Friday, April 6, 2018

ஆங்கிலம் தெரியாத பாசக அமைச்சர்களை வைத்துக்கொண்டு வேறு என்ன செய்ய முடியும்

இந்தி படியுங்கோ, தேசிய மொழி என்று ஒன்று நமக்கு கட்டாயம் வேண்டும், அந்நிய மொழியான ஆங்கிலம் நமக்கு எதற்கு என்ற ஓகோ வசனங்களை ஏன் இத்தனை காலம் வடக்கத்தியர்கள் பேசினார்கள் என்று இப்போதாவது தென்னக மக்களுக்கு புரித்தால் சரி.

உச்ச நீதிமன்றத்தின் தீர்பு ஆங்கிலத்தில் திட்டம் என்று எழுதிய வார்த்தையின் பொருள் என்ன என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தையே கேள்வி கேட்டு இருக்கிறது ஆங்கிலம் அறியா இந்த தற்குறி பாசக அரசு கேட்டுக்கொண்டு இருக்கிறது இன்று.

இப்படி ஒரு கேவலமான இழி நிலையை மிகவும் பெருமையாகவும் அகந்தையாகவும் அறிவிக்கவும் செய்கின்றது இந்த ஆங்கிலம் தெரியாத பாசக அரசு. இந்த அழகில் உலகிலேயே முதன்  முதலில் என்று வரிந்துகொண்டு வார்த்தைக்கு வார்த்தை பெருமை வேறு இந்த அரசுக்கு.......

போங்கப்பா போய் புள்ள குட்டிகளவாது ஒழுங்கா ஆங்கிலம் படிக்க சொல்லுங்க, இதிலே வல்லரசாக ஆக்க இந்தி படியுங்கோ இல்லை என்றால் தனிமைபட்டு விடுவீர்கள் என்ற எச்சரிக்கை வேறு இந்த வெட்கமில்லா மனிதர்களிடம் இருந்து.........

0 comments: