Friday, March 30, 2018

பாசக ஒரு நயவஞ்சக கட்சி என்று அப்பட்டமாக காவிரி பிரச்சனையில் காட்டி இருக்கிறது

 நயவஞ்சம் என்றால் நல்லவிதமாக பேசி நம்பவைத்து கழுத்தறுப்பது என்று அனைவருக்கும் தெரியும். தமிழக மக்களின் நலம் தான் தங்களுக்கு எல்லாம் என்று வெளியில் சொல்லிக்கொள்ளும் பாசகவின் தமிழிசை மற்றும் அனைவரும் தமிழகத்துக்கு ஏதாவது தேவை என்று வந்தால் முதலில் எங்களுக்கு வாக்களித்து அதிகாரத்தில் உட்கார வையுங்கள் பிறகு பார்க்கலாம் என்று கதைகளிலும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பணையமாக பெண்களையும் குழந்தைகளையும் பிடித்து வைத்துக்கொண்டு இதை செய் இல்லனா இவர்களை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவது போல் அல்லவா பாசக மிரட்டுகிறது.

சல்லிக்கட்டுக்கும் இப்படி தான் செய்தார்கள், நீட்டு பரீட்சைக்கு இப்படி தான் செய்தார்கள், கூடங்குளம், நியூற்றினோவுகும், தூத்துகுடிக்கும் இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் எங்களை ஆட்சியில் அமர்த்தவில்லை ஆதலால் பொம்மை அரசை வைத்து இப்படி தான் செய்வோம் என்று மிரட்டி வைக்கிறது பாசக அரசு.

தமிழகத்தில் இந்த பினாமி அரசை வைத்தே தமிழகத்தை குழி தோன்டி புதைத்துக்கொண்டு இருக்கிறது பாசக அரசு. இந்த பினாமி அரசு வீட்டிற்கு போவதற்குள் தமிழர்கள் அனைவரும் தமிழகத்திலேயே அகதிகளாக ஆக்கப்பட்டுவிடுவார்கள் போலும்.

இந்த இலட்சணத்தில் மூச்சு முன்நூறு தடவை தமிழகத்தின் நலனை பேணிகாக்கவும் வாழ்வாதாரங்களை மீட்டு எப்பதற்காத்தான் பாசக தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்று 'இந்துகளின்' பிரதினிதியாக எங்களை தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும் சொல்கிறது இந்த நயவஞ்சக மதவெறி கட்சி.

இப்படி எல்லாம் மட்டமான அரசியல் செய்ய கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல் எந்த மான வெட்கமும் இல்லாமல் எப்படி இந்த தமிழிசை வகையராக்கள் பொதுவெளியில் வந்து சிரித்துகொண்டு பேட்டி எல்லாம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த மானம் கெட்ட வருவாயில் வாங்கி திண்று வயிறு பிழைப்பதற்கு பதில் ........... அது கொஞ்சம் கௌரவமாக இருக்கும்.

ஒரு பினாமி அரசாக இருக்கும் போதே இவ்வளவு நயவஞ்சகமாக தமிழகத்தை அழிக்க முடியும் என்றால் ஆட்சிக்கு எதுவும் வந்தால் அவ்வளவு தான் மொத்தமாக தமிழ்கத்தை விலை பேசி விற்றுவிட்டு நம்மை எல்லாம் அகதிமுகாமில் அடைத்து வைத்துவிட்டு பசனை பாடவைத்து உண்டகட்டியை கையில் கொடுத்து சர்வம் கிருசுணா அர்பணம் என்று சொல்லி செல்வார்கள்..........சாக்குரதை மக்களே கவனம்.......

0 comments: