Friday, April 20, 2018

தமிழிசை எச்ச சர்ம்மாவை இந்தியாவின் தூதுவராக ஐநாவிற்கு அனுப்புங்கள்

எப்போதுமே தனிப்பட்ட கருத்துக்களை மட்டுமே தெரிவிக்கும் எச்ச சர்ம்மாவை இனி இந்தியாவிற்கான ஐநா மற்றும் வெளிநாடுகளுக்கு தூதுவராக பதவி கொடுக்க வேண்டும்.

இந்த எச்ச சர்ம்மாவின் கண்ணியமிகு கருத்துக்களும் பேச்சுகளும் உலகலாவிய மக்களுக்கானது. இந்தியாவின் பாரம்பரியத்தை காக்கவும் வளர்க்கவும் அவதாரம் எடுத்த மகான்.

எப்படி விவேகாநந்தர் இந்தியாவின் சார்பிலும் இத்து மதத்தின் சார்பிலும் சிக்காகோவில் உரையை நிகழ்தினாரோ அது போல் இந்த எச்ச சர்ம்மாவை அனுப்பி தனது கண்ணியமான பேச்சை பேச சொல்லி அனுப்புங்கள். உலகில் இந்து மதத்தை இவரின் கண்ணியமான பேச்சில் மயங்கி இன்னும் பலகோடி பேர் இந்து மதத்தை தழுவுவார்கள்.

நிர்மலா தேவி விவகாரத்தில் எச்ச சர்ம்மா அதிகம் சிக்கி இருப்பார் போல் தெரிகின்றது, அதனால் தான் இந்த கொதிப்பு கொதிக்கிறார் எச்ச சர்ம்மா.

எச்ச சர்ம்மா மட்டுமா, நாள் தோறும் ஆளுனருக்கு வால்பிடிக்கும் நபர்கள் எல்லோரும் சொல்லும் பேசும் விதமும் பதட்டத்தையும் பார்க்கும் போது பயமாக இருக்கிறது.

இவர்களின் அடி பொடி ஒருவர் கேரளத்தில் 'நல்ல வேளை அந்த சிறுமி 8 வயதில் இறந்தால் இல்லை என்றால் இந்தியாவின் மேல் குண்டு போட்டு இருப்பார்' என்று எழுதுகிறது.

ஆளுனர் தனது அதிகாரங்களை பயன்படுத்தி தான் இப்படி பட்ட நிர்மலா தேவி ஊழல்களில் ஈடுபட்டுள்ளார் என்றதிற்கு சான்றாக அண்ணா பல்கலை துணை வேந்தர் நியமனம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நான் நினைத்தால் யாருக்கும் என்ன பதவியும் உயர்கல்வி துறையில் வழங்க முடியும் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று ஆளுனர் தெரிவிப்பதில் இருந்தே நோக்கத்திற்காக அவரது அதிகாரத்தை பயன்படுத்தினார், பயன்படுத்துவார் என்று தெளிவாக தெரிகின்றது. அதோடு நிற்காமல் தன்மீது சுமத்தப்பட்டு இருக்கும் குற்றத்தை தானே விசாரித்து சொல்லவதாகவும் சொல்வது மிகவும் கேவலமான நடவடிக்கை.

நாட்டில் திட்டமிட்டு படுகொலைகளை நிகழ்த்திவிட்டு அவர்கள் சார்ந்த சித்தாந்தத்தை நம்பும் மனிதர்களின் மத வெறிக்கு மேன்மேலும் எண்ணையை ஊற்றிய மோடி பிரதமராவதும். விசாரித்த நீதிபதியை கொலை செய்துவிட்டு அதை சரியாக விசாரிக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று தலைமை நீதிபதி சொல்லும் இந்த இந்திய நாட்டில் நிர்மலாவுக்கோ அல்லது அதில் தொடர்புடைய ஆளுனர் வட்டாரங்களுக்கோ என்ன பெரிதாக தண்டனை கிடைத்துவிட போகின்றது.

கையில் வைத்து இருக்கும் பணம் எல்லாம் இனி செல்லாது என்று சொன்ன வேளையில் வங்களின் வாசலில் காத்து இருந்தது தவிர என்ன செய்ய முடிந்தது இந்த 132 கோடி மக்களால். வெறுமனே கையை பிசந்துக்கொண்டு தானே நின்றார்கள். இது வரை ஆட்சியில் இருந்த பொருளாதார வல்லுனர்கள் கூட நீதிமன்றத்தை அனுகி அப்படி எல்லாம் ஓர் இரவில் செய்ய கூடாது என்றோ அல்லது பொது மக்கள் எல்லாம் திண்டாகுகிறார்கள் என்றோ சொல்ல செய்தார்களா இல்லை சொல்லத்தான் முடிந்ததா.

மக்களிடம் இருக்கும் இந்த பயம் தான் இந்த மதவெறி கும்பலின் பலம். மக்களி இப்படி பயந்து கிடக்கும் வரை எச்ச சர்ம்மாக்கள் இப்படி தான் இழிவாக எழுதுவார்கள், பேசுவார்கள். என்ன இன்றைக்கு யாரையோ தானே சொல்கிறார்கள் என்று இருப்பவர்களும் நாளைக்கு பேசப்படும் போது தான் அதன் வலி தெரியும்.

எச்ச சர்ம்மா போங்கள் உங்களின் இந்த கண்ணியமான நடத்தையை காண உலகம் துடித்துக்கொண்டு இருக்கிறது, ஊர் குருவியாக உங்களின் திறமையை வீணாக்காமல் உககிற்கு உங்களின் திறமையை நிரூபியுங்கள்...............

0 comments: