Saturday, July 6, 2019

2019க்கான பட்செட் - இது ஏழைகளுக்கான, இளைஞர்களுகான மற்றும் முன்னேற்றத்திற்கான பட்செட்

நிர்மலா சீதாரமன் இந்த 2019க்குகான வரவு செலவு திட்டங்களை மறைமுகமாக தெரிவித்தாரோ இல்லையோ இந்த குட்டி குட்டி தலைவர்கள் எல்லாம் கூவ ஆரம்பித்துவிட்டார்கள்.

உணவகங்களில் 2 இட்லி சாப்பிட்டால் கூட ஒருவர் சாப்பிட்டால் வரும் தொகைக்கு ஈடாக வந்துக்கொண்டு வந்து இருந்த பாசக ஆட்சியின் பில்லில். 2 இட்லி சாப்பிட்டால் 1.99 மனிதர் சாப்பிட்டால் வரும் பில்லை வரவைப்பது எவ்வளவு பெரிய சாதணை. அதை பாராட்ட மனம் இல்லை என்றாலும் கேலி பேசாமலாவது இருக்கலாம் இந்த குட்டி குட்டி தலைவர்கள்.

யாருக்கு எவ்வளவு வரி என்றதை எல்லாம் வெளியில் சொல்லாமல் முடிந்தால் இணையத்திலோ அல்லது டெல்லிக்கு நேரடியாகவோ சென்று தெரிந்துக்கொள் என்று அறிவாந்த முறையில் தெரிவித்து இருக்கும் அறிவாய்ந்த பட்சட் அல்லவா இது.

யானை அதுவாக உண்டால் ஓர் இரு நாள் மட்டுமே வரும் வருமானம் ஒரு மாமாங்கம் வரும் தந்திரத்தில் உருவான பட்சட் அல்லவா இந்த பட்சட். அன்றாடம் பொருட்களை வாங்கும் மக்களிடம் வரிகளை வாங்க்க இன்னும் 1000 திருமணங்களை அம்பாணி செய்து வைக்க வேண்டாமா.

விமானத்தில் பறக்கும் மக்கள் வரி செலுத்த வேண்டும் என்று தானே சொன்னோம் மாட்டு வண்டியில் போகும் மக்களிடமா வரி கணக்கை காட்ட சொன்னோம்.

இரயிலில் முன்பதிவு செய்யும் மக்களிடம் தானே வரி கணக்கை கேட்டோம், முன்பதிவில்லாமல் நிற்கவே முடியாமல் பயணிக்கும் பயணிகளிடமா வரி கணக்கை கேட்டோம்.

ஏழை எளிய மக்கள் வாங்கும் 60 இலட்ச பேட்டரி கார்களுக்கு சலிகைகளை அள்ளி கொடுத்த பட்சை புகழாமல் இகழ்கிறீர்களே நீங்கள் எல்லாம் மாட்கள்  மக்கள் இல்லை.

தமிழகத்தில் இது வரை வசூலித்த 1 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரியும் இந்தியை ஐ நா மன்றத்தில் பேச வழி செய்ய செலவழித்து விட்டாச்சு. இன்னும் பிகார், மத்திய பிரதேச வளர்ச்சிக்கு பணம் தேவைபடுகிறது. நாளை முதல் வாங்கும் எல்லா பொருட்களுக்கும் ரூபாய் 2.5யை உயர்த்திகட்டி இந்தியன் அல்லவா நீ.

 நீ கட்டிய வரிக்கும் நெடுஞ்சாலை வரிக்கும் தமிழில் புரணானூரு பாடலை பாராளுமன்றத்தில் சொல்லியாச்சு இனி வேறு என்ன வேண்டும் அதிகமாக வரிகட்டிய பெருமை உனக்கு வரட்டும். தமிழகத்தின் இடங்களை வேற்று மானில இந்தியர்கள் தான் வாங்குகிறார்கள், பாக்கிட்தானியர்கள் ஒன்றும் இல்லையே என்று விட்டு கொடு.

 நாளை ஈழத்தில் சொந்த செல்வங்களை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாய் 12 ஆண்டுகளாய் வாழும் தமிழர்களை போல் நீயும் வாழ்ந்துவிட்டு போ என்றும் பட்சட்டை பாராட்டாமல் ஏன் வெதும்புகிறாய் குட்டி குட்டி தலைவர்களே. தமிழகத்து இந்திஒ போராளிகளோடு சேர்ந்துக்கொண்டு டமில் டமில் என்று எழுதுங்கள். வாழ்க இந்தியா வளர்க மக்களாட்சி........