Thursday, December 12, 2019

எப்படி பட்ட கேவலமான நிலையில் இந்தியா இருக்கிறது

எந்த நல்ல நிலைமைக்கும் தான் காரணம் என்றும் மற்ற அசாதாரண நிலைக்கு எல்லாம் மற்றவர்கள் தான் காரணம் என்று சொல்வது பிதற்றுவதற்கு சமம்.

ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாம் கேனையர்கள் என்பது போலவும் தான் தான் புத்திசாலி என்றும் முழங்கினார்கள் அன்று இன்றோ அவர்கள் தான் எங்கள் ஆட்சியின் அவலங்களுக்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

இந்த புத்திசாலிகளின் ஆட்சியில் புலங்காகிதம் அடைந்த அந்த வடக்கத்தியர்களின் கைவண்ணத்தில் இரண்டாம் முறை அவர்களின் ஆட்சி.......அனுபவிங்க எல்லோரும்.......

Saturday, July 6, 2019

2019க்கான பட்செட் - இது ஏழைகளுக்கான, இளைஞர்களுகான மற்றும் முன்னேற்றத்திற்கான பட்செட்

நிர்மலா சீதாரமன் இந்த 2019க்குகான வரவு செலவு திட்டங்களை மறைமுகமாக தெரிவித்தாரோ இல்லையோ இந்த குட்டி குட்டி தலைவர்கள் எல்லாம் கூவ ஆரம்பித்துவிட்டார்கள்.

உணவகங்களில் 2 இட்லி சாப்பிட்டால் கூட ஒருவர் சாப்பிட்டால் வரும் தொகைக்கு ஈடாக வந்துக்கொண்டு வந்து இருந்த பாசக ஆட்சியின் பில்லில். 2 இட்லி சாப்பிட்டால் 1.99 மனிதர் சாப்பிட்டால் வரும் பில்லை வரவைப்பது எவ்வளவு பெரிய சாதணை. அதை பாராட்ட மனம் இல்லை என்றாலும் கேலி பேசாமலாவது இருக்கலாம் இந்த குட்டி குட்டி தலைவர்கள்.

யாருக்கு எவ்வளவு வரி என்றதை எல்லாம் வெளியில் சொல்லாமல் முடிந்தால் இணையத்திலோ அல்லது டெல்லிக்கு நேரடியாகவோ சென்று தெரிந்துக்கொள் என்று அறிவாந்த முறையில் தெரிவித்து இருக்கும் அறிவாய்ந்த பட்சட் அல்லவா இது.

யானை அதுவாக உண்டால் ஓர் இரு நாள் மட்டுமே வரும் வருமானம் ஒரு மாமாங்கம் வரும் தந்திரத்தில் உருவான பட்சட் அல்லவா இந்த பட்சட். அன்றாடம் பொருட்களை வாங்கும் மக்களிடம் வரிகளை வாங்க்க இன்னும் 1000 திருமணங்களை அம்பாணி செய்து வைக்க வேண்டாமா.

விமானத்தில் பறக்கும் மக்கள் வரி செலுத்த வேண்டும் என்று தானே சொன்னோம் மாட்டு வண்டியில் போகும் மக்களிடமா வரி கணக்கை காட்ட சொன்னோம்.

இரயிலில் முன்பதிவு செய்யும் மக்களிடம் தானே வரி கணக்கை கேட்டோம், முன்பதிவில்லாமல் நிற்கவே முடியாமல் பயணிக்கும் பயணிகளிடமா வரி கணக்கை கேட்டோம்.

ஏழை எளிய மக்கள் வாங்கும் 60 இலட்ச பேட்டரி கார்களுக்கு சலிகைகளை அள்ளி கொடுத்த பட்சை புகழாமல் இகழ்கிறீர்களே நீங்கள் எல்லாம் மாட்கள்  மக்கள் இல்லை.

தமிழகத்தில் இது வரை வசூலித்த 1 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரியும் இந்தியை ஐ நா மன்றத்தில் பேச வழி செய்ய செலவழித்து விட்டாச்சு. இன்னும் பிகார், மத்திய பிரதேச வளர்ச்சிக்கு பணம் தேவைபடுகிறது. நாளை முதல் வாங்கும் எல்லா பொருட்களுக்கும் ரூபாய் 2.5யை உயர்த்திகட்டி இந்தியன் அல்லவா நீ.

 நீ கட்டிய வரிக்கும் நெடுஞ்சாலை வரிக்கும் தமிழில் புரணானூரு பாடலை பாராளுமன்றத்தில் சொல்லியாச்சு இனி வேறு என்ன வேண்டும் அதிகமாக வரிகட்டிய பெருமை உனக்கு வரட்டும். தமிழகத்தின் இடங்களை வேற்று மானில இந்தியர்கள் தான் வாங்குகிறார்கள், பாக்கிட்தானியர்கள் ஒன்றும் இல்லையே என்று விட்டு கொடு.

 நாளை ஈழத்தில் சொந்த செல்வங்களை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாய் 12 ஆண்டுகளாய் வாழும் தமிழர்களை போல் நீயும் வாழ்ந்துவிட்டு போ என்றும் பட்சட்டை பாராட்டாமல் ஏன் வெதும்புகிறாய் குட்டி குட்டி தலைவர்களே. தமிழகத்து இந்திஒ போராளிகளோடு சேர்ந்துக்கொண்டு டமில் டமில் என்று எழுதுங்கள். வாழ்க இந்தியா வளர்க மக்களாட்சி........

Thursday, April 18, 2019

பாசகவிற்கு பசு ஏன் அவ்வளவு முக்கியமானது

பாசக சங்கபரிவாரத்தின் அரசியல் முகம். வெளியில் அழகாக சிரித்து பேசினாலும் அந்த அழகிற்குள் பொதிந்து இருக்கும் நச்சு அதே பழைய ஆலகால நச்சு தான்.

இந்தியா போன்ற மக்களாட்சி நாடுகளின் பலவீனம் இந்த மாதிரியான நச்சு அரசியல் சக்திகளை சகித்துக்கொண்டு இருப்பது. சரி செய்திக்குள் வருவோம்

இந்த முறை பாசக 2014ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பசுவை மனிதர்களின் தாயாக பெருமையாக சொல்லிக்கொள்ளும் கூட்டம் பெருகி இருக்கிறது. அப்படி சொல்லிக்கொள்வதில் பெருமை படுவதில் முன்ண்ணியில் இருப்பது இளைஞ்சர்கள் என்றது தான் சோகமே.

பசு ஒரு விலங்கு, அந்த விலங்கை தனது தாய் என்று ஏன் அந்த இளைஞர்களை சொல்ல வைக்க வேண்டும். அப்படி சொல்வது அவர்களை சதையும் இரத்தமுமாக பெற்று எடுத்து பாலூட்டி வளர்க்கும் அன்னையை இழிவுபடுத்தும் செயல் என்று அவர்களின் புத்திக்கு வராமல் மூளை சலைவை செய்தது எப்படி.

உலகில் இறைவனை நம்பும் மனிதர்கள், அந்த இறை நம்பிக்கையின் பேரில் தனது தந்தையை சேவல் என்றோ, தனது தாத்தாவை எலி என்றோ தனது பாட்டியை பாம்பு என்றோ சொல்வதே இல்லை.

ஆனால் இந்த சமீபத்திய பாசக இளைஞர்கள் தனது தாய் பசு என்று ஏன் சொல்லவேண்டும் என்ற ஆவலோடு அவர்களோடு விவாதிக்கும் போது கடைசியாக அவர்கள் சொல்வது பசு தான் மனித இனத்தையே பாதுகாத்த முதல் விலங்கினம். அந்த பசு மட்டும் இல்லாமல் போய் இருந்தால் இன்றைக்கு இந்த மனித இனமே இருந்து இருக்காது என்றும் அதனால் தான் அந்த பசுவை காமதேனு என்று அழைப்பதாகவும். அப்படி மனித மொத்த குலத்தின் தாயாக பசு இருந்ததினால் பசு தான் தனக்கு தாய் என்றும் ஒரு அசத்தலான பதிலாக வந்தது.

புராணங்களிலும் சரி இதிகாசகங்களிலும் சரி இது வரையில் இப்படி பசு மனிதனின் தாய் என்று ஒருபோதும் விளித்ததும் இல்லை. நாக கன்னி, மோகினி, கன்னி பேய், இரத்த காட்டேரி, இப்படி என்ன என்ன வடிவங்களில் அசாதாரணமான கற்பனை பாத்திரங்களை கொண்ட புராண இதிகாசகங்களிலில்  கூட ஒரு பசு ஒரு மனிதனை பெற்று எடுத்து வளர்த்தாகவோ அல்லது ஒரு மனிதனை தனது மகனாக தத்து எடுத்து வளர்த்தாகவோ எங்கேயும் கூறப்பட்டதாக கதைகளிலோ கட்டுரையிலோ அல்லது திரைபடங்களிலோ வந்து இல்லை.

இப்படி எந்த தொடர்புகளும் இல்லாமல் திடீர் என்று பசு தாயாக பரிணாமித்தது ஏன் என்று யோசிக்க வேண்டி இருக்கிறது. அதுவும் பாசக ஆட்சி 2014ல் அமைந்த பிறகு மிகவும் தீவிரமாக அவர்களுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் இருக்கும் பசு ஏன் இவ்வளவு முக்கயத்துவம் பெறவேண்டும் என்றும் யோசித்து பார்க்க வேண்டியும் உள்ளது.

உலகில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் புதை பொருட்கள் அனைத்தும் மனிதனின் பரிணாம வளர்ச்சியையும் மிஞ்சி போனால் டைனோசர்களின் எலும்பு கூடுகள் தவிர அடுத்த கிரகத்து மனிதர்களின் கூடுகளோ அல்லது மிகவும் வித்தியாசமான ஒன்றோ இது வரை கிடைத்தாக இல்லை.

இந்தியாவை பொருத்த அளவில் இது வரை வெளி வந்து இருக்கும் புதை பொருள் ஆராய்ச்சிகள் அசோகர்காலத்தவைகளே பழமையானவைகள். அதற்கு பழமையானவைகள் இன்னும் ஆராய்சிக்குட்படுத்தபடாமல் மூடி வைக்கப்பட்டு இருக்கிறது.

அப்படி மூடி வைக்கப்பட்ட இடங்கள் தமிழர்களின் அடையாளங்களாக கருதப்படும் பூம்புகார் நகரம், தற்பொழுதைய பூம்புகார் நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் கடலிலும், ஆதிச்ச நல்லூர், கீழடி போன்ற இடங்கள். இந்த இடங்களில் கிடைப்பெற்ற பொருட்கள் அசோகர் காலத்திலும் மிக பழமையானவைகள்.

அதாவது இது வரை ஆதியாக கொண்டு எழுதப்பட்டு வந்த இந்திய வரலாற்றை மாற்றி அமைக்கவல்ல ஆராய்ச்சிகளாக அது அமையக்கூடும் என்றதும் அந்த ஆராய்சிகளை தள்ளிப்போட்டு பிறகு மண்ணை அள்ளி போட்டு மூடும் வேலையும் நடந்து வந்தது.

ஒரு காலகட்டத்தில் அந்த புதை பொருள் ஆராய்ச்சிகளை இனியும் காரணங்கள் சொல்லி புதைத்தாலும் பின்னொரு காலத்தில் வெளிவந்தே ஆகும் என்ற கூற்றுகளையும் அறிகுறிகளையும் வெளிக்காட்ட இந்த பரிவாரங்கள் என்ன செய்வது என்று கையை பிசந்துகொண்டு ஒரு குறுக்கு வழியை கண்டு பிடித்தார்கள்.

அந்த குறுக்கு வழிதான் இது வரை சிந்துவெளி நாகரீகம் வரை கடைசியாக கிடைத்த கீழடி ஆய்வுகள் வரை கிடைத்த மாடு தோற்றங்களை குதிரை தோற்றம் என்று நிறுவுவது என்று துவங்கி இந்திய ஆராய்சியாளர்கள் மற்றும் வெளி நாட்டு ஆராய்சியாளர்களையும் சம்மதிக்க வைக்க போலியான ஆதாரங்களை கொண்டு நம்ப வைக்கப்பார்த்த போது ஞாயமாக இருக்கும் ஆராய்சியாளர்கள் ஒப்புகொள்ளவில்லை என்றதோடும் மட்டும் நில்லாது இப்படி ஒரு முயற்சி உள் நாட்டிலும்  நடப்பதாகவும் உலகுக்கு தெரிவித்தார்கள்.

அப்படி இப்படி என்று எவ்வளவோ முயன்று மாட்டிடம் அவர்களது குதிரைகள் தோற்று போனது.

இந்தியாவின் ஆதி நாகரீகம் இந்து நாகரீகம் தான் அந்த நாகரீகத்தின் சான்றாக இனி எப்பவும் எதுவும் காட்டமுடியாது என்று முடிவாக ஆனது. ஓலை சுவடி, கல்வெட்டுகள், அல்லது புதை பொருள் என்று இது வரையில் அவர்களது வாதத்திற்கு வலு சேர்க்கும் எந்த அறிவியல் பூர்வமான ஆதாரமும் இது வரை கிடைக்கவில்லை. அந்த ஆதிரத்திலும் ஆற்றாமையிலும் தமிழர்களின் அடையாளமான மாட்டை ஆரிய சின்னமாக மாற்றிக்கொள்ள முடிவெடுத்தார்கள்.

அதன் முதல் முயற்சி சல்லிக்கட்டை தடைவிதித்தோடு நில்லாமல் இனி எப்பவும் நடத்தவே முடியாத வண்ணம் அமுக்கியது. வேண்டும் என்று கேட்கையில் உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துவிட்டது என்று சப்பை கட்டு கட்டியதோடு மட்டும் நில்லாது, இந்தியா முழுவதும் எந்த எந்த மாடு சம்பந்தமாக இருக்கும் அத்தனை கலாச்சாரத்தையும் பீட்டாவின் துணைக்கொண்டு நிறுத்தினார்கள்.

பிறகு மெல்ல பசுவிற்கு புணித பிம்பத்தை பூசி பிறகு மனிதர்களின் தாய் என்று சொல்ல வைத்தார்கள். மக்களையும் சட்டத்தையும் விட பசு முக்கியம் என்று இந்திய பாராளுமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை பேச வைத்தார்கள். இன்னும் சிறிது காலத்தில் எங்கே எல்லாம் பசுக்களின் சின்னங்கள் கிடைக்கின்றதோ அவைகளை காட்டி இது இந்து மத அடையாளங்கள் என்றும் தமிழர்கள் எல்லாம் கைபர் போலன் கனவாய் வழியாக தென் ஆப்ரிக்கவில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவியது மட்டும் இல்லை இப்போது இந்தியாவை சொந்தம் கொண்டாடுகிறார்கள் ஆகவே தமிழர்களை ஆப்ரிக்காவுக்கு விரட்டுங்கள் என்று சொல்வார்கள்.

இது தான் பசுவிற்கு பாசகவின் பாசத்திற்கு உள்ள தொடர்பு. கிருத்துவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும், இசுலாமியர் பாக் செல்ல வேண்டும், தமிழர்கள் ஆப்ரிக்கா செல்ல வேண்டும் என்றதே பாசகவின் திட்டம்.........

Wednesday, April 17, 2019

பாசகவை கழுவி கழுவி ஊற்றும் தேர்தல் ஆணையம்

கடந்த ஒரு மாத காலமாக வேலூர், தூத்துகுடி, கரூர் என்று வரிசையாக கட்டு கட்டாக புதிய ரூபாய் கட்டுகளை தொகவில் காட்டப்படுகிறது.

இந்தியர்களின் பழைய ரூபாய் நோட்டுகள் எல்லாம் செல்லாது என்று சொல்லிய பணமதிபிழப்பு நடவடிக்கையில் இந்தியர்களின் பணம் எல்லாம் யார் யாரிடம் எவ்வளவு பணம் இருந்தது, மற்றும் நாள் தோறும் வந்து சேர்ந்துக்கொண்டு இருக்கிறது என்று கண்டுபிடிக்க எல்லா பணபரிவத்தனைகள் எல்லாம் வங்கிகளின் வழியாக மட்டும் தான் நடத்த வேண்டும் என்று சட்ட திருத்தங்கள் முதல் தனி நபர் அடையாளங்கள் இல்லாமல் அவரவர் வங்கி கணக்கில் கூட பணத்தை எடுக்க முடியாது என்று மாற்றி அமைத்து முடித்துவிட்டோம் கள்ளப்பணம் கருப்புபணம் எல்லாம் இனி இல்லவே இல்லை என்று முழங்கியது பாசக.

ஒன்று இந்த கட்டு கட்டாக காட்டப்படும் பணம் யார் யார் வங்கி கணக்கில் இருந்து எட்டுத்தவை என்றும் சேர்த்து வெளியிட வேண்டியதுதானே. அதை எல்லா வெளியிடாமல், யார் யார் வீட்டில் எடுத்தோம் என்று மட்டும் சொல்வதை நீதிமன்றமும் கூட கேள்வி கேட்காமல் இருப்பதும் தான் பரிதாபமாக இருக்கிறது.

மோடி சொல்லட்டும் இந்த பணம் எல்லாம் எங்கு இருந்து வந்தது என்று. அப்படி சொல்ல முடியவில்லை என்றால் பொது மக்கள் பணம் எடுக்க இருக்கும் கட்டுப்பாட்டை அப்படியே நீக்க வேண்டும்.

Friday, April 5, 2019

மோடியின் சாதணை பட்டியல்

1) இராணுவத் துறையில் இருக்கும் இரபேல் ஒப்பந்தம் காணாமல் போனதாக உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது

2) மல்லையாவில் துவங்கி மோடிகள் வரை 52 பெட்டிகள் முதல் 150 பெட்டிகளில் பணம் நகை தங்கம் மற்றும் சேமிப்பு பத்திரங்கள் என்று எந்த விமான நிலையத்தில் சாமானியன் சென்ட்டு பாட்டி கூட கொண்டு போக முடியாது என்று துணை இராணுவத்தினரை வைத்து விரட்டியடிப்பார்களோ அதே துணை இராணுவத்தின் உதவியுடன் அத்தனை பணம் செல்வங்களை அழகாக வழியனுப்பி வைத்தது.

3) ஆட்சியில் இருந்த 5 வருடமும் ஆண்டுக்கு 7.5 இலட்சம் கோடி ரூபாய் என 35.25 இலட்சம் கோடி ரூபாய்க்களை கார்பரேட்டு நிறுவனங்களின் கள்ளப்பணமாக மாற்றி கொடுத்து சாதணை புரிந்தது.

4) மேலே செலவழித்த ரூபாய்க்களை கணக்கு காட்ட ஏழைபாழைகளின் சில நூறு ரூபாய்கள் கூட வங்கியில் வந்து விழவேண்டும் இல்லை என்றால் சிறை பணம் பறிப்பு என்று எல்லாம் பயமுறுத்தி. கடைசியில் வங்கியில் உள்ள பணத்தில் குறைந்த அளவு பண வைத்திருப்பு அளவுக்கு இல்லை என்று ஏழைபாழைகளின் சொற்ப்பணத்தை சுரண்டி அந்த பணக்கார கார்பரேட்டுகளுக்கு கள்ள பணமாக 35.25 இலட்சம் கோடி ரூபாய் ஊழல் புரிந்துள்ளார் மோடி.

5) மோடி முதல்வராக இருந்த வரையில் கொள்ளை அடித்த பணம் மற்றும் பிரதமாராக அம்பாணிக்கும் அதாணிக்கும் வேலை பார்த்தற்கான கூலியை வெற்றிகரமாக மல்லையா மோடிகளின் வழியாக வெளி நாட்டில் பதுக்கியது. அதனால் தான் அவர்களை பற்றிய எந்த ஒரு கேள்விக்கும் இந்திய வெளியுரவு துறை இது வரையில் எந்த பதிலும் கொடுக்கவில்லை இங்கிலாந்திற்கு

6) சீனாவின் கட்டளைக்கு இணங்க அடி பணிய இந்த இராணுவ படைக்கு வாங்க இருந்த 126 போர் விமானங்களை வெறும் 36 ஆக குறைத்தது.

7) வெளி நாடுகளுக்கு இந்தியாவின் பெட்ரோல் ரூ 32க்கு ஏற்றுமதி செய்துவிட்டு இந்தியர்களுக்கு ரூ 80 என்று இந்த 5 ஆண்டுகளாக விற்று சந்தையில் இருக்கிற சாதாரண மக்களின் விலை பொருட்களை பலமடங்கு விலைக்கு வாங்க வைத்து மறைமுகமாக கார்பரேட்டு நிறுவனங்களை சட்ட ரீதியாக கொள்ளையடிக்க வைத்தது.

8) பாசக உருப்பிணர்கள் தவிர மற்ற அனைவரும் ஒரு பதட்டத்திலேயே இருக்கும் படி பார்த்துக்கொண்டுதது.

9) பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று சொல்லிக்கொண்டு தனதும் தனது சகாக்களிடம் இருக்கும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி கொடுத்தது. சமீபத்தில் பாசகவின் கூட்டணி கட்சியான அதிமுக தன்னிடம் வைத்து இருந்த கருப்பு பணத்தில் 3.5 இலட்சம் கோடிக்கு வைரம் வாங்கி வைத்து விட்டு இப்போது விற்று பணமாக மாற்றி இருப்பது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

10) வட மாநிலங்களில் ஒருவரும் இரயிலில் பயண சீட்டு எடுப்பது இல்லை எவ்வளவு தூர பயணமாக இருந்தாலும். வட மாநிலங்களுக்கு இரயிலில் பயணித்தவர்களுக்கு தெரியும். அப்படி வட மாநிலங்களுக்கும் சேர்த்து தான் தென் மாநிலங்களில் கட்டணம் மற்றும் தண்ட தொகைகள் பயன்படுத்தபடுகிறது. அதே போல் இப்போது தென் மாநிலங்களின் கல்வி நிறுவனங்களையும் சட்ட ரீதியா கைப்பற்றியது நீட் தேர்வை வைத்து.

11)  நிதி ஆயோக் என்ற பெயரில் மாநிலங்களுக்கு வருடா வருடம் வழங்கப்படும் நிதியை நிறுத்தி செலவு செய்த பணத்தின் கணக்கை கொடுத்தால் மட்டும் பணம் என்று பொய் சொல்லி பாசக ஆளாத மா நிலங்களுக்கு கொடுக்கும் பணத்தை ஏமாற்றியது மட்டும் இல்லை. தான் என்ன என்ன திட்டம் எல்லாம் சொல்கிறேனோ அவைகளுக்கு மட்டும் தான் பணம் மற்றவைகளுக்கு இல்லை என்று மிரட்டியது. இதனால் தான் பழனிசாமி 8 வழி சாலையை போட்டே ஆவேன் என்று நின்றதும் , ஒக்கி மற்றும் கசா புயலுக்கு மோடி அரசு பணம் கொடுக்கவில்லை என்று சொன்னதும்.

12) GST என்ற பெயரில் மாநிலங்களின் வரிப்பணத்தை நேரே பெற்று மாநிலங்களை மோடியிடம் நிதி ஆயோக்கிடம் கையேந்த வைத்தது.

13) வருடத்திற்கு 2 கோடி புதிய வேலை வாய்புகளை உருவாக்குவேன் என்று 2014 தேர்தல் அறிக்கையில் சொன்னது மட்டும் இல்லாமல் அப்படி செய்யாத காங்கிரசை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று முழங்கிவிட்டு, இந்த 5 ஆண்டுகளில் நீங்கள் உருவாக்கிய புதிய வேலை வாய்புகள் எங்கே என்று கேட்க போய் பக்கோடா போட்டு விற்பது, மாடு வளர்த்து பால் விற்பது என்று செய்யுங்கள் என்று மிகவும் திமிராகவும் நக்கலாகவும் படித்தவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் பார்த்து பரிகாசித்தது.

14) சாமானியன் ஒரு வாரத்தில் 2000 ரூபாய்க்கு மேல் தனது கணக்கில் இருந்து எடுக்க முடியாது என்று விரட்டி அடிக்கப்பட்டு அதே நேரம் தமிழக்த்தில் இராதாகிருட்ணன் நகர் தேர்தலில் கொடுக்க ரூ 90 கோடி புதிய 2000 ரூபாய் தாட்கள் பிடிக்கப்பட்டதாகவும் அதனால் தேர்தலை நிறுத்துவதாகவும் தேர்தல் அணையம் மூலம் வாக்குமூலம் கொடுத்தது.

15) பன்னீர் செல்வத்தின் பினாமி வீட்டில் 210 கிலோ தங்கள் 200 கோடி ரூபாய்க்கு புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை கைப்பற்றியது அதே நாட்களில் நடந்தவைகள்.

16) கோவா, கர்னாடகா என்று ஆளுனர்களின் துணையுடன் புறவாசலின் வழியில் ஆட்சியை அமைத்தது. இதே போல் வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியை பிடித்ததும். ஏன் இப்படி கொஞ்சம் கூட நேர்மை இல்லாமல் நடக்கிறீர்கள் என்று கேட்டதற்கு நாங்கள் தர்மத்தின் படி நடக்கிறோம் என்று நக்கலாக பதில் சொன்னது.

17) கடலை மிட்டாய்க்கு 20% GST வரி என்றும் வெளி நாட்டு நிறுவனங்களின் பீட்சாவுக்கு 4% GST வரி என்று நக்கலாக நடுத்தர மற்றும் ஏழை மக்களை பார்த்து பரிகாசமாக நடத்தி காட்டிக்கொண்டு இருப்பதும். ஏன் இப்படி மனசாட்சியே இல்லாமல் என்றால் அப்படி தான் செய்வோம் உங்களால் முடிந்தை பார்த்துக்கொள்ளுங்கள் என்று நிர்மலாவை வைத்து சொல்ல சொன்னது.

18) இது வரை மோடி சென்ற நாடுகளில் இருந்து ஒரே ஒரு முதலீடைக்கூட இந்தியாவுக்கு கொண்டு வராமல் கடைசியில் மேக் இன் இந்தியா என்று புழுகிவிட்டு பட்டேல் சிலையை செய்ய சொல்லி சீனாவிற்கு 3000 கோடி மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்தது.

19) உலகம் முழுவதும் மற்று எரி சக்திக்கு மாற வேண்டும் என்று தீவிரமாக உழைத்துக்கொண்டு இருக்கும் வேளையில் இந்தியாவில் மட்டும் இன்றளவும் வெறும் டீசல் மற்றும் பெட்ரோலில் ஓடும் வண்டிகளை மட்டும் வைத்து இயக்குவதும் மேலும் அந்த நடவடிக்கை பற்றி எந்த ஒரு வார்த்தையும் இது வரையில் பேசாமல் இருப்பது மட்டும் அல்ல வேறு யாரும் பேசாதது போல் பார்த்துக்கொண்டதும்.

20) மோடி செய்த இரபேல் ஒப்பந்தத்தை பார்த்து உலகமே சிரிக்கும் படியாக மாற்றி இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றியது.

21)  HAL நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்று மைய அரசு கொடுக்க வேண்டிய பாக்கியை கொடுக்கவும் என்று கேட்க வைத்த பெருமையும், இந்த நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை இன்னும் ஒரு செங்கல் கூட தரையில் பதிக்காத சியோ நிறுவனத்திற்கு பிடுங்கி கொடுத்த பெருமையும் மோடியையே சாரும்.

22)  BSNL நிறுவனம் வரலாறிலே முதல் முறையாக சம்பளம் போடாமல் தள்ளிப்போட்டது இந்த ஆண்டு தான் மோடியின் ஆட்சியில் தான் நடந்தது.

23) 2014 முதல் 2019 வரை தனியார் வேலைகள் குறைக்கப்பட்டு ஆட்குறைப்பு நீண்டு கொண்டே போனது ஒழிய புதிய வேலை வாய்ப்புக்கள் வரவே இல்லை.

24) கிரிச்சா வைதியனாதனையும் பழனிசாமி மற்றும் பன்வாரிலாலையும் வைத்துக்கொண்டு தமிழக அரசு வேலைகளில் 90% மக்களை பீகார் மற்றும் இந்தி மட்டுமே பேசும் மக்களை தமிழில் பரீச்சை எழுத வைத்து 100க்கு 360 மதிப்பெண்கள் வாங்க வைத்து சென்னையிலும் தென்னக இரயில்வேயிலும் வேலையில் அமர்த்தியது.

25) பான் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் அட்டை, ரேசன் அட்டை என்று பல அட்டைகளை எதற்கு எடுத்தாலும் கொண்டு வந்து காட்டனும் இல்லை என்றால் இல்லை என்று சாக்கு போக்குகள் காட்டியது ம். பின்னாளில் ஆதார் அட்டையுடன் இதை இணை அதை இணை என்று மக்களை வதைத்ததும். அரசு செய்ய வேண்டிய இந்த காரியத்தை படிப்பறிவு இல்லாத மக்களை அலையவிட்டு பணம் செலவழிக்க வைத்த அறிவாளி இவர்.

26)  நாட்டில் நல்லது எது நடந்தாலும் அதற்கு காரணம் நான் தான் என்று கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாம் சொன்ன அற்ப மனிதர் இவர். எந்த கெட்டவை நடந்தால் மட்டும் அதற்கு காரணம் காங்கிரசு என்றும் சொன்ன முதல் அற்பர் இவராவார்.

27) மோடி செல்லும் வெளிநாடுகளில் எப்படி எல்லாம் அற்பமாக பேச முடியுமோ அப்படி எல்லாம் அற்பமாக பேசிய அற்ப மனிதர் இந்த மோடி. இதே இந்துத்துவா வழிகளில் வந்த விவேகாணந்தர் தான் அமெரிக்காவில் சென்று சகோதர சகோதரிகளே என்ற வரலாற்று உரை நிகழ்த்திய இயக்கத்தின் அற்ப மனிதராம் இவர் வெளிநாடுகளில் சென்று தான் பதவிக்கு வந்த பிறகு தான் இந்தியர்கள் உடையணியவே கற்றுகொண்டார்கள் என்ற அளவிற்கு துடுக்கு தனமாகவும் பொறுப்பற்ற விதமாகவும் பேசிய சாதணையாளர்.

 28) 2016ல் வெறும் 50 நாட்கள் தான் கேட்கிறேன் அப்படி 50 நாட்களில் எல்லாம் சரியாகா விட்டால் என்னை உயிருடன் எரியுங்கள் என்று சொல்லிவிட்டு, இன்றும் சரி செய்ய முடியாத பொருளாதார வீழ்சியாக மாறிய பின்ப்பும் எந்த வித கூச்சமும் இல்லாமல் மக்களிடம் ஓட்டு கேட்க அரிதாரம் பூசி அடவுகட்டி ஆடுகிறார் மேடைகளில்.

29) மோடி ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு தான் படிக்கிறார் அதையே தமிழில் எச்ச இராசா மொழி பெயர்த்து எழுதி வைத்துக்கொண்டு தான் படிக்கிறார். பேசாமல் இந்த இரண்டையும் செய்தி தாளுக்கு கொடுத்துவிட்டால் வேண்டியவர்கள் படித்துகொள்வார்கள். அதை விடுத்து என்னவோ மோடி அவரது பேச்சுகளை முழுதும் மனப்பாடமாக பேசுவது போல் prompter களை வைத்துகொண்டு நடிப்பான் ஏன்

30) மோடியின் வரலாற்று குறிப்புகள் எதுவாக இருந்தாலும் தப்பும் தவறுமாகவே பேசி சாதணை படைத்த ஒரே மனிதர்

Wednesday, April 3, 2019

மோடிக்கு மேடைகளில் பேச ஒரு செய்தி கிடைத்தது - ஐயோ பாவம்

காங்கிரசு தேர்தல் அறிக்கையை வெளியிட்டாலும் வெளியிட்டாங்க, நேற்றில் இருந்து மோடி காங்கிரசின் தேர்தல் அறிக்கை பொய் புரட்டு புழுகு மூட்டை என்று வாய்க்கு வந்த படி எல்லாம் உளர ஆரம்பித்துள்ளார்.

தேர்தல் அறிவித்த இத்தனை நாளும் என்ன சொல்வது மேடைகளில் என்றி விக்கி தவித்தவருக்கு இப்போ இப்படி ஒரு கேவலமான உத்தி கிடைச்சு இருக்கு பாவம்.

முதன் முறையா நாட்டை ஆண்ட மனிதர் எப்படி பிச்சைகாரதனமா ஓட்டு கேட்க்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார் பாவம்.

தான் அதை செய்தே இதை செய்தேன் இனி இவைகளை செய்வேன் என்று சொல்லி வாக்கு கேட்க வக்கில்லாமல் அவன் பொய் சொல்கிறான் அதனால் எனக்கு ஓட்டு போடு என்று கேட்க்கும் கேவலமான நிலைக்கு வந்துவிட்டது பாசகவும் அதன் மோடியும்.

எனக்கு தெரிந்து பாசகவின் தேர்தல் அறிக்கையும் அதன் சாதணை அறிவிப்புகளும் தான் டுபாகூராக தெரிகின்றது. எங்கே தன்னை சொல்லிவிடுவார்களோ என்று முந்திக்கொண்டு சொல்கிறார்கள் போலும்.

தொகா விவாதங்களில் மக்கள் சற்று நக்கலாகவே கேட்கிறார்கள் உங்களின் வாக்குறுதிகளும் அதிக் என்ன நிறைவேற்றி இருக்கிறீர்கள் என்று. அதற்கு கொஞ்சம் கூட கூச்சப்படாமல் எல்லாவற்றையும் நிறைவேற்றியாச்சு என்று புழுகுகிறார்கள். உடனே காசுமீரத்தில் ஆயுத படையின் சிறப்பு அதிகாரம் பறிக்கப்படும் என்று 2014ல் சொன்னீங்களே அதை நிறை வேற்றுவதா காங்கிரசு இப்போ தேர்தல் அறிக்கை விட்டு இருக்கேன்னு கேட்க்க அந்த பாசக நபரின் முகம் போன போக்கை பார்கனுமே.....

Friday, March 29, 2019

தமிழிசை மோடி முடிந்தால் உண்மையை பேசவும் - பாசக

இப்போது என்று இல்லை இனி எப்பொழுதுமே மோடியாலோ இல்லை தமிழிசையாலோ உண்மையை பேசவே முடியாது. ஏதாவது சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். ஒன்றுமே இல்லாத போது. எதிர்கட்சிகளை பார்த்து பொய் சொல்கிறார்கள் என்று புழுக வேண்டியது தான். வேற என்ன செய்ய......

செளபாக்கியவதி மோடி சுட்ட 300 பேருடைய உடல் எங்கே

அமெரிக்காவுக்கு தெரிந்து தனது மக்களை இந்தியா போகாதே என்று சொன்ன பிறகு கூட 45 மக்களை 300 கிலோ குண்டு வைத்து கொன்றுவிட்டு பாக் வெடித்தது என்று புழுகுவதேனோ...

இராணுவகட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு சாலையில் அணாயசமாக 300 கிலோ வெடிகுண்டு ஒரே வண்டியில் வந்தது எப்படி

இந்தியா சுட்டதாக சொல்லும் அந்த பாக்கின் 2 விமானங்கள் எங்கே

15 இலட்ச ரூபாய் பணம் கொடுப்பதாக சொன்னீர்களே அந்த பணம் எங்கே

300க்கு விற்ற எரிவாயு இப்போது 1000க்கு விற்கிறதே காரணம் என்ன

உலகம் பூரா பெட்ரோல் கம்மியான விலையில் விற்க இந்தியாவில் மட்டும் ஏன் இவ்வளவு விலை

சரசுவதி நதியை தேட 10,0000 கோடி பணத்தை இறைத்தவரே மக்களுக்கு வேண்டிய எரிவாயுக்கு மானியமாக அதை கொடுக்காமல் விட்டது ஏன்

விவசாயிகளின் கடனுக்கு அவர்களது வீட்டையும் மாட்டையும் பிடுங்கும் வங்கி மோடி திருடி கொண்டு சென்றபணத்திற்கு என்ன செய்தது

நாங்க எதுக்கு எங்க பணத்தை எல்லாம் வங்கியில் வைக்க வேண்டும் மினிமம் பேலன்சு இல்லை என்று தண்டமாக 200, 300, 500 அழவேண்டும்.

திருடிக்கொண்டு ஓடிய மோடியின் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டதா, அப்படி இணைக்கப்பட்டிருப்பின் எப்படி திருடிக்கொண்டு ஓடினார். பிறகு எதுக்கு எங்களுக்கு இணைக்கவில்லை என்றால் பணம் எடுக்க முடியாது என்று சொல்லி அலைகழித்தீர்.

நம்ம விவசாயிகளுக்கு கொடுக்க பணம் இல்லை என்று சொன்னீர் பிறகு எதுக்கு சோமாலியாவுக்கு அள்ளி அள்ளி கொட்டினீர்.

இந்தியாவின் உண்மையான வளர்ச்சி 2016க்கு பிறகு 2019 வரை எவ்வளவு

இரபேல் விமானம் வாங்குவதை சீனா மிரட்டலுக்கு பயந்து தானே குறைத்தீர்கள். இந்தியாவை சீனாவிற்கு காட்டி கொடுத்தவர் தானே நீர்.

ஏன் உங்களது மந்திரி சபையில் எப்போதும் நீங்களும் நிர்மலா மட்டுமே பேசுகிறீர்கள் இல்லை இராணி பேசுகிறார் மற்றவர்களுக்கு எல்லாம் பேசவே தெரியாதா இல்லை அவர்கள் எல்லாம் பொம்மை அமைச்சர்களா....

எந்த கேள்விகளுக்கு மோடியோ அல்லது தமிழிசையோ பதில் அளிப்பதே இல்லையே ஏன்........

2019ல் எப்படியாது வாக்கு இயந்திரத்தின் உதவியுடம் வெற்றி பெற்றுவிடலாம் என்று தானே இன்னனும் தைரியமாக புழுகிக்கொண்டு இருக்கிறீர்கள்.

பதில் சொல்லுங்க மக்கா பதில் சொல்லுங்க.......

Tuesday, March 26, 2019

உங்கள் மகன் மகள் மருத்துவம் படிக்க வைக்க மோடிக்கு வாக்களியுங்கள்

உங்கள் மகன் மகள் மருத்துவம் படிக்க வைக்க மோடிக்கு வாக்களியுங்கள், மகன் மகள் மட்டும் இல்லை பேரன் பேத்திகளும் அவர்களது வாரிசுகளும் மருத்துவம் படிக்க வைக்க நீங்கள் மோடிக்கும் பாசக அரசுக்கும் தான் வாக்களிக்க வேண்டும்.

நீட் பரீட்சை இல்லாததால் தரமான மருத்துவர்கள் உருவானதை தொடர்ந்து மத்திய அரசு பாட திட்டம் தவிர மா நில அரசு பாடதிட்டத்து மாணவர்கள் எல்லாம் தரமில்லாத மருத்துவராக ஆகுவதை தடுத்து உலகிற்கு தகுதியான மருத்துவர்களை உருவாக்கிய மோடியும் அவரது பாசக அரசுக்கும் அதற்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கிய அதிமுக கூட்டணிக்கு தான் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

Saturday, March 23, 2019

தமிழகமே ஒரே ஒரு பாமக போதும் - சீமான்

தேர்தல் பரப்புரைகளில் தற்பொழுது அசத்துவது சீமானின் அரசியல் பேச்சுகள் தான்.

சீமானின் பேச்சும் சரி சமீபமகாக அவரது கட்சி சார்பாக வரும் அரசியல் விளம்பரங்களும் சரி அசத்தல் என்றால் அப்படி ஒரு அசத்தல்.

தான் ஆட்சி பொருப்புக்கு வந்தால் என்ன என்ன எல்லாம் செய்வோம் என்று மிகவும் அழகாகவும் வரிசையாகவும் விவரிப்பதில் அவருக்கு நிகர் அவரே.

இப்படி தான் பாட்டாளி மக்களுக்காக உழைக்க என்னக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கள் என்று கேட்டும் அதை வைத்துக்கொண்டு நீதி கேட்பேன் என்றும். உழைக்கும் மக்களை யாரும் கண்டுக்கொள்ளவே இல்லை தான் தான் உழைக்கும் மக்களின் ஏக போக பிரதிநிதி போல அல்லவா பேசினார்கள். மக்களும் பாமகவை நம்பி வாக்கும் அளித்தது. ஆனால பாமகவோ அந்த வாக்குகளை வைத்து நல்லா கல்லா கட்டியது தான் மிச்சம்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு பக்கம் செல்வதும் கடைசியில் தான் செல்லும் பக்கம் தான் வெற்றி என்றும் சொல்லும் அளவுக்கு சென்னது பாமக.

இந்த நிலையில் கைவிடப்பட்டு அரசியல் அனாதையாக ஆக்கப்பட்ட பாமக மாற்றம் முன்னேற்றம் மாங்கா மணி என்று இப்பொழுது பல் இளித்துக்கொண்டு ஏன் இப்படி தரைகுறைவான வேலை என்று கேட்டால் 8 வருடம் நேர்மையாக இருந்தோம் ஆனால் யாரும் கண்டுக்கவில்லை அதனால் தான் இப்போது திருட ஆரம்பித்தோம் என்று இப்போது மேடைக்கு மேடை முழங்குகிறார்கள்.

இதே பாதையில் இப்போது சீமான், மறைமுகமாக பாசகை ஆதரிப்பதும் மேடைக்காக கொள்கை பேசுவதும் சீமானுக்கு கைவந்த கலை.

இதே சீமான் முன்பு இலங்கை பிரச்சனை என்று அதிமுகவையும் பாசகவையும் ஆதரித்தவர். ஒரு காலத்தில் தன்னை பகுத்தறிவாளி என்று சொல்லிக்கொண்டவர் பிற்காலத்தில் மோடி சொன்ன அதே வாசகம், 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழகம் கண்டது என்ன என்று அருமையாக கேட்டார், பிறகு அதே தேர்தலில் கடலூரில் அரசியல் அனாதையாக்கப்பட்டார்.

இன்று மறுபடியும் மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் குட்டையை குழப்பும் வேலையில் இறங்கி இருக்கிறார். அழகாக பேசுவார் மேடையில் தொடர் வசனம் பேசுவார் நல்ல கொள்கைகளை வைத்து இருப்பதாக சொல்வார். ஆனால அவரது வரலாறு எங்கே வாய்பு வருகிறதோ அங்கே தாவுவது தான் அவரது இயல்பு. இப்படி தனக்கும் சரி இயகத்துக்கும் சரி எந்த கொள்கையும் இல்லாத கட்சியும் தலைவர்களும் மற்றும் ஒரு பாமகவிற்கு சமம். ஆகவே இன்னும் ஒரு பாமகவை உருவாக உதவாதீர்கள் வாக்காள மக்களே..........

இப்படி சீமான் சொல்வது போல் 2014ல் மோடி மேடைக்கு மேடை முழங்கினார், மக்களும் நம்பி அவரிடம் ஆட்சியை கொடுத்தார்கள். பிறகு தான் தெரிகின்றது மோடி வெரும் வசனம் மட்டுமே பேசும் நடிகர் மட்டும் தான் மற்றபடி தலைவர் எல்லாம் ஒன்றும் இல்லை என்று. சீமானை நம்பி தமிழகத்தை நாசம் செய்துவிடாதீர்கள் மக்களே எச்சரிக்கை......

Friday, March 22, 2019

பொள்ளாச்சி சம்பவத்தை இவர் விசாரித்து இருந்தால் இந்நேரம் தீர்பே வந்து இருக்கும்

செளபாக்கியவதி மோடியின் அரசின் கீழ் நியமிக்கப்பட்டவர்கள் மிகவும் ஞாயமானவர்கள் என்றும். அவர்களால் மட்டும் தான் நீதியையும் ஞாயத்தையும் கட்டிக்காக்க முடியும் என்றும் பரவலாக எப்போதும் பேசப்படுவது உண்டு.

அப்படி செளபாக்கியவதி மோடியின் தலைமையில் இயங்கும் இயக்கமாக இருந்தாலும் சரி இல்லை ஒரு சாதாரண தொண்டனாக இருந்தாலும் சரி, நாட்டின் நலனையும் நாட்டின் எதிர்காலத்தையும் மட்டுமே மனதில் கொண்டு எந்த வித விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்காமல் மக்களை காக்கும் பணியாக மட்டும் கொண்டு கடமையாற்றும் யாரானாலும் சரியானதொரு விசாரணையை நடத்த கூடியவர்கள் என்றும் நம்பப்படுகின்றது.

வடக்கே நடந்த சொராபுதின் வழக்கு முதல் கடைசியாக தூத்துகுடி ஆலையை திறக்கலாம் என்ற தீர்ப்பு வரை மிகவும் ஞாயமாக அழகாகவும் ஆழமாகவும் விசாரித்து வழங்கப்பட்டவைகளாகும்.

அப்படி பட்ட ஒரு அமைப்பையோ அல்லது விசாரணை குழுவிடனோ விசாரிக்க கொடுத்து இருக்கலாம். அதை விடுத்து தமிழகத்தின் சிபிசிஐடி கையில் இந்த பொள்ளாச்சி வழக்கு ஏன் கொடுப்பான் ஏன்.

இதற்கு முன்னால் செளபாக்கியவதி மோடி அவர்களின் நேரடி பார்வையில் பணியாற்றும் பன்வாரிலால் வெறும் 6 மணி நேரத்தில் குற்றவாளி யார் என்று கண்டு பிடித்து நீதி வழங்கியது அனைவருக்கும் நினைவில் இருக்கும் என்று நம்புகின்றேன்.

அந்த மாமனிதன் பன்வாரிலால்லிடம் இந்த பொள்ளாச்சி வழக்கை விசாரிக்கும் பொருப்பை கொடுத்து இருந்தால் இன்னேரம் அந்த குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்திருப்பார்கள். 21 மாதமாக பிணையில் கூட வெளி வர முடியாத அளவிற்கு கவணிப்பு அற்புதமாக இருந்து இருக்கும். தமிழகம் தவறு செய்துவிட்டதே என் செய்ய.......

Thursday, March 21, 2019

என்ன பிரதமர் மோடிக்கு திருமணமா - யாரும் சொல்லவே இல்லை

செய்தியை கேட்டது என்னக்கும் தான் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை, கிட்ட தட்ட எல்லா செய்தி ஊடகங்களிலும் தேடித்தான் பார்த்தேன் ஆதாரம் கிடைக்காமல் பேசக்கூடாதே என்று.

அதுவும் தேர்தல் காலமான இந்த நாட்களில் இப்படி மோடிக்கு திருமணம் என்று செய்திதள் வந்தால் அவை தேர்தலில் பாதிப்புகளை ஏற்படுத்தாதா என்ற சிந்தைகளும் இல்லாமலா மோடி இப்படி எல்லாம் செய்து இருப்பார் என்ற கவலையும் இருக்க தான் செய்தது.

அப்படி மோடிக்கு திருமணம் நடந்தால் டெல்லியில் நடக்குமா இல்லை குசராத்தில் நடக்குமா என்ற சந்தேகமும் வந்து போகாமல் இல்லை.

ஒரு வேளை ஒரு முறையாவது பிரதமாரானால் தான் திருமணம் செய்துகொள்வது என்ற தீர்மானத்தில் இருந்திருப்பார் போலும் மோடி. அதனால் தான் மோடியின் திருமணம் பற்றிய எந்த செய்திகளுக்கும் இது வரை மோடி எந்த பதிலும் அளிக்கவில்லை போலும்.

மோடி திருமணம் செய்துக்கொள்ள போகும் அந்த பெண் யாராக இருக்கும், ஒரு அரசியவாதியாக இருப்ப்பாரோ, இல்லை ஒரு தொழிலதிபராக இருப்பாரோ, இல்லை வெளி நாட்டில் வாழும் அவரது இரசிகையாக கூட இருக்கலாம். யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் பொங்க நானும் ஆர்வமாக இரவும் பகலுமாக இணையதிலும் தெரிந்த மக்களிடமும் கேட்டுக்கொண்டும் இருக்கிறேன்....

ஒருவருக்கும் தெரியவில்லை, ஆனால் அன்றாடம் செய்திகளை வெளியிடும் போது மட்டும் மோடியின் பெயரை செள்பாக்கியவதி மோடி என்று தான் குறிப்பிடுகிறார்கள். சுருக்கமாக இனிமேல் செள மோடி என்று மட்டும் தான் குறிப்பிடுவார்கள்.

பொதுவாக திருமண பத்ரிக்கையில் குறிப்பிடும் போது தான் செளபாக்கியவது மோடி என்று குறிப்பிடுவார்கள். ஆனால் மோடியை மட்டும் செய்திதாள்களில் கூட செளபாக்கியவதி என்று குறிப்பிடுவது ஏன் என்று தான் விளங்கவில்லை. தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.........

Tuesday, March 19, 2019

என்னுடைய ஓட்டு மோடிக்கு தான் - ஏன் - 2

1994ல் இருந்து பொறியியல் எந்த படிப்பு படித்தாலும் வேலை கிடைத்துக்கொண்டு இருந்தது 2015 வரை. 2015க்கு பிறகு மெல்ல மெல்ல உலக அளவில் வேலை கிடைக்காமல் போக இந்தியாவிலும் யாருக்கும் வேலை கிடைக்காமல் போக துவங்கியது. 2014ல் மோடி தேர்ந்து எடுத்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு புதிய வேலை வாய்புகளை உருவாக்கி தருவேன் என் என்று உறுதி அளித்தார் மோடி. ஆனால் 2014 முதல் 2019 மார்ச்சு மாதம் வரை அவரால் அந்த ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்புகளை உருவாக்கவே முடியவில்லை. -- அந்த ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலைவாய்புகளை உருவாக்க மோட்டிக்கு இன்னும் ஒரு வாய்ப்பை கொடுக்க எனது ஓட்டு மோடிக்கு தான்.

2014ல் மோடி பிரதமரானால் வெளி நாட்டில் இருக்கும் கருப்பு பணம் எல்லாம் கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் 15 இலட்சம் ரூபாய் கொடுப்பேன் என்று உறுதி மொழி கொடுத்தார். ஆனால் 2019ல் காபந்து அரசாக மாறும் வரை மோடிக்கு அந்த 15 இலட்சம் ரூபாய் கொடுக்கும் வாய்ப்பை நிதி அமைச்சகமும் முந்தைய காங்கிரசு அரசும் சேர்ந்து கிடைக்கவிடாமல் சதி செய்ததுனால். -- மோடிக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் தான் அவர் சொன்னது போல் வீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பணம் மோடியால் மட்டுமே கொடுக்க முடியும் ஆகையால் என்னுடைய ஓட்டு மோடிக்கு தான்.

2016 நவம்பர் 8ம் தேதி முதல் 2019 இது வரை எனது பணி இடங்களில் ஐயா நான் வங்கியில் பணம் எடுக்க போகவேண்டும் நீண்ட வரிசையில் நிற்கவேண்டும் ஆகையால் என்னால் இன்று வேலைக்கு வர முடியாது என்று சொன்னால், எங்களது வேலை அலுவலகளில் விடுப்பு கடிதம் வாங்காமலும், விடுப்பை எனது கணக்கில் இருந்து கழிக்காமலும் இலவசமாக விடுப்பு கொடுப்பதனால் மோடிக்கு தான் எனது ஓட்டு.

காந்தி ஒரு கொடூரமான மனிதன் அந்த கொடூர மனிதனை கொன்ற கோட்சே எவ்வளவு நல்லவர் என்றது எனக்கு இது வரை தவறாக சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது சிறு வயதில் இருந்து. அந்த தவறை சரி செய்தது மோடி. அந்த மா மனிதன் கோட்சேவுக்கு பட்டேல் சிலையை விட அதிக செலவில் சிலையை செய்து இந்த உண்மையை உலக்கு அறிவிக்க மோடிக்கு மறுபடியும் ஒரு வாய்பை வழங்க வேண்டும் அதனால் என்னுடைய ஓட்டு மோடிக்கு தான்.

2019ல் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்திய ரூபாய் நோட்டுகளில் உத்தமராம் உலகை காக்க பிறந்து கொடூரன் காந்தியை கடைமையாக கருதி கொலை செய்த கோமனாம் கோட்சேவின் படம் பதிக்க மோடி தான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் ஆகையால் எனது ஓட்டு மோடிக்கு தான்.

4 எழுத்துகளை படித்துவிட்டோம் என்ற திமிரில் கௌரி லங்கேசு போன்றோர்கள் இந்தியாவின் இந்து ஆட்சி அமைவதை எதிர்த்து குரல்கொடுத்து வந்தார்கள். இந்தியாவில் இந்து ஆட்சியை கொண்டு வந்து இந்துகள் தவர மற்றை அனைவரையும் கூண்டோடு பரலோகம் அனுப்ப மோடியின் ஆட்சி வந்தால் தான் அது நடக்கும். ஆகவே என்னுடைய ஓட்டு மோடிக்கு தான்.

Monday, March 18, 2019

என்னுடைய ஓட்டு மோடிக்கு தான் - ஏன் - 1

2014க்கு முன் வரை மோடி வந்தால் மாற்றம் முன்னேற்றம் ஊழலை ஒலிப்பேன் என்ற முழக்கத்தில் வந்தார் -- ஆனால் அவர் சொன்ன ஒன்றையும் இன்னும் அவர் செய்து முடிக்கவில்லை அதலால் அவர் அவைகளை செய்து முடிக்கும் வரை கால அவகாசம் கொடுக்கும் பொருட்டு மீண்டும் ஒரு வாய்ப்பை மோடிக்கு கொடுக்க எனது ஓட்டு மோடிக்கு தான்.

2016 முதல் எனது வங்கி கணக்கில் இருந்து என்னால் நினைத்த போது எல்லாம் பணம் எடுக்க முடியாது ஆதலால் என்னுடைய செலவுகள் இந்த 2 ஆண்டுகளில் முக்கால் வாசிக்கும் முழுதுக்கும் குறைந்துள்ளது. ஆதலால் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான் இனி எந்த செலவுமே செய்யாமல் வருமானம் அனைத்துமே சேமிப்பாக மாற வாய்ப்பு அதிகம் இருப்பதால் மோடிக்கு தான் எனது ஓட்டு.

எவ்வளவு தான் படித்தாலும் இனி பக்கோடா போட்டு வித்து தான் காசு பாக்கனும் என்று ஆகி போச்சு ஆனா அது நமக்கு மோடி தொலைக்காட்சி பெட்டியில் சொல்லும் வரை தெரியவே இல்லை பாருங்கள் -- இப்படி போன்ற அழகாக வேலை வாய்புகள் பற்றிய செய்திகளை ஒரு பிரதமரே தொலைக்காட்சியில் இது வரை தெரிவித்தது இல்லை -- இந்த எளிமைக்காக எனது ஓட்டு மோடிக்கு தான்.

தமிழக மீனவர்கள் கொத்து கொத்தாக செத்துக்கொண்டு இருந்தாலும் இந்திய நாட்டில் எவருமே கண்டுகொள்வது இல்லை என்று இருந்த நமக்கு வெறும் 44 துணை இராணுவத்தினர் மீது நடந்த குண்டு தாக்குதலுக்காக பாக் மீது போர் தொடுத்த வீரர் மோடி - அதனால் என்னுடைய ஓட்டு மோடிக்கு தான்.

தமிழகத்தில் கதிராமங்கலம் தொட்டு தேனி மலை வரை குடைந்து நிலத்துக்கு அடியிலும் மலையிலும் இன்னும் என்ன என்ன வழிகளில் எல்லாம் இயற்கை வளங்களை எல்லாம் எடுத்து வெறும் இலட்ச கணக்கான கோடிகளுக்கு அதாணிக்கு கொடுத்துவிட்டு அதற்கு தமிழ் நாட்டுக்கு ஆயிரம் ரூபாய் நட்ட ஈடாக பெற்று தந்த வள்ளல் மோடி - அதற்காக எனது ஓட்டு மோடிக்கு தான்.

உச்ச நீதிமன்றத்தில் எப்படி நீதி உரைக்க வேண்டும், சிபிஐயில் எப்படி விசாரணை நடத்த வேண்டும் என்ற நெறிமுறைகளை சொல்லிக்கொடுத்து நீதிமன்றத்தையும் சிபிஐயையும் ஒரு உயர்ந்த உன்னதமான நிலைக்கு உயர்த்தி அகிலம் முழுதும் பாராட்டை பெற்ற பெருமகனாம் மோடி -- ஆதலால் என்னுடைய ஓட்டு மோடிக்கு தான்.

2014ல் இருந்து 2018 வரை ஏழை மகனான மோடிக்கு வெறும் 35 இலட்சத்தில் தினமும் உடுத்தும் உடையும், ஒரு வேளைக்கு வெறும் 10,000 ரூபாயில் காளானும் மட்டும் தான் கொடுக்கப்பட்டது. நாட்டுக்காக உரங்காமல் உழைக்கும் அந்த ஏழை மகனுக்கு இது எல்லாம் மிகவும் கொஞ்சம் -- ஆகையால் என்னுடைய ஓட்டு இந்த பரம ஏழையாக வாழும் அந்த ஏழை மோடிக்கு தான்.

Thursday, March 14, 2019

இளையராசா - என்ன கர்வம் மனிதனுக்கு

மனிதனுக்கு என்ன இருந்தாலும் இத்தனை கர்வம் கூடாது. ஊரில் அவரை பற்றி அனேகர் பேசுவதைப்போல் அவருக்கு இத்தனை கர்வம் கூடாது தான்.

எவ்வளவு கர்வம் இருந்தால் 70கள் 80கள் 90கள் 2000கள் அப்பால் 2010கள் என்று இசை அமைத்துக்கொண்டு இருப்பார் இந்த கர்வி.

ஏதோ ஒரு 10 ஆண்டுகள் இசையமைத்துவிட்டு போக வேண்டியது தானே, இல்லை போனால் போகிறது 20 ஆண்டுகள் என்று இருந்து விட்டு போகட்டுமே. எவ்வளவு திமிர் இருத்தால், தலைகனத்துடன் இத்தனை ஆண்டுகள் இசையமைக்க இவருக்கு.

சிவாச்சி கணேசன் முதல் 2011 அறிமுக நாயகர்கள் வரை இத்தனை விதமான நடிகர்களின் கதைகளுக்கு அடக்கமே இல்லாமல் எப்படி இவர் இசையக்கலாம்.

இத்தனை ஆண்டுகள் கடந்தாலும் தனக்கு என்று வகுந்து கொண்ட பாதையில் இருந்து வழுவாமல் எப்படி இன்னமும் பயணிக்கலாம் இந்த கர்வி. பல மாய இசை வடிவங்களும் இடி இசையும் வந்து அசத்திக்கொண்டு இருக்கும் இந்த காலத்திலும் எப்படி அவரது இசை மக்களின் மனம் கவரும் வண்ணம் அமையலாம். எத்தனை கர்வம் இருக்க வேண்டும் அவருக்கு.

பாட்டும் பாடின் நடையை கொண்ட கித்தார் தாளமும் அதற்கு என்ற மேள தாளமும் மட்டுமே போதும். பாட்டு இல்லாமல் இருக்கும் இடங்களில் இராக்கு கித்தாரையோ அல்லது வேறு வகையில் ஒரு அலரல் வாசிப்பு என்றாகி விட்ட இந்த காலகட்டத்திலும், காட்சியின் தன்மை பொருத்து அமைய மண்ணின் மணம் போகாமல் இந்திய/தமிழ் இசைப்புகளை உள்ளே புகுத்தி கொடுக்க என்ன கர்வம் இருக்க வேண்டும் இவருக்கு. சாதாரண வார்த்தைகளில் சொன்னால் ஊரே பீச்சா விற்கும் போது இவர் மட்டும் எப்படி முழு சாப்பாட்டை கொண்டு வந்து பரிமாற வேண்டும், கர்வம் தானே மனிதனுக்கு.

இந்த கர்விக்கு கிராமிய இசையும் கர்நாடக இசையும் என்று இருந்துவிட்டு போக வேண்டியது தானே. அதைவிடுத்து, மேற்கத்திய இசை இவருக்கு எதற்கு. கொஞ்சம் கூட அடக்கம் இல்லாமல் இந்திய இசையை மேற்கத்திய வாத்தியம் கொண்டு வாசிப்பதும், மேற்கத்திய தாளகட்டைக்குள் இந்திய இசையை இசைத்துக்காட்டுவதும். என்ன கர்வம் மனிதருக்கு.

இதோடு நிறுத்தினாரா மனிதர், இத்தாலி நாட்டு இசை கலைஞர்களை அழைத்து வந்து தமிழ்ப்பாட்டுக்கு இசை வாசிக்க வைத்துக்காட்டுகிறார் இந்த கர்வி. அவர்களும் என்னவோ இந்தியாவிற்கு போக ஒரு வாய்ப்பு வந்ததே என்று அலைபவர்கள் போலும் உடனே வந்து வாசித்துவிட்டு போகிறார்கள்.

காலத்தில் நிலைத்து நின்ற இயக்குனர்கள் முதல் சில பல படங்களிலே கானாமல் போன இயக்குனர்கள் வரை அனைவருக்கும் எந்த வஞ்சனையும் இல்லாமல் எப்படி ஒரே தரத்தில் இவர் இசையமைத்துக்கொடுக்கலாம். இதை திமிர் என்று சொல்லாமா அல்லது கர்வம் என்று சொல்லாமா. ஆளுக்கு தகுந்தார் போல் கொடுத்து இருக்கலாம், ஆனாலும் மனதுக்குள் வள்ளல் என்ற திமிரா அல்லது எவ்வளவு கொடுத்தாலும் என்னிடம் இருக்கும் இசை குறையாது என்ற கர்வமா.......

இந்தி படங்களுக்கு உங்களின் புது பாடல்கள் எல்லாம் ஒன்றும் வேண்டாம் பழையபாடலில் இருந்து எடுத்து புது பின்னணி இசையில் கொடுங்கள் என்று கேட்டால், முடியாது என்று சொல்ல வேண்டியது தானே. அவர் கேட்டாராம் இவரும் இசைந்து இசைத்தாரம். என்ன கர்வமையா உங்களுக்கு........

வானொலிகளில் இன்றைக்கு 24 மணி நேர சேவைகள் வந்த பிறகு, இரவுக்கு என்று பழையபாடல்கள் அடக்கமாக இருப்பதைபோல் இல்லாமல், இரவிலும், பகலிலும், புது பாடல்கள் என்று வரும் தொகுப்புகள் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் ஒலிக்கும் படியாக இசையமைத்து தள்ள இவருக்கு எத்தனை கர்வம் இருக்க வேண்டும்.

ஒரு வேளை இந்த கர்வி அந்த இனிமை 5000 என்று இத்தனை பாடல்கள் இசையமைக்காமல் விட்டு இருந்தால், மாலை நேரத்திலோ அல்லது இரவில் 10 முதல் 10:30 வரை என்று மட்டும் இவரது இசை ஒலித்துக்கொண்டு இருக்கும். இப்படியா செய்வார் கொஞ்சம் கூட அடக்கமே இல்லாமல்.

இந்த கர்வம் போதாது என்று 4 தேசிய விருதுகள் இவருக்கு என்ன கர்வம் இருக்கும் இந்த மனிதருக்கு. ஏதோ ஒன்று அல்லது இரண்டு என்று இருந்துவிட்டு போகவேண்டியது தானே. கர்வம் பிடித்தவர் 4கா வாங்க வேண்டும். மோசம் செய்த்துவிட்டார் மனிதர்.

சரி இந்த அட்டகாசங்களை தமிழோடு நிறுத்திக்கொள்ள வேண்டியது தானே. அதை விட்டு தென்னகத்து மொழிகள் அனைத்திலும் இதே அட்டகாசம். கொஞ்சமும் கூச்சம் இல்லாம், இத்த வீச்சு வீசி இருக்கிறார் இந்த கர்வம் பிடித்த மனிதர்.

தொலைகாட்சிகளில் திறமை காட்ட என்று நடக்கும் நிகழ்சிகளில் பழைய பாடலை பாடினால் ஒன்றும் பெரிதாக அங்கிகாரம் கிடைக்காது என்று ஆகியேவிட்டது. என்னமோ பழைய பாடல்கள் எல்லாம் எவர் வேண்டும் என்றாலும் சும்மா செறுமுவதை போல் பாடிவிடலாம். ஆனால் புதுபாடல்கள் தான் பாடுவதற்கு சிறமம் என்று போல் ஒரு பொது கருத்தை உருவாக்கியாச்சி. அதிக வாத்தியங்கள் இசை இல்லாமல் பாடலும் வார்த்தகளும் கொஞ்சு விளையாடும் அந்த பழையபாடல்கள் பாட திறமை கட்டாயம் வேண்டும். ஏனோ தானோ என்று எல்லாம் படிவிட முடியாது. அந்த பாடல்களில் வார்த்தைகளின் உச்சரிப்புகள் அவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் இனிமையாகவும் இருக்கும். அது சரி கேட்பவர்களுக்கே இந்த இடத்தில் னவா, ணவா, ழ வா, லாவா, இல்லை ளாவா என்று தெரியா நிலையில் "கன்னன் வந்து பாடிகிரான் காடல் சொன்னான்" என்றால் தெரியவா போகிறது. தமிழ் தானே, அதுவும் பழைய பாடல் தானே, அம்மாவை வீட்டில் கிண்டல் செய்வது போல் இருந்துவிட்டு போகட்டும் என்று இருந்துவிடுவார்கள் போலும்.

இருந்தாலும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் இசையமைத்த பாடல்களை அழகாக பாடி பரிசும் பெரும் மக்களை பார்க்கும் போது இவர் கொஞ்சம் கூட தன்னடக்கம் இல்லாமல் எப்படி எல்லாம் கர்வமாக இருத்து இருக்கிறார் என்று தெரிகிறது. இவ்வளவு கர்வம் கூடாது தான் இந்த மனிதருக்கு.

பாடல் துவங்கிய கனத்தில் இருந்து முடியும் வரை தண்ணீர் பள்ளத்தை நோக்கி ஓடுவது போல் ஒரு ஓட்டம். எங்கேயும் தேங்காமல் வடிந்து சொன்றாலும் மனதில் தேங்கி நிற்கிறதே என்ன மோசகார செயல் இது. பாட்டு நின்ற பிறகு, அல்லது கொஞ்ச நாட்கள் நகர்ந்த பிறகு அந்த பாடலை கேட்டால் மக்கள் உடனே மாற்றாமல் முடித்த பிறகு மாற்றுவது போல் ஏன் இசையமைக்க வேண்டும் இவர். அத்தனை ஒழுங்காக இசையமைத்தால் தான் இந்த கர்விக்கு பிடிக்குமா. ஏனோ தானோ என்று அடக்கமாக இசையமைக்காமல் படத்தில் எழுத்துக்கு போடும் பாடல் எல்லாம் வானொலியில் ஒலிபரப்பும் அளவிற்கு ஏன் இசையமைக்க வேண்டும்.

இதிலே கர்வம் கொள்கிறேன் என்ற நக்கல் பதில் வேறு அவருக்கு. என்ன கர்வமையா உங்களுக்கு.

இன்னமும் இந்த கர்வம் குறையாமல் அப்படியே இரும், இத்தனை பாடல்களையும் இசை வடிவங்களையும் இவ்வளவு கர்வமாய் கொடுத்ததை போல் இனிமேலும் அப்படியே கர்வமாக கொடும். அமைதி காக்கிறேன், அடக்கமாக வாசிக்கிறேன் என்று எல்லாம் துவங்க வேண்டாம். உனது கர்வ இசையே மீண்டும் மீண்டும் வரட்டும், வந்து எங்களை எல்லாம் வாட்டி எடுக்கட்டும். உனது இசையால் நாங்களும் நல்ல இசையை கேட்கும் கர்வியாகி போனதை இவர்களும் எங்களை மீண்டும் மீண்டும் விமர்சனம் செய்யட்டும்.

உங்களிடம் உங்களது இசையை மட்டுமே இரசிக்கும் கர்விகளுக்கு எத்தனை சொன்னாலும் புரியபோவது இல்லை. அப்படியே புரிந்தாலும் அப்படி இரசிப்பது கர்வம் என்று ஆனால், இன்னமும் கர்வப்படுவோம் என்று அடக்கமே இல்லாமல் வீண் பேச்சு பேச போகிறார்கள்.

Wednesday, March 13, 2019

பொள்ளாச்சி வழக்கில் என்ன நடக்கும்

தமிழகம் முழுதும் இப்போது பேசப்பட்டு வரும் பொள்ளாச்சி வழக்கிற்கு முன் வந்த நிர்மலா தேவி வழக்கு தான் ஞாபகத்திற்கு வருகின்றது.

பணம் மற்றும் மற்றவைகளை காட்டி அடுத்த வீட்டு பெண்களை அதுவும் படிக்க அனுப்பிய இடத்தில் ஒரு பேராசிரியை இப்படி கேவலமாக நடந்துகொண்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு மட்டும் இல்லாது வழக்கும் நடந்துக்கொண்டு இருக்கிறது.

நீதி என்றால் அது அனைவருக்கும் ஒன்று தான் என்று அனைத்து நாடுகளிலும், புத்தகங்களிலும் இருந்தாலும் இந்தியாவில் நீதி எப்பவுமே மனு நீதிதான். குற்றம் பார்த்து, குற்றவாளி பார்த்து, பாதிக்கப்பட்டோர் பார்த்து தான் நீதி வழங்கும் முறை காலம் காலமாக இந்தியாவில் புரையோடி போய் கிடக்கிறது.

இந்த அழகில் அந்த 4 பேரையும் உயிருடன் கொளுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வேறு மக்களுக்கு. அந்த முட்டாள் மக்களை நினைத்து சிரிப்பது தவிர வேறு என்ன செய்ய முடியும். ஆனால பட்ட நிர்பயா கொலை வழக்கில் கூட இந்த மனு நீதிதான். இந்த பொள்ளாச்சி வழக்கில் மட்டும் என்ன நடந்துவிட போகிறது. அதுவும் அதிமுகவை பாசக விலைகொடுத்து வாங்கி ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்து இருக்கும் பாசக தனது மனு தர்மத்தை விட்டு கொடுத்துவிடவா போகிறது. நிர்மலா தேவி 200 நாட்களாக நீதிமன்ற படியேறினார் அவரது பற்கள் எல்லாம் உடக்கப்படு இருக்கிறது. பார்ப்போம் இந்த வழக்கில் யார் யார் பற்கள் எல்லாம் உடக்கப்படுகின்றது என்று.....

Saturday, March 9, 2019

2019ல் பாசக ஆட்சிக்கு வந்தால் இனி ரூ50,000 கூட வங்கியில் இருந்து எடுக்கமுடியாது

 நமது வங்கி கணக்கில் இருக்கும் நமது பணத்தை எவ்வளவு எடுக்கலாம் என்று இந்தியாவில் ஒரு சட்டம் பாசகவால் கொண்டு வரப்பட்டு மிகவும் அவதிக்குள்ளாக்கப்பட்டார்கள். கிட்ட தட்ட 2016ல் துவங்கிய இந்த துன்பம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் பழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டு, இவ்வளவு தான் கொடுக்குறானுக என்று புலம்பிவிட்டு போகும் சாமாணியர்கள் தான் அதிகம்.

இதுவே 30,000 கோடி, 5,000,00 கோடி என்று நாட்டை கொள்ளை அடித்துக்கொண்டு போகும் குசராத்து பணக்காரர்களுக்கு இந்த விதிகள் எதுவும் பொருந்தாது என்று ஒருவர் இல்லை பல முறை நிரூபித்துள்ளார்கள். அது மட்டும் இல்லாது பணக்காரர்கள் வங்கிகளில் வாங்கிய கோடிக்கணக்கான பணத்தை அவர்கள் கட்டவேண்டாம். அப்படியே கட்டிதான் ஆகவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டால் வாங்கிய 50,000 கோடி ரூபாய்க்கு வெறும் 500 கோடி மட்டுமே கட்டிணால் போதும் என்று இது வரை பல வழக்குகளில் நிரூபித்துள்ளார்கள். அந்த வெறும் 500 கோடியாவது கட்டினார்களா அல்லது அந்த கணக்கை எழுதும் கணக்காளரிடம் வெறு, 5 கோடி மட்டுமே கொடுத்துவிட்டு நீதிமன்றதில் கட்டியாச்சு என்று சான்றிதழ் வாங்கினார்களா என்றும் தெரியாது.

ஆக மொத்தம் இந்த பண கணக்குகள் மற்றும் கண்டிப்புகள் எல்லாம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு மட்டுமே ஏன்று பாசக வெளிப்படையாகவே சொல்லி கொண்டு வரும் இந்த வேளையில். காசுமீரத்தில் சமீபத்திய கையெறிகுண்டுகளை வீசியவனுக்கு கொடுக்கப்பட்டதாக வரும் செய்திகள் வெறும் 50,000 ரூபாய்க்கள் மட்டும்.

இந்த செய்தி முதலில் தேசபக்தி சம்மந்தப்பட்டதாக பரப்பபட்டு வருகிறது. 2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஆதார் அட்டை, பாண் அட்டை, ஓட்டுனர் உரிமம் என்று எல்லாவித அடையாளங்களையும் காட்டாமல் யாரும் கையில் ஒரு 100 ரூபாயை கூட வங்கியில் இருந்து எடுக்கவோ போடவோ முடியாது. அப்படி இருக்க இந்த 50,000 பணம் எங்கு இருந்து எடுக்கப்பட்டதாக பாசக வெளியிட்டு இருக்க வேண்டும்.

ஆனால் பதிலாக ரூ50,000 பணம் தீவிரவாதத்திற்கு பயன்படுத்தப்பட்டது என்று மட்டும் செய்திவெளியிடுகின்றது. இந்த அழகில் புதிதாக வெளிவந்த ரூபாய் நோட்டுகளில் எலக்ராணிக் சிப்புகள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், எந்த எண்ணுடைய நோட்டு இப்போது எங்க இருக்கிறது என்றும் பூமிக்குள் புதைத்து வைத்தாளும் செயற்கைகோள் காண்பித்துவிடும் என்றும் விளம்பரபடுத்தப்பட்டதை நினைவில் இருந்து மறையாத இந்த சின்ன இடைவெளியில் இப்படி ஒரு பகீர் புகாரை வெளியிட்டு இருக்கிறது பாசக அரசு.

ஆகவே அடுத்த முறை பாசக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் வெறும் 50ரூபாயை கூட நமது வங்கி கணக்கில் இருந்து நாம் எடுக்க முடியாது. அதற்கு பதிலாக அந்த நமது பணம் நேராக நிரவ்மோடிகளுக்கும் மல்லையாகளுக்கும் அதாணிக்களுக்கும் அம்பாணிகளுக்கும் கொண்டு சென்று கொடுத்துவிட்டு, உங்கள் கணக்கில் 50 ரூபாய் பணம் கூட எடுக்காமல் இருந்ததுக்கு தண்ட தொகை என்று எடுத்துகொண்டு விடுவார்கள் இந்த பாசக........

Friday, March 8, 2019

மோடி தமிழக தேர்தலில் இப்படி தான் இனி பேசுவார் கர்னாடகாவில் பேசியது போல்

தமிழகத்தின் அப்துல் கலாம் திராவிட கட்சிகளால் அவமானப்படுத்தப்பட்டார். அவரின் நினைவிடத்தை கூட அமைக்கவிடாமல் திராவிட கட்சிகள் சதி செய்தன. ஆகையால் பாசகவிற்கு வாக்களிக்க வேண்டும்.

பெருந்தலைவர் காமராசை அவர் சாகும் வரை அவமான படுத்தியது அன்றைய காங்கிரசும் திராவிட கட்சிகளும். ஆகையால் பாசகவிற்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் படித்த போது சர் சிவி இராமனை அன்றைய ஆங்கில அரசும் அதன் பிறகு வந்த காங்கிரசு அரசும் அவமான படுத்தியது, ஆகையால் பாசகவிற்கு வாக்களிக்க வேண்டும்.

கூடங்குளம், நெடுவாசல், கதிராமங்களம், தேனியின் மலைகள், காவிரி டெல்டா என்று வளமிக்க இடங்களில் நெய்வேலியில் தோண்டியது போல் ஒரு பெரிய அதளபாதாள சுரங்கங்களை அமைத்து 200 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த நினைத்தது பாசக அரசு. ஆனால் அதை திராவிட கட்சிகளும் பொதுவுடமை கட்சிகளும் சேர்ந்து கெடுத்து அந்த 200 பேருக்கு கிடைக்க வேண்டிய வேலையை கிடைக்க விடாமல் செய்துவிட்டார்கள்,  ஆகையால் பாசகவிற்கு வாக்களிக்க வேண்டும்.

பாசக ஆட்சியில் தான் தமிழகத்தின் ஏழை விவசாயிகளும், விவசாய கூலிகளும் அவர்களின் பிள்ளைகளும் நீட்டு பரீட்சை எழுத இராசத்தான் கேரளா ஆந்திரா கர்னாடகா என்று சென்று உல்லாச உலாவும் மேற்கொண்டார்க்ள். இன்னும் அது போல ஏழைகள் தங்களின் அன்றாட தேவைகளுக்கும் இன்ன பிறவைகளுக்கும் நாள் தோறும் மற்ற மாநிலங்களில் சென்று தங்கள் தேவைகளை பூர்த்தி செய்த்துகொள்ள பாசகவிற்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக மலைகளும் நல்ல பாறைகளுடன் குன்றுகளும் இருப்பதனால் வருடா வருடம் நாட்டில் மழை வந்து கிரிகெட்டு போட்டி பாதியில் நிற்க காரணமாக அமைந்து விடுகின்றது. ஆகவே கிரிகெட்டு போட்டிகளை தடையின்றி நடத்த வெண்டும் என்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக மலைகளை எல்லாம் அதாணி அம்பாணியிடம் சொல்லி  ஒரே வருடத்தில் தரைமட்டமாக ஆக்கிவிட்டால் இனி தமிழகத்தில் தான் எல்லா கிரிகெட்டு போட்டிகளும் நடக்கும், ஆகையால் பாசகவிற்கு வாக்களியுங்கள்.

தமிழ் ஒரு சிறந்த பழமையான மொழி ஆகையால் பாசகவிற்கு வாக்களியுங்கள்.

தமிழகத்தில் பெரியார் ஆற்றிய தொண்டு மகத்தானது ஆகையால் பாசகவிற்கு வாக்களியுங்கள்.

தமிழகத்தை காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அநீதி வழங்கிவிட்டது அதற்காக பாசகவிற்கு வாக்களியுங்கள்.

தமிழகத்தை 1947க்கு முன்னர் வெள்ளைகாரர்கள் ஆட்சி செய்த்தார்கள் அதனால் பாசகவிற்கு வாக்களியுங்கள்.

இப்படி பசு மாட்டு கட்டுரையை மனப்பாடம் செய்து வந்து பரீட்சையில் தெண்ணைமர கட்டுரைக்கு அதை மாற்றி எழுதியவன் கணக்காக பேசப்போகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை..........கண்டு இரசிப்போம்

Thursday, March 7, 2019

பாசகவின் 4G மாபெரும் ஊழல் - தேசபற்றை கொண்டு மறைக்க பார்கிறது

புல்வாமா 350கிலோ குண்டு வெடிப்பை தொடர்ந்து மக்களும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய பாசக அரசு, திடீர் என்று இது பாக்கின் வேலை என்றும். அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது.

அதை தொடர்ந்து பாக் ஆக்கிரமிப்பு காசுமீரதில் தாக்குதல் நடத்தி 350கிலோ குண்டுக்கு பதில் 300 நபர்களை கொன்றுவிட்டோம் என்று ஊடகங்களுக்கு செய்திகளை கசியவிட்டது.


தினமணியில் வெளியான ராசனாத்து சிங்கின் பேச்சு

ஒரு வேளை இந்த செய்தி நீக்கப்படலாம் ஆகையாஇ அந்த செய்தியை எடுத்து இங்கே பதிவிடுவோம்.

"பாக்கிஸ்தானில் இருந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைபின் முகாம்களை இந்திய விமானப் படை அழிப்பதற்கு முன்பாக அங்கு சுமார் 300 மொபைல் இணைப்புகள் செயல்பட்டு வந்தாக தேசிய தேசிய தொழில்நுட்ப ஆய்ராச்சி மையம் ( என்.டி.ஆர்.ஓ) தெரிவித்துள்ளது. இந்த மொபைல் இணைப்புகள் ஒன்றும் அங்கிருந்த மரம் செடி கொடிகளுக்கு வழங்கபடவில்லை

எனவே இதன்மூலம் எத்தனை பயங்கவாதிகள் வீழ்த்தப்பட்டு இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் என்.டி.ஆர்.ஓ மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் எதிர்கட்சிகள் தெரிவிக்கும் என்பது எனக்கு தெரியும்.

இன்னும் சில நாட்களில் எத்தனை பயங்கரவாதிகள் பாக்கிஸ்தானில் வீழ்த்தப்பட்டார்கள் என்ற முழுவிவரமும் தெரியவரும். தேசத்தின் பாதுகாப்பில் மத்திய அரசு என்றும் மெத்தனமாக செயல்படாது. மேலும் ஆட்சியை திரும்ப அடைய வேண்டும் என்ற பேராசையும் பாஜகவுக்கு கிடையாது. அனைவருக்கும் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பேச மத்திய அரசு எப்போது தயாராக இருக்கிறது. ஆனால், சம்பந்தபட்டவர்கள் அதற்கு முன்வர வேண்டும் என்றார்."

பிறகு மெல்ல மெல்ல வெளி நாட்டு ஊடகங்களும் பாக்கின் செய்திகளும் இந்த 300 பேர் எண்ணிக்கையை பொய் என்ன நிரூப்பிக்க துவங்கி இந்தியாவின் விமானபடை தளபதி எவ்வளவு பேர் தாக்கப்பட்டார்கள் இறந்தார்கள் என்று எல்லாம் அறுதியிட்டு சொல்லுவதற்கு இல்லை என்று தெளிவாக சொன்ன பின்பும் நேற்றைய செய்திகளில் உள்துறை அமைச்சர் ராசனாத்து சிங்கு தாக்குதல் நடந்த இடத்தில் தாக்குதலுக்கு முன் சரியாக 300 செல் பேசிகள் இயக்கத்தில் இருந்ததாகவும் அவைகள் தாக்குதலுக்கு பின் காணாமல் போனதாகவும் அதை NDRO குழு கண்டுபிடித்து நாங்கள் சொல்வது தான் உண்மை என்று நிரூபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மைய அரசோ அல்லது அமைச்சரோ பிரதமரோ யாரும் 300 போர் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லவே இல்லை என்று சாதித்தவர்கள் இன்று அந்த 300 கணக்குக்கு அறிவியல் சாட்சியை கொண்டு வர முயல்கிறார். நாமும் தெரியாமல் தான் கேட்போம், தாக்குதல் நடந்த இடம்மோ பாக் ஆகிரமிப்பு காசுமீரம். அதில் செல் சேவையை வழங்க பாக் நாட்டினரால் தான் முடியும். அப்படி இருக்க அங்கே இந்த செல் பேசிகள் இயக்கத்தில் இருந்ததை எப்படி இந்தியாவில் இருக்கும் ஒரு நிறுவனம் அறுதியிட்டு சொல்ல முடியும். விளக்குங்கள்.......

2014ல் டிராய் குழுவையும், தணிக்கை கணக்காளர் குழுவையும் வைத்து 2G ஊழல் என்று பரப்பி தேர்தலில் காய்களை நகர்த்திய பாசக மறுபடியும் இப்படி ஒரு 4G மாபெரும் ஊழலில் இறங்கி உள்ளது.

இந்த NDRO குழுவின் உண்மை தண்மை மட்டும் அல்ல பாசகவோ அல்லது மோடியோ என்றைக்குமே உண்மையை பேசுபவர்கள் இல்லை என்றதை தொடர்ந்து கவனித்து வந்துள்ளோம். இன்று தேர்தல் நெருங்கும் வேளையில் இப்படி ஒருNDRO நிறுவனத்தின் பெயரில் புளுகி பாசகவின் தோல்வியை மட்டும் அல்ல பொய்யின் பெயரில் பாக்கின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலையும் ஞாயப்படுத்த நினைத்து முனைக்கின்றது..........

பாசகவின் இந்த 4G மாபெரும் ஊழலை அம்பலபடுத்துவோம்......

Wednesday, March 6, 2019

வெளிநாடுகளில் ஒலித்த தமிழை கொன்றுவிட்ட மோடி இன்று தமிழ் தமிழர் தமிழகம்

அபுதாபி, துபை, குவைத்து, இலண்டன், பிரங்பர்ட்டு, ஆம்சுடர்டாம் என்று எந்த விமான நிலையமாக இருந்தாலும் அங்கு இருந்து சென்னை செல்லும் விமானம் புறப்பாடின் போதும், விமானத்தின் உள்ளும்  நல்ல தமிழில் அறிவிப்பார்கள். சென்னையில் கூட 60% ஆங்கில வார்த்தைகளும் 10% சங்கத வார்த்தைகளும் போக தமிழில் இருக்கும், ஆனால் மேலே சொன்ன இடங்களில் நல்ல தமிழில் அறிவிப்புகள் வந்துக்கொண்டு இருந்தது 2014ல் மோடியின் பாசக அரசு பதவிக்கு வரும் வரையில்.

அதன் பிறகு தமிழி பேசிய அந்த இடங்களில் எல்லாம் இன்றைக்கு இந்தியில் அறிவிக்கிறார்கள்.

தமிழகம் அல்லா மற்ற மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களில் தமிழில் பேச சொல்லி சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இவர்கள் செய்யும் இந்த இந்தி அறிவிப்புகள்.

ஒரு காலத்தில் இந்தி நிகழ்ச்சிகளை தான் பார்த்து ஆக வேண்டும் என்ற திணிப்பில் இறங்கி இன்று மூடு விழா நடத்தும் அளவிற்கு வந்து நிற்கிறது சென்னையில் உள்ள அரசு தொலைக்காட்சி..........

ஆட்சியின் முதல் நாளிலே இருந்து தமிழையும், தமிழர்களையும், தமிழகத்தையும் ஒழிக்க பாடுபட்டுவிட்டு, இப்போது தமிழுக்கும் தமிழர்களுக்கும் எப்போதும் முன்னுரிமை கொடுப்பாராம் இந்த பொய்யர் மோடி.

இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற கனவில் 1,30,000 மக்களை அன்று கொன்று குவித்த மோடி இன்றைக்கு 2019 தேர்தலின் வெற்றிக்காக தனது நாட்டு துணை இராணுவ வீரர்களை குண்டு வைத்து கொன்றுவிட்டு, பாக் தான் செய்தது என்று போருக்கு செல்வதாக சொல்லிக்கொண்டு இப்ப்போது மூக்குடைபட்டு நிற்கும் மோடி மறுபடியும் பிரதமரானால் இலங்கையில் நடந்த இனபடு கொலை நாளை தமிழகத்திலும் நடக்கும்........மக்களே கவனம்.

இப்படி ஏக்கர் கணக்கில் புளுக்குவதை விட்டு விட்டு குசராத்துக்கு சென்று அந்த மக்களை கொல்லுங்கள் மோடி எங்களை விட்டு விடுங்கள்......

Thursday, February 28, 2019

அவசரபட்டு விட்டீர்களே தமிழர்களே - இனி அபிநந்தன் அவ்வளவு தான்

இந்திய ஆட்சியர்களுக்கு தமிழ் தமிழகம் தமிழர்கள் என்றால் ஏதோ மூன்றாம் தர ஏழை வெளிநாட்டுகாரன் போல் தான் அனுகுவார்கள் அதிலும் இந்த பாசக அரசு இன்னும் மோசம்.

இந்த நிலையில் பாக் தாக்குதல் நடவடிக்கையில் பாக்கில் மாட்டிக்கொண்ட விமானி ஒரு தமிழர் என்று தமிழர்கள் அவசர அவசரமாக பதிவிட்டு விட்டீர்களே.

சும்மாவே சாதி பார்த்து தான் யார் யாருக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் பாசக அரசுக்கு அபிநந்தனை ஒரு தமிழன் என்று சொல்லிவிட்டீர்களே. இனி அபிநந்தன் மீட்கப்படுவதும் உயிருடன் வரவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டியது தான்.

இனி மேலாவது இது போல் செய்திகள் வந்தால், தமிழர்களை காப்பாற்ற அவர் தமிழர் என்று சொல்லாதீர்கள், பதிலாக அவரது கடைசி பெயர் மோடி என்றோ, சர்மா என்றோ, தீக்சித்து என்றோ சொல்லுங்கள் கண்மூடி கண் திறப்பதற்குள் வீட்டிற்கு கொண்டு வரப்படுவார்.........சிந்தியுங்கள் மக்களே.........

Tuesday, February 26, 2019

அப்போ Surgical strikeக்கும் பொய்யா

மோடியின் ஆட்சியில் அதிகம் போசப்பட்ட செய்திகளில் இதுவும் ஒன்று, அன்றைய துல்லிய தாக்குதலில் தீவிரவாத முகாம்களை எல்லாம் தவிடு பொடியாக்கி இந்தியாவையும் உலகையும் காத்தார் வீரர் மோடி என்றும். மோடி ஆட்சிக்கும் வரும் முன் காங்கிரசு தொடை நடுங்கியாக இருந்தாகவும், மோடி வம்பு செய்யும் அண்டை நாடுகளை கால் பந்து உதைப்பது போல் உதைத்து விளையாடுவார் என்றும். அதை தொடர்ந்து தொடர் நடவடியாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உள் நாட்டு தீவிரவாதம் அடியோடு உலகத்தை விட்டே விரட்டியாச்சு என்றும் பரப்பினார்கள் சங்கிகள்.

அன்றைக்கு அழித்த அதே முகாம்களை இன்றைக்கு மறுபடியும்  இந்திய இராணுவம் தாக்குதாம். இல்லாத முகாமை எப்படி 1000கிலோ குண்டுகளா போட்டு தாக்க முடியும், அதுவும் பாக்கிட்தான எல்லைக்குள் புகுந்து தாக்குதாம். இதிலே தாக்குதல் படங்கள் எல்லாம் வெளியிடுராங்க கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்.

இந்திய எல்லைக்குள் தான் காசுமீரம் உள்ளது என்றது இந்தியாவின் வாதம், இல்லை எங்கள் கட்டுப்பாடில் உள்ளது என்றது பாக்கிட்தானத்தின் வாதம், இந்த இரு நாடுகளின் போர் நடவடிக்கையில் தற்காலியமாக வரையபட்ட கட்டுப்பாட்டு கோட்டில் இரண்டு நாட்டு இராணுவமும் பின்வாங்காமல் 50 ஆண்டுகளாக இருக்கிறது. அங்கே என்ன என்ன எல்லாம் இருக்கிறது அதே அளவில் இங்கே நமது பக்கத்திலும் அதே அளவில் நிப்பாட்டி வைப்பது தான் இராணுவத்தின் வழக்கமும். இது உலக்கில் உள்ள அனைத்து படைக்களின் வழக்கம்.

அந்த கட்டுப்பாட்டு கோட்டில் இரண்டு படைகளுக்கும் நடுவில் ஒரு 50 அடி அளவில் யாருக்கும் சொந்தம் இல்லாத நோமேன் நிலம் என்று சொல்லப்படும் அந்த இடத்தில் தனது விருப்பம் போல் எவ்வளவு வெடிகளை வேண்டும் என்றாலும் அவர்களும் சரி நாமும் சரி வெடிக்கலாம், அது போர் நடவடிக்கையோ அல்லது எல்லை தாண்டுதலோ இல்லை. தன்னால் முடிந்தால் அந்த நோமேன் நிலத்தையும் தாண்டி குண்டுகளை எரிவது வழக்கம்.

அப்படி எரியப்படும் குண்டுகளுக்கு அவர்கள் தரப்பில் அதே வீரியத்தில் பதிலடியும் வந்துக்கொண்டு தான் இருக்கும். இன்று நடக்கும் நடவடிக்கைகள் நமது நாட்டு வான் எல்லையில் இருந்து அவர்களது கட்டுப்பாட்டு கோட்டில் எவ்வளவு தூரம் வான் தாக்குதல் நடத்த முடியுமோ அவ்வளவு தூரம் தாக்கி வம்பு இழுக்கிறார்கள். பதிலுக்கு அவர்களும் அதே போல் தாக்குவார்கள் அதை சங்கி அரசாங்கமோ அல்லது இப்போது போர் தாக்குதல் என்று அலரவிடும் ஊடகமோ நமக்கு சொல்லாமல் அமுக்கி விடும்.

கார்கில் போர் இப்படி தான் நடந்தது, பாக் எல்லையில் இருந்து இராணுவ உடையில் இல்லாமல் பொதுமக்கள் உடையில் இராணுவம் தான் பொதுமக்கள் என்றும் மற்றும் தீவிரவாதிகள் என்றும் சொல்லிக்கொண்டு இந்திய எல்லைக்குள் வந்து தாக்குதல்களை தொடுத்தது. நமது எல்லைக்குள் இருந்த அவர்களை இந்திய விமானப்படை வந்து குண்டு வீசும் வரை அவர்கள் மிகவும் தீவிரமாக முன்னேறிக்கொண்டு தான் இருந்தார்கள். கடைசியில் அணுகுண்டை வீச பாக் முற்படும் போது அமெரிக்கா கூப்பிட்டு போர் நடவடிக்கைகளை நிறுத்தியது. இல்லை என்றால் அது முழு வீச்சு போராக வெடித்து இருக்கும்.

அந்த கார்கில் போர்லில் பாக் நடத்திய தாக்குதல் கூட இப்போது இந்தியா நடத்தவில்லை. இருந்தாலும் மோடி காலிலே கால் பந்தை உதைத்து தள்ளுவதை போல் பாக்கை உதைத்து தள்ளுவதாக தவறான செய்தியை பரப்புகிறது மோடி அரசு.......

எப்பவும் பொய் எதிலும் பொய் என்றதுக்கு பெயர் போன மோடி அரசு இந்த துல்லிய தாக்குதலும் வெறும் கட்டுக்கதை என்று அதுவே இந்த இராணுவ நடவடிக்கை மூலம் வாக்குமூலம் கொடுத்துள்ளது.........

Thursday, February 21, 2019

பாசக தமிழகத்தில் 40 தொகுதிகளையும் வெல்ல திட்டம் தயார்

எப்படியாவது தமிழகத்தில் கால் ஊன்ற நினைக்கும் பாசக முதலில் அதிமுகவை விலைக்கு வாங்கி 2 ஆண்டுகள் ஆனாலும்(எச்ச சர்மா இனிமேல் நாங்கள் எல்லாம் பின்வாசலால் வரவேண்டிய அவசியம் இல்லை என்று மிகவும் தைரியமாகவும் திமிராகவும் பேட்டி கொடுத்தது நினைவில் கொள்க) இன்னும் காலம் கனிந்து வரததால் இன்னும் அதிமுக என்றே இயக்கிக்கொண்டு இருக்கும் நிலையில் 2019ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலும் அறிவிக்கபடும் நிலையில் எப்படி தேர்தலை எதிர்கொள்வது என்று யோசித்து அழகாக முடிவெடுத்து இருக்கிறது.

செயலலிதாவின் மறைவுக்கு பிறகு இனி அதிமுக அவ்வளவு தான் என்ற நிலையில் திமுக தான் இனி ஆட்சிக்கு வரும் என்ற நிலை. இதை அப்படியே நடக்கவிடாமல் தடுக்க வேண்டும் என்றால் மக்களை பாசக பக்கம் திருப்பினால் மட்டுமே முடியும்.

ஆனால் பாசக மக்கள் பேசும் பேச்சுக்களும், மைய அரசியில் இருக்கும் பாசக தலைவர்கள் நடந்துகொள்ளும் வித்தத்திலும் தமிழக மக்களுக்கு இன்னும் வெறுப்பு அதிகமானது மட்டும் தான் மிச்சம். கரையேறுவது கனவாகவே ஆகிவிடும் என்ற நிலைக்கு வந்து நிற்கின்றது.

பாசகவின் ஆதிகால நுட்பம், தம்து மக்களை தானே கொன்றுவிட்டு எதிரியின் மேல் பழி போட்டு அதற்காக எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்பது தான் வழக்கம். அப்படி செய்வதற்கு முன் நாடிபிடித்து பார்க்கும் விதமாக 350கிலோ குண்டு வெடிக்க வைத்து பார்த்ததில் மக்கள் இன்றைகும் வெடிகுண்டு என்றால் ஒன்றாக கூடுவதை கண்டு கொண்ட பாசக தமிழகத்தில் அதே பாணியில் தான் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டியது.

செயற்கையாக ஒரு மதக்கலவரத்தை ஏறபடுத்தி குளிர்காயலாம் என்றால், சின்ன சின்ன தாக பற்ற வைத்த மதகலவரங்கள் எல்லாம் துவங்கிய இடத்திலேயே அமுங்க வெறுத்து என்ன செய்வது என்று சோர்ந்து போன நிலையில் தான் சாதி கலவரத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளது.

பாசக நேரடியாக சாதி கலவரம் செய்த்தால் தனக்கு கெட்ட பெயர் வரும் என்ற காரணத்தால், பாமகவை தனது அடியாளாக சேர்த்துக்கொண்டுள்ளது. இந்த பாமக மட்டும் திட்டமிட்டால் போல் சாதி கலவரத்தை உருவாக்க தமிழகத்தை கொழுந்துவிட்டு எரிய வைத்தால் அதற்கு கூலியாக அமைய இருக்கும் நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதவி தருவோம் என்று ஆசை வார்த்தைகளை காட்டி அடியாளாக சேர்த்துள்ளார்கள்.

பாமக தான் பலியாக போவது தெரியாமல் கண்களுக்கு முன்னால் தெரியும் கேரட்டை பார்த்துக்கொண்டு சென்ன ஏதோ ஒன்றை போல் தமிழக சாதிகலவரத்திற்கு அப்பாவும் மகனுமாக திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். கூடிய விரைவில் தமிழகத்தில் சாதிக்கலவரம் பற்றி எரிய போகின்றது.

யாரேனும் எதிர்த்து பேசினாலோ அல்லது அம்பலப்படுத்தினாலோ தூத்துகுடியில் நிகழ்த்தியது போல் குறிவைத்து வாயிலேயே சுட்டுக்கொல்லவும் ஏற்பாடுகளும் முடித்தாகிபிட்டாச்சு. ஆகவே மக்களே கூட்டமாக பாசகாவோ அல்லது பாமகாவோ இருந்தால் உடனே அந்த இடத்தை விட்டு விட்டு வெளியேறி விடுங்கள் இல்லை என்றால் இழுத்துக்கொண்டு போய் தீ வைத்து கொளுத்திவிடுவார்கள்.

Wednesday, February 20, 2019

இந்தியாவின் யார் அடுத்த பிரதமராக போவது யார்

வருன்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த பிரதமராக போவது யார் என்ற போட்டி சங்க பரிவாரம் துவங்கி வைத்ததில் இருந்து இன்று வரை மோடியா யோகியா இல்லை நிதின் கட்காரியா என்று எந்த வித பாரபட்சமும் இன்றி செய்திகள் அடிபடுகின்றது. அத்தோடு மட்டும் நில்லாது, பாசகவிற்கு கொடி பிடிக்கும் சிறீ இரவிசங்கர பிரசாத்து, பாபா இராம் தேவ்வு போன்ற கட்சியை தாண்டிய ஆதரவு தரும் மக்கள் எல்லாம் பதுங்கி 3 மாதங்களுக்கு மேல் ஆகுகின்றது.

தெள்ள தெளிவாக மோடிக்கு பாசகவுக்குள்ளேயும் வெளியேவும் ஆதரவு இல்லை, அது மட்டும் இல்லாது மூச்சுக்கு முன் நூறு முறை ஏழை தாயின் டீ வித்த பிள்ளை நான் ஒரு நாள் உணவுக்குக்கே வெறும் ரூபாய் 10,000 மட்டுமே தான் செலவு செய்யும் ஏழை மகன் என்று சொல்வதும். தினமும் வெறும் 35 இலட்சத்தில் உடைகளும் வெறும் ரூபாய் 10,000 க்கு மேக்கப்பும் சிகையலங்காரமும் என்று எளிமையாக வாழும் எழை தவப்புதல்வன் என்று உளரும் உளரல்களை பொறுக்க மாட்டாமல் பாசவின் கட்சிக்குள்ளேயே இப்படி எல்லாம் பேசாதீங்க என்று செல்லமாக கண்டித்தும் மோடி திருந்துவதாக இல்லை.

மோடி எப்போதாவது வாய் தவறி உண்மை பேசுவதும், மற்றி சொல்வதெல்லாம் பொய் பொய்யை தவிர வேறு எதுவும் இல்லை என்று கட்டியம் கட்டும் அளவிற்கு அளந்து விடும் மோடியை இனி தமிழக பாசக கூட மதிக்க தயாராக இல்லாத சூழலில் தான், மோடியை தமிழகத்திற்கு கூட்டி வந்து வச்சு செஞ்சு அனுப்புகிறார்கள். இதிலே நல்லாக மீண்டும் மோடி வேண்டும் மோடி என்று கொஞ்சம் கூட மரியாதையே இல்லாமல் மேடையிலேயே மோடியை வைத்துக்கொண்டு தமிழிசை ஒரு மையில் விளிப்பது குமட்டலாக இருந்தாலும் இன்று வரை தமிழை தொடரும் இந்த பகிடியை கூட புரிந்துகொள்ள முடியா மோடி பரிதாபமாய் மலுங்க மலுங்க விழிதித்து கொண்டு மேடையில் மொழி புரியாமல் அமர்ந்து இருப்பதையும் காண முடிகின்றது.

ஆக பாசகவிற்குள்ளும் சரி வெளியிலும் சரி மோடியை ஆதரிக்க தமிழகம் உட்பட யாரும் இல்லை. அப்படி இருக்கும் நிலையில் அடுத்த பிரதமராக வர யாருக்கு வாய்பு இருக்கிறது என்று பார்த்தால். வடக்கில் நான் நீ என்று மோடியோடு போட்டி போட்டாலும் வாய்ப்பு என்னவோ தமிழகத்தில் உள்ளவருக்கு தான்.

எந்த வித நிலைகள் வந்தாலும் சமாளிக்கும் அறிவாளி செயல் வீரர் மக்களை மட்டுமே மனதில் நினைத்து ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் சமூக போராளி பழனிசாமி தான் அந்த நபர்.

பழனிசாமியுடம் போட்டி போட தகுதியுள்ள ஒரே ஆள் அன்புமணி இராமதாசு மட்டுமே, காரணம் அன்புமணியும் மக்களையும் மக்களின் மாற்றத்தையும் மக்களின் முன்னேற்றமும் மட்டுமே தனது இலட்சியமாக கொண்டவர். எந்த வித சுயனலமோ சுயலாபமோ பார்க்காமல் மக்கள் மக்கள் மக்கள் என்று மட்டும் எப்பவுமோ சிந்திக்கும் மக்கள் நலவாதியான அன்புமணி இராமதாசும் தான் தகுதியானவர்.

ஆகவே தான் இந்த இருவரும் பாசகவுடன் சேர்ந்து பாசக ஆட்சி அமைக்க தேவையான நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இருட்டு பெற்று பிரதமராகவும் துணைபிரதமராகவும் ஆக உள்ளார்கள்.

இந்த கூட்டணி தான் மக்கள் நல கூட்டணி, மற்ற கூட்டணி எல்லாம் ஏழை மக்களுக்கு மருந்து தயாரிக்கும் அரசு மருந்து தொழிற்சாலைகளை மூடியும் செயற்கை மருந்து தட்டுபாடுகளை உருவாக்கி அமெரிக்க மற்றும் ஐரோப்பா மருந்து நிறுவனங்களில் இருந்து 10 ரூபாய்கு வாங்கின அதே பராசிட்டமால் மாத்திரையை 100 வாங்க வைப்பார்கள். சென்ற முறை அன்புமணி இருந்த அரசு மருந்து ஆலைகளை மூடி ஏழைக்களுக்கு உதவி புரிந்தது போல் இந்த முறை மத்திய அமைச்சரானால் இருக்கும் எல்லா அரசு மருத்துவமனைகளை எல்லாம் மூடி தனியார் மருந்துவமனையில் அமெரிக்க ஐரோப்பிய மருத்து காப்பிடில் இராசவைத்தியம் வாங்கி தருவதாகி சொல்லி ஏமாற்றவே மாட்டார் நம்புங்கள் மக்களே. மாற்றம்......முன்னேற்றம்.........

Tuesday, February 19, 2019

வெட்கம் கெட்ட பாமக சொரணை கெட்ட அதிமுக பிச்சை எடுக்கும் பாசக

இரண்டு திராவிட கட்சிகளும் மாற்றி மாற்றி ஆண்டு தமிழகத்தை சுடுகாடாக மாற்றிவிட்டது என்று சென்ற தேர்தலில் கூவிய பாமக. இன்றைக்கு அதிமுகவுடன் கூட்டணி என்றால் ஒன்று அதிமுக திராவிட கட்சி இல்லை என்று பாமக சான்றிதழ் வழங்குவதாக பொருள், இல்லை என்றால் அதிமுகவை பாசக மொத்த விலைக்கு வாங்கிவிட்டது என்று பொருள்.

பாசகவின் சின்னத்தில் நின்றால் வெற்றி பெறுவது கடினம் ஆகையால் இரட்டைஇலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்று(ஒரு வேளை வெற்றி பெற்றால்). சட்ட சபையையும் கலைத்துவிட்டு இதே பாணியில் இரட்டை இலை சின்னதில் போட்டி போட்டு வெற்றி பெற்றவுடன் இனிமேல் உலகில் அதிமுக இல்லை. இன்றையில் இருந்து அவர்கள் அனைவரும் பாசகவில் ஐகியமாகிவிட்டார்கள் என்று 5 ஆண்டுகள் கோலோச்சி மய்யத்தில் செட்டப்ப மாத்தி கெட்டப்ப மாத்தினாற் போல் தமிழகத்திலும் செய்யலாம் என்று சப்புக்கொட்டிக்கொண்டு அதிமுகவிடம் இந்த இந்த இடங்களில் நாங்கள் நிற்போம். அப்படி எல்லாம் சம்மதிக்கவில்லை எனில் தேர்தலுக்கு முன் சசிகலாவை பெங்களூரு சிறையில் அடைத்தை போல் உங்களை எல்லாம் திகாரில் அடைப்போம் என்று அன்போடு கெஞ்சி கொஞ்சி இளித்து அதிகார பிச்சை எடுத்துக்கொண்டு நிற்கிறது.

56 இஞ்சு அகலம் கொண்ட மார்பு தமிழகத்தில் பழனிசாமி பன்னீர்செல்வத்தின் கால்களை கண்ணீரால் அர்ச்சணை செய்த்து பிச்சை எடுத்து நிற்கின்றது.

திராவிட கட்சிகளால் அழிந்தது தான் இந்த தமிழகம் என்று ஊர் ஊராக கூவிய பாமகவும் பாசகவும் இனி அதிமுகவுக்கு எப்படி காவடி எடுக்கிறது என்று வேடிக்கை பார்ப்போம்.............

போர் வந்தால் இந்தியா தோற்று போவது உறுதி - பாசக

இபோது இருக்கின்ற நிலையில் எல்லையில் பொக்ரானில் பாசக அரசு எவ்வளவு தான் படம் காட்டினாலும் நாளை போர் என்று வந்தால் தோற்கபோவது உறுதி.

இதை பாசகவே பலமுறை தெரிவித்து இருக்கிறது, இந்தியாவின் விமானப்படை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் அதை பலப்படுத்த காங்கிரசு வெறும் 126 போர் விமானங்களை மட்டுமே வாங்கி மேலும் பலவீனப்பட வைக்க இருந்த நிலையில், நல்ல வேளையாக மோடியின் அரசு பதவிக்கு வந்ததால் 36 விமானங்களை வாங்கி விமானப்படையை உலகிலேயே மிகவும் பலம் வாய்த விமானபடையாக மாற்றிவிட்டோம் என்று இலங்கை சிங்கப்பூர் மலேசியா அசாம் என்று மோடி மேடை தோறும் முழங்கி வந்துள்ளார்.

இந்த 36 இரபேல் விமானங்கள் இல்லை என்றால் நாட்டின் பாதுகாப்பு பலவீனப்பட்டுவிடும் அதனால் வாங்கியே ஆகவேண்டும் என்றும். அப்படி வாங்கவிடாமல் காங்கிரசு தொல்லை கொடுப்பதால் காங்கிரசு ஒரு தேசதுரோக கட்சி என்றும் அதில் இருப்பவர்கள் அனைவரையும் நாட்டைவிட்டு அண்டை நாட்டுக்கே அனுப்பிவிட்டவேண்டும் என்று இது வரை முழங்குகிறார் மோடி.

இப்படி அப்படி என்று எல்லாம் மோடியாலும் இன்னும் பெரிய பெரிய பாசக பிரமுகர்கள் எல்லாம் புகழ்ந்தும் வேண்டியும் விரும்பியும் அம்பானிக்காக தெரு தெருவாக ஆடியும் பாடியும் கதாகாலச்சேபம் செஞ்ச அந்த 36 இரபேல் விமானத்தில் இன்னும் ஒன்று கூட இந்தியாவிற்கு இது வரை வரவில்லை. அப்படியே நாளைக்கு கொண்டு வந்து நிறுத்தினாலும், அம்பானியிடம் அதன் உதிரிபாகங்கள் கட்டும் தொழிற்சாலை உருவாக்கப்படவில்லை. அம்பானி ஆலையை கட்டி, அதற்கு ஆட்களை பிடித்து இன்ன பிர எல்லாம் செய்து உதிரி பாகங்களை தயாரித்து வழங்கிய பிறகு தான் அந்த 36 இரபேல் விமானமும் பறக்க தயாராகும்.

அதற்கு பிறகு தான் அந்த விமானத்தில் போதிய பயிற்சி எல்லாம் எடுத்துக்கொண்டு இந்தியா அந்த 36 இரபேல் விமானத்தின் உதவியுடன் சீனாவையும் பாக்கிட்தானத்தையும் மோடி காலில் உதை பந்து உதைப்பது போல் உதைத்து உதைத்து விரட்டுவார் என்று சொல்லி வரவிருக்கும் 2019 பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு இப்பவே வாக்களியுங்கள் என்று தமிழிசையும் எச்ச சர்மாவும் விழுந்து விழுந்து பிரச்சாரம் செய்கிறார்கள்.

உண்மை நிலமை இப்படி இருக்க எவ்வளவு தான் பொக்ரானில் துல்லியமாக சுட்டு சுட்டு படம காண்பித்தாலும் இலங்கையுடன் போர் வந்தாலும் மோடி தோற்றக்கப்போவது உறுதி. மக்களே சிந்தித்து வாக்களியுங்கள், சீனாவையும் பாக்கிட்தானத்தையும் மோடி காலால் உதைப்பதை பார்கவும், இந்த 2019ல் நடக்க இருக்கும் கிரிக்கட்டு போட்டியில் இந்த அணி பாக்கிட்தானத்தை வெல்லவும் மோடிக்கு வாக்களிக்கவும். இல்லை என்றால் உலகப்போட்டியும் அம்பேல்லாகிவிடும் சொல்லிபுட்டேன்.......

Monday, February 18, 2019

அமெரிக்காவுக்கு தெரிந்த 350கி வெடிகுண்டு இந்தியாவுக்கு தெரியாமல் போனது எப்படி

காசுமீரத்தில் வெடிக்க உள்ள 350கிலோ வெடிகுண்டு பற்றி துல்லியமா ஒரு வாராத்திற்கு முன்னே அமெரிக்காவும் இசுரேலும் செய்திகளை வெளியிட்டு பொது மக்களுக்கு தெரியும் படியே எச்சரிக்குது. ஆனால் அணுகுண்டை அமெரிக்க செயற்கை கோளுக்கு தெரியாமல் அதிபுத்திசாலி தனமாக கண்ணில் மண்ணை தூவி வெடித்தாக புனைந்து புனைந்து படம எடுத்துவிட்ட இந்தியாவுக்கோ, இந்தியாவின் எல்லைக்குள் அதுவும் அதி தீவிர கண்காணிப்பில் உள்ள ஒரு இராணுவ முக்கியம் வாய்ந்த இடத்தில் 350கிலோ வெடிகுண்டு வருவதை பற்றியோ அல்லது இராணுவ அணிவகுப்பில் தாக்குதல் நடக்கும் என்றோ தெரியவில்லையாம்.

சரி தெரியாமலே போச்சுன்னுனே வச்சிக்கிட்டா கூட, அமெரிக்காவும் இசுரேலும் எச்சரித்த பின்னர் என்ன என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்றாவது இது வரை சொன்னார்களா. இல்லை மாறாக அண்டை நாட்டின் மீது பழியை போட்டு அவசர அவசரமாக போருக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறது மோடி அரசு.

350கிலோ வெடிகுண்டை பெட்டிக்கடையில் அந்த தீவிரவாதி ஆதார் அட்டையை கான்பித்து வாங்கி வந்தது மட்டும் தெரியாதாம் ஆனால் அது அண்டை நாட்டின் தீவிரவாதிகள் தான் கொண்டு வந்ததும் வெடித்ததும் என்று மட்டும் உறுதியாக தெரியுமாம். ஏன் என்றால் அந்த தீவிரவாதி அந்த அண்டை நாட்டின் ஒப்பந்த படிவத்தை கையில் வைத்து இருந்ததை ஆதாரமாக மோடி அரசு கைப்பற்றி நிரூபித்து தான் இந்த போர் நடவடிக்கைக்கு போகின்றது என்று நம்புங்கள் மக்கா நம்புங்கோ.....

Saturday, February 16, 2019

பாசக காசுமீரில் வெடித்த 360கி வெடிகுண்டு நாடு முழுதும் வெடிக்கிறது

பணமதிபிழப்பு நடவடிக்கையின் மூலம் தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது. டீக்கடையில் டீ வாங்குவதில் இருந்து உரம் வாங்குவது வரை ஆதார் அட்டை இல்லாமல் எதுவும் வாங்க முடியாது விற்கமுடியாது. எந்தெந்த பொருள் விற்றாலும் மறைக்காமல் இருக்க ஜிஎஸ்டி வரிவிதிப்பு கொண்டு வந்து கள்ள சந்தையே இல்லை. துல்லிய தாக்குதல் மூலம் எல்லையில் இருக்கும் தீவிரவாத மூகாம்கள் எல்லாம் அழித்தாகிவிட்டாச்சு. இப்படி நாட்டை தீவிரவாதத்தில் இருந்து காக்கும் பணியை கடந்த 5 ஆண்டுகளாக செய்து கடமையாற்றி அடுத்த தேர்தலில் அந்த ஒரு காரணத்திற்காகவே தேர்ந்து எடுக்கனும் என்று தேர்தல் பிரச்சாரங்களில் நாடு முழுதும் பேசி வருகிறது பாசக.

பாசகவின் பேச்சுகள் எல்லாம் உண்மை என்று எடுத்துக்கொண்டால் இந்த 350கிலோ வெடி பொருள் ஒன்று இராணுவத்திடம் இருக்கும் இல்லை அரசிடம் இருக்கும். 44 படை வீரர்களை இராணுவமே குண்டு வைத்து கொன்று இருக்குமா என்றால் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதை விட அதிக வாய்ப்பு அரசுக்கு தான் இருக்கிறது.

காரணம் மோடி கோத்ராவில் தனது சொந்த மக்களையே இரயிலில் வைத்து கொளுத்திவிட்டு மற்றவர்கள் செய்தார்கள் என்று கதைகட்டி ஒரு இலட்சத்தி 30 ஆயிரம் மக்களை 6 நாட்களில் வேட்டையாடி கொன்றுவிட்டு அதை தேசபற்று மற்றும் நிர்வாக திறமை என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்.

அன்றைய இரும்பு மனிதரும் இன்றைய துருபிடித்த(மோடி இவருக்கு சமீபத்தில் கொடுத்த மரியாதையை வைத்து பார்க்கும் போது) மனிதருமான அத்வானி எப்போது எல்லாம் எங்கே பயணிக்கிறாரோ அப்போதெல்லாம் அங்கே அவர் செல்வதற்கு முன்னோ அல்லது சென்று அங்கே இருந்து கிளம்பி ஒரு பாதுகாப்ப்பான தூரத்திற்கு சென்ற பிறகோ அந்த இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும். ஒரு முறை கூட அவர் இருக்கும் போதோ அல்லது சற்று அருகிலோ வெடித்ததே இல்லை.

இதே இரும்பு மனிதர் இன்றும் தான் பயணிக்கிறார் ஆனால் ஒரு தீபாவளி பட்டாசு கூட வெடிப்பதில்லை. அன்றைக்கு என்ன காரணத்திற்காக வெடி வெடிக்கப்பட்டது என்றும் தெரியவில்லை, இன்றைக்கு என்ன அவரிடம் இல்லாமல் போய்விட்டது பேசாமல் இருந்து விடுகிறார்கள் என்று புரியவில்லை. கூட்டி கழித்து பார்த்தால், அது பாசகவின் உள்ளடி வேளை என்று தெள்ளத்தெளிவாக தெரிகின்றது.

புதன்கிழமை இந்த ஆட்சியின் கடைசி பாராளுமன்ற கூட்டம் முடிந்து அடுத்த தேர்தலுக்கு பிரச்சாரத்திற்கு தயாராகுகிறார்கள் இந்த 350கிலோ வெடிகுண்டை வெடித்து துவங்கி வைத்துள்ளார்கள்.

இன்றைய செய்திகளில் இராணுவம் தனது துப்பாக்கியை எடுத்து திருப்பி சுடலாம் என்று மோடி அனுமதி கொடுத்துள்ளதாக சிறுபிள்ளை தனமான தலைப்புகளை தந்தி செய்திகளில் பார்க்கமுடிகின்றது.

இனி பாசக ஆளாத மாநிலங்களில் தீவிரவாதத்தின் பெயரில் பாசகவின் 350கிலோ குண்டுகள் பரவலாக வெடிக்க துவங்கும். யார் யார் எல்லாம் கொல்லப்படபோகிறார்கள் என்று கவலையாக இருக்கிறது.

Wednesday, February 13, 2019

10% ஏழைகளுக்கு இந்த 16 ரூபாய் கொடுத்து இருக்கலாமே

ஒரு 16 ரூபாயை கொடுப்பேன் என்று சொல்லி வருன்கின்ற 2019ஆம் தேர்தலில் வாக்குகள் கேட்கிறது பாசக.

மக்களோ அந்த 15 இலட்ச ரூபாயை எங்களுக்கு தந்தது போல் இந்த 16 ரூபாயும் கொடுப்பீங்க போல என்று கேலி பேசும் அளவிற்கு இருக்கும் இந்த நிலையிலும், மோடி, யோகி, அமித்த சா என்று பாசக அவர்களது அணியுனுடன் தமிழகம் வருவது ஏன் என்று தான் புரியவில்லை.

பாமக தமிழகத்தில் ஏற்கனவே சாதி வெறி வெட்டு குத்து என்று பாசக செய்யும் அனைத்தையும் செய்து நாங்கள் தான் அவைகளுக்கு மொத்த குத்துகை என்று இருக்கும் பட்சத்தில் இனக்கலவரம் மதகலவரம் என்றும் கூட முயற்சி கூட எடுக்க திராணி இல்லாத பாசக எதற்கு தமிழகம் வந்து போகிறது.

தேர்தல் கூட்டங்களுக்கு வட நாட்டு மக்களுக்கு காசு கொடுத்து கூப்பிட்டு கொண்டு வந்து காட்டி யாரை ஏமாற்றுவதாக பாசக நினைத்துக்கொண்டு இருக்கிறது.

எப்போ பார்த்தாலும் பசுமாடு, சாணி, மாட்டு மூத்திரம் என்று அலையும் தமிழக பாசக மக்கள் ஏன் இப்போது எல்லாம் மாடு என்று கூட மறந்தும் கூட சொல்ல மறுக்கிறார்கள்.

தமிழகத்தில் பாமகவில் இருந்து சீமான் வரை இலவசங்களை எல்லாம் வெறுக்கும் ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது. இருந்தும் இந்த பெரிய கூட்டம் இது வரையில் இந்த 16 ரூபாய் இலவசத்தை இது வரை எதுவுமே சொல்லாதது மட்டும் இல்லை. 2014ல் கொடுப்பதாக சொன்ன 15 இலட்சம் எங்கே என்று தான் கேட்கிறார்களே தவிர ஏன்டா இலவசமா 15 இலட்சம் தரீங்க என்று இது வரையில் ஒரு வார்த்தை கூட கேட்க்காமல் இருப்பது ஏனோ அவர்களுக்கே வெளிச்சம்.

இப்படி 16 ரூபாயும் கொடுத்து வாங்கி கட்டி கொள்வதற்கு பதில் அந்த 16 ரூபாயையும் பேசாம அந்த 10% ஏழைகளுக்கே கொடுத்து மோடி அரசு புண்ணியம் தேடிக்கொண்டு இருக்கலாம்......

Tuesday, February 12, 2019

இந்தியாவை சீனாவிற்கு காட்டிகொடுத்த மோடி - தேச பற்று என்று பேசுகிறார்

126 போர் விமானங்கள் வாங்கினால் பாதுகாப்பு இல்லை என்று 36 விமானங்கள் வாங்கினால் தான் பாதுகாப்பு என்று குழந்தை கூட நம்பாத பொய்யை பாசக மோடியும் நிர்மலாவும் திரும்ப திரும்ப சொல்கிறார்கள்.

இதிலே காங்கிரசு தேசப்பற்றை அடமானாம் வைத்துவிட்டதாகவும், தன்னால் மட்டும் தான் நாட்டை காட்டிகொடுக்க முடியும் என்றும் பரைசாற்றுகிறார் மோடி.

126 விமானங்கள் இருந்தால் வேகமாக தாக்குதலும் தற்காப்பும் நடக்கும் அதுவா சீனாவிற்கு வேண்டும். 36 மட்டும் வைத்துக்கொண்டு போர் மிரட்டல் வரும் போது போதிய போர் விமானங்கள் இல்லாதால் தான் தோற்றேன் இல்லை என்றால் சீனாவை காலிலே உதைத்து அனுப்பி இருப்பேன், அப்படி விமானம் வாங்கி வைக்காத தவறும் காங்கிரசு தான் காரணம் என்று சொல்ல துடிக்கும் மோடிக்கு தான் அதிக தேச பற்று இருக்கிறது. நம்புங்கள் மக்களே  நம்புங்கள்...........

விமானங்கள் வாங்காமல் இருப்பது - தேசபற்று
காந்தியை கொல்வது - மனிதாபிமானம்
பொய் பொய்யாக புளுகுவது - அறிவு
ஒவ்வொறு நாளும் வெறூம் அறிக்கைகளை மட்டும் வெளியிடுவது - ஆக சிறந்த ஆட்சி

இன்னும் இப்படி முட்டாள் தனமாக எத்தனை நாளைக்கு தான் இந்த பாசக மக்கள் பேசிக்கொண்டு திரிவார்கள். அதையும் மொழி பெயர்த்து இந்த அற்ப மக்கள் அகமகிழ்வார்களோ.....

தங்களுக்கு தான் ஆட்சி செய்ய தெரியும் என்று சொல்லி திரிந்த பாசகவிற்கு ஒரு திட்டத்தை கூட தனாக தீட்ட தெரியாதது மட்டும் இல்லை. ஏற்கனவே இருக்கும் திட்டத்தை கூட நிறைவேற்ற தெரியாத கூட்டம் என்றும் இந்த 5 ஆண்டுகளில் நிரூபித்துள்ளார்கள்.

கொலை செய்வது கலவரம் செய்வது பொறுக்கி தனம் செய்வது தவிர வேறு எதையுமே தெரியாத பாசகவை மீண்டும் தேர்ந்து எடுங்கள் மக்களே................

தேர்தலுக்காக மீண்டும் கோத்ரா - பாசக மக்களே கவனம்

தேர்தலில் வெற்றியே பெறமுடியாது என்று உறுதியாக தெரிந்துவிட்டதாலும், மதவாத வெறி பலிக்கவில்லை என்ற விரக்தியில் தனது கட்சிகாரர்களை தானே கொன்றுவிட்டு அடுத்தவர் மீது பழியை போட்டுவிட்டு அதற்காக எனக்கு தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற வைக்கவும் என்று கோத்ராவை காட்டி தேர்தலில் வந்த மோடியின் சூத்திரத்தை மறுபடியும் கையில் எடுத்துள்ளது.

இனி யார் தலையில் எல்லாம் தீ வைப்பார்களோ, பத்தாக்களே பத்திரமாக இருக்கவும். அடுத்த வெட்டு உங்களுக்காக கூட இருக்கலாம்....கவனம் கவனம்.......