Monday, January 29, 2018

பாசக திராவிட கட்சியாம் - கொஞ்சம் விட்டா சமூக நீதி தான் எங்கள் கொள்கைன்னு சொன்னாலும் சொல்லுவாங்க


பாசக கட்சி திராவிட கட்சியாம், இன்றைய அதிசயம் நிகழ்ந்து இருக்கிறது தமிழகத்தில்.

செய்முறை தேர்வில் படிக்காமல் வந்து வைவாவுக்கு பதில் சொல்லும் மாணவர்களை போல் வானதி சொல்லும் திராவிட பதில்களை பாருங்கள், பதில்களை கேட்டு நாங்கள் எல்லாம் வெகு நேரம் சிரித்தோம். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

ஒரு வகையில் நாம் அனைவரும் காஞ்சி மடத்திற்கு நன்றி சொல்லனும், அடித்தேனா பார், நாக்கை கொண்டுவா, தலைகறி கொண்டுவா, தொடைக்கறி கொண்டு வா என்று நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமாக எச்ச சர்மா பேசிக்கொண்டு பேட்டை ரௌடியை போல் அளித்துக்கொண்டு இருந்த பேட்டிகளை ஒரே நாளில் மழுங்க அடித்துவிட்டது காஞ்சி மடம்.

'இந்துகள்' என்றால் யார் என்றும், பாசகவால் பயன் பெறபோகும் மக்கள் யார் என்றும் அழகாக மக்களுக்கு விளக்கமாக விளக்கிய திணமணிக்கும் பாசகவிற்கும் தமிழகம் மிகவும் கடமைபட்டு இருக்கிறது.

திருவல்லிபுத்தூரிலும் சேப்பாக்கத்திலும் இன்ன பிற ஊடகங்களிலும் தோன்றி 'சோடாபாட்டில வீச்சட்டும் வண்டி எல்லாம் கொளுத்தடும்மா சொல்லுங்க மருமகனே' என்று ஆவர்தம் பாட்டிய 'இந்துக்களை' தமிழகம் பார்த்தது.

இதே தமிழகத்தில் 2017 சனவரியில் இருந்து மக்கள் போராட்டங்கள் வெடித்தது, மெரினாவில் கூடிய கூட்டத்தில் இந்த 'இந்துகளை' யாரும் காட்டவில்லை. இதை எழுதிய மாத்திரத்தில் உடனடியாக போட்டோ சாப்பில் இணைத்து இனி வெளிவரும்.

இப்படி திராவிடர்களுக்காக போராடிய பாசக கட்சி இனி திராவிடர்களின் நலனுக்காக மேலும் போராடி திராவிட மக்களின் உரிமைகளை பெற்று தர துடிக்கின்றதாம்.

இதே திராவிடர்களின் கீரைகாரி தயிர்காரிகளின் பைகளின் வரை இருக்கும் காசை எல்லாம் ஓர் இரவில் செல்லாது என்று சொல்லி மாத கணக்கில் வங்கி வாசலில் நிற்க வைத்து, கடைசியில் வங்கியில் பணம் போடவில்லை என்றால் கள்ளப்பணம் வைத்து இருந்தாய் என்று சிறைக்கு அனுப்படுவாய் என்று மிரட்டி அப்படி கீரைகாரிகளும் தயிர்காரிகளும் வங்கியில் செலுத்திய பணத்தை எடுத்து அம்பாணி மற்றும் அதாணியின் வாரா கடனுக்கு கொடுத்து மகிழ்ந்த பாசக அரசு திராவிட மக்களின் உரிமைக்காக போராட போகின்றதாம்.

எளிய மக்கள் வாங்கி பயன் பெறும் நியாய விலைக்கடைகளில் இனி யாருக்கும் பொருள் கிடையாது. வீட்டு எரிவாயு வின்னை தொடும் விலையில் தான் எளியவர்கள் வாங்க வேண்டும். கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு 30% வரியும், சம்பள பணத்தில் 30% வரியும் கொடுத்துவிட்டு மீதம் இருக்கும் 40% பணத்தில் 30% பேருந்து கட்டணமும் கொடுத்தல் மீதம் இருக்கும் 10% பணத்தில் எளியவர்களின் பிள்ளைகள் என்ன பொறியியல் படிக்குமா இல்லை மருத்துவம் படிக்குமா.

மெல்ல மெல்ல 1920ஆம் ஆண்டு கால பொருளாதாரதிற்கு மக்களை பாசக அனுப்பிவிட்டது. இனி வரும் தலைமுறைகள் படிக்கும் வாய்ப்பு அழிந்து தந்தை செய்யும் அதே தொழிலுக்கு தள்ளும் அபாயம் காத்துக்கொண்டு இருக்கிறது.

90% சம்பளப்பணம் செலவானால் ஏழை எளிய மக்களின் சந்ததிகள் எப்படி முன்னேறுவார்கள். இப்படி எதிர்கால சந்ததியரின் முன்னேற்றத்தை அழித்தால் மெல்ல மெல்ல அந்த 4 வர்ண பேதங்கள் தானாகவே சமுதாயத்தில் விளைந்துவிடும் என்ற நேர்கொண்ட பார்வையும் திரம் கொண்ட நடையுமாக பாசக திராவிட கட்சியாக பரிணாமிக்கின்றது.

திகவினர் முன்னே சொன்னது போல் நாளை பெரியாரின் படத்தில் நெஞ்சின் குறுக்கே குறுக்கு கயிறு அணிந்து ஈ வே இரா அய்யராக அறியப்பட்டாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை. தயாராக இருங்கள் திராவிட மக்களே.......

Sunday, January 28, 2018

தேசம் தேசிய கொடி தேசிய கீதம் என்றாலே வெறுப்பாக இருக்கிறது

ஒரு காலத்தில் உலகின் இனிமையான உயிர் மூச்சான சொல் அம்மா என்ற சொல்லை எங்காவது கேட்டாலே கேவலமாகவும் வெறுப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது. பிறகு மெல்ல அந்த அதிர்வில் இருந்து மீண்டோம். அந்த வரிசையில் இப்போது தேசம் தேசப்பற்று தேசிய கொடி தேசிய கீதம் இன்றைகு சேர்ந்துக்கொண்டுள்ளது.

தற்பொழுது பரப்பப் பட்டுவரும் வன்முறையும் மதவாதமும் பார்க்கும் போது இந்த வார்த்தைகளை கேட்டாளே எரிச்சலும் வெறுப்பும் தான் வருகின்றது.

காரணம் இந்த எல்லா சொல்லுக்கும் தற்பொழுது சொல்லப்படும் பொருள் 'இந்துக்கள்' அல்லாத இந்தியாவில் வாழும் அனைவரையும் வெறுத்து ஒழிப்பது தான் தேசியம் என்று விளக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக நடைமுறை படுத்தி வருவதும் தான் இந்த வெறுப்புக்கு காரணமாக இருக்கிறது.

நேற்று ஒரு 'தேசப்பற்றாளர்' சொல்கிறார் எங்களுடைய தமிழ்த்தாய் வாழ்த்து இது இல்லை என்று சொல்கிறார்.

நாளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 'இந்துகளின்' கடவுள் வாழ்த்தை பாடுவதோடு நீங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மிகவும் வெளிப்படையாக எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் பட்டவர்தாமவே சொல்கிறார்.

இந்த 'இந்துக்கள்' அவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் என்ன உண்ண உடுத்த மற்றும் இத்தியாதி இத்தியாதிகளை எல்லாம் சட்டமாக சொல்கிறார்கள்.

பள்ளி காலங்களில் "ஒருபோதும் வன்முறையை நாடேன் என்றும், சமயம் மொழி வட்டாரம் முதலியவை காரணமாக எழும் வேறுபடுகளுக்கும் பூசல்களுக்கும் ஏனைய அரசியல் - பொருளாதாரக் குறைபாடுகளுக்கும் அமைதி நெறியிலும் அரசியல் அமைப்பின் வழியிலும் நின்று தீர்வு காண்பேன் என்று நான் மேலும் உறுதியளிக்கின்றேன்" என்று தினம்தோறும் சொன்னவைகள் எல்லாம் இன்றைக்கு காற்றில் பறக்கவிட்டுக்கொண்டு இருப்பதை பார்கின்றோம்.


இந்தியர்கள் என்றால் அவர்கள் அந்த 'இந்துகள்' மட்டும் தான் மற்றவர்கள் எல்லாம் இந்தியர்கள் இல்லை என்றும். அந்த 'இந்துகள்' அல்லாத மற்றவர்களை அழித்து ஒழிப்பது ஒன்றே தேசியமும் தேசப்பற்றும் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளிலும் தொகாகளிலும் காண்பது மிகவும் வேதனையாகவும் வருத்தமாகவும் இருக்கின்றது.


இந்த 3 ஆண்டுகளில் அரசு ஆணை மட்டும் தான் பிறப்பிக்கவில்லை மற்ற அளவில் இந்த 'இந்துக்களின்' இந்தியர் தேசம் கோட்பாடுகள் நாடுமுழுவதும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டு வரப்படுகின்றது.

நாட்டில் எங்கு பார்த்தாலும் மத மற்றும் சாதி கலவரங்கள். யாராவது ஏதாவது சொன்னால் அவர் கிருத்துவர் அல்லது முசுலீம் அதனால் சொல்கிறார்கள் என்ற தப்பு அர்த்தங்கள் பறைசாற்றப்படுகின்றது.

அடுத்த வீட்டுகாரர்களையும் நம்முடன் பணியாற்றும் நண்பர்கள் வரை சந்தேகிக்கும் மனட்பாண்மை வரை அழகாக கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார்கள் இந்த 'இந்துக்கள் இந்தியர்கள்'.

இவைகளை எல்லாம் பார்க்க பார்க்க இந்த தேசம், தேசியம், தேச பற்று, தேசிய கீதம், தேசிய கொடி, என்றாலே அடுத்து என்ன கலவரம் வெடிக்க போகின்றதோ என்ற ஒரு பரபரபுக்குள் நம்மை தள்ளி விடுகின்றது. போதா குறைக்கு நான் கொடி ஏற்றினால் என்ன என்ற புரட்சி வேறு.

சாமி ஆளைவிடுங்கடா உங்க தேசமும் தேசியமும், இனி வரும் காலங்களில் தேசம் தேசியம் என்றால் அது 'இந்துக்களின்' மொழி என்று ஆக்கப்பட்டு விடும். ஆக்குங்கள், பிறகு அகமகிழுங்கள்...........எங்களையும் விட்டு விடுங்கள்........வீட்டிற்கு ஒரு கோடி ரூபாய் பணத்தை வங்கியில் போடுவோம், வீட்டிற்கு ஒருவனுக்கு வேலை கொடுப்போம் என்று பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் எதுவும் செய்யாமல் ஏமாற்றியது மட்டும் அல்லாது சாமானியனின் பணம் அனைத்தையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி குறி வைத்து பிடுங்கப்படுவதை அவனும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான்..............

Saturday, January 27, 2018

பத்மாவதி - தோனி - தமிழக ஆன்மீக தலைவர்

பத்மாவதி வேடத்தில் தீபா நடித்ததால் இந்துகளின் மனதையும் உணர்வுகளையும் புண்படுத்திவிட்டார் என்று அதற்கான காரணம் என்ன என்றும் அந்த இந்துக்களே கூறினார்கள்.

அதாவது இந்துக்களின் நம்பிக்கை என்றது திரையில் தோன்றும் நடிகர்கள் அந்த பாத்திரமாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று மறைமுகமாக சொல்கிறார்கள்.

இராமனாக நடித்தவர் இராமனாகவும், கண்ணாக நடித்த ராமாராவை மக்கள் கண்ணாகவே பாவித்தது போல.

அந்த மன நிலைமையில் தான் இந்துக்கள் எல்லாம் தீபா மக்கள் வணங்கும் குறிப்பாக வடக்கத்திய குடும்ப பெண்கள் தெய்வமாக வணங்கும் அந்த பத்மாவதி பாத்திரத்தில் நடக்கவே கூடாது என்றும் அப்படியே நடித்தாலும் அந்த படத்தை வெளியிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார்கள் இந்த இந்துக்கள்.

அந்த இந்துக்களிடம் ஒரு கேள்வியை முன்வைப்போம்.

கொஞ்ச நாளைக்கு முன் M.S.தோனி என்ற ஒரு திரைப்படம் வந்தது. அந்த படத்தில் தோனியாக ஒரு நடிகர் நடித்து இருந்தார்.

அசல் தோனியை களத்தில் கான்பதைவிட மிகவும் அழகான உடல்மொழியும் வசீகரமும் அந்த தோனியாக நடித்தவரிடம் இருந்தது என்றால் வெளியில் ஒத்துக்கொள்ள மனம் இல்லை என்றாலும் மனதுக்குள் அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்.

பிறகு ஏன் இந்த நடிகரால் தோனியை போல் கிரிக்கட்டு விளையாட்டில் வெற்றி பெறவோ அல்லது இந்திய அணிக்கு விளையாடவோ முடியாமல் நடிகராக மட்டும் இருக்கிறார் என்று அந்த இந்துக்களிடம் கேட்போம்.

 நீங்கள் சொல்வது போல் திரையில் தோன்றும் நடிகர்கள் பாத்திரமாகவே வாழ்வார்கள் அல்லது அந்த பராக்கிரமத்தோடு இருப்பார்கள் என்று நம்புவதும் அதையே மக்களிடம் பரப்புவதும் எந்த விதத்தில் ஞாயமாக இருக்கும்.

மகாத்துமா காந்தி இன்று உயிருடன் இல்லை ஆனால் அவரைப்போல் திரையில் நடித்த நடிகர் உயிருடன் இருக்கிறார், அவரை அழைத்துக்கொண்டு வந்து இந்தியாவின் தேச தந்தை காந்தியாக நடித்தவர் இவர் அதனால் காந்திக்கு மரியாதை செய்ய தவறிய நாம் அந்த நடிகருக்கு இந்தியாவின் உயரிய பதிவியான பிரதமர் பதிவியோ அல்லது குடியரசு பதவியோ கொடுத்து அழகு பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த இந்துக்கள் செய்யும் வாதமும் செயல்களும்.

இப்போ உங்களுக்கு புரிகின்றதா தமிழகத்தின் ஆன்மீக அரசியல் எங்கு இருந்து எப்படி இறக்குமதி செய்யப்பட்டது என்று.

19 மாநிலத்தில் ஆட்சி, மைய அரசின் ஆட்சி என்று எல்லாம் பேசும் ஒரு தேசிய கட்சி கடைசியில் தமிழகத்தில் ஒரு நடிகரின் காலில் வீழ்ந்து கிடக்கின்றதே என்று பார்க்கும் போது அதன் மாநில தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்களும் பேசும் போது காந்தியாக நடித்த நடிகரை கொண்டு வந்து பிரதமராக ஆக்குவது தான் நினைவுக்கு வருகிறது.

பத்மாவதி திரைபடம் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும்

இந்த காரணங்களுக்காக பத்மாவதி திரைபடம் தடை செய்யப்படிருக்க வேண்டும்

1) வடக்கத்திய இலக்கியம் என்றாலே யார் யாருடைய மனைவியை இழுத்துக்கொண்டு ஓடினார் என்று ஆக்கும் படியாக ஒரு படைப்பு, இராமாயண வழி இந்த படம்.

2) பத்மாவதி சிவ லிங்கத்திற்கு பூசை செய்வதாக காட்சி வருகிறது அது இந்துக்களின் முறையல்ல

3) அரசனுக்கு தோன்றாத அரசியல் மற்றும் சதியின் கணிப்புகளை பத்மாவதி சொல்வதாக காட்டி இருக்கிறார்கள். இந்துகளின் சாத்திரங்கள் படி பெண்கள் ஆண்கள் சொல்வதை கேட்க்க மட்டுமே முடியும். பெண்களுக்கு அறிவு எல்லாம் கிடையாது இருக்கவும் முடியாது என்றது இந்துகளின் உணர்வு, நம்பிக்கை.

4) அலாவுதின் கொண்டு வரும் கொடிகள் பாதி பாக்கிட்தானத்தின் கொடியாகவும், ஏதோ ஒரு வழியில் அவர்கள் தான் எப்போதுமே வெற்றி பெறுகிறார்கள் என்றும் காட்டி இருப்பது இந்துக்களின் உணர்வு மற்றும் நப்பிக்கைகளை உடைக்கும் விதமாக இருக்கிறது.

5) இறுதி காட்சியில் பத்மாவதி மட்டுமே தீயில் இறங்குவதாகவும் முதல் மனைவி என்ன ஆனால் என்றே காட்டாமலும். மேலும் சுல்தானை கொன்ற அலாவுதீன் அவரின் மனைவியை பெண்டாளுபவன் பத்மாவதியை குறி வைத்து தான் போரில் ஈடுபடுகிறான் என்று தெரிந்தும் அந்த முதல் மனைவி தீயில் இறங்காமல் இருப்பது போல் காட்டி இருப்பது இந்துக்களின் உணர்வுகளையும் நம்பிக்கையையும் புண்படுத்தி இருக்கிறது.

6) பத்மாவதி வேடையாடுவதாக காட்டி இருக்கிறார்கள், இந்துகளை பொருத்து அளவில் பெண் சமைப்பதற்காகவும் குடும்ப தேவைகளை செய்வதற்காக படைக்கப்பட்டவள். அப்படி இருக்க வேட்டையாடுவதாகவும் டெல்லி வரை சென்று கணவனை மீட்டு வரும் பெண்ணாக காட்டுவது இந்துகளின் உணர்வுகளையும் மத நம்பிக்கையையும் கேலி செய்யும் விதமாகவும் புண்படுத்தும் விதமாகவும் இருக்கிறது.

7) என்ன ஒரே ஆருதல் தப்பு செய்யும் இராச குருவை ஒரு இந்துவாக காட்டவில்லை நெற்றியில் விபூதி அணிந்து வருபவராக காட்டி இருக்கிறார்கள். ஒருவேளை இராச குருவாக இருக்க இந்துக்களுக்கு மட்டுமே உரிமை உண்டு அந்த இடத்தில் இந்துக்கள் அல்லாத ஒருவன் மிகவும் அறிவுடனும் செயல்பாட்டுடனும் காட்டி இருப்பது அபத்தம். அது இந்துகளின் உணர்வையும் நம்பிக்கையையும் காயப்படுத்தி இருக்கிறது. கட்டாயம் தடை செய்ய பட்டிருக்க வேண்டியபடம்.

8) இராமாயண மகாபாரத வழியில் வீட்டு பெண்களை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தும் விதமாக இந்த வடக்கத்திய இலக்கியத்திலும் காட்டி இருப்பது இந்துக்களின் உணர்வுகளையும் நம்பிக்கையை காயப்படுத்தி இருக்கிறது.

Thursday, January 25, 2018

பாசகவின் ஆட்சி வந்தால் இனி தமிழும் தமிழர்களும் என்ன ஆவார்கள் என்று காட்டியுள்ளார்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து நீக்கப்பட வேண்டும், அதற்கு பதிலாக கடவுள் வாழ்த்து தான் இனி பாடவேண்டுமாம்.

சல்லிக்கட்டுக்கோ வேறு எதுவுக்குமோ போராட்டம் நடத்தினால் குண்டர் சட்டம் பாயும் அதுவே இந்துகள் போராட்டம் என்றால் அதே கடற்கரையாக இருந்தாலும் சாலைக்கு இந்தப்பக்கம் என்று சட்டமும் நீதிமன்றமும் ஒன்றும் சொல்லக்கூட சொல்லாது.

தமிழகத்தில் எல்லா இடங்களிலும் மக்கள் இந்தியில் தான் பேசவும் எழுதவும் செய்யனும்.

யாராவது எதிர் கருத்து பேசினாலோ இல்லை எழுதினாலோ கை கால் தலை நாக்கு என்று துண்டித்து துடி துடிக்க கொல்வார்கள்.

இந்துகள் தவிர அனைவரும் பாக்கிட்தானதிற்கு போகனும்.

வீட்டு வாசலை விட்டு வெளியே வந்தால் கையில் அடையாள அட்டையுடன் தான் வரனும் இல்லை என்றால் குண்டர் சட்டம் பாயும்.

எல்லோரும் சிப்பாவும் அதன் மேல் முண்டா சட்டையும் அணிந்துக்கொண்டு தான் எல்லா இடங்களுக்கு போகனும்.

எல்லோரும் வட நாட்டு உணவான சப்பாதியும் காய்கறியும் தான் உணவாக உட்கொள்ள வேண்டும்.

விவசாயம், பெட்டிக்கடை, கீரை, தயிர் என்று எந்த வித வியாபாரமும் செய்யக்கூடாது, தேவைப்படும் பொருட்களை எல்லாம் அம்பாணியும் அதாணியும் விரிக்க போகும் கடையில் தான் ஒன்றுக்கு பத்தாக விலை கொடுத்து வாங்கனும். வேறு கடைகள் இருக்கப்போவது இல்லை.

வீட்டிலோ தனது சொந்த நிலத்திலோ ஏதாவது விளைய வைத்து சாப்பிட்டால் குண்டர் சட்டம் பாயும்.

பெருமுதலாளிகளின் தொழிற்சாலைகளில் கூலி வேலைக்கு செல்வது, தனக்கு பிறக்கும் குழந்தைகளை அந்த முதலாளிகளின் எதிர்கால உழைப்பாளிகளாக ஆக்குவது தவிர வேறு எதாவது படிக்க வைக்கவோ அல்லது வீட்டிலே சொல்லிக்கொடுக்கவோ செய்தால் குண்டர் சட்டம் பாயும்.

பின்னர் மெதுவாக யார் யார் எல்லாம் சட்டை அணியலாம் மேல் துண்டு போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வரும். அப்படியே யார் யார் எல்லாம் காலில் செருப்பு அணியலாம் என்ற பட்டியலும் வரும்.

அந்த கால கருப்பு வெள்ளை படங்களில் வருவது போல் சோற்றுக்கே தவிக்கும் கூட்டமாகத்தான் தமிழர்கள் வாழவேண்டும்.

ஊருக்குள் இருக்கும் இடங்கள் வீடுகளை வடக்கத்தியர்களை கொண்டு வந்து கொத்து கொத்தாக குடியமர்த்துவார்கள். தமிழர்களின் உடமைகள் எல்லாம் பிடுங்கி வடக்கதியர்களுக்கு கொடுத்துவிட்டு அவர்களிடம் கூலி வேலை செய்ய சொல்வார்கள். முடியாது என்று மறுத்தாலோ எதிர்த்தாலோ இலங்கையில் தமிழர்களுக்கு என்ன நடந்ததோ அதே தான் தமிழக தமிழர்களுக்கும் நடக்கும்........

தமிழகத்தில் பாசகவின் இந்த பொன்னான ஆட்சி அமைய பாடுபடுங்கள் தமிழர்களே.........

Monday, January 22, 2018

பாசக அடையாளம் காட்டியிருக்கும் இந்துக்களும் தமிழர்களும் - மக்களே விழித்துக்கொள்ளுங்கள்

1) சல்லிக்கட்டு போராட்டம்
2) நீட்டு தேர்வு பிரச்சனை
3) பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்
4) விவசாயிகள் போராட்டம்
5) நெடுவாசல் போராட்டம்
6) மீத்தேன் போராட்டம்
7) அணு உலை போராட்டம்
8) பேருந்து ஊழியர் போராட்டம்
9) மதத்தின் பெயரால் மக்களை அடித்து கொல்வது கண்டித்து போராட்டம்
10) கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஆணவ போக்கை கண்டித்து போராட்டம்
11) ஆணவ கொலைகளை கண்டித்து போராட்டம்
12) காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சனை போராட்டம்
13) இலங்கை தமிழர்கள் படுகொலைகள் கண்டித்து போராட்டம்
14) சர்வதிகார போக்காக போராட்டகாரர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து கண்டித்து போராட்டம்
15) பேருந்து கட்டண உயர்வு கண்டித்து போராட்டம்
16) ஆட்சிக்கு வந்ததும் தருவாத சொன்ன குடும்பத்தில் தலைக்கு ஒருவருக்கு 15 இலட்ச ரூபாய் எங்கே என்று கேட்கும் போராட்டம்
17) நாடெங்கிலும் மதத்தின் பெயரால் நடந்த கொலைகளை கண்டித்து நடத்திய போராட்டம்

இப்படி பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். இந்த போராட்டங்கள் எதிலாவது இப்போது ஆண்டாளுக்காக போராடும் மக்களை எங்கேனும் பார்த்து இருக்கிறீர்களா மக்களே.

இவர்கள் தான் இந்துக்கள் என்றால், அப்போ மற்ற தமிழர்கள் எல்லாம் இந்துகள் இல்லை என்று பொருளாகுகின்றது.

மற்ற தமிழர்களின் போராட்டங்களுக்கு இந்த இந்துகள் போராடாமல் தவிர்த்து வந்தது ஏன் என்று விளக்கம் சொல்வார்களா.

தமிழகத்து ஏழை எளிய மக்கள் தான் கடினமாக உழைத்து சம்பாதித்த பணம் செல்லாது என்று ஓர் இரவில் மோடி தன்னிச்சையாக அறிவித்ததை அடுத்து பணம் என்ன ஆகுமோ என்று கலக்கத்தில் வரிசையில் நின்ற மக்களுக்கு இனிப்பு வழங்கிய வக்கிரபுத்தி இந்துக்கள் அல்லவா இவர்கள்.

இன்றைக்கு நாக்கை அரு, தலையை வெட்டு என்கிறார்களே அன்றை நீங்கள் எல்லாம் ஏன் இளிச்சவாயர்கள் போல் பேசாமல் அமைதியாக வரிசையில் நின்றீர்கள் தமிழர்களே. இப்படி கேலி போசியும் இனிப்பு வழங்கியும் பரிகாசம் செய்தவர்களை குறைந்த பட்சம் அடிக்க கூட துணியாத தமிழர்களே இந்த இந்துகளின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள்.

மெரினாவில் போராட கூட்டம் கூட்டினால் குண்டர் சட்டத்தில் தண்டனை, அதுவே இந்துக்கள் சேப்பாக்கதில் ஆயிரகணக்கில் கூட்டம் கூட்டினால், தடைவிதித்த நீதிமன்றம் கூட அமையான போராட்டம் என்று சொல்லும். என்னவோ மெரினாவில் மக்கள் எல்லாம் ஆயுதம் ஏந்தி போராடியது போல்.

பாசகவின் தமிழக அடிப்படை வாத கட்சி பாமக மக்களை அடித்தாலோ எரித்தாலோ அது கலவரம் விபத்து. ஆனால் அதுவே தாழ்த்தப்பட்ட மக்கள் அடிப்பவர்களை திருப்பி தாக்கினால் தீவிரவாதம் சாதி மோதல்கள் என்று இதுவரை நோட்டம் பார்த்த பாசக இனி குண்டு வெடிக்க தயாராகிக்கொண்டு இருக்கிறது.

கூடிய விரைவில் இந்த இந்துக்கள் போராட்டங்கள் பார்த்து அப்பாவி மக்களும் அந்த போராட்டத்தில் கலந்துக்கொள்ளும் நாளுக்காக காத்துக்கிடக்கிறார்கள் இந்த இந்துக்கள்.

என்றைக்கு இந்த இந்துக்கள் இல்லாமல் அப்பாவி தமிழர்கள் இந்த போராட்டத்தில் பங்குகொள்கிறார்களோ அன்றைக்கு அவர்கள் இருக்கும் பக்கத்தில் மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடிக்கும் பாசக.

அந்த வெடிகுண்டு இசுலாமிய கிருத்துவ மற்றும் தாழ்த்தப்பட்ட அல்லது நக்சல்பாரிகளின் கைவண்ணம் என்று சொல்லி பொதுமக்களை அடித்து எரித்து பெண்கள் குழந்தைகள் என்று கருவருத்து. பெண்களின் வயிற்றை கிழித்து அதில் இருக்கும் சிசுவரை கருவருக்க இந்த பாசக தயாராகிவருகின்றது.

ஆகவே இந்த மாதிரியான இந்துகள் போராட்டத்தில் பங்குகொள்ளாமல் இருப்பதே தமிழர்களுக்கு நல்லது. வீனே சென்று பலியாகிவிடாதீர்கள் அப்பாவி தமிழர்களே.......

விழித்துகொள்ளுங்கள் பிழைத்து இருப்பீர்கள் இல்லையே உங்களை எல்லாம் கோத்ராவில் தூங்கிக்கொண்டு இருந்த வயதானவர்களை இவர்களே கொளுத்திவிட்டு இசுலாமியர்கள் கொளுத்தினார்கள் என்று மக்களையும் நீதிமன்றத்தையும் நம்பவைத்து போல் உங்களையும் கொன்று அதில் குளிர்காய நினைக்கிறார்கள் இந்த இந்துக்கள்.

மெரினாவிற்கு தடைவிதித்த அதே நிர்வாகம் சேப்பாக்க போராட்டத்திற்கு தடைவிதிக்காமல் மௌனம் காப்பதில் இருந்து தமிழர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும், சிந்திப்பார்களா இல்லை கோத்ராவில் அப்பாவி தனமாக கொத்து கொத்தாக எரிக்கப்பட்டதை போல் தங்களையே பலிகொடுக்க போகிறார்களா இந்த அப்பாவி தமிழர்கள்.

ஆண்டாள் போராட்டம் அந்த இந்துகளின் போராட்டம் அதை அவர்களே போராடிக்கொள்ளட்டும், தமிழகளின் போராட்டங்கள் போது இனிப்பு கொடுத்து கொண்டாடியதை போல் இப்போது நீங்கள் இனிப்பு கொடுங்கள் அது போதும்......

Monday, January 15, 2018

ஐயோ பாவம் இந்தியின் நிலை இந்த பரிதாப நிலைக்கா வரவேண்டும் - என்ன ஒரு கெஞ்சல்

தமிழகத்தின் மொழி பாசத்தை இந்திய அளவில் எப்படி தப்பாக புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெளிவாக காட்டும் காணொளி இது.

அதுவும் இந்தி எழுத்தாளர் பிடிவாதம் பிடிப்பதாகவும் மொழி மேலாண்மை காட்டுவதாகவும் நினைத்துக்கொண்டு எங்கள் மொழி எப்படி அழிந்து வருகிறது என்று ஒத்துகொள்கிறார்கள் என்று பாருங்கள்.

வட இந்திய மொழி குடும்பங்களில் அனேக மொழிகள் இந்தியை போல் இருப்பதால் ஒட்டு மொத்த இந்தியாவில் 41% சதவிகிதம் இந்தி மொழி புரியவும் பேசவும் தெரிகின்றது என்று சொல்கிறார்கள் இந்த கூட்டத்தில்.

இப்படி கள்ள கணக்குகள் எல்லாம் காட்டி தான் இந்தி பிழைப்பு நடத்தும் இடத்தில் இருக்கிறது போலும், ஐயோ பாவம் இந்தி மொழி.

இந்த காணொளி 40 நிமிடங்கள் என்றதால் சுவாரசியமான சில செய்திகளை இங்கே எழுதிவிடுவோம்.

கூடி இருக்கும் கூட்டத்தில் தமிழ் பேசும் நபர் ஒருவரும் இல்லை அப்படி இருக்கையில், ஆங்கில விவாதத்தில் இந்தியில் பேச துவங்கிய உடன் ஞாநி தமிழில் ஆட்சோபம் தெரிவித்ததும் கூடி இருந்த மக்கள் கை தட்டி ஆதரிப்பதை ஆச்சரியபடாமல் பார்க்க முடியவில்லை.

சுதந்திர இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்தி தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது என்ற புரட்டுக்கு தமிழ் தெலுகு போல் இந்தியும் ஒரு பிராந்திய மொழி தானே தவிர வேறு ஒரு சிறப்பு நிலையிலும் இந்தி இல்லை என்று ஞாநி தெரிவிக்கும் போது நெரியாளர் உட்பட அனைவரும் மௌனம் காப்பதை பார்க்கலாம்.

இந்தி திணிப்புக்குத்தான் எதிர்பே தவிர இந்திக்கு எதிர்ப்பு இல்லை என்று ஆணித்தனமாக அடித்து கூறும் இடங்களில் எல்லாம் எதிர்த்து எதுவுமே பேச இயலாமல் நிற்கும் அந்த இந்தி மொழியாளர்களை பார்க்க பரிதாபமாக இருக்கிறது.

இந்தியாவிலே இந்தியை திணிக்காத ஒரே மாநிலம் தமிழகம் என்று கூறும் இடத்திலும் அனைவரும் மௌனம் காப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

இந்தி இந்தியாவின் பழமையான மொழி என்றதும் தமிழ் 2500 ஆண்டுகள் பழமையான மொழி என்று சொல்ல மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் இருப்பதையும் காண முடிகின்றது.

சுதந்தரத்திற்கு பிறகு இத்தனை ஆண்டாக இந்தி எதிர்ப்பு என்று துவங்கும் கேள்விக்கு 1937லே ஆரம்பித்த இயக்கம் இது என்றும் சொல்லும் இடத்திலும் மௌனமே என்று அனைவரும் இருப்பது ஆச்சர்யமே.

ஆந்திரத்து பேராசியர் கேட்ட முதல் கேள்விக்கு அந்த இந்தி எழுத்தாளர் கடைசிவரை பதிலே சொல்லாமல் போனது இந்தி இன்றைக்கு எப்படி பல் இளிக்கிறது என்று தெளிவாக காட்டுகிறது. உங்கள் பிள்ளைகள் இந்தி மொழியில் பயில்கிறார்களா ஆங்கிலத்திலா இல்லை உங்கள் பேரன் பேத்திகளாவது இந்தியில் பயில்கிறார்களா என்ற கேள்விக்கு அந்த அம்மா விக்கி விக்கி நிற்கும் காட்சியை பாருங்கள் என்ன ஒரு பரிதாபம்.

அதை கேட்டு விட்டு பிறகு சொல்வார், இந்தியை தாய் மொழியாய் கொண்டவர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் பயில இந்திக்கு எந்த சம்பந்தமுமே இல்லாத எங்கள் குழந்தைகள் கட்டாயம் இந்தி கற்ற வேண்டும் என்று திணிப்பதா என்ற கேள்விக்கும் அந்த இந்தி எழுத்தாளர் மௌனம் காப்பது பார்க்கும் போது இந்தியின் ஆற்றாமையை தெளிவாக காண முடியும்.......

இது நமக்கும் எழுந்த கேள்வி இது, இந்தியை தாய் மொழியாய் கொண்டவர்கள் வெறும் இந்தியை மட்டும் படித்து பேசினால் போதும் அவனது கையாலாக தனத்திற்கு மற்ற மொழி மக்கள் எல்லாம் இந்தியில் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கும் சோம்பேரிகள் என்று......

இவை எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற் போல் வெறும் இந்தி மட்டும் தெரிந்தவர்கள் 4 அல்லது 5 ஆயிரம் மட்டுமே சம்பளம் கிடைக்கும் ஆனால் வெறும் ஆங்கிலம் மட்டும் கூட தெரிந்த மக்களுக்கு 10 முதல் இலட்சங்கள் வரை சம்பளம் நீளூம் என்று சொன்னதற்கு அலுவலக மொழி மற்றும் கணணிகளை இந்தி படுத்த வேண்டும் என்று சொல்லும் அந்த மொழி சோம்பேரியின் வாதம் வருவதையும் பார்க்கலாம்.

போங்கடா போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க அதை விடுத்து தானும் படிக்க மாட்டான் அடுத்தவனையும் படிக்க விடமாட்டானுக.........

Saturday, January 13, 2018

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்குவார்களா இந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

நீதிமன்றத்தையோ தீர்புகளையோ அல்லது நீதிபதிகளையோ விமர்சித்தால் நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும் அது நீதிபதியே ஆனாலும் கூட என்று நீதிபதி கர்ணனின் 6 மாத கால சிறை தண்டனையில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

அப்படி இருக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் செயல்பாடுகளையும் அவரது நீதிமன்ற நடவடிக்கைகள் மீதும் புகார் தெரிவித்ததுடன் அவரையும் அவரது நீதிமன்ற நடவடிக்கைகளையும் விமர்சனம் செய்தும் உள்ளார்கள் இந்த 4 நீதிபதிகள்.

நீதிமன்ற நடவடிக்கைப்படி பார்த்தால் இந்த செயலுக்காக இந்த 4 நீதிபதிகளும் நீதிமன்ற அவமதிப்புக்காக தண்டிக்கப்பட வேண்டும். பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

Saturday, January 6, 2018

எங்களை ஆளுகின்ற மோடி தமிழர் இல்லையே சீமான் என்ன செய்ய

சுதந்திர இந்தியாவில் இது வரையில் நம்மை ஆண்டது தமிழர் இல்லையே சீமான். என்ன தான் தமிழகம் தமிழர்கள் ஆண்டாலும் அண்டை நாட்டில் உள்ள தமிழர்களை காப்பாற்ற தமிழர் அல்லாத பிரதமர்களை அல்லவா கேட்டு வேண்டி நிற்க வேண்டி இருக்கிறது.

நாடளவில் தமிழர்களின் மேல் என்ன என்ன சுமைகளை எல்லாம் ஏற்றி வட நாட்டிற்கு கழிப்பிடங்களை கட்டுவதாக சொல்லி பாசக அரசியல் கும்பல் கொள்ளை அடிக்கின்றது.

அதுவே தமிழகத்தின் அடிப்படை தேவையாக இருந்தால் கூட செய்ய நிதியை ஒதுக்க மாட்டோம் என்று வெளிப்படையாகவே செய்கின்றது பாசக அரசு.

வழக்கம் போல தமிழகத்தில் இருக்கும் சோ வைகையராக்கள் தமிழகத்தில் மதவாதம் தலை தூக்கும் வரை எதுவும் செய்துவிடாதீர்கள் அந்த பணத்தை எல்லாம் குசராத்து கழிப்பிடம் கட்ட கொண்டு போங்கள் என்று சிரித்துக்கொண்டே சொல்லுகின்றது, தொகாவில் தைரியமாக அப்படி தான் செய்வோம் உங்களால் என்ன செய்யமுடியும் என்று கேட்கின்றது.

இதை எல்லாம் எப்படி அடக்க போகிறீர்கள் சீமான் என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள். தமிழனை எதற்கு குசராத்துகாரரோ அல்லது அடுத்த மாநிலத்தவர் ஆளனும், தமிழன் இல்ல ஆளனும் என்ன செய்ய பதில் சொல்லுங்க.......

Wednesday, January 3, 2018

ஆன்மீக அரசியல் என்றால் இவைகள் எல்லாம் இருக்காதா - தமிழிசை - பாசக

முன்னெப்பவும் இல்லாத அளவில் தமிழகத்தில் சாதியம் தலைவிரித்து ஆடுகிறது இப்போது.

இதிலே தான் தான் அடுத்த தமிழக முதல்வர் என்று கையெழுத்து போட கையில் எப்பவும் பேனாவுடன் அலையும் அன்புமணி இராமதாசும் அவரது இயக்கமும் சாதிமோதல்களை அவிழ்த்துவிட்டும் மோதல்களை உருவாக்கிக்கொண்டும் இருக்கின்ற இந்த காலகட்டத்தில்.

அத்வானியின் காலங்களில் அவர் தமிழகம் வந்த இடங்களில் எல்லாம் அத்வானி பாதுகாப்பான தூரம் சென்று விடாரா என்று உறுதிபடுத்திக்கொண்டு குண்டுகளை வெடித்துவிட்டு அதை பாக்கிட்தானம் அத்வானியை கொலை செய்ய செய்தது என்று சொல்லி தமிழகத்தில் பாசகவு ஓட்டு போடுங்கள் இல்லை என்றால் தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரமாகிவிடும் என்று விளையாடிக அந்த காலம் முதல் இன்றைக்கு பொம்மை அரசை வைத்துக்கொண்டு தமிழகத்திற்கு எதிரான திட்டங்களில் திருட்டு தனமாக கையொப்பங்களை வாங்கிக்கொண்டு சீரழிக்கும் இந்த காலம் வரை.

ஆன்மீகம் மதம் சாதி என்ற பாகுபாடுகளை முன்னிறுத்தி அரசியல் நகர்வுகள் வளர்ந்துக்கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் தான் செய்யப்போவதும் ஆன்மீக அரசியல் என்று தலைவர் அறிவித்தாலும் அறிவித்தார் அது எங்களுடையது தான் வேறு எதுவும் இல்லை இல்லவே இல்லை என்று தமிழிசையும் எச்ச சர்மாவும் வரிந்துகட்டிக்கொண்டு பாட்டு பாடுகிறார்கள்.

இது வரையில் சாதியின் பெயரில் அன்புமணி நடத்திய சாதி மோதல்களும் ஆணவபடுகொலைகளும், மதத்தின் பெயரில் பாசக வெடித்த குண்டுகளும் பொம்மை அரசும் இனி சுக்கு நூறாக நொறுங்கியதின் வயிற்றெரிச்சல் நன்றாக தெரிகின்றது.

தலைவரின் ஆன்மீக அரசியலில் ஏழை எளியவரின் பைகளில் மாட்டுகறி இருக்கிறதா இல்லை கறிவேப்பில்லை இருக்கிறதா என்ற சோதனைகள் நடத்தபடமாட்டாது.

ஐஐடி சோதனை கூடங்களில் மாட்டுகறியை கண்டுபிடிக்கும் பொறிகளை வடிவமைத்தும், மாட்டு மூத்திரத்தில் சக்தி இருக்கிறது என்று கண்டறிய அப்பவி மக்கள் கட்டிய GST வரி செலவிடப்படாது.

மசூதிகளையும் சர்சுகளையும் மாரியம்மன், சுடலைமாடன் கோவில்களையும் இடித்துவிட்டு அங்கே பெருமாள் கோவில்கள் நிறுவுவபடமாட்டாது.

இன்ன இன்ன சாதியினர் இன்ன இன்ன நிறங்களில் கைகளில் நூல்களைக்கட்டிக்கொண்டு தான் பள்ளிகளுக்கு வரவேண்டும் என்று கட்டாயபடுத்தபடமாட்டாது.

சாதியின் பெயரால் ஊரின் பகுதிகளையும் மக்களையும் தனிமைபடுத்த படமாட்டாது.

தலைவர் அமைக்க போகும் கட்சியின் சின்னத்திலோ அல்லது கொடியிலோ தாமரைக்கு எந்த இடமும் இருக்கப்போவது இல்லை.

தலைவரின் ஆன்மீக அரசியலுக்கு தமிழிசையும் எச்ச சர்மாவும் சாமரம் வீசி பின்னால் மேடையில் நின்றுக்கொண்டு இருக்கும் காட்சிகள் மனதிரையில் வந்து போகின்றது.

உண்மை நேர்மை நாணயம் இதன் பொருளோ அல்லது அவைகளுக்கு உள்ள எழுத்துகளோ கூட அறியாத தமிழிசை எச்ச சர்ம்மா வகையராக்கள் வயிற்றெரிச்சலில் பொரிந்து தள்ளும் பேட்டிகளை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதும் இல்லை எடுத்துக்கொள்ள போவதும் இல்லை. பாருங்கள் இது வரையில் 1 கோடி பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளார்கள், ஆனால் நீங்கள் கூட்டிய மிசுடுகால் சேர்க்கையில் பொய்யை சொல்லி நீங்களாகவே கூப்பிட்டு சேர்த்த மக்களைவிட இது எல்லாம் இமாலய தூரம். இனியும் ஆன்மீக அரசியல் என்றால் அது எங்களுடையது என்று எல்லாம் பொய் சொல்லி அலையாதீர்கள் பாசக மக்களே.....

Tuesday, January 2, 2018

தமிழக மாடல் குசராத்து மாடல் எல்லாம் இனி இல்லை - பாசகவின் 2019 தேர்தல் வியூகம்

தலைவரின் ஒவ்வொரு அறிக்கையும் தமிழகத்தை உயர்த்திக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறது. இன்றைக்கு தலைவர் அறிவித்த ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்ற அறிவிப்பு இது வரையில் பாசக செய்துக்கொண்டு வந்த குசராத்து மாடலை குப்பைக்கு அனுப்பி இருக்கின்றது.

"ஆன்மீக அரசியல் என்பது உண்மையான, நேர்மையான, நாணயமான அரசியல். இது எந்த விதமான சாதி மத சார்பும் இல்லாத, அறம் சார்ந்த அரசியலாகும். ஆன்மீக அரசியல் என்பது ஆத்மாவுடன் தொடர்புடைய ஒன்றாகும்."

தலைவரின் அரசியலில் அறிவிப்பிலேயே பாசகவின் அரசியல் சித்தாந்தங்கள் நொறுக்கப்பட்டுவிட்டது.

உணமை நேர்மை நாணயம் இவைகளுக்கு எல்லாம் பொருள் என்ன என்றாவது பாசகவிற்கு தெரியுமா. அவர்கள் கண்டது எல்லாம் நயவஞ்சகம் பொறாமை படுகொலைகள் தான். இந்த அழகில் உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது என்று அளப்பார்கள் எதற்கு எடுத்தாலும்.

ஆன்மீகத்திற்கும் சாதி மதத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிவித்து இருக்கிறார் தலைவர். இனி எச்ச சர்மா முகத்தை எங்கே கொண்டு வைத்துக்கொள்ள போகிறார்.

சாதி மதத்தின் பெயரால் முண்டா சட்டையை அணிந்துக்கொண்டு நாட்டில் இருக்கும் நலிந்த மக்கள் பைகளில் என்ன வாங்கிக்கொண்டு போகிறார்கள் என்று ஆராய்ந்து கதை தெருவிலேயே அடித்து கொல்லப்பட்ட செய்கைகளை எல்லாம் இனி எச்ச சர்மா  எப்படி நடத்த போகிறார். அப்படி செய்தால் அது ஆன்மீக அரசியலாக ஆகாது என்று தலைவர் சொன்னவைகளுக்கு எதிராக போய் முடியாதா.

ஆக கூடி பாசக தனது ஆன்மீக அரசியல் சித்தாந்தத்தை மாற்றிக்கொண்டு அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

ஒரு வேளை அப்படி தான் செய்வேன் என்று பாசக அடம் பிடிக்குமானால் தலைவரின் அரசியல் உங்களையும் அழிக்கும் மொத்த இந்தியாவில் இருந்து.

படிப்படியாக பாசகவை திருத்தி நல்வழிப்படுத்த அவர்களின் கொட்டங்களை ஒழிக்க தலைவர் கிளம்பியுள்ளார்.

போகின்ற போக்கை பார்த்தால் இனி 2019 நாடாளுமன்ற தேர்தலில் குசராத்து மாடல் என்று பரப்புரையாற்றிய பாசக இனி தமிழக மாடல் அல்லது தமிழ் மாடல் என்று சொல்லி தான் நாடாளுமன்ற தேர்த்தலை சந்திக்கும் போல.

தலைவருக்கு அந்த முண்ட சட்டையையும் நோயாளி சால்வையையும் கொடுத்து கோமாளியாக்கலாம் என்று நினைத்த பாசகவின் கனவில் மண்ணையள்ளி நிறப்பி இருக்கிறார் தலைவர்.

அன்புமணி இராமதாசு இனி என்ன செய்வார் - பாரத பிரதமருக்கு போட்டி இடவேண்டியது தான் போல

பாசகவின் மதவாதத்தை சாதிய அளவில் சாதித்து கொலைகளையும் வகுப்புவாத மோதல்களையும் சங்கம் கட்டி அவிழ்த்துவிட்டு வலைவிரித்து காத்துக்கொண்டு இருந்த பாமகவும் அன்புமணி இராமதாசும் இனி என்ன செய்வார்.

என்ன என்ன ஞாயமான காரணங்களுக்காக பாமகவை மக்கள் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று பரப்புரை செய்தார்களோ அதே நல்ல காரணங்களுக்காக இனி தலைவர் ஆட்சிக்கு வருவார். இனி அன்புமணி இராமதாசின் தேவையோ அவசியமோ தமிழகத்துக்கு இல்லை. அவர் மட்டும் இல்லை இதே காரணத்தை சொல்லி ஓட்டு கேட்கும் பாசக, தேமுதிக, நாம் தமிழர், இன்ன பிற கட்சிகளின் தேவைகள் எல்லாம் இல்லாமல் செய்துவிட்டா அவரின் அரசியல் அறிவிப்பு.

தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலையில் முன்பு எல்லாம் சென்றால் வழி எங்கும் நிழல் தரும் புளியமரங்கள் இருந்தது. ஆனால் இன்றோ வெறும் அணல் காற்று மட்டும் தான் அடிக்கின்றது. காரணம் அன்புமணியின் இயக்கம் அன்று வெட்டியும் எரித்தும் போட்ட மரங்கள் இதுவரையில் மறுபடியும் வளர்த்தபாடு இல்லை.

அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது மூடிய அரசு மருந்தாலைகள் 4ம் இது வரை மறுபடியும் நிறுவவும் அமைக்கப் பெறவும் இல்லை. அரசு மருத்துவமனை முதல் தனியார் மருத்துமனைகள் வரை எல்லோரும் வெளி நாட்டு மருந்து கம்பெனிகளில் தான் வாங்க வேண்டும் என்று ஒரே அடியாக ஏழைகளின் வாழ்கையில் மண்ணை அள்ளி நிறப்பியவர் இந்த மாமனிதன் அன்புமணி.

வெறும் அமைச்சராக இருததிலேயே நாட்டை இவ்வளவு அழித்தவர் அன்புமணி இன்னும் அவரது கைகளில் அரசை கொடுத்தால் மொத்தமாக தமிழகத்தை யார் யார் எல்லாம் விலை பேசுகிறார்களோ அவர்களுக்கு விற்கவும் தயங்காத அன்புமணியின் முதல்வர் கனவு இனி அவ்வளவு தான் போலும். வேண்டும் என்றால் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக என்று கூட்டணியில் வேண்டும் என்றால் தொற்றிக்கொள்ளலாம் போலும். எங்கே எப்படி தொற்றி கொள்கிறார் என்று பொருத்து இருந்து பார்ப்போல். முன்பு விசயகாந்திடம் வாங்கிய அரசியல் அடி மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புவோமாக.......