Tuesday, March 27, 2018

பாசக எடப்பாடி மற்றும் அனைத்து அதிமுக மக்களும் தூத்துகுடிக்கு குடிபெயறுகிறார்கள்

எடப்பாடி மற்றும் பாசக தூத்துகுடியில் தேவை இல்லாமல் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், தூத்துகுடி மிகவும் பாதுகாப்பாகவும் மக்கள் வசிக்க மிகவும் உகந்த இடம் என்றும் பரப்புரையை நிகழ்த்திவரும் இந்த நிலையில் அவர்கள் சொல்வது உண்மை என்று நிரூபிக்க டெர்லைட்டு நிறுவனத்தின் பாதுகாப்பான தூரம் என்றும் சொல்லும் இடத்தில் இவர்களின் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு இனி வாழ இருப்பதாக அறிவித்து இருக்கிறார்கள்.

அப்படி பாசகவும் அதிமுகவும் தூத்துகுடிக்கு குடி இருக்க வரும் போது மக்கள் குடி நீர்பெறும் இடங்களிலேயே இவர்களும் குடி நீரும் மற்றும் வாழ்வாதாரங்களையும் பெற்று தங்களது பிள்ளை பேரன் பேத்திகளையும் அங்கேயே கொண்டு சென்று வளர்கவும் உறுதி பூண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தூத்துகுடி வாழ் மக்கள் பாசக மற்றும் அதிமுக மக்களை டெர்லைட்டு ஆலைக்கு அவர்கள் பாதுகாப்பாக உள்ளது என்ற இடத்தில் அவர்களை குடியேத்தி வசதிகளை செய்து கொடுக்கும் படி கேட்டுக்கொள்கின்றோம்.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசக மக்கள் தங்களது சொத்துகளை எல்லாம் விற்றுவிட்டு தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் அமைத்தே தீருவோம் என்று சொல்லும் அனைத்து வடமா நில பாசக மக்களும் தங்களது சொத்துபத்துகளை தமிழக மக்களுக்கு கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக நியூட்ரினோ திட்டம் வரும் இடத்தில் தங்களது சொந்த பந்தங்களுடன் குடியேறி தூத்துக்குடி போல் வாழவும் இருக்கிறார்கள். தேனி மாவட்ட மக்களிடம் சொல்லி தாயுள்ளத்துடன் இவர்களை நியூட்ரினோ திட்டம் பாதுகாப்பு தூரத்தில் உள்ள இடத்தில் குடியமர்த்தவும்.

0 comments: