Friday, May 25, 2018

இந்திய சுதந்திர போராட்டத்தை ஞாபகபடுத்தும் போராட்டங்கள்

இந்திய சுதந்திர போராட்டங்களை வரலாறு பாடத்திலும், படங்களிலும் கதைகளிலும் மட்டும் தான் அறிய இருந்தோம் இது வரை.

மக்களின் நலனுக்கு எதிராக அல்லது மக்களை கணக்கிலே எடுத்துக்கொள்ளாத நடவடிக்கைகளை எதிர்க்கவோ அல்லது போராடவோ உரிமையில்லாத நிலையை தான் அடிமை நிலைமை என்று அறிஞர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்கள் இது வரை.

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு என்ன செய்தாலும் கேள்வி கேட்கவோ அல்லது எதிர்த்து பேசவோ என்ந்த உரிமையும் இல்லை என்று சொல்ல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்ன உரிமை இருக்க முடியும்.

யார் யாருக்கு என்ன என்ன உரிமைகள் இருக்கிறது என்று விளிக்கும் விதமாக அல்லவா இருக்கிறது அரசின் நடவடிக்கைகள்.

என் வீட்டு பெணகளையும் உன் வீட்டு பெண்களையும் நீதிபதிகளின் வீட்டு பெண்களையும் பொதுவாக அசிங்கப்படுத்திவிட்டு என்னை முன் பிணையில் விடுவிக்க வேண்டும் என்று சேகர் உச்ச நீதிமன்றம் வரை செல்ல முடிக்கின்றது. ஆனால் உயிருக்கு ஆபத்து, இது வரை நடந்தது என்ன இனிமேல் அதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று கோறும் மக்களின் பிரதினிதிகளை குறி பார்த்து கொல்லும் அரசின் செயலை கேள்வி கூட கேட்க முடியவில்லையே.....

இந்திய சுதந்திரத்திற்கு முன்பு இம் என்றால் சிறை ஏன் என்றால் வனவாசம் என்று தான் இருந்தாக படித்து இருக்கிறோம் ஆனோல் இன்றைக்கு நேரில் பார்க்கும் கொடுமை.... அதற்கு மேல் உயிரையே எடுக்கும் நிலை....

காலவர்களே பொது சொத்துகளை கொளுத்துவதும் அதை போராட்டகாரர்கள் தான் கொளுதினார்கள் என்று  நீதிமன்றதில் சொல்வதும் அதை உண்மை என்று நீதிமன்றம் அங்கிகரிப்பதும் யாரை கேலி செய்யும் செயல்கள் என்று தான் புரியவில்லை.....

என்ன தான் அழுது புலம்பினாலும் மாண்டார் வரப்போவதில்லை, அந்த 13 உயிர்களின் பலிக்கு என்ன பதிலை வைத்துள்ளோம்..... அவர்களை பிர்ந்து தவிக்கும் குடும்பங்களை சுமக்க போவது யார்......

மலர்ந்தும் மலாராத மலர்களாக பிரிந்தவர்களும், மரமாகி நிழாக நின்றவர்களும் இன்று நம்மோடு இல்லை.......அவர்களை தங்களின் எதிர் காலமாக நினைத்து வாழ்ந்த மக்களுக்கு என்ன சொல்ல போகின்றோம் நாம்..........

இப்படி விடையே தெரியாத கேள்விகளாத்தான் இருந்தது இந்திய சுதந்திர போராட்டம்..........

அதன் நவீன வடிவமாக் ஈழ மக்கள் அழிக்கப்பட்டதை மிக அருகாமையில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் நாம்.......

தனக்கு சட்டம் வழங்கி இருக்கும் உரிமையில் போராட சென்ற ஆண்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள் முதலில்......

என்ன ஆனாலும் போராடுவோம் என்று சென்றவர்களின் குடும்பமும் உடமைகளும் தீக்கிரையாக ஆக்கப்பட்டது பிறகு. போராடம் சென்று விட்டு வீடு திரும்பினால் வீடோ சொந்தமோ இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள் ஈழத்தவர்கள்.....

அரசு நினைத்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யும் என்று சூளுரைத்தார்கள் ஆட்சியாளர்கள்....கிட்டத்தட்ட அவர் பல்கலையின் வேந்தர் அவருக்கு தான் உரிமை இருக்கிறது அவர் யாரை வேண்டும் என்றாலும் பதவில் அமர்த்துவார் நீங்கள் வேடிக்கை மட்டும் பருங்கள் என்று தமிழிசை சௌந்தராசன் சொல்வது போல் சொன்னார்கள்.

பிறகு தமிழர்கள் என்று தெருவில் கானும் அனைவரும் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள்..........

அரசை நம்புவதா இல்லை உரிமைக்காக போராடும் போராளிகளை நம்புவதா என்று குழம்பிய குழப்பத்தில் தப்பித்து பிழைத்த மிச்ச சொச்ச மக்கள் இந்த 11 ஆண்டுகளாக வதை முகாம்களுக்குள் முள்வேளிகளுக்குள் காட்சி பொருளாகவும் அகில உலக கண்காணிப்பாளர்களுக்கு சாட்சியாகவும் வாழவும் முடியாமலும் சாகவும் முடியாமலும் தவிக்கும் அந்த ஈழ மக்களின் நிலையும் வரலாறையும் நினைவில் கொண்டு வந்து நிறுத்துகின்றது..........

ஒற்றுமையாக இருந்த 4 மாடுகளை பசு, மாடு, சானி, பசு மூத்திரம் என்று பிரித்து தனித்தனியாக ஆக்கிய பின்பு அவர்களின் மீது பாய்ந்த புலியின் கதையாக அல்லவா ஆகி இருக்கிறது தூத்துக்குடி நிகழ்வுகள்........

இப்படியே இணையத்தில் எழுதிக்கொண்டும் பரிகாசம் செய்துக்கொண்டும் பொழுதை கழிப்போம்.... நமக்கான உனக்கான ஒரு தலைவன் வருவான் என்று கனவு காண்போம்..................

0 comments: