Friday, July 13, 2018

சுசாமி சொல்வது போல் சசிதரூருக்கு மனநிலை சரி இல்லை தான்

கடந்த 4 ஆண்டுகால பாசக ஆட்சியில் பாலாறும் தேனாறும் நாட்டில் பாய்ந்து ஓடியதாகவும், இனி 2019ல் பாசக மறுபடியும் வென்றால் தான் இந்து பாக்கிட்தானமாக மாறும் என்றும் பிதற்றியுள்ளார் சசிதரூர்.

ஐயா சசிதரூர் இந்திய இரயில்வேயுக்கு சொந்தமான வண்டிகளின் எஞ்சின்களை இன்னும் பார்க்கவில்லையா. என்னவோ அமெரிக்கா, சீனா, பாக்கிட்தானத்திற்கும் இன்ன பிற நாடுகளுக்கு போய் திரும்பி வரும் வண்டிகளை போல் எல்லா வண்டியிலும் இந்தியாவின் மூவர்ணக்கொடி. கொஞ்சம் விட்டா இரயிலில் பாசுபோர்டை காட்டு அப்போதான் டிக்கட்டு கொடுப்போம் இல்லைனா ஓடு என்று சொல்லும் அளவிற்கு இந்து நாடாக விளங்கி வருகிறது இந்தியா.

திருப்பதியில் இலட்டு வேண்டும் என்றாலும் கைரேகை வைக்காமல் கொடுக்க மாட்டேன் என்று சொல்கின்ற நிலைமை.

தன்னிடம் இருக்கும் பணம், வாங்கி வைத்து இருக்கும் நிலவுடமைகள் எல்லாம் எப்போது பரிபோகும் என்று தெரியாத நிலையில் மக்கள்.

ஏன்னையா இப்படி செய்கிறீர்கள் என்று போராட்டம் கூட இல்லை வாட்சப்பில் ஒரு வரி செய்தி போட்டால் கூட கைது, மாத கணக்கில் தனிமை சிறை, கொசுக்கடி, ஆள் கடத்தல் என்று மிரள வைத்துக்கொண்டு இருக்கிறது இந்திய அரசாங்கம்.

2050ல் நிலாவில் வீடு நிலம் எல்லாம் வாங்கலாமாம் என்று ஒரு கற்பனை கதையை ஒரு கதாசிரியர் எழுதினார் அந்த கற்பனையில் வர இருக்கும் சியோ பல்கலைகழகத்திற்கு 2018ல் உலகத்தில் மிகசிறந்த உயர்தர ஒரு லட்சம் கோடி ஆண்டுகளுக்கு மூன்னே நீட்டு பரீட்சையில் தேறி கட்டமைத்தவர்கள் என்று சொல்லி 10,000 கோடி ரூபாய்களை அள்ளி வீசும் பாசக அரசு. இதைவிட ஒரு சர்வதிகார அரசு உலகில் எங்கேயும் இருக்க முடியாத நிலையில் இனிமேல் தான் நடக்கும் என்று சொல்ல சசிதரூர் மனநிலை பிழன்றவராகத்தான் இருக்க முடியும்.

2019 பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் போது யார் யார் எல்லாம் ஓட்டு போட தகுதியானவர்கள், யார் யார் எல்லாம் இனி காலத்திற்கும் ஓட்டே போட முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவிக்க இருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தையும் நம்மையையும் கருதி இனி இவர்கள் எல்லா ஓட்டளிக்க தடைவிதிக்கிறது என்று நேரடியாக உச்ச நீதிமன்றம் அறிவிக்கும். பிறகு என்ன இப்போது போராட்ட மக்களை சிறையில் தள்ளி வேடிக்கைபார்க்கும் அரசை தூர நின்று வெறும் வேடிக்கை மட்டும் பார்க்கும் எலிகளாக மாறியது போல் அப்போது நடு நடுங்கிய எலியாக பார்த்துவிட்டு ஒளிந்துகொள்ள வேண்டியது தான் இணையபுலிகளான நாம். மன்னனு வாக்கு எந்திரங்களை சந்தேகிப்பதோ புகார் சொல்வதோ கொலை குற்றத்திற்கு ஈடான குற்றம் என்றும், மரண தண்டனை வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவிக்கும்.

இந்தியாவில் இனி சம்பாதிக்கும் பணமெல்லாம் சுங்கமாகவும், வரியாகவும் நடுத்தர மக்கள் அழுது சாக வேண்டியது தான். பணக்காரர்களுக்கு தொழிலில் மிகவும் நலிவடைந்து இருப்பதால் அவர்களும் வரியும் கிடையாது வட்டியும் கிடையாது. மிகவும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் வங்கியில் பணத்தை எல்லாம் எடுத்து கொடுத்து ஐரோப்பா இல்லை அமெரிக்காவிற்கு இலவசமாக இந்த பாசக அரசு அனுப்பி வைக்கும் என்று தெரிவிப்பார்கள் உச்ச நீதிமன்றம் மூலம். பிறகு என்ன விமர்சனமும் செய்யமுடியாது கேள்வியும் கேட்கவும் முடியாது.

0 comments: