Thursday, May 31, 2018

யார் அந்த சமூக விரோதிகள் - தலைவரும் தமிழிசையும் யாரை சொல்கிறார்கள்

முதன் முதலில் தமிழக போராட்டங்களில் சமூக விரோதிகளும் பயங்கரவாதிகளும் தீவிரவாதிகளும் கலந்துவிட்டார்கள் என்று மைய அமைச்சர்கள் சல்லிக்கட்டு போராட்டத்தின் போது திருவாய் மலர்ந்தார்கள். அதன் தொடர்ச்சியாக தூத்துகுடியிலும் அப்படி நடந்ததாக சொல்கிறார்கள் தமிழிசையும் அவர் கட்சியின் முதல்வர் வேட்பாளர் தலைவரும்.

பாசகவின் பொம்மலாட்ட அரசியல் முதல்வர் பொம்மைகள் ஏற்கனவே சமூகவிரோதிகள் என்று சிரித்துக்கொண்டே மக்கள் இறந்ததை சொல்லும் அந்த வெட்கம் கெட்டவார்களின் செயல்களை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

சென்ற போராட்டத்தில் காலிகாவலர்களை கொண்டு வன்முறையை துவங்கியதை மக்கள் படம் பிடித்து வெளியிட்ட அனுபவத்தை கணக்கில் கொண்டு இந்த முறை யாரும் படம் எடுக்க முடியாதபடி மக்களை விரட்டியடித்ததும். இணையத்தை முடக்கியபிறகு அரசு மட்டும் வெளியிடும் படங்கள் வெளியாகி இருப்பது சந்தேகத்தை இன்னமும் உறுதி செய்கின்றது.

குசராத்தில் துவங்கிய அரச பயங்கரவாதத்தை பாசக மெல்ல தமிழகத்தில் அரங்கேற்றி வருகின்றது. இனி யாராவது போராட்டத்தை நடத்தினால் வாயிலேயே சுட்டுக்கொள்வோம் என்று நிறுவியுள்ளார்கள்.

வேதாந்தா வீசிய ரோட்டி துண்டுக்கு பாசக பொதுமக்களை கொன்று குவித்துள்ளது தனது பொம்மலாட்ட அரசை கொண்டு.......

0 comments: