Sunday, April 29, 2018

ஒரு தலை ராகம் - இன்றைய இளைஞர்கள் பார்த்தால் என்ன சொல்வார்கள்

ஒரு தலை ராகம் படத்தை இன்றைய இளைஞர்கள் பார்த்தால் என்ன சொல்வார்கள். புறனாணூற்று காதல் என்று தான் சொல்வார்கள்.

பெண்களை விடுங்கள் ஆண்களே தனக்கு உன்மேல் விருப்பம் காதல் என்று சொல்ல தயங்கிய காலத்தில் எடுக்கப்படம்.

ஒரு தலை ராகத்தில் பாடலிலும், இலைமறை காயாக தான் அவனின் காதல் வெளிப்பாடுகளை காட்டுவான். அதுவும் பணக்கார அப்பாவின் இரண்டாம் மனைவியின் மகன் என்ற தயக்கம் அவனுக்கு, அவளுக்கோ ஓடிப்போன அப்பா தனியாக தாய் வளர்க்கும் இரண்டு பெண்களில் ஒருவர் என்ற தயக்கம் படம் திரைக்கதையில் ஆங்காங்கே குறுக்கிடுவது கவிதையாய் அமைந்த படம்.

கோடை விடுமுறையில் கோவிலுக்கு செல்வதும் அங்கே இவனும் அவளும் மனதிலே பேசிக்கொள்ளும் காட்சிகளும் கவிதையே.....

அது அந்த காலம், இது குழந்தை பாடும் தாலாட்டு போல் தரமான பாடல்களும் இசையும் வந்துக்கொண்டிருந்த காலம். என்ன ஒரு பாடல் இன்றைக்கு நினைத்தால் கூட ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு இயலாமையை காட்ட அத்தனை இயலா காரியங்களையும் தொகுத்து எழுதிய கவிதையாய் அந்த பாடல்.

ஆருதலாக பேசும் தோழி எத்தனை பேருக்கு கிடைப்பார்கள், அதுவும் உடல் நிலை சரி இல்லை என்றது வீடு வரை வந்து விசாரித்துவிட்டு போகும் தோழி என்று அருமையான ஒரு பாத்திரம். புது புத்தகம் என்றதும் உரிமையுடன் வாங்கி பெயரை எழுதித்தரும் தோழியாய்......

கல்லூரியின் கடைசி நாள் அனேகமாக அனைவரின் மன நிலையும் அப்படி தான் இருந்திருக்கும். அது வரையில் எப்போது முடியும் வீட்டிற்கு போகலாம் என்று இருக்கும் மனது அன்றைக்கு இனிமே அவ்வளவு தான் என்று தெரியும் போது படும் வேதனையை வெளிப்படுத்த வார்த்தைகளே கிடையாது........

என்ன ஆனாலும் பரவாயில்லை என்று கடைசியில் தைரியமாக காதலை தெரிவிக்க வரும் அவள் போன்ற தைரியமான பெண்கள் என்றைக்கும் உண்டு என்று அன்றைக்கே காட்டிய படம்.

அவளின் மனது என்ன என்று ஆழகாக வருணித்து பாடும் வாசமில்ல மலரிது பாடல் என்னே ஒரு பொருத்தம்.

மயிலாடுதுறையின் பக்கத்தில் இருக்கும் வயல்வெளி, செம்மனார்கோவுல், மணல்மேடு மற்றும் பூம்புகார் இடங்களில் அழகாக படமாக்கி இருப்பார் பாடல்களை.

ஆங்காங்கே காவிரி நீர் வாய்க்காலில் பாசனத்திற்கு பாய்வதை பார்க்கும் போது ஏக்கமாகவும் இருக்கிறது.....

உண்மை தான் அந்த இரயிலும் படத்தின் ஒரு பாத்திரம் தான், பார்க்கும் பெண்களின் மீது எல்லாம் காமப்பார்வையும் வக்கிர பேச்சுக்களையும் வீசும் இரவீந்திரனை சென்று முகதிலே ஒரு விடு விட்டால் என்ன என்று தான் இருந்தது.

ஒரு பெண்ணை விரும்புகின்றேன் என்று சொல்ல இரண்டு ஆண்டுகள் ஆனது அப்போது, ஆனால் இன்றோ நிலைமையே வேறு என்று படத்திலும் கதைகளிலும் பார்க்கும் போது அப்படியா என்று இருக்கிறது...........

Saturday, April 28, 2018

2000 ரூபாய் தாள் பதுக்கமுடியாதவை என்று சொன்னது எல்லாம் பொய்

பழைய இந்திய 1000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் சொல்லாதவைகள் என்றும், புதிதாக வரும் 2000 மற்றும் 500 ரூபாய் தாள்களை பதுக்கவோ ஒளித்து வைக்கவோ முடியாதவை என்றும். அப்படி பதுக்கி இருக்கும் இடத்தை செயற்கைகோள் கொண்டு அறிந்துவிடமுடியும் என்று சிரிப்பு நடிகர் சேகர் இரண்டு 1000 தாளில் வருகடலையை கொரித்துக்கொண்டு கொக்கரித்தார்.

இன்றைய செய்திகளில் வங்கியில் கொடுக்கப்படும் 2000 தாள்கள் திரும்பி வருவதில்லை என்றும், எங்கே தான் அவைகள் செல்கின்றது என்றும் தெரியவில்லை என்றும் இந்திய ரிசர்வு வங்கி கவலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

புராணங்களையே எல்லவற்றிற்கும் உதாரணம் உபயும் பாசக புதிய 2000 மற்றும் 500 தாளிற்கும் அந்த புராணகதைகளையே துணையாக கொண்டு புளுகியுள்ளது தெரிகின்றது. போதிய சோதனைகளை கடந்து தான் மக்கள் பதுக்க துவங்கி இருக்க வேண்டும்.

இன்னும் கொஞ்ச காலத்தில் அதே சிரிப்பு நடிகர் சேகர், அந்த 2000 மற்றும் 500 தாள்கள் எல்லாம் இந்திய செயற்கைகோள் உணர் எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டதால் தான் கண்டுபிடிக்க முடியவில்லை. இல்லை என்றால் கண்டுபிடித்து இருக்கும் என்றும் கூட சொல்வார்.

பாசக ஆட்சிக்கு வந்ததும் நாடு கிடுகிடுவென வளர்ந்து வல்லரசாகி அனைவருக்கும் வேலை, இடம் குடி நீர் என்று மகிழ்ச்சியாக இருப்போம் என்று சொன்ன பரப்புரையில் ஒரு அங்கமாக 15 இலட்சம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் என்று சொன்ன பொய்யை நம்பிய மக்கள் அல்லவா அந்த 31%விகித இந்தியர்கள். காத்து இருங்கள், இந்த தேர்தலில் அந்த 15 + இன்னும் இப்போது பதுக்கப்பட்டு இருக்கும் பணத்தையும் கண்டுபிடித்து 30 இலட்சமாக கொடுப்போம் என்று வாக்கு கேட்பார்கள்....பார்த்துக்கொண்டே இருங்கள் இந்தியர்களே.......

Saturday, April 21, 2018

யாருக்காக அமைகிறது இராணுவதளவாட ஆலைகள் தமிழகத்தில்

நிர்மலா சீதாராமனும் மோடியும் மற்றும் தமிழக பாசகவும் தமிழகத்தில் அமையவிருக்கும் இராணுவதளவாட ஆலைகள் தமிழகத்தின் வேலை வாய்ப்பை பெருக்க மோடியின் பாசக அரசு எடுத்து இருக்கும் ஒரு இமாலய திட்டம் என்றும். இந்த திட்டத்தினால் தமிழகத்தின் வேலை வாய்ப்புகள் பெருக்குவதை மக்கள் மதிக்க வேண்டும் பாராட்ட வேண்டும் போற்ற வேண்டும் என்று தமிழக பாசக கருத்து தெரிவிக்கின்றது.

நம்ம எல்லோருக்குமே நன்றாக தெரியும் இராணுவதளவாடமாக இருந்தாலும் சரி இல்லை இராணுவ வேலைகள் சம்பந்தமாக எது இருந்தாலும் சரி அதற்கு இந்தி தெரிந்தால் தான் வேலை இல்லையேல் வேலை இல்லை என்று சொன்னது நமக்கு எல்லாம் நன்றாக தெரியும்.

வேலைக்கி விண்ணப்பிக சொல்வார்கள், பிறகு ஒருவருக்கும் இந்தி தெரியவில்லை என்ன செய்ய சொல்கிறீர்கள், உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது, தகுதி இல்லையே இப்படி என்ன என்ன விபரங்களை எல்லாம் சொல்ல முடியுமோ அவ்வளவையும் சொல்லிவிட்டு. வடக்கில் இருந்து இந்த 5 ஆலைகளுக்கும் ஆட்களை கொண்டு வந்து வேலை, தங்க வீடு, படிக்க பள்ளிக்கூடம், மருத்துவ கல்லூரி என்று வடக்கதியர்களுக்கு கொடுத்து அழகு பார்ப்பார்கள்.

அதோடு நில்லாமல் அந்த வடக்கத்தியருக்கு தேவைபடும் சப்பாத்தியும் பக்கோடாவும் செய்து விற்று பிழைத்துக்கொள்ளுங்கள் என்று பாசகவினர் நக்கல் பேசுவார்கள்.......

Friday, April 20, 2018

பத்திரிக்கையாளர் இலட்சுமி சுப்பிரமணியம் இவ்வளவு கேவலமானவரா

தமிழிசை எச்ச சர்ம்மாவை இந்தியாவின் தூதுவராக ஐநாவிற்கு அனுப்புங்கள்

எப்போதுமே தனிப்பட்ட கருத்துக்களை மட்டுமே தெரிவிக்கும் எச்ச சர்ம்மாவை இனி இந்தியாவிற்கான ஐநா மற்றும் வெளிநாடுகளுக்கு தூதுவராக பதவி கொடுக்க வேண்டும்.

இந்த எச்ச சர்ம்மாவின் கண்ணியமிகு கருத்துக்களும் பேச்சுகளும் உலகலாவிய மக்களுக்கானது. இந்தியாவின் பாரம்பரியத்தை காக்கவும் வளர்க்கவும் அவதாரம் எடுத்த மகான்.

எப்படி விவேகாநந்தர் இந்தியாவின் சார்பிலும் இத்து மதத்தின் சார்பிலும் சிக்காகோவில் உரையை நிகழ்தினாரோ அது போல் இந்த எச்ச சர்ம்மாவை அனுப்பி தனது கண்ணியமான பேச்சை பேச சொல்லி அனுப்புங்கள். உலகில் இந்து மதத்தை இவரின் கண்ணியமான பேச்சில் மயங்கி இன்னும் பலகோடி பேர் இந்து மதத்தை தழுவுவார்கள்.

நிர்மலா தேவி விவகாரத்தில் எச்ச சர்ம்மா அதிகம் சிக்கி இருப்பார் போல் தெரிகின்றது, அதனால் தான் இந்த கொதிப்பு கொதிக்கிறார் எச்ச சர்ம்மா.

எச்ச சர்ம்மா மட்டுமா, நாள் தோறும் ஆளுனருக்கு வால்பிடிக்கும் நபர்கள் எல்லோரும் சொல்லும் பேசும் விதமும் பதட்டத்தையும் பார்க்கும் போது பயமாக இருக்கிறது.

இவர்களின் அடி பொடி ஒருவர் கேரளத்தில் 'நல்ல வேளை அந்த சிறுமி 8 வயதில் இறந்தால் இல்லை என்றால் இந்தியாவின் மேல் குண்டு போட்டு இருப்பார்' என்று எழுதுகிறது.

ஆளுனர் தனது அதிகாரங்களை பயன்படுத்தி தான் இப்படி பட்ட நிர்மலா தேவி ஊழல்களில் ஈடுபட்டுள்ளார் என்றதிற்கு சான்றாக அண்ணா பல்கலை துணை வேந்தர் நியமனம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நான் நினைத்தால் யாருக்கும் என்ன பதவியும் உயர்கல்வி துறையில் வழங்க முடியும் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று ஆளுனர் தெரிவிப்பதில் இருந்தே நோக்கத்திற்காக அவரது அதிகாரத்தை பயன்படுத்தினார், பயன்படுத்துவார் என்று தெளிவாக தெரிகின்றது. அதோடு நிற்காமல் தன்மீது சுமத்தப்பட்டு இருக்கும் குற்றத்தை தானே விசாரித்து சொல்லவதாகவும் சொல்வது மிகவும் கேவலமான நடவடிக்கை.

நாட்டில் திட்டமிட்டு படுகொலைகளை நிகழ்த்திவிட்டு அவர்கள் சார்ந்த சித்தாந்தத்தை நம்பும் மனிதர்களின் மத வெறிக்கு மேன்மேலும் எண்ணையை ஊற்றிய மோடி பிரதமராவதும். விசாரித்த நீதிபதியை கொலை செய்துவிட்டு அதை சரியாக விசாரிக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று தலைமை நீதிபதி சொல்லும் இந்த இந்திய நாட்டில் நிர்மலாவுக்கோ அல்லது அதில் தொடர்புடைய ஆளுனர் வட்டாரங்களுக்கோ என்ன பெரிதாக தண்டனை கிடைத்துவிட போகின்றது.

கையில் வைத்து இருக்கும் பணம் எல்லாம் இனி செல்லாது என்று சொன்ன வேளையில் வங்களின் வாசலில் காத்து இருந்தது தவிர என்ன செய்ய முடிந்தது இந்த 132 கோடி மக்களால். வெறுமனே கையை பிசந்துக்கொண்டு தானே நின்றார்கள். இது வரை ஆட்சியில் இருந்த பொருளாதார வல்லுனர்கள் கூட நீதிமன்றத்தை அனுகி அப்படி எல்லாம் ஓர் இரவில் செய்ய கூடாது என்றோ அல்லது பொது மக்கள் எல்லாம் திண்டாகுகிறார்கள் என்றோ சொல்ல செய்தார்களா இல்லை சொல்லத்தான் முடிந்ததா.

மக்களிடம் இருக்கும் இந்த பயம் தான் இந்த மதவெறி கும்பலின் பலம். மக்களி இப்படி பயந்து கிடக்கும் வரை எச்ச சர்ம்மாக்கள் இப்படி தான் இழிவாக எழுதுவார்கள், பேசுவார்கள். என்ன இன்றைக்கு யாரையோ தானே சொல்கிறார்கள் என்று இருப்பவர்களும் நாளைக்கு பேசப்படும் போது தான் அதன் வலி தெரியும்.

எச்ச சர்ம்மா போங்கள் உங்களின் இந்த கண்ணியமான நடத்தையை காண உலகம் துடித்துக்கொண்டு இருக்கிறது, ஊர் குருவியாக உங்களின் திறமையை வீணாக்காமல் உககிற்கு உங்களின் திறமையை நிரூபியுங்கள்...............

Wednesday, April 18, 2018

எச்ச சர்மாவின் வாக்குமூலமும் தமிழிசையின் மெல்லிய வருடலும்

நிர்மலா தேவி விவகாரத்தில் முட்டுக்கொடுப்பதாக நினைத்துக்கொண்டு எச்ச சர்ம்மா வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். அமேசான் இணையதளத்தில் பொருட்களை வாங்குவது போல் நிர்மலா தேவியிடம் என்ன என்ன வேண்டும் என்று சொன்னால் வீட்டில் பொருட்கள் வருவது போல் ஒரு ஏற்பாடுகள் நடந்துள்ளது. அமேசானில் பொருட்களை வாங்கியவன் எனக்கு அமேசானின் முதளாலியை யார் என்றே தெரியாது என்று சொல்வது போல் வாக்கு மூலம் கொடுத்த ஆளுனருக்கு ஆமாம் ஆளுனர் வாக்குமூலம் தான் கொடுத்துள்ளார் என்று உறுதிபடுத்தும் விதமாக இப்படி பிளிப்கார்ட்டில் வாங்கியவர்களிடம் கேட்க முடியுமா என்று எச்ச சர்ம்மா வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.

இந்த பதிலில் எச்ச சர்ம்மா தனது வழக்கமான கீழ்த்தரமான வார்த்தைகளில் கொடுத்த வாக்குமூலத்தை கண்டிக்க திராணியற்று போய் வருத்தமாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார் தமிழிசை. சொல்ல வேண்டியது தானே இதுவும் எச்ச சர்ம்மாவின் தனிப்பட்ட கருத்து அதற்கும் பாசகவிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று. இப்போது மட்டும் என்ன வருத்தம் வேதணை என்று....... நாளை உங்களையும் எச்ச சர்ம்மா இப்படி தான் விமர்சிப்பார்.................

நிர்மலா தேவி வழக்கு என்ன ஆகும் - கன்னடஇசையும் எச்ச சர்ம்மாவும் சொல்வது போல்

தூக்கு எந்திரத்தின் கம்பி அறுந்து விழுந்ததினால் தான் அந்த சாலையோரவாசி இறந்தார் என்று சல்மான் விடுதலையானதும். சங்கர் ராமன் தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தான் இறந்து இருக்க வேண்டும் என்று விடுதலையானதும். டான்சி நில வழக்கில் ஆவணங்கள் எரிந்து சாம்பலாக போனதால் சாட்சியங்கள் போதுமானதாக நிரூபிக்க படவில்லை என்று தங்க தாரகை விடுதலையானதும். நீதிபது லோயா சாதகமாக தீர்பு எழுதமாட்டார் என்று தெரிந்ததும் மாயாமாக மாரடைப்பில் இறந்ததும் வழக்கில் இருந்து அமித்து சா விடுவிக்கப்பட்டதும். 6 நாட்கள் குசராத்தில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கலவரங்களை அழகாக திட்டமிட்டு நடத்தியும் போதிய சாட்சிகள் சொல்லியும் கூட மோடி அப்பழக்கற்றவர் என்று விடுவிக்கப்பட்டதும் இந்த இந்தியாவில் தான்.

அனைதிற்கும் சிகரம் வைத்தார் போல் எட்டி உதைக்கும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு பெண் கர்ப்பிணி என்று எப்படி தெரியும் என்று சொன்னது இந்த இந்திய நீதித்துறை தான்.

அதே வேளையில் சட்டசபையும் பாதிக்கப்பட்டவர்கள் விட்டு விடுங்கள் என்று சொல்லியும், தனக்கு வழங்கப்பட்டு இருக்கும் வானலாவிய அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் நளினியை விடுவிக்க முடியாது என்று சொன்னதும் இதே இந்திய நீதிமன்றம் தான்.

வள்ளுவர் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை என்று நாள் தோறும் நமக்கு உணர்த்துகிறது இந்த இந்திய நீதிமன்றங்கள் பொருள்ளில்லாருக்கு இவ்வுலகு இல்லை. பொருள் என்றால் பணம் மட்டும் இல்லை என்றது அனைவரும் அறிந்ததே அதும் இந்தியா போன்ற சாதி, மதம் பாகுபாடுகளை போற்றி வளர்க்கும் பிற்போக்கு தனமான நாட்டில் நிர்மலா தேவி நாளை இப்படி இரு தீர்ப்பில் விடுவிக்கப்பட்டால் ஆச்சர்யபட தேவை இல்லை 'அந்த மாணவிகள் நிர்மலா தேவியிடம் தங்களுக்கு பண உதவி வேண்டும் என்றும், தங்களுக்கு ஏற்பட்ட தவறான பழக்க வழக்கங்களினால் வாழ்க்கையை தொலைத்துவிட்டதாகவும், அதற்கு உதவுங்கள் என்று கேட்டதாகவும். அதன் பால் தான் நான் அவர்களுக்கு எப்படி எல்லாம் வழிகள் இருக்கிறது என்று தாயன்புடன் சொன்னதாகவும். அப்படி சொல்லப்பட்ட வழிகளை மீண்டும் ஒரு முறை நீங்கள் அந்த உரையாடலை கேட்டால் தெளிவாக புரியும் எப்படி பட்ட மேற்படிப்பு மற்றும் அதற்கான நிதியுதவிகள் மற்றும் அதை தொடர்ந்து அதற்கான வேலையை என்னால் வாங்கிக்கொடுக்க முடியும் என்றும். அதற்காக நீங்கள் கடுமையாக படித்து உழக்க வேண்டும் என்று தான் சொன்னேன்' மற்றபடி உங்கள் கற்பனைக்குள் வரும் அழுக்கு ஊகங்களை எல்லாம் என் மேல் திணித்தால் எப்படி என்று வாதிட்டு. மாணவிகளின் காவல் தெய்வம் என்று பட்டம் கொடுத்து அசாம், மிசோராம், நாகாலாந்து போன்ற இடங்களில் இருக்கும் பல்கலைக்கு மிகவும் கௌரவமாக மாற்றப்படுவார். அவ்வளவு தான் நடக்கும்.

Tuesday, April 17, 2018

மோடி மே 3ல் காவிரி பற்றி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவார்

இப்போது தான் ஏழை விவசாயிகள் எல்லாம் நிம்மதியாக தூங்குகிறார்கள். அப்படி இப்படி என்று சத்தம் போடுபவர்களும் போராட்டம் செய்பவர்களும் கள்ள விவசாயிகள்.

நாட்டின் நலமும் ஏழைகளின் வாழ்வும் பாசக அரசால் பாதுகாக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றமும், உலக வங்கியும், ஐ நா சபையும் பாராட்டி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது என்றும் சொல்வார்.

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் இனி எப்பொழுதும் தர தேவை இல்லை என்று உச்ச நீதி மன்றமே சொல்லிவிட்ட பிறகு என்ன செய்ய முடியும் நீங்களே சொல்லுங்கள் என்றும் சொல்வார்.

விவசாயம் பொய்த்து போன தமிழகத்தில் இனி மிச்சம் மீதி இருக்கிற இடங்களில் எல்லாம் நிலத்தடியில் தோண்டி என்ன என்ன எடுத்து அம்பாணி, மிட்டல், அதாணி என்ற ஏழைகளுக்கு கொடுப்பதில் எந்த கேடும் நாட்டிற்கு வந்துவிட போவது இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது என்றும் சொல்வார்.

அந்த வடகத்தியர்களின் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வரும் வடக்கதியற்களுக்கு பக்கோடாவும் சப்பாதியும் செய்து கொடுக்கும் சுய தொழில் வேலைகளை பாசக பெருமளவில் தமிழகத்திற்கு இதன் மூலம் செய்து கொடுக்க முடியும் என்றும் அவரது அறிக்கையில் சொல்வார்.

Monday, April 16, 2018

40 ஆண்டுகள் சிறை கிடைக்க பிரதமர் மற்றும் பாசக கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள்

சமீபமாக பாசகவும் அதன் தமிழக தலைவர்களும் சென்னைக்கு வந்த மோடியை கொல்ல சதி நடந்ததாக செய்தியை ஊடகங்களில் வெளிப்படுத்தி வருவதை பார்த்து இருப்பார்கள்.

சுப்பிரமணி சாமி மறுபடியும் ஒரு இந்திய பிரதமரை படு கொலை செய்யும் திட்டத்தில் இறங்கியதாகத்தான் அந்த செய்திகளை பார்க்க முடியும்.

ஆகவே இனிமேல் பாசக கூட்டும் கூட்டதிற்கோ அல்லது பிரதமர் கலந்துகொள்ளும் கூட்டதிற்கோ தங்கள் பிள்ளைகளை தயவு கூர்ந்து பெற்றோர்கள் அனுப்ப வேண்டாம் என்று வேண்டி கேட்டுக்கொள்கின்றோம்.

2019ல் பாசக முழுவதும் ஊத்திக்கொள்ளும் என்ற ஆரூடம் சொன்னதுமே எப்படி வெல்வோம் என்று திட்டம் தீட்டி செயல்படுகின்றது பாசக.

விசுவ இந்து பரிசித்து இயக்கத்தின் பிரவீன் தொகாடியா தனது பொருப்பில் இருந்து விலகி இருப்பதும் இதற்காகத்தான். எங்கே தங்களது மீது பழி விழுந்து விடுமோ என்று ஒதுங்குகிறார்கள்.

வயர் வாங்கி கொடுத்தான், பேட்டரி வாங்கி கொடுத்தான் என்று சுப்பிரமணி சாமியின் வாதங்களை வைத்து 40 ஆண்டுகள் முதல் உயிர் போகும் வரை சிறையில் அடைத்து தனது கைகளின் கறைகளை கழுவிக்கொள்வார் சுப்பிரமணி சாமி.

கோத்ராவில் தங்களது உறவினர்களையே தாங்களே கொளுத்திவிட்டு மாற்று மதத்தினர் தான் கொளுத்தினார்கள் என்று சொல்லி வன்முறை செய்தவர்களுக்கு இது எல்லாம் சாதாரணம். சிந்திப்பீர் தவிர்ப்பீர்.

Friday, April 13, 2018

என்னே அறிவு தமிழிசைக்கு மெய்சிலிர்க்க வைக்கின்றது

ஒரு நாட்டையும் கட்சியையும் ஒன்றாக நினைத்து பேசும் அளவிற்கு பித்துபிடித்து போய் இருக்கிறது. எதிர் கட்சிகள் ராக்கெட்டுகள் விட்டால் தீவிரவாதமாகும் என்றது குழந்தைகளுக்கு கூட தெரிந்த செய்தி. பாவம் ஒரு தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளராக தன்னை தானே கருதிக்கொள்ளும் இவர் இப்படி எல்லாம் பேசுவது அவர் வ்கிக்கும் பதவிக்கு அழகல்ல.

அது சரி திட்டம் என்றால் என்ன என்று வினவும் சாதாரண அறிவு கூட இல்லாத கட்சியின் உறுபினரிடம் வேறு என்ன உருப்படியான செயலை எதிர்பார்க்க முடியும்............காவிக்கும் அறிக்கும் தூரம் எப்பவும் அதிகம் தான் போலும்.........

Thursday, April 12, 2018

எச்ச சர்மா - ஆண்டாள் போராட்டம் நடத்திய 'இந்துக்கள்' மற்றும் சீயர்களையும் கொலை முயற்சியில் கைது செய்ய வேண்டும்

சோடா பாட்டிலை வீச சொல்லியும் வீசுவோம் என்று சொல்லியும் வன்முறையை தூண்டிய ஆண்டாள் போராளிகளான 'இந்துகள்' மற்றும் சீயர்களை கொலை முயற்சி வழக்கில் கைத்து செய்ய வேண்டும் என்று எச்ச சர்மா கூறியுள்ளார்.

தனக்கு கட்சிக்குள்ளும் 'இந்துகள்' மத்தியிலும் மரியாதை இல்லை என்ற ஆதங்கமும் பொறாமையுடம் கூடிய ஆதங்கமாக இருக்கும் என்று 'இந்துகள்' மற்றும் சோடாபாட்டில் சீயர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மோடி நாளை அதிமுக கட்சியை கலைக்கிறார்

அதிமுக கட்சியை விலைக்கு வாங்கிய பாசக இது வரையில் பொறுமையாக இருந்தது. இந்து மத கலவரம் ஒன்றை தூண்டி அதில் மாநிலம் பற்றி எரியும் போது தேர்தலை அறிவித்து. அந்த கையோடு அதிமுக கட்சியை கலைத்துவிட்டோம் என்று பன்னீரையும் பழனிசாமியையும் சொல்ல வைத்து விட்டு அன்றில் இருந்து அதிமுகவும் பாசகவும் ஒன்று தான் என்று அதிமுக அனுதாபிகள் எல்லாம் பாசகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பரப்புவதாக திட்டம் இருந்தது.

நேற்றைய கலவரங்கு பிறகு இன்னமும் காலம் தாழ்தினால் சரியாக இருக்காது என்று நாளை தமிழகம் வரும் மோடி, இராணுவ அணிவகுப்புகளை பார்வையிட்டபடியே அதிமுகவின் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக மோடியின் தலைமையில் பாசகவில் இணைவதும். ஒருவரும் இல்லாத அதிமுகவை கலைப்பதும் நாளை நடபெற போகின்றது.

இந்த இணைப்பில் அரும்பாடுபட்ட கன்னடஇசை சௌந்தர் ராசனுக்கு குசராத்தை ஆளும் வாய்ப்பை கொடுப்பார்கள்.

நிர்மலா சீதாராமன் தலைமையில் பாசக ஆட்சி பொறுப்பை ஏற்கும்.

எச்ச சர்மாவுக்கு குசராத்து முதல் காசுமீரம் வரை மேற்கில் இருக்கும் மேற்கு எல்லையோரத்தை காக்கும் பணியில் மோகன் பகாவத்து ஆட்களுடன் அனுப்பி வைக்கப்படுவார்.

நிர்மலா சீதராமன் இராம இராசியத்தை தமிழகத்தில் நிறுவி இராவணன் பூமியாம் இலங்கையின் மீது படை எடுத்து அழிப்பாராக.

Wednesday, April 11, 2018

மோடி -காவிரிகாக உண்ணா விரதம் இருக்க போகிறார்

காவிரிகாக நடக்கும் போராட்டங்களை தினமும் பார்த்து உணர்ச்சி வசப்பட்ட பிரதமர் மோடி என்ன செய்வது என்றே தெரியாமல் தானும் 12ஆம் தேதி உண்ணா விரதம் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

எல்லாம் இந்த பழனிசாமியின் மகிமை, முதல்வர் உண்ணா விரதம் இருக்கும் போது பிரதமர் இருந்தால் என்ன என்று தமிழக பாசகவின் அடிபொடிகள் நாளை முதல் சலம்புவார்கள் என்று தான் கவலையாக இருக்கிறது.

பாசக அதிமுகவை பார்த்து அவர்களை போலே இவர்களும் நடந்துகொள்கிறார்களே என்று மட்டும் யாரும் கேட்டுவிடாதீர்கள்......

நாளை சென்னையில் வந்து அண்ணா சாலையில் அமர்ந்து உண்ணா விரதம் இருந்தாலும் இருப்பார் பார்த்து இருங்கோ மக்களே.....

மோடி உண்ணா விரதம் முடித்த கையோடு இப்போது தான் தமிழக மக்கள் எல்லாம் நிம்மதியாக இருக்கிறார்கள் என்றும், தமிழக மக்களுக்கு காவிரி கிடைக்க கூடாது என்று திட்டம் தீட்டியவர்கள் தான் இனி தூக்கம் இல்லாமல் அலைவார்கள் என்றும் அறிக்கை விடுவார். கூடவே மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுக்கனும்........

ஆகவே மக்களே காவிரிக்காக உண்ணா விரதம் இருக்க சென்னை வரும் பிரதமருக்கு ஏகோபித்த ஆதரவை அலைகடலென அண்ணா சாலையில் திரள உதவுங்கள் என்று எச்ச சர்மாவும், கன்னட இசையும் தினமும் 300 தடவை தொகவில் காவிரிக்காக நிரந்தர தீர்வு ஒன்றை மங்களகரமாக கொண்டு வர தான் நமது மதிப்பிற்குறிய பிரதமர் உண்ணாவிரதம் இருக்க வருகிறார் ஆகவே 'இந்துகள்' எல்லோரும் வந்து ஆதரவு தரவேண்டும் என்றும். அப்படி ஆதரவு தராதவர்கள் எல்லாம் இந்திய விதோதிகள் என்று அலருவார்கள்.

Monday, April 9, 2018

சல்மான் கானை இப்படி சொல்லி மான் வேட்டை வழக்கில் விடுதலை செய்வார்கள்

சல்மான் கான் அன்று இரவு தூக்கம் வராமல் யாரும் இல்லாத காட்டு பகுதியில் நடைபயிற்சியில் இருந்த சமயம் இருட்டில் சலசலப்புடம் ஒரு விலங்கு தாக்க வந்தாகவும். அந்த அச்சத்தின் காரணமாக தனது சொந்த பாதுகாப்புக்காக கொண்டு வந்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டலாம் என்று வெகுகவனமாக கையாண்ட போதும், மிரட்டும் நடவடிக்கையாக பாதுகாப்பான தூர குண்டு போகும் படி கோணம் மாற்றி சுட்ட போது மான் பயத்தில் அந்த குண்டின் குறுக்கே பாய்ந்து உயிரை அனியாயமாக மாய்த்துக்கொண்டது. இந்த செயலில் வேட்டையாடும் நோக்கமோ அல்லது அந்த அரிய மானை கொல்லும் நோக்கமோ சல்மானுக்கு அரவே கிடையாது என்று சொல்லி சுத்த சன்மார்க்க மனிதராக சல்மான் மாலை அணிவித்து விடுதலை செய்யப்படுவார்.

பொருள் இல்லாருக்கு உவ்வுலகில்லை என்ற குறளின் வலிமை அன்றைக்கு மக்களுக்கு முன் வந்து நடனமாடும்...........வல்லரசு இந்தியா ஆடப்போகும் அந்த களிப்பு நடனத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளோம்.......

Saturday, April 7, 2018

பாசக தமிழகத்தின் காவிரிக்காக போராடாத ஒரே கட்சி

ஆண்டாள் என்று சொல்லிக்கொண்டு ஊருக்கு ஊர் சோடா பாட்டில்களை வீச மேடை அமைத்து கொடுத்து ஆங்கிலம் மற்றும் உள்ளூர் ஊடகங்களை வைத்துக்கொண்டு ஊது ஊது என்று ஊதிய பாசக மக்களின் வாழ்வாதார பிரச்சனையான காவிரிக்கு இது வரையில் ஒரு துரும்பை கூட கிள்ளி போட வில்லை.

மாற்றாக கடல் நீரை குடியுங்கள், கர்னாடகம் என்ன செய்யும், போராடுவது தவறு, அரசியல் ஆதாயம் தேடகிறார்கள் என்றெல்லாம் அறிக்கை விட்டுக்கொண்டு உல்லாச இன்ப சுற்றுலா சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த 'இந்துகள்' கட்சி தமிழகத்திற்கு என்ன எல்லாம் செய்யும் என்று இப்போதாவது புரிந்துகொண்டால் சரிதான்.

தமிழகத்தை ஒரு குசராத்து கட்சி தான் ஆள வேண்டும் என்று சொல்பவர்கள் தமிழக பல்கலைகழகத்திற்கு தமிழர்களையா கொண்டு வருவார்கள். அமெரிக்காவில் இருந்து டிரம்பை கூட்டி வந்து தமிழர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்றால் அமெரிக்க டிரம்பு தான் பல்கலை துணை வேந்தாரக வரவேண்டும் என்றும் கூட சொல்வார்கள் பொருத்து இருந்து பாருங்கள்.

Friday, April 6, 2018

ஆங்கிலம் தெரியாத பாசக அமைச்சர்களை வைத்துக்கொண்டு வேறு என்ன செய்ய முடியும்

இந்தி படியுங்கோ, தேசிய மொழி என்று ஒன்று நமக்கு கட்டாயம் வேண்டும், அந்நிய மொழியான ஆங்கிலம் நமக்கு எதற்கு என்ற ஓகோ வசனங்களை ஏன் இத்தனை காலம் வடக்கத்தியர்கள் பேசினார்கள் என்று இப்போதாவது தென்னக மக்களுக்கு புரித்தால் சரி.

உச்ச நீதிமன்றத்தின் தீர்பு ஆங்கிலத்தில் திட்டம் என்று எழுதிய வார்த்தையின் பொருள் என்ன என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தையே கேள்வி கேட்டு இருக்கிறது ஆங்கிலம் அறியா இந்த தற்குறி பாசக அரசு கேட்டுக்கொண்டு இருக்கிறது இன்று.

இப்படி ஒரு கேவலமான இழி நிலையை மிகவும் பெருமையாகவும் அகந்தையாகவும் அறிவிக்கவும் செய்கின்றது இந்த ஆங்கிலம் தெரியாத பாசக அரசு. இந்த அழகில் உலகிலேயே முதன்  முதலில் என்று வரிந்துகொண்டு வார்த்தைக்கு வார்த்தை பெருமை வேறு இந்த அரசுக்கு.......

போங்கப்பா போய் புள்ள குட்டிகளவாது ஒழுங்கா ஆங்கிலம் படிக்க சொல்லுங்க, இதிலே வல்லரசாக ஆக்க இந்தி படியுங்கோ இல்லை என்றால் தனிமைபட்டு விடுவீர்கள் என்ற எச்சரிக்கை வேறு இந்த வெட்கமில்லா மனிதர்களிடம் இருந்து.........

Thursday, April 5, 2018

எப்போது எல்லாம் தமிழகம் போராடுகின்றதோ அப்போது எல்லாம் இன்ப சுற்றுலா செல்லும் பாசக

முன்பெல்லாம் மறைமுகமகாக இன்ப சுற்றுலாவுக்கு செல்லும் பாசக இப்போது வெளிப்படையாகவே இன்ப சுற்றுலா சென்றுள்ளது.

சல்லிக்கட்டு போராட்டத்தின் போது இதே பாணியில் எங்கே இருக்கிறார்கள் பாசகவினர் என்று சல்லடை இட்டு சளித்து பார்க்கும் அளவிற்கு பதுங்கி இருந்தார்கள் பாசகவினர். அந்த நிலையிலும் எச்ச சர்மா தனது செய்திகளில் தமிழர்கள் பாசகவை தேர்ந்தெடுத்து இருந்தால் இன்னேரம் சல்லிக்கட்டு காளைகள் துள்ளி ஓடி இருக்கும் என்று அறிக்கை விட்டார். பிறகு மெல்ல தமிழக அரசு தான் இப்படி செய்ய வேண்டும் அப்படி செய்ய வேண்டும் என்றும் அறிக்கைகள் விட்டுக்கொண்டு இருந்தார்.

இந்த கரளோபகர அறிக்கைகளுக்கு நடுவே சல்லிக்கட்டு பறிபோக காரணம் காங்கிரசு மற்றும் திமுக தான் காரணம் என்ற பரப்புரை தான் மேலோங்கி இருந்ததே தவிர பிரச்சணையை தீர்க்க ஒரு வழியையோ அல்லது அவர்களது மைய அரசை நாடி ஒரு தீர்வை எட்ட ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.

ஆண்டாள் பிரச்சணை என்றதும் தமிழகத்தின் மூலை முடுக்கு எல்லாம் 'இந்துகளை' கொண்டு வந்து நிறுத்தி சோடா பாட்டிலை வீசி கலவரம் செய்வோம் என்று முழங்கியும் கூட்டத்தை கூட்டியும் காட்டி போராடிய பாசக இன்று இன்ப சுற்றுலா கிளம்பி சென்றுள்ளது.

அன்றைக்கு 'இந்துகள்' சோடாபாட்டிலை வீசினால் அது மக்களின் உரிமையை நிலை நாட்ட நடக்கும் போராட்டம் ஆனால் இன்றைக்கு தமிழகம் போராடினால் வீணாக மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள், அரசியல் இலாபம் அடைய பார்க்கிறார்கள், அறிவில்லாமல் போராடுகிறார்கள், தண்ணீர் வேண்டுமா காவிரி வேண்டுமா, மேலாண்மை வாரியமா அல்லது அதிகாரமே இல்லாத குழுவா, ஆங்கில சொல் திட்டம் என்ற சொல்லின் நீதிமன்ற பார்வை என்ன, தமிழக தலைவர்கள் சுயலாபம் ஈட்ட பார்க்கிறார்கள், தமிழகத்தில் பாசக ஆட்சியாக இருந்து இருந்தால் இன்னேரம் எல்லோர் வீட்டிலும் காவிரி நீர் பொட்டலம் கட்டி வீட்டில் கொண்டு வந்து கொடுத்து இருப்போம், உச்ச நீதிமன்றமே சொல்லிடிச்சு, சீதராமையாவும் காங்கிரசும் தான் காரணம், 44 ஆண்டுகள் பொருத்த தமிழகம் இன்னும் 40 ஆண்டுகாலம் பொருத்தால் என்ன பெரிதாக ஆகிவிட போகின்றது, தண்ணீர் இல்லாமல் பட்டு போன காவிரி டெல்டா இடங்களில் கெயில் குழாய்களை புதைத்து அதாணிக்கு பணம் வர வழி செய்தால் உங்களுக்கு ஏன் கோபம் வருகின்றது, தமிழக மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று தான் தேனி மாவட்டத்தை பாலைவனமாக மாற்ற உள்ளோம், என்று எல்லாம் எகத்தாளமாக அறிக்கை விடுகிறார்கள் பாசகவினர்.

இப்போ தெரிகின்றதா பாசக அவருக்காவும் எவைகளுக்காகவும் மட்டும் போராட்டம் நடத்தும் என்று. இந்த கட்சி தமிழக மக்களுக்கான கட்சியாம், 'இந்துகள்' என்று இவர்கள் சொல்வது போல் இனிமே 'தமிழர்கள்' என்று தான் எழுதனும் போல.

மதியிலும் மா நிலத்திலும் இந்த அராசக அரக்க பாசகவிற்கே வாக்களியுங்கள் மக்க வாக்களியுங்கோ............

Wednesday, April 4, 2018

அடுத்த மாமா வேலைக்கு தயாராகுகிறார் சுப்பிரமணிசாமி

சுப்பிரமணிசாமியை பொருத்த வரை அமெரிக்காவின் உளவாளியாக மட்டும் வேலை பார்த்து காசு பார்த்தது பத்தவில்லை போலும். இப்பொழுது இசுரேலில் தொடங்கி வேறு எங்குமே பயன்பாட்டில் இல்லாத கடல் நீரை குடி நீராக்கும் இயந்திரங்களை எங்கே விற்பது என்று தவித்துக்கொண்டு இருக்கும் நிறுவனத்திற்கு கவலை படாதே மாமா நான் இருக்கிறேன் என்று களத்தில் குதித்து எப்படியாவது சந்தில் சிந்து பாட நினைக்கிறார் மாமா சுப்பிரமணிசாமி.

 நாடு அழிந்தால் எனக்கு என்ன மக்கள் செத்தா எனக்கு என்ன, எனக்கு என்னோட கமிசன் தொகை கிடைசா சரிதான் என்று இருக்கும் மாமா சுப்பிரமணிசாமியை தான் தமிழகத்தை காப்பாற்றும் அரசியல் தலைவனாய் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று பாசகவும் அதன் அடி பொடிகளும் நாள் தோறும் கூவுகிறார்கள் தமிழகத்தில்.


Tuesday, April 3, 2018

இராமர் பாலம் இடிக்க கூடாது ஆனால் முருகன் மலை மட்டும் இடிக்கனுமா

இராமர் பாலம் இடிக்க கூடாது ஆனால் முருகன் மலை மட்டும் இடிக்கனுமா. குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடமாக குமரியத்தோர் வழிபடட்டும் என்று பார்வதியால் அருளிய வாக்கு. அவரின் வாக்கு பொருட்டு குன்றுகள் முதல் அனைத்து மலைகளிலும் முருகன் இருப்பதாக நம்புகின்றது தமிழகம். அந்த தமிழக மக்களின் நம்பிக்கையை குலைக்கா வண்ணம் நியூறினோ திட்டத்தை உத்திர பிரதேசம் தாண்டி வடக்கில் எங்கு வைத்தாலும் முருக பக்கதர்களுக்கு சம்மதமே.......

இராமர் பாலம் தீர்ப்பின் நகலோடு யாராவது உச்ச நீதிமன்றத்தை உடனடியாக நாடவில்லை என்றால் முருக மலையை காப்பாற்ற முடியாது.