Thursday, April 27, 2017

KFC PIZZA HUT DOMINOS STARBUCKS SUBWAY MCDONALD BK நிறுவனங்களுக்கு தடை வாங்க இருக்கிறது - இந்து பாரதம்

இந்தியாவில் அமைந்து இருக்கும் பாசக அரசு மேலே சொன்ன நிறுவனங்கள் மட்டும் இல்லாது மற்ற அயலக நிறுவனங்களையும் சேர்த்து இந்தியா முழுவதும் தடை செய்ய உள்ளது.

காரணம் உ பி தேர்தலுக்கு பிறகு பாசக அடிப்படையாக கொண்டு இருக்கும் மத சார்பு நிலைக்கு எதிரான கொள்கையான மாட்டுகறியை கொண்டு உணவுகளை இந்த நிறுவனங்கள் மக்களுக்கு வழங்கி இந்து பாரத்தின் புனிதத்தையும் இந்து மதத்தின் மீது நீங்காத களங்கத்தையும் விளைவிப்பதும் மட்டும் அல்லாது இன்னும் இலட்சம் ஆண்டும் கோடி கங்கை நீரை இந்தியா முழுவது ஊற்றி கழுவினாலும் கலையாத பாவத்தை இந்தியர்கள் செய்ய காரணமாக இருப்பதும் தான் காரணம்.

மேலும் இந்த உணவு நிறுவனங்களிடம் அவர்களது உணவில் பயன் படுத்தப்படுவது காளை மாடும் காளை கன்றுகுட்டி மட்டும் காளை கிழட்டு மாடுகளின் கறி மட்டும் தான் என்று சான்றிதழ் கொடுக்கும் படி பணிக்கப்பட்டது.

ஆனால் இந்த நிறுவனக்களால் அப்படி ஒரு சான்றிதழ்களை கொடுக்க முடியவில்லை. காரணம் கறி கொடுக்கும் நிறுவனங்களால் அப்படி உறுதி செய்ய முடியாத நிலையில் இப்படி ஒரு சான்றிதழை கொடுப்பது சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்தார்கள்.

அதற்கு பதில் கொடுக்கும் விதமாக பாசக அரசு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் அனைத்து மாட்டுகறியும் காளை கன்று, மாடு மற்றும் கிழட்டு காளைகளை கொண்டு தான் வெட்டிக்கொடுக்கப்படுகின்றது என்று எங்களால் சான்றிதழ் கொடுக்க முடியும் போது ஏன் உங்களால் முடியவில்லை என்று சாடியும் உள்ளது.

இப்போதைக்கு உணவகங்கள் தான் என்று நினைத்து விடாதீர்கள், உணவகங்கள் தொடர்ந்து மாட்டுகறியின் கழிவில் தயாரிக்கப்படும் Palmolive பாத்திரம் கழுவும் திரவம், Garnier Shampoo, Colgate Palmolive soap வகைகள் மற்றும் பற்பசைகள், Head and Shoulder shampooவின் 16 வகை தயாரிப்புகள், Pantine shampooவின் 12 வகை தயாரிப்புகள், Dove Shampooவின் 8 வகை தயாரிப்புகள், Tide, Surf, Rin, TATA 501, Hammam, Rexona, Chandrika, Lux, Lifeboy, Eyetext என்று ஒரு நீண்ட பட்டியல் உள்ளது அவைகளுக்கும் எங்களது அறிக்கைகளை அனுப்பியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது பாசக அரசு.

இது மட்டும் அல்லாது இந்து பெண்கள் பயன்படுத்தும் உதட்டு சாயம் முதல் முக பூச்சுகள் வரையில் மாட்டின் குடல் கழிவில் இருந்து தயாரிக்கும் நீங்கள், அவைகளிலும் காளை, காளை கன்றுக்குட்டி மற்றும் கிழட்டு காளை மாடுகளின் குடல் கழுவுகளில் இருந்து மட்டும் தான் தயாரிக்கபடுகின்றது என்று தெரிவிக்கவில்லை என்றால் அவைகளையும் இந்தியாவில் தடை செய்யப்படும் என்று பாசக அரசு தெரிவித்துள்ளது.

இதை சற்றும் எதிர்பார்க்காத அமெரிக்க நிறுவனங்கள் இப்படி திடீர் என்று இந்த தயாரிப்புகளை எல்லாம் தடை செய்துவிட்டாம் மக்கள் என்ன செய்வார்கள் என்று அப்பாவியாக கேட்க அதற்கு பாசக அரசு பாபா ராம்தேவ் நிறுவனம் 30,000 தயார்ப்புகளை ஏற்கனவே எல்லா மா நிலங்களிலும் தங்களது விற்பனை நிறுவனங்களின் சேவைகளை துவங்கிவிட்டதாகவும் இனி ஆயுர் வேத பொருட்களை தவிர இந்து பாரததின் மக்களுக்கு வேறு எந்த வேதி பொருட்களையும் அனுமதிக்க போவது இல்லை என்றும் சொன்னதோடு இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கொண்டு ஒரு ஆணையையும் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வாழ்க இந்து பாரதம் வளர்க பாபா ராம்தேவ் நிறுவனங்கள்.

2020ல் இந்தியாவின் பொருட்களை தான் வேண்டும் என்று அமெரிக்க அதிபரும் இங்கிலாந்து மன்னரும் டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய நிர்வாண போராட்டம் போல் போராடுவார்கள் அப்போது இருக்கும் பாரத பிரதமரோ டெல்லியிலேயே இருந்தாலும் கேவலம் இந்த அமெரிக மற்றும் இங்கிலாந்து அதிபர்களை போய் பார்ப்பதா என்று கூச்சப்பட்டு நாணி கோணி வீட்டிலேயே இருந்துவிடுவார்கள்.

Wednesday, April 26, 2017

ஆங்கிலம் கேட்கும் காதில் இனி ஈயத்தை காய்சி ஊத்தப்படும் -- இந்து பாரதம்

இனி இந்தியா முழுவதும் அங்கிகரிக்க்கப்பட்டவர்கள் மட்டும் ஆங்கிலம் பேசவும் எழுதவும் முடியும். இன்னாளில் படிப்பது போல் தி இந்து, தி முசிலிம், தி கிரிசுடியன் பத்திரிக்கை எல்லாம் எல்லோரும் படிக்க முடியாது.

அப்படி மீறி படித்தால் படித்த நாக்கை வெட்டி எரிய சட்டம் இயற்றுவார்கள், மீறி காதில் கேட்டால், காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவார்கள்.

அங்கிகரிக்கப்பட்டவர்களை தவிர மற்றவர்கள் ஆங்கிலம் பேசுவதும் எழுதுவதும் படிப்பதும் முதலில் பாவம் என்றும் பிறகு தண்டனைக்கு உரிய குற்றம் என்றும் அறிவிக்கப்படும்.

இன்று ஆங்கிலத்தினால் மக்கள் என்ன என்ன எல்லாம் செய்கிறார்களோ அவைகளை நாளை பூசாரிகளின் கையில் அதற்கு உண்டான தட்சணையை கொடுத்துவிட்டு தங்களது தாய்மொழிகளில் அந்த பூசாரிகளிடம் சொன்னால் அவர்கள் தான் அவைகளை கேட்க வேண்டியவர்களுக்கு புரியும் வண்ணம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்வார்கள் நமக.

தப்பி தவறி எவனாவது அந்த காலத்தில் எங்க மக்களும் ஆங்கிலம் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தார்கள் என்று சொல்ல முற்பட்டால் குடும்பத்துடனும் வைத்து இருக்கும் ஏணைய ஆவணங்களுடனும் உயிருடன் கொளுத்தபடுவீர்கள்.

ஆங்கிலமே போன பின்பு ஆங்கிலேயன் கற்றுக்கொடுத்த சொக்காயும் குழாயும் எதற்கு, அவைகளை கழற்றி எறிந்துவிட்டு வேட்டியும் துண்டும் மட்டும் அணிந்தால் போதுமே என்று துவங்கி பின் மேலாடை அணிய வேண்டும் என்றால் அங்கிகரிப்படவேண்டும் இல்லை என்றால் ஆடை உடுத்தியதற்காக உயிருடன் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் கொளுத்தபடுவீர்கள்.

படிப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால் தான், என்ன எழுதி இருக்கு என்ன வேற மாதிரியாக தப்பாக திரித்து சொல்கிறார்கள் என்று சொல்ல. எவனுக்கும் ஆங்கிலம் தெரியாது என்றால் அவன் சொல்வது தான் பொருள், அதன் பொருட்டு அவன் வைக்கும் வாதமே செல்லும் மற்றவை எல்லாம் பெரிய பாவம்.

பிறகு இந்தியாவில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் அவரவர் தாய் மொழிகளில் ஆங்கில வாசங்களை எழுதி வைப்பார்கள், உதாரணமாக "ரேல்வே டேசன்" என்று தமிகலத்தில் எழுதுவது போல் எழுதி வைப்பார்கள். அது என்னையா ரேல்வே டேசன் என்று கேட்டால் அட முட்டாளே அப்படி என்றால் தொடறி நிலையம் என்று சொல்லி சிரிப்பார்கள்.

மேலும் ஆங்கிலம் சரளமாக எழுதவும் படிக்கவும் மட்டுமே தெரிந்தால் தான் வேலை என்பார்கள்  நாமும் ஆமாம் இல்ல ஆங்கிலம் தெரியாமல் பிறகு எப்படி வேலை பார்ப்பதாம் என்று வியாக்கானம் பேசுவோம்.

வெளியில் கிடைக்கும் புத்தகம் முதல் வெளி நாடுகளில் இருந்து வரும் அனைத்து ஆங்கில வசுத்துகளை எல்லாம் இந்து பாரத்திற்கு வெளியிலேயே நிப்பாட்டி வைத்து விட்டு. உள் நாட்டில் அவைகளுக்கு என்ன வேலை என்றும் அவைகளை நாட்டின் உள்ளே விட்டால் பெரும் பாவம் பெருகி கங்கை அழிந்து நாட்டை பிறகு நரகாசுரன் பாயாக சுருட்டி கொண்டு அமெரிக்க எடுத்து போய் விடுவான் என்று நமக்கு சொல்வார்கள்.

அங்கிகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே நாளை விமானத்தில் சென்று இங்கிலாந்து, அமெரிக்கா என்று பாரீசுடர் பட்டம் பெற்று இந்தியாவில் அவர்களது அறிவை காட்டுவார்கள். இந்த பாரீசுடர்களுக்கு குடையை தூக்கிகொண்டு ஓட நான் நீ என்று வேலைக்கு நம்மாட்கள் அலைவார்கள். குடை பிடிப்பதிலே அங்கிகரிப்பட்டவர்களுக்கு குடை பிடித்தால் தான் நாம் நாளை சொர்கம் சென்று சேருவோம் இல்லையேல் நரகம் போவோம் என்று பழக்கப்படுத்துவார்கள்.

ஆக மொத்தத்தில் சுதந்திர இந்தியாவில் 60 ஆண்டு காலம் பழமையையும் அதன் பொருட்டு பரப்பபட்ட புரட்டுகளையும் புரம் தள்ள உதவிய ஆங்கிலத்திற்கு நிரந்தமாக சங்கு ஊத துவங்கி விட்டார்கள்.

புரட்சிகாரர்களே  C மற்றும் JAVA மொழிகள் தெரிந்தால் தான் எங்களுக்கு வேலை கிடைக்கின்றது ஆகவே நாளையில் இருந்து முதலாம் வகுப்பு முதல் இந்த C மற்றும் JAVA மொழிகளை நடத்துங்கள் என்று கொடிபிடிக்க நினைக்காதீர்கள். பாவம் மக்களே பாவம் மகா பாவம்.

தேச துரோக வழக்கில் நடு இரவில் விசாரணை நடத்தி காலையில் விடியும் முன் உங்களின் விட்டின் விட்டதிலேயே தூக்கில் தொங்கவிட படுவீர்கள்.

Friday, April 21, 2017

தமிழக உழவர்களே நீங்கள் டெல்லியில் இருந்து இசுலாமாபத்துக்கு போங்கள்

தமிழக உழவர்கள் கிட்டதட்ட ஒரு மாத காலம் போராடியும் இன்னமும் ஒரு தீர்வு வராத நிலையிலும். தமிழக பாசகவினர்கள் சொல்லும் செய்திகளையும் பார்க்கும் போது, இனி தமிழக உழவர்களின் பிரச்சனைகளை இனி இந்திய(பாசக) அரசு கவனிக்கவோ சரி செய்யவோ போவது இல்லை என்று தெள்ளத்தெளிவாக தெரிகின்றது.

பாசக அரசு தமிழகத்தில் அமையும் வரை தமிழகம் பூமிக்குள் சென்றால் கூட என்ன என்று கேட்கக்கூட தயாராக இல்லை என்றது வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ள நிலையில் தமிழக உழவர்கள் என்ன தான் செய்வார்கள்.

வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை அதை தள்ளுபடி செய்யுங்கள் என்றும் மேலும் உழவு பொருட்களின் விலையும், விளைந்த பொருட்களை விற்கும் போதும் விளையும் விலை மாற்றத்தையும் கட்டுப்படுத்தவும் போராடும் உழவர்களை சந்திக்க மறுக்கும் பாசக அரசை நம்பி இனி ஒன்றும் ஆவ போவது இல்லை.

இந்தியா ஏழை நாடுகளாக இருக்கும் பல நாடுகளுக்கு உதவும் விதத்தில் எந்த நிபந்தனைகளையும் விதிகாமல் பணம் கொடுத்து உதவுகின்றது.

அது போல் இந்திய(பாசக) அரசு உதவாது ஒரு கையறு நிலைக்கு வலுக்கட்டாயமாக தள்ள நினைக்கும் இந்த நிலையை ஏழை நாட்டின் நிலைமையாக கருதி ஏழை தமிழ உழவர்களை காப்பாற்றும் படி பாக்கிட்தானை கேட்க வேண்டும்.

இந்தியா மற்ற நாடுகளின் ஏழ்மையை போக்க அந்தந்த நாட்டில் தனது செல்வங்களை செலவிடுவது போல் பாக்கிட்தானின் நல்லெண்ண நடவடிக்கையாக தமிழக உழவர்களுக்கு உதவும் படி கோறுவது ஒன்றும் தேச துராகம் ஆகாது. இப்படி தமிழக உழவர்களை தள்ளிய பாசக அரசு தான் தேச விரோத அரசாகவும் அந்த செயல் தான் தேச துராக நடவடிக்கையாக இருக்கிறது.

ஆகவே போராடும் தமிழ உழவர்கள் டெல்லியில் இருந்து அப்படியே இசுலாமாபத்துக்கு சென்று பாக்கிட்தானத்து பிரதமரை சந்தியுங்கள். அவர் ஒன்றும் வேற்று மனிதர்கள் அல்ல மோடி முன் அறிவிப்பு இல்லாமல் அவர்கள் வீட்டு திருமணத்திற்கு விருந்துக்கு சென்றும் வரும் அளவிற்கு நல்ல நட்பில் இருக்கும் நாடு. ஒரு காலத்தில் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட நாடும் கூட.

பாக்கிட்தானத்தை கேட்போம், அவர்களால் முடியாது என்றால் சீனாவை கேட்ப்போம், அவர்களாலும் முடியாது என்றால் ஐ நா சபையில் நலிந்த நாடுகள் பிரிவின் கீழ் இந்தியாவின் தமிழகத்தை கொண்டு வந்து உதவும் மாறும் கேட்போம்.

தமிழர்களை தங்கள் போக்கிற்கு இணங்காவிட்டால் நசுக்கலாம் என்று பார்க்கின்றது பாசக அரசு. இந்திய அரசாகவே இருந்தாலும் அதுவும் உலகில் தான் இருக்கிறது, வானத்தில் இருந்து வந்த தேவ தூதர்கள் அல்ல என்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

Tuesday, April 18, 2017

இந்தியாவின் அடுத்த பிரதமராக பாக்கிட்தானின் நவாசு சரீப்பு தான் வர வேண்டும்

இந்தியாவின் அடுத்த பிரதமராக பாக்கிட்தானின் நவாசு சரீப்பு தான் வர வேண்டும்.

 நிர்வாக திறமையில் ஈடு இணை அற்றவர், பக்கத்தில் இருக்கும் எந்த பெரிய நாடாகவோ அல்லது அணு பலம் பொருந்திய நாடாக இருந்தாலோ கூட தகுந்த கூட்டணி அமைத்து தனது நாட்டை எதிரி நாட்டிடம் இருந்து பாதுகக்கும் ஒரு நல்ல இராசதந்திரி.

உலகத்தில் உள்ள அத்துனை தடைகளையும் தந்து நாட்டின் அறிவியல் துறைக்கு விதித்த போதிலும் தனது நாட்டின் பாதுகாப்புக்காக தன் தேசத்தை விட 10 மடங்கு பெரிய நாடான இந்தியாவில் உள்ள அணு ஆயுத அளவிற்கு இணையான எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை பெற்று வல்லமையாக நாட்டை வழி நடத்தும் தலைவர்.

அன்டை நாடான இந்தியாவில் சமீபத்தில் பதவி ஏற்று இருக்கும் இந்து மத தீவீரவாத சிந்தைகளும் முற்காலத்தில் 3 நாட்களில் 1,30,000 முசுலீம் மக்களை அதிகாரம் கொண்டு கொன்று குவித்தவராக இருந்தாலும் தனது வீட்டு விருந்துக்கு அழையா விருந்தாளியாக வந்தாலும் விருந்தும் கொடுத்து வெறுப்பு காட்டாமல் நடந்துக்கொண்டு பண்பாளர்.

எப்போதும் இராணுவத்தின் கண் இவரை கவிழிப்பதிலே இருந்தாலும் மிகவும் விழிப்புடனும் திறமையாகவும் செயல்பட்டு இது வரை ஆட்சியை பறிக்க முடியாமல் பார்த்துக்கொண்டவர்.

இப்படி தகுதிகளை ஏறாளமாக அடுக்கிக்கொண்டே போகலாம்..........

அடுத்தாக இந்தியாவை வழி நடத்த பாக்கிட்தானத்தின் நவாசு சரீப்பை தேர்தலில் நிற்க செய்து வெற்றி பெறவைபோம்....

Friday, April 14, 2017

தமிழகத்தில் பிடிபட்ட வெள்ளை பணம் - மோடியின் வெற்றி தொடரட்டும்

2016 இறுதியில் 50 நாட்களில் இந்தியாவில் இருக்கும் கருப்பு பணத்தை எல்லாம் ஒழித்து கட்டி வெள்ளை பண இந்தியாவாக உருவாக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் நடக்க இருந்த முதல் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதால் மைய அரசால் அறிவிக்கப்பட்டு தேர்த்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

ஒவ்வொரு மனிதருக்கும் 25 ஆயிரம் ரூபாய்க்கள் வரையில் தான் பணம் கொடுப்போம் மேலே எல்லாம் பணம் தரமுடியாது என்று சொல்லும் வெள்ளை பண வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும். ஆதார் அட்டை, பான் அட்டை, குடும்ப அட்டை, தேர்தல் அட்டை, ஓட்டுனர் உரிமம், கடவு சீட்டு, வெளி நாட்டு விசா, சந்திரனுக்கு குடி பெயறும் அட்டை என்று கொண்டு வந்து கொடுத்தாலு தலைக்கு 25 ஆயிரம் மட்டுமே கொடுப்போம் என்றும்.

எதற்கு இப்படி எல்லாம் மக்களை அலைகழிக்கிறீர்கள் என்றால் சுத்த பாரத்தம் உருவாக்க போகின்றோம் இன்றைக்கு அவசரம் அது இது என்று நாங்கள் பணம் கொடுத்துவிட்டால் பிறகு சுத்தபாரதம் கெட்டபாரதம் ஆகிவிடாதா என்று சொன்னார்கள் அந்த கரும வீரர்கள்.

ஒரே ஒரு தினகரனால் மட்டுமே 89 கோடி ரூபாய்க்களை புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளாக கொண்டு வந்து வீதியில் இறைக்க முடிந்தது என்றால் தினகரன் எத்தனை வங்கியின் வாசலில் வரிசையில் நின்று பெற்று இருப்பார் என்று நாம் கேட்க்க கூடாது.

ஒரு கோடி ரூபாய் பணம் பெறுவதற்கே 400 நாட்கள் தினமும் வங்கிக்கு சென்று வரிசையில் நின்று பெற்றால் தான் கிடைக்கும், அப்படி மொத்தம் 89 கோடி ரூபாய்க்களுக்கு கிட்டதட்ட 98 ஆண்டுகள் தினமும் வங்கியில் சென்று வரிசையில் நின்றால் தான் பணம் பெற்று இருக்க முடியும்.

அல்லது 98 தினகரன்கள் வரிசையில் நின்று இருந்தால் ஒரு ஆண்டில் பெற்று இருக்கலாம். ஆனால் புது பணம் புழகத்தில் வந்து 6 மாதகாலங்களே ஆன நிலையில் 196 தினகரன்கள் 6 மாதகாலமாக வரிசையில் நின்று ஆதார் அட்டை, பான் அட்டை, என்று காட்டி வாங்கி வந்து மக்களுக்கு இந்த 89 கோடி ரூவாய் வெள்ளை பணத்தை கொடுத்து இருக்கிறார்கள்.

இந்த நிலையை நிலை நாட்ட தான் 120 கோடி இந்தியர்கள் 50 நாட்களாக வரிசையில் நின்று தியாகம் செய்ததா.

தனது உழைபில் வந்த பணத்தை மாற்றிக்கொடுக்க முடியாது என்று சொல்லி பழைய நோட்டுகளை கொளுத்தி குளிர் காயுங்கள் என்று சொன்னார்களே இப்படி சாதாரணமாக 89 கோடி புதுபணம் ஒரே ஒரு ஆளால் மட்டுமே பெறமுடியும் என்றால் ஏன் மற்ற மக்கள் எல்லாம் இன்னமும் அவதி படுகிறார்கள்.........

இன்னும் இது போல் உலகிலே இல்லாத திட்டங்களாக மோடி அதிரடியாக கொண்டு வந்து படம் காட்டட்டும்.

பாசகவின் சமீபத்திய மதிப்பீட்டில் மிகவும் பின் தங்கிய மா நிலமான தமிழகத்தில்கே 89 கோடி வெள்ளை பணம் பெறமுடிகின்றது என்றால் முன்னேறிய இடங்களில் நிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளலாம்........

இந்தியாவில் ஊழழை ஒழிக்க பிறந்தவர்களே உங்களின் தோல்வியை நீங்களே இப்படி வெளிப்படையாக ஒப்புக்கொளலாமா......

Friday, April 7, 2017

சொச்ச பாரத்து வரியும் உழவர்(விவசாய) வரியும்

இந்தியாவில் மைய அரசு நிறுவனங்களில் நடத்தப்படும் எந்தவிதமான பண பரிவர்த்தனைகளிலும் சொச்ச பாரத்து வரி என்ற ஒன்றை சேற்று வாங்குகின்றார்கள். அப்போ இது வரையில் இந்தியாவில் தூய்மை பணியாளர்களை வேலைக்கு எடுப்பதும் சம்பளம் கொடுப்பதும் எல்லாம் சுன்னாச்சுக்கும் என்று இருந்தாகவும் என்னமோ பாசக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்தியாவே தூய்மை ஆக்க துவங்கியதாகவும் அந்த தூய்மையை மைய அரசு உறுதிபடுத்த இந்த வரியை கட்டாய வரியாக வசூலிப்பதாகவும் செயல் படுத்துகிறார்கள்.

இந்த வசூல் பணத்தின் தேவைகள் என்ன, யார் யாருக்கும் எவைகளுக்கும் இந்த பணம் சென்று செல்கின்றது என்று கேட்டோமேயானால் ஒன்று உனக்கு எல்லாம் பதில் சொல்ல எனக்கு எந்த அவசியமும் இல்லை என்று இறுமாப்புடனோ அல்லது ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு இந்தியருக்கும்  ரூ15 லட்சம் கொடுப்போம் என்று 3 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார்களே அது போல ஏதாவது சொல்லி சிரிப்பார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாகவே உழவு பெரும் வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டு வருகின்றது, சமையலுக்கு அன்றாடம் பயன் படும் வெங்காயம் கூட வெளி நாட்டில் இருந்து இறக்குமதியாகும் கொடுமையான காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்று எத்தனை மக்களுக்கு புரிய போகின்றது.

பாசக ஆளும் மாநிலமானால் கேட்காமலே உழவர்களின் கடன்களில் இருந்து எல்லா சலுகைகளும் கொடுக்கப்படும்.

அதுவே பாசக ஆளாத மாநிலமாக இருந்தால் உலக வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. உலக பொருளாதாரத்துக்கு எதிரானது அல்லது பழைய காங்கிரசு அரசு கொண்டு வந்தது என்று நொண்டி சாக்குகளை சொல்வார்கள்.

அது மட்டும் இல்லாது மாநில அரசுகளுக்கும் எந்த வித சலுகைகளும் கொடுக்ககூடாது என்று கட்டுப்படுத்துவார்கள், இல்லை என்றால் நிதி அயோக்கியர்கள் உங்கள் மாநிலங்கள் எல்லாம் நாங்கள் சொல்வதை கேட்பாததால் உங்களுக்கு நிதி இல்லை என்று கையை விரிப்பார்கள்.

ஆகையால் மைய அரசுக்கு மா நில அரசு செலுத்தும் வரிப்பணத்தில் தமிழக உழவர் வரி என்ற ஒன்றை விதித்து, மைய அரசு பண பரிவர்த்தனை செய்யும் அத்தனை இடங்களிலும் குறிப்பாக பெருமுதளாலிகள் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைகளுக்கு உழவர் வரி என்று வசூலிக்க வேண்டும்.

அது மட்டும் இல்லாது தமிழகத்துக்கு வரும் இரயில் சேவை கட்டணத்தில் இருந்து விமான சேவைகள் வரை தமிழக உழவர் வரியை கட்டாயம் ஆக்க வேண்டும். சொச்ச பாரத்து போல் 5 மடங்கு வரியை விதிக்க வேண்டும்.

தமிழகத்தில் வசூல் ஆகும் கட்டண வழி தடங்களில் வசூலிக்கப்படும் தொகையில் 20 முதல் 40% வரை உழவர் வரியை தமிழக அரசு நேரடியாக வசூலிக்க சட்டங்கள் இயற்ற வேண்டும்.

தமிழகத்தின் இயற்கை வளங்களை ஆராய வரும் மைய எண்ணை வள நிறுவங்கள் போன்ற அமைபுகளாலும் அவற்றால் பின்னர் அமைய இருக்கும் வணிபங்களுக்கும் 40% முதல் 60% வரை உழவர் வரியை விதிக்க வேண்டும்.

தமிழகத்தில் விளையாத அல்லது உற்பத்தியாகாத பொருட்களை மற்ற மாநிலங்களில் இருந்து வாங்கும் பொருட்களின் விலையில் 20% முதல் 30% வரை உழவர் வரியை விதிக்க வேண்டும்.

இப்படி வசூலிக்கும் தொகையை கொண்டு ஒரு முதலீட்டு முதலீடை துவங்கி அதில் வரும் வட்டி மற்றும் இலாபத்தில் உழவர் இழப்பை ஈடுகட்ட வேண்டும்.

இந்த நடவடிக்கை தமிழகத்து உணவு உற்பத்தி எவ்வளவு முக்கியம் என்றது மட்டும் அல்லாது எவ்வளவு புன்னியமான தொழில் என்று மறுபடியும் மதிக்க துவங்க உதவும். செய்வார்களா, செய்வீர்களா.....

Wednesday, April 5, 2017

இந்தி திணிப்பும் சமசுகிரதம் திணிபும் பாசக கொடுத்து இருக்கும் அருமையான காணொலியும்

செய்தி வெளியான உடனேயே இப்படி ஒரு விவாதத்தை தயாரித்து கொடுத்த கலைஞர் தொகாவுக்கு நன்றி சொல்லனும்.

பாசகவை கேட்ட எந்த ஒரு கேள்வியையும் மறுக்கவே இல்லை. இந்தி திணிப்பு நடக்கிறதா? இல்லை என்று சொல்ல மாட்டோம்.

சமசுகிரித திணிப்பு நடத்த போகிறீர்களா, இல்லை என்று சொல்ல மாட்டோம்.

சமசுகிரிதம் போதிக்கும் கலாச்சாரம் யாருடைய கலாச்சாரம், இந்தியாவின் கலாச்சாரம் இல்லை என்றதை பலமுறை தரவுகளுடன் நிரூபித்தாகிவிட்டது. நாங்க இல்லைன்னு சொல்லவே இல்லையே, சமசுகிரிதம் உலக மக்களின் கலாச்சாரம். உலகில் உள்ள அத்தனை இன மத கலவை அதை தான் தமிழர்கள் பின்பற்ற வேண்டும் என்று சொல்கின்றோம்.

தமிழர்களுக்கு என்று இருக்கின்ற கலாச்சாரம் போதுமே புதிதாக என்ன கற்றுக்கொடுக்க சமசுகிரிதம் வருகின்றது. பதிலே இல்லை

உலகத்தை இணைத்தது சமசுகிரிதம் என்று சொல்கிறீர்களே என்ன எப்படி என்று சொல்லமுடியுமா.? மீண்டும் மௌனம்.

சமசுகிரிதம் யாருக்கான மொழி, யார் பயன்படுத்துகிறார்கள். கோவில்களில் பூசைகள் செய்யவும், வேத பாடசாலைகளில் வேதங்களை கற்றுக்கொடுக்கவும்  மட்டுமே பயன்படுகின்றது.

இந்த 2 காரியங்களுக்கு மட்டும் பயன்பட 8 சமசுகிரித பல்கலைகழங்களா, மீண்டும் மௌனம்.

இந்த பல்கலையில் பயின்ற மாணவர்கள் என்ன செய்கிறார்கள், மீண்டும் மௌனம்.

ஐனா மன்றதில் இந்தியில் பேசுவதற்கான செலவு 290 கோடியை இந்தியாவே ஏற்பதாக சொல்லி இருக்கிறது வெளியுறவு துறை அமைச்சகம். எதுக்காக இந்தியில் பேசனும், 8வது அட்டவனையில் உள்ளபடி 22 மொழியையும் விட்டு விட்டு வெறும் இந்திக்கு மட்டும் ஏன் இந்த தகுதி. மீண்டும் மௌனம்.

3ம் மொழி கொள்கைன்னு சொல்கிறீர்கள், இந்தி, ஆங்கிலம், சமசுகிரிதம் என்று கொண்டு வரவேண்டும் என்று சுற்றரிக்கை விட்டுள்ளார்களே, இந்தி திணிப்பையே வேண்டாம் என்று சொன்னோம், இப்போ அதோடு சேர்த்து சமசுகிரித திணிப்பை எதிர்க்கமாட்டோம்னு நினைகிறீர்களா. அம்பேத்காரே சமசுகிரிதம் தான் வரனும்னு சொன்னார்.

இப்படி ஆத்து ஆத்துன்னு ஆத்தினார்கள் பாசகவினர்கள் இந்த காணொலியில்.

எந்த ஒரு கேள்விக்கும் மறைமுகமாகவோ நேரடியாகவோ பதிலே சொல்லவே இல்லை பாசக. எல்லா கேள்விகளுக்கும் வழக்கம் போல, காங்கிரசு கொண்டு வந்தத நாங்க முன்னெடுது மேம்படுத்தி செல்கிறோம்ன்னு சொல்கிறார்கள்.

மாற்றம் முன்னேற்றம் வளர்ச்சி என்று சொல்வதெல்லாம் பாசகவை பொருத்த அளவில், சமூக சமன்பாடுகளை களைந்து மீண்டும் அந்த பாகுபாடுகளை ஆழமாக ஆக்கி ஒருவனை ஒருவன் மிதித்து நசுக்கி இன்பம் காணும் ஒரு மனநோய் நிலைஅவர்களுக்கு. அந்த அரிப்பை தீர்த்துக்கொள்ள அவர்களுக்கு அரசியல் களம் அமைத்துக்கொடுத்துவிட்டீர்களே மக்களே.......