Wednesday, April 11, 2018

மோடி -காவிரிகாக உண்ணா விரதம் இருக்க போகிறார்

காவிரிகாக நடக்கும் போராட்டங்களை தினமும் பார்த்து உணர்ச்சி வசப்பட்ட பிரதமர் மோடி என்ன செய்வது என்றே தெரியாமல் தானும் 12ஆம் தேதி உண்ணா விரதம் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

எல்லாம் இந்த பழனிசாமியின் மகிமை, முதல்வர் உண்ணா விரதம் இருக்கும் போது பிரதமர் இருந்தால் என்ன என்று தமிழக பாசகவின் அடிபொடிகள் நாளை முதல் சலம்புவார்கள் என்று தான் கவலையாக இருக்கிறது.

பாசக அதிமுகவை பார்த்து அவர்களை போலே இவர்களும் நடந்துகொள்கிறார்களே என்று மட்டும் யாரும் கேட்டுவிடாதீர்கள்......

நாளை சென்னையில் வந்து அண்ணா சாலையில் அமர்ந்து உண்ணா விரதம் இருந்தாலும் இருப்பார் பார்த்து இருங்கோ மக்களே.....

மோடி உண்ணா விரதம் முடித்த கையோடு இப்போது தான் தமிழக மக்கள் எல்லாம் நிம்மதியாக இருக்கிறார்கள் என்றும், தமிழக மக்களுக்கு காவிரி கிடைக்க கூடாது என்று திட்டம் தீட்டியவர்கள் தான் இனி தூக்கம் இல்லாமல் அலைவார்கள் என்றும் அறிக்கை விடுவார். கூடவே மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுக்கனும்........

ஆகவே மக்களே காவிரிக்காக உண்ணா விரதம் இருக்க சென்னை வரும் பிரதமருக்கு ஏகோபித்த ஆதரவை அலைகடலென அண்ணா சாலையில் திரள உதவுங்கள் என்று எச்ச சர்மாவும், கன்னட இசையும் தினமும் 300 தடவை தொகவில் காவிரிக்காக நிரந்தர தீர்வு ஒன்றை மங்களகரமாக கொண்டு வர தான் நமது மதிப்பிற்குறிய பிரதமர் உண்ணாவிரதம் இருக்க வருகிறார் ஆகவே 'இந்துகள்' எல்லோரும் வந்து ஆதரவு தரவேண்டும் என்றும். அப்படி ஆதரவு தராதவர்கள் எல்லாம் இந்திய விதோதிகள் என்று அலருவார்கள்.

0 comments: