Sunday, December 31, 2017

பாசகவின் அடுத்த இரகசிய திட்டம் - Plan C

பாசக இது வரையில் தமிழகத்திற்காக வகுத்த திட்டங்கள் முறையே

1) திட்டமிட்டு தாங்களே வெடி குண்டுகளை வெடிக்க வைத்து அவைக்கள் வெடித்தற்கு பாக்கிட்தானம் தான் காரணம், மேலும் அந்த குண்டுகள் தமிழகத்தில் வெடிக்க வேண்டும் என்றால் பாக்கிட்தானத்தின் கை தமிழகம் வரை நீள்கிறது பாரீர். ஆகவே அந்த கொட்டத்தை அடக்க பாசக வந்தால் தான் ஆச்சு என்று அத்வானி தமிழகம் வந்து சென்ற இடங்களில் எல்லாம் அவர் பாதுகாப்பான தூரம் சென்றதும் வெடித்து ஓலமிட்டு பார்த்தது. - Plan A

2) இந்த பிசக்கு ஆட்டத்தை பார்த்த அதிமுக தலைவி நீங்க என்ன மதம் சம்பந்தமாக செய்வது, அதைவிட சிறப்பாக நாங்களே செய்கின்றோம் என்று மதமாற்ற தடுப்பு சட்டம், கோவிலில் ஆடு கோழிகள் பலியிட தடை என்று அவரின் அறிவிப்புகள் நீண்டுக்கொண்டே போக அம்மையாரின் மறைவு வரை பாசக தைத்து வைத்திருந்த அந்த முண்டா சட்டையை ஆணியில் மாட்டிவிட்டு காத்துக்கொண்டு இருந்தது. அம்மையாரின் மறைவுக்கு பிறகு அதிமுகவை மிரட்டி பாசக - B அணியாக தமிழகத்தில் ஓராண்டுகள் நடத்தி இது வரையில் கையெழுத்து ஆகாமல் இருந்த ஒப்பந்தளில் எல்லாம் இரகசியமாக கையெழுத்து வாங்கி தமிழக இயற்கை வளங்களையும், மனித வளத்தையும், சிறு மற்றும் குறு விவசாயிகள் முதல் தொழில்கள் வரை அழித்து, இனி நாங்க தான். இப்படி தான் மத மற்றும் சாதி அடாவடி செய்வோம் என்று மிக தைரியமாக ஊடங்களில் உளரி கொட்டிய விதத்தை பார்த்த மக்கள் பாசகவை நோடாவிற்கும் கீழே தள்ளி வேடிக்கை பார்த்தார்கள்.

அப்படியே தமிழகம் முழுவதும் எடுத்த இரகசிய அறிக்கையில் தமிழிசையும், எச்ச சர்மாவும், பொன்ராவும் அளவுக்கு அதிகமாக பாசக தலைமையிடம் புளுகி பதவிகளையும் வசதிகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்கள் என்று தெரியவர. இது வரையில் சுதந்திரமாக சுற்றி வந்த சசிகலாவை இன்றைக்கு தான் குற்றம் புரிந்தவர் என்று கண்டுபிடித்தது போல் சிறையில் தள்ளி தலையில்லா அதிமுக ஆட்டத்திலேயே இல்லை என்று ஆக்கி சென்னை இடை தேர்த்தலை சந்தித்து பார்த்தார்கள். மொத்தல் 2 மாணவர்கள் பயிலும் வகுப்பில் நான் 2வது மதிப்பெண் அல்லது 2ஆம் இடம் என்று சொல்லிக்கொள்ளலாம் என்று அந்த 3வரும் சொல்ல செயலாற்றி நோட்டாவிடம் குட்டு வாங்கி நின்றார்கள். - Plan B

3) இனி பட்டது எல்லாம் போதும் தமிழகத்தை பொறுத்த அளவில் ஆன்மீகம் கொண்டாடும் ஒரு தலைமையை தேடி அவருக்கு அந்த முண்டா சட்டையை சட்டைக்கு மேல் மாட்டிவிட்டு நோயாளி சால்வையையும் போர்த்திவிட்டு இவரும் வட நாட்டுகாரர், தேசிய நீரோட்டத்தில் தமிழகத்தை அழிக்க பிறந்தவர் ஆகவே இவரை தான் நீங்கள் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று காத்து இருந்தார்கள் இது வரையில். எப்படியாவது தமிழக பாசகவின் தலைமையாக பொறுப்பு ஏற்க வைத்துவிட்டோம் என்றால் அவரை காட்டி விற்காத சரக்கை எல்லாம் விற்று விடலாம் என்று எண்ணிகை இல்லாத அளவிற்கு தூது விட்டும் பார்த்தார்கள்.

ஒவ்வொறு முறையும் இந்த எச்ச சர்மா பேச்சும் பேச்சுக்களால் வரவிறுக்கும் தலைமைக்கும் அதற்கு பிறகு வரும் தலைவர்களையும் பாதிக்கும் வண்ணம் ஆபாசமாக நடந்தும் பேசவும் செய்தார். ஆகையால் நேரடியாக தலைமை ஏற்றால் கங்கை அமரனுக்கு நேர்ந்த கதிதான் தனக்கும் நேரும் என்று தெரிந்துகொண்டவர் இப்போது தனி கட்சி என்று ஓட்டு வாங்கி பிறகு நான் பாசகவோடு இணைத்து கொள்கின்றேன் என்று ஓர் இரவில் தமிழகத்தில் பாசகவின் அரசை கொண்டுவர பலிகடாவை தயார்படுத்திவிட்டார்கள் பாசகவினர். - Plan C

தனி கட்சி தொடங்கிய சிரன்சீவி கடைசியில் காங்கிரசில் கரைந்து இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. கட்சி துவங்கிய போது பேசிய வீர வசனக்கள் எல்லாம் மக்களும் அவரும் மறந்து போன பரிதாம் தான் நினைவுக்கு வருகின்றது. மேலும் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட விசயகாந்து சென்ற தேர்தலில் சந்தித்த பரிதாப தோல்வியும் அதற்கு அழகாய் வழிவகுத்து கொடுத்த அவரின் துணைவியாரின் நாகரீகமற்ற மேடைப்பேச்சும் நினைவுக்கு வந்து போகாமல் இல்லை.

கடைசியாக தமிழக்தில் பாசகவிற்கு முண்டா சட்டையை மாட்டிவிட ஆள் கிடைச்சாச்சு........

அப்போ முதல்வர் பதவியும் பாசகவின் முண்டா சட்டையும் இவருக்கு தான் என்றால் இரும்பு பெண்மணி நிர்மலா சீத்தாமனும், நெடு நாட்களாக தன்னையும் முதல்வராக்கி விடுவார்கள் என்று சப்புக்கொட்டி கொண்டு இருந்த எச்ச சர்மா மற்றும் தமிழிசை எல்லாம் இனி என்ன செய்வார்கள். அவ்வளவு தானா இனி இந்த புது தலைவருக்கு நோயாளி சால்வை போர்த்திவிட்டு பின்னால் நின்றுக்கொண்டு டச்சப் பாயாக்க இருக்க தயாராகிவிட்டார்கள் போலும். வாழ்த்துக்கள் எச்ச சர்மா, தமிழிசை மற்றும் நிர்மலா சீத்தாராமன். மன்னிகனும் பொன்னார் இந்த போட்டியில் எல்லாம் எப்பவும் இருந்ததில்லை.

திருவாளர் துக்ளக் இம்சையரசர் 23ம் புலிக்கேசி மோடி 31 நள்ளிரவில் ஏதோ ஒரு அதிர்ச்சி இந்தியாவை பெற்று எடுக்க போவதாக முன்னவே சொல்லி இருந்தார். எந்த கருமத்தை செய்ய போகிறாரோ, ஏற்கனவே ஆதாரை வைத்து தில்லுமுல்லாடிய ஏர்டெல் நிறுவனம் 190 கோவரை சுருட்டிவிட்டு வழக்கு தொடர்ந்ததும் கொடுக்கிறேன் என்று பம்மாத்து காட்டுகிறது. 1771 கோடி ரூப்பாய் ஓர் ஆண்டில் குறைந்த வைப்பு தொகை இல்லமை மற்றும் மற்ற இந்தியாதிகளுக்காக ஏழை எளிய மக்களிடம் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்ட பணம் என்று மார்தட்டி சொல்கிறது எசுபிஐ வங்கி. இன்னும் என்ன என்ன கருமாந்திரத்தை எல்லாம் மீதம் இருக்கும் 1 1/2 ஆண்டில் சந்திக்க வேண்டி இருக்குமோ..............

Thursday, December 28, 2017

திருட்டுபயலே 2 - I.T. (2016) படமும்

I.T. (2016)

திருட்டுபயலே 2 படம் நன்றாக வந்திருக்கிறது. என்னடா தமிழில் இப்படி ஒரு கதை திரைக்கதையா என்று வாய்பிளக்க வைத்த படம்.

கடைசியில் பார்த்தால் இந்த ஆங்கிலபடத்தை மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு தமிழ் படமாக எடுத்து இருக்கிறார்கள்.

பிரசன்னாவின் பாத்திரம் ஒரு மனம் பிழன்ற இளைஞனின் சிரித்த முகத்திற்கு பின்னால் இருக்கும் கொடூரம் அழக்காக மாற்றி அமைத்து இருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் வரும் அந்த பெரும் பணக்காரர் வேடத்தை பிரித்து அரசியல்வாதிகள் முதல் அடி பொடிகள் வரை பிரித்து பாத்திரங்களாக அமைத்து கொடுத்து இருக்கிறார் சுசி கணேசன்.

ஆங்கிலத்தில்  அந்த பணக்கார குடும்பத்தின் இளம்பெண்ணை படம் பிடித்து அவளது பள்ளியின் தோழர்களுக்கும் அவளது அப்பனுக்கும் அனுப்பும் கொடூரம் தமிழில் தவிர்க்கப்பட்டு இருக்கின்றது.

ஆங்கிலப்படத்தில் அனைத்தையும் வைபையில் இணைத்து கண்காணிக்க முடிவெடுத்தால் அடுத்தவன் எப்படி எளிமையாக உள் நுழைந்து பாடாய்படுத்துவான் என்று காட்டி இருப்பார்கள். தமிழிலோ பேசுபுக்கில் தேவையே இல்லாமல் இன்றைக்கு திருப்பரங்குன்றத்தில் டீ குடித்தேன் வரை உடனடி தகவல்களை வலையேற்றும் நண்பர்கள் பாதிக்கப்பட்டவர்களாக காட்டி இருக்கிறார்கள்.

இன்னும் இது போல் ஏராளமான படங்கள் இருக்கின்றது தமிழில் எடுக்க அவைகளையும் பரிசீலிக்கவும், வாழ்த்துக்கள்.

Wednesday, December 27, 2017

ஆளுனரிடம் எதற்கு மனு கொடுக்கப்படுகின்றது - அவர் அப்படி என்ன தான் செய்வார்

சமீப காலமாக ஆளுனர் மாநிலத்தின் வளர்ச்சி பணிகள் சரிவர நடக்கின்றனவா என்று நேரில் சென்று ஆய்வு நடத்துகிறாராம்.

சரி அவரது செயல் வண்டியில் நடத்துனர் சரிவர எல்லோருக்கும் சீட்டை கொடுத்து காசை வாங்குகிறாரா இல்லையா என்று சென்று சோதிப்பது போல் தான் என்று எடுத்துக்கொண்டாலும் கூட.

அவர் செல்லும் இடங்கள் எல்லாம் கால் கடுக்க நின்று ஆளுனரிடம் மனுக்களை கொடுக்கிறார்கள் மக்கள். அப்படி இது வரையில் பெறப்பட்ட மனுக்களுக்கு இது வரையில் எது ஒன்றுக்காவது பதில் கிடைத்து இருக்கிறதா என்று இது வரையில் வெளியிட்டது இல்லை. நன்றாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள் இந்த செய்தியை நாம் எழுதிய உடன் அமெரிக்காவுல மைகேல் சாக்சன் கூப்டாங்கோ சப்பான்ல சாக்கிசான் கூப்டாங்கோ என்று பாசகவின் அடிபொடிகள் எழுதுவார்கள்.

பிறகு ஏன் போகும் இடங்களில் எல்லாம் மனுக்களை ஆளுனர் பெற்றுக்கொள்கின்றார், நடப்பது அதிமுக நடத்தும் அரசு, ஆளுனரின் அரசு அல்ல. அப்படி வாங்க பெறும் மனுக்கள் தகுதியானவையா இல்லை நிராகரிக்கப்பட வேண்டியவைகளா என்று முடிவெடுக்க வேண்டியது அதிமுக அரசு ஆளுனர் அல்ல.

இந்த மனுக்கள் எல்லாம் ஆளுனர் பொது மக்களிடம் இருந்து பெற்று உள்ளார் ஆகவே இவைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கலாமே தவிர இதை செய் என்று உத்தரவிட ஆளுனருக்கு அதிமுக அரசு பதவியில் இருக்கும் வரை அதிகாரம் கிடையாது.

பிறகு ஏன் போகும் இடமெல்லாம் ஆளுனர் மனுக்களை பெறுகின்றார் என்று கேளுங்கள், உங்களுக்கு மட்டும் இரகசியமாக சொல்வார், பாசக மக்களின் மனுக்கள் மட்டும் தான் ஆளுனரால் ஏற்றுக்கொண்டு நடவடிக்கைக்கு வற்புறுத்த முடியும் செய்யவும்படும். அதை பார்க்கும் பொது மக்கள் ஆளுனர் தான் ஆட்சியில் இருப்பதாகவும் அவரிடம் சொன்னால் எல்லாம் சரியாகி விடும் என்று ஒரு இணை அரசாங்கம் அவர் நடத்துகிறார் என்று மக்கள் நினைக்கட்டும் என்ற கேவலமான செயலாக இல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்.

போகும் இடங்களில் எல்லாம் கழிப்பறைகள் கட்டி இருக்கிறதா இல்லையா என்று சரிபார்க்கும் ஆளுனருக்கு மா நிலத்தில் GST என்ற பெயரால் நடத்தப்படும் கொள்ளையை கண்காணிக்கவோ பரிசீலனை செய்யவோ அவகாசமோ அவசியமோ இல்லையே ஏன். ஏன் என்றால் அவை செய்ய அவருக்கு உத்தரவு வரவில்லை. கொடுத்த உத்தரவு மக்கள் முன்னால் தோன்றி என்னவோ அவர்தான் அரசாங்கம் நடத்துவதாகவும் அதிமுக அமைச்சரவை என்னவோ ஒரு பொம்மை அமைச்சரவை என்று மக்களுக்கு நிறுவு என்று அளித்த உத்தரவை செவ்வனே செய்யும் அடிமையாக அழகாக நடந்துக்காட்டியுள்ளார் பன்வாரிலால்.

துல்லிய தாக்குதல் மோடி சொல்லி நடத்தப்படவில்லை போலும் - பாசக

மோடி ஒரே ஒரு முறை இலங்கைக்கு தொலை பேசியில் கூப்பிட்டார் உடனே இலங்கை தூக்கில் போட இருந்த மீனவர்களை தாயகம் திருப்பி அனுப்பினார் அன்று சுசாமி அளந்துவிட்டது.

இன்று அதிமுக மக்களின் வீடுகளை குறி வைத்து மட்டும் வருமான வரி சோதனைகள் வந்த போது, சட்டம் அதன் கடமையை செய்கின்றது. அது எப்படி தேர்தலில் போட்டியிடாமல் செய்வது போல் காரியங்கங்கள் நடக்கின்றது என்றதிற்கு - மைய அரசுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட எல்லாம் செய்வோம் - இன்றைக்கு தமிழக பாசக மக்கள் சொல்வது.

இப்படி மோடியை கடவுளுக்கு சமமாகவும் ஒரு அவதார புருசனாக சித்தரிப்பதில் பாசகவின் அடி பொடிகளுக்கு அப்படி ஒரு அலாதி இன்பம்.

சரி இப்படி எல்லாம் அவதாரம் எடுத்த மோடியும் அவரது அரசும் இந்த அலைகற்றை வழக்கில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என்று தீப்பு சொல்கின்றதே என்ற கேள்விகளுக்கு

சட்டத்தின் அதிகாரங்களில் பாசக அரசு தலையிடுவது இல்லை என்று சொல்லி சிரிக்கிறார்கள்

அது எப்படி ஒரு சில காரியங்களில் மட்டும் மோடி அதிகார வரம்பையும் மீறி மூக்கை நுழைக்க முடிகின்றது, அதாவது அவருக்கு வேண்டிய காரியங்களில் மட்டும்.

மற்ற இடங்களில் அவருடைய அதிகாரம் திடீர் என கானாமல் போகின்றது.

அப்போ துல்லிய தாக்குதல் இராணுவம் வழக்கமாக மேற்கொள்ளும் ஒரு செயல் அதை ஈரேழு 13 லோக அளவிற்கு ஊதி அது இந்த அவதார புருசனால் மட்டுமே முடிந்த காரியம் என்றும் அவர் இல்லை என்றால் இது எல்லாம் சாத்தியமே இல்லை என்றும் அழக்கா புருடாவிட்டு புளங்காகிதம் அடைந்திருக்கிறது.

பொய்யையும் தற்பெருமை தம்பட்டம் தவிர வேறு எதையும் அறியாத பாசகவும் அதன் மோடியும் இன்னும் பிறவும்.

Monday, December 18, 2017

நிர்மலா சீத்தாரமன் தமிழக முதல்வர் - என்னமோ இல்லவே இல்லன்னீங்க

குசராத்து மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பாசக ஆட்சியை பிடித்தது போல் தமிழகதிலும் ஆட்சியை பிடித்து இரும்பு பெண்மணி நிர்மலா சீத்தாராமனை தமிழக முதல்வராக உட்கார வைக்கும்.

போட்டியில் இருந்த 2 திராவிட கட்சிகளில் ஒன்றை விலைக்கு வாங்கியாச்சு, அதிமுக கட்சி உருப்பினர்கள் எல்லாம் பாசக கட்சியின் உருப்பினர்களாக மாறிவிட்டார்கள்.

இப்போது எல்லாம் அதிமுக தொண்டர்கள் எல்லாம் இப்படி தான் பேசிக்கொள்கிறார்கள்

என்ன அண்ணென்சி அந்த பேப்பரசி கொஞ்ச குட்ங்கசி, காலையிலசி கப்பிசி டீசி குடிச்சீங்களாசி

அந்த கால காங்கிரசுகாரர்கள் எல்லாம் காந்திகுல்லா போட்டுக்கொண்டு தாங்கள் காங்கிரசுகார்கள் என்று அறிவித்துக்கொண்டது போல் இனி அதிமுககாரர்கள் எல்லாம் தந்தி தொகாவில் தோன்றும் தொகுப்பாளர்கள் போல் ஒர் குளிர்கால உடையில் தான் இனி வேகாத வெயிலிலும் வலம் வருவார்கள்.

அதிமுக மக்கள் இனி காலைவேலைகளில் இனி நாசுடா தான் உண்பார்கள், மதியம் சாவலும் தாலும் உண்பார்கள். இரவில் ரோட்டியும் தாலுமக்கினியும் கூட டிக்கா கோழியோ அல்லது கோப்தா கோழியோ தான் உண்பார்கள். மறந்தும் இட்லி தோசையோ அல்லது சாதம் சாம்பார் என்று சொன்னாலோ உண்டாலோ தமிழகத்தில் உள்ள தனியார் மெக்காலே பள்ளிகளில் தமிழில் பேசினால் ஒரு வார்த்தைக்கு இவ்வளவு என்று வசூலிப்பார்கள், பிள்ளைகளின் பெற்றோர்களும் பெருமையாக அந்த தொகையை கட்டுவார்கள். அது போல இந்த செய்கைகளை கண்காணிக்க எச்சி இராசா மற்றும் தமிழிசை சார்பில் ஆட்கள் போடப்பட்டுள்ளது.

 நிர்மலா சீத்தாரமன் அரசுக்கு துணையாக இருந்து எல்லாம் செய்துகொடுக்கும் படி மைய அரசு எச்சி இராசாவையும் தமிழிசையையும் கேட்டுக்கொண்டுள்ளார்கள். அதிமுகவை வாங்கியதில் முக்கிய பங்கு வகித்ததை போல் இந்த மாற்ற முயற்சியிலும் பங்கு எடுத்துக்கொள்ளும்படி பணிக்கப்படுள்ளார்கள். எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான், பிறகு சங்கிகளின் சிங்கிகளே தைரியமான பங்கு எடுக்கும் போது இந்த கண்காணிப்பு எல்லாம் இருக்காது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

விரைவில் குசராத்து மாடலில் தமிழகத்தையும் உலகின் உச்சிக்கு கொண்டு செல்வதாக பாசக சபதம் பூண்டுள்ளது. மக்களே ஆதரவு கொடுத்து உதவுங்கள்.

பின் குறிப்பு, உங்கள் வீட்டில் உள்ள கழிவறைகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் தமிழகத்தின் ஆளுனர் மாளிகையை நாடவும். அங்கே இந்த துறையை ஆய்வு செய்யவும் நிவாரணம் அளிக்கவும் மைய அரசின் சார்பாக ஆட்களை நியமித்து இருக்கிறார்கள். யாரையும் நம்புவதாக மைய அரசின் ஆளுனர் இல்லை அவரே நேரில் வந்து ஆய்வுகளை மேற்கொண்டு உடனுக்குடன் நிவாரணம் வழங்குவார். இந்த பொன்னான வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளவும்.

Friday, December 15, 2017

முள்ளும் மலரும் - இளையராசா - மான் இனமே பாடலும்

இளையராசா இசையமைக்கும் படங்களில் ஒரு பாடல் படம் முழுவதும் பல்வேறு தாளங்களிலோ அல்லது பல்வேறு இசைக்கருவிகளிலோ வரும். உதாரணமாக புதுக்கவிதை படத்தில் வெள்ளை புறா ஒன்று என்ற பாடல் படத்தில் 20 இடங்களிலாவது வந்து போகும். பழைய நினைவுகளையும் நெருக்கங்களையும் நினைவூட்டும் காட்சிகள் அந்த துண்டு இசை மனதை வருடுவதை அந்த பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கும் போது காட்சிகள் மனதில் வந்து போவதை உணர முடியும்.

முள்ளும் மலரும் படத்தை பொருத்த அளவில் அந்த படத்திற்கு இளையராச தேர்ந்து எடுத்துக்கொண்ட பாடல் தான் இந்த மான் இனமே பாடல்.

ஆனால் படத்திற்கு விமர்சனம் எழுதும் ஒருவரும் இது வரையில் இந்த பாட்டை குறிப்பிடாமல் எழுதுவது சோகமே.

படம் துவக்கத்தில் பெயர் போடும் இடந்தில் வரும் இந்த பாடல், அந்த அண்ணன் தங்கை பாச நெருக்கடியில் எல்லாம் ஒலிக்கவிட்டிருப்பார் இளையராசா.

குறிப்பாக அந்த கடைசி காட்சியில் ஓடி வந்து அண்ணே என்று கட்டிக்கொள்ளும் அந்த தருணத்தில் ஒரு 6 அல்லது 10 நொடிகளுக்கு வந்து போகும் அந்த பாடல் அந்த பாச நெருக்கடியை அழுத்தமாக பதிவு செய்யும். அங்கு மட்டும் என்று இல்லை படத்தில் எங்கே எல்லாம் அண்ணன் தங்கை பாச நெருக்கடி வருகின்றதோ அங்கே எல்லாம் இந்த பாடல் ஒரு 5 , 10 நொடிகளில் உணர்சிகளை தூவி செல்லும்.....

எனக்கு தெரிந்த வரையில் எழுத்துக்கு வரும் பாடலை படம் முழுவதும் வரும் தீம் இசையாக அதிகம் இல்லை அதில் இந்த படமும் ஒன்று.

மேலும் சோபாவை பொருத்த அளவில் அவளின் ஆனந்தத்தை விவரிக்க ஒரு பின்னணி இசை வரும் அந்த இசையின் தாக்கத்தில் பின் நாளில் சூரியகாந்தி படத்தில் அதே சோபா பாத்திரம் இனி வாழ்க்கையில் என்ன செய்ய போகின்றோன் என்று தடுமாறும் காட்சிகளை கனவுகளே என்று ஒரு மான்டேசு பாட்டில் படம் பிடித்து இருப்பார்கள். இசை என்னவோ மலேசியா வாசுதேவன் ஆனால் இந்த முள்ளும் மலரும் இசையில் அந்த கனவுகளே பாடல் வந்திருப்பதை கவனிக்கமுடியும்.

Thursday, December 14, 2017

மோடி - வரபோகிற ரபேல் விமான ஊழல் விசாரணைக்கு முட்டு கொடுப்பதா இந்த வாரா கடன் விளக்கம்

மோடி திருவாய் மலர்ந்தாலே பொய்யும் புரட்டும் தான் வரும் போல. அதுவும் ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்வதில் வல்லவர்கள் இந்த மோடியும் அவரின் அடிபொடிகளும்.

இன்றைக்கு செய்திகளில் வங்கியின் வாராக்கடன்களுக்கு காரணம் சென்ற முறை ஆட்சியில் இருந்த காங்கிரசு ஆட்சி தான் காரணமாம். அதுவும் பாசக அரசின் அனைத்து திட்டங்களையும் அதானிக்கும் அம்பானிக்கு மட்டுமே கொடுப்பதை போல் காங்கிரசு அரசு வங்கியின் வாரா கடன்களை ஒரு குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும் கொடுக்கும் படி நிர்பந்திக்கப்பட்டார்களாம், அதாவது இப்போது மைய அரசு திட்டங்கள் அனைத்திற்கும் செலவாகும் பணம் அனைத்தும் அதானிக்கும் அம்பானிக்கும் கொடுக்கப்படுவதை போல் என்று சொல்கிறார்.

மேலும் இது வரையில் மூத்ரா திட்டத்தின் கீழ் 4 இலட்சம் கோடி வரை இளைஞர்களுக்கு கடன் கொடுத்துள்ளதாம் பாசக அரசு. அப்படி கொடுத்த 4 இலட்சம் கோடியும் திரும்பி வரபோவது இல்லை என்றதை தான் மோடி பாதிக்கப்படும் வங்கிகளை காக்க பொது மக்களை அடித்து உதைத்து கையில் இருக்கும் கடைசி காசு வரை வங்கியில் போடு இல்லை என்றால் கள்ளப்பணம் வைத்து இருக்கிறாய் என்று சிறையில் தள்ளுவோம் என்று மிரட்டி பிடுங்கிய கீரைகாரிகளின் பணமும், தயிர்காரிகளின் பணமும் மூத்ரா திட்டத்தில் கொடுத்த வாரா கடன்களுக்கு தாரைவார்க்கப்படும் என்று விளக்கம் அளிக்கிறார்.

இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்து வெளியிட மோடிக்கும் அவரது அடிபொடிகளுக்கும் 3 1/2 ஆண்டுகள் பிடித்தது போலும்.

இப்படி ஒரு அறிவிப்பை மோடி தற்பொழுது வெளியிட வேண்டிய கட்டாயம் பாசக அரசு தற்பொழுது வாங்கி இருக்கும் ரபேல் விமானங்கள் தான் காரணமாக இருக்கும்.

ஒரு விமானம் 100 கோடிக்கு வாங்க பேசிய ஒப்பந்தத்தை மீறி ஒரு விமானத்தை 500 கோடிக்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று இது வரையில் விளக்கம் சொல்லாத மோடி. இனி வரும் காலங்களில் ரபேல் விமான ஊழல் பற்றி விசாரிக்க வந்தால் காங்கிரசு ஆட்சியில் நடந்த பொபோர்சு ஊழலால் தான் நாங்கள் வாங்கிய ரபேல் விமான கொள்முதலில் ஊழல் வந்து என்று ஒரு வரியில் சொல்லி திசை திருப்பும் முன்னோட்டம் தான் இந்த வாரா கடன் பற்றிய வியாக்கியாஞம்.

இந்த அளவிற்கு வெளிப்படையாகவே புளுக்கும் ஒரு தேசிய பிரதமரை உலகம் எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டார் என்று பாசகவும் அதன் சிங்கிகளும் சொல்லி சொல்லு பெருமிதம் அடைந்துகொள்ளலாம்.

இப்படி பட்ட மகா கேவலமான மனிதரையும் அவரை சார்ந்த கூட்டத்தையும் நம்பி தான் இந்தியர்கள் ஊழல் ஒழியும் இந்தியா மிலிரும் என்று நம்பியும் அதை விட அந்த மனிதர் தேர்தல் நேரத்தில் சொன்ன ஒவொரு இந்தியரின் பெயரிலும் 15 இலட்ச ரூபாயை செந்தன் திட்டதின் கீழ் தொடங்கப்பட்ட கணக்குகளில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொடுப்போம், மேலும் வீட்டில் ஒருவருக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையும் கொடுப்போம் என்று ஆசை வார்த்தை பேசியதில் மயங்கி ஓட்டளித்த மக்கள் எல்லாம் இன்றைக்கு இந்த இம்சையரசர் 23ம் புலிகேசி மற்றும் துக்ளக் மன்னரின் பொன்னான ஆட்சியை பார்த்து பூரித்து வரும் காலங்களில் இந்திய வரலாறில் இரண்டாம் துக்ளக் மற்றும் இரண்டாம் இம்சையரசர் 23ம் புலிக்கேசியின் வரலாறு என்று என்ன என்ன எல்லாம் வரும் என்று வேதனையுடம் கூடைய நமட்டு சிரிப்பு சிரிப்பது கண்கூடாக காணமுடிகின்றது இந்தியா முழுவதும்.

மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி முடியும் போது அனேகமாக இந்தியா சொமாலியாவின் பொருளாதார நிலைக்கு வந்துவிடும் போல......வாழ்க இந்தியா பாரத்து மாத்தா கீ சே............

தமிழிசையும் எச்சி இராசாவும் இனி என்ன ஆவார்கள் - நிர்மலா சீத்தாராம் தமிழக முதல்வர்

கார்பரேட் பெரு நிறுவனங்கள் தாங்கள் புதிதாக நுழைய இருக்கும் சந்தையில் ஏற்கனவே சந்தையில் மிகவும் பிரபலமாக மக்கள் விரும்பி வாங்கும் அத்தகைய சேவைகளோ அல்லது பண்டங்களையோ விற்கும் சிறு அல்லது அங்கே பிரபலமாக இருக்கும் நிறுவனங்களை வாங்கி அந்த சந்தையை முன் போலவே தொழில் நடத்துவார்கள்.

பிறகு திரைமறைவில் அந்த பிரபலனமான நிறுவனங்களின் மீது பொருளாதார தாக்குதல்களையும் அதிகார தாக்குதலையும் தொடுப்பார்கள்.

பாசக பசுமாட்டு மாநிலங்களின் கட்சி. அந்த கட்சியோ அல்லது அவர்களின் பெற்றோர்களான மதவாத இயக்கங்களான சங்க பரிவாரங்களுக்கு தமிழகத்தில் என்ன வேலை. ஆனால் இங்கேயும் மக்கள் வாழ்கிறார்கள் தேர்தல் நடத்துகிறார்கள். கோடிக்கணக்கில் தினமும் வியாபாரம் நடக்கின்றது. ஆக இந்த மாநிலத்திலும் பசு மாட்டு சித்தாங்களை பரப்பி அடுத்த வீட்டுகாரர்களை வெட்டிக்கொண்டு சாக வைக்க நினைத்த பாசக தமிழகத்தில் கடையை விரித்து ஆளில்லா கடையில் டீ ஆத்த தொடங்கியது.

அப்படி முதன் முதலில் புதிய சந்தைக்கு வரும் கார்பரேட் நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கும் சந்தையில் பணிபுரியும் மக்களை நேரடியாக அதிகார செலுத்தினால் பழைய நிர்வாகத்தின் ஒத்துழைப்பு புதிய நிறுவனம் கிடைப்பது அரிது என்றதால் அவர்களுக்கு பழக்கமான மேலும் எத்தனை முறை அசிங்கமாக திட்டினாலும் துடைத்துக்கொண்டு புன்முறுவலோடு எதிர்கொள்ளும் தியாக உள்ளங்களை வேலைக்கு அமர்த்தி வேலையையும் பழைய நிறுவன நிர்வாகத்தை புதிய நிறுவனத்திற்கு வேலைக்கு அமர்த்துவார்கள். இப்போது தமிழிசையும் எச்சி ராசாவும் பாசகவில் தமிழகத்தில் இருப்பது போல்.

பிறகு பழைய நிர்வாகம் முழுமையாக புதிய நிர்வாகதிடம் வந்ததும் கண்கான இடத்திற்கு இந்த பழைய நிர்வாக தலைவார்களை மற்றி மிகவும் கேவலமான வேலைகளை செய்ய சொல்லி வர்புறுத்துவார்கள். இந்த கொடுமை தாங்காமல் விட்டால் போதும் என்று கிடைகின்ற ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு ஓடுவார்கள் அந்த பழைய நிர்வாகத்தலைமைகள்.

தமிழகத்தில் இருக்கும் அதிமுகவை நல்ல விலைக்கு பாசக வாங்கியாச்சு. மெல்ல அதிமுகவின் தலைமை என்று இப்போது துடிக்கும் குட்டி குட்டி தலைவர்களை எல்லாம் கையில் இருக்கும் கொள்ளையடித்த பணத்தை எல்லாம் பிடிங்கிக்கொண்டு ஓட வைத்தாகிவிட்டது.

அதிமுகவின் நிர்வாகம் இப்போது பாசகவின் கைகளுக்கு வந்தாகிவிட்டாசு. இனி இந்த இணைப்பில் பெரிதும் வேலைகளை செய்த தமிழிசை மற்றும் எச்சி இராச போன்ற இடையில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் இனி என்ன ஆவார்கள்.

சென்னை இடைதேர்தலில் மேடைதோறும் உளரிக்கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள் இந்த வகையராக்கள். அனேகமாக இந்த இடைதேர்தலுக்கு பிறகு மெல்ல ஓரம் கட்டப்பட்டு நிர்மலா சீத்தாரம் தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து தேர்தலை சந்திக்க உள்ளது பாசக.

இந்த இரும்பு பெண்மணிக்கு முன்னால் தமிழிசையும் எச்சி இராசாவும் இனி என்ன செய்ய போகிறார்கள். பாசக கொடுக்க போகும் பப்பர மிட்டாயை வாங்கிக்கொண்டு அத்வானி வீட்டில் அமர்ந்துகொண்டு புத்தகங்களை எழுதுவதும் பாக்கிட்தானத்திற்கு போவதும் அங்கே சென்று முகமது அலி சின்ன நல்லவர் வல்லவர் என்று புகழ்ந்து வந்ததை போல் அரிதான காரியங்களை செய்துக்கொண்டு இருப்பார்கள் போலும்.

இணைய புலிகள் எல்லாம் இரும்பு பெண்மணியை கிண்டல் செய்யவோ அல்லது கேலிசித்திரங்களோ வரைய முடியாமல் தமிழிசையும் எச்சி இராசாவும் இருந்த காலத்தில் நாங்கள் எல்லாம் எப்படி எல்லாம் பகிடி செஞ்சோம் என்று மலரும் நினைவுகளாக படங்களையும் துணுக்குகளையும் வெளியிட்டுக்கொண்டும் இருப்பார்கள்.

Wednesday, December 13, 2017

சென்னை இடைதேர்தலில் பாசகவினர் இப்படி தான் பேசி ஓட்டு கேட்பார்கள்

உங்களுக்கு கோவில் வேண்டுமா மசூதி வேண்டுமா, கோவில் வேண்டும் என்றால் எங்களுக்கு ஓட்டு போடுங்கள்

காசுமீரத்தில் அமைதி திரும்ப வேண்டுமா எங்களுக்கு ஓட்டு போடுங்கள்

வருடா வருடம் தீபாவளி கொண்டாட வேண்டுமா எங்களுக்கு ஓட்டு போடுங்கள்

தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தாக்கப்படாமல் இருக்க வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

இந்தியா வல்லரசு ஆக வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

உலகத்தார் அனைவரும் யோக கற்றுக்கொள்ள வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

எல்லையில் இருக்கும் இராணுவ வீரர்கள் திறம் பட செயலாற்ற வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

காவிரியில் தண்ணீர் வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

சென்னையை சுனாமி தாக்காமல் இருக்க வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

இந்து கடவுளையும் இந்து மதத்தையும் உலகம் பாராட்டி இந்து உலகமாக மாற வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நல்ல முறையில் நடக்க வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

இந்த தேர்தலில் பாசகவை நீங்கள் வெற்றி பெற செய்தால் நாளைக்கு இந்திய பிரதமராக எடப்பாடி பழனிசாமி வருவார் அதற்காகவாது வாக்களியுங்கள்

தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் ஒதுக்குபுரமாக விற்கும் மதுவை பகிரங்கமாக சாலையோர உணவங்களிலே பரிமாற எங்களுக்கு வாக்களியுங்கள்

சென்னையில் இருக்கும் ரிசர்வு வங்கியில் உங்கள் 2000 தாளுக்கு சில்லரை தர வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்
 
எங்களுக்கு வாக்களித்தால் தான் சென்னை விமான நிலையத்தில் மேலும் மேலும் கண்ணாடிகள் விழாமல் பார்த்துக்கொள்ளுவோம்
 
 உத்திரபிரதேசத்தில் ஆக்சிசன் இல்லாமல் குழந்தைகள் இறந்ததை போல் இங்கேயும் இறக்க வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

நாட்டில் வாரா கடனாக இந்தியாவின் தலை சிறந்த ஏழைகள் கட்டாமல் விட்ட பணத்தை எல்லாம் வசூலிக்க வேண்டுமா எங்களுக்கு வாக்களிக்காதீர்கள்

உங்களிடம் உள்ள அடையாள அட்டைகள் போதாது நாளைக்கு கோதார், போலார், பாலார், டூலார் என்ற அட்டைகள் எல்லாம் வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

தப்பி தவறிக்கூட பணமதிப்பிழப்பு பற்றியோ, ஒளிரும் இந்தியா என்றோ அல்லது வைபரண்டு குசராத்து என்றோ ஒரு வார்த்தை கூட ஒலிக்க போவது இல்லை

ஆளே இல்லாத டீ கடையில் யாருக்கு ஐயா டீ ஆத்துகிறீகள் பாசகவினரே. அது தான் அதிமுகவை விலைக்கு வாங்கியாச்சு பேசாமல் அவர்கள் சார்பில் பாசகவினரை நிற்க வைத்து வெற்றி பெற்ற பிறகு அதிமுக கட்சியை நாங்கள் பாசகவோடு இணைத்துவிட்டோம் இனிமேல் யாரும் இரட்டை இலையோ அல்லது திராவிடம் என்றோ சொல்லவோ பேசவோ கூடாது என்று தைரியமாக அறிவிக்க வேண்டியது தானே அதை விடுத்து இந்த சொத்த தேர்தல் சந்திப்புகள் எல்லாம் எதற்கு.

Tuesday, December 12, 2017

மோடியும் பாசகவும் இசுரேல் மொசாத்து அமைப்புடன் சேர்ந்து இந்தியாவின் அமைதியை குலைக்க சதி

இசுரேலின் மொசாத் அமைப்பை பற்றி புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை. இந்தியாவின் ரா அமைப்பை போல் செயல்படும் ஒரு இரகசிய திரைமறைவு இயக்கம்.

இந்த அமைப்பு இசுரேலில் இசுலாமியர்களுக்கு எதிராக கடந்த 60 ஆண்டுகளாக திட்டமிட்ட தாக்குதல்களை வகை தொகையில்லாமல் தொடுத்து வருகின்றது. அதற்கு காரணமாக இசுரேல் சொன்னாலும், அந்த நாட்டில் வாழும் சொந்த நாட்டு மக்களையே அகதிகளாக ஆக்கி அழகு பார்க்கும் அரசுக்கு என்ன ஞாய தர்மங்கள் இருக்க முடியும்.

இலங்கையில் சிறுபான்மையினராக இருந்த தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் சிங்களவர்களை எந்த காரணமும் இல்லாமல் குடியேற்றி மெல்ல மெல்ல தமிழர்களின் இடத்திலேயே அவர்களை அகதிகளாக ஆக்கி கடைசியில் வதை முகாம்களில் வைத்து வருட கணக்கில் வதைத்துக்கொண்டு இருப்பது போல். இந்தியாவிலும் சிறுபான்மையாக இருக்கும் மக்களையும், பாசகவின் சிந்தாந்தங்களை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்க்கும் மக்களையும் இதே போல் சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்க மோடியும் பாசகவும் சதியில் ஈடுபட்டுள்ளது.

படிப்படியாக எப்படி துல்லிய தாக்குதலை தொடுப்பது, எங்கே இருந்துக்கொண்டு அடிப்பது என்ற கோணங்களை எல்லாம் மொசாத்து இயக்கம் திட்டமிட்டு வழங்கி அதை இந்தியாவிலே இரவில் மக்கள் அயர்ந்து இருக்கும் நேரம் நிகழ்த்திவிட்டு சுவடு தெரியாமல் காணாமல் போவார்கள் மொசாத்து இயக்கம்.

பிறகு என்ன கோத்ராவை காரணம் காட்டி குசராத்தை எரித்தவர்கள், தமிழகம், கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தை எரித்துவிட்டு அகதிகள் முகாமில் இவர்கள் எல்லாம் இனப்பெருக்கம் செய்த்துகொண்டு இருக்கிறார்கள் என்று மோடியும் பாசகவும் சொல்வார்கள்.

உங்கள் ஊரில் அடையாளம் தெரியாத மக்கள் யாரையாவது பார்த்தீர்களானால் கவனமாக இருங்கள். உங்களின் பாதுகாப்பு எல்லாம் இனி காற்றில் மறைந்த வாசனை அவ்வளவே......

நீங்கள் கேட்கலாம் அடிப்படையே இல்லாமல் எந்த ஆதாரத்தை வைத்து இப்படி எல்லாம் நடக்கிறது என்று சொல்கின்றாய் என்று கேட்பீர்கள்.

எந்த ஆதாரத்தை வைத்து மோடியும் பாசகவும் குசராத்து தேர்தலில் பாக்கிட்தானின் ஆட்சியர்களும் இராணுவத்தினர்களும் சதியில் ஈடுபட்டுள்ளார்கள் என்று சொன்னார்களோ அதே ஆதாரத்தை வைத்து தான் நாங்களும் சொல்கின்றோம்........

இந்த கிறுக்கு பிடித்த பைத்தியகார மனிதன் மோடி என்ன கூத்து எல்லாம் அடிக்க போகிறாரோ........

அவர் என்ன வேண்டும் என்றாலும் ஆகட்டும் ஆனால் அதனால் எங்களுக்கு துன்பம் வராமல் இருந்தால் சரி தான்.........

Thursday, November 30, 2017

மோடியை பார்க்கும் போது எச்சி ராசா தமிழிசை எல்லாம் சும்மா

தனக்கா இல்லை என்றாலும் தான் வகிக்கும் பதவியின் மதிப்புக்காக என்றாவது மக்கள் நாகரீகமாக நடந்துகொள்வதுண்டு.

இது பாசகவை பொருத்த அளவில் தேவையே இல்லாத ஒன்று போலும்.

மோடி உளரி கொட்டுவதை பார்த்தால் அவர் உண்மையிலேயே பிரதமரா இல்லை தேனீர் கடையில் அமர்ந்துகொண்டு வம்பு பேசுபவரா என்று தெரியாத அழகாக இருக்கிறது.

மக்களுக்கு நன்றாத தெரிந்த உண்மைகளையே இல்லை என்று வாய் மணக்க புளுகுவது, மீண்டும் மீண்டும் அந்த பொய்யையே பேசுவது. கொஞ்சம் கூட கூச்ச நாணமே இல்லாமல் பல்லிளித்துக்கொண்டு அவைகளையே சொல்லும் போது மிகவும் எரிச்சலாக இருக்கிறது.

அதோடு நிற்காமல் டீச்சர் இவன் என்னை கிள்ளிட்டான் என்ற அளவிற்கு இருக்கிறது அவரது காங்கிரசு பற்றிய விமர்சனங்கள்.

கிட்டதட்ட ஒரு 3 அல்லது 4 வகுப்பு படிக்கும் குழந்தை கூட கொஞ்சம் கௌரவமாகமும் நாகரீகமாகவும் நடந்துகொள்ளும் அந்த அளவுக்கு கூட இல்லையே இந்த பாசக பிரதமர்.

சென்னை தேர்தலில் பணப்பட்டுவாடா இல்லை என்றால் பாசக வெற்றியை ஈட்டும் என்று வருமான வரி சோதனைகள் மூலம் பணத்தை எல்லாம் முடிக்கிவிட்டதாக எண்ணி மனப்பால் குடிக்கிறார்கள்.

தேர்தல் வந்தால் அல்லவா தெரியும் எங்கே இருந்து அந்த 2000 சலவை நோட்டுகள் எந்த வங்கியில் இருந்து வருகின்றது என்று........

Tuesday, November 21, 2017

தமிழகத்தில் ஒரு கோத்ராவை நடத்த திட்டமிடும் பாசக - ஆளுனரின் கோவை ஆய்வு

திடமான ஆட்சி இல்லை என்றாலும் வலுவான மதவாதம் தலைதூக்கவில்லை என்றாலும், மதவாத ஆதரவு உள்ள இடங்களிலும் மனங்களிலும் ஒரு சின்ன தீயை பற்ற வைத்துவிட்டால் கோத்ராவை காரணம் காட்டி குசராத்து முழுவதும் கலவரத்தில் மூழ்கி முத்தெடுத்ததை போல் தமிழகத்திலும் ஒரு கோத்ராவை நடத்தி மீன் பிடிக்கும் திட்டத்தின் முன் வடிவம் தான் ஆளுனரின் கோவை ஆய்வு.

பாசக மக்கள் அனைவரும் நேராக கோவை செல்வதையும், கோவையிலேயே அனைத்து மதவாத நடவடிக்கைகளையும் துவக்குவதின் நோக்கமும் கோவையில் வெளிப்பட்ட எதிர்பும் முன்னாள் வன்முறை சம்பவங்களும் தான்.

இன்னமும் பத்தவைத்துவிட்டால் பற்றி எரியும் தன்மையுடன் அந்த இடம் இருப்பதாலும் அங்கே சென்று பத்தவைத்து தமிழகத்தை பாழாக்கலாம் என்று பாசக துடிக்கின்றது.

கடைசியாக அத்வானி கோவை சென்ற பிறகு பாசகவால் வெடிக்கப்பட்ட வெடிகுண்டுக்கு பிறகு இது வரையில் கோவையில் வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை. எப்படியாவது மீண்டும் கோவையில் வெடிகுண்டுகள் வெடிக்க செய்யவேண்டும் என்று பாசக துடிக்கின்றது என்று அவர்களின் அளவுக்கு மீறிய கோவை பாசத்தில் தெரிந்துகொள்ளலாம். பாவம் கோவையில் எந்தெந்த பாசக மக்களின் அம்மா அப்பாகளை இந்த முறை உயிருடன் எரிக்க பாசக திட்டமிட்டுக்கொண்டு இருக்கின்றதோ, பாவம் அந்த வயதானவர்கள்.....

ஆளுனர் சட்டதின் உட்பட்டு நடத்தி இருக்கும் ஆய்வின் நோக்கமும் விளக்கமும் இந்த விபரீத வெடிகுண்டு ஆசையின் வெளிப்பாடே.

தமிழகத்தை ஆளும் தற்பொழுதைய பொம்மை அரசு தங்களிடம் உள்ள கொள்ளை காசுக்களை செல்லும் பணமாக மாற்றி பதுக்க அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் கால் தமிழகத்தையே அழிக்க கூட தயங்காதவர்கள் என்று பலமுறை நிறுபித்தவர்கள் இந்த ஆட்சியர்கள்.

ஓநாயின் காவலில் ஆட்டுகுட்டிகளை விட்டது போல் இந்த ஓநாய் அரசியல்வாதிகளிடம் மாட்டிக்கொண்டு மக்கள் படும் அவதியை எப்படி தான் புரியவைப்பதோ......

GST மற்றும் Demonetization பிரச்சனையால் எங்களுக்கு எல்லாம் எந்த குறையும் இல்லை என்று 2000 ரூபாய் தாளில் வறுகடலையை தின்றுக்கொண்டு திமிராக பேட்டி கொடுத்த நடிகர்கள் எல்லாம் இப்போது முகமுடிகளில் மறைந்துக்கொண்டு அலைவதை கண்கூடாக காணமுடியும்.

கையில் இருக்கும் ஐந்து விரல்களும் வித்தியாசமாக தான் இருக்கும் ஆனால் அந்த ஐந்து விரல்களும் சேர்ந்தால் தான் கையில் வேலையை செய்யமுடியும் என்ற சாதாரண அறிவுக்கூட இல்லாத எச்சி ராசா போன்றோர்கள் மிகவும் நீளமான விரல் மட்டும் தான் உயர்ந்தது அந்த ஒன்று மட்டுமே இருந்துவிட்டால் உடலின் அத்தனை தேவைகளையும் எந்த குறையும் இல்லாமல் நிறைவேற்றிகொள்ளலாம் என்றும் வாதாடுகின்றார்கள்.

அது மட்டுமா, அந்த வேற்றுமைகளோடு எல்லாம் என்னால் வாழமுடியாது என்றும் கூறி அனைவரும் தன்னை போல் வேற்றுமைகளை போற்றி வளர்த்து வெறுப்பை கொட்டவேண்டும் என்றும் சொல் மக்கள் அவைகளை செய்யவேண்டும் என்று பேட்டி கொடுக்கிறார்.

பாவம் அவருக்கு தெரியாது இயற்கை அப்படி வேற்றுமைகளோடு தான் மனிதன் வாழவேண்டும் என்று ஆணுடன் எல்லா வேற்றுமைகளையும் கொண்ட பெண்ணோடு வாழ வைத்துள்ளார் என்று.

ஏன் நாளையில் இருந்து பாசகை சொல்ல சொல்லுங்களேன் நாங்கள் வேற்றுமையுடன் உள்ள பெண்களுடன் இனி குடும்பமாகவோ அல்லது அவர்களோடோ இல்லாமல் இனி தனியாத்தான் வாழுவோம் என்று.

அப்போ தமிழிசையார்கள் எல்லாம் என்ன சொல்வார்கள் ஆண்களோடோ அல்லது ஆண்களுடைய என்றவைகளோடோ எங்களு எந்த சம்பந்தமும் இல்லை என்று புரட்சி பேசுகிறார்களா என்று பார்ப்போம்............

Thursday, November 16, 2017

குருடாகவும் செவிடாகவும் அறிவின்மையாகவும் இருந்த வருமான வரி துறை பாசகவால் புணர்சென்மம் எடுத்தது

2014ல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவைகள் யாவும் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அறிந்து அவைகள் யாவும் தண்டனைக்குறிய குற்றமாக அறிவித்தது இந்திய நீதிமன்றம்.

2014, 2015, 2016 மற்றும் 2017 தற்பொழுது வரை அந்த தீப்பு கண்களில் தெரியாமலும் நீதியரசர் சொன்னவைகள் காதுகளில் கேட்க்காமலும் இப்படி எல்லாம் தீர்புகள் வந்தால் என்ன செய்வது என்றே தெரியாமலும் இருந்து வந்த இந்திய வருமான வரி துறைக்கு இன்றைக்கு தான் 150 வண்டிகளை ஒருங்கே கூட்டி ஒரே நேரத்தில் கூண்டோடு அமுக்கி விபரங்களை எல்லாம் கண்டுபிடித்து வழக்கு தொடுப்பதாக அறிவித்து இருக்கிறது.

தமிழிசை மற்ற பாசகவின் ஊது குழல்கள் யாவும் இதுவரையில் இந்திய வருமான வரி துறைக்கு எப்படி வருமான வரி சோதனை செய்வது என்றது மட்டும் இல்லை எப்படி எல்லாம் மக்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளார்கள் என்று கண்டுபிடிக்கு உத்திகள் கூட தெரியவில்லை என்றும். பாசகவும் அதன் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் வெற்றியாலேயே இந்த கணக்குகளை எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அளந்துவிடுகிறார்கள்.

இந்திய வருமான வரி துறை என்ன புதிதாக துவங்கப்பட்ட அரசியல் கட்சியா எது எப்படி என்று இது வரையில் தெரியாமல் புதிதாக வந்து இருக்கும் அரசு எப்படி என்ன என்ன செய்யவெண்டும் என்று சொன்னதும் அது படி செய்த்ததினால் பலன் கிடைத்து என்று சொல்லிக்கொள்ள.

உங்களின் சொந்தங்கள் யாரும் இந்திய வருமான வரி துறையில் பணிபுரிந்தால் அவர்களை உங்களுக்கு தெரியாது என்று இனி சொல்லிவிடுங்கள் இல்லையேல் அந்த கேணைபயல்களை போல் உங்களையும் கேணையன்களாக நினைத்து மக்கள் தூற்றுவார்கள்.

மைய அரசின் ஏவலாளியாக செயல்படும் அனைத்து துறைகளும் இப்படி தான் மக்களால் தூற்றப்படும்.

அந்த வெட்கம் கெட்ட துறையின் நல்லவர்கள் கூட இதுவரையில் இது ஒன்றும் பாசக கற்றுக்கொடுத்து எங்களுக்கு தெரிந்தவைகள் அல்ல என்ன எங்களை செயல்படவிடாமல் அரசில் இருப்பவர்கள் தடுக்கிறார்கள் என்று தைரியமாக மக்களுக்கு சொல்வார்களா.......

இன்னும் சில நாட்களில் இந்திய வருமான வரி துறையின் முக்கிய பொறுப்புக்கு வருவார் சிலர், அவர்கள் தான் இந்த திட்டமிடப்பட்ட துல்லிய தாக்குதல்களை வகுத்து குறிப்பிட்ட நபர்களை பழிதீர்த்துக்கொள்ள பயன்பட்டவர்கள் என்று மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

Tuesday, November 14, 2017

அசிங்கப்பட்டது தந்தி தொகா ரங்கராசு பாண்டேவா இல்லை பாசகவா - ப சிதம்பரம்



38 நிமிடம் ஓடும் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் சிதம்பரம் கேட்கும் பதில் கேள்விகளுக்கு பாண்டே என்ன சொன்னார் என்று வெட்டி ஒளிபரப்பியதிலேயே தெரிகின்றது தந்தி தொகாவின் நேர்மை.

பல இடங்களில் பாசகவின் தமிழக கொள்கைபரப்பு செயலாலராக பாண்டே கேட்ட கேள்விகளுக்கு திரும்ப திரும்ப நிறுவ நினைத்தாலும் பூசி மொழுக முடியாமல் விழி பிதுங்கி வெட்டி ஒட்டியதை பார்க்க முடிந்தது.

சிதம்பரத்தின் ஞாயமான கேள்விகளுக்கு பாண்டேவின் பதில்கள் என்னவாக இருந்திருக்கும் என்று ஊகிப்பதைவிட என்ன என்று அவர்களே காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒன்றும் தெரியாதவர்களை பேட்டி எடுத்து குழப்பு அவமானபடுத்தும் நோக்கம் கொண்ட பேட்டியாக இந்த கேள்விபதில் நிகழ்ச்சியும் அமையும் என்று வந்திருந்த பாண்டே பெருத்த ஏமாற்றத்துடன் நிகழ்ச்சியை முடித்தது வெளிப்படையாக தெரிந்தது.

இந்த நிகழ்சியை பார்க்கையில் சென்ற ஆண்டு இறுதியில் புதிய தலைமுறைக்கு சிதம்பரம் அளித்த கேள்விபதில் கண்ணில்பட அதையும் பார்க்க, ஓராண்டாக அந்த விடை தெரியாத கேள்விகளும் மாறவில்லை அதற்கு சிதம்பரத்தின் பதிலும் மாறவில்லை. அன்றைக்கு இருந்த நிலையில்  இருந்து நாடு இன்னமும் மோசமாகத்தான் போய் கொண்டு இருக்கிறது, மோடியும் பாசகவும் சொல்வது போல் கொஞ்ச நாளில் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொன்னது போல் எல்லாம் ஒன்றும் இல்லை என்று வெட்ட வெளிச்சமாகி இருக்கின்றது.

முதல் பார்வையில் தந்தி தொகாவின் ரங்கராசு பாண்டே அசிக்கப்பட்டதாகத்தான் பட்டது, பிறகு தான் தோன்றியது ப சித்தம்பரத்திடம் எந்தவிதமான விவாதத்திலும் பாசக ஈடுபடாமல் தவிர்ப்பது இந்த பாண்டே போல் தானும் மக்கள் முன் அவமானப்பட்டுவிடுவோம் என்று பயந்து ஒதுங்கியுள்ளது என்று.

Wednesday, November 8, 2017

நவ 8 - பாசக - மக்களை ஏமாற்றி ஏய்த்து பிடுங்கி வாரா கடனாக கொடுத்த அசுர சாதனை நாள்

பொருளாதாரத்தை உயர்த்துகின்றேன் கருப்பு பணத்தை பிடிக்கின்றேன் என்று ஏக வசனங்கள் பேசி 50 நாளில் ஒரு அற்புதம் நிகழ போகின்றது என்று மோடி வித்தைகாரன் சொல்வதை போல் சொல்லி இன்றோடு 1 ஆண்டு ஆகுகின்றது.

இது வரையில் கருப்பு பணம் பிடிப்படவில்லை

ஆனால் ஞாயமாக சம்பாதித்த பழைய பண தாட்கள் இன்னமும் மீதம் மக்களிடம் இருக்கின்றது

1.6 முதல் 1.7 இலட்சம் கோடி சட்டவிரோதமாக நடைபெற்றதை கண்டுபிடித்துவிட்டார்களாம்

29,213 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்

56 இலட்சம் தனி நபர்கள் வருமான வரி வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்களாம்

2.97 இலட்சம் போலி நிறுவனங்கள் கண்டுபிடித்து அவைகளை களைத்து இருக்கிறார்களாம்

இவைகள் எல்லாம் நிதி அமைச்சர் அருண் செட்லி திருவாய் மலர்ந்திருக்கும் செய்திகள்

மேலே சொன்ன புள்ளிவிபரங்கள் எதிலாவது ஏழை எளிய மக்கள் வருவார்களா, இல்லை அவர்கள் தெருவில் மணிகணக்கில் கால்கடுக்க நின்றதனால் மேற் சொன்ன புள்ளிவிபரங்கள் வந்தனவா

மேலே சொன்ன நடவடிக்கைகளை நிர்வாகமே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து இருக்க முடியும். அதை செய்வதை விட்டு விட்டு பொதுமக்களை இன்னலுக்கும் பயத்திற்கும் ஆளாக்கிய பாசகவை மக்கள் மற்றக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள்.

மாணவர்கள் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளுக்கு இந்தியில் பதில் சொல்லும் திமிர் எல்லாம் தமிழகத்தில் வந்து உடைந்து நைந்து போன தமிழ் வார்த்தைகளை பேசுவது போல் தான் இனி பாசகவின் நிலை இருக்கும்.

எவ்வளவு கூவினாலும் ஏமாற மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை, பொது மக்கள் இனி பெருமதிப்பு தாட்களை பயன்படுத்த போவதும் இல்லை சேமிக்க போவதும் இல்லை. மௌன சாட்சிகளாக இருக்கும் அந்த கோபக்கூட்டம் வரும் தேர்தலை நோக்கி காத்துக்கொண்டு இருக்கிறது. அன்றைக்கு தெரியும் உங்களின் இந்த கூவலுக்கான விடை அது வரை கூவுங்கள் கூவுங்கள் கூவிக்கொண்டே இருங்கள்......

Monday, October 30, 2017

GST போல் PIT வருமா - மாத சம்பளம் வாங்குபர்கள் மட்டும் என்ன இளிச்சவாயர்களா

பொருட்களை தயாரிப்பவரும் விற்பவரும், சேவை வழங்குபவர்களும் அவர்கள் செய்யும் தொழிலுக்கு உள்ள வரியை கட்டமாட்டார்களாம். அதற்கு பதில் அதை வாங்கி பயனடையும் பயனீட்டாளர்கள் 28% முதல் 40% வரை வரியை அவர்களுக்காக கட்ட வேண்டுமாம் அதுவும் எப்படி. சம்பாதித்த பணத்தில் 30% வரை வருமான வரியாக கட்டிய பின்பு கிடைக்கும் வருமானத்தில் தினமும் பயன்பாட்டில் இருக்கும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் 28% முதல் 40% வரை வரியாக கட்டவேண்டி மாதம் எத்தனை ஆயிரம் கோடி வரி வசூலாகியுள்ளது என்று அருண் செட்லி மாதம் தோரும் தரவுகளை வேறு வெளியிடுகிறார்.

இதே முறையில் மாத சம்பளம் வாங்கும் மனிதர்களுக்கு பிடிக்க வேண்டிய வரியை எல்லாம் நீக்கிவிட்டு பேசப்பட்ட முழு சம்பளத்தையும் மக்களுக்கு கொடுத்துவிட்டு. அந்த பணத்தில் அவர்கள் யார் யாரிடம் செலவு செய்கிறார்களோ அந்த வணிக முதலாளிகளிடம் இவ்வளவு வியாபாரம் செய்து இருக்கிறீர்கள். அந்த தொகைக்கு மக்கள் இவ்வளவு வருமான வரி கட்டி இருக்க வேண்டும். நடப்பு நடைமுறையால் அவர்கள் கட்டவில்லை. ஆகையால் உங்களின் பரிவர்த்தனையில் வந்த இந்த இந்த வியாபாரங்களுக்கு 30% வரை மக்களின் வருமான வரியாக PIT(Personal income tax) என்ற பெயரில் நீங்கள் எல்லாம் கட்டவேண்டும் என்று அரசு உத்தரவிடவேண்டும்.

இதனால் கோடி கணக்கான மக்கள் வருமான வரி கணக்கை செலுத்த வேண்டிய தேவையும் அது சார்ந்த பணிக்கு இலட்ச கணக்காக அரசு ஊழியர்களும் தேவை இல்லை. அரசும் தனியார் நிறுவனங்களும் மக்களின் பணத்தை பிடித்து வைத்துக்கொண்டு பிறகு மக்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்த பிறகு சரி பார்த்து திருப்பி கொடுக்கும் வேலைகள் எல்லாம் அரவே ஒழிக்கப்பட்டு சீரான நடைமுறையாக இருக்கும்.

இப்படி செய்வதால் மாத சம்பளம் வாங்காத மக்களின் வருமான வரிப்பணமும் அரசுக்கு சரியாக வந்து சேரும். ஆலோசிப்பார்களா ஆட்சியர்கள்.

உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்டினியா............. PIT கொண்டு வர வேண்டுகோள் வைக்கவேண்டும்.

Thursday, October 26, 2017

எச்ச சர்மா என்னும் எச்சி ராசா இனி எப்படி எல்லாம் வாழ்வார்

Image result for flintstones cartoon
இந்த எச்ச சர்மா என்ற மனிதருக்கு அவருடைய இந்துக்கள் உருவாக்கிய பொருட்களை தவிர மற்றவைகளும் மற்றவர்களும் அவருக்கு வேண்டாம் என்று உறுதியாக நம்புவது மட்டும் இல்லை எல்லோரும் அவரை பின்பற்றுங்கள் என்று சொல்லும் கோமாளியும் கூட.

அந்த கோமாளி இனி இப்படி தான் வாழ்வார், ஏன் என்றால் இது வரையில் இந்தியாவில் இவர்களின் இந்துகள் என்று சொல்லிக்கொள்ளும் மக்கள் எல்லாம் பசு சானியும் அதன் சார்ந்த பொருளை மட்டும் தான் கண்டுபிடித்து உலகுக்கு கொடுத்து இருக்கிறார்கள். ஆக அந்த கற்கால வாழ்கையை தான் இவரும் இவரது அடி பொடிகளும் வாழ்ப்போகிறார்கள்.

ஆனால் ஒன்று இவர் சுவாசிக்க போகும் காற்று மட்டும் அனைத்து மத்தத்தினரும் பயன்படுத்தும் காற்று அதை எப்படி தடுத்துக்கொண்டு வாழப்போகிறார் என்று தெரியவில்லை.

ஐயப்பன் என்ற சாமியின் பெயரை கூட சொல்லமாட்டார் ஏன் என்றால் ஐயப்பன் என்றவுடன் நினைவில் வருவது ஏசுதாசு பாடிய பாடல்கள் அல்லவா. வானொலியில் பாடல்கள் கேட்கமாட்டார் அது பசுக்கறி சாப்பிடும் மார்கோணியால் கண்டுபிடிக்கப்பட்டவை. தொலைக்கட்சியை பார்க்கவோ அல்லது அவர்களுக்கு பேட்டியோ கொடுக்கமாட்டார் ஏன் என்றால் அது பசுக்கறி சாப்பிடுபவரால் கண்டுபிடிக்கபட்டவை. இது போல் மனிதன் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் விவசாய பொருட்கள் தவிர்த்து அனைத்தும் பசுக்கறி சாப்பிடும் மனிதர்களின் கண்டுபிடிப்பும் வடிவமைப்புமாகத்தான் இருக்கும்.

பாசக அரசு இருக்கும் வரையில் இனி எல்லையில் இராணுவம் பசுக்கறி சாப்பிடும் மனிதர்கள் கண்டுபிடித்த இராணுவ தளபாடங்களை தவிர்த்து இராமர் பயன்படுத்திய வில் அம்பு, வால், தண்டாயுதம் என்று தான் இனி அண்டை நாட்டு படைகளுடன் சண்டையிட்டு பாசகவினரை காப்பாற்ற போகிறார்கள்.

Tuesday, October 24, 2017

மோடி பெற்றெடுத்த புதிய வெள்ளைப்பண இந்தியாவிலும் கந்து வட்டி கொடுமை

2016ல் நவம்பர் 8ல் கையில் இருக்கும் 1000 500 ரூபாய் தாள்கள் எல்லாம் செல்லாது, ஏன் என்றால் அவைகள் எல்லாம் கருப்பு பணம். ஆகையால் அந்த பணத்தை எல்லாம் வங்கிகளில் கொடுத்துவிட்டு நல்ல பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள், அடுத்த 50 நாட்களில் கள்ளப்பணமே இல்லாத இந்தியாவை உங்களுக்கு தருகின்றேன். அப்படி நான் சொல்வது நடக்காவிட்டால் என்னை தீயில் இட்டு கொளுத்துங்கள் என்று மக்களை பார்த்து சூளுரைத்தார் இந்தியாவின் பிரதமரான மோடி.

இன்னும் 3 வார காலத்தில் ஓராண்டு நிறை பெற போகின்றது அந்த பண மதிபிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு.

இதோ நேற்று அக்டோபர் 23 இந்த கொடூரம், கந்து வட்டி.

வாங்கிய பணத்தை போல் 2 மடங்கு பணம் செலுத்திய பின்னும் இன்னும் முதலே வந்து சேரவில்லை என்று மிரட்ட என்ன செய்வது என்றே தெரியாமல் குடும்பத்தோடு தற்கொலை. என்ன ஒரு கொடூரம், அரக்க தனம்.....

இப்படி கந்து வட்டிகாரர்களிடம் பணம் வாங்கும் மக்கள் எல்லா யார் யார், அன்றைய வியாபார தினத்தின் முதலுக்காக தண்டலில் பணம் வாங்குபவர்கள் முதல் அவசர மருத்துவ தேவை என வித விதமாக பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.

கைக்கும் வாயிற்கும் சரியாக இருக்க மிச்சம் மீதி எதுவும் இல்லாமல் அன்றாடம் வாழ்கையை இப்படி அடகு வைத்து வாழும் ஏழை வியாபாரிகள் ஏறாளம்.

அன்றைக்கு ஏழைமக்கள் எல்லாம் வங்கிகளின் வாசலின் நின்று அவதியுறும் போதும், பிரதமர் மோடியும் அவரது கட்சியின் அடிபொடிகளும் இலட்டு கொடுத்து மக்களுக்கு உச்சாகம் அளித்ததின் திடம் இவ்வளவு தானா.........

இந்த தண்டல்கார்களும் கந்துவட்டிக்காரர்கள் எந்த வியாபார அடிப்படையில் நிதிவியாபாரம் செய்கிறார்கள். அவர்களுக்கு பணம் எப்படி வருகின்றது எப்படி கை மாறுகின்றது.

வெறும் 300 ரூபாய்க்கு தொலைபேசி சிம் வாங்க வேண்டும் என்றாலும் ஆதார் அட்டையும் கை ரேகையும் இல்லாமல் இல்லை என்று சொல்ல வைத்த அரசு இந்த கந்து வட்டி கொடுமைகளையும் தண்டல் கொடுமைகளையும் இன்னமும் உலவ விட்டு இருப்பது எப்படி.

சரி இப்படி அவசர தேவைக்கு அவர்கள் கந்து வட்டி வாங்கியது தவறு என்று சொல்லும் பட்சத்தில் அப்படி அவர்களிடம் வாங்காமல் வேறு எங்கே வாங்குவார்கள்.

அரசாங்க அலுவலங்கள்/அரசு வங்கிகள் என்று வைத்துக்கொண்டால், கந்துவட்டி காரனிடம் வெறும் வட்டி மட்டும் தான் கொடூரமாக இருக்கும். ஆனால் இந்த அரசு துறைகளில் நிதியை பெறுவது என்று இருந்தால் அந்த நிதி கையில் கிடைக்கும் போது வழி முழுக்க ஒழுகி கடைசியில் 10% பணம் அவர்களின் கைகளில் கிடைக்க குறைந்தது 3 முதல் 6 மாதமாகவாது ஆகும்.

இதை சரி செய்ய சொன்னால் அதை செய்யாமல் பெயருக்கு ஒரு திட்டமாக அறிவித்துவிட்டு, சம்பவம் நடந்து 2 நாட்கள் முடிகின்றது இருந்தும் இது வரையில் ஒரு பாசக கட்சியினர் கூட அதை பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நீட்சியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோ அல்லது அந்த வகையில் இது ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கூட சொல்லாமல் மெர்சல் பட பிரச்சனையிலும், நடிகர் விச்சை கிருத்துவரா, இசுலாமியரா இல்லை ஆதியில் அவர்கள் இந்துக்களா என்ற ஆராச்சியில் மூழ்கி முத்து எடுத்துக்கொண்டு இருக்கிறது..........

மோடி பெற்று எடுத்த எத்தனையோ இந்தியாவில் வெள்ளைப்பண இந்தியாவும் ஒன்று அந்த வெள்ளைபண இந்தியா வெறும் காகித இந்தியா என்றும் இந்த நிகழ்வுகள் தெளிவாக காட்டுகின்றது. மேலும் மோடியும் பாசகவும் வெறும் அம்புலிமாமா கதைகளில் வரும் காகித கதா பாத்திரங்கள் மட்டுமே. உண்மையில் வெறும் வெற்று மனிதர்கள் என்று தான் பறை சாற்றுகின்றது................

Friday, October 20, 2017

அன்னை ஸ்ரீவித்யாவின் நினைவாக - 11 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி








எங்கே இருந்து நீ வாழ்த்தினால் என்ன
இருக்கும் அந்த இடத்திலாவது நிம்மதியாய் இரு
உன்னை வந்து சேரும் வரை உனது நினைவுகளுடன்........

Wednesday, October 18, 2017

பாசகவின் அடுத்த மதவா முன்னெடுப்புகள் இப்படி தான் இருக்கும் - Silence (2016) திரைவிமர்சனம்

படத்தின் செய்திகளுக்கு

மாற்று சிந்தனை, மதம், நம்பிக்கை என்று இருப்பவர்களை எப்படி எல்லாம் எதேச்சதிகாரம் கொண்டவர்கள் எப்படி படுத்துவார்கள் என்றதிற்கு இந்த படம் ஒரு விளக்க உரை.

சப்பானை பொறுத்த அளவில் அவர்கள் மேல் அந்த அணுகுண்டை வீசியது தவறு என்று வாதாடக்கூட மக்கள் தயங்குவார்கள். அந்த அளவிற்கு அவர்களின் அரசர்கள் மிகவும் மோசமாகவும் கீழ்த்தரமான சிந்தனையும் கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள்.

கடைசியாக அந்த அணுகுண்டை வீசும் வரை உலகின் எல்லா திக்குகளிலும் சர்வதிகாரிகளுடன் சேர்ந்துக்கொண்டு ஆட்டம் போட்டுக்கொண்டே தான் இருந்தார்கள்.

இந்த ஆட்டத்தின் ஒரு பகுதியாக கிருத்துவத்தை பரப்ப வந்தவர்களை என்ன என்ன பாடு படுத்தினார்கள் என்று இந்த படத்தில் காட்டி இருக்கிறார்கள்.

எந்த ஒரு நாடும் தன் நாட்டின் இறைமையை காக்க வேண்டிய கட்டாயத்திலும் கடமையும் கொண்டு இருக்கிறது. அந்த அந்த நாட்டின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைக்க யாருக்கும் உரிமை இல்லை தான்.

ஆனால் அப்படி பட்ட நாடுகளில் கழித்து கட்டிய மக்கள் என்று ஒரு பிரிவினர்கள் எப்போதும் உண்டு. இப்போது மியான்மரில் இருந்து விரட்டியடிக்க பட்ட மக்களை போல், ஈழத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்களை போல், சோர்டான் மக்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

அப்படி வாழவே தகுதி இல்லாதவர்கள் என்று முடிவுகட்டி ஊரை விட்டு வெளியே வாழும் மக்களுக்கு ஒன்றும் இல்லை என்றாலும் இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர கடவுள் நமக்கு வழிக்காட்டுவார் என்ற ஒற்றை நம்பிக்கையில் மட்டும் வாழும் அன்றாடம் காட்சி மக்களை சந்தித்து கிருத்துவை நம்புங்கள் உங்கள் வாழ்கையில் ஒளி கிடைக்கும் என்று நம்பிக்கையை கொடுத்து இருக்கும் மிச்ச மீதி நாட்களை வெறும் கையில் வெற்று நம்பிக்கையுடன் கடக்க உதவிய கிருத்துவ மத போதகர்கள் எந்த கதிக்கு ஆளாக்கினார்கள் என்ற விளக்கப்படம்.

இந்தியாவை பஞ்சம் பிடித்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டிய காலத்தில் உலகத்து நாடுகள் கப்பல் துறைமுகங்களில் பால் பொடிகளையும் உணவு தானியங்களையும் கொண்டு வந்து அடுக்கிவிட்டு சென்று விட்டது. பஞ்சமும் நேயும் பிடித்து ஆட்டிய அந்த நாட்களில் கையில் உணவுடனும் மருந்துகளுடனும் இந்தியாவிற்கு வந்த கிருத்துவ திருசபையை சேர்ந்தவர்கள், அந்த நோய் தாக்கி தான் இறந்தாலும் அதுவும் இறைபணி என்று இந்தியாவின் ஏழை மக்கள் வாழும் பகுதிக்குள் சென்று தொன்டாற்றியதை போல் இந்த படத்திலும் செல்கிறார்கள்.

அந்த பாதிரிகளின் கண்ணில் காட்டப்படும் மக்கள் மிகவும் நலிவுற்று இரப்புக்கும் நிகழ்வுக்கும் அதிக தூரமோ வித்தியாசமோ இல்லை என்று வாழும் ஏழை விவசாய பண்ணையடிமை கூலிகள்.

தொலைந்து போன பாதரியை தேடியலையும் அந்த இருவரும் நிமிடத்திற்கு நிமிடம் எப்போது மாட்டுவோம் எப்போது கொல்லப்படுவோம் என்று மறைந்து வாழ்வதும். இரவின் இருட்டில் மட்டும் மக்களை சந்திப்பதும் என்று ஒரு திருட்டு வாழ்க்கையை போல் கழிக்கிறார்கள்.

கிருத்துவை நம்பும் மக்களை அந்த கிருத்துவின் உருவம் பொருத்திய தகட்டில் காலால் மிதிக்க சொல்வதும் அப்படி செய்யவில்லை என்றால் அவர்களை கடற்கரையில் கட்டிவைத்து அலையில் அலைகழித்து சாக்கடிப்பதும் உயிருடன் தீயில் இட்டு கொளுத்துவதும் என்று கொடூரமாக கதை நகர்கிறது.

ஒரு கட்டத்தில் பாதிரியை தேடி வந்த இருவரில் ஒருவனுக்கு நல்ல உடைகளை அணிவித்து தூரத்தில் மற்ற ஒருவனை நிப்பாட்டி அங்கே பார் அவன் கிருத்துவை தூக்கி எரிந்துவிட்டான் எப்படி சொகுசாக வாழ்கிறான் பார் ஆனால் நீயோ சாகப்போகிறாய் என்று ஏய்கும் கேவலமான செயல்களை எல்லாம் செய்து கொடுமைபடுத்துகிறார்கள்.

அந்த இளம் பாதிரிக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அவன் கண்முன்னே தோன்றும் அந்த கிருத்துவின் முகமும் அவர் இவன் கொண்டு இருக்கும் அதிதீர நம்பிக்கையும் மட்டும் தான்.

அந்த இளம் பாதிரியின் கண் முன்னே ஒவ்வொரு இரவும் உடன் இருந்த கிருத்துவை நம்பும் மக்களையும் பலியிடுகிறார்கள், கழுத்தில் ஒரு சிறு கீறல் கீறி சொட்டு சொட்டாக இரத்தம் வழியும் படி தலை கீழே தொங்கவிடவும் செய்கிறார்கள். பார்க்க பொறுக்காக அந்த இளம் பாதிரி கடைசியாக தானும் கிருத்துவின் படத்தை காலால் மிதித்து அவமதித்து சப்பான் இனமாக மாறுகிறான்.

பின்னர் அந்த இளம் பாதிரியும் அவன் தேடி வந்த பாதிரியும் இருவரும் சேர்ந்து சப்பானுக்குள் வரும் கிருத்துவம் சார்ந்த பொருட்களை அடையாளம் காட்டி முற்று முழுதாகவும் அழிக்கவும் உறு துணையாக இருக்கிறார்கள்.

அப்படி வாழ்ந்த அந்த இளம் பாதிரிக்கு மகனுடன் இருக்கும் ஒரு குடும்பத்தையும் அந்த குடும்ப பெயரையும் கொடுத்து சப்பானிலே சப்பானியராக வாழ வைப்பதோடு கிருத்துவை இகழ்ந்தும் பரிகாசித்தும் நூல் எழுத வைக்கிறார்கள்.

அத்தனை இன்னல்களுடன் வாழ்ந்த அவனிடம் மிஞ்சி இருந்த ஒரு சின்ன சிலுவை மட்டுமே என்று கதையை முடிக்கின்றார்கள்.

மோடி இந்த சனவரியில் ஒரு புதிய அறிவிப்பை அறிவிப்பதாக சொல்லி இருக்கிறார், அனேகமாக இப்படி ஒரு அறிவிப்பாத்தான் இருக்கும்.

நல்ல ஆட்சி நல்ல தேசம் என்று சொன்ன இவர்களால் வெறும் இன்னல்களையும் கசப்பு மருந்துகளையும் தான் நல்லா இருந்த மக்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.

அடுத்த தேர்தலுக்கு நாட்டையே இன்னும் ஒரு கோத்ராவாக ஆக்கினால் மட்டுமே இவர்களால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும். ஆக நாட்டை பிளவுபடுத்த கிருட்ணசாமியை வைத்து அனிதாவுக்கு எதிராக பேச வைத்தது போல் நிகழ்வுகள் வன்முறையுடன் நிறைவேற்றுவார்கள் போலும். கற்பனையில் யோசிக்கவே மிகவும் பயங்கரமாக இருக்கிறது.

Tuesday, October 3, 2017

என்ன சாதித்துவிட்டா காந்தி என்று இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்

சங்கபரிவாரம் தனது ஆளைவிட்டு காந்தியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற போது இந்தியா தூய்மை அடைந்துவிட்டது என்று பரைசாற்றும் விதமாக தூய்மை இந்திய தினமாக காந்தியின் பிறந்த நாள் கொண்டாட்டம் மாற்றப்பட்டு இருக்கின்றது இந்த சங்கபரிவார அரசால்.

அப்படி என்ன சாதித்துவிட்டார் இந்த காந்தி இவ்வளவு கொண்டாட....

தென் ஆப்பிரிக்காவில் தொடங்கிய போராட்டம் இந்தியாவில் தொடர சுதந்தர வேட்கையில் தவித்த மக்கள் கட்டுக்கு மீறி தனது பேச்சையும் கேட்க்காமல் வன்முறையில் இறங்க அதோடு தனது போராட்டங்களை நிறுத்துவதாக காந்தி அறிவித்தார்.

அதாவது நிலைமை கையை மீறி சென்றதும் இனி இப்படியே விட்டால் போராட்டம் அமைதியாகவும் அகிம்சையாகவும் இல்லாமல் போராகவும் உள் நாட்டு கலவரமாகவும் மாறிவிடும் என்று நிறுத்தினார்.

என்ன மனிதர் இந்த காந்தி அதுதான் சமயம் என்று தனக்கு பிடிக்காத தனது சிந்தாந்தங்களை ஏற்காத மக்களை அந்த கலவரம் கொண்டு கொன்று குவித்துவிட்டு, நாட்டு மக்களின் முன்னிலையில் கலவரத்தில் நடந்ததுக்கு நான் எப்படி பொருப்பாக முடியும் என்று நீலிக்கண்ணீர் வடிக்க தெரியாத மனிதர் இவருக்கு ஏன் இவ்வளவு கொண்டாட்டம்.

ஒரு முறை அல்ல இரு முறை அல்ல 4 முறை இந்திய சுதந்திர போராட்டத்தை இதே போல் கைவிட்டு விட்டு பிறகு மக்கள் எல்லாம் திரண்டு நாங்கள் இனி ஒரு போதும் வன்முறையில் ஈடுபடமாட்டோம் என்று உறுதி கொடுத்த பின்பு கடைசியாக நடந்த போராட்டத்தில் தான் சுதந்திரம் கிடைத்தது.

இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணமான காந்தி நாட்டின் மிக உயர்ந்த பதவியான பிரதமர் பதவியில் உட்கார்ந்துக்கொண்டு உலகம் பூராவும் சுற்றி வந்து தான் எப்படி இந்தியாவின் விடுதலைக்காக போராடினேன் என்றும் நான் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடாமல் போய்யிருந்தால் இன்னேரன் இந்தியா பாவ பூமியாக இருந்து இருக்கும் என்று நாடு நாடாக சென்று பேசி இருக்க வேண்டாமா. அதுவும் பாரீசுடர் பட்டம் பெற்றவர் என்ற பெருமை வேறு இந்தியில் இல்லை ஆங்கிலத்திலேயே அழகாகவும் சாமார்த்தியமாகவும் பேசி இருக்கலாம். செய்தாரா இந்த மனிதர்...... ஒரு 35 இலட்சம் பெருமானம் கொண்ட ஆடையை அணிவதற்கு பதில் பரதேசி கோலமாக இலண்டனுக்கு சென்ற துப்பு கெட்ட மனிதருக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்.

வங்காலத்தில் இந்து இசுலாமியர் மோதல்கள் வெடித்த போது அந்த நிகழ்வை காரணமாக காட்டி அங்கே இருக்கும் அத்தனை இசுலாமியர்களையும் அழித்து இருக்க வேண்டாமா அதை விடுத்து அவர்கள் கலவரத்தை விடும் வரை செத்தாலும் சரி என்று உண்ணா விரதம் இருந்து நிறுத்தியது எந்த வகையில் ஞாயமாகும். இந்த மனிதருக்கா இத்தனை கொண்டாட்டம்....

இப்படி பல நூறு காரணங்களை அடுக்கலாம் காந்தியின் பெயரையும் புகழையும் படத்தையும் அழிக்க சொல்லி மாளாதே என்று இதோடு நிறுத்திக்கொள்கின்றேன்.

போய் எல்லோரும் மாகாத்துமாவை அழித்து தூய்மை படுத்தபட்ட இந்தியாவின் தினமாக தூய்மை பாரதம் என்று கொண்டாடுங்கள் இல்லை என்றால் நீங்கள் எல்லாம் தேசதுரோகிகள். வந்தே மாதரம்.....

பிகு: இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் எல்லையில் இருக்கும் இராணுவ வீரரிடம் கேட்கவும்.

Friday, September 29, 2017

தமிழக சின்ன பாசக அன்புமணி இராமதாசு

தமிழகத்தில் சாதிவாரியாக மக்களை பிளவுபடுத்தி அவர்களுக்குள் சண்டையை மூட்டி அடித்துகொள்ள வைத்து குளிர் காய்வது சங்கபரிவாரம். அந்த சங்கபரிவாரம் இதை ஆட்சியிலேயே உட்கார்ந்துக்கொண்டு செய்ய முடியாது என ஆட்சியில் அமர்பவர் பெயர் பாசக, ஆனால் அவர் நாங்கள் என்ன செய்கின்றோமோ அதையே தான் செய்வார் ஆனால் அவர் சங்கபரிவாரம் இல்லை, எங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் கிடையாது என்று மூச்சுக்கு 300 தடவை சொல்வார்கள்.

முதலில் சாதி சங்கம் என்றும் பின்னர் அதை பாசக என்ற பெயரில் அரசியல் கட்சி என்ற போர்வையில் வந்த அதே பாணியில் தான் பாமகவும் பயணிக்கின்றது. ஊருக்கு ஊர் சங்கமும் அந்த சங்கத்தின் பெயரால் இன தூய்மையை செய்வோம் என்று கடந்த சில ஆண்டுகளில் கௌரவ கொலைகளிலும் ஈடு பட்டது இந்த பாமக என்றது நினைவில் இருக்கலாம்.

திராவிட கட்சிகளும் அதன் வழித்தோன்றல்களினால் எந்த பலனும் தமிழகத்துக்கு விளையவில்லை என்றும் தன்னை முதல்வராக தேர்ந்து எடுத்தால் நல்ல ஆட்சியினை வழங்க முடியும் என்றும் சென்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது இந்த பாமக.

இன சுத்திகரிப்பு வேலைகளை சங்கபரிவார கும்பல்கள் செய்வதை விட கேவலமா எங்களாலும் செய்யமுடியும் என்று காட்டிவிட்டு வாக்குகளை கேட்டது இந்த பாமக.

சங்கபரிவாரம் ஆட்சிக்கு வந்தால் என்ன என்ன தீமைகளை செய்து சமூகத்தை அழித்தொழிக்க முடியுமோ அத்தனையும் செய்யும் இந்த சாதிவெறி பாமக.

இதே அன்புமணியும் சரி இராமதாசும் சரி சங்கபரிவாரங்கள் செய்யும் எந்த ஒரு அட்டூழியங்களையும் தட்டிக்கேட்டதும் இல்லை கேட்க்கப்போவதும் இல்லை.

ஒரு வேளை தமிழக பாசகவிற்கு நிர்மலா சீத்தாராமன் முதல்வராக வருவது பிடிக்கவில்லை என்றால் குறைந்தது அன்புமணி இரமதாசு வரவேண்டும் என்று எதிர்காலத்தில் சொன்னாலும் சொல்லும் அளவிற்கு நடந்துகொள்கிறார்கள் தமிழக பாசகவினர்கள்.

பாசகவும் பாமகவும் ஒருவரை ஒருவர் இது வரையில் தாக்கி பேசிக்கொண்டது இல்லை என்றது மக்கள் ஓர்ந்து பார்க்கலாம்.

ஆக தமிழக்த்தில் பாமக இருக்கும் வரையில் இன்னும் ஒரு பாசக தேவை இருக்காது........

Tuesday, September 26, 2017

கார்த்திக் சிதம்பரம் - சங்கபரிவார அரசே திரைபடங்களில் பார்ப்பது போல் குடும்பத்தாரை மிரட்டும் செயல்

அனேகமாக அனைத்து திரைபடங்களிலும் வில்லன் சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொள்வான் என்ற நிலை வந்ததும், சாட்சிகளும் விசாரணை அதிகாரிகளின் வீட்டு பெண்களையும் பிளைகளையும் துப்பாகி முனையில் பிடித்து வைத்துக்கொண்டு "நீ மட்டும் நான் சொன்னபடி நீதிமன்றத்தில் வந்து சொல்லல உன் பிள்ளை அவ்வளவு தான், இல்ல உன் மனைவி அவ்வளவு தான், உனக்கு வயசு வந்த பெண் இருக்குது அவ்வளவு தான்" என்று மிரட்டும் காட்சிகள் இடம் பெற்று இருக்கும்.

அந்த காட்சிகளில் வரும் வில்லனாக நடிப்பவர் கருப்பாக இருப்பார், இல்லையேம் ஆம்பர் என்று பெயர் வைத்து இருப்பார் இல்லை இசுலாமிய பெயரை கொண்டவராக இருப்பார்.

இப்போது அதே காட்சியில் சங்கபர்வார சாமியார்கள் நிற்கிறார்கள். அலைக்கற்றை ஊழல் வழக்கில் தீர்ப்பு 3 மாதங்களுக்கு முன்னே வந்து இருக்க வேண்டும் ஆனால் மாதாமாதம் அடுத்த மாதம் என்று வழக்கு தள்ளி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு முறை தள்ளுதளுக்கு பின்னால், சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் என்று யாரேனும் ஒருவரை இந்த வழக்கில் சாட்சியாக ஆக்கி அந்த சாட்சியின் பால் பாதக தீர்ப்பை பெற்று எடுத்து ஒரு புதிய இந்தியாவை பெற்று எடுக்க சங்கபரிவாரம் ஆசைப்படுகின்றது.

அதனால் திரைபட வில்லன் மிரட்டுவது போல் மிரட்டி அதன் கோரப்பிடிகளில் வைத்துக்கொண்டு சொல் இல்லையே கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகின்றது.

மைய அரசின் பொருளாதாரம் பற்றியோ அல்லது நிர்மலா சீதாராமன் மொத்த இந்தியாவின் இராணுவ தேவைகளையும் அமெரிக்க இராணுவ தளவாட நிறுவனங்களுக்கு தாரை வார்க்கிறார் என்று சொன்னாலோ உங்களது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் தொழிலும் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்று மிரட்டி பார்க்கிறார்கள்.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் முறட்டு உலகமடா என்று அன்றைக்கு பாடிய பாடல் எவ்வளவு உண்மை என்று இந்த சங்கபரிவார அரசு வந்ததும் தான் தெரிகின்றது.

இந்த தீர்ப்பைதான் தமிழிசை மேடைகள் தோறும் தீர்ப்பு வரும் இல்ல என்று அதிர்ந்தும் வியந்தும் குறிப்பிடுகின்றார். பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று........

Monday, September 25, 2017

கீரைகாரி மற்றும் தயிர்காரி இவர்களிடம் இருந்து சுருட்டிய 50,000 கோடியை அம்பாணிக்கும் அதாணியும் கொடுக்கின்றது பாசக அரசு

கீரைகாரி, தயிர்காரி, இட்லி சுட்டுவிற்கும் ஆயா, வடை சுட்டு விற்கும் ஆயாக்களை மிரட்டி பணத்தை வங்கியில் போடவில்லை என்றால் அவ்வளவும் சொல்லாத பணமாகவும் கள்ளப்பணமாகவும் அறிவிக்கப்படும் என்று மிரட்டோ மிரட்டு என்று மிரட்டி பிடிங்கிய பணத்தை அதாணிக்கும் அம்பாணிக்கு கொடுக்கப்போவதாக பாசக அரசு அறிவித்து இருக்கிறது.

மோடியின் பொருளாதார கொள்கையும் அவரது 15 ஆண்டுகால முதல்வர் பணியின் அனுபவங்களையும் உலக பொருளாதார பல்கலைகழகங்கள் கற்றுக்கொள்ள சிறந்த பாடம் என்றும். உலகில் மோடியை போன்றதொரு அறிவாளியோ மற்றும் புன்னியம் செய்தவர்களோ உலகில் வேறு யாரும் இல்லை என்றதும் பாசகவின் அதன் பின்னால் இருந்து ஆட்டி வைக்கும் சங்க பரிவாரங்களின் கருத்துமாக தொடர்ந்து வைக்கப்படுகின்றது.

இப்படி ஈடு இணையில்லா தலைவரின் பொருளாதார சீர் திருத்தங்களின் விளைவாக சரிந்து கிடக்கும் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த 50,000 கோடியை செலவு செய்யும் என்று அருண் செட்லி அறிவித்துள்ளார்.

பொதுவாக இந்திய அரசு இலங்கையின் உதவிக்காக கப்பல் துறைமுக அமைப்பதில் உதவ 50,000 கோடி ரூபாய்கள் உதவிகள் வழங்குகின்றது என்ற ஒரு அறிவிப்பு வந்தால், அந்த துறைமுகம் அமைக்கும் பொறுப்பை அதாணிக்கோ அல்லது அம்பாணிக்கோ இலங்கை அரசு ஒப்பந்தம் வழங்கும்.

அதாவது இலங்கையின் உதவிக்காக இந்தியா அறிவித்த 50,000 கோடி ரூபாய் நேராக அவர்களின் பைக்கு செல்லும். செய்த வேலைக்கு தானே பணம் கொடுக்கிறார்கள் அதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்க கூடும்.

இலங்கைக்கோ மியான்மர்கோ நேபாளத்திற்கோ ஆப்ரிக்க நாடுகளோ இந்தியா எங்களுக்கு இவ்வளவு பண உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்பது கிடையாது. அப்படி கேட்காத இடங்களில் இவர்களே ஏன் பணத்தை அள்ளிக்கொண்டு போய் கொட்டுகிறார்கள் என்றது அவர்களுக்கே வெளிச்சம். இந்த கேள்வியை எச்சி ராசாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு தான் ஆண்டி இந்தியன் என்று அவர் விளிக்க துவங்கினார்.

அந்த வகையில் இந்த முறை 50,000 கோடியை அள்ளி வீசி சரிந்துகிடக்கும் பொருளாதாரத்தை உயர்த்தி பிடிப்போம் என்று அருண் செட்லி அறிவித்து இருக்கிறார்.

இது பாசகாவின் கொள்கை முடிவு அதில் தலையிட நீதிமன்றங்களுக்கோ அல்லது எவருக்கும் உரிமை இல்லை என்று தான் சங்க பரிவாரங்கள் நம்புகின்றது, நாங்களும் அதை ஒப்புக்கொள்கின்றோம் வேறு வழியில்லாமல்.

ஆனால் இந்த 50,000 கோடி எங்கு இருந்து எடுத்து செலவுக்கு வீசப்போகின்றது சங்க பரிவாரங்கள். அவர்களின் சொந்த பணமாக இருந்தால் ஒருவரும் கேள்வி கேட்க தேவை இல்லை தான், அமெரிக்காவில் 3.79 லிட்டர் பெட்ரோல் ரூ 146.25 விற்கிறது. மிஞ்சிப்போனால் 3.79 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 16 சந்தையின் விலையை பொருத்து மாறுகின்றது. ஆனால் இந்தியாவில் இதே 3.79 லிட்டர் பெட்ரோல் ரூ 265.30க்கு விற்கின்றது. ஏன் அமெரிக்க விலையைவிட இந்தியாவின் பெற்றோல்லுக்கு இவ்வளவு விலை என்று கேட்டதற்கு சங்க பரிவார அரசு நிறைய கழிப்பறைகளை கட்டியது இன்னும் அதிகம் கட்ட வேண்டி இருக்கிறது அந்த திட்டத்திற்கு பணம் சேர்க்கவே இந்த அதி அதிக பெட்ரோல் விலை என்று வியாக்கியானம் சொல்கின்றது.

ஒன்றும் இல்லாத கழிப்பறைகளை கட்டவே மக்கள் இவ்வளவு பணம் செலவு செய்ய வைக்கப்படுகின்றார்கள் என்றால் இந்த 50,000 கோடி ரூபாயை எங்கே இருந்து பெறப்பட போகின்றது என்றால். கீரைகாரி, தயிர்காரி, இட்லி விற்கும் ஆயா, வடை சுட்டு விற்கும் ஆயாவை மிரட்டி வங்கியில் வலுக்கட்டாயமாக வைப்பு வைக்கப்பட்ட பணத்தையும் அளவுக்கு அதிகமாக விற்கப்படும் விலைவாசிகளிலும் பெறப்பட்ட பணத்தை திட்டங்களின் பெயரில் சங்கபரிவார அரசு கொட்டி வீணடிக்கப்படுகின்றது சுவாக.

Friday, September 22, 2017

இந்தியாவின் புல்லட் இரயில் விளங்காமத்தான் போகும் இது பாசகவின் மொழி

இந்த இரயில் திட்டத்தை அமைத்து தரப்போவது சப்பான், பசுக்கறி உண்ணும் பாவமக்களால் உருவாக்கப்போகும் இந்த புல்லட் இரயில் என்ன நல்லாவா இருக்கப்போகின்றது என்று பாசகவின் மன ஒலி உங்களுக்கு எல்லாம் கேட்கவில்லை போலும். அதனால் தான் ஒரு சொன்ன குண்டூசியை எடுத்து வச்சாலே பாகுபாலி அளவுக்கு புகழ்கின்ற மோடிக்கூட்டம் இந்த புல்லட் இரயில் பற்றியோ அதன் 20 ஆண்டு வளர்ச்சி பாதையை பற்றியோ, உலகிலேயே முதன் முதலில் புல்லட் இரயில் விட்டது மோடியால் மட்டும் தான் என்று எழுத மாட்டேன் என்கிறார்கள் கவனியுங்கள்.

Thursday, September 21, 2017

கேப்டன் விசயகாந்தும் பிரமர் மோடியும் நல்ல நடிகர்கள் மட்டுமே தலைவர்கள் அல்ல

விசயகாந்து நடிகராக திரையில் தோன்றும் போது நீதிமன்றங்களில் அவருடைய பேச்சுக்கு மறு பேச்சு இருக்காது, சாட்சியாக வந்தாக்கூட நீதிபதியையே கிண்டலாக பேசுவார். 20, 30 ஆட்கள் அவரை தாக்க வரும்போதும் ஒரே கையால் அந்த 20, 30 பேரையும் காற்றில் பறக்கவிட்டு முழங்காலிட்டு தலையை மெல்ல தூக்கி ஒரு சல்யூட் வைப்பார். பெண்களை கிண்டல் செய்யும் அல்லது துன்புறுத்தும் கூட்டங்களைக்கண்டால் விரட்டி விரட்டி அடித்தே கொல்வார். ஏழைகளை கண்டால் கையில் இருக்கும் பொருளோ பணமோ கொடுத்துவிட்டு அவர்கள் வீட்டு கூழ் கஞ்சியினை வாங்கி ருசிப்பார்.

நாடுன்னா என்னான்னு தெரியுமா என்று துவங்கி மருத்துவமனையில் நடக்கும் ஊழலில் தொடங்கி ஏசிஎப் என்ற ஒரு அணியை உருவாக்கி ஊழையும் அதன் சார்ந்தவர்களையும் வேறோடு அழிப்பார். இப்படி விசயகாந்தை பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.

ஆனால் விசயகாந்தை திரையில் இல்லாமல் நேரில் சந்தித்த மக்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள். ஒரு 4 வரிகளை தொடர்ந்து பேச அவரால் முடியவில்லை. 5 செய்திகளை கோர்வையாக பேச தெரியவில்லை. அது மட்டும் அல்லாது அவருக்கு பேச தெரியவில்லை என்றது அந்த இடத்தை அவரது வீட்டம்மா பயன்படுத்திக்கொண்டு எவ்வளவு மோசமாக பேச முடியுமோ அவ்வளது மோசமாக பொது மேடைகளில் அசிங்கபடுத்தினார்.

இந்த எல்லாம் மக்களை முகம்சுழிக்க வைத்ததே அன்றி எந்த விதத்திலும் பாராட்ட வைக்கவில்லை. சென்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு விசயகாந்தை பொது இடங்களிலோ பொது மேடைகளிலோ ஏன் தொகாவிலோ கூட காணமுடியவில்லை.

திரையிலே இயக்குனர்களால் கட்டி எழுப்பப்பட்ட அந்த பிம்பம் நேரில் செயலில் வரும் போது அந்த பிம்பத்தின் 1000 ஒரு பகுதி கூட உண்மை இல்லை என்று தெளிவுபடுத்தியது.

விசயகாந்து செய்த குற்றம் என்ன, தன்னுடையக கதைக்கு ஏற்றவாறு அவரை மிகப்பொருத்தமாக நடிக்க வைத்து அழகு பார்த்தார்கள் இயக்குனர்கள். அந்த பிம்பத்தை உண்மை என்று ஒரு கூட்டம் நம்பியது இது அவர்களின் அறிவின்மையே அன்றி எப்படி விசயகாந்தின் குற்றமாகும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அந்த பிம்பம் உண்மை என்று விசயகாந்தே நம்பியதின் விளைவு தான் இவ்வளவு அவமானங்களை அவர் பொது வெளியில் சந்திக்கின்றார்.

இந்த விசயகாந்தை போன்று தான் பிரதமர் மோடியும், பின்னால் இருந்து இயக்கும் கூட்டம் கொடுக்கும் வசனங்களை மேடைகளிலிலே அழகாக அரிதாரம் பூசி கை கால்களை ஆட்டி கிட்ட தட்ட நடனமாடி வசனம் பேசுவார்.

வானத்தை வில்லாக வலைப்பேன் என்பார், மணலை கயிறாக திரிப்பேன் என்பார், வலது பக்கம் திரும்பினால் ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் 15 இலட்ச ரூபாய் வீடு தேடி வரும் ஒரே ஒரு ஓட்டு மட்டும் போடு என்பார். இடது பக்கம் திரும்பினால் இந்தியாவை குறி வைக்கும் எதிரி நாடுகள் தொடை கை கால் நடுங்கி தன் நாட்டை நரகாசுரன் பூமியை பாய் போல சுறுட்டி கடலுக்கடியில் ஒளித்து வைத்தது போல் தங்களது நாட்டை பாயாக சுறுட்டி கொண்டு இந்தியாவை விட்டு வெகு தொலைவில் கண்காணாத இடத்திற்கு கொண்டு மறைவாக வாழ்வார்கள்.

இந்தியாவின் ஏழை மக்கள் எல்லாம் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பார்கள், ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடோ அல்லது மத சாதி பாகுபாடோ இல்லாமல் நிம்மதியாக இருப்பார்கள் என்றும். பொருளாதாரம் அமெரிக்காவையே மிஞ்சி அமெரிக்கர்களே இனி இந்திய ரூபாயில் தான் வர்த்தகம் செய்யவேண்டும் என்று சொல்வார்கள் என்றும். இந்தியாவையே இல்லை இல்லை உலகையே காக்க அவதரித்த கடவுள் என்றும் அந்த கூட்டம் கதை திரைக்கதை வசனம் பாடல் இசை ஒளிப்பதிவு பின்னணி குரல் என்று அனைத்து தரப்பிலும் வேலையில் இறங்கி கட்டமைத்தது இன்னும் அதை மீண்டு நிறுவ பார்க்கிறது.

ஆனால் உண்மையில் நாட்டில் நடப்பது என்ன, கருப்பு பணத்தை ஒழிக்கின்றேன் 50 நாட்கள் மட்டுமே பொறுத்து கொள்ளுங்கள் நான் செய்வது தவறாக இருந்தால் என்னை தீயிட்டு கொளுத்துங்கள் என்றார் இன்றைக்கு மக்களுக்கு கொளுத்தனும் என்ற ஆவல் இருந்தாலும் அந்த அளவிற்கு விலை கொடுத்து பெற்றோல் வாங்க வசதியில்லாமல் மக்கள் தயங்குகிறார்கள். இல்லை என்றால் ஊர்க்கு ஊர் தொட்டிகளை நிறப்பி அந்த செயல் எங்கள் ஊரில் நடக்கட்டும் என்று திருவிழாவே எடுப்பார்கள் போலும்.

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க பசு மாட்டையும் அதன் கழிவுகளில் எப்படி தங்கம் உட்பட பல தயாரிப்புகளை செய்யலாம் என்ற ஆராய்ச்சிகளுக்கு கோடான கோடி மக்கள் வரிப்பணத்தை இறைத்து அது அமெரிக்க பல்கலைகள் வரை பல் இளித்துக்கொண்டு நிற்கின்றது.

பசுவின் பெயரில் சட்டம் இயற்றுவதும் அதன் பாதுகாப்பின் பெயரில் சாதாரண மக்கள் பொது இடங்களில் அடித்து கொல்வதும் அது பசுக்கறி தானா என்ற அறிய ஒரு அறிவியல் அறிஞர் சாதணம் வடிவத்தவரை வந்து நிற்கின்றது.

இப்படி வரி விதித்தால் மக்கள் பலனடைவார்கள் என்று சொல்லி சாதாரண மக்கள் 100 ரூபாய் கொடுத்த இடங்களில் 130 ரூபாய் கொடுக்க வைத்து ஏழைகள் எல்லாம் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்றும் அதை எதிர்ப்பவர்கள் எல்லாம் கள்ளப்பணம் வைத்து இருப்பவர்கள் என்று புரட்டு பேசியும் மகிழ்ந்ததை மக்கள் இரசிக்கவில்லை.

கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வருகின்றேன் என்ற பெயரில் நாட்டில் இயங்கிக்கொண்டு இருந்த கல்வி அமைப்பை மடை மாற்றி விடுவதையும் மக்கள் இரசிக்கவில்லை.

ஏன் ஐயா இப்படி எல்லாம் சொத்தப்பல் திட்டங்கள் தவிர உங்களிடம் வேறு எந்த திட்டமும் இல்லையா என்றால் அந்த சொதப்பல் திட்டங்கள் எல்லாம் காங்கிரசு அரசால் கொண்டுவரப்படு நிலுவையில் உள்ளவைகளே, நாங்கள் செயல்படுத்தினோம் நீங்கள் காங்கிரசை தான் திட்டவேண்டுமே தவிர எங்களை இல்லை என்று சொல்கிறார்கள். தெரியாமல் தான் கேட்கின்றோம் பசுவும் பசு சார்ந்த திட்டங்கள் தவிர உங்களுக்கு வேறு எந்த திட்டங்களும் வகுக்க தெரியாதா இல்லை தெரியாது போல் நடிக்கிறீர்களா.... அது சரி சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வருவதற்கு.

அப்போ திரையில் அடுத்தவர் எழுதி இயக்கிய கதா நாயகனும் அடுத்தவர் எழுதிக்கொடுத்ததை மேடைகள் தோறு அடவு கட்டி ஆடிய உங்களுக்கும் என்ன வித்தியாசம். இந்த பொம்மை நாயகனை இன்னமும் இணையத்தில் பிரதமரின் செய்கையை நீதிமன்றம் கூட கேள்வி கேட்க துணியவில்லை என்று எழுதி மகிழ்கின்றது.

தினமும் தொகாவில் வரும் விசயகந்து போதையில் தள்ளாடும் நிகழ்வுகளும் சரி மோடியும் அவரது கூட்டமும் உளரி கொட்டுவதும் ஒன்றாகத்தான் மக்களுக்கு தெரிகின்றது.

நீங்கள் இருவரும் திரையிலும் மேடையிலும் நன்றாக நடிக்க மட்டுமே தெரிந்தவர்கள் என்றும் தலைவர்கள் இல்லை என்றும் மக்கள் நன்றாக புரிந்துக்கொண்டுள்ளார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்தால் உலகில் புன்னியம் பெருகி பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொன்ன மோடியின் அடிபொடிகளில் ஒருவரான ராம் செத்மலானியின் வாக்கு மூலம் இணையத்தில் பரவுகின்றது அதை படித்து பாருங்கள் நாங்கள் சொல்வது எவ்வளவு உண்மை என்று உங்களுக்கே தெரியும்.

Wednesday, September 20, 2017

திருமுருகன் விடுவிப்பு புயலுக்கு முன் அமைதியா

நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்திருக்கும் திருமுருகனுக்கும் அவரது தோழர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

சாதாரணமாக இப்படி வழக்கில் எல்லாம் விடுவிப்பது அபூர்வம், என்ன என்ன காரணங்களை எல்லாம் சொல்ல முடியுமோ அவைகளை எல்லாம் பூடகமாக வாய்வழி வாதமாக வைத்துவிட்டு அவைகளை எழுத்துபூர்வமாக கொடுக்க கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டு ஆண்டுகளை எளிதாக கடத்த முடியும்.

அதுவும் மைய அரசும் மா நில அரசும் சேர்ந்து நடத்திய நாடகம் என்றதால் என்ன என்ன தில்லு முல்லுகளை செய்யலாமோ அவ்வளவும் செய்ய அவர்களுக்கு முழு பலமும் ஆசிர்வாதமும் உண்டு.

இருப்பினும் எப்படி இவ்வளவு விரைவில் வெளியே விட சம்மதித்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை இப்போதைக்கு விடுங்கள் நாளை எங்காவது ஊருக்கு போகும் போது அங்கே பொது சொத்துக்கு தீயை வைத்துவிட்டு திருமுருகன் தான் வைத்தார் என்று அள்ளிக்கொண்டு வருவோம் என்ற திட்டத்தில் வெளியில் விட்டார்களா என்று தெரியவில்லை.

பொங்கல் சென்று தீபாவளி நெருங்கிக்கொண்டு இருக்கிறது இன்னமும் அந்த சல்லிகட்டு போராட்டத்தில் தீ வைத்த நல்லவர்கள் யார் என்றும் அவர்களுக்கு என்ன தண்டனை என்றும் இது வரையில் தெரியவில்லை. ஆனால் அதற்குள்ளாக போராட்ட குழுவை 6 மாதம் சிறையில் வைத்தாகிவிட்டது.

திருமுருகன் உள்ளே இருந்த நாட்களில் நீட்டும் அது சார்ந்தும் நிறைய நடந்துவிட்டது. நீட் சம்பந்தமாக என்ன என்ன செய்ய போகிறார் என்று பார்ப்போம்.

Tuesday, September 19, 2017

இளையராசாவையும் மே 17ஐயும் ஞாபகப்படுத்திய டன்கிரிக்கு(Dunkirk) படம்

பொதுவாக ஒரு நல்ல படம் பார்த்தால் அந்த படத்தின் பாதிப்பு மனதை விட்டு அவ்வளவு எளிதில் நீங்காது. அதுவும் மனதில் ஏற்கனவே பார்த்த பல விடயங்களை கண்ணுக்கு முன்னே கொண்டு வந்து நிறுத்தவும் செய்யும்.

இந்த டன்கிரிக்கு படமும் அப்படி ஒருபடம்.

போர் சம்மந்தமான படம் என்றால் நிறைய காட்டி மக்களை கட்டி போட்டு வைக்க முடியாது. முதலில் காட்சியின் விரிவுக்கு என்று ஒரு பிரமாண்டத்தை காட்டுவார்கள், பிறகு கதைக்கு சம்பந்தமான சிலரையும் அவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்று காட்டுவதும் தான் இயல்பு. அந்த வகையில் இந்த படமும் வரலாறில் யார் யார் எல்லாம் பதிவு பெற்றார்களோ அவர்களை மட்டும் ஆங்காங்கே காட்டி திரைகதையில் பதிக்கிறார் இயக்குனர்.

படத்தின் நாயகன் இசை தான், முதன் முதலில் ஆள் அரவம் இல்லாமல் இருக்கும் மையான அமைதியான ஊரில் அந்த வீரர்கள் நடக்கும் இடத்தில் மெல்லிதாக ஒலிக்கும் அமானுசிய ஒலி மெல்ல மெல்ல திகில் இசையாக் சீற்றம் கொள்கிறது.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று கடற்கரைக்கு வரும் காட்சியில் இன்னும் வீரியம் கொள்கின்றது. விரக்தியுன் உச்சத்தில் இருக்கும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தும் ஏதும் பேசிக்கொள்ளவோ என்ன ஆச்சு என்று விசாரித்துத்துகொள்ள முடியாத அளவிற்கு ஒரு விரக்தி. எப்போது தாக்குதல் நடக்கும் அடுத்த வினாடி என்ன நடக்கும் என்று ஊகிக்க முடியாத மர்மமாய் அடுத்தடுத்து நகர்கின்றது.

கொஞ்சம் கொஞ்சமாக இசை அங்கே தீவிரமாக அதே சமயத்தில் மெல்லிதாகவும் ஒலிக்கின்றது.

பிறகு அங்கே நடக்கும் தாக்குதலுக்கு பிறகு ருத்ர தாண்டவம் ஆடுகின்றது இசை. சிறப்பு சத்தமும் பின்னணி இசையும் அற்புதமாக நடனமாடுகின்றது படம் இறுதி வரை.

படம் முடிந்த பிறகு இந்த மாதிரி ஒரு ருத்ரதாண்டவ இசையை இதற்கு முன் எங்கேயோ கேட்டோமே என்று நினைக்கையில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் நினைவுக்கு வந்தது.

முதல் காட்சியில் துவங்கும் இசை பின்பு மெல்ல மெல்ல உக்கிரமாகி பிறகு கரைபுரண்டு ஓடும். கிட்டதட்ட ஒரு போர் படத்தின் இசையின் அத்தனை பாகங்களையும் கொண்டு இருந்தது அந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் இசை.

இன்னும் கொஞ்ச நாளில் அந்த ஓ நாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் இசையுடன் இணைத்து இரசிகர்கள் காட்சிகளை வெளியிடப்போவது உறுதி.

மே 17ல் கொத்து கொத்தாய் எங்கே மனிதர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்துக்கொண்டு எப்படி குண்டு வீசி கொன்றார்கள் என்று ஆவனங்கள் கூட நமக்கு காட்டவில்லை. ஆனால் இப்படி தான் கொன்றார்கள் என்று அழகாக இந்த படம் காட்டியுள்ளது.

போர் நடவடிக்கைகளில் செஞ்சிலுவை வாகனங்களை தாக்க கூடாது என்ற விதி அனைவரும் கடைபிடித்தே ஆகவேண்டிய ஒன்று ஆனால் டன்கிரிக்கில் முதலில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது அந்த செஞ்சிலுவை கப்பல் தான் என்று பார்க்கும் போது எப்படி பட்ட போர் அது என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

இந்த படதிற்கு சிறந்த படம், சிறந்த இயக்கம் இந்த இரண்டு பிரிவிலும் விருது கிடைக்க வாய்போ இல்லை. காரணம் எந்த ஒரு இடத்திலும் இராணுவம் பயன்படுத்தும் ரேடியோவை காட்டவில்லை. அது மட்டும் இல்லாது ஒரு குண்டு தாக்கிய 20 வினாடியில் கப்பல்கள் மூழ்குவதாகவும் காட்டியுள்ளார்கள். நல்ல ஆவணப்படம் என்றும் கூட சொல்ல முடியாது காரணம், படத்தில் தொழி நுட்ப முறையில் சேத்துள்ள கடலும் வானமும் சேர்ந்த காட்சிகளில் நிறைய சித்தரிக்கப்பட்டது போல் இருகின்றது.

வலுக்கட்டாயமாக காட்சிகளை திணித்தது போல் கையாண்டு இருக்கிறார்கள்.

2017ஆம் ஆண்டிற்கான ஆசுகர் விருதில் இசைக்கு மட்டுமாவாது போட்டியில் எடுப்பார்கள் மற்ற வகையில் சந்தேகம் தான்.


Monday, September 18, 2017

இராசீவ்காந்தியும் தூர்தர்சனும் மோடியும் நவோதயாவும்

முன்னொரு காலத்தில் இப்படி ஒரு சிரிப்பு தமிழ் நாளிதழில் வந்தது. மன நல மருத்துவரிடம் கணவனை மனைவி அழைத்து வந்து சொல்வார், "டிவி பாக்கும் போது கரண்டு போனா உடனே இராசீவ் காந்தி படத்தையே பார்த்துகிட்டு இருக்கார்ன்னு" சொல்வதாக இருக்கும் அந்த நகைப்பு.

அந்த கால கட்டத்தில் தூர்தர்சனை விட்ட வேற நாதியில்ல ஆகையால் என்னை நீங்க பார்த்து தான் தொலையனும் என்று எப்போது பார்த்தாலும் இராசீவின் படத்தையே காட்டியதன் விளைவு இந்த நகைப்பில் வந்து நின்றது.

பிறகு இந்தி நிகழ்சிகளை தேசிய நிகழ்ச்சிகள் என்ற பெயரில் திணித்தார்கள். வயலும் வாழ்வும் செய்தியும் முடிந்த பிறகு தேசிய நிகழ்ச்சிகள் என்று இரவு 9:00 வரை காக்க வைத்துவிட்டு பிறகு பாருங்கள் என்று சொல்வார்கள்.

ஞாயிறு இரவில் ஒரு படம் காட்டுவார்கள், அந்த படமோ மிகவும் பாடாவதியான படமாக இருந்தாலும் முடிவு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள இரவு 9:00 வரையில் காத்துகிடக்கனும்.

எங்க ஆட்சி எங்கள் முடியு நீங்கள் எல்லாம் என்ன செஞ்சாலும் இப்படியாது இந்திய கற்றுக்கொள் என்று அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்சனில் இவர்கள் படுத்திய பாடு கொஞ்சமா நஞ்சமா. விளம்பரம் கூட இந்தியில் தான் வரும். என்னே கொடுமை என்று தமிழக மக்களுக்கும் இருந்து விட்டு போனார்கள்.

ஆனால் இன்றைக்கு அந்த தூர்தர்சனும் அகில இந்திய வானொலியின் செய்திகளைக்கூட மக்கள் காது கொடுத்து கேட்க தயாராக இல்லை. 2 நிமிடத்திற்கு ஒரு முறை அமிதாப் வடக்கின் ஒரு குக்கிராமத்தில் இயற்கை உபாதைக்காக போகின்றவனை விசில் அடித்து இங்கே வா என்று கூப்பிடும் சொத்த பாரத்து விளம்பரம் மட்டும் தான் ஒளிபரப்பாகின்றது. அவ்வப்போது 30 ஆணுகளுக்கு முன்னால் ஒளிபரப்பிய படங்கள் மறைந்த இயக்குனர்களின் அந்தகால பேட்டி என்று காலாவதியான நிகழ்ச்சிகளாகவே வழங்குகின்றது.

ஒரு வேளை நவோதயா பள்ளியில் இந்தியில் பயின்றால் தான் மருத்துவம் என்று மோடி திணிக்கும் கால் தமிழகத்தில் இன்னும் 20 ஆண்டுகளில் சொத்த பாரத்துக்கு விளம்பரம் போட்ட நவோதயா ஆசிரியர்கள் தயாராக்குகின்றது என்றது மட்டுமே பொருள்.

தமிழகத்தில் மோடியைவிட அதிக அதிகார சம்பத்தை எல்லாம் செயலலிதாவின் ஆட்டத்தில் கண்டவர்கள் நாம், கிட்டதட்ட 25 ஆண்டுகளி அவர் கொடுத்த கசப்பு மருந்தை விழுங்கியவர்கள் நாம். நீங்கள் செய்யும் பந்தாக்களை விட 1000 மடங்கு பந்தாக்களை எல்லாம் தனது முதலாவது ஆட்சிகாலத்தில் நிகழ்த்தி மக்களின் சாபத்தை வாங்கிக்கட்டி கொண்ட செயலலிதாவின் காட்டாட்சி போல் இருக்கிறது உங்களி பேயாட்சி.

நாமும் மிரட்டினோம் அவர்களும் மிரண்டுவிட்டார்கள் என்று எண்ணாதீர்கள்.

இன்னும் 20 ஆண்டுகளில் நவோதயா பள்ளிகளில் பசுமாடுகளை கட்டி பராமரிக்கும் பகுதி நேர மைய அரசு ஆசிரியர்கள் ஏக் காவும் மே ஏக் கிசான் ரகுதாத்தா என்று சொல்வதை கற்பனையில் பார்க்கவே வேடிக்கையாக இருக்கின்றது...........

Saturday, September 16, 2017

எங்களுக்கு நவோதயா பள்ளிகள் வேண்டாம் கிருத்துவ மற்றும் முசுலீம் கல்வி அறக்கட்டளைகள் போதும்

இந்தியா போன்ற ஏழை நாடுகளின் உணவு பஞ்சத்தின் போது தங்களால் ஆன உதவிகளை கிருத்துவ மற்றும் முசுலீம் அறக்கட்டளைகள் வழங்கி வந்துள்ளது வரலாறு. அப்படி வந்தவர்கள் அதோடு நிற்காமல் கல்வியில் பஞ்சம் கண்டு நிற்கும் பின் தங்கிய இடங்களில் தங்களது கல்வி அறக்கட்டளைகளை நிறுவி கல்வியையும் வழங்கி வருகின்றது.

எந்த ஒரு படிப்புக்கும் வேண்டிய தயாரிப்புகளை பெறுவதிலும் செயலாற்றுவதிலும் தியாக உள்ளம் கொண்ட சேவர்களை கொண்ட அமைப்புகள் அவை. எந்த ஒரு இலாப நோக்கும் இல்லாமல் கடவுளுக்கு செய்யும் சேவையாக செய்யும் அவர்களின் சேவை தமிழகத்து ஏழை மக்களுக்கு மிகவும் அவசிமாக இருக்கிற நாட்கள் இப்போது.

மதவாத மைய அரசு உருட்டலும் மிரடட்டலுமாக எங்களுக்கு கும்பிடு போடு இல்லையேல் உனக்கு படிப்போ வேலையோ வாழ்வோ கிடையாது. மீறி எதிர்த்து எதுவும் பேசினால் என்ன நடக்கும் என்று கர்னாடகாவில் கொல்லப்பட்ட எழுத்தாளர்களே சாட்சி என்றும் மிரட்டுகிறது.

குறைந்தது இன்னும் ஒரு 4 வருடங்களுக்கு தமிழகம் தகப்பனை இழந்த குடும்பம் தவிக்கும் குடும்பமாக எடுப்பார் கைப்பிள்ளையாக ஆக்கப்பட்டுவிடும். எந்த தயாரிப்பும் இல்லாமல் மேலும் பல அனிதாக்களை பலிகொடுக்கம் வலிமையோ, புரண்டு வரும் வெள்ளமாக புரட்சி நடத்தவோ இந்த ஏழை மக்களுக்கு நாதி இல்லை.

ஒரு காலத்தில் சங்கதம் பேசினால் அல்ல காதில் கேட்டால் கூட காதில் ஈயத்தை காச்சி ஊற்றப்படும் என்று சொல்லி சொல்லி சங்கதத்தை அழித்துவிட்டு. இன்றைக்கு அதன் அனாதை பிள்ளையான இந்தியை படிக்கவில்லை என்றால் மருத்துவம் படிக்க முடியாது என்று பயமுறுத்தி தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை நிறுவி இந்தியும் இந்துத்வமும் திணிக்க முற்பட்டு நிறிகிறார்கள். தலைக்கு 15 இலட்ச ரூபாய் கொடுப்போம் என்று சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பி அவர்களுக்கு வாக்களித்தவர்கள் இன்றைக்கு செய்வதற்கறியாமல் கையை பிசைந்துக்கொண்டு நிற்கிறார்கள்.

இந்த அறிவு பஞ்சத்தை போக்க கிருத்துவ மற்றும் முசுலீம் அறக்கட்டளைகளை உதவும்படி வேண்டுதல்களை வைக்கின்றோம்.

யேசு நாதர் யார் என்றே தெரியாமல் இருந்த ஊரில் கிருத்துவம் சொல்லிக்கொடுத்து அதனுடன் கல்வியையும் வழங்கிய உங்களின் சேவையும் நிகரற்றது. உங்களின் பாதையில் கல்வி அறக்கட்டளைகளை நிறுவி கல்வி சேவையாற்றும் முசுலீம் அறக்கட்டளைகளும் உங்களுடன் எங்களுக்காக நிற்கின்றது. வாருங்கள் வந்து இந்த ஏழை இந்தியாவின் உண்மையான ஏழை மக்களின் கல்விக்கும் ஏதிர்காலத்திற்கும் உதவுங்கள்.

Wednesday, September 13, 2017

செயலலிதா மரணத்தின் மர்மம் வெளியிட்டார் போலி மருத்துவர் தமிழிசை

செயலலிதாவிற்கு மருத்துவம் வழங்கிய மருத்துவர்கள் யாவரும் போலி மருத்துவர்கள் என்றும் நீட் பரீட்சையில் தேர்வு பெறாத மருத்துவர்களால் எப்படி தரமான மருத்துவம் கொடுக்க முடியும். ஆகையால் போலி மருத்துவர்களை கொண்டு கொடுக்கப்பட்ட சிகிச்சை தோல்வியுறுவதில் ஒன்றும் அதிசயம் இல்லை என்று போலி மருத்துவர் தமிழிசை சௌந்தர்ராசன் தெரிவித்துள்ளார்.

Thursday, September 7, 2017

பரமாத்த குருவும் அவரது சீடர்களும் - பாசகவும்

அந்த காலத்தில் பரமாத்த குரு என்று ஒரு கதையை சொல்வார்கள். அதில் அடி முட்டாளாக ஒரு குருவும் அதைவிட மகா மட்டமாக முட்டாளாக அவரது சீடர்களும் என்று ஒரு கதை சொல்வார்கள்.

சின்ன சின்ன செய்கைகளில் கூட எவ்வளவு முட்டாள் தனமாக நடந்துகொள்ள முடியுமோ அவ்வளவு முட்டாள் தனமாக நடந்து காட்டுவது இந்த குருவின் இயல்பாக இருக்கும். அதற்கு ஆமாம் சாமி போடும் சீடர்கள் என்று கதை நகரும். படிக்க நகைப்பாக இருந்தாலும் மிகவும் வேதனையான கதைகள் அவைகள், இப்படி கூடவா ஒரு அடி முட்டாள் இருப்பான் என்று நினைக்க வைக்கும் கதை பாத்திரங்கள் அவைகள்.

ஆனால் ஆச்சர்யம் அந்த கதைகளில் வருவது போல் இருக்கிறது மோடியும் அவரது அமைச்சரவையும். பணமதிப்பிழப்பு இந்த செய்கைகளில் ஒரு சிறந்த உதாரணம்.

இது வரையில் 2.8 இலட்சம் கோடி பணத்தை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்து இருப்பதாக மோடியின் சீடர் அருண் செட்லி தெரிவித்துள்ளார்.

இந்த 2.8 இலட்சம கோடியில் வருமான வரி துறையின் தனிக்கையையும் தாண்டி முக்கால் வாசி பணமும் வெளியே வந்துவிடும் என்றதில் ஐயம் இல்லை. இருந்தாலும் பரமாத்த குரு என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

வெறும் மாடும் மத வெறியும் பழைய காங்கிரசு வகுத்த திட்டம் தவிர பாசகவிற்கு ஒன்றும் தெரியவில்லை. எதைக்கேட்டாலும் இது 2010ல் காங்கிரசு கொண்டுவந்த திட்டம் அதை ஆதரித்தது திமுக என்று மட்டுமே சொல்கிறார்கள். அப்படி என்றால் இது வரையில் பாசகவால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எல்லாம் என்ன என்றால் இந்த பரமாத்த குரு திட்டங்களை சொல்லி சல்லியடிப்பார்கள் சிங்கிகள்.

Tuesday, September 5, 2017

பாசக - நீட் தேர்வால் ஏழை மக்கள் எல்லாம் எவ்வளவு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்

நீட் தேர்வு வந்ததால் தகுதியான அறிவாய்ந்த மக்கள் மட்டுமே தான் இனி மருத்துவ படிப்பு படிக்க முடியும் என்றும் இது தமிழக்த்தின் ஏழை மாணவர்களையும் ஏழை சமூகத்தையும் மனதில் வைத்து தான் இந்த முடிவை பாசக அரசு எடுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு கள்ளப்பணம் வைத்து இருப்பவரை குறிவைத்து எடுக்கப்பட்ட முடிவு, இதனால் பலன் பெறப்போவது என்னவோ தமிழகத்தின் ஏழை எளிய மக்கள் தான்.

இந்த நீட் தேர்வு திணிப்பு முடிவை எடுப்பதற்கு முன் பாசகவின் தலைமை எத்தனை நாள் தூக்கம் இல்லாமல் தவித்து இருக்கிறது தெரியுமா. இந்த நீட் தேர்வின் பலன் இன்னும் 50 நாட்களில் தெரிய ஆரம்பித்துவிடும்.

 நீங்களும் படிக்கிறீர்கள் கள்ளப்பணம் வைத்து இருப்பவனும் படிக்கிறான் ஆனால் பாருங்கள் கடைசியில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ படிப்பை அவன் அந்த கள்ளப்பணம் வைத்து வாங்கிக்கொண்டுவிட்டு ஏழை எளியவர்களை மருத்துவ படிப்பு படிக்க முடியாமல் செய்து வந்தார்கள். இப்போது இந்த நீட் தேர்வு வந்ததால் இனி ஏழை எளிய மாணவர்கள் எல்லாம் இந்த ஆண்டு முதல் உலகத்திலே வேறு எங்குமே காணமுடியாத அதிசயமாக அதிக அளவில் மருத்துவம் படிக்க இருக்கிறார்கள்.

இந்த தமிழக ஏழை எளிய மக்கள் மருத்துவம் படிக்க வாப்பு கிடைத்தது என்ற பொறாமையில் கள்ளப்பணம் வைத்து இருப்பவர்கள் தான் போராட்டம் அது இது என்று ஆடுகிறார்கள். மற்றப்படி ஏழை எளிய மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் நண்பர்களும் உறவினர்களும் எவ்வளவும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கிறார்கள் என்று தமிழகம் சென்று பார்க்கும் படி இந்தியாவின் மற்ற மாநில மக்களை பாசக கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் நீட் தேர்வை திணித்ததில் திக்கு முக்காடி போய் தமிழகத்தின் ஏழை எளிய மக்கள் வீதிகளில் வந்து கண்ணில் கண்ட மக்களுக்கு எல்லாம் இலட்டு கொடுத்து கொண்டாடும் காட்சிகளை வீதி எங்கும் திருவிழாப்போல் தமிழகத்தில் பார்க்க முடிவதாக தமிழக பாசக தலைவர்கள் தொகாவிலும் செய்தி ஊடகங்களிலும் தெரிவித்து மகிழ்கிறார்கள்.

தமிழகத்தில் பாசக ஆட்சி இல்லாத போதே இவ்வளவு நல்லகாரியங்களை செய்யும் பாசக மட்டும் தமிழகத்தை ஆளும் மா நிலமாக வந்தால் நிலைமை எவ்வளவு மேம்படும் என்று குறிப்பிட்டு அகமகிழ்ந்தார்கள் என்று தினசரிகளை படித்தாலே தெரியும் என்றும், தமிழகத்தில் தாரமரை மலர்ந்தே தீரும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Wednesday, August 30, 2017

நல்லவேளை பாசக நித்தி ஆணையம் குடும்பங்களை பற்றி எதுவும் ஆராயவில்லை

இந்த நித்தி ஆயோக்கின் ஆயோக்கியர்கள் அவ்வப்போது கிறுக்கு தனமாக பிதற்றுவார்கள் அப்படி பிதற்றியதின் உச்சம், அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்ற ஆலோசனை.

ஏன் அரசு பள்ளிகளை தனியாருக்கு கொடுக்க வேண்டும், அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையில் வீழ்ச்சி அடைந்து நலிவடைத்துள்ளது அதனால் தனியாரிடம் தரவேண்டும் என்று ஆலோசனையை வழங்கியதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏமாளி இந்தியர்கள் இருக்கும் வரையில் பிடுங்கி திண்பது என்று இருக்கிறார்கள் போலும் இந்த தனியார் நிறுவனத்தினர்கள்.

வருமானம் கூடிப்போச்சு அதனால் உங்களுக்கு பொதுவினியோகத்தில் பொருட்கள், சம்பாதித்த பணத்தை எல்லாம் செலவு செய் என்று சொல்லாமல் சொல்கிறாகள். மேலும் நாடெங்கிலும் உள்ள அரசு பள்ளியில் இலவச கல்வியை அடிப்படை உரிமையாக பெற்று வந்தார்கள். இப்போது பொருட்களுக்கு செலவழித்தது போக மீதம் இருக்கும் பணத்தை அடிப்படை கல்வியில் இருந்து செலவு செய் என்று சொல்கிறார்கள்.

இந்த நித்தி ஆயோக்கியர்களை குடும்ப நலம்பற்றி சொல்ல சொல்லி இருந்தால் எந்த மனைவிமார்களும் வசதியான ஒரு வாழ்க்கையை வாழவில்லை ஆகையால் இனி மேல் இவர்களுக்கு கணவன் தேவை இல்லை பதிலாக தனியார் வழங்கும் கணவன் சேயைதான் வாங்க வேண்டும் என்று உத்தரவிடுவார்கள் போலும்.

தலை இருந்தா தானே தலைவலி என்று சொல்வதை போல், நல்ல அரசு. இந்த அரசு தான் வேண்டும் என்று தவமிறுந்த இந்தியர்களே உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.......

Tuesday, August 29, 2017

அன்புமணி மருத்துவ மாணவ சேர்க்கை ஊழல் இருக்கட்டும் உங்களின் அரசு மருந்து ஆலை மூடலுக்கு தண்டனை எப்போது

மருத்துவ மாணவர் சேர்க்கையில் போலி சான்றிதழ்ல்களை கொடுத்து ஊழல் செய்தோரை தண்டிக்க வேண்டும் என்ற உங்களின் ஞாயமான கோரிக்கை புரிகின்றது. அதே போல் நீங்க சுகாதார அமைச்சராக இருந்த போது இந்தியாவில் இயங்கி வந்த அரசு மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளை எல்லாம் மூடி அயலக மருந்தாலைகளில் தயாரிக்கும் மருந்துகளை தான் இனி அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைவரும் வாங்க வேண்டும் என்று நடந்துக்கொண்டீர்.

அதை அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் அடுத்த முதல்வர் நான் தான் என்று கையில் ஒரு எழுது கோலுடன் கையெழுத்து தான் போடுவேன் என்று விளம்பரப்படுத்துனீர்கள். அதுகாரும் தந்தி தொகாவில் பாண்டே கேட்ட இதே கேள்விக்கு அந்த மூடப்பட்ட மருந்தாலைகளுக்கு(தமிழக்த்தில் உதகமண்டலத்தில் ஒரு அரசு மருந்தாலை) பதில் உலக தரமான அளவில் புதிய ஆலைகளை திறக்க உத்தரவிட்டதும் அது விரைவில் சென்னையில் திறக்கபடும் என்றும் சொன்னீர்கள்.

ஆனால் இது வரையில் அந்த ஆலையும் திறக்கபடவில்லை, சாதாரண எளிய மக்களும் அவர்களுக்காக இயங்கி வந்த அரசு மற்றும் அரசு சார்பு மருத்துவமனைகளும் தனியாரிடம் தான் இப்பொழுதும் மருந்துகளை வாங்குகின்றனர்.

இந்த கொள்ளைக்கு துணை போன உங்களுக்கு எப்போது தண்டனை என்ன தண்டனை என்று நீங்களே சொல்லிவிடுங்கள் அன்புமணி.

வெறும் 1 ரூபாய்க்கும் 2 ரூபாய்க்கும்  கிடைத்துக்கொண்டு இருந்த பேராசிட்டமால் இன்றைக்கு எவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கின்றது தெரியுமா. உயிர்காக்கும் மற்றும் மிகவும் அவசியமான மருந்துகளை தயாரித்து வழங்கிய அந்த 4 அரசு மருந்தாலைகளை மூட சொல்லி சொன்ன அந்த தனியார் மருத்தாலைகள் யார் யார், என்ன என்ன காரணங்களுக்காக அந்த ஆலைகளை நீங்கள் மூடினீர்கள் என்று தனியாக ஒரு விளக்கம் அளிக்க தேவை இல்லை. இன்றைக்கு பாசக எப்படி புது புது காரணங்களை சொல்லி பொது வினியாகங்களை மூடி தனியார் நிறுவனங்களிடம் பொருட்களை வாங்கிகொள்ளுங்கள் என்று சொல்கின்றனவோ அதை அன்றே செய்து முடித்த முன்னோடியல்லவா பதில் சொல்லுங்கள்.

Monday, August 28, 2017

மோடியின் தனிப்பட்ட கருத்து -- மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது

பொதுவாக பாசகவின் யார் யார் எது எது பேசினாலும் அது அவரது தனிப்பட்ட கருத்து என்று தான் தமிழக பாசகவினர்கள் சொல்வார்கள். அந்த வகையில் பார்த்தால் மோடி சொல்லி இருக்கும் இந்த மதத்தின் பெயரால் வன்முறையை சகித்துக்கொள்ள முடியாது என்ற கருத்தும் மோடியின் தனிப்பட்ட கருத்து தான் போல.

இந்த மாதிரியான கருத்துக்களை மோடி கடைசியாக அமெரிக்க பயணம் சென்று வந்ததில் இருந்து அடிக்கடி சொல்கிறார். யாருடைய வற்புறுத்தல் என்று தெரியவில்லை.

மதத்தின் பெயரால் 3 நாட்களில் 1,60,000 மக்களை கொன்று குவித்தவர் இந்த மோடி, அவர் சொல்கிறார் மத்தின் பெயரால் வன்முறையை பொறுத்துக்கொள்ள முடியாது என்று.

Monday, August 21, 2017

ஒரு டீக்கடைகாரரும் அவரது பிட் நோடீசு அடிக்கும் நண்பரும்

ஒரு ஊரில் ஒரு டீக்கடைகாரர் இரயில் நிலையத்தில் டீக்கடை நடத்தி வந்தார். அந்த கடைக்கு தேவையான காகிதங்களை பெற எண்ணி நகர் முழுதும் அலைந்தார். கடைசியில் அவருக்கு கட்டும் விலையில் வினியோகிக்க முடியாமலும், நன்றாக எழுத்துக்களும் அச்சும் வரவில்லை என்று மக்களால் நிராகரிக்கப்பட்ட பிட் நேடீசுகள் இந்த டீக்கடைக்காரின் விலையடக்கத்தில் கிடைக்க அங்கேயே வாங்கி அந்த பிட் நோடீசுகளில் அன்றாடம் டீக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பொட்டலம் மடித்து கொடுத்துவந்தார்.

நாளடைவில் அந்த பிட் நோடீசு அடிப்பவரும் டீக்கடைக்காரரும் நெருக்கமான் வியாபாரிகளானர்கள். பிட் நோட்டீசு அடிப்பவருக்கு டீக்கடைக்கு கொடுக்கும் மட்ட காதிகங்களில் தான் அதிக இலாபம் வந்தது. ஆகவே கொஞ்சம் கொஞமாக அச்சடிக்கும் நுட்பங்களையே மறக்க துவங்கினார்.

டீக்கடைக்காரரும் பிட் நோட்டீசு அடிப்பவரும் அன்றாடம் மாலையில் சந்தித்துக்கொண்டு தங்களது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கலந்தாலோசிக்க துவங்கினர். அங்கனம் பேசும் போது எல்லாம் பிட் நோடீசுகாரருக்கு கோடி கோடியில் வியாபாரம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால் அதற்கு தகுந்தார் போல் அச்சடிக்கும் திறனோ முயற்சியோ இல்லாமல் இருந்தார்.

இப்படி காலம் உருண்டோடியதில் டீக்கடைக்காரர் ஒரு நாள் அந்த நாட்டின் பிரதமர் ஆனார். டீக்கடைக்காரருக்கு அவரது நண்பர்கள் யாவரும் சேர்ந்து ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் அந்த பிட் நோட்டீசு நண்பரும் கலந்துக்கொண்டு இருந்தார்.

 நீண்ட நாளைக்கு பிறகு சந்தித்துக்கொள்ளும் இந்த நண்பர்கள் தங்களது பழைய நட்பையும் அது தொடர்பான பேச்சுக்களையும் அசைப்போட்டர்கள். அப்போது தான் டீக்கடைக்காரர் பிட் நோட்டீசுகாரருக்கு எதிர்காலத்தில் தான் உதவுவேன் என்று சொன்னது ஞாபகத்திற்கு வரவும், மேலும் பிட் நோடீசுகாரர் மிகவும் ஏழ்மையான நிலையில் சாப்பாட்டிற்கே அலையும் நிலையி அன்றாடம் காட்சியாக வாழ்வதும் பார்த்து சகிக்காமல் மனமுடைந்து போகிறார் அந்த டீக்கடைக்காரர்.

அன்றைய இரவு முழுதும் மனவலியில் துடித்த அந்த டீக்கடைக்காரர் காலையில் ஒரு யோசனை பிறக்கிறது. அன்று தனது அமைச்சரவை சக்காக்களை அழைத்து இன்று இரவு ஒரு முக்கிய முடிவை அறிவிக்க போகின்றேன் என்று மட்டும் சொல்லிவிட்டு பாராளுமன்றத்திலே இருக்கும்படி கேட்டுக்கொள்கிறார்.

இரவு அந்த நாட்டில் இருக்கும் 1000 மற்றும் 500 மதிப்பு கொண்ட பணம் இனி செல்லாது என்று அறிவிக்கின்றார்.

 நாட்டுமக்களும் அமைச்சர்களும் குழம்பிப்போய் நிற்கும் போது, அந்த பிட் நோட்டீசுகாரர் மட்டும் நாட்டில் இருக்கும் பழைய அச்சடிக்கும் இயந்திரங்கள் எங்கே சல்லீசாக கிடைக்கும் என்று தேடி அலைகிறார். அங்கே இங்கே என்று அலைந்து கடைசியில் அந்த நாட்டில் வெகு வருடங்களுக்கு முன் இருந்த லாட்டரி சீட்டை அச்சடிக்கும் இயந்திரம் தான் இவரின் விலைக்கு படிந்த விலையில் கிடைக்கிறது. அந்த இயந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த டீக்கடைக்காரரை தொடர்புகொண்டு தான் வாங்கிய இயந்திரம் பற்றி செய்தியை தெரிவிக்கிறார்.

டீக்கடைக்காரருக்கோ மகிழ்ச்சி தாங்க முடியவில்லை, தனது பழைய நண்பருக்கு தான் நினைக்கும் திட்டங்கள் அவருக்கு புரிகின்றதே என்று அகமகிழ்ந்து பழைய 1000 மற்றும் 500 பணதிற்கு பதில் புதிய பணத்தை இரவோடு இரவாக அடிக்கும்படி பணிக்கிறார் டீக்கடைக்காரர்.

பிட் நோட்டீசு அடிப்பவரும் தன்னால் முடிந்தவரை அந்த லாட்டரி இயந்திரத்தில் பணத்தை இரவு முழுவதும் காலால் மிதித்தே பிட் நோட்டீசு அடிப்பது போல் அடித்து முடிக்கிறார். காலையில் அச்சடித்த புதிய லாட்டரி டிக்கட்டுகள் போல் இருக்கும் அந்த பணத்தை கொண்டு சென்று தனது நண்பனிடம் காட்டுகிறார். அதை பார்த்த டீக்கடைக்காரர், எவ்வளவு பணம் அச்சடித்து இருக்கிறீர்கள் என்று வினவுகிறார். இரவு முழுவதும் அச்சடித்ததில் 500ல் ஒரு 500ரும் 1000த்தில் ஒரு 500ரும் அச்சடித்தாக சொல்கிறார்.

அந்த டீக்கடைகாரர் ஒரு காகிதத்தில் ஒரு நாளைக்கு இவ்வளவு என்றால் எத்தனை நாளில் பூர பணமும் அச்சடிக்க முடியும் என்று கணக்கிட்டு பார்த்து, இனிமேல் நீங்கள் 1000 பணம் அச்சடிக்க வேண்டாம் அதற்கு பதில் 2000 பணமாக அச்சடிங்கள். 2000 பணத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று சொல்கிறார்.

இப்படியே ஒரு 50 நாட்கள் செல்கின்றது, 50 நாட்களுக்கு பிறகு அந்த நாட்டில் அது வரையில் 2000 பணத்தை பார்க்காத மக்கள் 2000 பண தாளை கண்டதில் ஆனத்த கூத்தாடி பார்ப்பவர்கள் எல்லோருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்கள்.

பிறகு மெதுவாக 500 பணத்தாளும் அச்சடித்து கொடுத்தார். இப்படியே 10 மாதத்தில் அந்த பிட் நோட்டீசு அடிப்பவரின் அச்சு வேலை தொடர்கின்றது. 10 மாதத்திற்கு பிறகு 200 பணத்தாளும் 50 பணத்தாளையும் மிச்சம் மீதி இருக்கும் மையை வைத்து அடித்து கொடுக்கிறார் அந்த பிட் நோட்டீசுகாரர்.

அப்போது அந்த டீக்கடைக்காரர் தனது நண்பரை பார்த்து கேட்கிறார் கோடி கோடியாக அச்சடித்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றீரே இப்போது திருப்தியா என்றார். அதற்கு அந்த பிட் நோட்டீசுகார் மிக்க நன்றி, இது போல் இன்னும் மிச்சம் இருக்கும் பணங்களையும் அச்சடிக்கும் வேலையையும் எனக்கே கொடுங்கள், சம்பாதித்த செல்வத்தில் பக்கத்து நாட்டின் லாட்டரி அடிக்கும் இயந்திரம் ஒன்றை வாங்கி இருப்பதாக சொன்னார் அந்த பிட் நோட்டீசுகாரர்.

தனது பிட் நோட்டீசுகாரரின் நட்பை மற்றவர்களு தெரியாமல் பார்த்துகொள்ள அந்த டீக்கடைக்காரர் தந்திரமாக நாட்டின் முன்னேற்றத்தின் பால் பற்றுக்கொண்டு புதிய பணத்தை தயாரிக்க உத்தரவிட்டதாகவும். அனைவரும் ஒத்துழைத்தால் தான் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று தெரிவித்தார். உடனே மக்கள் அனைவரும் இன்னும் ஒருமுறை இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள்.

இன்றைக்கும் அந்த பிட் நோட்டீசுகாரர் மும்முரமாக தனது பழைய இயந்திரத்தில் மிச்சம் மீதி இருக்கும் மையை எல்லாம் ஊற்றி அச்சடித்துக்கொண்டு அயராது உழைக்கிறார் தனது உற்ற நண்பனுக்கு உதவும் பொருட்டு........

Thursday, August 17, 2017

நீட் அவசர சட்டம் - தமிழகத்தின் அடுத்த இரும்பு பெண்மணி நிர்மலா சீத்தாராம் தான் போல

 நீட் அவசர சட்டம் கொண்டு வாருங்கள் மைய அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்று 3 நாட்களுக்கு முன் சொன்னார் நிர்மலா, அடுத்த நாள் தமிழகத்தின் சட்ட பேரவையில் அவசர சட்டம் நிறைவேற்றப்படுகின்றது. அடுத்த நாள் மைய சட்ட அமைச்சகத்தில் ஒப்புதல் வழங்கப்படுகின்றது, இன்று 3வது நாளில் மனிதவள மற்றும் கல்வி துறையிலும் அங்கிகரிக்கப்பட்டு செயலுக்கு வந்துவிட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் மக்கள் அறியப்படுவது, பாசக நினைத்தால் 3 நாளில் சல்லிக்கட்டு மீளக்கொண்டு வந்து இருக்கனும். ஆனால் 10 இலட்சம் மக்கள் மெரினாவில் கூடி தமிழக அரசை கழுவி ஊற்றியபிறகும், பீட்டாவின் தமிழக தலைவர் தமிழ் பெண்களை எல்லாம் பாலியல் சுகத்திற்கு அலைபவர்கள் என்று வக்கிரமாக பேட்டிக்கொடுத்த பிறகும், மெரினாவை சுற்றியுள்ள குப்பங்களை எல்லாம் காவலர்களே தீயிட்டு கொளுத்திய பின்பு தான் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் இல்லை.

இப்படி ஒரு விவகாரத்தை தீர்க்க வேண்டும் என்றால் கத்தி இன்றி இரத்தம் இன்றி 3 நாளிலே எல்லா விதமான ஒப்புதல்களை எல்லாம் பெறப்பெற்று முடிக்க முடியும் என்று காட்டியுள்ளார்.

மேலும் குட்டி குட்டி தலைவர்களான தலைவர்களான பொன்ரா தமிழிசை எச்சி இராசா எல்லாம் பேட்டி கொடுப்பதற்காக வேலை கொடுக்கப்பட்ட தலைவர்கள் மட்டும் தான் முடிவுகள் எடுப்பதும் செயல்படுத்துவது இந்த இரும்பு பெண்மணி நிர்மலா என்று தான் காட்டியுள்ளார்கள்.

முடவனுக்கு கொம்பு தேன் மேல் ஏன் ஆசை என்று இனி அந்த குட்டி குட்டி தலைவர்கள் மற்றும் விவாத தலைவர்களும் தங்களின் இரும்பு பெண்மணியின் பின் அணிவகுத்து செயல்படுவது தான் அவர்களுக்கு நல்லது என்றும் மைய பாசக தெளிவிபடுத்தி உள்ளதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

Wednesday, August 16, 2017

இந்தியாவை நாம் ஏன் வெறுக்கனும்

இந்தியா எனது தாய் நாடு, இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள், சமூகத்தின் பால் வரும் வேறுபாடுகளை அரசியல் அமைப்பின் பாலும் சட்டத்தின் வழியிலும் நின்று தீர்வு காண்பேன் என்று உறுதி கூறிய நாட்கள் நினைவுக்கு வந்து போகின்றது.

அந்த மூவர்ணக்கொடியை பார்த்ததும் மனதுக்குள் வரும் அந்த சிலிப்பும் பெருமிதமும் கனவாகவும் அந்த கால நினைவுகளாகவும் மட்டுமே ஆகிவிட்டுமோ என்ற அச்சமே வருகின்றது.

நாளை நள்ளிரவில் இந்த மூவர்ணக்கொடு செல்லாது நாளையில் இருந்து இனி எல்லோரும் பச்சை நிறக்கொடியை தான் இந்தியாவின் கொடியாக வணங்கவேண்டும் என்று சொல்லிவிடுவார்களே என்று கிலியாகவும் இருக்கிறது.

வீட்டு நலனையும் உனது சொந்த நலனையும் விட நாட்டின் நலம் தான் முக்கியம் என்றும் அதற்காக நீ அனைத்தையும் விட்டுக்கொடுத்தால் தவறில்லை என்று வா உ சி யை உதாரணமாய் காட்டி பேசுவார்கள். வெள்ளையர்களை எதிர்த்து சுதேசி கப்பல் விட்டவரை அந்த கப்பலை கடைசியில் வெள்ளையரிடமே விற்ற கொடுமை இந்தியாவில் மட்டுமே நடக்கும். அதை விடக்கொடுமை எல்லாம் இப்போது நடந்துக்கொண்டு இருக்கிறது.

உணவு பாதுகப்பு திட்டமாம், அந்த திட்டத்தால் மக்கள் எல்லாம் அதிகவிலை கொடுத்து தான் உணவை வாங்க வேண்டும், திட்டத்திற்கு பெயர் உணவு பாதுகப்புத்திட்டம். என்னே கொடுமையடா

கதிராமங்கலத்தில் குடி நீர் நன்றாகத்தான் இருக்கின்றதாக ஒரு சாதிக்கட்சி தலைவர் சொல்கிறார், ஆனால் அவர் கோவையில் நல்ல குடி நீரைக்குடித்துக்கொண்டு கதிராமங்கலத்து மக்களின் நீருக்கு சான்றிதழ் வழங்குகிறார்.

மைய அரசில் அங்கம் வகிக்காத மாநிலங்களை எல்லாம் சுடுகாடாக மாற்றும் திட்டத்துடன் இயங்கும் அரசியல் நகர்வுகளை தமிழகத்தில் நடத்தி எங்கே எல்லாம் விவசாயம் நடந்ததோ அங்கே எல்லாம் தரிசு நிலங்களாக கானும் கொடுமை அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.

நீதிமன்றங்கள் செல்லரித்து உளுத்துக்கொட்டும் நிலையில் இருக்கின்றது, கணக்கு பாடம் படிக்கும் மாணவர்கள் எல்லாம் 2 + 2 = 5 என்று எள்ளி நகையாடுகிறார்கள், 1000 கோடி ரூபாய் கொடுத்தால் 2 + 2 = 1 என்றும் கூட தீர்புகிடைக்கும் என்று நகைக்கிறார்கள்.....

கொலை செய்வது பாவம் என்றும் மரண தண்டனைக்கு உரிய குற்றம் என்று தான் இது வரையில் கேள்விப்பட்டு இருக்கின்றோம் ஆனால் மாகாத்துமா என்று உலகமே கொண்டாடியவரை கொன்றது ஒன்றும் குற்றமே இல்லை என்று பகவத் கீதையை சாட்சியாக கூறும் கொடுமைகளை எல்லாம் பார்க்கிறோமே என்று மனம் பதறுகின்றது.

எந்த மொழி பேச வேண்டும் என்றதில் இருந்து என்ன உண்ண வேண்டும் உடுத்தவேண்டும் தெய்வமாக வேண்டும் என்று கட்டளையிடும் அரசை இந்தியா என்றுமே கண்டது இல்லை ஆனால் இன்று இவைகள் தான் நாள்ளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக நடந்துக்கொண்டு இருக்கிறது.

 நாடு முன்னேறுகிறது என்று தான் அடிக்கடி சொல்கிறார்கள் ஆனால் சாமானியனை இனிமேல் தனது அத்தியா அவசிய பொருட்களை கூட அதிகப்படியாக பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும் என்ற நிலை முன்னேற்றம் இல்லை என்றது பொருளாதாரம் தெரியாதவர்களுக்கு கூட தெளிவாக தெரியும், ஆனால் மைய அரசை சேர்ந்த தமிழக அரசியல்வாதிகள் தமிழகத்திலும் இந்தியாவிலும் பாலாறும் தேனாறும் ஓடுவதாக சொல்கிறார்கள்.

நாளைக்கு நாள் வேலை வாய்ப்புகள் குறந்துக்கொண்டே வருகின்றது, விலைவாசியே வின்கல வேகத்தில் பறக்கின்றது.

4 வருட பட்டம் பயின்றால் தான் அமெரிக்கவில் வேலை கிடைக்கும் என்று ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு என்று ஆங்கில வழி கல்வி பள்ளிகளும் கல்லூரிகளும் கல்லா கட்டியது, இந்த வருடம் இயந்திர பொறியியல் படிப்பு படிக்க ஆளே இல்லை, பொறியிலே வேண்டாம் என்று மக்கள் ஒதுக்க ஆரம்பித்து வருடங்கள் ஆகுகின்றது ஆனால் நாடு நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டும் வளர்ந்துகொண்டும் இருக்கிறது என்று மாதம் ஒரு முறை வானொலியிலும் தொகாவிலும் பேட்டிகள் பறக்கின்றது.

நாட்டில் அனைத்து மக்களும் ஒரே பாடத்திட்ட தேர்வு முறை தான் எழுதவேண்டும் என்கிறார்கள் அப்படியானால் ஏழைகள் படிக்க அரசுபள்ளி பாடத்திட்டமும், கொஞ்சம் பணம் உள்ளவர்களுக்கு மக்காலே பாடதிட்டமும், பெரும் செல்வந்தர்களுக்கு என்று சொகுசு படசாலைகளும் நாட்டில் எதற்கு. அப்படி எந்த கல்வி சிறந்ததோ அதை அரசு கல்வியாக வழங்க வேண்டியது தானே ஆனால் அந்த மட்டமான படிப்பை தான் அரசு வழங்குமாம் ஆனால் மேற்படிப்பு சொகுசு படிப்புபடித்தவர்களுக்கு மட்டும் தானாம்.

இதை எல்லாம் பார்க்கும் போது இது என்ன நாடு என்று வெறுப்பே வருகின்றது. ஆனால் இது என்னுடைய நாடாச்சே, இந்த வெறுப்பு அரசு நடத்தும் அந்த அரசியல்வாதிகள் மேலும் ஆட்சியின் மேலும் அல்லவா வெறுப்பு வரவேண்டும் அதை விட்டு நாட்டின் மீது ஏன் கோபம் வருகின்றது.

அது சரி சொந்த நாட்டிலே அகதியாய் வாழ யாருக்கு தான் பிடிக்கும், என்ன உண்ண வேண்டும், உடுத்த வேண்டும், படிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று வாழும் வீட்டிலேயே வாழ முடியாதவர்களை அப்படி ஒரு நாட்டில் வசிக்க சொன்னால் எப்படி அதுவும் எப்படி சொல் பேச்சு கேட்கவில்லை என்றால் எப்படி கொல்லப்படுவீர்கள் என்று மக்களை நடுத்தெருவில் கொண்டு வந்து அடித்தே கொன்று அல்லவா உதாரணம் காட்டுகிறார்கள்.... என்னே ஒரு கொடுமை.

Monday, August 14, 2017

நிர்மலா சீதாராம் தான் பாசகவின் தமிழக முதல்வர் வேட்பாளரா

தமிழகத்தில் எந்த அவசர சட்டமாக இருந்தாலும் சரி அல்லது முக்கிய பிரச்சனைகளாக இருந்தாலும் சரி நிர்மலா சீதாராம் தான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.

காளை மாடு மட்டும் காட்டு விலங்காக அறியப்பட்ட சதியின் பின்னணி, பின்னர் காளை மாட்டை காட்டு விலங்கு இல்லை வீட்டு விலங்கு தான் என்று வரலாற்று சான்றாக அறிவித்தால், அதன் அவசர சட்டம், தமிழகத்திற்கு நீட்டு தேர்வு அவசியாமா இல்லையா என்ற முடிவை அரசு சார்பாக அறிவித்தல், ரேசன் பொருட்கள் தமிழகத்திற்கு தேவையா இல்லையா என்று வரையறுப்பது, கூடங்குளத்தில் அணு மின்னிலையம் அமைப்பது தமிழகத்திற்கு நல்லதா தீயதா என்று ஆராய்சி முடிவுகளை வெளியிடுவதும் அதை பொருத்து அறிவிப்பதும், நெடுமங்கலம், கதிராமங்கலம் என்று தமிழகத்தை சீரழப்பதற்காக துடிக்கும் திட்டங்கள் தமிழகத்திற்கு வந்தே தீரும் என்று சொல்வதும் அறிவிப்பதும், அதிமுக அணி சேரவேண்டுமா இல்லையா, தமிழகத்து சட்டபேரவை சரியாக நடக்கின்றதா இல்லையா என்று அனைத்து விதமான அறிவிப்புக்கும் அதிகார பூர்வமாக நிர்மலா சீத்தாராம் தான் அறிவிக்கின்றார், பேசுகின்றார்.

பாசகவின் மற்ற குட்டி குட்டி தலைவர்கள் தமிழைசை, பொன்னார், எச்சி ராசா போன்றோர்கள் போல் விவாதத்தில் கலந்து கொள்வது, விமான நிலையமுதல் தொகா விவாதங்களுக்கு பேட்டி அளிப்பது போன்ற வெட்டி வேலைகள் எல்லாம் இவருக்கு இல்லை.

வெங்கையா நாயிடுவும் இவரை போல் வெட்டிப்பேச்சுகள் எல்லாம் பேசுவது இல்லை ஆனால் ஊடகங்கள் எல்லாம் தமிழகத்தின் உண்மையான முதல்வர் வெங்கையாவா என்று எழுதி தீர்த்தார்கள், ஆனால் அவரை துணை குடியர்சு தலைவராக அறிவித்தது பாசக, இந்த நிலையில் தமிழகத்தின் பாசக முதல்வராக வரப்போகின்றவர் நிர்மலா சீத்தாராம் தான் என்று தெளிவாககின்றது.

சொல்ல முடியாது நாளையே இவரை அதிமுகவின் தலைவராக பாசக ஆக்கினாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை தான். அடுத்த அதிமுகவின் முதல்வராகக் கூட வர வாய்ப்பு இருக்கின்றது.

பாசகவின் மற்ற குட்டி குட்டி தலைவர்களான பொன்னார், தமிழிசை, எச்சி ராசா எல்லாம் பப்பர முட்டாயை வாங்கிக்கொண்டு மற்ற தமிழர்கள் போல் வந்தே மாதரம் என்று கொடியை குத்திக்கொண்டு அன்னாந்து வானத்தை பார்க்கவேண்டியது தான் போலும்.........

Friday, August 11, 2017

மோடி அமெரிக்காவிற்கு சென்று வந்தது சீனாவோடு சண்டைக்கு போகத்தானா

சூன் மாதம் அமெரிக்காவுக்கு சென்று வந்தன் இரகசியம் இது தானா. வட கொரியா கட்டுக்கு அடங்காம ஆடுது. அதை ஆதரிக்கவும் மேன் மேலும் தூண்டவுன் சீனா மும்முரமாக இருக்கிறது. உலக நாடுகளில் எதுவாலும் வட கொரியாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

சீனாவை இந்திய முனையில் இராணுவ தாக்குதலுக்கு உள்ளாக்கினால் இந்திய பெருங்கடலிலும் ஆசிய நிலப்பரப்பிலும் நிலை கொண்டு இருக்கும் சீனப்படை இந்தியா நோக்கி நகரும். மேலும் இந்த பலவீனத்தில் வட கொரியா அடக்கி வாசிக்கும் என்றது அமெரிக்க கணக்கு.

சரி அப்போ இந்தியாவின் நிலை என்னவாகும், அதான் அருண் சேட்லி சொல்கிறாரே, 1962ல் இருந்த நிலை வேறு இப்போது நாங்கள் அமெரிக்காவின் கை கூலிகளாக இருக்கும் நிலை வேறு என்று சொல்லாமல் சொல்கிறார்.

சீனாவும் வட கொரியாவும் இனி என்ன செய்கின்றது என்று பார்த்து அமெரிக்க இந்தியாவிம் மூலம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடும்.

அது வரையில் ஏற்படும் பொருளாதார நட்டம் முதல் இராணுவ நட்டம் வரை இந்தியர்களுக்கு பப்பர மிட்டாய் கொடுத்து ஏமாற்றவும் அமெரிக்கா திட்டத்துடன் உள்ளது.

இந்திய சீன போர் வெடிக்கும் கால், காசுமீரத்தை பாக்கிட்தானத்துடன் இழந்தது போல் வட கிழக்கு மா நிலங்களை சீனாவிடம் இழக்க நேரிடும்.

நாமும் பழைய இந்திய படத்தை வைத்துக்கொண்டு தலை இல்லாத இந்தியாவையோ அல்லது இடக்கை இல்லாத இந்தியாவையோ நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று வசனம் பேச வேண்டியது தான்.....

Wednesday, August 9, 2017

நடு இரவில் அந்த பெண்ணுக்கு அங்க என்ன வேலை -- சுடலைமாடன் வருகையில்

அந்த பெண் வர்னிகா ஏன் நடு இரவில் வெளியில் செல்ல வேண்டும். வடக்கில் இரவில் தனியாக இருக்கும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டும் எப்படி இந்த பெண்ணுக்கு நடு இரவில் தனியாக பயணிக்கும் தைரியம் வந்தது.

ஆண்மகன் விகாசு பாரால அதுவும் உலகை ஆளும் பாசகவின் கட்சியை சேர்ந்த பெரும் புள்ளியின் மகன் இரவிலும் பகலிலும் உல்லாசமாகவும் சல்லாபமாகவும் வாழ சர்வ தகுதிகளையும் பெற்றவன் இரவில் நாடு நன்றாக உள்ளதா என நகர்வலம் வரும் வேளையிலா இந்த பெண் வர்னிகா தனியாக வெளியில் செல்வாள்.

நாடும் உலகும் இருக்கும் நிலையில் படித்து பெரிய பதவியில் இருக்கும் ஒரு ஆட்சியர் இப்படியா கொஞ்சம் கூட பொருப்பில்லாமல் வயசு பெண்ணை இரவில் ஊர் சுற்ற அனுப்புவது. என்ன ஒரு ஒழுக்கம் கெட்ட குடும்பம் இவர்களது குடும்பம்.

பெண் என்றால் வீட்டில் அந்த 4 சுவர்களுக்குள் முடங்கி கிடந்து வீட்டு ஆண்கள் வீட்டிற்கு வருவதற்குள் சமைத்து, துவைத்து கணவனின் வருகைக்காக காத்து இருக்காமல் இது என்ன திமிர்தனமா வண்டியை ஓட்டிக்கொண்டு அலைவது.

நிர்பயா ஒரு கற்பனையான பெயர் தான் ஆனால் அந்த பெண்ணிற்கு நடந்த கொடுமைகள் எல்லாம் உண்மை அந்த தகவல்கள் எல்லாம் தெரிந்தும் இப்படி இரவில் வர்னிகாவை வெளியில் வண்டியை எடுத்துக்கொண்டு அலைய வைத்த பெரும் தேவை தான் என்ன....

சுடலைமாடன் வருகையில் குறுக்கே வரும் மக்களின் உயிரை எல்லாம் குடித்துவிடும் என்று தெரியாதா தெரிந்தும் தன் பெண்ணை அனுப்பி நாடகம் ஆடி எங்களது கட்சிக்கும் குடும்பத்திற்கும் கெட்ட பெயரை உண்டாக்கிறார் என்று வர்னிகாவின் மீதும் அவரது பெற்றோர்களின் மீதும் வழக்கு தொடரவும் தண்டனையளிக்கவும் வேண்டும்.

எப்போது தான் இந்த புத்தி கெட்ட நிர்பயா பெண்கள் திருந்துவார்களோ ஆண்களை இப்படி பாடாய்படுத்துவதை நிறுத்துவார்களோ.......

Tuesday, August 8, 2017

மோடி இந்தி பேசும் மக்கள் ஏன் ஆங்கிலம் பேச மறுக்கிறார்கள்


இந்தி பேசும் மக்கள் ஏன் ஆங்கிலம் பேச மறுக்கிறார்கள் மேலும் அவருடம் ஆங்கிலத்தில் பேசுவதை ஏன் வெறுக்கிறார்கள் என்று இந்த படத்தை பார்த்தால் தெளிவாகத்தெரியும்.






மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு நகைச்சுவையாக தெரியும் ஆனால் அந்த உச்சரிப்பை கவனியுங்கள் எவ்வளவு ஊன்றி போய் இலயித்து இந்த ஆங்கில வார்த்தைகளை பொருத்தி மகிழ்கிறார்கள் என்று தெரியும்.

இந்தியாவில் எந்த மா நிலம் சென்றாலும் இந்த இந்திகாரர்களுக்கு இந்தியில் பேசுவார்கள் எழுதி வைப்பார்கள். ஆனால் தமிழகத்தில் முக்கிய நகரங்கள் தவிர பாசக உறுப்பினர்கள் வரை தமிழிலும் ஆங்கிலத்திலும் தான் பேசுவார்கள். இந்த முறையில் ஆங்கிலம் படித்தவர்களால் எப்படி நாம் பேசும் ஆங்கிலம் புரியும் அது தான் எரிச்சல்படுகிறான் கத்துகிறான் சட்டம் ஏற்றுகிறான்.

இந்திய பிரதமர் மோடியின் ஆங்கிலமும் இப்படி தான் இருக்கும் கவனியுங்கள்.

Monday, August 7, 2017

சீன பொருட்கள் இருக்கட்டும் நமக்கு வடக்கத்திய பொருட்கள் தேவை தானா - தேசதுரோகிகள்

இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் குலைக்க சீனா முயல்வதாகவும், அதை சமன் செய்யும் விதமாக சீனாவின் தயாரிப்புகளை வாங்குவதை எல்லோரும் தவிர்க்க வேண்டும் அப்படி செய்யாதவர்கள் எல்லாம் தேச துரோகிகள் என்றும் சங்கிகள் பரப்புரை செய்வதை பார்க்கின்றோன்.

சங்கிகளின் வாதத்தின் படி பார்த்தால் நமது நாட்டின் பொருளாதாரத்தை சீர் குலைக்கும் அண்டை நாட்டின் தயாரிப்புகளை தவிர்ப்பதால் அவர்களின் அரசியல் சதியில் இருந்து தாய் நாட்டை காக்க வேண்டிய கடமை நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது.

இப்படி செய்வதனால் சீனா தனது வர்த்தகம் பாத்திப்பில் இருந்து தப்பிப்பதற்காக இந்தியாவின் பொருளாதாரார சீர் குலைவுகள் ஏற்படாத வண்ணன் இணக்கமாக நடந்துகொள்ளும் என்றும் நமக்கு பாடம் எடுத்து சொல்லிக்கொடுக்கிறார்கள்.

சரி தானே என்று தோன்றுமே, அதானே என்று சபாசு போட்டு சப்பைக்கட்டுகள் அதிகமாகவும் வரும்.

இந்த கூற்றுபடி பார்த்தால் இன்றைய தமிழக நிலைக்கு வடக்கத்திய அரசியல்வாதிகளும் அவர்களை கைப்பாவையாக அரசு நடத்த அனுப்பிய வடக்கத்திய பணக்காரர்களும் தான் காரணம்.

இந்த கூற்றை நிறூபிக்கும் விதமாக எச்சி ராசா பாசக மேடையில் இன்று முழங்கியும் இருக்கிறார்.

ஆகவே இன்று முதல் வடக்கத்திய பொருட்களை தமிழர்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும். அரிசி பருப்பை கூட வடமாநிலத்தவர்கள் விற்கும் பொட்டளப்பைகளில் தான் வாங்க வேண்டுமா என்ன.

பெட்ரோல் முதல் அரிசி பருப்பு வரை தமிழகத்து தொழில் முனைவோரை தான் ஊக்குவிக்க வேண்டும். இன்றைக்கு துணிமணிகள் முதல் செல்பேசி சேவை முதல் வடக்கதியர்கள் விற்கிறார்கள். ஏன் தமிழர்களுக்க்கு அந்த சேவைகள் எல்லாம் வழங்கும் தொழில் நுட்பமும் வசதியும் இல்லையா.

தமிழகத்தில் ஐபியல் அணியை விலைக்கு வாங்கி நடத்தமுடியுது செல்பேசி சேவை நிறுவனம் தொடங்கமுடியாதா.

பணம் இல்லை என்று சொல்ல வேண்டாம் மனம் இல்லை என்று சொல்லவும். பணமும் செல்வமும் இல்லாமல் தான் நாம் இலட்சகணக்கில் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு அன்றாடம் தினக்கூலி 700 ரூபாய்க்கு வேலை கொடுக்கின்றோமா.

வட மாநிலங்களுக்கு ஆபத்து என்றால் சீன எல்லையை விட்டுக்கொடுக்க இந்திய அரசு தயாராக இருக்கின்றது. தமிழக பாசகவிற்கு தலைவராக வடக்கதியர் வடக்கதிய உடையில் வந்து வட மாநில மொழியில் தான் பேசுவார்.

இந்த வடக்கதியர்களால் தான் தமிழகம் நிவகிக்கபட வேண்டுமா ஏன் தமிழகத்தில் ஒருவருமா இல்லை.

மூச்சுக்கு 300 தடவை ஊழல் என்று சொல்லும் பாசகவின் அமித்து சாவின் சொத்துக்கள் 3 ஆண்டுகளிம் 300% உயர்ந்ததின் அடிப்படை என்ன என்று விளக்க தயாராக இல்லை. அது மட்டும் இல்லாது இது வரை மோடி வெளி நாடுகளுக்கு சென்று இந்தியாவிற்காக கொண்டு வந்தது என்ன எவ்வளவு என்ற தகவலையும் தெரிவிக்க மறுகின்றது.

வடக்கில் இருக்கும் மக்கள் தமிழகத்தின் மாடுகள் என்ன செய்ய வேண்டும் கூடாது என்று தீர்மானிக்கிறார்கள். தமிழர்கள் என்ன கொண்டாட வேண்டும் என்ன உடுத்த வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். அதைவிட கேவலம் என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்.

இன்று முதன் வடக்கதிய பொருட்களையும் சேவைகளையும் தவிர்ப்போம். தமிழக பொருட்களை வாங்கி தமிழர்களை ஊக்கப்படுத்துவோம். அப்போது தான் தமிழர்களின் நிலை முன்னேறும். இதை செய்யவோ பரப்பவோ மறுப்பவர்கள் மாநில துரோகிளாவார்கள்.