Saturday, February 24, 2018

பாசகவின் 100 கோடியா இல்லை 1000 கோடியா என்றதில் முளைத்து இருக்கிறது கமலின் மநீம

தமிழகத்து ஆட்சியை எப்பாடு பட்டாவது பிடித்துவிடுவது என்ற நோக்கில் ஆக்டோபசு கரங்களை மக்களின் கவனத்திற்கு வராத வண்ணமாக பவ வடிவங்களில் நீட்டி மடக்க பார்கிறது பாசக.

மநீம முதலில் தொடங்கி இருப்பதன் காரணம் 10 படங்களில் என்ன சம்பாதிப்பீர்கள் அதை இப்போதே கொடுக்கின்றோம் பாசகவிற்காக விசுவரூபம் போல் ஒரு திரைக்கதையை எழுதி மக்களின் முன் அதை அரசியல் இயக்கமாக எடுத்துகொடுங்கள் என்ற பேரத்தில் 100 கோடி ரூபாய்கள் பரிமாறப்பட்டு மநீம மலர்ந்து இருக்கிறது.

யாரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைக்கதையை அரங்கேற்றிய அதே பாணியில் அரங்கேறி இருக்கிறது மநீம.

ஆனால் தலைவனின் 10 படங்களின் மதிப்பு 1000 கோடி என்றதால் இன்னும் பேரம் இழுத்துக்கொண்டு இருக்கிறது. அந்த 1000 கோடி கைமாறியதும் இதே போல் தலைவன் வள்ளி படத்தில் பேசிய ஞானகிருக்கன் பேச்சியை மேடையிலே அரங்கேற்றுவார்.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது அரங்கில் பேசிய அதே பாணியிலான வசங்களும். அந்த நடிகர்களின் நாடகத்தை உண்மை என்று நம்பி மக்கள் உணர்ச்சி பெருக்கில் வாக்களித்ததும் ஓவியா ஆர்மி என்று நிறுவியதும் இந்த 100 கோடி மநீம நாடகத்திலும் நடக்கும்.

என்ன இந்த 100 கோடி மேடை நாடகத்தில் நீதிக்கட்சியின் மக்களை அசிங்கபடுத்தி இருக்க வேண்டாம். பாவம் அவர்களும் இந்த ஓவியா ஆர்மியில் சேர்ந்தது போல் சேர்ந்து மேடை ஏறி அசிங்கப்பட்டிருக்க வேண்டாம்.

1000 கோடி பேரத்தின் முடிவில் தலைவர் இருப்பார் போலும் அதனால் தான் நாமும் பேசாமல் வேலையை பார்க்கலாம் என்று அறிக்கை விட்டுள்ளார்.

ஆமாம் இந்த 1100 கோடி ரூபாயை பாசக எங்கு இருந்து எடுத்து இந்த இரண்ட நடிகர்களின் மேடை நாடகத்திற்கு கொடுத்து இருக்கும்.

 நாளைக்கு தமிழகத்தின் எந்த வங்கி திவால் என்று அறிவிக்க போகின்றதோ, எந்த எந்த ஏழை எளிய மக்கள் எல்லாம் இந்த பாசகவின் மிரட்டலுக்கு பயந்து சேமித்து வைத்து இருக்கின்ற வங்கியோ. இன்றையில் இருந்து ஏர்செல் சேவை எல்லாம் கிடையாது என்றும், சேவை பாக்கி இருப்பவர்களுக்கு எல்லாம் மஞ்சள் கடுதாசி கொடுத்தாச்சு என்று சொன்னதையும் இங்கே நாம் இணைத்து பார்க்கலாம்.

0 comments: