Sunday, September 23, 2007

இந்தியாவின் முகங்கள்(புகைப்படங்களுடன்)

இந்திய காலாச்சார சங்கம் நடத்திய "இந்தியாவின் சாரம்" நிகழ்ச்சியில் மத்திய இல்லினாய் தமிழ்சங்கத்தின் சார்பில் "இந்தியாவின் முகங்கள்" நிகழ்ச்சி.

இல்லினாய் பல்கலைகழகம், சேம்பை-அர்பனா வாளாகத்தில் உள்ள கிருட்துவ இளஞர்கள் சங்கம் கட்டத்தில் நிகழ்ச்சிகள் நடந்தது. முதலில் இந்தியாவின் கலாச்சாரம் பற்றிய விளக்கவுரை நிகழ்ந்தது. அதை தொடர்ந்து இந்தியாவின் முகங்களாக மத்திய இல்லினாய் தமிழ் சங்க மழழைகள் பங்கு பெற்றார்கள். அவர்கள் கொண்ட கருத்தும் வேடங்களும் இங்கே.
செல்வன் தரண் பகத்சிங்காக
செல்வி நவீணா வங்காள பெண்


தாண்டியா இளைஞனாக பிருத்திவி


மகாக்கவி பாரதியாக செல்வன் அனிரூத்

நேரு மாமாவாக செல்வன் ஹர்ஷா

பரத கலைஞராக செல்வி பூர்ணிமா நாகரீக சிறுமியாக செல்வி பிருத்திகா

கேரளத்து நங்கையாக செல்வி திவ்யா
விவேகானந்தராக செல்வன் கிருஷ்ணா

நவநாகரீக யுவதியாக செல்வி சஞ்சனா


வேடத்திற்கு தகுந்தாற் போல் அவர்கள் ஆங்கிலத்தில் உரை நிகழ்தும் காட்சிகளும் மற்றும் இதர படங்கள்.









Saturday, September 22, 2007

நிம்மதி

அவர்கள் இருவரும் தம்பதியராய் கோவிலுக்கு வந்து இருந்தார்கள். மூலவர் முதல் சனீசுவரர் வரை எல்லோரையும் பார்த்துவிட்டாகியது, இருந்தாலும் அவர்களுக்கு கோவிலை விட்டு செல்லும் எண்ணம் வரவில்லை. அங்கேயே அமர்ந்தார்கள், பூசைக்கு கொண்டு வந்த படையல்களை உண்டு விட்டு அமைதியாக கோவிலின் பூங்காவிற்குள் சென்றார்கள்.

அங்கேயும் செடி செடிகளாய் பார்த்து பார்த்து சலித்தபின் மறுபடியும் மண்டபத்தில். பிறகு மேலும் ஒரு முறை எல்லோரையும் வலம் வந்தார்கள். இந்த முறை படையல் இல்லை என்றாலும் திருநீரும், குங்குமம், பூக்கள் என்று வந்தது, இவைகளை பகிர்ந்து கொண்ட பிறகும் நேரம் சென்றதாக அவர்களுக்கு தோன்றவில்லை போலும். என்ன செய்யலாம் மனது எங்கும் கேள்வி...

இப்போது வளாகத்தில் உள்ள விலாமரம், செவ்ரலிிமரம், மஞ்சரலி என்று மரங்களை சுற்றி வந்தார்கள். மறுபடியும் மண்டபம், இப்போது அவர் கேட்டார் என்ன போகலாமா. அதற்கு அவள், இன்னும் கொஞ்சம் சென்று போகலாமே பார்வையிலேயே பதில். அதை எதிர்கொள்ள முடியாமல் அமைதியானார்.

நேரே சென்று புளியோதரையும், தியிர் சாதமும் கொண்டுவந்து அருந்த கொடுத்தார். கையோடு தண்ணீர் முகந்து வர சென்றார். அவர் சென்ற திசையையே பார்த்துகொண்டு இருந்தவளுக்கு கண்கள் கலங்கவே செய்ததுதான். இருந்தாலும் எங்கே பார்த்துவிட போகிறார் என்ற எச்சரிக்கை துடைத்துகொண்டு இன்முகத்துடன் இருந்தாள் அவரின் வருகையை நோக்கி.

தண்ணீர் குழாயிலிருந்து கொட்டுவதை பார்த்துகொண்டு இருந்தவருக்கு மனது பிசைந்தது தான். இருந்தாலும் ஒரு ஆண் அழுவதா அதுவும் பொது இடங்களிலே என்ற கர்வம் எல்லாம் அவருக்கு இல்லை எங்கே அவளுக்கு தெரிந்துவிடுமோ பயந்தார். புறப்பட்ட கண்ணீர் அங்கேயே ஆவியானது. புன்னகையுடன் மண்டபத்தை நோக்கி விரைந்தார்.

உணவுக்கு பிறகு மெதுவாக வினவினார் போகலாமா, அப்பவும் இல்லை தான் அவளது கண்களால். இப்போது அவருக்கு சலிப்பு வரவில்லை என்றாலும் மனதில் கவலை தொற்றிகொள்ள தவரவில்லை.

மண்டபத்தில் இருந்தவர்களை கோவில் வேலையாள், ஐயா கொஞ்சம் அப்படி தள்ளி போகிறீர்களா என்றவன் மண்டபத்தை கூட்டி பெருக்க ஆரம்பித்தான். இப்போது அவளின் பிடி கொஞ்சம் தளர்ந்து இருந்தது. மறுபடியும் வினவினார், அவரை பார்த்துக்கொண்டே மண்டபத்தில் இருந்து மூலவரின் இடத்திற்கு நடந்தாள், இவரும் பின் தொடர்ந்தார்.

உள்ளே நின்றவளை ஏற இறங்க பார்த்த பூசாரி, மறுபடியும் இன்முகத்துடன் எல்லா படையல்களையும் கொடுத்து அனுப்பினார். பெற்றுக்கொண்டவள் மறுபடியும் மண்டபத்தை நோக்கி நடந்தாள்.

அங்கே மண்டபத்தில் தரையில் சமக்காளம் விரித்து வில்லுப்பாட்டு கலைஞர்கள் ஒரு கதையை கதைக்க தயாராகிக்கொண்டு இருந்தார்கள். சற்று நின்றவள் பின் மண்டபத்தை நோக்கி சென்றாள்.

அங்கே அதற்குள்ளாகவே சிறியவர்களும் பெரியவர்களுமாக கூட்டம் இருந்தது. இருவரும் சென்று ஒரு நல்ல இடமாக பார்த்து அமர்ந்தார்கள். அருகே இருந்தவர்களுடன் படையல் பொருட்களை பகிர்ந்துகொண்டார்கள். வாங்கிய சிறுவர்கள் அவைகளை இரகசியமாவும் வேகமாகவும் உண்பதை இவள் கண்டும் காணததாக இரசித்துக்கொண்டு இருந்தாள்.

அதற்குள் தயாரான வில்லுப்பாட்டு கலைஞர்கள், கதையை துவக்கினார்கள். வணக்கத்துக்கு பிறகு இராமன் கோசலைக்கு சென்று சீதையை கரம்பிடித்த கதையை ஆரப்பித்தார்கள்.

இராமனின் பெருமைகளையும், வீரமும், வசீகரமும், தெய்வீகமும் என்று பன்முகமாக இருந்தது முதல் இருபது நிமிடங்க்களுக்கு. பிறகு ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் துவங்கினார்கள். சனகனின் அரசவைக்கு இராமன் வருவதும், அதை சீதை நோக்குவதையும் கம்பனும் வால்மிகியும் என்று மாறி மாறி அழகாக வருணித்துகொண்டு இருந்தார் அந்த வில்லுப்பாட்டு கலைஞர்.

இலக்கிய ஆழமும் அவைகளை விளக்க திரையிசையின் பாடல்களுமாக மேன்மேலும் சென்றுகொண்டு இருந்தது. கதையில் இருந்து மீண்டவராய் அவளை கவனித்தார். குழந்தைபோல் கதை கேட்பதையும், நய்யாண்டிகளுக்கு வாய்விட்டு சிரிப்பதை பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தார்.

இத்தனை தெய்வீகம் பொருந்திய இராமன் விதியின் வசப்படுவதையும், கடவுளின் மனித பிறப்பாக இருந்தாலும் மனித பிறவிக்கே உண்டான ஊழ் வழி செல்லல் என்ற தத்துவத்தை விளக்கும் விதமாக இராமகாவியம் அமைந்து இருப்பதை அருமையாக விளக்கிக்கொண்டு இருந்தார்கள்.

இராமன் பட்டம் சூட்டும் நேரத்தில் ஆரம்பிக்கும் சோகம், இலங்கையிலிருந்து நாடு திரும்பி பட்டம் ஏற்கும்வரை இராம தம்பதியர் அடைந்த துன்பங்களுக்கு அளவே இல்லை.

கதைகளின் நடுவே ஆங்காங்கே நடைமுறை வாழ்க்கைக்கும் இராமயணத்திற்கும் உள்ள தொடர்புகளை மிகவும் அழகாகவும், ஆழமாகவும் சொல்லிக்கொண்டே போனார்கள்.

இராமனின் கதை இனிதே முடிந்தவுடன், இவர் அவளை பார்க்க அவள் போகலாம் என்று கண்களாலே சொல்ல. நிம்மதி பெருமூச்சுடன் அழைத்துகொண்டு வாசலுக்கு வந்தார். பூக்கடையில் இருந்த காலணிகளை பெற்றுகொண்டவர், தவறாக நினைக்கப் போகிறார் என்று பணம் கொடுக்க முயல. கடைக்காரரோ பரவாயில்ல போய்வாங்க புன்னகையுடன். இருவரும் தெருவிலே இறங்கி நடந்தார்கள்.

போன மாதம் நடந்த விபத்தில் ஒன்றே ஒன்று கண்னே கண்னு என்று வளர்த்தெடுத்து, பார்த்து பார்த்து திருமணம் முடித்து, கடைசியில் விபத்தில் தம்பதியராக மகனையும் மருமகளையும் ஒருங்கே விதியின் கைகளுக்கு கொடுத்த அவர்களின் சோகம் சொல்லி மாளாதது தான்.

இத்தனை காலமாய், அழுவதை தவிற வேறு எதையும் தெரியாமல், கண்ணீரும் கம்பலையுமாகவே இருந்தவளை தனக்குள் இருக்கும் சோகத்தையும் மறந்து அவளை தேற்றுவதையே மூச்சாக செயல்பட்டவருக்கு இன்று நெஞ்சின் பாரம் இறங்கி இருந்தது.

என்ன என்னவோ செய்து ஆருதல் தேடிபார்த்தும் கிடைக்காத நிம்மதி இப்போது கிடைத்திருந்தது இருவருக்கும். ஆருதலாக இருந்தது. அது நாள் தொட்டு தினமும் அந்த கோவிலுக்கு வருவதையும், தெய்வகாரியங்களில் அதிகமாக தங்களை ஈடுபடுத்தி கொண்டார்கள் அந்த தம்பதியினர்.

எங்கே அந்த பெரியார்தாசன், கூப்பிடுங்கள் அவரை. பெரியார் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

மூச்சுக்கு 300 தடவை, காஞ்சி சங்கரையும், இந்து மத கோட்பாடுகளையும் சவாலுக்கு மரியாதைகெட்ட வார்த்தைகளில் விளிக்கும் பெரியார்தாசனுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நீங்கள் ஆவலாய் எதிர்பார்துகொண்டு இருந்த வாய்ப்பு இதோ உங்களின் முன்னால். கோபம் வந்தால் கேட்க்க மாட்டேன் என்று ஏக வசனத்தில் பேசியவரே இப்போது மேடை ஏறும் பார்ப்போம்.

இராமாயணம் என்ன இராமாயணம், மொத்தமாக இந்து மதத்தையே எதிரிலே ஆள் யாரும் இல்லா வேளையிலே திட்டி தீர்தவரே எங்கே இப்போது வந்து பேசும் பார்ப்போம். துணைக்கு எத்தணை பெரியார் நம்பிகளை அழைத்து வந்தாலும் சரி தைரியமாக மேடை ஏறவும்.

இந்த கூட்டத்தில் வந்தால் பதம் பார்த்துவிடுவார்கள் என்ற பயம் இருந்தால் தொலைக்காட்சியில் விவாதத்தை வைத்துக்கொள்ளலாம். தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும் அல்லாது அகில இந்தியா, ஏன் உலக அளவிலும் கூட செய்தியாளர்கள் கூடுவார்கள். அவர்கள் முன்னிலையில் விவாதத்தை நடத்துவோம். வந்து வேதத்தில் ஒன்றும் இல்லை என்று கடலூர் கூடத்தில் பேசியதை போல், வேதத்தையும் அதன் பொருளையும் அவையோருக்கு முன் அடுக்கவும். நீதி தெரிந்தவர்கள், நீதியுரைப்பார்கள்.

அவராக முன் வராவிட்டாலும் பெரியார் பக்தர்களே அவரை தைரியபடுத்தி அழைத்துவரவும். ஆவலுடன் எதிர்பார்கிறோம் விவாதகளதிலே உங்களை.

Friday, September 21, 2007

அன்று அயோத்தி மண்டபம், இன்று கபாலீசுவரர்

பழனியம்மாளின் ஒரே இலட்சியம் தனக்கு என இருக்கும் அவளது ஒரே மகனை நன்றாக படிக்கவைத்து, இந்த அன்றாடான் காட்சி பிழைப்பை விடுத்து மாத சம்பளம் நிலைக்கு முன்னேருவதே. அவளது எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றவாரே அவளது மகன் முருகனும் சிறிய வகுப்பில் இருந்தே மிகவும் அருமையாக படித்தும் வந்தான். இந்த சின்ன வயதிலேயே இத்தனை பொறுப்பா என்று ஆச்சரியப்படாத ஆட்களே இல்லை.

சின்ன வயதில் இருந்து முருகனும் கிருஷ்ணனும் நல்ல நண்பர்கள் இருவரும் அருகே உள்ளே நகராட்சி பள்ளியில் சின்ன வயதில் இருந்து ஒன்றாகவும் நன்றாகவும் படித்தார்கள். தற்பொழுது இருவரும் அண்ணா பல்கலையில் பொறியியல் பயின்று வருகிறார்கள். கிருஷ்ணனுக்கு வீடு மயிலாப்பூரில் இவனுக்கு அங்கு வீடு இல்லை என்றாலும் பழனியம்மாளுக்கு பொழப்பு அங்கே தான். அந்த கபாலீசுவரர் கோவில் வாசலில் பூக்களையும் பூசை பொருட்களையும் விற்றுவருகிறாள்.

இவனும் காலையில் கல்லூரிக்கு கிளம்பும் முன்னும், பின்னும் கடைக்குவந்து பழனியம்மாளுக்கு துணையாக இருந்துவிட்டு இருவரும் இரவில் தான் வீடு திரும்புவார்கள். அன்றைக்கும் அப்படி தான் கடைக்கு சென்றடைந்தான். எப்போதும் தன்னுடன் பேசிக்கொண்டும் கடைப்பக்கம் வந்துவிட்டும் செல்லும் கிருஷ்ணன் அன்று ஏனோ வண்டியை விட்டு இறங்கியதும் விரைவாக சென்று மறைந்தான்.

கபாலீசுவரர் கோவில் குளக்கரையும் ஏதோ ஒரு அசாதாரணமான ஒரு சூழல் நிகழுவதை அவனால் உணர முடிந்தது. என்னவாக இருக்கும் ஒன்றும் தோன்றாதவனாக கடைக்கு சென்றான். பழனியம்மாளோ வியாபாரம் ஏதும் இல்லாமல் வேடிக்கை பார்த்தும், வானொலி இசையிலும் பொழுதைகழித்துக்கொண்டு இருந்தவளுக்கு மகனை பார்த்ததும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

எப்போதும் அதிகம் பேசாதவளாக இருந்த பழனியம்மாள், அன்று முருகனிடம் அவளுக்கு இவ்வளவு சோதனைகளும் வேதனைகளும் அனுபவிக்கவேண்டிய கட்டாயம் ஏன் வந்தது என்று தன்னையும் அறியாமல் சொல்லி தனது மன சுமையை அவனிடன் இறக்கிவைத்தாள் 20 ஆண்டுகள் கழித்து. இந்த உரையாடலில் உரைந்து போனவனுக்கு, பேச்சும் ஓடவில்லை சிந்தனையும் தோன்றவில்லை. சிறிது நேரத்திற்கு அங்கே இருவரும் இருந்தும் இருவருக்கும் பூமியில் அனாதையாக விடப்பட்டதாக ஒரு உணர்வு.

முருகனுக்கோ அம்மா சொன்ன வார்த்தைகளையும் அதனால் அம்மா அனுபவித்த துன்பங்களும் அவனது மனதை அழுத்தமாக அழுத்தியது. வேலைகளை எதுவும் அவனால் மேற்கொள்ள முடியாமல், அம்மாவின் அருகே அமர்ந்தவாரே இருந்தான். இலங்கை வானொலியின் இசைத்தொகுப்பும், பசியும் அவனுக்கு தூக்கத்தை வரவழைத்தது. தன்னையும் அறியாமல் அன்னையின் அருகில் அமர்ந்தவாரே தூங்கிபோனான்.

அந்தி மறைந்து இரவின் தொடக்கத்தை காட்டிக்கொண்டு இருந்தது. யாரோ இரண்டு மூன்று பக்தர்கள் வந்து பூசைக்கான பொருட்க்களை வாங்கி சென்றார்கள். சில்லரைகளை சரி பார்த்துக்கொண்டு இருந்தவள், இன்னமும் அதிகமானோர் கோவில் வளாகத்தை அடைவதை பார்த்தவள். வாடிப்போகும் என்று நிழலுக்கு என்று மறைவாக வைத்து இருந்த பூவை எடுத்து முன்னால் வைப்போம் என்று முனைகையில் முருகனின் தூக்கமும் கலைந்தது. கலைந்தவன் அம்மா நான் எடுக்கிறேன் என்று எடுத்து கொடுத்ததுடன் அங்கே ஏற்கனவே இருந்த பூக்களின் மேல் தண்ணீர் தெளித்துவைத்தான்.

திடீர் என வரத்துவங்கிய பக்தகோடிகள் ஆங்காங்கே அப்படியே கூட்டமாக நின்றுக்கொண்டு யாருக்காகவோ காத்துக்கொண்டு இருந்தது. அதில் இருந்த ஒரு சிலர் மட்டும் கபாலீசுவரரை தரிசித்துவிட வேண்டி கற்பூரமும் கையுமாக கோவிலுக்கு சென்றுக்கொண்டு இருந்தார்கள். நேரம் கூட கூட, இன்னமும் கூட்டம் கோவிலுக்கு. காலையில் இருந்து காற்றாடிக்கொண்டு இருந்த வியாபாரம் மிகவும் பரபரப்பாக நடந்துகொண்டு இருந்தது. அம்மாவும் பிள்ளையுமாக பம்பரமாக குழன்றுக்கொண்டு இருந்தார்கள்.

எங்கிருந்தோ திடீர் என கிருஷ்ணன் அங்கு கடைக்கு வந்தான். அம்மாவை பார்த்து புனகைத்த அவன் முருகனை தனியே அழைத்து பேசிவிட்டு மீண்டும் மறைந்தான். பேசிவிட்டு வந்தவன், அம்மாவிடம், இன்னைக்கு கடை போதும் வாங்க சீக்கிரம் வீட்டிற்கு போவோம், அம்மாவை அழைத்தான். பதிலுக்காக காத்துக்கொண்டு இல்லாமல். கடையை மூடும் விதமாக அனைத்தையும் கண் இமைக்கும் வேளையில் ஒழித்து ஒருவழியாக கடையை சாத்தி விட்டு வண்டியை பிடிக்க சென்றார்கள்.

கண்ணுக்கு எட்டியவரையில் அங்கும் இங்கும் எங்கும் காவியாகவே தோன்றியது. அம்மா அவனிடன் சொன்னாள், என்னடா இப்படி கடை பரபரப்பாக போகின்ற போது சட்டுன்னு மூடிட்டு வந்தே. 9 மணி வரைக்கு இருந்து இருந்தால் உனக்கு பரீட்சைக்கு பணம் கட்டும் அளவிற்கு விற்று இருக்கும் கெடுத்தியே கோவித்துக்கொண்டாள். இவனுக்கோ, போருந்தும் இல்லை, சீருந்துகளும் இல்லாமல் இருப்பதின் மர்மம் விளங்க தொடங்க்கியது.

அம்மாவின் கைகளை பிடித்துக்கொண்டு சந்து பொந்துகளில் நடந்தான். எவ்வளவு நேரம் தான் நடந்தாலும் மேற்கு சைதாப்பேட்டை சென்று அடைவது இயலாத காரியமே. இருந்தாலும் இந்த இடத்தைவிட்டு போனால் போதும் என்று நடந்தான். நடை ஓட்டமாக ஆனது, பழனியம்மாவாள் நடக்கவே முடியவில்லை இருந்தாலும் ஒன்றும் புரியாதவளாய் அவன் அழைத்து செல்லும் பாதையாக அவனுக்கு இனையாக நடக்க முனைந்துகொண்டு இருந்தாள்.

அங்கே அந்த வழியாக ஓட்டமும் நடையுமாக செல்லும் அவர்களை ஒரு கூட்டம் கவனித்தது. முதலில் கேலியாக பேசியவர்கள், இவர்கள் பயந்து ஓடுவதை பார்த்ததும் வேகம் அவர்களுக்குள் கூடியது. எட்டி இருந்தவர்கள் அவர்களை வளைக்க தொடங்கினார்கள். அப்போது அங்கு இருந்தவனின் கைபேசி ஒன்று அலரியது. சேதியை கேட்டவன், ஐயா ஆரம்பிக்க சொல்லிட்டாரு வேலைய கவனிங்க சொல்லிவிட்டு மற்ற குழுவிற்கு தெரிவிக்க கை பேசியை இயக்கிகொண்டு இருந்தான்.

சுற்றி வளைத்தவர்களில் ஒருவன் முருகனின் தலையில் ஓங்கி ஒரு அடி அடிதான் கட்டையால். மற்றவர்கள் அனைவரும் இராமா, கிருஷ்ணா, உன்னை நிந்தித்தவர்களை இனியும் விட்டு வைத்தோமா பார் என்று அவனை அங்கு அடி அடி என்று பிளந்து எடுத்துக்கொண்டு இருந்தனர். நடப்பதை பார்த பழனியம்மாளுக்கு மயக்கம் வந்தது. மெல்ல நகர்ந்த கூட்டம், முதல்வர் ஒழிக, இராம இராஜியம் வாழ்க வாழ்த்துகள் வின்னை பிளந்துக்கொண்டு இருந்தது.

கண்விழித்து பார்க்கிறாள், அருகாமையில் இரத்த வெள்ளத்தில் முருகன் மீதம் இருக்கும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அம்மாவின் கைகளை விடாதவனாக துடித்துக்கொண்டு இருந்தான்.

20 ஆண்டுகளாக துரத்திய விதி இன்னமும் அவளை நிம்மதியாக விடுவதாக இல்லை போலும். மகனை மடியிகிடத்தி செய்வது அறியாமல் அழத்துவங்கினாள். 20 வருடமாக மகன் முன் அழுவதில்லை என்று இருந்தவள் பொத்துக்கொண்டு அழுதாள்.

20 வருடமாக கபாலீசுவரர் வாசலிலேயே தவமாககிடந்தவள், மகன் ஒருவனே அவளது பிடிப்பி, வாழ்க்கை என்று இருந்தவளுக்கு என்ன சொல்லி அழ, வாயில் வார்த்தைகள் கூட சரியாக வரவில்லை அவளுக்கு. என்ன என்னவோ சொன்னாள் என்வென்று அவளுக்கே புரியவில்லை.

தூரத்தில் சென்ற அந்த காவிபட்டாளம் இவள் விழித்துக்கொண்டு அழுவதை பார்த்ததும், சாட்சிகளை விட்டு வைத்தால் பிறகு பிழையாக போய்விடும். ஒரு 4 பேர் மட்டும் இவளை நோக்கி பாய்ந்தார்கள்.

எங்கோ இருந்து வந்தவனாக பாய்ந்தான் கிருஷ்ணன் குறுக்கே, அவர்களை பார்த்து கைகூப்பி நின்றவன் அவர்களது இசைவுக்காக காத்து இருக்காமல் கைபேசியை இயக்கினான். கிருஷ்ணனை பார்த்த அந்த காவிக்கூட்டம் கலைந்து சென்றது.

மறுநாள் காலையில் ஊடகங்களில் தோன்றிய அந்த தேசிய தலைவர், சாதுக்களின் தலைவர் அவர். அடுத்து எப்போது தேர்தல் வரும் அப்படி வந்தால் மக்கள் யாருக்கு வாக்குகள் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளில் மும்முரமாக இருந்தார். அவரின் செய்தியாளர்கள் கூட்டத்தில் எடுத்ததாக தினமணியில் ஒரு 40 படங்களும், தேசிய பத்திரிக்கைகளில் அவர் ஆளும் கட்சிக்கு எதிராக விடும் சவாலும் படமும்மாக மாறி மாறி காண்பித்த வண்ணம் இருந்தது.

அந்த படங்களும் செய்திகளும் முருகனுடனான அவனது 20 ஆண்டு கால பழக்கத்தையும், சேதி தெரிந்தும் அவனால் அவனது நண்பனை தருணத்தில் காப்பாற்ற முடியாமல் போன கையாலாக தணத்தனை கேலியும் கிண்டலும் செய்துகொண்டு இருந்தது. இரவுகளில் தூக்கத்தை இழந்த கிருஷ்ணனுக்கு, இராமனையோ இராமயணத்தையோ கேட்டாலே அந்த இரத்த வாடையும் வன்முறையுமே மனதில் வந்து நிலைகுலைந்து போவான்.

இரண்டு மாதங்களுக்கு பிறகு அங்கே கபாலீசுவரர் வாசலில் அம்மாவும் பிள்ளையும். அதே கடை, அதே வியாபாரம். ஆனால் முருகனால் இனிமேல் கட்டையின் துணையில்லாமல் நடக்க முடியாது. மண்டையில் பலமாக பட்ட அடியினால் அவன் பேசும் திறனையும் பார்வையும் இழந்து இருந்தான். கடையில் அவன் பார்த்துவந்த வேலைகளை இப்போது கிருஷ்ணன் பார்த்துவருகிறான் பழனியம்மாளுக்கு துணையாக. இவள் சுமந்த சுமைகள் போதவில்லை போலும் விதிக்கு. முருகனுக்கு உடலளவிலும், பழனியம்மாளுக்கு மனதளவிலும் ஒரே நிலைமை தான். என்று தனியும் இந்த இரத்த தாகம் மதம் பிடித்த அரசியலுக்கு.

Thursday, September 20, 2007

இந்து கோவில் நிலம் மண்டலமய அதிகார குழு விசாரணையும், பத்திரிக்கை செய்தியும் ஒரு பார்வை

http://www.news-gazette.com/news/local/2007/03/16/hindu_temple_discussion_to_continue

இந்த விசாரணைக்கு வந்திருந்தவர்களுக்கு நன்றாகத்தெரியும் இந்துகளின் தரப்பில் கேட்க்கபட்ட அத்தணை கேள்விகளுக்கும் அந்த வழக்குரைஞர் எனக்கு சரியாக தெரியவில்லை, அது பொறியாளரைத்தான் கேட்க்கனும். இது வரையில் சிறு மற்றும் பெரு நகரங்களில் எல்லாம் இப்படி எல்லாம் இருக்கிறது என்று சொன்னாரே தவிற இங்கே நாம் காட்டிய கிராம சூழழில் உள்ள உதாரணங்களை எடுத்துக்காட்டவோ தொகுத்து சொல்லவோ அவரால் முடியவில்லை. அது மட்டும் அல்லாது, சிவ மொனார்டு அவர்களின் கடிதம் வாசிக்கப்பட்டதையோ அதைத்தொடர்ந்து வாசித்தவர் சொன்ன வாசங்களோ செய்தியில் இடம்பெறவில்லை.

மேலோட்டமாக பார்த்தால் சுருக்கமான செய்தியாக தெரியும் ஆனால் உண்மையில் இது சுருக்கிய செய்தி என்று அங்க வந்து இருந்தவர்களுக்கு தெரியும்.

மக்களாட்சி என்றும், எங்களுக்கு அடுத்த பெரிய மக்களாட்சி இந்தியா என்றும் செய்திகளிலும் ஊடகங்களிலும் விளம்பரபடுத்தப்பட்டாலும். அமெரிக்காவின் உண்மை முகம் அதைவிட முக்கியமாக வாத்தைக்கு வார்த்தை இந்து இந்து என்று விளித்து எழுதி இருப்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். நேரிலே பார்க்கும் போது எப்படி இருக்கிறீர்கள், நலமா, வாரகடைசி எப்படி போனதுன்னு அன்போடும் பண்போடும் விளிக்கும் அன்பின் அடையாளத்தை இங்கே காண்கின்றோம். ஒட்டு மொத்த அமெரிக்காவையும் சொல்லவில்லை, அங்கே விசாரணைக்கு வந்து நமக்கு சாதகமாக வாதாடிய அந்த நல்ல உள்ளங்களுக்கு நாம் என்றும் கடமை பட்டுள்ளோம்.

அதே வேளையில் பத்திரிக்கையின் இத்தகைய ஒருதலை பட்ச்சமான போக்கு சரியில்லையே. செய்தியை படிக்கும் மற்ற குடிமக்களது எண்ணத்தில் நாம் அங்கே நாசவேலைகளை புரியவும், இந்தியானா ஜோன்சிலே காட்டும் காளிகோயில் வழிபாட்டினை(படத்தின் செய்தி அதுவே உண்மைக்கு புரம்பான தகவல்) அதைபோல எதுவோ நடக்கும் அதனால் எங்களால் மாலையில் வெளியில் அமர்ந்து குடியும் கும்மாளமுமாக இருக்க முடியாது என்ற அளவிற்கு வெளியிட்ட செய்தியை என்ன என்று சொல்லுவது.

அருகில் அளவுக்கு அதிகமாக வாகன போக்குவரத்து அந்த இடத்தின் சூழ்நிலைக்கு பங்கம் விளைவிக்குமாம், ஆனால் அதுவே ஐ 57ல் நொடிக்கு 20 வண்டிகள் போகும் சத்தமும், அணி அணியாக அங்கே செல்லும் வண்டிகள் மட்டும் அழகு சேர்க்குமாம். அங்கே இப்படி தான் சொன்னார்கள்.

என்ன என்னவோ அழகு வார்த்தைகளில் சொன்னாலும் இடம் இல்லை, தரமாட்டேன், விடமாட்டேன், வராதே, பொடுரதை சாப்பிட்டுவிட்டு படுத்து இரு, என்ற வசனங்களின் பொருளில் அழகு இருக்கவே இருகாது.

வால்மார்டு வரலாம், கடைகள் வரலாம், பெட்ரோல் கடை வரலாம், சம்பந்தமே இல்லாமல் அங்கே புதிய ரேடார் மேடை வரலாம், கிராமத்து விவசாயத்துக்கும் விமானத்துக்கும் என்ன சம்பந்தமோ அது வரலாம், அதிலே கிராமத்துக்கு சம்பந்தமே இல்லாமல் தொழிலதிபர்கள் வரலாம், கிராம சம்பந்தமே இல்லாத கோட்டும் சூட்டும் போட்டு ஹம்மர்ரும், இன்ன என்ன பிற சொகுசு வண்டிகளில் வரலாமே அத்தனையிலும் வரலாம், கிராமத்துக்கு சம்பந்தமே இல்லாத தொலைக்காட்சி, தொலைபேசி முதல் அத்தனை நவ நாகரிக விசயங்களும் வரலாம், ஆனால் சாமின்னு சொல்லிக்கிடு ஒருத்தனும் அந்த பக்கம் போயிடக்கூடாது. அப்படி போனா இவர்களின் நிம்மதி கெட்டுப்போகுமாம், இவர்களின் நிம்மதி எதிலே இருக்கிறது பாருங்கள்.

கிராமம், கிராம அழகு, கிராம பாரம்பரியம் என்றும் சொன்னார்கள். அங்கே கட்டி இருக்கும் வீட்டையும், அவர்கள் வாழும் முறையும் உடுத்தும் முறையும் பாருங்கள், என்ன வித்தியாசம் என்று. பிறகு என்ன கிராமம் கிராம சூழல்.

இவர்கள் இருப்பது மேட்டு நிலம், கோவில் நிலமோ மட்டநிலம், மட்டநிலத்தில் கோவில் கட்டினால், மழை நீர் வடியாதாம். இவர் வீட்டு வீட்டி நீரேற்றி அன்றாடம் ஓடும்மாம். கோவில் என்ன தண்ணீர் போகும் வடிகாலில்லா கட்டப்போகிறார்கள் என்று கேட்டால் இல்லை என்றார் அந்த வழக்குரைஞர். பின்னே நீர் எங்கே தேங்கும்? புன்னகை, வழியல், திருட்டு முழி இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் அந்த வாதியின் வழக்குரைஞரின் பதிலை.

ஏப்பிரல் 26ல் பார்க்கலாம் என்ன சொல்லுகிறார்கள் என்று, நமது தரப்பு பிரதிவாதம் அப்போது தான் துவங்குகிறது.

ஏப்ரலில் நடந்த விசாரணையில் அனுமதி வழங்கப்பட்டு விட்டது. ஆனால் அது வரைக்கும் இவர் அடித்த கூத்தை என்னவென்று சொல்ல.

குப்பி- கண்டனங்கள்

1 மணி நேரம் 44 நிமிடங்கள் ஓடும் படம். இராஜீவ் காந்தியின் படு கொலையை நிகழ்த்திவிட்டு தப்பிக்க நினைத்தவர்களை சுற்றி வளைத்ததை பற்றிய சித்தரிப்பு காட்ச்சிகளாக படம் இருந்தது. படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை கவனம் தப்பாமல் பார்க்க வைத்த இயக்குனருக்கு பாராட்டுகள்.

அதே வேளையில், புலிகளை காட்டும் போது அவர்கள் ஏதோ மனிதகுல விரோதிள் போலவும், கொலை வெறிகொண்ட சண்டாளர்களாகவும் காட்ட முற்பட்டு இருப்பதற்கு கண்டனங்கள்.

இவ்வளவு பெரிய வேலையை முடிப்பதற்கு வந்து இறங்கியவர்களாக காட்டப்படும் சிப்பாயாகள் அனேகருக்கு செயற்கை கால்களுடன்னும் மேலும் அவர்கள் ஏதோ வருகின்ற வழியில் இந்திய இராணுவத்துடன் சமரிட்டு தப்பி ஓடிவந்ததால் கண் காது மூக்கு என்று எல்லாம் மருந்து கட்டுக்களுடன் காட்டி இருப்பது இயக்குனரின் இந்த தேசிய பற்றை காட்டுகிறது. ஆனால் மெலே சொன்னவைகளில் உண்மைகளாக இருக்க வாய்ப்பு இல்லை. புலிகளை இழிவு படுத்துவதற்காகவே இப்படி காட்சிகளை அமைத்து இருக்கிறார் இயக்குனர்.

படத்தில் இறுதிவரையில் வானொலியையே காட்டவில்லையே என்று நினைக்கும் தருவாயில் கடைசியில் காட்டி இருப்பதும் இயக்குனரின் கத்துக்குட்டி தனம் மிளிர்கிறது.

தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்ட உளவு பிரிவு, மத்திய மற்றும் மாநில காவலர்கள் இன்னமும் எத்தனையோ சக்திகளின் கூட்டு முயற்சியின் பலனாய் கிடைத்த வெற்றியை ஏதோ ஒன்று இரண்டு காவல்துறை அதிகாரிகளால் மட்டுமே சாத்தியமானதாக காட்டி இருப்பது இன்னமும் ஒரு சொதப்பல்.

குருதி புனல் படத்தில் வரும் காட்சிகளில் இருக்கும் ஆழமும், மனதை தொடும் விதமும் இதிலே இல்லாமல் போனது ஏமாற்றமே. புலிகளை இகழ்வதாக நினைத்துக்கொண்டு இந்தியாவையும், அதன் இறையான்மையும் கேலி செய்யும் விதமாக படம் அமைந்து இருப்பது வேதனை.

சிகரம் வைத்தாற் போல ஒரே ஒரு முறை புலிகளுக்கு பணம் அனுபியதால், பணம் அனுப்பியவர்களின் முகவரியை கண்டுபிடித்து இராகவனை பின் தொடர்ந்து தொல்லைக்கு ஆளாக்குவதாக காட்டுவது, இதய பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் புலிகளின் மேல் நாம் கொண்டு இருக்கும் பாசத்தை பலவீன படுத்தும் ஒரு கேவலமான முயற்சி, கண்டனங்கள்.

மொத்தத்தில் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை முயற்சி, இன்னும் ஒரு மொக்கை படம்.

புலிகள் அவர்களது வேலையை சரியாக செய்து முடித்தார்கள், ஆனால் நாம் நமது வேலையை ஒழுங்காக செய்து இருந்தால் இவ்வளவு நடந்து இருக்குமா.....

கீதை-2

மதியத்திற்கு மேல் பொழுது போவதே மிகவும் கடினமாக இருந்தது அவனுக்கு. என்ன தான் செய்ய சரி தேனீராவது அருந்துவோம் வெளியிலே சென்றான். வெயிலோ மண்டையை பிளக்கும் அளவிற்கு, அருகாமையில் இருந்த மர நிழலில் அவன். மெதுவாக தேனீரை அருந்தியபடி வானம், அருகாமையில் குளம் அதிலே மிதக்கும் வாத்துக்கள், மரத்தடி நிழலில் அந்த வெயிலிலும் இனிமையாக வீசும் காற்று.. தன்னை மறந்த நிலையில் நின்று கொண்டு இருந்தவனை அழைத்தது அந்த குரல்.

என்ன பலமான சிந்தனையாக இருக்கிறது, பதிலுக்கு இவன் தத்துவமாக மனதில் எழுந்தது. இருந்தாலும் சபையடக்கம் கருதி பதிலுரைத்தான். அவனது மனம் இப்போது இருக்கும் நிலையில் இந்த பேச்சை எல்லாம் கேட்க்கவோ அல்லது சித்தித்து பதிலுரைக்கவோ அவனுக்கு எண்ணம் இல்லைதான் இருந்தாலும் உடன் வேலை பார்ப்பவர், தேவை இல்லாமல் ஏன் வீன் வம்பு என்று அமைதிகாத்தான்.

அவரும் விடுவதாக இல்லை காலையில் படித்த செய்திதாள்களில் இருந்த செய்திகள் முதல் அலுவலகத்தில் உள்ள வதந்திகள் வரை வாய் மூடுவதாகவே இல்லை. ஒவ்வொரு செய்தி சொன்னதும் நீங்க என்ன நினைக்கிறீர்கள் கேள்வி வேறு. எல்லாவற்றையும் பொருமையாக கேட்டுக்கொண்டு இருந்தவன், கவனமில்லாமல் நேரம் போனாலும் அன்புத்தொல்லையில் இருந்து விடைபெற நண்பா பார்ப்போம் விடை பெற்றுக்கொண்டான்.

மனிதன் என்னவாக பேசுகிறார், அதிலும் இந்த பாலம் விவகாரத்தை எடுத்தாலும் எடுத்தார் இந்த காய்சு காய்சுகிறார். எவனாவது மாட்டினால் பிறகு சங்குதான் போல நினைத்துக்கொண்டே மறுபடியும் வேலையில் மூழ்கினான்.

மாலை 6 ஆனதும் மனிதர்கள் சிட்டு குருவியாக பறந்து மறைந்தனர். அனேகமாக கடைசியாக இருந்த ஓரிடண்டு பேரில் இவனும் ஒருவன். வலையிலே மூழ்கி முத்தெடுத்துக்கொண்டு இருந்தான். துப்புரவு தொழிழாலி குப்பைகளை எடுக்க வரும் போதுதான் மணி 7:30யை தாண்டியதை உணர்ந்தான். வண்டி நேராக வீட்டை நோக்கி சென்றது.

செல்லும் வழியில் அடடே விட்டில் சாப்பிட ஒன்றும் இல்லையே ஏதாவது வாங்கிக்கொண்டு போகலாம், வண்டி திசை மாறியது. எங்கே சென்று என்ன வாங்குவது மறுபடியும் அந்த போராட்டம். அங்கே இங்கே என்று கடைசியாக அங்கு வந்தான். மதியமே சரியான உணவில்லை இப்போதாவது நன்றாக ஒரு வெட்டு வெட்ட வேண்டும் மனகணக்கு.

உள்ளே சென்று வாங்க காத்து இருக்கும் வேளையில் மதியம் பார்த்த அதே அறிமுகம் இல்லாத முகம், பார்த்ததும் பளீர் என்று ஒரு புன்னகை. இவனும் பதிலுக்கு ஒரு புன்னகை. என்ன வாங்கலாம், மறுபடியும் பார்த்ததில் ஒரு வழியாக முடிவுக்கு வந்து வாங்கி திரும்பினான். அடுத்து கடைகாரரின் குரலுக்கு இவன் வாங்கியதே ஒரு குரல் கேட்க்க திரும்பி பார்த்தான். அதே முகம் இவனை திரும்பி பார்க்க மறுபடியும் புன்னகைகள்.

மீண்டும் வீடு நோக்கி பயணம், வண்டியிலோ பழைய தமிழ் பாடல்கள். மறந்து இருந்தவனுக்கு மீண்டும் கவனம் கல்லூரி பக்கம் இழுத்து சென்றது.

முதலாம் ஆண்டு 8 பாடங்கள், பாடம் எடுக்க வந்தோர்கள் எல்லாம் துணை பேராசியர்களும் அனுபவம் மிக்கவர்களும். அதுவும் பொறியில் பாடங்களை எடுத்தவர்கள் இன்னமும் அனுபவம் பெற்றவர்களாக இருந்தார்கள். முதலில் கடுமையாக இருந்தாலும் பிறகு எல்லாமே பழகிபோன விதமாகத்தான் இருந்தது.

மாலையில் விளையாட்டு, பிறகு உணவு, உணவுக்கு பின் நாளை வகுபிற்கான தயாரிப்புகள். அதன் பிறகு தூக்கம் வரும்வரை பின் இரவு அரட்டை கச்சேரிகள் என்று நாட்க்கள் நகர்ந்துகொண்டு இருந்தது.

கல்லூரியை சுற்றிலும் கட்டாந்தரையாக இருந்தாலும், கல்லூரி ஆரம்ப நாட்க்களை போல் அல்லாது மழையும் பின் புதரும்மாக இடம் மாறித்தான் போய் இருந்தது. இரவு நேரங்களில் சன்னல் கதவுகளை திறந்து வைப்பதற்கு இல்லை. என்ன என்ன விதமாக எல்லாம் பூச்சிகள் உண்டோ அத்தனை விதமான பூச்சுகள் எல்லாம் அங்கே தான். வண்டு கடி, தேள்கடி, பாம்பு கடி, இப்படி எல்லாம் அங்கே சாதாரணம்.

விடுதி காப்பாளர்களோ அங்கே அவனுக்கு பாடம் எடுக்கும் விரிவுரையாளர்கள் தான். ஆகவே முதலாம் ஆண்டு முழுதும் எங்கே செய்முறையில் முறைத்துவிடுவார்களோ எல்லோரும் அடக்கம் என்றால் அடக்கம் அப்படி ஒரு அடக்கம் அவர்களை பார்த்தால் மட்டும். இல்லை என்றால் இவர்களது கேலிகளுக்கு ஒரு அளவு இருக்காது தான்...

வண்டி வீட்டின் முகப்பிற்கு வந்தது. உணவுக்கு பிறகு என்ன வண்டியை விட்டு செல்லும் போதே மனதில். ஏதாவது படம் ஏதும் பார்க்கலாமா, இல்லை வேறு எங்காவது சென்று வருவோமா. இல்லை சும்மா வண்டியை எடுத்துக்கொண்டு அப்படியே கோஞ்சம் ஓட்டிவிட்டு வரலாமா...உணவு உள்ளே செல்ல செல்ல மனதும் உடலும் மௌனமானது. கையுக்கும் வாய்க்கும் சிறிது நேரம் கடுமையான சண்டை என்று தான் சொல்ல வேண்டும்.

எதிரே தொலைக்காட்ச்சியில் நாட்டு நடப்பு, பிறகு தொடர்கள் என்று வந்த வண்ணம் இருந்தது. இப்படியே மணி 8ஐ தாண்டி இருக்கும், தொலைபேசியும், கைபேசியும் ஒருங்க இசைத்தது......

தொடரும்....

Monday, September 17, 2007

சரியா தவறா

வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பிய மகள் இடிந்து நொறுங்கி மௌனமாக அமர்ந்து இருப்பதை பார்க்க முடியாமல் வெளியே சென்றார். எப்போதும் போகும் போது சொல்லிக்கொள்ளாமல் போவதிலை அவர், அன்று அப்படி செல்லுவதையே, தன்னை எல்லோரும் இப்படி வேடிக்கை பார்க்கிறார்கள் என்றோ என்று எதையும் அவளால் உண்ர முடியாத நிலை அவளுக்கு. எங்கோ நெடுந்தொலைவில் பொதிந்த அவளது நினைவில் மின்னியது எல்லாம் அவன் அவளிடம் கடைசியாக கூறிய வார்த்தைகளும், அதனால் ஏற்பட்ட அவமானமும் ஏமாற்றமும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுகொண்டிருந்தது.

இனி இந்த உலகம் இவளை இழிவாக பேசும் என்றோ, இனிமேல் ஒரு நல்ல வாழ்க்கை எங்கே அமையபோகிறது என்றோ அவள் கலங்கவில்லை. உடன் வந்த நண்பர்கள் கூறும் ஆருதல் வார்த்தைகள் எல்லாமே அவன் மேல் அவர் அவருக்கு தெரிந்த இன்ன எல்லாம் என்றும் போட்டு கொடுக்கும் விதமாக பல விடயங்களை தெரிவித்துக்கொண்டு இருந்தாலும் இவளின் கவனம் அவைகளை காதில் வாங்க்கியதாகக்கூட தெரியவில்லை.

கொஞ்சம் தயங்கி தயங்கி கூறியவர்கள் எல்லாம் இன்னமும் அழுத்தமாகவும் ஆழமாகவும் விடயங்க்களை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தார்கள். கேட்டு கொண்டு இருந்த அவளது குடும்பத்தாரால் இவைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல், சாமாதானம் கூறி அந்த நண்பர் பட்டாளத்தை அனுப்பினர்.

படுக்கையில் படுத்தவள் படுத்தவள் தான், மாலை இரவாகி, இரவு காலையாகி, காலை மதியமாகி, மதியம் மாலையாகி, இப்படி நாள், வாரம், மாதம் கடந்தது. சிட்டாக துள்ளித்திரிந்தவள், இன்றோ அமைதியின் பேருவமாக பவணி வருவதை யாராலுமே பொறுத்துகொள்ளவே முடியவில்லை தான். இருந்தாலும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற போட்டி பெற்றோர் முதல் நண்பர்கள் வரை இருந்தது.

சுமார் 3 மாதத்திற்கு பிறகு சென்னையில் பேசவேண்டும் என்று ஒரு அழைப்பு வந்தது, வந்து இருந்தவர் அவளிடன், நீங்கள் கூட்டத்தில் போசுவீங்களா என்று தலைவர் கேட்டு வர சொன்னார். இவள் அம்மாவின் முகத்தை பார்க்க, அம்மா அப்பாவின் முகத்தை பார்க்க. அப்பா, போம்மா, போய் பேசிட்டு வா இன்னமும் எத்தனை காலம் தான் கலை இழந்து இருப்பே, ஒரு மாற்றமாக இருக்கும் போயிட்டு வா என்றார். அவரின் வாய்தான் அதோடு நின்றது, ஆனால் கண்களோ இன்னமும் பேசிக்கொண்டே இருந்தது. வீடே இவளின் பதிலிக்காக அமைதியானது.

சற்று தயங்க்கியவள், அப்பாவின் கண்களையே பார்த்தவளாக சொன்னால், தலைவரிடம் சொல்லுங்கள் நான் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு அப்பாவையே பார்த்தாள். கவலை தோய்ந்த அவர்முகம் மெல்ல மலர்ந்தது. வந்தவரும் மகிழ்சியுடன் சென்றார். நடப்பதை எல்லாம் பார்த்துகொண்டிருந்த அம்மா என்ன நடக்கிறது என்று ஊகிக்க முடியாதவளாக சென்றாள்.

மேடை பேச்சுக்கு தயாராகும் விதமாக, என்ன கூட்டம், என்ன கரு பொருள். என்ன என்ன கோடிட்டு காட்டவேண்டும், காகிதமும் கையுமாக நாட்க்கள் நகந்துகொண்டிருந்தது. ஒரு மாதிரியாக இறுதி வரைவு தாயாரானது, அப்பவிடம் காட்டி அவரது திருத்தங்களை பெற எண்ணி காட்டினாள். முழுவதும் படித்தவர் அமைதியாக சொன்னார், கண்ணா ஒன்னு சொன்னா கோவிசுக்க மாட்டியே என்றார். சொல்லுங்கப்பா சொன்னாள், இல்லடா தயாரிப்பிலே இவ்வளவு வேகம் குறைவா இருக்கே மேடையில எப்படிடா பேசப்போறே என்றார் கவலையுடன். அதெல்லாம் நான் பாத்துகிறேன்பா என்று காகிதத்தை வாங்கியபடி சென்றாள்.

அந்த நேரத்தில் அங்கே வந்த அவளது நண்பன், திருவாசகம் மற்றும் ஆணிவேர்(இந்தியாவில் தடைசெய்யப்பட்ட திரைப்படம்) குறுந்தகடுகளை கொடுத்துவிட்டு இத்தனை நாள் வலையிலோ அல்லது திருட்டு பதிவோ கிடைக்கும் என்று பார்த்தேன். ஆனால் இதுவரையில் அப்படி ஏதும் வரவே இல்லை, அதனால் கடைசியாக கடையிலே வாங்கி வந்தேன் வைத்துக்கொள், கொடுத்துவிட்டு சென்றான்.

காகிதமும், குறுந்தகடும்மாக சென்றவள், திருவாசகத்தை கேட்டுக்கொண்டே வரைவை மீண்டும் படித்துக்கொண்டு இருந்தாள். ஆனால் மனமோ இத்தனை நாளாய் இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் நீதியும், நேர்மையும், வெல்லும். இதிகாசங்களிலும் கதைகளிலும் சொல்லுவதை போல ஒரு நீதியும் நேர்மையும் கொண்ட ஒரு சமுதாயமாக இந்தியா மலரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. எத்தனை தான் திரைபடங்க்களும் கதைகளும் கட்டுரைகளும் நீதிக்கு புறம்பானவர்கள் வெற்றிகொள்வதாகவும் அதன் தேவையையும் அதற்கான காரணங்களயும் சொல்லி வந்தாலும், சரி மட்டுமே சரி, தவறு என்றைக்குமே சரியாகாது இது இவளின் ஆணித்தனமான எண்ணம். எல்லோருடைய எண்ணமும் இப்படி தான் இருக்கவேண்டும், தேவை இல்லாமல் தவறானவர்கள் குழப்புகிறார்கள் அவளாது ஆழ்ந்த நம்பிக்கை.

தன் எண்ணம் போல கதைகளை எழுதுவது, அதற்கு தகுந்த காரணங்களை முன்வைப்பதும், பசிக்காக இப்படி செய்தால் தவறில்லை என்று துவங்கி பிறகு கொலை, கொள்ளை, திருட்டு, பொய் என்று அகராதியில் உள்ள அத்துனை கெட்டவைகளையும் நல்லத்தனமாக சித்தரித்து காட்டுவதும், அதன் மூலமாக மக்களின் எண்ணகளிலே நஞ்சு கலக்கும் வேலை தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது இவர்களின் சுய பயனுக்காக. செல்வம் படுத்தும் பாடு இவர்களை இப்படி எல்லாம் ஆட்டிவைக்கிறது. வித்தியாசமாக சொன்னால் மக்கள் பணத்தை கொட்டலாம் என்ற எண்ணம்(பணம் அவர்களுக்கு கொட்டுகிறது அது வேற விடயம்).

இவளது போராட்டம் இவைகளுக்கு எதிரானவையாக இருந்தது. அன்றைக்கு அந்த சம்பவம் தனக்கு நடக்கும் வரையில் ஆணித்தனமாக இருந்தவளுக்கு அதன் பிறகு நம்பிக்கையில் தடுமாற்றம். எத்தனை முறை ஆராய்ந்தோம், எத்தனை முறை ஆசை வார்த்தைகள், எத்தனை எண்ண பறிமாற்றங்கள். இத்தனைக்கு பிறகும் இப்படி நடக்கும் என்று அவளோ அவளை சார்ந்தோர்களோ யாரும் நம்பாதவிதமாக அல்லவா நடந்தது. உலகத்தில் யாருமே நல்லவர் இல்லையோ, நீதி, நேர்மை எல்லாம் பொய்யோ?!. "கிடைகின்ற வாய்ப்பை பயன் படுத்தாமல் நீதி, நேர்மை பேசிகொண்டு இருந்தால் காலத்திற்கு ஆண்டியாக அலையவேண்டியதுதான்" சமீப காலமாக அதிகம் தோன்றும் வசனம்.

மெல்ல இசைந்துவரும் திருவாசகம் வலிந்து ஆழமாக மாறிய கணம், சிந்தனை கலைந்தவளாய் கவனித்தாள். ஒரு வேளை இவர்கள் கூறுவது போல் நீதி இல்லா உலகமா இருந்தால் எத்தணை பிரதிகள் திருட்டு வட்டு வந்திருக்கும் இந்த திருவாசகமும் ஆணிவேரும். ஆனால் இத்தனை நாளாகியும் கிடைக்கவில்லையே. யார் கட்டி போட்டது இவர்களை அல்லது இந்த வட்டுகள் யாரிடமும் இல்லை என்று அர்த்தமா...........

உலகம் என்றும் அதே பழைய உலகம் தான், எதையும் எப்பவும் தொலைத்த உலகம் இல்லை. இந்த உலகத்தை போய் போர்குணம் கொண்டதாகவும். பழி குணம் கொண்டதாகவும், நீதி அற்ற உலகமாகவும் எழுதவும் சித்தரிக்கவும் இவர்களுக்கு எப்படிதான் மனம் வருகிறதோ. இன்னமும் எத்தனை முறைதான் சொன்னாலும் சரி சரி தான் தவறு என்றைக்குமே சரியாகாது. நம்பிக்கையாக தூங்கி இருந்தாள் நாளை மீண்டும் போராட, தொடரட்டும் அவளது அறிவொளி போராட்டம், வெல்லட்டும்.

Saturday, September 8, 2007

கீதை-1

திங்கள் காலை அலுவலகம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். அன்றைக்கும் அப்படியே இருந்தது, மதிய இடைவேளை வரை சென்ற வார வேலை கணக்கும், வாரகடைசியில் நிகழ்ந்த பிரச்சனைகள் என்று கணக்கு கொடும் முகமாக கழிந்தது. மதியம் 12 மணிக்கு பசி எடுக்க, உணவு தேடும் படலமாக வெளியே வந்தான். எங்கே போவது என்ன உண்பது இது அன்றாட அவலம் அவனுக்கு. அனேகமான இடங்கள் எல்லாம் பார்த்தாகிவிட்டது அலுத்தும் போய்விட்டது. இருக்கும் பசிக்கு நல்ல எதாவது சாப்பிடனும் மனது சொல்கிறது ஆனால் எங்கே சாப்பிடுவது வந்த பசி மறக்கும் அளவிற்கு அலுப்பு.

இப்படி அலுப்புடன் கிளம்பியவன் கடைசியாக அங்கேயே வந்து சேர்ந்தான், ஒன்றுக்கு பலமுறை அந்த அட்டையும், பலகையும் முறைத்து பார்த்தாகிவிட்டது, மீண்டும் குழப்பம். சே வீட்க்கு போயிருந்தாலாவது மிச்சம் இருந்த ரசத்திலே கொஞ்சம் சாதமாவது சாப்பிட்டு இருக்கலாம், என்ன கொடுமை இது..நேரம் போக..அங்கே இருந்தவன் என்ன வேண்டும் முகத்தில் ஆயிரம் கேள்வி அவனுக்கு, இருந்தாலும் ஒரு வியாபார புன்னகை. ஆரம்பத்தில் இந்த புன்னகையும் அவனுக்கு ஆச்சரியத்தை கொடுத்து இருந்தாலும் காலம் செல்ல செல்ல அவை வெறும் வியாபார புன்னகை மட்டுமே என்று புரிந்து இருந்ததனால் கவனம் செலுத்தாமல், யோசனையாகவே இருந்தான்.

அருகில் அதிகம் பரீட்சயம் இல்லாத ஒரு முகம், மன்னிக்கவும் தாண்டி சென்று ஏதோ ஒன்றை கேட்க்க. இவனும் அதையே இன்றைக்கு சாப்பிடுவது என்று முடிவு செய்தான். மேசையில் உணவுக்காக காத்துக்கொண்டிருக்கையில் மீண்டும் மனது ஏதேதோ எண்ணத்தில் மிதந்துகொண்டிருந்தது. அந்த அலங்காரமான தட்டுடன் உணவு பறிமாரினாள், மீண்டும் அதே வியாபார புன்னகை, நன்றாக சாப்பிடு சொல்லிவிட்டு மறைதாள்.

அலங்கார தட்டில் வகை வகையாக உணவு வகைகள், அந்த வகைகளும், வாசனையும் அவனுக்கு மேலும் பசியைகூட்டியது. மெல்ல ஒன்று ஒன்றாக சுவைகத்துவங்கினான். மெல்ல எல்லா வகைகளையும் சுவைத்தபின் இதை தானா அப்படி கேட்டு வாங்கினாளா என்று திடிய வண்ணம் அங்கும் இங்கும் திரும்பினான், சரியாக அந்த அரிமுகம் இல்லாத முகமும் ஒரு அசட்டு சிரிப்பது தெரிந்தது. அதோடு இல்லாமல் உதட்டை வளைத்து கோனி இது நல்லா இல்லை சைகையே அது, திட்டவட்டமாக காட்டினாள். தானும் பாதிக்கப்பட்டோம் மறந்துவிட்டான். இவனும் பதிலுக்கு அதே அதிருப்தி சைகைகள்.

ஒரு வகையாக உணவு வேதனை முடிந்து அலுவலகம் நோக்கி விரைந்தான். கடையில் ஏற்பட்ட பாதிப்பு மீண்டும் அந்த அலுப்பு எண்ணத்தில் மூழ்க்கியது. சனியும், ஞாயிறும், பல இடங்களுக்கு பேசியதின் விளைவுவேர இன்னமும் தாக்கியது. எதற்கு இவ்வளவு வேதனை, இவ்வளவு அலுப்பு மனது நொடிக்கு ஒரு முறை சன்னியாசம் தேடியது.

சிறுவனாக இருக்கும் போது 10வது படிக்கும் வரை கவனமாக இரு, பிறகு ஒன்னும் பிசகு இருக்காது போதும் என்றார்கள். 10வதுக்கு பிறகு இன்னமு 2 வருடம் தான் +2வில் நல்ல மதிபெண் பெற்றுவிட்டால் மட்டுமே போதும் பிறகு ஒன்றும் வேண்டாம். வாழ்க்கை நன்றாக அமைந்துவிடும், மீண்டும் அதே வாசகங்கள். இப்படியே படிப்பு படிப்பு 2 வருடங்கள் ஓடியது. முடிந்ததும் அப்பாடா என்று இருந்தது 3 மாதங்களுக்கு பிறகுதான் முடிவுகள் வெளியிடுவார்கள் நிம்மதி. நடந்ததோ இது தான், திங்கட்கிழமையில் இருந்து நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்பு துவங்கிறது ஞாயிறு ஊருக்கு போகவேண்டும் இருக்கிற 2 மூன்று நாட்களில் நன்றாக ஓய்வெடுத்துகொண்டு பயண ஏற்பாடுகளை கவனி கட்டளை பிறந்து கொண்டிருந்தது...................

பிறகு 4 ஆண்டுகள் பொறியில் படிப்பு, அடுத்த வனவாசம். இல்லை பொட்டல் காடு வாசம் தான் சரியான பதமாக இருக்கும். கல்லூரிக்கு அவன் புறப்படும் முன்பு அனைவரின் வாழ்த்துகளை பெற்றுகொண்டான், அனைவரும் சொல்லிவைதாற் போல் இனிமேல் என்னடா கவலை. அதான் இடம் கிடைத்துவிட்டதே இனி ஒன்றும் இல்லை, காலம் போவதே தெரியாது சட்டு என்று முடிந்துவிடும்.....அப்புறம் என்ன வேலை, திருமணம்....வெட்க்கம் கொண்டான்....

இனிய கனவுகளோடு கல்லூரி திருவிழா, முதல் நாள் அனைத்து மாணவர்களும் சுற்றம் சூழ வந்திருந்தார்கள். அவனது கல்லூரி, விடுதி, நூலகம், என்று காலை முதல் கல்லூரி விரிவுரையாளர்களது கல்லூரி சுற்றுலா. மதியம் உணவுவகத்தில் உணவு, பெற்றோர்களோ நிம்மதி பெருமூச்சு. உணவு நன்றாக இருக்கிறது, உனக்கு ஒன்றும் கவலை இல்லை அனேகமாக அனைத்து பெற்றோர்களும் ஒரே மாதிரியாக சான்றிதழ்கள் வழங்கிக்கொண்டு இருந்தார்கள்.

கண்ணீரும் கம்பலையுமாக முடிந்த பிரிவுக்கு பிறகு முதல் நாள் கல்லூரியில் விரிவுரையாளர் அன்பு மாணவர்களே என்று துவங்கியவரின் அடுத்து அடுத்து வந்த வசனங்கள் அனேக மாணவர்களின் வயிற்றில் புளியை கறைத்துக்கொண்டு இருந்தது. இனிய நினைவுகளோடு வந்த அனைவருக்கும் அனேகமாக இவைகள் இடிகளாகவே இருந்தது. என்ன நண்பா ஆரம்பமே இப்படி பயமுருத்துகிறார்கள் பக்கத்தில் இருந்து ஒரு குரல், முறுவலித்தான் வலிந்து. அவ்வளவுதான் அவனால் முடிந்தது அப்போது.

ஒரு நாளைக்கு 8 வகுப்புகள் காலை 9 மணிக்கு வகுப்புகள் ஆரம்பம், காலை ஒரு அரை மணி நேரம் ஓய்வு, மதியம் 1 மணி நேரம் உணவுக்கு, பிறகு மாலையில் ஒரு அரை மணி நேர ஓய்வு, மாலை 5 வரை வகுப்புகள். வாரம் 6 நாட்கள் வகுப்புகள், சனி மட்டும் அரை நாள் 12:30 வரையில். வாரம் 2 சோதனை, ஒரு பட்டறை. அரையாண்டுகளுக்கு இடையே விடுமுறை இல்லை, ஆனால் பரீட்டைக்கு மட்டும் 1 மாதம் விடுப்பு இருக்கும் அது படிக்க விடுப்பு இப்படி 8 வகுப்பும் வந்து போனவர்கள் விரிவுரைக்கு பதில் அறிவுரைகளையும், பயமுறுத்தல்களையும் அள்ளிவீசினார்கள். அவர்கள் அனைவரின் பேச்சிலும் ஒரே ஒரு நம்பிக்கை தரும் செய்தி, இவ்வளவு தூரம் வந்துவிட்டீர்கள், இந்த இடத்தை பிடிக்க எவ்வளவு உழைத்திருப்பீர்கள் என்று நன்றாகவே தெரியும். ஆகவே சுனங்காமல் இன்னமும் ஒரு 4 ஆண்டு காலங்கள் அதே உழைப்பை போடுங்கள், போகும் போது பட்டத்துடன் வேலையும் கிடைக்கும் என்ற வசனங்களே.

1, 2, 3, 4 என்று ஆண்டுகள் போனதே தெரியவில்லை, பிறகு சென்னையில், வெங்களூரில், இப்போ இங்கு......நினைவில் தொலைந்தவனுக்கு கவனம் திரும்பியது. என்ன கொடுத்த வேலை முடிந்ததா, மின்னஞ்சல் சலம்பியது, முடித்தாகிவிட்டது, கொடுத்துமாகிவிட்டது, பதிலுக்கு இவன் அலம்பல் மின்னஞ்சலில்.

தொடரும்

பார்ன் அல்டிமெடம்

இந்த வரிசையில் வரும் 3வது படம் இது. இந்த பட வரிசையை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு வெற்றி விழா படம் ஞாபகம் இருக்கும் என்று நினைகின்றேன் கமலகாசன், பிரபு, அமலா, குட்பு, சசிகலா நடிக்க, பிரதாப்போத்தன் இயக்கத்தில் வெளிவந்த படம். அனேகமாக அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கின்றேன்.


இந்த பாகம் துவங்கிய முதல் இறுதி வரை, முதல் பாகத்தில் உள்ளது போல் மிகவும் பர பரப்பாக செல்கிறது. ருஷ்ய பகுதியைவிட்டு வெளியேரியவன், அவனை கொல்ல கிளம்பியவனை கொன்றுவிட்டு கிளம்பிய காட்சிகளை பார்த்துவிட்டு, பார்ன்னை இனியும் விட்டு வைப்பது உளவு நிறுவனத்துக்கு ஆபத்தாய் முடியும் என்ற முடிவு எட்டப்படுகிறது.




அதே வேளையில் தன்னை கொல்ல நினைப்பவர்கள் யார் என்றும், தான் யார் என்றும் தேடித்திரியும் சேசன் பார்ன் செய்திதாளில் வெளிவரும் அவனை பற்றிய ஒரு மர்ம முடிச்சு செய்தியை பார்த்ததில் துவங்குகிறது அடிதடியாட்டம்.


சும்மா சொல்லக்கூடாது, என்ன காட்சி அமைப்பு, திரைக்கதை, மற்றும் இசை. பின்னனி இசையும் காட்சியமைப்பும் பின்னி எடுக்கிறது. ஒரு உளவாளிக்கும், உளவு நிருபருக்கும் சம்பவங்களை கணிப்பதிலும், நிலைமைக்கு ஏற்ப செயற்பாடுகளை மாற்றிகொள்ளுவதில் 100% வித்தியாசம் உண்டு என்று என்ன அழகாய் காண்பித்து இருக்கிறார்கள்.


உளவு நிறுவனத்தின் உரையாடலில் உள்ள சங்கேத மொழிகளும், அதன் விளக்கங்களும் அருமை. குறிப்பாக, உளவு நிருபருக்கு கோப்புகளை விற்பதாக சொன்னவனின் அலுவலக சூறையாடலி நடைபெறும் சங்கேத மொழிகளும். சேசனையும், மிக்கியையும் ஒரு சேர தீர்த்துக்கட்ட கட்டளை பிறப்பிப்பதையும் இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம். கடைசியில் அந்த செயல் தலைவனிடம் அவனது அலுவலகத்தில் இருந்தே பேசுவதும், இவன் அதுக்கு அலுவலகதுக்கு வாயேன் நிதானமாய் பேசுவோன் என்று மழுப்புவதும், அதற்கு சேசன் சொல்லும் அசத்தல் பதில்கள் என்று, கதை, திரைக்கதை, வசனம், சண்டை, இசை என்று எல்லோரையும் மொத்தமாக புகழ்ந்தே ஆகவேண்டும்.

கதையும் கதையின் ஓட்டத்தையும் வரிக்கு வரி எழுதவேண்டும் என்று தான் துவங்கினேன். ஆனால், எல்லாம் தெரிந்த பின் படம் பார்ப்பதால் அலுக்கும். ஆகவே யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

குறிப்பாக, ஆங்க்கில படம் என்றால் அதுவும் உளவாளி படம் என்றால் குறைந்தது 5 படுக்கையறை காட்சியாவது இருக்கும், ரட் அவர் 2, கசினோ ரயலே எல்லாம் அந்த ரகம் தான். அப்படி ஏது எதிர்பார்த்து படத்திர்க்கு போவோருக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

கனவு

இரவு முழுவதும் தூக்கம் பிடிக்கவில்லை, கண்ணை மூடினால் கனவும் தூங்க விடவில்லை. எப்பொழுதுவிடியும் என்று இருந்தது அவனுக்கு. விடிந்ததும் என்ன என்ன செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்ற கணக்கிலே மீதி நேரத்தையும் கடத்தினான். மணி 4கை தாண்டி இருக்கும், இவனுக்கு அதற்குமேல் பொருத்துக்கொள்ள முடியவில்லை, மற்றவர்கள் எழுவில்லை அவனும் காத்துக்கொண்டிருகவில்லை. நேரே குழாயடியில் தண்ணீர் முகர்ந்து குளியல் முடித்து, வீடு திரும்புகையில் அம்மா, அப்பா அவனை கட்டுப்படுத்தியும் அவன் கேட்க்கவே இல்லை.

அறைக்கு சென்று நேரே தயாராக வைத்திருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அவசரத்தில் வெளியில் வந்துவிட்டான், வீதியில் விளக்குகளும் இல்லை வெளிச்சமும் இல்லை. திகைத்து நின்றவன் பிறகு வீட்டிற்கு உள்ளே வந்தான். வந்தவனை பார்த்ததும் அனைவரும் சிரித்தனர். அவனுக்கு மிகவும் அவமானமாக போனது. வெளிச்சத்திற்கு விளக்கும், தீப்பொட்டியுமாக பெட்டியுடன் வந்தான்.

அதே வேளையில் இவனது நண்பனும் இவனைபோல் அவனுடைய பெட்டியுடன் இருவரும் பேசிவைத்த இடத்தில் வந்து தயாராக காத்துகொண்டு இருந்தான். இவன் அங்கே சென்று சேர்ந்ததும், இருவருமாக நடக்க தொடங்க்கினர். விளக்கு வெளிச்சத்தில் தடம் பார்த்து நடப்பது மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. இருந்தாலும் மனதுக்குள் வீராப்பு என்று வந்துவிடுமானால், அதர்க்காக என்ன விலையும் கொடுப்பார்கள் இவர்கள் என்ன விதிவிலக்கா.

இவன் ஒரு வீராப்பில் வந்துவிட்டானே ஒழிய, வீட்டில் நேற்று இரவு அம்மாவும், அப்பாவும் பேசிக்கொண்டதை மனதுக்குள் அசைபோற்றவாரே நடந்தான். நீண்ட மௌனம் இவனது நண்பன் பேச்சில் கலைந்தது. என்னதான் இருந்தாலும் இதற்காக இந்த நேரத்தில் இத்தனை தூரம் போகதான் வேண்டுமா என்ன. வீட்டு நினைப்பில் இருந்தவனுக்கு அரையும் குறையும்மாய் காதில் விழுந்தது. என்ன என்ன என்றான், இல்லை வீட்டில் ஒன்றும் சொல்லவில்லையா என்றான்.

சொல்லாமல் எங்க, பெரிய கலாட்டாவே வடந்ததுதான். இருந்தாலும் இதை எல்லாம் பார்த்தால் நம்ம பொழப்பை யார் பார்ப்பது. வெளியே வந்தாகிவிட்டது இனி வந்தவேலையை கவனிப்போம் என்றபடியே நடந்தான். கையில் கொண்டு வந்த விளக்கின் வெளிச்சமும் குறைந்துகொண்டே வந்தது. மெல்ல விடியவும் காலை கதிரவனின் கதிர் மெல்ல பூமியை போர்த்த தொடங்கியது.

நடந்த களைப்பு தாளாமல் அங்கேயே வேம்பு மரத்தடியில் இருவரும் அமர்ந்தார்கள். தூக்கி வந்த பெட்டியின் பாரமோ அவர்களை இன்னமும் களைப்புர செய்திருந்தது. மேற்கொண்டு இனிமேல் என்னால் இனிமேல் நடக்கமுடியாது, கட்டாயம் அவ்வளவு தூரம் போகத்தான் வேண்டுமா என்றான்.

அதற்கு அவனது நண்பனோ, இப்படி ஒரு முடிவுக்கு வர காரணம் என்ன. எதை நினைத்து இந்த செயலை துவங்கினோம், இப்படி பாதியிலே விடுவதாக இருந்தால் இப்படி ஒரு செயலுக்காக இவ்வளவு நாள் ஏன் பாடு பட்டிருக்கவேண்டும் என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக, இவனுக்கு என்ன பதில் சொல்ல என்று மனம் திண்டாட, சரி கொஞ்சநேரம் கழித்து போகலாம் என்று அமைதியானான்.

சிறிது நேரத்திற்கு பிறகு அந்த மலையடிவாரத்திற்கு வந்து சேர்ந்தார்கள் இருவரும். தூரத்தெரியும் அவர்களது ஊரை ஒருமுறை பார்த்துவிட்டு, கொண்டு வந்த பாட்டிலை எடுத்தார்கள், மற்ற இத்தியாதிகளை எல்லாம் எடுத்து தயார் படுத்திகொண்டு இருக்கும் போது அவனது நண்பன் கேட்டான் ஒன்றும் ஆகிவிடாதே ஒரு ஆச்சரியமும் பயமும் கலந்த முகத்துடன். இவனோ அதெல்லாம் ஒன்னும் ஆகாது சும்மா இரு, அந்த தீ பெட்டியை கொடு என்றான்.

மெல்ல ஊரை ஒரு முறை பார்த்துவிட்டு திறந்து வைத்திருந்த பாட்டிலருகே வந்தான், அவனது நண்பன், ஆனது ஆகட்டும் முதலில் தீபெட்டியை என்னிடம் கொடு என்று வாங்கியவன் கட கடவென பற்றவைத்தான். முதலில் மெல்ல புகைய தொடங்கி பின்னர் மெல்ல அதிலே தீ பரவியது. அதிலிருந்து கிளம்பிய நீண்ட புகையினை பார்த்து இரசித்தவாரே இவன் வாயை பிளந்தவாரே நின்றான். என்ன பாத்துகிட்டு இருக்க, இந்தா நீயும் ஒன்னு பத்தவை நீட்டினான் தீ பெட்டியை.

ஊரிலே இவனது பெற்றோர்கள் இவனது வேட்டு சத்தம் கேட்டு சிரிக்க தொடங்கினார்கள். குடிசைகள் அருகே ராக்கட் வெடியெல்லம் கொலுத்த கூடாது என்று சொன்னாலும் சொன்னோம், காலையில இவ்வளவு தொலவு போய் வெடிக்குரானுக பாரு என்று. ராக்கட் வெடி இவனது இந்த வருட கனவு அது. அதும் அப்துல் கலாம் அவது பள்ளியில் வந்து பேசி சென்ற போது, இவனுக்கு அவரது பேச்சு ஒன்றும் புரியவில்லை என்றாலும், இந்தியாவின் ராக்கட் திட்டத்தின் முன்னோடி என்ற வார்த்தைகளில் அவனை கவர்ந்தது ராக்கட். அது முதல் எப்படியாவது ஒரு ராக்கட்டை செலுத்தி பார்க்கவேண்டும் என்று ஆலாய் பறந்தான். ஆனால் 5ஆம் வகுப்பு படிக்கும் இவனுக்கு என்ன சொல்லி என்ன செய்ய என்று விட்டு விட்டார்கள்.

அன்றைகு தோன்றிய கனவு இன்றைக்கு நினைவில். மகிழ்ச்சி தாளவில்லை இவனுக்கும் அவனது நண்பனுக்கும் ஏரக்குறைய ஒரு டசன் ராக்கெட்டுகளை கொளுத்திவிட்டு வீடு திரும்பினார்கள் இருவரும் தீபாவளிக்கு. அடர்த்தியாக இருந்த குடிசைபகுதியில் சென்று மறைந்தார்கள்.