Wednesday, February 28, 2018

மோடி தமிழகம் வந்ததின் இரகசிய திட்டம் வெளிச்சத்திற்கு வருகின்றது

சமீபத்தில் எந்த அவசியமும் தேவையும் இல்லாமல் மோடி தமிழகத்துக்கு வந்து "பாரம்பரியமிக்கோவர்கலே, உங்க அப்பா ஊர் மேல போய் இருக்கான்னு" பேசி மக்களை மகிழ்வித்தார்.

தேர்தல் நடக்க இருப்பதோ கர்னாடகாவில், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக தீர்ப்பு வந்த பிறகும் மிகவும் தைரியமாக கர்னாடகாவிற்கு செல்லாமல் தமிழகம் வந்தார் மோடி.

என்னடா எங்கேயோ கணக்கு பிசக்குதே என்று பார்த்தால் இன்றைக்கு செய்திகளில் வருகிறது கார்த்திக்கு சிதம்பரம் கைது என்று வருகின்றது.

இப்ப உங்களுக்கு தெரியுதா இந்த கட்டிய ஏன் நான் வாங்கினேன் என்று.......

கார்த்திக்கு சிதம்பரத்தின் கணக்காய்வாளரை கைத்து செய்ததுமே தெரிந்தது அது இங்கே வந்து தான் நிற்கும் என்று.

இனி இது தான் நடக்கும்....

கார்த்திகு சிதம்பரத்தின் கைதினால் சிதம்பரம் இனி 31,600 கோடி வங்கி ஊழல் பற்றியோ அல்லது இனி வெளிவர இருக்கும் 17,000,000 ஆயிரம் கோடி ஊழல்களை பற்றியோ வாய் திறக்க மாட்டார்.

கார்த்திக்கு சிதம்பரத்தின் கைத்தில் திமுகவிற்கு என்ன பங்கு இருக்கிறது என்று செய்திகள் கசிய துவங்கும். கிடப்பில் போடப்பட்ட 1.76 ஆயிரம் கோடி ஊழல் மெல்ல ஊது குழலுக்குள் வரும். பிறகு என்ன பழைய குருடி கதவை திறடி என்று நாட்டையே உலுக்கிய 1.76 ஆயிரம் கோடி ஊழலை புரிந்த காங்கிரசும் திமுகவும் வேண்டுமா இல்லை ஊழலை ஒழித்து நல்ல ஆட்சியை கொடுத்துக்கொண்டு இருக்கும் பாசக@அதிமுக வேண்டுமா என்று பரப்புரைகள் வலையிலும் செய்தி ஊடகங்களிலும் வியாபித்து நிற்கும்.

கார்த்திக்கு சிதம்பரம் கைதாகி இருக்கும் வழக்கின் மொத்த தொகையே ரூ309 கோடி தான் அதில் ஊழல் எவ்வளவு நடந்து இருக்கும் அதில் கார்த்திக்கு சிதம்பரத்திற்கு எவ்வளவு வந்து இருக்கும் என்ற கேள்விகளை எல்லாம் கேட்டீர்களானால், அதோ பார் பசு, இதோ பார் கோமியம், அங்க பார் பசு சாணம், இங்க பார் இந்துக்கள், பின்னால பார் ஆண்டாள் என்று அள்ளி அள்ளி விடுவார்கள் செய்தி ஊடகங்களிலும் இணையத்திலும்.

குருமூர்த்தி இந்த ஊழலால் நாட்டின் பொருளாதாரம் 100 ஆண்டுகளுக்கு பின் தள்ளிவிட்டதாகவும். இது இந்தியாவை அழிக்கும் தீவிரவாத செயல் என்றும் அதற்காக காங்கிரசு கட்சியை நீதிமன்றம் தடை செய்து காங்கிரசு முன்னால் அமைச்சர்கள் நிர்வாகிகளை குண்டர் சட்டதில் கைது செய்து 100 ஆண்டுகளுக்கு சிறையில் தள்ள வேண்டும் என்று துக்ளக்கு ஊடகத்தின் 2ஆம் மாத நிறைவு விழாவை கூட்டி அந்த மேடையில் முழங்குவார்.

எச்ச சர்மாவோ நான் அன்னைக்கே சொன்னேன் பாருங்க சிதம்பரம் ஒரு தீவிரவாதின்னு இன்றைக்கு நீதிமன்றமும் சிபிஐயும் முறையா இதை விசாரணை செய்து தெளிவாக நாட்டு மக்களுக்கு தெரிவித்துவிட்டார்கள். இனி காங்கிரசையும் திமுகவையும் வெளியிலே வரவே முடியாதபடி சிறையில அடைக்கனும்கிறேன் என்று முக்குக்கு முக்கு கூட்டம் கூட்டி முழங்குவார்.

தமிழிசையோ மஞ்சள் புடவையில் பிரமலதாவின் பாணியில் கையை கீழ் இருந்து மேலாக ஆட்டி ஆட்டி காங்கிரசு சிறைக்கு போகிறதோ இல்லையோ திமுக சிறைக்கு போகிறதோ இல்லையோ தாமரை மலர்ந்தே தீரும் என்று அடவு கட்டி ஆடுவார்.

அதிமுக கட்சி கலைக்கப்பட்டு மோடியின் தலைமையில் பாசகவுடன் இணையும். பிறகு அடுத்த 4 ஆண்டுகளுக்கு பாசக ஆட்சி நடக்கும்.

அந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தை உத்திரபிரதேசத்தில் மக்களை அடித்துகொல்வதை போல் இங்கேயும் அடித்து கொல்லப்பட்டு ஒர் அச்சத்தை விளைவிப்பார்கள். கோத்ராவில் தூங்கும் பயணிகளை எரித்தது போல் தமிழகத்தில் இரவில் ஊர் அடங்கிய பிறகு ஊர் ஊராக திடீர் திடீர் என்று கூட்டம் கூட்டமாக 'இந்துகள்' அல்லாதவர்களை எரித்து கொல்லப்படுவார்கள். காரணம் கேட்டால் கலவரம் என்றும் 6 நாட்களுக்கு எங்களால் கட்டுபடுத்த முடியவில்லை என்று சொல்வார்கள்.

தமிழகத்தில் இருக்கும் பள்ளி முதல் கல்லூரி வரை கோட்சே தான் தேச தந்தை என்றும், காந்தி நேரு இன்ன பிற தேச தலைவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் என்றும் கற்பிக்கபடும்.

உபியில் உள்ளது போல் யார் யார் என்ன என்ன உடுத்த வேண்டும் முதல் என்ன என்ன சாப்பிட வேண்டும் என்றது வரையிலும். யார் யார் எல்லாம் என்ன என்ன எல்லாம் வாங்கலாம் தொடங்கி என்ன என்ன வேலைகளுக்கு செல்லாம் என்று வகுத்து தொகுத்து நிறுவுவார்கள்.

'இந்துக்கள்' அல்லாத கட்சியும் அதன் தலைவர்களையும் உபி பாணியில் என்கௌண்டர் முறையில் தீவிரவாதிகள் தேச துரோகிகள் என்று சொல்லி கொல்லப்படுவார்கள்.

5ஆம் ஆண்டின் முடிவில் கிழிந்த உடையணிந்து கிராமபுர மக்களும், அழுக்கு உடையில் நகர்புர மக்களும், வேட்டி தலைப்பாகையுடன் பெருநகரங்களிலும் மக்கள் நடமாடுவதை காண முடியும்.

அவர்களின் நடுவே வெள்ளையும் சொல்லையுமாக பலபலக்கும் வண்டிகளில் பாசக மக்கள் பவனி வருவார்கள் அவர்களை 'இந்துக்கள்' அல்லாத தமிழர்கள் எல்லாம் கும்புடுரேன் சாமி என்று தான் விளிக்கவேண்டும் என்று அப்படி சொல்லவில்லை என்றால் கொல்லப்படுவீர்கள் என்று கொன்றும் காட்டுவார்கள்.

மறந்தும் யாராவது கேள்வி கேட்டால் அதோ பார் பசு, இதோ பார் கோமியம், அங்க பார் பசு சாணம், இங்க பார் இந்துக்கள், பின்னால பார் ஆண்டாள் என்று அள்ளி அள்ளி விடுவார்கள......

தமிழகம் இனிமேல் தக்சின் பிரதேசு என்று பெயர் மாற்றம் பெற்று காஞ்சிபுரம் தலைநகரமாகும்.

எல்லா இடங்களிலும் விழாக்களிலும் மாக கணப்பதே முதல் சனனி சனனி வகையரா பாடல்களை பாடித்தான் நிகழ்ச்சிகளும் வேலைகளும் தொடங்குவார்கள்.

'இந்துகளின்' அடையாளங்கள் தவிர வேறு ஏதாவது மத அடையாளங்களையோ மத குருமார்களையோ கண்டால் அசாமில் கொளுத்தியது போல் ஊர் நடுவில் உயிருடன் தீயில் இட்டு கொளுத்தி சாக்கிரதை என்று சொல்லி செல்வார்கள்.

தமிழகத்தில் 'இந்துக்கள்' அல்லாதவர்கள் குடியிருக்கும் இடங்கள் ஆதார் அட்டை இல்லை, அப்படியே இருந்தாலும் அதில் கைரேகை சரியாக இல்லை என்று சொல்லி வடக்கத்தியர்களை கொண்டு வந்து குடியமர்த்துவார்கள். அந்த இடத்தையும் அந்த வடக்கதியருக்கு தான் சொந்தம் என்று சொல்வார்கள்.

இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமை தமிழகத்தில் தமிழர்களுக்கு பாசகவினால் ஏற்படும். பாரத மாதாக்கி சே........

Tuesday, February 27, 2018

சென்னை அமெரிக்க தூதரகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட சொல்வீங்க போல

இது சுசா கிளப்பி விட்டிருக்கும் வாதம். சென்னையில் அமைந்து இருப்பதனால் மட்டுமே எல்லா இடங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கள் பாட வேண்டும் என்று கேட்பதும் போராடுவதும் எள்ளி நகையாடுவதாக இருக்கிறது என்றும் சொல்கிறார்.

அவர் நக்கலாக சொல்வது போல் நாளையே சென்னையில் அமைந்து இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்று கொடிபிடிப்போமா இல்லை போராட்டம் தான் நடத்துவோமா.......

அது இருக்கட்டும் சுசாமி, தமிழகம் இதியாவில் அமைத்து இருக்கும் ஒரே காரணத்திற்காக இந்தியில் பேசி இந்தியில் எழுதி சமசுகிருதத்தில் எழுதி சமசுகிருதத்தில் படித்து தான் ஆக வேண்டுமா என்ன............

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் இந்தியிலும் சமசுகிருதத்திலும் பேசுங்களேன் யார் வேண்டாம் என்றது. பிரதமர் மோடியை தமிழக கூட்டங்களில் பாரம்பரியா மிக்குவர்காலே ஊர் மேல போய் இருக்கா என்று ஏன் பேசனும், பேசாம சமசுகிருதத்தில் உரையாற்றி விட்டு போக சொல்லுங்கள் மீம்சு மக்களாவது வேறு வேலைய பார்ப்பார்கள்......

ஆமாம் சுசாமி நடிகையின் இறப்பில் துப்பு துலக்கு நீங்கள் மோடியின் 11400 கோடி ஊழலை பற்றி இதுவரையில் வாய் திறக்காமல் இருப்பதன் மர்மம் தான் என்ன விளக்குவீர்களா.........

தமிழ் தெரியவில்லை என்று எந்த வடநாட்டுகாரனும் தற்கொலை செய்யவில்லை

ஒரு காலத்தில் வடக்கதிய மக்கள் சொல்லும் வாசகம் இது, தமிழ் நாட்டிலே இளநீர் விற்பவர் கூட ஆங்கிலம் பேசுகிறார் அதுவும் அழகாக பேசுகிறார் என்று சொல்வார்கள்.

தமிழே தெரியாமல் தமிழகத்தில் ஆண்டுகளாக தங்கி வாழ்கையை ஓட்ட முடியும் என்ற நிலையில் தான் இருக்கிறது. இது தென்னகத்தில் இருக்கும் அத்தனை மாநிலங்களுக்கும் பொருந்தும். பெங்களூருவில் கன்னடம் தெரியவில்லை என்றாலும் இரண்டு முறை அவர்கள் சொல்லும் போதே அது என்னவாக இருக்கும் என்று புரியும். தெலுகு கொஞ்சம் கடினம் இருந்தாலும் கேட்டு புரிந்துக்கொள்ளலாம். மலையாளம் அப்படியே எந்த மொழிமாற்றமும் இல்லாமல் புரியும் தென்னகத்தாருக்கு.

ஆனால் வடக்கில் இருந்து வருபவரும் அதே பாணியில் தென்னகத்து மொழிகள் அனைத்தையும் அதே போல் புரிந்துக்கொள்வதும் ஆச்சர்யமாக இருக்கிறது.

திரும்ப பேச தெரியவில்லை என்றாலும் தலையை ஆட்டி சமாளிப்பார்கள். தமிழ் பேசுகின்றேன் என்று மேலையில் சிலர் நாடகம் ஆடுவது போல் எல்லாம் நடிப்பது இல்லை அவர்கள், உண்மையிலே ஆர்வமாக தெரிந்துகொண்டு சொல்லும் ஒரு சில வார்த்தைகளால் பேசி செல்வார்கள்.

கல்லூரிகளில் தமிழ் தெரியாமல் வந்து சேரும் பிள்ளைகள் 4 ஆண்டுகள் கழித்து செல்லும் போது ஓர் அளவிற்கு தமிழ் பேச பழகி இருப்பார்கள்.

ஆனால் வடக்க படிக்க போகும் தமிழர்களுக்கு ஏன் இவ்வளவு மொழி இடர்பாடுகள். அதுவும் இந்தி தெரியவில்லை என்று ஒரு பட்ட மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்களின் தற்கொலைகளை புரிந்துகொள்ளவே முடியவில்லை. எனக்கு தெரிந்து கல்லூரிகளில் ஆங்கிலத்தில் தான் வகுப்பு எடுப்பார்கள், சென்னையில் இருந்து செல்லும் விமானத்தில் வம்படியாக இந்தியில் மட்டுமே தான் பேச வேண்டும் என்று போட்ட வாய் மொழி உத்தரவு போல் எதுவும் செய்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

அப்படி யாரோடு எல்லாம் இந்தியில் இவர்களால் பேச முடியவில்லை என்று இந்த அவமானமபடுக்கிறார்கள். பயிற்று மொழி ஆங்கிலம், பரீட்சை எழுதும் மொழியும் ஆங்கிலம். அங்கே நிறைய தமிழ் மாணவர்கள் இருப்பார்கள். அவர்களோடு, எல்லா இடங்களுக்கும் போகவர என்று துவங்கினால் பழகி போகும் பிறகு இவர்களே ஆயிரம் போருக்கு வழி சொல்வார்கள். பிறகு எங்கே முளைக்கிறது இந்த தற்கொலைகள்.

அப்படி என்ன தான் பேச முடியாமல் போய் இவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்கப்பா...............

Saturday, February 24, 2018

பாசகவின் 100 கோடியா இல்லை 1000 கோடியா என்றதில் முளைத்து இருக்கிறது கமலின் மநீம

தமிழகத்து ஆட்சியை எப்பாடு பட்டாவது பிடித்துவிடுவது என்ற நோக்கில் ஆக்டோபசு கரங்களை மக்களின் கவனத்திற்கு வராத வண்ணமாக பவ வடிவங்களில் நீட்டி மடக்க பார்கிறது பாசக.

மநீம முதலில் தொடங்கி இருப்பதன் காரணம் 10 படங்களில் என்ன சம்பாதிப்பீர்கள் அதை இப்போதே கொடுக்கின்றோம் பாசகவிற்காக விசுவரூபம் போல் ஒரு திரைக்கதையை எழுதி மக்களின் முன் அதை அரசியல் இயக்கமாக எடுத்துகொடுங்கள் என்ற பேரத்தில் 100 கோடி ரூபாய்கள் பரிமாறப்பட்டு மநீம மலர்ந்து இருக்கிறது.

யாரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைக்கதையை அரங்கேற்றிய அதே பாணியில் அரங்கேறி இருக்கிறது மநீம.

ஆனால் தலைவனின் 10 படங்களின் மதிப்பு 1000 கோடி என்றதால் இன்னும் பேரம் இழுத்துக்கொண்டு இருக்கிறது. அந்த 1000 கோடி கைமாறியதும் இதே போல் தலைவன் வள்ளி படத்தில் பேசிய ஞானகிருக்கன் பேச்சியை மேடையிலே அரங்கேற்றுவார்.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது அரங்கில் பேசிய அதே பாணியிலான வசங்களும். அந்த நடிகர்களின் நாடகத்தை உண்மை என்று நம்பி மக்கள் உணர்ச்சி பெருக்கில் வாக்களித்ததும் ஓவியா ஆர்மி என்று நிறுவியதும் இந்த 100 கோடி மநீம நாடகத்திலும் நடக்கும்.

என்ன இந்த 100 கோடி மேடை நாடகத்தில் நீதிக்கட்சியின் மக்களை அசிங்கபடுத்தி இருக்க வேண்டாம். பாவம் அவர்களும் இந்த ஓவியா ஆர்மியில் சேர்ந்தது போல் சேர்ந்து மேடை ஏறி அசிங்கப்பட்டிருக்க வேண்டாம்.

1000 கோடி பேரத்தின் முடிவில் தலைவர் இருப்பார் போலும் அதனால் தான் நாமும் பேசாமல் வேலையை பார்க்கலாம் என்று அறிக்கை விட்டுள்ளார்.

ஆமாம் இந்த 1100 கோடி ரூபாயை பாசக எங்கு இருந்து எடுத்து இந்த இரண்ட நடிகர்களின் மேடை நாடகத்திற்கு கொடுத்து இருக்கும்.

 நாளைக்கு தமிழகத்தின் எந்த வங்கி திவால் என்று அறிவிக்க போகின்றதோ, எந்த எந்த ஏழை எளிய மக்கள் எல்லாம் இந்த பாசகவின் மிரட்டலுக்கு பயந்து சேமித்து வைத்து இருக்கின்ற வங்கியோ. இன்றையில் இருந்து ஏர்செல் சேவை எல்லாம் கிடையாது என்றும், சேவை பாக்கி இருப்பவர்களுக்கு எல்லாம் மஞ்சள் கடுதாசி கொடுத்தாச்சு என்று சொன்னதையும் இங்கே நாம் இணைத்து பார்க்கலாம்.

Thursday, February 22, 2018

பாசக சொன்ன அந்த மாற்றமும் கமலின் மநீம சொல்லும் மாற்றங்களும் என்ன

2014ல் இந்திய நாட்டை காப்பற்றி மீட்டு எடுக்கவு, உலக அரங்கில் வல்லரசாக இந்தியாவை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயமும் இருப்பதாக சூளுரைத்தது பாசக.

2014ல் பொது தேர்தலில் அந்த தேவைக்கான மாற்றங்கள் எவைகள் என்றும் பட்டியலிட்டது.

அந்த பட்டியலில் முதலிடம் பிடித்த செய்திகள் நாட்டில் மக்களின் பணத்தையும் வளத்தையும் எப்படி காங்கிரசு பறித்து ஒரு சில செல்வந்தர்களிடம் கொடுத்ததும் அதற்கு கையூட்டாக பெற்றுக்கொண்ட செல்வங்களை அயல் நாடுகளில் பதுக்கி இந்தியாவிற்கு எந்த வித நம்மை பெற்றுவிடாத விதம் பதுக்கப்பட்டுள்ளது என்று வசனங்களை விதைத்தும் அதன்பால் கிடைக்கப்பெறும் பணத்தை ஒவ்வொரு இந்தியருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தது.

மேற் சொன்ன செயல்களை செய்துவிட்டு தான் மற்றவைகள் என்று முழங்கிய பாசகவை நம்பி அந்த மாற்றங்கள் இன்றைய தேவைகள் என்று எண்ணிய இந்தியர்கள் குறிப்பாக ஏழை மக்கள் தங்களின் வங்கி கணக்கில் நாளை அரசு கொடுக்க போகும் ஒவ்வொரு இந்தியருக்கும் 15 இலட்சம் பணமும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை அதுவும் மைய அரசு வேலை என்ற வசனங்களை நம்பியும் வாக்களித்தார்கள்.

பாசக பேசிய அந்த மாற்றங்கள் இன்று மாய மாற்றங்களாக மறைந்து இந்த 4 ஆண்டுகளில் அந்த பாசக அரசு நிகழ்த்தி இருக்கும் கொடுமைகளை என்ன என்ன என்று விரிவாக பார்ப்போம்.

தனக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நம்பி வாக்களித்த அந்த ஏழைகள், ஒன்றுமே வேண்டாம் நாங்கள் படித்து முன்னேறி கொள்கின்றோம் என்று இருந்த கல்வித்துறையில் இனி யார் யார் எல்லாம் எந்த எந்த படிப்புகள் படிக்க வேண்டும் என்றதை நாங்கள் தீர்மானித்து சொல்கின்றோம். வெறுமனே அரசு பள்ளிகளிலோ அல்லது எந்த வித குடும்ப பின்னணியோ இல்லாத குடும்பத்தில் இருந்து முதல் தலைமுறையாக படித்து பெரிய வேலைகளுக்கு எல்லாம் செல்லும் வேலை எல்லாம் இனிமே நடக்காது என்று நாடு முழுவதும் நீட்டு தேர்வை அமெரிக்க நிறுவனத்தை நடத்த சொல்லி அதில் பெரும் செல்வம் படைத்த மக்கள் படிக்கும் பயிற்சி மையங்களில்(மய்யம்களில் இல்லை) படிப்பவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்வி.

அப்போ இது வரையில் அரசு பள்ளிகளில் படித்து மருத்துவர்கள் ஆனது எல்லாம் என்ன என்று கேட்டதற்கு அந்த காலம் எல்லாம் இனிமேல் கிடையாது, கல்வி அதுவும் மருத்துவம் இனி ஏழைகளுக்கு கிடைக்காத கனி என்று பறித்த மாற்றம் தான் நடந்தது.

மருத்துவம் தவிர மற்ற படிப்புகள் படித்து நாட்டில் கிடைக்கும் வேலைகளை ஊர் விட்டு ஊர் வந்து ஆண்ணும் பெண்ணும் எந்த வித்தியாசமும் இல்லாமல் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று இந்தியாவின் எந்த ஒரு ஊருக்கும் சென்று வேலை பார்த்து வந்தார்கள். அப்படி இருக்கும் மக்களின் அன்றாட தேவைகளாக இருந்த உணவு ஒரு அடிப்படை தேவை.

கொஞ்சம் கொஞ்சமாக விலை ஏறிக்கொண்டு இருந்த உணவு சென்ற ஆண்டு கொண்டு வந்த ஒரே வரிவிதிப்பு என்ற பெயரில் ரூ100க்கு சாப்பிட்டால் ரூ130 வசூலிக்க படுகின்றது. இது என்ன ஐயா பகல் கொல்லையாக இருக்கின்றது என்ற கேள்விக்கு இந்த வரி விதிப்பினால் மக்கள் வாங்கும் பொருட்களின் விலை அதளபாதாள விலைக்கு கிடைக்கும் என்று கட்டியம் கூறி நடைமுறைபடுத்த பட்ட வரிவிதிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் என்னவோ ஏழை மக்களே. பழையபடி மக்கள் வீட்டில் இருந்து மத்திய உணவை கட்டிக்கொண்டும் செல்லும் செயலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். செல்வந்தர்களுக்கு ரூ130, ரூ100ம் ஒன்று தான் என்றதை இங்கே நாம் கவனிக்க வேண்டும்.

இத்த தொல்லைகள் எல்லாம் வேண்டாம் நாங்கள் சுதந்திரமாக எங்க நேரத்திற்கு கிளம்பி வேலைக்கோ கல்லூரிகளுக்கோ சென்று கொள்கின்றோம் என்று ஒவ்வொரு ஏழை மக்களும் தங்கள் வீட்டின் பெண்களு சிறிய வண்டிகளை வாங்கி கொடுத்து நிம்மதியாக இருந்தார்கள். இன்று பெட்ரோல் விலையை இமாயலய உயரத்திற்கு ஏற்றி நாங்கள் என்ன செய்ய சர்வ தேச சந்தையின் விலை ஏற்றத்தை நாங்கள் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்று கைவிரிக்கின்றது. அப்போ இது வரையில் இப்படி நிலைமை இல்லையே இப்போது மட்டும் ஏன்ற கேள்வியை முன் வைக்க அதற்கு இது வரையில் 60 ஆண்டுகாலம் பதவியில் இருந்த காங்கிரசு தான் காரணம் என்று சொல்லி ஒன்றும் செய்வதற்கு இல்லை இனி உங்கள் வீட்டு பெண்களை அரசு பேருந்துக்களை பயன் படுத்த சொல்லுங்கள் என்று சொல்லி சிரிக்கின்றது.

காங்கிரசு காலத்தில் பெட்ரோலிய பொருட்களில் அடிப்படை தேவைகளுக்கு இல்லாமல் சொகுசு தேவைகளுக்கு என்ற பயன்படுத்தும் பொருட்களின் மேல் விதித்து இருந்த வரியில் கிடைத்த பணத்தை ஒரு சேமிப்பு கணக்கில் சேர்த்து வந்தார்கள். அந்த பணத்திற்கு கிடைக்கும் வட்டியில் அவ்வப்போது ஏற்படும் கச்சா எண்ணையின் சர்வதேச விலை மாற்றம் நாட்டில் ஏழை மக்கள் பயன் பாட்டில் இருக்கும் டீசல் மண்ணெணையில் விலையை சரி செய்துக்கொண்டு இருந்தார்கள். இந்த சரி செய்யல் நடவடிக்கையால் நாட்டில் வளர்ந்து வந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலைகள் வானுயர எகிராமல் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது.

வாசிபாய் அரசு பதவி ஏற்றதும் தங்ககர சாலை என்று ஒன்றை நிறுவினார்கள், கேட்டதற்கு இந்த சாலைகள் அமைந்தால் இந்தியாவின் எதிர்காலத்தில் எல்லா பொருட்களின் விலைகளும் அதளபாதாளத்திற்கு தள்ளப்பட்டு ஏழை எளிய மக்கள் பெரும் பயனை அடைவார்கள் என்று ஆரூடம் கூறினார்கள். அந்த சாலைகளை அமைக்க இந்த பெட்ரோலிய சேமிப்பு பணம் பயன்படுத்தபட்டதன் விளைவு இன்றைக்கு எங்கள் வீட்டு பெண்கள் மறுபடியும் அரசு பேருந்துகளின் தயவில் பயணம் மேற்கொண்டு படிக்கவும் வேலைகும் செல்லும் நிலைக்கு தள்ளி இருக்கிறார்கள். இன்றும் இந்த விலை எல்லாம் ஒரு விலையா என்று அலட்டிக்கொள்ளாமல் செல்லும் செல்வந்தர்களையும் பார்கின்றோம்.

ஒரு பேட்டியில் எச்ச சர்மா சொல்கிறார், நான் ஏறி செல்லும் விமானத்தில் என்னைவிட உயர்ந்த விலையில் ஒரு பொதுவுடமை கட்சியின் தலைவர் செல்கிறார் என்ன எகத்தாளம் இருக்கும் என்று வெளிப்படையாகவே சொன்னார், பேட்டி தொகா பதிவு உடியுபில் கிடைக்கிறது தேடி பார்க்கவும்.

ஆதார எண் இல்லாதவர்களை சாக சொல்லுங்கள் என்று இன்றைக்கு சொல்கிறார்கள் பாசகவினர், ஏன் என்று கேட்டதற்கு இந்த எண் இல்லை என்றால் நாட்டில் கருப்பு பணமும் ஊழலும் மலிந்துவிடும் என்று வீர வசனம் பேசினார்கள். ஆனால் இன்றோ இந்த எண் பயன்பாட்டிற்கு வந்த பிறகும் எந்த சுவடுமே இல்லாமல் சுருட்டிய பணத்தோடு குடும்பம் குடும்பமாக செல்வந்தர்கள் வெளி நாடுகளுக்கு தப்பி செல்வதும் அதற்கு காரணம் காங்கிரசு தான் என்றும் இன்று பாசக சொல்லும் மாற்றங்களையும் பார்த்து வருகின்றோம்.

யார் யார் எந்த உணவை சாப்பிட வேண்டும், எந்த எந்த மதங்கள் எல்லாம் இருக்க வேண்டும். எந்த எந்த மக்கள் எல்லாம் என்ன என்ன படிக்க வேண்டும். எங்கே எப்படி வாழ வேண்டும் என்ற மாற்றதில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது பாசக.

இவைகள் வெளியில் தெரிபவைகள் மட்டுமே இன்னும் வெளியில் தெரியாத மாற்றங்கள் புதைந்துகிடக்கிறது அவைகளை நாம் பார்க்கும் போது இனி இந்தியாவில் நாம் எல்லாம் அகதிகளா என்று அதிரும் வகையில் தான் அவைகள் இருக்கும்.

நேற்றைக்கு மநீமவை தொடங்கி வைத்து கமலும் இப்படி ஒரு பிரச்சாரத்தை தான் முன்னெடுத்து பேசி இருக்கிறார்.

கமலின் மாற்றம் இந்த பாசகவின் மாற்றத்தின் நீட்சி என்றது மக்களுக்கு நன்றாக தெரிந்தாலும் மௌனமாக இருப்பவர்களும். இல்லை கமல் கொண்டு வரும் மாற்றம் தமிழகத்திற்கு தேவையான ஒன்று என்று வாதிடுவதையும் பார்க்கும் போது பகீர் என்று இருக்கிறது.

ஏழை எளியவர்களுக்கு மக்களாக பிறந்து கடினமாக உழைத்து படித்து பட்டம் வாங்கிய மக்களை இன்றைக்கு பக்கோட விற்க போ என்று சொன்ன பாசகவின் வசனத்தை கமலின் மநீம நாளை தமிழக மக்களை நோக்கு இன்னும் துல்லியமாக சொல்லும் என்றது உறுதி.

இப்படி பட்ட மாய மாற்றம் என்ற சொற்களை நம்பி ஏமாறாதீர்கள் மக்களே, உங்களின் அடுத்த தலைமுறையை இந்த பாதாள படுகுழியில் நீங்களே தள்ளிவிடாதீர்கள்.

2014ல் பாசக சொன்ன அதே வார்த்தைகள் - தமிழகத்தை மய்யம் கொண்ட மக்கள் நீதி மய்யம் புயல்

2014ல் பாசக சொன்ன அதே வார்த்தைகளோடு இன்று தமிழகத்தை மய்யம் கொண்டு இருக்கிறது மக்கள் நீதி மய்யம் புயல்.

60 ஆண்டுகால காங்கிரசு ஆட்சியில் நாட்டில் ஊழல் மலிந்து நாட்டின் செல்வங்கள் எல்லாம் சூரையாடப்பட்டு வெளி நாட்டு வங்கிகளில் இந்தியாவின் செல்வங்கள் உறங்கி கிடக்கின்றது. - பாசக

60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழகத்தில் ஊழல் மலிந்து தமிழகத்தின் செல்வங்கள் எல்லாம் சூரையாடப்பட்டு வெளி நாட்டு வங்கிகளில் தமிழகத்தின் செல்வங்கள் உறங்கி கிடக்கின்றது. - மநீம

நானும் கொள்ளையடிக்கமாட்டேன் வேறு எவரும் கொள்ளையடிக்க விடமாட்டேன். - பாசக, மநீம

கொள்ளையர்களிடம் இருந்து நாட்டை மீட்டு கொடுக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பை தான் கேட்கின்றோம் - பாசக , மநீம

கருப்பு பணம் வைத்து இருப்பவர்களுக்கு தான் வலிக்கும் ஊழல்வாதிகளுக்கு தான் வலிக்கும் - பாசக, மநீம

ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் - பாசக

இந்த அரசியல் சமையலின் ஒரு பருக்கையை தொட்டால் ஊழலில் தோய்ந்த கைவிரல் சுடும் - மநீம

பாரதம் சுற்றிலும் பகைவர்களால் சூழப்பட்டு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது, நாங்கள் வந்தால் கால்களாலே அந்த பகைவர்களை அடக்கி எல்லையை விட்டு வெகு தூரம் ஓட வைப்போம் - பாசக

ஆறு கைகள் இணைந்து இருக்கிறது மொத்த தென் இந்தியாவையும் இணைத்து தான் சொல்கின்றோம் - மநீம

பெருன்பாண்மை கொண்ட இந்துமதத்தின் ஆட்சியையும் இராமர் மற்றும் கோட்சே ஆட்சியை கொண்டு வந்து வல்லபாய் ஆட்சியை நிறுவி இந்தியாவை 2019க்குல் வல்லரசாக மாற்றுவோம் - பாசக

வலதும் அல்ல இடதும் அல்ல மய்யம் என்றதன் பொருள் தான் அது - புது புது இந்தியாவை பெற்று எடுத்தது போல் இனி புது புது தமிழக்த்தை பெற்றெடுப்போம் -  மநீம

குசராத்தை மாதிரியாக கொண்ட வளர்சி பெற்ற நாடாக புத்தம் புதிய நவ பாரதம் மலர்ந்தே தீரும் - பாசக

2014ல் காசியில் பாசக தனது பயணத்தை தொடங்குகின்றது 

இன்று இந்த மக்கள் நீதி மய்யம் புயல் இராமேசுவரத்தில் துவங்கி காசி நோக்கி பயணிக்கும்...


தலைவர் அறிவித்த அறிப்புகளை காட்டிலும் நீண்ட எழுத்து பேச்சு என்று இருந்தாலும் பசுத்தோல் போர்திய புலியாக ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் 15 இலட்சம் போடப்படும், வீட்டிற்கு ஒரு இளைஞனுக்கு அரசு வேலை வாங்கி தருவோம் என்ற வாசகங்கள் இன்னமும் வரவில்லை. அனேகமாக நாளை வரும் என்று நம்புவோமாக.......

பாசக ஆடோபசின் மற்றும் ஒரு கரம் அவ்வளவு தான் புரிந்துக்கொள்ள.

இது தான் பாசகவின் கணக்கு ஆன்மீகம் என்று சொல்லி அதே சமயத்தில் பாசக வேண்டாம் என்றால் தலைவருக்கு ஓட்டு போடுங்கள். வலதும் வேண்டாம் அதே சமயத்தில் இடது நன்றாக இருக்கிறது ஆனால் புதிதாக வந்த ஐ போன்போல் இருந்தால் நல்லது என்றவர்கள் ம நீமக்கு ஓட்டு போடுங்கள். இல்லை நான் சாதியையும் சமயத்தையும் சம்பத் மாமா போல் வெறி கொண்டு வீசுவேன் என்றால் பாசகவிற்கு போடுங்கள். இல்லை உங்களிடம் திராவிடம் என்ற வார்த்தை கூட இல்லை என்று நீங்கள் நினைத்தால் தேமுதிகவிற்கு போடுங்கள்.

இந்த பட்டியலில் உள்ள எந்த கட்சிக்கு போட்டாலும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற தீர்க்க எண்ணத்தில் அடித்து ஆடி இருக்கிறது.

பாவம் இந்த மௌன யுத்தத்தில் பலியானது என்னவோ சாதி வெறிபிடித்து கெச்சரிவால் போல் தமிழகத்து முதல்வராக வந்து அனைவரையும் குசராத்து கோத்ரா போல் ஒரு வன்முறையை தூண்டி குளிர்காயலாம் என்று மிகவும் நம்பிக்கையாக இருந்த பாமக சுருண்டது தான் மிச்சம்.

சென்ற தேர்தலில் 40% ஓட்டுக்களை நாங்கள் பெற்று இருக்கின்றோம் என்று சினிமா பாணியில் படமும் சுவரொட்டிகளையும் அள்ளி வீசிய பாமக என்ன செய்ய போகின்றதோ செல்லூர் தான் விஞ்ஞான முறைகளை சொல்லிக்கொடுத்து பாமகவை காப்பாற்ற வேண்டும்.

Wednesday, February 21, 2018

லக்னோ முதலீட்டாளர் மாநாடு - இன்னும் எவ்வளவு பணம் கொள்ளை போக போகின்றதோ

லக்னோவில் கூடி இருக்கும் முதலீட்டாளர்கள் மா நாட்டில் பிரதமருடன் இன்றைக்கு எத்தனை நிரவ் மோடிகள் படமெடுத்துக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. எத்தனை ஆயிரம் கோடிகளை சுருட்டிக்கொண்டு செல்ல போகிறார்களோ. இந்த ஆண்டோடு பாசகவின் ஆட்சி முடிகின்றது ஆகே எவ்வளவு சுரிட்டானால் எங்களுக்கு என்ன என்று தாராள பெருந்தண்மையுடம் அல்லவா பாசக இருக்கும்.....

இன்னும் சில நாட்களில் செய்திகளில் பார்த்தால் யார் யார் எல்லாம் இரகசியமாக ஒவ்வொருவராக செல்வார்கள் பிறகு அரசு அறிவிக்கும் அவர்களது சொத்து பத்து என்று எதுவும் இல்லை வங்கியில் பணமும் இல்லை. இந்த நட்டத்தை எல்லாம் ஈடு கட்ட மறுபடியும் பாசகவை நீங்கள் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்றும் வீர வசனம் பேசுவார்கள்.

Tuesday, February 20, 2018

2017 சல்லிக்கட்டை மீட்டுக்கொடுத்ததை போல் 2018ல் பாசக காவிரியை மீட்டு கொடுத்து இருக்கிறது

2017ல் நீங்க மட்டும் பாசகவை ஆட்சியில் உட்கார வைத்து இருந்தால் இன்நேரம் சல்லிக்கட்டை அப்படி விரல் நொடிக்கும் பொழுதில் கொண்டு வந்து இருப்போம் என்றது முதல். அவரச சட்டம் கொண்டு வரலாம், இல்லை மாடு காட்டு விலங்கானது போல் நாய் பன்றி பூனை என்று அனைத்தையும் காட்டு விலங்காக அறிக்கலாம் என்ற யோசனை வரை அள்ளி விட்டது எச்ச சர்மா, தமிழிசை, பொன்னார், மற்றும் நிர்மலா சித்தாராமனும்.

காவிரி ஆணையம் அமைக்க சொல்லி ஆண்டுகள் உருண்டோடியும் அமைக்க தேவை இல்லை அப்படி இப்படி என்று நயவஞ்சகமாக நிறுத்திவிட்டு இப்போது என்ன செய்வீர்கள். திராவிட கட்சிகள் இருக்கும் வரை தமிழகம் உருப்படாது என்று பாசக நஞ்சை கக்குகிறது.

இதிலே தமிழ் பழமையான மொழியாம் பாசக கூவுகின்றது 11,600 கோடிக்கு கணக்கு கேட்பார்களே என்ற பயம். பயத்தில் உளறுவதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

தமிழகத்தை நய வஞ்சகமாக ஏமாற்றிய பாசகவை உடனடியாக தமிழக்தில் ஆட்சியில் அமர வைக்க வேண்டியது 'இந்துகளின்' கடமை, தமிழர்களின் கடமை இல்லை. அந்த 3% ஓட்டு கிடைக்காது என்று தமிழிசை மிரட்டியும் உள்ளார். பாவம் அவர்கள் வாக்கே அளிப்பதில்லை என்று தமிழிசைக்கு தெரியாது போலும்........



இல்லை வெங்கையா நாய்டு நாட்டை கொள்ளையடிக்கவும் கொலை செய்யவும் தான் விழா எடுக்கனும்

வெங்கையா நாய்டு அற்புதமான கேள்வியை கேட்டுள்ளார். எதற்கு எல்லாம் விழா எடுக்கலாம் கூடாது என்று வகுப்பெடுத்துள்ளார்.

மகாத்துமா கொன்றதை விழாவாகவும் கொலைபுரிந்தவனுக்கு நாடாளுமன்றத்தில் சிலையும் அவனது பெயரில் கோட்சாயிணம் எழுதவும் தயாராகிவருகிறது பாசக.

ஆதார் எண் என்ற ஒன்றை கண்டுபிடித்து விட்டதாகவும் அந்த எண் கடவுளின் எண் என்றும். அந்த எண் இல்லாதவர்களை சாக வேண்டும் என்று வீர வசனம் பேசி நடுநிசி விழா எடுத்தவர்கள் அல்லவா இந்த வெங்கையா நாய்டு சார்ந்த இயக்கம்.

வீதியில் நடமாவும் கூட இந்த எண் வேண்டும் இல்லாதவர்களை கொல்ல வேண்டும் என்று காவடி எடுத்த இயக்கம் இன்று சொல்கின்றது எது எதுக்கு விழா எடுக்க வேண்டும் என்று.

1,30,000 மக்களை 5 நாட்களில் குசராத்தில் விரட்டி விரட்டி கொன்றுவிட்டு, தான் தான் உலக மாகாத்துமா என்றும் காந்தி இல்லை என்று நாட்டுக்கு நாடு சென்று மாநாடு போட்ட இயக்கம் இன்று சொல்கின்றது எதுக்கு எல்லாம் விழா எடுக்க வேண்டும் என்று.

வேண்டும் என்றால் சாப்பிடுங்களாம், நீங்கள் யாரய்யா கடவுளா அனுமதி எல்லாம் கொடுக்க. கொஞ்சம் விட்டா பரவாயில்லை வாழுங்கள் என்று சொல்வார்கள் போலும்.

Monday, February 19, 2018

பாலாவின் - நாச்சியார் - சரக்கு தீர்ந்துவிட்டதா

இந்த படம் வெளியாவதற்கு முன்பே சிங்கம்புலி சொன்ன வார்த்தை இது. ஒரு படம் விளம்பரபடுத்தும் போது என்ன சொன்னா எதிர்பார்ப்புகளை எகிரவிடும் என்றும் பேசு பொருளாக இருக்கும் என்றும் யோசித்து 2 நிமிடங்களுக்குள் மக்களின் மனதுக்குள் அந்த விளம்பரம் சென்று அமரும் விதமாகத்தான் இருக்கும் என்றும் கூட அறியாமல் பாலாவை காயப்படுத்தும் விதமாக பேசி உள்ளார் சிங்கம் புலி.

அப்படி என்ன தான் சரக்கு தீர்ந்தபடமாக இருக்கும் என்று தேடித் தேடி பார்த்த போது தான் தெரிந்தது, அந்த சிங்கம்புலி ஒரு விளம்பர பிரியர் என்று.

நாச்சியார் கையாளும் வழக்கா படிக்காம கூட நீதியரசர் கையொப்பம் இடுவாரே என்று சொல்லும் இடத்தில் இருந்து துவங்குகிறது நாயகியின் அலுவல் பராக்கிரமம்.

போடி போய் கமிசனை வாங்கி கொண்டு ஏசெண்டு வேலைய பாருடி என்று சொல்லி எகத்தாளம் செய்யும் காட்சி வரை மிக நேர்த்தியாக நீளுகிறது அந்த கம்பீரம்.

சின்னபுள்ள தனம் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் படமாக்கி இருக்கிறார் பாலா பாராட்டுகள்.

ஆனாலும் பாலாவிற்கு இவ்வளவு துணிச்சல் ஆகாது என்று தான் சொல்ல வேண்டும். இங்கே என்ன சொல்கிறேன் என்று புரிகின்றவர்களுக்கு புரிந்தால் போதும் என்று இதோடு விட்டு விடுகின்றேன்.

முதல் காதலில் அதுவும் அறியா பருவத்தில் பேசும் அந்தனை வசனங்களும் மிகவும் இயல்பாக அமைத்துள்ளது.

படத்தின் நெடுக இளையராசா பயணிப்பது கவனிக்க முடியாத வண்ணம் மிகவும் இயல்பாக அமைத்து அசத்தி இருக்கிறார்.

இந்த படத்தை மகளீர் மட்டும் 2 என்று தலைப்பிட்டு வெளியிட்டு இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

பெண்ணின் தொழில் எதுவாக இருந்தாலும் பெண் என்று அவளுக்கு இருக்கும் கடன் என்று இந்திய பெண்களின் இரட்டை வாழ்க்கையை அழகாக காட்டி இருக்கும் மற்றும் ஒரு படம்.

கடைசிக்காட்சியில் நாச்சியார் பேசும் வசனங்கள் அசத்தல். காக்க காக்க படத்திற்கு பிறகு சோதிகா நடிப்பை அழகாக படம் பிடித்து இருக்கும் இன்னும் ஒரு படம், பாராட்டுகள் பாலா.

எந்த ஒரு நடகனும் சரி நடிகையும் சரி பாலாவின் கதைக்குள் வந்துவிட்டால் அவர்கள் அந்த பாத்திரமாகவே பார்ப்பவர்கள் மனதில் பதிய செய்துவிடுவார் பாலா அது பிரகாசாக இருந்தால் கூட, பாராட்டுகள் பாலா.

Friday, February 16, 2018

தமிழக பாசக முன்னெடுக்க இருக்கும் கிருத்துவ மற்றும் இசுலாமிய ஆன்மீக அரசியல்

தமிழக பாசக இனி நாள் தோரும் இசுலாமிய மற்றும் கிருத்துவ மக்களின் ஆன்மீகத்தை பரப்புவதையும். இயேசு மற்றும் நபிகளின் கொள்கைகளை மக்களிடம் பரப்பி பிரபலம் அடைய செய்வதை தான் கொள்கையாக கொண்டு இருப்பதாக தமிழிசையும் எச்ச சர்மாவும் ஆன்மீக அரசியல் என்றும், இதையே தான் ஆன்மீக அரசியலாக தலைவரும் சொன்னதாக அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.

தமிழகத்தில் துவங்கியுள்ள இந்த புரட்சி நாளை மெல்ல மெல்ல அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றபட்டு பாசக ஆளும் மாநிலங்களில் இந்த ஆன்மீக அரசியலின் குறியீடாக 19 மாநிலங்களிலும் இசுலாமியர் மற்றும் கிருத்துவர்களை முதல்வராக அமர்த்தி அழகு பார்க்க உள்ளதாகவும் தமிழிசையும் எச்ச சர்மாவும் தெரிவித்துள்ளார்.

வாழ்க வளர்க தமிழக பாசகவின் ஆன்மீக அரசியல்......

Thursday, February 15, 2018

நீங்கா அந்த நினைவலைகள்

வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியா வயது ஆசை. உடலுக்குள் நிகழ்ந்த மாற்றம் சிந்தையிலும் சிதைக்கும் தருணம். அன்று வரை எந்த வித்தியாசமும் கண்ணில் படாமல் இருந்து, அன்றையில் இருந்து எல்லாமே வித்தியாசமாய் தெரிந்ததின் மர்மம். அது வரையில் பார்க்கும் அனைவரும் அன்பாய் புன்னகைத்தது போய், பார்வையும் பின் கண்களும் தவிர்க்கும் விதம் கவனிக்க துவங்கியதும். மறுபடியும் கேட்கும் பார்க்கும் பாடல்கள் இன்னும் ஒரு விதமாக அன்றையில் இருந்து தோன்றியதும். எவ்வளவு எல்லாம் சரளமாக பேசிய சொற்கள் அன்றைய தினத்தில் இருந்து காணாமல் தடுமாறுவதும். தொண்டை விக்கி நிற்பதும். நா எழாமல் தொண்டைக்குள் மாயமாய் மறைவதையும். நண்பர்கள் பேசிய மறைபொருட்கள் அன்றையில் இருந்து தனக்கும் புரிய தொடங்கிய நாள் அல்லவா.........

அது அந்த கண்களா இல்லை அந்த பார்வையா என்று இனம் அறியா தருணம், இன்றைக்கும் புரியா விளக்கங்கள் அவை. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே பாட்லின் மறைபொருளும் அன்றைக்கு தான் விளங்கலாயின. திரையில்  U/A என்று சொல்வது ஏன் என்று விளக்கிய நாட்கள். உடன் பிறந்தோர் பெற்றோர் என்று எவரிடமும் கேட்கமுடியா கேள்விகளை நண்பர்களிடமும் கேட்கமுடியா கேள்விகளாய் யாரும் அது பற்றி பேச மாட்டார்களா என்று ஏங்கிய நாட்கள். குமுதம் விகடன் என்று வீட்டில் கிடக்கும் பழைய இதழ்களின் ஆதிக்கதை எல்லாம் துழாவி படித்த நாட்கள். திரைதுறை ஆண்டுக்கு பல கோடி ஆராய்ச்சியின் முடிவை வானொலியின் மூலம் மக்களை காலை 30 நிமிடம், மாலை 60 நிமிடம் இரவு 30 நிமிடம் என்று சென்னை திருச்சி திருநல்வேலி முதல் சிலோன் வரை மாற்றி மாற்றி தேடி அலையவிட்ட காலம். வானொலி நிலையங்கள் மாறினாலும் அனைத்திலும் அதே பாட்டுகளும் அதனுள் தேடல்களும்.

எப்போது விடியும் என்று இருக்கும், விடிந்ததும் ஏன் விடிந்தது என்று இருக்கும். மறுபடியும் முதலில் இருந்தா என்று மலைப்பாக இருந்தாலும் மறுபடியும் அதே பூச்சும் உடைகளை படிய படிய தேய்த்தும் கேசத்தை படிய படிய கோர்த்தும் என்று புதிதாக தொற்றிக்கொண்ட வியாதி துவங்கிய நாட்கள். இரவு மட்டுமே படம் பார்த்த காலங்கள் போய் அந்த நாளில் இருந்து காலைக்காட்சிகளுக்கு கூட சென்ற தினங்களாய் மனம் தேடிய நாட்கள். முன் வரிசையில் அடுத்து வரும் வசனங்களை உரக்க உச்சரிக்கும் போது எழும் கோபத்தை விட அந்த கேள்விகளுக்கும் அவள் சொல்ல போகும் பதிலை மனதிலே மௌனமாக உச்சரித்த நாட்கள்.

அந்த மாய உலகத்தின் காவலர்களாய் வாரம் தோறும் சியாம் வரையும் அட்டைப்படம் என்னவாக இருக்கும். அவரின் எல்லா படங்களிலும் ஒரே முகம் தான் வரைவார் அனால் அவைகளை பார்க்கும் போது ஒவ்வொரு விதமாய் தொன்றிய நாட்கள். நிஜ உலகின் நிழல் கூட தெரியாத அப்பாவின் பணம், பசிக்கும் முன்னே உணவை கொண்டு வந்து கொடுத்த அம்மா என்று எதையுமே கணக்கிட தெரியாத வயது. கவனம் எல்லாம் அந்த சைகிளின் மேலும் அந்த வயர் பிரேக்கின் மேலுமே. அது வரையின் தூசியும் துப்புமாக இருந்த சைக்கிளில் அன்றைக்கு முதல் வாரம் ஒரு கழுவலும் தனது பெயரை அந்த செயின் கார்டில் ஆங்கிலத்தில் எழுதி பக்கத்தில் ஒரு ரோசாவை வரைய சொன்ன போது அந்த ஓவியர் விட்ட பார்வையும்.

அந்த நாள் முதல் மதம் என்னை கட்டுப்படுத்தாமல் அனைத்து மத கோவில்களிலும் பார்த்து வேண்டியதும் நீங்கா அந்த நினைவலைகள். கடந்து வந்த பாதை நெடியது என்றாலும் இன்றைக்கும் அந்த சாலிடர் டிவியில் காதலின் தீபம் ஒன்று என்று இளமை துள்ள பாடல் ஒலித்த அந்த தருணத்தின் உறைந்த தருணங்களாய் என்றைக்கும் மனதில் உறைந்து இருந்து அவ்வப்போது துளிர்விடும் இனிய நினைவுகளாய்.................இன்றும்...............

Wednesday, February 14, 2018

ஆனாலும் பொன்னாருக்கு இவ்வளவு திமிர் கூடாது - சங்கப்பரிவாரம் தீவிரவாதிகள்

ஆனாலும் பொன்னாருக்கு இவ்வளவு திமிர் இருக்கக்கூடாது, தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தாகவும் அதை சங்கப்பரிவாரம் தீவிரவாதிகளின் முகாம்கள் அமைக்கப்பட்டு இன்றைக்கு மோகன் பகாவத்து அந்த தமிழகத்தை சேர்ந்த தீவிரவாதிகளை எல்லாம் நாட்டில் ஒரே நாளில் கூட்ட முடியும் என்று சொல்கிறார் என்று சொல்ல இந்த பொன்னாருக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும். பாசக எப்படி இன்னும் பொருத்துக்கொண்டு இருக்கிறது.

Tuesday, February 13, 2018

குசராத்து முதல்வராக தமிழிசை சௌந்தர்ராசன் நியமிக்கபடவுள்ளார்

நிர்மலா சீத்தாராமன் தமிழக முதல்வராக நியமிக்கபடவுள்ள நிலையில், தமிழிசை சௌந்தர்ராசன் ஏமாற்றம் அடையாமல் இருக்கும் பொருட்டு குசராத்தின் முதல்வராக நியமிக்கபடவுள்ளதாக பாசக தெரிவித்துள்ளது.

ஏன் குசராத்து முதல்வராக, தமிழகத்துக்கே முதல்வராக கொண்டு வரவேண்டியது தானே என்று கேட்டதிற்கு. தமிழகத்தில் இருக்கும் பாசக மக்கள் அனைவரையும் குசராத்துக்கு குடியேற்றுவதும், தமிழகத்தில் கிடைக்காத அரசியல் பதவிகளை அவர்களுக்கு குசராத்தில் கொடுத்து அழகு பார்க்க இருப்பதாகவும் பாசக தெரிவித்துள்ளது.

எச்ச சர்மாவுக்கு என்ன பதவி என்று கேட்டதிற்கு, அவருக்கு இந்திய இராணுவ துறையில் இணையமச்சர் பணியும், குசராத்து, இராட்சதானம், பஞ்சாப்பு, காசுமீரம் வரையில் உள்ள எலையை தமிழக சங்க பரிவார மக்களை கொண்டு வந்து நிறுத்தி பாக்கிட்தானத்து எல்லையை காக்கும் பணியையும் சேர்த்து வழங்க இருப்பதாகவும் பாசக தெரிவித்துள்ளது.

 நேப்பாளம், வங்காளம் எல்லைகளை என்ன செய்வீர்கள் என்று கேட்டதிற்கு, தமிழகத்தில் பாசக சார்பாக தொகவில் விவாதங்களில் ஈடுபட்டுவரும் வானதி சீறீனிவாசன், கேடி ராகவன், நாராயணன், இராம சுப்பிரமணியம் ஆகியோரை நேப்பாளம், வங்காளம் எல்லைகளை காக்க தமிழகத்தின் சங்க பரிவார இயக்க பகுத்தறிவாளர்களையும், தமிழையும் பக்தியையும் ஒரு சேர வளர்த்த திருவல்லிபுத்தூர் மற்றும் தமிழகத்தில் வாழும் 'இந்துக்களையும்' அழைத்துக்கொண்டு சென்று நேப்பாளம், வங்கம் எல்லைகளை காக்கும் பணியிலும் ஈடுபடுத்தவும் உள்ளதாக பாசக தெரிவித்துள்ளது.

இந்த எல்லை பாதுகாவலுக்கு செல்லும் தமிழக சங்க பரிவார பகுத்தறிவாளர்களுக்கும் தமிழ்காவலர்களுக்கும் 'இந்துக்களுக்கும்' பிரதான் மந்திரி மூத்திர யோசனா திட்டத்தின் கீழ் மாதம் ரூ60,000 சம்பளமாகவும், 2 கிலோ தாமரை பக்கோடாவும், பக்கோடா பட்சட்டில் அறிவித்த 10 கோடி மக்களுக்கு வழங்க இருக்கும் பிரான் மந்திரி இன்சூரன்சு யோசனா திட்டத்தினை இந்த தமிழக பகுத்தறிவாளர்களுக்கு கொடுத்து பாதுகாக்கப்படும் என்றும் பாசக தெரிவித்து இருக்கிறது.

மேலும் இந்த மாதிரியான வேலைகள் வேண்டும் என்று நினைக்கும் மக்கள் மோகன் பகாவத்தை அனுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைக்கு ஆள் எடுக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தும் நோக்குடன் தமிழகத்தில் ஊர் ஊருக்கு கோமிய மையங்களை திறக்கவும் பாசக நடவடிக்கை எடுத்துள்ளது என்று கோமிய துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக பாசக தெரிவிக்கின்றது.

பாசகவின் நீட் தேர்வுக்கு தீர்வாக இப்படி செய்யலாமா

எறும்பு கட்டும் புற்றில் பாம்பு வந்து குடியேறுவது போல், தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளை கட்டுவோமாம். அந்த கல்லூரிகளின் உருவாக்கதிற்கும் செலவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத பாசக அரசு மருத்துவ கல்லூரியில் யார் யார் எல்லாம் படிக்க வேண்டும் என்று முடிவு எடுப்பார்களாம்.

சரி அவர்கள் சொல்வது போல் முடிவு எடுக்கட்டும் வேண்டாம் என்று சொல்ல வேண்டாம், கல்லூரி அமைந்து இருக்கும் இடத்திற்கு சம்பந்தம் இல்லாமல் சேர்க்கைக்கு அறிவிக்கப்படும் ஒவ்வொரு மாணவரின் சேர்க்கைக்கும் அந்த அந்த கல்லூரிக்கு 1 கோடி ரூபாய் மைய அரசு கொடுக்க வேண்டும்.

ஆண்டு ஒன்றுக்கு கிட்ட தட்ட 5000 மாணவர்களின் சேர்கையையும் மைய அரசு வடக்கில் இருக்கும் மாணவர்களுக்கு தாரைவார்க்க நினைக்கும் போது 5000 கோடி பணத்தை அந்த கல்லூரிகளுக்கும் தமிழக அரசுக்கும் கொடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் சட்டம் இயற்ற வேண்டும்.

இந்த ஈத்தர கல்லூரியில் சேர்க்க 1 கோடி ரூபாய் அதிகம் என்று பாசக அரசு நினைத்தால் பாசக அரசை வேண்டும் அளவிற்கு அவர்களது செலவில் மருத்துவ கல்லூரிகளை கட்டி கொள்ள சொல்லுங்கள்.

வடக்கில் இருக்கும் மாணவர்கள் எல்லாம் அமெரிக்காவில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் வருடத்திற்கு $50,000 பணத்தை கட்டி படிக்க வைக்க முடியும் போது தமிழகத்தின் மருத்துவ கல்லூரிகளிலும் அதே தொகையை நீட் அடிப்படையில் சேர்க்கும் போது வசூலிக்க வேண்டும் என்றும் சட்டம் இயற்ற வேண்டும். சிந்திப்பார்களா தமிழக அரசியல்வாதிகள்.

Monday, February 12, 2018

எச்ச சர்மா - மோடி இந்துக்களின் நாடானா மாட்டுகறி நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்று வந்துள்ளார்

பக்கோட பாசக பற்றிய அரிய விளக்கத்திற்கு பிறகு மோடி ஒளிந்துக்கொள்ள ஒரு கால அவகாசம் தேவைப்பட்டது. ஆகையால் உடனேயே இந்துகளின் தேசமாகிய மாட்டுகறி தேசங்களில் சென்று தங்கி இந்தியாவின் மதிப்பையும் 600 கோடி இந்தியர்கள் சேர்ந்து தேர்ந்து எடுத்த ஒரே உலக தலைவர் நான் தான் என்றும் அந்த மாட்டுகறி நாடுகளில் சொல்லிவிட்டு வந்து இருக்கிறார் என்று எச்ச சர்மா மிகவும் பெருமையாகவும் அருமையாகவும் குறிப்பிடுகிறார்.

அந்த மாட்டுகறி நாடுகளின் மோடி சந்தித்த இந்துகள் மிகவும் புனிதமானவர்கள் என்றும். அந்த மாட்டுக்கறி தேசத்தில் சாப்பிடப்போகும் மாடுகளுக்கு இந்துகள் சாப்பிடலாம் என்று தர சான்றிதழ்களை வழங்கி கௌரவ படுத்தியதாகவும் இன மத ஆராய்ச்சி மற்றும் உலக இந்துகளின் அதிபதி எச்ச சர்மா தெரிவித்து இருக்கிறார்.

மாட்டுகறியை இந்தியர்கள் தொட்டால் கொல்லப்படுவார்கள் அதுவும் குறிப்பாக ஏழைகளாக இருந்தால் நடு வீதியில் போட்டு அடித்தே கொலவார்கள் இந்த எச்ச சர்மாக்கள். அதுவே அரபு நாடுகளில் செய்தால் அவர்களது கையை எவ்வளவு கெட்டியாக பிடித்துக்கொண்டு இருக்கிறார் மோடி என்று பாருங்கள். இந்த மாட்டுகறி தீட்டை ஒழிக்க எச்ச சர்மா யாகங்களுக்கு ஏற்பாடும் செய்து இருக்கிறார் அனைவரும் திருவல்லி ஆண்டாள் கோவிலுக்கு வந்து கலந்துகொள்ளவும். 'இந்துக்கள்' தவிர தமிழர்கள் யாரேனும் வந்தால் கோத்ராவை நினைவில் வைத்துக்கொள்ளவும் அல்லது குறைந்தபட்சம் மெரினாவையாவது மனதில் வைத்துக்கொண்டால் நல்லது.


agreement

பாசக - நீங்களும் நாளைய இந்தியாவின் நிதி அமைச்சர் ஆகலாம்

இந்தியாவை ஆள திறமை எல்லாம் இருக்கவேண்டும் என்ற அவசியமோ அறிவோ தேவை இல்லை. இமாலய பொய்களை சொல்லியே ஆட்சியையும் பிடிக்கலாம். பிடித்த பிறகு பொய் பொய்யாக சொல்லியே ஆண்டுகளையும் கடைசி வரை ஓட்டிவிடலாம் என்ற நம்பிக்கையை விதைத்து இருக்கிறது பாசக.

ஆட்சியில் இல்லாத போது படித்த இளைஞருக்கு வேலை இல்லையே என்று நீலிக்கண்ணீர் வடித்த பாசக, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும். சாப்பிட சாப்பாடு இல்லை என்றால் பீட்சா சாப்பிடுங்கள் என்று ஆணவம் பேசுகின்றது.

ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி வேலைகளை உருவாக்குவோம் என்று பிரச்சாரம் பேசிய பாசக கடைசியில் அந்த இளைஞர்களை பக்கோடா செய்து விற்று பிழைப்பை பார்க்கும்படி மிகவும் பணிவுடனும் அன்புடனும் ஆணையிடுகின்றது.

ஒரு காலத்தில் வங்காள நாட்டின் ஏழ்மையை குறிப்பாக பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த சுய உதவி குழுக்கள் துவங்கப்பட்டது. அந்த சுய உதவி குழுக்கள் அரசு சாரா இயக்களின் மக்கள் உதவி குழு. வெளிநாட்டு வாழ் மக்களின் நன்கொடைகளை கொண்டு ஏழை நாடுகளின் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வண்ணம் செயல்பட்டு வந்த அரசு சாரா இயக்கம், 1999இல் இருந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கின்ற இயக்கம்.

இப்படி தானாக இயங்கும் வெற்றி பெற்ற இயக்கங்களுக்கு பிரதான மந்திரி மூத்திர திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும். அவர்கள் ஏற்கனவே செய்யும் அதே வேலையை அவர்கள் செய்வார்கள் ஆனால் பெயரை மட்டும் இந்தியில் வைத்து இது எங்களது அபார மூளையில் உதித்த ஒரு உத்தம திட்டம். இது இந்தியாவுக்கான திட்டம் இல்லை ஈரேழு 14 லோகத்துக்கும் உண்டான திட்டம், இது போல் ஒரு திட்டத்தை உலகம் இது வரையில் கண்டது இல்லை. ஆகவே இளைஞர்கள் எல்லாம் பக்கோடா விற்று வாழ்க்கையை நடத்திக்கொள்ளுங்கள் என்று மிகவும் தைரியமாக மேடையிட்டு முழங்கலாம்.

அதிமுகவின் சி பொன்னையனின் திட்டங்களான அரசு ஊழியர்களின் பணி நிறைவு பிடித்த பணத்தை கொடுக்காமல் மீதம் இருக்கும் 5 ஆண்டுகளும் அந்த பணத்திலேயே மஞ்சள் குளிக்கலாம் என்ற அறிவு கெட்ட திட்டங்கள் போல் திட்டங்கள் தீட்டி இது போல் ஈரேழு 14 லோகங்களும் இந்த 1 இலட்சம் ஆண்டுகளிலில் உலகம் கண்டது இல்லை என்று பெருமை பேசலாம்.

நீங்களாகவே கண்டுபிடித்து இயக்கும் வியாபாரங்களை நாளை பாசகவின் பிரதான் மந்திரி அந்த யோசனா என்று முன்னும் பின்னும் இணைத்து அபார திட்டம் ஆகா திட்டம் ஓகோ திட்டம் என்று முண்டா சட்டைக்காரர்கள் புகழ்ந்து இந்தியில் பேசிக்கொண்டு சிரிப்பார்கள்.

Sunday, February 11, 2018

இந்திய வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் - பாசக

இந்தியாவில் மக்களாட்சி அமைந்தற்கு காங்கிரசும் நேருவும் மட்டுமே காரணம் என்று சொல்வது தவறு என்று மோடி சொல்வதில் தவறு என்ன இருக்க முடியும்.

பிரித்தானியரின் இந்தியாவில் எவ்வளவு சுதந்திரம் இருந்தது என்று மோடி சொல்வது உங்களுக்கு புரியவில்லை என்று தான் நாங்கள் புரிந்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

பிரித்தானியரின் இந்தியாவில் சுதந்திரம் எப்படி இருந்தது என்று வகுத்தும் தொகுத்தும் எழுதுவோம், பிறகு மோடி ஏன் அப்படி சொன்னார் என்று உங்களுக்கே புரியும்.

1) ஆட்சியையோ அல்லது அரசையோ எதிர்த்து ஒருவரும் பேசவோ எழுதவோ முடியாத மக்களாட்சி முறை தான் பிரிதானியரின் ஆட்சி முறை. சரியா சொல்ல வேண்டும் என்றால் பாசக அரசை விமர்சித்தோ அல்லது அவர்களது சனநாயக முறையை எதிர்த்தோ யார் பேசினாலும், ஒன்று பசுக்காவலர்கள் கொல்ல வருவார்கள் இல்லை மத்திய அமலாக துறை, வருமான வரித்துறை அல்லது மத்திய புலனாய்வுத்துறை வந்து பேசிய வாயையும் எழுதிய கையையும் இனி எழ முடியாமல் செய்யும். உங்களது பிள்ளைகளையும் விட்டு வைக்க மாட்டார்கள்.

2) இந்தியர்கள் மற்றும் நாய்கள் உள்ளே நுழைய கூடாது என்று வாசலில் எழுதி வைத்து இருப்பார்கள். அதாவது இந்த தெருவழியில் இவர் இவர்கள் எல்லாம் சட்டை போட்டுக்கொண்டோ, காலில் காலனிகளை அணிந்துக்கொண்டோ அல்லது தோலில் துண்டு போட்டுக்கொண்டோ போகக்கூடாது என்று சொல்வதை போல். சுதந்தரம் அடைந்து 69 ஆண்டுகாலம் ஆகியும். இந்தியர்கள் அனைவரும் சமம் என்று சட்டம் இயற்றியும் இன்னமும் குறிப்பிட்ட மக்கள் கோவிலின் கருவறைக்குள் நுழையவோ அல்லது பூசைகள் செய்யவோ கூடாது என்றும் சிதம்பரத்தில் தமிழில் பாடவோ வழிப்படவோ கூடாது என்றும் சொல்லும் செய்கையை பொன்ற சனநாயகம் தான் பிரித்தானியரின் அன்றைய சனநாயகம்.

3) ஒரு குற்றம் நடக்கிறது என்றால் அந்த குற்றத்திற்கு என்ன தண்டணை என்று குற்றத்தை வைத்து தீர்மானிக்காமல், குற்றம் யார் யாரின் மீது செய்தார்கள் என்று தீர்மானிப்பது பிரித்தானியரின் முறை. குறிப்பாக கலகம் செய்ய கூடி இருந்த சாலியன் வாலாபாக் படுகொலையை விசாரித்தவர்கள் அந்த கொடூர கொலையை குற்றம் இல்லை என்று தான் தீர்ப்பு சொன்னார்கள். அதாவது கோத்ராவில் இரயில் பெட்டியை மோடியின் ஆட்களே கொளுத்திவிட்டு, இசுலாமியர்கள் கொளுத்தினார்கள் என்று சொல்லிக்கொண்டு 6 நாட்களில் மாநிலத்தில் கலவரத்தை நடத்தி கர்பிணி பெண்கள் வயிற்றையும் கிழித்து உள்ளே இருக்கும் இசுலாமிய குழந்தைகள் வரை கருவறுத்ததை போல். இந்த படு கொலைகளை நிகழ்திய மோடி தான் உலக சமாதானத்தின் தூதுவர் என்றும் ஆயிரம் காந்தி ஒன்று சேர்ந்தாலும் மோடியின் அகிம்சைக்கு ஈடு இணையாக முடியுமா என்றும் முழங்குகிறார்கள்.

4) எந்த எந்த மக்கள் எல்லாம் என்ன என்ன சாப்பிடலாம் உடுத்தலாம் எங்க எங்க சாப்பிடலாம் உலாவுலாம் என்று எல்லாம் கட்டுப்பாடு உண்டு பிரிதானியரின் ஆட்சியில். உயர் தர உணவகம், குடியகம், மகிழ் நிலையம் என்று அமைத்துகொண்டு யார் யார் எல்லாம் வரலாம் என்று சொல்வார்கள். அதாவது பாசகவில் சொல்வது போல் யார் யார் எல்லாம் என்ன என்ன சாப்பிடலாம், ஏழை எளிய மக்கள் மாட்டுக்கறி சாப்பிட்டால் அடிதே கொல்வார்கள், அதுவே 5 நட்சதிர விடுதிகளில் வெள்ளைக்காரர்களுக்கு இதே பாசக மக்கள் சமைத்து விற்று காலையும் கழுவிவிடுவார்கள். மாற்றாக ஏழை எளிய மக்கள் வைதியத்திற்கு மாட்டு மூதிரமும் சானியையும் தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வதை போல்.

5) தேசிய கொடி என்று ஒரு கொடியை பிரிதானியர்கள் கட்டிவிட்டு இந்த கொடியை அவமதித்தாய் என்று மக்களை கொலை செய்வார்கள். பாசக தேசிய கொடியை காட்டி மக்களை கொல் வெட்டு என்று சொல்வது போல்.

இப்படி ஈட்டு ஈடு பாசகவின் ஆட்சியும் பிரித்தானியரின் ஆண்டான் அடிமை ஆட்சியும் ஒத்து இருக்கிற காரணத்தால் தான் மோடி இந்தியாவின் சனநாயகம் நேருவாலோ அல்லது காங்கிரசாலோ பெற்று தரவில்லை. அதற்கு முன்னால் இருந்தது தான் அசல் சுதந்திரம் என்று சொல்கிறார்.

மோடிக்கு பதில் யோகி ஆதித்திய நாத்து பிரதமராகி இருந்தால் - பாசகவின் ஆட்சி இன்னும்

ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே உத்திரபிரதேசம் பாரதிய பாரம்பரியத்தில் மித மிஞ்சி இருக்கும் அளவிற்கு திறைமையான ஆட்சியை வழங்கிக்கொண்டு இருக்கிறார் யோகி ஆதித்திய நாத்து.

அதுவும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் முதல்வர் மற்ற நாட்களில் அவர் யோகியாகவும் மதக்காப்பாளராகவும் பாரதத்தின் பாரம்பரியத்தை காக்கும் அரணாகவும் செயல்படும் போதே இவ்வளவு சக்தி வாய்ந்த அரசாக செயல்பட முடியும் என்றால் யோசித்து பாருங்கள் அவர் மட்டும் பாரதத்தின் பிரதமாராக இருந்து இருந்தால் இந்தியாவின் மதிப்பு இந்த 4 ஆண்டுகளில் எவ்வளவு உச்சத்தை தொட்டு இருக்கும் என்று.

2014ஆம் ஆண்டு தேர்தலில் யார் பிரதமாரக வரவேண்டும் என்று தீர்மானிக்கும் பட்சதிலேயே ஒட்டு மொத்த சங்க பரிவாரமும் யோகியை தான் பிரதமாராக வரவேண்டும் என்று தங்களது ஒரு மனதான ஆதரவை தெரிவித்தும் குசராத்து மக்களின் சதியால் வாக்குகள் வாங்கி வெற்றி பெற்ற யோகியை ஓரம் கட்டிவிட்டு மோடி பதவிக்கு அறிவிக்கப்படுகிறார்.

வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் சங்க பரிவாரம் மோடியை பிரதமராக தேர்ந்து எடுக்க ஒத்துக்கொள்கின்றது.

இப்படி அடித்து பிடித்து ஆட்சிக்கு வந்த மோடியால் திறம்படவோ அல்லது நேர்மையாகவோ அரசை நடத்த முடியவும் இல்லை தெரியவும் இல்லை என்றதை சங்க பரிவாரம் முதலில் இருந்தே கவனிக்க முடிந்தது. கணித்தது போல் மோடியின் தேவை நாட்டிற்கு இல்லை என்று ஆன பிறகு மெல்ல யோகியின் திறமைகளை நாடு அறியட்டும் என்று உத்திரபிரதேசத்தில் யோகியின் திறமைகளை வெளிகொணரும் விதமாக முதல்வராக்கி அழகு பார்கிறது சங்க பரிவாரம்.

இந்த மோடியின் திறமையின்மையை கணக்கில் கொண்டு தான் சுசாமி முதன் முதலில் மோடியால் கருப்பு பணத்தை வெளியே கொண்டுவர முடியாது என்று ஆரூடம் கூறினார்.

இரண்டாவதாக குரு மூர்த்தி மைய அரசு எப்படி நாட்டின் தங்கம் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்று மோடி அரசுக்கோ ஆலோசனையை வாழங்கி மோடியின் திறமையின்மையை ஒர் செய்தியாளாராக தமிழக மக்களுக்கு தன் பங்குக்கு எடுத்துரைத்தார்.

பின்னர் மெல்ல மெல்ல எச்ச சர்மா தமிழிசை போன்றவர்களும் தமிழகத்தில் என்ன என்ன நடக்க வேண்டும் என்று மோடிக்கு ஆலோசனைகள் சொல்லப்போய் மோடியால் எந்த பாதகமும் தமிழகத்தில் விளையாமல் தவிர்க்கப்பட்டது.

இப்படி சங்கப்பரிவாரமும் இன்னும் பிர பாசக மக்களால் காப்பாற்றி வரப்பட்ட மோடி கடைசியில் பக்கோடா என்று பேசி சங்கப்பரிவாரத்தின் மானத்தை காற்றில் பறக்கவிட்டு வழிந்துக்கொண்டு நிற்கிறார் மக்களின் முன்னால்.

ஆகவே யோகி தான் இந்தியாவின் பிரதமராக இன்னும் 60 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய வேண்டும் என்று சங்கப்பரிவாரம் விரும்புகின்றது. மகாபாரத்தில் பின்னால் இருந்து இயக்கிய பீசுமரை போல் அல்லாமல் நேரடியாகவே பாரதத்தை ஆள யோகியே வரவேண்டும் என்று சங்கப்பரிவாரம் ஆசைப்படுகிறது. யோகி வருவார் நல்ல பாரத பாரம்பரிய ஆட்சியை தருவார் என்று நம்புவோமாக.

Sunday, February 4, 2018

பாசக பாராளுமன்ற தேர்தல் தாயாரிப்பில் இப்பவே இறங்கிவிட்டது - தமிழர்களே பலியாகாதீர்கள்

பக்கோடா பட்சட் வெளியானதும் காரசாரமாக போராட்டங்கள் வெடிக்கும் அதை வைத்து மெல்ல வருகின்ற பாராளுமன்ற தயாரிப்புகளில் துவங்கலாம் என்று கணக்கு போட்டு பக்கோடா பட்சட்டை வெளியிட்டது பாசக. ஆனால் நடந்ததோ தலைக்கு 15 இலட்சம் தருவதாக சொன்ன வாக்குறுதியை எட்ட இந்த பட்சட்டிலும் ஒரு அறிக்கை கூட இல்லையே என்று அந்த 15 இலட்சத்தை நம்பி வாக்களித்த எளிய மக்கள் தங்களின் செயலுக்காகவும் இப்படி கழுதைக்கு முன்னால் கேரட்டை தொங்கவிட்டு பொதிசுமக்க வைக்கும் கொடூர முதளியை பிரதமராக தேர்ந்தெடுத்துவிட்டோமே என்ற கவலையும் தான் வந்தது.

இந்த அதிர்ச்சியில் இருக்கும் பாசக சுறுசுறுப்பாக அலைக்கற்றை வழக்கையும் பொபோரசு பீரங்கி ஊழலையும் மறுபடியும் விசாரிக்க உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர்களது தலைமை நீதிபதிகள் பதவியில் இருக்கும் காலத்திலேயே பாசகவிற்கு சாதகமாக மாற்றி கொள்ள அடி எடுத்து வைத்து விட்டது.

அது மட்டும் பத்தாது என்று மாநிலவாரியாக என்ன என்ன குழப்பங்களை ஏற்படுத்தி மக்களுக்குள் சண்டை மூட்டி அதையே சாக்காக சொல்லி மாநிலத்திற்கு மாநிலம் கோத்ரா கலவரங்களை ஏற்படுத்தும் விதமாக இந்து, மதம், கோவில், பசு, சாதி, மொழி, கிருத்துவர், இசுலாமியர், ஒடுக்கப்பட்டோர், ஏழை, விவசாயி, கூலிகள் என்று தரம் பிரித்து அவர்ரவர் பிரிவில் ஆட்களை அனுப்பி உடனடியாக மாநிலங்கள் தோறும் கலவரத்தை தூண்ட ஆட்கள் பணிக்கப்பட்டு விட்டார்கள்.

இதன் முதல்கட்டமாக இந்துகள் பெயரில் போராட்டங்கள் அறிவிப்பார்கள் உதாரணமாக மதுரையில் மர்மமான முறையில் வந்த தீயை இங்கே எடுத்துக்கொள்ளலாம். அந்த தீ வந்ததும் அடுத்த மதத்துக்காரர்களின் கடைகளினால் தான் தீ என்று பரப்ப ஆரம்பித்து இருக்கிறார்கள். இனி மெல்ல இந்து கோவில்களை பழைய முறையில் இந்துக்களின் பொறுப்புகளில் கொடுக்க வேண்டும் என்று ஒரு போராட்டம் துவங்குவார்கள். இதில் முதல் கட்டமாக அந்த 'இந்துகள்' தான் போராடுவார்கள் திரை மறைவில் தமிழர்களை சந்தித்து மதுரை மீனாட்சி உங்களது கடவுள் தானே அந்த கடவுளுக்காகத்தான் நாங்கள் போராடுகின்றோம் ஆகவே 'இந்துகள்' போராட்டத்தில் தமிழர்களும் கலந்துக்கொள்ள வேண்டும் ஆதரவு தேடுவார்கள். தமிழர்களும் அவசரப்பட்டு 'இந்துக்களுடன்' போராட்டத்தில் இணைவார்கள்.

முதல் நாள் போராட்டத்தில் அந்த 'இந்துக்கள்' தமிழர்களை முன் வரிசையில் நிறுத்தி கோசமிட செய்வார்கள் அனைவரும் பார்க்கும் விதமாக. இந்த பாதிப்பில் கூட்டம் அதிகரிக்கும், கணிசமான அளவில் கூட்டம் கூடியதும் மெரினாவில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தமிழர்களை பெண்கள் என்றும் கூட பார்க்காமல் காவலர்களை கொண்டு நொருக்கியது போல் இந்த போராட்டதில் இருக்கும் தமிழர்கள் பகுதியில் 'இந்துகள்' வெடிகுண்டு வெடிக்க செய்வார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பாதுகாக்க சென்ற அந்த அப்பாவி தமிழர்கள் 'இந்துகள்' வைக்க போகும் அந்த வெடிகுண்டிற்கு பலியாவார்கள். அந்த வெடிகுண்டு கலவரம் இசுலாமியர்கள், கிருத்துவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், என்று வகைக்கு ஒரு பொய்யான செய்தியை வாட்சப்பில் படங்களுடன் பரப்பி தமிழனாக இருந்த கட்டாயம் பகிர் என்று சொல்வார்கள்.

பிறகு மெரினாவின் பின்னால் இருந்த குப்பங்களை காவலர்கள் நடத்திய வெறியாட்டம் போல் தமிழகம் முழுவதும் வகை தொகை இல்லாத கலவரத்தை காவலர்களே முன்னின்று நடத்துவார்கள் கோத்ராவில் நடந்த குசராத்து மாடல் கலவரங்கள். இந்த அனைத்து கலவரங்களிலும் தமிழர்கள் அனைவருக்கும் 'இந்துக்கள்' மீது ஒரு கொடூர பயம் மனதில் தொற்றும் வரை பெண்கள் குழந்தைகள் கர்பிணி பெண்கள் என்று பாராமல் தீயில் இட்டு கொளுத்துவது, கர்பத்தில் இருக்கும் குழந்தைகளையும் கத்தி கடப்பாரை கொண்டு வெளியில் எடுத்து அருக்கில் இருக்கும் மக்கள் வெளியே வரவோ போராடவோ இனி சென்மத்திற்கு அச்சம் கொள்ளும் படி கலவரப்படுத்துவார்கள்.

இவை அனைத்திற்கும் அதிமுக பொம்மை அரசு செய்து தருவதாக பேரம் பேசி முடித்தாகிவிட்டது.

ஆகவே பாசகவோ 'இந்துக்களோ' அழைக்கும் எந்தவிதமான போராட்டங்களிலும் தமிழர்கள் கலந்துகொள்ளவோ வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள். அந்த போராட்டங்களை தொகா நிகழ்சிகளில் கட்டாயம் பாசகவின் தந்தி தொகா கட்டாயம் காட்டும். ஆகவே அதை பார்த்து தெரிந்துகொள்வது தான் பாதுகாப்பு.

மூன்றாவது முனையாக பாக்கிட்தானத்துடனோ அல்லது சீனாவுடனோ ஒரு போர் நிலைக்கு நாட்டை தள்ளுவார்கள். பிறகு வீர வசனங்கள் பேசுவார்கள், துல்லிய தாக்குதலை நடத்தியதாக பாலிஉட்டில் படமாக்கிய காட்சுகளுக்கு ரகுமான் இசையமைக்க மக்களிடம் காட்டி எங்களது துல்லிய தாக்குதல் போல் காங்கிரசால் எல்லாம் நடத்த முடியாது என்று ஊர் ஊராக சென்று அடவுகட்டுவார் மோடி.

 நான்காவது முனையாக எந்த எந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் எல்லாம் பாசகவிற்கு எதிராக பேசினார்களோ அவர்களது மீது கிரிமினல் குற்றசாட்டுகளை சொல்லி வழக்கு தொடுப்பார்கள். சிபிஐ, வருமான வரிதுறை, என்று வித விதமான படையெடுப்புகள் நாடுமுழுவது நடக்கும் உதாரணமாக சிதம்பரம் பணமதிபிழப்பு நடவடிக்கையை விமர்சித்ததும் அவர் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் சொத்துகளை பறிமுதல் செய்து கடவு சீட்டையும் முடக்கியது போல் நடத்துவார்கள்.

ஐந்தாவது முனையாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் இருந்து யார் யார் எல்லாம் இனி வாக்களிக்க முடிதவர்கள் என்று ஆக்க ஒரு அவசர சட்டம் கொண்டு வருவார்கள் முத்தலாக்கு சட்டம் கொண்டு வந்தது போல் திடீர் என வரும். காரணம் நாட்டின் பாதுகாப்பிற்காக என்று நீதிமன்றங்களில் சொல்வார்கள். பிறகு அந்த அந்த மக்கள் கூட்டங்கள் வாக்குகள் செல்லாமல் இருக்கும் விதம் ஆதர் எண்ணை முடக்குவார்கள். ஆதார் அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது என்றும் ஒரு அவசர சட்டம் அதற்கு பின்னாலே வரும்.

பாசகவிற்கு எதிராக பிரச்சாரம் யார் யார் எல்லாம் செய்கிறார்களோ அவர்களை தீவிவாதிகளுடன் தொடர்பு உடையவர்கள் என்று பொய் வழக்குகள் போட்டு தேர்தல் முடியும் வரை காவலில் சிறையில் அடைப்பார்கள் திருமுருகன் காந்தியை எந்த காரணமும் இல்லாமல் 6 மாதம் சிறையில் வைத்து இருந்ததை போல். இந்த நடவடிக்கைகளை பார்த்து யாராவது சாலைக்கு வந்து போராடினால் மெரினாவில் அடித்து நொறுக்கியது போல் நொறுக்குவார்கள் தமிழர்களே சாக்கிரதை.

இணையம் வாட்சப்பின் மூலம் செய்திகளை பரப்புவோரின் ஆதார் எண்களை கொண்டு இணைய இணைப்பு மற்றும் தொலைப்பேசி இணைப்புகள் தேர்தல் காலங்கள் முடியும் வரை முடக்கி வைப்பார்கள். இவர்களின் ஆதார் எண்களும் முடக்கப்பட்டுவிடும், வாக்களிக்கவே முடியாமல் போகும்.

பாசகவை எதிர்க்கும் மாநிலங்கள் தமிழகத்தை போல் பக்கோடா பட்சட்டில் வஞ்சித்தது போல் திட்டங்கள் அறிவித்து இருந்தாலும் வெறும் பக்கோடா மட்டும் கொடுக்கபடும்.

எந்த எந்த தொலைக்காட்சி மற்றும் செய்தி ஊடகங்கள் பாசகவிற்கு எதிராக இயங்குகின்றதோ அவைகளின் மீது தேச துரோக வழக்குகளை பதிவு செய்து ஒளிபரப்பை நிறுத்தி வைக்கும்.

சுறுக்கமாக சொன்னால் ஆங்காங்கே கோத்ரா பணி கலவரங்களை ஏற்படுத்தி நாட்டில் கலவரத்தை கட்டுப்படுத்த குடியரசு தலைவர் தலைமையில் அறிவிக்ப்படாத ஒரு மார்சல் ஆட்சியை நடத்தும்.

பாசக என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு போகட்டும் ஏன் மீண்டு ஆட்சிக்கு கூட வரட்டும், அதற்காக அவசரப்பட்டு அவர்கள் நடத்தும் போராட்டங்களில் கந்துக்கொண்டு உயிரை விட்டு விடாதீர்கள் தமிழர்களே. 'இந்துகள்' நடத்தட்டும் அந்த போராட்டங்களை இது 'இந்துகளின்' போராட்டம். இந்தியர்களின் போராட்டம் அல்ல என்று புரிந்துகொள்ளுங்கள்.

Saturday, February 3, 2018

பாசகவின் பக்கோடா பட்சட் - சமசுகிருதத்தில் தொகுத்து வழங்காமல் போனது ஏனோ

பழைய காங்கிரசு திட்டங்களை பெயர் மாற்றி வெறும் அறிக்கையாக மட்டும் வெளியிடுவது.

பணமதிபிழப்பு நடவடிக்கியின் போது மோடி மூச்சுக்கு முண்ணூறு தடவை சொன்னது ஏழைகள் எல்லாம் இப்போது தான் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று சொன்னார். அந்த வாசகம் எவ்வளவு பொய் என்று அரசியல் அறிவே கொஞ்சம் கூட இல்லாதவருக்கும் தெரியும் புரியும். கிட்ட தட்ட 6 மாதகால அலைகழிப்பிற்கு பிறகு தான் ஏழைகளால் மூச்சே விட முடிந்தது. அது போல இந்த பக்கோடா பட்சட் விவசாயிகளின் பட்சட்டாம். உட்பொருள் விவசாயத்தை அழிக்கும் பட்சட் என்று எடுத்துக்கொள்ளலாம்.

வருடத்திற்கு ஒரு கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்று முழங்கியவர்கள் கடைசியில் கணக்கு காட்டியது பக்கோடா வேலையை தான் என்று திருவாய் மலர்ந்து இருக்கிறார் மோடி. இந்த இலட்சணத்தில் நாடு வேகமாக வல்லரசு ஆகிவிடும் என்ற வாய்பந்தல்.

GST வரியால் இந்தியா வேகமாக முன்னேறுவதாக உலக பொருளாதார நிபுணர் சொன்னாரு சப்பான்ல சொன்னாக சைனாவுல சொன்னாவோ அமெரிக்காவுல சொன்னாவோ என்று கூவும் இந்த மோடி அரசு கடந்த 7 மாதமாக வசூலித்த GST வரியில் இந்த பட்சட் பற்றா குறையை சமாளிக்காமல் ஏற்கனவே இருக்கும் அரசின் பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்டு அந்த பணத்தில் பாசகவின் பரம ஏழைகள் அதாணிக்கும் அம்பாணிக்கும் வரா கடன்களை சமாளிக்க பணம் ஏற்பாடு செய்கிறார்கள்.

இது வரை கிட்டதட்ட 120 பொருட்களுக்கு GST வரியை திருத்தி/குறைத்து அமைத்து இருக்கிறார்கள். இது வரையில் அதிக வசூல் செய்த வரியை திருப்பி கொடுப்பார்களா, இல்லை வாங்கினவன் இளிச்சவாயன் என்று விட்டு விடுவார்களா.

பாசக அரசு இலவசங்களை நம்புவது இல்லை என்றும் உண்மை நேர்மை நாணயம் மட்டுமே என்று சொல்லிவிட்டு 4 கோடி இலவச மின் இணைப்பு என்றும் சொல்வது வேடிக்கையே. அதுவும் சென்ற ஆண்டு சொன்ன அதே 4 கோடி இந்த ஆண்டும். ஆக 1 ஆண்டாக எந்த வேலையும் நடக்கவில்லை ஆனால் தூங்காத பிரதமர் என்னேரமும் நாட்டை பற்றி சிந்தித்துகொண்டும் பணியாற்றிக்கொண்டும் இருப்பவர் என்று இராம் நாத்து கோவிந்து சொன்னது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அப்படி பட்ட நிர்வாகத்தில் ஒரு ஆண்டாக வெறும் 4 கோடி மின் இணைப்புகளை கூட பூர்த்தி செய்யமுடியாமல் திணருகின்றதாம் மோடி அரசு.

பாசக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டு மக்களை ஒரு பதட்டத்திலேயே வைத்து இருக்கிறது. எப்போ என்ன நடக்குமோ என்று மக்கள் பயந்த வண்ணமாகவே இருக்கிறார்கள். இந்த பக்கோடா பட்சட் அறிவித்ததும் மக்கள் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் இருப்பது, அப்பாடா தொலைந்து இவர்களின் அட்டகாசம் என்று மக்கள் நிம்மதி அடைய துவங்கிவிட்டது தெரிகின்றது.

21 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் குசராத்லேயே பாசக வெறும் 19 இடங்கள் வித்தியாசத்தில் ஆட்சியை பிடித்து இருக்கிறது. அது தவிர இந்த கொடிய மதவாத பிரிவினைவாத அரசுக்கு கூசா தூக்கிய மாநில கட்சிகள் எல்லாம் ஆக்டோபசு விழுங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம் என்று சுதாரித்துக்கொண்டு விலகி நிற்க முடிவெடுத்துவிட்ட நிலையிலும், இப்படி ஒரு கசப்பு மருந்தை மக்களுக்கு கொடுத்து உங்களின் நன்மைக்கு தான் என்று நம்ப வைக்க முயற்சி செய்வது பரிதாபகமாக இருக்கிறது.

19 மாநிலத்தில் நாங்கள் ஆட்சி என்று நேற்று வரை முழங்கிய முழக்கங்கள் எல்லாம் தமிழகத்தில் காணாமல் போய்யிருப்பதை மக்கள் கவனிக்க வேண்டும். இந்த 19 மாநிலத்தில் ஆளும் அசுர அரசு தான் தமிழகத்தில் ஒரு நடிகனின் காலில் விழுந்து கொண்டு எழுதிரிக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கின்றது.

தமிழகத்தில் எந்த அரசு விழாவாகவோ அல்லது தனியார் விழாவாக இருந்தாலும் இப்போதெல்லாம் குசராத்தியில் தான் தமிழகத்தில் நடத்துகிறார்கள். குசராத்து மக்கள் அணியும் உடை, உணவு, மொழி, குடி என்று அதனையையும் பார்த்து பார்த்து செய்கிறார்கள் தமிழக மக்களின் பணத்தில்.

நீ எல்லாம் என்ன படிச்சி என்ன செய்ய பக்கோடா விக்க தான் லாயக்கு என்று சொல்லாமல் சொல்லி மக்களுக்கு புரிய வைத்த மதவாத பிரிவினைவாத சாதிவெறி அரசு பாசக. உங்களை மக்கள் தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில் இல்லை.