Thursday, December 31, 2009

புத்தாண்டு 2010

பழையன கழிதலும் புதியன புகுதலும் புத்தாண்டாம் என்று சொன்ன நாட்களை மனதில் இத்தனை ஆண்டு காலம் வந்தோம்.

ஆனால் 2009 கொடுத்து இருக்கும் அழிவுக்கு அளவே இல்லை. மனித இனம் பார்த்திராத அவலம் கண்டு உலகமே வெட்கி தலை குனிந்த வருடமாக அல்லவா அமைந்தது இந்த ஆண்டு. எவ்வளவு ஏமாற்றங்கள். எவ்வளவு பெரிய துரோகம். மனித இனம் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்ததும். அதை அனைத்துலகம் கைகட்டி வேடிக்கை பார்த்த பிறகும் எப்படி நமக்கு எல்லாம் நல்ல உறக்கம் வரும்.

இனிமேல் என்ன என்ன செய்தாலும் அடைந்த இழப்புக்கு ஈடாகுமா அல்லது, அந்த இழப்புகளை சரி செய்ததா ஆகிவிடுமா.

காந்தி பிறந்த நாடும், புத்தன் அவதரித்த நாடும் செய்யும் காரியமா இந்த செய்கைகள். அன்பும் பண்பும் பயனும் அது என்று உலகுக்கு வழங்கிய தமிழர்களின் வாழ்கை இவ்வளவு மலிவா........

பக்கத்து மாநிலத்து மனிதர்கள் தண்ணீர் தர மறுத்த காலம் எல்லாம், உச்ச நீதிமன்றம் சொன்னாலும் கேளேன் என்றால் பிறகு எதற்கு சட்டமும் அதன் காவலர்களும்.

இந்த உரிமையை பாதுகாக்க முடியவில்லை பிறகு என்னதான் உனக்கு வேலை, இதிலே அரசு இது அது என்ற அலங்கார வார்த்தைகள்.............

இந்த ஆண்டு அல்ல, இன்னமும் எத்தனை ஆண்டுகள் ஓடினாலும் இனிமேல் எங்களுக்கு எல்லாம் புத்தாண்டும் இல்லை தீபாவளியும் இல்லை. என்றைகு எங்களுக்கு நீதி கிடைக்கின்றதோ அன்றைக்கு கொண்டாடி கொள்கின்றோம் இந்த நன்னாட்களை அது வரையில் எங்களது சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் நினைவு நாட்கள் மட்டுமே...............இவை இரண்டும்.....

Wednesday, December 30, 2009

ஏ.ஆர்.ரஹ்மானின் ஹிந்தி ராஜ்ஜியம் - தொடர் ஆரம்பம் - கானா பிரபா

கானா பிரபா இந்த தொடரை எழுத துவங்கினாலும் துவங்கினார், உடனே இராசா இரசிகர்களும், இரகுமான் இரசிகர்ளும் ஒருவருக்கு ஒருவர் சண்டையில் இறங்க தொடங்கிவிட்டார்கள்.


படித்ததும் பின்னூட்டம் இடவேண்டும் என்று தான் இருந்தத்து, ஆனால் விளக்கம் சற்று அதிகமாக இருப்பதால் தனியாக பதிவாகவே எழுதிவிடுவோம் என்று எழுதுகிறேன்.


இந்த பேச்சுகளில் தவிர்க்க முடியாத உண்மை, இராசாவின் வரவுக்கு பிறகு தமிழ் பாட்டுகளை தமிழர்கள் கேட்பதை என்றது ஒன்றும் இழி செயலோ பவமோ இல்லை என்ற நிலைக்கு வந்தது. அது வரையில் இந்தி பாடல்கள் தாம் தரமானவை, இந்தி பாடல்கள் கேட்பவர்கள் தாம் அறிவாளிகள் என்று எல்லாம் இருந்த மாயை எல்லாம் அகன்றது அதற்கு பிறகு தான்.


ஆனாலும் ஆங்கிலப்பாடல்களை கேட்பதும், பாடுவது, இசைப்பது தான் உண்மையான திறமை என்ற மாயை தொடர்ந்துக்கொண்டு தான் இருந்தது இராசா வந்து இத்தணை ஆண்டுகாலங்கள் ஆன பிறகும்.


இந்த மாயை இரகுமானின் வரவில் மெல்ல மறைய துவங்கியது என்றால் மிகையாகாது. அது வரையில் அந்த அளவுக்கு துல்லியமான ஒலிபதிவிலும் சரி, மேற்கத்தி முறையையும் அப்படியே அச்சு அசலாக தமிழிலிலோ அல்லது மற்ற இந்திய மொழிகளிலோ அது வரையில் இல்லை, இது எவராலும் மறுக்க முடியாத உண்மை.


இன்னமும் தெளிவாக சொன்னால், மேற்கத்திய இசையை போல் தான் எல்லோரும் உருவாக்கி கொடுத்தார்களே தவிர, மேற்கத்திய இசையிலே கொடுக்கவில்லை. கொடுக்க முடியவில்லை என்று சொல்வதற்கு இல்லை. அப்படி செய்தால் அவர்களது பெயர் களங்கப்படுத்தப்படும் என்று நினைத்து இருக்கலாம் அல்லது அந்த பாணி தனக்கு தேவை இல்லை என்றும் இருந்திருக்கலாம்.


ஆனால் இரகுமான், அந்த பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டு மிகவும் நேர்த்தியாக மேற்கத்திய இசையை கொண்டு தமிழ்பாடல்களை வழங்க தொடங்கினார்.


அது வரையில் மேற்கத்திய இசையை மாதிரியும், மேற்கத்திய கலப்பிசையுமாகவே கேட்டு வந்த தமிழர்களுக்கு அந்த அசல் மேற்கத்திய இசை மிகவும் பிடித்து போனது. பேட்டை இறேப் பாடல் வந்த போது அதை நையாண்டியடிக்காத நபர்களே இல்லை.


இந்த காலகட்டத்தில் தான், இந்தியாவில் பண்பலைகள் பிரபலமாகிக்கொண்டும், வானொலியின் வர்த்தக ஒலிபரப்புகளும் கோலோச்சிக்கொண்டு இருந்த காலம்.


இந்தியாவில் வானொலி என்றால் அது சிற்றலை இல்லாத வானொலியா என்றது போக, பண்பலை இல்லாத வானொலியா என்ற நிலைக்கு சென்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


சின்ன சின்ன வீடுகளில் கூட பெரிய அளவிலான இசை பெட்டிகளை வாக்கி வைக்கும் பழக்கமும், சின்ன பெட்டிகளிலே கூட எல்லா அலைகற்றைகளும் ஒழுங்காக ஒலிக்கும் படியாக சந்தையில் விற்க தொடங்கிய காலம் அது.


ஆக மொத்தத்தில் இரகுமானின் புதிய இசை, துல்லியம் குறையாமல் எல்லோரது வீடுகளிலும் எப்பொழுதும் இசைக்க துவங்கியது. அது மட்டும் அல்லாது இரகுமானின் ஆரம்ப கால படங்கள் கல்லூரி வாழ்க்கையை கொண்ட படமாகவும் வர துவங்கியது.


அந்த நேர்த்தியான புதிய வடிவம் தமிழர்களின் மனதை ஆக்ரமித்ததில் வியப்பு ஏதுமே இல்லை.


இந்தி இரசிகர்களுக்கும், தமிழக இரசிகர்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு.


இந்தி படம் இன்றைக்கு ஒன்று வந்தால் அதன் கதை என்னவாக இருக்கும் என்று ஒரு 4 அல்லது 5 விதத்திலேயே அடங்கிவிடும். ஆனால் தமிழ் படங்களுக்குள் அதிக வித்தியாசம் உண்டு, இது அனைவரும் அறிந்ததே மேலே விளக்கங்கள் தேவை இல்லை என்று நினைக்கின்றேன்.

இந்தியில் இப்படி 5 அல்லது 6 வகைக்குள்ளாகவே படங்கள் வந்தாலும், அந்த பழைய கதையிலும் தலைவனும் தலைவியும், அன்றைய காலத்து வண்டிகளும், உடைகளும் என்று எப்போதுமே உலகத்து அந்த நிமிட நடை, உடை பாவனைகளில் இருப்பார்கள்.

அதாவது பழைய கதையாக இருந்தாலும், அதில் தலைவன் செய்வது பழைய செயலாக இருந்தாலும். அதை அந்த நிமிட நாகரீக உடையிலும், சிகை அலங்காரமும் கொண்டு தான் செய்வார்கள். அதிலும், சரித்திர கால படமாக இருந்தாலும், இந்த நவீன உலகின் நவீன வண்ணங்களை கொண்ட அந்த கால உடைகளையும் அவர்கள் அணிய தவறுவது இல்லை.

இப்படி இந்தி படத்தில் கதையை தவிர்த்து மற்ற எல்லம் அந்த நிமிட நடை உடை பாவனைகளை கொண்டவர்களுக்கு இசையில் மட்டும் ஒரு மாபெரும் தோய்வு. தமிழக திரை இசையில் வந்த நவீனம் கூட இந்தி இசையில் இரகுமான் அங்கே செல்லும் வரையில் இல்லை.

எப்படியாவுது இந்த இசையை மட்டும் சரி செய்த்துவிட்டால் இந்தியின் அத்தனை துறையிலும் அந்த நிமிட பூச்சு முழுமையாக பூர்த்தியாகிவிடும் என்று ஏங்கிய இந்தி படத்துறைக்கு சரியான தேர்வாக இரகுமான் இயற்கையாகவே அமைந்தார்.

அது மாதிரியே இந்தியில் வேண்டும் என்று திண்டாடியவர்களுக்கு தமிழி போல் அதே மேற்கத்தியத்தில் தமிழ் பாடல் போல் இந்தி என்று கொடுக்க. அவர்களும் திக்கு முக்காடி தான் போனார்கள்.

மேலும் இரகுமானின் வரவுக்கு பிறகு அந்த மாதிரியான மேற்கத்திய இசையை அவரைபோல் மற்றவர்கள் பிரதிகூட(copy) எடுத்து அடிக்க முடியவில்லை, இதுவும் அவரது பலத்தில் ஒன்று.

அப்படியே அடித்தாலும் மேடைக்கச்சேரிகளில் வரும் தரத்தில் தான் வந்ததே தவிர, இரகுமான் கொடுக்கும் துல்லியத்தில் இல்லை, இல்லவே இல்லை. தமிழில் கேரிசு செயராசு ஒரு அளவிற்கு இரகுமானின் தரத்தில் பாடல்களை கொடுக்கிறார். அவரும் இந்திக்கு எல்லாம் படங்கள் செய்வது இல்லை.

இவ்வளவு வெற்றிகளுக்கு பிறகு இரகுமான் தனது விருப்பமாக இந்துத்தானியிலும், மற்ற இந்திய இசை முறையிலும் பாடல்களை கொடுக்க துவங்கியுள்ளது ஒரு நல்ல துவக்கம். அதாவது இந்திய இசையை அப்படியே சுத்தமான இந்திய இசையாக, கலப்பிசையாக இல்லாமல் (நிலாகாய்கிறது, இந்திரா) அதே துல்லியத்தில் இந்தியிலும் கொடுக்க துவங்கி இருப்பது ஒரு நல்ல துவக்கம்( தில்லி 6 படத்தை உதாரணமாக சொல்லலாம்).

இப்படி இந்தியில் இருந்த ஒரு நாகரீக வெற்றிடத்தை வெற்றியிடமாக தனக்கு ஆக்கிக்கொண்டவர் தான் இரகுமான். மற்றபடி அடித்த காற்றில் அவர் மேலே சென்றார் என்று எல்லாம் அவரை தூற்றுவது சற்றும் பொருந்தாது.

நவீன இசை வரும் போது எல்லாம் பழைய பாடல்களின் இரசிகர்கள் அவ்வளவு எளிதில் அதை ஏற்றுக்கொள்வதற்கு இல்லை. பிறகு அந்த பாடல்களே பழைய பாடல்களாக வரும் போது அது எவ்வளவோ தேவலை என்று சொல்லும் அளவுக்கு எல்லாம் அவர்கள் செல்ல சொல்ல தயங்குவது இல்லை. இது எப்போதும் நாம் பார்க்கும் வழக்குகளில் ஒன்று.

கானா சொல்வதை போல், தனக்கு என்ற ஒரு பாதையை அதுவும் மற்ற எவருமே பிரதி கூட எடுக்க முடியாத பாதையாக கொண்டவர் தான் இரகுமான். அவர் இந்தியில் கோலோச்சுவது ஒன்றும் ஆச்சரியமான செயல் இல்லை. சொல்லப்போனால் இப்போது நவீன இந்தியாவின் இசையின் முன்னோடியாக திகழ்ந்து, ஆலிஉட்டின் படங்களுக்கு இசையமைக்கும் வேலையும் சத்தம் இல்லாமல் செய்த்துக்கொண்டு இருக்கிறார்.

இவர் இங்கிலாந்தில் இருந்த காலத்தை ஆலிஉட்டில் செலவிட்டு இருந்திருந்தாரானால் எப்பொழுதோ இன்னமும் ஒரு பெரிய அங்கிகாரம் அவருக்கு கிடைத்து இருக்கும். இருந்தாலும் ஒன்றும் குறைந்து விடவில்லை. முதல் படத்திலேயே தேசிய விருது என்றால், முதல் இங்கிலாந்து படத்திலேயே ஆசுகர் விருது. வாழ்த்துகள் இரகுமான்.

Tuesday, December 29, 2009

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 4

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 3
அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 2
அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 1


இந்த நூடுல்சு வீச்சத்திற்கு பிறகு, மனது இது சம்பந்தமாக மற்ற பொருட்களின் மேலும் சந்தேகம் கொள்ள நினைத்தது. அப்படி வந்த நிகழ்விலே இன்னமும் ஒரு பயங்கரம் தெரிய துவங்கியதும் தான் பேய் அறைந்தார் போல் ஆனேன்.


அமெரிக்காவில் தனி நபர்களும் மொத்த வணிக விலைகளில் பொருட்களை வாங்க சாம்சு கிளப்பு(Sams Club), பிசேசு(BJ's), காச்சுட்கோ(Costco) போன்ற நிறுவனங்கள் அனேகமாக எல்லா ஊர்களிலும் ஒரு வகையாவது இருக்கும். இந்த கடைகளில் மொத்த விற்பனை விலைக்கு பொருட்களை தனி நபர்களுக்கு தந்தாலும், பொருட்களை அதிக அளவில் தான் கொடுப்பார்கள். அப்படி பற்பசை வாங்கியதில் சென்ற ஆண்டு வாங்கியதில் கடைசி குழாய் தீர்ந்து போக அடுத்த நாளே வால்மார்டில்(Walmart) அதே பற்பசையை திரும்பவும் வாங்கினோம்.


அந்த பற்பசையும் அதற்கு முந்தைய நாள் பயன் படுத்தியற்கும் 100% வித்தியாசம். புதிய பசையில் நுரையே இல்லை, குறைந்தது 3 அல்லது 4 முறையாவது பசையை மீண்டும் மீண்டும் உபயோகித்தால் தான் பல் துலக்கியதாகவே உணர முடியும் போல் இருந்தது.


என்னடா இது மதுரைக்கு வந்த சோதணை என்று, மிச்சம் மீதி இருந்த பழைய பசைகுழாயில் இருந்து எடுத்து பார்த்தால் சந்தேகம் உறுதிபடுத்தப்பட்டது.


புதிய தயாரிப்பில் நூடுல்சில் ஆடிய அதே கபட வேலை இந்த பற்பசையிலும்(Colgate pamolive) அமெரிக்க முதலாளிகள் விளையாடி இருப்பது தெரியவந்தது.


அட வால்மார்டில் தான் இப்படி, சேம்சு கிளபில் வாங்கினால் தரமாக இருக்கும் என்று மறுபடியும் ஒன்றை சேம்சு கிளபில் வாங்கினோம் அங்கேயும் இப்படி தான்.


எடுத்தற்கு எல்லாம் வாடிக்கையாளர்களின் திருப்தி தான் முக்கியம், பணமும் பொருளும் அதற்கு பிறகு தான் என்று உலகுக்கு தன்னை உதாரணமாக எப்போதுமே கூறிக்கொள்ளும் அமெரிக்காவின் நிலையா இப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறது.


அமெரிக்கா நாடு உருவாகி இத்தனை ஆண்டு காலத்தில் எத்தனையோ பொருளாதார சரிவுகளை கண்டு மீண்டு வந்திருக்கிறது. அதுவும் இரண்டாம் உலக போரின் முடிவில் இரயில் தொற்றிக்கொண்டு போய் வேலைக்கு வரிசையில் நிற்பார்கள். இன்றைக்கு இத்தனை மக்களுக்கு மட்டும் தான் வேலை மற்றவர்கள் எல்லாம் போகலாம் என்று சொல்லும் நிலைக்கு எல்லாம் சென்றது உண்டு. நிவேடாவில் ஊவர்(Hoover) அணைகட்டு கட்டும் போது, மெக்சிகோவில் இருந்தும் இன்னும் பல இடங்களில் இருந்தும் நடந்தே மக்கள் வந்ததாகவும், வரும் வழியில் மக்களை பலி கொடுத்தும் போட்டி இட்டுக்கொண்டு வந்து அணைக்கட்டில் வேலை பார்த்தார்கள்.


அப்படி பட்ட காலங்களில் கூட இப்படி எல்லாம் உண்ணும் பொருளில் இருந்து, அன்றாட தேவைகளுக்கு பயன்படும் அத்தனை பொருட்களிலும் தரத்தை குறைத்து நாடகம் ஆடியது இல்லை தான். பின் ஏன் இந்த திருட்டு வேலை இப்பொழுது. அப்படி என்ன அவசியம் வந்தது...............................

Sunday, December 27, 2009

அவதார் ஆங்கில படமும் - இளையராசா மற்றும் சாருவும்.( திரை விமர்சனம்)

சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் ஆங்கில திரைப்படம் இது. கிட்டத்தட 11 ஆண்டுகளுக்கு பிறகு சேம்சு கேம்மரூன் கொடுத்திருக்கும் படம் இது.

இந்த படத்தை பற்றிய விமர்சனங்களை பதிவர்கள் மிகவும் ஆழமாகவும் நுனுக்கமாகவும் எழுதிவிட்டபடியால் மறுபடியும் ஒரு மறுபதிவு என்று சொல்லும் அளவிற்கு செல்லாமல், மற்றவர்கள் சொல்லாமல் விட்ட விமர்சனங்களுக்கு செல்வோம்.

தொழில் நுட்ப மாயாசாலங்களாக இருக்கும் இந்த படத்தில் இசை தனது பங்கை சிறப்பாக செய்து இருக்கிறது. குறிப்பாக அந்த பென்டோரா காடுகளை காட்டும் காட்சிகளில் காட்சிகளின் தன்மைகளுக்கு ஏற்றார் போல் மிகவும் அருமையாக காட்சியை விட்டு தனித்து தெரியாமல் காட்சியோடு மிகவும் ஒன்றிப் போய் அமைந்து இருக்கிறது இந்த படத்தின் இசை.

காட்சிக்கு காட்சி பிரம்மாண்டமாக காட்டும் இயக்குனர், அந்த பிரம்மாண்டங்களை மனதிலே பதிய வைகிறார் அந்த இசையமைபாளர். பெரிது பெரிதாக காட்டப்படும் சுரங்க இயந்தரங்களும் சரி, சுரங்க தளபாடங்களும் சரி. அவர்களுக்கு பாதுகாப்புக்காக கொண்டு வந்து குவிக்கப்பட்டு இருக்கும் இரணுவ தளபாடங்களாக இருந்தாலும் சரி, அப்படி ஒரு பிரம்மாணமான பின்னனி இசை இந்த படத்திற்கு.

முதல் முறையாக கதையின் தலைவன் பென்டோரா காட்டில் மாட்டிக்கொள்வதும், அந்த மர்மம் நிறைந்த சூழலில் நடக்கும் செய்களுக்கு காட்சியும் இசையும் அமைந்து இருக்கும் பாருங்கள், அப்படி ஒரு திகிலாக அமைத்து கொடுத்து இருப்பார்கள். முதலில் காட்டும் அந்த பெண்மணியை வைத்து காட்சி எப்படி நகரும் என்று தெரிந்தாலும், காட்சியின் வீரியத்தை அந்த இசையும் காட்சி அமைப்பும் தூக்கி நிறுத்தி இருக்கிறது.

மனித இனம் எங்குமே பார்த்து இருக்காத ஒரு உலகத்தை படைத்து நமக்கு காட்டி இருக்கிறார் இயக்குனர். படம் முக்கால்வாசி காட்சிகள் அசைபடமாக அமைந்து இருக்கிறது. அசைபட பாத்திரங்களும் மனிதர்களும் ஒருங்கே ஒரே காட்சியில் நடித்து இருக்கும் காட்சிகள் குறைவு என்றாலும் அசைபட சறுக்கல்கள் இல்லாமல் எடுத்து இருக்கிறார்கள்.

படம் துவங்கிய நேரத்தில் இருந்து பென்டோரா காடுகளை காட்டும் வரையில் படத்தின் இசை இந்தகால இசையில் இருக்கும். தேவைக்கு ஏற்றார் போல் ஆங்காங்கே காட்சிகளுக்கு தகுந்தார் போல் ஓங்கி ஒலிக்கவும். இதமாக ஒலிக்கவும் இசையை அமைத்து இருப்பார்.

ஆனால் பென்டோரா காட்டையும், அந்த மனிதர்களின் நடமாட்டங்களையும் காட்டும் போது இசை அப்படியே சம்பந்தமே இல்லாத, அது வரையில் வந்த இசைக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத திசையில் பயணிக்கிறது.

இது முற்றிலும் வேறு உலகம், இதிலே வாழ்பவர்களுக்கும் மனிதர்களுக்கு உருவத்தில் ஒற்றுமை இருந்தாலும் அளவிலும், பழக்க வழக்கங்களிலும், உடல் வேதியல்களிலும் அவர்கள் மனிதர்களை போல் அல்ல என்று சொல்ல, காட்சி அமைபுகளும், அந்த அசைபட பாத்திரங்களும் மட்டும் அல்லாது நம்மையும் அறியாது நம்மை ஆட்கொள்ளும் அந்த இசை.

இந்த வித்தியாசமான இசை அவ்வப்போது வந்து போனாலும், நீண்ட அளவில் வருவது கதை தலைவன் இறுதி கட்ட தேர்வுக்கு செல்லும் காட்சிகளில் தான். அந்த காட்சியின் அமைப்பு இது தான், தலைவன் அந்த போட்டியின் இறுதி நிலையில் தேர்ச்சி பெறுகிறான். அதோடு மட்டும் நில்லாது அந்த விந்தை உலகத்தில் அவனை ஒருவனாக ஒத்துக்கொள்ளும் தருணம் அது. மேலும் அந்த இடிராகன் பறவையின் முதுகில் அமர்ந்து அதை செலுத்த பழகிக்கொள்ளும் வேளையில் கற்றுக்கொடுத்தவளும் அவனோடு பறந்து மனதில் காதல் அரும்பும் காட்சிகளாக அவைகள் நீளும்.

இந்த காட்சிகளுக்கு ஒரு இசை கோர்வையை பின்னனியில் சேர்த்து இருப்பார்கள் இந்த படத்தில். அந்த காட்சிகளின் தீவிரம், பிரம்மாண்டம் என்று எல்லாவற்றையும் விலக்கிவிட்டு கவனித்தால் மட்டுமே அந்த இசையை தனியாக கவனிக்க முடியும், அப்படி ஒன்றிப்போய் இருக்கும் அந்த இசை.

இந்த இசையை கவனிக்கும் போது மனதில் இரண்டு நபர்கள் வந்து போனார்கள், ஒன்று இசைஞானி இளையராசா, இரண்டாவது சாரு.

1997ல் மலையாளத்தில் இளையராசா குரு என்று ஒரு படம் தந்தார். அந்த படத்திற்கு இசையமைக்க அங்கேரி சென்று, பழங்கால வாத்தியங்களை கொண்டு அந்த விந்தை உலக மக்களின் காட்சிகளுக்கும், கண் இல்லா அந்த மனிதர்கள் செவியை மட்டுமே வைத்து வாழுபவர்களிடம் இசை எவ்வளவு தரமாகவும் ஆழமாகவும் இருக்கிறது என்று காட்டும் வகையில் பாடல்களும் பின்னனி இசையும் என்று இசை மழை பொழிந்து இருப்பார் இராசா.

இளையராசாவின் பலமே காட்சிகளுக்கு ஒன்றிப்போய் இசையமைப்பது தான். அப்படி தான் குருவிற்கும் இசையமைத்து இருப்பார். அந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் மிகவும் இனிமையாகவும், பழமையாகவும் இருக்கும். அந்த படத்திலும், நிகழ்காலத்தில் நடக்கும் கதை ஒரு விந்தை உலகுக்கு தாவும். அங்கேயும் அந்த விந்தை உலகை பார்க்கு மோகன்லாலின் உணர்வுகளையும், அந்த காட்சிகளுக்கும் என்று பின்னனியும், பாடல்களும் நிகழ்வு உலகத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு இசை வடிவத்தை கொடுத்து இருந்தார். அந்த கால இசை கருவிகளை கொண்டு. அதிலும், அந்த கருவிகளில் என்ன இசை வருமோ அந்த அளவிற்கு மட்டும் என்று அமைத்துகொடுத்து இருந்தார்.

அந்த படத்தின் இசை சாயல்கள் இந்த படத்தில் இந்த பென்டோரா காட்சிகளில் நம்மால் கேட்க முடியும். இங்கே சாயல் என்று சொல்வது, அதே இசையை எடுத்து அப்படியே போட்டுள்ளார்கள் என்று அல்ல. அந்த இசையை போல் இங்கேயும் வித்தியாசப்படுத்தி மண்ணின் மைந்தர்களது இசையாக அது பயணிக்கும் பாணியை சொல்கிறேன். அதாவது 1997ல் இளையராசா கையாண்ட அதே முறையை இன்றைக்கு இந்த அவதார் படத்தில் அப்படியே கையாண்டு இருக்கிறார்கள். அந்த ஒற்றுமையை நம்மால் கட்டாயம் அறிந்து கொள்ளமுடியும். இதற்கு இசை தெரிந்து இருக்கவேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை.

இந்த மாதிரியான காலசுவடு படங்களில், அந்த காலத்தில் குருடர்களால் என்ன என்ன இசைக்கருவிகள் எல்லாம் பழகிக்கொள்ள முடியுமோ அந்த கருவிகளை மட்டும் உபயோகிப்பது. அந்த கருவிகளில் வரும் எளிய ஏற்ற இறக்கங்கள் மட்டுமே வைப்பது (கர்னாடக சங்கீதத்தில் வருவது போல் நெளிவு சுளிவுகள் இல்லாமல் இருபதை சொல்கிறேன்). மேலும் அந்த இசைக்கோர்வைகளில் இசையை கலக்கும் அளவிலும் அந்த கருவிகளின் விகிதமும் அந்த அளவு விகிதாசாரத்திலேயே இருக்கும்.

இந்த செயல்களில் தான் இராசா மற்ற இசையமைபாளர்களை எல்லாம் தாண்டி தனியாக தெரிவார். இது அவருக்கு எந்த அளவிற்கு இசை தெரியும் என்ற புலமைகளை சாதாரண மக்களுக்கும் கூட அறியவைக்கும் அவரது செயல்கள்.

குருவில் கேட்கும் தாளங்களும், அந்த தாளங்களுக்கு ஊடாக வரும் மெல்லிய புல்லாங்குழல் மற்றும் மற்ற கிராமிய கருவிகளின் தாளங்களும் கீதங்களும் இங்கே வரும். மொத்தத்தில் இராசாவின் இசையை கேட்டுக்கொண்டு இருப்பது போல் ஒரு உணர்வு இந்த படத்தை பார்க்கும் போது.

இந்த இடத்தில் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது, ஆமாம் இந்த உலகதரமான இசை என்று பதிவர்கள் எல்லாம் எழுதித்தள்ளுவார்களே அந்த மாதிரி ஏன் இந்த படத்தின் பென்டோரா காடுகளின் காட்சிகளுக்கு இசை அமைக்காமல், காட்டுவாசிகளின் இசையாகவும், இடன்டனக்கா தாளமாகவே இந்த உலக தரமான படத்திற்கு இசை அமைத்துள்ளார்கள் என்று.

பிறகு சாரு வந்து கேட்பார் ஆமாம் அங்கே அவர்கள் எல்லாம் இடிராகன் மேல் அமர்ந்து பறக்கிறார்கள், அங்கே எப்படி இப்படி ஒரு துள்ளிய ஒளிப்பதிவில் அத்தணை வாத்திய கருவிகளை வைத்துக்கொண்டு வரவழைக்கும் இசையை கொடுத்துள்ளார்கள். இங்கே சரியான இசையாக இருக்கவேண்டும் என்றால் அது அங்கே பறக்கும் இடிராகன் பறவையின்(விலங்கின்) இரகு சத்தைகொண்டு அல்லவா இசை அமைத்திருக்க வேண்டும். அதை விடுத்து இப்படி ஒரு பெரிய இசை குழு வாசிக்கும் இசையாக அங்கே வருவது எல்லாம் பொருந்தாத இசையாகத்தான் இருக்கும் என்றும் விமர்சிப்பார் பாருங்கள்.

பார்ப்போம் அந்த உலகத்தரமான இசை இந்த படத்திற்கு வந்திருக்கிறதா இல்லை வெறும் இடன்டனக்காவாக தான் இசை வந்துள்ளதா என்று சாருவும், அவரை போல் இராசாவின் இசையை விமர்சிக்கும் குழுவிற்கும் கேள்விகளை வைப்போம், என்ன பதில் சொல்கிறார்கள் என்று பொருத்து இருந்து பார்ப்போம். அப்படி ஒரு வேளை இந்த படத்தின் இசை உலக தரம் என்றால், எப்படி ஏன் என்று தெரிவிப்பார்கள் என்றும் பார்ப்போம்.........

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 3

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 2

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 1

உணவை தயாரிக்கும் தாணிய வகைகள் எல்லாம் விலையேறிய காலத்தில் அது எப்படி நீங்கள் கொடுக்கும் உணவு வைகளின் விலைகளில் மட்டும் மாற்றமே இல்லையே. அதுவும் இப்போது போட்டி போட்டுக்கொண்டு விலையை குறைத்தும் தரும் வேலைகளும் நடந்துக்கொண்டு வேறு இருக்கிறது. எப்படி இது சாத்தியமாகும்.

கடுமையான பொருளாதார நெருக்கடி ஒன்றும் சமாளிக்க முடியவில்லை என்றால் சிக்கன நடவடிக்கள் தான் மேற்கொள்ள முடியும் இப்படி சலுகைகளை அள்ளி வீச முடியாது. பிறகு எப்படி இந்த அமெரிக்க முதலாளிகளால் இப்படி செய்ய முடிந்தது.

இரண்டே இரண்டு வழிகளில் தான் இது சாத்தியமாக முடியும் ஒன்று, இது வரையில் இவர்கள் அடித்து வந்தது கொள்ளை இலாபமாக இருக்க வேண்டும், அல்லது இப்போது விலை குறைத்து கொடுக்கும் பொருளின் தரமோ மிகவும் மலிவான தரமாக இருக்கும். இவைகள் இரண்டையும் தவிர்த்து தேசபக்தியின் காரணமாக விலையை குறைத்து அமெரிக்காவிற்கு சேவை செய்கிறார்கள் என்று பொருள் அல்ல.

பிறகு அந்த நூடுல்சின் வீச்சத்தின் மர்மம் புலப்பட துவங்கியது. அடக்கடவுளே சீனர்களின் உணவு ஊழலுக்கு அளவே கிடையாது என்றது ஊரரிந்த இரகசியம். 2008ஆம் ஆண்டு இறுதியில் பால் மாவில் மக்லைனை கலந்து விற்றதில சீனக்குழந்தைகள் சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்டு இறந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம். அதை தொடர்ந்து சீனாவில் இருந்து எந்த விதமான பால் பொருட்களும் இனிமேல் வாங்குவது இல்லை என்று மற்ற நாடுகள் தடைவிதித்ததும் உங்களுக்கு நினைவு இருக்கலாம். இந்த பால் கலப்பு பொருள் கழிவறைகளை சுத்தம் செய்ய பயன்படும் ஒரு வேதிப்பொருள் என்றது தான் வேதணையிலும் வேதணையான செய்தி.

அப்படியானால் இந்த வீச்சம் கொண்ட நூடுல்சுகள் எதை கொண்டு தயாரிக்கப்படுகிறது. சீனத்தின் இரும்பு திரைக்கு பின்னால் நடக்கும் காரியங்கள் ஒருவரின் அறிவுக்கும் அறிவிக்கப்பட போவது இல்லை. ஆனால் என்னவாகத்தான் இருக்கும் என்று தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களும் சரி, மற்ற தன்னார்வ நிறுவனங்களும் சரி இந்த செய்கைகளில் ஒரு ஆய்வை நடத்தி இப்படி பட்ட பொருட்கள் எல்லாம் உண்ண கொடுக்கலாம், கொடுக்க கூட்டாது என்றும் இதுவரையில் அறிவிக்காமலும் இருப்பது தான் மிகவும் திகில் நிறைந்த மர்மமாகவே இருக்கிறது.......

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 2

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 1


பான்டா எக்சுபிரசு(Panda Express) அனைவருக்கும் தெரிந்த இன்னும் ஒரு அவசர உணவகம். சீன வகையை கொண்ட நிறுவனம். சீன வகைகள் என்றாலே இந்தியர்களுக்கு ஏன் உலகுக்கே நினைவுக்கு வருவது அவர்களுடைய நூடுல்சு(Noodles) உணவு தான்.

அதுவும் இந்த கடையின் சிறப்பு அசைவம் சாப்பிடும் மக்கள் மட்டும் அல்ல சைவம் சாப்பிடும் மக்களும் அதிகமாக இந்த நூடுசுவை வாங்கி சுவைக்க இந்த கடைக்கு வருவார்கள். இத்தணைக்கும் இந்த கடைகளில் கை துடைக்கும் காகிதம் இரண்டு கூட கொடுக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு கருமியர்களாக அவர்கள் இருந்தாலும் அந்த உணவின் சுவைக்காக மக்கள் கூட்டம் அங்கே அலை மோதும்.

ஆனால் கடந்த ஒரு வருடமாக இந்த பான்டாவின் நூடுல்சை சாப்பிடவே முடிவதில்லை. காரணம், அந்த நூடுல்சில் ஒரு வீச்சம் வருகிறது. சரி ஏதோ ஒரு இரண்டு நாட்கள் என்றால், இனி எப்பவும் அப்படி தான் வேண்டும் என்றால் வாங்கு இல்லை என்றால் ஓடிப்போ என்றும் இருக்கிறார்கள்.

என்ன இப்படி ஆகிவிட்டதே என்று மற்ற கடைகளில் வாங்கலாம் என்று ஊரில் இருக்கும் அனேக சீன உணவகங்களிலும் இதே நிலைமை தான். பிறகு தான் தெளிந்தது இது ஏதோ ஒரு நாடு தழுவிவ வேலையாக இருக்கும் போலும் என்று. அனேக தமிழக சீன உணவு இரசிகர்களுக்கு இது தெரிந்து இருக்கும் என்று நினைக்கின்றேன்.

2007ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்க இடாலரின் வீழ்ச்சியின் துவக்கத்தில், கிழக்கத்திய நாடுகளும், தெற்காசிய நாடுகளும் அமெரிக்காவிற்கு இனிமேல் தாணியங்களை விற்பது இல்லை என்று அறிவித்தது இந்தியா உட்பட.

அதுவரையில் 11 முதல் 16 இடாலர்கள் வரை விற்று வந்த அரிசி சிப்பங்கள், அன்றைய தினத்தில் இருந்து 30 இடாலர்களை தொட்டது. அரிசியை தொடர்ந்து, பருப்பு முதல் அனைத்து இந்திய உணவு பொருட்களின் விலைகளும் தலைவிரித்து ஆடத்துவங்கியது.

அந்த திகதியில் இருந்து இன்றைய நாட்கள் வரை இது வரையில் விலை குறையவும் இல்லை குறைப்பதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை.

இந்திய உணவு பொருட்களுக்குத் தான் கட்டுப்பாடு அதனால் விலையேற்றம் ஆனால் மற்ற பொருட்களுக்கு ஒன்றும் குறை இல்லை என்று 2009ஆம் ஆண்டும் மத்தியில் வரையில் இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் எந்த ஒரு விலையேற்றமும் இல்லாமல் இருந்த அமெரிக்க உணவு பொருட்களுக்கு விலையை கூட்டினார்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில்.

மக்கள் நினைக்கலாம் இந்த விலையேற்றங்கள் ஒன்றும் ஒன்றுக்கு நூறு என்று எகிறவில்லையே பிறகு இதற்கு போய் ஏன் இவ்வளவு விளக்கங்களும் பக்கங்களும் என்று கேட்பது காதில் விழாமல் இல்லை. இங்கே தான் அமெரிக்க முதலாளிகளின் அசல் முகம் தெரிய தொடங்கியது......

Monday, December 14, 2009

இந்தி படம் சோரி சோரி சுப்கே சுப்கே(Chori Chori Chupke Chupke), பிரியமானவளே, ஆங்கில படம் பிரிட்டி உமன்னின்(Pretty Women) கம்பனக்கமா....





இந்த இந்திப்படத்தை பார்க்க துவங்கிய போது அம் அப்கோ கேகோன் போல் ஏதோ படம் போல என்று இருந்தது. பிறகு படத்தில் பிரித்தியை காட்டும் காட்சிகளை காட்ட துவங்கியதுமே இது பிரிட்டி உமன் படத்தின் கம்பனாக்கம் என்று தெரிந்தது.

கதை இது தான் என்று தெரிந்ததும் பார்த்தது போதும் என்று தான் நினைத்தேன், ஆனால் படத்தின் வசனங்களும், வட நாட்டாரின் பணக்கார குடும்பத்தின் விளையாட்டுகளை காட்டிக்கொண்டு இருந்ததால், எப்படி தான் எடுத்து இருக்கிறார்கள் என்று பார்த்தேன்.

படம் நன்றாகத்தான் எடுத்துள்ளார்கள், அதுவும் கம்பனாக்கம் என்று முடிவு செய்த்துவிட்டால் எதையும் விட்டு வைப்பது இல்லை என்று கடைசிகாட்சி வரையில் எல்லா இடங்களிலும் உணர்ச்சிகரமாக அமைத்து இருக்கிறார்கள்.

படம் பிரிட்டி உமனை பார்த்துதான் எடுத்து இருக்கிறார்கள் என்று தெரியவேண்டும் என்று தான் அந்த பிரித்தியின் அறிமுக காட்சிகளும் சரி, பிறகு அவளை விலைமாது என்று தெரிந்துக்கொண்டு நாயகனின் நண்பன் பிரச்சனைகளை செய்யும் காட்ச்சிகளும் அப்படி படமால்லி இருக்கிறார்கள்.

படத்திலோ அல்லது பெயர் போடும் இடங்களிலோ அங்கே இருந்து தான் படம் வந்தது என்று சொல்லவில்லை என்றாலும் அந்த காட்சிகளின் மூலம் சொல்லிவிடுகிறார்கள். அந்த நேர்மைக்கு அந்த படகுழுவை பாராட்டுவோம்.

இந்த படத்தை பார்க்கும் போது தான் விஇச்சையின் பிரியமானவளே படமும் நினைவுக்கு வருகிறது. அந்த படத்திலும் மனதுக்கு பிடித்த பெண்ணிடம் ஆசை தீர இருந்துவிட்டு, முடிந்ததும் போதும் நீ போகலாம் என்று முதலில் சொன்னாலும். அடி மனதில் ஏற்பட்ட பாதிப்பால் உன்னுடனே இருந்து விடுகிறேன் என்று முடியும் கதையும் அடிப்படையில் பிரிட்டி உமனின் கதையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், தமிழில் வித்தியாச படவேண்டும் என்று, விலைமாதை ஏழை பெண்ணாக காட்டியுள்ளார்கள்.

நாயகனே பணக்காரனாகவும், சிறந்த வியாபாரியாகவும் ஆங்கிலத்தில் இருப்பதையும், பாலுவாகவும், நாயகனாகவும் பிரித்து கொடுத்துள்ளார்கள் தமிழில்.

ஆங்கிலத்தில் கடைகாரர்களிடம் அவமானபடும் நாயகியை தமிழில், ஒரு வருடம் ஒப்பந்தம் போட்டு வாழ்பவளே ஒரு வருடத்திற்கு பிறகு யாரோடு என்று கிட்டத்தட்ட விலைமாதாகவே கேட்ப்பதாக தமிழில் கேட்டு இருப்பார்கள்.

இந்தியிலோ அவர்கள் செய்த ஒரே வேலை, பிரிட்டி உமன் நடக்கும் இடத்தை ஒரு பெரும் பணக்காரர்களின் வீடாகவும். அந்த வீட்டில் அனைவரும் கருணையும் அருமையும் மிகுந்தவர்களாகவும் மட்டும் மாற்றி, பெரும்பாலான வசனக்களை மூலத்தை அப்படியே அப்பட்டமாக எடுத்துகொண்டு விட்டு. மற்ற இடங்களில், மிகவும் பாசமாக வசனங்களை அழகாக அமைத்துள்ளார்கள்.

இந்தியில் பெற்றுக்கொடுத்த குழந்தைக்கு ஈடாக எனது சொத்தையே கொடுத்தாலும் பத்தாது, இருந்தாலும் இவைகளை கொடுகிறேன் வேறு என்ன என்ன வேண்டும் என்று கேள் கொடுக்கிறேன் என்றும் சொல்லும் இடத்தில், குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட படத்தை காட்டி, அனாதையாக வந்த எனக்கு இவ்வளவு உறவுகளை கொடுத்தே பெரிய பரிசு அதற்கு பதில் பணம் கொடுத்து உடலை மட்டுமே விற்று வந்த என்னை கருவையும் விற்றவளாக ஆக்காதீர்கள் என்றும் சொலும் வசனங்கள் போன்றவைகள் தமிழில் இல்லை.

பொதுவாக இந்த மாதிரி படங்களை மொழி மாற்றம் செய்யப்படும் வேளைகளில், தமிழில் சிறப்பாக அமையும். ஆனால் பிரியமானவளேவை விட சோரி சோரி சுப்கே சுப்கே நன்றாக வந்துள்ளது. மொழி மாற்றம் தான் செய்தோம் என்று ஒத்துக்கொண்டு செய்ததால் அவர்களுக்கு இந்தியில் அதிக சுதந்திரம் இருந்தது. ஆனால் தமிழில் அவர்களும் மிகவும் குழம்பி, நம்மையும் எல்லாம் குழப்பியுள்ளார்கள்.

Saturday, December 5, 2009

இளையரசாவின் சாதனைகளை விளக்கும் பிபிசியின் சம்பத்குமார் - நன்றிகள் பல

இராசாவை பற்றிய அவரது சாதணைகளை பற்றிய அறிதல்கள் அரிதாகி வரும் சூழலில், அவரது சாதணைகளை விளக்கும் செவ்விகள் இங்கே. இதை கேட்கும் போது இராசாவின் மேல் இருக்கும் மதிப்புகள் மறு பதிவு செய்யப்படுவது நிச்சயம்.....................................

ஒன்று
http://www.youtube.com/watch?v=p5_WuymlhMs

இரண்டு
http://www.youtube.com/watch?v=BVkQ12b9O48&feature=related

மூன்று, வராளி என்ற இராகத்தை வைத்து மணிரத்தினம் இதியகோவிலில் படுத்திய பாட்டை இந்த பாடலில் வெளிபடுத்தும் இளையராசா, பார்த்தவிழி பார்த்த படி பார்த்து இருக்க....... என்ன அர்புதம் நீங்கே கேட்டு முடிவி செய்யுங்கள்....................................இந்த சிவனின் அசைவுகளையும் சிற்ப காட்சியினையும் காட்டி எழுத்தாளர் செயமோகனிடம் கேட்டோம், அதற்கு அவர் சொன்னார், அந்த காட்சியின் கோனத்தை பார்த்தீர்களா என்று. சிவனின் முடி எப்படி பறக்கிறது என்று கவனியுங்கள் என்று சொன்னார். அதி வேகமாக சுற்றும் ஒரு கோலத்தின் ஒரு வினாடியில் இலட்டச்சத்து ஒரு பங்கின் காட்சிதான் அந்த சிந்தம்பர நடராசரின் கோலம் என்று 4 மணி நேர நேர்காணலில் ஒளிவு மறைவு இல்லாமல் தெரிவித்த்தார்..........................
http://www.youtube.com/watch?v=bpgudIfVMAQ&feature=related

நான்கு
என்ன தான் இராசாவை குறை சொல்ல நினைத்தாலும் இன்றைக்கு ஒலிக்கும் இசையின் சூத்திரதாரி என்று சொல்லாமா அல்லது, இந்த பழக்கத்தை நமக்கு அறிமுகம் படுத்தியவர் என்று சொல்லலாமாஅ...இந்த இடத்தில் சாரு தோன்றுவது இயற்கையே அந்த விவாதத்திற்கு பிறகு வருவோம்...........................பீதோவானை மிஞ்சும் பாடல் என்று சுசாத்தாவால் பாராட்டபட்ட பாட்டக சம்பத்துகுமார் குறிப்பிடும் பாடல் இதோ..........வைரமுத்துவின் முதல் பாடலும் அதுதான்.................திரையிசையானாலும் சரி, அல்லது இயக்கம் ஆனாலும் சரி. அல்லது திரைகவியானும் சரி இப்படிதான் இருக்க வேண்டும் என்று இலக்கணம் அமைத்த பாடல் இது. இல்லை அது இல்லை இது தான் என்று எங்கே சாரு ஒரு உதாரணம் கூறுகிறாரா என்று பாருங்கள் மௌனமே பதிலாக மிஞ்சும் பாடலும் காட்சியும் இது............இது ஒரு பொன்மாலை பொழுது. சிலோன் வானொலு பொன்மாலை பொழுது என்று ஒரு நிகழ்சியே இந்த பெயரில் துவங்கியது என்றால் பார்த்துகொள்ளுங்கள்.................பொதுவாக சித்தாரை பாடலின் துவக்கத்திலே வாசித்தால் பாடல் கட்டாயம் பிரபலம் எனற கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கும் இராசாவை பாருங்கள்........... நதியை தேடும் கடல்........................கர்னாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் வித்தியாசமே இல்லை என்றது அதுவும் இராசாவின் இசையில் என்றது இவரது வல்லுனர் கோபாலின் கூற்று இது................ஆயிரம் தாமரை மொட்டுகளே ..இந்த பாடலுக்க சம்பத்து குமார் குடுக்கும் விளக்கமோ அபாரம். ஆனால் கேட்ட்கும் நமக்கோ வெகு சாதரணம..............ஒருவேளை இராசாவின் வெற்றியோ இது தானோ என்னவோ.............
http://www.youtube.com/watch?v=t3zLGvDSmNI&feature=related

ஐந்து, கண்மணியே காதல் என்பது கர்பனையோ, இந்த பாடலை இராசா குறிப்பிடும் போது கிட்டதட்ட 10 அண்டுகளுக்கு பிறகு கேளடி கண்மணி என்னும் படத்தில் பாலு மூச்சுவிடாமல் பாடும் பாடல் என்று குறிப்பிடும் போது..............அந்த பாடலை போலி 10 ஆண்டுகளுக்கு முன் எப்பொழுதோ பாலு பாடிவிட்டார் என்ற என்ற் உண்மை அனைவருக்கும் விளங்காமல் போனது என்னவோ இழப்பே...........இராசாவும் தேவாரமும் இங்கே...........இத்திய வானோலி தடைவிதித்த பாடல் இவரது ஆரம்ப பாடல்.......ஏராளமான வாத்தியங்கே வேண்டும் என்று இருந்த இராசாவால் எளிமையாக இசையமத்த கண்ணதாசனின் கடைசி பாடலின் பெருமையும் இவருக்கே...........
http://www.youtube.com/watch?v=-TCx3-DKWBc&feature=related

ஆறு, இராசாவே பேசும் செவ்விகள் இவைகள், அனேகமாக இசையில் அவரது வீச்சு இருக்கும் அளவிற்கு அவரது பேச்சு இருக்காது, இது அனைவரும் அறிந்ததே..........இராசாவின் தளபதியை விளக்கும் அவரே இதோ..........
http://www.youtube.com/watch?v=EgkC-mG47G8&NR=1

ஏழு, 90களிலும் இராசாவின் இராசாங்கமே................. நீ என்ன செய்தாய் இதில் என்று கல்கத்தாவில் கேட்ட கேள்வி இவருக்கு உந்துதலா அதுவும் 20 வருடம் கட்ந்தும்.................
http://www.youtube.com/watch?v=VwBmlAhOvtg&feature=related

எட்டு, சுசாத்தா சொல்லும் சிம்பொனிக்கு பாடல் எழுதிய வைரமுத்து..........கெட்ட சுவரம் என்று ஒன்று உண்டா முதல் முதலில் கேட்கப்படும் கேள்வி இது. அனேகமாக எது தனக்கு வருமோ அது தான் சிறந்த இராகம் என்று சொல்லும் மக்களின் மத்தியில் இந்த கேவியை எழுப்பும் இராசா............
http://www.youtube.com/watch?v=U9UWshVmJqw&feature=related

ஒன்பது, இரசாவின் குரலுக்கு என்று இருக்கும் ஒரு தனி கவர்ச்சி, அதை எப்படி எல்லாமோ குறிப்பிடலாம், ஆனால் எளிமையாக கவர்ச்சி என்றே சொன்னால் போதும் என்று நினைக்கின்றேன்......... நிங்களே கேட்டு கொள்ளுங்கள் நானாக சொல்ல ஏதும் இல்லை.........
http://www.youtube.com/watch?v=YHCnN746Mbg&feature=related

Friday, December 4, 2009

பிரியமான தோழியும் - விக்ரமனும்

கதையாசிரியர் ஆனாலும் சரி, திரைகதை ஆசிரியர் ஆனாலும் சரி, படிப்பவர்/பார்ப்பவர், மனம் கவர்வது தான் அவரது நோக்கமாக இருக்கும். அந்த வகையில் கவர்ந்தது கள்ளம் கபடம் இல்லாக் காவியம் "ப்ரியமான தோழி" இந்த இரு வார்த்தைகளுக்கு ஈடான வார்த்தைகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

யாரை எப்பொழுது விமர்சனம் செய்வது, எப்படி விமர்சனம் செய்வது என்று அலையும் காலத்தில் இப்படி விமர்சகம் செய்தால் பிடிபடுவார் என்று மனதுக்குள் தோன்றி காட்சிகள் அமைப்பது அனுபவம் இல்லா கர்பனையில் மட்டுமே சாத்தியமே. கர்பனையில் அன்றி அன்றாட வாழ்வில் அப்படி ஒரு தைரியம் வருமா என்ன.

பெண்ணே நீயும் பெண்ணா, பெண்ணாகிய ஓவியம், ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் கவியம்..............பின்னால் வரும் வார்த்தைகளை பற்றிய அக்கரை எல்லாம் எனக்கு இல்லை. காரணம் முதல் வரிதான், அந்த வரிகளுக்கு பிறகு எதையும் கவனிக்கும் எண்ணமோ, இல்லை நிலையிலோ நான் என்றும் இல்லை, .......................................

அந்த வரிகள் சொல்லும் காவியம் என்று சொன்னால் அது மிகையாது என்று சொல்லத்தான் வேண்டும் பிறகு என்ன தான் சொல்ல ..................................................

நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் கவித்துமாக பெண்ணை வருணித்து வந்த பாடல். பின்னால் வரும் வரிகள் அப்படி ஒன்றும் ஈர்ப்பாகவும் பொருளாகவும் இல்லை என்றாலும் முதல் வரிகள் அசத்தல், நல்ல இரசனை ஐயா உங்களுக்கு.

47 நாட்கள் - திரைவிமர்சனம்

கொஞ்சம் அல்ல மிக மிக காலம் தாழ்த்தி எழுதும் விமர்சனம் இது. 1980களில் வந்த படத்திற்கு இப்போது விமர்சனம் என்றால் பிறகு தாமதம் இல்லையா........


பாலச்சந்தரின் இயக்கத்தில் வந்த இந்த படத்திற்கு கதையும் வசனமும் சிவசங்கரி.


இரகு நாத ரெட்டி இந்த படத்தில் பட கருவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அவர் தான் பின்னாளில் பாலசந்தரின் எல்லா படங்களுக்கும் படம் எடுத்தவர்.


அனத்து இந்த படத்தில் உதவி இயக்குனர்களில் ஒருவர். இவர் தான் பாலச்சந்தரின் அனேக படங்களுக்கு கதை எழுதிகொடுத்தவர். தற்பொழுது இவர் உயிருடன் இல்லை, நல்ல கதையாசிரியர் அவர்.


இந்த படத்தை பற்றி சிவசங்கரி குறிப்பிடுகையில், ஒரு உண்மை சம்பவத்தை வைத்து இந்த கதையை எழுதினார் என்று குறிப்பிட்டு இருந்தார்.


இதில் கொடுமை என்னவென்றால் இன்றைக்கும் இந்த கதை தொடர்கதையாக பார்க்க நேரும் கொடூரம் தான் கொடுமையாக இருக்கிறது.


படத்தின் கதை மிகவும் எளிது, பணத்திற்காக பிரஞ்சுகாரியை பொய் சொல்லி திருமணம் செய்துக்கொண்டு, வாழ்க்கைக்கு என்று ஒரு தமிழ் பெண்ணை அம்மா அப்பாவிற்காக மணந்து கொண்டு அவளையும், பிரஞ்சு காரியையும் ஒரே வீட்டில் வைத்து வாழ நினைத்து ஏமாந்து போன ஒரு ஆணின் கதை தான் இந்த படம்.


ஒவ்வொரு காட்சியிலும் செயபிரதாவும் சரி சிரஞ்சீவியும் சரி அப்படி ஒரு போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கும் படம் இது.


நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது சிரஞ்சீவி மேல் அனைவருக்கும் கோபம் பொத்துக்கொண்டு வரும். அந்த அளவிற்கு அந்த பாத்திரபடைப்பு.


அனந்துவின் கதையாக இருந்து இருந்தால், செயபிரதா பேசி இருக்கும் வசனங்களில் சீற்றம் இருந்திருக்கும். ஆனால் சிவசங்கரியின் வசனமானதால், அந்த வசங்கள் எல்லாம் மகேந்திரனின் வசனங்களில் வருவது போல் இயல்பாகவும், உண்மையில் பேசினால் எப்படி பேசுவார்களோ அப்படி இருந்தது.


அதிகபடியாக அந்த செயபிரதா பேசும் வசனம் இது ஒன்று தான் 'போடா, பாரீசு தான பரவாயில்லை' அவ்வளவு தான். இதுவே அனந்துவாக இருந்திருந்தால், சுகாசனி அதிக படங்களில் பேசி நடித்த அத்தணை வசனங்களும் இந்த ஒரு படத்திற்கு மட்டுமே வந்திருக்கும்.


தப்பிக்க நினைக்கும் அத்தனை சந்தர்பங்களும் அடிபட்டு போகும் போது, ஆதிச்ச நல்லூருக்கு நாமளே ஒரு எட்டு போய் சொல்லிட்டு வந்தால் என்ன என்று தோன்றும் அளவிற்கு கதையும் சம்பவங்களும் அருமையாக இருக்கும்.


எல்லா பாலசந்தரின் படங்களிலும் வருவது போல் ஒரு வல்லுரவு காட்சியை அதுவும் ஒரு கடிதத்தை படிப்பதற்காக என்ற நச்சு விதையை மெல்ல தூவி இருப்பார் இந்த படத்திலும். அதாவது அந்த வல்லுரவு காட்சியில் அவர் சொல்ல நினைப்பது இது தான். பெண்களுக்கு கரியம் என்று வந்துவிட்டால், மற்றது எல்லாம் ஒரு கணக்கும் இல்லை வழக்கும் இல்லை என்று சொல்வது.


இத்தணை ஆண்டுகளுக்கு முன்னே அப்படி எடுத்து இருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.........இது மட்டும் இல்லை என்றால் படம் மிகவும் அழகாக வந்த படம் என்று சொல்லாம்..........

கமலகாசனின் நம்மவர் படமும் summer schoolலும்

இந்த summer school ஆங்கில படத்தை பார்க்கும் போது அப்படியே நம்மவரின் பட சாயல். நம்மவரை கட்டாயம் இந்த படத்தில் இருந்து தான் உருவாக்கி இருக்க முடியும். காரணம், கமலகாசனை சுற்றி சுற்றி அலையும் கௌதமியின் பாத்திரத்தை போல இந்த படத்தில் நாயகன் கிரிசுடி ஆலியை சுற்றி அலைவார் அந்த கடைசி காட்சி வரை.

நம்மவரில் வீனாய் போன மாணவர்களை ஆளாக்கும் கதை, இதிலும் வீனாய் போன மாணவர்களை பாடம் நடத்த தெரியாத ஆசிரியர் ஆளாக்கும் கதையே.
மற்றபடி அதிகம் அலசி எல்லாம் எழுதும் அளவுக்கு மறைமுகமாக எல்லாம் இல்லை நம்மவர். அப்படியே இந்த படத்தின் கருத்தையும், காட்சிகளையும் வைத்து தமிழில் அதுவும் ஒரு அதிரடி ஆசிரியராக வைத்து கதை எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி எழுதி எடுத்துவிட்டார்கள்.

வழக்கமாக கமலகாசன் செய்யும் வேலை தான் இதுவும். நம்மவரை முதலில் பார்த்தேன், பார்த்தபோது அடடா என்ன அழகாக கதை எழுதி இருக்கிறார்கள் என்று நினைத்தேன். இப்போது தான் அந்த படத்தின் ஆதி தெரிகிறது. இதிலே அந்த படத்திற்கு தேசிய விருது வேற. விருதுகள் சொந்த படைப்புக்கு மட்டுமே என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இந்த படத்திற்கு ஆராயாமல் கொடுத்து இருப்பது, அந்த தேர்வு குழுவில் எப்படி பட்ட ஆட்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இதிலே அந்த விருது வாங்கவில்லை என்று விமர்சனங்கள் வேறு..............

சாருவின் இளையராசாவின் இசையை பற்றிய விமர்சனங்கள்

இந்த தலைப்பை பார்த்த உடனேயே சாருவுடன் சண்டைக்கு நிற்கிறேன் என்று சாருவின் வாசகர்கள் என்னிடம் சண்டைக்கு வரக்கூடும். அப்படி வருபவர்களுக்கு முதலிலேயே சொல்லிக்கொள்கிறேன், சாருவின் இளையராசா இசையின் சம்பந்தபட்ட விமர்சனங்கள் விமர்சனங்களையும் தாண்டி வெறுப்பை கக்கும் செயலாக இருப்பதை விளக்குவதற்கு மட்டுமே இந்த கட்டுரை. மற்றபடி சாருவின் அறிவையும் அவரது இரசனையும் நக்கல் செய்வதற்காக அல்ல.

இளையராசாவை பற்றி அவர் என்ன என்ன எல்லாம் எழுதி தூற்றியுள்ளார் என்று ஆராய்ச்சி செய்வதைவிட, உதாரணம் காட்ட அவர் கடைசியாக எழுதிய நான் கடவுள் விமர்சனத்தையே எடுத்துக்கொண்டு ஆராய்ந்தோமானால் நன்றாக தெரியும் அவரது வெறுப்பு கக்கல்.

இந்த விமர்சனத்தை துவங்கும் முன் சாரு கொடுக்கும் முன்னுரை அவருக்கு பிடிக்கவே பிடிக்காத மூவர் கூட்டணியில் உருவான படைப்பு என்றும் அதனால் அந்த பக்கம் தலை கூட வைத்து படுக்க கூடாது என்று இருந்தாகவும். ஆனால் ஞானி போட்டு கிழி கிழி என கிழித்து இருந்தால் அந்த படைப்பு அவருக்கு பிடித்து இருக்கு என்ற உந்துதலில் அவர் நான் கடவுளை பார்க்க நினைத்து பார்த்தாகவும் எழுதியுள்ளார்.

அப்படி பார்க்க துவங்கிய 5 நிமிடங்களிலேயே அவருக்கு தெரிந்துவிட்டதான் ஒரு உலக தரமான படத்தை பார்கிறோம் என்று. ஆனால் அந்த உலக தரமான படத்தின் இசை மட்டும் மட்டமாக இருப்பதாகக்கூட இல்லை, ஏதோ ஒரு கோப்புகளில் எழுதிவைத்து இருக்கு இசையை எடுத்து சம்பந்தமே இல்லாமல் அங்காங்கே சொருகி இது தான் இந்த படத்திற்கு இசை என்று இராசா கொடுத்துள்ளதாக மனதார எழுதியுள்ளார் சாரு.

இசை எப்படி அமைக்கவேண்டும் தெரியுமா என்றும் அவர் அந்த கட்டுரையில் அழகாக குறிப்பிடுகிறார், இப்படி சிலம் டாக் மில்லினர் படத்தில் கண்களை பறிக்கும் அந்த சமயத்தில் அந்த ஏழை சிறுவனை மறுபடியும் ஒரு முறை பாடு என்று சொல்லி பாடும் பாட்டையும் அந்த சமயத்தில் பாடும் பொழுது அந்த பாடலில் பாட்டை தவிர வேறு ஒன்றும் இல்லை அவ்வளவு உண்மையாக அந்த பாடல் அமைததினால் தான் அது உலக தரம் வாய்ந்தது என்றும் எழுதியுள்ளார்.

நல்ல விமர்சனமாக அதை எடுத்து கொள்ளாவிட்டாலும், அந்த காட்சி அனைவரது மனதையும் பிசைந்து எடுத்த காட்சி என்றதை மறுப்பதற்கு இல்லை. அது சாருவையும் கலக்கியது போலும், அது தான் பதிவர் முதல் இலக்கியவாதிகள் வரை அந்த ஒரு காட்சியின் இசையை மட்டுமே அனைவரும் காட்டாக காட்டி விமர்சனங்கள் எழுதினார்கள் போலும்.

அந்த காட்சி மக்களின் மனதை உருக்கியது இசையா அல்லது அந்த ஈனத்தணமான செயலா என்று பார்த்தால் அந்த செயல்தான். இசை அங்கே நடந்த நிகழ்வை இன்னமும் இணக்கமாக காட்ட உதவி இருக்குமே தவிர, அந்த இசைமட்டுமே காட்சியாக அமைய வாய்ப்பே இல்லை, இதிலே ஒருவருக்கும் மறுப்பு இருக்காது.

ஒருவேளை அந்த காட்சியில் இசை இல்லாமல் இருந்திருந்தால், அந்த அமைதி இன்னமும் கோடூரமாக அந்த காட்சியை காட்டி இருக்குமே தவிர, காட்சியை பலவீனபடுத்தி இருக்காது. ஏன் என்றால் அந்த காட்சியின் கொடூரம் அப்படி.

ஏழை சிறுவன் வாழவே வழி தெரியாமல் இருக்கும் ஒருவனை பிடித்து வந்து வாழ வழியமைத்து கொடுப்பதாக சொல்லி நயவஞ்சகமாக பேசி அழைத்து வந்து, அவனது குரலுக்கு நல்ல வசூல் கிடைக்கும் என்று அறிந்து கொண்ட பிறகு. அந்த மகசூலை பெறுக்க குருடாக ஆக்கினால் இன்னமும் வசூல் கூடும் என்று நன்றாக இருக்கும் அந்த கண்களை பறிக்கும் செயலை பார்க்கும் போது, அவரவருக்கு கோபமும் ஆத்திரமும் பெருக்கெடுத்துக்கொண்டு தான் வரும்.

இந்த மாதிரி எழுத்துகளில் படிக்கும் போதே மனதை பிசைந்து எடுக்கும் சம்பவந்தை தான் காட்சியாக படமாக்கி இருந்தார்கள், அந்த உணர்வுகளை மனதில் கொண்டுவர சம்பவ கோர்வைகளும் சம்பவங்களும் மட்டுமே போதும் என்று அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்.

பின் அங்கே வரும் இசைக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் என்று பார்க்க வேண்டும். காரணம் வாசகர்களும் சரி, படத்தை பார்ப்பவர்களுக்கும் சரி, அவர்களை அதிகம் பாத்தித்த சம்பவங்களை வைத்து விளக்கம் சொன்னால் தான் அவர்களது கருத்துகளையும் தாண்டி நமது கருத்துகளை அவர்களுக்குள் திணிக்க முடியும். இது படைப்புலகில் இருக்கும் அனைவரும் கையாளும் ஒரு உத்தி. இதைத்தான் இந்த படத்தை பற்றி மிகவும் நல்லவிதமாக விமர்சித்த அனைவரும் கையாண்ட ஒரு உத்தி. இதற்கு சாருவும் விதிவிலக்கல்ல என்று அவரே அவரது விமர்சனம் கொண்டு விளக்கியுள்ளார்.

இந்த விமர்சனம் தவறு என்று நான் சொல்லவில்லை, ஆனால் அந்த இசையமைப்பு எவ்வளவு உண்மையாக இருந்தது என்றும், காட்டும் காட்சிக்கும் காட்சியில் வரும் இடத்திற்கும் மிகையில்லாமல் இயல்பாக இசை இருக்கவேண்டுமே தவிர அங்கே ஒரு பெரிய சிம்பொனி இசை வந்து போவதை யாரும் சிறந்த இசை அமைப்பு என்று சொல்லமாட்டார்கள் என்றும் சொல்வார்.

இதை படிக்கும் போது வாசகர்களும் இந்த கருத்தை அப்படியே ஒத்துக்கொள்வார்கள். அது தானே அப்படி தான் இருக்க வேண்டும், அதை விடுத்து ஒரு பெரிய இசை கச்சேரியே அல்லவா நடந்தது என்று கேட்பார்கள் தான்.

இங்கே தான் சாருவின் உத்தியை நாம் உற்று நோக்க வேண்டும். சரி அந்த காட்சியில் மிகையில்லாமல் இசை இருந்தது தான் சாரு, ஆனால் அதே அந்த இரண்டு சிறுவர்களும் எப்படி எல்லாம் திருடினார்கள் என்று காட்டும் காட்சிகளை மையா அருட்பிரகாசம் அவர்களின் பாடல்களின் பின்னனியில் 6 நிமிடங்களுக்கு காட்டி இருப்பார்கள். அங்கே அந்த இடங்களில் எல்லாம் அந்த பெரிய இசை கட்சேரி எங்கே இருந்து பொருத்தமாக வருகிறது என்று உங்களால் விளக்க முடியுமா.......உண்மையாக சொல்லுங்கள் பார்ப்போம்.

அந்த பாடலில் வரும் ஒரு கொடூரகாட்சி இரண்டு சப்பாத்திக்காக கால்களில் கையிரை கட்டிக்கொண்டு ஓடு இரயிலின் கூரையில் இருந்து சன்னல் வழியே அவைகளை திருடுவதாக காட்சியை காட்டவேண்டிய அவசியம் என்ன வந்தது என்றாவது குறைந்தது சொல்வீர்களா.........

அல்லது அப்படி தலைகீழாக தொங்கும் காட்சிகளுக்கு மையா அவர்களது பாட்டும் அதில் வரும் அதிரடி இசையும் எப்படி இயல்பாக இருந்தது என்று சொல்வீர்களா...............

ஒரு வேளை இங்கிலாந்திலும், மேலை நாடுகளில்லும் மையாவின் காகித விமானம் இசை தொகுப்பை பார்த்து இருந்தார்களே ஆனால், அந்த பாடல் அவர்களுக்கு வேண்டுமானால் ஒரு ஒட்டுதல் இருப்பதாக இருக்கும். மற்றபடி இந்திய இரசிகர்களுக்கு அந்த பாடல் எப்படி காட்சியோடு ஒன்றியும், இயல்பாக இருந்தது என்று விளக்கினால் நாங்களும் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

சாருவின் உத்தி என்ன என்று இப்போது உங்களுக்கு விளங்கி இருக்கும். இப்படி அவர்காட்டும் உதாரணங்களை அவருக்கே திருப்பி கொடுத்து விளக்கங்கள் கேட்கலாம் அளவே இல்லாமல்.

இந்த காட்டுதல்கள் மூலமாக அவர் இசையை விமர்சனம் செய்தாரா அல்லது அவருக்கு இளையராசா மேல் உள்ள வெறுப்பை வாசகர்களின் மனதில் வித்தைதாரா/மெருகேற்றினாரா உங்களின் அனுமானத்திற்கே விட்டு விடுகிறேன்.

சாருவின் இளையராசாவின் இசை பற்றிய விமர்சனம் எப்படி இருக்கிறது என்றால் இப்படி இருக்கிறது என்று சொன்னால் சரியாக இருக்கும்.

ஒருவருக்கு பிறந்தத்தில் இருந்து சைவ சாப்படு மட்டுமே பழக்கமாக மட்டும் இல்லாது அசைவ சாப்பாடு கூடவே கூடாது என்று அறிவுருத்தபட்ட ஒரு வரை அசைவ சாப்பாடு எப்படி இருக்கும் என்று சொல்ல சொன்னால் எப்படி விவரிப்பார்.

அந்த உணவு மிகவும் அருவருப்பாகவும், இரத்தமும், கௌலும் நிறைந்தாகவும், மனித இனம் வெறுத்து ஒதுக்கவேண்டிய ஒன்றாக அது இருக்கும் என்று தான் விவரிப்பாரே அன்றி. அது எவ்வளவு சுவையாக இருந்தது என்றா எழுதுவார், அல்லது அந்த உணவில் இருக்கும் புரதம், வைடமின்களை பற்றியா எழுதுவார்கள்.

இதைத்தான் சாரு இளையராசாவின் இசை விமர்சனத்தில் செய்துக்கொண்டு இருக்கிறார்.

மற்றபடி ஒரு இலக்கியவாதியாகவோ, அல்லது ஒரு இரசிகனாகவோ, அல்லது ஒரு இசை அறிஞராகவோ அவரது விமர்சனங்கள் இல்லை, இல்லவே இல்லை.

அசைவ சாப்பாடு சாப்பிடும் ஒருவரை வைத்து அந்த உணவு எப்படி இருக்கிறது என்று கேட்டுப்பாருங்கள் விளக்குவார் அருமையாக எப்படி இருந்தது என்றும். என்ன வகையாக உணவு எப்படி இருக்கும் என்றும். என்ன என்ன சத்துப்பொருட்கள் எது எதில் இருக்கிறது என்று விளக்குவார்கள்.

எழுத்தாளர் செயமோகன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது அவரிடம் இளையராசாவை பற்றி கேட்டோம். ஒரே வரியில் அவரது விமர்சனத்தை சொன்னார் எந்தவித விருப்பு வெறுப்பும் தயக்கமும் இல்லாமல் "அவர் சந்தேகத்து இடம்மில்லாத ஒரு ஞானி என்று". ஆக என்ன நமக்கு வேண்டுமோ அதை கிடைக்கும் இடத்தில் தான் தேடவேண்டும் அதை விடுத்து சைவ உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட செல்லக்கூடாது. அப்படி செய்தால் அது நமது பிழை தானே தவிர சைவ உணவகத்தின் பிழை அல்ல. இப்படி எல்லாம் சொன்னால் தான் அசைவர்களையும் சைவம் சாப்பிட வைக்கமுடியும் என்று சைவ உணவகம் செய்யும் உத்தி என்றும் கூட சொல்லாம்..................

சாரு இப்படி தான் செய்கிறார் அவருக்கு இரகுமானை பிடிப்பதை விட இராசாவை பிடிக்கவே பிடிக்காது என்றது தான் மிகுதியாக இருக்கிறது அவரது மனதில். அதற்கான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம், அதற்காக இப்படி கொஞ்சம் கூட நேர்மை இல்லாமல் அவரை மட்டம் தட்டுவதை செய்யக்கூடாது. மட்டம் தட்டுவதோடு மட்டும் நில்லாது, இராசாவை இரசிப்பவர்கள் எல்லாம் பாவிகள் என்று எழுதும் அளவிற்கு போவது கண்டிக்கதக்கதும் கூட.........

நான் கடவுளில் எங்கே எங்கே அல்லாம் இயல்பாக இசை இல்லை என்று பட்டியலிட்டு சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம் அவரை அவரது வண்டவாளம் அவாருக்கே தெரியா ஆரம்பிக்கும்.

இப்படி எல்லாம் எழுதியதால் எனக்கு இரகுமான் மேல் காழ்ப்பு என்று யாரும் ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டாம். சிலம் டாக்கு மில்லினர் படத்திற்கு என்று எழுதிய எனது விமர்சனத்தையும் பார்க்கவும் உங்களுக்கே புரியும்.

http://panimalar.blogspot.com/2009/03/blog-post.html

Tuesday, December 1, 2009

அப்படி என்ன தான் கடவுள் கிட்ட வேண்டுவாங்களோ - கணணி கவசம்

துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை
உன்னிப்புடன் நெஞ்சே குறி!

காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
அடியேன் சிஸ்ட அழகுவேல் காக்க
வின்டோசைக் காக்க வேலன் வருக
கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க
இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க
பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க
செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க
முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
வைரஸ் வாராமல் வைரவேல் காக்க
சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க
எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க
பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க
ஈமெயில் தன்னை இணையவேல் காக்க
மவுசை மகேசன் மைந்தன் காக்க
எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க
அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க
எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க
அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்
நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஹாங் ப்ராப்ளமும்
ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்
என் பெயர் சொல்லவும்
இடி விழுந்தோடிட
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை
அலறவே வைத்திடும்
ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்
வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்
அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட
பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க
பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க
மூவாகல் மூர்க்கம் செய்யும்
மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக
நகர நீ எனக்கருள்வாய்
கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என
டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை
போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க
கன்னா பின்னாவென்று வரும்
கமான்ட் இன்டட் ரெப்டுகளை
கந்தன் கைவேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்
பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்
மானிட்டர் பக்கம் வந்து விடாமல்
என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
ரேமும், ரோமும் மெமரியோடிருக்க
அனைத்து ஃபோர்டர்ஸீம்
ஆயுளோடு விளங்க
டௌன்லோடு, அப்லோடு டக்கராய்
விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்
சிறப்புடன் வாழ்க.

அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸhர்
அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
ஷட்டௌன் தடங்கல்
சட்டென்று நீங்க
ஷண்முகன் நீயும் சடுதியில் வருக
கணினி சிஸ்டம் கவசம் இதனை
சிந்தை கலங்காது கேட்பவர்கள்,
படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்
படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.
வாழ்க கணினி. வளர்க மவுஸ்.

சிரிக்க, சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க.

எழுதி அனுப்பிய வலையுலக நண்பருக்கு நன்றி, இது எனது தயாரிப்பு இல்லை. நன்றாக இருந்ததே என்று பகிர்ந்துகொள்கிறேன் அவ்வளவு தான்............

Monday, November 30, 2009

விசாரணை அறிக்கையை அரசுக்கு தெரியாமல் வெளியிடுவது அரசியல் அமைப்புக்கு எதிரான செயல் - செயலலிதா அறிக்கை

இப்படி சொல்லி இருப்பது வேறு யாரும் அல்ல, செயலலிதா பாட்டி தான். இன்னமும் வேறு என்ன என்ன எல்லாம் அரசியல் அமைப்புக்கு எதிரானது பாட்டி. நல்ல வேளை யாரும் அரசு நிலத்தை அடிமாட்டு விலைக்கு இவர்களை போல் வாங்கவில்லை. ஒரு வேளை அப்படி வாங்கி இருந்தால், அப்படி வாங்குவது எல்லாம் குற்றம் என்று அறிக்கை விட்டாலும் விடுவார் போலும்.

டான்சி நில வழக்கில் சாட்சியாக இருந்த ஆவணங்களை எல்லாம் இவரது கைகூலிகளை வைத்து அழிக்க செய்துவிட்டு, திரைமறைவில் எத்தணை காரியங்களை எல்லாம் செய்யமுடியுமோ அத்தனையும் செய்துவிட்டு மாலை தீர்ப்பு வந்தது ஆள் காட்டி விரலை வானுக்கு காட்டி 'தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் பின் தர்மம் வெல்லு' என்று நமக்கு எல்லாம் தர்மத்திற்கு பாடம் எடுத்த பாட்டி ஆயிற்றே இவர். இவர் இதுவும் சொல்வார் இன்னமும் சொல்வார்.

கொஞ்சம் விட்டால் 1 இலட்சம் பேரை ஒரே நாளில் வேலையை விட்டு துரத்தியது கூட அராசகம் என்றும் கூட அறிக்கைவிடுவார் போலும், கழக கண்மணிகளே கவனம்.......

தினமணியின் நம்பிக்கை துரோகம் தலையங்கமும் BJP யின் கொள்கையும்

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=160044&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

கட்டுரையாளர் இதிலே அதிகம் குறை சொல்லி இருப்பது என்னவோ திமுகவை தான். அவர்களால் தான் கோவில்கள் எல்லாம் அழிந்து வருவதாகவும். தமிழை அழிப்பதும் அவர்களே என்றும், மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களால் எப்படி கோவிலின் நிர்வாகத்தை சரிவர கவனிக்கமுடியும் என்றும் கேட்டு எழுதியுள்ளார்.

சரியாகத்தான் சொல்லியுள்ளார் என்று தோன்றுகிறது, இங்கே அவருக்கு தெரியாமலே இரு உண்மையை சொல்லி உள்ளார். ஆத்திகவாதியாக அவர் சொன்ன வாசகமே இப்போது அவருக்கு எதிராக அமைவதை அவர் கவனிக்கவில்லை போலும்.

அவர் சொன்ன இந்த கருத்துக்கு ஏகப்பட்ட பின்னூட்டங்கள், அவைகளில் ஆமாம் ஆமாம் அப்படி தான். அப்படி போடு, இப்படி போடு என்று வகை தொகை இல்லாமல் பின்னூடம் இட்டவர்கள் தான் அதிகம்.

இவர்கள் எல்லோரிடமும் ஒரு கேள்வியை கேட்போம். ஆத்திகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் அரசாண்டால் கோவில்களையும் அதன் புனிதத்தையும், பண்பாட்டையும் காக்கமுடியாது என்று மிகவும் ஆணித்தனமாகவும் திடமாகவும் நம்பும் உங்களால், சமுதாய சமுத்துவத்தில் அணுஅளவும் நம்பிக்கை இல்லாத பசகவால் (BJP) மட்டும் எப்படி ஒரு ஒன்று பட்ட சமுதாயத்தை கட்டி எழுப்பமுடியும் என்று நம்புகிறீர்கள் என்று சொல்ல முடியுமா.

அல்லது பசக மறைமுகமாக எப்பொழுதும் சொல்வது போல் ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாகவாக இருக்கிறது என்று மேடைக்கு மேடை கேட்குமே. அதிலே ஒளிந்து இருக்கும் பதில் எல்லோருக்குமே ஐந்து விரல்கள் தானே இருக்கிறது என்ற உண்மையை முழு பூசனிகாயை சோற்றில் மறைப்பது போல் மறைக்குமே. அதில் எல்லாம் உங்கள் அனைவருக்கும் விருப்பம் தான் போலும். காந்தியும் நேருவும் கனவு கண்ட நாட்டை, கூறு போட்டு நார் நாராக பிரித்து நெருப்பில் போட்டு குளிர் காய நினைக்கும் கூட்டத்திற்கு வால் பிடிக்கும் உங்களையும் தான் அவர்கள் தீயில் இட நினைகிறார்கள். பாவம் இது புரியாமல் அடுத்தவன் தான் அழிகிறான் நமக்கு என்ன என்று நினைகிறீர்கள் போலும்......

Sunday, November 29, 2009

பழசி இராசா - திரைவிமர்சனம்

ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய இன்னும் ஒரு மன்னனின் போராட்ட வரலாறு இதிலே பதிவு செய்யப்பட்டுள்ளது. கதையிலும், காட்சியிலும் எந்தவிதமான ஒரு இட்டுக்கட்டுதலும் இல்லாமல் தயாரிக்கப்பட்டம் இது.

அதிலும் காட்சிகளில் களரியில் உயர குதித்து தாக்கும் காட்சிகளில் மட்டும் சிறிது உயரம் கூட்டி இருக்கிறார்கள். அதும் கவனித்து பார்த்தால் தான் தெரியும், இல்லை என்றால் சண்டைக்காட்சிகளில் கூட மிகையாக சொல்லாத படம் என்று செல்லிவிடலாம்.

உலகத்தின் அத்தணை வீரர்களையும் வென்ற ஒரே வீரன் துரோகம் தான் போலும். வரலாற்றில் ஏசு முதல் அனைத்து மன்னர்களையும் வீழ்த்தியது இந்த துரோகம் ஒன்றே தான்.

அதிலும் இந்த கதையில் பார்த்து பார்த்து வளர்த்தவனே முன்னில் நின்று அனைவரையும் கொல்ல துணை போகும் காட்சிகளுக்கு கடைசியில் சாகும் போது சரத்துகுமார் சொல்லும் வசனங்கள் நல்ல பதிலடி.

படம் முழுவதும் வசனம் மிகவும் அருமையாக வருகிறது, குறிப்பாக "மக்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றால் நம்மை தானே சொல்வார்கள்" அருமை.

பதுங்கி தாக்குதலின் அவசியத்தை மிகவும் அருமையாக விளக்கியுள்ளார்கள் படத்தில்.

பழசியை பிடிக்கும் முன், அவனது படைகளில் உள்ள ஒரு ஒருவரையும் விலைக்கு வாங்கும் காட்சிகளில் மனம் பதறத்தான் செய்கின்றது.

வில்லெடுத்து விளையாடும் பெண்ணாய் பத்மபிரியா, அவரது ஒப்பணையும் முக அசைவுகளும் கிங்கு ஆர்த்தரில் வரும் அந்த பெண்ணை நினைவுக்கு கொண்டு வருவதை தவிர்க்கமுடியவில்லை. அதிலே அவள் அரசகுமாரி, இதிலோ இவள் ஆதிவாசி பெண்.

முகபூச்சி கொஞ்சமும் இல்லாமல் கொள்ளை அழகாக கனிகா, கணவனை பிரியும் தருணங்களிலும் சரி மற்ற காட்சிகளிலும் சரி. வெறும் முக அசைவுகளிலே நடிப்பை காட்சியுள்ளார். நாட்டின் அரசி இவ்வளவு தான் அழமுடியும் போலும். அந்த மௌன அழுகைகள்................அபாரம் அவரது நடிப்பு.

படத்தின் சிறப்பு ஒலி அமைப்பு பூக்குட்டி என்று ஏகப்பட்ட விளம்பரம்..............அதிலும் வலைஞர்களின் விமர்சனங்களில் அப்படி இப்படி என்று ஏகப்பட்ட விமர்சனங்களை படித்த பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பார்த்தேன். நிறைய இடங்களில் காட்சிகளில் தெரியும் அசைவுகளுக்கு கூட ஒலி இல்லை.

குறிப்பாக கோவிலில் குறிகேட்க்கவந்தவர்களை தூக்கில் போடும் காட்சியை பார்த்துவிட்டு அந்த வெள்ளைகாரரின் காதலி விட்டு ஓடும் பொழுது, அந்த வெள்ளைகாரர் வீட்டிற்கு குதிரையில் போய் இறங்கும் காட்சியில் கிட்டத்தட்ட 3 அல்லது 4 ஆட்கள் தரையில் கால்களை அடித்து வணக்கம் சொல்வார்கள். அந்த காட்சிகளில் வெள்ளைகாரனின் காலனி ஓசையை தவிர வேறு ஒன்றும் கேட்க்காது. ஒரு உதாரணத்திற்கு சொன்னேன், இது போல் பல இடங்களில் மனித கோட்டை விட்டுள்ளார்.

கட்டபொம்முவை ஒரு 10 போர் மட்டும் கொண்டு பிடித்து சங்கிலியால் கட்டி இழுத்து வருவதாக நமக்கு காட்டியது போல், பழசியையும் அவரது படையையும் வெறும் ஒரு 50 பேர் கொண்டு பிடித்தாக கடைசியில் காட்டுவது ஏமாற்றமாக இருக்கிறது.

டிராய் என்று ஒரு ஆங்கில படம் உண்டு, அதிலே பேரரசன் தனது மகனின் உடலை வாங்க எதிரியிடம் வந்து பேசுவான் அந்த காட்சிகளில் வரும் வசனங்கள் எதிரிக்கு எதிரி பேசிக்கொள்ளும் வசனங்களாக இருக்காது. ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் வசனமாகவும், பொறுப்பு மிக்க படை தளபதியின் வசனமாக இருக்கும். அந்த கம்பீரம் இந்த படத்தின் அனைத்து காட்சிகளிலும் வருகிறது, அரிகரனின் அசத்தும் இயக்கம்.

படம் துவங்கி குன்னத்தே பாடல் வரும் வரையில் படத்திற்கு இசை என்ற ஒன்று இருப்பதாக கூட தெரியவில்லை. அப்படி ஒரு அமைப்பு இந்த படத்திற்கு, அந்த பாடல் வந்த பிறகு தான் படத்தில் இசையும் இருக்கிறது என்று தெரிய துவங்குகிறது. காட்சிகளோடு அப்படி ஒன்றி இருக்கிறது இசை.

அம்பும் கொம்பும் பாடல் படத்தில் இல்லாமல் இருப்பது நெருடலாக இருக்கிறது. அந்த பாடல் மட்டும் இருந்து இருந்தால் அனேகமாக அடுத்து இளைஞர்களுக்கு தெருவெங்கும் இந்த பாடலாகத்தான் இருந்து இருக்கும்.

பாடல்கள் மலையாளத்தில் கேட்டது போல் இல்லை என்று சொல்லாம், அதற்கு வாலியை மட்டும் பலியாக்க முடியாது. மலையாளத்தில் வரும் வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகளை போட்டதால் மனிதன் வம்பில் மாட்டிக்கொள்கிறார். மலையாளம் போல் சங்கத வார்த்தைகளை அப்படியே போட்டிருந்தான் மெட்டுக்குள் இன்னமும் அருமையாக பொருந்தி இருக்கும் போலும்.

படம் மற்றபடி நல்ல வரலாற்று பதிவு.

மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, எனக்கு என்னவோ படத்தை பார்க்கும் போது காட்சிக்கு காட்சி இலங்கையில் நடந்தது தான் நினைவில் வந்து வந்து சென்றது. ஒப்பந்தம் போடுவதும், பிறகு காற்றில் பறக்கவிடுவது. ஒவ்வொறுவராக பிடித்து பொன்னும் பெண்ணும் பொருளும் கொடுத்து காட்டிக்கொடுக்க வைப்பதும் என்றும் வரும் காட்சிகளில் அந்த இரத்த களரிகள் கண்முன் தெரியாமல் இல்லை.........................மனதளவில் பெரிய தாக்கத்தையே உண்டு செய்தது........................................

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 1

பொருளாதார தேக்க நிலையின் காரணமாக விலைவாசிகளை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நாடுகளில் அமெரிக்காவின் நிலையோ மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

விலைவாசியை அப்படி கட்டுப்படுத்த முடியவில்லை எனில் தனது வாடியகையாளர்களை இழந்துவிடுவோம் என்ற பயத்தில். அவர்களை கவர்ந்து இழுக்கும் நோக்கில் பல விலைசலுகைகளை அள்ளி வீசியும் வருகிறது சில நிறுவணங்கள்.

வேலைக்கு செல்லும் மக்களை மனதில் வைத்துக்கொண்டு துவங்கியது தான் அவசர உணவகங்கள். இவர்கள் பெரும்பாலும் காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை செயல்படுபவர்கள்.

இவர்களில் சப்வேயும்(Subway) குசினோசப்பும்(Quiznos) போட்டியாளர்கள். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு விலையையும், வகைகளையும் கூட்டியும் தங்களது சந்தையில் பிரபலம் ஆனார்கள்.

குசினோவில் தான் சாப்பிடுவது தான் தனக்கு கௌரவம் என்று சொல்லும் அளவிற்கு அவர்களது பிரபலம் கூடியது என்னவோ உண்மை தான். அதற்காக இந்தியர்களாலே பசியார முடியாத அளவிற்கு சிறிதாக கொடுத்து, தனது போடியாளரான சப்வே கொடுக்கும் விலையைவிட ஒன்றறை மடங்கு விலை அதிகமாக விற்றும் வந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், இன்றைகோ அந்த இரு நிறுவணமும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது விலைகளை இறக்கி விற்று வருகிறது. இந்த போட்டியில் யார் வெற்றிக்கொள்வாரோ, அவர் தான் அடுத்து வரப்போகும் வசந்த காலத்தில் கோலோச்ச முடியும்.

இந்த போட்டியை இந்த இரண்டு நிறுவணங்களும் ஆளுக்கு ஒரு மாதிரியாக நடத்துகிறது. சப்வே நிறுவணம் தனது இரகங்களில் பெரிய அளவில் உள்ளவைகளை சின்ன அளவிற்கான விலையில் கொடுக்கிறது. அதனால் அந்த கடையில் யாரும் சின்ன அளவில் கேட்பதே இல்லை.

ஆனாலால் குசினோவோ தனது இரகளில் ஒரு புதிய பெயரில் 3 அல்லது 4 வகைகளை அறிமுகம் படுத்தியது. அந்த அறிமுக அறிவிப்பில் முக்கியமான குறிப்பாக வந்தது அந்த புதிய வகைகள் யாவும் பெரிய அளவு அவகைகளைவிட நீளத்தில் பெரியது என்றது தான்.

நீளத்தில் பெரியது என்று தான் சொன்னேனெ தவிற அகலத்தில் இல்லை என்று சொல்லாமல் சொல்லும் அந்த கடைகளில், அந்த உணவு வகைகளில் வழக்கமாக வைக்கும் எல்லா பொருட்களையும் வைப்பதும் இல்லை. ஆக மொத்தத்தில் குசினோ ஏமாற்றும் நோக்கத்தோடு தான் இந்த திட்டத்தை தொடங்கி உள்ளது போலும்.

இதில் வேடிக்கை என்ன என்றால், இந்த கடைகளை பெரிய நகரங்களில் நடத்தும் மக்கள் அனேகம் பேர் இந்தியர்களும் மற்றும் மற்ற வெளி நாட்டு மக்கள் என்றது குறிப்பிடதக்கது.

இந்த விலையிலே இந்த இரு நிறுவணங்களும் அந்த உணவு வகைகளை கொடுக்க முடியும் அதுவும் தொடர்ந்து 6 மாத காலமாக என்றால், இவ்வளவு நாள் அடித்தது எல்லாம் கொள்ளையா. இதிலே இந்த மெக்குடொனால்சு போன்ற பர்கர் விற்கும் நிறுவணங்கள் இரண்டு ஆண்டுக்கு முன் தனது பர்கரின் அளவை குறைத்து விற்க தொடங்கியது. இன்னமும் விலையும் குறைக்கவில்லை, அளவும் சரி செய்யவும் இல்லை......................

இவர்களை நம்பித்தான் அனேகமான அமெரிக்கர்கள் வாழ்கிறார்கள், காலையிலோ அல்லது இரவிலோ ஒரு வேளையாவது இந்த மாதிரியான கடைகளில் அமெரிக்கர்கள் சாப்பிடுவது வழக்கம். இந்த விலையேற்றத்திற்கு பிறகும் அமெரிக்கர்கள் எந்த ஒரு எதிர்ப்போ தெரிவிக்காமலும் இருப்பது மட்டும் இல்லை, அவர்களுக்கு ஆதரவாக இன்னமும் அவைகளை வாங்கி ஊக்கப்படுத்துவது என்ன செயல் என்று தான் புரியவில்லை.........................

Wednesday, November 25, 2009

கீதை - 4

ஒரு நாளை போல தினமும் 2 , 3 என்று தான் நாட்கள் கடந்து கொண்டு இருந்தது. ஒன்று சொந்த வேலை இல்லை அலுவல் என்று தினமும் இப்படி அதிகாலையில் படுக்கையில் புதைவதும் பிறகு அலைபேசியின் அழைப்புக்கு அழுந்து ஓடுவதும் தான் பிழைப்பா என்ற கோபம். என்றைக்கு நிம்மதியாக நாட்கள் நகரும் என்ற ஏக்கம்.

எப்போது தூங்கினான் என்று தெரியாது ஆனால் எழுந்துகொள்ள நேரம் வந்தது அறிவித்துக்கொண்டு இருந்தது அவனது நேரங்காட்டிகள். அவசர அவசரமாக எழுந்து பார்த்தவன், அமைதிபடுத்திவிட்டு மீண்டு ஆழ்ந்தான் உறகத்தில்.

காலையில் எழுந்து தூங்கினால் அப்படி ஒரு தூக்கம் வரும், அந்த தூக்கத்தில் நேரத்தை தவறவிடும் அளவிற்கு ஆழ்ந்த உறக்கம். ஆனால் அன்றைகு என்னவோ அப்படி ஒரு தூக்கம் மறுபடியும் வரவில்லை. என்னவோ தவறவிடுவதாக ஆழ்மனது சொல்ல. என்னவாக இருக்கும் என்று நோட்டம் விட்டபடி விட்டத்தை பார்த்தவாறு படுத்து இருந்தான்.

பிறகு என்னவோ சிந்தையாக அலைபேசியை எடுத்தவன், வீட்டு நினைவுவர. அவசர அவசரமாக அழைப்பைவ்டுத்தான்.

மறுமுனையில் பேசிய அம்மா, என்னப்பா தூங்கினியா. காலையில ஏதாவது சாப்பிடப்பா, வெறும் வயிரா இருக்காத நல்லது இல்லை என்ற முன்னுரைகளுடன் தொடங்கினார்கள். பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு அம்மா சொன்ன விபரங்கள் அவனுக்கு மனதில் பயத்தையும் ஒரு பெரிய சிந்தனையையும் கொடுத்து இருக்க வேண்டும்.

பிறகு கேட்ட எல்லா கேள்விகளுக்கும், ஒற்றை வார்த்தைகளில் பதில்கள். அதுவும் அழுத்தி கேட்டால் மட்டும் தன் பதிலாக வரவே, அம்மா சரி பிறகு பேசுப்பா என்று சொல்லி தொடர்பை துண்டித்தார். இந்த காலை அவனுக்கு பெரிய காலையாக அமைந்தது. இங்க உள்ளவைகளை பார்ப்பதா அல்லது அம்மா சொன்னவைகளை பார்ப்பதா ஒன்றும் தெரியவில்லை. அளவிற்கு அதிகமாக நேரம் ஆனதில் வேறு பதட்டம்.

காலை பரபரப்பில் இன்னமும் அதிகம் தொற்றிக்கொள்ள, ஒரு வெறுமை முகத்துடன் கிளம்பினான். வழியில் பார்க்கும் அனைவரும் என்ன என்ன என்று கேட்கும் அளவிற்கு அவனது முகம் அவனது பதட்டத்தை தெளிவாக காட்டியது.

கடைசியாக குழு ஆலோசனை கூட்டதிற்கு வந்தவன் அங்கேயும் கேட்கும் கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தைகளில் பதிலுரைக்க. குழுதலையோ என்னப்பா என்ன ஆனது என்றும் கேட்டார். ஒன்றும் இல்லை மற்றும் ஒரு புன்முறுவல் அவ்வளவுதான் அவனது பதிலுரை.........

தொடரும்.....

Saturday, November 21, 2009

இளையராசாவும், பூவே பூச்சூடவாவும், How to name itம்

நீண்ட நாட்களுக்கு பிறகு பூவே பூச்சூடவா படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் இராசாவின் இசைக்கு பெயர்பெற்றது அனைவருக்கும் தெரிந்த உண்மை. படத்தின் நெகிழ்வான காட்சிகளில் வரும் வயலினிசை பின்னாளில் இந்த How to name it இசை தொகுப்பாக மெருகேற்றி வெளியிட்டார் போலும்.

இந்த படத்தில் கேட்க்கும் போது அந்த தொகுப்பில் கேட்க்கும் அளவிற்கு மனதை பிழியும் அளவிற்கு இல்லை என்றாலும். காட்சியின் வீரியத்தை சொல்ல தவறவில்லை. How to name it இல் வரும் 3 பாடல்கள் இந்த படத்தில் வருகிறது.

இது அனைவருக்கும் தெரிந்ததாக இருக்கலாம், ஆனால் எனக்கு புதிது. பகிர்ந்துகொள்ளலாம் என்று எழுதுகிறேன்.

Sunday, November 15, 2009

மத்திய இல்லினாய் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி விழா 2009

மத்திய இல்லினாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தீபாவளி விழா 2009 அக்டோபர் மாதம் 24ஆம் நாள் அர்பானா சமூகக்கூடத்தில் கொண்டாடப்பட்டது.

விழாவை துவங்கி வைத்து துவக்க உரையாற்றிய தலைவர் திரு கல்யாண சுப்பு அவர்கள், விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று 2009 ஆம் ஆண்டிற்கான செயல்வடிவங்களின் முடிவுகளை தொகுத்து வழங்கினார்.

ஆசை(ASHA) இயக்கதினுடன் இணைந்து அவர்களது முயற்சிகளுக்கு ஒருங்கிணைப்புகளை வழங்கியதும். சேம்பைன் நகரத்தில் புதிதாக அமைந்து வரும் கோவில் வளாகத்தின் மரம் நடு வேலைகளை தமிழச்சங்கம் பொறுபேற்றுக்கொண்டு நடத்திகொடுத்தவைகள். மற்றும் தமிழச்சங்கத்தின் 2009ஆம் செயலாண்டுக்கான நிகழ்ச்சிகளின் நிறைவுகளையும் தெரிவித்து விழாவை தொடங்கிவைத்தார்கள்.




கலை நிகழ்ச்சிகளின் துவக்கமாக இல்லினாய் பல்கலைகழத்து மாணவி செல்வி சுபாலட்சுமி 2 பரதம் வழங்கினார்கள். பாடலில் வரும் வார்த்தைகளை அவர் பரதத்திலும் முக அசைவுகளிலும் வழங்கியது அருமை.




செல்வி சுருத்தி வழங்கிய நாட்டிய ஓரங்க நாடகம், கண்ணனின் குறும்புகளை அருமையாக படம்பிடித்து காட்டினார். அந்த கதையில் வரும் 3 நபர்களின் செயல்களையும் தனி ஒரு ஆளாக பரத கலையின் நுணுக்கங்களுடன் அருமையாக வழங்கினார். 12 நிமிடங்கள் நடந்த இந்த நாடகம் அரங்கின் அனைவரது மனதையும் கவர்ந்தது.





இவர்களை தொடர்ந்து, பல்கலை மாணவர்கள் மெல்லிசை விருந்தினை வழங்கினார்கள். 3 பாடல்களை பின்னனி இசைக்கு பாடலாக (Karoke) பாடினார்கள்.


இதை தொடர்ந்து மத்திய உணவு பரிமாறபட்டது. சங்கத்தின் பெண்கள் அணியினரின் சீரிய முயற்சியினால் அருமையானதொரு வீட்டு தயாரிப்புகளாக, உணவு வகைகள் அமைந்து இருந்தது. கூட்டத்திற்கு வந்து இருந்த அனைவரும் உணவு தயாரிப்பையும் உபசரிப்பையும் மனதார புகழ்ந்து சென்றார்கள். உணவு வேலைகளை செவ்வனே நடத்திகொடுத்த பெண்கள் அணியினருக்கு பாராட்டுகள்.


இந்த பெண்கள் அணியினரது முயற்சியில் ஆசை இயக்கத்தினர்களுடன் இணைந்து 2009ஆம் ஆண்டுக்கான நிதியாண்டின் பொருள் சேகரிப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான அக்டோபர் மாத சாம்பார் நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக பல்வேறு வேலைகளுக்கு நடுவில் நடத்திகொடுத்தார்கள்.


இந்த சிறப்பு ஒத்துழைப்புக்கு ஆசை இயக்கம் தீபாவளி கொண்டாத்தில் நன்றியினையும் பாராட்டுகளையும் தமிழ்ச்சங்கத்தின் மேடையில் தெரிவித்துக்கொண்டது. ஆசை இயக்க நிறுவாகிகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பை தமிழ் சங்கத்திற்கு கொடுத்தமைக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டோம். வாழுகின்ற சமூதாயத்தின் முன்னேற்ற பணிகளுக்கான பொருள் சேகரிப்பில் பங்கு கொண்டது அனைவருக்கும் பெருமையாக இருந்தது.

இதை தொடர்ந்து செல்வி நவீணா மற்றும் சிரேயா வழங்கிய கலப்பிசை நடனம். 5 பாடல்களின் தொகுப்பில் இந்த நடனம் அமைந்து இருந்தது. ஒவ்வொரு பாடலுக்கும் தகுந்தாற் போல், இசையின் வலைவு நெளிவுகளுக்கு தகுந்தாரற் போல் அழகாக நடனமாடினார்கள்.



இதை தொடர்ந்து செல்வி பிரித்தி மற்றும் பிரித்திகா வழங்கிய தமிழ் பாட்டிற்கு நடிப்பு மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருந்தது. பாட்டில் வரும் செல்ல விலங்குகளின் செயல்களையும், பாட்டின் சொற்களையும் அழகான உச்சரிப்பு பிரித்திக்கு, மிகவும் அழகான நடிப்பு பிரித்திகாவிற்கு.






தொடர்ட்ந்து செல்வன் பிரித்திவி வழங்கிய மெல்லிசை. வந்தே மாதரம் பாடலை கருவி இசையாக அழகாக வாசித்து காட்டினான்.





இதை தொடர்ந்து செல்வி ஆராதணா வழங்கிய வயலினிசை, 2 ஆங்கில பாடல்களை மேற்கத்திய இசையில் வாசித்துக்காட்டினார்.





தொடர்ந்து செல்வன் கவி வழங்கிய புல்லாங்குழல் இசை. இதுவும் மேற்கத்திய இசையில் அமைந்த பாடல் தான். பாடலுக்கு முன்னர் கவி வழங்கிய தமிழ் முன்னுரை அவரது இசைக்கு மெருகேற்றியது. இளைய தலைமுறைக்கு தமிழ் கற்பிப்பதில் பெற்றோர்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள் என்று தெரிந்தது.





கவியை தொடர்ந்து செல்வன் சூர்யா, 2 பாடல்களை கருவி இசையாக வாசித்து காட்டினான். இவைகள் இரண்டும் மேற்கத்திய இலக்கண இசை வடிவங்களாகும். பியானோவில் வாசிப்பவர்களுக்கு ஒரு வசதி உண்டு, தனது பாட்டுக்கு வேண்டிய தாளத்தை தன்னாலே வாசித்துக்கொள்ள முடியும். அந்த முறையில் தாளத்தோடு 2 பாடல்களையும் அருமையாக வாசித்து அசத்தினான் செல்வன் சூரியா.


சூர்யாவை தொடர்ந்து சுருத்தி, மற்றும் ஒரு பியானோயிசை, ஆனால் இந்த பாடல் கர்னாடக இரகத்தில் வாசித்து காட்டினார். கருவி இசையிடன் மெட்டை கூடவே பாடியும் காட்டியது அருமை.




ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி விழாவில் செம்பைன் தமிழ் பள்ளியின் சார்பாக, தமிழில் மேடையில் குழந்தைகளை பேச வைப்பது வழக்கம். இந்த முறையும் தலைப்பை தானாகவே தேர்ந்தெடுத்துக்கொண்டு பேசும் படி மாணவர்கள் பணிப்பக்கட்டார்கள். இதோ அந்த மாணவர்கள் பேசும் காட்சிகள்.


செல்வன் சிபி தனது இந்திய பயணத்தை பற்றி விவரிக்கும் போது.

செல்வன் கிருடிணா தனது ஐரோப்பிய பயணத்தை விவரிக்கும் போது.


செல்வன் சித்தார்த் கணணியையும் அதன் பயனையும் விவரிக்கும் போது.

குமாரி சிவானி தனது பாட்டி தங்களோடு வந்து தங்கி இருந்ததையும், அவர் நிகழ்ச்சிக்கு அடுத்த நாள் நாடு திரும்புகிறார் என்றும் உருக்கமாக உரை வழங்கியபோது.




செல்வன் தேசிக மூர்த்தி தனது இந்திய பயணத்தை விவரிக்கும் போது, இந்தியாவில் தான் சன் தொலைக்காட்சிக்கு கொடுத்த காணொளியை சுவாரசியமாக குறிப்பிட்டான்.


செல்வி நித்திலா பருவகாலங்கள் என்ற தலையில் அமெரிக்காவின் பருவ காலங்களையும் இந்தியாவின் பருவ காலங்களையும் விளக்கி உரையாற்றும் போது.


பாலாசி மற்றும் தருமராசு வழங்கிய பல்சுவை நிகழ்ச்சி. நகைசுவையாக அமைந்த நிகழ்ச்சி இது. செம்பைன் சார்ந்த மக்களின் வாழ்க்கையில் நடந்த சில சுவையான நிகழ்வுகளையும், அவ்ர்களே இந்தியா சென்ற பொழுது நடந்த செயல்களையும் நகைசுவையோடு விளக்கி பல்சுவை நிகழ்ச்சியாக வழங்கினார்கள்.



செம்பைன் தமிழ் பள்ளி மாணவர்களுக்கா நடத்திய காணொளி வினாடி வினா. காட்சிகளை காட்டி அதில் இருக்கும் இந்திய பிரபலங்களை அடையாளம் கானும் படி நடத்திய நிகழ்ச்சி. இதில் பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம் என்ற சலுகையில் பெற்றோர்களுக்கு நல்ல விளையாட்டாகவும் அமைந்தது. குறிப்பாக இரவீந்திரனாத் தாகூரின் சிறியவதது படத்தை காட்டி இவர் யார் என்று கேட்டதற்கு பொதுவாக அனைவருமே ஏசு என்றும் விவேகாணந்தர், அரவிந்தர் என்றும் சொன்னார்களே தவிர அவர்களுக்கு தாகூரை குறித்த எண்ணம் கூட வரவில்லை. அருமையாக இருந்த நிகழ்ச்சி இது.



சமார் அமைபின் சார்பில் சங்க உருப்பினர்கள் இரவிசந்திரன் மற்றும் மருத்துவர் சரவணன் இருவரும் நடத்திய எலும்பு மஞ்சை தான பதிவு நிகழ்ச்சி. இந்த அமைப்பு தென்னாசியாவின் மக்கள் அனைவரது மஞ்சை மாதிரிகளையும் சேகரித்து புள்ளிவிபரங்களை வைத்துக்கொண்டு வருகிறது. தென்னாசியர்களுக்கு தேவை என்று வந்தால், எந்தெந்த மக்களின் மஞ்சைகள் கேட்போருக்கு பொருந்தும் என்ற முன்கூடிய தகவல்கள் கிடைக்க செய்கிறார்கள். இந்த பதிவு நிகழ்வை, தமிழ்ச்சங்க விழா முடிந்து மாலை நடந்த ஆசை இயக்க நிகழ்விலும் நடத்தினார்கள்.


பனிமலருக்காக செம்பைன் தமிழ்ச் சங்கம்.

Wednesday, October 28, 2009

ஸ்ரீவித்யா மூன்றாம் ஆண்டு நினைவு நாள்




உனது உலகமாய் என்னை வைத்திருந்தாய்
எனது உலகமாக உன்னை பார்தேன்
இடையில் ஏன் இந்த கண்ணாமூச்சு

உனது வரவை எதிர்பார்த்து
காத்துக்கொண்டு இருக்கிறேன் அம்மா.............

Tuesday, October 13, 2009

உன்னை போல் ஒருவனில் பேசாமல் விட்ட வசனங்கள்.


இந்த படம் பசகவின் கொள்கை பரப்பு படம் என்று எண்ணற்ற பதிவர்கள் எழுதியும். பொதுவாக படம் நன்றாக இருக்கிறது என்று தான் பெரும்பாலோர் எழுதினார்கள்.

படத்தில் கமலகாசன் பேசும் வசனங்களுக்கும், இந்த அர்சுனன் சம்பத் எழுதியுள்ள வசனங்களுக்கும் என்ன பெரியவித்தியாசம்.

மேம்போக்காக பார்த்தால் அர்சுனன் சம்பத்து செல்வது எல்லாம் சரி என்றது போல் தோற்றம் கொடுக்கும் விதமாக எழுதியுள்ளார். இதையும் ஒரு பொது மனிதனின் கோபம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான் போலும்.

வார்த்தைக்கு வார்த்தை இசுலாமிய சமுகதினர் மீது மூர்க தனமாக கருத்துக்களை வீசியுள்ளார். தேசிய கொடியில் காவி நிறம் இருக்கலாமா ஆனால் பச்சை நிறம் இருக்ககூட்டாது என்று எழுதுகிறார்.

நாங்கள் எல்லாம் பள்ளிகளில் படிக்கும் போது, இந்தியா எனது தாய் நாடு, இந்தியர் அனைவரும் எனது உடன் பிறந்தோர் என்று தான் உறுதி மொழி எடுத்துக்கொண்டதாக நினைவு. ஆனால் பசக இந்துக்கள் அனைவரும் உடன் பிறந்தோர் மற்றவர் அனைவரும் எதிரிகள் என்று சொல்லவேண்டும் என்றும் கூட வலியுருத்துவார்கள் போலும்.

இலங்கையில் நடக்கும் உரிமை போர் இங்கே இந்தியாவிலும் வரவேண்டும் என்று தான் பசக நினைத்து செயல்படுகிறது போலும்.

உலகம் உருப்பட இசுலாமிய தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்று சொல்லும் அதே தருனத்தில், இந்தியா உருப்பட வேண்டும் என்றால் இந்து தீவிரவாதமும் அழிக்கப்பட வேண்டிய ஒன்றே.

இப்படியே இன்னமும் சில ஆண்டுகள் சென்றாலும், வருகின்ற இளைய தலைமுறை இசுலாமிய மக்களை எதிரிகளாகவே நினைத்துக்கொண்டு தான் வளர்வார்கள் போலும்.

ஒன்று பட்ட இந்தியாவை அழிக்கும் சக்தியாக இருப்பதில் இருந்து இந்த பசக எப்போதுதான் தன்னை மாற்றிக்கொள்ளுமோ.........

Saturday, October 3, 2009

தினமலர் இது எல்லாம் தேசதுரோக செயல்


அக்டோபர் 1 பொதுவுடமை சீனாவின் 60ஆம் ஆண்டு விழா. அந்த விழா கொண்டாட்ட படங்களை வெளியிடுவதாக எண்ணிக்கொண்டு இப்படி ஒரு படத்தை வெளியிட என்ன தைரியம் இருக்கவேண்டும் இந்த தேசதுரோக நாளிதழுக்கு.

இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான காசுமீரத்தை சீனா தனி நாடாக நடத்திவைப்பதிற்கு இணையாக இருக்கிறது இந்த செயல்.

சீனாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் இந்திய அரசு இன்ந்த சீனாவிடம் இந்தியாவை சரணடைய சொல்லவேண்டும் என்று இந்தியாவிற்குள் இருந்துக்கொண்டு சொல்லும் இந்த செய்த்திதாளை என்ன செய்ய போகிறது இந்திய அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும்.

பின் குறிப்பு: நேற்று வரை இருந்த இந்த படத்தை இன்றைகு அவசர அவசரமாக திருத்தி அமைத்து மறுபடியும் நல்ல பிள்ளை போல் வெளியிட்டுள்ளார்கள்.

Friday, September 25, 2009

எவனோ ஒருவன் - படத்திற்கு விருதுகிடைக்கவில்லையே ஞானியின் கவலை சரியானது தானா

தேசிய விருதுகள் அறிவித்ததை அடுத்து தனது விமர்சனங்களாக வைக்கும் விதமாக ஞானி அவர்கள் காஞ்சிவரம் படத்திற்கு விருது கொடுத்ததை கண்டித்ததோடு நில்லாமல் எவனோ ஒருவன் படத்திற்கு கொடுத்து இருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.


பதிவுகளில் எழுதி இப்போது வார இதழ்களுக்கு எழுதும் அளவிற்கு உயர்ந்த இவருக்கு, தேசிய விருகளுக்கு உள்ள அடிப்படை தகுதிகள் கூட தெரியவில்லையே என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.


எவனோ ஒருவன் படம் ஆங்கிலப்படத்தின் பிரதி. ஒவ்வொரு காட்சியும், கதையும் அப்படியே ஈ அடிச்சாம் பிரதியாக்க இருப்பதை மூலபடத்தை பார்த்தவர்களுக்கு தெரியும். இல்லை என்று அந்த படத்தை எடுத்த இயக்குனரும் சரி, நடித்த மாதவனும் சரி வாதாடவோ எங்கே ஆதாரம் காட்டுங்கள் என்றோ கேட்கும் நிலையில் எல்லாம் இல்லை.


எவனோ ஒருவன் தனது கடின உழைப்பில் கதை எழுதி, அதை வெற்றி திரைக்கதையாக மாற்றி வெளியிட்டால், அதை அப்படியே ஆலிவுட்டுக்கு வெகு தொலைவில் அல்லவா உள்ளோம் என்று தமிழில் மாற்றி எடுத்த உங்களது முயற்சியை வேண்டு என்றால் பாராட்டலாம் ஆனால் அதற்கு விருது எல்லாம் மிகைமிகையான ஆசைகள் ஞானி.


மற்ற விபரங்களுக்கு எனது விமர்சனத்தை பார்க்கவும்.
http://panimalar.blogspot.com/2008/03/blog-post_19.html

Tuesday, September 22, 2009

உன்னைப்போல் ஒருவன்-- இந்த படமும் விடுதலை புலிகளும்

இந்த படம் வந்ததில் இருந்து அடடா என்ன படம், ஒரு பொது மனிதனின் கோபம் என்ன அழகாக நடித்துள்ளார். என்னே திரைகதை, இசை அதிலும் அபாரம். அப்படி இப்படி என்று ஏகத்திற்கு எழுதி தள்ளுகிறார்கள் நமது வலைஞர்கள்.

இந்த படத்தின் நீதியை நாயகன் விளக்கும் காட்சி, கண்ணுக்கு முன் நடந்த கொடூரங்களும், அந்த கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் எந்த ஒரு குற்ற உணர்ச்சிகளும் இல்லாமல் சொகுசாக வாழ்கிறார்களே. அவர்களை யார் தான் என்னதான் செய்துவிட முடியும் என்ற கோபம். அப்படி இப்படி என்று எல்லாம் இவர்கள் எழுதுவதை பார்த்தால். என்னே ஒரு இரக்க குணம் இந்த மக்களுக்கு என்று பாராட்ட தோன்றுகிறது.

வெறும் கதையை பார்த்துவிட்டு, அய்யயோ என்று கண்ணீர் வடிக்கும் இந்த கூட்டம் நமது சகோதர்கள் கூட்டம் கூட்டமாக அன்றாடம் மடிந்து கொண்டு இருக்கும் போது. அப்படி எதுவுமே நடக்கவில்லை, புலிகள் செய்வது தீவிரவாதம், பாவம், கொடூரம் என்று எல்லாம் வந்து எங்களது பதிவில் எழுதிவிட்டு சென்றார்கள்.

இந்த படத்தில் நாயகன் செய்ததை தான் விடுதலை புலிகள் இத்தணை ஆண்டுகளாக செய்து வந்தார்கள். ஒரு சில தனி மனிதர்களது கோபம், ஆற்றாமை ஒன்று கூடி எதிர்க்கும் வலிமையாக மாற்றம் பெற்றது.

இந்தியாவில் இசுலாமிய சகோதர்களுக்கு எதிப்பு என்றால் ஆமாம் அவர்களை எல்லம் கொல்ல வேண்டும் என்று கண்களை கட்டிக்கொண்டு ஆதரவு தெரிவிப்பதும். அவர்களால் விளைந்தது மட்டும் தான் தீவிரவாதம் என்றும், மற்றவர்களால் வருவது எல்லாம் தக்காளி சாரு என்று எண்ணும் உங்கள் எண்ணத்தை என்ன என்று சொல்ல.............

எங்கே இந்த படத்தை பிரகாசு ராசை வைத்து எடுத்தால் எதிர்ப்பு கிளம்புமோ என்ற பயத்தில் கமலகாசனை வைத்து எடுத்துள்ளார்கள். மற்ற நடிகர்கள் செய்தால் அது நாட்டு துரோகம், ஆனால் கமலகாசன் செய்தால் அது கலைபடைப்பு ஆகுமே.

கர்னாடகத்தில் பசக ஆட்சியை பிடித்தாகிவிட்டது, ஆகையால் அவர்களுக்கு எல்லாம் பாடம் தேவை இல்லை, ஆனால் தமிழகமும், ஆந்திரமும் அடுத்த கட்ட தலைவர்களை தேடி அலையும் காலம் இது. இப்போது ஏற்றினால் தான் இந்த தீவிரவாதம் போதை அவர்களுக்கு தலைக்கு நேராக ஏறும் என்று கமலகாசனின் முகமூடியில் வைத்து பசக கொடுத்துள்ளது போலும்.

கே ராமில் கமலகாசன் கல்கத்தாவில் நடந்த கலவரத்தை காட்டி காசு செய்யவும், மத உணர்வுகளை தூண்டவும் நினைத்து அந்த படம் அப்படி இப்படி என்று எல்லாம் பேசப்பட்டது. ஆனால், அன்றைக்கு கதையின் தலைவனாக சொன்ன பாடம் ஏற்க தமிழக மக்கள் மறுத்துவிட்டார்கள். ஆனால் இன்றைக்கோ கிட்டத்தட்ட விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் வீர வணக்க நாளான்று விடுக்கு முறையீடுக்கு இணையாக கமலகாசன் முறையீடுகளை செய்துள்ளார்.

விடுதலை புலிகளுக்கு ஆதரவு என்று ஒரு புறம் தெரிந்தாலும், இந்தியர்களுக்குள் சண்டை மூட்டி அதன் மூலம் தெற்கில், தமிழகம்,ஆந்திரம் என்று ஆட்சியை கைகொள்ளும் கள்ள முயற்சியாகத்தான் இந்த படம் தோன்றுகிறது.

தமிழர்களுக்கு இந்த தீவிரவாத பெத்தடின் போதை அவ்வளவு எளிதில் ஏறிவிடுவது இல்லை தான், அதற்காக இப்படியா கொள்ளை கொள்ளையாக கொண்டு வந்து ஏற்றுவது...................

உன்னைப்போல் ஒருவன் , இந்து தீவிரவாதிகளின் பிரச்சாரபடம். எப்படி தடைவிதிக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை.

Thursday, September 10, 2009

முதுகெலும்பு இல்லாத சீனாவும் தன்மானம் இல்லாத பசகவும்(BJP)

அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்போ காலியாகும் என்று இருந்ததை போல இலங்கையில் பாக்கிட்த்தானம் தனது இராணுவ தளவாடங்களை இறக்கியதோடு மட்டும் அல்லாது இந்தியாவை குறிவைத்து தனது இராணுவ நகர்வுகளை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றது.

இந்த நிகழ்வுகள் நிகழ்ந்து சில தினங்களுக்குள்ளாகவே சீனா தனது விமான படையை இந்தியாவிற்குள் ஊடுருவ விட்டு இந்தியாவின் பதில் நடவடிக்கை என்ன என்று பார்த்து நின்றது. ஒன்றும் செய்யாமல் மட்டும் இல்லை, என்ன செய்வது என்று குழம்பி போய் நிற்கும் சமயத்தை பயன்படுத்திக்கொண்டு தனது இராணுவத்தையும் ஊடுருவ செய்து உலகுக்கே அறிவிக்கும் முகமாக சிவப்பு வண்ணமும் சீனா என்றும் எழுதி காட்டியது.

அதாவது அவர்களது இராணுவம் இந்திய எல்லையில் இத்தணை மயில் கணக்கில் உள்ளே நுழைந்து திரும்பியது என்று உலகுக்கு சொன்ன பிறகாவது இந்தியா ஏதாவது ஒரு எதிர் நடவடிக்கையை எடுக்கிறது என்று பார்த்து ஏமாந்து நிற்கிறது பாவம்.

உலக வல்லரசுகளில் ஒன்றாக தன்னை கூறிக்கொள்ளும் நாடு இந்த சீனா. பெரிய நாடு, உலகில் அதிக மக்களை கொண்ட நாடு. இத்தணை ஆண்டு காலமாக பொதுவுடமை கொள்கைகளை கொண்டு வளர்ந்த நாடு என்று எத்தணையோ அவர்கள் சொல்லிக்கொண்டாலும். அவர்களது மொழியில் இந்தியா ஒரு சுண்டக்காய் நாடு. அந்த நாட்டோடு நேருக்கு நேர் மோத துணிவு இல்லாமல். பாக்கிட்த்தானத்தை பணம் கொடுத்து தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதும்.

ஆள் இல்லாத எல்லையில் மூக்கை நுழைத்து பார்ப்பது திருடர்களது வேலை. பெரிய நாடு என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் கீழ்தரமான திருடர்களை போல் நடந்துகொள்வது ஏன். உண்மையில் இவர்கள் சொல்லிக்கொள்வது போல் வலிமை இல்லாத நாடாகத்தான் சீனா இது வரையில் இருந்து வருகிறது போலும். உடலில் இருந்து துறுத்திக்கொண்டு தெரியும் எலும்புகளை மறைப்பதர்காகத்தான் அந்த சிவப்பு வண்ண பட்டாடையை அணிந்து இருக்கிறதா என்றும் எண்ணத்தோன்றுகிறது.

ஒரு சுண்டக்காய் நாடு என்று உங்களால் வருணிக்கப்பட்ட நாட்டை சென்று சண்டைக்கு இழுக்க நெஞ்சில் துணிவு இல்லை பிறகு என்ன வல்லரசு நீங்கள். இதற்கு சிங்கள நாடு போல் பிச்சை எடுத்து பிழைக்கலாம்.

முதலில் இந்தியாவின் தயாரிப்பு என்று போலி மருந்துகளை ஆப்ரிக்க நாடுகளுக்கு விற்று பார்த்தார்கள், கண்டு பிடிக்கப்பட்டு மூக்கறு பட்டு நின்றார்கள்.

பிறகு இந்தியாவின் விண்வெளி திட்டத்தை விட எங்களது நுட்பம் மேலானது என்று காட்டும் வகையில் விண்வெளியில் தனது வீரனை அனுப்பி படம் காண்பித்தார்கள். அவர்கள் காண்பித்த இந்த படத்திற்கு பதிலாக இந்திய 13 கோள்களை ஒரு கணையில் பொருத்தி விண்ணுக்கு ஏவி சீனாவிற்கு வண்ணத்தில் படம் காட்டியது. அந்த 13 கோள்களில் சந்திராயணம் கோள் செலவும் கணையின் செலவும் மற்ற 12 கோள்களை அனுப்ப கொடுத்த பணம் ஈடு கட்டியது. ஆக செலவே இல்லாமல் நாம் விண் திட்டத்தில் மற்றும் ஒரு சாதணையை படைத்து காட்டினோம்.

அதோடு மட்டும் நில்லாது 2012ல் கணைகளின் வகையில் அதி நவீன நுட்பமாக கருதும் நுட்பத்தில் 2012ல் நிலவுக்கு சந்தியாணம் - 2 செல்லும் என்றும் அறிவித்தது இந்தியா. 70 ஆயிரம் படங்களை எடுத்து நிலவில் பனிபடிவம் உள்ளது என்று சொன்னாலும் சொன்னார்கள், இந்த மானம் கெட்ட சீனத்திற்கு பொத்துக்கொண்டு வந்திருக்கும் என்று நினைக்கின்றேன் உடனே இந்த எல்லை மீரல் பிரச்சணையை துவக்கி தனக்கு விளம்பரம் தேடுகிறது.

சென்ற மாதம் இந்தியாவின் தயாரிப்பான இலகு இரக தாக்குதல் விமானங்கள் மிக்கு 21க்கு பதில் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பும், 2012ல் அதி மிகையொலி அதி தாக்குதல் விமானம் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு படையில் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பும் சினாவின் வயிற்றில் எரிச்சலை உண்டு செய்திருக்கும் என்று நினைக்கின்றேன் அது தான் இந்த போக்கிரிதனத்தை செய்துவிட்டு கைலியை மடித்து கட்டி வாயில் புகையுடன் இன்னா என்று நிற்கிறது போலும்.

இந்த நிலையில், நாட்டின் முன்னேற்றம் மட்டுமே முக்கியம், மற்றவை எல்லாம் பிறகு தான் என்ற நோக்கில் தலைமை அமைச்சர் செயல்பட்டுக்கொண்டு இருப்பதை நன்றாக தெரிந்தும். அவருக்கும் நாட்டின் ஒருமைபாட்டிற்கும் துணையாக இருக்க வேண்டிய எதிர்கட்சியான பசக கொஞ்சம் கூட நாகூசாமல், ஒரு தேசிய கட்சி என்ற பொறுப்பு கூட இல்லாமல் இப்படி தலைமை அமைச்சரையும் அவரது அமைச்சரவையும் கேலி செய்யும் விதமாக பேசி இருப்பது அவர்களது ஈன புத்தியை காட்டுகிறது.

கார்கிலில் ஒரு அவசர நிலை தோன்றியது எல்லா கட்சிகளும் எப்படி கட்டுக்கோப்பாக ஒற்றுமையை கடைபிடித்து காட்டிய நிலை இல்லை என்றாலும் சீனாவை வன்மையாக கண்டிப்பதோடு, இது போல் செயல்களுக்கு இந்திய அரசு எடுக்கப்போகும் எதிர்வினைக்கு துணையாக நிற்போம் என்று கூறாமல், நாங்களாக இருந்து இருந்தால் இப்படி அப்படி என்று செய்தி இதழ்களால் பேசுவது என்ன அரசியல் அறிவோ தெரியவில்லை.

இனியாவது பொறுப்பாக நடப்பார்களா இந்த மானமில்லா பசக கட்சியினர்கள்.

Wednesday, September 9, 2009

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க? -- நகைப்புக்கு மட்டுமே

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?

நியாயமான ஒரு கேள்வி

ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.

அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.

இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.

இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" – அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்?ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது. "இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான்ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க...
டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை."

இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."

இதுக்கு பேரு "Maintenance and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

தயாரித்து அனுப்பிய வலையுலக நண்பருக்கு நன்றி...........

காந்தியும், நேருவும் இன்றைக்கு இருந்திருந்தால் ஈழம் மலர்ந்து இருக்கும்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சிறுபான்மையான இசுலாமியர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று சின்னா சொல்ல. அப்படி எல்லாம் இல்லை என்று காந்தியும், நேருவும், மற்ற அரசியல் தலைவர்களும் எவ்வளவு உத்திரவாதம் கொடுத்தும் நில்லேன் என்று தனி நாடாக போகின்றோம் என்று அடம் பிடித்து நின்ற சின்னாவால் தனி நாடாக பாக்கிட்த்தானம் மலர்ந்தது.

இப்படி ஒரு பிரிவினை பிறக்கப்போகிறது என்ற பேச்சுகள் எழுந்த உடனேயே வடக்கிலே கலவரம் தலைவிரித்தாடியது. கடைசியாக சரி போய் சேருங்கள் என்று காந்தியின் தலைமையில் முடிவு எட்ட நேருவும் அதை ஏற்றுக்கொண்டு விட்டுக்கொடுத்தார்.

அந்த பிரிவினையும் ஈழம் போல் இரத்த பிரிவினையாகத்தான் இருந்தது. ஆனால் அன்றைக்கு தனி நாடு கேட்ட மக்களின் மீது இப்படி காந்தியின் தலைமையில் உள்ள அரசியலர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிடவில்லை.
மாறாக அந்த பயத்தை போக்கும் விதத்திலும் நம்பிக்கையும் பிறக்கும் விதத்திலும் நடந்து காட்டியும், மேலும் நடந்து காட்டவும் முற்பட்டார்கள்.

ஒன்றாகவே இருந்து பிரச்சனைகளை கொண்டு நகருவதற்கு பதில் பிரிந்து நிம்மதியாக இருக்கலாம் என்ற முன்னோசனை அவர்களுக்கு இருந்தது.

மேலும் நம்பிக்கை இல்லாத இடத்தில் இனியும் நம்பகமாக நடந்து காட்டினாலும் அவர்கள் நம்புவதற்கு இல்லை என்று தெளிவாக பாக்கிட்த்தானத்தை தனியாக செல்ல அனுமதித்தார்கள் அந்த பழுத்த அனுபவம் உள்ள அரசியலர்கள்.

ஆனால் இன்றைக்கோ ஈழம் மலர்ந்தால் இந்தியாவுக்கு தீங்கு என்று எவனோ சொன்ன ஆரூடத்தை கையில் வைத்துக்கொண்டு வரிசையாக அரிதாரம் பூசி கதகளி ஆடி நிற்கிறது அதே பேராயத்தில் வந்த அரசியலர்கள்.

அன்றைக்கு நேருவுக்கும், காந்திக்கும் இந்தியாமீது கொண்ட நம்பிக்கையை இன்றைய அரசியலர்கள் கொள்ள பயம் கொள்வதேன் என்று விளக்குவார்களா.

இலங்கையில் அவர்களது மண்ணில் விளைந்த பிரிவினை. அதை சிங்களர்களாவே விதைத்தார்கள், அவர்களாகவே தான் அறுவடை செய்யவேண்டும். இதில் இந்தியாவுக்கு என்ன பங்கு இருக்க முடியும். தனது மூக்கை ஏன் இப்படி தானா கொண்டு நுழைக்கவேண்டும்.

பிறகு மூக்கறுபட்ட சூர்ப்பனகை போல் ஓலமிட்டு இப்படி ஒட்டு மொத்த தமிழர்களையும் அழித்து, மூக்கறு பட்டதிற்கு பழி தீர்த்துக்கொண்டோம் என்று பெருமையாக ஏன் சொல்லவேண்டும்.

மூக்கை நுழைத்தது இந்தியாவின் தவறு, அப்படி நுழைத்தற்கு தான் மூக்கறு பட்டீர்கள், பிறகு ஏன் குய்யோ முறையோ என்று ஏன் கதர வேண்டும்.

ஒரு வேளை காந்தியும், நேருவும் இன்றைக்கு இந்திய அரசியலை கட்டுப்படுத்தும் நிலையில் இருந்திருந்தால், ஒன்றாக இருக்க முடியாவிட்டால் தனியாக இருந்துவிட்டு போங்கள் என்று தான் தைரியமாக முடிவு எடுத்து வாழ்த்தி அனுப்பி இருப்பார்கள். இப்படி முதுகில் குத்தும் செயல்கள் எல்லாம் செய்திருக்க மாட்டார்கள் அந்த மாவீரர்கள்.

ஏன் இப்போது சீனா வடக்கில் தனது இரணுவத்தை உள்ளே நுழைத்து பொப்பொபே ஆடி காட்டுகிறதே போய் காட்டவேண்டியது தானே உங்கள் இந்திய வீரத்தையும் சூரத்தையும். எவனாவது இளிச்சவாயன் கிடைத்தால் போட்டு அடியோ அடி என்று அடிப்பார்கள். அடி விழும் என்று இருந்தால் எல்லை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது, இராணுவம் வந்தால் என்ன, விமான படை வந்தால் என்ன. எல்லை நன்றாக பாதுகாப்பாக இருக்கிறது என்று அறிக்கை விடுவார்கள் இந்த மானம் கெட்ட பேராய அரசியலர்கள்.

Monday, September 7, 2009

அணுஆயுத நாடாக போகும் இலங்கை -- இந்தியா என்ன செய்ய போகிறது.

பாக்கிட்த்தானம் அதிக அளவில் அணு ஆயுதங்களை வாங்கி குவித்து வருகின்றது என்ற செய்தியை மீண்டும் மீண்டும் அமெரிக்கா சொல்லிக்கொண்டே வருகிறது.

அது மட்டும் அல்லாது இன்றைய நாளேடுகளில் வந்திருக்கும் மற்றும் இரு செய்தி, முசாராப்பு தீவிர அரசியலில் குதிக்கிறார் என்ற செய்தி.

இந்த இரண்டு செய்திகளும் எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தது என்று முதலில் பார்ப்போம். கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் இதே அமெரிக்க வெளியிட்ட அறிக்கையில் பாக்கிட்தானம் சுவாட்டு பள்ளதாக்கில் நடக்கும் வன்முறைகளை கையாள தெரியாமல் பாக்கிட்த்தானம் திணருவதாகவும். அதற்கு அமெரிக்கா சென்று தான் பொருள் மற்றும் இராணுவ உதவிகளையும் கொடுத்து பாக்கிட்த்தானத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் செய்திகளை வெளியிட்டு. அமெரிக்காவின் படைகளையும், பொருட்களையும் அனுப்பியது.

இன்றைக்கு அமெரிக்க சொல்வது போல் அணுகுண்டுகளை விளை கொடுத்து வாங்கும் வசதியில் பாக்கிட்த்தானம் இருக்கும் பட்சத்தில் இவ்வளவு பொருளை கொடுக்க அமெரிக்க பாராளுமன்றம் ஒத்துக்கொண்டது எப்படி என்று அமெரிக்க தெரியபடுத்துமா.

முசாரப்பு தீவிர அரசியலில் இறங்குகிறார் என்று சொன்னால், அந்த செய்தி யாருக்கு சொல்லும் செய்தியாக இருக்கும். உலகத்திலே பாக்கிட்த்தானத்தினால் பாதிக்கப்பட்ட ஒரே நாடான இந்தியாவுக்கு தான் இந்த செய்தி அது. அதுவும் எப்படி பட்ட நிலையில் இந்த செய்தியை வருகின்றது. அதிக அளவு அணுகுண்டுகளை பாக்கிட்தானம் குவித்துவைத்துள்ள இந்த நிலையில் இந்த செய்தி வருவது. இந்தியாவுக்கு கார்கிலை நினைவூட்டும் செயலாக இந்த செய்தியை இந்தியா எடுத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் பரப்ப பட்ட செய்தியாகத்தான் இது இருக்கும்.

இதோடு நிற்காமல் அழிக்கப்பட்ட ஈழ பூமியில் இதே பாக்கிட்த்தானம், தனது இராணுவ தளத்தை அமைத்து வருவதற்கு முன்னோடியாக இராணுவ பயிற்சி என்ற பெயரில் அங்கே அதிக அளவில் முகாம்மிட்டு இருப்பதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில், பாக்கிட்த்தானம் அணு ஆயுதங்களை தயார்படுத்துகிறது என்றால். அது இரசியா பனிபோர் காலத்தில் கியூபாவில் கொண்டு வந்து நிறுத்தி வைத்துதிருந்த 50 ஏவுகணைகளை நினைவு கூறும் நிகழ்வாக இருக்கிறது.

பாக்கிட்த்தானத்திடம் இருக்கும் ஏவுகணைகளின் இலட்சணம் இந்தியாவுக்கு நன்றாக தெரியும். அப்படி எண்ணி இந்தியா திமிராக இருக்கும் என்ற எண்ணத்தில், இலங்கையில் கொண்டு வந்து தனது அணு ஆயுதங்களை தென்னிந்தியாவை தாக்கும் திட்டமாக பாக்கிட்த்தானம் இந்த முன்னகர்வை எடுத்து இருப்பது தெரிகின்றது. இதற்கு இந்திய எந்த கோணத்தில் தனது பதிலடியை தயார்படுத்திகொள்கிறது என்று உலகம் கவனித்துகொண்டு இருகிறது.

2012ல் சந்திராயணம் 2 என்ற திட்டபணிகளை நேற்று தான் அண்ணாதுறை தெரிவித்தார். 480 கோடி உரூபாய்களில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும். சந்திராயணம்-1 70 ஆயிரம் படங்களை எடுத்து அனுப்பியதோடு மட்டும் அல்லாது. தனது துணைகோளை அமெரிக்க துணை கோளோடு இணைத்து பணிபுரியும் நடவடிக்கைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது என்று அறிவித்த கையோடு இந்த அறிவிப்புகள் வெளிவருகின்றது என்றால். இந்த செய்திகளின் நம்பிக்கை தன்மை எப்படி இருக்கும் என்று நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

பார்ப்பதற்கு தான் அமெரிக்க நல்லவனாக இருப்பான் போலும். வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்று முன்னேற்றம் கொள்ளும் போது அத முன்னேற்றத்தை தடுப்பதற்காக என்ன எல்லாம் செய்யமுடியுமோ அவ்வளவும் செய்யும் போலும்.

Friday, September 4, 2009

சேஞ்சுலிங்கு(Changeling) –திரைவிமர்சனம்


2008ல் வந்த படம் இது, ஆனால் கதையின் காலம் 1928. படம் துவக்க காட்சியில் இருந்து பிரம்மிப்பு தான். 1928ல் உள்ள தொலை பேசி இணைப்பகம், இலாசு ஏஞ்சலசு நகரம், நடை, உடை, தோற்றம் என்று கிளின்டு ஈசுட்டுஉட்டு அசத்து அசத்து என்று அசத்துகிறார்.



இது வரையில் வான்டட்(Wanted) படம் வரையில் பார்த்துவந்த வீராங்கனை நடிகை ஏஞ்சலீன சோலி 1928ல் உள்ள பெண்மணிக்கே உள்ள பதட்டம், பொருமை, அடக்கம் என்ற அத்தனையும் அழகாக அவரது முகதிலேயே கொண்டுவந்து காட்டுகிறார்.



படத்தில் அவ்வப்போது காட்டும் இடிராம்(Tram) வண்டிகளும், சீருந்து(Car) வண்டிகள், புகைவண்டி காட்சியின் அந்த காலத்தோடு நம்மை பார்க்க வைக்கும் படம். இவைகள் எல்லாம் பின் இணைப்பு வேலைகளாக தான் இருக்க வேண்டும் அனேகமாக அரங்கமைத்து படமாக்கப்பட்டதாக தெரியவில்லை.



1928ல் அமெரிக்க பெண்மணிகள் கூட இந்திய பெண்மணிகள் போல் பேச்சும், செயலும் சுதந்திரம் கொடுக்கப்படாமல் அடக்கிவைக்கப்பட்டு இருந்தார்கள் என்று அழகாக படம் பிடித்து காட்டுகிறார்கள்.



அடக்கமாக அழுவதும், எதிர்த்து பேசவே பயப்படும் பாத்திரமாக ஏஞ்சலீனா, அவரை மிரட்டியே காரியம் சாத்திக்கும் காவலர்கள் என்று படம் சூடு பிடிக்கின்றது. படத்தின் அந்த பகீர்காட்சி இதோ.



இந்த காட்சியில் துவங்கும் முடிச்சு கதையின் முடிவுவரை தொடர்வது கதையிலும், திரைகதையிலும் அந்த குழுவுக்கு உள்ள தேர்தியை காட்டுகிறது.

காவல்துறையே ஆனாலும் தவறு என்றால் தவறு தான் என்று கவல்துறை தலைவரையும், அந்த மிரட்டல் பேர்வழியையும் நீதிமன்றம் வேலை நீக்கம் செய்யும் போது ஏஞ்சலீனா விடுக்கும் அந்த மெல்லிய புன்னகை அருமையான நடிப்பு.



படம் பார்க்காதவர்களின் சுவாரசியம் கெட்டுவிடும் என்ற காரணத்தால் சுருக்கமாக கதை இதோ.



ஏஞ்சலீனாவின் சிறிய வயது மகன் திடீர் என காணாமல் போகின்றான். எங்கே என்று தேடி அலைகிறாள் அந்த அபலை தாய். திடீர் என்று ஒரு நாள் காவலர்கள் பிள்ளையை தேடி கண்டுபிடித்து விட்டதாக ஒரு பையனை ஏஞ்சலீனாவிடம் தினித்துவிட்டு செல்கிறார்கள்.

இது எனது மகன் இல்லை என்று பயந்த பெண்ணாக அவர் காவலர்களுடன் மெல்லிய வாதம் புரிய, இது தான் உனது மகன் மற்றும் ஒரு முறை இல்லை என்று வாதிட்டால் விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்று மிரட்டபடுகிறாள் ஏஞ்சலீனா.



மகனின் அங்க அடையாளங்களையும், மற்றும் பள்ளி ஆசிரியை, பல் மருத்துவர்களது துணையுடன் செய்தி இதழ்களுக்கு இது எனது மகன் இல்லை என்று அறிவிக்க. காவல்துறை ஏஞ்சலீனாவை பைதியகாரி என்று பட்டம் கட்டி மன நல மருத்துமனையில் அடைகிறார்கள். அங்கே வைத்து இது தான் எனது மகன் என்று எழுதிவாங்க முயற்சி எடுகிறது காவல்துறை.



நல்ல மனம் கொண்ட சிலரால் ஏஞ்சலீனா மீட்கப்பட்டு, காவல்துறையின் மேல் வழக்கு தொடுக்கிறார்கள் அவர்கள். இந்த முறை அந்த காவல்துறையின் அடக்குமுறைகளுக்கு கைகூலிகளாக வேலை செய்யும் அனைவரையும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கிறது நீதிமன்றம்.

ஒரு கட்டத்தில் படம் இவ்வளவு தான் என்று நினைக்கும் தருவாயில், கிளின்டு ஈசுடுஉட்டு காணாமல் போன பையனை மறந்துவிட்டீர்களே என்று கதை தொடருகின்றது. தொடர்ந்து எழுதினால் கதையின் முடிச்சுகள் வெளிப்படும் என்று கதையை இதோடு நிறுத்திகொள்கின்றேன்.



இந்த கதை தமிழில் வருவதற்கு நிறைய வாய்புகள் உண்டு, தவிர தமிழில் இப்படி பெண் வாழ்கையை தொலைத்த கதைகளை எடுத்தால் நன்றாகவும் ஓடும். என்ன இந்த அளவிற்கு கால நினைவுகளோடு இல்லை என்றாலும், இரு கிராமத்திலோ அல்லது நகரத்து வாழ்க்கையாக அருமையாக எடுக்க உகந்த திரைகதை இந்த திரைகதை. எதிர்பார்ப்போம் தமிழில் விரைவில்.