Saturday, April 28, 2018

2000 ரூபாய் தாள் பதுக்கமுடியாதவை என்று சொன்னது எல்லாம் பொய்

பழைய இந்திய 1000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் சொல்லாதவைகள் என்றும், புதிதாக வரும் 2000 மற்றும் 500 ரூபாய் தாள்களை பதுக்கவோ ஒளித்து வைக்கவோ முடியாதவை என்றும். அப்படி பதுக்கி இருக்கும் இடத்தை செயற்கைகோள் கொண்டு அறிந்துவிடமுடியும் என்று சிரிப்பு நடிகர் சேகர் இரண்டு 1000 தாளில் வருகடலையை கொரித்துக்கொண்டு கொக்கரித்தார்.

இன்றைய செய்திகளில் வங்கியில் கொடுக்கப்படும் 2000 தாள்கள் திரும்பி வருவதில்லை என்றும், எங்கே தான் அவைகள் செல்கின்றது என்றும் தெரியவில்லை என்றும் இந்திய ரிசர்வு வங்கி கவலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

புராணங்களையே எல்லவற்றிற்கும் உதாரணம் உபயும் பாசக புதிய 2000 மற்றும் 500 தாளிற்கும் அந்த புராணகதைகளையே துணையாக கொண்டு புளுகியுள்ளது தெரிகின்றது. போதிய சோதனைகளை கடந்து தான் மக்கள் பதுக்க துவங்கி இருக்க வேண்டும்.

இன்னும் கொஞ்ச காலத்தில் அதே சிரிப்பு நடிகர் சேகர், அந்த 2000 மற்றும் 500 தாள்கள் எல்லாம் இந்திய செயற்கைகோள் உணர் எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டதால் தான் கண்டுபிடிக்க முடியவில்லை. இல்லை என்றால் கண்டுபிடித்து இருக்கும் என்றும் கூட சொல்வார்.

பாசக ஆட்சிக்கு வந்ததும் நாடு கிடுகிடுவென வளர்ந்து வல்லரசாகி அனைவருக்கும் வேலை, இடம் குடி நீர் என்று மகிழ்ச்சியாக இருப்போம் என்று சொன்ன பரப்புரையில் ஒரு அங்கமாக 15 இலட்சம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் என்று சொன்ன பொய்யை நம்பிய மக்கள் அல்லவா அந்த 31%விகித இந்தியர்கள். காத்து இருங்கள், இந்த தேர்தலில் அந்த 15 + இன்னும் இப்போது பதுக்கப்பட்டு இருக்கும் பணத்தையும் கண்டுபிடித்து 30 இலட்சமாக கொடுப்போம் என்று வாக்கு கேட்பார்கள்....பார்த்துக்கொண்டே இருங்கள் இந்தியர்களே.......

0 comments: