நட்பு. இது சில முண்டங்க்களுக்கு தெரியவில்லை"

குமுதம் இரிப்போர்டர் பத்திரிக்கையில் வந்த செய்தி இது.

தன்னிடம் கொஞ்சம் காசும் அதை அள்ளிக்கொடுக்க மனமும் இருந்தால் போதும். பத்திரிக்கைகளை இப்படி என்ன, மனமோகன் சிங்குக்கு என்னை கண்டால் ஓடோடி ஒலிந்துகொள்வார். அமெரிக்க அதிபர் மேல் அங்கியை கழட்டி கக்கத்தில் வைத்துக்கொள்வார். ஐரோப்பா கூட்டமைப்பு தினமும் என்னை கேட்டுத்தான் தனது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இப்படி என்ன வேண்டுமானாலும் எழுத வைக்கலாம் போலும்.

கேப்பையில் நெய்வடிகின்றது என்றால் கேட்டு எழுதுபவனுக்கு எங்கே போனது என்று தெரியவில்லை. எவ்வளவு கொட்டிக்கொடுத்தானோ தெரியவில்லை இந்த பத்திரிக்கைக்கு நடராசன். அது சரி அவனது பணமாக இருத்தால் தானே கவலை கொள்ள கதை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு என்று சொல்வார்களே அந்த மாதிரி. தங்கத் தாரகை விருதை போல இருக்கிறது இதுவும்.

குமுதம் பத்திரிக்கையே இன்னமும் இது போல் நிறைய பிதற்றல்களை எழுதவும். இலவச சேவையாக இருந்தால், கீழ்ப்பாக்கம் பக்கம் சென்றால் இன்னமும் இதைவிட அதிக பிதற்றல்கள் கிடைக்கும் நீங்களும் கவர்சி தலைப்புகளுடன் வெளியிடலாம். வாழ்த்துக்கள்.......

வன்முறை ஒரு தொழிலாகுமா - 6

அதிகாரமும், ஆட்சியும் ஏன் இப்படி ஒரு முகம் கொண்டுள்ளது. அதிகாரம் ஆட்சி என்றாலே இப்படி தான் இருக்கும் என்று கொள்ளலாமா. ஆட்சி, அதிகாரம் இவை இரண்டிலும் அடுத்தவர்களை ஏவி வேலை வாங்குவது மட்டுமே வேலை. அதோடு மட்டும் அல்ல, தன்னை சார்ந்து இருக்கும் மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதும் இதில் ஒரு பகுதி.

உள்ளபடி பார்த்தால், அடுத்தவர்களை ஆட்டுவிக்கும் ஒரு பொம்மலாட்ட கலைஞர்கள் அவர்கள். இந்த செயலுக்கு இரண்டு முகங்கள் உண்டு, நல்லதும் கொட்டதுமாக.

நல்லவை என்றால், இருக்கின்ற வேலைகளை மக்களிடம் பகிர்ந்துதளித்து விரைவில் முடிப்பது. இதிலே ஒரு வேலையை எப்படி எவர் கொண்டு முடிப்பது என்று தெரிந்துதளித்து கையாளுவது ஒரு தனி திறமை.

கெட்டவை என்றால், அதிகாரம் இருக்கிறது என்ற காரணத்தால், அடுத்தவர்களை தன் விருப்பத்திற்காக அவர்களது விருப்பமோ உடன்படோ இல்லாவிட்டாலும் கூட செய்யவைத்து கட்டாயப்படுத்துவது. இதிலே எல்லா விதமான விதி மீறல்களையும் கொள்ளலாம்.

அதிகாரத்தில் அமர்ந்த முதலில், மிகவும் கடமை பாராட்டும் நபராக மட்டுமே இருப்பவர்கள் பின்னாளில் ஏன் இப்படி வக்கிரம் பிடித்தவர்களாக மாறுகிறார்கள். எதை அவர்களை அப்படி தூண்டுகிறது என்று முதலில் பார்ப்போம்.

அடுத்தவரை வேலை வாங்குவதில் இருக்கும் சிக்கல்கள்

1) அவர் சொல்லும் (ஏவும்) வேலையை செய்துமுடிக்க உடன்பட வேண்டும்
2) அப்படி செய்ய்யும் செயலில் அனுபவம் கொண்டவராக இருக்கவேண்டும்
3) வேலைகளில் இருக்கும் சந்தேகங்கள் அல்லாமல் வேலைகளை பற்றி கேள்வி கேட்க்காமல் செய்து முடிப்பது
4) பொதுவாக இந்த மாதிரியான வேலைகளுக்கு என்ன வெகுமதி கிடைக்குமோ அவைகள் அல்லாமல் வேறு எதும் கேட்டாமல் இருப்பது
5) எப்போது, என்ன நிலைமையில் வேலைகள் கொடுத்தாலும் முடிக்க முன்வருவது மற்றும் முடிப்பது

இப்படி பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம்.

அப்படி தொகுத்துப்பார்த்தால், என்ன தான் நீதியாக இத்தனை நாள் தெரிந்து வந்தாலும் இவைகளில் ஒரு விதமான அடிமைத்தனம் இருப்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

எவ்வளவு தூரம் வேலை பார்ப்பவர்களுக்கு தேவைகள் இருக்கிறதோ அவ்வளவு தூரம் அவர்களது அடிமை போக்கு நீளும். அதன் நீட்சியாகத்தான், வேலைகளின் தொடர்பையும் மீறி இவர்களது உறவு அதிகாரவர்கங்களோடு இருப்பதை பார்க்க முடியும். இதை தான் இன்றைய நாட்களில் சொம்பு தூக்குவது, அய்சு வைப்பது, சால்ரா அடிப்பது, தூக்கு தூக்கி, இளித்துக்கொண்டு அலைவது, அல்லைகை, பார்க்கும் இடங்களில் எல்லாம் காலில் விழுத்து வணங்குவது, தேவைக்கு மிகுதியாக அதிகார வர்கத்தை புகழ்வது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

வீட்டிலே கூட சொன்ன பேச்சை தட்டாமல் கேக்கும் பிள்ளைக்கு இருக்கும் மரியாதை திமிர் பிடித்த குழந்தைக்கு தாய் அல்லாமல் மற்றவரிடத்து இல்லாமல் இருப்பதை சாதரணமாக பார்க்கமுடியும். மனிதர்கள் அனைவரும் பொதுவில் அப்படிதான். பெற்றோரிடம் இப்படி இருப்பதை பாசத்தின் நீட்சி என்று எடுத்து கொண்டாலும். தனக்கும் வேலைக்கும் தவிற வேறு எதுக்குமே தேவை படாத 3வது நபரை பெற்றோருக்கும் மேல் என்று நடத்தவேண்டிய அவசியம் என்ன இந்த விதமான நபர்களுக்கு................

தொடரும்......

Wednesday, December 19, 2007

வன்முறை ஒரு தொழிலாகுமா - 5

அதிகாரத்தை விட்டுக்கொடுப்பது எளிதான செயலில்லை தான். இருந்தாலும் எதற்குமே ஒரு முடிவு உண்டு, அப்படி முடியும் கால் அடுத்து அந்த அதிகாரத்தை கைபற்றுவது யார் என்ற போட்டியும் விரும்பதகாத காரியங்களும் நிகழ்வதும் உண்டு. உதாரணத்திற்கு இராமாயண பாரதத்தில் துவங்கி உண்மையாக நடந்த்த நலங்கிள்ளி வரலாறுவரை எடுத்துகொள்ளலாம்.

இராமனுக்கு அரச அதிகாரம் இல்லை சரி, பிறகு காட்டுக்கு சென்று வாழவேண்டும் என்ற உத்தரவு எதற்கு. பாண்டவர்கள் தங்களது அதிகாரம் முதல் மனையாள் வரை சூதாட்டதில் தோற்றார்கள் சரி, பிறகு எதற்கு நாட்டைவிட்டு காட்டுக்கும், பிறகு எங்கே இருக்ககிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஒரு தலைமறைவு வாழ்க்கையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டளை.

இன்னமும் இப்படி எத்தணையோ உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி வரும் உதாரணங்களை ஆய்ந்தோமானால், பொதுவாக ஒரு செய்தி தெரியும். அதிகாரத்தில் இருப்பவர்கள் விலக மறுப்பதும். அதிகாரத்தில் இல்லாதோர் அதிகாரத்தை அடைய என்ன எல்லாம் செய்யமுடியுமோ அவைகள் அனைத்தும் செய்து பார்ப்பதையும் பார்க்கமுடியும்.

இதில் இதைவிட கொடுமை, அதிகாரத்தில் வரும் புது குழு அல்லது நபர். தனக்கு முந்தைய அதிகார குழுவை படுத்தும் பாடுதான் நாடு கடத்தியல் இருந்து கொலைவரை சென்று நிற்கின்றது.

அவர்கள் தான் இப்போது பதவியில் இல்லை, பிறகு அவர்களை ஒட்டு மொத்தமாக ஒழிக்கவேண்டும் என்ற தேவை எதனால் இவர்களுக்கு வருகின்றது. அவர்களும் இதே தேசம், பூமியில் தான் வார்ழ்கிறார்கள். அதிகாரத்தை இழந்த உடன் அவர்களை, அவர்களது சொந்த தேசத்தைவிட்டோ அல்லது உலகத்தைவிட்டோ மன்னர்கள் அனுப்பி வைத்ததன் காரணம். முன்னாள் மன்னனது விசுவாசிகள், அவரின் வாரிசுகளை கொண்டு வந்து தங்க்களுக்கு எதிரான ஒரு கருத்தாக்கத்தை மக்களின் மனதில் விதைத்துவிட்டால், இத்தணை ஆண்டு காலம் ஆண்ட மன்னனிடமே நாட்டை கொடுத்தால் என்ன என்று இன்னாள் மன்னனுக்கு எதிராக மக்கள் செயல்பட துவங்கினால் என்ன செய்வது செய்வது என்ற அச்சம். அச்சத்தின் துவக்கமாக நம்பாமை, நம்பாமையின் துவக்கமாக, இவர்கள் பிறருக்கு செய்துவந்த துரோகங்கள் என்று ஒரு சங்கிலி தொடராக செல்லுவதை நோக்கமுடியும். மொத்தத்தில் தனது மேலும், தன்னை சார்ந்தவரின் மேலும் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லாமல் இருப்பவர்களது செயலாக அது தெரிகிறது.

ஆட்சி அதிகாரம் என்று இருப்பவர்கள் அனைவரும் இப்படி தான் இருப்பார்களா. அல்லது ஒரு சிலர் மட்டுமே இப்படி இருப்பார்களா?

அமெரிக்காவின் இரட்டைகோபுர தகர்ப்புக்கு பிறகு சவுதி அரேபியாவின் மன்னர் தொலைகாட்சியில் பேட்டி கொடுக்கிறார். அதில் அவர் சொன்ன செய்தி இந்த உகத்தில், உங்களுக்காவது பதவி போனால் உயிராது மிஞ்சும், ஆனால் எங்களுக்கு பதவி போனால் குடும்பம் கூட மிஞ்சாது என்று உலகத்தார் முன்னிலையில் போட்டு உடைத்தார் பார்க்கனும்.

ஆட்சி அதிகாரத்தில் மட்டும் இல்லை இந்த சண்டையும் சச்ரவுகள். வீட்டில் தொடங்கி, காடுவரை அனைதிலும் உண்டு. சாதாரண வரப்பு தகராரில் இருந்து நாட்டு எல்லை வரை இது நீளுவதையும் பார்க்கமுடியும்.

அக்கம் பக்கத்து மாநிலத்து மக்களையும், ஆட்சியர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டுவது. பிறகு அதனால் ஏற்படும் அரசியல் விளைவுகளில் குளிர் காயுவதும் தற்பொழுது வழக்கமாக நடப்பதை பார்த்தும் வருகின்றோம்.

மொத்தத்தில் அரசியல்வாதிகளால் இவ்வளவு இடர்பாடுகள் தோன்றுவது ஏன்?...............

தொடரும்..............

Tuesday, December 18, 2007

வன்முறை ஒரு தொழிலாகுமா - 4

அரசியலும் அரசியல்வாதிகளினது செயல்களை பார்கலாம். குமுகாயம் உருவாக தொடங்கி காலத்தில் சக்தி வாய்ந்தவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் யாராலும் எதுவும் செய்துவிட முடியாது என்று தான் இருந்திருக்கும். பின் நாளில் இதற்கு தீர்வாக குமூக பாதுகாப்பு குழுவை உருவாக்கி எல்லோருக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இப்படி ஒரு அமைப்பு உருவாகும் போது அந்த அமைப்புக்கு கட்டளை வழங்கவும், கட்டுப்படுத்தவும் அதிகாரங்களை தலைமை பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் நபருக்கோ குழுவிற்கோ கொடுத்து இருக்கவேண்டும். தற்பொழுது நடைமுறையில் இருக்கும் ஊர் தலைவர்கள் போல.

இப்படி அதிகாரம் ஓரிடத்தில் குவியும் போது, அந்த அதிகாரம் என்றைக்கும் தவறான முறையிலோ அல்லது சொந்த காரியங்களுக்கு பயண் பட்டுவிடக்கூடாது என்று அப்படி ஒன்று நடக்கும் வரையிலும் யாருக்கும் தெரிந்திருக்க வாய்பில்லை தான். ஆனால் அப்படி ஒன்று நிகழும் போது, யாரிடம் சென்று முறையிடுவது.

குமுகத்தில் நிகழும் கொடுமைகளை களைய உருவாக்கப்பட்ட பாதுகாப்பணி, இப்படி ஒரு பாதகத்தை நிகழ்த்தும் போது வேறு எங்கே சென்று முறையிட முடியும் அவர்களால். பிறகு இந்த மாதிரி ஒரு இக்கட்டான சூழல் உருவாகும் போது அதை எப்படி எதிர்கொள்வது என்று பார்க்கும் போது. அதிகார குழுவின் எல்லைகளும், எல்லைகள் மீறபட்டும் போது எப்படி சூழல்களை மாற்றி அமைப்பது என்று வழிவகைகள் தேர்ந்தெடுத்து செயலாக்கும் முறையையும் அறிவித்து செயலாற்றி வந்திருக்கவேண்டும்.

இப்படி சிறியதாக தோன்றியவைகள் பின் நாளில் பெரும் அரசியல் அணியாக விரிவடைந்திிருக்க வேண்டும். தமிழ் வரலாறுகளும் சரி இன்ன பிற வரலாறுகளும் சரி, ஒரு அரசாட்சியை பிடித்தால் அதை தொடர்ந்து அங்கே அவர்களது ஆட்சி நிலைத்து நிற்க என்ன என்ன செய்யவேண்டுமோ அவைகள் அனைத்தும் ஒரு பட்டியலிட்டு நிறைவேற்றுவார்கள். அதிலே மனிதத்தை காணமுடியாது.

முடியாட்சி ஆகட்டும், இல்லை மக்களாட்சி ஆகட்டும். இரண்டிலும் இருக்கும் ஒரு ஒற்றுமை அதிகாரமும், அந்த அதிகாரத்தின் மையமாக ஒருவரே செயல்படுவது தான்.

அப்படி இருக்க 2க்கும் என்ன வித்தியாசம், முடியாட்சி ஒரு எதிரி வந்து வீழ்த்தும் வரையில் அதிகாரத்தில் இருக்கும். ஆனால் மக்களாட்சியோ மக்கள் விரும்பும் வரைக்கும் ஆட்சியில் இருக்கும். அதாவது மக்கள் கூடி எடுக்கும் முடிவுக்கு ஆட்சிக்குழு கட்டுபடவேண்டும். மக்கள் எப்படி கூடி முடிவெடுப்பார்கள், அதைத்தான் தேர்தல் என்று அழைக்கின்றோம்.

என்ன அருமையான ஒரு ஏற்பாடு மக்களாட்சி...........

தொடரும்.........

Saturday, December 15, 2007

சத்தம் போடாதே

நம்பிக்கை தோற்றுவிக்கும் விதமான ஒரு கதையை படமாக கொடுத்த வசந்துவிற்கு வாழ்த்துகள். துவக்கம் முதல் ஒரு இருகமாக செல்லும் படம் பிருத்துவிராசன் வருகைக்கு பிறகு முன்னே பார்த்தவைகள் மறந்தே போகின்றது. கேரளத்து நடினாக இருந்தாலும் தமிழ் நகைசுவையில் விளையாடுகிறார் மனிதன்.

திருமணத்திற்கு பிறகு இப்படி ஒரு குறை எனக்கு இருப்பதாக தெரியவந்து, அவர் என்னை ஒதுக்கி இருந்தால் நமக்கு எப்படி இருக்கும் என்ற வசனதில் அந்த பாத்திரத்தின் பண்பை விளக்கிவிடுகிறார் இயக்குனர்.

தோற்றத்திற்கும் நடத்தைக்கும் தொடர்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முதல் கனவனை கொண்டு அழகாக உணர்த்தி இருக்கிறார் இயக்குனர். ஆனால் கோர்வையாக பொய் மேல் பொய் சொல்வதும், 6 மாத காலம் கடந்தாக காட்டுவது நம்பும்படியா இல்லை.

பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் பாடலை தவிற்து, பின்னனி இசையோ, மற்ற பாடலோ மனதிலே நிற்கவில்லை. பொதுவாக இந்த மாதிரி படங்க்களுக்கு பின்னனி இசை எவ்வளவு அவசியம் என்று அடுத்தவர் சொல்லி தெரியும் நிலையில் யுவனோ, வசந்தோ இல்லை. இருப்பினும் இப்படி கோட்டை விட்டிருப்பது அவர்களுகு தான் குறையே தவிற நமக்கு அல்ல. இராம் படத்தில் இருக்கும் பின்னனியில் ஒரு 20 சதவிகதமாக கொடுத்து இருக்கலாம்........

பானுவின் வீட்டாறாக வருவோரும், இன்ன பிற கலைஞர்களை விரல் விட்டு கணகெடுத்து விடலாம். தேவைக்கு அதிகமான அரங்க அமைபோ, வீரம் காட்டும் விதமாக ஏக வசனமோ, கோடிகளில் அட்டை பெட்டி குப்பைகளை கொட்டி அதன் நடுவே ஒரு 100 ஆட்க்களை ஆட வைத்து பின்னனியில் வயிற்று வலியில் இரகுமான் கதறும் மற்றும் முக்கும் பாடல்கள் போல் இல்லாமல். அழகாக அளவாக படம் எடுத்தமைக்கு வசந்துவிற்கு பாராட்டுக்கள்.

நகைச்சுவை என்ற பெயரில் தனி மனித தாக்குதலோ, தனி மனித குறைகளை கேளி செய்யும் விதமாக இல்லாமல். நகைச்சுவையில் பானு சிரிக்கும் போது நமக்கும் சிரிப்பு வருவது இயக்குனரின் இன்னும் ஒரு தனி சிறப்பு.

வெற்றிக்கு பிறகு எத்தணையோ வீர வசனங்களை நாயகன் பேசி இருக்க வேண்டிய இடங்களில் ஒரு புன்னகையோடு நிறுத்தும் தைரியம் வசந்துக்கு மட்டுமே. இதிலே பாலசந்தரரை நினைவூட்டுகிறார் நமக்கும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.

படத்தில் இருக்கும் பலம் நல்லவை தான் வெற்றிகொள்ளும், பலவீனம் தனது குறைகளை எவ்வளவு வாக்குறுதிகள் கொடுத்தாலும் யாரிடமும் சொல்ல கூடாது போலும் என்று காட்டி இருப்பது. தவிற்து இருக்கலாம் இதையும் அந்த கடைசி காட்சியையும். குணா, சேது, பிதாமகன் இப்படி கதைகளை போட்டு குழப்பிக்கொண்டார் போலும்.

வாழ்த்துகள் வசந்து, உங்களிடம் இன்னமும் இது போல் நிறைய எதிர்பார்க்கிறோம். கொடுத்து அசத்துங்கள்...

Thursday, December 13, 2007

வன்முறை ஒரு தொழிலாகுமா - 3

பொதுவாக நீதிக்கு புறம்பாக செயல்கள் அரங்கேறும் போது யாராக இருந்தாலும் கோபம் வருவது இயற்கையே. அப்படி கோபம் கொள்ளும் மனிதர்கள் அனைவரும் நீதிக்காக போராட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அவர்களது நிலைமைகளுக்கு ஏற்றவாரு நடவடிக்கைளை மேற்கொள்ளுவதும் இயல்பு. இது அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் காணக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வு.

அப்படி தட்டிக்கேட்கிறேன் என்று வாங்கிகட்டி கொள்வோர் தான் அதிகம். ஒரு சில பேர் மட்டும் நிலைமைக்கும் அப்பால் செயல்பட்டு நிற்பதை காண நேர்கிறது. உதாரணத்திற்கு இந்தியன் விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முற்படும் போது, உள்ளே இருந்த பயணிகளில் ஒருவரான இராணுவ தலைவனாக பணியாற்றி பணிவிடை பெற்று வெகுகாலம் ஆன போதிலும் அன்று துணிவுமிக்க ஒரு சிலரது துணையுடன் அந்த விமான கடத்தலை தவிற்து கொடுத்த கபில் தேவ் போல் சிலரை உதாரணமாக கொள்ளலாம்.

ஆனால் பெரும்பாலான மக்கள் இந்த நிலைமையில் தப்பித்து போனால் மட்டுமே போதும் மற்றபடி வேறு என்ன நடந்தாலும் தனக்கும் நடப்பவைகளுக்கும் சம்பந்தமே இல்லை என்று இருப்பதை பொதுவாக எங்கேயும் காணமுடியும். நடப்பது சகிக்கவே முடியாத கொடுமையாவே இருந்தாலும் இப்படித்தான் எதிர்கொள்வார்கள். குறிப்பாக சொன்னால், பக்கத்து வீட்டில் கூறை எரிந்தாலும் தண்ணீரோடு தயாராக இருப்பார்கள் தீ தனது வீட்டிற்கு வந்ததும் ஊற்றி அனைக்கலாமே என்று.

இந்த கல் நேஞ்சம் அனைவருக்கும் வந்த காரணம் தான் என்ன.

எனக்கு தெரிந்தவரை சிறு வயது முதல் கல்லூரி முடிக்கும் வரை அனைத்து விதமான கல்விகளிலும் நீதிக்கு எதிராக நடக்கும் செயல்களுக்கு பாரதி சொன்ன "மோதி மிதித்து விடு பாப்பா" என்ற வாசகத்தை தான் கொடுத்தது, இன்று கொடுத்துக்கொண்டு இருக்கிறது ஆசிரிய குமுகாயம். இந்த பாதிப்பு அதிகமாக இருப்பதினால் தான், மாணவர்களது போராட்ட குணம் தீபொறி தெரிக்கும் போராட்டமாக இருக்கும். மாணவர்கள் கூடி இருக்கும் இடத்தில் ஒரு பிணக்கு என்றால், எளிதில் விட்டு விட மாட்டார்கள் அவர்கள்.

இவர்களது போராட்டத்தை ஊடகங்களும் சரி, காவலர்களும் சரி ஒரு தீய செயலாக எடுத்துகொள்ளுவதும் இல்லை தூற்றுவதும் இல்லை. இதை தற்பொழுது நடை பெற்ற மருத்துவ மாணவர்கள் போராட்டம வரை பார்த்து இருக்கின்றோம். போராட்டத்தில் அவர்கள் கொள்ளும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் காவலர்களுக்கு அதிக வேலைகளை கொடுப்பது இல்லை. சில வேளைகளில் நிலைமை கையை மீறி செல்வதும் உண்டு அண்ணாமலை இராசேந்திரன் போல்.

ஐந்து வயது முதல் 21 அகவை வரை, நீதி, நேர்மை, ஒழுக்கம், குமுகம் என்று இருந்த இவர்கள் தான் பின் நாளில் இந்த தவிற்தலில் ஈடுபடுகிறார்கள். தவிற்க என்ன என்ன காரணங்கள் வேண்டுமோ அவைகள் அனைத்தும் இவர்களுக்கு தெரியும்.

இந்த மாற்றத்திற்கு என்ன காரணம், எது இவர்களை இப்படி மாற்றம் கொள்ள செய்கின்றது. 21 அகவை வரை இருந்த தைரியம் காணாமல் போகும் காரணம் என்ன..............

தொடரும்.................

Wednesday, December 12, 2007

வன்முறை ஒரு தொழிலாகுமா-2

சட்டமும், காவல்துறையும் இந்த மாதிரியான வன்முறையாளர்களை அடக்க முடியாத அளவிற்கு என்ன பெரிய வீரர்களா அவர்கள். ஒரு பகுதிக்கு என்று இருக்கும் காவலர்களது எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரும் சேர்ந்து செயலாற்றும் போது நாடுமுழுவதும் உள்ள சந்து பொந்துகள் எல்லாம் இருந்த இடத்தில் இருந்தே உளவு பெறவும், நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனும் அந்த படைக்கு உண்டு.

இவைகளை போல நாட்டை விட்டே ஓடினாலும் இண்டர் போல் அமைப்புகள் மூலம் வலைவீசும் வலியும் அவர்களுக்கு உண்டு. இராணுவம் நாட்டை சுற்றியும், காவலர்கள் நாட்டின் உள்ளேயும் என்று அவர்களது படையணிகளுக்கு ஈடாக செயல்படக்கூடியவர்கள்.

பார்வைக்கு எளிதாகவும், அடுத்தவர்களை எளிதில் பேசவைக்கும் அவர்களது திறனும் அவர்களுக்கு என்று மட்டுமே இருக்கும் தனி திறன்கள். இவை எல்லாவற்றையும் விட அவர்களுக்குள் இருக்கும் அந்து உள் உந்துதல். பார்க்கும் விடயங்களை கொண்டு முன்னால் கொண்ட விடயங்க்களோடு எளிதில் தொடர்புபடுத்தி கோர்வையாக்கி அனுமானம் பெரும் விதமே தனி, அதற்கு எல்லாம் கவிஞர்களை மிஞ்சிய கற்பனை திறனும் ஆற்றலும் வேண்டும் அவர்களைப்போல்.

இப்படி தனி தகுதிகளும் திறமைகளும் உள்ளடக்கிய காவலர்களை, ஊடகங்களும் சரி, அரசியல் கட்சிக்களும் சரி கோமாளியாக பொதுமக்களுக்கு சித்தரித்து காட்டுவது தான் மிகவும் வேதனையான விதயம்.

பொதுவாக திரையில் காட்டும் காட்சி இது, காவலர்கள் வருவார்கள். கையூட்டு பெறும் பொருட்டு கைகட்டி நிற்பார்கள். அவர்கள் வீசும் வசவுகளையும் ஏச்சு பேச்சுகளையும் கடமையே என்று கேட்டுவிட்டு, விட்டேறியும் பொருளை எடுத்துக்கொண்டு செல்வதாக காட்டினார்கள், காட்டுகிறார்கள், காட்டுவார்கள். உதாரணத்திற்கு தற்பொழுது வெளியாகி படமான மறுதமலை படத்தை எடுத்துக்கொள்ளலாம். வடிவேலு கொண்டுள்ள பாத்திரம் ஒரு பிச்சைகாரனுக்கு ஈடாக சித்தரிக்கபட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை.

ஆனால் உண்மை நிலைமை வேறு. காவலர்கள் மட்டும் சற்று கண் அயர்ந்தால் போதும் ஒரு இரவிலே ஊரே தலைகீழாக மாறும் நிலைமை தான் இன்று நாட்டில் இருக்கின்றது. உதாரணத்திற்கு அண்டை நாடான பாக்கிட்தான், இந்தியாவிலே குழப்பம் விளைய வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் கள்ள பணத்தாள்களை துரோகிகளது துணையுடன் நாட்டிலே புளங்கவிட்டது. இந்திய காவல்துறையின் செயல்பாடால் விரைவில் அந்த துரோகிகள் அடையாள படுத்தப்பட்டு, கள்ள தாளின் புழக்கம் அழிக்கப்பட்டது. நாடு முழுவதும் பரவிய அந்த புற்று நோயை கண்டு நீக்கியவர்கள் அவர்கள். இதில் அனைத்து மா நிலத்து காவலர்களும் அடங்குவர்.

இப்படி பட்ட ஒரு பெரும் படையணியை கோமாளியாகவும், கேளிக்குறிய ஒரு கருவாகவும், பொருளாகவும் சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன ஊடகத்துக்கு......

தொடரும்........

Tuesday, December 11, 2007

வன்முறை ஒரு தொழிலாகுமா



எத்தனையோ 100 படங்களும், கதைகளும், கட்டுரைகளும், இன்னமும் எத்தனை வகை செய்தி தொடர்பு சாதனங்கள் உண்டோ அவைகள் அனைத்திலும் வன்முறையை நீதி படுத்துதாத சாதனங்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நல்ல மனிதனாக இருந்த ஒருவன் எப்படி வன்முறையாளனாக மாற்றப்படுகிறான். தனக்காக மாறிய அவன், பிறகு சமுகத்தின் அவலங்களை தட்டிக்கேட்கும் ஒரு பொதுமனிதனாக மாற்றம் பெற்றுவதாக கதைகள் அமைவது உண்டு. இதிலே அந்த கதாபாத்திரத்தின் மேல் கரிசணம் வரும் பொருட்டு நீதிக்கான சண்டையில் அவனோ அல்லது அவனது குடும்பமோ மடிவதாகத்தான் கதைகள் பெரும்பாலும் முடிவது உண்டு.


வன்முறையின் அவசியம் என்ன என்று முதலில் பார்ப்போம். தனது வாழ்க்கைக்கு வேண்டியவைகளை சம்பாதிக்க முடியாத நிலையில் இருக்கும் ஒரு மனிதன், தானும் அடுத்தவர்களை போல் வாழவேண்டும் என்ற அவா பிறக்கும். அதற்கான எல்ல முயற்சிகளையும் முன்னெடுப்பான். அப்படி அவன் கொள்ளும் எல்ல முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டையாக நிற்கும் அவனது பொருளாதார நிலை.


பொருள் வேண்டி சென்ற இடத்தில் எல்லாம் பொருள் கிடைகின்றதோ இல்லையோ அவமானம் நிச்சயம் கிடைக்கு. அதுவும் எப்படி பட்ட அவமானம், நீ எல்லாம் ஒரு மனிதன் என்று என்னிடம் பொருள் வேண்டி வந்துவிட்டாய். போடா போய் பிச்சை எடு என்ற வசை சொற்கள்.


பொருள் இல்லை என்றால் வரும் ஏமாற்றத்தைவிட, அதன் பொருட்டு வரும் அவமானங்களை சாதாரண மனிதர்கள் மறப்பதற்கு இல்லை தான். மீண்டும் மீண்டும் முயற்சி. தன்னிடம் மானம் மீதம் இருக்கும் வரை தொடர்வான். ஒரு வழியாக மானம் முழுதும் போன பிறகும், மனது முழுமையாய் மறுத்து போன பிறகு அவனுக்கு தோன்றும்............


கொடு என்று கேட்டால் தூற்றுவார்கள் இனி எடு என்று சொல்லி பார்ப்போம் என்று, செய்யவும் செய்வார்கள். முடிவு அன்றைக்கு பிச்சை எடு என்று ஆனவ ஏளம் செய்தவர்கள் இன்று மரியாதை நிமித்தமாக தானே வலிய வந்து பொருள் கொடுத்துவிட்டு போவார்கள்.


இன்றைகு இவர்கள் கொடுக்கும் பொருள் அவனை நல்ல வாழ்க்கையா வாழ வைக்கப்போகிறது. மாறாக இதன் பொருட்டு அவனுக்கு கிடைக்கும் பொருளை முதலில் தான் விரும்பிய வண்ணம் எல்லாம் நினைத்து நினைத்து அனுபவிப்பான். பிறகு கூட இருக்கும் கூட்டாளிகளுக்கு அள்ளி கொடுப்பான். இப்படி ஒரு காளான் முளைத்துள்ளதை கேட்ட பெரிய ஆட்கள் எல்லாம் இவனை தீர்த்துகட்டவோ அல்லது அவனது அணியில் இவனை சேர்க்கவோ செயலாற்ற. அவனுக்கு மறுபடியும் ஒரு போராட்டம்.


இப்படி படி படியாக முன்னேறி ஒரு கால கட்டத்தில், மனித நேயமே இல்லா கொடும் விலங்காக மாற்றம் பெறுவான்.


தொடரும்......

Sunday, December 9, 2007

கற்றது தமிழ் - விமர்சனம்

தலைப்பில் பாதியை மட்டும் கொடுத்து இருக்கிறார்கள். இவன் ஒரு கிறுக்கன், அவன் கற்றது தமிழ் என்று இருந்திருக்க வேண்டும்.

மற்ற படி படத்தில், மலுங்க மலுங்க விழிக்கும் அந்த விழியை தவிற கதையும் கூட இல்லை. நாயகனில் சரண்யாவை பார்த்தது போல் இருக்கிறது அந்த பெண்ணை பார்க்கும் போதெலாம். படத்தின் கோனமும், அவள் பேசும் விதமும் அப்படியே இருக்கிறது. இவைகள் தவிற கதைக்கூட நம்பும் படியாக ஏதும் இல்லை படத்தில்.

இதில் வாழவேண்டும் என்று நினைக்கும் போது காவலர்கள் வேட்டையாடுவதை போல் காட்சீயமைபு வேறு. constant Gardner படத்தை ஈ என்று எடுத்தபோது, அந்த அரங்க அமைப்பும், அந்த கதா பாத்திரமும் சீவாவை வெகுவாக பாதித்து இருக்கும் போலும். அதே போல் மற்றும் ஒரு படம் என்று ஏமாந்தார் போலும்.

அந்த கிறுக்கு கதா பாத்திரம் என்ன படித்து இருந்தாலும் இப்படி தான் செய்யும். அது இப்படி செய்வது கிறுக்கினால் படித்ததினால் அல்ல.......

Friday, December 7, 2007

நல்லவர்கள் உலகம் இது தானா

எது செஞ்சாலும் கேட்காமல் இருக்கும் அப்பா நல்லவர்

எது கேட்டாலும் ஏன் என்று கேட்க்காமல் எடுத்தும், வாங்கியும் தரும் அம்மா மிகவும் நல்லவள்

கூடவே இருந்துகொண்டு இவன்/இவள் செய்யும் அக்கிரமங்க்களை கண்டும் காணாமலும் இருக்கும் நண்பன் மிகவு நல்லவன்

என்ன பாவம் செய்தாலும் தண்டிக்கமலும் மட்டும் இல்லாமல் கேட்ப்பதை விட அதிகம் கொடுக்கும் கடவுள் நல்லவர்

படிக்கவோ, எழுதவோ, வீட்டுப்பாடம் என்று எதுவும் கேட்க்காத ஆசிரியர் மிகவும் நல்லவர்

ஓட்டுக்கு 1000 கொடுக்கும் அரசியல்வாதிகளும் கட்சிகளும் மிகவும் நல்லது

கேட்டவுடன் கடன் கொடுப்பதுடன் திருப்பி கொடு என்று கேட்க்காதவர் மிகவும் நல்லவர்

கட்டணத்துக்கு மேல் மிக அதிக இணாம் கொடுப்பவர் நல்ல வாடிக்கையாளர்

மீதம் சில்லரை கேட்க்காத பயணி மிகவும் கண்ணியமானவர்

காசு குறைந்தாலும் சீட்டு தரும் நடத்துனர் மிகவும் நல்ல நடத்துனர்

சொல்லும் இடத்தில் எல்லாம் வண்டியை நிறுத்தி இறக்கிவிடுபவர் நல்ல ஓட்டுனர்

சொத்தை காய்களையும், சில்லரையும் கேட்டாகவர்கள் நல்லா காய்வாங்கும் வாடிக்கையாளர்

இது இல்லை அது இல்லை என்று சொல்லாதவன் நல்ல குடிமகன்

என்ன அக்கிரமம் செய்தாலும் கேட்காதவள் நல்ல மனைவி

என்ன சொன்னாலும் பணியும் ஆண் மிக சிறந்த கனவன்

இப்படி எத்தனையோ அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி இருப்பவைகள் தான் நல்லது என்றால் அதன் பொருள் தான் என்ன? சோம்பேறித்தனம் இல்லாமல் வேறு என்ன சொல்ல. மேலே சொன்ன அத்தனையிலும் இருக்கும் ஒரே ஒற்றுமை, தனக்கு சொந்தம் இல்லாத அல்லது உழைப்பால் அடையவேண்டியவைகளை கொஞ்சம் கூட உழைப்போ இல்லை வேறு எதுமோ இல்லாமல் அடைவது தான். இது தான் நல்லவர்களின் உலகமா. தலை சுற்றுகிறது.

Monday, November 12, 2007

இலங்கையில் நடக்கும் சுதந்திர போராட்டமும், காந்தியவாதிகளும்.

ஆயுத போராட்டம் நடக்கும் வரை இலங்கை இனவாத்திற்கு தீர்வுகள் பிறக்கப்போவதில்லை. அதனால் இலங்கையில் நடக்கும் உள் நாட்டு போரில் தலையிடுவதோ அல்லது இரு தரப்பில் எவருக்கேனும் ஆதரவாக வாதிடக்கூட முடியாது என்று ஒரு பிரிவு வாதிடுவதும், பதிவிடுவதையும் பார்த்து வருகிறோம். அவர்களது கொள்கைகளையும், அதன் அடிப்படைகளையும் ஆராயும் முகமாக இந்த பதிவு அமையும்.

இவர்களது முடிவுகளை ஆராய்வதற்கு முன், இலங்கை போராட்டம் எதற்காக நடக்கிறது. அவர்களது கோரிக்கைகள் தான் என்ன என்று பார்ப்போம்.

1) இலங்கையில் சிங்களம் மட்டுமே மொழி.
2) சிங்களர்களுக்கு மட்டும் தான் இலங்கை.
3) பௌத்தம் மட்டுமே மதம்.

மொத்தத்தில் ஒரு மொழி, ஒரு மக்கள், ஒரு மதம். இது வெறும் வாய் வார்த்தையாக சொன்னதல்ல மாறாக பாராளுமன்றத்தில் ஒரு சட்டமாக வடிவமைத்து அறிவித்தது சுதந்திர இலங்கை. அறிவித்த நாள் முதல் தொடங்கிய போராட்டம் இன்றளவும் உக்கிரம் குறையாமல் ஒரு நெடிய பாதையும் கடந்து நடந்து கொண்டிருக்கிறது.

கொலைக்கு கொலை தீர்வாகாது, கண்ணுக்கு கண் என்று போனால் பின்னாளில் உலகமே இருண்டு போகும் என்று உரைத்த காந்திய வழியில் போராடினால் என்ன என்று கேட்க்கும் நண்பர்கள் காந்திக்கு பிறகு நெல்சன் மண்டேலா தலைமையில் அறப்போராட்ட வழியில் தென் ஆப்ரிக்கா சுதந்திரம் பெறவில்லையா என்றும் கூட வாதாடுகிறார்கள்.

நண்பர்களே அமெரிக்கா, பிரான்சு, சக்காட்லாந்து என்று நீளும் பட்டியலில் கடைசியாக ஆயுத போராட்டம் மூலம் சுதந்திரம் பெற்ற தேசமான இசுரேலுடன் வந்துநிற்கும். இன்றைக்கு சுதந்திரம் பெற்ற பிறகு அந்த தேசங்கள் எல்லாம் என்ன வன்முறையால் ஆட்கொண்டு சிதைந்து அழிந்து சின்னா பின்னமாகி மனித அவலங்களை கொண்டா திகழ்கிறது?

இல்லையே, அமெரிக்கா உலகின் மிகப்பொரிய மக்களாட்சி நாடு. இன்றைக்கு உலக வன்முறையை அடக்கு நாடாகவும் அது திகழ்கிறது. பிரான்சோ இந்தியாவுக்கும் இன்னபிற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இராணுவ உதவி முதல் அறிவியல் சார்ந்த உதவிகளை வழங்கும் நாடாக திகழ்கிறது. இவ்வளவு ஏன், சுதந்திரதிற்கு பிறகு நிம்மதியாகவே உரங்காத நாடான இசுரேலும் கூட இராணுவத்திலும் சரி தொழில் நடத்துவதிலும் சரி முன்னணி நாடுகளுள் ஒன்றாக விளங்குகிறது.

பிறகு எதை வைத்து ஆயுதப்போராட்டம் கூடாது என்று இவர்கள் மறுக்கிறார்கள். காந்தி தேசத்தில் பிறந்து விட்ட ஒரே காரணாத்தாலா. அல்லது ஆயுத போராட்டம் தீர்வை தராது என்று எப்போதும்மே நிறூபிக்கப்பட்டு விட்டதா.

காந்தி இந்திய சுதந்திர போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டது 1917 ஆம் ஆண்டில். அதற்கு பிறகு படி படியாக முன்னேறி 1947 ஆம் ஆண்டு அதாவது 30 ஆண்டு கால போராட்டதிற்கு பிறகு சுதந்திரம் பெற முடிந்தது. ஒரு 30 ஆண்டு காலம் அந்த ஒரு தனி மனிதனால் போராட்டங்கள் அறிவுக்கப்பட்டும், நிகழ்த்தப்பட்டும், அதுவும் அறவழியில் மட்டுமே என்று போராடி சுதந்திரம் வாங்கவில்லை என்று நீங்கள் கேட்ப்பது காதில் விழுகிறது.

இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். சுதந்திர போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டு, தீவிரமாக எழுதவும் போராட்டம் நடத்தவும் இருந்த காந்தியை பிரித்தானிய அரசு கொல்லாமல் அத்தணை ஆண்டுகளும் உயிருடன் விட்டு வைத்திருந்தது. அது மட்டும் அல்லாது போராட்டம் நடத்தும் தொண்டர்களை அடக்கு முறை கொண்டு தாக்கிய பிரித்தானியரின் படையணிகள் அருகே அவர்களுக்கு உதவியாக வந்து இருந்த அவர்களது மனைவியர்களை ஒன்றுமே செய்யவில்லையே.

காந்தியின் மனைவி மரணபடுக்கையில் இப்பவோ அப்பவோ என்று படுத்து இருக்கும் போது, காந்தி நான் வழக்கமாக நடை பயிற்சி கொள்ளும் நேரம் இது, இதோ வந்துவிடுகிறேன் என்று புறப்படும் வேளையில் அவரது கரங்களை பிடித்தபடியே கட்தூரிபாயின் உயிர் போகிறது. எத்தணையோ முறை காந்தியும் இன்ன பிற அரசியல் போராட்டகரர்கள் எல்லாம் சிறை பிடிக்க படுகிறார்கள் பிறகு விடு படுகிறார்கள். வீடு திரும்பும் போது அவர்களது வீடும் உறவுகளும் அவர்களை வரவேற்கிறது.

ஆனால் இலங்கை போராட்டம் யாரை எதிர்த்து நடக்கிறது, காந்தி போராடிய அன்னிய ஆட்சியை எதிர்த்தா நடக்கிறது. இல்லையே சுதந்திர இலங்கை என்று அறிவித்த பிறகு, இருக்கும் கிருட்துவ மக்களை அழித்தொழித்த பின்பு, பின்னாளில் கிருட்துவனாக மாறகூடிய சாத்தியம் உள்ள தமிழர்களை குறிவைத்து தாக்கி அழிக்க துவங்குகிறது. அதன் முதல் நடவடிக்கையாக இந்த ஒரு தேச சட்டம்.

அன்றைக்கு அறவழியில் தான் போராடினார்கள் இவர்களும். என்றைக்கு எல்லாம் போராட்டம் நடத்துகிறார்களோ அன்றை எல்லாம் கலவரம் வரும். அல்லது போராட்டம் முடித்து இவர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு கலவரம் அவர்களது வீட்டு பகுதிகளில் வெடிக்கும். அஞ்சா நெஞ்சர்களாக காந்தியின் அறவழி போராளிகள் செய்ததைப்போல் இவர்களும் சிறைகளை நிறப்பினார்கள்.

நல்லுடலுடன் சிறைக்கு சென்றவர்கள் அங்கம் இழந்தவர்களாக வெளியில் வந்தார்கள். சிறைக்கு சென்ற காந்தியோ அல்லது அவர் வழி சென்ற அவரது அற போராளிகள் அங்கம் குறைவாக வீடு திரும்பவில்லையே. போராட்டதில் தலையில் அடிபட்டு இறந்த கொஞ்ச மக்களை தவிற, மற்ற அனைவரும் சுதந்திரம் மலருவதை மூவர்ண்ண கொடி ஏற்றி கொண்டாடினார்கள்.

அப்படி நலிந்த உடலுடன் வீட்டிற்கு திரும்பியவர்களுக்கு வீடு இல்லை. வெறும் குட்டி சுவரும், அது விட்டு சென்ற சோகக்கதைகளும் மட்டுமே வெறுமையை கொண்டு அவர்களை வரவேற்றது.

அது மட்டுமா, அவர்களது செந்த பந்தங்கள் இறந்த இறப்பை கேட்டால் எவனாக இருந்தாலும் கோபம் வரும். அப்படி ஒரு இழிச்செயலை எந்த வித கூச்சமும் இன்றி சிங்களம் இன்றைக்கும் செய்துவருகிறது.

இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்கள் கட்டுக்கு அடங்காமல் போகும் போதெல்லாம் காந்தி உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று மக்களை மிரட்டி பணிய வைத்தார். ஆனால் திலீபனின் உயிர் பிரியும் வரை பார்த்துக்கொண்டு இருந்த சிங்களமோ, அவரது மறைவிற்கு பிறகு தனது கோர பற்கள் தெரிய சிரித்து காட்டியது.

பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக நடத்திய போராட்ங்கள் ஒவ்வோன்றிலும் தனது கோரிக்கைகளை காந்தியால் வென்று வர முடிந்தது. பஞ்சு வாங்காமல் விவசாயிகளை அலையவிட்ட பிரித்தானிய அரசாங்கம் பிறகு விவசாயிகளிடம் கருணையோடு நடந்து கொள்கிறோம் என்று எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்து அந்த போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தது. இப்படி படி படியா போய் கடைசியில் 30 ஆண்டுகளில் அவர் கேட்ட சுதந்திரதையும் கொடுத்துவிட்டு சென்றது.

இன்றைக்கும் இலங்கையில் அறவழியில் போராடும் போராட்டகாரர்கள் இருக்கிறார்கள். எப்படி, அதே அரசாங்கம் நடத்தும் தேர்தல்களில் பங்கு பெற்று அரசாங்கத்தில் இடம் பெற்றும். மற்ற அமைதி நடவடிக்கைகளில் இலங்கையின் சார்பாக தமிழ் மக்களின் நிலைமைகளை அனைதுலக மக்களுக்கு எடுத்துரைக்கவும், அரசியல் முன்னேறங்களையும் பெற்று தரும் பொருட்டு செயல் பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் மேலே சொன்ன கோரிக்கைகளில் ஒன்றாவது அவர்களால் வெற்றி கொள்ள முடிந்ததா. அட வெற்றி எல்லாம் பெரிய வார்த்தைகள், அது பற்றி பரீசீலிகவாது பட்டதா என்றால் இல்லை. எப்போது அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும் ஐ நாவின் வழிகாட்டுதல் பின் பற்ற படுகிறது என்று செல்ல மட்டுமே கூட்டம் நடந்ததாக தான் இருக்கிறதே தவிற முடிவிகளை நோக்கி என்றைகாவது பேசவேனும் முற்பட்டதுண்டா அரசு. அல்லது அரசை பேசவைக்க இந்த அறவழி போராட்டகாரர்கள் என்ன தான் செய்து இருகிறார்கள்.

பொதுவாக சொன்னால் இந்த அறவழி போராட்டகாரகளை விட தமிழர்களது சுதந்திரம் பற்றி இரனில் அதிகமாக பேசியிருக்க கூடும். அவர் வெறும் அரசியலுக்காகவாது அதை செய்தார். ஆனால் போராடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஆயிரம் ஆயிரம் இதயங்களில் நம்பிகையை தூவி தனது அதிகார பசிக்கு தீனி போடும் இவர்களை நம்பி எப்படி மீதம் இருக்கின்ற மக்கள் அறவழியில் போராட வருவார்கள்.

கிட்டத்தட்ட ஒரு 40 ஆண்டுகாலம் இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இது வரையிலும் ஏதாவது ஒரு தீர்வையாவது சிங்களம் சொல்லி இருக்கிறதா என்றால் இல்லை. போராட்டத்தை அடக்கு முறை கொண்டு அழிக்க மட்டுமே அரசு முயல்கிறது. சிங்களம் சொல்லும் தீர்வு எல்லாம், தலை இருந்தால் தானே தலைவலி. தலையே இல்லை என்றால் தலைவலி எப்படி வரும் என்று. வாதத்திற்கு கூட ஒத்து வராத ஒரு முடிவை எட்ட சிங்களம் நினைக்கவும் செயல்படுத்தவும் போது மக்கள் எங்கே ஐயா அறவழியில் போராடுவது.

30 ஆண்டு காலம் அறவழியில் போராடிய காந்தியை பிரிதானிய அரசாங்கம் கொல்ல நினைக்க கூட இல்லை. ஆனால் கையால் ஆகாத இனவாதம் அவரது உயிரை 3 தோட்டாக்கள் கொண்டு பிரித்ததை அனைவரும் அறிவோம். பிரித்தானியர்கள் நினைத்து இருந்தால் இதை அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி காந்தி என்று ஒருவர் இருந்தார் என்றே இல்லாமல் செய்திருக்க முடியுமே. ஆனால் பிரித்தானியர்கள் சட்டத்திற்கு கட்டு பட்டு, அதை மீறி எதுவும் செய்யவில்லை. ஆனால் சிங்களமோ, அவர்களது சட்டம் என்ன ஐ நாவின் சட்டத்தை கூட மலிவாக மீறுகிறது. அரசாங்கம் என்ற பெயரில் ஒரு வன்முறை கும்பல் மன நோயாளியாக தமிழர்களை கொன்று குவிக்கின்றது. நீங்கள் அந்த மன நோயாளியிடம் கழுத்தை காட்டுங்கள் என்று சொல்கிறீர்கள், ஏன் அது உங்களது கழுத்து இல்லை அதனாலா.................................

கண்விழித்து கொள்ளுங்கள் நண்பர்களே, கனவு காண்பதை விடுத்து கள நிலைமைகளை நோக்குங்கள் உண்மை விளங்கும்.

Saturday, November 10, 2007

பகுத்தறிவு தந்தை

அவனுக்கு திருமணம் முடிந்து இப்போது 3 வயதில் ஒரு மகனும் இருக்கிறான். கல்லூரி காலத்தில் தோன்றிய அறிவு அந்த பகுத்தறிவு அவனுக்கு. அன்று முதல் கடவுள் மறுப்பில் இருந்து இன்னமும் என்ன இருக்கிறதோ அவைகள் அனைத்தையும் தெரிந்து பழகவும் தொடங்கியவன் சீர்திருத்த திருமணம் வரை சென்றான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மனைவியும் கணவனை புரிந்தவளாய் அவனது கொள்கைகளோடு ஒத்து போனாள் என்னாளும்.

3 வயது முடியும் தருவாயில் இருந்த அவனது மகனுக்கு தமிழும், தமிழின் இனிமையும் என்று, தமிழ் சம்பந்தபட்ட அனைத்தையும் தேடி பிடித்து கதைகளாக சொல்லுவதை பழக்கத்தில் கொண்டான். அவனது பகுத்தறிவு கதைகளின் கருத்துக்களை அந்த பிஞ்சு மழழையில் சொல்லுவதை பார்த்து பூரிக்காத நாளே இல்லை அந்த குடும்பத்தில். இதை ஒரு சாதனையாகவே பழக்கி வந்தான் மகனுக்கு.

வரும் தீபாவளியை மனதில் வைத்து, தீபாவளி சம்பந்தமாக உள்ள பகுத்தறிவு கருத்துகளை மறுபடியும் மகனின் மனதில் பதியும்படி சொல்லி வந்தான். துவக்கத்தில் அப்பா சொல்லுவதை எல்லாம் அழகாக மனதில் வாங்கிய அந்த பிஞ்சு அருமையாக அவன் கேட்கும் கேள்விகளுக்கு பகுத்தறிவு பதில்களை அள்ளி வீசியது.

தீபாவளி நெருங்க நெருங்க அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகள் அவரவர் வயதுக்கு தகுந்த அளவில்லான வெடிகளை அவ்வப்போது வெடிப்பதும், கூடி விளையாடும் போது யார் வெடித்த வெடிகள் பெரிது என்று வாக்கு வாதம் வருவது வழமையானது. என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கூட விளங்காத அந்த மழழையும் சொன்னது நான் நாளைக்கு இதை விட பெரிய வெடியாக வெடித்து காட்டுவேன் பார் என்று. சொன்னதோடு வீராப்பாக வீட்டிற்கும் வந்தான்.

இரவு வீடிற்கு வந்த தந்தையிடம் வழக்கமான கொஞ்சலுக்கு பிறகு அப்பா மறுபடியும் பகுத்தறிவு கதைகளை சொன்னார். தீபாவளி இன்னமும் அருகாமையில் வந்ததால் இன்றைக்கு நரகாசூரனது கதையை முழுவது சுவையாக சொல்லிமுடித்தார். கதைக்கு பிறகு கேள்விகளை இவரே அவனிடம் கேட்டு பதிகளை சொல்லித்தருவது வழமை. அப்படி அனைத்து பகுத்தறிவு கேள்விகளை கேட்டு முடித்தவர் கடைசியாக அந்த கேள்வியை கேட்டார்.

தான் செய்த தவறுக்கு வருந்திய நரகாசூரன், தனது அழிவை விளக்கொளி வெள்ளத்தில் கொண்டா வேண்டும் என்று கடவுளை பார்த்து வேண்டிக்கொண்டான். அது தான் நாம் தீபாவளியாக கொண்டாகுகிறோம் என்ற அவர், மன்னித்துவிடு என்று மனம் திருந்தி ஒருவர் கேட்க்கும் போது மன்னிப்பது தான் நீதியாகும். அதைவிடுத்து கொண்டாடுவது நீதியாகாது என்று சொல்லி வெடி வெடிப்பது எல்லாம் தவறு என்று முடித்தார்.

அது வரை வெடியை மறந்து இருந்த பிஞ்சு நினைவில் வந்தவனாய், அப்பா எனக்கு நாளைக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய வெடியை வாங்கி கொடுங்க, நான் அதை கொண்டுப்போய் அவங்க வீட்டுல வெடிக்கனும் என்று சொன்னான் பதிலுக்கு நிற்காமல்.

வெளியே ஓடியவனை பிடித்துக்கொண்டு வந்தவன், மறுபடியும் கேள்வி பதில் ஆரம்பித்தார். அவர் கேட்கும் கேள்விக்கெல்லாம் அழகாக பதில்களை அள்ளி வீசியவன் கேள்விகள் முடியும் வரை காத்திராமல் இடையிடையே வெடியை கேட்கவும் துவங்கினான்......

நேரம் செல்ல செல்ல மகன் நொடிக்கு ஒரு முறை வெடியை சொல்லி சினுங்கலானான். முதலில் பொருமையாக கேட்டுக்கொண்டு இருந்தவர், பிறகு தன்னையும் மறந்தவராய் எல்லையின் விளிம்பில் பேச, மனைவி சொன்னாள் அவனை விட்டுங்க காலம் வரும்போது அவனாக உணர்ந்து கொள்ளுவான். கல்லூரி செல்லுவரை நீங்கள் எப்படி இருந்தீர்கள் பிறகு மாறவில்லை. அது போல அவனும் மாறுவான் என்றாள் உறுதியாக.....

மனைவியின் வார்த்தைகளை நம்பாதவனாக பார்த்துகொண்டு இருக்க, மகனோ அம்மாவின் கால்களை பிடித்துக்கொண்டு அம்மா நாளைக்கு வெடி வேண்டும் என்றான் அழுதுக்கொண்டே

தூக்கம் கலைந்தவனாக படுத்துக்கொண்டு இருந்த அந்த பகுத்தறிவு தந்தை நாளைக்கு எங்கே சென்று நல்ல வெடிகளை அவனுக்கு தகுந்தாற் போல் வாங்குவது என்று மனதில் நோட்டமாக இருந்தவனை பார்த்து சிரித்தாள் மனைவி.

Wednesday, November 7, 2007

பெருமாள் மகிமை

திருப்பதி வேங்கட புன்னகை


அவரின் தாமரை பாதம்

Tuesday, November 6, 2007

பெரியாரின் கனவு நினைவானது

இது தான் தந்தை பெரியாரின் கனவு, இராமயணத்தையும் கீதையும் கொளுத்தும் காலம் வரவேண்டும் என்று தனது வாழ் நாளின் இறுதி வரை போராடினார். இன்றைக்கு அவருக்கு சாதகமான முறையில் இவைகள் கொளுத்தப்படவில்லை என்றாலும், இது ஒரு துவக்கம். இராம் இராம் என்று சொல்லி கொண்டிருந்தவர்கள் எண்ணத்தில் இதன் மூலம் பெரியாரின் பெயரை பதித்தவர்களுக்கு நன்றி. இனியாவது மதத்தின் பெயரால் வடக்கில் நடக்கும் கொடுமைகள் குறையும் என்று எதிர்பார்ப்போமாக.

படம்: நன்றி தினமலர்

Sunday, November 4, 2007

மோடி இப்படி நடந்து கொண்டிருதால் நாம் அவரை பாராட்டி இருப்போமா??

சபர்மதி இரயிலில் உயிருடன் மக்கள் எரிக்கப்பட்ட செய்திவருகிறது அதும் இறந்தவர்கள் அனைவரும் புனித பயணம் முடித்து வீடு திரும்பும் வழியில் இப்படி நிகழ்ந்தது என்று. முதலில் வருத்தம் வந்தாலும் இந்த ஈன தணதிற்காக வெறுப்பும் கோபமும் வருவது இயற்கையே. அதும் தனது மக்கள் இப்படி கொல்லப்பட்டதை எந்த ஒரு முதல்வராலும் தாங்க முடியாத ஒரு துயரே. ஆற்றாமை தோன்றும் போதெல்லாம் கோபமாக கொப்பளிப்பதும் இயற்கையே.

ஒரு முதல்வருக்கு இப்படி ஒரு சேதி காலம் தாழ்த்தி தான் அதுவும் சம்பவத்திற்கு பிறகு தான் தெரியும் என்று சொன்னால் நம்புவதற்கு இல்லை. நாட்டிலே என்ன நடக்கிறது, இவைகளின் விளைவால் என்வெல்லாம் பிறகு நடக்கும், யார் யார் எல்லாம் இதிலே ஈடு படுகிறார்கள். பணமும் ஆள் பலமும் எங்கு இருந்து வருகிறது. இன்னமும் எத்தனை சம்பவங்கள் இது போல நடக்கும் என்று முங்கூட்டியே அறிந்து அரசுக்கு தெரிவிக்கவும் ஆலோசனை வழங்கவும் தான் எத்தணை நிறுவனங்கள் கண் அயராது உழைத்துக்கொண்டு இருக்கிறது. இதனையும் இருந்து மோடி எனக்கு செய்தியே இல்லை என்று சொன்னால் நம்பும்படியா இல்லவே இல்லை.

மோடியையும் தாண்டி ஒரு கலவரம் வெடிக்கிறது மாநிலம் முழுவதும். 3 நாட்கள் இடைவிடாது யாரை எல்லாம் கணக்கு தீர்கவேண்டும் என்று சமயம் எதிர்பார்த்து கொண்டு இருந்தவர்களை போல் ஒரு அழிப்பு நடவடிக்கை மாநிலம் தழுவிய அளவில் நடக்கிறது. ஒரு முதல்வரால் 3 நாட்க்களுக்கு மாநிலத்தில் உள்ள காவல் துறையின் துணை கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பொதுவாக அரசு கையாளும் அத்தனை முறையையும் பின் பற்றி நிலைமையை கையாள நினைகிறார் ஆனால் 3 நாள் வரையிலும் ஒன்றும் செய்ய முடிய வில்லை. ஊடகங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் இப்படி தான் செய்தியை சொன்னார் மோடி. அவர் என்ன என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்றும் அவைகளுக்கு சான்றுகளையும் அள்ளிக்கொண்டு போய் காண்பித்து வெறும் கண்டனத்தோடு திரும்பினார் மோடி.

இப்போது தெகல்கா வெளியிட்டிருக்கும் செய்திகளை பார்க்கும் போது மோடியது மோசடி அப்படியே அம்பபலமாகிறது அங்க அங்கமாக. இதில் கொடுமை என்னவென்றால் இரயிலை கொளுத்தியவர்கள் இரகசியமாகவும் அவசர அவசரமாகவும் சாட்சிகள் களையப்பட்டு விடுதலையானது தான். இந்த செய்தியை இப்போதைக்கு விட்டுவைப்போம்.

ஒரு மாநிலத்தின் முதல்வராக மோடி செய்திருக்க வேண்டியவைகள்

1) தீவிரவாத நடவடிக்கைகளை கண்கானித்திருக்க வேண்டும் (தகவல்கள் 24 மணி நேரமும் வழங்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது)
2) சம்பவம் நடந்ததும் கலவரம் வெடிக்கும் என்று சிறுவனுக்கு கூட தெரியும், அதை எதிர்பார்த்து நிலைமை கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு நடத்தி இருக்க வேண்டும்.
3) சம்பவத்திற்கு காரணமானவர்களையும் அவர்களது மூளையாக செயல் பட்டவர்களை அடையாளம் கண்டு நாட்டின் முன்னேயும், சட்டத்தின் முன்னேயும் நிறுத்தி இருக்க வேண்டும்.
4) கோபம் கொண்ட மக்களை தனது நடவடிக்கைகளாலும், சொல்லாமும் ஆற்ற முற்பட்டிருக்க வேண்டும்.
5) மூளை சலைவையில் ஈடு பட்டிருக்கும் கூட்டத்தையும் அதற்கு பொருளுதவி செய்பவர்களையும் களைந்திருக்க வேண்டும் சட்டரீதியாக
6) இந்தியார்கள் அனைவரும் சமம், ஒரு சிலரால் நடத்தப்படும் வன்முறைக்கு அவர்களது மதம் சார்ந்ததாக சாயம் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இப்படி பட்டியலிட்டுகொண்டே போகலாம். இதில் எதையுமே மோடி செய்யவில்லை, மாறாக என்ன என்ன செய்யவேண்டுமோ அவைகள் அனைத்தையும் செய்ததாக தெகல்காவின் செய்திகள் தெரிவிகிறது.

ஒரு வேளை மோடி மேலே சொன்னது போல் நடந்து காட்டி இருந்தால் நாம் எல்லாம் அவரை பாராட்டி இருப்போம் தானே...........

இவரைத்தான் மிகவும் திறமை வாய்ந்த முதல்வர் என்றும் பின் நாளில் பிரதமர் ஆகும் தகுதி பெற்றவர் என்றும் சிலர் சோ இராமசாமியை போல் சொல்கிறார்கள். எடுத்தற்கொல்லாம் சிறுபிள்ளையாக உணர்ச்சி வசப்படும் மோடியை வேண்டுமானால் அமெரிக்க அதிபராக போய் பணியாற்ற சொல்லலாம், இந்தியாவுக்கு இந்த புத்திசாலிகள் எல்லாம் ஒன்றும் தேவையே இல்லை, இப்படி ஒரு முன்னேறமும் இந்தியாவுக்கு அவசியம் இல்லை.

வீரவணக்கம் தமிழ்ச்செல்வனுக்கும் மற்ற அனைத்து வீரர்களுக்கும்.




வீரர்கள் செயலால் அடிக்கும் அடிக்கு உனது சொல்லால் அங்கிகாராம் வாங்கித் தந்தவனே, ஈழத்திற்கும் ஐ நாவிக்கும் நடையாய் நடந்தவனே. எத்தனை சோகமான செய்திகளாக இருந்தாலும் சரி, எத்தனை வெருப்பான கேள்விகளாக இருந்தாலும் சரி மலர்ந்த முகம் மாறாமல் சொல்லுரைப்பவனே. ஈழம் மலர்ந்து அதன் வெளியுரவு அமைச்சராக ஐ நா வில் உனது குரல் ஒலிக்கும் என்று மனதில் கொண்டிருந்தோம் அனைவரும், அதற்குள் வீரமரணம் எய்தினாய். உனது வீரமரணத்திற்கும் உடன் இறந்த அனைத்து வீரர்களுக்கும் எங்க்களது வீரவணக்கம். மற்ற வீரர்களது பெயர்களை எல்லாம் குறிப்பிட்டு தான் செய்தி வெளியிட விரும்புகிறேன் ஆனால் எங்களுக்கு தான் எத்தனை பெயரை தெரியும், அப்படி தெரிந்த பெயர்களை எல்லாம் பட்டியல் இட்டால் வலைகொள்ளாத பட்டியலாக அல்லவா அது இருக்கும். ஆகவே அவர்களது அரசியல் முகமாக எங்களுக்கு தெரிந்த உனது பெயரை குறிபிட்டு அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம். சென்று வா வீரனே......

என்ன ஆனது தினமலர் பத்திரிக்கைக்கு

பாக்கித்ட்தானில் அவசர நிலை அறிவிக்க பட்டுள்ளதை அறிவிக்கும் பொருட்டு தினமலர் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அவரசர நிலை அறிவிக்க வேண்டிய காரணம் என்னவாக இருக்கும் என்ற ஊகத்தை இப்படி எழுதியுள்ளது

"தனக்கு எதிரான தீர்ப்பு வரலாம் என்ற தகவல் அதிபர் முஷாரப்புக்கு கிடைத்தது. ஏனெனில் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியும் மற்ற நீதிபதிகளும் ராணுவ ஆதிக்கத்தில் பாகிஸ்தான் வந்து ஜனநாயக குரல்வளை நெரிக்கப்படுவதை விரும்பவில்லை. இந்தப் பின்னணியில் பாகிஸ்தானில் அவசர நிலை ப்ரகடனப்படுத்துவதற்கான சூழ் நிலை நேற்று மாலை முதலே காணப்பட்டது."

நல்ல மொழிவளமும் எழுத்து நடையும் பத்திரிக்கைகளை படித்து பெற்றுக்கொண்டேன் என்று பலரது நேர்காணலில் கேட்டு இருக்கின்றேன். அதிக மக்களால் படிக்கப்படும் நாள்ழிதழ் என்று சொல்லிக்கொள்ளும் பத்திரிக்கையின் செய்தியை பாருங்கள். குறிப்பாக ஏன்னெனில் தலைமை நீதிபதி இப்கார் சவுத்திரியும் மற்ற நீதிபதிகளும் இராணுவ ஆதிக்கத்தில் பாக்கிட்த்தான் வந்து குடியரசின் குரல்வளையை நெரிக்கப்படுவதை விரும்பவில்லை என்று எழுதி இருக்கிறது. இதற்கு முந்திய பத்தியில்

"அதிரடியாக சுப்ரீம் கோர்ட் வளாகத்தைஸ் சுற்றி ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டனர். தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உள்ளிட்ட நீதிபதிகள் வெளியேற்றப்பட்டனர்"

என்று எழுதிவிட்டு, பின்னால்

"இப்திகார் சவுத்ரியும் மற்ற நீதிபதிகளும் ராணுவ ஆதிக்கத்தில் பாகிஸ்தான் வந்து ஜனநாயக குரல்வளை நெரிக்கப்படுவதை விரும்பவில்லை."

என்று எழுதினால் என்ன பொருளில் அது விளங்கும், என்ன ஒரு மொழிவளம் பாருங்கள். இராணுவம் நீதிபதிகளை பாக்கிட்த்தானை விட்டு வெளியேற்றியதாக பொருள் கொள்ளவும், பிறகு இராணுவ ஆத்திக்கத்தில் நீதிபதிகள் திரும்பி வந்து குடியாட்சியின் குரலை நெரிக்கப்போவதை முசாரப் விரும்பாமல் அவசர நிலை அறிவித்தார் என்று பொருள்கொள்ளும் அளவிற்கு குழப்பமாக செய்தியை வெளியிட்டு இருக்கிறது.
எவ்வளவும் முக்கியமான ஒரு செய்தியை எவ்வளவு அலட்சியமாக கையாண்டு இருக்கிறது பாருங்கள். இத்தனை பரபரப்பான செய்தியை கூட தணிக்கை செய்யாமல் அதன் தணிக்கை குழு நாளைக்கு எந்த கோவிலின் சாமி படத்தை முதல் பக்கத்திலே வெளியிடலாம் என்று தேடி அலைகிறது போலும். கவனிக்குமா இனிமேலாவது, கவனிக்க வேண்டும்.

Tuesday, October 30, 2007

21 கரும்புலிகளை பலிகொடுத்தது சரியா, அதனால் புலிகள் அப்படி என்ன தான் சாதித்தார்கள்???????

ஒவ்வொரு முறையும் புலிகளின் தாக்குதல் நடக்கும் போதும் அனேகமாக காணும் விடயங்கள் 2 விதப்பாக கொள்ளலாம். முதலாவது புலிகளின் செயல்களை சரி என்று கருதி அவர்களுக்கு ஆதரவாக வரும் பதிவுகள், விமர்சனங்கள். மற்றொன்று அவர்ளுக்கு எதிர்ப்பாக ஒலிக்கும் குரல். ஆதரவாக ஒலிக்கும் குரலில் தமிழர்களை சம்மாக நடத்தவேண்டும் என்று நினைப்பவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் அடங்கும். இதில் பாதிக்கப்பட்டோரது குரல் நாள் போக்கில் அடங்கி வருவது வருத்ததிற்கு உரிய செயல் என்றாலும், இவ்வளவு நீண்டகாலம் அவர்களது தனிப்பட்ட வலியும், இழப்பும் ஆராமல் அப்படியே இருப்பது கடினம். காலம் அனைத்தையும் ஆற்றும் வல்லமை படைத்தது அதனால் தான் எதையும் தள்ளி போடாதே என்று பெரியோர்கள் உரைப்பர்.

புலிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களில் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டோரது உணர்வுகளை எளிதாக புரிந்துகொள்ள முடியும். என்ன தான் தேசம் என்று இருந்தாலும் தன வீட்டில் ஒரு இழப்பு என்றால் அது யாராலும் தாங்க முடியாத ஒன்று தான். அந்த உயிரழப்பை எதைக்காட்டியும் நீதி படுத்த முடியவே முடியாது. saving private Ryan என்ற ஆங்கில படத்தின் கரு இந்த ஒரு விடயமே, படத்தை பார்த்தோருக்கு தெரியும். இப்படி பாதிக்க பட்டோரது பின்னூடங்களை காணும் போது, அந்த கோப வார்த்தைகளை படிக்கும் போது, வருத்தம் நம்மையும் தாண்டி வெளியே தெரிவதை உணர்ந்து இருப்போம். அவர்களது உணர்வுகளை மதித்து அவர்களுக்கு எதிராக வார்த்தைகளை வைக்காமல் இருக்கும் நல்ல உள்ளங்களை பாராட்டுவதோடு, விமர்சனம் வைப்பவர்களுக்கு ஒரு வேண்டு கோளையும் விடுக்கிறேன். தயவு செய்து நொந்துவர்களை மேலும் நோக அடிக்காதீர்கள், அவர்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்கள். என்ன பேசினாலும் அவர்களது இழப்பை எது கொண்டும் யாராலும் ஈடு கட்டவே முடியாது. ஆகவே உங்களது வார்த்தையும் சொல்லாடல்களை மட்டுப்படுத்துங்கள் என்று தாழ்மையோடு வேண்டி விழைகின்றேன்.

இவர்கள் அல்லாது எதிர்ப்பவர்களை தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உயிரின் விலையை பற்றியும், பொது மக்கள் பற்றியும், வாழ போன நாடு என்றும், தமிழனின் கொழுப்பு என்றும் கூட தகாத வார்த்தைகளில், அரசியலாக, பத்திரிக்கையாக, தலையங்கமாக, என்று ஏகபட்ட சார்புகளாக எதிர்ப்பவர்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

முதலில் அங்கே நடக்கும் போராட்டம் ஒரு இன அழிப்புக்கு எதிராக நடக்கும் ஒரு போராட்டம். இன அழிப்பு இல்லவே இல்லை என்று யாராலும் ஆதார பூர்வமாக மறுக்கவோ மறைக்கவோ முடியாது. எதிர்த்து கேள்வி கேட்டார்கள் என்ற ஒரே காரணத்தை கொண்டு, என்னென்ன விதயமாம தாக்குதல் தொடுக்க முடியுமோ அத்தனை விதமாக தாக்குதல் தொடுத்து, இதற்கு கொன்று போட்டாலும் பரவாயில்லை என்ற அளவிற்கு ஆளாக்கி எள்ளி நகையாடும் மன நோயாளி நாடாக திகழும் நாட்டின் போக்கை பற்றிய விமர்சனம் இல்லாமல் புலிகள் 21 உயிர்களை பலியிட்டு விட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பதை பார்க்கும் போது ஆடு நனையுதேன்னு என்ற பழமொழி நினைவில் வர தவறுவதில்லை.

இவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும், புலிகள் இறக்கிறார்கள் என்ற கவலையா, அல்லது என்ன தான் போராட்டம் என்றாலும் உயிரை குடிக்கும் போராட்டமாக இருக்க கூடாது என்ற கொல்லாமையா, அல்லது இதற்கு அரசியல் தீர்வு காண்பது தான் அவசியமே தவிர ஆயுதப்போரட்டம் கூடாது என்றா, அல்லது என்ன தான் அடி வாங்கினாலும் என்னென்ன இன்னல்கள்(விளக்க விரும்பவில்லை) வந்தாலும் அனைத்தையும் விதி என்று மட்டுமே இருக்கவேண்டுமே தவிர எதிர்க்கவே கூடாது என்றா........ என்ன என்று எனக்கு புரியவே.

புலிகளின் நடவடிக்கைகளை எதிர்ப்பதின் பொருள் என்னவாக இருக்கும், இன அழிப்பை வரவேற்கிறோம் என்று மட்டுமே பொருளா இருக்க முடியுமே தவிற வேறு என்னவாக இருக்க முடியும். நமது வீட்டில் இப்படி ஒரு நிலைமை இருந்தால் நாம் என்ன செய்வோம், அடிங்கப்பா அடிங்க நல்லா அடிங்க என்று ஒருவராலும் சொல்ல முடியாது, இது தான் உண்மை.

இப்படி இருக்க எதிர்க காரணம் என்னவாகத்தான் இருக்கும், புலிகளின் நடவடிக்கைகள் மக்களாட்சி முறைக்கு எதிரானது அதனால் எதிர்கிறோம் என்று சொல்லலாம். உங்களது வாதம் சரி என்று கொண்டாலும், இன அழிப்பு நடவடிக்கை மட்டும் எப்படி ஒரு மக்களாட்சி முறையாகும். புலிகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பதில், ஐ நா விற்கோ அல்லது சர்வதேச சமூகத்திற்கோ முறையீடோ அனுப்பலாமே.

தனி மனிதனின் குரல் இவைகளிடம் எடுபடுவது சாத்தியம் இல்லைதான், ஆனால் பத்திரிக்கையாலும், அரசாலும் முடியும். பத்திரிக்கைகள் புலிகளுக்கு ஆதரவாக எழுதவேண்டும் என்று கூட இல்லை, புலிகளின் நடவடிக்கைகளை அவர்களது உயிர் தியாகங்களை குறைத்து எழுதாமல் இருக்கலாமே. புலிகளுக்கு 21 உயிர் எவ்வளவு பெரிய இழப்பு என்று இராணுவத்தினரை கேளுங்கள் தெரியும். ஒரு படையில் இருக்கும் அங்கத்தினர் எவ்வளவு முக்கியம் என்று அவர்களால் மட்டுமே சரியா அவதானிக்க முடியும்...

இந்த ஒரு தாக்குதலால் என்ன மாற்றம் விளைந்துவிட போகிறது என்று கேட்பது காதில் விழுகிறது. இங்கே கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும், தன்னிடம் மிகையொலு வான் கலங்கள் இருக்கிறது. தரமான ஒரு வான் படை இருக்கிறது என்ற ஒரு காரணத்தை கொண்டு நினைத்த இடங்கள் எல்லாம் மானாவாரியாக குண்டுகள் கொண்டு அழித்து வந்தார்களே எண்ணிகை இல்லாமல். உதாரணமாக சென்சோலை மருத்துவமனை தாக்குதல் எடுத்துக்கொள்வோம். தொடர்ச்சியாக எத்தனை தாக்குதல்கள், இராணுவம் உள்ளே செல்ல பயப்படுகிறது என்றால் உடனே கிபீர் பாயும் அங்கே.

ஒவ்வோரு முறை வான் தாக்குதல் நடக்கும் போதும் மனதில் தோன்றுவது இது ஒன்று தான், இவ்வளவு நடக்கிறதே புலிகள் ஏன் எதுவும் செய்வதில்லை. புலிகளுக்கு மட்டும் இவர்களுக்கு இருக்கும் அதே அளவில் ஆட்கள் எண்ணிக்கை இருந்தால் உடனுக்கு உடன் பதில் கிடைத்து இருக்கும். ஆனால் அவர்களிடம் இருக்கும் ஆயுதமோ, ஆட்களோ பார்த்து பார்த்து செய்ய வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். இத்தனை வான் தாக்குதலுக்கும் அப்பால் எந்த ஒரு சர்வதேசமும் அழுத்தங்களை கொடுக்காமல் சிங்கள படைக்கு ஆயுதங்களையும், நவீன இரக வேவு உபகரணங்களையும் வழங்கு வதையும் தான் மும்முரமாக செய்கிறதே அன்றி பேஸ்சிக்கு அழை என்று சொல்லும் இடத்தில் எந்த நாடும் இல்லை இந்தியா உட்பட.

இந்த நிலைமையில், சிங்கள இராணுவத்தின் நடவடிக்கைகளை புலிகள் எப்படி கட்டுகுள் கொண்டுவர முடியும். சமர் ஒரு முனையில், மற்றும் ஒரு முனையில் கிழக்கு வந்தாச்சு இனி வடக்கு மட்டும் தான் அதுவும் ஒரு மாதத்தில் வந்துவிடும். மனித உரிமை மீரல் எங்கேயும் இல்லை, அகதிகளாக வருபருக்கு பாலும் தேனும் ஆராக ஓடும் இடத்தில் தங்க வைத்து மூவேளையும் உணவு வழங்குவதே தொழில் என்று நாள் தோரும் உலகில் எத்தனை ஊடகங்கள் உண்டோ அத்தனையிலும் எழுதி தீர்கிறார்கள்.

ஐ நாவிலோ அல்லது எந்த ஒரு சர்வ தேச சமூக அமர்வாக இருந்தாலும் புலிகளின் சார்பில் கலந்துகொள்ளவோ எடுத்துரைக்கவோ எந்த ஒரு வாய்ப்பும் இல்லாத ஒருதலை பட்சமாக சிங்கள அரசு அரசியல் நகர்வுகளை எதிர்கொள்வதும். இப்படி புளுகுகிறார்களே என்று புலிகளின் இணையமும், வானொலியும், தொலைகாட்சியும் கோபம் கலந்த நகைப்பாக சொன்னாலும், அவர்களது நிலையை விளக்க அவர்களுக்கு வாய்ப்பு மறுப்பதேன்.

எங்கு எல்லாம் இராணுவ மோதல்கள் நடக்கிறதோ அங்கே எல்லாம் ஐ நா வின் இராணுவ குழு கண்கானிப்பது இருக்கும். இங்கே இலங்கையில் இருக்கும் குழுவுக்கு கள நிலைமைகள் புரியாமல் இருப்பது ஏனோ....அல்லது அப்படி அவர்கள் அனுப்பும் அறிக்கைகள் எங்கே மாற்றபடுகிறது. யார் இதுக்கொல்லாம் பொம்மலாட்ட கலைஞர்......

அடிக்கிறான் காப்பாத்து என்று சொன்னால் முடிந்தால் உதவி செய்ய வேண்டும். முடியவில்லையா அனுதாபமாது பட வேண்டும். அதை விடுத்து தானும் சேர்ந்து கொண்டு அடிப்பது, தூற்றுவது, இன்னமும் இந்த வைகையராக்களை செய்வது அடிபடுகிறவனை கோபம் அடைதான் செய்யுமே ஒழிய அவனுக்கு செய்யும் நன்மை ஆகவே ஆகாது.

உயிரை பற்றியும், மக்களாட்சி முறையை பற்றியும் பேசும் அனைவரையும் ஒன்று கேட்கிறேன். மக்களாட்சி உள்ள எந்த நாட்டில் இராணுவம் இல்லை. அப்படி இராணுவத்தில் உள்ளவர்கள் நடவடிக்கைகளில் கொல்லப்படுவது இல்லையா. அப்படி கொல்லப்படும் இராணுவத்தினர்களுக்கு சொந்த பந்தங்களும் ஆசா பாசம் இல்லையா. அல்லது இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் அரசு கொன்றால் அந்த கொலை கொலை இல்லையா. கார்கில் போரிலும், பங்களா தேசத்து எல்லை, அசாமிலும், காசுமீரத்திலும் நாளுக்கு நாள் எத்தனை வீரர்கள் கொல்ல படுகிறார்கள்......

நீதியின் பெயரால் நீதி கேட்க்கும் அந்த பத்திரிக்கைகளும், பதிவர்களும் இதை சார்ந்து வாய்திரப்பாது இருப்பது ஏன் விளக்க முடியுமா. அனைத்து உயிர்களும் ஒன்றே, அது போராளியாக இருந்தாலும் சரி, இராணுவமாக இருந்தாலும் சரி, பொது மக்களாக இருந்தாலும் சரி. புலிகளின் தாக்குதல் எப்பவுமே இராணுவ முகாமாகத்தான் இருக்கிறது. ஆனால் சிங்கள இராணுவம் தான் பொது மக்களாக பார்த்து பார்த்து தாக்கி கொண்டு இருக்கிறது. நேர்மையும், நீதியும் கொண்டவர்களே பதில் சொல்லுங்கள்.

Saturday, October 27, 2007

ஐன்சுடைனின் கடவுள் பற்றிய கருத்து.

ஐன்சுடைன் ஒரு மிக சிறந்த அறிவியலர், அவரது கருத்துகளை அவ்வப்போது எடுத்து உதாரணமாக ஆளுவது வழமை. அப்படி அவரது கடவுள் நம்பிக்கையை பற்றி பேசும் போது ஆத்திகர்களால் சொல்லப் பட்டு வந்த கருத்துகளுக்கு முற்றிலும் மாறாக இருக்கும் ஐன்சுடைனது கருத்துகளை காண நேர்ந்தது. அதை வலை மக்களோடு பகிர்ந்து கொள்ளும் பொருட்டு பதிவிடுகிறேன். இனி அவரது கருத்துகள்......

திரும்ப திரும்ப என்னுடைய மத நம்பிக்கையை பற்றி தவறாகவே படித்து வருகிறீர்கள், அது ஒரு பொய். கடவுள் ஒரு நபராக இருக்கும் சாத்தியம் இல்லை என்று மறுப்புக்கு இடம் இல்லாமல் தெரிவித்திருக்கிறேன். எனக்குள் இருக்கும் சில உணர்வுகளை மத உணர்வுகள் என்று சொன்னால் அது அறிவியலால் விளக்க முடியாமல் இருக்கும் வியத்தகு உலகின் அமைப்பு என்று சொல்லாம் என்று உரைகிறார். மதம் இல்லா அறிவியல் ஒரு முடம் என்றும் அறிவியல் இல்லா மதம் ஒரு குருடு என்றும் சொன்னவரும் அவரே.

இப்படி சொல்லுவதால் அவர் சொல்லுவதை அவரே மறுக்கிறார் என்று பொருளா? இந்த இரண்டு வாங்கியங்களையும் எடுத்துக்கொண்டு இரு சாராரும், அவர் உண்டு என்று தான் சொல்லுகிறார், இல்லை என்று தான் சொல்கிறார் என்று வாதத்திற்கு எடுத்து கொள்ளலாமா என்றாலும் இல்லை. மதம் என்ற வார்த்தைக்கு இது வரையில் சொல்லிவந்த பொருள் இல்லாமல், ஒரு புதிய விளக்கத்தை கொடுக்கிறார். இயற்கைக்கு அப்பாற்பட்டதாக சொல்லப்பட்டு வரும் மதமும் ஐன்சுடைன் சொல்லும் மதம் ஒன்று அல்ல. இதை தான் இயற்கைக்கு அப்பாற்பட்டதாக சொல்லப்படும் கடவுள் மயக்கத்தை விமர்சனம் செய்யும் பொருட்டு மேலே சொன்ன வாசகங்களில் ஐன்சுடைன் விளக்குகிறார்.

ஒரு நபருக்கு இருப்பதை போல இயற்கைக்கு ஒரு நோக்கமோ அல்லது ஒரு இலக்கோ இருக்க வாய்பு இல்லை. எனக்கு தெரிந்த வரை இயற்கையை முழுமயாக நம்மால் விளக்கி சொல்ல முடியவில்லை அதனால் இயற்கையையும் கட்டுப்படுத்தும் ஒரு நபரை மனம் சிந்திப்பது இயல்பு. அல்லது இயற்கையே அப்படி எந்த ஒரு வகைதொகைக்கும் அப்பாற்பட்ட ஒரு நபராக சிந்திப்பதும் இயல்பு. இப்படி எல்லாம் சிந்திபது ஒரு மத நம்பிக்கை, இந்த நம்பிக்கையில் புனிதம் என்ற சொல்லுக்கு எந்த வேலையும் இல்லை. இது தான் எனது மத நம்பிக்கை, ஆத்திகரின் வழியில் சொன்னால் நான் ஒரு மத நம்பிக்கை அற்றவன். சுருக்கமாக சொன்னால் ஆத்திகரின் கடவுள் என்ற ஒரு எண்ணதிற்கும் என்னக்கும் எப்பவுமே சம்பந்தம் இருந்தது இல்லை.

இப்படி கருத்துகளை ஐன்சுடைன் அமெரிக்காவில் குடியேறிய பிறகு தெரிவித்திருந்தார். அதற்கு ஒரு ரோமன் கத்தோலிக வழக்குரைஞர் உலக ஆத்தீக மக்களின் சார்பாக கீழ்கண்ட கடிதத்தை எழுதுகிறார்.

கடவுளை ஒரு நபராக கருதவோ அல்லது உருவக படுத்தவோ முடியாது என்ற உங்களுது கருத்துக்கு மிகவும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துகொள்கின்றோம். இட்லர் செர்மேனியில் இருந்து உன்னையும் உனது கருத்தகளையும் யூதர்களையும் வெளியேற்றியது ஏன் என்று இந்த 10 ஆண்டுகளாக விடை தேடிய மக்களுக்கு, இட்லரின் செயக்கு காரணம் இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு இடம் இல்லாமல் போகவில்லை. இந்த கருத்தால் அனைத்து அமெரிக்க மக்களின் வெறுப்பையும் கொண்ட உனது பேச்சுரிமையை பறிக்கப்பட வேண்டும் என்று எழுதினார்.

பாவம் ஐன்சுடைன், இந்த கடிதத்தை படித்த அவரின் மனது அமெரிக்கவில் குடியேறியமைக்கு எவ்வளவு வருந்தி இருக்குமே கடவுளுக்கே வெளிச்சம். ஐன்சுடைனுக்கே இந்த கதி என்றால், பெரியாரின் வழித்தோன்றல்களை வலையில் விமர்சிக்கும் விமர்சனம் எல்லாம் சாதாரணமே.

Friday, October 26, 2007

காணாமல் போன 6.6 பில்லியன் பணத்தை தேடி கண்டுபிடித்தது சிங்கள இராணுவம்.

அனுராதபுர தாக்குதலில் காணாமல் போன 6.6 பில்லியன் பணத்தை சிங்கள இராணுவம் கடமையாக தேட ஆரம்பித்தது. அங்க்கு வந்திருந்த 21 பேரில் யார் எடுத்து வைத்திருப்பார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அதனால் எல்லோரிடமும் சோதனை நடத்தவேண்டும் என்று முடிவு கட்டி ஒவ்வோருவராக எடுத்து வந்து தேட ஆரம்பித்தார்கள்.

முதலில் அவர்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கி பைகளிலே மற்றும் இதர சுமைபைகளில் சோதனை நடத்தினார்கள். 6.6ல் ஒரு நயா பைசாவைக்கூட காண முடியவில்லை. பிறகு ஆங்காங்கே சிதறி கிடக்கும் வான் கலங்களில் ஏதும் இருக்குமோ என்று எரிந்து முடிந்திருந்த கலங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அங்கேயும் இங்கேயும் என்று தேடி எங்கேயும் அந்த 6.6 பில்லியன் பணம் இல்லை. பிறகு தனது கட்டளையகம் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். கட்டளையகமோ வந்தால் பணத்தோடு வாருங்கள் இல்லை என்றால் அப்படியே ஓடிவிடுங்கள் என்று கூறினார்கள் போலும்.

விரக்தியின் பிடியில் ஆட்பட்ட படையினர், எப்படியும் பணத்தை எடுத்துக்கொண்டு தான் போக வேண்டும் என்று விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் தேட ஆரம்பித்தனர். சுமாராக ஒரு 5 அல்லது 6 மணி நேரம் தேடியும் அந்த பணம் எங்க்கேயும் கிடைக்கவில்லை.

அப்போது தான் அவர்களுக்குள் இருந்த ஒரு அறிவாளி கூறினான், நாம் எவ்வளவு தேடினோம் எங்கே எங்கே தேடினோம் என்று அவர்களுக்கு தெரியாது மக்களுக்கும் தெரியாது. அதனால் நாம் கடினமாக தேடியதை அனைவருக்கும் சாட்சியோடு தெரிவிக்கவேண்டும் என்று.

அவன் சொன்னது அந்த தேடும் குழுவில் உள்ள அனைவருக்கும் சம்மதம் தெரிவிக்க, சாட்சிகளோடு புறப்பட்டார்கள் முகாம் நோக்கி. வழியிலே தோன்றியவர்கள் அனைவருக்கும் தாங்கள் எவ்வளவு கடினமாக தேடினோம் என்று விளக்கமாக விவரித்தபடி சென்றார்கள்.

வழியில் போவோரும் வருவோருக்கும் மட்டும் சமாதானம் சொன்னால் எப்படி என்று தெரிந்தவர்களுக்கும், அறிந்தவர்களுக்கும் பத்திரிக்கை மூலமும், மின்னஞ்சல் மூலம் தனது பக்கம் உள்ள நீதியை சிங்கள இராணுவம் எடுத்து சொல்லியுள்ளது.

ஆமாம் அந்த 6.6 பில்லியன் பணம் காணாமலேயே தான் போய்விட்டது. எங்கே போனது என்று யாருகுமே தெரியவில்லை. இதை படிக்கும் மக்களே உங்களது ஊர்களில் ஏதும் செத்த பாம்புகளை அகற்றவோ, காணாமல் போன பணத்தை தேடவோ வேண்டும் என்றால் சிங்கள இராணுவத்தை தொடர்புக்கொள்ளவும். அந்த ஒன்றும் அறியா அப்பாவி இராணுவத்தினர் வந்து தோடிக்கொடுத்து ஊழியம் புரிவார்கள். இவர்களது சேவையை பாராட்டி நொபேல் பரிசு கொடுத்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை, வெட்க்கம் கெட்ட உலகம் இது.

Saturday, October 20, 2007

வாழ்த்துவோம் இந்திய அணியை 20 - 20 வெற்றிக்காக.



166 ஓட்டங்களை மட்டுமே கொடுத்தற்கு முதலில் பாராட்டுகள். பிறகு தொக்கி தொக்கி நிற்காமால் நேராக இலக்கு நோக்கி ஆடிச்சென்றதையும். எதிரிலே ஆள் வெளியேரினாலும் என்ன என்று அடித்தாடிய இளம் வீரர்களுக்கு வாழ்த்துகள். மறுபடியும் ஒரு முறை அணிக்கு புதிய இளம் இரத்தத்தின் அவசியத்தை புரியவைத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்.

கடவுள் உண்டு இல்லை மனது, கணக்கு இடிக்குதே.

கடவுள் இல்லை என்று சொன்னால் நம்பிக்கை கொண்டோரின் மனது புண்ணாகும் போது, கடவுள் உண்டு என்று சொல்வதோடு மட்டும் இல்லாமல் இன்ன பிற காரியங்களை திருப்பி திருப்பி செய்து கொண்டும் இருந்தால் கடவுள் இல்லை என்று சொல்லுபவர்களின் மனது புண்படாதா. அல்லது அவர்களுக்கு இருப்பது மனதே இல்லையா. கணக்கு எங்கோ இடிக்கிறதே, சும்மா ஒரு வாதத்திற்கு கேட்போமே.

Thursday, October 18, 2007

ஸ்ரீவித்யா முதலாம் ஆண்டு நினைவு நாள்


உனது நினைவாய் நாங்கள்


உன்னை நோய்க்கும் தீய்க்கும் கொடுத்து
முடிந்தது ஓராண்டு

தனிமை போராட்டாம் நோயில் முடிந்து
பின் மரணத்தில்

இருந்த வரை உன்னை அழவைத்தது திரை
இப்போது நாங்கள்

கண்ணீரை பார்க்கவே பொருக்கவில்லை அன்று,
அதற்கும்கூட வழியில்லை

வாழ்கை போராட்டம் பொதுவாக, உனக்கோ
போராட்டமே வாழ்க்கை

இப்போதாவது சிரித்தாயே துன்பத்தை பார்த்து
அதுவே கடைசியாய்

இயற்கையயா விதியையா கடவுளையயா யாரை
நான் சபிக்க

அந்த ஒரு சிரிப்புக்காக அனைத்தையும்
மன்னித்து விடலாம்

இனி இருக்கும் காலத்துக்கும் என்ன
செய்யப்போகிறோம் நாங்கள்

என்னை போல் எத்தனை அனாதைகளை
விட்டு சென்றாயோ

தாயே தாங்கவில்லையே மனது, நின்றுவிடாதா
விதியின் பசி

நீயே இல்லை, இனி என்ன
நடந்தால் எனக்கென்ன.

Wednesday, October 17, 2007

இராமன் சீதை



ஆண்டாண்டு காலமாய் சீதையை தேடிய இராமன், கடைசியாக அவள் இருக்கும் இடம் தெரிந்ததும் அவளிடம் நோக்கி புறபட்டான். உடன் உள்ளோர் அனைவரை அழைத்துக்கொண்டு செல்லும் எண்ணம் அவனுக்கு இருந்தது. இருப்பினும் சீதை இருப்பதாக இருக்கும் இடம் உறுதி படுத்தப்பட்டதும் மற்றவர்களை அழைத்துக்கொள்ளும் திட்டத்தை தெரிவித்துவிட்டு புறப்பட்டான்.

நீண்ட நெடிய பயணத்திற்கு பிறகு அங்கு வந்தடைந்த அவர்கள் சற்றே இளப்பாரிவிட்டு மீண்டும் பயணிகலானார்கள். அப்படி இப்படி என்று ஒரு வழியாக வந்து செர்ந்த பிறகு. மற்றவர்களுக்கும் இந்த இடத்தை பற்றியும், வந்து சேரவேண்டிய நேரம் இடம் குறித்து தெரிவித்த இராமன் நாளைக்கு காலையிருந்து செய்ய வேண்டியவைகளை பட்டியலிட்டு உடன் வந்திருந்தவர்களிடம் வேலைகளை பிரித்து ஒப்படைத்துவிட்டு சற்று அயர்ந்தான்.

வேலைகளை பெற்றுகொண்டவர்கள், செயல் திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது என்று அவர்களுக்குள் பேசி உறுதி படுத்திக்கொண்டார்கள். நாளையை நினைத்து அனைவரும் உறக்கம் இல்லை தான். இருந்தாலும் அனைவரும் கண்களை மூடியவண்ணம் ஒரு தவமாக படுத்து இருந்தார்கள்.

நாடு விட்டு நாடு போகவேண்டிய தயாரிபானதால், பயண ஏற்பாட்டில் வரும் சிக்கள்களை களைந்தெரியவும். அங்கே அத்தனை மக்களையும் அழைத்து போக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அனைவரும் சேர்ந்து முடித்து அனைவரும் கிளம்பி வந்துக்கொண்டு இருந்தார்கள்.

அதிகாலையிலே அனைவரும் தயாரானார்கள். இராமனது தலைமையில் அவர்கள் அனைவரும் புறப்பட்டார்கள். இராமனது சார்பில் மறைந்திருந்து செய்திகளை சேகரிக்க சென்றவனிடம் இருந்து சேதி வந்தது. இவர்கள் அந்த மறைவிடன் நோக்கி பயனிகலானார்கள். மிகவும் அருகாமையில் இருக்கும் இடமாக இருந்தாலும் தகுந்த பாதுகாப்புடனும், எந்த சல சலப்புக்கும் இடமில்லாமல் அவர்கள் முன்னேருவது கடினமாத்தான் இருந்தது.

ஒருவழியாக மறைவிடத்திற்கு வந்தவர்கள், அங்கே இருந்தவனும் இவர்களை அழைத்து சென்று சீதை இருக்கும் இடத்தினை காண்பித்தான். பார்வைக்கு தெளிவாக தெரியவில்லை என்றாலும் சீதையை அவர்களுக்கு அடையாளம் தெரிந்தது.

இத்தனை ஆண்டுக்கு பிறகு பார்க்கும் இராமனுக்கோ உருகுலைந்து, தோற்றமே மாறிபோய் இருக்கும் சீதையை பார்த்ததும் அவன் பட்ட துன்பம் சொல்லிமாளாதது. இராமனை அப்படியே இருக்கவிட்டு விட்டு ஆகவேண்டிய காரியத்துக்காக தயாரானார்கள் அனைவரும். அங்கே அமர்ந்த வண்ணம் இராமன், சீதை இருந்த இடத்தையே பார்த்தவனாக இருந்தான்.

மனதுக்குள் சீதையின் இனிய நினைவுகள், பாலைவனமாகி போன இதியத்தில் புதிய உணர்வுப்புணல். இத்தனை ஆண்டு காலம் மனதிலே தேக்கி வைத்திருந்த ஆசை, கேள்வி, இன்ன பிற எல்லாம் தானாகவே ஒரு ஓட்டமாக ஓட ஆரம்பித்தது இராமனுக்குள். நகரும் ஒரு ஒரு நிமிடமும் அவனுக்கு உகம் உகமாக சென்றுக்கொண்டு இருந்தது. இங்கு வர புறப்பட்டவர்கள் எல்லாம் நாளைய காலையில் தான் இங்கு வந்தடைவார்கள், அது வரை இவர்களால் எந்த நடவடிக்கையுிம் மேற்கொள்ள முடியாது. பொருமை காத்தான் இராமன்.

மறைவிடத்தில் இருந்து தங்குமிடத்திற்கு திறும்பினார்கள் அனைவரும் அமைதியாக. இப்படி ஒரு குழு அங்கு வந்து போனதையோ, கண்கானிப்பில் ஈடு படுவத்தையோ சீதையோ, அங்கு இருப்பவர்களும் அறியமாட்டார்கள். இன்னமும் ஒரு பொழுது கழிந்துவிட்டால் காலையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள போகிறார்கள், ஆனால் இராமனை போலவே அனைவருக்கும் ஒரு பதட்டம்.

இராமனுக்காக சீதையின் தரப்பில் இருந்து வந்து உதவும் விதமாக வந்திருந்தவர்கள் காலையில் அனைவரையும் அழைத்துக்கொண்டு சீதையின் இடம் நோக்கி சென்றடைந்தார்கள். இடத்தையும் அவர்களையும் தூரத்தில் இருந்து காண்பித்துவிட்டு அவர்கள் சென்று மறைந்தார்கள்.

திடீர்ரென தோன்றிய அனைவரையும் பார்த்த சீதை கல்லாக உறைந்தாள், இராமனை ஏறேடுத்துப்பார்க்கவும் அவளுக்கு சக்தி இல்லைதான். சீதையும் இராமனையும் விட்டு விட்டு அனைவரும் விலகி சென்றார்கள். ஆண்டாண்டு காலமாய் அழுது அழுது இனி அழுகையே எப்பவுமே வாரா என்று இருந்த விழிகளில் நீரோடுவதையும் கவனிக்க முடியாமல் பூமியை மட்டுமே பார்த்துகொண்டு இருந்தாள்.

அமைதியை கலைக்கும் விதமாக இராமன் கேட்டான் ஏன் சீதா இப்படி செய்தாய், நான் இல்லாத நேரத்தில் ஊர்கலவரத்தில் உனக்கு அப்படி நேர்ந்ததால் உன்னை விட்டு ஓடி விடுவேன் என்று நினைதாயா என்றான் மேலும். அது வரையில் அமைதிகாத்தவளால் அதற்கு மேலும் முடியவில்லை. அவனது கைகளை பிடித்துக்கொண்டு அழுதுதீர்த்தாள் வாய்விட்டு.

அழுகைக்கு அப்பால் எவ்வளவோ பேசினார்கள் இராமனும் சீதையும், கடைசியாக சீதை சொன்னாள் என்னால் ஊரில் வந்து உங்களோடு வாழ முடியாது. அதுவும் ஊர் என்னை பற்றி என்ன பேசினாலும் பரவாயில்லை உங்களை பேசுவதை எனது காதால் கேட்க்கமுடியாது என்று உறுதியாக முடித்தாள்.

பதிலுக்கு இராமனும், அப்படி என்றால் ஊரை அங்கேயே விட்டு விட்டு இங்கேயே வாழ்ந்துவிட்டால் போகிறது என்றான். பதிலுக்கு எவ்வளவு தான் வாதாடினாலும் கடைசியில் வாதத்தில் தோற்று போனாள் சீதை. சீதையும் இராமனையும் மறுபடியும் ஒரு புது குடித்தனம் அமைத்துவிட்டு சென்றார்கள் இராமனது நண்பர்களும், சீதையது நண்பர்களும் மன நிறைவாக அமெரிகாவில் இருந்து இந்தியாவை நோக்கி.

Sunday, October 14, 2007

சோ இராமசாமியால் மட்டும் எப்படி இப்படி பேச முடிகிறது

குமுதம் இனைய இதழில் சோ அவர்களி பேட்டியை வைத்துள்ளார்கள். கேள்வி பதில் நிகழ்சியான அதில் 2 கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் அவர் இப்படி பதில் தருகிறார்.

1) தமிழை எல்லா கல்வி நிலையங்களிலும் 1 முதல் அனைத்து வகுப்பிற்கும் கட்டாயா மொழிப்பாடமாக வலியுருத்தும் சட்டம் வடிவமைக்கபட்டு செயல்படுத்தவுளது இதை பற்றி என்ன சொல்லுகிறீர்கள் கேள்விக்கு அவர், குழந்தைகளுக்கு இது அதிக சுமை, அவர்களுக்கு ஏற்கனவே அதிகம் படிக்க வேண்டிய கட்டாயம் இதில் இந்த மொழிபாடத்தை வேறு படிக்கவேண்டுமா இது அவரது பதில்.

2) இந்தி மொழியை பற்றி குறிப்பிடும் போது, அந்த மொழியை படிக்கமுடியாமல் செய்துவிட்டது அரசு. தமிழகம் தவிர அத்துனை மா நிலமும் படிக்கிறது இங்கே படிக்கமுடியாமல் செய்து விட்டார்கள், தவறான மொழிக்கொள்கை என்று குறிப்பிட்டார் அடுத்த 2 நிமிடங்களில்.

தமிழ் குழந்தைகளுக்கு அதிக சுமையாக அமையும் போது அதும் வீட்டிலும், வெளியிலும் எங்கும் பேசும் மொழியை, ஒரு மொழிப்பாடமாக படிக்கும் போது சுமையாக தெரியும் என்று சென்னவர், இந்தி மொழியை பள்ளியில் படிக்கமுடியாமல் செய்துவிட்டார்கள் என்றும், இன்னமும் அதிக கடிதங்கள் இதை பற்றி அவரது அலுவலகத்துக்கு வருவதாகவும் சொல்கிறார்.

எனக்கு அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை, உங்களில் யாருக்காவது புரிந்தால் சொல்லவும்.

Saturday, October 13, 2007

ஏ ஆர் ரகுமானின் இசை ஆலிவுட்டில் திருட்டு


லார்டு ஆப் தி வார் என்று ஒரு ஆங்கிலப்படம், உலக தீவிரவாதிகளுக்கு ஆயுதம் வாங்கித்தரும் ஒரு தரகனின் கதையை படமாக கொண்ட படம் அது.

இதிலே கதையின் நாயகன், ஒரு ரூசிய சரக்கு விமானம் முழுவதும் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ஆப்ரிக நாட்டிற்கு போகும் வேளையில் இன்டர்போல் அலுவலர்கள் அதை மோப்பம் பிடித்து அவனை கையும் களவுமாக பிடிப்பதற்கு ஆப்ரிகா பறந்து வருவார். அப்போது போர்விமானத்தின் உதவியுடன் இவனது விமானம் தரையிறங்க வைப்பார்கள்.
அப்படி இறங்கிய விமானத்தில் இருக்கும் ஆயுதங்களை வழிப்போக்கர்களிடன் எல்லாம் கொடுத்து எடுத்துப்போங்கள் என்று இன்டர்போல் வரும் முன் கொடுத்து அனுப்பிவிட்டு உனக்கும் பெப்பே உங்க அப்பனுக்கும் பெப்பே காட்டிவிட்டு சிரிப்பான். பதிலுக்கு அவர்கள் மாட்டுவடீ இன்னைக்கு இல்லனா என்ன வேற என்றக்காவது மாட்டாமலா போவாய் என்று கேட்டுவிட்டு போவார்கள்.
இந்த இடத்தில் தான் ரகுமானது இசையை பின்னனி இசையை அங்கு பின்னனியில் சேர்த்து இருப்பார்கள், அதுவும் எந்த இசை தெரியுமா, பம்பாயில் கலவரங்கள் வந்து ஓயும் போது ஒரு கருத்திசை வந்து வந்து போகும் அனேகமாக படம் முழுவதும். அந்த இசையைத்தான் இங்கே ரகுமானின் பெயரை அந்த படத்தின் தளத்திலே வேறு எங்கேயுமே கானும். கண்டிப்பாக இது ஒரு இசை திருட்டேதான். படம் வந்தது 2005இல் இன்னமும் இது பற்றி எங்கேயும் பேசாமலும் கண்டிகாமலும் இருப்பது வியப்பாக இருக்கிறது. இனிமேல் யாரும் ரகுமானின் படல் அங்கே கேட்டமாதிரி என்றெல்லாம் இனிபேசி அலய வேண்டாம்.

Tuesday, October 2, 2007

உச்ச நீதிமன்ற தீர்ப்பும் அது தரும் படிப்பினைகளும்.

என்ன நடக்கிறது இந்தியாவில், இருப்பது இந்தியாவிலா அல்லது பாக்கிஸ்தானிலா!. காவிரியில் நீர் திறந்துவிட சொல்லி உச்ச நீதிமன்றம் கர்னாடகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் கர்னாடகமோ ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கலாகாது என்று அதன் முதல்வரும், நீதி மன்றத்தின் உத்தரவிக்கு அடிபணியக்கூடாது என்று அதன் எதிர்கட்சி தலைவர்கள் சொன்னார்கள் சொன்ன படியே நடந்தும் வருகிறார்கள் ஆண்டாண்டு காலமாக.

டான்சி நில வழக்கு ஊழலிழ் உச்ச நீதிமன்றம், அப்போதைய முதல்வரை மன்னித்து அவர் செய்த தவறுக்கு திருந்துதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது, அத்தனை சாட்சியங்களும் முதல்வருகு எதிராக நிரூபிக்கபட்ட பிறகு.

ஒரே கையேழுத்தில் ஒரு இலச்சத்திற்கும் மேலானா அரசு ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பட்ட உத்தரவினை தடை செய்யவேண்டும் என்று எதிர்கட்சிகள் நடையாய் நடந்தும், சிதம்பரமும், அவரது துணைவியார் நளினி சிதம்பரமும் கிட்டதட்ட 2 வாரங்க்களுக்கு மேல் வாதாடியும் எப்படி தீர்ப்பு அமையுமோ என்று ஏங்கி தவித்தபின் மறுபரீசீலனை செய்ய அரசை கேட்டுக்கொண்டது உச்ச நீதிமன்றம்.

பம்பாய் தொடர் வெடிகுண்டு வழக்கில் தடா நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவுடன் சிறையில் அடக்கபடும் முன்னரே உச்ச நீதிமன்றத்தில் அவனுக்கு பிணையவிடுப்பு அதுவும் எதற்கு தண்டனையின் நகல் அவரது மொழியில் மொழிபெயர்த்து கொடுக்க அவருக்கு தீர்ப்பு என்ன என்று விளங்கவில்லையாம், ஐயோ பாவம்.

பாபரின் மசூதி இடிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் முடிந்தும் அந்த வழக்கை விசாரிக்கவும் இல்லை, மேலும் அந்த இடிப்பு யாரால் நடத்தப்பட்டது என்று அமெரிக்கவில் உள்ளவனுக்கு கூட தெரியும் ஆனால் உச்ச நீதி மன்றத்துக்கு தெரியாமல் போய்விட்டது பாவம்.

ஆயிரம் ஆயிரம் கோடியாக பொதுமக்களின் பணத்திலே ஒரு பண சாம்ராஜியம் அமைத்தான் அர்சத்து மேத்தா, அதை விசாரித்த நீதிமன்றம் சாட்சிகள் சரிவரை நிரூப்பிக்க முடியாததால் அவனையும் விடுவித்தது.

முத்திரைத்தாள் மோசடி மன்னன் வழக்கு இன்னமும் ஆண்டாண்டு காலமாக விசாரணையிலே உள்ளது, வழக்கை விசாரிக்கவும் இல்லை ஏன் என்றும் கேட்க்கவும் இல்லை.

முன்னால் பிரதமர் பி வி நரசிம்மா ராவ் மீது எண்ணிகை தெரியாத அளவிற்கு வழக்குகள் இருந்தது. வழக்கு தொடுத்தவும் இறந்து அவரும் இறந்த பிறகும் இன்னமும் அந்த வழக்குகள் நிலுவையிலே தான் உள்ளது.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் அத்தனை உண்டு......

ஆனால் இவைகளுக்கு எல்லாம் கவலை பட்டாத நீதிமன்றம் தமிழகத்தில் நடந்த கடையடைப்பை நடத்தக்கூடாது என்று இரவோடு இரவாக ஒரு தீர்ப்பும், அதோடு மட்டும் நிர்க்காமல் அடுத்த நாள் கடையடைபு நடந்தது என்று இவர்கள் சொல்ல, நீதிமன்றமோ ஆட்சியை கலைத்தால் என்ன என்று கேட்கிறது. அதன் கேள்விகள் தமிழகத்திலே சட்டதின் ஆட்சிதான் நடக்கிறதா என்ற விகடம் வேறு.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி பார்த்தால் தமிழகம் தவிர வேறு எந்த மாநிலம் எதும் செய்யலாம் தவறில்லை ஆனால் தமிழகம் செய்தால் தவறு அதும் கருணாநிதி அரசு செய்தால் தவறு ஆட்சியை கலைக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியின் போது எது நடந்தாலும் நிலத்தை திருப்பிக்கொடுதால் மட்டும் போதும்..............

திரைபடங்களில் காவலர்களையும், நீதிபதிகளையும் பல படங்களில் கோமாளிகளாக காட்டும் போது கோபமாக வரும், ஆனால் அவர்கள் காட்டுவது சரிதான் போல, இந்த் தீர்ப்பை பார்க்கும் போது.

ஆமாம் மக்களின் தேவைக்காக நீதிமன்றம் செல்லாத அதிமுக இந்த கடவுள் சங்கதியில் மட்டும் தட்டவேண்டிய இடம் பார்த்து தட்டி காரியம் சாதிக்கும் மாயம் என்ன கடவுள் தான் தெரிவிக்க வேண்டும்.

Sunday, September 23, 2007

இந்தியாவின் முகங்கள்(புகைப்படங்களுடன்)

இந்திய காலாச்சார சங்கம் நடத்திய "இந்தியாவின் சாரம்" நிகழ்ச்சியில் மத்திய இல்லினாய் தமிழ்சங்கத்தின் சார்பில் "இந்தியாவின் முகங்கள்" நிகழ்ச்சி.

இல்லினாய் பல்கலைகழகம், சேம்பை-அர்பனா வாளாகத்தில் உள்ள கிருட்துவ இளஞர்கள் சங்கம் கட்டத்தில் நிகழ்ச்சிகள் நடந்தது. முதலில் இந்தியாவின் கலாச்சாரம் பற்றிய விளக்கவுரை நிகழ்ந்தது. அதை தொடர்ந்து இந்தியாவின் முகங்களாக மத்திய இல்லினாய் தமிழ் சங்க மழழைகள் பங்கு பெற்றார்கள். அவர்கள் கொண்ட கருத்தும் வேடங்களும் இங்கே.
செல்வன் தரண் பகத்சிங்காக
செல்வி நவீணா வங்காள பெண்


தாண்டியா இளைஞனாக பிருத்திவி


மகாக்கவி பாரதியாக செல்வன் அனிரூத்

நேரு மாமாவாக செல்வன் ஹர்ஷா

பரத கலைஞராக செல்வி பூர்ணிமா நாகரீக சிறுமியாக செல்வி பிருத்திகா

கேரளத்து நங்கையாக செல்வி திவ்யா
விவேகானந்தராக செல்வன் கிருஷ்ணா

நவநாகரீக யுவதியாக செல்வி சஞ்சனா


வேடத்திற்கு தகுந்தாற் போல் அவர்கள் ஆங்கிலத்தில் உரை நிகழ்தும் காட்சிகளும் மற்றும் இதர படங்கள்.









Saturday, September 22, 2007

நிம்மதி

அவர்கள் இருவரும் தம்பதியராய் கோவிலுக்கு வந்து இருந்தார்கள். மூலவர் முதல் சனீசுவரர் வரை எல்லோரையும் பார்த்துவிட்டாகியது, இருந்தாலும் அவர்களுக்கு கோவிலை விட்டு செல்லும் எண்ணம் வரவில்லை. அங்கேயே அமர்ந்தார்கள், பூசைக்கு கொண்டு வந்த படையல்களை உண்டு விட்டு அமைதியாக கோவிலின் பூங்காவிற்குள் சென்றார்கள்.

அங்கேயும் செடி செடிகளாய் பார்த்து பார்த்து சலித்தபின் மறுபடியும் மண்டபத்தில். பிறகு மேலும் ஒரு முறை எல்லோரையும் வலம் வந்தார்கள். இந்த முறை படையல் இல்லை என்றாலும் திருநீரும், குங்குமம், பூக்கள் என்று வந்தது, இவைகளை பகிர்ந்து கொண்ட பிறகும் நேரம் சென்றதாக அவர்களுக்கு தோன்றவில்லை போலும். என்ன செய்யலாம் மனது எங்கும் கேள்வி...

இப்போது வளாகத்தில் உள்ள விலாமரம், செவ்ரலிிமரம், மஞ்சரலி என்று மரங்களை சுற்றி வந்தார்கள். மறுபடியும் மண்டபம், இப்போது அவர் கேட்டார் என்ன போகலாமா. அதற்கு அவள், இன்னும் கொஞ்சம் சென்று போகலாமே பார்வையிலேயே பதில். அதை எதிர்கொள்ள முடியாமல் அமைதியானார்.

நேரே சென்று புளியோதரையும், தியிர் சாதமும் கொண்டுவந்து அருந்த கொடுத்தார். கையோடு தண்ணீர் முகந்து வர சென்றார். அவர் சென்ற திசையையே பார்த்துகொண்டு இருந்தவளுக்கு கண்கள் கலங்கவே செய்ததுதான். இருந்தாலும் எங்கே பார்த்துவிட போகிறார் என்ற எச்சரிக்கை துடைத்துகொண்டு இன்முகத்துடன் இருந்தாள் அவரின் வருகையை நோக்கி.

தண்ணீர் குழாயிலிருந்து கொட்டுவதை பார்த்துகொண்டு இருந்தவருக்கு மனது பிசைந்தது தான். இருந்தாலும் ஒரு ஆண் அழுவதா அதுவும் பொது இடங்களிலே என்ற கர்வம் எல்லாம் அவருக்கு இல்லை எங்கே அவளுக்கு தெரிந்துவிடுமோ பயந்தார். புறப்பட்ட கண்ணீர் அங்கேயே ஆவியானது. புன்னகையுடன் மண்டபத்தை நோக்கி விரைந்தார்.

உணவுக்கு பிறகு மெதுவாக வினவினார் போகலாமா, அப்பவும் இல்லை தான் அவளது கண்களால். இப்போது அவருக்கு சலிப்பு வரவில்லை என்றாலும் மனதில் கவலை தொற்றிகொள்ள தவரவில்லை.

மண்டபத்தில் இருந்தவர்களை கோவில் வேலையாள், ஐயா கொஞ்சம் அப்படி தள்ளி போகிறீர்களா என்றவன் மண்டபத்தை கூட்டி பெருக்க ஆரம்பித்தான். இப்போது அவளின் பிடி கொஞ்சம் தளர்ந்து இருந்தது. மறுபடியும் வினவினார், அவரை பார்த்துக்கொண்டே மண்டபத்தில் இருந்து மூலவரின் இடத்திற்கு நடந்தாள், இவரும் பின் தொடர்ந்தார்.

உள்ளே நின்றவளை ஏற இறங்க பார்த்த பூசாரி, மறுபடியும் இன்முகத்துடன் எல்லா படையல்களையும் கொடுத்து அனுப்பினார். பெற்றுக்கொண்டவள் மறுபடியும் மண்டபத்தை நோக்கி நடந்தாள்.

அங்கே மண்டபத்தில் தரையில் சமக்காளம் விரித்து வில்லுப்பாட்டு கலைஞர்கள் ஒரு கதையை கதைக்க தயாராகிக்கொண்டு இருந்தார்கள். சற்று நின்றவள் பின் மண்டபத்தை நோக்கி சென்றாள்.

அங்கே அதற்குள்ளாகவே சிறியவர்களும் பெரியவர்களுமாக கூட்டம் இருந்தது. இருவரும் சென்று ஒரு நல்ல இடமாக பார்த்து அமர்ந்தார்கள். அருகே இருந்தவர்களுடன் படையல் பொருட்களை பகிர்ந்துகொண்டார்கள். வாங்கிய சிறுவர்கள் அவைகளை இரகசியமாவும் வேகமாகவும் உண்பதை இவள் கண்டும் காணததாக இரசித்துக்கொண்டு இருந்தாள்.

அதற்குள் தயாரான வில்லுப்பாட்டு கலைஞர்கள், கதையை துவக்கினார்கள். வணக்கத்துக்கு பிறகு இராமன் கோசலைக்கு சென்று சீதையை கரம்பிடித்த கதையை ஆரப்பித்தார்கள்.

இராமனின் பெருமைகளையும், வீரமும், வசீகரமும், தெய்வீகமும் என்று பன்முகமாக இருந்தது முதல் இருபது நிமிடங்க்களுக்கு. பிறகு ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் துவங்கினார்கள். சனகனின் அரசவைக்கு இராமன் வருவதும், அதை சீதை நோக்குவதையும் கம்பனும் வால்மிகியும் என்று மாறி மாறி அழகாக வருணித்துகொண்டு இருந்தார் அந்த வில்லுப்பாட்டு கலைஞர்.

இலக்கிய ஆழமும் அவைகளை விளக்க திரையிசையின் பாடல்களுமாக மேன்மேலும் சென்றுகொண்டு இருந்தது. கதையில் இருந்து மீண்டவராய் அவளை கவனித்தார். குழந்தைபோல் கதை கேட்பதையும், நய்யாண்டிகளுக்கு வாய்விட்டு சிரிப்பதை பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தார்.

இத்தனை தெய்வீகம் பொருந்திய இராமன் விதியின் வசப்படுவதையும், கடவுளின் மனித பிறப்பாக இருந்தாலும் மனித பிறவிக்கே உண்டான ஊழ் வழி செல்லல் என்ற தத்துவத்தை விளக்கும் விதமாக இராமகாவியம் அமைந்து இருப்பதை அருமையாக விளக்கிக்கொண்டு இருந்தார்கள்.

இராமன் பட்டம் சூட்டும் நேரத்தில் ஆரம்பிக்கும் சோகம், இலங்கையிலிருந்து நாடு திரும்பி பட்டம் ஏற்கும்வரை இராம தம்பதியர் அடைந்த துன்பங்களுக்கு அளவே இல்லை.

கதைகளின் நடுவே ஆங்காங்கே நடைமுறை வாழ்க்கைக்கும் இராமயணத்திற்கும் உள்ள தொடர்புகளை மிகவும் அழகாகவும், ஆழமாகவும் சொல்லிக்கொண்டே போனார்கள்.

இராமனின் கதை இனிதே முடிந்தவுடன், இவர் அவளை பார்க்க அவள் போகலாம் என்று கண்களாலே சொல்ல. நிம்மதி பெருமூச்சுடன் அழைத்துகொண்டு வாசலுக்கு வந்தார். பூக்கடையில் இருந்த காலணிகளை பெற்றுகொண்டவர், தவறாக நினைக்கப் போகிறார் என்று பணம் கொடுக்க முயல. கடைக்காரரோ பரவாயில்ல போய்வாங்க புன்னகையுடன். இருவரும் தெருவிலே இறங்கி நடந்தார்கள்.

போன மாதம் நடந்த விபத்தில் ஒன்றே ஒன்று கண்னே கண்னு என்று வளர்த்தெடுத்து, பார்த்து பார்த்து திருமணம் முடித்து, கடைசியில் விபத்தில் தம்பதியராக மகனையும் மருமகளையும் ஒருங்கே விதியின் கைகளுக்கு கொடுத்த அவர்களின் சோகம் சொல்லி மாளாதது தான்.

இத்தனை காலமாய், அழுவதை தவிற வேறு எதையும் தெரியாமல், கண்ணீரும் கம்பலையுமாகவே இருந்தவளை தனக்குள் இருக்கும் சோகத்தையும் மறந்து அவளை தேற்றுவதையே மூச்சாக செயல்பட்டவருக்கு இன்று நெஞ்சின் பாரம் இறங்கி இருந்தது.

என்ன என்னவோ செய்து ஆருதல் தேடிபார்த்தும் கிடைக்காத நிம்மதி இப்போது கிடைத்திருந்தது இருவருக்கும். ஆருதலாக இருந்தது. அது நாள் தொட்டு தினமும் அந்த கோவிலுக்கு வருவதையும், தெய்வகாரியங்களில் அதிகமாக தங்களை ஈடுபடுத்தி கொண்டார்கள் அந்த தம்பதியினர்.

எங்கே அந்த பெரியார்தாசன், கூப்பிடுங்கள் அவரை. பெரியார் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

மூச்சுக்கு 300 தடவை, காஞ்சி சங்கரையும், இந்து மத கோட்பாடுகளையும் சவாலுக்கு மரியாதைகெட்ட வார்த்தைகளில் விளிக்கும் பெரியார்தாசனுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நீங்கள் ஆவலாய் எதிர்பார்துகொண்டு இருந்த வாய்ப்பு இதோ உங்களின் முன்னால். கோபம் வந்தால் கேட்க்க மாட்டேன் என்று ஏக வசனத்தில் பேசியவரே இப்போது மேடை ஏறும் பார்ப்போம்.

இராமாயணம் என்ன இராமாயணம், மொத்தமாக இந்து மதத்தையே எதிரிலே ஆள் யாரும் இல்லா வேளையிலே திட்டி தீர்தவரே எங்கே இப்போது வந்து பேசும் பார்ப்போம். துணைக்கு எத்தணை பெரியார் நம்பிகளை அழைத்து வந்தாலும் சரி தைரியமாக மேடை ஏறவும்.

இந்த கூட்டத்தில் வந்தால் பதம் பார்த்துவிடுவார்கள் என்ற பயம் இருந்தால் தொலைக்காட்சியில் விவாதத்தை வைத்துக்கொள்ளலாம். தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும் அல்லாது அகில இந்தியா, ஏன் உலக அளவிலும் கூட செய்தியாளர்கள் கூடுவார்கள். அவர்கள் முன்னிலையில் விவாதத்தை நடத்துவோம். வந்து வேதத்தில் ஒன்றும் இல்லை என்று கடலூர் கூடத்தில் பேசியதை போல், வேதத்தையும் அதன் பொருளையும் அவையோருக்கு முன் அடுக்கவும். நீதி தெரிந்தவர்கள், நீதியுரைப்பார்கள்.

அவராக முன் வராவிட்டாலும் பெரியார் பக்தர்களே அவரை தைரியபடுத்தி அழைத்துவரவும். ஆவலுடன் எதிர்பார்கிறோம் விவாதகளதிலே உங்களை.

Friday, September 21, 2007

அன்று அயோத்தி மண்டபம், இன்று கபாலீசுவரர்

பழனியம்மாளின் ஒரே இலட்சியம் தனக்கு என இருக்கும் அவளது ஒரே மகனை நன்றாக படிக்கவைத்து, இந்த அன்றாடான் காட்சி பிழைப்பை விடுத்து மாத சம்பளம் நிலைக்கு முன்னேருவதே. அவளது எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றவாரே அவளது மகன் முருகனும் சிறிய வகுப்பில் இருந்தே மிகவும் அருமையாக படித்தும் வந்தான். இந்த சின்ன வயதிலேயே இத்தனை பொறுப்பா என்று ஆச்சரியப்படாத ஆட்களே இல்லை.

சின்ன வயதில் இருந்து முருகனும் கிருஷ்ணனும் நல்ல நண்பர்கள் இருவரும் அருகே உள்ளே நகராட்சி பள்ளியில் சின்ன வயதில் இருந்து ஒன்றாகவும் நன்றாகவும் படித்தார்கள். தற்பொழுது இருவரும் அண்ணா பல்கலையில் பொறியியல் பயின்று வருகிறார்கள். கிருஷ்ணனுக்கு வீடு மயிலாப்பூரில் இவனுக்கு அங்கு வீடு இல்லை என்றாலும் பழனியம்மாளுக்கு பொழப்பு அங்கே தான். அந்த கபாலீசுவரர் கோவில் வாசலில் பூக்களையும் பூசை பொருட்களையும் விற்றுவருகிறாள்.

இவனும் காலையில் கல்லூரிக்கு கிளம்பும் முன்னும், பின்னும் கடைக்குவந்து பழனியம்மாளுக்கு துணையாக இருந்துவிட்டு இருவரும் இரவில் தான் வீடு திரும்புவார்கள். அன்றைக்கும் அப்படி தான் கடைக்கு சென்றடைந்தான். எப்போதும் தன்னுடன் பேசிக்கொண்டும் கடைப்பக்கம் வந்துவிட்டும் செல்லும் கிருஷ்ணன் அன்று ஏனோ வண்டியை விட்டு இறங்கியதும் விரைவாக சென்று மறைந்தான்.

கபாலீசுவரர் கோவில் குளக்கரையும் ஏதோ ஒரு அசாதாரணமான ஒரு சூழல் நிகழுவதை அவனால் உணர முடிந்தது. என்னவாக இருக்கும் ஒன்றும் தோன்றாதவனாக கடைக்கு சென்றான். பழனியம்மாளோ வியாபாரம் ஏதும் இல்லாமல் வேடிக்கை பார்த்தும், வானொலி இசையிலும் பொழுதைகழித்துக்கொண்டு இருந்தவளுக்கு மகனை பார்த்ததும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

எப்போதும் அதிகம் பேசாதவளாக இருந்த பழனியம்மாள், அன்று முருகனிடம் அவளுக்கு இவ்வளவு சோதனைகளும் வேதனைகளும் அனுபவிக்கவேண்டிய கட்டாயம் ஏன் வந்தது என்று தன்னையும் அறியாமல் சொல்லி தனது மன சுமையை அவனிடன் இறக்கிவைத்தாள் 20 ஆண்டுகள் கழித்து. இந்த உரையாடலில் உரைந்து போனவனுக்கு, பேச்சும் ஓடவில்லை சிந்தனையும் தோன்றவில்லை. சிறிது நேரத்திற்கு அங்கே இருவரும் இருந்தும் இருவருக்கும் பூமியில் அனாதையாக விடப்பட்டதாக ஒரு உணர்வு.

முருகனுக்கோ அம்மா சொன்ன வார்த்தைகளையும் அதனால் அம்மா அனுபவித்த துன்பங்களும் அவனது மனதை அழுத்தமாக அழுத்தியது. வேலைகளை எதுவும் அவனால் மேற்கொள்ள முடியாமல், அம்மாவின் அருகே அமர்ந்தவாரே இருந்தான். இலங்கை வானொலியின் இசைத்தொகுப்பும், பசியும் அவனுக்கு தூக்கத்தை வரவழைத்தது. தன்னையும் அறியாமல் அன்னையின் அருகில் அமர்ந்தவாரே தூங்கிபோனான்.

அந்தி மறைந்து இரவின் தொடக்கத்தை காட்டிக்கொண்டு இருந்தது. யாரோ இரண்டு மூன்று பக்தர்கள் வந்து பூசைக்கான பொருட்க்களை வாங்கி சென்றார்கள். சில்லரைகளை சரி பார்த்துக்கொண்டு இருந்தவள், இன்னமும் அதிகமானோர் கோவில் வளாகத்தை அடைவதை பார்த்தவள். வாடிப்போகும் என்று நிழலுக்கு என்று மறைவாக வைத்து இருந்த பூவை எடுத்து முன்னால் வைப்போம் என்று முனைகையில் முருகனின் தூக்கமும் கலைந்தது. கலைந்தவன் அம்மா நான் எடுக்கிறேன் என்று எடுத்து கொடுத்ததுடன் அங்கே ஏற்கனவே இருந்த பூக்களின் மேல் தண்ணீர் தெளித்துவைத்தான்.

திடீர் என வரத்துவங்கிய பக்தகோடிகள் ஆங்காங்கே அப்படியே கூட்டமாக நின்றுக்கொண்டு யாருக்காகவோ காத்துக்கொண்டு இருந்தது. அதில் இருந்த ஒரு சிலர் மட்டும் கபாலீசுவரரை தரிசித்துவிட வேண்டி கற்பூரமும் கையுமாக கோவிலுக்கு சென்றுக்கொண்டு இருந்தார்கள். நேரம் கூட கூட, இன்னமும் கூட்டம் கோவிலுக்கு. காலையில் இருந்து காற்றாடிக்கொண்டு இருந்த வியாபாரம் மிகவும் பரபரப்பாக நடந்துகொண்டு இருந்தது. அம்மாவும் பிள்ளையுமாக பம்பரமாக குழன்றுக்கொண்டு இருந்தார்கள்.

எங்கிருந்தோ திடீர் என கிருஷ்ணன் அங்கு கடைக்கு வந்தான். அம்மாவை பார்த்து புனகைத்த அவன் முருகனை தனியே அழைத்து பேசிவிட்டு மீண்டும் மறைந்தான். பேசிவிட்டு வந்தவன், அம்மாவிடம், இன்னைக்கு கடை போதும் வாங்க சீக்கிரம் வீட்டிற்கு போவோம், அம்மாவை அழைத்தான். பதிலுக்காக காத்துக்கொண்டு இல்லாமல். கடையை மூடும் விதமாக அனைத்தையும் கண் இமைக்கும் வேளையில் ஒழித்து ஒருவழியாக கடையை சாத்தி விட்டு வண்டியை பிடிக்க சென்றார்கள்.

கண்ணுக்கு எட்டியவரையில் அங்கும் இங்கும் எங்கும் காவியாகவே தோன்றியது. அம்மா அவனிடன் சொன்னாள், என்னடா இப்படி கடை பரபரப்பாக போகின்ற போது சட்டுன்னு மூடிட்டு வந்தே. 9 மணி வரைக்கு இருந்து இருந்தால் உனக்கு பரீட்சைக்கு பணம் கட்டும் அளவிற்கு விற்று இருக்கும் கெடுத்தியே கோவித்துக்கொண்டாள். இவனுக்கோ, போருந்தும் இல்லை, சீருந்துகளும் இல்லாமல் இருப்பதின் மர்மம் விளங்க தொடங்க்கியது.

அம்மாவின் கைகளை பிடித்துக்கொண்டு சந்து பொந்துகளில் நடந்தான். எவ்வளவு நேரம் தான் நடந்தாலும் மேற்கு சைதாப்பேட்டை சென்று அடைவது இயலாத காரியமே. இருந்தாலும் இந்த இடத்தைவிட்டு போனால் போதும் என்று நடந்தான். நடை ஓட்டமாக ஆனது, பழனியம்மாவாள் நடக்கவே முடியவில்லை இருந்தாலும் ஒன்றும் புரியாதவளாய் அவன் அழைத்து செல்லும் பாதையாக அவனுக்கு இனையாக நடக்க முனைந்துகொண்டு இருந்தாள்.

அங்கே அந்த வழியாக ஓட்டமும் நடையுமாக செல்லும் அவர்களை ஒரு கூட்டம் கவனித்தது. முதலில் கேலியாக பேசியவர்கள், இவர்கள் பயந்து ஓடுவதை பார்த்ததும் வேகம் அவர்களுக்குள் கூடியது. எட்டி இருந்தவர்கள் அவர்களை வளைக்க தொடங்கினார்கள். அப்போது அங்கு இருந்தவனின் கைபேசி ஒன்று அலரியது. சேதியை கேட்டவன், ஐயா ஆரம்பிக்க சொல்லிட்டாரு வேலைய கவனிங்க சொல்லிவிட்டு மற்ற குழுவிற்கு தெரிவிக்க கை பேசியை இயக்கிகொண்டு இருந்தான்.

சுற்றி வளைத்தவர்களில் ஒருவன் முருகனின் தலையில் ஓங்கி ஒரு அடி அடிதான் கட்டையால். மற்றவர்கள் அனைவரும் இராமா, கிருஷ்ணா, உன்னை நிந்தித்தவர்களை இனியும் விட்டு வைத்தோமா பார் என்று அவனை அங்கு அடி அடி என்று பிளந்து எடுத்துக்கொண்டு இருந்தனர். நடப்பதை பார்த பழனியம்மாளுக்கு மயக்கம் வந்தது. மெல்ல நகர்ந்த கூட்டம், முதல்வர் ஒழிக, இராம இராஜியம் வாழ்க வாழ்த்துகள் வின்னை பிளந்துக்கொண்டு இருந்தது.

கண்விழித்து பார்க்கிறாள், அருகாமையில் இரத்த வெள்ளத்தில் முருகன் மீதம் இருக்கும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அம்மாவின் கைகளை விடாதவனாக துடித்துக்கொண்டு இருந்தான்.

20 ஆண்டுகளாக துரத்திய விதி இன்னமும் அவளை நிம்மதியாக விடுவதாக இல்லை போலும். மகனை மடியிகிடத்தி செய்வது அறியாமல் அழத்துவங்கினாள். 20 வருடமாக மகன் முன் அழுவதில்லை என்று இருந்தவள் பொத்துக்கொண்டு அழுதாள்.

20 வருடமாக கபாலீசுவரர் வாசலிலேயே தவமாககிடந்தவள், மகன் ஒருவனே அவளது பிடிப்பி, வாழ்க்கை என்று இருந்தவளுக்கு என்ன சொல்லி அழ, வாயில் வார்த்தைகள் கூட சரியாக வரவில்லை அவளுக்கு. என்ன என்னவோ சொன்னாள் என்வென்று அவளுக்கே புரியவில்லை.

தூரத்தில் சென்ற அந்த காவிபட்டாளம் இவள் விழித்துக்கொண்டு அழுவதை பார்த்ததும், சாட்சிகளை விட்டு வைத்தால் பிறகு பிழையாக போய்விடும். ஒரு 4 பேர் மட்டும் இவளை நோக்கி பாய்ந்தார்கள்.

எங்கோ இருந்து வந்தவனாக பாய்ந்தான் கிருஷ்ணன் குறுக்கே, அவர்களை பார்த்து கைகூப்பி நின்றவன் அவர்களது இசைவுக்காக காத்து இருக்காமல் கைபேசியை இயக்கினான். கிருஷ்ணனை பார்த்த அந்த காவிக்கூட்டம் கலைந்து சென்றது.

மறுநாள் காலையில் ஊடகங்களில் தோன்றிய அந்த தேசிய தலைவர், சாதுக்களின் தலைவர் அவர். அடுத்து எப்போது தேர்தல் வரும் அப்படி வந்தால் மக்கள் யாருக்கு வாக்குகள் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளில் மும்முரமாக இருந்தார். அவரின் செய்தியாளர்கள் கூட்டத்தில் எடுத்ததாக தினமணியில் ஒரு 40 படங்களும், தேசிய பத்திரிக்கைகளில் அவர் ஆளும் கட்சிக்கு எதிராக விடும் சவாலும் படமும்மாக மாறி மாறி காண்பித்த வண்ணம் இருந்தது.

அந்த படங்களும் செய்திகளும் முருகனுடனான அவனது 20 ஆண்டு கால பழக்கத்தையும், சேதி தெரிந்தும் அவனால் அவனது நண்பனை தருணத்தில் காப்பாற்ற முடியாமல் போன கையாலாக தணத்தனை கேலியும் கிண்டலும் செய்துகொண்டு இருந்தது. இரவுகளில் தூக்கத்தை இழந்த கிருஷ்ணனுக்கு, இராமனையோ இராமயணத்தையோ கேட்டாலே அந்த இரத்த வாடையும் வன்முறையுமே மனதில் வந்து நிலைகுலைந்து போவான்.

இரண்டு மாதங்களுக்கு பிறகு அங்கே கபாலீசுவரர் வாசலில் அம்மாவும் பிள்ளையும். அதே கடை, அதே வியாபாரம். ஆனால் முருகனால் இனிமேல் கட்டையின் துணையில்லாமல் நடக்க முடியாது. மண்டையில் பலமாக பட்ட அடியினால் அவன் பேசும் திறனையும் பார்வையும் இழந்து இருந்தான். கடையில் அவன் பார்த்துவந்த வேலைகளை இப்போது கிருஷ்ணன் பார்த்துவருகிறான் பழனியம்மாளுக்கு துணையாக. இவள் சுமந்த சுமைகள் போதவில்லை போலும் விதிக்கு. முருகனுக்கு உடலளவிலும், பழனியம்மாளுக்கு மனதளவிலும் ஒரே நிலைமை தான். என்று தனியும் இந்த இரத்த தாகம் மதம் பிடித்த அரசியலுக்கு.

Thursday, September 20, 2007

இந்து கோவில் நிலம் மண்டலமய அதிகார குழு விசாரணையும், பத்திரிக்கை செய்தியும் ஒரு பார்வை

http://www.news-gazette.com/news/local/2007/03/16/hindu_temple_discussion_to_continue

இந்த விசாரணைக்கு வந்திருந்தவர்களுக்கு நன்றாகத்தெரியும் இந்துகளின் தரப்பில் கேட்க்கபட்ட அத்தணை கேள்விகளுக்கும் அந்த வழக்குரைஞர் எனக்கு சரியாக தெரியவில்லை, அது பொறியாளரைத்தான் கேட்க்கனும். இது வரையில் சிறு மற்றும் பெரு நகரங்களில் எல்லாம் இப்படி எல்லாம் இருக்கிறது என்று சொன்னாரே தவிற இங்கே நாம் காட்டிய கிராம சூழழில் உள்ள உதாரணங்களை எடுத்துக்காட்டவோ தொகுத்து சொல்லவோ அவரால் முடியவில்லை. அது மட்டும் அல்லாது, சிவ மொனார்டு அவர்களின் கடிதம் வாசிக்கப்பட்டதையோ அதைத்தொடர்ந்து வாசித்தவர் சொன்ன வாசங்களோ செய்தியில் இடம்பெறவில்லை.

மேலோட்டமாக பார்த்தால் சுருக்கமான செய்தியாக தெரியும் ஆனால் உண்மையில் இது சுருக்கிய செய்தி என்று அங்க வந்து இருந்தவர்களுக்கு தெரியும்.

மக்களாட்சி என்றும், எங்களுக்கு அடுத்த பெரிய மக்களாட்சி இந்தியா என்றும் செய்திகளிலும் ஊடகங்களிலும் விளம்பரபடுத்தப்பட்டாலும். அமெரிக்காவின் உண்மை முகம் அதைவிட முக்கியமாக வாத்தைக்கு வார்த்தை இந்து இந்து என்று விளித்து எழுதி இருப்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். நேரிலே பார்க்கும் போது எப்படி இருக்கிறீர்கள், நலமா, வாரகடைசி எப்படி போனதுன்னு அன்போடும் பண்போடும் விளிக்கும் அன்பின் அடையாளத்தை இங்கே காண்கின்றோம். ஒட்டு மொத்த அமெரிக்காவையும் சொல்லவில்லை, அங்கே விசாரணைக்கு வந்து நமக்கு சாதகமாக வாதாடிய அந்த நல்ல உள்ளங்களுக்கு நாம் என்றும் கடமை பட்டுள்ளோம்.

அதே வேளையில் பத்திரிக்கையின் இத்தகைய ஒருதலை பட்ச்சமான போக்கு சரியில்லையே. செய்தியை படிக்கும் மற்ற குடிமக்களது எண்ணத்தில் நாம் அங்கே நாசவேலைகளை புரியவும், இந்தியானா ஜோன்சிலே காட்டும் காளிகோயில் வழிபாட்டினை(படத்தின் செய்தி அதுவே உண்மைக்கு புரம்பான தகவல்) அதைபோல எதுவோ நடக்கும் அதனால் எங்களால் மாலையில் வெளியில் அமர்ந்து குடியும் கும்மாளமுமாக இருக்க முடியாது என்ற அளவிற்கு வெளியிட்ட செய்தியை என்ன என்று சொல்லுவது.

அருகில் அளவுக்கு அதிகமாக வாகன போக்குவரத்து அந்த இடத்தின் சூழ்நிலைக்கு பங்கம் விளைவிக்குமாம், ஆனால் அதுவே ஐ 57ல் நொடிக்கு 20 வண்டிகள் போகும் சத்தமும், அணி அணியாக அங்கே செல்லும் வண்டிகள் மட்டும் அழகு சேர்க்குமாம். அங்கே இப்படி தான் சொன்னார்கள்.

என்ன என்னவோ அழகு வார்த்தைகளில் சொன்னாலும் இடம் இல்லை, தரமாட்டேன், விடமாட்டேன், வராதே, பொடுரதை சாப்பிட்டுவிட்டு படுத்து இரு, என்ற வசனங்களின் பொருளில் அழகு இருக்கவே இருகாது.

வால்மார்டு வரலாம், கடைகள் வரலாம், பெட்ரோல் கடை வரலாம், சம்பந்தமே இல்லாமல் அங்கே புதிய ரேடார் மேடை வரலாம், கிராமத்து விவசாயத்துக்கும் விமானத்துக்கும் என்ன சம்பந்தமோ அது வரலாம், அதிலே கிராமத்துக்கு சம்பந்தமே இல்லாமல் தொழிலதிபர்கள் வரலாம், கிராம சம்பந்தமே இல்லாத கோட்டும் சூட்டும் போட்டு ஹம்மர்ரும், இன்ன என்ன பிற சொகுசு வண்டிகளில் வரலாமே அத்தனையிலும் வரலாம், கிராமத்துக்கு சம்பந்தமே இல்லாத தொலைக்காட்சி, தொலைபேசி முதல் அத்தனை நவ நாகரிக விசயங்களும் வரலாம், ஆனால் சாமின்னு சொல்லிக்கிடு ஒருத்தனும் அந்த பக்கம் போயிடக்கூடாது. அப்படி போனா இவர்களின் நிம்மதி கெட்டுப்போகுமாம், இவர்களின் நிம்மதி எதிலே இருக்கிறது பாருங்கள்.

கிராமம், கிராம அழகு, கிராம பாரம்பரியம் என்றும் சொன்னார்கள். அங்கே கட்டி இருக்கும் வீட்டையும், அவர்கள் வாழும் முறையும் உடுத்தும் முறையும் பாருங்கள், என்ன வித்தியாசம் என்று. பிறகு என்ன கிராமம் கிராம சூழல்.

இவர்கள் இருப்பது மேட்டு நிலம், கோவில் நிலமோ மட்டநிலம், மட்டநிலத்தில் கோவில் கட்டினால், மழை நீர் வடியாதாம். இவர் வீட்டு வீட்டி நீரேற்றி அன்றாடம் ஓடும்மாம். கோவில் என்ன தண்ணீர் போகும் வடிகாலில்லா கட்டப்போகிறார்கள் என்று கேட்டால் இல்லை என்றார் அந்த வழக்குரைஞர். பின்னே நீர் எங்கே தேங்கும்? புன்னகை, வழியல், திருட்டு முழி இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் அந்த வாதியின் வழக்குரைஞரின் பதிலை.

ஏப்பிரல் 26ல் பார்க்கலாம் என்ன சொல்லுகிறார்கள் என்று, நமது தரப்பு பிரதிவாதம் அப்போது தான் துவங்குகிறது.

ஏப்ரலில் நடந்த விசாரணையில் அனுமதி வழங்கப்பட்டு விட்டது. ஆனால் அது வரைக்கும் இவர் அடித்த கூத்தை என்னவென்று சொல்ல.