Saturday, July 21, 2018

இராகுல் காந்தி கொட்டியிருக்கும் பொய்கள்

GST வரி விதிப்பின் மூலம் பொருட்களின் விலை குறையும் என்று சொன்னார்கள் -- அன்றைக்கு 2 ஒரு காபி 20 ரூபாக்கு விற்றது, இன்றைக்கு அதே காபி வெறும் ரூபாய் 26 விற்கிறது. விலை குறைந்தது இராகுலின் கண்களுக்கு தெரியவில்லை போலும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்புக்களை உருவாக்குவோம் -- கடந்த ஆண்டு 4 இலட்சம் வேலை வாய்புகள் மட்டுமே என்று சொல்கிறார் இராகுல் -- பாசக ஆண்டிற்கு 2 கோடி என்று தான் சொன்னதே தவிர ஒரு ஆண்டுக்கு என்று சொல்லவில்லை, இதே அளவில் வேலை வாய்புகளை உருவாக்கினால் 50 ஆண்டுகளில் 2 கோடி வேலை வாய்புகளை உருவக்க முடியும் என்றது 5ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கும் கணக்கு போட தெரிந்த ஒன்று, இராகுலுக்கு கணக்கும் போட தெரியவில்லை என்று நிறுபித்துவிட்டார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தோல்வி -- யார் சொன்னது இராகுல், இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இரண்டே ஆண்டுகளில் சுட்சர்லாந்து நாட்டில் காங்கிரசு ஆண்ட 70 ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட தொகையைவிட வெறும் இரண்டு மடங்கு பணம் மட்டுமே இரண்டே ஆண்டுகளில் அதிகம் சேர்ந்ததாக சுட்சர்லாந்து நாடு தெரிவிக்கின்றது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மட்டும் இல்லை என்றால் இதுவே 1000 மடங்கு அல்லவா அதிகரித்து இருக்கும் அதுவும் பாசக ஆட்சியில் 1000 மடங்கு அதிர்கரித்தது என்று அல்லவா வரலாறு பேசும்.

அது மட்டுமா தங்கம் வாங்க விற்க, மாடுகள் வாங்க விற்க ஆதார் எண் அவசியம் என்று கொண்டு வந்தால் தான் தமிழ் நாட்டில் பிடிபட்ட சேகர் ரெட்டி மற்றும் அருப்புக்கோட்டையில் வெறும் 250 கிலோ, 120 கிலோ தங்கம் மட்டும் சேர்த்து வைத்து இருந்தார்கள். அப்படி ஆதார் எண் அவசியம் இல்லை என்று இருந்தால் பட்டி தொட்டி எல்லாம் இருக்கும் குப்பனும் சுப்பனும் அவனவன் வீட்டில் 10 முதல் 20 கிலோ வரையில் அல்லவா தங்கம் வாங்கி குவித்து இருப்பார்கள். தங்கம் தொழிலதிபர்கள் மட்டுமே வாங்கும் பொருள் அதை எப்படி, மற்றவர்கள் வாங்கலாம் இராகுல் உங்களுக்கு விவத்தையே இல்லையே.

தமிழகத்தில் இன்று அரசு பேருந்துகளில் 5 பேர் செல்ல கொடுக்கும் பணத்தில் தனியாக ஒரு காரை அமர்த்தி கொண்டு சென்றுவிடலாம் என்ற நிலை. இந்த விலை வாசியில் சுங்கம் என்ற பெயரில் ஒவ்வொருவரிடமும் வரிடத்திற்கு 180 கிலோமீட்டருக்கு ரூபாய் 15,000 வரை சுங்கம் எதற்கு செலுத்த வேண்டும் என்று அனியாயமாக இராகுல் கேட்கிறார் -- பிறகு நாட்டில் இருக்கும் குப்பன் சுப்பன் எல்லாம் ஏதோ TVS 50 தான் வாங்குகிறார்கள் என்று பார்த்தால் இப்போது கார் எல்லாம் வாங்கிக்கொண்டு வாரமானால் கூட்டம் கூட்டமாக ஊர் சுற்ற கிளம்பினால் எப்படி. அது எல்லாம் பணக்காரர்கள் செய்யும் வேலை அதை எப்படி குப்பனும் சுப்பனும் செய்யலாம், இது கூடவா தெரியாது இராகுல். அது தான் சுங்கம், பெட்ரோலிய விலை, மற்றும் அதிக டிக்கட்டுகள்.

நாளை தமிழகத்தை ஆளப்போகும் நிர்மலா சீத்தாராமன் பொய் சொல்வாரா இல்லை வெறும் பிரான்சை ஆளும் அதிபர் பொய் சொல்வாரா -- இது கூட தெரியவில்லையே இராகுல். ஆதாரத்துடன் நிர்மலா நிரூபித்துவிட்டாரே அந்த பிரான்சு அதிபர் தன் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்ளப்போகிறார்.

இராகுல் சொன்னதிலே மிகவும் பெரும் பொய் இது தான் - பிரதமர் நாட்டின் பெரும் முதல்வர்களுடன் தான் உறவாடுகிறார் என்றது. உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதான் இராகுல் 2016ல் டிசம்பர் 8ற்கு பிறகு பிரதமர் சொன்ன முதல் அறிக்கையில் இப்போது தான் ஏழைகள் எல்லாம் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்றது. அன்றைக்கு முதல் இன்றைக்கு வரை ATM ஏடிஎம் வாசலில் நிற்பது அதாணியும் அம்பானியும் தானே தவிர ஏழைகளோ அல்லது நடுத்தர வர்க மக்களோ கிடையாது. பிரதமரின் அந்த ஏழைகளின் அபிமானத்தையே கிண்டல் செய்துள்ளார் இராகுல்.

பிரதமர் எப்போதும் கோட்டு சூட்டு போட்டவர்களிடம் மட்டுமே பேசுகிறாராம் - இராகுல் பன்னீர் செல்வத்தை பார்த்து இருக்கிறீர்களா அவரை மட்டும் 2 மாதங்களில் 50க்கும் மேற்பட்ட வரை பார்த்து இருக்கிறார். பன்னீர் எவ்வளவு எளிமையான மற்றும் ஏழை என்றது நாட்டிற்கே தெரியும். அந்த மாதிரியான தியாகிகளை சந்திப்பதை மட்டுமே தனது கொள்கையாக கொண்டுள்ள மோடியை கிண்டல் எல்லாம் அடிக்காதீர் இராகுல்.

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லையாம் -- நாட்டில் பாசகவிற்கு ஓட்டு போட்டு தேர்ந்து எடுக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் முதலில் தள்ளுபடி செய்யபடுவது விவசாயி கடனை தான். பாசகவை தேர்ந்து எடுக்காதது அந்த அந்த மாநிலங்களின் தனிப்பட்ட பிரச்சனை. பாருங்கள் அருகில் இருக்கும் குட்டி குட்டி நாடுகள் எல்லாம் மோடி புகழ் பாடுகிறார்கள், மொத்த தென்னகத்து மக்களுக்கும் தேவைபடும் 10 ஆண்டுகளுக்கு உண்டான பணத்தை எடுத்து அந்த நாடுகளின் பெயரில் அதாணிக்கும் அம்பானிக்கும் மோடி வழங்குவது எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை போலும். இப்படி புலம்புவதை விட பாசகவிற்கு வாக்கு அளிக்க சொல்லி அந்த மக்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லுங்கள் இராகுல்.

 நன்றாக ஞாபம் வைத்துக்கொள்ளுங்கள் இராகுல் மோடி ஒரு ஏழை தாயின் மகன், எப்படி ஒரு ஏழை தாயின் மகன் கல்லூரியில் சேர்ந்த உடன் தனது வகுப்பில் படிக்கும் பணக்கார மாணவர்களின் நண்பனாக ஆக்கிக்கொண்டு அவர்களை போல் இவனும் உண்ண உடுத்த தனது ஏழை தாயிடம் ccc புத்தகம் வாங்க பணம் வேண்டும் என்று பொய் சொல்லி வாங்கிய கதை எல்லாம் உங்களுக்கு தெரியாதா. ccc புத்தகம் என்றால் சினிமா சிகிரெட்டு காப்பி என்று தெரியவில்லை என்றால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் இராகுல். இப்படி ஒரு ஏழை தாயின் மகன் பணக்காரர்களுடன் தானும் பரம்பரை பணக்காரர் போல் பழகுவதை பார்த்து பொறாமை கொள்ளாதீர்கள் இராகுல். ஏழைகளின் பிரச்சனை உங்களுக்கு புரியாது இராகுல்....

Friday, July 13, 2018

சுசாமி சொல்வது போல் சசிதரூருக்கு மனநிலை சரி இல்லை தான்

கடந்த 4 ஆண்டுகால பாசக ஆட்சியில் பாலாறும் தேனாறும் நாட்டில் பாய்ந்து ஓடியதாகவும், இனி 2019ல் பாசக மறுபடியும் வென்றால் தான் இந்து பாக்கிட்தானமாக மாறும் என்றும் பிதற்றியுள்ளார் சசிதரூர்.

ஐயா சசிதரூர் இந்திய இரயில்வேயுக்கு சொந்தமான வண்டிகளின் எஞ்சின்களை இன்னும் பார்க்கவில்லையா. என்னவோ அமெரிக்கா, சீனா, பாக்கிட்தானத்திற்கும் இன்ன பிற நாடுகளுக்கு போய் திரும்பி வரும் வண்டிகளை போல் எல்லா வண்டியிலும் இந்தியாவின் மூவர்ணக்கொடி. கொஞ்சம் விட்டா இரயிலில் பாசுபோர்டை காட்டு அப்போதான் டிக்கட்டு கொடுப்போம் இல்லைனா ஓடு என்று சொல்லும் அளவிற்கு இந்து நாடாக விளங்கி வருகிறது இந்தியா.

திருப்பதியில் இலட்டு வேண்டும் என்றாலும் கைரேகை வைக்காமல் கொடுக்க மாட்டேன் என்று சொல்கின்ற நிலைமை.

தன்னிடம் இருக்கும் பணம், வாங்கி வைத்து இருக்கும் நிலவுடமைகள் எல்லாம் எப்போது பரிபோகும் என்று தெரியாத நிலையில் மக்கள்.

ஏன்னையா இப்படி செய்கிறீர்கள் என்று போராட்டம் கூட இல்லை வாட்சப்பில் ஒரு வரி செய்தி போட்டால் கூட கைது, மாத கணக்கில் தனிமை சிறை, கொசுக்கடி, ஆள் கடத்தல் என்று மிரள வைத்துக்கொண்டு இருக்கிறது இந்திய அரசாங்கம்.

2050ல் நிலாவில் வீடு நிலம் எல்லாம் வாங்கலாமாம் என்று ஒரு கற்பனை கதையை ஒரு கதாசிரியர் எழுதினார் அந்த கற்பனையில் வர இருக்கும் சியோ பல்கலைகழகத்திற்கு 2018ல் உலகத்தில் மிகசிறந்த உயர்தர ஒரு லட்சம் கோடி ஆண்டுகளுக்கு மூன்னே நீட்டு பரீட்சையில் தேறி கட்டமைத்தவர்கள் என்று சொல்லி 10,000 கோடி ரூபாய்களை அள்ளி வீசும் பாசக அரசு. இதைவிட ஒரு சர்வதிகார அரசு உலகில் எங்கேயும் இருக்க முடியாத நிலையில் இனிமேல் தான் நடக்கும் என்று சொல்ல சசிதரூர் மனநிலை பிழன்றவராகத்தான் இருக்க முடியும்.

2019 பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் போது யார் யார் எல்லாம் ஓட்டு போட தகுதியானவர்கள், யார் யார் எல்லாம் இனி காலத்திற்கும் ஓட்டே போட முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவிக்க இருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தையும் நம்மையையும் கருதி இனி இவர்கள் எல்லா ஓட்டளிக்க தடைவிதிக்கிறது என்று நேரடியாக உச்ச நீதிமன்றம் அறிவிக்கும். பிறகு என்ன இப்போது போராட்ட மக்களை சிறையில் தள்ளி வேடிக்கைபார்க்கும் அரசை தூர நின்று வெறும் வேடிக்கை மட்டும் பார்க்கும் எலிகளாக மாறியது போல் அப்போது நடு நடுங்கிய எலியாக பார்த்துவிட்டு ஒளிந்துகொள்ள வேண்டியது தான் இணையபுலிகளான நாம். மன்னனு வாக்கு எந்திரங்களை சந்தேகிப்பதோ புகார் சொல்வதோ கொலை குற்றத்திற்கு ஈடான குற்றம் என்றும், மரண தண்டனை வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவிக்கும்.

இந்தியாவில் இனி சம்பாதிக்கும் பணமெல்லாம் சுங்கமாகவும், வரியாகவும் நடுத்தர மக்கள் அழுது சாக வேண்டியது தான். பணக்காரர்களுக்கு தொழிலில் மிகவும் நலிவடைந்து இருப்பதால் அவர்களும் வரியும் கிடையாது வட்டியும் கிடையாது. மிகவும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் வங்கியில் பணத்தை எல்லாம் எடுத்து கொடுத்து ஐரோப்பா இல்லை அமெரிக்காவிற்கு இலவசமாக இந்த பாசக அரசு அனுப்பி வைக்கும் என்று தெரிவிப்பார்கள் உச்ச நீதிமன்றம் மூலம். பிறகு என்ன விமர்சனமும் செய்யமுடியாது கேள்வியும் கேட்கவும் முடியாது.

Tuesday, July 10, 2018

சிறுநீர் கட்சியாக மாறிய பாசக

முதலில் மூத்திர திட்டம் இப்போ சிறுநீர் பாசன திட்டம். அசத்துது பாசகவும் அதன் தொண்டர்களும்.

Wednesday, July 4, 2018

இளிச்சவாய் இந்தியன் இருக்கும் வரை இதுவும் சொல்வார் இன்னமும் சொல்வார் நிதின் கட்காரி

சாலைகள் வேண்டும் என்றால் சுங்கம் கட்டணுமாம், பிறகு எதுக்கையா வரி கட்டூரீங்க வைர மோடிக்கும் கிரிகெட்டு மோடிக்கும் கொடுக்கிறதுக்கா.

சுங்க சாலைகளை அமைத்துள்ள அமெரிக்க நாட்டில் சுங்கம் செலுத்தி செல்ல ஒரு சாலையும் அதே தரத்தில் சுங்கம் இல்லாமல் செல்ல சாலையும் உண்டு.

அதுவும் இங்கே இருப்பது போல் ஒவ்வொரு சுங்க சாவடியிலும் 20 முதல் 30 நிமிடம் வரை நிற்க தேவை இல்லை. சுங்கத்தை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் இருந்து எடுத்துக்கொள்ளும் தொழில் நுட்பமும் அவர்களிடம் உண்டு.

சென்னை செல்லும் நேரத்தை பாதியாக குறைக்கத்தான் சுங்கவழி சாலைகள் என்று சொல்லிவிட்டு சுங்க சாவடிகளில் 2 மணி நேரம் நிற்க வைத்து அதே தாமதமான நேரத்தில் செல்ல ஆண்டுக்கு நாங்கள் எதற்கு 15,000 சுங்கம் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டும். இன்னும் நிறை மோடிகள் பணத்தை சுறுட்டிக்கொண்டு ஓட வசதியாக இருக்கும் என்றா.....

 நீதிமன்றத்தில் நாம் செலுத்திய வரியில் அமைத்த சுங்கம் இல்லா சாலைகள் எங்கே என்று கேட்டு வழக்கு தொடுக்க வேண்டும். அப்படி அரசு பதில் சொல்லாத பட்சத்தில் வீட்டில் ஒருவருக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் என்று கணக்கிட்டு அரசு வழங்கும்படி உத்தரவிட மக்கள் கேட்க வேண்டும்.

மக்களுக்கு அந்த சுங்கம் இல்லா சாலைகளை அமைக்கும் வரை சுங்க சாலைகளை பொது மக்களுக்கு திறந்துவிடவும் ஆனையிட நீதிமன்றத்தில் கேட்க வேண்டும்.

Tuesday, July 3, 2018

70 ஆண்டுகளில் இல்லாத சாதனை பாசக வெறும் 2 ஆண்டுகளில் சாதித்து இருக்கிறது

2016ஆம் ஆண்டிற்கு பிறகு சுட்சர்லாந்தின் வங்கியில் இந்தியர்களால் சேமிக்கப்படும் நல்லப்பணம் 70 ஆண்டுகளில் சேர்த்த தொகையைவிட இரண்டே ஆண்டுகளில் 50% கூடியதாக சுட்சர்லாந்து வங்கி நிறுவனம் பாசக அரசை வாழ்த்தி இருக்கிறது.

அது மட்டும் அல்லாது சுட்சர்லாந்து வங்கிக்கு வரும் பணம் எல்லாம் கள்ளப்பணம் என்று உலகமே பரிகாசிக்கும் நிலையில், இந்தியர்கள் சுட்சர்லாந்து வங்கிக்கு கொண்டுவந்து கொட்டும் பணம்  எல்லாம் நல்லப்பணம் என்று இந்திய அரசு சாண்றிதழ்களோடு கொடுப்பதில் சுட்சர்லாந்து வங்கி மகிழ்ச்சியையும் நன்றியையும் வழங்கியுள்ளது.

2016ஆம் ஆண்டின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு டிசிட்டல் பண பரிவர்த்தனைகள் கூடி இருப்பதாக பாசக அரசு செய்திகள் குறிப்பிடுவதும் இந்த சுட்சர்லாந்து பண பரிவர்த்தனைகளை தான் சொல்கிறார்கள்.

பாராட்டுக்கள் மோடி இன்னும் இது போல் நிறைய நடவடிக்கைகளை எடுத்து நாட்டில் இருக்கும் கள்ள பணத்தை எல்லாம் நல்லபணமாக மாற்றி கொடுங்கள்.......