Tuesday, May 1, 2018

சின்னஞ்சிறு குழந்தைகளாக பேசும் பாசகவின் முதல்வர்கள் - கார்டூகள் படுத்தும் பாடு

சின்னஞ்சிறு வயதில் சூப்பர்மேன்(superman) பைடர்மேன்(spyderman) கீமேன்(Heman) தொடங்கி இராமாயணம் மகாபாரத கதைகளை கார்டூனாக பார்த்து இருப்போம்.

அந்த வயதில் அந்த பூனை எலியை விரட்டி பிடிக்கப்போய் அடி வாங்கும் காட்சிகளை பார்க்கும் போதும், தூங்கிக்கொண்டு இருக்கும் அந்த பெரிய நாய் வந்து அந்த பூனையை வெளுக்கும் போதும் மனதில் மகிழ்ச்சி மட்டும் அல்ல, நாய்கள் ஞாயமாக நடந்துக்கொள்பன, பூனைகள் முட்டாளானவை, எலி மிகவும் புத்திசாலி என்றும் மேலோட்டமாக மனது நம்பும். அடுத்த முறை அந்த விலங்குகளை பார்த்தால் அதே அபிப்பிராயத்தில் தான் பார்க்க தோன்றும்.

இது ஒரு புரம் இருந்தால் மற்றொருபுரம் சூப்பரமேன் துவங்கி இன்னும் என்ன என்ன மேன்கள் இருக்கிறார்களோ அத்தனை மேன்களும் நாட்டில் எங்கேனும் அநீதி நடந்தால் மாயமாக தோன்றி உதவுவார்கள் என்று நம்பிக்கையையும் தூவும் கதைகளாக தான் வலம் வந்தது.

இல்லை அநியாயம் நடந்தால் தட்டிக்கேட்கும் தன்மை மனிதர்களுக்குள் உதிக்க உதவியாகத்தான் இந்த கார்டூன் தொடர்கள் என்று அவர்கள் சொன்னாலும். எந்த வம்பு தும்புக்கும் போகாதீர்கள் என்று சொல்லித்தான் குழந்தைகளை வீட்டில் வளர்ப்பார்கள்.

எது உண்மை எது மிகைபடுத்தப்பட்டவை என்று அறியாபருவத்தில் பார்க்கும் கதைகளும் அதன் பொருட்டு மனதுக்குள் வரும் நல்ல எண்ணங்களை விதைத்தாலும் அந்த நிகழ்வுகள் எல்லாம் உண்மை அல்ல. மிகைபடுத்தப்பட்டவைகள் என்று வளர்ந்த அனைவரும் அறிவார்கள். இதன் தொடர்ச்சியாக வரும் திரைப்படங்களும் நாடகங்களும் கதைகளும் அந்த வகைகளே.

ஒரு மாநிலத்தின் முதல்வர், அந்த மாநிலத்தின் மக்களால், தங்களின் நலனுக்காக செயலாற்ற தேர்வு செய்யப்பட்டவர்கள். எவ்வளவு அறிவும் செயல் திறனும் கொண்டவர்களாக இருக்க வேண்டியவர்கள். அவர்கள் பேசும் பேச்சுகளை பாருங்கள், கார்டூன் குழந்தைகளாக அவர்கள் பிதற்றுவது நாள் தோறும் செய்திகளில் வருகின்றது.

இந்த அறிய பிள்ளைகளை தான் தனது கட்சியின் பிரதினிதிகளாக பெருமையாக சொல்லிக்கொள்ளும் பாசக எத்தனை பெரிய அறிவார்ந்த கட்சியாக இருக்கும்........

போய் பக்கோட சுட்டு விற்கும் வேலைக்கு செல்லுங்கள் பாசக மக்களே.......




0 comments: