Sunday, March 11, 2018

மோடியின் பணக்காரர்கள் மும்பைக்கு ஊர்வலமாக சென்று இருக்கிறார்கள்

மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தினமும் சொன்ன செய்தி ஏழைகள் எல்லாம் நிம்மதியாகவும் அமைதியாகவுன் வீட்டில் தூங்குகின்றார்கள்.

அந்த ஏழைகளில் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்த ஏழைகள் எல்லாம் நாட்டைவிட்டு ஓடிப்போய் கொள்ளை கொண்ட பணத்தில் வெளிநாடுகளில் பஞ்ச பரதேசிகளாக தங்கியும் இருப்பதாகவும் மோடி அவ்வப்போது தெரிவித்துக்கொண்டும் இருக்கிறார்.

இந்த நிலையில் இந்தியாவின் திமிர் பிடித்த பணக்காரர்கள் மும்பை நகரை நோக்கி ஊர்வலமாக வந்துக்கொண்டு இருப்பதை ஊடகங்கள் வெளியிட்டு மோடியையும் பாசகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறார்கள் பாருங்கள்.

0 comments: