Thursday, October 30, 2008

பாசாக கட்சி தமிழகத்துக்கு தேவையா.......

கடந்த மூன்று வாரமாக இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு திரட்டும் வேலையாக பதிவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரைதுறையினர் என்று கிட்டதட்ட அனைத்து தரப்பும் இந்த வேலையில் சுறு சுறுப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறது.

சில கட்சிகள் தீவிரமாக ஆதரவு தெரிவித்தாலும், சில கட்சிகள் நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்கா விட்டாலும் ஒரு கருத்தையாவது சொல்லிக்கொண்டு வந்துள்ளது.

இப்படி ஆதரவு தெரிவிப்பதைவிட இலங்கை தமிழர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வேலைகளில் மா நில இதழ்கள் முதல் நாடளவு இதழ்களும் கூட கட்டுரைகளையும், வாசகர்களது கருத்தாக வெளியிட்டும் வந்துள்ளது.

பதிவர்களை கேட்கவே வேண்டாம், யார் முதலில் என்று துவங்கி இன்று வரை இரு சாராரும் போட்டி போட்டுக்கொண்டு எழுதிவருகிறார்கள்.

நாட்டு நடப்புகளில் கருத்து சொல்வது ஒவ்வொரு தனிமனிதனின் உரிமை. நீ ஏன் கருத்தே சொல்லவில்லை என்று கேட்டால் அது நாகரீகமாக இருக்காது.

ஆனால் பாருங்கள் இந்த பாசாக இது வரையில் இந்த பிரச்சணையில் வாய்திரக்கவே இல்லை. முதன் முதலாக ஐயா இல கணேசன் சொன்ன ஒரே கருத்து 4 வருடங்களாக அமைதியாக இருந்துவிட்டு தற்பொழுது கருணாநிதி நாடகம் ஆடுகிறார் என்று சொல்லி இருக்கிறார்.

இதை தவிர அந்த செய்தியில் வேறு எதுவுமே சொல்லப்படவில்லை. அவர் சொன்ன கருத்து சரியா இல்லையா என்று பிறகு பார்ப்போம். ஆனால் ஒரு கருத்துக்கூட சொல்லவில்லை என்றால் அந்த கட்சிக்கு தமிழகத்தில் என்ன வேலை என்று தான் கேட்கத்தோன்றுகிறது.

கொல்கத்தாவில் துப்பாக்கி சூடு நடந்து ஒரு 10 நபர் இறந்தார்கள். உடனே பாசாகவின் மாநில உருப்பினர் அம்மா ஒருவர் தனியார் தொலைகாட்சியில் திருமதி பிருந்தா கரத்துடன் விவாததிற்கு வந்தார். விவாதம் முழுதும் பிருந்தா அவர்களை பேசவே விடாமல் கத்து கத்து என்று கத்தினார்.

மொத்த விவாதம் ஒரு மணிக்கும் மேல் நீடித்துக்கொண்டு இருந்தது. இறுதியில் திருமதி பிருந்தா கரத்து குறிப்பிட்டார் குசராத்தில் 3000 கொலைகளை நிகழ்த்திவிட்டு இங்கே 10 மக்கள் துப்பாக்கி சூடி இறந்ததற்கு இப்படி ஓங்கி ஓங்கி பேசுகிறீர்களே அந்த 3000யை பற்றி ஏன் எதுவுமே கருத்து சொல்ல மறுகிறீர்கள் என்று பலமுறை கேட்டார்.

அதற்கு அந்த பாசாக பெண்மணி கிளிப்பிள்ளை போல் திரும்ப திரும்ப கொல்கத்தா கொல்கத்தா என்று மட்டுமே புலம்பியதை மக்கள் மறந்து இருக்க வாய்ப்பில்லை.

இதை இங்கே குறிப்பிடுவதின் நோக்கம், இந்த கட்சியினர் கொல்கத்தாவிலும், குசராத்திலும், அசாமிலும் வாழும் மக்களுக்கு எப்படி செவ்வனே ஆதரவு கொடுக்கிறார்கள் என்று காட்டத்தான்.

கர்னாடகத்தில் பாசாகவின் ஆட்சி அமைந்தவுடன் அவர்கள் தெரிவித்த முதல் கருத்து தமிழகத்துக்கு இனி எந்த ஆற்றிலும் நீர் போகாது என்றது தான். அந்த கருத்தை எதிர்தோ, அல்லது, எங்களது மாநிலமான தமிழகத்து நீர் உரிமையை கட்சியின் பெயரால் எல்லாம் விட்டுக்கொடுக்க முடியாது என்றாவது சொன்னார்களா பெயருகாவது என்றாலும் இல்லை.

இப்படி தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றது போல் நடந்துகொள்ளும் இந்த கட்சி தமிழகத்தில் இருக்கத்தான் வேண்டுமா. அவர்களுக்கு தமிழகத்தில் என்ன வேலை என்று எனக்கு புரியவில்லை. உங்களுக்காவது புரிகின்றதா.........

கடைசியாக இல கணேசன் அவர்களுக்கு, அது சரி 4 ஆண்டு காலமாக கருணாநிதி சும்மா இருந்துவிட்டு கபட நாடகம் ஆடுகிறார். பாக்கிட்த்தானின் எல்லையில் ஒன்றறை இலட்சம் துருப்புகளை கொண்டு போய் நிறுத்திவைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்தீர்கள் கணேசன். அப்போது அவர்களது இராணுவம் உள்ளே வந்ததா அல்லது நாம் தான் குறைந்தது பாக்கிட்த்தான் ஆக்கிரமிப்பு காசுமீரிலாவது சென்று அவர்களை விரட்டினோமா. அங்கே அத்தணை காலம் துருப்பை நிறுத்த எத்தணை செலவானது என்று சொன்னால் அனைவரும் மயக்கம் போட்டு கீழே விழுவார்கள். இந்த நாடகம் என்ன வகை திரு இல கணேசன் சொல்வீர்களா......

இல்லை நீங்கள் 6 ஆண்டுகள் ஆட்சி நடத்தும் போது இலங்கையில் என்ன பாலாறும் தேனாறுமா ஓடியது..................

Tuesday, October 28, 2008

போலி தமிழர்களுக்கும், போலி இந்தியர்களுக்கும்

இலங்கை தமிழர்களுக்கு உதவவேண்டும் என்ற வேண்டுகளை வைத்தால், அந்த நெருப்பில் எவ்வளவு குளிர்காய முடியுமோ அவ்வளவு குளிர்காயும் போலி தமிழர்களே மற்றும் போலி இந்தியர்களே.....

கருணாநிதி நாடகம் ஆடுகிறார், வைகோ கண்ணப்பன் பிரிவிணை பேசுகிறார், சீமான் அமீர் ஆயுதம் ஏந்த சொல்கிறார்கள், தமிழர்களுக்கு எல்லாம் தமிழ் வெறி தலைக்கு ஏறிவிட்டது (மாலினி பார்த்தசாரதி), முதல்வர் சட்டத்தை காற்றிலே பறக்கவிட்டு விட்டார், தமிழகம் தனி நாடாக போகும், இந்தியாவிற்கு ஒரு காசுமீரம் போதும், தமிழக அரசியல்வாதிகள் இனவெறியூட்டுகிறார்கள், இளைஞர்களை இந்தியாவிற்கு எதிராக திருப்புகிறார்கள், முன்னாள் பிரதமரை கொன்றவர்களை ஏன் தமிழகம் ஆதரிக்கவேண்டும் (அப்பாவி மக்களுக்கு அல்லவா ஆதரவு கேட்டோம்).

இலங்கையில் அவர்கள் இறந்தாலோ கொடுமை பட்டாளோ எங்களுக்கு என்ன ஆனால் குசராத்தில் 60 முதியர்களை கொன்றதுக்காக எதிரணியில் இருக்கும் கருவை மட்டும் அல்ல இனிமேல் உருவாகப்போகும் அணைத்து எதிர்கால கருக்களையும் கணக்கில் கொண்டு சிறு குழந்தைகளை கூட விட்டு வைக்கக்கூடாது ( இதை சொல்பவர்கள் தமிழகத்து தமிழர்கள்).

இராசீவ்காந்தியின் உயிர் இந்திராகாந்தியின் உயிரைவிட, அன்னல் காந்தியின் உயிரை விட பல ஆயிரம் மடங்கு புணிதமும், மான்பும் பொருந்தியது. ஆகையால், அன்னல் காந்தியை கொன்றவர்கள் நாட்டை ஆளும் கட்சியாக வரலாம். கேட்டால் கோட்சே எவனோ ஒருவன் அந்த ஒருவன் செய்த தவறுக்காக மொத்த இயக்கத்தையும் என்ன சாகவா சொல்லமுடியும். அன்னை இந்திராவை துடிக்க துடிக்க உடலில் 32 குண்டுகள் துளைத்த பின்னும், கையில் இருக்கும் 2 துப்பாகிகளின் குண்டுகள் அத்தணையும் தீரும் வரை சுட்டு. இறந்ததை உறுதி படுத்திக்கொண்டவர்களின் பிறந்த நாளை இன்றும் பஞ்சாப்பில் புணித விழா நாட்களாகவே கொண்டாடுகிறார்கள். அந்த இனத்து மன்மோகன் சிங் இன்றைக்கு அதே கட்சியின் பிரதமர். கேட்டால், மன்னிப்போம் மறப்போம்.

தமிழர்களுக்கு எதிராக இத்தணை தமிழர்களா, இந்தியர்களுக்கு எதிராக இத்தணை இந்தியர்களா.

ஆமாம் நீங்கள் சொல்லும் தமிழர்கள், இந்தியர்கள் விளக்கம் தான் என்ன சொல்லுங்கள் போலி தமிழர்களே, போலி இந்தியர்களே..............

Monday, October 27, 2008

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டியது தமிழகம் மட்டும் அல்ல முழு இந்தியாவும் தான்.

இன்றைக்கு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு என்று சொன்னாலே என்னவோ ஒரு நாட்டு துரோகியை பார்ப்பது போல் ஒரு கூட்டம் பார்க்கவும், எழுதவும், பேசவும் செய்துக்கொண்டு இருக்கிறது. அதோடு மட்டும் நில்லாது, ஆதரவு தெரிவிப்போரை கைது செய்யவேண்டும், தூக்கிலிடவேண்டும், இன்னமும் என்ன என்ன கொடுமைகள் எல்லாம் உண்டோ அவை அனைத்து கொடுமைகளையும் அந்த ஆதரவு தருவோருக்கு கொடுத்து கொடுமை படுத்தவேண்டும் என்று துடித்துக்கொண்டு இருக்கிறது.

இந்த பசப்பு வார்த்தைகளை தேசியம், இந்தியாவின் ஒற்றுமை, இந்தியாவின் இறையாண்மை, என்று எத்தணை நாட்டுபற்று வார்த்தைகள் உள்ளனவோ அத்துனை வார்த்தைகளையும் அதன் மேல் தேனாகவும், அமிழ்தாகவும் ஊற்றி அந்த வார்த்தைகளின் பெயரில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தரக்கூடாது என்று மறைமுக கட்டளையும் மிரட்டலையும் அந்த கூட்டம் வீசுகிறது.

இதிலே கொடுமை என்ன என்றால், ஆதரவு தெரிவிக்க்லாம் ஆனால், ஆதரவு தெரிவிக்ககூடாது என்று சொல்வது தான் அந்த கொடுமை. குழப்பமாக இருக்கிறதா, எனக்கும் அப்படி தான்.

இலங்கை தமிழர்களுக்காக நாம் நமது வருத்தத்தை தெரிவித்தால் போதுமா, மற்ற படி அரசியல் நடவடிக்கைகளோ, பண உதவியோ, மருத்துவ உதவிகளோ செய்வது எல்லாம் கூடவே கூடாதாம். அது தானாம் அந்த ஆதரவு தெரிவிக்கலாம், ஆனால் ஆதரவு தெரிவிக்கூடாது என்ற தாம்.

அது எப்படிங்க ஆதரவு தெரிவிப்பதாக ஆகும் என்றால், அந்த ஆதரவு மட்டுமே கொடுத்தால் அங்கே இருப்பவர்களது துயருக்கு அது ஒரு நீதியை பெற்று தரும் என்று கேட்டால். இப்படி எல்லாம் நீ பேசினால் நீ நாட்டுக்கு துரோகம் இழைத்ததாக பொருளாக கொண்டு உன்னையும் கைது செய்து இப்போது சிறையிலே போட்டவர்களோ கூட இல்லை திகாருக்கு அனுப்பபடுவாய் என்றும் சொல்கிறார்க.

இவர்களது வார்த்தைகளில் நீதி என்ற பொருளில் ஒரு எழுத்து கூட இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அப்படி உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் தெரிவிக்கவும்.

அப்பாவி தமிழர்களை கொல்லாமல் இருக்குமாறு இலங்கை தேசிய வாதிகளுக்கு அழுத்தம் கொடுங்கள் என்று சொன்னால் அது அவர்களது இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்ததாக அமையும் என்று தைரியத்தின் மொத்த சொந்தகாரி என்று சொல்லிக்கொண்டு அலையும் அந்த அதி விளம்பர பிரியை 'பயத்தில்' நடுங்கு நடுங்கு என்று கை கால்கள் எல்லாம் உதரல் எடுத்தபடி சொல்கிறார்.

சரி அம்மா நீங்கள் சொல்வது சரி என்று எடுத்துக்கொண்டாலும், அந்த தேசியவாதிகளின் இராணுவத்திற்கு நவீன ஆயுத பயிற்சிகளையும், ஆயுதங்களையும் ஒரு பைசா காசுக்கூட வாங்காமல். எப்படி தமிழகத்தின் உழைக்கும் நடுத்தரவர்க்க மக்கள் தாங்கள் வருடம் முழுதும் மழை, புயல், வெள்ளம் என்றும் பாராமல் உழைத்து உழைத்து கட்டிய வரிப்பணத்தில், அவர்களது பணத்தை கொண்டே அவர்களது அப்பாவி மக்களை கொன்று குவிப்பதற்கு பயிற்சியும் ஆயுதமும் வழங்குவது மட்டும் எப்படி உங்களுக்கு மனித நேயமாக பட்டது.

சாதாரண வார்த்தைகளில் சொல்வது என்றால் எனது வீட்டு பணத்தை என்னிடம் வரி என்கின்ற பொருளில் வாங்கி எனது வீட்டு தம்பிகளையும், தங்கைகளையும், கொன்று குவித்துக்கொண்டு இருப்பவனுக்கு, இந்த இந்த கத்தியில் குத்து இன்னமும் அழகாகவும் அதிக சிரமம் இல்லாமலும் கொல்லலாம் என்று இந்திய அரசு செய்துகொண்டு இருப்பதை கண்டித்தால். அப்படி சொல்வது பிரிவிணை வாதமாகும் அவர்களை உடனே கைது செய்து அணு அணுவாக இலங்கை தமிழர்களை சிங்களம் கொடுமைபடுத்துவது போல் படுத்தவேண்டும் என்று சொல்லும் தைரிய பெண்மணியாக சொல்லிக்கொள்ளும் பெண்ணே, இது மன நோய் பிடித்தவரின் வாதம் போல உமக்கே தெரியவில்லை சொல்லுங்கள்.

கேள்வி இந்த தைரிய லெட்சுமிக்கு மட்டும் இல்லை, இவரை போல் ஒரு பெரும் கூட்டமே மேடை பேச்சாகவே இதை சொல்லிக்கொண்டும். பிரிவினை பேசுகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் அந்த கூட்டத்தையே கேட்கிறேன், நீங்கள் சொல்வதி எள்ளவேயானும் நீதியுண்டா??????????????????????????

உண்மையில் இலங்கை தமிழர்களது நலனுக்கு எதிராக பொருளுதவிகளும் சரி, ஆயுத உதவிகளும் செய்யும் வரையில் தமிழர்கள் யாரும் வரியே கட்டக்கூடாது. அப்படி வரி பணம் கட்டமுடியாது என்று சொன்னால் எத்தணை காலத்திற்கு மற்ற மாநிலங்கள் பணம் கொடுத்து பொருளதவி செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

இப்படி மேடைகளில் பேசுவதோடு நில்லாமல், ஆயுதம் தூக்காமலே இந்திய அரசை நமது கோரிக்கைகளை நிரவேற்றிக்கொள்ள முடியும். இன்றையில் இருந்து இனியாரும் வரிக்கட்ட போவது இல்லை என்று முடிவு எடுப்போம், தமிழர்களுக்கு முழு ஆதரவை அளிப்போம்.

இந்த செய்கையையும், அந்த கூட்டம் ஓடி வந்து இதுவும் நாட்டு துரோகம் தான் என்று வாதிட்டு, தமிழர்கள் அனைவரையும் சிறையில் இட்டு உத்திரபிரதேசத்து ஆட்சி தான் இனி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரையில் போகக்கூடும்.

அதற்கு நாம் சொல்வோம், கார்கில் போர் மூண்ட போது தமிழகம் கொடுத்த நண்கொடை அளவிற்கு வேறு எந்த மாநிலமும் கொடுக்கவில்லை, நமது மாநிலம் பணத்தை வசூலிக்க துவங்கிய போது தான் மற்ற மாநிலங்களும் அதை பற்றியே சிந்திக்க துவங்கியது. அது மட்டும் இல்லாது குசராத்தில் பூகம்பம் வந்த போதும் கூட அவர்களுக்கு என்று அவர்களது மக்களுக்கு அடுத்து அதிக தொகை கொடுத்து உதவியதும் தமிழகமே.

அன்றைக்கு இந்தியாவின் மற்ற பகுதியில் பாதிப்புகள் நேர்ந்த பொழுது எல்லாம் தமிழர்கள் யாரும் கேட்காமலேயே ஓடி ஓடி உதிவினோமே எதனால் எங்களுக்குள் உருக்கும் மனித நேயமும் சகோதரத்துவமுமே. இன்றைக்கு எங்களுடைய சொந்த மக்களை அடுத்த நாட்டில் அடித்து கொன்று குவித்துக்கொண்டு ஒரு மத வெறிக்கூட்டம் அலைகிறது. எங்களது சொந்தங்களை காபாத்துங்கள் என்று நாங்கள் கேட்டால், காப்பாற்றுவதை விட்டு விட்டு நீங்களும் அடித்தான் எப்படி என்று கேட்போம்.

இந்தியாவின் மேல் தமிழர்கள் காட்டிய அன்புக்கும் பரிவுக்கும் இந்தியா திருப்பிகாட்டும் கைமாறா இது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தரவேண்டியது இந்தியாவின் கடமை அல்லவா தமிழர்கள் இந்தியர்கள் என்றால். அப்படி இந்தியா நடந்துகொள்ளவில்லை என்றால் இந்தியாவே தமிழர்களிடம் பிரிவினையை காட்டியது போல் ஆகாதா.........

சிந்திக்குமா இந்தியா......அதன் அரசியல் நெரியாளர்கள்.

நாங்கள் இரவல் கேட்கவில்லை எங்களது உரிமையை தான் கேட்கிறோம். சும்மா பூச்சி எல்லாம் காட்டாதீர்கள் அந்த கூட்டமே.

Friday, October 24, 2008

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் அப்படி என்ன குழப்பம் மக்களே

முதலில் ஒரு செய்தியை உறுதி படுத்திக்கொள்ள வேண்டும். என்ன தீர்வை ஆதரிக்கிறோம் என்றதில் வேண்டுமானால் நமக்குள் குழப்பம் இருக்கலாம். எப்படி பட்ட தீர்வாக இருந்தாலும் தீர்வு கிடைத்தாக வேண்டும் என்றதில் இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது என்று நம்புகிறேன்.

அடுத்தாக தற்பொழுது வலையில் உலாவரும் செய்திகள் இது. தமிழீழம் மலர்ந்தால் தமிழகம் பிளவு படும் என்ற சொல்லாடல்களும், அதில் வரும் பின்னூட்டங்களில் வந்தால் என்ன என்றும் வராதே என்றும் வரும் விவாதங்களை படிக்கும் போது வேடிக்கையாக இருக்கிறது.

இதன் உச்சம் என்ன தெரியுமா, இந்தியாவுக்கு ஒரு காசுமீரம் போதும் இன்னும் ஒன்று வேண்டாம் என்று சொல்லுவது தான் அபத்தததிலும் அபத்தம்.

என்னவோ காசுமீரம் தவிர, மும்பை, அசாம், ஆந்திரம், கர்னாடகம், குசராத்து போன்ற பகுதிகளில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல். எனக்கு இவ்வளவு இருக்கிறது மற்றதை நீ எடுத்துக்கொள் என்று பக்கத்து வீட்டுகாரர்களை தொந்திரவு செய்வதாக இவர்களுக்கு நினைப்பு(தமிழகம் பிரிந்து போகும் என்று சொல்பவர்களுக்கு).

மேலே சொன்ன இடங்களில் விளையும் குழப்பங்களினால் தமிழர்களின் உணர்வுகளில் என்ன வேறுபாடுகளை தேற்றுவிக்க போகிறது என்று கேட்டால் எல்லோருமே சற்று குழப்பமாகத்தான் விடையளிப்பார்கள்.

ஆனால் அதே நேரத்தில் டெல்லியில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும், மும்பையில் இருந்தும் விரட்டப்படும் தமிழர்களை பற்றிய செய்திகள் வரும்போது கட்டாயம் எல்லோரது மனதிலும் ஆதங்கம் வருவது இயற்கையே. அது மட்டும் இல்லாது இப்படி விரட்டி அடிக்கிறார்களே அது போல நம்ம மாநிலத்தில் நாம் செய்தால் இவர்களுக்கு எப்படி இருக்கும் என்றும் கேட்க தூண்டுவதும் இயற்கையே.

இதில் தனது சொந்தம் என்ற ஒரு உணர்வு இருந்தாலும், இது பின்னாளில் தனக்கு நடக்காது என்று எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை அதனால் இதற்கு இப்பவே ஒரு தீர்வுகாண வேண்டும் என்ற முன் எச்சரிக்கையாவும் கூட எடுத்துக்கொள்ளலாம்.

அந்த அடிப்படையில் தான் கர்னாடகம் தண்ணீர் விட மறுக்கும் போதெல்லாம், கேரளம் பெரியார் அணையிலே பிரச்சனைகளை கிளப்பும் போதெல்லாம், பெட்டி பெட்டியாக பணத்தை பெற்றுக்கொண்டு கிருசுணா நதி நீர் கொடுகிறேன் என்று சொல்லி தனது பணக்கார விவசாயிகளுக்கு வாய்க்கால் அமைத்த ஆந்திரம் செய்கையின் போதும் தமிழர்கள் தங்களது ஆதங்கத்தை கருத்துக்களாகவும் கோபங்களாகவும் வெளிப்படுத்தினார்கள்.

இந்த கோபங்களில் எல்லாம் மக்கள் கேட்டது இது தான், அடுத்த மா நிலம் நமக்கு எதுவும் செய்யாது ஆனால் நாம் மட்டும் ஏன் அவர்களுக்கு இங்கு இருந்து மின்சாரமும், மூல பொருட்களையும் அனுப்பவேண்டும் என்று கேட்டார்கள். சரியான கேள்விகள் தான் ஆனால் விடைதான் என்ன என்று குழப்பம் இருக்கும்.

இந்த கேள்விகளுக்கு படித்தவர்கள் முதல் பாட்டாளிவரை அனைவரது பதிலும் ஏன் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் வரும். என்ன தான் பற்றாக்குறையாக இருந்தாலும் குடும்பத்துக்குள் விட்டுக்கொடுப்பது அன்றாட நிகழ்வு. பொதுவில் மூத்தவர்களில் யார் விட்டுக்கொடுப்பது என்று போட்டியும் கூட போடுவார்கள்.

ஆனால் பொதுவில் இந்த விட்டுக்கொடுத்தல் எப்போதாவது ஒருமுறை நிகழ்ந்தால் தான் இந்த நிலை. அதுவே தினமும் என்றால், கிடைக்காதவர்கள் என்ன எப்பவுமே கிடையாதா என்று கேட்பது இயல்பு. இன்று தமிழகத்தின் நிலையும் இது தான். அது தான் கேட்கிறார்கள் எப்பவுமே தண்ணீரோ வாய்ப்புகளோ கிடையாதா என்று.

அந்த குடும்பத்தில் அது சரி என்றால் தமிழகத்தில் கேட்பதும் சரியே.

தமிழகம் பிரிந்து போகும் என்று சொல்பவர்களே, இந்த காரணங்களுக்காக தமிழகம் பிரிந்து போகும் என்று ஏன் இதுவரை நீங்கள் கணிக்கவில்லை என்று தெரிந்துகொள்ளலாமா..........

ஒரு குடும்பத்தில் இருக்கும் இளையவர்களை யாராவது வெளியாள் சீண்டினால் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து கொண்டு சீண்டியவனை தாக்குவதை பார்த்தது இல்லையா நீங்கள். அப்படி தாக்கியதால் அந்த குடும்பத்தை அடிதடி குடும்பம் என்று பெயர் சூட்டுவோமா நாம் தான்.

தாயும் மகளும் சேர்ந்து கோவிலுக்கு போகிறார்கள், அங்கே விடலைகள் அந்த பெண்ணை தகாத முறையில் கேலி பேசுகிறார்கள். அங்கே அந்த தாய் தான் ஒரு தாய் அதுவும் ஒரு தமிழ் பெண்மணி ஆகையால் அதிர்ந்து பேசக்கூடாது. என்ன நடக்கிறதோ அது அப்படியே நடக்கட்டும் என்றா இருந்துவிடுவார். தமிழகம் இல்லை உலகில் எந்த இடமாக இருந்தாலும் சரி எல்லா அம்மாக்களின் இயல்பும் இது மாதிரிதான் இருக்கும் இதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் இல்லை.

என்றோ ஒரு நாள் நடக்கும் இந்த வித நடவடிக்கைகளுக்கே இப்படி மூர்க்கம் பெரும் சாதாரண பெண்கள். அன்றாடம் தங்களது கண் முன்னாலே தங்களது மகன்களை சுதந்திரம் வேண்டும் என்று கேட்ட ஒரே காரணத்திர்காக அணு அணுவாக துண்பங்களை கொடுத்து, கடைசியில் உயிரை மாய்த்துவிடும் படி கெஞ்சிய பிள்ளைகளை கண் முன்னே பார்த்தவளை பற்றி இங்கே பேசிக்கொண்டு இருகிறோம் நண்பர்களே. கவனத்தில் கொள்க, அவசரப்பட்டு வார்த்தைகளை விடவேண்டாம். கனிவேடு கேட்டுக்கொள்கிறேன்.

தாய் தனது பிள்ளைகள் அளவுக்கு அதிகமாக குரும்பு செய்யும் போது கொன்றுவிடுவேன் கொன்று என்று கடிந்துகொள்வது இயல்பாக பார்க்ககூடிய ஒன்று. அப்படி சொல்லும் எவளும் கொல்வதும் இல்லை ஏன் அடிப்பதும் கூட இல்லை. அதை போலத்தான் இன்றைக்கு மக்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேசியுள்ளார்கள்.

இப்படி கொன்றுவிடுவேன் என்று சொன்ன தாயின் மேல் வழக்கிட்டு வாதாடினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த விதமான பதிவுகள். அந்த பதிவுகளின் அப்பத்த உச்சம் தமிழகம் நாளை பிரிந்து போகும் என்ற ஆருடம்.

மேலே சொன்ன எந்த சிக்கலிலும் பிரியவேண்டும் என்று எவனுமே எண்ணாத வேளையில், பிரியவேண்டும் என்று எண்ணுவார்கள் என்று பதிவிடும் இந்த நண்பர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்.

விடுதலை அடைந்த இத்தணை ஆண்டுகளில் கடந்த 10 ஆண்டுகளாகத் தான் காமராசருக்கு பிறகு உரிய கவனிப்புடன் தமிழகம் இருக்கிறது என்று சொன்னால் மறுப்பதற்கு இல்லை.

இப்படி கவனிப்புடன் இருப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லை போலும், அதனால் தான் இதையும் அதையும் எழுதி தப்பு தப்பாக கருத்தாங்களை உருவாக்க எண்ணி இப்படி எழுதுகிறார்கள் போலும். வீணர்களே உங்களது முயற்சி வீழ்வது நிச்சயம். வாழ்த்துகள்.....

அடுத்தவர் வாழ்க்கையையும் உணர்வுகளையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள், மற்றும் ஒரு முறை இலங்கை தமிழர்களை பற்றிய பதிவிடும் முன் சிந்தித்து எழுதவும். உங்களை இப்படி ஒரு நிலையில் ஒருவர் பேசினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தால் தெளிவாக புரியும்.

Monday, October 20, 2008

ஸ்ரீவித்யா மூன்றாம் ஆண்டு நினைவு நாள்




உனது உலகமாய் என்னை வைத்திருந்தாய்
எனது உலகமாக உன்னை பார்தேன்
இடையில் ஏன் இந்த கண்ணாமூச்சு
உனது வரவை எதிர்பார்த்து
காத்துக்கொண்டு இருக்கிறேன் அம்மா.............

Tuesday, October 7, 2008

தென் இதியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், உயிர் காக்க உதவுங்கள். (இளகிய மனம் படைத்தோர் இந்த பதிவின் தொடுப்புகளை படிக்கவேண்டாம்).

இவரின் பெயர் மனிசு, ஒரு பொருந்தாத காலமாக இவருக்கு இரத்தபுத்து நோய் தாக்கியுள்ளது. எலும்பு மஞ்சையின் தானம் மூலம் உயிர் பிழக்கும் வாய்ப்பு இருந்தும் இதுவரையில் அப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு வாய்க்கவில்லை. அனைத்து தென் இந்திய மக்களிடமும் ஒரு வேண்டுகோளை மட்டுமே வைத்துவிட்டு நம்பிக்கையாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு உள்ளார் இந்த இளம் தந்தை. அவரது நிலைமையை எங்களது எழுத்துக்களால் சொல்வதைவிட அவரது வலைதளத்திலேயே படியுங்கள்.

மறுபடியும் எச்சரிக்கின்றோம், அவரது வலைதளத்தை இளகிய மனம் கொண்டவர்கள் படிக்க வேண்டாம்.

www.lifeformanish.org

இவருக்கு உதவும் பொருட்டு சேம்பைனை சேர்ந்த மருத்துவர், மஞ்சை பொருத்த சோதனை முகாம் ஒன்றை நடத்தவுள்ளார். அதை அவரது மருத்துவமனையில் கீழ்கண்ட தேதியில் நடத்துகிறார். உங்களுக்கோ அல்லது உங்களது தென் இந்திய நண்பர்களுக்கோ இதில் ஆர்வம் இருந்தால் மனிசையோ அல்லது மருத்துவர் சரவணன் அவரையோ அனுகுங்கள். மனிசின் தொடர்புகள் அவரது வலைதளத்தில் உள்ளது. மருத்துவர் சரவணனின் தொடர்புகள் இங்கே.

Dr P.Saravanan,

Is conducting a campaign to help this soul to identify a match for him. Here is Dr.P.Saravanan's Campaign information,

Bone Marrow registration drive
Oct. 18 ...........2008
10.00 am thru 12 noon

Location:
Medical office Bldg
2407 S. Neil street
champaign, IL 61820

at the intersection of Neil St. and Windsor Road
Immediately south of "First State Bank"
Plenty of parking available

Remember this is a drive for registration for Bone marrow donation.......which means they take a "swab" from the inside of the cheek i.e. inside of the mouth. from which they can get the necessary information to see if you are a match.

This is important because the chances of finding a perfect match is very,very slim for South East Asians.We can improve the chances if we do bulk registrationMoreover we can help somebody without any permanant damage to our bodyFAQ given belowMore details at: www.lifeformanish.org

Questions

Eligibility and exclusion criteria Basics:
1. Ages 18-60. No major communicable diseases such as HIV/Hepatitis C and Hepatitis B or major cardiac illness, autoimmune disorders, severe diabetes, history of undergoing a transplant, recent back surgery, severe obesity, chronic lung disease. People with TB or people taking Insulin cannot be a donor either.
2. Ethnic heritage is very important since chances of matching with someone of similar HLA type is higher.
3. Tissue sample for registration is an oral swab (no blood needed)
4. Collection usually is similar to a more involved form of Blood donation via an IV line- which appears to be the need in his case. Occasionally depending on patient needs may need to be a bone marrow donation.
5. Recovery period after donation- short.
6. Marrow recovery in donor if it is a bone marrow donation- 2-6 weeks. In peripheral blood stem cell collection quickly after the donation.
7. Obligation: You could refuse later if contacted.
8. Duration of one staying in registry- until age 60 or if you develop major illness and contact the registry.
9. Indications for the procedure for the recipient: Some forms of leukemia or lymphoma who are not eligible to undergo a self transplant or who do not have siblings or have matched siblings then they proceed to a matched unrelated donor. This in such cases is the patients only chance to survive (some may not).
10. Information: If a donor matches you need to be found quickly. Please ensure you give adequate contact information.
11. Satisfaction you get from saving someone's life- infinite and priceless

sincerely,
P.Saravanan, MD
Champaign clinic

For More information about Manish, Please find this at below link.

click below:

http://www.lifeformanish.org/index.php

He will need "Bone marrow transfusion"
they need to search a lot of people, especially from south india to find a suitable match
If we can agree to be screened we can inform them...screening is simple

FAQ .....available in the above website
let me know what u think
from
P.Saravanan, MD

முகம் தெரியாத இந்த மனிதனை காப்பாற்றுங்கள் நல்ல உள்ளங்களே.........