Tuesday, March 6, 2018

பிரிவினைவாத பயங்கரவாத பாசக நுட்பமான தாக்குதலை துவக்கி இருக்கிறது

தமிழகத்து எதற்கு குசராத்து கட்சியின் ஆட்சி என்று முதலின் எச்ச சர்மா விளக்கட்டும் பிறகு லெனின் எதற்கு என்று நாங்கள் விளக்குகின்றோம்.

வடகிழக்கு மாநிலத்தில் சென்று இராமர் கோவில் கட்டலாம் வாங்கள் கலவரம் செய்து அதை செய்வோம் என்று சொன்னால் வரமாட்டார்கள் அதனால் அங்கு சென்ற முறை ஆட்சியில் இருந்தவர்களை அடித்து நொருக்கி கொன்று கொலைகளை செய்ததோடு மட்டும் இல்லாது அவர்களது அரசியல் தலைவர்களின் சிலைகளையும் நொருக்கி ஆகாகா என்று அரக்கர்கள் சிரிப்பது போல் சிரித்து பேட்டி அளிக்கிறார்கள் இந்த பாசக அரக்கர்கள்.

கோராவில் தங்களின் மக்களை தாங்களே கொளுத்திவிட்டு மற்ற மதத்தினர் கொளுத்திவிட்டார்கள் என்று கூவி அன்றைக்கு கலவரம் என்ற பெயரில் மக்களை கொலை செய்து குவித்தார்கள். இன்று லெனினுக்கு இந்தியாவில் என்ன வேலை என்று கேட்கிறார்கள்.

அட மடையற்களே அதே தான் நாங்களும் கேட்கின்றோம் ரபேல் விமானமும் மிக் விமானங்களும் நமக்கு எதற்கு. தூக்கி குப்பையில் வீசி விட்டு வில் அம்பு கசாயுதம் கொண்டு இந்திய இராணுவத்தை சங்க பரிவாரம் கொண்டு காத்துகொடுங்கள். என்றைக்கு இந்த முடிவை நீங்கள் எடுக்கிறீர்களோ அன்றைக்கு இந்திய இராணுவ மற்றும் அது சார்ந்த அமைப்புகளும் பணியும் வேண்டும் சம்பளமும் வேண்டாம் என்று சொல்லி ஓடும்.

எந்த ஊரில் எந்த சரக்கு விற்கும் என்று தெரிந்து அந்த அந்த இடத்திற்கு தகுந்தார் போல் ஆக்டோபசு முறையில் பாசக தாக்க முயன்று வருகின்றது. இதற்கு நீதிதுறையின் துணையில் தான் பதில் அளிக்க வேண்டும், தவிர பாசக எதிர்பார்ப்பது போல் மற்றவர்களும் உணர்ச்சிவசப்பட்டு துவங்கினால் கோத்ராவின் தாக்குதலை தயங்காமல் நடத்த அனைத்து மாநிலத்திலும் ஆட்களை சங்க பரிவாரம் என்ற பெயரில் தயாராக நிறுத்தி வைத்து இருக்கும் பாசகவின் திட்டத்திற்கு துணை போனது போல் ஆகிவிடும். கட்சி வித்தியாசம் பார்க்காமல் வடகிழக்கு மாநில தாக்குதலுக்கு அனைவரும் கண்டம் தெரிவிப்பதோடு தங்கள் மாநிலங்களில் இந்த மாதிரியான மாயாசாலங்களை பாசக அரங்கேற்றாமல் தடுக்கவும் வேண்டும்.

0 comments: