Saturday, April 21, 2018

யாருக்காக அமைகிறது இராணுவதளவாட ஆலைகள் தமிழகத்தில்

நிர்மலா சீதாராமனும் மோடியும் மற்றும் தமிழக பாசகவும் தமிழகத்தில் அமையவிருக்கும் இராணுவதளவாட ஆலைகள் தமிழகத்தின் வேலை வாய்ப்பை பெருக்க மோடியின் பாசக அரசு எடுத்து இருக்கும் ஒரு இமாலய திட்டம் என்றும். இந்த திட்டத்தினால் தமிழகத்தின் வேலை வாய்ப்புகள் பெருக்குவதை மக்கள் மதிக்க வேண்டும் பாராட்ட வேண்டும் போற்ற வேண்டும் என்று தமிழக பாசக கருத்து தெரிவிக்கின்றது.

நம்ம எல்லோருக்குமே நன்றாக தெரியும் இராணுவதளவாடமாக இருந்தாலும் சரி இல்லை இராணுவ வேலைகள் சம்பந்தமாக எது இருந்தாலும் சரி அதற்கு இந்தி தெரிந்தால் தான் வேலை இல்லையேல் வேலை இல்லை என்று சொன்னது நமக்கு எல்லாம் நன்றாக தெரியும்.

வேலைக்கி விண்ணப்பிக சொல்வார்கள், பிறகு ஒருவருக்கும் இந்தி தெரியவில்லை என்ன செய்ய சொல்கிறீர்கள், உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது, தகுதி இல்லையே இப்படி என்ன என்ன விபரங்களை எல்லாம் சொல்ல முடியுமோ அவ்வளவையும் சொல்லிவிட்டு. வடக்கில் இருந்து இந்த 5 ஆலைகளுக்கும் ஆட்களை கொண்டு வந்து வேலை, தங்க வீடு, படிக்க பள்ளிக்கூடம், மருத்துவ கல்லூரி என்று வடக்கதியர்களுக்கு கொடுத்து அழகு பார்ப்பார்கள்.

அதோடு நில்லாமல் அந்த வடக்கத்தியருக்கு தேவைபடும் சப்பாத்தியும் பக்கோடாவும் செய்து விற்று பிழைத்துக்கொள்ளுங்கள் என்று பாசகவினர் நக்கல் பேசுவார்கள்.......

0 comments: