Wednesday, February 28, 2018

மோடி தமிழகம் வந்ததின் இரகசிய திட்டம் வெளிச்சத்திற்கு வருகின்றது

சமீபத்தில் எந்த அவசியமும் தேவையும் இல்லாமல் மோடி தமிழகத்துக்கு வந்து "பாரம்பரியமிக்கோவர்கலே, உங்க அப்பா ஊர் மேல போய் இருக்கான்னு" பேசி மக்களை மகிழ்வித்தார்.

தேர்தல் நடக்க இருப்பதோ கர்னாடகாவில், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக தீர்ப்பு வந்த பிறகும் மிகவும் தைரியமாக கர்னாடகாவிற்கு செல்லாமல் தமிழகம் வந்தார் மோடி.

என்னடா எங்கேயோ கணக்கு பிசக்குதே என்று பார்த்தால் இன்றைக்கு செய்திகளில் வருகிறது கார்த்திக்கு சிதம்பரம் கைது என்று வருகின்றது.

இப்ப உங்களுக்கு தெரியுதா இந்த கட்டிய ஏன் நான் வாங்கினேன் என்று.......

கார்த்திக்கு சிதம்பரத்தின் கணக்காய்வாளரை கைத்து செய்ததுமே தெரிந்தது அது இங்கே வந்து தான் நிற்கும் என்று.

இனி இது தான் நடக்கும்....

கார்த்திகு சிதம்பரத்தின் கைதினால் சிதம்பரம் இனி 31,600 கோடி வங்கி ஊழல் பற்றியோ அல்லது இனி வெளிவர இருக்கும் 17,000,000 ஆயிரம் கோடி ஊழல்களை பற்றியோ வாய் திறக்க மாட்டார்.

கார்த்திக்கு சிதம்பரத்தின் கைத்தில் திமுகவிற்கு என்ன பங்கு இருக்கிறது என்று செய்திகள் கசிய துவங்கும். கிடப்பில் போடப்பட்ட 1.76 ஆயிரம் கோடி ஊழல் மெல்ல ஊது குழலுக்குள் வரும். பிறகு என்ன பழைய குருடி கதவை திறடி என்று நாட்டையே உலுக்கிய 1.76 ஆயிரம் கோடி ஊழலை புரிந்த காங்கிரசும் திமுகவும் வேண்டுமா இல்லை ஊழலை ஒழித்து நல்ல ஆட்சியை கொடுத்துக்கொண்டு இருக்கும் பாசக@அதிமுக வேண்டுமா என்று பரப்புரைகள் வலையிலும் செய்தி ஊடகங்களிலும் வியாபித்து நிற்கும்.

கார்த்திக்கு சிதம்பரம் கைதாகி இருக்கும் வழக்கின் மொத்த தொகையே ரூ309 கோடி தான் அதில் ஊழல் எவ்வளவு நடந்து இருக்கும் அதில் கார்த்திக்கு சிதம்பரத்திற்கு எவ்வளவு வந்து இருக்கும் என்ற கேள்விகளை எல்லாம் கேட்டீர்களானால், அதோ பார் பசு, இதோ பார் கோமியம், அங்க பார் பசு சாணம், இங்க பார் இந்துக்கள், பின்னால பார் ஆண்டாள் என்று அள்ளி அள்ளி விடுவார்கள் செய்தி ஊடகங்களிலும் இணையத்திலும்.

குருமூர்த்தி இந்த ஊழலால் நாட்டின் பொருளாதாரம் 100 ஆண்டுகளுக்கு பின் தள்ளிவிட்டதாகவும். இது இந்தியாவை அழிக்கும் தீவிரவாத செயல் என்றும் அதற்காக காங்கிரசு கட்சியை நீதிமன்றம் தடை செய்து காங்கிரசு முன்னால் அமைச்சர்கள் நிர்வாகிகளை குண்டர் சட்டதில் கைது செய்து 100 ஆண்டுகளுக்கு சிறையில் தள்ள வேண்டும் என்று துக்ளக்கு ஊடகத்தின் 2ஆம் மாத நிறைவு விழாவை கூட்டி அந்த மேடையில் முழங்குவார்.

எச்ச சர்மாவோ நான் அன்னைக்கே சொன்னேன் பாருங்க சிதம்பரம் ஒரு தீவிரவாதின்னு இன்றைக்கு நீதிமன்றமும் சிபிஐயும் முறையா இதை விசாரணை செய்து தெளிவாக நாட்டு மக்களுக்கு தெரிவித்துவிட்டார்கள். இனி காங்கிரசையும் திமுகவையும் வெளியிலே வரவே முடியாதபடி சிறையில அடைக்கனும்கிறேன் என்று முக்குக்கு முக்கு கூட்டம் கூட்டி முழங்குவார்.

தமிழிசையோ மஞ்சள் புடவையில் பிரமலதாவின் பாணியில் கையை கீழ் இருந்து மேலாக ஆட்டி ஆட்டி காங்கிரசு சிறைக்கு போகிறதோ இல்லையோ திமுக சிறைக்கு போகிறதோ இல்லையோ தாமரை மலர்ந்தே தீரும் என்று அடவு கட்டி ஆடுவார்.

அதிமுக கட்சி கலைக்கப்பட்டு மோடியின் தலைமையில் பாசகவுடன் இணையும். பிறகு அடுத்த 4 ஆண்டுகளுக்கு பாசக ஆட்சி நடக்கும்.

அந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தை உத்திரபிரதேசத்தில் மக்களை அடித்துகொல்வதை போல் இங்கேயும் அடித்து கொல்லப்பட்டு ஒர் அச்சத்தை விளைவிப்பார்கள். கோத்ராவில் தூங்கும் பயணிகளை எரித்தது போல் தமிழகத்தில் இரவில் ஊர் அடங்கிய பிறகு ஊர் ஊராக திடீர் திடீர் என்று கூட்டம் கூட்டமாக 'இந்துகள்' அல்லாதவர்களை எரித்து கொல்லப்படுவார்கள். காரணம் கேட்டால் கலவரம் என்றும் 6 நாட்களுக்கு எங்களால் கட்டுபடுத்த முடியவில்லை என்று சொல்வார்கள்.

தமிழகத்தில் இருக்கும் பள்ளி முதல் கல்லூரி வரை கோட்சே தான் தேச தந்தை என்றும், காந்தி நேரு இன்ன பிற தேச தலைவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் என்றும் கற்பிக்கபடும்.

உபியில் உள்ளது போல் யார் யார் என்ன என்ன உடுத்த வேண்டும் முதல் என்ன என்ன சாப்பிட வேண்டும் என்றது வரையிலும். யார் யார் எல்லாம் என்ன என்ன எல்லாம் வாங்கலாம் தொடங்கி என்ன என்ன வேலைகளுக்கு செல்லாம் என்று வகுத்து தொகுத்து நிறுவுவார்கள்.

'இந்துக்கள்' அல்லாத கட்சியும் அதன் தலைவர்களையும் உபி பாணியில் என்கௌண்டர் முறையில் தீவிரவாதிகள் தேச துரோகிகள் என்று சொல்லி கொல்லப்படுவார்கள்.

5ஆம் ஆண்டின் முடிவில் கிழிந்த உடையணிந்து கிராமபுர மக்களும், அழுக்கு உடையில் நகர்புர மக்களும், வேட்டி தலைப்பாகையுடன் பெருநகரங்களிலும் மக்கள் நடமாடுவதை காண முடியும்.

அவர்களின் நடுவே வெள்ளையும் சொல்லையுமாக பலபலக்கும் வண்டிகளில் பாசக மக்கள் பவனி வருவார்கள் அவர்களை 'இந்துக்கள்' அல்லாத தமிழர்கள் எல்லாம் கும்புடுரேன் சாமி என்று தான் விளிக்கவேண்டும் என்று அப்படி சொல்லவில்லை என்றால் கொல்லப்படுவீர்கள் என்று கொன்றும் காட்டுவார்கள்.

மறந்தும் யாராவது கேள்வி கேட்டால் அதோ பார் பசு, இதோ பார் கோமியம், அங்க பார் பசு சாணம், இங்க பார் இந்துக்கள், பின்னால பார் ஆண்டாள் என்று அள்ளி அள்ளி விடுவார்கள......

தமிழகம் இனிமேல் தக்சின் பிரதேசு என்று பெயர் மாற்றம் பெற்று காஞ்சிபுரம் தலைநகரமாகும்.

எல்லா இடங்களிலும் விழாக்களிலும் மாக கணப்பதே முதல் சனனி சனனி வகையரா பாடல்களை பாடித்தான் நிகழ்ச்சிகளும் வேலைகளும் தொடங்குவார்கள்.

'இந்துகளின்' அடையாளங்கள் தவிர வேறு ஏதாவது மத அடையாளங்களையோ மத குருமார்களையோ கண்டால் அசாமில் கொளுத்தியது போல் ஊர் நடுவில் உயிருடன் தீயில் இட்டு கொளுத்தி சாக்கிரதை என்று சொல்லி செல்வார்கள்.

தமிழகத்தில் 'இந்துக்கள்' அல்லாதவர்கள் குடியிருக்கும் இடங்கள் ஆதார் அட்டை இல்லை, அப்படியே இருந்தாலும் அதில் கைரேகை சரியாக இல்லை என்று சொல்லி வடக்கத்தியர்களை கொண்டு வந்து குடியமர்த்துவார்கள். அந்த இடத்தையும் அந்த வடக்கதியருக்கு தான் சொந்தம் என்று சொல்வார்கள்.

இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமை தமிழகத்தில் தமிழர்களுக்கு பாசகவினால் ஏற்படும். பாரத மாதாக்கி சே........

0 comments: