Tuesday, June 26, 2018

அவசர நிலையை பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது

சிறுபான்மையினர் அச்சத்தில் வாழ்வது, உரிமைகள் மறுக்கப்படுவது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தனது விருப்பம் போல் செயல்படுவது பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல். எந்த வித ஞாய தர்மங்களுக்கும் கட்டுப்படாமல் தான் தோன்றி தனமாக செயல்படுவது.

நாட்டின் வளங்களை ஏகாதிபத்தியமாக ஒரு சில முதளாலிகளுக்கு உரிமையை கொடுத்து ஏன் இப்படி என்று கேட்டால் கேட்பவரின் வாயிலேயே சுட்டுக்கொல்வது. இந்தியாவின் வளங்களை வெளி நாட்டு மக்களுக்கு விற்பது, ஏன் என்று கேட்டால் நள்ளிரவில் வீடு புகுந்து சிறைப்பிடித்து வெளியே வரமுடியா வண்ணம் அடைத்தல்.

வானொலியையும் தொலைக்காட்சியையும் கையில் வைத்துக்கொண்டு புளுகுவது. பாட புத்தகங்களில் உண்மைக்கு புறம்பாக வரலாறுகளை திரித்து எழுதுவது. மக்களின் அடிப்படை தேவைகளை தேவைக்கள் அதிகரிக்கும் போது கள்ள சந்தையில் விற்பது போல் அரசே அதிகவிலைக்கு விற்பது, பெட்ரோல் பொருட்களைப் போல்.

நாட்டின் முதுகெலும்பு விவசாயம், அவர்களின் ஆதாரங்களை அழித்து வெளி நாட்டு முதளாலிகளின் வர்த்தகத்தை கொண்டு வந்து நடத்த மறைமுகமாக ஆதரவு அளிப்பது.

நாட்டில் படிப்புகளில் இந்த இந்த படிப்புகளை இவரிவர்கள் தான் படிக்க வேண்டும் என்ற ரீதியில் ஒழிக்க திட்டங்களை நிறைவேற்றுவது.

எவனோ ஒரு வெளி நாட்டு முதாளாலி தான் இந்தியாவில் வாங்கி இருக்கும் கஞ்ச மலையில் இருக்கும் தாதுகளை விரைவாக சென்னை துறைமுகத்திற்கு எடுத்து செல்ல 10,000 கோடி செலவில் பசுமைகளை அழித்து ஒரு சாலையை நிறுவுவது.....

சட்ட சபை தேர்ததில் வெற்றி பெற்ற கட்சிகளை விட்டு விட்டு தோற்று போன கட்சிகளை தங்களின் கட்சிகாரர்களை கொண்டு ஆட்சி அமைக்க அழைப்பது.

இப்படி மோடி பற்பல மக்களாட்சி முறைகளை எல்லாம் நிலை நாட்டி வரும் வேளையில் அவசர நிலை குறித்து பேசுவது மிகவும் பொருத்தமாகவும் அழக்காகவும் இருக்கிறது.......

0 comments: