Tuesday, February 27, 2018

சென்னை அமெரிக்க தூதரகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட சொல்வீங்க போல

இது சுசா கிளப்பி விட்டிருக்கும் வாதம். சென்னையில் அமைந்து இருப்பதனால் மட்டுமே எல்லா இடங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கள் பாட வேண்டும் என்று கேட்பதும் போராடுவதும் எள்ளி நகையாடுவதாக இருக்கிறது என்றும் சொல்கிறார்.

அவர் நக்கலாக சொல்வது போல் நாளையே சென்னையில் அமைந்து இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்று கொடிபிடிப்போமா இல்லை போராட்டம் தான் நடத்துவோமா.......

அது இருக்கட்டும் சுசாமி, தமிழகம் இதியாவில் அமைத்து இருக்கும் ஒரே காரணத்திற்காக இந்தியில் பேசி இந்தியில் எழுதி சமசுகிருதத்தில் எழுதி சமசுகிருதத்தில் படித்து தான் ஆக வேண்டுமா என்ன............

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் இந்தியிலும் சமசுகிருதத்திலும் பேசுங்களேன் யார் வேண்டாம் என்றது. பிரதமர் மோடியை தமிழக கூட்டங்களில் பாரம்பரியா மிக்குவர்காலே ஊர் மேல போய் இருக்கா என்று ஏன் பேசனும், பேசாம சமசுகிருதத்தில் உரையாற்றி விட்டு போக சொல்லுங்கள் மீம்சு மக்களாவது வேறு வேலைய பார்ப்பார்கள்......

ஆமாம் சுசாமி நடிகையின் இறப்பில் துப்பு துலக்கு நீங்கள் மோடியின் 11400 கோடி ஊழலை பற்றி இதுவரையில் வாய் திறக்காமல் இருப்பதன் மர்மம் தான் என்ன விளக்குவீர்களா.........

0 comments: