Friday, December 25, 2015

பாசகவின் கள்ள ஆட்டம் பற்றி வானதி சீனிவாசன் கொடுத்து இருக்கும் வாக்குமூலம்


மேலே உள்ள விவாதத்தில் கடைசியில் வரும் 59:20 மணி துளிகளில் இருந்து கவனியுங்கள் வானதி பாசக எப்படி கள்ள ஆட்டம் ஆடுகிறது என்று விளக்குவார்.

உங்களுக்கு இது அவசியமா அப்படி என்றால் நாங்கள் அதை கொடுத்தால் பதிலுக்கு நீங்கள் இதை கொடுத்தால் செய்வோம் என்று ஒப்புக்கொள்கிறார்.

இப்போ உங்களுக்கு புரியுதா ஏன் வெள்ள நிவாரணம் கொடுக்க இந்த ஆத்து ஆதுறாங்கன்னு.  

மத்திய குழு வந்து எவ்வளவு அழிவு என்று கணக்கிட்டு சொன்னதுக்கு பிறகு தருவார்களாமா, நாமும் தெரியாமல் தான் கேட்போம் இலங்கை, நேப்பால் போன்ற நாடுகளில் நடந்த இயற்கை பேரழிகளை எந்த மத்திய அரசு குழு சென்று மதிப்பிட்டு கொடுத்தீர்கள்.

அதாணிக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டால் அடுத்த நாட்டு நிவாரணம் என்ற பெயரில் கணக்கே இல்லாமல் கொடுப்பார்கள்.

ஆனால் தமிழகத்தில் நிவாரணம் கேட்டால் மத்திய குழு மாநிலகுழு, கட்சி குழு என்று வெளியில் குழப்பிவிட்டு திரைமறைவில் நீ அதை செய் பணம் கொடுக்கிறேன் என்று வியாபாரம் பேசுவார்கள். 

பாராளுமன்ற தேர்தல் வரும் போதே இந்த குள்ள நரி கட்சியின் ஓநாய் வேலைகள் எப்படி இருக்கும் என்று தெரிவித்தோம். ஆனால் நாட்டின் வளர்சி என்று உங்களை எல்லாம் பேசி ஏமாற்றினார்கள். 

இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள், இல்லை என்றால் நடுதெருவிற்கு கொண்டு வந்துவிடுவார்கள்.

சர்க்கரை தடவிய நஞ்சை என்ன அழகாக ஊட்டுகிறார் வானதி................தொண்டரே இப்படினா தலைமை எப்படி இருக்கும் சிந்தியுங்கள்.  

மோடி தமிழகத்திற்கு நிவாரணம் தர தாமதப்படுத்துவது ஏன் 

Tuesday, December 22, 2015

இவன் எல்லாம் ஒரு மனிதனா இல்லை சுயநல மிருகமா - பாகம் 3

திருமணம் என்றால் வெறும் ஆணும் பெண்ணும் சேர்ந்து குடும்பம் நடத்தும் நிகழ்வு மட்டும் இல்லை. அவனோடு சேர்த்து அவனது கடந்தகால வாழ்க்கையில் இருந்து அவனுடைய நிகழ்காலத்தில் இருந்து வெற்றிகரமான ஒரு எதிர்காலத்திற்கு நகர்த்திக்கொண்டு செல்வதும் தான் வாழ்க்கை என்று அப்பா அடிக்கடி சொல்வார். அப்படி செல்லும் வாழ்க்கையில் அவனது சொந்தம் பந்தம் முதல் நண்பர்கள் வரை காயமும் சாயமும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதில் தான் வாழ்க்கையில் வெற்றி இருக்கிறது என்றும் சொல்வார்.

அப்படி எழுந்த பேச்சுகளில் இருந்த ஆமோதிப்பை இவனை திருமணம் பேசும் சமயத்தில் இருந்து சாமாதானமும் சமரசமும் செய்துக்கொண்டது ஏன் என்று ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

இவர்களுக்கு ஏமாற்ற வேண்டும் என்று இருந்தால் இவனை போல இருக்கும் ஒரு பெண்ணை அல்லவா ஏமாற்றி இருக்க வேண்டும், என்னை எதற்கு இப்படி ஏமாற்றவேண்டும். அதற்கு விதியும் ஆண்டவனும் எப்படி வழி செய்யலாம்.

கதைகளிலும் கட்டுரைகளிலும் சொல்வது போல் எவன் எடுத்தற்கு எல்லாம் ஆமாம் சாமி என்று சொல்கிறார்களோ அவர்கள் சமயம் பார்த்து காலைவாரி விடுவார்கள் என்று பொதுவாக சொல்வது எவ்வளவு பெரிய உண்மையாகிவிட்டது பாருங்கள்.

திருமணத்திற்கு பிறகு வேலை போவேன், நீ கட்டாயம் வேலைக்கு போகனும் அது தான் எனது எதிர்பார்ப்பும் கூட.

என்னை விட குறைந்த சம்பளம் வாங்கும் நீங்கள் நாளை இது பற்றி பேச்சு எழுந்தால், அப்படி நான் என்றைகு கேட்கிறோனோ அன்றைகே நீ என்ன முடிவிற்கு வருகிறாயோ அது எதுவாக இருந்தாலும் எனக்கு சம்மதம் அதற்காக ஏதாவது தேதியிடா வெற்று பத்திரத்தில் கையெழுத்து வேண்டும் என்றாலும் இப்போதே போட்டு கொடுக்கிறேன்.

எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு அதில் ஆண்களும் உண்டு, திருமணத்திற்கு பிறகு அந்த நட்பு தொடரவேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன். எனக்கு எப்படி என்னுடைய நண்பர்களோ அதே போல் உனக்கு உன்னுடைய நண்பர்கள். என்னுடைய நட்பையும் அதே போல் நீ எடுத்துகொள்ள வேண்டும்.

வேலையில் மேலும் மேல போகனும், எவ்வளவு சீக்கிரம் அந்த இலக்கை அடையமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடையனும். அதுக்கு நிறைய படிக்கனும், பல workshop, Training எல்லம் இருக்குமே. என்னால எந்த முட்டுக்கட்டையும் இருக்காது பதிலா என்னால என்ன செய்ய முடியுமோ அவைகளை கட்டாயம் செய்வேன். எனக்கு அந்த மாதிரியான ஆசையெல்லாம் ஒன்றும் இல்லாததால் வீட்டுக்குள் போட்டியை நீ உணர வாய்பே இருக்காது.

குழந்தை குட்டி என்று ஆகிவிட்டால் பின்னாளில் இவைகளை எல்லாம் என்னால் சாதிக்கமுடியாது. உன்னுடைய சம்மதம் இல்லாமல் எதுவும் நடக்காது என்னை நம்பு.

திருமணத்திற்கு பின் என்னுடைய சம்பள பணம் எனது வீட்டிற்கு தேவைபடின் அனுப்புவேன், அது உன்னுடைய பணம் அதை எப்படி வேண்டும் என்றாலும் செலவு செய்ய உனக்கு உரிமை உண்டு. அது மட்டும் இல்லை, நமது குடும்ப செலவு முழுதும் என்னுடையதாக இருக்கும். உன்னுடைய பணத்தை உனது எதிர்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றதே எனது விருப்பம்.

திருமணத்திற்கு பிறகு கூட்டு குடும்பம் எல்லாம் சரியாக வராது, நீயும் வேலை பார்க்கிற நானும் வேலை பார்க்கிறேன் எப்படியும் எனது ஊரில் நானோ நீயோ வாங்கும் சம்பளத்திற்கு அந்த ஊரில் வேலை இல்லை. ஆகவே கூட்டு குடும்பம் என்ற சந்தர்பமே இருக்க போவது இல்லை. அப்படி ஒரு சந்தர்பம் வரும்பட்சத்தில் எனது வீடு உனது வீட்டில் உள்ள அத்தனை சுதந்திரமும் உள்ளதாக இருக்கும். அப்படி இல்லை என்று நீ நினைத்தால் முன்னமே சொன்னது போல் நீ எடுக்கும் முடிவுக்கு நான் முழுமையாக கட்டுப்படுவேன்.

எனக்கு அவ்வளவாக சமைக்க தெரியாது கற்றுக்கொள்ளலாம் என்றால் அம்மா போடி போய் வேலைய பாரு என்று அனுப்பிவிட்டார்கள். ஆனால் நன்றாக சமைக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு. சரியாகவர கொஞ்ச நாள் ஆகலாம்...... அதை எல்லாம் பற்றி கவலைபடாதே. இருக்கவே இருக்கு அமெரிக்க காலை சிற்றுண்டி, மதியம் மற்றும் இரவு உணவு மட்டும் தான்.

மதியம் எப்படியும் வேலை பார்க்கும் இடத்தில் கிடைக்கும் சூடான உணவை இப்போதைக்கு சாப்பிடுவோம். மாலையில் நேரம் ஆகும் நாட்களில் வெளியில் சாப்பிடுவோம், வேண்டும் என்றால் வாரக்கடைசியில் ஏதாவது சமைத்துக்கொள்வோம்.

பணம் நிறைய செலவாகுமே, வீட்டில் சமைக்கவும் நேரம் ஆகுமே, நீ மட்டும் காலையில் எழுந்து சமைத்துவிட்டு வேலைக்கு போகனுமா, என்னால அவ்வளவு சீக்கிரம் எழுந்து சமைக்கமுடியாது ஆகவே நீ சமைக்கனும்னு நான் எதிர்பார்க்க மாட்டேன்....

இப்படி எல்லாத்தையுமே விட்டுக்கொடுத்தா பிறகு உங்களுக்குன்னு என்ன தான் கேட்பீங்க உங்க பேச்சு கொஞ்சம் பயத்தை கொடுக்குது. இது எல்லாத்தையும் விட்டுக்கொடுத்தா நீ கிடைப்பாய் என்றால் உனக்காக கட்டாயம் விட்டுக்கொடுப்பதில் எனக்கு சந்தோசமே.....

அப்படி என்ன என்னை உங்களுக்கு பிடிச்சு இருக்கு, சொல்ல தெரியல ஆனா உன்னை விட்டா இவ்வளவு அமைப்பா ஒரு பெண் கிடைபாளா என்று தெரியவில்லை.

அப்போ நான் கிடைகிலனா என்ன செய்வீங் செத்துடுவீங்களா, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. என்ன இது வரைக்கும் திருமணம் குடும்பம் என்று சிந்தித்தது இல்லை. முதல் முதலா உன்னோட படத்தை காட்டி வீட்டில் பேசினார்கள், அது வரை பிடிப்பே இல்லாமல் இருந்த எனக்கு உன் படத்தை பார்த்ததும் மனதில் ஒரு பளீச்சு, பிறகு நேரில் பார்த்ததும் அது பளீச் தீர்மானமா மனதில் தோன்றியது. அதனால தான் இவ்வளவும் பேசுறேன். என்ன நீ கிடைகலனா நான் கொடுத்து வச்சது அவ்வளவு தான் இப்படியே இருந்திருவேன்.

ஏன் என்னை விட்டா வேறு யாரும் பெண்ணே இல்லையா உலகில், எல்லோரும் நீயும் ஒன்னா. நான் விரும்புவது உன்னை தான், பெண்ணை இல்லை எல்லாவும் பொருந்திய குறையும் நிறையும் நிறைந்த உன்னை தானே தவிர பெண்மைக்கும் அழக்குக்கும்  மட்டும் இல்லை. அது மட்டும் இல்லை உன்னுடைய அழகு வெறும் புரத்தோற்றமாக நான் பார்க்கவில்லை. அது உனது அக அழகின் முழுமையாக தான் எனக்கு தெரிகிறது.

இப்படி வார்த்தைக்கு வார்த்தை வாயை அடைத்து சம்மதிக்க வைத்துவிட்டு இன்றைகு இப்படி பேச இவனுக்கு என்ன தைரியம் இருக்கனும். அதுவும் என்னால எதுவும் செய்யமுடியாதுன்னு நினைப்பா இல்லை செய்ய மாட்டேன்னு தைரியமா......

தொடரும்......


இவன் எல்லாம் ஒரு மனிதனா இல்லை சுயநல மிருகமா - பாகம் 2

இவன் எல்லாம் ஒரு மனிதனா இல்லை சுயநல மிருகமா

என்னை ஏன் அவனுக்கு பிடிக்கவில்லை.......

Friday, December 18, 2015

இவன் எல்லாம் ஒரு மனிதனா இல்லை சுயநல மிருகமா - பாகம் 2

திருமணம் பேசிய நாட்களில் இருந்து இந்த நிகழ்வு வரை நான் செய்யும் எல்லா செய்கைகளையும் ஊக்குவிக்கும் இவன் இது வரை எந்த ஒரு விமர்சனமும் வைக்காமல் இருப்பதை நண்பர்களிடம் பகிர்ந்த போது ஒட்டு மொத்த குரலில் அவர்கள் சொன்னது, அனாவசியாமக சந்தேகப்பட்டு அவனை இழந்துவிடாதே என்று.

மனது அப்பவே சொன்னது ஏதோ சரி இல்லை என்று, என்னவாக இருக்கும் என்று யோசிக்க நினைத்து ஆழ்ந்த சிந்தையில் இருக்கும் போது என்ன யோசனை என்று கேட்பதும். உடம்பு சரி இல்லையா என்று கேட்டுவிட்டதோடு இல்லாமல் கையில் காப்பியுடன் வரும் அந்த பொழுதுகளில் அந்த சிந்தைகள் மீண்டும் மூட்டை கட்டப்பட்டு பரணில் ஏற்றி வைத்துவிட்டு நிம்மதியாக தூங்க சென்றது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

என்னைவிட மிகவும் சுமாராக படித்தவனாக இருந்தாலும் பரவாயில்லை, என்னை விட குறைவான சம்பளம். குடும்ப சொத்து எல்லாம் இவன் வந்து சம்பாத்திதது மட்டும் தான். விரல் விட்டு எண்ணிவிட கூடிய அளவிதான் மிக குறைந்த சொந்தங்கள் இப்படி ஒன்றொன்றாக அம்மாவும் அப்பாவும் அடுக்கும் போது, நான் வாழப்போது அவனோடும் மட்டும் தான அப்பா, மற்றவைகளை பற்றி எனக்கு என்ன என்று அல்லவா கேட்டேன்.........

ஒவ்வொரு முதல் தேதியிலும் எவ்வளவு ஆசையாக சம்பள கணக்கை காட்ட முற்படும் போதும் இது உன்னுடைய உழைப்பு அது இவ்வளவு அவ்வளவு என்று கணக்கு பார்க்க எனக்கு பிடிக்கவில்லை என்று முதல் நாள் முதல் இன்றைக்கு வரை என்ன சம்பாதிக்கின்றேன் என்ன சேர்த்து வைத்து இருக்கிறேன் என்று கூட கேட்க்காமல் விட்டு வைத்ததின் பின் புலம் இப்படி ஒரு இருட்டு பக்கமாக இருக்கும் என்று யாருக்கேனும் கற்பனையாவது தோன்றுமா என்ன....

ஒவ்வொரு முறை அலுவலகத்தில் எனக்கு பதவி உயர்வு வந்த போது எல்லாம், என்னை விட மிகவும் மகிழ்ச்சி அடைந்தவன் அவன் தான். அதை பார்த்து அவன் அடந்த சந்தோசத்தை பார்த்து வியந்து மகிழ்ந்தது எல்லாம் இந்த துயர முடிவை நோக்கி என்னை நகர்த்த  போட்ட திட்டத்தின் பகுதி என்று இன்றைக்கு விளங்கும் போது எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்தேனே என்று மிகவும் வெட்கமாக இருக்கிறது.

தனிமையில் மணிகணக்கில் இணையத்தில் மூழ்கி கிடப்பதும், நேரம் காலம் பார்க்காமல் வரும் அழைப்புகளை ஏற்றுக்கொண்டு ஊர் ஊராக பயணிக்கும் போது எல்லாம் ஒரு வேளை இதுக்காகத்தான் என்று சிறிதும் தோன்றவில்லையே, ஏன் இப்படி ஒரு ஏமாளியாக ஆனேன். இந்த சாதாரண அறிவுக்கூட எனக்கு இல்லாமல் போனது எனது தகுதியா இல்லை அறிவின்மையா.......

எனது அலுவலாக எங்கெங்கெல்லாம் சென்று வந்தேன், எத்தனை நாட்கள் வேலையே கதி என்று இருந்துவிட்டு வந்து இருக்கிறேன். ஒரு நாளேனும் கூப்பிட்டு என்ன கூப்பிடவே இல்லையே, இப்போ எங்கே இருக்கிற, எங்கே போகிற மாலையில் எங்கே எப்போ அறைக்கு வந்த என்று எல்லாம் கேட்காமல் இருக்கும் செய்கைகளை நினைத்து நினைத்து இவனை எப்படி மனதுக்குள் புகழ்ந்தும் எனக்கு போல் யாருக்கு கிடைக்கும் என்று இருந்த இறுமாப்புக்கு சரியான பாடத்தை விதி சொல்லிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

தொடரும்.....

இவன் எல்லாம் ஒரு மனிதனா இல்லை சுயநல மிருகமா

என்னை ஏன் அவனுக்கு பிடிக்கவில்லை.......

இவன் எல்லாம் ஒரு மனிதனா இல்லை சுயநல மிருகமா

எல்லோரையும் போல் தான் எனக்கும் தான் திருமணம் ஆனது. படிப்பு முடிந்த கையுடன் வேலை கை நிறைய சம்பளம், புதிய வாழ்க்கை, புதிய நண்பர்கள் என்று விரிந்த வாழ்க்கை கடைசியில் இப்படியா வந்து முடியனும்.......

எப்படி இருந்த இவன் இப்படி மாறிப்போனான், அவனா இப்படி என்றால் எனது சொந்தங்களும் சரி அல்லது நண்பர்களும் சரி, இல்லை அவனது சொந்தமும் நண்பர்களும் அப்படி தான் அதிசயப்பட்டு போவார்கள்.

ஆணழகன் என்று இல்லாவிட்டாலும் வசிகரிக்கும் முகமும் அதில் மின்னி மறையும் அந்த புன்னகையும் கொண்டு தான் இத்தனை கொடூரங்களையும் மறைத்து வைத்து இருந்தானோ...

நிச்சயிக்கப்பட்ட பின்னும் திருமணத்திற்கு பின்னும் என்ன என்ன ஆசை வார்த்தைகளை பேசியவனா இவன்?..... இன்றைக்கு இப்படி இந்த கொடூரத்தை நிகழ்த்தி இருக்கிறான்.

எனக்கு தைரியமும், சுய சிந்தனையையும், சுய மரியாதையும் கொண்ட பெண்களை தான் பிடிக்கும் என்று அவன் சொல்லும் போதே வேறு கோணத்தில் சிந்தித்து இருந்தால் விளையு இதுவாகத்தான் இருக்கும் என்று கணித்து முன்பே ஏதாவது செய்து வாழ்க்கையை காப்பாற்றிக்கொண்டு இருக்கலாம். இப்படி கடைசியில் கழுத்து அறுத்துவிட்டானே படுபாவி....

இவனுடைய அம்மா அப்பா எல்லா என்ன என்ன எல்லாம் ஆசையாய் பேசினார்கள், அவனுக்கு என்ன விட அவன் அம்மாவை தான் அதிகம் பிடிக்கும், சரியான அம்மா புள்ளம்மா அவன் என்று மாமா சொன்ன போது இருந்த நிம்மதியும் சந்தோசமும் சுத்த ஏமாற்று வேலையா...... இல்ல அவர்களுக்கு இவனை பற்றி எதுவுமே தெரியாம மறைச்சு தான் வச்சு இருந்தான ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

இது எல்லாம் தெரிஞ்ச அம்மா அப்பா முகத்தில் எப்படி நான் முழிப்பேன். கொஞ்சம் பொருமையா இருன்னு அப்பா அப்பவே சொன்னாங்க, இவன் பெண்பார்த்துவிட்டு போன நாளில் இருந்து அனுப்பிய குறுஞ்செய்திகளும் மின்னஞ்சல்களும் அவனது அந்த வசீகர புன்னகையை மனதுக்குள் நொடிக்கு ஆயிரம் முறை மின்ன வைத்த மாயம் என்னவோ, அவைகளை எல்லாம் உண்மை என்று நம்பிதானே அப்பாவையும் அம்மாவையும் சம்மதிக்க வைத்தேன்.

கடைசியில்ல என்னை முட்டாளாக்கிவிட்டு போய்விட்டானே......எப்படி முழிப்பேன் அப்பா அம்மா முகத்தில் எனது மனது சொல்கிறது என்று சொன்ன வார்த்தைகளை மறுமுறை எனக்கே சொல்லி காண்பித்தால் நான்டுக்கொண்டு சாகதான் வேண்டும்........

இவனுக்கு தான் இப்படி என்று முன்னமே தெரிந்து தான் வைத்து இருந்தான் என்று என்ன தைரியம் இருந்தால் சொல்வான் என் முன்னால் நின்று.

கேட்ட அதிர்ச்சியில் அவனை திட்டவோ கோபப்படவோ கூட மனம் எழாமல் மௌனமாகவே இருந்ததை அதே வசீகர புன்னகையோடு முடித்தானே என்ன செய்வது, இவன் எல்லாம் நன்றாக..... இருப்பானா......

தொடரும்......

Thursday, December 17, 2015

உச்ச நீதிமன்ற தீர்ப்பு - இனிமேல் பெண்களை சதியில் தள்ளி கொல்லலாம் - இந்தியா வல்லரசு ஆகிவிட்டது

அந்த கோவிலின் ஆகம விதிகளையும் நம்பிக்கையும் பின்பற்றி தான் காரியங்களை நடத்த வேண்டும் என்று தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள்.

 நாளைக்கு எங்கள் மறை கணவன் இறந்த பின் மனைவியை சதியில் தள்ளி கொல்ல சொல்கிறது எங்கள் இந்துமத மறை ஆனால் அதை கொலை என்கின்றார்கள் இவர்கள் என்று ஒரு வழக்கு தொடுப்பார்கள்.

அதற்கும் இதே போல் மத நம்பிக்கை சார்ந்த பிரச்சனை, ஆகையால் அன்றைக்கு ஆகம விதிகளை பின்பற்றியது போல் இப்போது இந்துமத மறை நூலில் சொன்னது போலவும் காலம் காலமாக உள்ள பழக்கதின் அடிப்படையிலும் அந்த பெண்களை சதியில் தள்ளி உயிருடன் துடிக்க துடிக்க எரித்து கொன்றது இந்து மத மறைகளின் படி கொலை இல்லை என்று தீர்ப்பு அளிப்பார்கள்.

என்ன அன்றைக்கு கொல்லப்பட போவது காலம் காலமாக இதை சொல்லியும் வலியுறுத்தி வரும் மக்களாக இருக்காது, மாறாக எதிர்க்க திராணியில்ல ஏழைகளாகவும் ஒதுக்கப்பட்டவர்களின் பெண்களை மதகாவலர்களாக சொல்லிக்கொள்பவர்கள் செய்யும் கொலையாக இருக்கும்.

அப்படி கொல்லப்பட்டவர்களாக மக்கள் இயக்கங்கள் நடத்தப்படும் வழக்கு மாவட்டம், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை வந்து போக அனேகமாக அதற்குள் பாதிக்கப்பட்ட மக்கள் மறைத்தே போவார்கள்.

60 வருட சுதந்திர இந்தியாவை அதுவும் குறிப்பாக தமிழகத்தை ஒரு 100 ஆண்டுகாலத்திற்கு பின் தள்ளிய தீர்ப்பு.

Stupid Star சிம்புவுக்கு எதிரான வழக்கில் என்ன நடக்கும்

மகளீர் அணியினர் சிம்புவிற்கு எதிராக தொடுத்து இருக்கும் வழக்கில் இது தான் நடக்கும்.

 நீதிமன்றம்: பாட்டை நீ எழுதினாயா

சிம்பு: ஆமாம் நான் எழுதினேன்(அதுக்கு இப்ப என்னான்ர சிம்புவின் மன குரலில்)

 நீதிமன்றம்: பாட்டை பாடினாயா

சிம்பு: ஆமாம் பாடினேன் மற்றும் பாடல் பதிவும் செய்தேன்

 நீதிமன்றம்: பாடலை எல்லோரும் கேட்கட்டும் என்று நீயோ அல்லது உனது சார்பில் வெளியிட்டாயா

சிம்பு: இல்லை இல்லவே இல்லை, அந்த பாடலை வெளியிடவோ பொது வெளியில் பாடவோ முற்படவும் இல்லை. எப்படி கோபம் வந்தால் தனி இடத்தில் சத்தமாக திட்டுவோமோ அது போல் தான் இந்த பாடலை பாடி திட்டினேன் என்று சொல்வேன்.

 நீதிமன்றம்: அப்போ பொதுவாகவோ மற்றவர் கேட்கும் விதமாக பாடவும் இல்லை வெளியிடவும் இல்லை தீர்மானமாக சொல்

சிம்பு: இல்லை இல்லவே இல்லை, எனக்கு வேண்டாதவர் யாரோ திருட்டுதனமாக எடுத்து வெளியிட்டுள்ளார்கள் அதை பற்றி ஏற்கனவே காவல் துறையிடம் முறையிட்டுள்ளேன்

 நீதிமன்றம்: அப்படி எதுவும் புகார் வந்துள்ளதா

காவல் துறை: ஆமாம் வந்துள்ளது

 நீதிமன்றம்: அப்படியானால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்த புகார் அல்ல ஆகவே இந்த வழக்கை நீதிமன்றம் நிராகரிக்கிறது.

வெளியில் வரும் சிம்பு, என்னையும் எனது புகழையும் அழிக்க நினைக்கும் கூட்டதிற்கு சரியான பாடம் புகட்டி இருக்கிறது நீதிமன்றம். நான் பெண்களை மதிப்பவன், விரும்புபவன். வேண்டும் என்றே எனக்கு எதிராக இப்படி எல்லாம் சதி செய்கிறார்கள் என்று சொல்லி விரல் வித்தைகள் செய்து சென்று மறைவார்.

கூடி நின்ற மகளீர் கூட்டம் Stupid Star சிம்பு ஒழிக என்று சொல்லிவிட்டு இதை இதோடு விடப்போவதில்லை உச்ச நீதிமன்றம் வரை சென்று ஞாயத்திற்காக போராடுவோம் என்று செல்வார்கள். அதோடு இந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு வரும். அவ்வளவே......

Wednesday, December 16, 2015

Little super starல் இருந்து Stupid Star வரை - சிம்பு

இனிமேல் மக்கள் குறிப்பாக பெண்கள் சிம்புவை இப்படி தான் அழைக்கப்போகிறார்கள்.

ஒரு முறை தவறினால் போனால் போகிறது என்று இருப்பார்கள், ஆனால் மறுபடியும் திரும்ப திரும்ப அப்படியே நடந்தால் திமிர் என்று தான் சொல்வார்.

இப்படி எல்லாம் செய்தால் தன்னை வீரன் என்று நினைப்பார்கள் என்ற சிந்தையில் இப்படி மட்டமான ஒரு விளம்பரத்தை தேர்ந்து எடுத்து இருக்கிறார் இந்த Stupid Star சிம்பு.

ஆகவே இனிமேல் சிம்புவை Stupid Star என்று அனைவரும் அழைப்பாராக.....

Tuesday, December 15, 2015

மோடி தமிழகத்திற்கு நிவாரணம் தர தாமதப்படுத்துவது ஏன்

மோடி அரசு தமிழகத்தை பாரா முகமாக கவனிப்பதும், இது வரையில் நிவாரணங்களை பெரிய அளவில் அறிவிக்காமல் இருப்பதற்கு இவைகள் தான் காரணமாக இருக்கும்.

பெரிய அளவில் நிவாரணம் வழங்கினால் அதை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணி தமிழக அரசுடையது.

அப்படி செலவிடப்படும் பொருளையும் அதன் விளைவாக வரும் நல்லெண்ணத்தை தமிழகம் மறுபடியும் அதிமுகவிற்கே காட்டுவார்கள் என்ற கணிப்பாக இருக்கலாம்.

இல்லை என்றால் பாசகவை முற்றிலுமாக நிராகரித்து வாக்களித்த மக்களுக்கு சுசாமி சொன்னது போல் எதற்கு மைய அரசு நிதி கொடுக்கவேண்டும் என்றும் இருக்கலாம்.

ஒரு வேளை நிவாரணங்களை மைய அரசே கொடுக்கும் என்றால் இன்னேரம் அதாணி குழுமத்திடம் அந்த பணிக்கான 14,000 கோடி பணம் பட்டுவடா ஆகி இருக்கும். மோடியை குத்துவிளக்கு ஏற்ற வைத்து பணிகள் போர்கால அடிப்படையில் நடந்து இருக்கும்.

அல்லது வெள்ள நிவாரண பணிகளை மைய அரசே கொடுக்கும் வகையில் ஒரு அவசர சட்டம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அதாணியிடம் அந்த பணத்தை கொடுக்க காத்துக்கொண்டு இருக்கலாம்.

2016ல் தமிழகத்தில் தேர்தல் மட்டும் இல்லாமல் இருந்தால், இன்னேரம் மோடி அரசு பெரிய அளவில் கையில் துடப்பத்துடன் வந்து கழுவு கழுவு என்று கழுவி விட்டு இருப்பார்கள். அதாணிக்கு வடை போச்சு, நமக்கு நிவாரணம் போச்சு....... நம கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.................

Tuesday, December 8, 2015

பதிவர்கள் களப்பணியாற்றுவோரை புகழ்வதையும் இகழ்வதையும் நிறுத்தினால் நன்றாக இருக்கும்

நிலைமை இன்னனும் சீராகவில்லை, தவிக்கும் மக்களுக்கு உதவும் அத்தனை மக்களின் உதவியும் மக்களுக்கும் மிகவும் அவசியமான ஒன்று. இந்த நேரத்தில் அவர்களை புகழ்வதையும் இகழ்வதையும் நிறுத்தி வைப்பது தான் அவர்களுக்கு நீங்கள் செய்யும் மரியாதை.

அவசியமானவைகளை ஆவனப்படுத்துங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் களப்பணியாற்றும் அந்த முகம் தெரியாத மனிதர்களை புகழ்வதாக நினைத்துக்கொண்டு அடுத்தவர்களை இகழாதீர்கள். அவைகள் முட்டுக்கடையாத்தான் அமையும்.

களப்பணியாற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்று சொன்னால் அது மிகவும் சிறிதாக தான் இருக்கும். இருப்பினும் நன்றி கூட சொல்லவில்லை என்று ஆகாமல் இருக்க சொல்வோம் நன்றி. ஊர் கூடி இழுத்தா தான் தேர் என்ற வழக்கை உலகுக்கே மறுபடியும் நினைவுறுத்தும் சாதனையை செய்கிறீர்கள் நீங்கள் தொடரட்டும் உங்களது விலைமதிப்பில்லா பணி.

Thursday, December 3, 2015

இந்திய இராணுவம் பாக்கிட்தான் இராணுவத்திற்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

இலங்கை இராணுவத்திற்கு மட்டும் ஒத்துழைப்பு வழங்கி தெற்கு எல்லை பாதுகாப்பை உறுதிபடுத்துவது போல், பாக்கிட்தான் இராணுவத்துடனும் ஒத்துழைப்பு வழங்கி மேற்கு எல்லை பாதுக்காப்பையும் இந்திய இராணுவம் உறுதி செய்யவேண்டும்.

இதே பாணியில் வடக்கு எல்லை பாதுகாப்பிற்கு சீன இராணுவம் கேட்கும் அத்தனையும் கொடுத்துவிடவும் இல்லை என்றால் அவர்களால் நமது எல்லைக்கு பாதுகாப்பில் குந்தகம் வந்துவிடும்.

போங்கட இந்திய இராணுவமும் புடலங்காயும்.....

இந்த மானம் கெட்ட படைக்கு ஒரு தளபதி அதை வழி நடத்த ஒரு அரசியல் தலைமை.........அசிங்கம்

Tuesday, December 1, 2015

மீண்டும் தனது நாட்டுப்பற்று சிறகை விரிக்கும் பாசக கழுகு - நரேந்திர மோடியின் வீட்டில் வான்வழி தாக்குதல்

நரேந்திர மோடியின் வீட்டில் வான்வழி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் என்ற சேதியை அனைவரும் படித்து இருப்பார்கள்.

முதலில் இந்த தாக்குதலுக்கு ஆளாகும் அளவிற்கு நரேந்திர மோடி இது வரை என்ன செய்துவிட்டார் என்று அவரது வீட்டை தாக்க திட்டம் போட்டு இருப்பதாக தகவல் கசியவிட்டவர்கள் சொல்வார்களா.

ஏதோ அவர் உண்டு அவருக்கு ஏவிய வேலை உண்டு என்று அவர்களது முதலாளிகளுக்கு உண்டியல் உலுக்கும் வேலையே கதி என்று இருக்கும் அவரை எதற்காக வான்வழி தாக்குதல் நடத்த வேண்டும்.

இப்படி முட்டாள் தனமாக தங்களது வான் தாக்குதல் வல்லமையை ஏழை இந்தியாவில் நடத்தி காண்பித்தால் அவர்கள் என்ன என்ன முறையில் தாக்குவார்கள் என்று தெரிந்து கொண்டு அவர்களை எல்லையிலே பிடித்து அமுக்குவார்கள் என்று அந்த தீவிரவாத கூட்டதிற்கு தெரியாதா என்ன, அவ்வளவு முட்டாள்களா அவர்கள்.

தீவிரவாதிகளின் உலகில் அவர்களது திட்டமும்,ஆள் மற்றும் ஆயுத பலமும் அரசாங்கத்திற்கு தெரியாமல் இருக்கும் வரையில் தான் அவர்களுக்கு பாதுகாப்பு என்றது ஊர் அறிந்த இரகசியம். இருப்பினும் இப்படி ஒரு தகவல் வந்தாக செய்தி கசியவிடுவது நாட்டில் நடக்கும் மகிந்த இராசபட்சே செயல்கள் அதிக பேசு பொறுளாக மாறிவிட்டதை மட்டுப்படுத்தும் செயல் இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.

இல்லை நரேந்திர மோடி என்ன ஏழையா இல்லை சிறுபான்மை இனத்தை சேர்ந்தவரா அடித்து கொன்றால் கேட்க்க ஆள் இல்லாத ஆளா, இந்த கதை எல்லாம் வேறு எங்காவது சென்று சொல்லுங்கள் பாசகவினரே.

சொந்த ஆட்களை பலியிடுவதை விட்டு விட்டு ஆக்கபூர்வமான வேலைகளை பாருங்கள் பாசக......போங்கபா உங்க நகைசுவைக்கு அளவே இல்லையா........

Monday, November 23, 2015

கோவன் கைதுக்கு உண்மையான காரணம் இது தான்

கோவன் கைத்துக்கு இது அது என்று ஏகப்பட்ட அலசல்கள் செய்துவிட்டார்கள். ஒருவராது உண்மையான காரணத்தை சொல்வார்கள் என்று பார்த்தால் ஒருவரும் சொல்லவில்லை. உண்மையான காரணம் இது தான்.

தமிழகத்தின் அதிமுக முதல்வராக இருந்த திரு பன்னீர் செல்வத்தை விட்டு விட்டு செயலலிதாவை சொல்லி கிண்டல் எப்படி என்று தான் இந்த கைது அது இது எல்லாம். மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை.

அதை சொல்வதை விட்டு விட்டு அதிமுக அது இது என்று அற்ப காரணமாக சொல்லிக்கொண்டு இருக்கிறது.

அதிமுக தைரியமாக சொல்லுங்கள் பன்னீரை சொல்லாமல் செயாவை திரும்ப திரும்ப முதல்வர் அவர் இவர் என்று சொல்வது பன்னீருக்கும் அவரது அடி பொடிகளுக்கும் பிடிக்காமல் தான் அதிகாரிகளை ஏவிவிட்டு இப்படி எல்லாம் செய்ய தூண்டினோம் என்று சொல்லுங்கள்.......

Saturday, November 21, 2015

தமிழகத்தின் மழை பாதிப்புக்கு பிரதமர் ஆறுதலோ விசாரிப்போ இது வரையில் இல்லையே ஏன்

பிரதமரின் முதலாளிகளின் சொத்துகளோ அல்லது வியாபாரமோ தமிழக மழையில்னால் பாதிக்கபடவில்லை. ஒரு வேளை அப்படி அவர்களின் சொத்தோ வியாபாரமோ பாதிக்கப்பட்டு இருந்தால் இன்னேரம் மோடி கையில் ஒரு உண்டியலை எடுத்துக்கொண்டு அமெரிக்கா முதல் ஆப்ரிக்கா வரை கையேந்தி வந்து அவரின் முதலாளிகளின் காலில் கொட்டி ஆசிர்வாதம் வாங்கி செல்பி படம் பிடித்து வெளியிட்டு இருப்பார்.

முன்னாளில் வடக்கே வெள்ளம் பாதித்த போது எல்லாம் தமிழகத்தில் நிதி திரட்டி அந்த மக்களுக்கு தமிழகம் அனுப்பி இருக்கிறது. ஆனால் இத்தனை நாட்கள் கடந்தும் உதவி பெற்ற மாநிலங்கள் கூட இது வரையில் வாய்திறக்காமல் இருப்பது சோகமே....

பிரதமரின் முதலாளிகளின் தற்புழுதைய ஆனையின் படி மலேசியாவில் உண்டியல் குலுக்க சென்ற பிரதமர் நாடு திரும்பிய பிறகாவது வாய்திறகிறாரா என்று பார்ப்போம்.

Tuesday, November 17, 2015

தீவிரவாதம் தீர்க முடியாத ஒன்றா - ஏன் உலக நாடுகள் மௌனிக்கின்றது

முதலில் பிரான்சில் நடந்த தாக்குதலில் உயிர் இழந்த அப்பாவி மக்களுக்கு இரங்கலை பதிவு செய்வோம்.

உலகில் இப்படி அதிக அளவுக்கு சேதம் விளைவிக்கும் தாக்குதலில் இறங்கும் தீவிரவாத இயக்கங்கள் என்ன வானில் இருந்த ஆயுதங்களை பெறுகிறார்கள். இல்லை எல்லா நாட்டிலும் காய்கறிகள் கிடைப்பது போல் கிலோ இவ்வளவு என்று விக்கிறார்கள் போல் ஒரு தோற்றத்தை உலக நாடுகள் ஏற்படுத்துவது தான் சோகம்.

இந்த அனைத்து தாக்குதலிலும் பயன் படுத்தப்படும் ஆயுதங்கள் எந்த நாட்டு தயாரிப்பு என்று பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நன்றாக தெரியும். தெரிந்தும் கூட அந்த ஆயுதங்கள் எப்படி இவர்களுக்கு கிடைக்கின்றது என்று கண்டு அந்த வழிகளை வேர் அறுப்பதை விடுத்து விட்டு. சகிப்புத்தண்மை அது இது என்று புலம்புவதும், இயக்கங்களின் முகாம்களின் மோது குண்டு வீசுவது என்று சாதாரண பொதுமக்களை போல் நடந்து கொள்கின்றது.

யார் எல்லாம் பணம் கொடுக்கிறார்கள், யார் எல்லாம் ஆயுதம் கொடுக்கிறார்கள் என்று கண்டு அறிந்து தாக்கி இருந்தால் இன்றைக்கு தீவிரவாதம் இவ்வளவு தூரத்திற்கு வளர்ந்து இருக்காது.

இவைகளை செய்யவில்லை என்றாலும் செய்ய வேண்டும் என்ற அறைகூவலாவது விட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தியா முதல் அனைத்து நாடுகளும் தீவிரவாதத்தின் வேரை அறுக்காமல் சும்ம இலையையும் கிளையையும் கிள்ளிவிட்டு சாதித்து விட்டதாக கூவுகின்றது.

இந்த அறிவுகெட்ட செயலை இன்னமும் எத்தனை காலத்திற்கு உலக நாடுகள் மேற்கொள்ள போகின்றது. யார் யார் எல்லாம் பணம் கொடுக்கிறார்கள் என்று கண்டுபிடித்து அவைகளையும் யார் எல்லாம் ஆயுதம் கொடுக்கிறார்கள் என்று பார்த்து அவர்களது ஆயுதங்களையும் பிடிக்கட்டும் முடக்கட்டும், பிறகு பாருங்கள் இந்த தீவிரவாதிகள் பழையபடி தெருவில் கலவரம் செய்வதோடு நிறுத்திகொள்வார்கள்.

செய்வார்களா சித்திப்பார்களா பார்க்கலாம்......

Wednesday, November 11, 2015

பிகாரின் தோல்விக்கு பாசக எந்த அப்பாவி மக்களை இரயிலில் வைத்து கொளுத்த போகின்றதோ....

பிகாரின் தோல்வியை அலச பாசகவின் உயர் மட்ட குழு கூடுகின்றது என்ற செய்தியை பார்க்கும் போது மேலே சொன்னது தான் தோன்றுகின்றது.

பாசகவை பொருத்த வரை நாட்டுப்பற்று அவர்களின் கை கால்கள் போல் அவர்களுடன் மட்டும் பிறந்தாக நாடு முழுதும் சொல்லி நம்ப வைத்தார்கள். அந்த தோற்றத்தில் என்று எல்லாம் சந்தேகம் வருகின்றதோ அப்போது எல்லாம் அப்பாவி மக்கள் வாழும் இடங்களிலில் பாசகவே குண்டு வைத்து வெடித்துவிட்டு நாட்டின் அச்சுருரத்தலுக்கு எதிராக போராட மற்ற மக்களை அழைக்கும் புனித கட்சி அல்லவா பாசக.

சென்ற பாசக ஆட்சியின் போது அத்வானி சென்ற அனைத்து இடங்களிலும் அவர் சென்ற பிறகு குண்டுகள் வெடித்ததை மக்கள் நினைவு கொள்ள வேண்டும், தமிழகத்திலும் கூடதான் குண்டுகள் வெடித்தது.

இவைகள் அனைத்திற்கும் உச்சமாக கோத்ராவில் நள்ளிரவில் தூங்கிக்கொண்டு இருந்த அப்பாவி மக்களை இவர்களே கொளுத்திவிட்டு பாக்கிட்தானத்தின் கைகூலிகள் செய்தார்கள் என்று சொல்லி குசராத்திலும் மத்தியிலும் ஆட்சிக்கு வந்தவர்கள் தாம் இந்த பாசக.

இன்றைக்கும் அந்த தேவை மறுபடியும் வந்து இருப்பதாக தான் தெரிகின்றது. பாவம் இந்த முறை எந்த மக்களை எரித்து கொன்று விட்டு, மாட்டுகறி, பாக்கிட்தானம், கிருத்துவம் என்று சொல்லி அடுத்த தேர்தலுக்கு மக்களை தயார்படுத்த போகிறார்களோ பாசகவினர்..................

Tuesday, November 10, 2015

அன்னையின் நினைவாக - ஸ்ரீவித்யா 9ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

அம்மா உன் நினைவாக இன்றும் என்றும், இன்றைகும் எனது பெயரை பெண் குரல் அழைக்கையில் அது நீயோ என்று திரும்பி பார்கின்றேன்.

Thursday, October 15, 2015

இனிமேல் பாசக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பயங்கரவாதம் வெடிக்கும் - பாக்கிட்தான் போல் பாசக

மதவாதிகள் யார் என்றும் அதில் பாசகவின் பங்கு என்ன என்றும் உலகிற்கே தெரியும்.

நாட்டில் நடக்கும் மத வன்முறைகளுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வாதாடுகிறது பாசக.

இது எப்படி இருக்கிறது தெரியுமா, இந்தியாவில் பயங்கரவாதத்தை நிகழ்த்த ஆட்களை தயார் செய்து அனுப்பிவிட்டு. அவர்கள் மும்பையில் மாட்டியது போல் மாட்டிக்கொண்டால் பயங்கரவாதிகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாக்கிட்தானம் சொல்வது போல் இருக்கிறது பாசக சொல்லும் பதில்கள்.

பாக்கிட்தானத்தின் இந்த கருத்தை பாசகவோ ஐநா சபை வரை சென்று இல்லை என்று வாதிடுபவர்கள் தான் இந்த பாசக. ஆனால் பாசக மேல் இந்த குற்றம் வைக்கும் போது பாக்கிட்தானம் சொல்வதை போல் சகிப்புத்தன்மைக்கும் இந்தியாவின் பன்முக தன்மைக்கும் மொத்த குத்தகையை பாசக எடுத்து இருப்பது போல் பாசாங்கு செய்திகளை வெறும் வார்த்தைகளாக விற்று வருகின்றது.

எழுத்தாளர்கள் புரட்சி செய்தால் அந்த எழுத்தாளர்கள் பாசகவின் கொலை மற்றும் வெறுப்பு கொள்கைகளை பரப்பாதவர்கள். அதனால் அவர்கள் செய்யும் புரட்சி எல்லாம் எங்களுக்கு புரட்டு தான் என்கிறது.

ஆக மொத்தத்தில் கூட்டி கழித்து பார்த்தால் பாசக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இனி இது போல் நூறு ஆயிரம் கலவரங்கள் பாசகவினரால் நிகழ்த்தபடும் என்று மறைமுகமாக அறிவித்து இருக்கிறது பாசக அரசு.

அப்படி நடக்கும் கலவரங்களுக்கு மாநில ஆட்சியில் இருக்கும் பாசக இல்லாதாரே பொறுப்பு என்று அடுத்த கொலைக்கு தயாராகிவிடும் பாசக பாக்கிட்தானம் போல்.

பாசக தான் வேண்டும் என்று வேண்டிய மக்களே அனுபவிங்கள்..........

Wednesday, October 14, 2015

இது தான் இந்த நூற்றாண்டின் மிக பெரிய ஜோக்கு -- திரும்ப திரும்ப பொய் சொல்லும் மோடி


மோடி தாத்ரி சம்பவம் பற்றி திருவாய் மலர்ந்தது. இந்த அளவிற்காவது பயம் இருக்கிறதே என்று எடுத்துகொள்ள வேண்டியது தான்.

"பாஜக எப்போதுமே மதச்சார்பின்மையை பின்பற்றுகிறது. வேற்றுமையில் மதச்சார்பின்மை கொள்கையிலிருந்து விலகியதில்லை. தாத்ரி போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை பாஜக ஒருபோதும் ஆதரித்தது இல்லை.

பாஜக மதவாதத்தை தூண்டுவதாகவும், சமூகத்தில் பிளவு உண்டாக்குவதாகவும் கூறும் எதிர்க்கட்சிகள் சில சூழ்நிலைகளை சாதகமாக்கிக் கொண்டு மக்களிடையே பிளவை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. "

என்ன ஒரு கண்டுபிடிப்பு, அப்போ இதை செய்பவர்கள் எல்லாம் குசராத்து கலவரத்தில் செவ்வனே பணி செய்துவிட்டு பதுங்கியவர்களோ..........

உங்க பொய் மூட்டைகளுக்கு அளவே இல்லையா......

Tuesday, October 13, 2015

தொடரும் பாசக இந்துத்துவா கொலைகள் -- காந்தி முதல் தாத்ரி வரை

விகடனில் வெளியாகி இருக்கும் மகேசு சர்மாவின் பேச்சு

மகேசு சர்மா - இவரை ஏன் இந்தியாவின் பிரதிநிதியாக அமெரிக்கா மற்றும் ஐநாவிற்கும் அனுப்பக்கூடாது

இனி மோடி தனது வெளி நாட்டு பயணங்களுக்கு இவரை உடன் அழைத்துக்கொண்டு சென்று முதலீடுகளை கொடுக்கும் முதலாளிகளிடமும் அந்த நாட்டு அரசியல்வாதிகளுடனும் பேசச்சொல்லாம்.

உண்மையில் பாரதிய சனதா கட்சியின் நிறம் என்ன என்று அழகாக வெளிச்சம் போட்டுகாட்டிடுவார் இந்த மனிதர்.

இரண்டாம் வகுப்பு மாணவர் சக நண்பர்களுடன் நடக்கும் குழந்தை விளையாட்டில் பேசிக்கொள்வது போல் அல்லவா பேசிக்கொண்டு இருக்கிறார் மனிதர்.

பாவம் இந்த குழந்தை எல்லாம் கட்சியில் சேர்த்துகொண்டு ஆட்சி நடத்துகிறது பாசக. மோடி பேசுவது போல் அந்த பக்கம் கூட்டத்தை அனுப்பி மக்களை கொலை செய்ய அனுப்பிவிட்டு இந்த பக்கம் தொலைகாட்சியில் அழுதுகாட்டும் மோடியின் நடிப்பு எல்லாம் இவருக்கு கற்றுக்கொடுக்கவில்லை போலும்.......

பாசக தான் வேண்டும் என்று வேண்டி விரும்பிய மக்களின் மகன் மகள்களுக்கு இந்த அனியாயம் நடக்கும் வரை இதன் கொடுமைகள் அவர்களுக்கு புரிய போவது இல்லை.

நல்ல வேளை பெரியார் உயிருடன் இல்லை அப்படி இருந்து இருந்தால் பாசக காந்திக்கு அடுத்து பெரியாரையும் கொலை செய்து இருக்கும்..................

Friday, October 9, 2015

உங்களிடம் பசு உள்ளதா - மாதம் ரூ25000 பராமரிப்பு தொகை கொடுக்க பாசக முடிவு

பசுவை வைத்து நடந்த அசம்பாவிதங்களை பார்த்து வருந்திய பாசக இனி பசு வைத்து இருப்போருக்கு பசு உயிருடன் இருக்கும் வரையில் மாதம் ரூ25,000 பணம் வீடு தேடி வந்து கொடுப்பதாக தீர்மானித்து இருக்கிறார்கள்.

அதுமட்டும் இல்லாது பசு இறந்தபிறகும் பசு வைத்து இருந்தவர் இறக்கும் வரையில் மாதம் அந்த பசுவை வைத்து இருந்தர்காக ரூ20,000 கொடுப்பதாகவும் திட்டம் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

ஏன் இப்படி எல்லாம் செய்கிறீர்களே என்று கேட்டதற்கு, பசுவை வைத்து அரசியல் செய்யும் எங்களிடம் பசுக்கள் இல்லை. மாறாக வறுமையின் காரணமாகவும், செலவின் காரணமாகவும் தான் பசுக்கள் விற்கப்படுகின்றது. ஆகவே பசுக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் இப்படி காப்பாற்றினால் தான் உண்டு என்றும் சொன்னார்கள்.

எப்போது இருந்து பணம் கிடைக்கும் என்று கேட்டதற்கு பொது மக்களிடம் பசுவின் புனிதமும் தேவையும் எடுத்து சொல்லி இப்போது தான் நிதி திரட்ட துவங்கியுள்ளோம். மேலும் பாசக கட்சியின் தயவோடு தொழிலில் கொழிக்கும் தொழில் நிறுவனங்கள் கணிசமான தொகையை வழங்கவும் உள்ளது என்று தெரிவித்தார்கள்.

பணம் கிடைக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டதற்கு, உங்கள் பகுதியில் உள்ள பாசக ஊழியர்களை அனுகி எங்கே எவ்வளவு பசுக்களை வைத்து இருக்கிறீர்கள் என்று தெரிவித்தால் போதும். மேலும் இது வரையில் எவ்வளவு பசுக்கள் உங்களிடம் இருந்து இருக்கின்றது என்ற கணக்கையும் கட்டாயம் தெரியபடுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கின்றார்கள்.

இப்படி பணம் கொடுப்பதனால் நிறைய செலவு பிடிக்குமே என்று கேட்டதற்கு, யாருக்கு செய்கின்றோம், பசு எனது தாய். தாய்க்கு செய்வதற்கு என்ன கணக்கு இருக்கிறது என்று பெருமையாக சொன்னார்கள்.

இந்த திட்டம் தமிழகத்தில் மட்டுமா இல்லை அனைத்து இந்தியாவிலுமா என்று கேட்டதற்கு, தமிழகத்தில் துவங்கி அனைத்து இந்தியாவிலும் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்த துவங்கும் என்று தெரிவித்தார்கள்.

குசராத்து கலவரத்தில் மோடி அரசின் பங்கு என்ன விளக்குகிறார் சித்தார்த்து நாத்து சிங்கு

குசராத்து கலவரங்களில் மோடியின் அரசு எவ்வளவு மெத்தனமாக இருந்தது
இந்த ஒரு கொலைக்கு சித்தார்த்து சொல்லும் அத்தனை காரணங்களும் அன்றைக்கு குசராத்து கலவரத்திற்கு பொருந்தும். 30 நிமிடங்களில் காவலர்கள் ஏன் வந்து அடக்கவில்லை என்று சொல்கிறார். ஆனால் 3 நாட்களுக்கு அன்றைக்கு காவலர்கள் வராமல இருந்ததே அதை பற்றி என்ன என்று சொல்வார்களா......

பசுவை வதைகிறதாக வந்ததின் புகாரின் பேரில் என்று சொல்கிறார், அப்போ பால் கறக்கும் கைகளை எல்லாம் வெட்ட போகிறார்களா இவர்க்கள்.

முதலில் இந்த பசு சம்பந்தமாக இருக்கும் சட்டத்தை முழுதும்மாக நீக்கவேண்டும், என்ன அசிங்கமான ஒரு போக்கிறகு வழி வகுத்துவிட்டது. ஒரு விலங்கிற்காக மனிதன் கொல்லப்படுவது என்ன ஞாயம் என்று தெரியவில்லை.

பசுக்கறி சாப்பிட பாக்கிட்தானத்திற்கு எல்லாம் போகவேண்டாம், கேரளா போதும். முடிந்தால் சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்.

இன்றைக்கு பூனாவில் இருக்கும் 5 நட்சத்திர உணவகங்களிலும், மற்றும் நாட்டில் இருக்கும் 5 நட்சத்திர விடுதிகளுலும் மாடு உண்ணும் வெளினாட்டினருக்கு என்று மாட்டுகறியை சமைத்து அதிகவில்லைக்கு விற்கிறார்கள். ஏன் அங்கே எல்லாம் சென்று இவர்களது வீரத்தை காட்டவேண்டியது தானே........

அடித்து கொன்றவர்கள் இந்து மத அடிப்படை வாதிகள் என்று சொல்லாமல் ஏதோ ஒரு பயங்கரவாத கும்பல் என்று சொல்கிறது அரசியல் கட்சிகள்........

வடமாநிலங்களில் படிப்பறிவு இல்லை என்றும், எவ்வளவு காட்டுமிராண்டி தனமாக இருக்கிறார்கள் என்றும் இந்த சம்பவம் காட்டுகிறது.

Thursday, October 1, 2015

பெண்ணின் சுதந்திரம் இவ்வளவு தானா

தனது வீட்டு பெண்கள் என்ன செய்தாலும் சரி ஆனால் அடுத்தவர் வீட்டு பெண்கள் என்றால் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்கவேண்டும் என்று அடுக்குவதேனோ.......

உங்கள் வீட்டு பெண்களை பார்த்து உங்களுக்கு இந்த மாதிரியான எண்ணங்கள் எல்லாம் வருகின்றதா என்று கேட்டால் அனைத்து ஆண்களும் இல்லை என்று தான் சொல்வார்கள், பிறகு அடுத்தவர் வீட்டு பெண்கள் என்றால் மட்டும் உங்களுக்கு எல்லாம் இவ்வளவு இளக்காரமா

இந்த எண்ணம் மாறும் வரையில் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடையாது.

நல்ல வேளை குமுதம் இதழ் பொது இடங்களில் பாலூட்டும் அன்னையின் படத்தை மறைந்து இருந்து எடுத்து எல்லை மீறும் பெண்கள் என்று கட்டுரையிடாமல் போனார்களே என்று பெருமை பட்டுகொள்வோம்.

அந்த அன்னையின் செய்கையை எந்த வக்கிரமும் இல்லாமல் தவிர்த்துவிட்டு செல்லும் இதே பொதுமக்கள் இளம்வயது பெண்களை ஈயாக மொய்பது ஏனோ........

ஆண்களின் கண்ணியம் அவனது நடத்தையில் இருக்க வேண்டுமே தவிர பெண்ணின் தோற்றதில் வைக்ககூடாது. அவனுக்கு தான் ஆண் என்று பெயர் இல்லை என்றால் விலங்கு என்று தான் பொருள்.

போய் வேறு எதாவது வேலை இருந்தால் போய் பாருங்கள் அதைவிடுத்து இல்லாத பிரச்சனைகளை எல்லாம் எடுத்து ஆராய்வதைவிடுத்து.....

சுஜாத்த துவங்கி வைத்த இந்த குமுதம் மஞ்சள் பத்திரிகை தண்மையை மாற்றிக்கொள்ள வேண்டும். நேர்மையாக எழுதியே பிரபலபடுத்தலாமே இந்த கேவலமான வேலைகள் எல்லாம் தேவை தானா......குமுதம் குழுவினர் சிந்திப்பார்களா.....

குற்றம் கடிதல் - ஆசுகர் விருது பெறுமா........

படத்தில் முன்னுக்கு பின் முரணான கருத்துகள் விரவி கிடக்கிறது.

எந்த ஒரு படமும் ஒரு மைய கருத்தை வலியுறுத்தி எழுதி எடுக்கபடும். ஆனால் இந்த படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்று உறுதியாக சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.

அது மட்டும் இல்லாது காட்சிபடுத்தலில் அதிகமாக காட்சிபிழைகள் உள்ளது, உதாரணமாக. மயங்கிய சிறுவனை மருத்துவமனையில் சேர்த்து செய்திகள் தீயாக பரவி உடன் படிக்கும் மாணவியை பேட்டி எடுக்கும் காட்சிகள் கதைபடி இரவு 10:00க்கு மேல் நடப்பது போல் காட்டி இருப்பார்கள். அந்த நேரத்தில் மாலையில் மலர்ந்தும் மலராமலும் இருக்கும் முல்லை பூவை சிறுமி தலையில் அணிந்துக்கொண்டு பேட்டி கொடுப்பது போல் காட்சி அமைப்பு, இது கட்டாயம் தனிக்கை குழுவிற்கு பட்டர்த்தவமாக தெரியும், படகுழுவுக்கு கண்ணில் படாமல் போனது ஏமாற்றமே....

கதையில் வரும் பாத்திரங்களும் முன்னுக்கு பின் முரணாகவே நடந்துகொள்கிறார்கள் தலைமை ஆசிரியரை தவிர. உதாரணமாக பாலியலை மாணவரிடம் பேசுவதில் என்ன தவறு என்று சொல்லும் ஆசிரியைக்கு சக ஆசிரியை தன்னை போலவே தான் கண்டிப்பு காட்டி இருப்பார்கள் என்று பேசுவதை விடுத்து எதிராக பேசுவதும் நடந்துகொள்வதும் இயல்பாக இல்லை.

ஆசிரியை என்ன மதம் என்று காட்டியும், கலப்புமணம் புரிந்தவர் என்று வலிய காட்டினார்கள் ஏன் என்று தெரியவே இல்லை.

இடையே காவலர்களையும் காட்டினார்கள், என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று உறுதிபட தெரிவிப்பதைவிட குண்டான மகனையும் கொழுப்பு உணவையும் உட்கொள்பவராகவும் காட்டி இருக்கிறார்கள் ஏன் என்று படக்குழுவினர் தான் சொல்லவேண்டும்.

பொதுவுடமைவாதிகள் என்றால் கையை நீட்டுபவர்கள் என்று துவக்க காட்சியில் இருந்து காட்டுவது ஏனோ தெரியவில்லை ஒருவேளை அமெரிக்காவிற்கு பிடிக்கட்டும் என்றா என்று தெரியவில்லை. ஒரு இயக்கவாதியாக இருப்பவர்கள் எந்த ஒரு சூழலிலும் கண்ணியமாக நடந்துகொள்பவர்கள் படத்தில் காட்டிய தலைமை ஆசிரியர் குடும்பம் போல், அதை விடுத்து  அடாவடியாக காட்டி இருப்பது எதிர்மறை பாத்திர படைப்பு, சொல்லமுடியாது இந்த ஒரு காரணத்திற்காக ஆசுகரில் தேர்ந்து எடுத்தாலும் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

கைக்குட்டையில் இரத்ததுடன் கண்டேன் என்று சொல்லும் சிறுமியின் காட்சிகள் யாரையோ சமாதனப்படுத்த வலிய திணித்தது போல் இருக்கிறது.

அந்த ஏழை அம்மாவையும் சிறுவனையும் இன்னமும் அதிக கோணங்களில் மனதில் பதியும் படி முகம் தெரியும் படி காட்சிபடுத்தி இருக்கலாம் என்னவோ வேண்டாம் என்று நிழல் மனிதர்களாகவே கடைசிவரை காட்டியது ஏமாற்றமாகவே இருக்கிறது.

காதல் திருமணம் என்றால் வேலைபார்க்கும் பள்ளியில் சொல்லிக்காமல் சென்று தான் செய்துகொள்ள வேண்டுமா என்ன, விடுப்பு எல்லாம் கொடுக்கமாட்டார்களா என்ன 3 நாள் ஆளைகானும் என்று காட்டுவது ஏனோ இயக்குனருக்கே வெளிச்சம்.

சங்கடங்கள் அதிகம் ஆகும் கட்டத்தில் நெற்றியில் இருக்கும் திலகத்தை அழிப்பதாக காட்டியதின் அடையாளம் கிருத்துவர்கள் கலப்புமணம் செய்துக்கொண்டால் இப்படி தான் துன்பம் அனுபவிப்பார்கள் என்று மத போதகர்கள் சொல்வது போல் காட்சிபடுத்தியதை கண்டிக்க வேண்டும்.

கடைசியாக தாய் நாவலை எதுக்கு காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை, அதற்கு பதிலாக புத்துயிர்ப்பு காட்டி இருந்தால் பொருத்தமாக இருந்து இருக்கும்.

இந்த படத்தைவிட காக்கா முட்டை தெளிவாகவும் நல்ல ஓட்டத்துடனும் இருந்தது...........

Tuesday, September 22, 2015

காதலும் திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வதும் - தேனம்மை அம்மா செல்வது எல்லாம் உண்மை தானா

டேட்டிங், லிவிங் டுகெதர், கம்பானியன்ஷிப் – ஆன்மநேயக் காதலா.

இந்த தலைப்பை தொடும் போது எல்லோரும் அமெரிக்காவையும் இன்னமும் சில வெளி நாடுகளை உதாரணம் காட்டி பேசுவது வாடிக்கையாகிவிட்டது.

அப்படி உதாரணமாக காட்டுகிறேன் என்று தவறான தகவல்களையும் கொடுப்பதையும் வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.

மற்ற நாடுகளில் எப்படி என்று தெரியாது, ஆனால் அமெரிக்காவில் எப்படி என்று தெரியும் ஆகையாக தவறான தவறுகளை சுட்டுவோம்.

முதலில் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் பிறந்த குழந்தைக்கு இவன் தான் தகப்பன் என்று மரபணு சோதனை மூலம் எளிதாக காட்டிவிடலாம்.

திருமணம் செய்துகொண்டு அப்பாவாக இருக்க முடியாது என்று ஆண் சொல்லும் பட்சத்தில் குழந்தைக்கான உதவி தொகையை அவன் குழந்தையின் 18 வயது வரை கட்டாயம் கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும்.

அப்படி அவன் கொடுக்க முடியாது என்ற நிலைவரும் போது அவன் வேலை செய்யும் இடத்தில் இருந்து நேரடியாக பிடித்தம் பிடித்து அனுப நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும். அமெரிக்காவில் எந்த மூலையில் சென்று ஒளிந்துகொண்டு வேலை செய்தாலும் தேடி கண்டுபிடித்து பணத்தை பிடுங்கி அனுப்பிவிடுவார்கள் அரசாங்கத்தினர்கள். எந்த விதிவிலக்கும் கிடையவே கிடையாது.

ஆகையால் காதலிக்கும் ஆணும் சரி பெண்ணும் சரி இந்த காரியத்தில் தெளிவாக இருப்பார்கள்.

பெண்ணின் விருப்பம் இல்லாமல் கட்டிய கணவனே ஆனாலும் தொடமுடியாது, அப்படி ஏதும் நடந்தால் நேராக கம்பி எண்ண வேண்டியது தான். அதற்கு பிறகு இருண்ட வாழ்க்கையில் விரக்தி அடைந்து தத்துவம் பேசிக்கொண்டு திரிய வேண்டியது தான்.

இவ்வளவு பாதுகாப்புகள் இருந்தும் இந்த அமெரிக்கர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது. 18 வயது ஆனதும் அவர்கள் வீட்டை விட்டு போகிறார்களோ இல்லையோ பெற்றோர்கள் விரட்டி அடித்துவிடுவார்கள், அம்மாவும் சேர்ந்து தான்.

இல்லை இதே ஊரில் தான் கல்லூரி இருக்கிறதே என்று சொன்னாலும் இல்லை தனியா வீடு பார்த்துகொள் என்று தண்ணி தெளித்து விட்டுவிடுவார்கள்.

கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் முதல் போதும் என்று ஆகும் வரை குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கும் ஒரு கூட்டம். அதில் நன்றாக படிப்பவர்களும் உண்டு.

 நன்றாக படித்தவர்கள் நல்ல வேலைகளாக பெற்றுக்கொண்டு ஊர் இடம் மாற்றம் என்று மாறி செல்வார்கள். காதல் குடி சோம்பல் என்று இருக்கும் கூட்டம் பாதியில் படிப்பை முறித்துக்கொண்டு வேலைக்கு செல்லும். படிக்கின்றேன் என்று சொல்லி வாங்கிய கடனை கட்டும் வரை ஒன்றுக்கு இரண்டு என்று வேலை பார்த்து அடைப்பார்கள். அப்படி அடைத்து முடித்ததும் திரும்பவும் எந்த இடத்தில் படிப்பை விட்டார்களோ அந்த இடத்திலே விட்டதில் இருந்து தொடங்குவார்கள், கொஞ்சம் இடைவெளி விட்டாலும் இவர்களுக்கு பட்டம் கிடைக்கும் பிறகு நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைக்கும்.

இந்த இடைப்பட்ட காலத்தில் குழந்தை குடும்பம் என்று ஆகி கடைசியில் இந்த வசதியில் தமது கனவு வாழ்கை பலிக்க போவது இல்லை ஆகையால் இந்த திருமணம் வேண்டாம் என்று உதரித்தள்ளும் மக்களும் அதிகம். திருமணத்தை உதரலாம் ஆனால் குழந்தையை என்ன செய்வது. அந்த பிள்ளைகளை வளர்க்க முடியாமல் அவர்களது வாழ்க்கையை வீணடிப்பார்கள்.

தேனம்மை அம்மா சொன்னது போல் டார்மில் மருத்துவமனை போல் வரிசையாக படுக்கை ஒரே அறையில் இல்லை. தனி தனி அறைகள் இருக்கும் ஆனால் ஓர் அறையில் இருவர் தங்கி இருப்பது டார்ம்.

1000 டாலர்கள் இருந்தால் தாராளமாக குடுத்தனம் நடத்தலாம், இந்த காசு அவர்களுக்கு சொர்கத்தை காட்டும் அந்த காதலில், பிறகு குழந்தை பிறந்ததும் ஆகின்ற செலவுக்கு அரசை அனுகி பணம் வேண்டும் என்று கேட்கும் போது பல் இளிக்கும் இவர்களது பொருளாதாரம்.

இந்த மாதிரியான ஏராளமான முன் உதாரணங்களை பார்த்தவர்கள் இவர்கள், ஆகையால் ஒன்றாக தங்குவது காதலிப்பது பிறகு திருமணம் செய்துகொள்வது என்ற காரியங்களில் இவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணின் திருமணத்திற்கும் அவளது முன்னாள் காதலுக்கும்(இன்னும் மற்ற பிர) எந்த சம்பந்தமும் இல்லை என்றது பெரும்பாலான அமெரிக்கர்களின் கோட்பாடு. ஆனால் திருமணத்திற்கு பிறகு அவளுடன் வாழவேண்டும் என்று மட்டுமே தெளிவாக இருக்கிறார்கள்.

எந்த வயதில் ஒத்துவரவில்லை என்று நினைக்கிறார்களோ அந்த நிமிடத்தில் இருந்து அவளுக்கு விடுதலை அந்த திருமண பந்ததில் இருந்து.

70, 80 ஆகியும் இன்னமும் முதல் திருமண பந்தத்துடன் இருக்கும் மக்களையும் பார்த்து இருக்கின்றேன், 6 மாத கைகுழைத்தயுடன் நீதிமன்ற வாசலை நாடும் பெண்களையும் பார்த்து இருக்கின்றேன்.

இந்த வாழ்கை முறையில் ஏதாவது ஒன்றாவது சாத்தியமா இந்தியாவில் பிறகு ஏன் இவர்களை பார்த்து இந்தியர்கள் பின்பற்றுகிறார்கள்.

முன்னாள் காதலன் தனது காதலியை பார்த்து நலமா என்று இன்னாள் கணவன் முன் கேட்டாலே போதும் அடி உதை என்ற கொடுமை கொலைவரையில் செல்கிறது பிறகு எதற்கு இந்த அரைகுறை பின்பற்றுதல். விட்டு விட்டு வேலையை பார்க்க வேண்டியது தானே.........

Thursday, September 17, 2015

வல்லரசு இந்தியாவின் உண்மை நிலை - நடுத்தர வர்கம் என்றால் இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.......

ஓடும் வண்டியில் இருந்து விழுந்த பெண்

நடுத்தர வர்கம் என்றால் எவ்வளவு இளக்காரம் பார்த்தீர்களா, சாகப்போவது ஒன்றும் அரசு நடத்தும் அமைச்சர்களது சொந்தம் ஒன்றும் இல்லையே

எவனோ ஒருவனை பெற்று எடுத்தவர் தானே அல்லது வெறுமனே எவனோ ஒருவர் தானே தான் இல்லையே என்ற அகந்தை.

இதிலே நல்ல அரசு, வல்ல அரசு, என்ற பேச்சு எல்லாம் வேறு. போய் முதல்ல வேலைய பாருங்கப்பா பிறகு பேசுங்கள்.

Saturday, September 5, 2015

எச்சு ராசா அவிழ்த்துவிடும் புளுகு மூட்டை - உலக தமிழர்கள் இணக்கமாக வாழ முடியாது

இந்தியாவை விட்டு வெளியே வந்தாகிவிட்டது என்றால் வேண்டி கேட்க்காமலே இந்தி பேசும் மக்கள் ஆங்கிலத்தில் தான் உரையாடுகிறார்கள்.

இந்தி போசும் இந்தியர்களில் இரண்டு இரகம் உண்டு. ஒன்று இந்தி உனக்கு தெரியாதா, நீ இந்தியனா, இந்தியாவின் தேசிய மொழி அது தெரியாத நீ எல்லாம் ஒரு இந்தியன் என்று சொல்லுபவர்.

இரண்டாம் இரகம் வெள்ளைகாரன் பேசுவதை விட அழகாகவும் ஆழமாகவும் பேசுவதில் நாமே வல்லவர் என்று காட்டுபவர்களும் உண்டு.

இதிலே அழகாக ஆங்கிலம் பேசிக்காட்டுபவர்கள் தான் அதிகம். வெள்ளைகார உடை, நடை, அதே பார், பீர் மற்றும் ஆங்கிலம் என்று அதிகாலை வரை அசத்தும் இந்தி பேசும் இந்தியர்களை எச்சு ராசா பார்த்தது தான் உண்டா.

இந்தி பேசும் மக்களின் பழக்க வழக்கம் வேறு தமிழர்களின் பழக்க வழக்கங்கள் வேறு. என்ன தான் வாடா போடா என்று பழகினாலும், அவர்களிடம் புழக்கம் அவ்வளவு தான். தமிழர்களாக கூடுவதும், தமிழ்ச்சங்களில் சந்திபதும், தங்களுக்கு என்று ஒரு நெருங்கிய வட்டம் அமைத்து அவர்களுக்குள் பழகுவதே போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது.

தமிழருவி மணியன் ஒரு முறை மேடைகளில் சொன்னார், வெள்ளை காரனை போல் எவ்வளவு தான் அழகு ஆங்கிலம் பேசினாலும், அவர்கள் பயன்படுத்தும் உடை நறுமணம் போல் எல்லாவற்றையும் பயன்படுத்தினாலும் அவன் உங்களை அவர்களாக பார்ப்பதும் இல்லை சேர்த்துகொள்ளுவதும் இல்லை.

இது அப்பட்டமான உண்மை, அது இந்தி பேசும் இந்தியர்களுக்கும் பொருந்தும், இந்தி பேசுபவர் இந்தி பேசுபவர்கள் தான் தமிழர்கள் தமிழர்கள் தான்.

உண்மை இப்படி இருக்க.புரியாத இந்தியில் தான் உலகத்தாரோடு பேசுவேன் என்றும், அட எங்களுக்கு புரியல்லயா என்றால் 'திருநெல்வேலி மாணவி கிட்ட கூட ஆசிரியர் தினத்தன்று பேசிய மோடி இந்தியில தான் பேசினாரு, அந்த மாணவியோ அல்லது அதை எழுதிய பத்திரிக்கையோ புரியாத மொழியில் ஏன் பேசினார் என்று கேட்கவே இல்லையே' என்று அல்லவா சொல்கிறார்.

இத்தனைக்கும் அந்த மாணவிக்கு இந்தி தெரியாது, இருந்தும் இவர்களுக்கு சொல்லி புரியபோவது ஒன்றும் இல்லை என்று இருந்துவிட்டார் போலும் அந்த மாணவி.

Friday, September 4, 2015

ஐ நாவில் இந்தி ஆங்கிலமா - மோடி இனி வெளி நாடுகளில் இந்தியில் தான் பேச போகிறார் எப்பொழுதும்

ஐ நாவில் பேசுவது அங்கு இருக்கும் மக்களுக்கு புரிவதற்காக பேச வேண்டியது. அங்கே வரும் பல நாட்டு மக்களுக்கு புரிகின்ற வகையில் பேசவேண்டிய கோரிக்கைகளை எதற்காக இந்தியில் பேச வேண்டும். என்ன அதாணியும் அம்பாணியுமா கேட்டு குறை தீர்க்க போகிறார்கள். இதற்கு ஆகும் செலவை இந்தியாவே செலவு செய்யும் என்ற உறுதிமொழி வேறு.

 நாமும் தெரியாமல் தான் கேட்போம், ஐ நாவில் பேச போகின்ற நபருக்கு ஆங்கிலம் தெரியாதா இல்லை அங்கே கேட்க வரும் மக்களுக்கு இந்தி தெரியுமா, பின் ஏன் இந்த வீண் வேலை.

தென்னவர்களுக்கு தெரியாத இந்தியில் இந்தியாவில் மத்திய அரசு ஆட்சியில் இருப்பவர்கள் பேசுவதே புரிந்து கொள்ள பெரு நகரங்களை விட்டால் மற்ற இடங்களில் தடுமாற்றமே. அப்படி இருக்க இந்தியா சொல்வது உலகுக்கு புரியவே கூடாது என்ற எண்ணம் போலும்.

உங்களுக்கும் வேண்டாம் எங்களுக்கும் வேண்டாம் ஐ நாவில் ஆங்கிலத்தில் பேச வேண்டாம் என்றால் தமிழில் பேசுங்கள் உலகில் அதிக நாடுகளில் உள்ள மக்களுக்கு புரியும். தென்னகத்து மொழிகள் கூடாது என்ற காழ்ப்பு இருந்தால் இனி பிரன்சு மொழியில் ஐ நாவில் உரையாற்றுங்கள் நாங்களும் பிரன்சு படிக்கின்றோம் நீங்களும் படிப்பீர்கள்.

சந்தையை உலகமயம் ஆக்கியது போல் மொழியையும் உலகமயம் ஆக்கிவிட்டோம் என்று சொல்லிக்கொள்ளலாம்.

இல்லை நீங்கள் தமிழ் படித்து தமிழிலே ஐ நாவில் உரையாற்றினாலும் எங்களுக்கு மகிழ்ச்சி தான்.

அப்படி இந்திய மொழியில் தான் பேச வேண்டும் என்று சொன்னால் சங்கதத்தில் பேசுங்களேன் உலகின் முதல் மொழி இந்திய மொழிக்கு எல்லாம் தாய்.... அதை விடுத்து ஐ நாவில் போய் ஏன் இந்த வீண் வம்பு.

Wednesday, September 2, 2015

அன்புமணி போடப்போகும் முதல் கையெழுத்து இதில் தான் - மோடிக்கே சவால் விடப்போகிறார்

அன்புமணிக்கு இப்பவே முதல்வர் ஆகி என்ன என்ன எல்லாம் செய்யவேண்டும் என்று கை துருதுருவென இருக்கும் போல் இருக்கிறது.

பாவம் அவரும் கற்பனையிலே எத்தனை நாளைக்கு தான் காலம் தள்ளுவார். அதனால் அவர் ஆசைபடி முதல்வர் ஆனதும் என்ன என்ன செய்யலாம் என்று அவருக்கு நாம் மாதிரிகளை இப்பவே கொடுத்து பரிச்சையில் நிச்சயம் 90% மதிபெண்கள் எடுப்பார் என்று சொல்வோம்.

மதுவில் துவங்கிய அவரது பிரச்சாரம் அனேகமாக அனைத்துகட்சிகளும் அந்த மதுவிளக்கு உத்தரவை இப்பவே கையெழுத்து இட்டு தேதிமட்டும் இடாமல் கோட்டைக்கு போன உடனே தேதி போட்டு கொடுத்துவிடலாம் என்று அலைய வைத்த பெருமைக்கு உரிய நண்பர் அன்புமணி அடுத்த நடவடிக்கை என்ன என்று நாமே சொல்வோம்.

ஒரு வேளை அன்புமணி முதல்வர் ஆனதும் தமிழகத்து பட்டேல்கள் நாங்கள் பிரம்மாவின் புணித பாகத்தில் இருந்து பிறந்து வந்தவர்கள் எல்லாம் இல்லை சாதாரண மக்கள் போல் தாமும் என்று நேற்றைய கனவில் தான் எங்களுக்கு தெய்வம் வந்து சொன்னது அதனால் எங்களை அந்த சாதாரண மக்கள் பட்டியலில் சேர்த்து எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள் இல்லை என்றால் ஆட்சியை விட்டு போங்கள் என்று சொல்வார்கள்.

அப்படி எதிர்காலத்தில் தமிழகத்தில் சாதி சண்டைகள் தலையெடுக்காமல் இருக்க என்ன திட்டம் அன்புமணி வைத்துள்ளார் என்று சொல்லி அந்த உத்தரவில் கையெழுத்து போடட்டுமே யார் வேண்டாம் என்று சொன்னது.

குசராத்து பாணியில் பாரதம் என்று முழங்கும் மோடிக்கே தமிழக பாணியில் பாரதம் என்று சவால்விடலாமே, அதை விடுத்து செத்த பாம்பையே மீண்டும் அடிப்பான் ஏன் அன்புமணி...........

Tuesday, September 1, 2015

பட்டேல் பிரிவினர்கள் போராடுவது இதற்கு தான் வேறு எதுவும் இல்லை -- 1000 மடங்கு கூலி வயிற்றெரிச்சல்

தான் எவ்வளது தான் சம்பாதித்தாலும் அடுத்தவன் என்னைவிட எவ்வளவு பெற்றுள்ளான் என்று தான் உலகம் கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்று தெளிவாக காட்டுகிறது பட்டேல்களின் போராட்டம்.

உள்விவகாரங்களுக்குள் செல்லும் முன் முதலில் பட்டேல்களுக்கு வாழ்த்துகளையும் நன்றியினையும் சொல்வோம், எதற்கு இதற்கு தான்.

இது நாள் வரை பிரம்மாவின் புணிதமான பகுதியில் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்லியும் நம்பியும் மற்றவர்களையும் நம்பவேண்டும் என்றும் வற்புறுத்தியும் வந்தவர்கள் வரலாற்றிலே முதல் முறையாக அவர்களாகவே முன் வந்து நாங்கள் எல்லாம் அப்படி ஒன்றும் புண்ணிய பிறப்பு எல்லாம் இல்லை மற்றவர்கள் போல் சாதாரண மனிதர்கள் தான் என்று தைரியாமாக சொன்னதோடு இல்லாமல் எல்லா மாநிலத்தில் இருக்கும் பட்டேல்களையும் அப்படியே சொல்லவைப்போம் என்று சொன்னதற்கு தான் இந்த நன்றி. இவர்களை தொடர்ந்த அனைத்து மக்களும் தங்களது புணித வேடங்களை இவர்களை போல் துணிந்து களைவார்கள் என்று எதிர்பார்ப்போமாக.

 நமக்கு எல்லாம் நினைவில் இருக்கும் ஒரு 15 - 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ள வேலைக்காரியை வேலைக்கு அமைத்து இருப்பார்கள். காலை மாலை என்று இரண்டு வேளைகளும் அம்மா செய்யும் வேலைகளை அம்மாவுக்கு பதில் இவள் செய்து முடிப்பாள்.

இந்த வேலைகளுக்கு அந்த வேலைக்காரிக்கு மாதம் 25 அல்லது 40 ரூபாய்க்கள் கொடுப்பார்கள், அது இல்லாமல் காலையும் மாலையும் உணவுடன் காப்பி என்று சிலருக்கு கொடுப்பது உண்டு.

இன்றைக்கும் அதே வேலைக்காரிகள் கிடைக்கிறார்கள் ஆனால் மாதம் அவர்களுக்கு கொடுக்கும் தொகை எவ்வளவு 2000 முதல் 4000 வரை கொடுக்க வேண்டி இருக்கிறது. அதுமட்டும் இல்லாது, இந்த இந்த வேலைகள் மட்டும் தான் செய்வேன். இவ்வளவு நேரம் தான் செய்வேன். இது இது கொடுக்க வேண்டும் இல்லை என்றால் வர மாட்டேன் என்ற கட்டுபாடுகளை எல்லாம் சந்திக்க வேண்டி இருக்கிறது.

20 ஆண்டுகளில் கிட்ட தட்ட வேலைகாரிகளின் சம்பாத்தியம் 1000 மடங்கு அதிகரித்துவிட்டது. அப்படி கொட்டி கொடுக்க அந்த வேலைக்காரி என்ன பட்டப்படிப்பு ஏதாவது படித்துவிட்டு இந்த வேலைக்கு வருகிறாளா என்ன எதற்கு இவ்வளவு கொட்டிக்கொடுக்கனும் என்ற கேள்வி பிறப்பது இயல்பு.

ஆள்கிடைப்பது இல்லை என்ற ஒரு பெரும் காரணம் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றது மட்டுமே உண்மை. அப்போ இந்த வேலை செய்தவர்கள் எல்லாம் என்ன தான் ஆனார்கள் என்ற கேள்வியும் பிறக்கும்.

20 ஆண்டுக்கு முன் வீட்டு வேலை பார்த்த அந்த வேலைகாரிகள் தங்களது பிள்ளைகளும் இந்த மாதிரி ஆகிவிடக்கூடாது என்று தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்தார்கள். அவர்களும் படித்துவிட்டு இன்றைக்கு அலுவலகங்களில் வேலைகளில் இருக்கிறார்கள். மெல்ல மெல்ல அந்த வீட்டு வேலை தான் தெரியும் என்று இருந்த மக்கள் குறையவே அதிகவிலை கொடுத்து இருக்கும் மக்களை வேலைக்கு அமர்த்தும் செயல்கள் தொடங்கியது.

இப்போது பட்டேல் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு வேலைகாரிகள் அதே 25 - 40 ரூபாய்க்கு வேலைக்கு வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் பட்டேல்கள் செய்யும் வர்த்தகம் மட்டும் வானலாவி நிற்க வேண்டும் மற்ற மக்கள் இன்னமும் அவர்களுக்கு எடுபிடியாக அப்படியே இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இங்கு அனைவருக்கும் புரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் வேலைகாரி என்று குறிப்பிடேனே தவிர கேவலபடுத்தும் எண்ணத்தோடு அல்ல, யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிகவும்.

இங்கு சொன்ன வேலைகாரி என்றதை, விவசாய கூலி, கூலி வண்டி, ரிக்சா வண்டி, மூட்டை தூக்கும் தொழிளாலி என்று அடிமட்டத்தில் இருக்கும் அத்தனை கடுமையான வேலைகளை செய்பவர்கள் என்று மாற்றிகொண்டாலும் ஒரே கருத்து வருவதை அவதானிக்கமுடியும்.

பட்டேல்களுக்கு இந்த சமூக மாற்றம் முன்னேற்றம் பிடிக்கவில்லை. இப்படியே போனால் என்னை பல்லாகில் எவர் தூக்கிக்கொண்டு செல்வார்கள் என்ற கவலை அவர்களுக்கு. பல்லாக்கு தூக்க இன்றைக்கும் ஆள் இருக்கிறார்கள் ஆனால் அதே பழைய 25 - 40 ரூபாய்களுக்கு இல்லை ஒரு 1000 மடங்கு கொடுங்கள் தூக்குவார்கள், இந்த 1000ம் தான் அவர்களுக்கு பிரச்சனை வேறு ஒன்றும் அல்ல.........

இந்த 1000 மடங்கு வயிற்றெரிச்சலில் தங்கள் கட்டிக்காத்த பிரம்மாவின் புணிதமான இடத்து பிறப்பு என்றதை கூட இல்லை என்று சொல்லும் அளவுக்கு சென்று இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அவர்களது வயிற்று எரிச்சல் எந்த அளவுக்கு இருக்கும் என்று................

இது வெறும் டிரைலர் மட்டும் தான் முழுப்படம் இனிமே தான் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும், பார்ப்போம் பாசக அரசு இன்னமும் என்ன என்ன கோமாளிதனமாக செயல்களில் ஈடுபடுகிறது என்று பார்ப்போம்.

அந்த பக்கம் ஊழல்களை வெளியிட்டால் சாதி வெறியை ஊற்றி நாட்டையே எரித்துவிட பார்க்கிறது ஆளும் பாசக. வேண்டும் உங்களுக்கு. இந்த அரசுதான் வேண்டும் என்று தேர்ந்து எடுத்தவர்கள் தாமே நீங்கள் எல்லாம் அனுபவி ராசா அனுபவி.....

ஒரு வேளை கொமாரசாமி இங்கே தான் கணக்கு பாடம் படித்து இருப்பரோ


ஒரு வேளை கொமாரசாமி இங்கே தான் கணக்கு பாடம் படித்து இருப்பரோ

Friday, August 28, 2015

ஷீனா போரா கொலை வழக்கு - Flowers in the Attic (2014) திரைபடமும்

ஷீனா போரா கொலை வழக்கு

பொதுவாக ஆங்கிலப்படத்தை பார்த்து தமிழில் எடுத்துள்ளார்கள் என்று விமர்சனம் செய்வது வழக்கம். ஆனால் சென்ற ஆண்டு பார்த்த இந்த ஆங்கிலப்படத்தில் காட்டியது போல் ஒரு உண்மை நிகழ்வு இந்த கொலை வழக்கு.

என்ன கொலை மட்டும் தான் ஆங்கில படத்தில் இல்லை மற்ற அனைத்தும் அந்த படத்தில் உள்ளது. ஆங்கிலப்படத்தை பார்க்க துவங்கியதும் இப்படி ஒரு கொடூரமான படமா என்று இருந்தது.

ஒரு பணக்கார பெண்ணுக்கு தகாத காதல் (தனது சகோதர முறை ஆணை காதலித்து மணம் செய்வது), அதை தொடர்ந்து வீட்டை விட்டு விரட்டப்பட்டவளாக ஆகிறாள். அந்த பந்ததில் 4 குழந்தைகளுக்கு தாயாகிறாள். பின்னர் நிகழும் ஒரு விபத்தில் அவளது கணவம் இறக்கிறான்.

4 பிள்ளைகளை வைத்துக்கொண்டு வீட்டு வாடகைக்கூட கொடுக்க முடியாத நிலையில் தனது பெற்றோரை உதவிக்கு தொடர்புகொள்கிறாள். அவளது அம்மா மிகவும் இரகசியமாக இவளுக்கு உதவ முன் வருகிறாள் அதற்கு விலையாக இவளுக்கு நடந்த திருமணமோ அதில் பிறந்த 4 பிள்ளைகளை பற்றி வெளியே சொல்வே கூடாது என்று நிபந்தனைகளை விதிக்கிறாள்.

பிறகு பெற்றோருடன் ஒரு பெரிய பண்ணை வீட்டில் தங்குகிறார்கள், பிறகு தான் தொடங்குகிறது கொடுமைகள். வீட்டில் பாழடைந்த பொருட்களை அடுக்கி வைக்கும் ஆங்கிலத்தில் சொல்லும் அட்டிக்கு அந்த 4 குழந்தைகளை இருக்க சொல்லிவிட்டு இவள் மட்டும் வெளியில் சென்று வருவாள்.

வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் என் குழந்தைகள், உங்களை தவிர எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை, கொஞ்ச நாள் பொருங்கள் உங்களின் தாத்தா எனது பெயருக்கு சொத்துகளை எழுதும் வரை தான் நமது கவலைகள் எல்லாம். பிறகு நமக்கு என்று ஒரு வீடு என்று வசதியாக வாழ்வோம் என்று சொல்லி குழந்தைகளை அந்த பூட்டிய அறையில் விட்டு விட்டு செல்வாள்.

பிறகு சிறை அறைக்கே உணவுகளை கொண்டு வந்து கொடுப்பது போல் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வார்த்தை வார்த்தை ஐ லவ் யூ என்று சொல்லி செல்வாள்.

இப்படியே சில மாதங்கள் கழிய பிள்ளைகளும் வெளி உலகை கானாமல் எத்தனை காலம் இருப்பது என்று ஒருவருக்கும் பெரியாமல் கள்ள சாவி தயாரித்து இரகசியமாக வெளியே சென்று வருவார்கள். அப்படி ஒரு நாள் சென்று பிடிபட, பாட்டி பிடி பிடி என பிடித்துவிடுவார் அந்த பிள்ளைகளை.....

இப்படியே சில வருடங்களும் தொடரும் இந்த கொடுமைகள், ஒரு கட்டத்தில் அந்த இளம் தாய்க்கு மறுமணம் செய்ய தீர்மானிக்க, தொல்லையாக இருக்கும் குழந்தைகளை கொன்றுவிடுவது என்று உணவில் நச்சு கலந்து கொண்டு வந்து கொடுத்து செல்வார் மீண்டும் வார்த்தைக்கு வார்த்தை ஐ லவ் யூ என்று.

ஒரு கட்டத்தில் அன்னை செய்த அதே தவறை பிள்ளையும் செய்யும் கொடுமையும் இந்த படத்தில் உண்டு.......என்டா கதை இது என்று பார்த்தால் இன்றைக்கு உண்மை நிகழ்வு என்று இந்த செய்தி. தல சுத்துதப்பா.................

Thursday, August 27, 2015

விகடன் வெளியிட்டிருக்கும் தவறான தகவல் - 'டிப்ஸ்'ஸில் குறும்பு... பதிலடி கொடுத்த பணிப் பெண்!

'டிப்ஸ்'ஸில் குறும்பு... பதிலடி கொடுத்த பணிப் பெண்!

விகடனில் வெளியிட்டு இருப்பது போல் ஒரு மணி நேரத்து சம்பளம் $2.5 என்ற தகவல் கதையாத்தான் இருக்கும், வேண்டும் என்றால் $25.00 ஆக இருக்கலாம். மற்றபடி சொன்ன தகவல்கள் ஓர் அளவுக்கு உண்மையே.

நுகர்வோர்(Serving) வேலைகளில் இந்த இணாம் தான் அவர்களது வருமானத்தில் பெரும்பகுதி.

சமீபத்தில் செலவுக்கு கொடுக்க வேண்டிய தொகையைவிட அதிகமாக இணாம் கொடுக்க, வேண்டாம் என்று மறுத்தும் எனக்கு தெரியும் நுகர்வோர் வேலையில் இணாம் எவ்வளவு முக்கியம் என்றும், தானும் நுகர்வோர் வேலையில் தான் இருக்கிறேன் என்று சொல்லிச்சென்ற அந்த முகம் தெரியாத பெண்மணியை ஞாபகப்படுத்தியது இந்த கட்டுரை.....

பூனை குட்டி வெளியே வந்துவிட்டது - குசராத்து கலவரமும் - விசுவ இந்து பரிச்சித்து அறிக்கையும்

என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு பார்த்தோம், இன்றைக்கு விசுவ இந்து பரிச்சித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. குசராத்து கலவரத்தை காரணம் காட்டி நாட்டில் இருக்கும் இட ஒதுக்கீட்டை முழுவதுமாக ஒழித்து, பழையபடி மக்கள், வரும் வருமானத்தில் தீபாவளிக்கு ஒரு புத்தாடையும் பொங்களுக்கு ஒன்றும் என்றும் மற்றவைகள் எல்லாம் செலவழித்து அதே பழைய வாழ்க்கை முறைகு தள்ள துடிக்கின்றது போலும்.

இட ஒதுகீடு இல்லாத நிலையிலும், பொது நுழைவு தேர்வும் இல்லாத நிலையில் மக்களுக்கு தொழிற்படிப்புக்கான வாய்ப்புக்கள் என்ன என்ன விதமாக அர்ப்ப காரணங்களை காட்டி நிராகரிக்கபட்டது என்று எல்லாம் தனியாக எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை, அனைவரும் அறிந்த இரகசியம்....

இதிலே குசராத்தில் நடந்த கலவரம் மேலும் பெருவாரியாக மற்ற சில/பல மாநிலங்களிலும் பரவும் அபாயம் இருப்பதாக விஇப தெரிவிப்பதில் இருந்தே நீதிமன்றத்தில் இந்த வழக்கை எப்படி எடுத்துக்காட்டி தடைகளை பெற்றுவிடவும் திட்டம் இருக்கிறது என்று தெளிவாக தெரிகின்றது.

அதுவும் உச்ச நீதிமன்றதில் தடையை பெறவும் ஆயத்தம் ஆனதாகவும் தெரிகின்றது, அப்படி ஒரு ஆணையம் அமைக்கப்பெற்றால் குறைந்த காலத்தில் 20ரூ வருமானத்தில் ஒரு குடும்பமே நடத்தலாம் என்று திட்ட ஆணையம் வழங்கிய அறிக்கை போல் அல்லவா இந்த ஆணையத்தின் அறிக்கையும் இருக்கும்.

 நீதிமன்றத்தை பொருத்த அளவில் சாட்சிகளும் ஆவணங்களும் மட்டும் இருந்தால் போதும் மற்றபடி சரியா தவறா என்று எல்லாம் பார்க்கமாட்டார்கள், கொமாரசாமி விளக்கிய 20% போல்.

கல்வி வேலை வாய்ப்புகளை அழகாக அழித்திவிட்டு ஒரு பக்கம் எளிய மக்கள் மேலும் ஏழ்மைக்கு தள்ளிவிட்டு பணக்காரர்கள் மேலும் கல்லாகட்டும் காட்சி எல்லாம் பார்க்க இருக்கின்றோம்.

சுதந்திர இந்தியாவில் இது வரை கண்டுவந்த சமூக வளர்ச்சி இனி பாதாளம் நோக்கி பாயம் பேராபத்தில் இருக்கின்றோம். பாசக வந்தால் நாடு செழிக்கும் என்று சொன்னார்கள் நம்பினீர்கள் யாருக்கு செழிக்கும் என்று கேட்க்க தவறிவிட்டீர்களே........அனுபவி ராசா அனுபவி.................................

Wednesday, August 26, 2015

அடடா குசராத்தில் பாலாறும் தேனாறும் அல்லவா ஓடுவதாக நமக்கு சொன்னார்கள் - ஐயோ பாவம் இந்தியா


குசராத்து மாதிரியில் இந்தியாவை கட்டமைபோம் என்று பாசக மக்கள் சொல்லிவருவது இதை தானா. பெரும் வர்த்தகர்கள், நாட்டின் பொருளாதாரத்தையே வடிவமைப்பவர்கள். குசராத்து நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளதவி கொடுக்கும் போது வேண்டாம் என்று சொன்னவர்கள். தங்களது துயரை தாங்களே துடைத்துக்கொள்கின்றோம் என்று வெளி நாட்டுவாழ் இந்தியர்களின் பங்களிப்பால் விரைவில் மீண்டவர்கள் என்று எல்லாம் நமக்கு சொன்னார்கள்.

இப்போது பார்த்தால் எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகள் படிக்க வழியில்லாமல் போய்விடும் என்ற அச்சத்தில் வன்முறையாம்.

 நாமும் தெரியாமல் தான் கேட்போம், பள்ளியில் இடம் கிடைக்காதா, இல்லை கல்லூரியில் இடம் கிடைக்காதா. எங்கே இடம் கிடைக்காது என்று நினைத்துக்கொண்டு போராடுகிறார்கள் என்று சொன்னால் மக்களுக்கும் விளங்கும் .....சொல்வார்களா


நேற்று தான் அமித்து சா மோடியின் ஆட்சியில் எங்குமே வன்முறையோ ஊழலோ இல்லை என்று திருவாய் மலர்ந்தார்.........எங்கேயோ இடிக்கிறது போல தெரியுதே........அத்வானி தமிழகம் வந்து போன போது எல்லாம் குண்டுகள் வெடித்தது போல..........

Tuesday, August 25, 2015

"கேளடி கண்மணி" 25 ஆண்டுகள் - ரசிகனின் - கானா பிரபா

ஒவ்வோரு பாடலும் படமும், கதையும் கட்டுரைகளும் நமது வாழ்வில் நீங்காத ஒரு அங்கமாகவே மாறியுள்ளதை கவனிக்கமுடியும்.

குறிப்பாக இனிய நினைவுகளாவும், சோக நிகழ்வுகளாகவும் இருக்கலாம். ஒரு 5 நிமிடம் தான் அந்த பாடல்கள் என்றாலும் அப்படியே அந்த காலத்துக்கு நம்மை கையைபிடித்து அழைத்து சென்று திரும்பும் ஒரு அதிசயம்.

கானா அண்ணா குறிப்பிடுவதை போல் மிகுந்த பொருளாதார சிரமங்கள்கு ஊட கடந்துவந்த பாதையை கொண்டவர்களுக்கு எப்போதும் துணையாக இருந்துள்ளது வானொலி. ஒன்று இல்லை இரண்டு இல்லை என்ன என்ன அலைவரிசைகளில் எப்போது எல்லாம் பாட்டு வரும் என்று காத்து இருந்து கேட்ட காலம் எல்லாம் மலையேறி போனது என்னவோ சோகம் தான்.

இது என்ன மாயம் - திரைவிமர்சனம் - The Truman Show (1998)

முதலில் இது என்ன மாயம் குழுவினருக்கும் வாழ்த்துகளை தெரிவிப்போம்.

The Truman Show ஆங்கிலப்படத்தை பார்த்த பொழுது இப்படி ஒரு படம் தமிழில் வருமா என்று ஆச்சர்யமாக இருந்தது.

ஆங்கிலப்படத்தின் கதை இவ்வளவு தான், பிறந்தது முதல் ஒரு குழந்தையின் வாழ்க்கையை அப்படியே 24 மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்புகிறார்கள் ஒரு தொலைகாட்சியினர்.

அந்த தொக தொடரில் துருமென் தவிர மற்ற அனைவரும் நடிகர்கள், ஒவொரு காட்சியையும் சுவாரிசியமாக உள்ளதாக ஆக்க நிகழ்சியின் இயக்குனர் என்ன என்ன நடக்க வேண்டும் என்று வடிவமைத்து இயக்குவார்.

எல்லா பையன்களுக்கும் இருப்பது போல் துருமென்னுக்கு ஒரு நண்பன், வீடு, அம்மா, அப்பா, வேலைக்கு அலுவலகம் ஊர் என்று நிகழ்வாழ்வில் உள்ளது போலவே படபிடிப்பு தளம் அமைத்து இருப்பார்கள்.

துருமென் என்ன சாப்பிடுகிறான், என்ன படுக்கையில் படுக்கிறான் என்று ஒவ்வொரு பொருளும் விளம்பரமாக வருவதும் அதை பார்த்து மக்கள் வாங்கி வைத்து அப்படியே செய்து பார்ப்பதும், துருமெனுடனான பேச்சுககளுக்கு இடை இடையே விளம்பர வசனங்கள் பேசுவது என்று படம் அழகாக நகரும்.

 நிகழ்ச்சியின் இயக்குனர் எழுதிய துருமெனின் காதலியின் மேல் ஈர்பு வராமல் வேறு ஒரு நடிகையை பார்த்ததும் மையல் கொள்வதும், அவளை இரகசியமாக தேடுவது கண்டு அவளை தொடரைவிட்டு நீக்குவதும், பிறகு அவளை தேடி கண்டுபிடிப்பதும் என்று ஒரு ஓட்டமும்.

அவளை உலகின் வேறு முலைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள் என்று தெரிந்துக்கொண்டு கடலில் ஒரு சிறிய படகில் செல்ல முற்படுவதும் என்று அழகான கதையும். ஏதோ நடக்கிறது என்று கண்டுபிடித்துவிட்ட துருமெனுக்கு என்ன என்று தெரிந்து கொள்ள முனைவதும். அதுவரையில் மற்ற கதாபாத்திரங்கள் வசனங்கள் மட்டுமே பேசியவர்கள்  உண்மையிலே நடப்பது போல் நடத்துவதாக ஓடுவது ஆடுவதும் ஆக ஒரு விருவிருப்பான திரைகதையாகவும் அமைத்து இருப்பார்கள்.

தமிழில் இந்த நுட்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு அழகாக வேறு ஒரு கதையும் திரைகதையும் அமைத்து எடுத்து இருக்கிறார்கள். நன்றாகவும் வந்து இருக்கிறது, வாழ்த்துக்கள்.

Friday, August 21, 2015

7000 மாணவர்கள் சேர்ந்து அதகளபடுத்திய ஊர் - sororityயும் - fraternityயும்

உலக அளவில் 10வது தரத்தில் இருக்கும் ஒரு அமெரிக்க பல்கலைகழகம் இருக்கும் ஊரில் 2015 - 2016 ஆம் ஆண்டுக்கான கல்லூரி கல்வியாண்டு 08/20/2015ல் துவங்கியது. வகுப்புக்கள் 08/24/2015ல் இருந்து துவங்குகிறது. புதிதாக கல்லூரிக்கு வந்து இருக்கும் மாணவர்களை அவர்களது துறைகளை சேர்ந்த மாணவர்கள் அறிமுகபடுத்தும் விழா நேற்று நடந்தது.

இந்த 7000 மாணவர்களில் சுமார் 3000 மாணவர்கள் இந்த அறிமுக உபச்சாரவிழாகளில் கலந்துகொண்டனர்.

துறைவாரியாகவும், குழுவாரியாகவும் நடந்த உபசரிப்பு என்றதால், ஊரின் ஒரு பகுதியில் பல்வேறு இடங்களாக பிரித்து கொண்டாடினார்கள்.

மாலை 5:00க்கு துவங்கிய கொண்டாட்டங்கள் இரவி 2:00 வரை நீடித்தது. 2:00க்கு மேல் வீடுகளில் கொண்டாடியவர்கள் விடிய விடிய தொடர்ந்தார்கள்.

கொண்டாடங்கள் கொண்ட தெருக்களில் மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஒரு கட்டத்தில் கட்டுக்குள் வராத கூட்டங்களை காவலர்கள் புகுந்து வீட்டு போக சொல்லி அனுப்பிக்கொண்டு இருந்தார்கள்.

ஒரு சில இடங்களில் சிறு சிறு மோதல்களும் இடம் பெற்றது. இருந்தும் காவலர்கள் அழைக்கப்படவில்லை என்றதை நினைவில் கொள்ள வேண்டும்.

காவலர்களை பார்த்த மாணவர் கூட்டம் அமுக்கியே வாசித்தது. காரணம் புதிதாக ஒன்றும் சொல்ல தேவை இல்லை அவர்கள் அனேக மக்கள் நிலத்திலேயே மிதந்துக்கொண்டு இருந்தனர்.

இந்த கொண்டாட்டங்களுக்கு அழைப்பு விடுத்து இருந்த அமைப்பினர்கள், கொண்டாட்டங்கள் முடித்த கையோடு மக்களை வீட்டுக்கு வழியனுப்பிவைத்தனர்.

இத்தனை அதிக அளவில் மாணவர்கள் கூடியும் அதுவும் சரக்கு உபசரிப்பாக இருந்தும் காவலர்களை குவிக்காமலும் அடிதடியும் இல்லாமலும் சுமூகமாக நடந்தேரியதை பார்க்கும் போது மாணவர்களின் கட்டுப்பாடும், அதைவிட அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் சுதந்திரமும் நம்மை பயமுடுத்தவே செய்கின்றது.

ஒரு வேளை இப்படி ஒரு உபசரிப்பு இந்தியாவில் நடந்து இருந்தால் அனேகமாக அடிதடி கலாட்டாவாக முடிந்து தான் இருக்கும்........ அதுவும் புதிய பழைய மாணவர்கள் கூடும் இடம் என்றால்.......

மோடியின் அரபுநாடு பயணத்தினால் இந்தியாவிற்கு என்ன கிடைக்கும்




அமெரிக்காவோ, பிரிடனோ இல்லை பிரான்சோ மோடி சென்று இருந்தால் இந்தியாவிற்கு வேலை, தொழில் நுட்ப உதவி கிடைக்கும் என்று சொல்லாம். இல்லை ஆப்ரிக்கா, இலங்கை, மொரீசியசு போன்ற நாடுகளுக்கு சென்று வந்தார் என்றால் இந்தியாவால் அந்த நாடுகளின் மேம்பாட்டு திட்டங்களுக்கு பண உதவி செய்கின்றேன் என்று அதானிக்கும் அம்பானிக்கும் அந்த திட்ட பணத்தை கொடுப்பார்கள் என்று சொல்லாம்.

இந்த இரண்டு வகையிலும் அடங்காத அரபு நாடுகளுக்கு மோடி ஏன் செல்ல வேண்டும்.

அரபு நாடுகளில் நடக்கும் அலுவலக வேலைகளை இந்தியாவில் இருந்த படியே நீங்கள் தூங்கி எழுந்திரிக்கும் போது தயாராக இருக்கும் என்று தகவல் தொழில் நுட்ப வேலையை இந்தியாவிற்கு கொடுங்கள் என்று கேட்கமுடியுமா.

இல்லை அரபு நாடுகள் அணுமின் நுட்பத்திலோ அல்லது இராக்கெட்டு நுட்பதிலோ அல்லது நாட்டின் பாதுகாப்பு திட்டங்களிலோ அதி நவீண நுட்பங்களை வைத்துள்ளதால் இந்தியாவிற்கு அந்த திட்டங்களில் தொழில் நுட்ப உதவிகளை வழங்கும் படி கேட்டிருப்பாரா...

அல்லது அரபு நாட்டின் பிரதான தொழிலான எண்ணை துரப்பனங்களில் இந்தியா உதவும் என்று கேட்டு போனாரா.........

இப்படி எந்தவிதத்திலும் இந்தியாவின் வளர்ச்சிக்கோ அல்லது பாதுகாப்பிற்கோ எந்த பயனும் கொடுக்க முடியாத அரபு நாடுகளுக்கு மோடி அரசு முறை பயணம் போகவேண்டிய அவசியம் என்ன என்று பாசகவோ அல்லது மோடியை தாங்கி பிடிக்கும் பதிவர்களாவது தெளிவுபடுத்துவார்களா.

இதிலே சில அரபு நண்பர்கள் மோடி எப்படி இந்திய பொருளாதாரத்தை குசராத்து பாணியில் தூக்கி நிறுத்துகிறார் பாருங்கள் என்று எழுதி தீர்த்து இருக்கிறார்கள்.........

மோடியின் அரபு பயணம் மேலே உள்ள படத்தில் காட்டுவது போல் அல்லவா இருக்கிறது.

Tuesday, August 18, 2015

சீனா உண்மையில் ஒரு பொதுவுடமை நாடு தானா - இந்தியா உண்மையில் ஒரு ஏழை நாடா

மும்பையை சேர்ந்த ஒரு பெண்ணும் அவரது தாயாரையும் பார்க்க நேர்ந்தது. எங்கே இவ்வளவு தூரம் என்று விசாரித்ததில் அந்த பெண்ணிற்கு அமெரிக்க பல்கலையில் படிக்க இடம் கிடைத்து இருப்பதாகவும், அந்த பெண்ணின் தாயார் அவளுடன் தங்கி எல்லாம் செய்துகொடுத்துவிட்டு பிறகு ஊர் திரும்ப இருப்பதாகவும் தெரிவித்தனர்.

பெருமைக்கு உரிய செய்தி என்றாலும் ஆச்சரியத்திற்கும் உரிய செய்தியாக இருந்தது. ஒருவரை ஊருக்கு விமானம் ஏற்றி அனுப்பவே திணறிய காலம் போய் இப்போது அமெரிக்க வரை வந்து வீடுபிடித்து கொடுத்துவிட்டு செல்லும் ஆற்றல் பெற்ற பெற்றோராக இருக்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது.

பெண்களை படிக்க வைக்கவேண்டுமா என்ற காலம் எல்லாம் போய் என்ன என்ன படிக்க முடியுமோ அவ்வளவும் படி என்று அவளை கொண்டாடிய இந்த தாய் தந்தையரை வாழ்த்துவோம்.

இதே பாணியில் ஒரு சீன குடும்பத்தையும் பார்க்க நேர்ந்தது. இந்தியாவில் பணக்காரர்கள் இருக்கிறார்கள். அல்லது தங்களது பணத்தை எல்லாம் பிள்ளைகளுக்காகவே செலவிடுவோம் என்ற தியாக பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்றதாலும் இது சாத்தியம் என்று வைத்துக்கொண்டாலும்.

சீனர்கள் எப்படி அதுவும் ஒரு பொதுவுடமை கொள்கையில் வாழும் நாட்டில் தனியுடமைகள் ஏதும் கூடாது என்று இருக்கும் நாட்டில் ஏகாதிபத்திய அமெரிக்கா என்று மூச்சுக்கு மூச்சு சொல்லும் நாட்டில் இருந்து பட்டபடிப்பில் சேர பெற்றோர் சகிதமாக வந்து இறங்கி இருப்பதை நம்பவே முடியவில்லை.

அமெரிக்க வாழ் இந்தியர்களால் இந்தியாவுக்கு ஒரு பயனும் இல்லை - மோடி




2.23ல் இருந்து கவனிக்கவும் மோடி சொன்னதாக சேகர் என்ன சொல்கிறார் என்று. அன்று ஒரு பயனும் இல்லை என்று சொன்னவர் தான் இன்று இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என்று கையேந்திக்கொண்டு நாடு நாடாக அலைகிறார். அதுவும் அபுதாபியில் போன பாசக அரசு விடுத்த அழைப்பை ஏற்று முதலீடு செய்ததை நினைவு கூர்ந்ததாகவும் இன்றைக்கு செய்திகள் வருகின்றது.

 நேரத்திற்கு தகுந்தது போல் ஒரு பேச்சு நித்தமும்...........

Monday, August 17, 2015

இன்னும் ஒரு மாட்டுகறி நாட்டிடம் கையேந்தி நிற்கிறது மோடி அரசு - அபுதாபியில் மோடி கையேந்தி நிற்கும் காட்சி

இந்தியாவில் இருக்கும் சாதாரண மக்களை அதை சாப்பிடாதே இதை சாப்பிடாதே என்று முழங்கும் பாசக திரும்ப திரும்ப மாடுகறி உண்ணும் மக்களிடமே கையேந்தி நிற்பது எதற்கு. அப்போ மாட்டுகறி இல்லை பிரச்சனை இந்தியாவில் அதை உண்ணும் மக்கள் தான் பிரச்சனை பாசகவிற்கு. அதை நேரடியாக சொல்லாமல் அது இது என்று சொல்கிறார்கள்.
மாட்டுகறி உண்ணும் மக்களால் தயாரிக்கபட்ட ஆப்பில் அலைபேசியில் மாட்டுகறி சாப்பிடும் மக்களுடன் படம் பிடித்துகொள்வது எத்தனை மகிழ்ச்சி மோடிக்கு பாருங்கள்.

Saturday, August 15, 2015

ஆட்களை கொலை செய்வது மிகவும் புணிதமான செயல் - குருமூர்த்தி சுப்பிரமணிசாமி

பழிவாங்கும் நடவடிக்கையா? அதிகார துஷ்பிரயோகமா?

சங்கர் ராமன் கொலை வழக்கை பற்றிய செய்திகளில் கருத்து தெரிவிக்கும் போது இதே குருமூர்த்தி நாட்டின் பாதுகப்புக்கும் சமூக பாதுகாப்புக்கும் அச்சுருத்தலாக இருக்கிறது இந்த கொலைகள் என்று சொல்லாமல். சங்கர் ராமன் கொலையே செய்யப்படவில்லை என்றும், அப்படியே கொலை செய்யப்பட்டு இருந்தால் அது அவரது பாவத்திற்கு கிடைத்த பலனாக இருக்கும் என்று சொன்னவர், மாறனின் வழக்கை நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்பட்ட அச்சுருத்தலாக கொண்டு விசாரிக்க வேண்டும் என்று தினமணியில் எழுதுகிறார்.

மாறன் தவறு செய்தாரா இல்லையா என்றது நீதிமன்றமும் மபுது (CBI) பார்த்துகொள்ள வேண்டியவைகள். ஆனால் கொலை அதுவும் கோவிலில் வைத்து துடி துடிக்க பட்ட பகலில் நிறைய சாட்சிகளை வைத்துக்கொண்டே நிகழ்த்தப்பட்ட வழக்கு விசாரிக்க தகுதியானவை அல்ல என்று இந்தியாவின் அட்டர்னி செனரல் சொல்லிவிட்டதால் மேல் முறையீடு செய்ய தகுதியில்லா வழக்கு என்று சப்பை கட்டு கட்டியவர்கள் பண மோசடி வழக்கை  நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுருத்தல் என்று திசை திருப்புகிறார்.

ஒரு வழக்கை எப்படி நடத்த வேண்டும் என்று இந்தியாவின் அட்டர்னி செனரலுக்கு வகுப்பு எடுக்கிறார்.

பாவம் அந்த அட்டர்னி செனரல், நாளை இந்த செய்திகளை படித்துவிட்டு அவரது வீட்டார்கள் அவரை பார்த்து அசடு என்று கேளி போசபோகிறார்கள்.

ஆமாம் பாசக ஆட்சியில் பாசகவிற்கு வேண்டியவர் அல்லவா அட்டர்னி செனரலாக நியமிக்கபட்டு இருப்பார். பாவம் இவாளுக்கு வேண்டியவர் இல்லை போலும் அது தான் இப்படி சினிமா வசனங்கள் எல்லாம் எழுதி அவரை நையாண்டி செய்கிறார்.

குருமூர்த்தி வகையராக்களுக்கு நீதிமன்ற நடைமுறை ஒன்றை சொல்லிக்கொடுப்போம்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது மாறன் மபுது இல்லை, ஆகவே வழக்கை முன்னடத்தும் உரிமை மாறனின் வக்கீலுக்குத்தான் உண்டு. அதனால் அவர் தொடும் விவகாரங்களை தவிர வேறு ஒன்றும் நீதிமன்றத்தில் அந்த வழக்கின் வாதத்தில் கொண்டு வர முடியாது என்ற அடிப்படை கூட தெரியாத குருமூர்த்தி பாவம் பக்கம் பக்கமாக சினிமா வசனம் எழுதி மக்களின் மனதில் இடம் பிடிக்க பார்க்கிறார்.

பேசாமல் போய், அடித்தால் எதிர்த்து நிக்க முடியாதவர்களாக சென்று கொலை செய்து அதை புணிதமான செயல் என்று கட்டுரை எழுதுங்கள் பிரச்சாரங்கள் செய்யுங்கள். பாவம் ஏன் இந்த வீண் வம்பு உங்களுக்கு.

அப்போ சுப்பிரமணி சாமி பார்த்துவந்த இந்த துப்பரிவாளர் வேலை குருமூர்த்தியிடம் கொடுத்துவிட்டார்கள் போலும்.........

Friday, August 14, 2015

தமிழகத்தில் அடுத்த ஆட்சி பாசக தான் -- பாவம் தமிழக மக்கள் -- மோடி சந்திபின் இரகசியம்

இது வரையில் என்ன என்னவோ செய்து பார்த்தும் திராவிட கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வரும் வாய்ப்போ இல்லாத நிலையில் பாசகவின் செயல்கள் நமக்கு தெளிவுபடுத்துவது என்ன.

தமிழருவி மணியன் சொன்னது போல் திமுக இனி ஆட்சியில் அமர்வது சாத்தியம் இல்லாத ஒன்று தான். ஆனால் செயலலிதா அப்படி இல்லை குறைஞ்சது திமுக வரக்கூடாது என்றதுக்காவது அவரை மக்கள் தேர்ந்து எடுக்கும் சூழ்நிலை தான் கடந்த 10 ஆண்டுகளாக நிலவி வருகின்றது.

ஆக செயலலிதாவை தேர்தலில் இல்லாமல் செய்துவிட்டாலே போதும் என்ற ஒரே நோக்கில் அவரது சிறை தண்டனையை உறுதிபடுத்தும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள இந்த வேளையில் கொஞ்சம் கூட அவசியமே இல்லாத சூழலில் மோடி தமிழகம் வந்து போகவேண்டிய அவசியம் என்னவாக இருக்கும்.

செயலலிதா மேல் தொடுக்கப்பட்ட வழக்கு நீர்த்துப்போகவும் அப்படி உச்ச நீதிமன்றத்தில் நீர்த்து போனால் இனியும் வரப்போகும் வழக்குகளையும் இந்த வழக்கின் அடிப்படையில் நீர்த்து போகவும் செய்யும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், இந்த வழக்கை எப்படி முடித்தால் சரியாக இருக்கும் என்ற ஆலோசனையில் நீதித்துறையும் அரசியல் துறையும் நீண்ட ஆய்வுக்கு பிறகு இப்படி முத்தால் தான் நாட்டிற்கு நல்லது என்று ஒரு வரைவு தயாரித்து ஆலோசனைக்கு அனுப்பி இருக்கும். அதை தெரிந்து கொண்ட பாசக இது தான் சமயம் என்று தனது வெற்றியை இதன் மூலம் நிறவேற்றும் எண்ணதின் வெளிபாடே மோடி செயலலிதா சந்திப்பு.

டான்சி வழக்கில் செயலலிதாவை விடுவித்ததை போலே இந்த வழக்கிலும் ஒரு சப்பை கட்டைகட்டி கௌரவமாக விடுவிக்கப்படுவார். அப்படி விடுவிக்கும் கால் தனது உடல் நிலையை காரணம் காட்டி செயலலிதா அமெரிக்காவிற்கோ அல்லது மற்ற ஒரு பாதுகாப்பான நாட்டிற்கோ சிகிச்சைக்கு என்று சென்று அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவார்.

இதன் இடையில் மாறன் சகோதரர்களின் சொத்தை முடக்கியது போல் திமுகவின் சொத்துகளையும் முடக்கியும் கலைஞரை தனிமைபடுத்தியும் விடுவார்கள். இந்த தேர்தலில் திமுக வர வாய்பே இல்லை என்றாலும் செயலலிதா இல்லாத வெற்று இடம் இவருக்கு கிடைகாமல் இருக்க என்ன என்ன செய்யவேண்டுமோ அவ்வளவு நடக்கும்.

பாராளுமன்ற தேர்தலில் அள்ளி வீசிய வசீகர பேச்சுகளை போல், தமிழகத்தில் அனைத்து வீட்டு பிள்ளைகளில் ஒருவருக்காவது அரசு வேலை என்று தனது தேர்தல் அறிக்கையை துவங்குவார்கள். எப்படி இந்தியாவின் ஒவ்வொருவருக்கும் 15 இலட்ட ரூபாயை கொண்டுவந்து உங்களது வங்கி கணக்கில் போடுவோம் என்று சொன்னார்களோ அதே போல் சொல்வார்கள்.

அந்த பிள்ளைகள் வேலை கிடைக்கும் என்று நம்புவார்களோ இல்லையோ அவர்களை பெற்று படிக்க வைத்துவிட்டு நிற்கும் பெற்றோர்கள் அரசு வேலை கிடைத்தால் கூட போதும் என்று நினைத்து பாசகவின் ஆசை வார்த்தைகளை நம்பி அவர்களுக்கு வாக்கை அள்ளி கொட்டுவார்கள்.

பள்ளிபடிப்பை முடித்து தொழிற்கல்வி போகமுடியாமல் தவிக்கும் பிள்ளைகளும் இந்த அரசு வேலை கிடைக்கும் என்றும் நம்பி பாசகக்கு வாக்கு சேகரிப்பார்கள்.

இது மட்டும் இல்லாது பாசக வந்தால் நாட்டில் புண்ணியம் பெருகும் என்று மதத்தலைவர்களை விட்டு சொல்ல சொல்வார்கள்.

தமிழக மக்களின் நல வாழ்வு மட்டுமே எங்களின் இலட்சியம் என்று வடகத்தியர்கள் அனைவரும் "வணக்கம் அனுபான வாக்கால மக்குலே" என்று அழகு தமிழில் பேசி வலம் வருவார்கள்.

இந்த வித்தைகளை எல்லாம் கண்டு களித்து இருக்கும் சாதிகட்சிகளும், இது வரையில் மக்களும் திராவிட கட்சிகளும் ஒதுக்கி வைத்து இருந்த சின்ன சின்ன தலைவர்களும் இந்த "வனுக்கம் தமிலக மக்குலே" மக்களுக்கு மேடைகளில் நின்று மொழி பெயர்த்து பூரித்து போவார்கள்.

இந்த மாயைகளின் முடிவில் தமிழகத்தில் 2016ல் பாசக ஆட்சி மலரும். ஆட்சிக்கு வந்ததும் பாசக எல்லா இடங்களிலும் தங்களுக்கு வேண்டியவர்களை நிறுவுவார்கள். அப்படி வேலைக்கு வரும் ஆட்கள் குறைந்தது 30, 40 ஆண்டுகளாவது வேலையில் இருப்பார்கள். அந்த 30, 40 ஆண்டும் பாசக ஆட்சியாகத்தான் இருக்கும் தமிழகத்தில்.

இந்த நிலையை எட்டி தான் தமிழகம் எப்படி ஒரு நல்ல நிலையில் இருந்தது என்று தெரிந்து கொள்ளும். இப்போது சொல்வதை போல் காமராசர் ஆட்சி என்று சொல்வதை போல் அன்றைக்கு திராவிட ஆட்சி என்று மக்கள் தெருவுக்கு தெரு சொல்லி பெருமிதம் அடைவார்கள்.

பாசகவின் தமிழக ஆட்சியில் இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசமாத்தான் இருக்கும் என்றதில் சந்தேகம் ஏதும் இல்லை.

தனது பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும் என்று நம்பி வாக்களித்த அந்த பேற்றோர்கள் கடைசிவரை கட்சி அலுவலுகத்துக்கும் வேலை வாய்பு அலுவகத்துகும் அலைவதை வைத்து நிழல்கள் போல் இன்னமும் அழுத்தமாக படங்கள் நிறைய வரும். தமிழ்கம் திருத்தவே முடியாத புண்ணிய பூமியாகி காவியுடையணிந்து அரிவாளுடன் ஓடும் காட்சிகள் எல்லாம் அன்றாடம் நடக்கும் காட்சிகளாகிவிடும்.

மறுபடியும் அந்த சாதாரண மனிதர்கள் சிந்திப்பார்கள் என்ன செய்து இவைகளை மாற்றலாம் என்று, அப்போது பாசகவினர் திமிராக சொல்வார்கள் இங்க எல்லாம் இப்படி தான் பிடிக்கவில்லை என்றால் பாக்கித்தானுக்கு போ என்று சொல்வார்கள் தேசபக்தர்களாக.......

Thursday, August 13, 2015

அப்போ சுசுமா சுவராச்சு லலித்மோடிக்கிட்ட பணம் வாங்கிக்கொண்டு மனிதாபினாம உதவி உதவியது உண்மை

 நேற்றைக்கு நாடாளுமன்ற விவாதத்தில் லலித்மோடியிடம் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்ற கேள்விக்கு மறுக்காமல் சோனியா குத்ரோச்சிகிட்ட வாங்கின பணம் எவ்வளவுன்னு சொன்னதின் மூலம் உதவியை வியாபாரமாக சுசுமா செய்து பணம் பார்த்து இருக்கிறார் என்று ஒத்துக்கொண்டு விட்டார். இனிமேல் கேட்டால் நான் எப்போது அப்படி சொன்னேன் என்று நீதிமன்றதில் பிறழ் சாட்சிகள் பிறழ்வது போல் பேசுவார்.

இதிலே லலித்மோடி ஒன்றும் ஓடி ஒளிந்துக்கொள்ளவில்லை என்ற சான்றிதழ் வேறு.

அது சரி காந்தியை கொலை செய்த கட்சியினர் இடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்....

மனிதாபிமான உதவி என்ற என்ன அழகான அலங்கார வார்த்தைகள் இந்த உதவி வியாபாரத்திற்கு. ஆக பணமும் பதவியும் பட்டமும் சாதியும் இருந்தால் பாசக ஆட்சியில் எது வேண்டும் என்றாலும் விலைக்கு வாங்கலாம்.

இப்படி தான் பாசக ஆட்சி இருக்கும் என்று அன்றைக்கு நாங்கள் சொல்லும் போது இல்லை இல்லை இல்லவே இல்லை என்று சொன்னவர்கள் எல்லாம் ஏன் மௌனித்து இருக்கிறார்கள் இன்று, ஏமாந்து போனோம் என்ற ஏமாற்றம் இல்லாமல் வேறு என்னவாக இருக்கும்.

Wednesday, August 12, 2015

அன்புமணி இராமதாசு உடனடியாக கட்டப்போகும் இலவச மருந்து ஆலைகள்

கடந்த சில மாதங்களாக தமிழகத்தை தூக்கி நிறுத்த தன்னால் மட்டும் தான் முடியும் என்றும், தன்னை தவிர வேறு ஒருவராலும் இதை செய்யமுடியாது என்றும் சொல்லிக்கொண்டு வரும் அன்புமணி அதன் தொடர்ச்சியாக இந்த செயலை செய்துவிட்டு ஓட்டு கேட்க்க வர இருக்கிறார்.

தான் வகித்த மருத்துவ நல துறையில் இந்தியாவின் தேவைகளையும் அத்தியாவசியங்களையும் பூர்த்தி செய்வதற்காகத்தான் அரசு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை மூடியதாகவும் அப்படி மூடிய மருந்து ஆலைகளுக்கு பதிலாக வேறு ஒரு ஆலையை சென்னையில் கட்ட முற்பட்டதாகவும். ஆனால அந்த ஆலை முடிக்கப்பட இல்லாத நிலையில்.

தான் இனி மைய அரசு அமைச்சராக விருப்பம் இல்லாமல் இருப்பதால் ஆலையும் வேண்டும் மக்களும் பயனடைய வேண்டும் ஆகையால் இலவச மருந்த ஆலைகள் 5 அல்லது 6 ஆலைகளை தமிழகத்தில் துவங்கி இலவசமாக மருத்துகளை தயாரித்து மக்களுக்கு கொடுக்க இருக்கிறார்.

ஏன் இப்படி இலவசமாக மருந்து தயாரிக்கும் ஆலையை நிறுவ இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்க்க நினைக்கும் மக்களுக்கு அன்புமணியும் அவரது கட்சியினரும் சொல்லும் செய்தி இதுதான்.

அரசை அது செய் இது செய் என்று எத்தனை காலத்திற்கு தான் மக்கள் சார்பாக நாங்கள் வேண்டி நிற்பது. எப்படியும் எங்களது பணத்தை வாரி இறைத்து ஆட்சியை பிடித்து பிறகு அரசு செலவில் இந்த ஆலைகளை கட்டி அதற்கு பிறகு தயாரிப்பில் வரும் மருந்துகளை மக்களுக்கு கொடுக்க எப்படியும் வெகுகாலம் பிடிக்கும். ஆகையால் தேர்தலுக்கு நாங்கள் வாரி இறைக்க இருக்கும் பணத்தை மக்களுக்காக இப்பவே இன்னமும் 2 மாதங்களுகுள் மருந்தை தயாரித்து கொடுத்துவிட்டு தான் ஓட்டே கேட்க போகின்றோம்.

அப்படி வரும் அந்த ஆலைகளில் நானோ எனது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கோ எந்த பதவியும் எடுத்துக்கொள்ள போவது இல்லை என்ற உறுதிமொழியை என்னால் கட்டாயம் கொடுக்கமுடியும் என்றும் சொல்லி இருக்கிறார். அது மட்டும் அல்ல இந்த மருந்து ஆலைகளுக்கும் பாமாகவுக்கும், வன்னியர் அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற உறுதிமொழியையும் கூடவே தெரிவித்து இருக்கிறார்.

இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது என்று கேட்டதற்கு, மருத்துவ துறையில் அமைச்சராக இருக்கும் போது மக்களின் மருந்து தேவை எவ்வளது என்று தனது துறை கணக்கிட்டு அளித்த அறிகையின் அளவு மிகவும் பெரியது என்றும் அதிலே தமிழகத்தில் உடனடி மருந்து தேவைகள் எத்தனை கோடி எனவும் தெளிவாக தெரியவர இந்த முடிவு எடுத்தாக தெரிவிக்கின்றார்.

இங்கே நாம் ஒரு செய்தியை உற்று நோக்க வேண்டும் அதிமுகவும் திமுகவும் மதுவை தயாரித்து தமிழகத்தை அழித்துவந்த நிலையில் தமிழகத்தை மட்டும் அல்ல உலகையே தனது மருந்து தயாரிப்பால் காப்பாற்றுவது மட்டும் அல்ல இலட்ச கணக்கில் தமிழக இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் உத்திரவாதத்தையும் அன்புமணி உறுதிபடுத்துகிறார்.

உங்களுக்கு இது சம்பந்தமாக சந்தேகம் இருந்தால் அவரை நேரிலோ அல்லது எந்த விதத்தில் தொடர்பு கொண்டாலோ அவராகவே விளக்கம் அளிக்க ஆவலாக உள்ளார்.

Friday, August 7, 2015

Bajrangi Bhaijaan - திரை விமர்சனம் - The Terminal (2004)

The Terminal (2004)

தற்பொழுது அதிகம் பேசப்படும் படமாக ஓடிக்கொண்டு இருக்கிறது இந்த இந்தி படம்.

உண்மை சம்பவமாக ஒரு சிறுமி பாக்கிட்த்தானத்தில் அவதி படுவதாகவும், இந்தி படத்தில் வருவதை போல் அவளை அவளது பெற்றோருடன் சேர்க்க இந்திய வெளியுரவு துறை முயலுவதாகவும் கூட செய்தி அடிப்படுகிறது.

சரி விமர்சனத்திற்கு வருவோம்.

ஆங்கிலப்படத்தின் கதை இது தான்,கிரகோசியா நாட்டில் இருந்து அமெரிக்க நியூயார்க் நகருக்கு வந்து இறங்கும் சமயத்தில் புரட்சி வெடிக்கிறது கிரகோசியாவில். ஆகவே நாயகனின் கடவு சீட்டு செல்லாதாகவும் அறிவிக்கப்பட்டு அமெரிக்காவில் இறங்கி வெளியே செல்ல முடியாதபடியும் தாயகம் திரும்ப முடியாமலும் அங்கேயே மாட்டிக்கொள்கிறார்.

ஆங்கிலம் தெரியாத விக்டருக்கு விமான அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள் என்று புரியவும் இல்லை, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் கற்றுக்கொள்கிறார். 

தினமும் குடியேற்ற அதிகாரிகளை சந்திப்பதும் அமெரிக்கவிற்குள் விடமாட்டோம் என்று விரட்டி அடிப்பதுமாகவும் செல்லும் ஆரம்ப காட்சிகள்.

இவ்வளவு பிரச்சனைகள் வேண்டாம் ஊருக்கு திரும்பி போ என்றால் முடியாது என்று சொல்வான் விக்டர். எப்பவும் கையில் ஒரு சிறுய அலுமினிய பெட்டி ஒன்றை கெட்டியாக பிடித்துக்கொண்டே இருப்பார். அது என்ன என்று கேட்டால் பதிலும் சொல்ல மாட்டார்.

ஒரு கட்டத்தில் விக்டரை என்ன செய்வது என்று தெரியாமல் திணரும் அதிகாரி அவனாக இந்த எல்லை தாண்டி செல்லட்டும் காவலர்களிடம் ஒப்படைத்து நாம் நிம்மதி அடையலாம் என்று இருப்பார். ஒவ்வொரு முறை அந்த எல்லை கோடுவரை செல்வதும் பிறகு தான் கண்காணிக்கபடுகின்றோம் என்று தெரிந்து திரும்புவதுமாக கதை நகரும்.

இதற்கு இடையில் விமான பணிபெண் ஒருவரை சந்திப்பதும் தான் பழகிக்கொண்டு இருந்த அந்த பணக்கார நபர் இவளிடம் பொய் சொல்வதை பொறுத்துக்கொள்ளாமல் அவனை பிரிந்துவிடவேண்டும் என்ற நிலையில் விக்டரை சந்திக்க விக்டருக்கு அவளிடம் ஒரு பரிவும் பிறகு காதலாகவும் மலருகிறது.

இப்படியே ஓடும் கதையில் கிட்ட தட்ட ஒரு 9 மாத போராட்டதிற்கு பிறகு ஒரு நாள் அனுமதி பெற்று அமெரிக்கா உள் சென்று திரும்புவதாக கதையும் திரைகதையும் அமைத்து எடுத்து இருப்பர்கள்.

சரி இந்த படத்திற்கு இந்தி படத்திற்கு என்ன சம்பந்தம் என்று கேட்பது புரிகின்றது.

ஆங்கிலத்தில் தனது அப்பாவின் கடைசி ஆசையை நிறவேற்றும் பொருட்டு அமெரிக்க வருவான் விக்டர். இந்தியில் டெல்லிக்கு செல்வான்.

விக்டர் அன்பான அடுத்தவரை மிகவும் மதிக்கும் குணம் கொண்டவராக ஆங்கிலத்தில் காட்டுவார்கள். இந்தியில் அவன் சிறந்த பக்திமானாக காட்டபடுவார்.

ஆங்கிலத்தில் அறிமுகம் இல்லாத அந்த பெண் அழுவதை பார்க்க பொறுக்காத விக்டர் அவளுக்கு உதவும் விதமாக தொடங்கும் செயல்களை முதலில் சந்தேகித்து பிறகு அவளுடைய வாழ்கையை அடகு வைத்து விக்டர் அமெரிக்கா உள் செல்ல அனுமதி பெற்று தருவாள், விக்டரிடம் அவளுக்கு பிடித்தது மறன படுக்கையில் தன் தந்தைக்கு செய்து கொடுத்த வாக்கு தவறாமை.

இந்தியில் மிச்ச காசை கொடுக்கிறேன் என்று துவங்கும் அந்த சந்தேக காட்சிகள் கடைசியில் இவனது அப்பாவி தனத்தை பார்த்து காதல் பிறக்கும் பிறகு பாக்கிட்தானம் செல்வதற்கு அவளது வாழ் நாள் சேமிப்பை தூக்கி கொடுப்பாள்.

ஆங்கிலத்தில் ஒரு முறை மொழி பெயற்பாளராக விக்டரை அழைக அவனோ தன் தந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சக பயணி கொண்டுவரும் மருந்தை பிடித்து வைத்துக்கொண்டு கடமையாற்றும் அதிகாரியிடம் இருந்து மருந்து ஆட்டிற்கு தான் என்றும் ஒரு பொய் சொல்லிக்காப்பாற்றும் தருணத்தில் வஞ்சம் வைக்கப்பட்டுவிடுவார் விக்டர்.

இந்தியில் எல்லையை திருட்டு தனமாக கடந்து எல்லை காவல் படையிடம் அனுமதி கொடுத்தால் தான் பேவேன் என்று அடம்பிடிப்பது போல் காட்டி இருப்பார்கள். தவிர நிறை அடி உதை என்று வாங்கியும் கிளம்புவதாக காட்டி இருப்பார்கள்.

9 மாத போராட்டதிற்கு பிறகு கிரகோசியா நாடு மறுமடியும் புரட்சியில் இருந்து மீண்டு இவன் தாயகம் திரும்பும் நிலை வரும். அமெரிக்கா செல்ல ஒரு நாள் அனுமதிகிடைத்தும் ஒரு கையெழுத்து இல்லை என்று நிலைய அதிகாரி அவம் செயிக்கக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் அனுப்பமுடியாது என்று சொல்வார் செயல்படுவார்.

இந்தியில் நீண்ட பயண்திற்கு பிறகு அந்த பெற்றோருடன் பிள்ளையை சேர்த்து நாடு திரும்பும் நாளில் விடமாட்டேன் என்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரி அடுத்த நாட்டுகாரர் நமது நாட்டின் கதவுகளை தொடவோ திறக்கவோ அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வார்.

ஆங்கிலத்தில் கடைசி உச்சகட்ட காட்சியில் விக்டர் விமான நிலையத்தில் இருந்து செல்கிறான் என்று தெரிந்துக்கொண்டு அவனுக்கு அது இது என்று விமான நிலைய கடைக்காரர்கள் கொடுத்து அனுப்புவார்கள்.

அந்த விமான நிலைய கோட்டை தாண்டும் தருணத்தில் விக்டரை கைது செய் என்று நிலைய அதிகாரி சொல்ல அந்த காவலனோ நியூயார் நகருக்கு வரவேற்கின்றோம் என்று சொல்லி வெளியே பனி அடிக்கிறது இந்த மேல் கோட்டை போட்டுக்கொண்டு செல் என்று அனுப்புவார்கள்.

அப்படி அனுப்பும் போது அந்த விமான நிலைய வாசலில் உள்ளேயும் வெளியேவும் மக்கள் கூடம் அலை அலையாக நின்றுகொண்டு அனைவரும் நிம்மதி அடைவார்கள். அவனும் வந்த வேலை முடித்து வீடு திரும்புவான்.

இந்தியில் அவ்வளவு நீள பனியாற்றில் இவன் கடந்து போவதும் அம்மாவை இழந்த குழந்தைக்கு வராத குரல் இவன் போவதை பார்த்து வருவதாக பூ சுற்றுவார்கள். அலை கடல் என மக்கள் இரண்டு பக்கமும் வந்து ஆதரவு தருவதாக காட்டியுள்ளார்கள்.

9 மாத விமான நிலைய வாழ்கையில் விக்டருக்கு 3, 4 பாத்திரங்கள் உதவி செய்யும் அதை இந்தியில் நிருபர் உதவுவதாக காட்டியுள்ளார்கள்.

இப்படி ஆங்கிலத்தில் வந்த ஒரு யதார்த்த படத்தை எடுத்து இந்து முசுலீம் சாயம் பூசி இந்தியா பாக்கிட்த்தானம் சாயம் பூசி அழகாக நம்மை எல்லாம் ஏமாற்றி விற்று இருக்கிறார்கள் இந்தி பட குழுவினர்.

இதிலே அந்த சின்ன பொண்ணு அழுவது அது இது என்று இழுத்து இழுத்து வலுக்கட்டாயமாக காட்டுவதும். அப்பாவி தனம் என்று சல்மானுக்கு கொடுத்து இருக்கும் காட்சிகளும் எரிச்சல் கொட்டும் காட்சிகளாக உள்ளது. உதாரணமாக அந்த சிறுமிக்கு ஆட்டுகறியோ மாட்டுகறியோ தான் சாப்பிடுவார் வேறு எந்த வகை உணவும் சாப்பிட மாட்டாள் என்று காட்டும் காட்சிகள்.

Wednesday, August 5, 2015

ஒரு பிள்ளைய ஆரம்ப பள்ளிக்கு அனுப்பவே புலம்பும் அமெரிக்க பெற்றோர்

அன்று ஒரு ஞாயிற்றுகிழமை இரவு 11:00 மணிக்கு மேல் ஒரு அமெரிக்க தம்பதியினர் மும்முரமாகவும் அதே சமயத்தில் மிகவும் களைப்பாகவும் அவசர அவசரமாக வாங்கிய பொருட்களுக்கு பணம்கட்டும் மும்முரத்தில் இருக்கும் போது நடந்த உரையாடலை கேட்க்க நேர்ந்தது.

எப்படி இருக்கீங்க என்று கேட்டதற்கு மிகவும் களைப்பாக இருக்கிறோம் என்றும். எவ்வளவு ஆச்சு என்று கேட்டதும் $145 ஆஆ என்று வாயைபிளந்து ஒரே ஒரு பிள்ளையை ஆரம்ப பள்ளிக்கு அனுப்பவே இவ்வளவு ஆகுகிறதே இன்னமும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்களே என்று அந்த அம்மா சொன்னது இன்னமும் காதில் ரீங்காரம் இட்டுக்கொண்டு இருக்கிறது.

இந்த $145 பணம் ஒரு வருடத்திற்கு ஆகும் செலவு என்றதை நாம் மறந்துவிடக்கூடாது.

ஒரு $145 கே இப்படி வாயை பிளக்கும் இந்த தம்பதியர் அந்த பிள்ளையை எப்படி மேற்படிப்புக்கு எல்லாம் அனுப்புவார்கள் என்று நினைக்கையில் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி அமையும் என்று ஓர் அளவுக்கு யூகிக்க முடிகிறது.

ஒரு வேளை இந்தியாவில் இருக்கும் நிலைபோல் ஆரம்ப பள்ளியில் சேர்க்க ஒரு பெரிய தொகை, பிறகு மாதமாதம் இவ்வளவு, புத்தகத்திற்கு இவ்வளவு, வீட்டில் இருந்து பள்ளி கூட்டி செல்ல இவ்வளவு, அந்த பள்ளியில் படிப்பு தவிர இன்ன இன்னவைகள் எல்லாம் கற்றுக்கொடுக்கிறார்கள் அதில் ஏதாவது ஒன்றில் கட்டாயம் இருக்க இவ்வளவு, அந்த தினம் இந்த தினம் கொண்டாட இவ்வளவு, பள்ளியில் இங்கே அழைத்து செல்கிறார்கள் அதுக்கு இவ்வளவு, புத்தகத்திற்கு இந்த மாதிரி அட்டை போடனும் அதுக்கு இவ்வளவு, இது எல்லாம் போக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கணணிபயிற்ச்சிக்கு இவ்வளவு போக கைக்கும் அன்றாடம் கொஞ்சம் பணம் என்று எல்லாம் கொடுக்க வேண்டி வந்தால் இந்த பெற்றோர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்.

அனேகமாக குழந்தைகளே வேண்டாம் என்று இருந்துவிடுவார்கள் போலும். மேலே சொன்ன அத்தனையும் இங்கே இலவசமாக அரசாங்கம் வழங்கும் வசதிகளில் இவர்கள் பங்குக்கு உணவும் இருப்பிடமும் இந்த ஆரம்ப தேவைகளை மட்டும் வாங்கிக்கொடுத்தால் போதும். சீருடைகூட பல பள்ளிகளில் கிடையாது.........

உண்மையில் இந்தியாவில் வளரும் பிள்ளைகள் இப்படிபட்ட பெற்றோர்கள் கிடைத்தற்கு கொடுத்து வைத்துதான் இருக்கவேண்டும்.......

Tuesday, July 28, 2015

அப்துல் கலாம் - இந்தியாவின் சாதாரண மக்களின் நம்பிக்கை

கலாமின் இழப்பு ஈடுகட்ட முடியாத ஒரு இழப்பு. நல்ல மனிதர்களின் மறைவு எவ்வளவு பெரிய இழப்பு என்று மறுபடியும் காட்டிய நிகழ்வு இது.

பொதுவாக பணக்கார மக்களுக்கு மட்டும் தான் பெரிய படிப்பு எல்லாம் சாத்தியம் என்று மாய்ந்து இருந்த காலத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் நன்றாக படிக்கும் பட்ச்சத்தில் நல்ல படிப்பு படிக்கலாம் என்று நிகழ்த்திக்காட்டியவர்.

வள்ளுவர் சொன்னது போல் எல்லா சொத்தையும் விட கல்விதான் முதன்மையான சொத்து என்று தேடி, வளர்த்துக்கொண்ட திறமையும் ஆற்றலும் அவரை இந்தியாவின் அறிவியல் முன்னேற்ற திட்டங்களை வகுத்து எடுக்கவும், முன் நடத்தி செல்லவும் வைத்தது.

பொதுவாக தனது திறமை என்ன என்ன பதிவிகள் கிடைக்கும் என்று தெரிந்துக்கொண்டு காய்களை நகர்த்தும் இந்த காலத்திலும் இவரை தேடி பதவி வரும் விதத்தில் தன்னை தயார்படுத்தி கொண்டவர். வந்த வாய்ப்பை இந்தியா இருக்கும் காலம் வரை இவரது பேரும் இருக்கும் விதத்தில் செவ்வனே பயனாக்கி கொடுத்தார் இந்தியாவிற்கு.

அனைத்து ஊடகமும் கொண்டாடுவதை போல், மொழி, மதம், இனம் கடந்த மாமனிதர் இவர்.

ஆசான் என்றைக்கும் ஆசான் தான் என்று உலக்கு மறுமுறையும் நிறுவியவர்.

இந்தியாவின் உயரிய விருதுகளில் அத்தனையும் பெற்றவர், அந்த விருதகள் எல்லாம் இவரை சேர்ந்ததில் தான் மகிழ்ந்து இருக்கும்.

ஒரு படித்த பண்டிதர்க்கு பதவி கொடுத்தால் அதை எப்படி எல்லாம் சிறப்பாக செயலாற்றமுடியும் என்ற வித்தியாசத்தை விதைத்து சென்றவர் இவர்.

இந்தியாவின் கடைசி எளிய குடும்பத்து தந்தை கூட நன்றாக படிடா எல்லாம் தன்னால வரும் என்ற நம்பிக்கையை நாட வைத்த நாயகன் இவர்.

எவ்வளவு நாள் வாழ்ந்தார் என்றது முக்கியம் இல்லை ஆனால் எப்படி வாழ்ந்தர் என்றதே முக்கியம் என்ற இலக்கணத்தை மறுமுறையும் வாழ்ந்து காட்டி உலக்கு காட்டிய உத்தமரே உங்கள் புகழ் வாழ்க ஓங்குக.............

Friday, July 24, 2015

ஷர்மிலி மிஸ் - பாசம் இவ்வளவு ஆழமா

குழந்தைகளை அடிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது எதுவாக இருந்தாலும் எங்ககிட்ட சொல்லுங்க துவங்கி இன்னமும் என்ன என்ன வடிவங்களில் வரவேண்டுமோ அவ்வளவு வடிவங்களில் வந்துக்கொண்டு இருக்கிறது.

பின்னூட்டம் இடும் அனைவரக்கும் அந்த ஷர்மிலி மிஸ்ஸுடன் பேசி பழகியது போல் அப்படி ஒரு உரிமையுடன் பேசவும் எழுதவும் செய்கிறார்கள்.

அவர்களின் குழந்தையின் மிஸ் மட்டுமா அவர், அவரவர் வாழ்க்கையிலும் இது போல் ஒரு ஷர்மிலி மிஸ் இருப்பதே அதற்கு காரணமாக இருக்கும்.

அந்த சின்ன வயதில் விவரம் தெரியாத, வீட்டையும் அம்மாவையும்  மட்டுமே தெரிந்த நமக்கு அன்னைக்கு அடுத்து அதிக நேரம் செலவிட்டது இந்த ஷர்மிலி மிஸ்ஸுடன் தானாக இருந்து இருக்கும். என்ன பெயரும் ஊரும் தான் வித்தியாசமாக இருந்து இருக்கும். மற்றபடி இந்த கதைகளில் கொண்டாடபடும் அந்த ஷர்மிலி மிஸ்ஸாக அனைத்து மிஸ்களும் வாழ்கிறார்கள்.

இவர்களுக்கு இது வேலை மட்டும் இல்லை அதையும் தாண்டி ஒரு அரவணைப்பு இருக்கும் இவர்களிடம். என்ன என்று அன்புடனும் என்ன்ன என்று அன்னை காட்டும் அதே கண்டிப்பை அழகாக காட்ட தெரிந்தவர்கள். அன்றைக்கு முதல் முதலில் உலகை நமக்கு எல்லாம் அறிமுகபடுத்திய ஆசிரியைகள் இவர்கள்.

எத்தனை ஆண்டுகள் ஆன போதும் அந்த சின்ன வயதில் பார்த்தது போல் உரிமையுடனும் அவர்கள் நம்மை விசாரிப்பதும், அவர்களை பார்த்துவிட்டு வந்து நேடு நேரம் ஆனபின்பும் அவர்களை பற்றியே நினைத்துக்கொண்டே இருப்பதும் நாம் பெற்ற வரம் என்று தான் சொல்லவேண்டும்.

இந்த உணர்விற்கு தண்ணீர் ஊற்றி உயிர் ஊட்டிய பதிவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி........

வாழ்க வளர்க அந்த ஆசிரியைகளும் அவர்களது தன்னலம் அற்ற தொண்டும்........

Thursday, July 23, 2015

இராகுலை பற்றி உளவாளி சுசாமி சொல்வது நம்ப தகுந்த தகவல் தானா - அமெரிக்கா என்ன குசராத்து என்று நினைத்து இருப்பார் போலும்.....


இராகுல் நல்லவரா கெட்டவரா என்ற ஆராய்சி அல்ல இந்த கட்டுரை. மாறாக இந்த உளவாளி சுப்பிரமணி சாமி எப்படி அளந்துவிடுகிறார் என்று சொல்லவே....  

ஆகவே இராகுல பத்தி இதுவா சொல்ர என்று கழுவி ஊற்றும் எண்ணத்தோடு வரும் பதிவர்கள் அடுத்த பதிவர்களை பார்ப்பது நல்லது.

அமெரிக்காவின் சிவில் வழக்குகளில் அமெரிக்க நீதிமன்றம் இந்திய நீதிமன்றங்களுக்கு இணையாகவும் இன்னமும் சொல்லப்போனால் ஒரு தலைபட்சமாகவும் நடந்துக்கொள்ளும் என்றதில் எந்த ஐயப்பாடும் வேண்டாம். இதற்கு நேற்று நடந்த வழக்குகள் வரை உதாரணம் காட்டமுடியும்.

ஆனால் அதுவே கிரிமினல் குற்றம் என்று வந்தால் அது ஒபாமாவாகவே இருந்தாலும் குற்றம் குற்றமே என்று நடந்துக்கொள்ளும் நீதிமன்றங்கள் அமெரிக்க நீதிமன்றங்கள்.

சென்ற அமெரிக்க ஆட்சியில் புச்சு அதிபராக இருக்கும் வேளையிலே அவரது மகள்கள் குடித்துவிட்டு வண்டிய ஓட்டியதற்காக தண்டிக்கபட்ட செய்தி உலகம் அறிந்தது இந்த தொடர்பில் சென்று பார்க்கவும்.

இது மட்டும் இல்லை சமீபத்தில் காவலர்கள் பெண்களிடம் தவறாக நடந்துக்கொண்டார்கள் என்று அவர்களை பிடித்துவைத்து இருக்கிறது நீதிமன்றம். அதுமட்டும் இல்லை அவர்கள் வெளியில் வரும் பிணை தொகை செலுத்தமுடியாத அளவுக்கு உயர்த்தபட்டும் இருக்கிறது.

சமீபத்தில் நடந்த பிடல்பியா கலவரங்களில் அந்த கைதியை கொன்ற காவலர்கள் 5வரும் மரண தண்டனையை எதிர் நேக்கி இருக்கிறார்கள். கொல்லப்பட்ட அந்த கைதி ஒன்றும் தியாகி இல்லை. கொலைகாரன் கொள்ளைகாரனான அவனை கொன்றதிற்கு இந்த நிலைமை.

இன்னமும் இது மாதிரி ஆயிரம் ஆயிரம் உதாரணங்களை காட்டமுடியும் கிரிமினல் குற்றங்களை அடிப்படையாக கொண்ட வழக்குகளில் அமெரிக்க நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை.

லலித் மோடி வைத்து இருந்த கட்டுப்படுத்தபட்ட/தடை செய்யப்பட்ட மருந்துக்கோ வைத்து இருந்த அளவுக்கு தகுந்தார் போல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதாக வந்த செய்திகள் என்னவோ அமெரிக்காவில் நடந்தது போல் தான் இருக்கிறது. தனது உபயோகத்திற்கு என்று வைத்து இருக்கும் மருந்தின் அளவை பொருத்து தண்டனை மாறும்.

ஆனால் சுசா சொல்வது போல் 1.6 லட்சம் அமெரிக்க டாலரும் போதை பொருள் வைத்து இருந்தாக FBI மக்கள் பிடித்தாக சொல்கிறார்.

இந்த FBI நிறுவனம் எந்த மாநில அரசுக்கும் கட்டுப்பட்டது அல்ல, அதே சமயம் அவர்கள் ஒரு வழக்கை தொடுத்தால் அழிப்பது கிட்டத்தட்ட முடியாத செயல்கள் அவைகள்.

என்னவோ வாச்சுபை மோடி மகிந்த பட்சேவை மீனவர் பிரச்சனையில் கூப்பிடது போல் அமெரிக்க அதிபருக்கு கூப்பிட்டு சொன்னதும் எல்ல தடையங்களையும் அழித்துவிட்டு போய்யிட்டு அடுத்த விடுமறைக்கு வா என்று அனுப்பிவிட்டது போல் ஒரு பொய் தகவலை வெளியிடுகிறார் சுசா.

ஒரு வேளை சுசா பார்த்த உளவு செயல்களில் வேண்டு என்றால் அப்படி எல்லாம் நடந்து இருக்கலாம் ஆனால் உளவாளிகள் தவிர மற்றவர்களுக்கு கிடையாது என்று இத்தனை ஆண்டுகளாக உளவாளியாக இருக்கும் சுசாவிற்கு தெரியாதா என்ன..........

பாசக ஊழல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் சுசா கொஞ்சம் நஞ்சம் வைத்து இருக்கும் மானம் மரியாதையும் இழக்க நிலையில் தள்ளபடுவீர் MR உளவாளி.....

Tuesday, July 21, 2015

மாரி - என்ன ஒரு இலக்கியம், அனைவரும் பார்த்தே ஆகவேண்டிய படைப்பு

தனுசின் சமீபத்திய படங்கள் அதிகமாக பரிகாசிக்கபடுவது பார்க்கும் போது ஏன் இப்படி கலாய்கிறார்கள் என்று வருத்தமாக இருக்கும். அந்த வருத்தத்தை எல்லாம் தவிடு பொடி ஆக்கும்படி செய்துவிட்டது மாரி.

என்ன ஒரு கதை அமைப்பு, எத்தனை திருப்பங்கள் படத்தில் அப்பா தாங்கமுடியல....

படம் எப்ப தொடங்கிச்சு எப்போ முடிஞ்சது என்றே தெரியாமல் பிச்சுகிட்டு ஓடுது.....

படத்தில் வரும் அந்த புறாவித்தை அப்பா என்ன அழகு அந்த காட்சிகள் இன்னமும் அதிகமா என்ன தான் அது என்று காட்டினால் ஊருக்கு ஊர் இப்படி ஒரு போட்டி நடத்த வசதியாக இருந்து இருக்கும்.......ஏனோ படகுழுவினர் தவிர்த்து விட்டார்கள்.

படத்தின் நாயகியின் பாத்திரமும் நடிப்பும் அவ்வளவு அழகு. என்ன அவர் எதுக்கு படத்திற்கு என்று மட்டும் தான் புரிய மாட்டேங்குது...........

அந்த காவலர் ஏட்டின் தியாகமும் அதற்கான விளக்கமும் என்ன ஒரு இலக்கிய தரம் அடடா என்ன ஒரு இலக்கிய சுவை.......

அமாம் படத்தில அப்ப அப்ப தனுச எதுக்கு காட்டுகிறார்கள் என்றும் அப்படியே சொல்லிட்டாங்கன்னாலும் கூட கொஞ்சம் இந்த இலக்கியத்த புரிஞ்சுக்க வசதியா இருக்கும். அவர் பாட்டுக்கு ஏதோ அந்த பக்கதுல தம் அடிக்க வரும் போது எல்லாம் ஏதோ அவருக்கே தெரியா படம்புடிச்சு இந்த படத்தோட சேர்த்து தனுசு நடிச்ச படம்னு வித்துட்டாங்க போலும்....

படத்தின் கதை என்ன என்று பதிவில் தேடுபவர்களுக்கு ஒரு சேதி, கதை என்ன என்று மாரி - 2 அடுத்த மாதம் வருது அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்............

இன்னும் இது மாதிரி சூரி, சுருட்டை என்று இரண்டு படங்களுக்கான கதை விவாதத்தை இந்த படத்தின் இயக்குனர் மும்முரமாக படமாக முனைந்து இருப்பதாக நமக்கு எல்லாம் ஒரு இனிப்பு செய்தி ஒரு கொசுரு...............

Saturday, July 18, 2015

தினமணி ஆசிரியர் என்ன சொல்கிறார் -சேவையும் தேவையும்... -- இது சரியா முறையா

சேவையும் தேவையும்...  என்ற தலைப்பில் தினமணியில் இன்று வந்த தலையங்கம்.

மொத்தத்தில் அவர் என்ன சொல்கிறார் என்றதை நாம் இப்படி பார்த்தால் தான் அவர் சொல்வது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது என்று தெரியும்.

அந்த காலத்தில் நவீண வசதிகள் இல்லாத காலத்தில் அமெரிக்காவில் உள்ள ஒருவரிடம் பேசுவதற்கு ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 20 வசூலித்தார்கள். ஆனால் இன்றைக்கு வந்து இருக்கும் நவீண கண்டுபிடிப்புகளின் உதவியில் அதே அமெரிக்காவிற்கு அதே ஆளிடம் பேச ஒரு நிமிடத்திற்கு 4 பைசா தான் ஆகுகிறது.

அன்றைக்கு ஒரு நிமிடத்திற்கு 20 ரூபாய் தந்தது போல் இப்போதும் கொடுக்கவேண்டும் அப்படி இல்லை என்றால் எந்த கண்டுபிடிப்புகள் உதவுதோ அவைகளை நீக்கி அதே பழைய கட்டணத்தை வாங்குவது தான் சரி என்று மனதார சொல்கிறார் ஆசிரியர்.

ஒரு காலத்தில் உள்ளூர், வெளியூர், வெளிமா நிலம் என்று இருந்த தொலை/அலை பேசிக்கட்டணம் இன்றைக்கு எங்கே பேசினாலும் நிமிடத்திற்கு இவ்வளவு தான் என்று வந்தது காலத்தின் கட்டாயமும் தேவையும் கூட. அதை விடுத்து இந்தியர்கள் சொரணை கெட்டவர்கள் என்ன செய்தாலும் கேட்கும் காசை கொடுத்துவிட்டு போவார்கள் என்று நினைப்பது சரியான சிந்தனை இல்லை.......

Friday, July 17, 2015

மெல்லிசை மன்னர் - அமைதியும் நிம்மதியுமாய் நிறைந்து இருப்பவர் என்றைகும்

முதலில் அவரின் மறைவுக்கு பிரிந்து தவிக்கும் உறவுகளுக்கு நமது இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து தொடருவோம்.

இன்றைக்கு அல்ல கடந்த 30 ஆண்டுகளாக இரவின் அமைதியை நிம்மதியான தாலாட்டாய் மாற்றி அமைத்த அவரது இசை ஈடில்ல இசை. அந்த தாலாட்டு அன்னைக்கு பிறகு கிடைக்கின்ற தாலாட்டு.

நேற்றைய போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை என்றதின் நீண்ட வரலாறு தான் அவருடைய தாலாட்டுகள் காட்டுகிற கால கண்ணாடி.

ஒவ்வோரு பாடலும் ஒவ்வொரு நினைவலையை ஆழ் மனதுக்குள் இருந்து கிளரி எடுத்து சில சமயம் சோகமாகவும், இளமை நிகழ்வுகலை நினைவுபடுத்தியும், எதிர்கால கனவுகளையும் என்று என்றைக்கும் பரிணாமித்து வரும் பாடல்கள்.

இன்றைக்கு இருக்கும் புதிய வாத்திய கருவிகளோ பதிவுமுறைகளோ இல்லாத நாட்களில் வெறும் மெட்டையும், வார்த்தையும், குரல்களை மட்டும் வைத்து அசத்து அசத்து என்று அசத்திய அசாத்தியமானவர்.

எண்ணிக்கைகளுக்குள் அடங்கிவிடும் எண்ணிகயில் இருந்தால் இது அது என்று தொகுத்து எழுதலாம். பட்டியலிட ஆரம்புத்தால் எதை எடுப்பது எதைவிடுப்பது என்று யோசிக்கவே ஆண்டுகள் ஆகிவிடும் ஆகவே அந்த வேலையை நிறுத்திவிடுவோம்.

கருப்பு வெள்ளையில் துவங்கி, மன்னர்கள் கதைகளில் இருந்து வண்ணத்தில் 90கள் வரையில் கேட்போருக்கு என்று அள்ளிக்கொடுத்துக்கொண்டே இருந்த மன்னர்.

இவரின் இசையின் தாக்கம் இன்னமும் ஒரு 3 தலைமுறைக்காவது இருக்கும். வானொலியும் தொலைகாட்சிகளும் தனது இரவு சேவையே இவரின் பாடல்களை பெரும்பாலும் நிறப்பித்தான் பொழுதை ஓட்டுகிறது.

இரவு வந்துவிட்டாலே தூக்கத்தை கெடுக்காவண்ணம் பாடல்கள் வேண்டும் என்றால் அது இவரது பாடல்களாகத்தான் இருக்கும். தமிழர்களின் இரவின் அமைதியாகவும் நிம்மதியுமாய் என்றைக்கும் நிறைத்து இருப்பவர். அவரின் புகழ் வாழ்க, இறைவனிடம் சேர்ந்து அவரது ஆத்துமா அமைதியடையட்டும்.......