Saturday, April 7, 2018

பாசக தமிழகத்தின் காவிரிக்காக போராடாத ஒரே கட்சி

ஆண்டாள் என்று சொல்லிக்கொண்டு ஊருக்கு ஊர் சோடா பாட்டில்களை வீச மேடை அமைத்து கொடுத்து ஆங்கிலம் மற்றும் உள்ளூர் ஊடகங்களை வைத்துக்கொண்டு ஊது ஊது என்று ஊதிய பாசக மக்களின் வாழ்வாதார பிரச்சனையான காவிரிக்கு இது வரையில் ஒரு துரும்பை கூட கிள்ளி போட வில்லை.

மாற்றாக கடல் நீரை குடியுங்கள், கர்னாடகம் என்ன செய்யும், போராடுவது தவறு, அரசியல் ஆதாயம் தேடகிறார்கள் என்றெல்லாம் அறிக்கை விட்டுக்கொண்டு உல்லாச இன்ப சுற்றுலா சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த 'இந்துகள்' கட்சி தமிழகத்திற்கு என்ன எல்லாம் செய்யும் என்று இப்போதாவது புரிந்துகொண்டால் சரிதான்.

தமிழகத்தை ஒரு குசராத்து கட்சி தான் ஆள வேண்டும் என்று சொல்பவர்கள் தமிழக பல்கலைகழகத்திற்கு தமிழர்களையா கொண்டு வருவார்கள். அமெரிக்காவில் இருந்து டிரம்பை கூட்டி வந்து தமிழர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்றால் அமெரிக்க டிரம்பு தான் பல்கலை துணை வேந்தாரக வரவேண்டும் என்றும் கூட சொல்வார்கள் பொருத்து இருந்து பாருங்கள்.

0 comments: