Wednesday, March 14, 2018

மோடியை விட யோகி மிகுந்த தலைமை பண்பு கொண்டவர் என்று மறுபடியும் நிரூபிதுள்ளார்

உபி இடை தேர்தல் முடிவுகள் வெளியானதும் வெற்றி பெற்ற மாற்று கட்சியினரை வாழ்த்தியது மட்டும் அல்லாது எதிர்கட்சிகளின் கூட்டணியை குறைவாக மதிப்பிட்டது தான் தோல்வியின் காரணம் எனவு தெரிவித்துள்ளார்.

எனக்கு தெரிந்த வரை மோடி எந்த ஒரு தோல்விக்கும் இந்த விதத்தில் பொறுப்பாக பதில் அளித்து பார்த்ததே கிடையாது. எப்போதும் நான் தான் என்ற அகந்தையுடன் தான் வலம் வருவார் மோடி.

அதுவும் ஏதேனும் வெற்றி என்று வந்துவிட்டால் இமாயல அளவிற்கு குதிப்பதும் தோல்வி என்று வந்தால் ஒன்று வெளி நாட்டிற்கு ஓடுவதும்(சின்ன சின்ன நாடுகளுக்கோ அல்லது ஏழை நாடுகளுக்கோ). இல்லை பேசவே தெரியாதவர் போல் ஒளிந்து கொள்வதும் தான் மோடியின் பண்பு. கிட்டதட்ட துவக்கப்பள்ளியில் பயிலும் சிறுவனின் குணம் அது.

ஆனால் யோகியோ மிகவும் தைரியமாக தோல்வியை ஒத்துகொள்வதும் மட்டும் அல்லாது காரணத்தையும் வெளியிடும் தைரியசாலியாகவும் இருக்கிறார். வாழ்த்துக்கள் யோகி பாசகவின் அடுத்த பிரதமர் வேட்பாளார் நிச்சயமாக நீங்கள் தான்.......

0 comments: