Thursday, February 28, 2019

அவசரபட்டு விட்டீர்களே தமிழர்களே - இனி அபிநந்தன் அவ்வளவு தான்

இந்திய ஆட்சியர்களுக்கு தமிழ் தமிழகம் தமிழர்கள் என்றால் ஏதோ மூன்றாம் தர ஏழை வெளிநாட்டுகாரன் போல் தான் அனுகுவார்கள் அதிலும் இந்த பாசக அரசு இன்னும் மோசம்.

இந்த நிலையில் பாக் தாக்குதல் நடவடிக்கையில் பாக்கில் மாட்டிக்கொண்ட விமானி ஒரு தமிழர் என்று தமிழர்கள் அவசர அவசரமாக பதிவிட்டு விட்டீர்களே.

சும்மாவே சாதி பார்த்து தான் யார் யாருக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் பாசக அரசுக்கு அபிநந்தனை ஒரு தமிழன் என்று சொல்லிவிட்டீர்களே. இனி அபிநந்தன் மீட்கப்படுவதும் உயிருடன் வரவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டியது தான்.

இனி மேலாவது இது போல் செய்திகள் வந்தால், தமிழர்களை காப்பாற்ற அவர் தமிழர் என்று சொல்லாதீர்கள், பதிலாக அவரது கடைசி பெயர் மோடி என்றோ, சர்மா என்றோ, தீக்சித்து என்றோ சொல்லுங்கள் கண்மூடி கண் திறப்பதற்குள் வீட்டிற்கு கொண்டு வரப்படுவார்.........சிந்தியுங்கள் மக்களே.........

Tuesday, February 26, 2019

அப்போ Surgical strikeக்கும் பொய்யா

மோடியின் ஆட்சியில் அதிகம் போசப்பட்ட செய்திகளில் இதுவும் ஒன்று, அன்றைய துல்லிய தாக்குதலில் தீவிரவாத முகாம்களை எல்லாம் தவிடு பொடியாக்கி இந்தியாவையும் உலகையும் காத்தார் வீரர் மோடி என்றும். மோடி ஆட்சிக்கும் வரும் முன் காங்கிரசு தொடை நடுங்கியாக இருந்தாகவும், மோடி வம்பு செய்யும் அண்டை நாடுகளை கால் பந்து உதைப்பது போல் உதைத்து விளையாடுவார் என்றும். அதை தொடர்ந்து தொடர் நடவடியாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உள் நாட்டு தீவிரவாதம் அடியோடு உலகத்தை விட்டே விரட்டியாச்சு என்றும் பரப்பினார்கள் சங்கிகள்.

அன்றைக்கு அழித்த அதே முகாம்களை இன்றைக்கு மறுபடியும்  இந்திய இராணுவம் தாக்குதாம். இல்லாத முகாமை எப்படி 1000கிலோ குண்டுகளா போட்டு தாக்க முடியும், அதுவும் பாக்கிட்தான எல்லைக்குள் புகுந்து தாக்குதாம். இதிலே தாக்குதல் படங்கள் எல்லாம் வெளியிடுராங்க கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்.

இந்திய எல்லைக்குள் தான் காசுமீரம் உள்ளது என்றது இந்தியாவின் வாதம், இல்லை எங்கள் கட்டுப்பாடில் உள்ளது என்றது பாக்கிட்தானத்தின் வாதம், இந்த இரு நாடுகளின் போர் நடவடிக்கையில் தற்காலியமாக வரையபட்ட கட்டுப்பாட்டு கோட்டில் இரண்டு நாட்டு இராணுவமும் பின்வாங்காமல் 50 ஆண்டுகளாக இருக்கிறது. அங்கே என்ன என்ன எல்லாம் இருக்கிறது அதே அளவில் இங்கே நமது பக்கத்திலும் அதே அளவில் நிப்பாட்டி வைப்பது தான் இராணுவத்தின் வழக்கமும். இது உலக்கில் உள்ள அனைத்து படைக்களின் வழக்கம்.

அந்த கட்டுப்பாட்டு கோட்டில் இரண்டு படைகளுக்கும் நடுவில் ஒரு 50 அடி அளவில் யாருக்கும் சொந்தம் இல்லாத நோமேன் நிலம் என்று சொல்லப்படும் அந்த இடத்தில் தனது விருப்பம் போல் எவ்வளவு வெடிகளை வேண்டும் என்றாலும் அவர்களும் சரி நாமும் சரி வெடிக்கலாம், அது போர் நடவடிக்கையோ அல்லது எல்லை தாண்டுதலோ இல்லை. தன்னால் முடிந்தால் அந்த நோமேன் நிலத்தையும் தாண்டி குண்டுகளை எரிவது வழக்கம்.

அப்படி எரியப்படும் குண்டுகளுக்கு அவர்கள் தரப்பில் அதே வீரியத்தில் பதிலடியும் வந்துக்கொண்டு தான் இருக்கும். இன்று நடக்கும் நடவடிக்கைகள் நமது நாட்டு வான் எல்லையில் இருந்து அவர்களது கட்டுப்பாட்டு கோட்டில் எவ்வளவு தூரம் வான் தாக்குதல் நடத்த முடியுமோ அவ்வளவு தூரம் தாக்கி வம்பு இழுக்கிறார்கள். பதிலுக்கு அவர்களும் அதே போல் தாக்குவார்கள் அதை சங்கி அரசாங்கமோ அல்லது இப்போது போர் தாக்குதல் என்று அலரவிடும் ஊடகமோ நமக்கு சொல்லாமல் அமுக்கி விடும்.

கார்கில் போர் இப்படி தான் நடந்தது, பாக் எல்லையில் இருந்து இராணுவ உடையில் இல்லாமல் பொதுமக்கள் உடையில் இராணுவம் தான் பொதுமக்கள் என்றும் மற்றும் தீவிரவாதிகள் என்றும் சொல்லிக்கொண்டு இந்திய எல்லைக்குள் வந்து தாக்குதல்களை தொடுத்தது. நமது எல்லைக்குள் இருந்த அவர்களை இந்திய விமானப்படை வந்து குண்டு வீசும் வரை அவர்கள் மிகவும் தீவிரமாக முன்னேறிக்கொண்டு தான் இருந்தார்கள். கடைசியில் அணுகுண்டை வீச பாக் முற்படும் போது அமெரிக்கா கூப்பிட்டு போர் நடவடிக்கைகளை நிறுத்தியது. இல்லை என்றால் அது முழு வீச்சு போராக வெடித்து இருக்கும்.

அந்த கார்கில் போர்லில் பாக் நடத்திய தாக்குதல் கூட இப்போது இந்தியா நடத்தவில்லை. இருந்தாலும் மோடி காலிலே கால் பந்தை உதைத்து தள்ளுவதை போல் பாக்கை உதைத்து தள்ளுவதாக தவறான செய்தியை பரப்புகிறது மோடி அரசு.......

எப்பவும் பொய் எதிலும் பொய் என்றதுக்கு பெயர் போன மோடி அரசு இந்த துல்லிய தாக்குதலும் வெறும் கட்டுக்கதை என்று அதுவே இந்த இராணுவ நடவடிக்கை மூலம் வாக்குமூலம் கொடுத்துள்ளது.........

Thursday, February 21, 2019

பாசக தமிழகத்தில் 40 தொகுதிகளையும் வெல்ல திட்டம் தயார்

எப்படியாவது தமிழகத்தில் கால் ஊன்ற நினைக்கும் பாசக முதலில் அதிமுகவை விலைக்கு வாங்கி 2 ஆண்டுகள் ஆனாலும்(எச்ச சர்மா இனிமேல் நாங்கள் எல்லாம் பின்வாசலால் வரவேண்டிய அவசியம் இல்லை என்று மிகவும் தைரியமாகவும் திமிராகவும் பேட்டி கொடுத்தது நினைவில் கொள்க) இன்னும் காலம் கனிந்து வரததால் இன்னும் அதிமுக என்றே இயக்கிக்கொண்டு இருக்கும் நிலையில் 2019ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலும் அறிவிக்கபடும் நிலையில் எப்படி தேர்தலை எதிர்கொள்வது என்று யோசித்து அழகாக முடிவெடுத்து இருக்கிறது.

செயலலிதாவின் மறைவுக்கு பிறகு இனி அதிமுக அவ்வளவு தான் என்ற நிலையில் திமுக தான் இனி ஆட்சிக்கு வரும் என்ற நிலை. இதை அப்படியே நடக்கவிடாமல் தடுக்க வேண்டும் என்றால் மக்களை பாசக பக்கம் திருப்பினால் மட்டுமே முடியும்.

ஆனால் பாசக மக்கள் பேசும் பேச்சுக்களும், மைய அரசியில் இருக்கும் பாசக தலைவர்கள் நடந்துகொள்ளும் வித்தத்திலும் தமிழக மக்களுக்கு இன்னும் வெறுப்பு அதிகமானது மட்டும் தான் மிச்சம். கரையேறுவது கனவாகவே ஆகிவிடும் என்ற நிலைக்கு வந்து நிற்கின்றது.

பாசகவின் ஆதிகால நுட்பம், தம்து மக்களை தானே கொன்றுவிட்டு எதிரியின் மேல் பழி போட்டு அதற்காக எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்பது தான் வழக்கம். அப்படி செய்வதற்கு முன் நாடிபிடித்து பார்க்கும் விதமாக 350கிலோ குண்டு வெடிக்க வைத்து பார்த்ததில் மக்கள் இன்றைகும் வெடிகுண்டு என்றால் ஒன்றாக கூடுவதை கண்டு கொண்ட பாசக தமிழகத்தில் அதே பாணியில் தான் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டியது.

செயற்கையாக ஒரு மதக்கலவரத்தை ஏறபடுத்தி குளிர்காயலாம் என்றால், சின்ன சின்ன தாக பற்ற வைத்த மதகலவரங்கள் எல்லாம் துவங்கிய இடத்திலேயே அமுங்க வெறுத்து என்ன செய்வது என்று சோர்ந்து போன நிலையில் தான் சாதி கலவரத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளது.

பாசக நேரடியாக சாதி கலவரம் செய்த்தால் தனக்கு கெட்ட பெயர் வரும் என்ற காரணத்தால், பாமகவை தனது அடியாளாக சேர்த்துக்கொண்டுள்ளது. இந்த பாமக மட்டும் திட்டமிட்டால் போல் சாதி கலவரத்தை உருவாக்க தமிழகத்தை கொழுந்துவிட்டு எரிய வைத்தால் அதற்கு கூலியாக அமைய இருக்கும் நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதவி தருவோம் என்று ஆசை வார்த்தைகளை காட்டி அடியாளாக சேர்த்துள்ளார்கள்.

பாமக தான் பலியாக போவது தெரியாமல் கண்களுக்கு முன்னால் தெரியும் கேரட்டை பார்த்துக்கொண்டு சென்ன ஏதோ ஒன்றை போல் தமிழக சாதிகலவரத்திற்கு அப்பாவும் மகனுமாக திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். கூடிய விரைவில் தமிழகத்தில் சாதிக்கலவரம் பற்றி எரிய போகின்றது.

யாரேனும் எதிர்த்து பேசினாலோ அல்லது அம்பலப்படுத்தினாலோ தூத்துகுடியில் நிகழ்த்தியது போல் குறிவைத்து வாயிலேயே சுட்டுக்கொல்லவும் ஏற்பாடுகளும் முடித்தாகிபிட்டாச்சு. ஆகவே மக்களே கூட்டமாக பாசகாவோ அல்லது பாமகாவோ இருந்தால் உடனே அந்த இடத்தை விட்டு விட்டு வெளியேறி விடுங்கள் இல்லை என்றால் இழுத்துக்கொண்டு போய் தீ வைத்து கொளுத்திவிடுவார்கள்.

Wednesday, February 20, 2019

இந்தியாவின் யார் அடுத்த பிரதமராக போவது யார்

வருன்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த பிரதமராக போவது யார் என்ற போட்டி சங்க பரிவாரம் துவங்கி வைத்ததில் இருந்து இன்று வரை மோடியா யோகியா இல்லை நிதின் கட்காரியா என்று எந்த வித பாரபட்சமும் இன்றி செய்திகள் அடிபடுகின்றது. அத்தோடு மட்டும் நில்லாது, பாசகவிற்கு கொடி பிடிக்கும் சிறீ இரவிசங்கர பிரசாத்து, பாபா இராம் தேவ்வு போன்ற கட்சியை தாண்டிய ஆதரவு தரும் மக்கள் எல்லாம் பதுங்கி 3 மாதங்களுக்கு மேல் ஆகுகின்றது.

தெள்ள தெளிவாக மோடிக்கு பாசகவுக்குள்ளேயும் வெளியேவும் ஆதரவு இல்லை, அது மட்டும் இல்லாது மூச்சுக்கு முன் நூறு முறை ஏழை தாயின் டீ வித்த பிள்ளை நான் ஒரு நாள் உணவுக்குக்கே வெறும் ரூபாய் 10,000 மட்டுமே தான் செலவு செய்யும் ஏழை மகன் என்று சொல்வதும். தினமும் வெறும் 35 இலட்சத்தில் உடைகளும் வெறும் ரூபாய் 10,000 க்கு மேக்கப்பும் சிகையலங்காரமும் என்று எளிமையாக வாழும் எழை தவப்புதல்வன் என்று உளரும் உளரல்களை பொறுக்க மாட்டாமல் பாசவின் கட்சிக்குள்ளேயே இப்படி எல்லாம் பேசாதீங்க என்று செல்லமாக கண்டித்தும் மோடி திருந்துவதாக இல்லை.

மோடி எப்போதாவது வாய் தவறி உண்மை பேசுவதும், மற்றி சொல்வதெல்லாம் பொய் பொய்யை தவிர வேறு எதுவும் இல்லை என்று கட்டியம் கட்டும் அளவிற்கு அளந்து விடும் மோடியை இனி தமிழக பாசக கூட மதிக்க தயாராக இல்லாத சூழலில் தான், மோடியை தமிழகத்திற்கு கூட்டி வந்து வச்சு செஞ்சு அனுப்புகிறார்கள். இதிலே நல்லாக மீண்டும் மோடி வேண்டும் மோடி என்று கொஞ்சம் கூட மரியாதையே இல்லாமல் மேடையிலேயே மோடியை வைத்துக்கொண்டு தமிழிசை ஒரு மையில் விளிப்பது குமட்டலாக இருந்தாலும் இன்று வரை தமிழை தொடரும் இந்த பகிடியை கூட புரிந்துகொள்ள முடியா மோடி பரிதாபமாய் மலுங்க மலுங்க விழிதித்து கொண்டு மேடையில் மொழி புரியாமல் அமர்ந்து இருப்பதையும் காண முடிகின்றது.

ஆக பாசகவிற்குள்ளும் சரி வெளியிலும் சரி மோடியை ஆதரிக்க தமிழகம் உட்பட யாரும் இல்லை. அப்படி இருக்கும் நிலையில் அடுத்த பிரதமராக வர யாருக்கு வாய்பு இருக்கிறது என்று பார்த்தால். வடக்கில் நான் நீ என்று மோடியோடு போட்டி போட்டாலும் வாய்ப்பு என்னவோ தமிழகத்தில் உள்ளவருக்கு தான்.

எந்த வித நிலைகள் வந்தாலும் சமாளிக்கும் அறிவாளி செயல் வீரர் மக்களை மட்டுமே மனதில் நினைத்து ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் சமூக போராளி பழனிசாமி தான் அந்த நபர்.

பழனிசாமியுடம் போட்டி போட தகுதியுள்ள ஒரே ஆள் அன்புமணி இராமதாசு மட்டுமே, காரணம் அன்புமணியும் மக்களையும் மக்களின் மாற்றத்தையும் மக்களின் முன்னேற்றமும் மட்டுமே தனது இலட்சியமாக கொண்டவர். எந்த வித சுயனலமோ சுயலாபமோ பார்க்காமல் மக்கள் மக்கள் மக்கள் என்று மட்டும் எப்பவுமோ சிந்திக்கும் மக்கள் நலவாதியான அன்புமணி இராமதாசும் தான் தகுதியானவர்.

ஆகவே தான் இந்த இருவரும் பாசகவுடன் சேர்ந்து பாசக ஆட்சி அமைக்க தேவையான நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இருட்டு பெற்று பிரதமராகவும் துணைபிரதமராகவும் ஆக உள்ளார்கள்.

இந்த கூட்டணி தான் மக்கள் நல கூட்டணி, மற்ற கூட்டணி எல்லாம் ஏழை மக்களுக்கு மருந்து தயாரிக்கும் அரசு மருந்து தொழிற்சாலைகளை மூடியும் செயற்கை மருந்து தட்டுபாடுகளை உருவாக்கி அமெரிக்க மற்றும் ஐரோப்பா மருந்து நிறுவனங்களில் இருந்து 10 ரூபாய்கு வாங்கின அதே பராசிட்டமால் மாத்திரையை 100 வாங்க வைப்பார்கள். சென்ற முறை அன்புமணி இருந்த அரசு மருந்து ஆலைகளை மூடி ஏழைக்களுக்கு உதவி புரிந்தது போல் இந்த முறை மத்திய அமைச்சரானால் இருக்கும் எல்லா அரசு மருத்துவமனைகளை எல்லாம் மூடி தனியார் மருந்துவமனையில் அமெரிக்க ஐரோப்பிய மருத்து காப்பிடில் இராசவைத்தியம் வாங்கி தருவதாகி சொல்லி ஏமாற்றவே மாட்டார் நம்புங்கள் மக்களே. மாற்றம்......முன்னேற்றம்.........

Tuesday, February 19, 2019

வெட்கம் கெட்ட பாமக சொரணை கெட்ட அதிமுக பிச்சை எடுக்கும் பாசக

இரண்டு திராவிட கட்சிகளும் மாற்றி மாற்றி ஆண்டு தமிழகத்தை சுடுகாடாக மாற்றிவிட்டது என்று சென்ற தேர்தலில் கூவிய பாமக. இன்றைக்கு அதிமுகவுடன் கூட்டணி என்றால் ஒன்று அதிமுக திராவிட கட்சி இல்லை என்று பாமக சான்றிதழ் வழங்குவதாக பொருள், இல்லை என்றால் அதிமுகவை பாசக மொத்த விலைக்கு வாங்கிவிட்டது என்று பொருள்.

பாசகவின் சின்னத்தில் நின்றால் வெற்றி பெறுவது கடினம் ஆகையால் இரட்டைஇலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்று(ஒரு வேளை வெற்றி பெற்றால்). சட்ட சபையையும் கலைத்துவிட்டு இதே பாணியில் இரட்டை இலை சின்னதில் போட்டி போட்டு வெற்றி பெற்றவுடன் இனிமேல் உலகில் அதிமுக இல்லை. இன்றையில் இருந்து அவர்கள் அனைவரும் பாசகவில் ஐகியமாகிவிட்டார்கள் என்று 5 ஆண்டுகள் கோலோச்சி மய்யத்தில் செட்டப்ப மாத்தி கெட்டப்ப மாத்தினாற் போல் தமிழகத்திலும் செய்யலாம் என்று சப்புக்கொட்டிக்கொண்டு அதிமுகவிடம் இந்த இந்த இடங்களில் நாங்கள் நிற்போம். அப்படி எல்லாம் சம்மதிக்கவில்லை எனில் தேர்தலுக்கு முன் சசிகலாவை பெங்களூரு சிறையில் அடைத்தை போல் உங்களை எல்லாம் திகாரில் அடைப்போம் என்று அன்போடு கெஞ்சி கொஞ்சி இளித்து அதிகார பிச்சை எடுத்துக்கொண்டு நிற்கிறது.

56 இஞ்சு அகலம் கொண்ட மார்பு தமிழகத்தில் பழனிசாமி பன்னீர்செல்வத்தின் கால்களை கண்ணீரால் அர்ச்சணை செய்த்து பிச்சை எடுத்து நிற்கின்றது.

திராவிட கட்சிகளால் அழிந்தது தான் இந்த தமிழகம் என்று ஊர் ஊராக கூவிய பாமகவும் பாசகவும் இனி அதிமுகவுக்கு எப்படி காவடி எடுக்கிறது என்று வேடிக்கை பார்ப்போம்.............

போர் வந்தால் இந்தியா தோற்று போவது உறுதி - பாசக

இபோது இருக்கின்ற நிலையில் எல்லையில் பொக்ரானில் பாசக அரசு எவ்வளவு தான் படம் காட்டினாலும் நாளை போர் என்று வந்தால் தோற்கபோவது உறுதி.

இதை பாசகவே பலமுறை தெரிவித்து இருக்கிறது, இந்தியாவின் விமானப்படை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் அதை பலப்படுத்த காங்கிரசு வெறும் 126 போர் விமானங்களை மட்டுமே வாங்கி மேலும் பலவீனப்பட வைக்க இருந்த நிலையில், நல்ல வேளையாக மோடியின் அரசு பதவிக்கு வந்ததால் 36 விமானங்களை வாங்கி விமானப்படையை உலகிலேயே மிகவும் பலம் வாய்த விமானபடையாக மாற்றிவிட்டோம் என்று இலங்கை சிங்கப்பூர் மலேசியா அசாம் என்று மோடி மேடை தோறும் முழங்கி வந்துள்ளார்.

இந்த 36 இரபேல் விமானங்கள் இல்லை என்றால் நாட்டின் பாதுகாப்பு பலவீனப்பட்டுவிடும் அதனால் வாங்கியே ஆகவேண்டும் என்றும். அப்படி வாங்கவிடாமல் காங்கிரசு தொல்லை கொடுப்பதால் காங்கிரசு ஒரு தேசதுரோக கட்சி என்றும் அதில் இருப்பவர்கள் அனைவரையும் நாட்டைவிட்டு அண்டை நாட்டுக்கே அனுப்பிவிட்டவேண்டும் என்று இது வரை முழங்குகிறார் மோடி.

இப்படி அப்படி என்று எல்லாம் மோடியாலும் இன்னும் பெரிய பெரிய பாசக பிரமுகர்கள் எல்லாம் புகழ்ந்தும் வேண்டியும் விரும்பியும் அம்பானிக்காக தெரு தெருவாக ஆடியும் பாடியும் கதாகாலச்சேபம் செஞ்ச அந்த 36 இரபேல் விமானத்தில் இன்னும் ஒன்று கூட இந்தியாவிற்கு இது வரை வரவில்லை. அப்படியே நாளைக்கு கொண்டு வந்து நிறுத்தினாலும், அம்பானியிடம் அதன் உதிரிபாகங்கள் கட்டும் தொழிற்சாலை உருவாக்கப்படவில்லை. அம்பானி ஆலையை கட்டி, அதற்கு ஆட்களை பிடித்து இன்ன பிர எல்லாம் செய்து உதிரி பாகங்களை தயாரித்து வழங்கிய பிறகு தான் அந்த 36 இரபேல் விமானமும் பறக்க தயாராகும்.

அதற்கு பிறகு தான் அந்த விமானத்தில் போதிய பயிற்சி எல்லாம் எடுத்துக்கொண்டு இந்தியா அந்த 36 இரபேல் விமானத்தின் உதவியுடன் சீனாவையும் பாக்கிட்தானத்தையும் மோடி காலில் உதை பந்து உதைப்பது போல் உதைத்து உதைத்து விரட்டுவார் என்று சொல்லி வரவிருக்கும் 2019 பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு இப்பவே வாக்களியுங்கள் என்று தமிழிசையும் எச்ச சர்மாவும் விழுந்து விழுந்து பிரச்சாரம் செய்கிறார்கள்.

உண்மை நிலமை இப்படி இருக்க எவ்வளவு தான் பொக்ரானில் துல்லியமாக சுட்டு சுட்டு படம காண்பித்தாலும் இலங்கையுடன் போர் வந்தாலும் மோடி தோற்றக்கப்போவது உறுதி. மக்களே சிந்தித்து வாக்களியுங்கள், சீனாவையும் பாக்கிட்தானத்தையும் மோடி காலால் உதைப்பதை பார்கவும், இந்த 2019ல் நடக்க இருக்கும் கிரிக்கட்டு போட்டியில் இந்த அணி பாக்கிட்தானத்தை வெல்லவும் மோடிக்கு வாக்களிக்கவும். இல்லை என்றால் உலகப்போட்டியும் அம்பேல்லாகிவிடும் சொல்லிபுட்டேன்.......

Monday, February 18, 2019

அமெரிக்காவுக்கு தெரிந்த 350கி வெடிகுண்டு இந்தியாவுக்கு தெரியாமல் போனது எப்படி

காசுமீரத்தில் வெடிக்க உள்ள 350கிலோ வெடிகுண்டு பற்றி துல்லியமா ஒரு வாராத்திற்கு முன்னே அமெரிக்காவும் இசுரேலும் செய்திகளை வெளியிட்டு பொது மக்களுக்கு தெரியும் படியே எச்சரிக்குது. ஆனால் அணுகுண்டை அமெரிக்க செயற்கை கோளுக்கு தெரியாமல் அதிபுத்திசாலி தனமாக கண்ணில் மண்ணை தூவி வெடித்தாக புனைந்து புனைந்து படம எடுத்துவிட்ட இந்தியாவுக்கோ, இந்தியாவின் எல்லைக்குள் அதுவும் அதி தீவிர கண்காணிப்பில் உள்ள ஒரு இராணுவ முக்கியம் வாய்ந்த இடத்தில் 350கிலோ வெடிகுண்டு வருவதை பற்றியோ அல்லது இராணுவ அணிவகுப்பில் தாக்குதல் நடக்கும் என்றோ தெரியவில்லையாம்.

சரி தெரியாமலே போச்சுன்னுனே வச்சிக்கிட்டா கூட, அமெரிக்காவும் இசுரேலும் எச்சரித்த பின்னர் என்ன என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்றாவது இது வரை சொன்னார்களா. இல்லை மாறாக அண்டை நாட்டின் மீது பழியை போட்டு அவசர அவசரமாக போருக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறது மோடி அரசு.

350கிலோ வெடிகுண்டை பெட்டிக்கடையில் அந்த தீவிரவாதி ஆதார் அட்டையை கான்பித்து வாங்கி வந்தது மட்டும் தெரியாதாம் ஆனால் அது அண்டை நாட்டின் தீவிரவாதிகள் தான் கொண்டு வந்ததும் வெடித்ததும் என்று மட்டும் உறுதியாக தெரியுமாம். ஏன் என்றால் அந்த தீவிரவாதி அந்த அண்டை நாட்டின் ஒப்பந்த படிவத்தை கையில் வைத்து இருந்ததை ஆதாரமாக மோடி அரசு கைப்பற்றி நிரூபித்து தான் இந்த போர் நடவடிக்கைக்கு போகின்றது என்று நம்புங்கள் மக்கா நம்புங்கோ.....

Saturday, February 16, 2019

பாசக காசுமீரில் வெடித்த 360கி வெடிகுண்டு நாடு முழுதும் வெடிக்கிறது

பணமதிபிழப்பு நடவடிக்கையின் மூலம் தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது. டீக்கடையில் டீ வாங்குவதில் இருந்து உரம் வாங்குவது வரை ஆதார் அட்டை இல்லாமல் எதுவும் வாங்க முடியாது விற்கமுடியாது. எந்தெந்த பொருள் விற்றாலும் மறைக்காமல் இருக்க ஜிஎஸ்டி வரிவிதிப்பு கொண்டு வந்து கள்ள சந்தையே இல்லை. துல்லிய தாக்குதல் மூலம் எல்லையில் இருக்கும் தீவிரவாத மூகாம்கள் எல்லாம் அழித்தாகிவிட்டாச்சு. இப்படி நாட்டை தீவிரவாதத்தில் இருந்து காக்கும் பணியை கடந்த 5 ஆண்டுகளாக செய்து கடமையாற்றி அடுத்த தேர்தலில் அந்த ஒரு காரணத்திற்காகவே தேர்ந்து எடுக்கனும் என்று தேர்தல் பிரச்சாரங்களில் நாடு முழுதும் பேசி வருகிறது பாசக.

பாசகவின் பேச்சுகள் எல்லாம் உண்மை என்று எடுத்துக்கொண்டால் இந்த 350கிலோ வெடி பொருள் ஒன்று இராணுவத்திடம் இருக்கும் இல்லை அரசிடம் இருக்கும். 44 படை வீரர்களை இராணுவமே குண்டு வைத்து கொன்று இருக்குமா என்றால் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதை விட அதிக வாய்ப்பு அரசுக்கு தான் இருக்கிறது.

காரணம் மோடி கோத்ராவில் தனது சொந்த மக்களையே இரயிலில் வைத்து கொளுத்திவிட்டு மற்றவர்கள் செய்தார்கள் என்று கதைகட்டி ஒரு இலட்சத்தி 30 ஆயிரம் மக்களை 6 நாட்களில் வேட்டையாடி கொன்றுவிட்டு அதை தேசபற்று மற்றும் நிர்வாக திறமை என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்.

அன்றைய இரும்பு மனிதரும் இன்றைய துருபிடித்த(மோடி இவருக்கு சமீபத்தில் கொடுத்த மரியாதையை வைத்து பார்க்கும் போது) மனிதருமான அத்வானி எப்போது எல்லாம் எங்கே பயணிக்கிறாரோ அப்போதெல்லாம் அங்கே அவர் செல்வதற்கு முன்னோ அல்லது சென்று அங்கே இருந்து கிளம்பி ஒரு பாதுகாப்ப்பான தூரத்திற்கு சென்ற பிறகோ அந்த இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும். ஒரு முறை கூட அவர் இருக்கும் போதோ அல்லது சற்று அருகிலோ வெடித்ததே இல்லை.

இதே இரும்பு மனிதர் இன்றும் தான் பயணிக்கிறார் ஆனால் ஒரு தீபாவளி பட்டாசு கூட வெடிப்பதில்லை. அன்றைக்கு என்ன காரணத்திற்காக வெடி வெடிக்கப்பட்டது என்றும் தெரியவில்லை, இன்றைக்கு என்ன அவரிடம் இல்லாமல் போய்விட்டது பேசாமல் இருந்து விடுகிறார்கள் என்று புரியவில்லை. கூட்டி கழித்து பார்த்தால், அது பாசகவின் உள்ளடி வேளை என்று தெள்ளத்தெளிவாக தெரிகின்றது.

புதன்கிழமை இந்த ஆட்சியின் கடைசி பாராளுமன்ற கூட்டம் முடிந்து அடுத்த தேர்தலுக்கு பிரச்சாரத்திற்கு தயாராகுகிறார்கள் இந்த 350கிலோ வெடிகுண்டை வெடித்து துவங்கி வைத்துள்ளார்கள்.

இன்றைய செய்திகளில் இராணுவம் தனது துப்பாக்கியை எடுத்து திருப்பி சுடலாம் என்று மோடி அனுமதி கொடுத்துள்ளதாக சிறுபிள்ளை தனமான தலைப்புகளை தந்தி செய்திகளில் பார்க்கமுடிகின்றது.

இனி பாசக ஆளாத மாநிலங்களில் தீவிரவாதத்தின் பெயரில் பாசகவின் 350கிலோ குண்டுகள் பரவலாக வெடிக்க துவங்கும். யார் யார் எல்லாம் கொல்லப்படபோகிறார்கள் என்று கவலையாக இருக்கிறது.

Wednesday, February 13, 2019

10% ஏழைகளுக்கு இந்த 16 ரூபாய் கொடுத்து இருக்கலாமே

ஒரு 16 ரூபாயை கொடுப்பேன் என்று சொல்லி வருன்கின்ற 2019ஆம் தேர்தலில் வாக்குகள் கேட்கிறது பாசக.

மக்களோ அந்த 15 இலட்ச ரூபாயை எங்களுக்கு தந்தது போல் இந்த 16 ரூபாயும் கொடுப்பீங்க போல என்று கேலி பேசும் அளவிற்கு இருக்கும் இந்த நிலையிலும், மோடி, யோகி, அமித்த சா என்று பாசக அவர்களது அணியுனுடன் தமிழகம் வருவது ஏன் என்று தான் புரியவில்லை.

பாமக தமிழகத்தில் ஏற்கனவே சாதி வெறி வெட்டு குத்து என்று பாசக செய்யும் அனைத்தையும் செய்து நாங்கள் தான் அவைகளுக்கு மொத்த குத்துகை என்று இருக்கும் பட்சத்தில் இனக்கலவரம் மதகலவரம் என்றும் கூட முயற்சி கூட எடுக்க திராணி இல்லாத பாசக எதற்கு தமிழகம் வந்து போகிறது.

தேர்தல் கூட்டங்களுக்கு வட நாட்டு மக்களுக்கு காசு கொடுத்து கூப்பிட்டு கொண்டு வந்து காட்டி யாரை ஏமாற்றுவதாக பாசக நினைத்துக்கொண்டு இருக்கிறது.

எப்போ பார்த்தாலும் பசுமாடு, சாணி, மாட்டு மூத்திரம் என்று அலையும் தமிழக பாசக மக்கள் ஏன் இப்போது எல்லாம் மாடு என்று கூட மறந்தும் கூட சொல்ல மறுக்கிறார்கள்.

தமிழகத்தில் பாமகவில் இருந்து சீமான் வரை இலவசங்களை எல்லாம் வெறுக்கும் ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது. இருந்தும் இந்த பெரிய கூட்டம் இது வரையில் இந்த 16 ரூபாய் இலவசத்தை இது வரை எதுவுமே சொல்லாதது மட்டும் இல்லை. 2014ல் கொடுப்பதாக சொன்ன 15 இலட்சம் எங்கே என்று தான் கேட்கிறார்களே தவிர ஏன்டா இலவசமா 15 இலட்சம் தரீங்க என்று இது வரையில் ஒரு வார்த்தை கூட கேட்க்காமல் இருப்பது ஏனோ அவர்களுக்கே வெளிச்சம்.

இப்படி 16 ரூபாயும் கொடுத்து வாங்கி கட்டி கொள்வதற்கு பதில் அந்த 16 ரூபாயையும் பேசாம அந்த 10% ஏழைகளுக்கே கொடுத்து மோடி அரசு புண்ணியம் தேடிக்கொண்டு இருக்கலாம்......

Tuesday, February 12, 2019

இந்தியாவை சீனாவிற்கு காட்டிகொடுத்த மோடி - தேச பற்று என்று பேசுகிறார்

126 போர் விமானங்கள் வாங்கினால் பாதுகாப்பு இல்லை என்று 36 விமானங்கள் வாங்கினால் தான் பாதுகாப்பு என்று குழந்தை கூட நம்பாத பொய்யை பாசக மோடியும் நிர்மலாவும் திரும்ப திரும்ப சொல்கிறார்கள்.

இதிலே காங்கிரசு தேசப்பற்றை அடமானாம் வைத்துவிட்டதாகவும், தன்னால் மட்டும் தான் நாட்டை காட்டிகொடுக்க முடியும் என்றும் பரைசாற்றுகிறார் மோடி.

126 விமானங்கள் இருந்தால் வேகமாக தாக்குதலும் தற்காப்பும் நடக்கும் அதுவா சீனாவிற்கு வேண்டும். 36 மட்டும் வைத்துக்கொண்டு போர் மிரட்டல் வரும் போது போதிய போர் விமானங்கள் இல்லாதால் தான் தோற்றேன் இல்லை என்றால் சீனாவை காலிலே உதைத்து அனுப்பி இருப்பேன், அப்படி விமானம் வாங்கி வைக்காத தவறும் காங்கிரசு தான் காரணம் என்று சொல்ல துடிக்கும் மோடிக்கு தான் அதிக தேச பற்று இருக்கிறது. நம்புங்கள் மக்களே  நம்புங்கள்...........

விமானங்கள் வாங்காமல் இருப்பது - தேசபற்று
காந்தியை கொல்வது - மனிதாபிமானம்
பொய் பொய்யாக புளுகுவது - அறிவு
ஒவ்வொறு நாளும் வெறூம் அறிக்கைகளை மட்டும் வெளியிடுவது - ஆக சிறந்த ஆட்சி

இன்னும் இப்படி முட்டாள் தனமாக எத்தனை நாளைக்கு தான் இந்த பாசக மக்கள் பேசிக்கொண்டு திரிவார்கள். அதையும் மொழி பெயர்த்து இந்த அற்ப மக்கள் அகமகிழ்வார்களோ.....

தங்களுக்கு தான் ஆட்சி செய்ய தெரியும் என்று சொல்லி திரிந்த பாசகவிற்கு ஒரு திட்டத்தை கூட தனாக தீட்ட தெரியாதது மட்டும் இல்லை. ஏற்கனவே இருக்கும் திட்டத்தை கூட நிறைவேற்ற தெரியாத கூட்டம் என்றும் இந்த 5 ஆண்டுகளில் நிரூபித்துள்ளார்கள்.

கொலை செய்வது கலவரம் செய்வது பொறுக்கி தனம் செய்வது தவிர வேறு எதையுமே தெரியாத பாசகவை மீண்டும் தேர்ந்து எடுங்கள் மக்களே................

தேர்தலுக்காக மீண்டும் கோத்ரா - பாசக மக்களே கவனம்

தேர்தலில் வெற்றியே பெறமுடியாது என்று உறுதியாக தெரிந்துவிட்டதாலும், மதவாத வெறி பலிக்கவில்லை என்ற விரக்தியில் தனது கட்சிகாரர்களை தானே கொன்றுவிட்டு அடுத்தவர் மீது பழியை போட்டுவிட்டு அதற்காக எனக்கு தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற வைக்கவும் என்று கோத்ராவை காட்டி தேர்தலில் வந்த மோடியின் சூத்திரத்தை மறுபடியும் கையில் எடுத்துள்ளது.

இனி யார் தலையில் எல்லாம் தீ வைப்பார்களோ, பத்தாக்களே பத்திரமாக இருக்கவும். அடுத்த வெட்டு உங்களுக்காக கூட இருக்கலாம்....கவனம் கவனம்.......