Thursday, December 27, 2012

நீ தானே என் பொன்வசந்தம் - 500 Day Of Summerம் - திரைவிமர்சனம்

கௌதம் அடுத்த மணிரத்தனமாக உருவாக நினைக்கிறார் போலும். ஆங்கில படங்களை பார்ப்பது, பிறகு அதையே தமிழில் படமாக எடுப்பது. எங்கே படத்தை கண்டுபிடித்து விடுவார்களோ என்று இராமாயணம், மகாபாரதம் என்று கதைகளை கிளப்புவது மணிரத்தினத்தின் போக்கு.

ஆனால் கௌதமோ அப்படியே ஆங்கில படங்களை தமிழிழே எடுத்தாலும் மணிரத்தினம் செய்வது போல் கதையை எல்லாம் அவ்வளவாக வெட்டவோ அல்லது கூடுதலாக இந்திய படுத்துதலோ இல்லாமல் வரிக்கு வரி, காட்சிக்கு காட்சி அப்படியே அப்படமாக எடுப்பார். கௌதமின் கடந்த 3 படங்களும் அந்த வகையை சாரும். என்ன ஆங்கிலத்தில் பேசும் பாத்திரங்கள் தமிழில் பேசும், அமெரிக்க வாழ்வியலில் உள்ள சில செய்கைகளை மட்டும் இந்திய வாழ்வியலுக்கு மாற்றுவது  மட்டுமே அவரது வேலையாக இருந்தது.

இந்த முறை மணியை போல் தானும் இந்திய வாழ்வியலுக்கு மூலப்படத்தின் கதையை மாற்றிக்கொடுப்பது என்று முடிவு செய்துக்கொண்டு இந்த பட தயாரிப்பில் இறங்கி இருக்கிறார் போலும்.



500  Day Of Summerபார்த்தபோது முழுமையாக பார்க்கமுடியாமல் அலுப்பு தட்டியது. இந்த படத்தையும் அதே போல் அலுப்பு தட்டும் விதமாகவே கௌதம் எடுத்துள்ளார்.

மணியின் போக்கில் சம்மரின் 500 நாட்கள் கௌதம் மாற்றிய விதம் இப்படி தான். ஆங்கிலத்தில் படம் துவங்கும் முன் காட்டப்படும் கதை தலைவனின், தலைவியின் சிறு வயது விளையாட்டுகளை தமிழில் ஒரு பாட்டுடன் இருவரும் சிறு வயதில் பழகியவராக காட்டியிள்ளார் படத்தின் வேறு ஒரு பகுதியில்.

மொத்த அலுவலகமும் கம்பெனி செலவில் கொடுக்கும் கேளிக்கை விருந்தை கல்லூரிகளின் இடையில் நடக்கும் வாழ்வியல் விழாவாக(cultural function) மாற்றியுள்ளார். அந்த கேளிக்கை விருந்தில் பாடப்படும் பாடல்களை புடிக்கல மாமு என்று படத்தின் துவக்கத்திலும், நித்தியா பேசுவதாகவும், வருண் பாடுவதாகவும் மாற்றி அமைத்துள்ளார். 500ரில் வரும் தலைவனின் நண்பனின் முடியை கூட அப்படியே சந்தானத்திற்கு பொருத்தி எடுத்துள்ளதை கவனிக்க முடியும்.



500ரில் தலைவனும் தலைவியும் முதல் முதலில் சந்தித்து கொள்ளும் காட்சியில் பேசிக்கொள்ளும் அந்த பாட்டு என்றால் எனக்கு உயிர் என்று சொல்லும் இடத்தை படம் துவங்கிய காலத்தில் இருந்து நீ தானே என் பொன்வசந்தம் பாட்டை பாடிட்ட இல்ல இனிமேல் நான் அவ்வளவு தான் என்று காட்டியிள்ளார் கௌதம்.

தமிழில் வருண் எம்பிஏ படிக்க கோழிக்கோடு செல்வார், 500ரிலோ தலைவன் கட்டிட வடிவமைபாளருக்கு படித்துவிட்டு வாழ்த்து அட்டைக்கு வசனம் எழுதிக்கொடுக்கும் வேலையில் இருப்பார். தலைவனும் தலைவியும் பிரிந்த வேளையில் தலைவன் கட்டிட வடிவமைப்பாளர் துறைக்கு மீண்டும் தன்னை தயார் படுத்திக்கொள்ளும் செயலை வருண் எம்பிஏ படிக்க செல்லுவதாலும் அங்கே நித்தியாவை வரவேண்டாம் என்று சொல்வதாலும் பிரிந்துவிடுவதாக மாற்றி இருக்கிறார்.

500ரில் ஒரு சிறுமி வந்து தலைவனுக்கு ஆருதல் கூறுவார், தமிழில் அதை ஒரு குண்டு பெண்ணாக மாற்றியுள்ளார். 500ரில் சம்மர் இவனை விட்டு விட்டு சென்றதும், அலுவலகத்தில் பெண்களை பற்றி ஆத்திரத்துடன் பேசும் வசனங்களை பெண்கள் என்றால் எல்லாம் பொய் தானா என்று பாட்டாக மாற்றியுள்ளார்.

500ரில் பிரிந்த இருவரும் ஒரு திருமண வைபவத்திற்கு இரயிலில் செல்வார்கள். அந்த பயணத்தில் ஒருவரும் பேசிக்கொண்டாலும் அவர்களுக்குள் அந்த நெருக்கம் இல்லை என்று தெளிவாக காட்டி இருப்பார்கள். வைபவத்தில் இருவரும் சேர்ந்தும் நடனம் ஆடும் காட்சிகள் தமிழில் எல்லோரும் சேர்ந்து ஆடும் நடனமாக மாற்றி இருப்பார்கள்.



500ரில் இறுதிக்கட்ட காட்சியில் சம்மர் தலைவனை அவன் தனியாக அமர்ந்து இருக்கும் இடத்தில் வந்து சந்திப்பார். அந்த இடத்தில் இரண்டு நீள இருக்கைகள் இருக்கும். பட்ட பகலில் சந்தித்துக்கொள்வதை நடு இரவு என்று தமிழில் மாற்றி இருக்கிறார். மேலும் அந்த காட்சியில் தலைவன் தலைவியின் திருமணதிற்கு மகிழ்வதாக தலைவன் சொல்வதை பொய்யாக சொல்லாதே என்று சொல்லும் காட்சியை, தமிழில் நீ என்னை பற்றி தவறாக நினைக்கக்கூடாது என்று மாற்றி இருக்கிறார்.



500ரில் சம்மரின் வீட்டில் நடக்கும் விருந்திற்கு செல்லும் தலைவனின் எதிர்பார்ப்பும், உண்மையில் என்ன நடக்கிறது என்றும் திரையை இரண்டாக பிரித்து காட்டுவார்கள். தமிழில் அதை திருமண வரவேற்பு என்று காட்டி அதில் நித்தியா ஒருவரும் இல்லாது வருணை அருகில் சென்று சந்திப்பதாகவும், அந்த இடத்தில் ஒருவரும் இல்லை என்று காட்சிகளை அமைத்து இருக்கிறார்.

500ரில் தலைவன் 500 நாட்களுக்கு பிறகு நேர்காணலில் சந்திக்கும் பெண்ணிடம் பழக எண்ணி அவளிடம் நாம் நேர்காணல் முடிந்ததும் வெளியில் போகலாமா என்று கேட்பதை அப்படியே தமிழில் வேறு ஒரு பெண்ணோடு திருமணம் நடப்பதை போல் காட்டியுள்ளார்.

இந்த செயல்களோடு நிறுத்தி இருந்தால் படம் தப்பி இருக்கும், ஆனால் ஆங்கிலத்தில் சம்மர் கூறும் வசனங்களாகிய "உன்னோடு எனக்கு திருமணம் செய்துகொள்ளும் உணர்வு வரவில்லை, ஆனால் அன்றைக்கு அவனை பார்த்த உடன் வந்தது செய்துக்கொண்டேன்" என்று சொல்லும் வசனங்கள், இந்திய வாழ்வியலில் ஏற்றுகொள்ள முடியாத நெருடலாக இருக்கும் என்று நினைத்தாரோ என்னவோ வருணின் குடும்பம், அதிலே குழப்பம் அதனால் அவன் கோழிக்கோடு போகிறான் என்று எல்லாம் குழப்பி இருக்கிறார் பாவம்.

மூலத்தில் உள்ள நிகழ்வுகளை அப்படியே அதே ஓட்டத்தில் பிடித்த காட்சிகளில் அதிக குழப்பம் இல்லை. படத்தில் கௌதமாக சேர்த்த காட்சிகள் கதையிலும் ஒட்டவில்லை, மனதிலும் ஒட்டவில்லை. இவைகளை சப்பைக்கட்டு கட்டுவதற்கு சின்ன சின்ன செய்களுக்கும் நிகழ்வுகளுக்கும் காதலர்கள் இப்படி தான் சண்டையிட்டு கொள்வார்கள் என்று இலக்கணம் படைக்க முயலுகிறார்.

இந்திய வாழ்வியலில் இல்லாத கண்டதும் காதல் அடுத்த காட்சி படுக்கையறை என்று இருக்கும் 500ரின் காட்சிகளை அப்படியே படமாக்கிவிட்டு, சம்மர் நீ வேண்டாம் என்று தலைவனை விலக்கும் காட்சிகளை மட்டும் மாற்றி இருப்பது நடுநிசி நாய்கள் கற்றுக்கொடுத்த பாடம் போலும்.

500ரில் வரும் 1980களின் பாடல்கள் போல் வேண்டும் என்று நினைத்து இருப்பார் போலும் அதனாலோ என்னவோ இராசாவை நாடி 8 பாடல்களை வாங்கி 500ரில் காட்டும் துண்டு துண்டு பாடல்கள் போல் தமிழிலும் துண்டு துண்டாக காட்டியுள்ளார். 500ரில் வரும் பின்னணி இசையை போல் அந்த அந்த இடத்தில் வரும் ஓசைகளே இசையாக இருக்கட்டும் என்று இராசாவின் கைகளை கட்டிப்போடுவிட்டார் போலும். இராசாவை குறைசொல்லும் மக்களே 500ரை பாருங்கள் பிறகு புரிந்துகொள்வீர்கள் இசை யாருடைய கைவண்ணத்தில் இப்படி ஒடுக்கப்பட்டது என்று.

பின்னணி இசையில் இராசாவின் கைகளை கட்டிப்போடாலும் பாடல்களில் அவரது கைகளை 80களின் போக்கில் பாடல்கள் வேண்டும் என்ற கோரிக்கையை அழகாக பூர்த்தி செய்து இருக்கிறார் இராசா. பொங்கலுக்கு நீ தானே என் பொன்வசந்ததின் பாடல்கள் என்று தனியாக வெளியிட்டாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை.

விச்சை தொலைக்காட்சியில் கிரித்துமசு விழா நிகழ்ச்சியில் கௌதமிடம் கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் scriptல் இருந்தது என்று கேள்விக்கு கேள்வி பதில் சொல்வதை பார்க்கலாம். என்ன 500ரில் உள்ள script என்று சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும், பரவாயில்லை.

அடுத்த படத்திலாவது இந்த குழப்பம் எல்லாம் இல்லாமல் மணியை போல் தெளிவான கதையும் கதையின் நிகழ்வுகளையும் கொண்டு படம் எடுக்க முயற்சி செய்யுங்கள்.

கடைசி செய்தியாக நித்தியாவின் உடைகளும் சிகை அலங்காரமும் வருணின் உடைகளும் கூட 500ரில் இருந்து அப்படி இருப்பதை கவனிக்கவும்.

Tuesday, November 27, 2012

இந்திய சுதந்திர போராட்டத்தை நாம் ஏன் எதிர்க்கிறோம் வெறுக்கிறோம்

இந்திய சுதந்திர போராட்டம் நடந்த அத்தனை காலமும் எந்த வகை போராட்டமாக இருந்தாலும் எக்கச்சக்கமான உயிர்களை பலி வாங்கிய பின்பு கிடைத்தது தான் இந்த இந்திய சுதந்திரம். குழந்தைகள் பெண்கள் என்றும் பாராமல் செனரல் இடைலெர் சுட்டுக்கொன்றதில் இருந்து, பாக்கிட்த்தானம் பிரிவினை வரை கணக்கில் அடங்கா உயிர்களை பலி வாங்கிய அந்த போராட்டத்தை ஏன் மக்கள் வருடம் தோரும் கொண்டாட வேண்டும்.

இத்தனை உயிர்களை கொன்ற களிப்பை கொண்டா தான் இனிப்பு வழங்குகிறார்களா.

இந்த தேசிய கொடியையும் இராணுவத்தையும் மட்டும் கொண்டு வருவதற்காக எத்தனை ஆயிரம் உயிர்களை பலியிடுவது.

ஆங்கிலேயன் ஆண்டபோது மட்டும் யார் இரணுவத்தில் இருந்தது. இப்போது இருக்கும் இதே மக்கள் தான். என்ன கட்டளை மட்டும் அவன் இட்டான், கடைசியில் மக்களை நசுக்குவது எப்பவும் நம்மவர்கள் தானே.

எத்தனை குறைகள் ஆங்கிலரின் ஆட்சியில் இருந்தாலும் எந்த ஒரு உயிருக்கும் பாதகம் இல்லாமல் அல்லவா இந்திய சுதந்திர போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து, சும்மா வீட்டில் இருந்தவர்களை எல்லாம் தனது மயக்கும் பேச்சுக்கு மயங்க செய்து, வீதிக்கு வரவழைத்து போராட்டம் நடத்த வைத்த இந்த அரசியல் தலைவர்கள் எத்தனை கொடூர மனம் படைத்தவர்களாக இருந்து இருப்பார்கள்.

சாலியன் வாலாபாத்து படுகொலையில் தேசிய தலைவர்கள் ஒருவரும் சாகவில்லை. திருப்பூர் குமரன் இறந்த கூட்டத்தில் அவரை தவிர வேறு பெரிய தலைவர்கள் ஒருவரும் சாகவில்லை.

கப்பலோட்டிய தமிழர் சிதம்பரம் செக்கு இழுத்தார், சிறை அதிகாரிகளால் அடித்து துன்புறுத்தப்பட்டார். அவருடைய சொத்துகள் சூரையாடபட்டது. ஆனால் சுதந்திர போராட்டம் நடத்திய தேசிய தலைவர்கள் ஒருவரும் தங்கள் சொத்துகளை இழக்கவில்லை, செக்கும் இழுக்கவில்லை. மாறாக சிறையில் இருந்தபடி அடுத்தகட்ட போராட்டங்களை வகுத்தார்கள், தன் இந்தியாவின் கண்டுபிடிப்பு என்று புத்தகம் எழுதினார்கள். இப்படி இவர்களின் துன்பத்தில் ஏன் சுதந்திரம் வாங்கி இருக்க வேண்டும்.

இப்படி கொல்லபட்ட மக்களின் சார்பாக எத்தனையோ காரணங்களில் இந்திய சுதந்திரத்தையும், அதன் போராட்டங்களையும் வெறுப்பதாகவும், மறுப்பதாகவும் முதலில் எழுதட்டும், பதிவு செய்யட்டும், பிறகு ஈழ போராட்டத்தை பற்றிய உங்களது விமர்சனங்களை எழுதலாம்.

ஈழத்தையும், அதன் சுதந்திர போராட்டத்தையும் விமர்சிக்க நீங்கள் சொல்லும் அத்தனை காரணமும் எந்த ஒரு சுதந்திர போராட்டத்திற்கும் பொருந்தும்.

Monday, November 26, 2012

நான் செய்வது சரி தானா

இவ்வளவு காலம் எதற்காக காத்து கிடந்தேன், கடைசியில் இப்படி ஆகிவிட்டதே. இப்படி தான் நடக்கும் என்று முன்னமே எல்லோரும் சொன்னார்களே. ஏன் எனக்கு அப்போது எல்லாம் தெரியவில்லை.

இப்போது இப்படி ஒரு நிலைவந்ததும் எது தவறு எது சரி என்று கூட சிந்திக்க முடியாமல் திணறும் நாள் வரும் என்று எண்ணியும் பார்த்தது இல்லை தான். இருப்பினும் இந்த புள்ளி வரை என்னை அழகாக நகர்த்திக்கொண்டு வந்த அனைவரும் இப்போது கைவிட்டு விட்டு, உன் விருப்பம், நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ நடத்திக்கொள் என்று ஒதுங்குவது ஏன்............

இப்படி செய் இது தான் சரி என்று சொன்னால் என்ன குறைந்துவிடப்போகிறது. இப்படி இவர்கள் செய்வது தான், செய்வதா வேண்டாமா என்ற குழப்பம் என்னை செயலற்று தள்ளுவதை இவர்களால் ஏன் புரிந்துக்கொள்ள முடியாமல் போகிறது. அல்லது தவிக்கட்டும் என்று விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கிறார்களா. என்ன மனிதர்களப்பா இவர்கள்.......

இப்போது இவ்வளவு யோசிக்கும் இவர்கள் துவக்கத்தில் மட்டும் அத்தனை தீவிரம் காட்டுவான் ஏன். இவர்களது தீவிரத்தை பார்த்து நாம்தான் ஏதோ மென்மையாக நடந்துகொள்கிறோம் என்ற குற்ற உணர்ச்சிகள் வரும் அளவிற்கு நடந்துக்கொண்டு விட்டு இப்போது ஒதுங்குவது ஏன்.

இல்லை சும்மா இருந்த என்னை உசுப்பேத்திவிட்டு அதிலே குளிர் காய்த்துவிட்டு இப்போது சிரிக்க முயலுகிறார்களோ, என்ன தான் நடக்கிறது. யோசித்து யோசித்து மண்டையே குழம்பிவிடும் போல் இருக்கிறதே எப்படி இதற்கு ஒரு தீர்வு காண்பது............

ஒரு வேளை இவைகளை எல்லாம் செய்யட்டுமா என்று என்னுடைய திட்டத்தை இவர்களுக்கு முன்னமே அறிவித்தது தான் தவறாகிபோனதோ. படிப்படியாக சொல்லி இருந்தால் ஒத்துழைத்து இருப்பார்களோ......

நேசிப்பு இந்த வார்த்தைக்கு பொருளே இல்லாமல் அல்லவா இத்தனை ஆண்டுகள் கழிந்தது, அந்த நிலைக்கு பதில் செல்ல வைப்பது தான் எண்ணமாக இருந்தது துவக்கத்தில். பிறகு நிகழ்ந்த நிகழ்வுகள் இந்த போக்கை மாற்றி பழிவாங்கும் நிலைக்கு வந்தாலும் எனது செய்கையில் இருக்கும் நீதி இவர்களுக்கு தெரியாமலா போனது.

பதில் சொல்ல வைப்பதற்கும் பழிவாங்குவதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப்போகிறது. பதில் சொல் என்று தெரிந்தவர்கள் முன்னால் தலைகுனிய வைப்பதற்கும் என்ன பெரியவித்தியாசம் வந்துவிட போகிறது. முன்னே செய்வது மனதளவில் சாகடிக்கும் பின்னே செய்வது உடலளவில் சாகடிக்கும். மனதளவில் சாகட்டிக்கலாம் பாவம் இல்லை உடலளவில் சாகடித்தால் மட்டும் பாவம் என்று இவர்கள் சொல்வதில் என்ன பொருள் இருக்கமுடியும். இரண்டும் ஒன்று தான் எந்த வித்தியாசமும் கிடையாது என்று ஏன் இவர்களுக்கு புரியமாட்டேன் என்கிறது.

சண்டைக்கு நிற்கும் போது இந்த மாதிரியான நிலைகள் வரும் என்று எனக்கு தான் தெரியவில்லை, உதவுங்கள் என்ன செய்யலாம் ஆலோசனை சொல்லுங்கள் என்று இவர்களிடம் கேட்டு கேட்டு தானே செய்தேன். அப்போது எல்லாம் நான் பேசும் பேச்சுக்களும் செய்கைகளுக்கு தவறு சொல்லாதவர்கள் இப்போது மட்டும் தவறு சொல்வது ஏன்.

அப்போதே தடுத்து இருந்தால் இந்த நிலைக்கு வந்தே இருக்காதே, எல்லாம் சரியாகிபோகும் என்று இவர்கள் சொன்ன பேச்சை நம்பித்தானே இந்த காரியங்களில் இறங்கினேன். நிலைமை நேருக்கு மாறாக ஆனபின்பு ஆளை கழட்டிவிட்டது நகர்ந்துகொண்டால் எப்படி. இனி நானே தனியாக போராட வேண்டியது தானா. இதைவிட இன்னமும் மேசமான நிலைகள் வந்தால் எப்படி தாங்குவேன்.

யாருக்கு வேண்டும் உங்கள் ஆறுதல், ஆறுதல் தேடியா நான் உங்களிடம் ஓடி வந்தது. தீர்வுக்கு அல்லவா தேடி வந்தேன்.

எனது நேசிப்பு உண்மையானால் நான் பழிவாங்க கூடாது என்று நினைக்கும் நீங்கள், எனக்கு நேசிப்பே கிடைக்கவில்லையே என்று விளக்கும் போது மாய்ந்து மாய்த்து ஆறுதல் சொன்ன நீங்கள் எனது பக்க தவறுகளை ஏன் எடுத்துரைக்கவில்லை. பிடிவாதம் பிடிக்கவும் முரண்டு பிடிக்கவும் அட்டகாசம் செய்யவும் சொல்லிக்கொடுத்தது ஏன்.

எல்லாமே என்னுடை விருப்பம் தான் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லிவிட்டு. இப்போது இப்படி செய்வது தவறு அப்படி செய்த்தது தவறு என்று இடித்து கூறுவது ஏனோ...... ஏன் இவைகள் அன்றைக்கு தெரிவியவில்லையோ........

எனக்கு தான் கோபம் கண்ணை மறைத்தது உங்களுக்கு எது மறைத்தது. சின்ன கீறலாக இருந்ததை இன்றைக்கு திருப்பவோ திருத்தி அமைக்க வாய்ப்பே இல்லா நிலைமைக்கு எடுத்து செல்ல தைரியம் சொல்லி வழி ஏற்படுத்தி கொடுத்தவர்களான நீங்களே இன்றைக்கு என்னை குற்றம் சொன்னால் எப்படி.

இப்படி மொத்தமாக எல்லாம் போகும் என்று எடுத்து சொல்லி இருந்தால் இவைகளை வேறு விதமாக நடத்தி இருக்கலாமே. இப்படி முகம் காட்டமுடியாத அளவிற்கு சென்று இருக்க மாட்டேனே........

எனது கோபத்தை இத்தனை வருடங்கள் வீட்டுக்குள் காட்டியது போதாது என்று நான் சொன்ன போது, அந்த பழி வாங்கலே போதும் என்று சொல்லி இருக்கலாமே. அதை விடுத்து இப்படி எல்லாம் நான் செய்ய போகிறேன் என்று சொன்ன போது எல்லாம் சரி சரி என்று சொல்லிவிட்டு. இப்போது என்னை மட்டும் குற்றவாளியாக ஆக்கிவிட்டு நீங்கள் எல்லோரும் வெளியில் நின்றால் என்ன பொருள்........


Monday, November 19, 2012

இங்குலீசு விங்குலீசு - திரைவிமர்சனம்

ஆங்கிலம் எழுத பேச தெரியாதது என்னவோ ஒரு தேவகுத்தம் என்று ஆளாக்ளுக்கு இடித்துரைப்பதை இடித்து உரைத்து இருக்கிறது இந்த படம்.

படத்திற்கு கதை ஒற்றை வரிதான் என்றாலும் அதை மிகவும் அழகாக இந்திய பள்ளி, கடைதெரு, அமெரிக்க தூதகம், அமெரிக்கா, அமெரிக்க உணவு விடுதி, பேச்சு மொழி வகுப்பு என்று சுற்றி சுற்றி வளைய வருகிறது திரைக்கதை.

எவ்வளவு செய்தாலும் தனது குறையையே குத்திக்காட்ட வேண்டுமா என்று நாயகி மனதில் கொள்ளும் வசனங்கள் அருமை.

தனது பிள்ளைகள் முதல் அப்போது தான் பார்க்கும் வெளியாட்கள் வரை அனைவரும் ஒரே அடியாக இப்படி நடந்துகொள்வதை நினைத்து நோகும் காட்சிகள் அருமை. இதன் தாக்கத்தில் மகளின் ஆசிரியரிடம் மகளை பற்றி விசாரிக்கும் போது அவர் மத்த பாடங்களை பற்றி எல்லாம் சொல்லும் போது வெறுமனே கேட்டுவிட்டு ஆங்கிலம் என்று எதிர்பார்புடன் கேட்பதும் அவர் நல்லா படிக்கிறாள் என்று சொல்லும் பதிலுக்கு முகம் மலருவதும் அருமையான காட்சி அமைப்புகள்.

பெண் என்று வந்துவிட்டால் சமுதாயத்தில் ஆண்களின் அணுகுமுறைகளில் எவ்வளவு முரண்பாடுகள் உள்ளது என்று அருமையாக காட்டியுள்ளார்கள்.

அதே சமயத்தில் ஆங்கில ஆசிரியரை சீண்டிப்பார்க்க சந்தர்பம் கிடைத்த போதும், அதை தவிர்க்கும் படி நாயகி கூறும் காரணங்கள் அந்த பாத்திரத்திற்கு ஆண்கள் மேல் வெறுப்பு இல்லை என்று தெளிவாக காட்டுவதற்கா அனைத்து இருப்பது அருமை. பெண்களை பற்றிய செய்கைகள் வந்தாலே, அவர்களுக்கு ஆண்கள் என்றாலே பிட்டிக்காது என்று காட்டமுயலும் கூட்டத்தின் வாயை அடைக்க இந்த காட்சி போலும்.

இந்திய வகை கதைகள் படங்கள் அதுவும் பெண்கள் சம்பந்தபட்ட செய்கைகளாக இருந்தால் விதியை துணைக்கு அழைத்து நொந்துகொள்வது வழக்கம், இந்த அம்சம் படம் நெடுக்க அமைத்து இருப்பதை தவிர்த்து இருக்கலாம், குறிப்பாக கடைசி நிமிடத்தில் இலட்டு சிதறும் படி அமைத்து இருக்கும் காட்சிகள்.

இவ்வளவு நேரம் படம் சென்றதே தெரியாத அளவிற்கு திரைகதை அமைத்தற்கும், ஆண்களை சீண்டாமல் பெண்களின் மனப்போராட்டங்களை நினைத்தால் வெற்றிகொள்ளலாம் என்ன வயதாக ஆனாலும் சரி எந்த இடமாக இருந்தாலும் சரி என்று அருமையாக சொன்ன இயக்குனருக்கு பாராட்டுகளை சொல்வோம்.

இந்த படத்தின் கதையில் வாழ்ந்துகாட்டிய சிறீதேவிக்கு வாழ்த்துகள் என்ன அருமையான நடிப்பு. மகனின் காலில் அடிப்பட்ட நிலையில் கூட இல்லையே என்ற காட்சியில், கதையும், வசனமும், இயக்குனரும் சிறீதேவியும் போட்டி போடும் காட்சியில் மிஞ்சி நிற்பது சிறீதேவியே, வாழ்த்துகள். இந்த இயக்குனரிடம் இன்னும் அதிகம் எதிர்பாக்க வைத்துள்ளார்.

Thursday, November 15, 2012

இந்தியா தலையில் இன்னும் ஒரு குட்டு கொட்டியது இலங்கை - இந்தியா ஒரு துப்பு கெட்ட தேசம்

அமெரிக்க அதிபர் ஒபாமா தேர்தல் முடிந்து தனது முதல் சுற்றுப்பயணத்தில் பர்மா வருகிறார் என்ற செய்தி கசிந்ததும். மக்களாட்சியை மலர செய்வோம் என்று இலங்கையில் அமெரிக்கா கால்பதித்து விடுமோ என்ற பீதியில் சீனா அவசர அவசரமாக இலங்கையில் மிகவும் பாதுகாப்பாக உள்ள சிறையில் தமிழர்கள் புரட்சியில் இறங்கினார்கள் என்ற நாடகத்தை நடத்திமுடித்து இருக்கிறது.

இந்த கலவரத்தை பயன்படுத்தி அந்த சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து இந்தியர்களும் கொல்லப்பட்டார்கள் என்ற கசப்பான உண்மை வெளியே தெரியாது மறைத்துவிட்டார்கள் இலங்கையர்.

இலங்கை சிறையில் ஏன் இந்தியர்கள், கடலோரங்களில் மாட்டும் தமிழர்களை இந்த சிறையில் தானே வைத்து கொடுமைபடுத்தி கொல்கிறார்கள். அப்படி பிடித்து சென்றவர்கள் தான் இந்த கலவரத்தில் பலிகொடுக்கப்பட்டவர்கள்.

எப்படி இந்த கொடூரம் நிகழ்த்தப்பட்டது, சிங்களத்து மொழியிலே சொல்வதென்றால். "அங்கே இருந்த கலககாரர்களுக்கு துப்பாக்கி சுடத்தெரியாது. அப்படி சுடத்தெரியாத காரணத்தினால் இறந்தவர்களது எண்ணிக்கை 100ஐ மட்டும் தொட்டது. இல்லை என்றால் இழப்பு அதிகமாக இருக்கும்"

அப்போ புலிகள் என்று சொல்லிக்கொண்டு அப்பாவி மக்களை சிறை அடைத்து வைத்து கொடுமை படுத்துவதை சிங்களம் இந்த வாக்கியங்களில் உறுதி கூறுகிறது.

துப்பாக்கியை பயன்படுத்தக்கூட தெரியாத மக்கள் எப்படி ஆயுத கிடங்கை கைப்பற்றினார்கள். அது என்ன குரங்கு கையில் இருக்கும் தேங்காய மற்றவர் வந்து பறித்து செல்ல. இல்லை சின்ன பிள்ளையின் கையில் கொடுக்கப்பட்ட வடையா காக்கா வந்து கொத்திக்கொண்டு போக.

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும். 3 ஆண்டுகள் உணவில்லாமல் துயிலில்லாமல் நலிந்து இருக்கும் மக்கள் சிறை அரண்கள் மீது ஏறி வீர வசனம் பேசியதாக படங்கள் வேறு. என்னே உங்கள் அறிவு.

ஐ நாவை ஏமாற்ற இந்த நாடகமா, அல்லது மியான்மர் வரும் அமெரிக்காவை ஏமாற்ற இந்த நாடகமா. கொஞ்சம் விட்டால் மிஞ்சி இருக்கும் பலகீனமாக கிடக்கும் முதியவர்கள் முதுகு நிறைய வெடிமருந்துகளை சுமந்து வந்து அதிபரை கொலை செய்ய வந்தார்கள் என்றும். அவர்கள் திட்டம் இட்டதை நேரில் பார்த்ததாக கருணாவும், அரசுக்கு துப்பு கிடைத்தது என்று இடக்குலசு தேவாவும் சொல்ல வைப்பார்கள் போலும்.

இத்தனை இந்தியர்கள் கொத்தாக கொன்று குவித்த செய்திகள் வந்தூம் கூட இந்தியா மியான்மரில் அமெரிக்கா வரும் போது எந்த இந்திய 5 நட்சத்திர உணவத்தில் இருந்து உணவு கொடுக்கும் ஒப்பந்தத்தை கொடுக்க வேண்டும் என்றும். இந்திய முதலாளிகளின் பர்மா முதலீடுகளை எப்படி பாதுக்காக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து பேசிக்கொண்டு இருக்கிறதே!!!!!!!!!!

இந்தியா எங்கே அமெரிக்கவுடன் இணைந்து இலங்கையில் மறுபடியும் கால்பதித்து விடுமோ என்று மியான்மரில் வியாபாரம் செய்வதோடு நிறுத்திக்கொள் இல்லை என்றால் இப்போது சிறையில் உள்ள இந்தியர்களை கொன்றது போல் நாளை எல்லையில் வந்து பாக்கிட்த்தானம் நாள்தோறும் பீரங்கி குண்டுகளை வீசுவதை போல் நாங்களும் வீசுவோம் என்று சொல்லாமல் சொல்லி முடித்து இருக்கிறது.

என்ன ஒரு அரை மணி நேரம் ஆகுமா இந்த சிங்களத்தின் வான் படையையும் , இராணுவத்தையும், கடற்படையையும் அழிக்க இந்தியாவிற்கு. அடுத்த அரை மணிக்கு எல்லாம் இலங்கையில் உள் இருக்கும் காவலர் படை நடவடிக்கையின்றி சரணடைய செய்துவிட்டு தனது கடற்படையை அங்கே நிறுத்திவிட்டு பிறகு பேச வேண்டும் தன்மானம் உள்ள நாடாக இருந்தால்.

ஆனால் இந்தியாவிற்கோ இந்திய முதலாளிகள் இலங்கையில் கட்டியுள்ள கட்டுமானங்களையும், மியான்மரில் அமெரிக்க அதிபரின் வருகையின் போது வங்கும் விருந்துகளை கவனிக்கும் ஒப்பந்தங்களும், மேலும் பர்மாவில் இது வரை போட்ட முதலீடுகளும் தான் முக்கியமாக தெரிகிறதே அன்றி தனது சாதாரண மக்களை பற்றி எந்த கவலையும் இந்தியாவிற்கு இல்லை.

இந்தை நன்கு உணர்ந்த சீனம், இலங்கையின் விரலால் இந்தியாவின் தலையில் குட்டுகிறது. இந்தியாவும் தலை குணிந்து குட்டு வாங்க்கொண்டு சிரிக்கிறது. என்ன தேசம், இந்த தேசத்திற்கு இராணுவம், வான்படை, கடற்படை. பேசாமல் எல்லோரையும் அரபு நாடுக்கு கூலி வேலைக்கு அனுப்புவோம் நாட்டிற்கு காசாவது வரும்.

இதில் அப்துல் கலாம் கனவு கண்டதை போல் 2020ல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று இளைஞர்களுகு கனவு வேறு. முதலில் நல்லரசு ஆக சொல்லுங்கள் பிறகு வல்லரசு ஆகுவோம்.

நேருவின் தலைமையிலும் இந்திராவின் தலைமையிலும் பாக்கிட்தானத்தை பந்தாடிய இந்திய முப்படையா இப்படி இலங்கையிடம் தொடை நடுங்கி நிற்கிறது, என்ன அவமானம்...................................

Monday, November 5, 2012

சாட்டை படமும் A Ron clark story படமும் திரைவிமர்சனம்

விச்சை தொலைக்காட்சியில் வரும் 7சி தொடரில் நாம் பார்த்து பழகிப்போன ஆசிரியரின் கண்ணியமான கண்டிப்பு.

ஒரு ஆசிரியரின் முயற்சி எந்த அளவிற்கு வீரியம் வாய்ந்தது என்று காட்டும் படம் தான் ஆங்கில படம் A Ron clark story.

முதலில் ஆங்கிலத்தின் கதையை பார்த்துவிடுவோம்.

கதை துவங்கும் போது ஆசிரியர் தான் வேலை பார்க்கும் பள்ளியில் இருந்து விலகுவதாக சொல்லி வெளியேறுவார். என்ன காரணம் என்று கேட்டதற்கு எனக்கு இன்னமும் சவாலாக இருக்கும் ஒரு பள்ளியை தேடி செல்ல போகிறேன் என்று சொல்வார்.

பிறகு நியூயார் நகரில் மிகவும் பின் தங்கிய பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சென்று வேலை கேட்பார். தலைமை ஆசிரியரோ வேலை இல்லை என்று சொல்ல வீதிதளில் அலைந்து திரிந்து கடைசியாக ஒரு ஆசிரியர் உயிருக்கு பயந்து ஓடிய இடத்தை தனக்கு கொடுக்கும் படி கேட்பார்.

அந்த வகுப்பில் இருக்கும் பிள்ளைகளோ 7சியில் வரும் வால் பிள்ளைகளை போல் வால்தனம் செய்வார்கள். அந்த சின்னஞ் சிறு பிள்ளைகளை கவர்ந்து அவர்களை படிக்க வைத்துவிடவேண்டும் என்று ஆசிரியர் எடுக்கும் முயற்சிகளை எல்லாம் அந்த பிள்ளைகள் தவிடு பொடியாக்கும் இடங்களை மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் படமாக்கி இருப்பார்கள்.

அப்படி ஒரு நாள் ஒரு நிமிடம் மாணவர்களை கவர்ந்த அந்த ஆசிரியர், மாணவர்களை மகுடிக்கு மயங்கிய பாம்புகள் போல் இப்படி படியுங்கள் அப்படி படியுங்கள் என்று சொல்லும் எல்லாம் செய்யும் நல்ல பிள்ளைகளாக மாற்றம் கொள்ள வைப்பர்.

அவரது வகுப்பில் பிள்ளை பெற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கும் ஒரு பெண்ணின் படிப்பை பாதியில் நிறுத்த அவரது தாயார் நினைக்கையில் வீடு வரை சென்று வாதாடும் இடமாகட்டும், சமைக்க என்ற சிறுமி செய்யும் அலும்பு தாங்க முடியாமல் பள்ளியை விட்டு வெளியேறி ஊர் சுற்றி மனதை ஆற்றும் காட்சியாகட்டும், இப்படி எல்லா இடங்களிலும் அந்த ஆசிரியரின் பாத்திரம் மனதை அள்ளிக்கொண்டு செல்லும்.

கடைசியில் ஒன்றும் உருப்படாத வகுப்பு என்று இருந்த அந்த வகுப்பு அந்த வட்டாரத்திலே முதல் இடத்தில் அந்த வருடமே வரும்.

ஆங்கில படத்தில் உச்சம் ஆசிரியருக்கு தொற்று காய்ச்சல் வந்து பள்ளிக்கு வரக்கூடாது என்றாகிவிடும். அந்த வேளை பார்த்து தான் தேர்வும் பக்கத்தில் வர. மாணவர்களுக்கு எடுக்க வேண்டிய பாடங்களை படப்பதிவு செய்த்து வகுப்பு நடக்கும் நேரத்தில் மாணவர்களுகு படமாக ஓட்ட, ஆசிரியரே இல்லாத வகுப்பில் ஆசிரியர் நேரில் பாடம் நடத்தும் போது கவனிப்பதை போல் மாணவர்கள் கவனிப்பதையும் கேள்விகளு பதில் சொல்வதையும் தலைமை ஆசிரியர் பார்ப்பது போல் ஒரு காட்சி அமைத்து இருப்பார்கள் அருமையோ அருமை.

இப்படி எல்லாம் ஆங்கிலத்தில் வந்த படத்தை தான் மிகவும் அழக்காக இந்திய அதுவும் தமிழ் மசால பூசி அருமையாக தயாரித்து இருக்கிறார்கள்.

திரைக்கதையில் காட்டிய கவனத்தை இன்னமும் கதையிலும் காட்டி இருக்கலாம். காட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் சம்பவங்கள் இல்லை என்றது குறையே.

உதாரணத்திற்கு பழனி அறிவிடம் காதல் வேண்டாம் என்று சொல்லும் காட்சி மிகவும் செயற்கையாகவும் நாடகம் பார்க்கும் ஒரு உணர்வையும் கொண்டு வருகிறது. தம்பி இராமையா சண்டை போடும் இடங்கள் தவிர மற்ற காட்சிகள் அனேகமாக செயற்கையாக இருக்கிறது.

தலைமை ஆசிரியரை துணை தலைமை ஆசிரியர் வீடு புகுந்து தாக்கும் இடத்தில் என்ன தான் ஏழை ஆசிரியராக இருந்தாலும் வீடு புகுந்து அடிக்க ஒன்று நெருங்கிய சொந்தமாக இருக்க வேண்டும் இல்லை துணை தலைமை ஆசிரியர் சுத்த பொறுக்கியாக இருக்க வேண்டும். காலில் போடும் காலுறையின் மணம் வீச்சை கூட பொறுட்படுத்தாத அப்பாவி மனிதனாக காட்டிவிட்டு வீடு புகுந்து அடிப்பவராக காட்டும் காட்சி பயங்கர செயற்கை தனமாக இருக்கிறது.

அறிவழகி தமிழுக்கு கிடைத்து இருக்கும் அடுத்த அஞ்சலி. குரலிலும் சரி முகபாவங்களிலும் சரி அஞ்சலியை முதல் படத்தில் பார்த்ததை போல் இருக்கிறது. நான்றாக வருவார் என்று நம்புவோமாக.

இயற்பியல் ஆசிரியர் என்று பெயருக்கு மட்டும் சொல்கிறார்கள், இயற்பியலில் கொஞ்சம் சொல்லித்தருவது போல் காட்சிகள் அமைத்து இருந்தால் இன்னமும் பலமாக இருந்து இருக்கும்.

இப்படி ஆயிரம் குறைகள் சொன்னாலும் சாட்டை அழகாகவும் அருமையாகவும் அமைந்து இருக்கிறது. இன்னமும் இதை போல் மக்களுக்கு தேவையான படங்களை எடுக்கும் இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நமது நன்றியை தெரிவித்துக்கொள்வோம்.

3 ஆண்டுகள் கடந்து இன்னமும் மூக்கு சிந்தும் சிங்களம் - அசிங்க அரசியல்

ஐ நா மனித உரிமை குழு சிங்களத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றியதா அல்லது கள்ள வாக்குறுதிகளாவே இன்னமும் இருக்கிறதா என்று அதிகார பூர்வமாக விசாரிக்க வருகிறது என்று வந்த செய்திகளில் இருந்து இன்று வரை இப்படி செய்திகள் கசிந்த வண்ணம் இருக்கிறது.

புயலுக்கு பிறகு மிக கொடிய ஆயுதங்களை கண்டுபிடித்தோம், அது சீனாவில் இருந்து கொண்டுவர பட்டுள்ளது. அது எந்த நாடு புலிகளுக்கு வழங்கி இருக்கும் என்ற ஆருடம்.......

இதிலே இன்னனும் ஒரு தளம் புலிகள் கையாண்ட தந்திரம் என்ற தலைபில் ஒரு தொடர்.....

இந்தியாவில் இருக்கும் சிங்கள கைகூலிகள் முக்கியமான படக்காட்சிகளை மறைத்தார் ஏன் எப்படி என்று தினசரிகளில் செய்திகள் வரும்படி செய்கிறார்கள்.....

ஆக மொத்தத்தில் புலிகளின் பெயரை சொல்லி பிச்சை எடுப்பதை சிங்களம் இன்னமும் நிறுத்தவில்லை. அதிலே சல்லடையாக தேடிய போது கிடைக்காத ஆயுதங்கள் புயலில் தானாக வெளியில் வந்து உட்கார்ந்துகொண்டதாம். அப்போ சிங்களம் என்ன மாவுசலிக்கும் சல்லடையை கொண்டு தேடினார்களா இல்லை வீடு சலிக்கும் சல்லடையை கொண்டு தேடினார்களா.....

மீதம் இருக்கும் மக்களை எப்படி எல்லாம் சித்திரவதை செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்து இந்த நூற்றாண்டின் இணையில்லா கொடுமைகளுக்கான புத்தகங்களை எழுதிக்கொண்டு இருக்கும் சிங்கள வெறியின் ஈன செயல் அல்லவா இந்த செய்திகள்.

இதோடு நிறுத்தினார்கள், நல்லவேளையாக புலிகளை இங்கே பார்த்தோம் அங்கே பார்த்தோம் என்று சொல்லிக்கொண்டு ஆப்ரிகா அண்டார்டிக்க என்று காவடி தூக்கிக்கொண்டு போகாமல் இருக்கிறார்களே..............

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தான் நீதி கேட்டு மக்கள் நிற்கும் போது, உலகில் இருக்கும் விதவிதமான காரணங்களை எல்லாம் சொல்லி உயிர் போகும் நேரத்தில் காப்பாற்றுகிறேன் என்று வந்து தலையில் இருக்கும் தொப்பியை கழட்டிவிட்டு மௌனமான ஒரு அஞ்சலியுடன் செல்வார்கள் ஆட்சியர்கள், காவல் துறையினர் எல்லோரும்.

ஆனால் ஐ நாவோ உலகில் மிகவும் முன்னேறிய நாடுகளின் வழிக்காட்டுதலில் நடக்கும் அமைப்பு எப்படி இப்படி செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு கொடுத்ததை போல் சிங்களம் சம்பந்தபட்ட காரியாங்களில் செயலாற்றுகிறது என்று புரிய இல்லை.

இவ்வளவு நடந்த பிறகும் சிங்களத்தின் கைகளிலே மக்களின் விதியை கொடுத்துவிட்டு ஒன்றும் செய்யக்கூடாது என்ன என்று செல்லமாக் சொல்லி 3 ஆண்டுகள் கழித்து வந்து தான் பார்பேன், அது வரைக்கு யார் வந்து சொன்னாலும் அவைகள் எங்களின் காதுகளில் கூட விழாது என்று எப்படி இந்த அமைப்பால் இருக்க முடிகின்றது................

கொடுமை நடக்கிறது என்ற வதந்தி வந்தாலே ஓடிச்சென்று ஐ நாவின் படைகளை நிறுத்தி, நீங்கள் இங்கே வரக்கூடாது, அவர்களும் இங்கே வர மாட்டார்கள் எல்லாம் பேசி முடித்துக்கொள்வோம் என்று சொல்வார்களா இல்லை 3 ஆண்டுகள் கழித்து வந்து பார்ப்போம் என்று சொல்லி செல்வார்களா.......

ஒரு வேளை சிங்களத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் நிறைய பணமும் வெளி நாடுகளில் முதலீடு செய்ய நிறைய முதலீடும், அவர்கள் வாழும் நிலத்தில் பெற்றோலியமும் இருந்து இருந்தால் அமெரிக்கா முதல் ஆப்ரிக்கா வரை முக நூலில் மூச்சுக்கு 300 பதில்கள் பெறுவதை போல் முற்றுகை இட்டு இருப்பார்கள் போலும்.

மனிதனுக்கு இரக்கம் கூட இனத்தையும், நிறத்தையும், பணத்தையும் பார்த்துதான் வரும் போலும். ஆலோசனைகளும் அறிவுரைகளும் அடுத்தவர்களுக்கு தான் போலும், எந்த நாடும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது உலகம்.

Wednesday, October 24, 2012

பாவம் அமெரிக்கா யார் கையில் மாட்டி சின்னா பின்னமாக போகிறதோ....

அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் போட்டியாளர்கள் விவாதித்துக்கொண்டதில் ஒன்று உறுதியாக தெரிகின்றது.

சென்ற முறை மொக்கைனை பலியாடாக அனுப்பியது போல் இந்த முறை இராம்னியை அனுப்பி இருக்கிறார்கள்.

சென்ற முறை மொக்கைனை பலியாடாக அனுப்பியது போல் இந்த முறை இராம்னியை அனுப்பி இருக்கிறார்கள்.

நமது ஊரில் வேடிக்கைக்காக சொல்வது போல் தேர்வுக்கு பசு மாட்டின் கட்டுரையை மனப்பாடம் செய்துகொண்டு போனவனை தெண்ணை மரத்தை பற்றி எழுத சொன்னதற்கு, பசு மாட்டை பற்றி முழுவது எழுதிவிட்டு அந்த மாட்டை இந்த தெண்ணை மரத்தில் தான் கட்டுவார்கள் என்று எழுதியது போல் இருந்தது இரம்னியின் பேச்சு.

இதிலே கேள்விகளை மட்டும் தொடுத்துவிட்டு பதிலிக்கு இது என்ன அது என்ன தெரியுமா என்று ஒபாமா கேட்டல் என்னை தாக்குவதில் எந்த பயனும் இல்லை என்று புலம்பியதையும் பார்க்க முடிந்தது.

 இன்றைய அமெரிக்க பொருளாதாரம் தடுமாறம் கொள்ள காரணமே முதலாளிகள் கொள்ளை இலாபத்தை மனதில் கொண்டு சேவைகளை அயலகத்திற்கு அனுப்பிவிட்டு, உள்ளூரில் வேலையும் இல்லை, செலவு செய்ய காசும் இல்லை.

கிளாடியேட்டர் படத்தின் இறுதி சண்டைக்கு முன்பு அந்த பொடியன் நாயகனின் கையை குத்தி அசைக்க முடியாதபடி ஆக்கிவிட்டு, மக்களின் முன் ஒரே வீச்சில் அவனை கொன்று காட்ட நினைப்பான். ஆனால் நடந்ததோ வேறு, வலது கை இல்லை என்றாலும் ஒரு வீரன் வெற்றி கொள்வான் என்று காட்டி செல்லும் அந்த பாத்திரம்.

அது போல, நாட்டையே பிச்சை பாத்திரம் ஏந்த வைத்துவிட்டு. மக்களை ஏமாற்றியது போதாது என்று ஓய்வு பெற்றவர்களுக்கு கொடுக்கும் மருத்துவ உதவிகளிலும் பங்கு வேண்டும் என்று மனதாற சொல்லும் முதலாளிகளின் வார்த்தைகளில் என்ன நீதியை எதிபார்க்க முடியும்.

இந்த 4 ஆண்டுகளில் பாக்கிட்தானம் ஆட்டம் போடாமல் அமைதியாக இருப்பதற்கு காரணம், அவர்களின் திரை மறைவு வேலைகளை கண்டித்து, அவர்களது அணு ஆயுதங்களின் வெடிப்பான்களை இசுரேலும் அமெரிக்க கடற்படையும் பிடுங்கி வைத்துள்ளதை திருப்பி கொடுக்க சொல்கிறார் போலும்.

பேச்சின் துவக்கத்தில் ஆசிரியர்களை தேவை இல்லாதவர்கள் என்று சொல்லிவிட்டு, பிறகு கடைசியில் ஆசிரியர்களை எனக்கும் பிடிக்கும் என்று சொன்ன அந்த நயவஞ்சக வார்த்தைகளை மக்கள் எப்படி விட்டு கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.

 நாளைய சமுதாயத்தை அறிவுள்ள சமூகமாக படைக்க வேண்டும், அது தான் அமெரிக்காவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல போகிறது என்று சொன்னால், படிப்பு எல்லாம் மக்களுக்கு தேவை இல்லை, அதை விடுத்து இராணுவத்திற்கு இன்னமும் நிறைய ஆட்களை எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.

வேலை பார்க்க தெரியவில்லை, குறைந்த அளவிற்கு பேச தெரிந்த ஆளாவது பார்த்து முதலாளி கட்சி அனுப்பி இருக்கலாம். பாவம் இராம்னி அடுத்த சார பாலின் ஆகப்போகிறார்.

Tuesday, October 23, 2012

ஸ்ரீவித்தியா அம்மா ஆறாம் ஆண்டு நினைவு




நீ இல்லா இவ்வுலகில் ஆறாம் ஆண்டு
மௌனமாய் மறையும் ஆண்டுகள்
இன்னமும் ஆழாமாய் பதிக்கும் வடுக்கள்
நிம்மதியாய் நீ இரு, அங்கே நானும் வரும் வரை



http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=pef1AxG-6tc

Monday, July 16, 2012

இளையராசாவும் - இரகுமானும்

இவர்கள் இருவரும் இரசிகர்களின் மத்தியில் அகப்பட்டுக்கொண்டு படும் பாடு, அவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் கூட இவ்வளவு கருத்து வேறுபடு இருந்து இருக்க வாய்ப்பே இல்லை.

இராசாவின் இரசிகனாக இருந்தால் இரகுமானை கண்டபடி திட்டி தீர்க்கவேண்டும், இல்லை அவருக்கு இசையறிவு இல்லை, அப்படி இல்லை என்றால் இராசா அளவிற்கு இல்லை என்றாவது மட்டம் தட்டவேண்டும் என்று இவர்களுக்குள் வேண்டுதல் போலும்.

இரகுமானின் இரசிகர்கள் கேட்கவே வேண்டாம், இராசாவின் இரசிகர்களாவது பாவம் என்று பார்ப்பார்கள், ஆனால் இரகுமானின் இரசிகர்கள் உண்டு இல்லை என்று செய்துவிட்டு தாம் மறுவேலை பார்ப்பார்கள்.

என்னை பொருத்தவரை இந்த இரண்டு இசைக்கலைஞர்களும் அவரவர் பாணியில் தன்னை நிறுபிக்க என்றும் தவறியதில்லை.

இன்று இசையின் தடம் மாறுகிறது என்றதற்காக இராசாவின் இசை மாசுபட்டது என்று பேசுவது எந்த வகயிலும் பொருந்தாத ஒரு வாதம், முட்டாள் தனமும் கூட.

இராசாவின் பாடல்கள் நெஞ்சை அள்ளிக்கொண்டு இருக்கும் நேரத்தில் "வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை" பாடல் நெஞ்சை அள்ளவில்லை என்று ஒருவரும் மறுக்க முடியாது. அந்த இசையின் பரிணாமம் வேறு, இராசா இசையின் பரிணாமம் வேறு. இரண்டும் மனதை வருடிச்செல்லும் தாலாட்டு என்றதில் இரண்டு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை.

எனக்கு இராசாவின் பாடல்கள் உயிர் எந்த புது இசை வந்தாலும் கவர்ந்தாலும், இந்த நிலையில் மாற்றம் வரப்போவது இல்லை.

காரணம் சின்ன வயது முதல் தனிவாழ்க்கையின் துவக்கம் வரை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதிது புதிதாய் தோன்று இராசாவின் இசை மழையில் நனைந்து உரம் பெற்று வளர்ந்த நெஞ்சம். அவரின் ஒவ்வொரு பாடலும் வாழ்கையில் கடந்து வந்த பாதையின் நல்ல நல்ல நினைவுகளை நினைவு படுத்துவது மட்டும் இல்லை, சின்ன வயதாக அந்த காலத்திற்கே அழைத்து சென்று மனது பார்த்துவரும் ஒரு உணர்வை கொடுப்பது தான் காரணமாக இருக்கும்.

எப்படி அந்த பாடல்கள் மனதில் இப்படி ஒரு இராசயண மாற்றம் செய்கிறது. பாடல் காரணமா அல்லது இனிமையான அந்த நினைவுகள் காரணமா என்றால் அது பாடல் தான் முதல் காரணம் என்று தெளிவாக சொல்ல முடியும்.

இரகுமானின் வரவுக்கு பிறகு வந்த மாற்றத்தில் சென்னை ஐஐடியில் 10000 வாட் இசை அமைப்பில் நெஞ்சு எலும்புகள் அதிர, ஊர்வசி ஊர்வசி என்ற பாடல் கேட்டு பிரமிக்காமல் இல்லை. இருந்தாலும் அந்த பாடலை மறுபடியும் கேட்கும் போது மனது அவ்வளவு இனிமையாக அந்த காலத்தை சென்று பார்த்து வருவது இல்லை தான். அப்படி ஒரு இராசாயண மாற்றம் கொள்ளுவதும் இல்லை.

காரணம் இதுவாக கூட இருக்கலாம், வானொலிகளானாலும் சரி, தொலைகாட்சிகளானாலும் சரி. ஒரு மணி அல்லது இரண்டு மணி வரை புதுவரவுகளை கொடுத்தாலும் மீதம் இருக்கும் நேரத்தை இராசாவும், அவருக்கும் முன்னால் உள்ளவர்களும் தான் ஆகிரமித்து கொள்கிறார்கள்.

இதிலே இப்போது இரவு நேரத்தை ஆக்கிரமிப்பதில் இராசாவும் ஆதிக்கம் செலுத்துகிறார். அடுத்த பாட்டை கேட்டுவிட்டு தூங்கிவிடலாம், அட அடுத்தது இன்னமும் இனிமையாக இருக்கிறதே, அட அடுத்தது இன்னமுன் இனிமையாக இருக்கிறதோ என்று கணக்கில் அடங்கா நேரம் தூக்கத்தை விட்டு விலகி மனது பழைய நினைவுகளில் நைத்து துவைத்து காயப்போடுவிடுவார் இராசா. காலையில் எழுந்து வரும் போது தவத்தில் இருந்து எழுந்தவரை போல் மனதில் அப்படி ஒரு அமைதி நிலவும்.........

இந்த அளவிற்கு எண்ணிகையிலும் சரி, விதங்களிலும் சரி முதல் இடத்தில் இருப்பது இராசா என்றே சொல்லலாம். இருந்தாலும் அவருக்கு முன் இசையமைத்த இசையமைப்பாளர்களுக்குத் தான் இரவு நேரம் என்று ஒதுக்கிவைத்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. மனதை அள்ளும் மெல்லிசையாகவும், வார்த்தைக்கு வார்த்தை கருத்துகளை அள்ளிவீசும் போர்வாளாகவும் பழைய பாடல்கள் மனதை தாலாட்டும் விதமே தனி சுகம்.

வார்த்தைகளுக்கு மெட்டா மெட்டுக்கு வார்த்தைகளா என்று பிரித்து பார்க்கமுடியாத இரகம் அவைகள். இதையும் தாண்டி, நமக்கு பிடித்த பாடல் என்று அழகாக அதிகம் சிரமம் இல்லாமல் எவரும் பாடி பார்க்கவும் முடியும் படி பாடல்கள் அமைந்து இருப்பதுவும்......

இப்படி எந்த எந்த காரணங்களை கொண்டு வந்து ஞாயப்படுத்தி பார்த்தாலும் அந்த பழைபாடல்கள் பிடித்து போவதற்கு சரியான காரணங்களாக அவைகள் இருக்க போவது இல்லை. உண்மையான காரணம், எளிமையாகவும், இனிமையாகவும் இருபது தான் காரணமாக இருக்கும். அது மட்டும் இல்லாமல், நமது மன உணர்வுகளை அழகாக மிகைபடுத்தி நமக்கே காட்டும் பாடல்களாக அவைகள் இருப்பதும் தான் காரணமாக இருக்கும்.

அதிக புதிய பாடல்கள் வந்துக்கொண்டு இருப்பதாலும், அலுப்பு தட்டும் இடி இசைகள் மனதை இடிப்பதுவுமாக இருப்பதாலும், மனது மெல்லிசையை தேடி அலைகிறது, இராசாவின் ஆர்ப்பாட்டமான இசைக்கூட மெல்லிசையாக மனதிற்கு தோன்ற வைத்த பெருமை இந்த கால இடி இசைகலைஞர்களை தான் சேரும்.

இரகுமானிடம் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்து நிற்கும் இடத்தில் தான் நாம் இன்றைக்கு இருக்கிறோம். இந்த ஏமாற்றத்தை அவர்தான் நிறப்ப வேண்டும். வருடத்திற்கு 3 படங்கள் வரை ஆலிவுட்டில் வருகிறது. வருமானத்தையும் தாண்டி புகழுக்காக தமிழில் அவர் இனி இசை அமைப்பாரா என்றதே சந்தேகம் தான். அப்படியே தமிழில் இசை அமைத்தாலும் மனதை வருடும் இசையாக அமைந்தாலும் எத்தணை படங்கள் இசையமைத்து விடப்போகிறார்.

ஏமாற்றம் அடைந்த இரசிகராக மற்ற இசையமைபாளர்களின் பாடல்களை கேட்டு தலையசத்து காலம் தள்ளுவதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அந்த காலத்தில் வி குமார் என்ற ஒரு இசையமைப்பாளர் இருந்தார். அவரது பாடல்கள் அனைத்தும் இனிமையாகவும் அருமையாகவும் இருக்கும். ஆனால் குறைந்த அளவிலேயே அவரால் பாடல்கள் கொடுக்க முடிந்தது.

தனது இரசிகர்களை ஏமாற்றிவிட போகிறாரா அல்லது தானும் மற்றவர்களை போல் மக்களின் மனதில் என்றைக்கும் தாலாட்டாக இருக்க முயற்சிகள் மேற்கொள்கிறாரா என்று பார்ப்போம்.

இராசா இந்த மாதிரியான கணக்குகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு என்றைக்கும் இருப்பார் இராசாவாக. அவர் ஒரு தனி சாம்ராசியம். புதிதாக வளர்ந்துவரும் இயக்குனர்கள் தயங்காமல் அவரின் இசையை கேட்டு வாங்கி எங்களுக்கு கொடுக்க வேண்டும் செய்வார்களா புதியவர்கள்....................

இரா.நல்லகண்ணு அவர்களுடன் ஒரு சந்திப்பு -2012

2012 பெட்நாவில் கலந்துக்கொண்டு விட்டு நாடு திரும்பும் முன் அமெரிக்க தமிழர்களை சந்திக்கும் பயணமாக சிக்காகோ வந்த ஐயா நல்லகண்ணு அவர்களை சந்தித்தோம் ஒரு கலந்துரையாடலுக்காக.

சிறிய கூட்டமாக இருந்தாலும் தயக்கமே இல்லாமல் எங்களுடன் கலந்துரையாடினார். அரசியல் மேடையாக இல்லாமல் இந்தியர்கள் தமிழர்கள் என்ற முறையில் நாங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் தயக்கம் இல்லாமல் பதிலுரைத்தார்.

பொதுவுடமை கொள்கையில் ஊறிப்போய் இருந்தாலும் அமெரிக்க மக்களையும், அமெரிக்க நாட்டையும் பார்த்து பாராட்ட தயங்கவில்லை. இந்த பெருந்தண்மை அனைத்து அரசியல் பிரமுகர்களுக்கும் வேண்டும்.

கலந்துரையாடலில் முக்கியமாக விவாதிக்க பட்டவைகளில் ஒன்று தமிழகத்தின் அரசியல் போக்கு நல்லவிதமாகவோ ஆரோக்கியமாகவோ இல்லையே என்று கேட்டதற்கு ஆமாம் அப்படித்தான் இருக்கிறது. இன்னமும் மோசமான நிலைமையை நோக்கித்தான் செல்கிறது என்றார்.

இந்த நிலையை மாற்ற வழிதான் என்ன என்ற கேள்வி விவாதிக்கப்படாமலே காலத்தின் கைகளில் விட்டுவிட்டோம்.

கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களின் ஊர் பெயர்களையும் தெரிந்துக்கொண்ட அவர், அந்த ஊர் பற்றிய இன்றைய நிலைகளையும் குறிப்பிட்டார்.

87 அகவை நிறம்பிய அவர் அமெரிக்காவிற்கு தனியாக பயணத்திற்கு வந்து பல ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வது பிரமிப்பாக இருந்தது.

ஒரு அரசியல் பிரமுகராக இல்லாமல் சாதாரண மனிதனின் பார்வைகளில் பிரச்சனைகளை விளக்கிய விதமும். தனது ஐரோப்பிய பயணத்தில் அந்த நாட்டு மக்களிடம் கேட்ட சுவையான செய்திகளை பகிர்ந்துக்கொண்டார். உதாரணமாக, "இந்தியர்கள் எல்லாம் திருமணத்திற்கு முன் தனக்கு வரப்போகும் மனைவியை பார்த்தது இல்லையாமே என்று நக்கலாக கேட்டதிற்கு, இங்கே நீங்கள் எல்லாம் திருமணத்திற்கு பிறகு தங்கள் மனைவிகளை எல்லாம் பார்க்க முடிவதில்லையாமே என்று பதிலடி கொடுத்ததை குறிப்பிட்டார்"

திறந்த மனதுடன், கேள்விகளுக்கு அரசியல் சாயல் இல்லாமல் ஒரு பொது மனிதனாகவும். பொறுபான பதில்களையும் அவர் அளித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

அமெரிக்க இனவெறியும் இந்தியாவின் சாதி வெறியையும் பற்றிய பேச்சு வரும் பொழுது, கிருத்துவர்களின் இனவெறி மறுப்புக்கு தலைவணங்குவதாக தெரிவித்தார்.

அமெரிக்க கிருத்துவ பாதிரிகள் கருப்பர்களை இன்னமும் முழுமையான மனிதனாக பரிணாமம் கொள்ளாத விலங்கு என்று உரைத்த கிருத்துமத போதனைகளை மறுத்து இனவெறி பாவம் என்று சொல்லுகின்ற இன்றைய நிலையை விளக்கி கிருத்துமதம் இன/சாதி வெறிகொள்ளா மதம் என்று விளக்கினார்.

இந்த செய்தி எங்களுக்கு புதிதாக இருந்தது அதுவும் அமெரிக்காவில் நடந்த மாற்றம், ஓபாமாவில் தான் வந்தது என்று எண்ணி வந்தோம் இது வரை.

திரைத்துறையில் இருந்து, ஆற்று நீர் பகிர்வு சண்டை வரை தெளிவாக விளக்கம் கொடுத்தார். அவருடன் பேசிக்கொண்டு இருந்தது தாயகத்தை விட்டு இவ்வளவு தொலைவு வந்து என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருத்த நிலை போக ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்திக்கொடுத்தார்.

இந்திய அரசியலில் கறைபடியா கைகள் அது அனேகமாக பொதுவுடமை கட்சியினரது கைகளாகத்தான் இருக்கும். அந்த வகையில், 87 ஆண்டுகளில் தான் அரசியலில் இருப்பதையோ ஏன் வேறு வேலைகளுக்கு சென்று இருக்கக்கூடாது என்ற தயக்கமோ தடுமாற்றமோ இல்லாமல் இன்றைக்கும் என்னால் என்ன என்ன நன்மைகளை செய்ய முடியும் என்று தேடி பிடித்து களப்பணியாற்றும் ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு எங்களது வாழ்த்துகளும் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துகொள்கின்றோம். நல்லோர் ஒருவர் உளரேனும் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை குறள் மனதில் வந்து செல்கின்றது.

அழிந்து கிடக்கும் அரசியலிலும் தூய்மையாக வாழ்ந்து நேர்மையாக களபணியாற்றலாம் என்று நிறுபித்து, தடுமாறி நிற்கும் இளைய சமுதாத்திற்கு அரசியலுக்கும் தாராளமாக வரலாம் என்று இடித்து உரைத்த உங்களது கருத்துகளுக்கும் நன்றி. வாழ்க உங்களது பணி, சிறக்கட்டும் மென்மேலும்.

Thursday, July 12, 2012

என்னை ஏன் அவனுக்கு பிடிக்கவில்லை.......

எல்லோரையும் போல தான் நானும் எனது வாழ்வை துவங்கினேன். அவனும் அப்படி தான். பிறகு ஏன் இந்த பிளவு.

சரி இன்றைகு சரியாகும் நாளைக்கு சரியாகும் என்று நாட்கள் தான் தொலைந்தது. நாட்களோடு சேர்ந்து எனது இளமையும், வாழ்க்கையும் தொலைந்தது.

அப்படி என்ன தான் செய்தேன் இன்று வரை யோசித்த்து தான் பார்கிறேன் ஒன்றும் தெரிய இல்லை. என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனது கடமைகளை எல்லாம் செய்தேனே. கடமையே என்று இருந்தற்கு காலம் என்னை கேலி பேசுவது சரியா....

எத்தனை எத்தனை செயல்களை எல்லாம் யோசித்து யோசித்து சரி செய்தாகிவிட்டது. இன்னமும் மீதம் என்ன இருக்கிறது எனது உயிரை தவிர விடுவதற்கு, இருந்தும் எந்த பதிலும் இல்லையே.....

எனக்கு போல் அவனுக்கும் மனது என்று ஒன்று இருக்கும் தானே அதற்கு இது எல்லாம் கிடையதோ அல்லது ஆண்களுக்கு மனது என்ற ஒன்றே கிடையாதோ.....

ஒரு வேளை பேசி சண்டையாவது போட்டிருக்கலாம், இல்லை கோபம் தீரும் வரை என்னை அடித்தாது தீர்த்து இருக்கலாம் இப்படி எதுவுமே இல்லாமல்.........

ஒரு வேளை நான் அதற்கு கூட தகுதி இல்லாதவளோ.......

இலவு காத்த கிள்ளை போல இத்தனை காலம் காத்து கிடந்தது எல்லாம் வீண் தானே.....

வேலை பார்த்து சம்பாத்தித்து கொடுத்து இருந்திருந்தால் திருப்தி பட்டிருப்பானோ. இல்லை நடிகைகளை போல் வேடம்மிட்டு தினமும் நடித்திருந்தால் ஒரு வேளை பிடித்திருந்திருக்குமோ.....இல்லை நானே தொலைந்து விடுகிறேன் என்று ஓடி ஒழிந்து இருந்திருந்தால் மனதளவிலாவது வருந்தி இருப்பானோ.......

எல்லாம் தான் இருந்தது வீட்டில், ஆனால் மனதில் தான் எதுவுமே இல்லை. ஒரு வேளை வீட்டில் உள்ளவைகள் தான் எனக்கு மகிழ்ச்சி என்று நினைத்தானோ, இல்லை அப்படி தான் அவன் மனதில் படும்படி நடந்துக்கொண்டேனோ......கேட்டத்துக்கு எல்லாம் பணம், என்ன கேட்டாலும் மறுப்பே இல்லாமல் கிடைக்கும்......ஆனாலும்......

இவ்வளவு இருந்தும் அவனது முகம் பார்க்க தினமும் நான்படும் தவிப்பு அவனுக்கு புரியாமலேயே போனது ஏனோ....இல்லை எனக்கு தான் எனது தவிப்பை வெளிக்காட்ட தெரியவில்லையோ...... நாடகங்களில்... ஏன் கண்ணால் காணாத கதைகளின் நாயகிகளின் தவிப்பை எல்லாம் தவறாமல் படித்து புரிந்துக்கொள்ளும் இவனுக்கு உயிருள்ள எனது தவிப்பு புரியாமல் போனது ஏனோ......

நித்தமும் இணையம், மீதி நேரங்களில் தொலைக்காட்சி, அடுத்து அடுத்து வரும் படம் என்னை தினமும் வரிசையில் கடைசியில் நிப்பாட்டி எனது நேரம் வரும் போது மட்டும் கடையடைப்பது எப்படி தினமும் வாடிக்கையானது அவனுக்கு.............

குழந்தைகள் அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மதிப்பது இல்லை, கண்டிக்க நேர்ந்தால் தனது புன்னகையால் நம்மை கொள்ளை கொள்ளும். என்னை தினமும் அப்படி தான் இவனும் கொள்ளை கொள்வான்...... அந்த குழந்தை சிரிப்பும், குறும்பு பார்வைக்கும் என்றைக்கும் குறைச்சல் இல்லை........

நானும் தான் சிரித்து பார்க்கிறேன் குழந்தையை போல நிமிடத்திற்கு நூறுவரை அவனை கவராமல் போகும் எனது புன்னகையை நானே வெறுக்கிறேன்......அதே புன்னகை போல் தான் எனது புன்னகையும் கண்ணாடியில் எனக்கு தெரிகின்றது ஆனாலும் அவனால் இரசிக்க முடியாமல் போனால் கூட பரவாயில்லை, கவனிக்க கூட முடியாமல் போனது ஏனோ.......

பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி என்று தான் சொன்னார்கள், ஆனால் இவனோ எவ்வளவு முன் நான் எழுந்தாலும் வெளியில் வரும் வேளையில் தலையை துவட்டிக்கொண்டு இருக்க எங்கே பழகிக்கொண்டானோ. ஒரு வேளை எனது மனதில் தோன்றுவது எல்லாம் இவனுக்கு தெரிகின்றதோ.........

ஒரு ஆணாய் என்னை எல்லாவிதத்தில் ஆண்டானே என்னால் அவனை பெண்ணாக ஆள முடியாமல் போனது ஏனோ. இல்லை ஆண்டு தான் இருந்தேனோ எனக்கு தெரியவில்லை.....

இடியே இறங்கினாலும் அசையாத ஒரு புன்னகை எப்பொழுதும் புதிதாய் மலர்ந்த ரோசாவை போல். ஒரு இம்மியே ஆனாலும் எனது முகம் மட்டும் அவன் எப்பொழுதும் சொல்வது போல் அத்தனை கோலம் கோனுவது ஏனோ......எல்லா பெண்களும் அப்படி தானே இருக்கிறார்கள் மற்றவர்களை மட்டும் எப்படி இரசிக்கிறான்......

 நான் கேட்காமலே எல்லாமும் கொடுப்பான். நானோ கொடுக்க காத்துக்கொண்டு இருந்தும் எதுவுமே கேட்காமல் என்னை அவமானம் படுத்தியது ஏனோ கடைசிவரையில்..........................

அவனை ஆசை தீர பழிவாங்க வேண்டும், ஆனால் எப்படி வாங்குவது........... கண்கலங்க விட்டது இல்லை என்னை. அழுத முகத்தை பார்த்ததும் ஆயிரம் விசாரிப்புகளில் மூழ்கிபோய் எதற்கு அழுதோம் என்றே மறந்து போகும்.......வசீகர விசாரிப்பு அவனுக்கும் மட்டும் எப்படி சாத்தியமோ.......

எனக்கு என்ன வாங்கி தரவேண்டும் என்று நினைக்கும் நாளிலே மாலையில் கையில் அவன் அதை பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் நுழையும் போது வரும் வெறுப்பை எங்கே கொண்டு கொட்டுவது. வாங்கித் தந்தானே என்றதை விட கேட்க விடாமல் போனானே என்ற எரிச்சல் தான் மிஞ்சும் ஒவ்வொரு முறையும்.....

எதை கேட்டாலும் சலிக்காமல் பேசுவான், திறந்த மனதுடன் விவாதிப்பான், ஆச்சரியப்படும் கருத்துகளை எனது சிந்தைக்குள் சொலுத்துவான்......... இன்னமும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நிலையில் ஒலிக்கும் அலை பேசி ஒரு பெரிய சங்கு ஊதும்.......தொலை பேசி கண்டுபிடித்தவனை கொல்ல வேண்டும் என்று இருக்கும்................

எவ்வளவு தாமதமாக தூங்கினாலும் அடுத்த நாள் அதே சுறுசுறுப்பு எங்கே இருந்து தான் அவனுக்கு மட்டும் வருகிறதோ........ ஒரு அரை மணி நேரம் தூக்கம் கெட்டாலும் அடுத்த நாள் முழுவதும் வரும் கொட்டாவியை அடக்க என்னால் மட்டும் ஏன் முடியவில்லை......

காலை மாலை இரவு என்று எப்போது நேரம் கிடைக்கிறதோ அந்த வேளையில் குழந்தையை போல் படுத்தது தூங்க அவனால் மட்டும் எப்படி முடிகின்றது. மந்திரவாதியோ, இல்லை அந்த அளவிற்கு கொடுத்து வைத்தவனோ......  

ஊருக்கு என்று ஒன்று வந்தால் இரவு பகல் பார்க்காமல் எப்படி இவனால் மட்டும் அலைய முடிகிறது இந்தனை வருடமாக. எப்போது தான் போதும் எனறு சலிப்பு வரும் என்று தவம் கிடந்து தோற்றுத்தான் போனேன்.........

துணிமணிகளாகட்டும், முகச்சவரம் ஆகட்டும் அவ்வளவு நெளிவாக எல்லாம் இல்லை ஏனோ தானோ என்று தான் இருப்பான், இருந்தாலும் திரும்பி பார்க்கும் போது அந்த ஒரு சின்ன புன்னகையால் அவ்வளவையும் மறைக்க எங்கே தான் கற்றுக்கொண்டானோ.......

ஆயிரம் ஆயிரம் விதங்களில் நான் சமைத்தாலும் ஊருக்கே அவன் சமைக்கும் பிரியாணி என்றால் உயிர், எத்தனை முறை முயன்றாலும் ஒரு நாள் கூட கைகூடாத இரகசியம் என்ன? பாத்திரம் கழுவும் நிலையில் ஒருந்து பிரியாணி இறக்கும் வரையில் கூடவே இருந்து பார்த்தாகிவிட்டது எண்ணில் அடங்கா முறை. இருந்தாலும் அந்த பதம் இன்னமும் எனக்கு கற்பனையே.........யாரை நோக........

எங்கே சென்றாலும் தெரிந்தவர்கள் அவனை மட்டும் அப்படி ஒரு விசாரிப்பு விசாரிப்பது ஏன்..... நானும் கூடவே தான் இருக்கிறேன், ஒரு பெண்ணாக  வேண்டாம் ஒரு பொருளாகவாது என்னை மதிக்கலாம் அல்லவா.........அதற்கு கூடவா தகுதி இல்லாமல் போய்விட்டேன்....... பிடித்து காட்டு கத்து கத்தவேண்டும் என்று இருக்கும்........மனதுக்குள் கத்துவதோடு சரி...........

இப்படியே எத்தனை காலம் தான் போவது, என்னால் இருக்க முடியவில்லை நான் போகிறேன் என்று சொன்னதும், போ என்று சிரித்துக்கொண்டே சொல்லி என்னை கடைசியாகவும் தேற்கடித்தானே என்னத்தை சொல்ல. கொட்டிய வார்த்தையை அள்ள முடியாமல் நகர்ந்தவளை அப்படியே வழி அனுப்பி மீண்டும் அந்த புன்னகையுடன் மறைந்தானே.........ஒரு வேளை அவனுக்கு என்னை பிடிக்கவே இல்லை போலும்...........அது தான் போ என்று விட்டு விட்டானோ.........

Wednesday, July 11, 2012

விருமாண்டி - பாகம் 2 - தலையங்கம்: "செயற்கரிய' சாதனை!

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=617100&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=%3Cfont%20color=%22red%22%3E%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%20%3C/font%3E%20%22%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF

தலையங்கத்தை படிக்க படிக்க விருமாண்டி படத்தின் 2ஆம் பாகத்தை பார்த்தது போல் இருந்தது.

இந்தியா செல்லும் பாதை மிகவும் கவலைக்குறிய பாதையாக இருக்கிறது. பணம் படைத்தவர்கள் நினைத்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற நிலை இன்னமும் வலுவாகிக்கொண்டு வருவது நல்லது அல்ல.

ஓட்டுனர் உரிமம் வாங்குவதில் இருந்து தூக்கு தண்டனை வரை கையூட்டு விளையாடலாம் என்றால் சாதாரண மனிதர்களின் நிலை என்றைக்கும் வாய் பொத்தி நிற்கும் நிலை தானோ.......என்ன அதிகார உலகமடா.....

Sunday, June 24, 2012

பெட்நாவில் என்ன நடக்கும் - ஏன் பெட்நாவில் கலந்துகொள்ள வேண்டும்

பெட்நாவில் நடக்கும் எல்லா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது கடிணமே.

காரணம் சில நல்ல நிகழ்ச்சிகள் விழா அரங்கிற்கு வெளியில் சத்தம் இல்லாம் நடைபெறும் அவைகளை எத்தணையோ முறை தெளிவாக அறிவித்தும் மக்கள் அங்கு எல்லாம் செல்லாமல் இருப்பது கொடுமை தான்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், அமெரிக்காவில் தொழில் நடத்திக்கொண்டு வெற்றி நடை போடும் இளைஞர்களைக் கொண்டு வருடம் தோரும் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. சுய தொழில் முனைவோருக்கும் முனைய நினைக்கும் மக்களுக்கும் ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் நடக்கும்.

எப்படி எல்லாம் முயற்சித்தார்கள், என்ன நிலைகளில் எல்லாம் சமாளித்தார்கள் என்று அவர்கள் கூறும் அனுபவங்கள் நமக்கும் நல்ல பாடமாகவும் அமைவதுடன் நில்லாமல் அப்படியே ஆனாலும் கூட இப்போது இப்படி இருக்கிறோம் என்று தைரியம் ஊட்டும் அந்த நல்ல உள்ளங்களை சந்திக்கவாது அங்கு மக்கள் செல்ல வேண்டும்.

அங்கு, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் தங்களது புதிய பொருட்களையோ, அல்லது பயிற்சி முறைகளை கற்றுக்கொடுக்கவோ வந்திருக்கும் புதியவர்களையும் நமக்கு அறிமுகப்படுத்துவார்கள்.

உலக தமிழர் இயக்கத்தின் கூட்டம் நடக்கும் அங்கு எல்லோருக்கும் அனுமதி இல்லை, முடிந்தால் கலந்து கொள்ளுங்கள். அங்கே ஈழம் சார்ந்த காரியங்கள் அலசப்படும். பொறுமையுடனும் பொறுப்புடனும் பேசவும், நடந்துகொள்ளுங்கள். நீதிக்கும் அநீதிக்கும் நமக்கு வித்தியாசம் தெரியவேண்டும்.

மத்திய மற்றும் இரவு உணவு அருந்தும் இடத்தில் விழாவின் முக்கிய புள்ளிகளை சந்திப்பது கடினமே அப்படி வாய்ப்பு கிடைக்கும் பொழுது கட்டாயம் அவர்களிடம் பேசுங்கள். உங்களுடன் எந்த தயக்கமும் இல்லாமல் அருமையாக பேசுவார்கள். சந்திராயன் அண்ணாதுறையை சாப்பிட விடாமல் பத்திரிக்கை நண்பர்கள் செய்த நீதியற்ற காட்சிகள் இன்றும் கண்ணில் நிற்கிறது.

விழாவிற்கு வரும் நடிகர் நடிகைகளை எல்லாம் சாதாரணமாக நினைத்துக்கொண்டு அவர்களுக்கு எல்லாம் என்ன தமிழ் தெரிந்து இருக்கும் என்று தப்புக்கணக்கு போட்டு முடிவுகட்டி விடாதீர்கள். திரை நட்சத்திரம் என்ற வளைவுக்கு உள் நாங்களும் தமிழர்கள் என்ற உணர்விலும் தமிழின் மீது கொண்ட பற்றுடன் வருபவர்கள். நக்கல் அடிக்காதீகள், பதிலாக நல்ல கேள்விகளாக கேளுங்கள் பொறுப்புடனும் தெளிவாகவும் அவர்கள் சொல்லும் பதிலை கேட்டதற்கு பிறகு தெரியும் என்ன சொல்கிறேன் என்று. உதாரணமாக  நடிகை செயசிறீயை(ஜெயஸ்ரீயை) சொல்லாம். என்ன தமிழ் உச்சரிப்பு.............

மூன்றாம் நாள் காலையில் முழுக்க முழுக்க இலக்கிய நிகழ்ச்சிகள் தான். மிகச் சிறந்த நிகழ்ச்சி என்றால் அது இதுவாகத்தான் இருக்கும். கவியரங்கம் மற்றும் இலக்கிய விவாதங்களும் நடக்கும். முதல் இரண்டு நாட்கள் விழா நடக்கும் அரங்கில் இல்லாமல் எளிமையாக வேறு எங்காவது வைத்து இருப்பார்கள் முதல் நாளே விசாரித்து தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். கால தாமதம் இல்லாம் துவங்கிவிடும் ஆகவே சரியான நேரத்தில் சென்றுவிடுங்கள்.

விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு தெரியும் என்ன சொல்கிறேன் என்று, விழா முழுக்க நம்முடன் பேசும் ஒழுங்கு செய்யும் தொண்டர்களையும் அவர்களது உபசரிப்பை பாருங்கள், நம்மவீட்டு கல்யாணத்தில் கவனிப்பது போல் கவனிப்பார்கள். அவர்களின் தொண்டை பாராட்டுங்கள், தவறியும் எங்கேயும் ஒரு சுடு பேச்சையும் கேட்கவும் முடியாது சுடு முகத்தையும் பார்க்கவும் முடியாது.

முதல் முதலில் கலந்துகொள்பவர்கள் அடுத்த ஆண்டு கட்டாயம் கலந்துகொள்வோம் என்ற முடிவுடம் ஊர் திரும்புவது நிச்சயம்.


முக்கியமாக பதிவர்களது கூட்டமும் பட்டறையும் இருக்கும் கட்டாயம் கலந்துகொள்ளுங்கள். பழமைபேசி, மயிலாடுதுறை சிவா தவறாமல் கலந்துகொள்வார்கள். அறிமுகமாகிக்கொள்ளுங்கள்.........

விழாவை பற்றி நேரடி வருணனை பதிவுகளில் வரும், நீங்களும் உங்களது பதிவில் கொடுக்கவேண்டும் என்றால் மடிகணணியை மறக்காதீர்கள்.........
 
விழாவில் அமெரிக்கர்கள் பேசும் போது அவர்கள் நம்மீது காட்டும் பரிவுக்கும் பாசத்திற்கும் கை தட்டல் மூலம் நன்றி சொல்ல தயங்காதீர்கள், பலமாக சொல்லுங்கள். முவா அவர்களை விழா கருத்தாக கொண்டு இருக்கிறார்கள் அனேகமாக இலக்கிய பிரியர்களுக்கு நல்ல வேட்டையாக இருக்கும்......


விழாவில் சந்திப்போம் நண்பர்களே.......... வாருங்கள்..........

Friday, March 30, 2012

ஒரு வேளை நரேந்திர மோடி இலங்கை அதிபராக இருந்திருந்தால்.........

ஒரு வேளை நரேந்திர மோடி இலங்கை அதிபராக இருந்திருந்தால், ஐ நாவில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி அது இராமர் பிறந்த மண். அதை உலகிற்கே உலக சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று ஐ நாவிற்கு காவடி எடுத்து இருக்கும்.

இதே பாணியில் தமிழகம் இத்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி கிடையாது, எல்லை பாதுகாப்புக்காக அந்த பகுதியை நாங்கள் சேர்த்துக்கொண்டோம். வேண்டும் என்றால் இலங்கையுடன் தமிழக அரசியல் தலைவர்களையும் கூட தூக்கில் போடுங்கள் என்று இந்தியா சொன்னாலும் சொல்லும் போலும்.

இப்படி ஒரு காலம் வரும் போது தமிழர்கள் அன்டைய மாநிலங்களில் அகதிகளாக தங்கிக்கொண்டு, இந்திய அரசங்கத்திடம் நாங்கள் வெளி நாட்டில் இருந்து பிழைக்க வரவில்லை, இந்த மண்ணின் பூர்வாங்க குடி என்று ஊர்வலம் நடத்துவார்கள். பிரதமருக்கு தந்தி அனுப்புவார்கள்.

தமிழக அகதிகளை ஒன்றாக இருக்க விட்டுவிட்டால் இப்படி புறா விடு தூது அனுப்பி தொல்லை கொடுப்பார்கள் என்று ஒரு பகுதியரை இராம பக்தர்களாகவும் மற்றபகுதியில் ஒரு தமிழர் இன தலைவரை வளர்த்து, வாய் சொல்லில் வீரராக மாற்றி வேடிக்கை பார்க்கும்.

ஆமாம் தமிழர்களை கர்னாடகா மக்களுக்கு பிடிக்காது, இப்போது கேரளமும் அவர்களோடு சேர்ந்துக்கொண்டது. ஆந்திராவிலோ அங்கே இருப்பவர்களுக்கு அவர்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக்கொள்ள நேரம் இல்லை. இதிலே தமிழர்களை என்ன செய்ய போகிறார்கள். அதனால் ஆந்திரத்தில் தான் தஞ்சம் புகுவார்கள்.

அங்கே உள்ள திராட்சை தோட்டம் எல்லாம் நல்ல விலைக்கு போகும்.

இந்த மா நிலங்கள் தாண்டி தமிழர்கள் எங்கும் போய் தங்க முடியாது. அப்படியே சென்று தங்கினால், வட நாட்டில் பழங்குடிகளுக்கு எதிராக நடத்தபடும் வன்முறைகளை தமிழர்கள் மேல் ஏவி இராம பக்தர்கள் மகிழ்வார்கள். ஏன்டா அடிக்கிறீங்க என்று கேட்டால், கடவுள் இல்லை என்று சொன்ன கூட்டம் அல்லவா இது என்று போட்டு மிதிப்பார்கள்.

இப்படியே பார்த்தால் தமிழர்களுக்கு சீனாவின் எல்லையில் இருக்கும் சிக்கிம், மிசோராம், அசாம் போன்ற மாநிலம் தான் தங்க தகுந்த இடமாக இருக்கும்.

தமிழர்களும் இந்திய அரசை அது செய் இது செய் இல்லை என்றால் நாங்கள் எல்லாம் சீனர்களாகிவிடுவோம் என்று மிரட்டலாம்........

அப்போது தமிழகமாக இருந்த இடத்தில் யார் இருப்பார்கள்................

நல்லவேளை நரேந்திர மோடி இலங்கையின் அதிபராக இல்லாமல் போனார்..................

Saturday, March 10, 2012

என்ன ஆனது இந்திய திரைதுறை விருதுகள் தனிக்கை குழுவிற்கு


எந்த ஒரு நாட்டிலும் தேசிய அளவில் கொடுக்கப்படும் விருதுகளுக்கு படைப்புகளை தேர்ந்து எடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

யாரோ மண்டபத்தில் எழுதிகொடுத்ததை எடுத்துக்கொண்டு வந்து என்னுடையது தான் என்னுடையது தான் ஐயா பரிசு கொடுங்கள் என்று கேட்டால், எந்த கேள்வியும் கேட்க்காமல் கொடுத்துவிடுகிறது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக.

ஆடுகளம் தமிழகத்தின் சேவல் சண்டையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படைப்பு என்றும், அந்த பகுதி மக்களின் பழக்கவழக்கங்கள் மட்டும் இல்லாது கலாச்சாரத்தின் பதிப்பு என்றதாலும் விருதுக்கு உரித்தானது என்று சொன்னார்கள்.

ஆனால் ஆங்கிலத்தில் seabiscuit என்று வந்த படத்தினை குதிரைக்கு பதில் சேவலை கொண்டு ஆங்கிலத்தில் பேசிய வசனங்களை தமிழில் பேசியதாக சொன்னால் அது இவரது சொந்த படப்பாக ஆகிவிடுமா???????????

இதிலே ஈ அடிச்சான் காப்பி என்று ஊரில் சொல்வார்களே அந்த மாதிரி ஒல்லிபிச்சானாக ஒரு கதா நாயகன் வேண்டும் என்றால் தனுசை போடுங்கள் என்று படமாக்கி இருக்கிறார்கள்.

ஆங்கில கதையில் மகனை இழந்து தவிக்கும் அந்த தகப்பனின் மனதை அந்த குதிரையும் அதன் ஓட்டியும் எப்படி மயிலிறகால் வருடி ஆற்றுகிறார்கள் என்ற அந்த புனித்மான உணர்வுகளை தமிழில் அந்த வயதானவரின் மனைவியின் மேல் சந்தேகம் படும்படியும் பொறாமை குணம் கொண்டவனாகவும் வக்கிரபடுத்தியது மட்டுமே மாற்றங்கள்.

அவைகள் தவிர, நன்றாக படித்து பெரிய ஆளாக ஆகவேண்டும் என்று நினைத்தும் படித்தும் வருபவனை குடும்ப நிலையை காரணமாக காட்டி நாயகனை பிரியும் குடும்பத்தின் மேல்வரும் கோபத்தை குத்து சண்டையில் காட்டி அடிப்படும் அந்த அற்புதமான காட்சிகளை தனுசு தெருசண்டையில் இறங்குவதாக காட்டுவது அபத்தத்தின் உச்சம்.

போட்டியாளன் தனது குதிரைக்கு நிகர் எதுவும் இல்லை என்று சொல்லும் காட்சிகளை, பாவம் அந்த காவலர் தனது ஆத்தாவை அசிங்கமாக பேசுவதும். தேற்றமுகத்தோடு சாவக்கிடக்கும் கிளவி மூஞ்சில் எப்படி முழிப்பேன் என்று சொல்வதும் நல்ல நகைச்சுவைகள்.

அட படம் பார்க்கும் நமக்கு தான் இது ஆங்கில படத்தின் ஈ அடிச்சான் காப்பி என்று தெரியாது. இதையே தொழிலாக கொண்டு இயங்கும் பத்திரிக்கைகளுக்கும், விருது தனிக்கை குழுவிற்கும் தெரியவில்லை என்று சொன்னால் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

சரி சென்ற ஆண்டுதான் ஒன்று தெரியாதவர்கள் விருது தனிக்கை குழுவில் எனக்கு நா.உவை தெரியும், ச.உவை தெரியும் என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள் என்று பார்த்தால் இந்த ஆண்டும் அதே கதை.

வாகை சூடவா, இது ஆங்கிலத்தில் என்ற படத்தின் உருவல்.
என்ன ஒரு மிகத் திறமையான ஆசிரியர் என்றதை விட்டுவிட்டு வேலைதேடும் ஆசாமி ஆசிரியனாக வருகிறார் என்ற ஒரு சின்ன திருத்தம் அவ்வளவு தான். பின் அதோடு ஒரு வில்லனையும் சேர்த்துவிடுவது தமிழ் படத்தில் இல்லை இந்திய படங்களின் இயல்பு என்று சொல்லலாமா......

ஆங்கில படத்தில் படிக்கும் குழந்தைகள் அந்த சின்னவயதில் அனுபவிக்கும் கொடுமைகளையும், அதனால் விரக்த்தி அடையும் மன நிலையில் எப்படி ஆசிரியர் எதிர்கொள்ள நினைகிறார் என்ற பதிப்பினையும் அழகாகவும் ஆழமாகவும் கொடுத்து இருப்பார்கள்.

இதில் வேடிக்கை என்ன என்றால் பாக்கியராச்சு தனது காணொளிகளில் ஒன்றில் இந்த ஆங்கிலப்படம் பற்றி தெரிவித்து இருந்தார். அவர் கூட இந்தபடம் ஆங்கிலத்தின் தழுவல் என்றும் கூட சொல்லாம மௌனித்தது கொடுமை தான்.

இப்படியே போனால் Finding Forrester இந்த படத்தையும் சிவாச்சி கணேசனை கொண்டு தயாரித்து தந்தையர் பாசம், இல்லை இல்லை ஆசிரியர் பாசம், இல்லை இல்லை தமிழக ஆசிரியகளின் கடமையுணர்ச்சி என்று எல்லாம் எட்டுகட்டி விருதகள் வாங்கி குவித்து இருப்பார்கள் நல்லவேளை அந்த மனிதன் உயிருடன் இல்லை, நாம் எல்லாம் தப்பித்தோம்.

Saturday, March 3, 2012

ஒரு நடிகையின் வாக்குமூலமும் - டர்ட்டி பிக்ச்சர்ரும்

டர்ட்டி பிக்ச்சர்

இந்த படம் தயாராகிறது என்றதும், நடிகையாக இருந்தாலும் அதுவும் அந்த மாதிரியான படங்களாக நடித்தாலும் அவளும் ஒரு பெண் என்ற கோனத்தில் தான் படம் தயாரித்திருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் படத்திலோ அவள் ஒரு பெண்ணாக தோற்றுப்போகும் இடங்களில் எல்லாம் அவள் எப்படி தன்னை சமாதான படுத்துக்கொண்டாள் என்று தான் காட்டினார்களே அன்றி அந்த பெண்ணின் மனது படும் பாட்டை அவர்கள் பதிவு செய்ய மறந்துவிட்டார்களா அல்லது மறுத்துவிட்டார்களா புரிய இல்லை.

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே பின்னர் அவன் நல்லவன் ஆவதும் கெட்டவன்னாவதும் அன்னை வளர்ப்பதிலே என்ற வார்த்தைகளின் அடைப்படையை சொல்லாமல் தோற்று போன படம் இந்தியின் வண்ணத்தில்.

ஒரு நடிகையின் வாக்குமூலத்தில் அம்மாவின் கவனம் பணத்தின் மேலும் வசதியின் மேலும் ஆளாய் பறக்கும் போது தனக்கு என்று ஒரு வாழ்க்கை அமைந்து விடாதா என்று ஏங்கும் அந்த மனித உள்ளத்தின் ஓசை அனைவரின் மனதிலும் பிரதிபலிக்கும் விதமாக அமைத்துள்ள்மைக்கு பாராட்டுவோம்.

வித்தியா பாலன் பார்த்து சங்கடப்பட்டு இருப்பார் ஏமாந்து போனோமே என்று.

காதலனாக நினைக்கும் இயக்குனர் திரைமறைவில் இவளை விலை பேசும் செயல்கள் சகிக்கவில்லை. என்ன தான் கற்பனை என்று இருந்தாலும் காண சகிக்கவில்லை.

பதிவர் அகிலா "மயக்கம் என்ன" படத்தை அண்ணன் தம்பி இருவரும் சேர்த்து சோனியாவை சாட படத்தை பயன் படுத்தியுள்ளார்கள் என்று எழுதி இருந்தார்கள். இந்த படத்தை பார்த்துவிட்டு சோனியா எதிர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்று சொல்வாரா.

வெகு நாட்களாக மனதில் தொக்கி நிற்கும் கேள்வி இது. தனக்கு பெண் வேண்டும் என்று இந்த பணமும் பலமும் படைத்தவர்கள் நினைத்தால் அதற்கு என்று இருக்கும் மக்கள் கிடைப்பார்கள். அதைவிடுத்து சிறுவர் சிறுமியர்களை வன்கொடுமை செய்வது போல் விருப்பம் இல்லா இந்த மாதிரியான பெண்களை அழிப்பதில் இவர்கள் இன்பம் காண்பதாக தெரியவில்லை, மாற்றாக அவர்களின் மனதின் வக்கிரபுத்திக்கு தீணிபோடுவது தான் விளங்குகிறது. மனித வடிவில் உலவும் விலங்குகள்.

படத்தில் எடுத்து வெட்டியது தான் அதிகம் போலும், இன்னமும் திரையில் சொல்லாமல் விட்ட செய்திகள் தெரியாமலே போகட்டும்.................