Friday, March 29, 2019

தமிழிசை மோடி முடிந்தால் உண்மையை பேசவும் - பாசக

இப்போது என்று இல்லை இனி எப்பொழுதுமே மோடியாலோ இல்லை தமிழிசையாலோ உண்மையை பேசவே முடியாது. ஏதாவது சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். ஒன்றுமே இல்லாத போது. எதிர்கட்சிகளை பார்த்து பொய் சொல்கிறார்கள் என்று புழுக வேண்டியது தான். வேற என்ன செய்ய......

செளபாக்கியவதி மோடி சுட்ட 300 பேருடைய உடல் எங்கே

அமெரிக்காவுக்கு தெரிந்து தனது மக்களை இந்தியா போகாதே என்று சொன்ன பிறகு கூட 45 மக்களை 300 கிலோ குண்டு வைத்து கொன்றுவிட்டு பாக் வெடித்தது என்று புழுகுவதேனோ...

இராணுவகட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு சாலையில் அணாயசமாக 300 கிலோ வெடிகுண்டு ஒரே வண்டியில் வந்தது எப்படி

இந்தியா சுட்டதாக சொல்லும் அந்த பாக்கின் 2 விமானங்கள் எங்கே

15 இலட்ச ரூபாய் பணம் கொடுப்பதாக சொன்னீர்களே அந்த பணம் எங்கே

300க்கு விற்ற எரிவாயு இப்போது 1000க்கு விற்கிறதே காரணம் என்ன

உலகம் பூரா பெட்ரோல் கம்மியான விலையில் விற்க இந்தியாவில் மட்டும் ஏன் இவ்வளவு விலை

சரசுவதி நதியை தேட 10,0000 கோடி பணத்தை இறைத்தவரே மக்களுக்கு வேண்டிய எரிவாயுக்கு மானியமாக அதை கொடுக்காமல் விட்டது ஏன்

விவசாயிகளின் கடனுக்கு அவர்களது வீட்டையும் மாட்டையும் பிடுங்கும் வங்கி மோடி திருடி கொண்டு சென்றபணத்திற்கு என்ன செய்தது

நாங்க எதுக்கு எங்க பணத்தை எல்லாம் வங்கியில் வைக்க வேண்டும் மினிமம் பேலன்சு இல்லை என்று தண்டமாக 200, 300, 500 அழவேண்டும்.

திருடிக்கொண்டு ஓடிய மோடியின் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டதா, அப்படி இணைக்கப்பட்டிருப்பின் எப்படி திருடிக்கொண்டு ஓடினார். பிறகு எதுக்கு எங்களுக்கு இணைக்கவில்லை என்றால் பணம் எடுக்க முடியாது என்று சொல்லி அலைகழித்தீர்.

நம்ம விவசாயிகளுக்கு கொடுக்க பணம் இல்லை என்று சொன்னீர் பிறகு எதுக்கு சோமாலியாவுக்கு அள்ளி அள்ளி கொட்டினீர்.

இந்தியாவின் உண்மையான வளர்ச்சி 2016க்கு பிறகு 2019 வரை எவ்வளவு

இரபேல் விமானம் வாங்குவதை சீனா மிரட்டலுக்கு பயந்து தானே குறைத்தீர்கள். இந்தியாவை சீனாவிற்கு காட்டி கொடுத்தவர் தானே நீர்.

ஏன் உங்களது மந்திரி சபையில் எப்போதும் நீங்களும் நிர்மலா மட்டுமே பேசுகிறீர்கள் இல்லை இராணி பேசுகிறார் மற்றவர்களுக்கு எல்லாம் பேசவே தெரியாதா இல்லை அவர்கள் எல்லாம் பொம்மை அமைச்சர்களா....

எந்த கேள்விகளுக்கு மோடியோ அல்லது தமிழிசையோ பதில் அளிப்பதே இல்லையே ஏன்........

2019ல் எப்படியாது வாக்கு இயந்திரத்தின் உதவியுடம் வெற்றி பெற்றுவிடலாம் என்று தானே இன்னனும் தைரியமாக புழுகிக்கொண்டு இருக்கிறீர்கள்.

பதில் சொல்லுங்க மக்கா பதில் சொல்லுங்க.......

Tuesday, March 26, 2019

உங்கள் மகன் மகள் மருத்துவம் படிக்க வைக்க மோடிக்கு வாக்களியுங்கள்

உங்கள் மகன் மகள் மருத்துவம் படிக்க வைக்க மோடிக்கு வாக்களியுங்கள், மகன் மகள் மட்டும் இல்லை பேரன் பேத்திகளும் அவர்களது வாரிசுகளும் மருத்துவம் படிக்க வைக்க நீங்கள் மோடிக்கும் பாசக அரசுக்கும் தான் வாக்களிக்க வேண்டும்.

நீட் பரீட்சை இல்லாததால் தரமான மருத்துவர்கள் உருவானதை தொடர்ந்து மத்திய அரசு பாட திட்டம் தவிர மா நில அரசு பாடதிட்டத்து மாணவர்கள் எல்லாம் தரமில்லாத மருத்துவராக ஆகுவதை தடுத்து உலகிற்கு தகுதியான மருத்துவர்களை உருவாக்கிய மோடியும் அவரது பாசக அரசுக்கும் அதற்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கிய அதிமுக கூட்டணிக்கு தான் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

Saturday, March 23, 2019

தமிழகமே ஒரே ஒரு பாமக போதும் - சீமான்

தேர்தல் பரப்புரைகளில் தற்பொழுது அசத்துவது சீமானின் அரசியல் பேச்சுகள் தான்.

சீமானின் பேச்சும் சரி சமீபமகாக அவரது கட்சி சார்பாக வரும் அரசியல் விளம்பரங்களும் சரி அசத்தல் என்றால் அப்படி ஒரு அசத்தல்.

தான் ஆட்சி பொருப்புக்கு வந்தால் என்ன என்ன எல்லாம் செய்வோம் என்று மிகவும் அழகாகவும் வரிசையாகவும் விவரிப்பதில் அவருக்கு நிகர் அவரே.

இப்படி தான் பாட்டாளி மக்களுக்காக உழைக்க என்னக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கள் என்று கேட்டும் அதை வைத்துக்கொண்டு நீதி கேட்பேன் என்றும். உழைக்கும் மக்களை யாரும் கண்டுக்கொள்ளவே இல்லை தான் தான் உழைக்கும் மக்களின் ஏக போக பிரதிநிதி போல அல்லவா பேசினார்கள். மக்களும் பாமகவை நம்பி வாக்கும் அளித்தது. ஆனால பாமகவோ அந்த வாக்குகளை வைத்து நல்லா கல்லா கட்டியது தான் மிச்சம்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு பக்கம் செல்வதும் கடைசியில் தான் செல்லும் பக்கம் தான் வெற்றி என்றும் சொல்லும் அளவுக்கு சென்னது பாமக.

இந்த நிலையில் கைவிடப்பட்டு அரசியல் அனாதையாக ஆக்கப்பட்ட பாமக மாற்றம் முன்னேற்றம் மாங்கா மணி என்று இப்பொழுது பல் இளித்துக்கொண்டு ஏன் இப்படி தரைகுறைவான வேலை என்று கேட்டால் 8 வருடம் நேர்மையாக இருந்தோம் ஆனால் யாரும் கண்டுக்கவில்லை அதனால் தான் இப்போது திருட ஆரம்பித்தோம் என்று இப்போது மேடைக்கு மேடை முழங்குகிறார்கள்.

இதே பாதையில் இப்போது சீமான், மறைமுகமாக பாசகை ஆதரிப்பதும் மேடைக்காக கொள்கை பேசுவதும் சீமானுக்கு கைவந்த கலை.

இதே சீமான் முன்பு இலங்கை பிரச்சனை என்று அதிமுகவையும் பாசகவையும் ஆதரித்தவர். ஒரு காலத்தில் தன்னை பகுத்தறிவாளி என்று சொல்லிக்கொண்டவர் பிற்காலத்தில் மோடி சொன்ன அதே வாசகம், 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழகம் கண்டது என்ன என்று அருமையாக கேட்டார், பிறகு அதே தேர்தலில் கடலூரில் அரசியல் அனாதையாக்கப்பட்டார்.

இன்று மறுபடியும் மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் குட்டையை குழப்பும் வேலையில் இறங்கி இருக்கிறார். அழகாக பேசுவார் மேடையில் தொடர் வசனம் பேசுவார் நல்ல கொள்கைகளை வைத்து இருப்பதாக சொல்வார். ஆனால அவரது வரலாறு எங்கே வாய்பு வருகிறதோ அங்கே தாவுவது தான் அவரது இயல்பு. இப்படி தனக்கும் சரி இயகத்துக்கும் சரி எந்த கொள்கையும் இல்லாத கட்சியும் தலைவர்களும் மற்றும் ஒரு பாமகவிற்கு சமம். ஆகவே இன்னும் ஒரு பாமகவை உருவாக உதவாதீர்கள் வாக்காள மக்களே..........

இப்படி சீமான் சொல்வது போல் 2014ல் மோடி மேடைக்கு மேடை முழங்கினார், மக்களும் நம்பி அவரிடம் ஆட்சியை கொடுத்தார்கள். பிறகு தான் தெரிகின்றது மோடி வெரும் வசனம் மட்டுமே பேசும் நடிகர் மட்டும் தான் மற்றபடி தலைவர் எல்லாம் ஒன்றும் இல்லை என்று. சீமானை நம்பி தமிழகத்தை நாசம் செய்துவிடாதீர்கள் மக்களே எச்சரிக்கை......

Friday, March 22, 2019

பொள்ளாச்சி சம்பவத்தை இவர் விசாரித்து இருந்தால் இந்நேரம் தீர்பே வந்து இருக்கும்

செளபாக்கியவதி மோடியின் அரசின் கீழ் நியமிக்கப்பட்டவர்கள் மிகவும் ஞாயமானவர்கள் என்றும். அவர்களால் மட்டும் தான் நீதியையும் ஞாயத்தையும் கட்டிக்காக்க முடியும் என்றும் பரவலாக எப்போதும் பேசப்படுவது உண்டு.

அப்படி செளபாக்கியவதி மோடியின் தலைமையில் இயங்கும் இயக்கமாக இருந்தாலும் சரி இல்லை ஒரு சாதாரண தொண்டனாக இருந்தாலும் சரி, நாட்டின் நலனையும் நாட்டின் எதிர்காலத்தையும் மட்டுமே மனதில் கொண்டு எந்த வித விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்காமல் மக்களை காக்கும் பணியாக மட்டும் கொண்டு கடமையாற்றும் யாரானாலும் சரியானதொரு விசாரணையை நடத்த கூடியவர்கள் என்றும் நம்பப்படுகின்றது.

வடக்கே நடந்த சொராபுதின் வழக்கு முதல் கடைசியாக தூத்துகுடி ஆலையை திறக்கலாம் என்ற தீர்ப்பு வரை மிகவும் ஞாயமாக அழகாகவும் ஆழமாகவும் விசாரித்து வழங்கப்பட்டவைகளாகும்.

அப்படி பட்ட ஒரு அமைப்பையோ அல்லது விசாரணை குழுவிடனோ விசாரிக்க கொடுத்து இருக்கலாம். அதை விடுத்து தமிழகத்தின் சிபிசிஐடி கையில் இந்த பொள்ளாச்சி வழக்கு ஏன் கொடுப்பான் ஏன்.

இதற்கு முன்னால் செளபாக்கியவதி மோடி அவர்களின் நேரடி பார்வையில் பணியாற்றும் பன்வாரிலால் வெறும் 6 மணி நேரத்தில் குற்றவாளி யார் என்று கண்டு பிடித்து நீதி வழங்கியது அனைவருக்கும் நினைவில் இருக்கும் என்று நம்புகின்றேன்.

அந்த மாமனிதன் பன்வாரிலால்லிடம் இந்த பொள்ளாச்சி வழக்கை விசாரிக்கும் பொருப்பை கொடுத்து இருந்தால் இன்னேரம் அந்த குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்திருப்பார்கள். 21 மாதமாக பிணையில் கூட வெளி வர முடியாத அளவிற்கு கவணிப்பு அற்புதமாக இருந்து இருக்கும். தமிழகம் தவறு செய்துவிட்டதே என் செய்ய.......

Thursday, March 21, 2019

என்ன பிரதமர் மோடிக்கு திருமணமா - யாரும் சொல்லவே இல்லை

செய்தியை கேட்டது என்னக்கும் தான் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை, கிட்ட தட்ட எல்லா செய்தி ஊடகங்களிலும் தேடித்தான் பார்த்தேன் ஆதாரம் கிடைக்காமல் பேசக்கூடாதே என்று.

அதுவும் தேர்தல் காலமான இந்த நாட்களில் இப்படி மோடிக்கு திருமணம் என்று செய்திதள் வந்தால் அவை தேர்தலில் பாதிப்புகளை ஏற்படுத்தாதா என்ற சிந்தைகளும் இல்லாமலா மோடி இப்படி எல்லாம் செய்து இருப்பார் என்ற கவலையும் இருக்க தான் செய்தது.

அப்படி மோடிக்கு திருமணம் நடந்தால் டெல்லியில் நடக்குமா இல்லை குசராத்தில் நடக்குமா என்ற சந்தேகமும் வந்து போகாமல் இல்லை.

ஒரு வேளை ஒரு முறையாவது பிரதமாரானால் தான் திருமணம் செய்துகொள்வது என்ற தீர்மானத்தில் இருந்திருப்பார் போலும் மோடி. அதனால் தான் மோடியின் திருமணம் பற்றிய எந்த செய்திகளுக்கும் இது வரை மோடி எந்த பதிலும் அளிக்கவில்லை போலும்.

மோடி திருமணம் செய்துக்கொள்ள போகும் அந்த பெண் யாராக இருக்கும், ஒரு அரசியவாதியாக இருப்ப்பாரோ, இல்லை ஒரு தொழிலதிபராக இருப்பாரோ, இல்லை வெளி நாட்டில் வாழும் அவரது இரசிகையாக கூட இருக்கலாம். யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் பொங்க நானும் ஆர்வமாக இரவும் பகலுமாக இணையதிலும் தெரிந்த மக்களிடமும் கேட்டுக்கொண்டும் இருக்கிறேன்....

ஒருவருக்கும் தெரியவில்லை, ஆனால் அன்றாடம் செய்திகளை வெளியிடும் போது மட்டும் மோடியின் பெயரை செள்பாக்கியவதி மோடி என்று தான் குறிப்பிடுகிறார்கள். சுருக்கமாக இனிமேல் செள மோடி என்று மட்டும் தான் குறிப்பிடுவார்கள்.

பொதுவாக திருமண பத்ரிக்கையில் குறிப்பிடும் போது தான் செளபாக்கியவது மோடி என்று குறிப்பிடுவார்கள். ஆனால் மோடியை மட்டும் செய்திதாள்களில் கூட செளபாக்கியவதி என்று குறிப்பிடுவது ஏன் என்று தான் விளங்கவில்லை. தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.........

Tuesday, March 19, 2019

என்னுடைய ஓட்டு மோடிக்கு தான் - ஏன் - 2

1994ல் இருந்து பொறியியல் எந்த படிப்பு படித்தாலும் வேலை கிடைத்துக்கொண்டு இருந்தது 2015 வரை. 2015க்கு பிறகு மெல்ல மெல்ல உலக அளவில் வேலை கிடைக்காமல் போக இந்தியாவிலும் யாருக்கும் வேலை கிடைக்காமல் போக துவங்கியது. 2014ல் மோடி தேர்ந்து எடுத்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு புதிய வேலை வாய்புகளை உருவாக்கி தருவேன் என் என்று உறுதி அளித்தார் மோடி. ஆனால் 2014 முதல் 2019 மார்ச்சு மாதம் வரை அவரால் அந்த ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்புகளை உருவாக்கவே முடியவில்லை. -- அந்த ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலைவாய்புகளை உருவாக்க மோட்டிக்கு இன்னும் ஒரு வாய்ப்பை கொடுக்க எனது ஓட்டு மோடிக்கு தான்.

2014ல் மோடி பிரதமரானால் வெளி நாட்டில் இருக்கும் கருப்பு பணம் எல்லாம் கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் 15 இலட்சம் ரூபாய் கொடுப்பேன் என்று உறுதி மொழி கொடுத்தார். ஆனால் 2019ல் காபந்து அரசாக மாறும் வரை மோடிக்கு அந்த 15 இலட்சம் ரூபாய் கொடுக்கும் வாய்ப்பை நிதி அமைச்சகமும் முந்தைய காங்கிரசு அரசும் சேர்ந்து கிடைக்கவிடாமல் சதி செய்ததுனால். -- மோடிக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் தான் அவர் சொன்னது போல் வீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பணம் மோடியால் மட்டுமே கொடுக்க முடியும் ஆகையால் என்னுடைய ஓட்டு மோடிக்கு தான்.

2016 நவம்பர் 8ம் தேதி முதல் 2019 இது வரை எனது பணி இடங்களில் ஐயா நான் வங்கியில் பணம் எடுக்க போகவேண்டும் நீண்ட வரிசையில் நிற்கவேண்டும் ஆகையால் என்னால் இன்று வேலைக்கு வர முடியாது என்று சொன்னால், எங்களது வேலை அலுவலகளில் விடுப்பு கடிதம் வாங்காமலும், விடுப்பை எனது கணக்கில் இருந்து கழிக்காமலும் இலவசமாக விடுப்பு கொடுப்பதனால் மோடிக்கு தான் எனது ஓட்டு.

காந்தி ஒரு கொடூரமான மனிதன் அந்த கொடூர மனிதனை கொன்ற கோட்சே எவ்வளவு நல்லவர் என்றது எனக்கு இது வரை தவறாக சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது சிறு வயதில் இருந்து. அந்த தவறை சரி செய்தது மோடி. அந்த மா மனிதன் கோட்சேவுக்கு பட்டேல் சிலையை விட அதிக செலவில் சிலையை செய்து இந்த உண்மையை உலக்கு அறிவிக்க மோடிக்கு மறுபடியும் ஒரு வாய்பை வழங்க வேண்டும் அதனால் என்னுடைய ஓட்டு மோடிக்கு தான்.

2019ல் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்திய ரூபாய் நோட்டுகளில் உத்தமராம் உலகை காக்க பிறந்து கொடூரன் காந்தியை கடைமையாக கருதி கொலை செய்த கோமனாம் கோட்சேவின் படம் பதிக்க மோடி தான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் ஆகையால் எனது ஓட்டு மோடிக்கு தான்.

4 எழுத்துகளை படித்துவிட்டோம் என்ற திமிரில் கௌரி லங்கேசு போன்றோர்கள் இந்தியாவின் இந்து ஆட்சி அமைவதை எதிர்த்து குரல்கொடுத்து வந்தார்கள். இந்தியாவில் இந்து ஆட்சியை கொண்டு வந்து இந்துகள் தவர மற்றை அனைவரையும் கூண்டோடு பரலோகம் அனுப்ப மோடியின் ஆட்சி வந்தால் தான் அது நடக்கும். ஆகவே என்னுடைய ஓட்டு மோடிக்கு தான்.

Monday, March 18, 2019

என்னுடைய ஓட்டு மோடிக்கு தான் - ஏன் - 1

2014க்கு முன் வரை மோடி வந்தால் மாற்றம் முன்னேற்றம் ஊழலை ஒலிப்பேன் என்ற முழக்கத்தில் வந்தார் -- ஆனால் அவர் சொன்ன ஒன்றையும் இன்னும் அவர் செய்து முடிக்கவில்லை அதலால் அவர் அவைகளை செய்து முடிக்கும் வரை கால அவகாசம் கொடுக்கும் பொருட்டு மீண்டும் ஒரு வாய்ப்பை மோடிக்கு கொடுக்க எனது ஓட்டு மோடிக்கு தான்.

2016 முதல் எனது வங்கி கணக்கில் இருந்து என்னால் நினைத்த போது எல்லாம் பணம் எடுக்க முடியாது ஆதலால் என்னுடைய செலவுகள் இந்த 2 ஆண்டுகளில் முக்கால் வாசிக்கும் முழுதுக்கும் குறைந்துள்ளது. ஆதலால் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான் இனி எந்த செலவுமே செய்யாமல் வருமானம் அனைத்துமே சேமிப்பாக மாற வாய்ப்பு அதிகம் இருப்பதால் மோடிக்கு தான் எனது ஓட்டு.

எவ்வளவு தான் படித்தாலும் இனி பக்கோடா போட்டு வித்து தான் காசு பாக்கனும் என்று ஆகி போச்சு ஆனா அது நமக்கு மோடி தொலைக்காட்சி பெட்டியில் சொல்லும் வரை தெரியவே இல்லை பாருங்கள் -- இப்படி போன்ற அழகாக வேலை வாய்புகள் பற்றிய செய்திகளை ஒரு பிரதமரே தொலைக்காட்சியில் இது வரை தெரிவித்தது இல்லை -- இந்த எளிமைக்காக எனது ஓட்டு மோடிக்கு தான்.

தமிழக மீனவர்கள் கொத்து கொத்தாக செத்துக்கொண்டு இருந்தாலும் இந்திய நாட்டில் எவருமே கண்டுகொள்வது இல்லை என்று இருந்த நமக்கு வெறும் 44 துணை இராணுவத்தினர் மீது நடந்த குண்டு தாக்குதலுக்காக பாக் மீது போர் தொடுத்த வீரர் மோடி - அதனால் என்னுடைய ஓட்டு மோடிக்கு தான்.

தமிழகத்தில் கதிராமங்கலம் தொட்டு தேனி மலை வரை குடைந்து நிலத்துக்கு அடியிலும் மலையிலும் இன்னும் என்ன என்ன வழிகளில் எல்லாம் இயற்கை வளங்களை எல்லாம் எடுத்து வெறும் இலட்ச கணக்கான கோடிகளுக்கு அதாணிக்கு கொடுத்துவிட்டு அதற்கு தமிழ் நாட்டுக்கு ஆயிரம் ரூபாய் நட்ட ஈடாக பெற்று தந்த வள்ளல் மோடி - அதற்காக எனது ஓட்டு மோடிக்கு தான்.

உச்ச நீதிமன்றத்தில் எப்படி நீதி உரைக்க வேண்டும், சிபிஐயில் எப்படி விசாரணை நடத்த வேண்டும் என்ற நெறிமுறைகளை சொல்லிக்கொடுத்து நீதிமன்றத்தையும் சிபிஐயையும் ஒரு உயர்ந்த உன்னதமான நிலைக்கு உயர்த்தி அகிலம் முழுதும் பாராட்டை பெற்ற பெருமகனாம் மோடி -- ஆதலால் என்னுடைய ஓட்டு மோடிக்கு தான்.

2014ல் இருந்து 2018 வரை ஏழை மகனான மோடிக்கு வெறும் 35 இலட்சத்தில் தினமும் உடுத்தும் உடையும், ஒரு வேளைக்கு வெறும் 10,000 ரூபாயில் காளானும் மட்டும் தான் கொடுக்கப்பட்டது. நாட்டுக்காக உரங்காமல் உழைக்கும் அந்த ஏழை மகனுக்கு இது எல்லாம் மிகவும் கொஞ்சம் -- ஆகையால் என்னுடைய ஓட்டு இந்த பரம ஏழையாக வாழும் அந்த ஏழை மோடிக்கு தான்.

Thursday, March 14, 2019

இளையராசா - என்ன கர்வம் மனிதனுக்கு

மனிதனுக்கு என்ன இருந்தாலும் இத்தனை கர்வம் கூடாது. ஊரில் அவரை பற்றி அனேகர் பேசுவதைப்போல் அவருக்கு இத்தனை கர்வம் கூடாது தான்.

எவ்வளவு கர்வம் இருந்தால் 70கள் 80கள் 90கள் 2000கள் அப்பால் 2010கள் என்று இசை அமைத்துக்கொண்டு இருப்பார் இந்த கர்வி.

ஏதோ ஒரு 10 ஆண்டுகள் இசையமைத்துவிட்டு போக வேண்டியது தானே, இல்லை போனால் போகிறது 20 ஆண்டுகள் என்று இருந்து விட்டு போகட்டுமே. எவ்வளவு திமிர் இருத்தால், தலைகனத்துடன் இத்தனை ஆண்டுகள் இசையமைக்க இவருக்கு.

சிவாச்சி கணேசன் முதல் 2011 அறிமுக நாயகர்கள் வரை இத்தனை விதமான நடிகர்களின் கதைகளுக்கு அடக்கமே இல்லாமல் எப்படி இவர் இசையக்கலாம்.

இத்தனை ஆண்டுகள் கடந்தாலும் தனக்கு என்று வகுந்து கொண்ட பாதையில் இருந்து வழுவாமல் எப்படி இன்னமும் பயணிக்கலாம் இந்த கர்வி. பல மாய இசை வடிவங்களும் இடி இசையும் வந்து அசத்திக்கொண்டு இருக்கும் இந்த காலத்திலும் எப்படி அவரது இசை மக்களின் மனம் கவரும் வண்ணம் அமையலாம். எத்தனை கர்வம் இருக்க வேண்டும் அவருக்கு.

பாட்டும் பாடின் நடையை கொண்ட கித்தார் தாளமும் அதற்கு என்ற மேள தாளமும் மட்டுமே போதும். பாட்டு இல்லாமல் இருக்கும் இடங்களில் இராக்கு கித்தாரையோ அல்லது வேறு வகையில் ஒரு அலரல் வாசிப்பு என்றாகி விட்ட இந்த காலகட்டத்திலும், காட்சியின் தன்மை பொருத்து அமைய மண்ணின் மணம் போகாமல் இந்திய/தமிழ் இசைப்புகளை உள்ளே புகுத்தி கொடுக்க என்ன கர்வம் இருக்க வேண்டும் இவருக்கு. சாதாரண வார்த்தைகளில் சொன்னால் ஊரே பீச்சா விற்கும் போது இவர் மட்டும் எப்படி முழு சாப்பாட்டை கொண்டு வந்து பரிமாற வேண்டும், கர்வம் தானே மனிதனுக்கு.

இந்த கர்விக்கு கிராமிய இசையும் கர்நாடக இசையும் என்று இருந்துவிட்டு போக வேண்டியது தானே. அதைவிடுத்து, மேற்கத்திய இசை இவருக்கு எதற்கு. கொஞ்சம் கூட அடக்கம் இல்லாமல் இந்திய இசையை மேற்கத்திய வாத்தியம் கொண்டு வாசிப்பதும், மேற்கத்திய தாளகட்டைக்குள் இந்திய இசையை இசைத்துக்காட்டுவதும். என்ன கர்வம் மனிதருக்கு.

இதோடு நிறுத்தினாரா மனிதர், இத்தாலி நாட்டு இசை கலைஞர்களை அழைத்து வந்து தமிழ்ப்பாட்டுக்கு இசை வாசிக்க வைத்துக்காட்டுகிறார் இந்த கர்வி. அவர்களும் என்னவோ இந்தியாவிற்கு போக ஒரு வாய்ப்பு வந்ததே என்று அலைபவர்கள் போலும் உடனே வந்து வாசித்துவிட்டு போகிறார்கள்.

காலத்தில் நிலைத்து நின்ற இயக்குனர்கள் முதல் சில பல படங்களிலே கானாமல் போன இயக்குனர்கள் வரை அனைவருக்கும் எந்த வஞ்சனையும் இல்லாமல் எப்படி ஒரே தரத்தில் இவர் இசையமைத்துக்கொடுக்கலாம். இதை திமிர் என்று சொல்லாமா அல்லது கர்வம் என்று சொல்லாமா. ஆளுக்கு தகுந்தார் போல் கொடுத்து இருக்கலாம், ஆனாலும் மனதுக்குள் வள்ளல் என்ற திமிரா அல்லது எவ்வளவு கொடுத்தாலும் என்னிடம் இருக்கும் இசை குறையாது என்ற கர்வமா.......

இந்தி படங்களுக்கு உங்களின் புது பாடல்கள் எல்லாம் ஒன்றும் வேண்டாம் பழையபாடலில் இருந்து எடுத்து புது பின்னணி இசையில் கொடுங்கள் என்று கேட்டால், முடியாது என்று சொல்ல வேண்டியது தானே. அவர் கேட்டாராம் இவரும் இசைந்து இசைத்தாரம். என்ன கர்வமையா உங்களுக்கு........

வானொலிகளில் இன்றைக்கு 24 மணி நேர சேவைகள் வந்த பிறகு, இரவுக்கு என்று பழையபாடல்கள் அடக்கமாக இருப்பதைபோல் இல்லாமல், இரவிலும், பகலிலும், புது பாடல்கள் என்று வரும் தொகுப்புகள் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் ஒலிக்கும் படியாக இசையமைத்து தள்ள இவருக்கு எத்தனை கர்வம் இருக்க வேண்டும்.

ஒரு வேளை இந்த கர்வி அந்த இனிமை 5000 என்று இத்தனை பாடல்கள் இசையமைக்காமல் விட்டு இருந்தால், மாலை நேரத்திலோ அல்லது இரவில் 10 முதல் 10:30 வரை என்று மட்டும் இவரது இசை ஒலித்துக்கொண்டு இருக்கும். இப்படியா செய்வார் கொஞ்சம் கூட அடக்கமே இல்லாமல்.

இந்த கர்வம் போதாது என்று 4 தேசிய விருதுகள் இவருக்கு என்ன கர்வம் இருக்கும் இந்த மனிதருக்கு. ஏதோ ஒன்று அல்லது இரண்டு என்று இருந்துவிட்டு போகவேண்டியது தானே. கர்வம் பிடித்தவர் 4கா வாங்க வேண்டும். மோசம் செய்த்துவிட்டார் மனிதர்.

சரி இந்த அட்டகாசங்களை தமிழோடு நிறுத்திக்கொள்ள வேண்டியது தானே. அதை விட்டு தென்னகத்து மொழிகள் அனைத்திலும் இதே அட்டகாசம். கொஞ்சமும் கூச்சம் இல்லாம், இத்த வீச்சு வீசி இருக்கிறார் இந்த கர்வம் பிடித்த மனிதர்.

தொலைகாட்சிகளில் திறமை காட்ட என்று நடக்கும் நிகழ்சிகளில் பழைய பாடலை பாடினால் ஒன்றும் பெரிதாக அங்கிகாரம் கிடைக்காது என்று ஆகியேவிட்டது. என்னமோ பழைய பாடல்கள் எல்லாம் எவர் வேண்டும் என்றாலும் சும்மா செறுமுவதை போல் பாடிவிடலாம். ஆனால் புதுபாடல்கள் தான் பாடுவதற்கு சிறமம் என்று போல் ஒரு பொது கருத்தை உருவாக்கியாச்சி. அதிக வாத்தியங்கள் இசை இல்லாமல் பாடலும் வார்த்தகளும் கொஞ்சு விளையாடும் அந்த பழையபாடல்கள் பாட திறமை கட்டாயம் வேண்டும். ஏனோ தானோ என்று எல்லாம் படிவிட முடியாது. அந்த பாடல்களில் வார்த்தைகளின் உச்சரிப்புகள் அவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் இனிமையாகவும் இருக்கும். அது சரி கேட்பவர்களுக்கே இந்த இடத்தில் னவா, ணவா, ழ வா, லாவா, இல்லை ளாவா என்று தெரியா நிலையில் "கன்னன் வந்து பாடிகிரான் காடல் சொன்னான்" என்றால் தெரியவா போகிறது. தமிழ் தானே, அதுவும் பழைய பாடல் தானே, அம்மாவை வீட்டில் கிண்டல் செய்வது போல் இருந்துவிட்டு போகட்டும் என்று இருந்துவிடுவார்கள் போலும்.

இருந்தாலும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் இசையமைத்த பாடல்களை அழகாக பாடி பரிசும் பெரும் மக்களை பார்க்கும் போது இவர் கொஞ்சம் கூட தன்னடக்கம் இல்லாமல் எப்படி எல்லாம் கர்வமாக இருத்து இருக்கிறார் என்று தெரிகிறது. இவ்வளவு கர்வம் கூடாது தான் இந்த மனிதருக்கு.

பாடல் துவங்கிய கனத்தில் இருந்து முடியும் வரை தண்ணீர் பள்ளத்தை நோக்கி ஓடுவது போல் ஒரு ஓட்டம். எங்கேயும் தேங்காமல் வடிந்து சொன்றாலும் மனதில் தேங்கி நிற்கிறதே என்ன மோசகார செயல் இது. பாட்டு நின்ற பிறகு, அல்லது கொஞ்ச நாட்கள் நகர்ந்த பிறகு அந்த பாடலை கேட்டால் மக்கள் உடனே மாற்றாமல் முடித்த பிறகு மாற்றுவது போல் ஏன் இசையமைக்க வேண்டும் இவர். அத்தனை ஒழுங்காக இசையமைத்தால் தான் இந்த கர்விக்கு பிடிக்குமா. ஏனோ தானோ என்று அடக்கமாக இசையமைக்காமல் படத்தில் எழுத்துக்கு போடும் பாடல் எல்லாம் வானொலியில் ஒலிபரப்பும் அளவிற்கு ஏன் இசையமைக்க வேண்டும்.

இதிலே கர்வம் கொள்கிறேன் என்ற நக்கல் பதில் வேறு அவருக்கு. என்ன கர்வமையா உங்களுக்கு.

இன்னமும் இந்த கர்வம் குறையாமல் அப்படியே இரும், இத்தனை பாடல்களையும் இசை வடிவங்களையும் இவ்வளவு கர்வமாய் கொடுத்ததை போல் இனிமேலும் அப்படியே கர்வமாக கொடும். அமைதி காக்கிறேன், அடக்கமாக வாசிக்கிறேன் என்று எல்லாம் துவங்க வேண்டாம். உனது கர்வ இசையே மீண்டும் மீண்டும் வரட்டும், வந்து எங்களை எல்லாம் வாட்டி எடுக்கட்டும். உனது இசையால் நாங்களும் நல்ல இசையை கேட்கும் கர்வியாகி போனதை இவர்களும் எங்களை மீண்டும் மீண்டும் விமர்சனம் செய்யட்டும்.

உங்களிடம் உங்களது இசையை மட்டுமே இரசிக்கும் கர்விகளுக்கு எத்தனை சொன்னாலும் புரியபோவது இல்லை. அப்படியே புரிந்தாலும் அப்படி இரசிப்பது கர்வம் என்று ஆனால், இன்னமும் கர்வப்படுவோம் என்று அடக்கமே இல்லாமல் வீண் பேச்சு பேச போகிறார்கள்.

Wednesday, March 13, 2019

பொள்ளாச்சி வழக்கில் என்ன நடக்கும்

தமிழகம் முழுதும் இப்போது பேசப்பட்டு வரும் பொள்ளாச்சி வழக்கிற்கு முன் வந்த நிர்மலா தேவி வழக்கு தான் ஞாபகத்திற்கு வருகின்றது.

பணம் மற்றும் மற்றவைகளை காட்டி அடுத்த வீட்டு பெண்களை அதுவும் படிக்க அனுப்பிய இடத்தில் ஒரு பேராசிரியை இப்படி கேவலமாக நடந்துகொண்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு மட்டும் இல்லாது வழக்கும் நடந்துக்கொண்டு இருக்கிறது.

நீதி என்றால் அது அனைவருக்கும் ஒன்று தான் என்று அனைத்து நாடுகளிலும், புத்தகங்களிலும் இருந்தாலும் இந்தியாவில் நீதி எப்பவுமே மனு நீதிதான். குற்றம் பார்த்து, குற்றவாளி பார்த்து, பாதிக்கப்பட்டோர் பார்த்து தான் நீதி வழங்கும் முறை காலம் காலமாக இந்தியாவில் புரையோடி போய் கிடக்கிறது.

இந்த அழகில் அந்த 4 பேரையும் உயிருடன் கொளுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வேறு மக்களுக்கு. அந்த முட்டாள் மக்களை நினைத்து சிரிப்பது தவிர வேறு என்ன செய்ய முடியும். ஆனால பட்ட நிர்பயா கொலை வழக்கில் கூட இந்த மனு நீதிதான். இந்த பொள்ளாச்சி வழக்கில் மட்டும் என்ன நடந்துவிட போகிறது. அதுவும் அதிமுகவை பாசக விலைகொடுத்து வாங்கி ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்து இருக்கும் பாசக தனது மனு தர்மத்தை விட்டு கொடுத்துவிடவா போகிறது. நிர்மலா தேவி 200 நாட்களாக நீதிமன்ற படியேறினார் அவரது பற்கள் எல்லாம் உடக்கப்படு இருக்கிறது. பார்ப்போம் இந்த வழக்கில் யார் யார் பற்கள் எல்லாம் உடக்கப்படுகின்றது என்று.....

Saturday, March 9, 2019

2019ல் பாசக ஆட்சிக்கு வந்தால் இனி ரூ50,000 கூட வங்கியில் இருந்து எடுக்கமுடியாது

 நமது வங்கி கணக்கில் இருக்கும் நமது பணத்தை எவ்வளவு எடுக்கலாம் என்று இந்தியாவில் ஒரு சட்டம் பாசகவால் கொண்டு வரப்பட்டு மிகவும் அவதிக்குள்ளாக்கப்பட்டார்கள். கிட்ட தட்ட 2016ல் துவங்கிய இந்த துன்பம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் பழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டு, இவ்வளவு தான் கொடுக்குறானுக என்று புலம்பிவிட்டு போகும் சாமாணியர்கள் தான் அதிகம்.

இதுவே 30,000 கோடி, 5,000,00 கோடி என்று நாட்டை கொள்ளை அடித்துக்கொண்டு போகும் குசராத்து பணக்காரர்களுக்கு இந்த விதிகள் எதுவும் பொருந்தாது என்று ஒருவர் இல்லை பல முறை நிரூபித்துள்ளார்கள். அது மட்டும் இல்லாது பணக்காரர்கள் வங்கிகளில் வாங்கிய கோடிக்கணக்கான பணத்தை அவர்கள் கட்டவேண்டாம். அப்படியே கட்டிதான் ஆகவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டால் வாங்கிய 50,000 கோடி ரூபாய்க்கு வெறும் 500 கோடி மட்டுமே கட்டிணால் போதும் என்று இது வரை பல வழக்குகளில் நிரூபித்துள்ளார்கள். அந்த வெறும் 500 கோடியாவது கட்டினார்களா அல்லது அந்த கணக்கை எழுதும் கணக்காளரிடம் வெறு, 5 கோடி மட்டுமே கொடுத்துவிட்டு நீதிமன்றதில் கட்டியாச்சு என்று சான்றிதழ் வாங்கினார்களா என்றும் தெரியாது.

ஆக மொத்தம் இந்த பண கணக்குகள் மற்றும் கண்டிப்புகள் எல்லாம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு மட்டுமே ஏன்று பாசக வெளிப்படையாகவே சொல்லி கொண்டு வரும் இந்த வேளையில். காசுமீரத்தில் சமீபத்திய கையெறிகுண்டுகளை வீசியவனுக்கு கொடுக்கப்பட்டதாக வரும் செய்திகள் வெறும் 50,000 ரூபாய்க்கள் மட்டும்.

இந்த செய்தி முதலில் தேசபக்தி சம்மந்தப்பட்டதாக பரப்பபட்டு வருகிறது. 2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஆதார் அட்டை, பாண் அட்டை, ஓட்டுனர் உரிமம் என்று எல்லாவித அடையாளங்களையும் காட்டாமல் யாரும் கையில் ஒரு 100 ரூபாயை கூட வங்கியில் இருந்து எடுக்கவோ போடவோ முடியாது. அப்படி இருக்க இந்த 50,000 பணம் எங்கு இருந்து எடுக்கப்பட்டதாக பாசக வெளியிட்டு இருக்க வேண்டும்.

ஆனால் பதிலாக ரூ50,000 பணம் தீவிரவாதத்திற்கு பயன்படுத்தப்பட்டது என்று மட்டும் செய்திவெளியிடுகின்றது. இந்த அழகில் புதிதாக வெளிவந்த ரூபாய் நோட்டுகளில் எலக்ராணிக் சிப்புகள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், எந்த எண்ணுடைய நோட்டு இப்போது எங்க இருக்கிறது என்றும் பூமிக்குள் புதைத்து வைத்தாளும் செயற்கைகோள் காண்பித்துவிடும் என்றும் விளம்பரபடுத்தப்பட்டதை நினைவில் இருந்து மறையாத இந்த சின்ன இடைவெளியில் இப்படி ஒரு பகீர் புகாரை வெளியிட்டு இருக்கிறது பாசக அரசு.

ஆகவே அடுத்த முறை பாசக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் வெறும் 50ரூபாயை கூட நமது வங்கி கணக்கில் இருந்து நாம் எடுக்க முடியாது. அதற்கு பதிலாக அந்த நமது பணம் நேராக நிரவ்மோடிகளுக்கும் மல்லையாகளுக்கும் அதாணிக்களுக்கும் அம்பாணிகளுக்கும் கொண்டு சென்று கொடுத்துவிட்டு, உங்கள் கணக்கில் 50 ரூபாய் பணம் கூட எடுக்காமல் இருந்ததுக்கு தண்ட தொகை என்று எடுத்துகொண்டு விடுவார்கள் இந்த பாசக........

Friday, March 8, 2019

மோடி தமிழக தேர்தலில் இப்படி தான் இனி பேசுவார் கர்னாடகாவில் பேசியது போல்

தமிழகத்தின் அப்துல் கலாம் திராவிட கட்சிகளால் அவமானப்படுத்தப்பட்டார். அவரின் நினைவிடத்தை கூட அமைக்கவிடாமல் திராவிட கட்சிகள் சதி செய்தன. ஆகையால் பாசகவிற்கு வாக்களிக்க வேண்டும்.

பெருந்தலைவர் காமராசை அவர் சாகும் வரை அவமான படுத்தியது அன்றைய காங்கிரசும் திராவிட கட்சிகளும். ஆகையால் பாசகவிற்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் படித்த போது சர் சிவி இராமனை அன்றைய ஆங்கில அரசும் அதன் பிறகு வந்த காங்கிரசு அரசும் அவமான படுத்தியது, ஆகையால் பாசகவிற்கு வாக்களிக்க வேண்டும்.

கூடங்குளம், நெடுவாசல், கதிராமங்களம், தேனியின் மலைகள், காவிரி டெல்டா என்று வளமிக்க இடங்களில் நெய்வேலியில் தோண்டியது போல் ஒரு பெரிய அதளபாதாள சுரங்கங்களை அமைத்து 200 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த நினைத்தது பாசக அரசு. ஆனால் அதை திராவிட கட்சிகளும் பொதுவுடமை கட்சிகளும் சேர்ந்து கெடுத்து அந்த 200 பேருக்கு கிடைக்க வேண்டிய வேலையை கிடைக்க விடாமல் செய்துவிட்டார்கள்,  ஆகையால் பாசகவிற்கு வாக்களிக்க வேண்டும்.

பாசக ஆட்சியில் தான் தமிழகத்தின் ஏழை விவசாயிகளும், விவசாய கூலிகளும் அவர்களின் பிள்ளைகளும் நீட்டு பரீட்சை எழுத இராசத்தான் கேரளா ஆந்திரா கர்னாடகா என்று சென்று உல்லாச உலாவும் மேற்கொண்டார்க்ள். இன்னும் அது போல ஏழைகள் தங்களின் அன்றாட தேவைகளுக்கும் இன்ன பிறவைகளுக்கும் நாள் தோறும் மற்ற மாநிலங்களில் சென்று தங்கள் தேவைகளை பூர்த்தி செய்த்துகொள்ள பாசகவிற்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக மலைகளும் நல்ல பாறைகளுடன் குன்றுகளும் இருப்பதனால் வருடா வருடம் நாட்டில் மழை வந்து கிரிகெட்டு போட்டி பாதியில் நிற்க காரணமாக அமைந்து விடுகின்றது. ஆகவே கிரிகெட்டு போட்டிகளை தடையின்றி நடத்த வெண்டும் என்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக மலைகளை எல்லாம் அதாணி அம்பாணியிடம் சொல்லி  ஒரே வருடத்தில் தரைமட்டமாக ஆக்கிவிட்டால் இனி தமிழகத்தில் தான் எல்லா கிரிகெட்டு போட்டிகளும் நடக்கும், ஆகையால் பாசகவிற்கு வாக்களியுங்கள்.

தமிழ் ஒரு சிறந்த பழமையான மொழி ஆகையால் பாசகவிற்கு வாக்களியுங்கள்.

தமிழகத்தில் பெரியார் ஆற்றிய தொண்டு மகத்தானது ஆகையால் பாசகவிற்கு வாக்களியுங்கள்.

தமிழகத்தை காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அநீதி வழங்கிவிட்டது அதற்காக பாசகவிற்கு வாக்களியுங்கள்.

தமிழகத்தை 1947க்கு முன்னர் வெள்ளைகாரர்கள் ஆட்சி செய்த்தார்கள் அதனால் பாசகவிற்கு வாக்களியுங்கள்.

இப்படி பசு மாட்டு கட்டுரையை மனப்பாடம் செய்து வந்து பரீட்சையில் தெண்ணைமர கட்டுரைக்கு அதை மாற்றி எழுதியவன் கணக்காக பேசப்போகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை..........கண்டு இரசிப்போம்

Thursday, March 7, 2019

பாசகவின் 4G மாபெரும் ஊழல் - தேசபற்றை கொண்டு மறைக்க பார்கிறது

புல்வாமா 350கிலோ குண்டு வெடிப்பை தொடர்ந்து மக்களும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய பாசக அரசு, திடீர் என்று இது பாக்கின் வேலை என்றும். அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது.

அதை தொடர்ந்து பாக் ஆக்கிரமிப்பு காசுமீரதில் தாக்குதல் நடத்தி 350கிலோ குண்டுக்கு பதில் 300 நபர்களை கொன்றுவிட்டோம் என்று ஊடகங்களுக்கு செய்திகளை கசியவிட்டது.


தினமணியில் வெளியான ராசனாத்து சிங்கின் பேச்சு

ஒரு வேளை இந்த செய்தி நீக்கப்படலாம் ஆகையாஇ அந்த செய்தியை எடுத்து இங்கே பதிவிடுவோம்.

"பாக்கிஸ்தானில் இருந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைபின் முகாம்களை இந்திய விமானப் படை அழிப்பதற்கு முன்பாக அங்கு சுமார் 300 மொபைல் இணைப்புகள் செயல்பட்டு வந்தாக தேசிய தேசிய தொழில்நுட்ப ஆய்ராச்சி மையம் ( என்.டி.ஆர்.ஓ) தெரிவித்துள்ளது. இந்த மொபைல் இணைப்புகள் ஒன்றும் அங்கிருந்த மரம் செடி கொடிகளுக்கு வழங்கபடவில்லை

எனவே இதன்மூலம் எத்தனை பயங்கவாதிகள் வீழ்த்தப்பட்டு இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் என்.டி.ஆர்.ஓ மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் எதிர்கட்சிகள் தெரிவிக்கும் என்பது எனக்கு தெரியும்.

இன்னும் சில நாட்களில் எத்தனை பயங்கரவாதிகள் பாக்கிஸ்தானில் வீழ்த்தப்பட்டார்கள் என்ற முழுவிவரமும் தெரியவரும். தேசத்தின் பாதுகாப்பில் மத்திய அரசு என்றும் மெத்தனமாக செயல்படாது. மேலும் ஆட்சியை திரும்ப அடைய வேண்டும் என்ற பேராசையும் பாஜகவுக்கு கிடையாது. அனைவருக்கும் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பேச மத்திய அரசு எப்போது தயாராக இருக்கிறது. ஆனால், சம்பந்தபட்டவர்கள் அதற்கு முன்வர வேண்டும் என்றார்."

பிறகு மெல்ல மெல்ல வெளி நாட்டு ஊடகங்களும் பாக்கின் செய்திகளும் இந்த 300 பேர் எண்ணிக்கையை பொய் என்ன நிரூப்பிக்க துவங்கி இந்தியாவின் விமானபடை தளபதி எவ்வளவு பேர் தாக்கப்பட்டார்கள் இறந்தார்கள் என்று எல்லாம் அறுதியிட்டு சொல்லுவதற்கு இல்லை என்று தெளிவாக சொன்ன பின்பும் நேற்றைய செய்திகளில் உள்துறை அமைச்சர் ராசனாத்து சிங்கு தாக்குதல் நடந்த இடத்தில் தாக்குதலுக்கு முன் சரியாக 300 செல் பேசிகள் இயக்கத்தில் இருந்ததாகவும் அவைகள் தாக்குதலுக்கு பின் காணாமல் போனதாகவும் அதை NDRO குழு கண்டுபிடித்து நாங்கள் சொல்வது தான் உண்மை என்று நிரூபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மைய அரசோ அல்லது அமைச்சரோ பிரதமரோ யாரும் 300 போர் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லவே இல்லை என்று சாதித்தவர்கள் இன்று அந்த 300 கணக்குக்கு அறிவியல் சாட்சியை கொண்டு வர முயல்கிறார். நாமும் தெரியாமல் தான் கேட்போம், தாக்குதல் நடந்த இடம்மோ பாக் ஆகிரமிப்பு காசுமீரம். அதில் செல் சேவையை வழங்க பாக் நாட்டினரால் தான் முடியும். அப்படி இருக்க அங்கே இந்த செல் பேசிகள் இயக்கத்தில் இருந்ததை எப்படி இந்தியாவில் இருக்கும் ஒரு நிறுவனம் அறுதியிட்டு சொல்ல முடியும். விளக்குங்கள்.......

2014ல் டிராய் குழுவையும், தணிக்கை கணக்காளர் குழுவையும் வைத்து 2G ஊழல் என்று பரப்பி தேர்தலில் காய்களை நகர்த்திய பாசக மறுபடியும் இப்படி ஒரு 4G மாபெரும் ஊழலில் இறங்கி உள்ளது.

இந்த NDRO குழுவின் உண்மை தண்மை மட்டும் அல்ல பாசகவோ அல்லது மோடியோ என்றைக்குமே உண்மையை பேசுபவர்கள் இல்லை என்றதை தொடர்ந்து கவனித்து வந்துள்ளோம். இன்று தேர்தல் நெருங்கும் வேளையில் இப்படி ஒருNDRO நிறுவனத்தின் பெயரில் புளுகி பாசகவின் தோல்வியை மட்டும் அல்ல பொய்யின் பெயரில் பாக்கின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலையும் ஞாயப்படுத்த நினைத்து முனைக்கின்றது..........

பாசகவின் இந்த 4G மாபெரும் ஊழலை அம்பலபடுத்துவோம்......

Wednesday, March 6, 2019

வெளிநாடுகளில் ஒலித்த தமிழை கொன்றுவிட்ட மோடி இன்று தமிழ் தமிழர் தமிழகம்

அபுதாபி, துபை, குவைத்து, இலண்டன், பிரங்பர்ட்டு, ஆம்சுடர்டாம் என்று எந்த விமான நிலையமாக இருந்தாலும் அங்கு இருந்து சென்னை செல்லும் விமானம் புறப்பாடின் போதும், விமானத்தின் உள்ளும்  நல்ல தமிழில் அறிவிப்பார்கள். சென்னையில் கூட 60% ஆங்கில வார்த்தைகளும் 10% சங்கத வார்த்தைகளும் போக தமிழில் இருக்கும், ஆனால் மேலே சொன்ன இடங்களில் நல்ல தமிழில் அறிவிப்புகள் வந்துக்கொண்டு இருந்தது 2014ல் மோடியின் பாசக அரசு பதவிக்கு வரும் வரையில்.

அதன் பிறகு தமிழி பேசிய அந்த இடங்களில் எல்லாம் இன்றைக்கு இந்தியில் அறிவிக்கிறார்கள்.

தமிழகம் அல்லா மற்ற மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களில் தமிழில் பேச சொல்லி சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இவர்கள் செய்யும் இந்த இந்தி அறிவிப்புகள்.

ஒரு காலத்தில் இந்தி நிகழ்ச்சிகளை தான் பார்த்து ஆக வேண்டும் என்ற திணிப்பில் இறங்கி இன்று மூடு விழா நடத்தும் அளவிற்கு வந்து நிற்கிறது சென்னையில் உள்ள அரசு தொலைக்காட்சி..........

ஆட்சியின் முதல் நாளிலே இருந்து தமிழையும், தமிழர்களையும், தமிழகத்தையும் ஒழிக்க பாடுபட்டுவிட்டு, இப்போது தமிழுக்கும் தமிழர்களுக்கும் எப்போதும் முன்னுரிமை கொடுப்பாராம் இந்த பொய்யர் மோடி.

இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற கனவில் 1,30,000 மக்களை அன்று கொன்று குவித்த மோடி இன்றைக்கு 2019 தேர்தலின் வெற்றிக்காக தனது நாட்டு துணை இராணுவ வீரர்களை குண்டு வைத்து கொன்றுவிட்டு, பாக் தான் செய்தது என்று போருக்கு செல்வதாக சொல்லிக்கொண்டு இப்ப்போது மூக்குடைபட்டு நிற்கும் மோடி மறுபடியும் பிரதமரானால் இலங்கையில் நடந்த இனபடு கொலை நாளை தமிழகத்திலும் நடக்கும்........மக்களே கவனம்.

இப்படி ஏக்கர் கணக்கில் புளுக்குவதை விட்டு விட்டு குசராத்துக்கு சென்று அந்த மக்களை கொல்லுங்கள் மோடி எங்களை விட்டு விடுங்கள்......