Friday, December 27, 2013

என்றென்றும் புன்னகை - அகமதும் சாக்கி அண்ணனும் நண்பர்கள் போலும்

தமிழில் லவ்லி என்று ஒரு படம் ஒன்று உண்டு, அந்த படத்தை பார்க்கும் போது அடுத்த என்ன என்ன நடக்க போகிறது என்று வசனத்துடன் ஊகிக்க கூடிய அளவிற்கு ஒரு படம். அந்த அளவிற்கு இந்த வருடத்தில் நம்மை ஏமாற்றிய படம் இந்த என்றென்றும் புன்னகை.

காட்சிக்கு காட்சி வசனத்திற்கு வசனம் சம்பந்தம் இல்லாமல் இருப்பது நன்றாகவே தெரிகின்றது.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் வெளி நாட்டு பயணம் முடித்து திரிசாவை யார் என்று கேட்டதற்கு தெரியாது என்று சொல்லும் காட்சிகள் தொடர்பே இல்லாமல் மாறி மாறி நம்மை இம்சைபடுத்துவதை பார்க்க முடியும்.

திரிசாவை பொருத்த அளவில் அவருக்கு மன்மத அம்பு உட்பட சமீபத்திய படங்கள் சரியாகவே அமையவில்லை. விண்ணை தாண்டி வருவாயாவில் பார்த்த திரிசாவை மீண்டும் பார்பதற்கு இல்லாமல் போவது வருத்தமே.

சீவாவுக்கு நீதானே என் பொன்வசந்தம் பாகம் இரண்டு போல் இருக்கிறது. எதற்கு தான் அப்படி செய்கிறார் படத்தில் என்று அவரும் அவரது இயக்குனரும் சொன்னால் தான் உண்டு.

சில படங்களை பார்க்கும் போது தான் ஒரு படத்திற்கு இயக்குனர் எவ்வளவு அவசியம் ஆகிறார் என்று தெரியும், அது இந்த படத்திற்கு சால பொருந்தும்.

சாக்கி அண்ணாவை ஒரு பொது விமர்சகர் என்று தான் இதுவரை நினைத்து இருந்தேன் ஆனால் அவர் இப்படி பாராபட்சமாக எழுதுவார் என்று நினைக்க இல்லை. உங்கள் விமர்சனம் நேர் எதிராக அமைந்துள்ளது......................

இனியாவது நல்ல படங்களை திரிசா தேர்ந்து எடுத்து நடிப்பார் என்று நம்புவோமாக........

பாடல்கள் எல்லாம் ஏதோ பாடல் வருகிறது என்று தெரிகின்றது ஆனால் என்ன பாட்டு என்று கேட்டால் ஏதோ பாட்டு என்று தான் சொல்லும் அளவிற்கு இருக்கிறது அந்த சூன் போனால் சூலை காற்றே பாடலை தவிர என்ன ஆச்சு ஆரிசு செயராச்சுக்கு, நல்லா தானே மெட்டு போட்டுகிட்டு இருந்தார்.............

Tuesday, December 3, 2013

குச்சராத்து அரசு மத கலவரத்தில் எப்படி மக்கள் கொல்லப்பட்டாகள் -- The Purge படத்தில் கட்டியுள்ளார்கள்

The Purge ஆங்கிலப்படம், வெறும் திரைப்படம் தான். ஆனால் அதில் காண்பிக்கப்படும் நிகழ்வுகள் கற்பனையாக இருந்தாலும் குச்சராத்து கலவரத்தை கண்முன்னால் கொண்டுவந்து காட்டுகிறது.

ஒரு வேளை மோடியோ அல்லது இன்ன வேறு இனவெறுப்பாளார்களோ இந்தியாவை ஆளும் வாய்புகிடைத்தால் இந்த படத்தில் காட்டுவது போல் வருடம் ஒரு முறை அல்ல வாரம் ஒரு முறை வாய்ப்பு என்றும் சொன்னால் கூட ஆச்சரியபட ஒன்றும் இருக்காது.

படம் துவங்கும் போது மாலை பொழுதில் அவரவர் வேட்டைக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டு இருப்பதை காட்டுகிறார்கள்.

படம் துவங்கும் போது மாலை பொழுதில் அவரவர் வேட்டைக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டு இருப்பதை காட்டுகிறார்கள். கதா நாயகனின் வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் கனிவாகவும் இனிமையுமாக பேசும் காட்சிகளை காட்டுகிறார்கள்.

மாலை 7 மணி ஆனதும் அறிவிப்பு வருகிறது, இன்னும் 12 மணி நேரத்திற்கு யாரும் யாரையும் தாக்கலாம் கொல்லலாம் என்ன வேண்டுமனாலும் செய்யலாம், காலை 7 மணி வரை யாரையும் கண்டு கொள்ள மாட்டோம் என்று அறிவிக்கிறார்கள்.

குச்சராத்தில் இப்படி தான் அன்றைக்கு உத்தரவு பிறப்பித்து இருப்பார்கள் போலும், இன்னமும் 3 நாளைக்கு யாரையும் எதுவும் கேட்கமாட்டோம் என்ன வேண்டும் என்றாலும் செய்துகொள்ளுங்கள் என்று.

இவர்களது வீட்டை இவர்கள் பூட்டுகிறார்கள், அப்போது அவர்களின் மகன் சிறுவயதுகாரன் கேட்கிறான் ஏன் இப்படி அடித்து கொல்கிறார்கள் எனக்கு புரியவில்லை என்று கேட்க. அப்பாவோ இப்படி வருடம் ஒரு முறை தங்களது கோபத்தை தணித்துக்கொள்வதனால் அமெரிக்க மிகவும் செழிப்பாகவும் அமைதியாகவும் மாற்றம் கண்டுள்ளது என்று சொல்வது செயற்கை தனமாக இருந்தாலும் குச்சராத்தை மோடி அந்த கலவரத்திற்கு பிறகு இப்படி தான் சொல்லிகொண்டு வருவது நினைவில் வருவதை தவிர்க முடியவில்லை.

மாலை வேளையில் கதவடைக்கும் வேளையில் மகளின் காதலன் வெளியில் செல்வது போல் பாவனை காட்டிவிட்டு திரும்பவும் வீட்டுக்குள் வந்து இருப்பதை பார்த்து பதரும் மகளிடம் காதலன் சும்மா உன் அப்பாவிடம் பேசதான் வந்தேன் என்று புன்னகை தழும்ப சொல்லிவிட்டு கையில் துப்பாக்கியுடன் துவங்கும் கொலைகள் படம் முடியும் வரை விளையாட்டு போல் காட்டுகிறார்கள். மகளின் வயதுக்கு மிகவும் மூத்தவனாக அவன் தெரிகின்றான் என்று மறுத்த தந்தைக்கு மரணம் தான் பரிசு என்று சாதாரணமாக அந்த பையன் முடிவு செய்ய அந்த நாள் அவனுக்கு தேவை இருப்பதாக படத்தில் காட்டுவது பரிதாபத்திற்குள்ளதாக காட்டப்படுகிறது.

கதவுகளை மூடி விடியும் வரை அவரவர் வேலைகளை பார்கலாம் என்று சொல்லிவிட்டு நிம்மதியாக உடற்பயிற்சிக்கு செல்லும் குடும்பதலைவி வெளிக்கதவை பையன் திரந்துவிடும் போது அலரிக்கொண்டு வருகிறார்.

ஒரு கருப்பர், அவரை அணு அணுவாக சித்திரவதை செய்து கொல்ல ஒரு கூட்டம் திட்டமிட்டு தேட அடைக்கலம் கேட்டு தெருவில் அழுதுக்கொண்டு இங்கும் அங்கும் அலைகிறார். குச்சராத்தில் ஒரு இந்து வீட்டில் அடைக்கலமாக ஒளிந்து கொண்டவர்களை போல்.

இரக்க குணம் கொண்ட அந்த பையன் அந்த மனிதனை வீட்டிற்குள் விட்டு அவனுக்காக உருவாக்கிய மறைவிடத்தில் தங்க வைகிறான்.

சிறிது இடைவெளிக்கு பிறகு அவனை துரத்தி வந்த கும்பல் இவர்களது வீட்டை அடைந்து அவர்களுக்கு ஒரு செய்தியை வெளியிடுகிறார்கள் அக்கம் பக்கம் விசாரித்து தான் உங்கள் வீட்டு கதவை தட்டுகிறோம் அந்த கருப்பனை எங்களிடம் கொடுத்துவிடுங்கள் உங்களை விட்டு விடுகிறோம், இன்னமும் இது சம்பந்தமாக வரும் வசனங்கள் மிக கொடூரம், வெளியிட விரும்பாமல் விட்டு விடுகிறேன்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து குடும்ப தலைவன் அந்த மனிதன் வீட்டில் எங்கே ஒளிந்துகொண்டு இருக்கிறார் என்று தேடி பிடித்து அவனை வெளியே தள்ள அவனை தயார்படுத்தும் முயற்சியின் முடிவில் தலைவனின் செயல் கண்டு மனைவி அவனை வெறுக்கிறாள். எப்படு இருந்த மனிதன் இப்படி விலங்காக மாற்றம் கொண்டுவிட்டன் என்று. அந்த நொடியில் அந்த இடத்தை விட்டு செல்கிறான் தலைவன்.

அந்த சமயம் வெளியில் உள்ள மனித விலங்குகள் கதவுகளை உடைத்துவிட்டு கைகளில் என்ன என்ன கொலை ஆயுதங்கள் உள்ளனவோ அவைகளை விளையாட்டாக விளையாடுவது போல் இரசித்து கொல்லும் கொலைகள் அருவருப்பாக உள்ளது.

கொஞ்ச நேரத்தில் அண்டை வீட்டார்கள் துப்பாக்கி சகிதமாக இவர்கள் வீட்டை தாக்கும் மனிதர்களை கொன்று குவித்து இவர்களை காப்பாற்ற வருகிறார்கள். வெளி மனிதர்கள் எல்லாம் இறந்த பிறகு சொல்லும் அந்த அண்டை வீட்டார் கூட்டம் இவர்களை நாங்கள் தான் அடித்து கொல்ல வேண்டும் அது எப்படி நீங்கள் கொல்ல நாங்கள் அனுமதிப்பது என்று.......

அந்த சமயத்தில் கிடைத்த ஆயுதங்களை கொண்டு குடும்ப தலைவியும், அந்த கருபினத்தவரும் சேர்ந்து கொலை கூட்டத்தை காவலில் வைக்கிறார்கள். குடும்ப தலைவி சொல்வாள் இனி விடியும் வரை வேற எந்த அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என்று. அந்த தருணங்களில் நிகழும் வசனங்கள் மிகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் எழுதப்பட்டிருக்கும்.

குச்சராத்தில் கொலைக்கு ஆளான ஒவ்வொரு மனிதருக்கும் கட்டாயம் இப்படி ஒரு கொடும்பாவம் நிகழ்த்தப்பட்டிருக்கும் என்றதில் சந்தேகம் இல்லை. அதுவும் பேட்டிகளில் அந்த குச்சராத்து கொலைகாரர்கள் எப்படி எல்லாம் இரசித்து இரசித்து கொலை செய்தோம் என்று சொல்லி சிரித்தது நினைவில் வந்து போனது அந்த காட்சிகளை தொடர்ந்து.....................

மோடி கூட்டத்தை கொண்டு வந்து ஆட்சியில் உட்கார வைத்தான் இது தான் நடக்கும் என்றதில் சந்தேகமே இல்லை. இவைகளை எனிய வார்த்தைகளில் அழககாக மறைத்து பாலாறும் தேனாறும் பாயுது என்று சொல்வார்கள் இந்த படத்தில் சொல்வது போல்.........................................

Tuesday, November 26, 2013

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் என்ன அவரது சொந்த படைப்பா ????????

இணையத்தில் பேபி ஆனந்தும் அவரை போல் செல்வராகவனை தீவிரமாக இரசிக்கும் இரசிகர்களும் அதிகமாக குறிபிட்டு பேசுவதும் சிலாக்கித்து கொள்வதும் ஆயிரத்தில் ஒருவன் படத்தை தான்.

மற்றவர்கள் அந்த படைப்பின் மேல் வைக்கும் விமர்சனங்களும் அவைகளுக்கு இவர்கள் சொல்லும் சமாதானங்களும் பார்க்கும் போது உண்மை என்ன என்று தெரியாமல் இவர்கள் இருவரும் சண்டை இட்டுக்கொள்கிறார்களே என்று வருத்தமாக இருக்கும்.

இதற்கு முன் பல தடவைகள் எடுத்து எழுதியது போல், கதையை அடிப்படையாக கொண்டு திரைகதை எழுதி படம் எடுப்பது வேறு. ஆங்கிலத்தில் வந்த படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி வசனத்திற்கு வசனம் தமிழில் மட்டும் மாற்றி இன்னும் கொஞ்சம் தமிழ் மக்களையும் அவர்களது பழக்கங்களையும் மட்டும் திணித்து அசலை அப்படியோ கொடுக்கும் ஒரு கொடூரம் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடந்துக்கொண்டு இருக்கிறது.

இத்த சூத்திரத்தை கையாண்டு பெரிய அளவில் படைப்பாளி அறிவாளி அப்படி இப்படி என்று எல்லாம் எல்லா பெயரையும் வாங்கிக்கொண்டு தமிழ்படைப்புலகின் தன்னிகரில்லா நீவீன படைப்பாளி என்று பெயர் பெற்று இருக்கும் மணிரத்தினம் தான் அவர்.

மணிரத்தினம் சொந்தத்தில் கதை எழுதி படம் எடுத்தது ஆரம்ப காலங்களில் மட்டுமே, அதற்கு பிறகு மிகவும் புகழ் பெற்ற ஆங்கில மற்று ஐரோப்பிய திரைபடைப்புகளை அப்படியே தமிழுக்கு உருட்டி எடுத்து கொடுப்பதும் அதுவும் நல்லபடியாக வியாபாரம் ஆகுவதுமாக இருந்தது.

இந்த வகையில் மணிரத்தினம் எழுதி இயக்கி தயாரித்த இராவணன் மிகவும் பிரபலம் அடைந்த லெசு மிசரிசு Les Misérables படத்தை அப்படியே தமிழில் எடுத்துவிட்டு. இது இராமாயணம், மகாபாரதம், சீதை, இராமன், அனுமன் என்று பத்திரிக்கைகளில் ஒரு தொடுப்பும் கொடுப்பார்.

2012ல் இந்த படத்தை ஆங்கிலத்தில் மீண்டும் எடுத்தார்கள் அந்த படைப்பை கௌரவிக்கும் விதமாக.

பாத்திரபடைப்புக்கு பாத்திரம், காட்சிக்கு காட்சி, வசனத்திற்கு வசனம் என்று அனைத்து ஒற்றுமையையும் தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் காணலாம் இந்த படங்களில்.

உமா துருமேனும் ஐசுவரியாவும் சரியாக அந்த பாத்திரத்திற்கு பொருந்தினார்கள். மற்ற எல்லா பாத்திரங்களும் அவர்களுக்கு துணையாக வரும் பாத்திரம் ஆனதால் மணிரத்தினமும் ஐசுவரியாவை வைத்துக்கொண்டு மற்றவர்களையும் அது போல தேர்ந்து எடுத்துகொண்டார். இப்படி ஏகப்பட்ட ஒற்றுமைகளை காட்சிக்கு காட்சி அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த வழியில் செல்வராகவனும் குதித்து தனது திறமையை காட்ட துவங்கிய போது தான் அவருக்கு சரிவு துவங்கியது.

ஆங்கிலத்தில் காங்கோ  Congo (1995) என்று ஒரு படம்
http://www.imdb.com/title/tt0112715/?ref_=nv_sr_1
இத்த படத்தை தான் ஆயிரத்தில் ஒருவனாக செல்வராகவன் எடுத்துள்ளார்.

புதைந்து கிடக்கும் சாலமன் குகையில் கிடக்கும் வைரங்களையும் பொருட்களையும் மனதில் கொண்டு ஆப்ரிக்கா பயணபடும் ஒரு செல்வந்த கும்பலும். தான் வளர்க்கும் செல்ல குரங்கை அதன் காட்டிற்கு கொண்டு காட்டிவிட்டு திரும்பி வரும் ஒருவரும். வரலாற்று ஆராய்சியில் சாலமனின் குகைபற்றி அறிந்து அதன் செல்வத்தை கொள்ளை கொள்ள வரும் ஒரு நபரும் என்று ஆப்ரிக்க காடுகளில் பயணிக்கும் காங்கோ கதை.

காங்கோவில் வரும் அந்த கருங்குரங்கு பாத்திரத்தை தமிழில் கார்திக்காகவும், ஆங்கில கதாநாயாக வரும் பாத்திரத்தை ரீமாவாகவும் மாற்றி இருப்பார் தமிழில்.

இதைவிட கொடூரம் அந்த சாலமன் குகையை காக்க எண்ணிய மன்னன் அங்கே சில குரங்குகளை கொடூரமாக பழக்கி அங்கு வரும் ஆட்களை கொன்று குவிக்க என பழக்கப்படுத்து பிறகு தலைமுறை தலைமுறையாக அவைகள் கொடூர விலங்கினமாக பரிணாமித்து இருக்கும் என்று காட்டியதை தான் தமிழ்ல் பழங்கால மன்னராகவும் தமிழர்களாகவும் படம் எடுக்கும் கொடுமையும் துணிவும் செல்வராகவனுக்கு மட்டும் தான் வரும்.

அந்த கொடிய குரங்குகள் அங்கு வந்த புதையல் கொள்ளை காரர்களை தாக்கும் போது உடன் சென்ற குரங்கு அங்கே குரங்குகளுடன் காப்பாற்றும் காட்சிதான் கார்த்திக் இறுதி காட்சியில் சண்டியிடும் காட்சிகள்.

புதயலை நோக்கி இரவில் ஒரு படகு பயணம் இருக்கும் அந்த படகுகளை நீர் யானை கடித்து நாசம் செய்வதாக காங்கோவில் வரும் அந்த காட்சிகளை கூட விட்டு வைக்காமல் மணிரத்தினம் போல் மொழி மாற்றும் கலாச்சார மாற்று மட்டு செய்து ஏதோ ஒரு வகையான் மீன் துரத்துவதாக காட்டியுள்ளது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

உண்மை இப்படி இருக்க ஆனந்தும் மற்றவர்களும் ஒரு உண்ணத படைபாளியின் படைப்பு கேவலப்படுத்த பட்டுவிட்டதே என்று புலம்புவதை பார்த்து சகிக்கமுடியாமல் இவைகளை எழுதுகிறேன்.

ஆயிரத்தில் ஒருவன் வந்ததும் இவைகளை எழுதவேண்டு என்று இருந்த என்னை தமிழர்களின் வரலாறை போற்றி படங்களே வருவது இல்லை அந்த வகையில் இதுவும் இருந்துவிட்டு போகட்டும் என்று விட்டு வைத்தே. ஆனால் செல்வராகவனே அந்த படைப்பை கொளுத்த வேண்டும் என்று சொல்லும் போது எழுதினால் தவறு இல்லை என்று தான் தோன்றுகிறது எழுதுகிறேன்.

பரீட்சையில் பார்த்து எழுத துவங்கிவிட்டால் தனக்கு என்று எதுவும் மனதில் தோன்றாது. கொஞ்சன் நஞ்சம் படித்தவைகள் கூட மறந்து போகும். அந்த நிலைதான் அடுத்தவரின் படைப்பை அப்படியே உருட்டி எடுக்கும் வேலையும். அந்த மூலத்தை தான் அவர்களுக்கு எந்த சிந்தையும் வருவது இல்லை. மணிரத்தினம் அப்படி தான்.

என்ன மணிரத்தினம் படைப்பாளி அறிவாளி அப்படி இப்படி என்று எல்லாம் பெயர் வாங்கிவிட்டார், அவரை பார்த்து அதே முயற்சியில் இறங்கி நன்றாக தன்னை தொலைத்துவிட்டு அலைகிறார் முகத்தை தேடி செல்வராகவன். இந்த வட்டத்தில் இருந்து வெளியே வாருங்கள் செல்வராகவன், உங்களுக்கு இயக்க தெரியும். நல்ல கதையை தேடி பிடித்து அழகாக எடுங்கள், கதையா இல்லை, இல்லை உங்களுக்கு தான் கற்பனை வற்றிவிட்டதா...........உங்களால் முடியும் மீண்டும் மீண்டு வந்து மக்கள் இரசிக்கும் வண்ணமாக ஒரு நடுத்தர வர்க கதை எடுங்கள்.................மீண்டும் பழைய செல்வராகவனாக வலம் வரலாம்..............மணிரத்தினமே இப்போது அந்த யோசனையில் தான் இருப்பார்.........

Monday, November 25, 2013

இரண்டாம் உலகம் -- திரைவிமர்சனம்

செல்வராகவனின் படம் பார்பவர்களின் மனதில் ஒரு பாதிப்பை விதைத்து செல்லும் விதமாக இருந்த காலம் எல்லாம் மலை ஏறி போய்விட்டது போலும்.

படத்தின் துவக்கத்தில் இருந்த ஒரு தெளிவும் தொடரும் இடையிலேயே காணாமல் போய் படம் பார்பவர்களின் ஊகங்களுக்கு விட்டு விட்டது எந்த ஒரு இயக்குனருக்கும் அழகில்லை.

பார்க்கும் இடங்களெல்லாம் உன்னை போல் பாவை தெரியுதடி என்று ஒரு விளையாட்டாக சொன்னார்கள் என்று பார்த்தால் அதையே கதையாக்கி சகிக்க முடியவில்லை.

முதல் பாதி படம் முடிந்ததும் இரண்டாம் பாதியில் அவள் என்ன ஆனாள் என்று சொல்வார்கள் என்று பார்த்தால் பாவமாக முடித்து இருக்கிறார்கள் அதுவும் சகிக்க முடியாதவிதமாக இருக்கிறது.

இரண்டாம் பாகத்தில் காதலை எப்படி கற்றுக்கொடுத்தான் அவளும் எப்படி கற்றாள் என்ன கற்றாள் என்றால் வெட்கப்படுவதும் அவனை தேடுவதும் தான் காதல் என்று சொல்லி செல்கிறார் இயக்குனர்.

எப்படி இருந்த செல்வராகவன் இவர், ரெயின்போ காலனியில் அது என்ன காதல் எந்த வகை என்ன காதல் என்று எல்லாம் விளக்கம் சொல்லவில்லை என்றாலும் அந்த காதல் பார்க்க அழகாக இருந்தது. இந்த இரண்டாம் உலக காதல்கள் இரண்டுமே சகிக்கவில்லை.

படத்தின் துவக்கதி இருந்து திணரல், நாயகன் அடுத்தவருக்கு உதவும் நல்ல மனிதன். சரி, அப்பாவால் தனியாக எதையும் செய்துகொள்ள முடியாது. பிறகு எப்படி விட்டு விட்டு சமூச சேவைக்கு அவனுக்கு நேரம் கிடைகிறது பதில் இல்லை......

ஒரு அழகான பெண் தன்னை விரும்புவதாக சொல்லும்பட்சத்தில் குறைந்தது ஒரு ஆச்சரியாமாவது அவனுக்கு வந்து இருக்க வேண்டும் அவனோ தாலின்ன என்னன்னு தெரியாத சின்ன தம்பியாக நடந்துகொள்ளவது இரசிக்கும் படியாக இல்லை.

இரண்டாம் பாதியில் தற்பொழுது வரும் மொழிமாற்று படங்களை பார்த்தது போல் இருக்கிறது. அதுவும் அந்த கொடூரமான அந்த சிங்கம் நாயகனை முதல் தடவையாக அடிக்கவே 10 நிமிடங்கள் எடுத்துகொள்கிறது ஏன் என்று இயக்குனர் தான் சொல்லனும்.

இரண்டாம் பாதியில் இவ்வளவு திணரல் ஏற்பட்டால் அதற்கு ஒரு காரணம் தான் இருக்க முடியும். அது படத்தை எங்கு இருந்தோ எடுத்து தழுவி இருக்க வேண்டும். அப்படி தழுவும் போது மூலக்கதையின் தாக்கத்தில் தொடர்வது கடினமே. அப்படி பல் திணரல்களை கண்கூடாக கண்டு இருக்கிறோம் உதாரணமாக கௌதம் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம், சமர் 500ரை தழுவி எடுத்தபடம். ஆனால் மூலப்படத்தில் இல்லாத எந்த கதைபகுதி என்று கடைசியில் வரும் காட்சியாகிய நாயகன் நாயகி திருமணம் மாற்றி அமைக்கும் காட்சி. மூலத்தில் நாயகி வேறு ஒருவரை மணப்பார், நாயகனோ அடுத்து ஒரு வேலைக்கு சென்று அங்கே சந்திக்கும் வேறு ஒரு பெண்ணுடன் வெளியில் செல்வதாக முடித்து இருப்பார்கள். இந்த காட்சியை மட்டுமே மாற்றி அமைத்ததில் எந்தனை விதமான திணரல்கள் வந்துள்ளது என்று படம் பார்த்தவர்களுக்கு புரியும்.

அது போல இரண்டாம் பாதி முழுக்க வசனத்திற்கு வசனம், காட்சிக்கு காட்சி தொடர்பே இல்லாமல் இருப்பது நன்றாகவே தெரிகின்றது. பார்போம் இணையத்தில் யாராவது வெளியிடுகிறார்களா என்று........

பின்னணி இசையில் இரண்டாம் பாதியில் நாயகியை ஆர்யா திரும்பவும் பார்க்கும் காட்சியில் பயணங்கள் முடிவதில்லை படத்தில் வரும் இராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ பாடல் அப்படியே ஒலிக்கப்படுவதும் பின்னர் வரும் காட்சியில் இளையராசாவின் How to Name itம் வருவது ஏனோ என்று இயக்குனர் தான் சொல்ல வேண்டும்.

ஆயிரத்தில் ஒருவனில் நடந்த தவறை திருத்தி கொண்டு இருப்பார் என்று தான் எதிர்பார்தேன், பாவம் அதைவிட மிகவும் மோசமான நிலைக்கு வந்துள்ளார் செல்வராகவன்.

ஒரு நல்ல கதையாசிரியரை பிடியுங்கள் பிரச்சனைகள் முடிந்து போகும்..........

Wednesday, November 20, 2013

ஆரம்பம் - Swordfishம் திரைவிமர்சனம் மணிரத்தினம் போல் அல்லாமல் மிசுகின் வழியில்


ஆரம்பம் இந்த ஆங்கிலப்படத்தை அப்படியே தமிழில் எடுக்க நினைத்து பிறகு கதைகளில் சிறு சிறு மாற்றங்களை மட்டும் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதிலும் இந்திய அரசியலில் நடந்த பேரங்களையும் அதன் தொடர்பு கொண்ட நிகழ்வுகளையும் நுழைத்துள்ளதால் மக்கள் படத்தையும் இந்திய அரசியலையும் தாண்டி சிந்திக்க முடியாமல் திறமையாக கட்டிப்போட்டுள்ளார் இயக்குனர் பாராட்டுக்கள்.

ஆங்கில கதையை அப்படியே தமிழில் எடுத்து இருக்கவும் முடியாது தான் காரணம் ஆர்யாவின் பாத்திரத்திற்கு ஒரு முன்னாள் மனைவியும் குழந்தையும் உண்டு. அந்த மனைவி நீலப்படம் எடுக்கும் மனிதருடன் வாழ்ந்துக்கொண்டு மகளை தந்தையிடம் இருந்து பிரித்து போதைக்காக வாழும் ஒரு பெண்ணாக படைக்கப்பட்ட ஒரு பாத்திரம் தமிழில் எப்படி எடுப்பது.

அப்பாவுக்கு பீர் வாங்கொடுத்து மகிழும் மகளை காட்டியதற்கே வாங்கி கட்டிக்கொண்ட நிலையில் இப்படி எல்லாம் கதை எழுதினால் எப்படி என்று தான் ஆர்யாவை காதலனாக மாற்றிவிட்டார்கள்.

சரி அச்சித்தின் பாத்திரமாவது அப்படியே தேசபக்தி வழிய விட்டு வைத்து இருக்கலாம். எப்படி அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் தாக்கும் எவனுக்கும் 10 மடங்காவது திருப்பி தருவது என்று அரசாங்கத்தால் நடத்தபடும் ஒரு நிழல் அமைப்பின் தலைவன் ஆங்கிலத்தில். தமிழிலும் அப்படியே காட்டி இருக்கலாம், சமீபத்தில் D-Dayல் வந்தது போல்.

ஆனால் என்னவோ சவபெட்டி ஊழல், கைதடி ஊழல் என்று ஊதிவிட்டு விட்டார்கள் தமிழில்.

ஆரம்பமே விருவிருப்பாக இருக்கிறது என்றால் இந்த ஆங்கிலப்படத்தை எப்படி சொல்வார்கள் என்று படம் பார்த்தவர்கள் சொல்லட்டும்.

நயனின் பாத்திரம் தான் ஐயோ பாவம் என்று வந்து நிற்கிறது. ஆங்கிலத்தில் ஒரு வீராங்கனையாக காட்டபட்ட பாத்திரம் தமிழில் துபையில் மாடியில் இருந்து தள்ளிவிடும் பாத்திரமாக படைக்கப்பட்டிருப்பது கொடுமையே.

ஒரு நல்ல படத்தை அப்படியே மொழிபெயர்கவும் நல்ல திறமை வேண்டும், நன்றாக தமிழில் வந்திருக்கிறது வாழ்த்துகள்.

Wednesday, October 30, 2013

காந்தியை கொன்றது கொலையாகாது -- கோட்சேவும் பதிவர்களும்

காந்தி சுதந்திர போராட்டம் நடத்தாவிட்டாலும் சுதந்திரம் கிடைத்து இருக்கும், காலத்தின் கட்டாயம் அது என்று துவங்கி ஏன் காந்தி கொல்லப்பட வேண்டும் என்ற விளக்கத்தை கொடுக்க என்று பயணித்த கட்டுரையை ஆவலுடன் படித்தேன்.

என்ன காரணத்தை சொல்கிறார்கள் என்று படித்ததில் ஏமாற்றமே மிஞ்சியது.

அந்த கட்டுரை கிட்ட தட்ட தினமலரில் செய்திகளை வாசிப்பது போல் இருந்தது. தினமலரில் இப்படி தான் செய்திகளை எழுதுவார்கள். தலைப்பை மட்டுமே படித்தால் போதும், உள்ளே செய்தியில் தலைப்பு சம்பவம் எங்கே நடந்தது என்றதை முதல் பத்தியிலும், எந்த ஊரில் நடந்தது என்றதை இரண்டாம் பத்தியிலும் எழுதுவார்கள். இவைகளை தவிர வேறு எந்த விபரத்தையும் உள் செய்திகளில் தெரிந்துக்கொள்ள முடியாது. ஆக தலைப்பை வாசித்து விட்டால் மேலே தெரிந்துகொள்ள ஒன்றும் இல்லை தினமலரில்.

அப்படி மேலே விபரங்கள் தேவைபடின் மற்ற இதழ்களில் தேடித்தான் தெரிந்துகொள்ள வேண்டும். அது போல தான் இந்த கட்டுரையும் இருந்தது.

வரலாறில்  நமக்கு தெரியாத ஒரு செய்தியையோ அல்லது இது வரை தெரிவிக்காத ஒரு மாற்று பார்வையோ என்றும் கூட நினைத்து தான் படிக்க நினைத்தேன். எல்லா கொலைகாரர்களும் அவர்கள் செய்த கொலை மிகவும் ஞாயமான செயல் என்றும். கொலையுண்ட நபர் அதற்கு தகுதியானவர் என்று தான் கூறி வருகிறார்கள்.

ஆதிரத்திலும் அவசரத்திலும் செய்துவிட்டு பின்னாளில் அவைகளுக்குகாக வருந்தியவர்களை தவிர மற்ற அனைவரின் வாக்குமூலமும் கோட்சேவின் வாக்குமூலமும் ஒன்றே. என்ன கோட்சே கொன்றது காந்தியை என்ற ஒரு வித்தியாசத்தை தவிர.

காந்தி என்று வேண்டாம் மற்ற யாராக இருந்தாலும் அவரை கொல்லும் உரிமையை சட்டம் ஒருவருக்கும் கொடுக்கவில்லை.

சரி கோட்சே தான் சரியான ஒரு காரணத்தை கூற முடியவில்லை, கோட்சேவின் செயல் சரியே என எழுதும் இந்த பதிவரின் பார்வையாவது என்ன என்று எழுதி இருக்கலாம் அதுவும் இல்லை. கிட்ட தட்ட நகைப்புக்கு என்று சொல்வது போல், "அதோ போரானே அவன் சுத்த மோசம்" என்பார்கள். உனக்கு அவனை தெரியுமா என்றால் இல்ல எனக்கு நல்லா தெரிஞ்ச ஒருத்தர் சொன்னார் மோசம்னு அதான் சொன்னேன் என்பார்கள். அதை போல் எழுதுகிறார் இந்த பதிவரும்.

கோட்சே காந்தியின் மீது வைக்கும் குற்ற சாட்டு இது தான், இந்து முசுலீம் கலவரத்தில் காந்தி முசுலீம்களுக்கு ஆதரவாக பேசினார் செயல்பட்டார் மற்றும் இந்து விழாக்களில் குறானை படிக்க செய்தார் அதனால் கோவில்களின் புனிதம் கெட்டுவிட்டதாகவும். இப்படியே விட்டால் முசுலீம்கள் நாட்டில் ஆதிகம் செலுத்துவார்கள் என்று அஞ்சியதாகவும், இவைகள் எல்லாம் நடக்காமல் இருக்கவேண்டும் என்றால் காந்தி இல்லாமல் போனால் இது நடக்காது என்று எண்ணியதாகவும் அதனால் கொன்றதாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார் கோட்சே என்று எழுதியுள்ளார் அந்த பதிவர்.

கோட்சேவின் வாக்குமூலத்திலும் சரி , இந்த பதிவரின் பதிவிலும் சரி கலவரத்திற்கு யார் காரணம் என்றோ அல்லது எப்படி அந்த கலவரத்தை புத்திசாலி தனமாக துவங்கிவிட்டு ஊரை இரண்டாக்கி வேடிக்கை பார்த்த அந்த கூட்டத்தை பற்றி எதுவுமே சொல்லாமல் இருப்பது ஆச்சரியமாக மட்டும் இல்லை பரிதாபமாகவும் இருக்கிறது.

சரி அந்த காலத்தில் இந்த விதமான தகவல்களை சேகரிப்பதும் தெரிந்துகொள்வதும் கடினம் தான். ஆனால் இத்தனை ஆண்டுகாலம் ஆன பிறகும் இந்து முசுலீம் கலவரம் யார் தொடங்கினார்கள் எதற்காக தொடங்கினார்கள், அந்த கலவரத்தால் குளிர் காய்ந்தவர்கள் காய்ந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் யார் என்று இதுவரை எந்த கட்டுரையிலும் செய்தியிலும் வரலாற்று ஆசிரியர்களும் சொல்ல கேட்டது இல்லை.

இந்த ஒரு கேள்விக்கு விடை தெரிந்துவிட்டால் நாட்டில் இந்து முசுலீம் கலவரம் வெடிக்கும் போது எல்லாம் கையாளுவது எளிதாக இருக்கும். மக்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவும் மாட்டார்கள்.

நம்மால் வெகு சமீபத்தில் நடந்த குசராத்து கலவரத்திற்கு காரணம் யார் என்று கூட கண்டுபிடிக்கவோ அல்லது அப்படியே உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தாலும் நிரூப்பிகவோ அல்லது அப்படி தூண்டியவர்களை தண்டிக்கவோ முடியுமா என்ன......

காந்தியை கொன்றதிற்கு இது தான் காரணமாக இருக்க முடியும். அவர் கொல்லப்படுவதற்கு முன்னால் நடந்த மதகலவரம் வரை காந்தியின் தலையீட்டால் நிறுத்தியும் கட்டுப்படுத்தபட்டும் வந்தது எல்லோருக்கும் தெரிந்ததே.

இந்த கலவரம் குசராத்தில் வந்தபோது எப்படி ஒரு இன சுத்திகரிப்பு வேலை நடந்ததோ அதே சுத்திகரிப்பை நடத்த எண்ணி தான் காந்தியின் காலத்திலும் கலவரங்கள் தூண்டிவிடபட்டது. ஆனால் அந்த எண்ணம் ஈடேராமல் தடுத்தது காந்தியே. உயிர்போகும் விளிம்பு வரை உண்ணா நோம்பு மேற்கொண்டு நிறுத்தியதை நாடே அறியும்.

அப்படி இந்தியாவில் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் இதுபோல பாக்கிட்தானத்திற்கு சென்று முறையிட இருப்பதாக காந்தியின் திட்டம் இருந்தது. இந்த நிலையில் காந்தி சுட்டு கொல்லப்படுகிறார் என்றால் என்ன நோக்கமாக இருக்கும்.

எந்த ஒரு நிலையிலும் எந்த ஒரு காரணத்திற்காகவும் இந்து முசுலீம் கலவரம் முடக்கப்பட்டுவிட கூடாது என்ற காரணத்தை தவிர வேறு என்னவாக இருக்கமுடியும்.

 நிலவரம் இப்படி இருக்க கோட்சேவோ காந்தியால் அரசியலில் வெற்றிகொள்ள முடியாதவர் என்றும் அவரால் ஒன்றும் விளையபோவது இல்லை என்றும், இப்படி எந்த ஒரு பயனும் இல்லாமல் இருப்பவரை கொல்வது நாட்டிற்கும் மதத்திற்கும் நல்லது என்று வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக அந்த பதிவர் எழுதியுள்ளார்.

எந்த ஒரு தலைவரையும் நமக்கு பிடித்து ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை தான் ஆனால் அதே சமயத்தில் நமக்கு பிடிக்கவில்லை என்ற ஒரு காரணத்தை ஞாயபடுத்த அவர்களை கையால் ஆகாதவர் போல் சித்தரிப்பது எந்த விதத்திலும் சரியான செயல் இல்லை. கோட்சே ஒரு மத, இன, சாதி வெறியர் என்றதை இன்னமும் அதிகமாக ஆதாரங்களை கொண்டு நிருவ வேண்டியதில்லை. அவருடைய வாக்குமூலமே அதற்கு தகுந்த சாட்சியாக எடுத்துகொள்ளலாம்.

பிசேபி கட்சியின் சித்தாந்தங்கள் தான் பிடிக்கிறது, அடுத்தவர்கள் மகிழ்சியாக இருப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் அந்த கட்சியினர். அவர்களை போல் வயிற்றெறிச்சல் கொண்டவர் தான் நானும் என்று இந்த பதிவர் நேர்மையாக் ஒத்துக்கொண்டு போகலாம் அதைவிடுத்து ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையாக அழுது தள்ளி இருக்கிறார் இந்த பதிவர், பாவம் மனிதர், இதற்கு நம்பள்கி ஆதரவு வேறு என்ன கொடுமை சரவணா......


Thursday, October 24, 2013

மெட்ராசு கபே (Madras Cafe ) அடுத்து பூனா கபேன்னும் படம் இப்படி எடுப்பார் சாம் ஆபிரகாம் -- பாவம் மோடி

படம் துவங்கும் போது இந்த கதையில் வரும் சம்பவங்களும் பாத்திரங்களும் கற்பனையே அப்படி உண்மை சம்பவங்களை நினைவு படுத்துமாயின் அவைகள் ஏதேட்சையாக நடந்தவைகளாகத் தான் இருக்கும் என்று துவங்கி படம் இப்படி பயணிக்கும்.

பாங்காக்கில் ஒரு குசராத்தி சப்பானிய உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைகள் நடத்துவார். அவரது உரையாடலில் திரும்பவும் காங்கிரசு ஆட்சிக்கு வரும் என்ற உத்தேச தேர்தல் அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு எப்படியாவது இந்த முறை மோடியை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் அதற்கு சப்பானியர்கள் என்ன விலை கொடுப்பார்கள் என்று கேட்பார்.

அப்போது அந்த சப்பானிய உயர் அதிகாரிகள் அவர்களின் நாட்டில் தற்பொழுது வெடிக்க காத்துக்கொண்டு இருக்கும் அணு உலையில் காத்துக்கிடக்கும் 1331 குச்சிகளையும் அடியோடு நீக்கி அப்படியே வெடித்தாலும் சப்பான் தாக்கபடாத தூரத்திற்கு எடுத்து சென்றுவிட்டால் மோடி பிரதமர் ஆக்க எத்தனை கோடி ஆயிரங்கள் செலவாகுமோ அவைகளை லண்டனில் உள்ள ஒரு வங்கி மூலமாக கொடுக்க ஏற்பாடு செய்வதாக வாக்கு கொடுப்பார்கள்.

அதை தொலை தொடர்பில் கேட்ட மோடி தனது உயரதிகாரிகளுடன் ஒரு ஆலோசனை நடத்துவார். அந்த ஆலோசனையில் பூனாவின் சிறந்த காவலர்களில் திறமையான ஒருவரை சப்பானுக்கு அனுப்பி அங்கே அந்த அணு உலையில் வேலை பார்த்து பிறகு வேலை போனவர்களில் ஒரு தொழில் நுட்பபிரிவை உருவாக்கி அவர்களது துணையில் அந்த அணு உலையில் இருக்கும் அணு கதிர் குச்சிகளை வெளியில் கொண்டுவர திட்டம் இடுவார்.

அப்படி திட்டம் தீட்டும் போது சப்பானிய நாட்டின் தொழில் அதிபர்கள் காங்கிரது ஆட்சி இந்தியாவில் மீண்டும் மலர்வதை தடுக்க திட்டம் தீட்டுவதாக இங்குலாந்தின் உளவு துறைக்கு செய்தி பறக்கும். அதை தொடர்ந்து அங்கு வேலைபார்க்கும் ஒரு இந்தியர் அதுவும் பெண் பத்திரிக்கையாளர் வாயில் என்னேரமும் சுருட்டுனம் கூடவே ஒரு அதி உயர் சாரயத்துடனும் தனது படபிடிப்பு கருவிவை வைத்துக்கொண்டு பாங்காக்கு கள்ள தோணியில் பயணிப்பார்.

அதே தோணியில் மோடியின் ஆளும் பயணிப்பார், இருவருக்கும் இடையில் நடக்கும் வசனங்களில் காவலர் மாநில பற்றுடனும் நிருபர் ஞாய பற்றுடனும் பேசிக்கொள்வார்கள்.

பாங்காக்கு நகரை அடைந்ததும் ஒரு இரகசிய இடத்தில் காவலர் சப்பானின் அணுகுச்சிகளை அகற்ற கூட்டிய குழு கூடி நிற்கும். அந்த குழுவின் தலைமையை இந்த காவலர் சப்பான் மொழியில் அண்ணா என்று விளிப்பார். அவரும் பதிலுக்கு தான் கூட்டி வந்திருக்கும் குழுவிற்கு நல்ல விலையில் பணம் கொடுத்தால் அவர்கள் நல்ல ஒத்துழைப்பை தருவார்கள் என்றும். அப்படி தராவிடின் இந்த திட்டத்தை இந்தியாவில் காங்கிரசு கட்சிக்கு தெரியபடுத்துவேன் என்றும் மிரட்டுவார் சப்பான் அண்ணா.

காவலரோ வேலையின்றி புரக்கணிப்பட்ட உங்களுக்கு உதவும் எண்ணத்தோடு எங்களது முதல்வர் மோடி இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள் அதற்கு நன்றியாக நீங்கள் எல்லோரும் உங்களது உயிரை கொடுத்தாவது இந்த வேலையை முடிக்கனும் அதைவிடுத்து இப்படி உங்கள் நலனை முன்னிருத்தி பேரம் பேசினால் எப்படி என்று கண்டிபுடன் கேட்ப்பார்.

ஒரு வழியாக பேரம் பேசி சப்பான் அண்ணா தனது ஆட்கள் எல்லாம் செத்தாலும் தனக்கும் ஒரு பெரும் தொகை செயலுக்கு முன்னமே கிடைக்கும் என்ற உறுதியை பெற்று அந்த அணு குச்சிகளை சப்பானில் இருந்து எடுத்து இந்த காவலரிடம் கொடுக்க வேலைகளை முடுக்குவார்.

இந்த அணுகுச்சிகளை கதிர்வீச்சு தாக்காமலும் வெடிக்காமலும் வெளியில் கொண்டு வர பூனாவில் அசுர குழாய்களை ஒருவருக்கும் தெரியாமல் ஒரு மாநில அரசு நிறுவனம் மோடிக்கு செய்துகொடுக்க முன்வரும். அந்த குழாய்களை வடிவமைததும் அவைகளை கொண்டு சீன நிறுவனத்திடம் கொடுத்து செய்து சப்பானுக்கு அருகில் இருக்கும் கடற்கரையில் கொண்டுவந்து கொடுக்கும்மாறு ஒரு இரகசிய பேரமும் நடக்கும்.

இந்த இரகசிய பேரம் ஒருவருக்கும் தெரியாமல் இருக்க சீன முக்கா என்ற ஒரு உயர் அதிகாரியை அந்த பூனா காவலர் கண்டுபிடித்து வேலைக்கு அமர்த்துவார். அவரும் ஒரு மாத காலத்திலே தன்னிடம் இருக்கும் அடிமைகளை எல்லாம் தட்டி தகுடு எடுத்து குழாய்களை கொண்டுவந்து சப்பான் கடலில் கொண்டுவந்து கொடுத்துவிடுவார்.

அடுத்து அந்த குழாய்கள் எடுத்துகொண்டு போய் சப்பானிய அணு உலைக்கு 60 மைல் தொலைவில் கடலில் நின்றபடி இந்தியாவின் மற்றும் இரசிய செயற்கைகோளின் உதவியுடன் இயந்திர மனிதர்களை கொண்டு அணு உலையின் கொதிகலனுக்கு இணப்பு கொடுத்து கடல் நீர் கொண்டு தள்ளியே அந்த 1331 அணு குச்சிகளையும் கப்பலுக்கு அந்த இயந்தர மனிதர்களின் உதவியுடனே முடித்துவிடுவார்கள்.

அப்படி கொண்டு வந்த அணு குச்சிகளுடன் கப்பல் புறப்படும் போது அமெரிக்காவின் செயற்கை கோளில் சப்பானிய கடலில் ஒரு பெரிய கதிர்வீச்சு தென்படுவாதாகவும். அது என்ன என்று துப்பு துலக்கவும் தனது உளவு நிறுவனத்தை அனுப்பும்.

அந்த உளவு நிறுவனம் இந்த கதிர்வீச்சும் அதன் காரணமும் அறிந்து உலகுக்கு தெரிவிக்காமல் இந்தியாவில் காங்கிரசை மறுபடியும் எப்படி ஆட்சியில் கொண்டுவருவது என்று சிஐயேவிடம் கேட்கும்.

சிஐயேவும் மோடியை இல்லாமல் செய்துவிட்டால் காங்கிரசு பிழைக்கும் என்று தனது கணிப்பை சொல்லும். அந்த கணிப்பை எடுத்துக்கொண்டு எப்படி இதை செய்துமுடிப்பது என்று தனது சிறந்த வல்லுனர்களை சிஐயே கேட்கும். அவர்களும் இப்போதைக்கு ஒருவருக்கும் சந்தேகம் வராமல் மோடியை அடிக்க வேண்டும் என்றால் அது பாக்கிட்தானியர்களை கொண்டு செய்தால் தான் அமெரிக்காவின் மேல் ஒருவருக்கும் சந்தேகம் வராது என்று பரிந்துரைக்க. அப்படியே திட்டதினை செயல் படுத்துவார்கள்.

மறுமுனையில் மோடியின் ஆட்களோ அணு குச்சிகள் திட்டமிட்டபடி தமிழக எல்லையில் கொஞ்சம், வங்காள ஆந்திர எல்லையில் கொஞ்சம் என்று பிரித்து நிறுத்தி வைத்துகொண்டு இந்த 3 மாநில அரசுகளின் மின் தேவையை பூர்திசெய்ய மோடி உதவுவதாகவும். மின் பஞ்சத்தை நொடியில் காணாமல் போக வைப்பதாகவும் தேர்தல் வியூகங்களில் சொல்லும்.

இதை கேட்ட மற்ற மாநிலங்களும் தங்களின் மின் தேவைகளையும் போக்கும் மாறு மோடியிடம் மன்றாடும். அவரும் அவரை பிரதமர் ஆக்குவதாக இருந்தால் அவர் இந்தியாவில் தயாரிக்க போகும் மின்சாரம் சப்பான் வரை பாயும் என்றும் தனது தேர்தல் பிரச்சாரங்களில் முழங்குவார்.

ஒளிரும் பாரதம் என்றது போக ஒளிரும் உலகம் என்று அமிதாபச்சன், மணிரத்தினம், இரகுமான் என்று ஒரு கூட்டணியில் ஒரு 100 விளம்பர படங்களை இந்தியாவில் பேசும் அத்தனை மொழியிலும் சப்பானிய எழுத்துகளுடன் தயாரித்து வெளியிடுவார்.

இதை எல்லாம் பார்க்கும் பாரத மக்களும் மற்ற தலைவர்களும் என்ன அறிவு இந்த மோடிக்கு எப்படி பட்ட தலைவரை இந்தியா தவம் செய்து பெற்றுள்ளது. இத்தனை ஆண்டுகாலம் இந்தியா இப்படி இருளுக்குள் இருந்துவிட்டதே என்று மக்களும் தலைவர்களும் தங்களுக்குள் பேசிக்கொள்வதை மோடியின் உளவு கூட்டம் சேகரித்து மோடிக்கு கொடுக்கும்.

இப்படியே தேர்தல் அருகாமையில் சந்திராசாமி சுபிரமணியசாமி என்ற இருவர்களும் சேர்ந்து பாக்கிட்தானிய கூலி படைகளை தந்திரமாக மும்பையின் கரை வழியாக் குசாராத்துகுள் அழைத்து வந்து மோடியின் முக்கியமான மிகவும் நம்பகமான பெண் பாராளுமன்ற உருப்பினர் வீட்டில் தங்க வைத்து பாதுகாப்பார்கள்.

தேர்தலில் வெற்றி பெறுவதை உறுதிபடுத்தும் வேலைகளில் மூழ்கி இருந்த அந்த சிறந்த காவலர் குசராத்தில் என்னமோ நடக்க போகுது என்று அந்த லண்டன் குடிகார பெண் நிருபர் சொல்ல. உடனே இருக்கும் இடத்தை விட்டு காவலர் குசராத்துக்கு செல்வார்.

மற்ற எல்லா மாநிலங்களுக்கும் மிகுந்த பாதுகாப்புடன் சென்ற மோடி தனது மாநிலத்தில் நடக்கும் பொதுகூட்டதில் பேச செல்லுவார். தனது மண்ணில் தன்னை யாரும் எதும் செய்ய மாட்டார்கள் என்றும் பதிரிக்கைகளுக்கு சொல்லியும் செல்வார்.

இந்த இடத்தில் அந்த சிறந்த காவலர் வகுத்து கொடுத்த வியூகமான இன்னும் ஒரு கோத்ராவை மோடியின் கட்சியினர் பொதுக்கூட்டம் நடக்கும் மூலைக்கு எதிர் திசையில் சத்தம் இல்லாமல் நிறைய முசுலீமுகள் இருக்கும் இடத்தில் நடத்துவார்கள்.

அதே நேரம் பொது கூட்டத்தில் பாக்கிட்தானியர்களின் கூலிப்படை தங்களது கைவரிசையை காட்டும். அந்த சிறந்த காவலர் அப்போது தான் பொது கூட்டதிற்கு வருவார். அவர் நினைப்பார் அவரது ஏற்படுகளின் படிதான் செயற்கை கலவரம் நடக்கிறது என்று. ஆனால் உண்மையில் மோடியும் அவரது சிறந்த குழுவையும் அந்த பாக்கிட்தானியர்கள் அழித்து அவர்களும் மடிவார்கள்.

பிறகு நடந்தவை என்ன என்று விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைப்பார்கள் மத்திய அரசில், அவர்களது ஆணையத்தில் அமெரிக்கா எப்படி மோடியை கொல்ல திட்டம் தீட்டியது என்ற ஒன்றை மட்டும் வெகு விளக்கமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் எழுதி ஆதாரங்களுடன் கொண்டு கொடுப்பார் இந்த குசராத்தின் சிறந்த காவலர். ஆணையமோ பிறகு பார்கலாம் என்று சொல்லி புறக்கணிக்கும்.

உடனே அவர் அந்த லண்டன் குடிகார பெண் நிருபருக்கு அனுப்புவார், அவரும் சப்பானில் என்ன நடந்தது, அந்த பணம் என்ன ஆனது, 3 மாநிலங்களின் கரையில் நிறுத்திய அணுகுச்சிகள் என்ன ஆனது. இதில் யார் யார் எல்லாம் பாதிக்கப்பட்டார்கள். எத்தனை ஆயிரம் மக்களும் கடல் வளங்களும் எதிர்கால சந்ததிகளும் அழிக்கப்பட்டது என்ற உண்மைகளை எல்லாம் வசதியாக மறைத்து வைத்துவிட்டு, உலகுக்கே ஒளி கொடுக்க நினைத்த ஒரு தலைவனை எப்படி பாக்கிட்தானியர்களும் முசுலீம்களும் அமெரிக்க உளவு நிறுவனமும் சேர்ந்து அழித்தது என்றும் அதை காக்காமல் எப்படி தான் தவறவிட்டேன் என்றும் அழுதுக்கொண்டும் அந்த சிறந்த காவலர் பாதரியிடம் செல்லி பாவமன்னிப்பு கோட்கும் காட்சிகளுடன் படமும் முடியும்.

படத்தை பார்க்கும் வட இந்தியர்கள் ஆகா படம் என்ன அழகாக எடுத்து இருக்கிறார்கள், எத்தனை அழகாக இருக்கிறது என்று வாயார புகழ்ந்து தள்ளுவார்கள்.

கதிர்வீச்சால் பாதிக்கபட்ட 3 மாநில மக்கள் எல்லாம் இந்த படத்தை பார்த்துவிட்டு எங்கட சப்பானை பற்றியோ அல்லது நம்ம பாதிப்பை பற்றியோ ஒரு செய்தி கூட படத்தில் இல்லையே என்று தப்பி தவறி சொல்லிவிட்டார்கள் என்றால் போதும். பாதிக்காத மாநில காரர்கள், வந்து ஒரு குதி குதிப்பார்களே பார்க்கனும். 

மறுபடியும் இப்படி முழு பூசணிகாயை சோற்றி மறைத்து எந்த படம் எடுக்கலாம் என்று சாம் ஆபிரகாம் தேடி அலைவார் போலும்........

படத்தில் பாங்கக்கு, சப்பான், அமெரிக்கா, பாக்கிட்தானம் என்று சதிகள் நடக்கும் இடங்களில் எல்லாம் ஒரு பூனா கபே என்ற ஒரு பெயர் பலகையை காட்டவேண்டும், திரைகதை திருத்தத்தில் சேர்த்துகொள்ள சொல்லலாம்.....

Saturday, October 19, 2013

தி காஞ்சூரிங்கு ( The Conjuring )-- தமிழும் ஆங்கிலமும் திரைவிமர்சனம்


சமீபத்தில் ஆங்கிலத்தில் வெளியாகி வெற்றிகரமாக பொருளீட்டிய படம் இது. 1970களின் கதைகளை சமீபத்தில் ஆலியுட்டு அதிகம் படமாக்குகிறது. அதுவும் பேய் படங்களில் இவைகள் அதிகம். காரணம் அறிவியலின் வீச்சில் காலப்போக்கில் இந்த வகை கதைகளும் அருகிபோனது காரணமாக இருக்கலாம்.

வெளி உலக மனிதர்களின் படங்களுக்கு என்ற ஒரு நாயகி இருக்கிறார் சிங்கோர்னி வீவியர். அனேகமாக எல்லா வெளி உலக மனிதர்களின் படங்களில் இவர் இல்லாமல் பார்க்க முடியாது.

அது போல இப்போது இந்த பேய் படங்களுக்கு என்று ஒரு நாயகியை பிடித்தி இருக்கிறார்கள் வேரா பிளமிங்கா. மிக சரியாக பொருந்துகிறார் அந்த வேடங்களில். அவரது கண்களில் வெளிப்படும் மிரட்சியும் வசனம் பேசும் விதமும் பார்பவர்களை அந்த பாத்திரத்தின் மீது பரிதாபமமும் அவருடன் நமக்கும் அந்த பயம் தொற்றி கொள்ளும் அளவிற்கும் இருக்கிறது.

முதல் முதலில் இவரது நடிப்பில் வெளியான ஆர்பன் படத்தில் அசத்தி இருப்பார். அதே அசத்தலில் இந்த படமும். அருமையாக நடித்து இருக்கிறார் வேரா.

அமெரிக்காவில் அன்று தொட்டு இன்று வரைக்கும் வாழையடி வாழையாக சொல்லும் சொல்லும் செய்திகள் இவைகள். ஒன்று ஆனாதை விடுதியில் இருந்து பிள்ளைகளை எடுத்து வளர்க்காதீர்கள் என்றும். வீட்டு கடன் கட்ட முடியாமல் வங்கிக்கு கொடுத்த சொத்துகளை வாங்காதீர்கள் என்ற இரண்டும். இவைகளில் வேரா ஏற்கனவே ஆர்பன் படத்தில் ஆனாதை இல்லத்தில் இருந்து பெண்ணை எடுத்து வளர்க்க முடிவெடுத்து முயலும் போது என்ன என்ன தொல்லைகளை சந்தித்தார்கள் என்று சித்தரித்து காட்டியது ஆர்பன் படம்.

இப்போது வீட்டை அடிமாட்டு விலைக்கு கிடைக்கிறது என்று பேய் கொண்ட வீடு என்று தெரியாமல் அடிமாட்டு விலைக்கு கிடைகிறது என்று ஒரு நடுதர குடும்பம் தனது 5 பெண்பிள்ளைகளுடன் அந்த வீட்டிற்கு குடியேறிய உடன் நடக்கும் பேயாட்டங்களை படத்தில் காட்டி இருக்கிறார்கள்.

இந்த கதை உண்மை கதையின் பின்னணியில் எழுதி எடுத்தது என்றும், வேரா நடித்த அந்த பாத்திரம் இன்றும் இருக்கிறார்கள் என்றும் கடைசியில் காட்டுகிறார்கள்.

படத்தின் பலம் திரைகதை மற்றும் இசையாக இருந்தாலும், அந்த கடைசி காட்சியில் வேரா பேசும் வசனங்கள் தான் மிகவும் முக்கியமாக அமைத்து இருந்தது. ஏனோ அவைகளை தமிழ் பிரதியில் அவசரத்திற்கு கிண்டிய உப்புமாவாக ஆக்கிவைத்துள்ளார்கள்.

பேய்யின் ஆக்கிரமிப்பில் ஆட்கொள்ளும் மனிதனின் மனம் அதற்கு முழு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றது தான் இந்த பேய் ஆக்கிரமிப்புகள் மற்றும் மனோவசியமும் அப்படி தான் என்று சொல்கிறார்கள். அப்படி அந்த சூனியகாரியின் பேய் அந்த ஏழை தாயின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக ஆகிரமித்து. கடைசியில் ஆட்கொண்டு மகளை கொல்ல தூண்டும் அந்த காட்சியில் வேரா அந்த தாயின் அதி மகிழ்ச்சி தருணங்களை தொடர்ச்சியாக பேசி தாயின் மனதை நல்ல வழிக்கு திருப்பும் தருணங்களை அவசரத்தில் கிண்டிய உப்புமாகாக மொழிபெயர்த்தும் பேசியும் உள்ளார்கள் தமிழில்.

மேலும் குழந்தைகள் பேசும் வசனங்களை பெரியவர்கள் கடினப்பட்டு சிறுமியாக பேசி இருப்பது இரசிக்கும் படியாக தமிழில் இல்லை.

ஒரு நல்ல பேய்படம் அந்த படத்தை இப்படியா ஒப்புக்கு சப்பாணியாக மொழிபெயர்கனும்.............

Tuesday, October 15, 2013

நய்யாண்டி -- இவ்வளவு பெரிய மோசடி விளம்பரமா இந்த படத்திற்கு

படம் எவ்வளவு பேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை. காட்சிக்கு காட்சி தொடர்பிண்மை, என்ன தான் நையாண்டி படமாக இருந்தாலும் இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னால் வந்த வவாச படத்தின் கரு அதை பின்னிய வசனம் காட்சி என்றாலும் எந்த சம்பந்தமும் இல்லாமல் வரும் காட்சிகள் இரசிக்கும் படியா இல்லை.

கிட்ட தட்ட ஒய்சி மகேந்திரன் நாடகம் போல இதுக்கு இப்ப இங்க சிரிக்கனும் என்று விளக்கம் சொல்லும் நிலையில் தான் படத்தின் நகைசுவைகள் இருக்கிறது.

கிட்ட தட்ட அன்றாட தொடர்களிலும் தற்பொழுது வருகின்ற படங்களில் வரும் காட்சிகளை அப்படியே அப்பட்டமாக காட்சியாக்கி இருப்பது தெரிகின்றது.

படத்தை பார்த்த படக்குழு கட்டாயம் கல்லா கட்டாது என்று தெரிந்து என்ன கேவலமான ஒரு விளம்பரம் இந்த படத்திற்கு........ ஐயோ பாவம் அந்த நடிகை......

Monday, October 7, 2013

ஓநாயும் ஆட்டுகுட்டியும் -- குருதிபுனலும்

குபுவில் இல்லாத அம்சம் இந்த ஓஆவில் இருப்பது என்ன என்று பார்த்தால் அது இளையராசாவாத்தான்  இருக்கும்.

மற்றபடி ஒரு மர்ம கதையின் போக்கும் திரைக்கதையும் அழகாக அமைத்துள்ளார் இயக்குனர்.

என்ன முந்தைய 5 படங்களை பார்த்த நமக்கும் இந்த படமும் ஏதோ ஒரு ஆங்கபடத்தின் தழுவலாகவே இருக்கும் என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம் எளிதில்.

அந்த சக்கிர நாற்காலி வில்லனையும் அந்த காட்டிக்கொடுக்கும் காவலனையும் தவிர்த்து இருந்தால் இத்த படம் தழுவலோ என்ற சந்தேகம் கூட வந்திருக்காது.

நிறைவாக அமைந்த படம் என்ன நிறைய நட்சத்திரங்கள் இருந்திருந்தால் சொலித்திருக்கும், இருந்தாலும் பரவாயில்லை என்று மக்கள் பார்கிறார்கள் போலும்.

சின்ன கதை அதை வைத்துக்கொண்டு 2:30 மணி நேரம் திரையில் காட்ட போகிறார்கள் என்றதும் அடுத்தது என்ன என்ன என்ற மர்மம் கடைசிவரையில் நீடிப்பது சுவாரிசியம்.

அப்படி எங்கே தான் சென்று தப்பிக்க போகிறார்கள் என்று யூகிக்க முடியாத முடிவு நிறைவான முடிவு.

இந்த இயக்குனரின் படங்களை பாராட்டி எழுதியதில்லை காரணம் மூலபடத்தின் வாசனை அப்படியே வருவதான். ஆனால் இந்த படத்தை அழகாக எழுதியிருக்கிறார் இயக்குனர்.

என்ன இளையராசாவின் அற்புதங்கள் இவரின் கதையோடு பார்வையாளர்களை ஒரு ஆட்டு ஆட்டி வைக்கிறது நமக்கே தெரியாமல். இராசா இராசா தான் உங்களை போல் இசைக்க இன்னமும் தமிழில் ஆள் இல்லை, பார்க்கலாம் ஏதும் படம் வருகிறதா என்று.....

குபுவை கமலும் அர்சுனும் விற்றுக்கொடுத்தார்கள், இந்த ஓஆவை மக்கள் விற்றுக்கொடுப்பார்களாக......

வாழ்த்துகள் மிசுகின், இன்னமும் இது போல் வசூலும் கூடிய படைப்புகளை கொடுக்க வேண்டுவோம்.

என்ன இவரது நண்பர் என்று சொல்லிக்கொள்ளும் சாரு ஒன்றும் சொல்லிக்கொள்ளாமல் மௌனம் காத்துகொண்டு தான் இருக்கவேண்டிய நிலை பாவம் அவருக்கு.... பார்ப்போம் என்ன எழுதுகிறார் என்று.....

6 மெழுகுவர்த்திகள் -- திரைவிமர்சனம் -- The Changeling

ஆங்கிலப்படத்தை பார்த்து அச்சுபிசக்காமல் எடுக்கும் காலம் போலும் இது.

என்ன கதையில் சிற்சில மாற்றங்கள் மற்றபடி கதை அப்படியே மூலகதை.

ஆங்கிலத்தில் ஏஞ்சலீன தமிழில் சாம் அவ்வளவு தான் வித்தியாசம்.

ஏன்ஞலீனாவின் கணவன் ஓடிவிட்டதாக காட்டுவார்கள், சாமின் மனைவி வந்துடுங்க இன்னமும் எத்தனை பிள்ளை வேண்டும் என்றாலும் பெற்று தருகிறேன் என்று அதற்கு ஈடாக சொல்லுவார்....

ஆங்கிலத்தில் அந்த வயது சிறுவர்களை கடத்தி துன்புறுத்தி கொலைசெய்வதில் அவனுக்கு ஒரு அலாதி இன்பம், இது உண்மையில் நடந்த கதை அமெரிக்காவில்.

தமிழிலோ சிறுவர்களை கடத்தி பணம்பன்னுவது தொழிலாக காட்டப்பட்டு இருக்கிறது.

ஒரு அடிதடி நடைகை, அம்மாவாக நடிக்கும் காட்சிகளை மிகவும் அருமையாக காட்சியாக்கி இருப்ப்பார் ஈசுடுவுட்டு. குறிப்பாக அந்த புது பையம் அம்மா என்று விளிக்கையில் தட்டைவிட்டு எறிந்து பேசும் வசனங்களும் ஏஞ்சலீனாவிற்கு புதிது. சாம் பாவம் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் இவைகளுக்கு தமிழில்.

ஆங்கிலத்தில் தப்பித்த பையன் கடைசியில் தரும் நம்பிகையை தமிழில் வெற்றியாகவே காட்டியிருக்கிறார்கள்.

ஒரு வேளை ஆங்கிலத்தில் காட்டியது போல் இளம் பிள்ளைகளை கொண்டுவர்ந்து நறுக்கி கொல்லும் காட்சிகளை வைத்தால் அவைகளுக்கு அச்சாரமாக அமையுமோ என்று கதையை மாற்றி இருக்கலாம். இருந்தாலும் கதை எங்கு இருந்து எடுத்து ஆளப்பட்டது என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.....

ஆங்கிலத்தில் மற்ற பையனை கொண்டு வந்து கொடுத்து இது தான் உனது பிள்ளை என்று சொன்னதற்கும். அப்படி மற்ற பிள்ளையை கொடுத்ததை நீதிமன்றம் சென்று சொல்வேண் என்று சொன்னதற்காக பைத்தியகாரியாக சித்தரித்து துன்புரியதற்கும் அந்த காவலரும் அவரது மேலதிகாரியையும் வீட்டிற்கு அனுப்பும் காட்சிகள் இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

சமூக விழிப்புணர்வுகு என்று படம் எடுத்தால் அவைகளில் இவைகளும் இருக்க வேண்டும். இல்லாமல் போனம் ஏமாற்றமே... என்ன தான் மோசமாக சமூகம் மாறி இருந்தாலும் அதிலும் நெஞ்சில் ஈரம் உள்ள மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் எல்லா இடங்களிலும்.

Sunday, October 6, 2013

தங்க மீன்கள் - திரைவிமர்சனம்

படம் முழுக்க தந்தையின் தவிப்பை அடுத்தவர்கள் பைத்தியகார தனமாக பார்க்கும் விதமாக காண்பிக்கப்பட்டுள்ளது.

மனைவியும் கூட தன்னை அவமானபடுத்துவதாக நினைக்கும் தந்தை மகளை விட்டு பிரியும் காட்சிகளுக்கு கொடுக்கும் விளக்கம் போதுமானதாக இல்லை.

மகளின் பாத்திரப்படைப்பு அபாரம். குறிப்பாக அப்பாவுக்கா என்று மகள் பள்ளியில் திருடும் அளவிற்கு செல்வதாக காட்டி இருப்பதுவும்....

அப்பாவிற்கு காய்ச்சல் என்று தெரிந்ததும் உங்களை யாருப்பா பார்த்துகொள்வார்கள், கஞ்சி வச்சி கொடுப்பாங்க என்று பதரும் காட்சிகளும். மடியில் கிடைத்தவைகளை அள்ளிக்கொண்டு அப்பாவிற்கு கஞ்சி வைத்துகொடுக்க கிளம்பும் காட்சிகளும் அருமை. அப்பாக்கள் மகளை என்னை பெற்றவளே என்று விளிக்கும் சொல்லின் மகிமை இது....

மகளின் அப்பாவி தனத்தை கலைக்காமல் அவளது அப்பாவி தனத்திற்கு தீனிபோடுவதும், அவளது அப்பாவி தன கேள்விகளுக்கு பொருமையாக பதில் சொல்லும் காட்சிகளிலும் பொறுப்பான அப்பாவாக தெரிகிறார்.

அப்பாவின் பொறுப்பில் பாதி கூட அடுத்த சொந்தங்களுக்கு இல்லாமல் காட்டுவது நம்பும் படியாக இல்லை. குறிப்பாக தாத்தா பாட்டுக்கு கூட இல்லாமல் இருப்பதாக காட்டும் காட்சிகளை சொல்லலாம்.

எவிட்டா ஆசிரியையின் காட்சிகளை இன்னமும் கொஞ்சம் அதிகம் காட்டி இருந்தால் விளக்கம் அதிகம் சொல்லி இருக்க தேவை இல்லை....

மகளுடன் எடுத்த காட்சிகளுடன் மற்றவர்களுடனும் எடுத்து இருந்தால் இன்னமும் நிறைவாக இருந்து இருக்கும். மனைவி உட்பட அனைவருக்கும் காட்சிகளில் வஞ்சம்.....

காதலித்து மணந்த மனைவி கணவனுடன் தனியாக பேச கடை தொலைபேசியில் பேச என்ன அவசியம் என்று சரியாக சொல்லவில்லை அதுவும் மகளிடம் இவ்வளவு பாசம் உள்ள தந்தை அப்படி நடந்துகொள்ள அவசியம் இல்லை என்ன தான் கோபம் இருந்தும்.....

அப்படி இப்படி குறை இருந்தும் படம் நன்றாக வந்து இருக்கிறது. கற்றது தமிழில் கண்ட குறைபோல் அவனால் ஆகாமல் போனதற்கு தமிழ் படித்தது தான் காரணம் என்று காட்டுவது போல் இந்த படத்தில் மகளுக்கு இருக்கும் குறைக்கு அடுத்தவர்கள் தான் காரணம் என்று காட்டுவது போல் காட்சிகள் அமைந்து இருப்பது சோகம்.

படத்தின் துவக்கத்தில் இருந்து சேரன் எங்கோ மறைந்து கொண்டு பேசுவது போல் ஒரு தோற்றம் வருகிறது வருகின்ற படத்தில் தவிர்த்தால் நன்றாக இருக்கும்.......

சரண்யாவுக்கு மாற்றாக ஒரு இளம் அம்மாவை கண்டுபிடித்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர், இனி அதிக படங்களில் இது மாதிரி கையால் ஆகாத அம்மாவா இவரை பார்க்கலாம்.........




பாசமிகு அப்பா.... அதைவிட பாசமிகு மகள்........அருமை.

Saturday, June 15, 2013

இசையை தவிர மற்ற எல்லா செய்கைகளுக்கும் அதிகம் விமர்சிக்கபடும் இசையமைப்பாளர் இளையராசா

ஒரு தனிமனிதனாக இளையராசா விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை தான், அதுவும் இசையமைப்பாளராக விமர்சனத்திற்கு ஆளாவதே அவரது கடமையாகவா ஆகிவிட்டது இந்த காலங்களிலில். அதுவும் இத்தனை ஆண்டு காலமாக இவைகளை எல்லாம் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்தவர், அன்மைகாலங்களில் இவர்களுக்கு ஒன்று இருவர்களுக்கு பதில் சொல்லப்போக. வர போகின்றவர்கள் எல்லாம் அவர் மீது தனது வன்மத்தை பொழிவதும் அதன் மொழிகளும் நமக்கே இவ்வளவு வேதனையாக இருக்க மனிதர் என்ன பாடுபடுவாரோ அவருக்கே வெளிச்சம்.

இராசாவை வெறுத்து விமர்சனம் செய்யும் மனிதர்களில் 98% மக்கள் அவரின் இசையை எதுவும் சொல்வது இல்லை மாறாக அவரின் பேச்சையும் பேட்டியையும் மட்டுமே குறிப்பிட்டு பேசுவது கொடுமையே.

அந்த 2% மக்களின் விமர்சனம் இப்படி இருக்கும், இராசாவின் இசையில் அப்படி என்ன குறை கண்டீர்கள் என்று கேட்டால் அவரது இசை ஒரு டெம்புலேடட்(Templated)  இசை இன்று நுட்பமாக சொல்லுவர் ஒரு சாரார்.

அது என்ன கட்டம் கட்டிய இசை என்று இவர்கள் சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஒரு பாடல் பல்லவி அனுபல்லவி சரணம் என்ற வடிவினை கொண்டதாக அமையும். இவைகளுக்கு இடையில் வார்த்தைகளுக்கு பதில் காட்சிகளுக்கு ஏற்றார் போல் இசைவடிவங்களை கொடுப்பது தான் திரை இசைப்பாடலின் வடிவமாக அமையும். திரை இசை என்று இல்லை எந்த இசையாக இருந்தாலும் பாடலோடு சேர்ந்து வரும் போது, பாடலுடனும் பாடலுக்கு நடுவிலும் என்ற இடைவெளி இல்லாமல் அனேகமாக எந்த பாடலும் இருக்க வாய்பே இல்லை. அது எந்த ஊர் இசையாக இருந்தாலும் சரி எந்த பாரம்பரிய இசையாக இருந்தாலும் சரி.

இன்றைய காலத்தில் புதிது என்று கொண்டாபடும் இராப்பு இசையாக இருந்தாலும் தொடக்க இசை, பல்லவி அனுபல்லவி சரணம் என்று தான் அமையும். தேவைக்கு ஏற்றார்போல் அனுபல்லவியை கொள்ளாமல் விடுவது உண்டு. ஆனால் எப்படி பாடல் துவங்குகிறதோ அதே ஓட்டத்தில் கொண்டு வந்து முடிக்கும் ஒரு வட்டமுறை அனைத்து இசை வடிவங்களிலும் உண்டு. வெறும் வாத்திய இசையாக இருந்தாலும் சரி, அல்லது பாடலாக இருந்தாலும் சரி, இல்லை பாடலுடன் கூடிய இசையாக இருந்தாலும் சரி அதன் வடிவம் இப்படி தான் இருக்கும் இருக்கிறது தொன்று தொட்டு இருக்கிறது.

இதில் இராசாவின் எந்த இசையை கட்டம் கட்டிய இசை என்று சொல்கிறார்கள் என்று இந்த விமர்சகர்கள் சொல்வது இல்லை மாற்றாக இது டெம்புலேடட் இசை என்று மட்டும் சொல்வார்கள். கம்பனின் கவியில் குற்றம் என்று சொன்னார்களே அந்த மாதிரி.

இது ஒரு முறை விமர்சனம் என்றால், மற்றவர்கள் இராசாவின் இசை காலத்திற்கு ஏற்றார் போல் இல்லை என்றும் இன்னமும் பழையவைகளை வைத்துக்கொண்டு காலம் ஓட்டுகிறார்கள் என்று நையாண்டியாக சொல்வார்கள்.

இது கிட்டதட்ட தமிழை பழிப்பது போல் செய்யும் செயல், தமிழ் என்று இல்லை எந்த மொழியையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

இசை ஒரு மொழி, அந்த மொழியை கொண்டு காவியம் படைக்கலாம், கவி பாடலாம், கட்டுரை எழுதலாம், இயல் இசை நாடகம் என்று எத்தனை எத்தனை வண்ணகளில் படைக்கலாமோ அத்தனையும் படைக்கலாம். அவைகள் எல்லாம் படைக்கப்படுவது அந்த மொழியில் எத்தனை வண்ணங்களில் வந்த போது அது தமிழ் படைப்பு என்று வருவது போல், இராசாவின் படைபுகளில் எத்தனை வண்ண மாற்றங்கள் கொண்டு வந்தாலும் அது இசை மொழியில் ஒரு படைப்பு.

விமர்சனங்களில் நாடகம் என்றால் இப்படி ஒரு இலக்கணம் இருக்கிறது இவர் நாடகம் எழுதியுள்ளார் பாருங்கள்  நாடகத்தின் எந்த இலக்கணத்திலும் வராமல் இருக்கும் இதை போய் நாடகம் என்று நம்மை ஏமாற்றுகிறார் என்றா சொல்லலாம். இல்லை ஒன்றுமே படைக்க தெரியவில்லை ஆனால் அவரை போய் கம்பனை போல் நிறைய கற்பனை கொண்டவர் என்றோ அல்லது அரிய படைப்புகளை கொடுத்தார் என்றோ சொல்கிறீர்கள் என்று விமர்சித்தால் கூட பரவாயில்லை.

அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் இவைகள் தான், மாற்றாக ஒரு இசை வடிவம் வந்துவிட்டது. அந்த இசை இவர் கொடுக்கும் இசையை விட வித்தியாசமாக இருக்கிறது. மனதுக்கு பிடிக்கின்றது மக்கள் அந்த வித்தியாசமான இசையை விரும்பி இரசிக்கிறார்கள்.

இப்படி ஒரு மாற்றம் தான் இராசா உள்ளே வந்த போதும் நிகழ்ந்தது என்று இராசுக்கே நன்றாக தெரியும். எந்த நாளிலும் இப்படி ஒரு மாற்றம் வரும் என்று தெரிந்து தான் புதிது புதிதாக கொடுத்துக்கொண்டே இருக்கிறார் இராசா. இராசா மட்டும் இல்லை அத்தனை படைப்பாளிகளுக்கும் இப்படி ஒரு கட்டாயம் உண்டு.

இந்த மாற்றத்தை இராசா எப்படி அனுகிறார், மாற்றங்களை அப்படியே உள் வாங்கி அந்த முறையில் இசை கொடுக்கு துவங்கினால் நிராகரிப்பட்டிபார் வெகு விரைவில். மாறாக அந்த புதிய முறைகளை உள்ளடக்கி தனது கலவையாக கொடுத்துக்கொண்டு இருக்கிறார் இப்பவும்.

இராசா திரையிசையை துவங்கிய காலத்தில் டிசுகோவும் பாப்பும் ஆகிராமிப்பு கொண்டிருந்த காலகட்டம். இவைகளூடாக இந்திய பாரம்பரிய இசை, மண்ணின் இசை என்று எல்லா விதத்திலிலும் வண்ண வண்ணமாக அள்ளி கொடுத்து வந்தார் இராசா.

மேற்கில் ஏற்பட்ட வீழ்ச்சியும் புதிதாக இசை வடிவங்களை அறிமுகபடுத்தாமலும் இருந்த தேக்கம் இராசாவை இருந்த இந்த முறைகளுக்குளே போதும் என்று தான் இருந்துவிட்டார் போலும்.

என்னத்தை புதிதாக செய்வது என்று இருக்கும் நிலையில் இசையை துல்லியமாக ஒலிக்க செய்யும் எண்முறை பதிவில் துவங்கியதில் மாற்றம்.

இந்தியர்களுக்கு என்று இல்லை அனைத்து மக்களுக்குமே மனதுக்கு இருக்கும் ஒரு பெரிய குறை இருப்பதை பார்த்த பிறகு இல்லதவைகளை மனதில் கொண்டு ஏங்குவது. உதாரணமாக பணக்காரனை கேட்டால் ஏழை கவலையில்லாமல் தூங்குவதை காட்டி வருத்தம் கொள்வான். ஏழையை கேட்டால் எதை பற்றி நான் கவலைகொள்ள போகிறேன் எனக்கு என்ன வீடா வாசலா என்று சொல்வான்.

அது போல் தமிழர்கள் என்ன தான் நல்ல உணவு வீட்டில் கிடைத்தாலும் பீட்சா இல்லையே என்று கவலை கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள். ஆங்கிலப்பாடல்கள் மாதிரி வேண்டும் அதுவும் தமிழ் வார்த்தைகளை கொண்டு அதுவும் தனது கனவு நாயகன் நாயகி நடித்து கொடுக்கவேண்டும் என்று கனவு அவனுக்கு.

அந்த கட்டத்தில் ஆங்கிலபாடல் மாதிரி எல்லாம் இல்லை அதே பதிவு தரத்தில் அதே தாளங்களில், கிட்டத்தட்ட டப்பிங் படங்கள் கொடுப்பது போல், ஏற்கனவே எடுத்த படத்தில் தமிழில் மட்டுமே மாற்றி கொடுப்பது போல். மேற்கத்திய இசையில் தமிழ் பாடல்கள் வத்தது தான் அந்த மாற்றம். இந்த மாற்றம் இராசா வந்த புதிதில் நடந்தவைகளே.

ஜுனூன் தமிழ் என்ற ஒரு வழக்கு சென்னையில் பேசி நையாண்டி செய்வார்கள். எங்களுக்கு தமிழ் படங்களே போதும் என்று மார்தட்டிய தமிழர்கள் இன்று இந்தி தொடர்களை தமிழில் மாற்றி இரசிப்பது போல் அன்றைக்கு அந்த புதிய இசையை தமிழர்கள் கொண்டாடினார்கள்.

நண்பர் ஒருவர் ஒரு அமெரிக்கரிடம் இப்படி கேட்டார் இந்திய இசையை கேட்கிறீரா என்று. அவரும் சரி கேட்போம் என்றார் அந்த புதிய இசையை நண்பரும் பாடவிட்டு எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதற்கு அந்த அமெரிக்கர் சிரித்துக்கொண்டே கேட்டார் இதுவா இந்திய இசை என்று.......

அந்த பாடல் ஒரு கலப்பிசை தான், முழுவதும் மேற்கத்திய இசை இல்லை, இருந்தாலும் பாடலின் தாளம் அமைப்பு அது கேட்டவுடன் மேற்கத்திய பாடல் என்ற தோற்றதை கொடுத்தது. அந்த அளவிற்கு இருந்ததை தான் இல்லாததை கொண்டாடும் மனிதனின் தேவைக்கு தீனி போட்ட மாற்று இசையாக பரிணாமித்தது அந்த புதிய இசை.

இப்படி ஒரு ஒப்பீடு சொல்லலாம், வைரமுத்துவை ஜுனுன் தமிழில் ஒரு தமிழ் பாடலை எழுதவைத்து அந்த பாடலை இரசிக்க சொன்னால் எப்படி இருக்கும் அப்படி ஆகி இருக்கும் இராசாவும் பாடல்களை அந்த புதிய முறையில் கொடுத்து இருந்தால்.

இராசாவிடம் அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றம், இவர்கள் அதிகம் எதிர்பார்த்தது அடிகின்ற காற்றின் திசையில் பயணிக்காமல் தான் செல்லும் திசையிலே சென்ற இராசாவின் போக்கு இந்த இரசிகர்களை ஏமாற்றம் கொள்ள வைத்துள்ள எரிச்சலில் இப்படி எல்லாம் இராசாவை இகழ்ந்து அவர்களை சமாதானப்படுத்தி கொள்கிறார்கள்.

இந்த 2% மக்களை தவிர மற்ற அனைவரும் அதே எரிச்சலில் தான் இராசாவை இகழ்கிறார்கள். இவர்களின் இகழ்ச்சிக்கோ புகழ்சிக்கோ ஆளானவர் இல்லை இராசா. இசையை நேசிக்கும் அவரை நேசிக்கும் மனிதர்களையும் தரமாக விமர்சிக்கும் மனிதர்களையும் மட்டுமே அவர் கருத்தில்கொள்வார். ஆகவே இந்த மாதிரியான விமரனங்களை தூர தள்ளி  வைத்துவிட்டு நமது வேலையை பார்ப்போம்.

Friday, June 7, 2013

After Earth - திரைவிமர்சனம்

இந்த படத்தின் முன்னோட்டம் படம் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தூண்டியது. அப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்பில் சென்றபடம் என்றதாலோ என்னவோ கொஞ்ச நேரத்திலே அலுப்பு தட்ட துவங்கிவிட்டது.

படத்தின் கதையும் சரி திரைக்கதையும் எளிதில் ஊகிக்ககூடியவைகளாகவே அமைந்து இருப்பது கொடுமை. படத்தின் பிரமாண்டம் என்றால் அது இசை மட்டுமே. அந்த இசைமட்டு இல்லாமல் இருந்து இருந்தால் படம் Star Warsசை தொலைக்காட்சியில் பார்த்தது போலாகி இருக்கும்.

கதை எங்கோ ஒரு வேற்று கிரகனத்தில் இருக்கும் ஒரு மனித குடியிருப்பின் வீரனின் குடும்ப விவகாரங்களை சொல்லும் படம். புவியிலிருந்து அங்கு சென்றார்களா என்று தெளிவாக சொல்லப்படவில்லை, ஆனால் அந்த வேற்றுகிரக மிருகத்தால் தாக்கப்பட்ட தனது குடும்பத்தின் மிச்ச மீதியோடு வாழும் வீரன், அந்த மிருகங்களை வேட்டையாடும் நாயகனாக வலம் வருகிறான்.

அவனுடைய மகன் காளைபருவத்திற்கு தயாராக இருக்கும் தருவாயில் படையில் அவனை இந்த ஆண்டு சேர்த்துக்கொள்ள முடியாது என்று திருப்பி அனுப்பும் தருவாயில் அவனது அப்பா நெடுநாளைக்கு பிறகு வீடு வருகிறார்.

வந்தவரிடம் தனது ஏமாற்றத்தை பகிர்ந்துகொள்ளும் சிறுவனுக்கு ஆருதல் மட்டுமே சொல்லும் தந்தை மேலும் ஏமாற்றம் தர நொந்து போகிறான்.

ஆருதலுக்காக அவனை உடன் அழைத்து செல்லும் தந்தை ஒரு விண்வெளி புயலில் மட்டி அவர்களது விண்களம் புவியில் விழுந்து நொருங்குகிறது.

புவியில் மனிதனை தவிர மற்ற விலங்குகள் இருப்பதாக காட்டுவது வித்தியாசமாக இருக்கிறது. மனிதனை மட்டுமே அழிக்கும் அந்த கொடிய விலங்கு அதிகம் இருக்கும் புவி என்று சொல்லும் கதையில் கடைசிவரையில் ஒரே ஒரு விலங்கை மட்டும் காட்டுவது ஏமாற்றமாக இருக்கிறது. பயத்தை மட்டுமே அறிந்துகொள்ள கூடிய விலங்கு மற்ற மனிதற்களை மரத்தில் மாட்டி மிரட்ட நினைப்பதாக சொல்வது நம்பும் படியாக இல்லை.

மேலும் இரவில் கடுங்குளிர் என்று சொல்வதும் முரணாக வெப்பவெளி விலங்குகளும் பறவைகளையும் காட்டுவது, ஆங்காங்கே இருக்கும் இரவு வெம்மை பகுதிகள் என்று சொல்லிவிட்டு ஒரு பள்ளத்தாக்கு முழுவதும் காட்டெருதுகளை காட்டுவதும் இரசிக்கும் படி இல்லை.

இப்படி கதையிலும் திரைகதையிலும் நிறைய கண்டுபிடித்து சொல்லும் வகையில் இந்த படம் ஒரு ஏமாற்றம். அதுவும் மனோச்சு சியாமளான் படமா என்று கேட்கும் அளவிற்கு பெயரை கொடுத்துகொள்ளும் அளவிற்கு சென்று இருக்கிறது படம்.

அடுத்த படத்திலாவது தனது முதல் படம் போல் மீண்டும் ஒரு படத்துடன் மீண்டு வருகிறாரா என்று காத்து இருப்போம்.

Thursday, May 30, 2013

மூன்று பேர் மூன்று காதல் - விமர்சனம்

கடலும் கடல் சார்ந்த பகுதியின் படங்கள் தொடர்சியாக வருகிற காலம் போலும்.

கடல் படத்தில் காட்டாமல் போன உணர்சிகளை அருமையாக காட்டியுள்ளார் வசந்து, வாழ்த்துகள்.

தனது எல்லா படங்களிலும் ஒரு செய்தியை சொல்லி படம் கொடுப்பது வசந்தின் வழி அந்த வழியில் இந்த படத்திலும் ஒரு அருமையான செய்தியை சொல்லி சென்று இருக்கிறார்.

அந்த உப்பு காத்து கதை மனதில் ஒட்டும் அளவிற்கு மத்த இரண்டு கதைகளும் ஒட்டவில்லை, காரணம் விமல் கதையில் சொல்லும் சம்பவங்கள் முழுக்க சித்தரிப்பது போலே வருகிறது, அதுவும் பாலசந்தரின் 80களில் வந்த படங்களில் காட்டும் உத்திகளை கொண்டு அமைந்துள்ளது வெளிப்படையாகவே தெரிகின்றது.

மூன்றாவது கதை அப்படியே மில்லியன் டாலர் பேபியில் இருந்து எடுத்து ஆண்டு இருப்பது அப்படியே தெரிகின்றது. என்ன ஆங்கிலபடத்தில் அந்த பெண்ணிடம் கிளின்ட் காட்டும் குரு நண்பன் தந்தை என்ற கலவையை காதலனாக மாற்றி குழப்பியுள்ளார் வசந்து. ஆங்கில படத்தில் சாகும் தருவாயிலும் அந்த பெண் கிளின்டுடன் வாதாட தவிர்ப்பது கவிதை அந்த உணர்வுகள் இந்த தமிழ் படத்தில் காணாமல் போனது ஏமாற்றமே.

உப்பு காத்து கதையவே முழுமையாக எடுத்து இருந்தால் அது இன்னமும் ஒரு கடல் படம் போல் இருக்கும் என்று நினைத்து இருப்பார் போலும். குணா - மல்லிகா கதை அருமை அதுவும் சேரன் சுருக்கமாக வசனங்கள் பேசிச்செல்லும் இடங்கள் அருமை. சாந்தி வில்லியம்சை இவ்வளவு சாந்தமாக காட்டவும் முடியுமா என்ன, மன்னித்துக்கொள்ளுங்கள் எங்களுக்கு எல்லாம் இன்னமும் மெட்டி ஒலி மறக்கவில்லை. அதுவும் சேரனின் பிரியாவிடை நிகழ்ச்சியில் இரண்டு பேரையும் சேர்த்து பார்க்க எவ்வளவு நல்லா இருக்கு என்று சொல்லும் இடங்கள் மனதை வருடிச்செல்லும் காட்சிகள், இன்னமும் இது போல் பாத்திரங்கள் தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்..... அருமை.

மல்லிகா தாமிரபரணியின் நாயகியை நினைவில் கொண்டுவருவது தவிற்க முடியவில்லை, அதே முக அமைப்பு அதே வசன உச்சரிப்புகள் அதே கோணங்கள் என்ன பெண் தான் வேறு.

பாடலில் ஒரு பாடல் கேட்டவுடன் பிடிக்கின்றது மற்ற பாடல்களைவிட பின்னணி இசை நன்றாக வந்து இருக்கிறது.

எத்தனை தான் இல்லாமல் போனாலும் நல்லதை சொல்லும் படங்கள் என்ற தொகுப்பில் இது ஒரு நல்லபடம், வாழ்த்துகள் வசந்து.

Friday, May 24, 2013

பரதேசி - விமர்சனம்

விமர்சனம் பிடித்த பிடிக்காத செய்திகளை பகிர்ந்துக்கொள்ள மட்டுமே, மற்றபடி படைப்பாளியை இகழ்ந்து போசும் நோக்கோடு அல்ல. படைப்புகளை படைக்க திறமை அவசியம் அது அனைவருக்கும் கைவந்த கலையல்ல.

படம் துவங்கிய காட்சியில் இருந்து கடைசிவரை என்ன நடக்குமோ என்று தவிக்க வைப்பதில் பாலா என்றைக்குமே ஏமாற்றியவர் அல்ல என்று மீண்டும் நிறுபித்து இருக்கிறார்.

இனி தேனீர் அருந்தும் போது எல்லாம் அந்த காட்சிகள் மனதுக்குள் வந்து போவதை தவிர்கமுடியாமல் போகும்.

சூது வாது தெரியாதவர் பாதிக்கப்படும் போது தான் அந்த பாதிப்பின் வீரியம் நன்றாக விளங்குகிறது. அதுவும் வரியோரை ஏய்த்து பிழைப்பு நடத்தும் நம்மோரை திரையில் பார்க்கும் போது மிகவும் கேவலமாக தோன்றுகிறது.

அவன் இவன் படம் இப்படி வந்திருக்க வேண்டிய படம் சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும், மூலைக்கு மூலை அன்னிய மூதலீட்டில் தொழில்கள் வந்தாலும் எளியோரின் வாழ்க்கையில் மாற்றமே இல்லையே என்ற கருத்து நன்றாக விதைக்கப்பட்டிருக்கும் பரதேசி போல். ஏனோ தவற விட்டுவிட்டார் பாலா.

துவக்க காட்சியில் துவங்கி கடைசி காட்சி வரை அதர்வாவின் பங்களிப்பு அபாரம். முகத்தில் அப்படி ஒரு அப்பாவி தனம், அவர் அப்பாவை போல. முரளியின் போக்கிற்கு இவரையும் வைத்து சொல்லாத காதல் கதைகள் வராமல் இருந்தால் சரி தான்.

படத்தில் அதர்வா படும் வேதணைகளின் உக்கிரம் படம் பார்பவர்கள் நெஞ்சை பிசையாமல் இல்லை. குறிப்பாக சாப்பிட உட்கார்ந்தவனை விரட்டும் காட்சி கொடுமை.

படம் தேயிலை தோட்டத்தை தொடும் வரையில் அந்த வறுமையிலும் வசந்தம் வீசியதாக தோன்றவைகிறது.

சாப்பாட்டுகே இல்லை என்றாலும் நிம்மதியாக இருந்ததாய் காட்டும் கதையமைப்பு அருமை.

தேயிலை தோட்டத்தில் நிகழும் கொடுமைகள் தோட்டத்தில் இருந்து இன்றைய வேலை பார்க்கும் இடங்கள் வரை தொடர்வது கொடுமையே. குறிப்பாக வெளி நாடுகளில் வேலை பார்க்கும் நண்பர்களுக்கு தெரியும் என்ன சொல்ல வருகிறேன் என்று.

சார்லி சாப்ளினின் மார்டன் டைம்சு படத்தில் காட்டுவது போல் வெளியே ரொட்டிக்கே திண்டாட்டம் அதிலே கொடுக்கிற காசுக்கு எப்படி எப்படி எல்லாம் வேலை செய்ய சொல்கிறார்களோ அப்படி எல்லாம் வேலை செய்ய வேண்டும் என்ற கொடுமை. அதுவும் ஓய்வறையில் இரண்டு நிமிடம் நிற்கிறான் என்று பார்த்து விரட்டும் காட்சிகளை போல் மிகவும் எதார்த்தமான காட்சிகள் தேயிலை தோட்ட காட்சிகள்.

என்ன தேயிலை தோட்டத்தில் காட்டும் பெண்ணின் பாத்திரம் இன்னமும் மனதில் அழகாக பதியும் படி படைத்து இருக்கலாம். சீறும் பாம்பாக அவளை காட்டியதோடு நிப்பாடியது ஏமாற்றமாக அமைந்தது.

முதலாளிகளின் கொடுமை ஒரு புரம் என்றால் குட்டி முதலாளிகளின் கொடுமை அதைவிட கொடுமையாக இருக்கும் என்றதை அருமையாக காட்டியுள்ளார்.

காமம், கூலி கொள்ளை, இயந்தரம் போல் வேலை வாங்குதல், அடி பணியாதவர்களை முடமாக்கி அடுத்தவர்களுக்கு பாடம் புகட்டுதல் என்று ஏகப்பட்ட வன் கொடுமைகளை படத்தின் பின் பாதியில் அள்ளி கொட்டிவிடுகிறார் பாலா. முதல் பாதியில் பார்த்தவைகளை இவைகள் மறக்க அடித்துவிடும் நொடியில் படம் முடிகின்றது.

இதை விட சிறந்த முடிவு படத்திற்கு வேறு எதுவுமாக இருக்கமுடியாது. எதற்காக இவ்வளவு கொடுமைகளையும் அனுபவிக்கிறானோ அதுவே வீணாகி போனால் எப்படி இருக்கும் முடிவு என்ற வேதணையை அழகாக காட்சியாக்கி கொடுத்திருக்கிறார்.

கருத்தபையா பாடல் அருமையாக பொருந்துகிறது மற்றபடி இராசா இல்லையே என்று ஏங்க வைத்துவிட்டார் பாலா. குறிப்பாக சோகம் கொட்டும் இடங்களில் சத்தமே இல்லாமல் மழை பொழிவது போல் ஒரு உணர்வு வருகிறது. பல இடங்களில் பின்னணி இசை வெறும் சத்தமாக மட்டும் வந்து போகிறது. பிரகாசு பாட்டோடு முடிந்துவிடுவது இல்லை வேலை என்று என்றைக்கு தான் உணர்வாரோ........

வாழ்த்துகள் பாலா படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது.

Saturday, May 18, 2013

பாலாவுக்கு செயமோகன் மோல் உள்ள கோபம் - பரதேசியாக

பரதேசி படத்தை பார்க்கத்துவங்கியதுமே சம்பவங்கள் எல்லாம் எங்கேயோ பார்த்தவைகளாகவே இருக்கிறதே என்று தான் தோன்றியது.

அதுவும் குறிப்பாக தேயிலை தோட்டத்திற்கு ஆள் எடுக்கும் காட்சியில் இருந்து மக்கள் தேயிலை தோட்டத்தில் தங்க வைக்கும் இடத்தை பார்க்கும் காட்சிகளும் சரி, அதன் பிறகு வேலையில் நடத்தப்படும் கொடுமைகளும் சரி அப்படியே அங்காடி தெருவில் பார்த்தை போல் இருக்கிறது.

சொகுசானவர்களின் வசதியான வாழ்க்கை ஆடம்பர தேவைக்கு வசதியற்ற வரியவர்களின் வாழ்க்கை பலிகொடுக்கப்படுகின்றது என்ற கதை தான் இரண்டுமே.

அந்த சோகம் நிறைந்த கதையுனுள் ஒரு அழகான மற்றும் ஆழமான காதலை கலந்து கொடுக்கும் திரைகதையாக இரண்டும் அமைத்து இருக்கிறார்கள்.

அங்காடி தெருவில் நாயகியின் கால் போகும், பரதேசியிலோ நாயகனின் கால் நரம்புகள் வெட்டப்படும்.

அ தெ வில் தைரியம் நிறைந்த பெண்ணாக குடும்ப சுமையை சுமக்கும் பெண்ணாக அஞ்சலி தோன்றுவார், பரதேசியில் அவைகள் இரண்டையும் இரு பெண்களாக பாலா அமைத்துள்ளார்.

இரண்டு படத்திலும் காதலில் சிக்கி படாத பாடு படுவார்கள் இப்படி காட்சிக்கு காட்சி, பாத்திரத்திற்கு பாத்திரம் விவாதித்துக்கொண்டே போகலாம்.

அங்காடி தெருவை பார்த்தபோது பாலாவிற்கு தோன்றி இருக்கும் அடடா இந்த கதையை விட்டுவிட்டோமே என்று. செயமோகன் இப்படி ஒரு நல்ல கதையை இசுபானிசு(Spanish) மொழியில் The Perfect Crime படத்தில் இருந்து எடுத்து அழகாக தமிழக கதையாக கொடுத்ததும், அதை வசந்த பாலன் அருமையாக இயக்கியதும் பார்த்து நீண்ட நாட்களுக்கு பிறகு அதே கதையையும் கருத்தையும் பரதேசியாக கொடுத்து இருக்கிறார் போலும்.

http://www.imdb.com/title/tt0395125/



Thursday, May 16, 2013

இளையராசாவும் - விசுவநாதனும் - செழியன் கொளுத்தி போட்ட திரி வெடிக்க துவங்கியுள்ளது

ஒரு கலைஞனை பாராட்டும் போது மற்று ஒருவரை தாழ்த்தி தான் அடுத்தவரின் உயர்வை சொல்ல வேண்டும் என்ற தேவை எங்கு துவங்கியது என்று தெரியவில்லை.

விசுவநாதனின் சாதனைகளையும் அவரது பாடல்களையும் ஆராய வேண்டும் என்றால் நமக்கும் நாட்கள் பத்துமா. எத்தனை பாடல்கள் எத்தனை வித்தியாசங்கள். வள்ளல் போல் அவர் கொட்டிக்கொடுத்தவைகளுக்கு என்னத்தை நாம் பதிலாக அவருக்கு கொடுக்க முடியும் இல்லை என்ன மரியாதை செய்த்து அவைகளை ஈடுகட்ட முடியும்.

அவருக்கு திரையுலகம் கொடுத்துள்ள மரியாதை மெல்லிசை மன்னர், இன்னமும் எத்தனை காலம் சென்றாலும் அவரது இடத்தை அவர் மட்டுமே நிரப்ப முடியும் வேறு ஒருவரும் அவரது இடத்தை பிடிக்கவே முடியாது.

அனேகமாக பழையபாடல்கள் என்றால் அதில் அதிகம் வானொலியில் இடம் பிடிப்பது இவரது பாடல்களே. இப்போது கிடைக்கும் தொழில் நுட்பங்களின் உதவி இல்லாமலே அந்த அளவிற்கு இசைத்தவர் அவர்.

காலத்தின் ஓட்டத்தில் திரையிசையில் வந்த மாறுதலுக்கு தன்னை ஆட்படுத்திக்கொள்ளாமல் தனது பாணியில் இருந்து சற்றும் விலகாது நின்றவர் அவர். அடுத்து வந்த இசை வடிவங்களை கேலி பேசாமல் வரவேற்ற அவரது மனது அவருக்கு மட்டுமே வரும்.

வெறும் குரலும் வார்த்தைகளும் மட்டுமே போட்டி போட்டு வந்த பாடல்கள் அவைகள். அவரது காலத்தில் கண்ணதாசனின் பங்களிப்பு போல் ஒரு அமைப்பு வராதா என்று மனம் ஏக்கம் கொள்ளாத நாட்கள் இல்லை.

இப்படி இருந்த காலகட்டத்தில் இவரை போல இளையராசாவும் தனது பங்கிற்கு வள்ளல் போல் வாரிவழங்கி அவரது இளவலாக நின்றார் என்றால் அது மிகையாகாது என்று தான் தோன்றுகிறது.

இராசா இராசா தான் என்று எத்தனை முறை நிறுபித்து இருக்கிறார், அவரும் அவர் பங்கிற்கு எத்தனை ஆயிரம் பாடல்களை வழங்கியுள்ளார்.

இப்படி எல்லாம் வழங்கியதால் இராசா விசுவநாதனைவிட மிக பெரியவர் என்று நாம் சொல்லாமா என்றால் அது அபத்தம் என்று இராசாவே சொல்வார். சங்கதி அப்படி இருக்க நமக்கு ஏன் இந்த வேண்டாத வேலைகள்.

இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு பார்ப்பதே தவறு, இருவரும் அவர் அவர் காலங்களில் கோலோச்சியவர்கள். அவர்களது சாதனைகளை அவர்களாக மட்டுமே பார்க்கவும் பழகுவோம்.

இவர்களின் சாதனைகளை இவர்களின் சாதனைகளாகவே சொல்வது தான் அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை. அதைவிடுத்து இகழ்ந்தால் அது நம்முடைய குறுகிய மனட்பாண்மையை தான் காட்டுமே அன்றி அவர்களை இழித்து பேசியதாக அமையாது. இந்த எல்லையில் நிறுத்திக்கொள்வோம் விவாதங்களை.

இந்த கருத்துக்களை இராசாவும், விசுவநாதனும் பலமுறை மேடையில் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்கள்.

Sunday, April 21, 2013

பாக்கியராச்சு படம் டார்லிங்கு டார்லிங்கு டார்லிங்கு மளையாளத்தில் -- உத்திரசுயம்வரம்



இது பாக்கியராச்சுகே தெரிந்து இருக்குமோ என்னவோ தெரியவில்லை, கண்ணா லட்டு திங்க ஆசையா போல இந்த படத்தையும் சுட்டுவிட்டார்களோ தெரியவில்லை.

மளையாளத்தில் ஆரம்ப காட்சியில் அந்த பெண்ணை கூ
ப்பிட்டுக்கொண்டு போகவரும் காட்சி, வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் நாயகியின் கவனிலேயே மிதப்பது, வெளியில் செல்லும் போது மழையில் வண்டி வேலை செய்யாமல் ஆனதினால் பெண்ணின் திருமணத்தில் மாற்றம் வருவது தவிர மற்ற செய்திகள் எல்லாமே புதிதாக காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றி எழுதப்பட்டவைகள்.

இருந்தாலும் பாக்கியராச்சின் டார்லிங்கு டார்லிங்கு டார்லிங்கு படத்தில் இருக்கும் சுவாரசியம் இந்த படத்தில் இல்லை என்றாலும், அவரை போலவே திரைக்கதையில் அசத்தி இருக்கிறார்கள் மளையாளத்தில்.

இன்னமும் தைரியமாக இது தான் முடிவு என்று ஆரம்ப கட்டத்திலேயே சொல்லிவிட்டு எப்படி அந்த முடிவை நோக்கி நகர்கிறது என்று பொருமையாக கவனியுங்கள் என்று சொல்வது பாக்கியராச்சின் பாணி. அவர் அதை படத்தின் இடைவேளையில் இருந்து துவங்குவார், இந்த படத்திலோ படம் துவங்கியதில் இருந்தே ஆரம்பித்து விட்டார்கள்.

டா டா டாவில் பாக்கியராச்சின் மேல் வரும் பரிதாபம் மளையாளத்தில் நமக்கு வருவது இல்லை. ஒரு வேளை கலாச்சார மாற்றம் காரணமாக இருக்கலாம். எல்லா அன்னையும் பொழியும் அன்பை போல் நாயகனின் அன்னை அன்பை பொழிவது மட்டும் மனதில் பெரிதாக ஒட்டுகிறது. மற்றபடி டா டா டா தான் பாத்திரங்களோடு மனதில் ஒட்டகூடிய படம். ஒரு வேளை டா டா டாஆ பார்க்காமல் இருந்தால் இந்த படம் பிடித்து இருக்கலாம். இன்னமும் எத்தனை பாக்கியராச்சின் படங்கள் இப்படி எந்தனை மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு வந்து இருக்கின்றனவோ...........

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.......

Saturday, February 2, 2013

பேசாத வார்த்தைகளின் மதிப்பு -- இளையராசா

பொதுவாக சொல்லிவிடும் சொல்லுக்கும் தெரிவித்துவிடும் முடிவிற்கும் இருக்கின்ற கனத்தை விட சொல்லாத வார்த்தைகளுக்கும் அறியப்படாத முடிவுகளுக்கும் ஆகும்.

காதலில் துவங்கி வெறுப்பு வரை அனைத்து உணர்ச்சிகளுக்கும் இப்படியாகத்தான் இருக்க முடியும்.

என்னன்னு சொல்லி தொலைங்களேன் என்று அனேகரின் அன்றாட உரையாடலில் ஒரு முறையாவது ஒலிப்பது உண்டு. இல்லை என்று மறுக்க முடியாது.

குழந்தையின் முகத்தை போல அந்த வார்த்தைகள் கேட்பவர்களின் எண்ணத்தை பிரதிபலிப்பது தான் அதற்கு காரணம்.

சோகமாக நாம் குழந்தையை பார்த்தால் அது அழுதேவிடும், அதுவே சிரித்தால் நமது மகிழ்ச்சியை 100 மடங்கு அதிகமாகி கொடுக்கும் குழந்தையின் பதில் சிரிப்பு.

அதை போல சொல்லாத சொல் கேட்பவரின் எண்ணத்தை பிரதிபலிக்கும். கிட்டத்தட்ட இந்தியர்களை என்ன வேணுமா வேண்டாமா என்று கேட்டால் உண்டு இல்லை என்று இல்லாமல் எல்லா பக்கமும் தலையசைப்பதை பார்த்து இருப்போம். அது உனக்கு ஆமாம் தான் பதிலாக வேண்டும் என்றால் ஆமாம்மாக இருக்கட்டும். இல்லை என்று வேண்டும் என்று நினைத்தால் இல்லை என்று எடுத்துக்கொள் என்று சொல்லாமல் சொல்லும் அந்த உடல் மொழியை போல.

கோபம் வந்தால் வார்த்தைகளை கொட்டாமல் இருக்க எத்தனை பேருக்கு தெரிகிறது. அள்ளி கொட்டிவிடுகிறார்கள். பிறகு கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாமல் திணருகிறார்கள்.

வலிக்கும் வார்த்தைகள் வலிக்கும் காயத்தைவிட மிகவும் கொடியது. வள்ளுவன் அனுபவித்து சொன்ன வார்த்தைகள் தீயினால் சுட்டப் புண் உள்ளாரும் ஆராதே நாவினால் சுட்ட வடு.

அடுத்தவரின் செய்கையின் மேல் நமக்கு இருக்கும் உரிமைகள் நம்மீது அடுத்தவர்கொள்ள எத்தனை மக்கள் சம்மதிக்கிறார்கள்.

நிதானம் இல்லா வார்த்தைகளும் செயல்களும் கொடுக்கும் பலன்கள் நிரந்தரமாக நாம் இழக்கும் நிம்மதிதான்.

செய்கையில் பெரியோர் வார்த்தைகளை கொட்டுவது இல்லை அவரை விட பெரியோர் அப்படி கொட்டப்படும் வார்த்தைகளுக்கு மதிப்புகொடுத்து பதிலுக்கு பதில் பேசாமல் இருப்பது.

இளையராச அந்த பெரியோருக்கு பெரியோர் இரகம் எவ்வளவு காயப்பட்டு இருந்தால் அந்த உள்ளம் இவ்வளவு அமைதிக்காக்கும். அவரின் வருத்தம் அவர் மட்டுமே அறிந்த இரகசியம்.

எல்லாம் முடிந்த பிறகு வைரமுத்து பேசும் இவ்வளவு வார்த்தைகளுக்கும் இராசாவால் என்ன சொல்லிவிட முடியும். என்ன மிகுந்து போனால் வைரமுத்துவின் வார்த்தைகளை விட வலிமையான வார்த்தைகளை தேடிப்பிடித்து பேசலாம். அப்படி பேசிவிட்டால் மட்டும் காயப்பட்ட மனது ஆரிவிடுமா இல்லை மாற்றாக இப்படி பேசுகிறோமே என்று மீண்டும் வருந்தாதா...

இப்படி பல பரிமாணங்களில் அந்த பேசாத வார்த்தைகள் பயணிப்பதை நம்மால் சாதாரணமாக காணமுடியும்.

அந்த பேசாத வார்த்தைகள், பேசாத வார்த்தைகளாகவே இருந்துவிட்டு போகட்டும். தப்பியும் பேசிவிடாதீர்கள் இளையராசா.......