Sunday, December 31, 2017

பாசகவின் அடுத்த இரகசிய திட்டம் - Plan C

பாசக இது வரையில் தமிழகத்திற்காக வகுத்த திட்டங்கள் முறையே

1) திட்டமிட்டு தாங்களே வெடி குண்டுகளை வெடிக்க வைத்து அவைக்கள் வெடித்தற்கு பாக்கிட்தானம் தான் காரணம், மேலும் அந்த குண்டுகள் தமிழகத்தில் வெடிக்க வேண்டும் என்றால் பாக்கிட்தானத்தின் கை தமிழகம் வரை நீள்கிறது பாரீர். ஆகவே அந்த கொட்டத்தை அடக்க பாசக வந்தால் தான் ஆச்சு என்று அத்வானி தமிழகம் வந்து சென்ற இடங்களில் எல்லாம் அவர் பாதுகாப்பான தூரம் சென்றதும் வெடித்து ஓலமிட்டு பார்த்தது. - Plan A

2) இந்த பிசக்கு ஆட்டத்தை பார்த்த அதிமுக தலைவி நீங்க என்ன மதம் சம்பந்தமாக செய்வது, அதைவிட சிறப்பாக நாங்களே செய்கின்றோம் என்று மதமாற்ற தடுப்பு சட்டம், கோவிலில் ஆடு கோழிகள் பலியிட தடை என்று அவரின் அறிவிப்புகள் நீண்டுக்கொண்டே போக அம்மையாரின் மறைவு வரை பாசக தைத்து வைத்திருந்த அந்த முண்டா சட்டையை ஆணியில் மாட்டிவிட்டு காத்துக்கொண்டு இருந்தது. அம்மையாரின் மறைவுக்கு பிறகு அதிமுகவை மிரட்டி பாசக - B அணியாக தமிழகத்தில் ஓராண்டுகள் நடத்தி இது வரையில் கையெழுத்து ஆகாமல் இருந்த ஒப்பந்தளில் எல்லாம் இரகசியமாக கையெழுத்து வாங்கி தமிழக இயற்கை வளங்களையும், மனித வளத்தையும், சிறு மற்றும் குறு விவசாயிகள் முதல் தொழில்கள் வரை அழித்து, இனி நாங்க தான். இப்படி தான் மத மற்றும் சாதி அடாவடி செய்வோம் என்று மிக தைரியமாக ஊடங்களில் உளரி கொட்டிய விதத்தை பார்த்த மக்கள் பாசகவை நோடாவிற்கும் கீழே தள்ளி வேடிக்கை பார்த்தார்கள்.

அப்படியே தமிழகம் முழுவதும் எடுத்த இரகசிய அறிக்கையில் தமிழிசையும், எச்ச சர்மாவும், பொன்ராவும் அளவுக்கு அதிகமாக பாசக தலைமையிடம் புளுகி பதவிகளையும் வசதிகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்கள் என்று தெரியவர. இது வரையில் சுதந்திரமாக சுற்றி வந்த சசிகலாவை இன்றைக்கு தான் குற்றம் புரிந்தவர் என்று கண்டுபிடித்தது போல் சிறையில் தள்ளி தலையில்லா அதிமுக ஆட்டத்திலேயே இல்லை என்று ஆக்கி சென்னை இடை தேர்த்தலை சந்தித்து பார்த்தார்கள். மொத்தல் 2 மாணவர்கள் பயிலும் வகுப்பில் நான் 2வது மதிப்பெண் அல்லது 2ஆம் இடம் என்று சொல்லிக்கொள்ளலாம் என்று அந்த 3வரும் சொல்ல செயலாற்றி நோட்டாவிடம் குட்டு வாங்கி நின்றார்கள். - Plan B

3) இனி பட்டது எல்லாம் போதும் தமிழகத்தை பொறுத்த அளவில் ஆன்மீகம் கொண்டாடும் ஒரு தலைமையை தேடி அவருக்கு அந்த முண்டா சட்டையை சட்டைக்கு மேல் மாட்டிவிட்டு நோயாளி சால்வையையும் போர்த்திவிட்டு இவரும் வட நாட்டுகாரர், தேசிய நீரோட்டத்தில் தமிழகத்தை அழிக்க பிறந்தவர் ஆகவே இவரை தான் நீங்கள் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று காத்து இருந்தார்கள் இது வரையில். எப்படியாவது தமிழக பாசகவின் தலைமையாக பொறுப்பு ஏற்க வைத்துவிட்டோம் என்றால் அவரை காட்டி விற்காத சரக்கை எல்லாம் விற்று விடலாம் என்று எண்ணிகை இல்லாத அளவிற்கு தூது விட்டும் பார்த்தார்கள்.

ஒவ்வொறு முறையும் இந்த எச்ச சர்மா பேச்சும் பேச்சுக்களால் வரவிறுக்கும் தலைமைக்கும் அதற்கு பிறகு வரும் தலைவர்களையும் பாதிக்கும் வண்ணம் ஆபாசமாக நடந்தும் பேசவும் செய்தார். ஆகையால் நேரடியாக தலைமை ஏற்றால் கங்கை அமரனுக்கு நேர்ந்த கதிதான் தனக்கும் நேரும் என்று தெரிந்துகொண்டவர் இப்போது தனி கட்சி என்று ஓட்டு வாங்கி பிறகு நான் பாசகவோடு இணைத்து கொள்கின்றேன் என்று ஓர் இரவில் தமிழகத்தில் பாசகவின் அரசை கொண்டுவர பலிகடாவை தயார்படுத்திவிட்டார்கள் பாசகவினர். - Plan C

தனி கட்சி தொடங்கிய சிரன்சீவி கடைசியில் காங்கிரசில் கரைந்து இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. கட்சி துவங்கிய போது பேசிய வீர வசனக்கள் எல்லாம் மக்களும் அவரும் மறந்து போன பரிதாம் தான் நினைவுக்கு வருகின்றது. மேலும் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட விசயகாந்து சென்ற தேர்தலில் சந்தித்த பரிதாப தோல்வியும் அதற்கு அழகாய் வழிவகுத்து கொடுத்த அவரின் துணைவியாரின் நாகரீகமற்ற மேடைப்பேச்சும் நினைவுக்கு வந்து போகாமல் இல்லை.

கடைசியாக தமிழக்தில் பாசகவிற்கு முண்டா சட்டையை மாட்டிவிட ஆள் கிடைச்சாச்சு........

அப்போ முதல்வர் பதவியும் பாசகவின் முண்டா சட்டையும் இவருக்கு தான் என்றால் இரும்பு பெண்மணி நிர்மலா சீத்தாமனும், நெடு நாட்களாக தன்னையும் முதல்வராக்கி விடுவார்கள் என்று சப்புக்கொட்டி கொண்டு இருந்த எச்ச சர்மா மற்றும் தமிழிசை எல்லாம் இனி என்ன செய்வார்கள். அவ்வளவு தானா இனி இந்த புது தலைவருக்கு நோயாளி சால்வை போர்த்திவிட்டு பின்னால் நின்றுக்கொண்டு டச்சப் பாயாக்க இருக்க தயாராகிவிட்டார்கள் போலும். வாழ்த்துக்கள் எச்ச சர்மா, தமிழிசை மற்றும் நிர்மலா சீத்தாராமன். மன்னிகனும் பொன்னார் இந்த போட்டியில் எல்லாம் எப்பவும் இருந்ததில்லை.

திருவாளர் துக்ளக் இம்சையரசர் 23ம் புலிக்கேசி மோடி 31 நள்ளிரவில் ஏதோ ஒரு அதிர்ச்சி இந்தியாவை பெற்று எடுக்க போவதாக முன்னவே சொல்லி இருந்தார். எந்த கருமத்தை செய்ய போகிறாரோ, ஏற்கனவே ஆதாரை வைத்து தில்லுமுல்லாடிய ஏர்டெல் நிறுவனம் 190 கோவரை சுருட்டிவிட்டு வழக்கு தொடர்ந்ததும் கொடுக்கிறேன் என்று பம்மாத்து காட்டுகிறது. 1771 கோடி ரூப்பாய் ஓர் ஆண்டில் குறைந்த வைப்பு தொகை இல்லமை மற்றும் மற்ற இந்தியாதிகளுக்காக ஏழை எளிய மக்களிடம் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்ட பணம் என்று மார்தட்டி சொல்கிறது எசுபிஐ வங்கி. இன்னும் என்ன என்ன கருமாந்திரத்தை எல்லாம் மீதம் இருக்கும் 1 1/2 ஆண்டில் சந்திக்க வேண்டி இருக்குமோ..............

Thursday, December 28, 2017

திருட்டுபயலே 2 - I.T. (2016) படமும்

I.T. (2016)

திருட்டுபயலே 2 படம் நன்றாக வந்திருக்கிறது. என்னடா தமிழில் இப்படி ஒரு கதை திரைக்கதையா என்று வாய்பிளக்க வைத்த படம்.

கடைசியில் பார்த்தால் இந்த ஆங்கிலபடத்தை மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு தமிழ் படமாக எடுத்து இருக்கிறார்கள்.

பிரசன்னாவின் பாத்திரம் ஒரு மனம் பிழன்ற இளைஞனின் சிரித்த முகத்திற்கு பின்னால் இருக்கும் கொடூரம் அழக்காக மாற்றி அமைத்து இருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் வரும் அந்த பெரும் பணக்காரர் வேடத்தை பிரித்து அரசியல்வாதிகள் முதல் அடி பொடிகள் வரை பிரித்து பாத்திரங்களாக அமைத்து கொடுத்து இருக்கிறார் சுசி கணேசன்.

ஆங்கிலத்தில்  அந்த பணக்கார குடும்பத்தின் இளம்பெண்ணை படம் பிடித்து அவளது பள்ளியின் தோழர்களுக்கும் அவளது அப்பனுக்கும் அனுப்பும் கொடூரம் தமிழில் தவிர்க்கப்பட்டு இருக்கின்றது.

ஆங்கிலப்படத்தில் அனைத்தையும் வைபையில் இணைத்து கண்காணிக்க முடிவெடுத்தால் அடுத்தவன் எப்படி எளிமையாக உள் நுழைந்து பாடாய்படுத்துவான் என்று காட்டி இருப்பார்கள். தமிழிலோ பேசுபுக்கில் தேவையே இல்லாமல் இன்றைக்கு திருப்பரங்குன்றத்தில் டீ குடித்தேன் வரை உடனடி தகவல்களை வலையேற்றும் நண்பர்கள் பாதிக்கப்பட்டவர்களாக காட்டி இருக்கிறார்கள்.

இன்னும் இது போல் ஏராளமான படங்கள் இருக்கின்றது தமிழில் எடுக்க அவைகளையும் பரிசீலிக்கவும், வாழ்த்துக்கள்.

Wednesday, December 27, 2017

ஆளுனரிடம் எதற்கு மனு கொடுக்கப்படுகின்றது - அவர் அப்படி என்ன தான் செய்வார்

சமீப காலமாக ஆளுனர் மாநிலத்தின் வளர்ச்சி பணிகள் சரிவர நடக்கின்றனவா என்று நேரில் சென்று ஆய்வு நடத்துகிறாராம்.

சரி அவரது செயல் வண்டியில் நடத்துனர் சரிவர எல்லோருக்கும் சீட்டை கொடுத்து காசை வாங்குகிறாரா இல்லையா என்று சென்று சோதிப்பது போல் தான் என்று எடுத்துக்கொண்டாலும் கூட.

அவர் செல்லும் இடங்கள் எல்லாம் கால் கடுக்க நின்று ஆளுனரிடம் மனுக்களை கொடுக்கிறார்கள் மக்கள். அப்படி இது வரையில் பெறப்பட்ட மனுக்களுக்கு இது வரையில் எது ஒன்றுக்காவது பதில் கிடைத்து இருக்கிறதா என்று இது வரையில் வெளியிட்டது இல்லை. நன்றாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள் இந்த செய்தியை நாம் எழுதிய உடன் அமெரிக்காவுல மைகேல் சாக்சன் கூப்டாங்கோ சப்பான்ல சாக்கிசான் கூப்டாங்கோ என்று பாசகவின் அடிபொடிகள் எழுதுவார்கள்.

பிறகு ஏன் போகும் இடங்களில் எல்லாம் மனுக்களை ஆளுனர் பெற்றுக்கொள்கின்றார், நடப்பது அதிமுக நடத்தும் அரசு, ஆளுனரின் அரசு அல்ல. அப்படி வாங்க பெறும் மனுக்கள் தகுதியானவையா இல்லை நிராகரிக்கப்பட வேண்டியவைகளா என்று முடிவெடுக்க வேண்டியது அதிமுக அரசு ஆளுனர் அல்ல.

இந்த மனுக்கள் எல்லாம் ஆளுனர் பொது மக்களிடம் இருந்து பெற்று உள்ளார் ஆகவே இவைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கலாமே தவிர இதை செய் என்று உத்தரவிட ஆளுனருக்கு அதிமுக அரசு பதவியில் இருக்கும் வரை அதிகாரம் கிடையாது.

பிறகு ஏன் போகும் இடமெல்லாம் ஆளுனர் மனுக்களை பெறுகின்றார் என்று கேளுங்கள், உங்களுக்கு மட்டும் இரகசியமாக சொல்வார், பாசக மக்களின் மனுக்கள் மட்டும் தான் ஆளுனரால் ஏற்றுக்கொண்டு நடவடிக்கைக்கு வற்புறுத்த முடியும் செய்யவும்படும். அதை பார்க்கும் பொது மக்கள் ஆளுனர் தான் ஆட்சியில் இருப்பதாகவும் அவரிடம் சொன்னால் எல்லாம் சரியாகி விடும் என்று ஒரு இணை அரசாங்கம் அவர் நடத்துகிறார் என்று மக்கள் நினைக்கட்டும் என்ற கேவலமான செயலாக இல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்.

போகும் இடங்களில் எல்லாம் கழிப்பறைகள் கட்டி இருக்கிறதா இல்லையா என்று சரிபார்க்கும் ஆளுனருக்கு மா நிலத்தில் GST என்ற பெயரால் நடத்தப்படும் கொள்ளையை கண்காணிக்கவோ பரிசீலனை செய்யவோ அவகாசமோ அவசியமோ இல்லையே ஏன். ஏன் என்றால் அவை செய்ய அவருக்கு உத்தரவு வரவில்லை. கொடுத்த உத்தரவு மக்கள் முன்னால் தோன்றி என்னவோ அவர்தான் அரசாங்கம் நடத்துவதாகவும் அதிமுக அமைச்சரவை என்னவோ ஒரு பொம்மை அமைச்சரவை என்று மக்களுக்கு நிறுவு என்று அளித்த உத்தரவை செவ்வனே செய்யும் அடிமையாக அழகாக நடந்துக்காட்டியுள்ளார் பன்வாரிலால்.

துல்லிய தாக்குதல் மோடி சொல்லி நடத்தப்படவில்லை போலும் - பாசக

மோடி ஒரே ஒரு முறை இலங்கைக்கு தொலை பேசியில் கூப்பிட்டார் உடனே இலங்கை தூக்கில் போட இருந்த மீனவர்களை தாயகம் திருப்பி அனுப்பினார் அன்று சுசாமி அளந்துவிட்டது.

இன்று அதிமுக மக்களின் வீடுகளை குறி வைத்து மட்டும் வருமான வரி சோதனைகள் வந்த போது, சட்டம் அதன் கடமையை செய்கின்றது. அது எப்படி தேர்தலில் போட்டியிடாமல் செய்வது போல் காரியங்கங்கள் நடக்கின்றது என்றதிற்கு - மைய அரசுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட எல்லாம் செய்வோம் - இன்றைக்கு தமிழக பாசக மக்கள் சொல்வது.

இப்படி மோடியை கடவுளுக்கு சமமாகவும் ஒரு அவதார புருசனாக சித்தரிப்பதில் பாசகவின் அடி பொடிகளுக்கு அப்படி ஒரு அலாதி இன்பம்.

சரி இப்படி எல்லாம் அவதாரம் எடுத்த மோடியும் அவரது அரசும் இந்த அலைகற்றை வழக்கில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என்று தீப்பு சொல்கின்றதே என்ற கேள்விகளுக்கு

சட்டத்தின் அதிகாரங்களில் பாசக அரசு தலையிடுவது இல்லை என்று சொல்லி சிரிக்கிறார்கள்

அது எப்படி ஒரு சில காரியங்களில் மட்டும் மோடி அதிகார வரம்பையும் மீறி மூக்கை நுழைக்க முடிகின்றது, அதாவது அவருக்கு வேண்டிய காரியங்களில் மட்டும்.

மற்ற இடங்களில் அவருடைய அதிகாரம் திடீர் என கானாமல் போகின்றது.

அப்போ துல்லிய தாக்குதல் இராணுவம் வழக்கமாக மேற்கொள்ளும் ஒரு செயல் அதை ஈரேழு 13 லோக அளவிற்கு ஊதி அது இந்த அவதார புருசனால் மட்டுமே முடிந்த காரியம் என்றும் அவர் இல்லை என்றால் இது எல்லாம் சாத்தியமே இல்லை என்றும் அழக்கா புருடாவிட்டு புளங்காகிதம் அடைந்திருக்கிறது.

பொய்யையும் தற்பெருமை தம்பட்டம் தவிர வேறு எதையும் அறியாத பாசகவும் அதன் மோடியும் இன்னும் பிறவும்.

Monday, December 18, 2017

நிர்மலா சீத்தாரமன் தமிழக முதல்வர் - என்னமோ இல்லவே இல்லன்னீங்க

குசராத்து மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பாசக ஆட்சியை பிடித்தது போல் தமிழகதிலும் ஆட்சியை பிடித்து இரும்பு பெண்மணி நிர்மலா சீத்தாராமனை தமிழக முதல்வராக உட்கார வைக்கும்.

போட்டியில் இருந்த 2 திராவிட கட்சிகளில் ஒன்றை விலைக்கு வாங்கியாச்சு, அதிமுக கட்சி உருப்பினர்கள் எல்லாம் பாசக கட்சியின் உருப்பினர்களாக மாறிவிட்டார்கள்.

இப்போது எல்லாம் அதிமுக தொண்டர்கள் எல்லாம் இப்படி தான் பேசிக்கொள்கிறார்கள்

என்ன அண்ணென்சி அந்த பேப்பரசி கொஞ்ச குட்ங்கசி, காலையிலசி கப்பிசி டீசி குடிச்சீங்களாசி

அந்த கால காங்கிரசுகாரர்கள் எல்லாம் காந்திகுல்லா போட்டுக்கொண்டு தாங்கள் காங்கிரசுகார்கள் என்று அறிவித்துக்கொண்டது போல் இனி அதிமுககாரர்கள் எல்லாம் தந்தி தொகாவில் தோன்றும் தொகுப்பாளர்கள் போல் ஒர் குளிர்கால உடையில் தான் இனி வேகாத வெயிலிலும் வலம் வருவார்கள்.

அதிமுக மக்கள் இனி காலைவேலைகளில் இனி நாசுடா தான் உண்பார்கள், மதியம் சாவலும் தாலும் உண்பார்கள். இரவில் ரோட்டியும் தாலுமக்கினியும் கூட டிக்கா கோழியோ அல்லது கோப்தா கோழியோ தான் உண்பார்கள். மறந்தும் இட்லி தோசையோ அல்லது சாதம் சாம்பார் என்று சொன்னாலோ உண்டாலோ தமிழகத்தில் உள்ள தனியார் மெக்காலே பள்ளிகளில் தமிழில் பேசினால் ஒரு வார்த்தைக்கு இவ்வளவு என்று வசூலிப்பார்கள், பிள்ளைகளின் பெற்றோர்களும் பெருமையாக அந்த தொகையை கட்டுவார்கள். அது போல இந்த செய்கைகளை கண்காணிக்க எச்சி இராசா மற்றும் தமிழிசை சார்பில் ஆட்கள் போடப்பட்டுள்ளது.

 நிர்மலா சீத்தாரமன் அரசுக்கு துணையாக இருந்து எல்லாம் செய்துகொடுக்கும் படி மைய அரசு எச்சி இராசாவையும் தமிழிசையையும் கேட்டுக்கொண்டுள்ளார்கள். அதிமுகவை வாங்கியதில் முக்கிய பங்கு வகித்ததை போல் இந்த மாற்ற முயற்சியிலும் பங்கு எடுத்துக்கொள்ளும்படி பணிக்கப்படுள்ளார்கள். எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான், பிறகு சங்கிகளின் சிங்கிகளே தைரியமான பங்கு எடுக்கும் போது இந்த கண்காணிப்பு எல்லாம் இருக்காது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

விரைவில் குசராத்து மாடலில் தமிழகத்தையும் உலகின் உச்சிக்கு கொண்டு செல்வதாக பாசக சபதம் பூண்டுள்ளது. மக்களே ஆதரவு கொடுத்து உதவுங்கள்.

பின் குறிப்பு, உங்கள் வீட்டில் உள்ள கழிவறைகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் தமிழகத்தின் ஆளுனர் மாளிகையை நாடவும். அங்கே இந்த துறையை ஆய்வு செய்யவும் நிவாரணம் அளிக்கவும் மைய அரசின் சார்பாக ஆட்களை நியமித்து இருக்கிறார்கள். யாரையும் நம்புவதாக மைய அரசின் ஆளுனர் இல்லை அவரே நேரில் வந்து ஆய்வுகளை மேற்கொண்டு உடனுக்குடன் நிவாரணம் வழங்குவார். இந்த பொன்னான வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளவும்.

Friday, December 15, 2017

முள்ளும் மலரும் - இளையராசா - மான் இனமே பாடலும்

இளையராசா இசையமைக்கும் படங்களில் ஒரு பாடல் படம் முழுவதும் பல்வேறு தாளங்களிலோ அல்லது பல்வேறு இசைக்கருவிகளிலோ வரும். உதாரணமாக புதுக்கவிதை படத்தில் வெள்ளை புறா ஒன்று என்ற பாடல் படத்தில் 20 இடங்களிலாவது வந்து போகும். பழைய நினைவுகளையும் நெருக்கங்களையும் நினைவூட்டும் காட்சிகள் அந்த துண்டு இசை மனதை வருடுவதை அந்த பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கும் போது காட்சிகள் மனதில் வந்து போவதை உணர முடியும்.

முள்ளும் மலரும் படத்தை பொருத்த அளவில் அந்த படத்திற்கு இளையராச தேர்ந்து எடுத்துக்கொண்ட பாடல் தான் இந்த மான் இனமே பாடல்.

ஆனால் படத்திற்கு விமர்சனம் எழுதும் ஒருவரும் இது வரையில் இந்த பாட்டை குறிப்பிடாமல் எழுதுவது சோகமே.

படம் துவக்கத்தில் பெயர் போடும் இடந்தில் வரும் இந்த பாடல், அந்த அண்ணன் தங்கை பாச நெருக்கடியில் எல்லாம் ஒலிக்கவிட்டிருப்பார் இளையராசா.

குறிப்பாக அந்த கடைசி காட்சியில் ஓடி வந்து அண்ணே என்று கட்டிக்கொள்ளும் அந்த தருணத்தில் ஒரு 6 அல்லது 10 நொடிகளுக்கு வந்து போகும் அந்த பாடல் அந்த பாச நெருக்கடியை அழுத்தமாக பதிவு செய்யும். அங்கு மட்டும் என்று இல்லை படத்தில் எங்கே எல்லாம் அண்ணன் தங்கை பாச நெருக்கடி வருகின்றதோ அங்கே எல்லாம் இந்த பாடல் ஒரு 5 , 10 நொடிகளில் உணர்சிகளை தூவி செல்லும்.....

எனக்கு தெரிந்த வரையில் எழுத்துக்கு வரும் பாடலை படம் முழுவதும் வரும் தீம் இசையாக அதிகம் இல்லை அதில் இந்த படமும் ஒன்று.

மேலும் சோபாவை பொருத்த அளவில் அவளின் ஆனந்தத்தை விவரிக்க ஒரு பின்னணி இசை வரும் அந்த இசையின் தாக்கத்தில் பின் நாளில் சூரியகாந்தி படத்தில் அதே சோபா பாத்திரம் இனி வாழ்க்கையில் என்ன செய்ய போகின்றோன் என்று தடுமாறும் காட்சிகளை கனவுகளே என்று ஒரு மான்டேசு பாட்டில் படம் பிடித்து இருப்பார்கள். இசை என்னவோ மலேசியா வாசுதேவன் ஆனால் இந்த முள்ளும் மலரும் இசையில் அந்த கனவுகளே பாடல் வந்திருப்பதை கவனிக்கமுடியும்.

Thursday, December 14, 2017

மோடி - வரபோகிற ரபேல் விமான ஊழல் விசாரணைக்கு முட்டு கொடுப்பதா இந்த வாரா கடன் விளக்கம்

மோடி திருவாய் மலர்ந்தாலே பொய்யும் புரட்டும் தான் வரும் போல. அதுவும் ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்வதில் வல்லவர்கள் இந்த மோடியும் அவரின் அடிபொடிகளும்.

இன்றைக்கு செய்திகளில் வங்கியின் வாராக்கடன்களுக்கு காரணம் சென்ற முறை ஆட்சியில் இருந்த காங்கிரசு ஆட்சி தான் காரணமாம். அதுவும் பாசக அரசின் அனைத்து திட்டங்களையும் அதானிக்கும் அம்பானிக்கு மட்டுமே கொடுப்பதை போல் காங்கிரசு அரசு வங்கியின் வாரா கடன்களை ஒரு குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும் கொடுக்கும் படி நிர்பந்திக்கப்பட்டார்களாம், அதாவது இப்போது மைய அரசு திட்டங்கள் அனைத்திற்கும் செலவாகும் பணம் அனைத்தும் அதானிக்கும் அம்பானிக்கும் கொடுக்கப்படுவதை போல் என்று சொல்கிறார்.

மேலும் இது வரையில் மூத்ரா திட்டத்தின் கீழ் 4 இலட்சம் கோடி வரை இளைஞர்களுக்கு கடன் கொடுத்துள்ளதாம் பாசக அரசு. அப்படி கொடுத்த 4 இலட்சம் கோடியும் திரும்பி வரபோவது இல்லை என்றதை தான் மோடி பாதிக்கப்படும் வங்கிகளை காக்க பொது மக்களை அடித்து உதைத்து கையில் இருக்கும் கடைசி காசு வரை வங்கியில் போடு இல்லை என்றால் கள்ளப்பணம் வைத்து இருக்கிறாய் என்று சிறையில் தள்ளுவோம் என்று மிரட்டி பிடுங்கிய கீரைகாரிகளின் பணமும், தயிர்காரிகளின் பணமும் மூத்ரா திட்டத்தில் கொடுத்த வாரா கடன்களுக்கு தாரைவார்க்கப்படும் என்று விளக்கம் அளிக்கிறார்.

இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்து வெளியிட மோடிக்கும் அவரது அடிபொடிகளுக்கும் 3 1/2 ஆண்டுகள் பிடித்தது போலும்.

இப்படி ஒரு அறிவிப்பை மோடி தற்பொழுது வெளியிட வேண்டிய கட்டாயம் பாசக அரசு தற்பொழுது வாங்கி இருக்கும் ரபேல் விமானங்கள் தான் காரணமாக இருக்கும்.

ஒரு விமானம் 100 கோடிக்கு வாங்க பேசிய ஒப்பந்தத்தை மீறி ஒரு விமானத்தை 500 கோடிக்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று இது வரையில் விளக்கம் சொல்லாத மோடி. இனி வரும் காலங்களில் ரபேல் விமான ஊழல் பற்றி விசாரிக்க வந்தால் காங்கிரசு ஆட்சியில் நடந்த பொபோர்சு ஊழலால் தான் நாங்கள் வாங்கிய ரபேல் விமான கொள்முதலில் ஊழல் வந்து என்று ஒரு வரியில் சொல்லி திசை திருப்பும் முன்னோட்டம் தான் இந்த வாரா கடன் பற்றிய வியாக்கியாஞம்.

இந்த அளவிற்கு வெளிப்படையாகவே புளுக்கும் ஒரு தேசிய பிரதமரை உலகம் எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டார் என்று பாசகவும் அதன் சிங்கிகளும் சொல்லி சொல்லு பெருமிதம் அடைந்துகொள்ளலாம்.

இப்படி பட்ட மகா கேவலமான மனிதரையும் அவரை சார்ந்த கூட்டத்தையும் நம்பி தான் இந்தியர்கள் ஊழல் ஒழியும் இந்தியா மிலிரும் என்று நம்பியும் அதை விட அந்த மனிதர் தேர்தல் நேரத்தில் சொன்ன ஒவொரு இந்தியரின் பெயரிலும் 15 இலட்ச ரூபாயை செந்தன் திட்டதின் கீழ் தொடங்கப்பட்ட கணக்குகளில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொடுப்போம், மேலும் வீட்டில் ஒருவருக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையும் கொடுப்போம் என்று ஆசை வார்த்தை பேசியதில் மயங்கி ஓட்டளித்த மக்கள் எல்லாம் இன்றைக்கு இந்த இம்சையரசர் 23ம் புலிகேசி மற்றும் துக்ளக் மன்னரின் பொன்னான ஆட்சியை பார்த்து பூரித்து வரும் காலங்களில் இந்திய வரலாறில் இரண்டாம் துக்ளக் மற்றும் இரண்டாம் இம்சையரசர் 23ம் புலிக்கேசியின் வரலாறு என்று என்ன என்ன எல்லாம் வரும் என்று வேதனையுடம் கூடைய நமட்டு சிரிப்பு சிரிப்பது கண்கூடாக காணமுடிகின்றது இந்தியா முழுவதும்.

மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி முடியும் போது அனேகமாக இந்தியா சொமாலியாவின் பொருளாதார நிலைக்கு வந்துவிடும் போல......வாழ்க இந்தியா பாரத்து மாத்தா கீ சே............

தமிழிசையும் எச்சி இராசாவும் இனி என்ன ஆவார்கள் - நிர்மலா சீத்தாராம் தமிழக முதல்வர்

கார்பரேட் பெரு நிறுவனங்கள் தாங்கள் புதிதாக நுழைய இருக்கும் சந்தையில் ஏற்கனவே சந்தையில் மிகவும் பிரபலமாக மக்கள் விரும்பி வாங்கும் அத்தகைய சேவைகளோ அல்லது பண்டங்களையோ விற்கும் சிறு அல்லது அங்கே பிரபலமாக இருக்கும் நிறுவனங்களை வாங்கி அந்த சந்தையை முன் போலவே தொழில் நடத்துவார்கள்.

பிறகு திரைமறைவில் அந்த பிரபலனமான நிறுவனங்களின் மீது பொருளாதார தாக்குதல்களையும் அதிகார தாக்குதலையும் தொடுப்பார்கள்.

பாசக பசுமாட்டு மாநிலங்களின் கட்சி. அந்த கட்சியோ அல்லது அவர்களின் பெற்றோர்களான மதவாத இயக்கங்களான சங்க பரிவாரங்களுக்கு தமிழகத்தில் என்ன வேலை. ஆனால் இங்கேயும் மக்கள் வாழ்கிறார்கள் தேர்தல் நடத்துகிறார்கள். கோடிக்கணக்கில் தினமும் வியாபாரம் நடக்கின்றது. ஆக இந்த மாநிலத்திலும் பசு மாட்டு சித்தாங்களை பரப்பி அடுத்த வீட்டுகாரர்களை வெட்டிக்கொண்டு சாக வைக்க நினைத்த பாசக தமிழகத்தில் கடையை விரித்து ஆளில்லா கடையில் டீ ஆத்த தொடங்கியது.

அப்படி முதன் முதலில் புதிய சந்தைக்கு வரும் கார்பரேட் நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கும் சந்தையில் பணிபுரியும் மக்களை நேரடியாக அதிகார செலுத்தினால் பழைய நிர்வாகத்தின் ஒத்துழைப்பு புதிய நிறுவனம் கிடைப்பது அரிது என்றதால் அவர்களுக்கு பழக்கமான மேலும் எத்தனை முறை அசிங்கமாக திட்டினாலும் துடைத்துக்கொண்டு புன்முறுவலோடு எதிர்கொள்ளும் தியாக உள்ளங்களை வேலைக்கு அமர்த்தி வேலையையும் பழைய நிறுவன நிர்வாகத்தை புதிய நிறுவனத்திற்கு வேலைக்கு அமர்த்துவார்கள். இப்போது தமிழிசையும் எச்சி ராசாவும் பாசகவில் தமிழகத்தில் இருப்பது போல்.

பிறகு பழைய நிர்வாகம் முழுமையாக புதிய நிர்வாகதிடம் வந்ததும் கண்கான இடத்திற்கு இந்த பழைய நிர்வாக தலைவார்களை மற்றி மிகவும் கேவலமான வேலைகளை செய்ய சொல்லி வர்புறுத்துவார்கள். இந்த கொடுமை தாங்காமல் விட்டால் போதும் என்று கிடைகின்ற ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு ஓடுவார்கள் அந்த பழைய நிர்வாகத்தலைமைகள்.

தமிழகத்தில் இருக்கும் அதிமுகவை நல்ல விலைக்கு பாசக வாங்கியாச்சு. மெல்ல அதிமுகவின் தலைமை என்று இப்போது துடிக்கும் குட்டி குட்டி தலைவர்களை எல்லாம் கையில் இருக்கும் கொள்ளையடித்த பணத்தை எல்லாம் பிடிங்கிக்கொண்டு ஓட வைத்தாகிவிட்டது.

அதிமுகவின் நிர்வாகம் இப்போது பாசகவின் கைகளுக்கு வந்தாகிவிட்டாசு. இனி இந்த இணைப்பில் பெரிதும் வேலைகளை செய்த தமிழிசை மற்றும் எச்சி இராச போன்ற இடையில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் இனி என்ன ஆவார்கள்.

சென்னை இடைதேர்தலில் மேடைதோறும் உளரிக்கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள் இந்த வகையராக்கள். அனேகமாக இந்த இடைதேர்தலுக்கு பிறகு மெல்ல ஓரம் கட்டப்பட்டு நிர்மலா சீத்தாரம் தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து தேர்தலை சந்திக்க உள்ளது பாசக.

இந்த இரும்பு பெண்மணிக்கு முன்னால் தமிழிசையும் எச்சி இராசாவும் இனி என்ன செய்ய போகிறார்கள். பாசக கொடுக்க போகும் பப்பர மிட்டாயை வாங்கிக்கொண்டு அத்வானி வீட்டில் அமர்ந்துகொண்டு புத்தகங்களை எழுதுவதும் பாக்கிட்தானத்திற்கு போவதும் அங்கே சென்று முகமது அலி சின்ன நல்லவர் வல்லவர் என்று புகழ்ந்து வந்ததை போல் அரிதான காரியங்களை செய்துக்கொண்டு இருப்பார்கள் போலும்.

இணைய புலிகள் எல்லாம் இரும்பு பெண்மணியை கிண்டல் செய்யவோ அல்லது கேலிசித்திரங்களோ வரைய முடியாமல் தமிழிசையும் எச்சி இராசாவும் இருந்த காலத்தில் நாங்கள் எல்லாம் எப்படி எல்லாம் பகிடி செஞ்சோம் என்று மலரும் நினைவுகளாக படங்களையும் துணுக்குகளையும் வெளியிட்டுக்கொண்டும் இருப்பார்கள்.

Wednesday, December 13, 2017

சென்னை இடைதேர்தலில் பாசகவினர் இப்படி தான் பேசி ஓட்டு கேட்பார்கள்

உங்களுக்கு கோவில் வேண்டுமா மசூதி வேண்டுமா, கோவில் வேண்டும் என்றால் எங்களுக்கு ஓட்டு போடுங்கள்

காசுமீரத்தில் அமைதி திரும்ப வேண்டுமா எங்களுக்கு ஓட்டு போடுங்கள்

வருடா வருடம் தீபாவளி கொண்டாட வேண்டுமா எங்களுக்கு ஓட்டு போடுங்கள்

தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தாக்கப்படாமல் இருக்க வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

இந்தியா வல்லரசு ஆக வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

உலகத்தார் அனைவரும் யோக கற்றுக்கொள்ள வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

எல்லையில் இருக்கும் இராணுவ வீரர்கள் திறம் பட செயலாற்ற வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

காவிரியில் தண்ணீர் வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

சென்னையை சுனாமி தாக்காமல் இருக்க வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

இந்து கடவுளையும் இந்து மதத்தையும் உலகம் பாராட்டி இந்து உலகமாக மாற வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நல்ல முறையில் நடக்க வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

இந்த தேர்தலில் பாசகவை நீங்கள் வெற்றி பெற செய்தால் நாளைக்கு இந்திய பிரதமராக எடப்பாடி பழனிசாமி வருவார் அதற்காகவாது வாக்களியுங்கள்

தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் ஒதுக்குபுரமாக விற்கும் மதுவை பகிரங்கமாக சாலையோர உணவங்களிலே பரிமாற எங்களுக்கு வாக்களியுங்கள்

சென்னையில் இருக்கும் ரிசர்வு வங்கியில் உங்கள் 2000 தாளுக்கு சில்லரை தர வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்
 
எங்களுக்கு வாக்களித்தால் தான் சென்னை விமான நிலையத்தில் மேலும் மேலும் கண்ணாடிகள் விழாமல் பார்த்துக்கொள்ளுவோம்
 
 உத்திரபிரதேசத்தில் ஆக்சிசன் இல்லாமல் குழந்தைகள் இறந்ததை போல் இங்கேயும் இறக்க வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

நாட்டில் வாரா கடனாக இந்தியாவின் தலை சிறந்த ஏழைகள் கட்டாமல் விட்ட பணத்தை எல்லாம் வசூலிக்க வேண்டுமா எங்களுக்கு வாக்களிக்காதீர்கள்

உங்களிடம் உள்ள அடையாள அட்டைகள் போதாது நாளைக்கு கோதார், போலார், பாலார், டூலார் என்ற அட்டைகள் எல்லாம் வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

தப்பி தவறிக்கூட பணமதிப்பிழப்பு பற்றியோ, ஒளிரும் இந்தியா என்றோ அல்லது வைபரண்டு குசராத்து என்றோ ஒரு வார்த்தை கூட ஒலிக்க போவது இல்லை

ஆளே இல்லாத டீ கடையில் யாருக்கு ஐயா டீ ஆத்துகிறீகள் பாசகவினரே. அது தான் அதிமுகவை விலைக்கு வாங்கியாச்சு பேசாமல் அவர்கள் சார்பில் பாசகவினரை நிற்க வைத்து வெற்றி பெற்ற பிறகு அதிமுக கட்சியை நாங்கள் பாசகவோடு இணைத்துவிட்டோம் இனிமேல் யாரும் இரட்டை இலையோ அல்லது திராவிடம் என்றோ சொல்லவோ பேசவோ கூடாது என்று தைரியமாக அறிவிக்க வேண்டியது தானே அதை விடுத்து இந்த சொத்த தேர்தல் சந்திப்புகள் எல்லாம் எதற்கு.

Tuesday, December 12, 2017

மோடியும் பாசகவும் இசுரேல் மொசாத்து அமைப்புடன் சேர்ந்து இந்தியாவின் அமைதியை குலைக்க சதி

இசுரேலின் மொசாத் அமைப்பை பற்றி புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை. இந்தியாவின் ரா அமைப்பை போல் செயல்படும் ஒரு இரகசிய திரைமறைவு இயக்கம்.

இந்த அமைப்பு இசுரேலில் இசுலாமியர்களுக்கு எதிராக கடந்த 60 ஆண்டுகளாக திட்டமிட்ட தாக்குதல்களை வகை தொகையில்லாமல் தொடுத்து வருகின்றது. அதற்கு காரணமாக இசுரேல் சொன்னாலும், அந்த நாட்டில் வாழும் சொந்த நாட்டு மக்களையே அகதிகளாக ஆக்கி அழகு பார்க்கும் அரசுக்கு என்ன ஞாய தர்மங்கள் இருக்க முடியும்.

இலங்கையில் சிறுபான்மையினராக இருந்த தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் சிங்களவர்களை எந்த காரணமும் இல்லாமல் குடியேற்றி மெல்ல மெல்ல தமிழர்களின் இடத்திலேயே அவர்களை அகதிகளாக ஆக்கி கடைசியில் வதை முகாம்களில் வைத்து வருட கணக்கில் வதைத்துக்கொண்டு இருப்பது போல். இந்தியாவிலும் சிறுபான்மையாக இருக்கும் மக்களையும், பாசகவின் சிந்தாந்தங்களை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்க்கும் மக்களையும் இதே போல் சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்க மோடியும் பாசகவும் சதியில் ஈடுபட்டுள்ளது.

படிப்படியாக எப்படி துல்லிய தாக்குதலை தொடுப்பது, எங்கே இருந்துக்கொண்டு அடிப்பது என்ற கோணங்களை எல்லாம் மொசாத்து இயக்கம் திட்டமிட்டு வழங்கி அதை இந்தியாவிலே இரவில் மக்கள் அயர்ந்து இருக்கும் நேரம் நிகழ்த்திவிட்டு சுவடு தெரியாமல் காணாமல் போவார்கள் மொசாத்து இயக்கம்.

பிறகு என்ன கோத்ராவை காரணம் காட்டி குசராத்தை எரித்தவர்கள், தமிழகம், கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தை எரித்துவிட்டு அகதிகள் முகாமில் இவர்கள் எல்லாம் இனப்பெருக்கம் செய்த்துகொண்டு இருக்கிறார்கள் என்று மோடியும் பாசகவும் சொல்வார்கள்.

உங்கள் ஊரில் அடையாளம் தெரியாத மக்கள் யாரையாவது பார்த்தீர்களானால் கவனமாக இருங்கள். உங்களின் பாதுகாப்பு எல்லாம் இனி காற்றில் மறைந்த வாசனை அவ்வளவே......

நீங்கள் கேட்கலாம் அடிப்படையே இல்லாமல் எந்த ஆதாரத்தை வைத்து இப்படி எல்லாம் நடக்கிறது என்று சொல்கின்றாய் என்று கேட்பீர்கள்.

எந்த ஆதாரத்தை வைத்து மோடியும் பாசகவும் குசராத்து தேர்தலில் பாக்கிட்தானின் ஆட்சியர்களும் இராணுவத்தினர்களும் சதியில் ஈடுபட்டுள்ளார்கள் என்று சொன்னார்களோ அதே ஆதாரத்தை வைத்து தான் நாங்களும் சொல்கின்றோம்........

இந்த கிறுக்கு பிடித்த பைத்தியகார மனிதன் மோடி என்ன கூத்து எல்லாம் அடிக்க போகிறாரோ........

அவர் என்ன வேண்டும் என்றாலும் ஆகட்டும் ஆனால் அதனால் எங்களுக்கு துன்பம் வராமல் இருந்தால் சரி தான்.........