Tuesday, April 17, 2018

மோடி மே 3ல் காவிரி பற்றி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவார்

இப்போது தான் ஏழை விவசாயிகள் எல்லாம் நிம்மதியாக தூங்குகிறார்கள். அப்படி இப்படி என்று சத்தம் போடுபவர்களும் போராட்டம் செய்பவர்களும் கள்ள விவசாயிகள்.

நாட்டின் நலமும் ஏழைகளின் வாழ்வும் பாசக அரசால் பாதுகாக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றமும், உலக வங்கியும், ஐ நா சபையும் பாராட்டி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது என்றும் சொல்வார்.

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் இனி எப்பொழுதும் தர தேவை இல்லை என்று உச்ச நீதி மன்றமே சொல்லிவிட்ட பிறகு என்ன செய்ய முடியும் நீங்களே சொல்லுங்கள் என்றும் சொல்வார்.

விவசாயம் பொய்த்து போன தமிழகத்தில் இனி மிச்சம் மீதி இருக்கிற இடங்களில் எல்லாம் நிலத்தடியில் தோண்டி என்ன என்ன எடுத்து அம்பாணி, மிட்டல், அதாணி என்ற ஏழைகளுக்கு கொடுப்பதில் எந்த கேடும் நாட்டிற்கு வந்துவிட போவது இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது என்றும் சொல்வார்.

அந்த வடகத்தியர்களின் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வரும் வடக்கதியற்களுக்கு பக்கோடாவும் சப்பாதியும் செய்து கொடுக்கும் சுய தொழில் வேலைகளை பாசக பெருமளவில் தமிழகத்திற்கு இதன் மூலம் செய்து கொடுக்க முடியும் என்றும் அவரது அறிக்கையில் சொல்வார்.

0 comments: