Monday, April 9, 2018

சல்மான் கானை இப்படி சொல்லி மான் வேட்டை வழக்கில் விடுதலை செய்வார்கள்

சல்மான் கான் அன்று இரவு தூக்கம் வராமல் யாரும் இல்லாத காட்டு பகுதியில் நடைபயிற்சியில் இருந்த சமயம் இருட்டில் சலசலப்புடம் ஒரு விலங்கு தாக்க வந்தாகவும். அந்த அச்சத்தின் காரணமாக தனது சொந்த பாதுகாப்புக்காக கொண்டு வந்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டலாம் என்று வெகுகவனமாக கையாண்ட போதும், மிரட்டும் நடவடிக்கையாக பாதுகாப்பான தூர குண்டு போகும் படி கோணம் மாற்றி சுட்ட போது மான் பயத்தில் அந்த குண்டின் குறுக்கே பாய்ந்து உயிரை அனியாயமாக மாய்த்துக்கொண்டது. இந்த செயலில் வேட்டையாடும் நோக்கமோ அல்லது அந்த அரிய மானை கொல்லும் நோக்கமோ சல்மானுக்கு அரவே கிடையாது என்று சொல்லி சுத்த சன்மார்க்க மனிதராக சல்மான் மாலை அணிவித்து விடுதலை செய்யப்படுவார்.

பொருள் இல்லாருக்கு உவ்வுலகில்லை என்ற குறளின் வலிமை அன்றைக்கு மக்களுக்கு முன் வந்து நடனமாடும்...........வல்லரசு இந்தியா ஆடப்போகும் அந்த களிப்பு நடனத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளோம்.......

0 comments: