Saturday, March 22, 2008

நீதி, நேர்மை, நாட்டு பற்று என்று தனக்கு தானே சொல்லிக்கொள்ளும் சுப்பிரமணி சாமியின் சங்கதி என்ன??

குமுதம் இணைய இதழில் "இரகசியங்கள் தெரிந்த சுப்பிரமணி சாமி" என்ற தலைப்பில் திருச்சி வேலுசாமி பேட்டி கொடுத்து இருக்கிறார். அவருக்கு முன் சுப்பிரமணி சாமியின் பேட்டியும், திருமாவளவனின் பேட்டியும் கொடுத்து இருக்கிறார்கள். முதலில் திருமாவளவன் பேட்டியில் இராசீவ்காந்தியின் படுகொலையில் அமெரிக்க உளவு துறையின் செயலாக்கமாக தான் இருக்கும் என்றும். இந்தியாவில் அமெரிக்காவுக்காக உளவு பார்க்கும் வேலையில் சுப்பிரமணிய சாமியும், சந்திரா சாமியும் செவ்வனே பார்த்து வருவதும், இராசீவ்காந்தியின் படு கொலையை நடத்தி முடிக்க திட்டமிடுதலில் இருந்து திசை திருப்பும் வரை உள்ள அனைத்து வேலைகளையும் இவர்கள் இருவரும் சேர்ந்து முடித்திருக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தினார்.

http://www.kumudam.com/interviews.php?id=2&strid=2796

பிறகு பேட்டியளித்த சுப்பிரமணி சாமி, ஈழத்தவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அரசியலும் கட்சியும் நடத்தும் அவர் சொல்வதற்கொல்லாம் என்னால் பதில் சொல்லமுடியாது என்றும். தான் ஏன் திராவிட கட்சிகளை எதிர்கிறேன் என்றால் அவர்களுக்கு தேசிய உணர்வு இல்லை என்றும், செயலலிதாவுக்கு தேசபற்று அதிக அளவில் இருப்பதாக இப்போது தெரிந்ததனால் இந்த முறை அவருடன் ( கவனிக்கவும் எப்போதும் செயலலிதாவை அவள் என்று விளிக்கும் சாமி, அவர்கள் சொன்னார்கள் என்று இந்த பேட்டியில் பயந்து கொண்டு விளிப்பதை பார்க்கமுடியும்) சேர்ந்து இருப்பதாகவும். மேலும் இவருக்கு தேசபற்று திடீர் என்று பெருகிவிட்டதால் நாட்டின் வளர்ச்சி திட்டங்களை மூட நம்பிக்கையின் பெயரால் தடுத்துவைப்பதாகவும். தன்னால் தமிழகத்துக்கு எள் அளவேனும் பயன் இல்லை என்றாலும். தமிழகத்துக்கு எதுவும் கிடைத்துவிடவோ கூடாது என்றும். மேலும் இவைகள் எல்லா பேச்சுக்களையும் மிஞ்சும் விதமாக, தமிழகத்தை முன்னேற்ற கல்கத்தாவிற்கும் தூத்துகுடிக்கும் இடையில் இரயில் பாதையும், அனைத்துலக விமான நிலையமும் நிறுவினால் போதும் தமிழகம் முன்னேறிவிடும். மற்றபடி துறைமுகங்கள் அமைப்பதோ, கப்பல் போக்குவரத்து நடத்துவதோ அதனால் வரப்போகும் வாணிப பொருளாதாரத்தையோ தமிழகம் பெற்றுவிடக்கூடாது என்றும். மாறாக கல்கத்தாவிற்கு இங்கிருந்து ஊழியம் தமிழகம் செய்யவேண்டும் என்று சொல்ல அவருக்கு எப்படி தான் மனது வருகிறது என்று தெரியவே இல்லை.

சேது கால்வய் திட்டத்தை நிறைவேற்றினால் முதலில் கல்கத்தா செல்லும் கப்பல்கள் குறைந்த செலவில் சென்று அடையும். பிறகு சென்னையோடு சரக்கை இறக்கிவிட்டு இனிமேல் இங்கிருந்து கொண்டு செல்லும் மற்றும் உற்பத்தி பொருளை சென்னையிலே கொண்டு வந்து உங்களது செலவிலே கொடுந்துவிடுங்கள். அந்த செலவை பொருளின் விலையில் எங்களால் கொடுக்கமுடியாது என்று அனைதுலகம் சொல்லுமேயானால். தொழில் நடத்தும் கல்கத்தாகாரர்கள், இலாப பங்கை பெருக்க பயணக்கூலியை மிச்சம் பிடிக்க பின்னாளில் தொழில்களை தமிழகத்துக்கோ அல்லது அருகில் உள்ள மாநிலங்களுக்கோ மாற்றவேண்டிய கட்டாயம் வந்துவிடுவது ஒரு புறம் என்றாலும். அது எப்படி தமிழகத்தில் பணம் புழங்குவது, வேலை கிடைப்பது என்றாகிவிட்டால் தமிழகம் முன்னேறிவிடாதா. மக்கள் பசியும் பட்டினியுமாக பரதேசிகளாக இருக்கும் வரையில் தான், தமிழகத்து உணவை உண்டுவிட்டு, தமிழ் படிக்காதீங்க பதிலுக்கு கிரேக்கமோ அல்லது வேறு ஏதாவது ஒரு மொழி தமிழ் அல்லாமல் படியுங்கள் என்றும். அமெரிக்கா வீசும் எலும்பு துண்டுக்கும், வட நாட்டு தொழிலதிபர்களுக்கு இப்படி அரசியல் மாமா வேலைகளையும் தான் பார்க்க முடியும்.

இதிலே பேச்சு வாக்கிலே தான் பொய்யே பேசமாட்டேன் என்று அனைவருக்கும் தெரியும் என்றும். வேண்டும் என்றால் அந்த ஆணையத்தின் தீர்ப்பை படித்து பாருங்கள் என்றும், இல்லை என்று பேட்டியாளர் சொன்னால் அப்போ இந்த ஆணையத்தின் பேட்டியை படித்து பாருங்கள் என்றும். ஆதாரம் எங்கே என்றால் அது எனது வேலை இல்லை என்றும், ஆனால் நான் சொல்லும் மற்ற செய்திகளை நீங்கள் யாவரும் கேள்வியே கேட்க்காமல் நம்பவேண்டும் என்றும் முன்னுக்கு பின் முரனாகவே பேட்டியை முடித்தார். அதுவும் ப்பிர மணி என்று அதிமுகா மகளீர் அணி கொடுத்த வரவேற்பை எல்லாம் மறந்துவிட்டீர்களா என்றால் சிரிப்பாரே பாருங்கள் ஒரு வெக்கம் கெட்ட சிரிப்பு. மனிதனுக்கு மானம் வெட்கம் சூடு சுரனை என்று எந்த வகையராவும் இல்லை என்று தெளிவாக சொல்வார். அதுவும் முதல்வர் கருணானிதியை அவன் என்று விளித்து போசும் அவர் செயலலிதாவை எங்கே மறந்தேனும் அவள் என்று விளித்துவிடுவேனோ என்று பிரசவ அவதிகொள்வதையும் பார்க்கமுடியும்.

http://www.kumudam.com/interviews.php?id=2&strid=2909

இதற்கு பிறகு பேட்டி கொடுக்கிறார் திருச்சி வேலுசாமி. ஒரு 30 நிமிடம் நிகழும் அந்த பேட்டியில் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. பேச்சுக்கு பேச்சு தேசியம் என்று சொல்லும் சாமியின் வண்டவாளங்களை தண்டவாளங்களில் ஏற்றுகிறார். அவைகளை எழுதினால் பத்தாது நீங்களே பார்த்துகொள்ளுங்கள்.

http://www.kumudam.com/interviews.php?id=2&strid=2959#

அடிக்கடி ஆப்பிகாவுக்கும் அண்டார்டிக்கவுக்கும் போகிறேன் என்று சென்றுவரும் இந்த உளவாளியின் கோரமுகம் புரியும். இதெல்லாம் ஒரு பிழைப்பா சாமி, இதற்கும் பெண்ணை வைத்து தொழில் நடத்துபவனுக்கும் என்ன வித்தியாசம் சாமி. இதற்கு தான் இத்தனை படித்தேன் என்று சொல்கிறீர்கள். வெட்கம்.......

Friday, March 21, 2008

பக்கம் தொண்ணூறு: பலனோ சுழி: செயலலிதா

தமிழக நிதி நிலை அறிக்கையை இப்படி விமர்சனம் செய்கிறார் அம்மையார். சென்ற முறை முதல்வராக இருந்த செயல்படாத முதல்வர் இந்த அம்மையார், 4 ஆண்டுகளாக பணம் இல்லை, பொருள் இல்லை, கசப்பு மருந்து.....

இப்படி ஏகவசனமாக மட்டுமே பேசிக்கொண்டு விட்டு, அலுவலகத்துக்கு வருதே சாதனையாக பேசிக்கொண்டு இருந்த அம்மையார் இன்று இப்படி நக்கல் தெரிக்க பேசுகிறார். அதுவும் தப்பி தவறி அலுவலகம் ஏதும் வருவதாக இருந்தால் ஒரு பேரிய ஊர்வலமாக நீண்ட வாகன அணியாக வருபவருக்காக பொதுமக்கள் யாவரும் எங்கேயும் போகமுடியாதது போல் சாலைகள் எல்லாம் மூடிவிட்டு. பொதுமக்களை வருத்தெடுத்தவர் தான் இன்று மக்கள் நலனை பற்றி வரிந்து கட்டிக்க்கொண்டு அறிக்கைவிடுகிறார் இந்த அம்மையார்.

விலைவாசி ஏறிப்போச்சாமே சொல்கிறார் அம்மையார், அரசு ஊழியர்களின் பணிக்கொடைகளை களவாண்டவர் சொல்கிறார், சாதாரண மக்களால் எதுவுமே வாங்க முடியாமல் ஆகிவிட்டது என்று. நீங்கள் அவர்களின் பணத்தை சுருட்டிக்கொண்டு மேடைகளுக்கும் சுவரோட்டிகளுக்கும் பச்சை வண்ணம் தீட்டி பார்த்த போது அவர்களால் எல்லாம் வாங்க முடிந்தது போலும்.

விமர்சனம் செய்வதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும். அது உங்களுக்கு கட்டாயம் இல்லை, வழக்கம் போல் ஓவ்வெடுக்க கொடைக்கோ, அல்லது ஐதராபாத்துகோ போங்கள். இல்லை என்றால் கொள்ளை அடித்த பணத்தில் தங்கத்தாரகை, வெள்ளித்தாரகை, பித்தளை தாரகை என்று விதமாக பட்டங்களை வாங்கிக்குவியுங்கள். இருக்கிற விலைவாசியில் ஒன்று வாங்கினால் இன்னொறு இலவசம் என்று கொடுத்தாலும் கொடுப்பார்கள்.

Thursday, March 20, 2008

உண்மையில் யார் இந்த "எவனோ ஒருவன்"

மகளின் பிறந்த நாளை கொண்டாட வீட்டுக்கு சொன்று கொண்டு இருக்கும் வழியில் சாலை நெரிச்சல், மணி கணக்காக அடிக்கு அடி நகர்ந்து போவதாக ஆனது அன்று. பொருத்து பார்த்தவன், வண்டியை அப்படியே சாலையில் விட்டு விட்டு நடந்தேவாது போவோம் என்று நடக்க தொடங்கிறான்.

கோடை வெயில் மண்டையை பிளக்கிறது, தான் வருவதை வீட்டிற்கு சொல்லலாம் என்றால் பொது தொலை பேசியில் பேச நாணயங்கள் இல்லை. அருகே இருக்கும் கடைக்கு சென்று சில்லரை கேட்கிறார். கடைக்காரரோ சில்லரை எல்லாம் இல்லை, வேண்டும் என்றால் ஏதாவது வாங்கி மீதி சில்லரை வேண்டுமானால் தருகிறேன் என்கிறார். ஏதாவது பானம் வாங்கலாம் என்றால், வெளியில் கொதிக்கும் வெயிலை விட மோசமாக கொதிக்கிறது குளிர் பெட்டியில் இருக்கும் பானம். பானத்தின் விலையும் அதன் குளிர் தன்மையும் கண்டு விலை மிகவும் அதிகம் என்று வாதாடுகிறான். தவிற விலை போக மீதியில் தொலைபேசிக்கு பத்தாது விலையை குறைக்கவும் என்று வாக்குவாதம் தொடர, கடைகாரரோ எகதாளமாக விளையாட்டு மட்டையை எடுத்து மிரட்ட. கைகலப்பில் கட்டை கை மாறுகிறது. கடையை அடித்து தூளாக்கிவிட்டு பானமும் மீதம் சில்லரையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்படுகிறான்.

நல்ல உடையில் கையில் பெட்டி சகிதமாக அருகே இருக்கும் குப்பத்தில் நுழைந்து செல்லுகையில் கால் சோடுகள் கிழிந்து கால் தரையில் உரைவதை கவனித்து தாள்களை அதில் தினித்து புறப்படும் போது அங்கே இருக்கும் கலக்கூட்டத்தினர் இருவர் அவனிடம் வழிபறிக்க முற்பட. கொண்டு வந்த கட்டையால் ஒரு போடு போடுகிறான். உதை வாங்கியவர்கள் மான்களாக சென்று ஓடி மறைகிறார்கள், போகிற போக்கில் அவர்களிடம் இருக்கும் மடக்கு கத்தியை பிடுங்கி கொண்டு விரட்டி விடுகிறான் அவன்.

இதற்கு இடையில் கடைக்காரர் காவல் துறையில் புகார் தெரிவிக்க, அன்றைக்கு பணிவிடை பெரும் திருட்டு மற்றும் கொள்ளை பிரிவை சேர்ந்த அதிகாரி தனது அலுவலக கடைசி பணியாக துப்பு துலகக்கி கொடுக்க முன் வருகிறார்.

குப்பத்து சண்டையிலிருந்து சென்ற அவன் அருகே இருக்கும் பொது தொலைபேசியில் வீட்டை தொடர்புகொள்ள நிற்க. அடிவாங்கியவர்கள், தனது கூட்டாளிகளுடன் ஏராளமான ஆயுதங்களுடன் இவனை தேடி வருகிறார்கள். ஆளை கண்டதும் இயந்தர துப்பாகியால் சல்லடையாக துளைகிறார்கள் வண்டியிலே சென்றுக்கொண்டு. அவனை தவிற மற்ற அனேகருக்கும் குண்டடிபடுகிறது. பதட்டதில் எதிரே வரும் வண்டியில் மோதி அந்த கலககும்பல் அடிப்பட்டு இறக்கிறது. அவர்களை அப்போது தான் கவனித்த அவன் அருகே சென்று பார்கிறான், பின்னர் அவர்கள் வைத்திருக்கும் ஆயுத பையை எடுத்துகொண்டு அங்கிறுந்து செல்கிறான் அவன்.

கடைகாரனின் புகாரை விசாரித்து கொண்டிருக்கும் போதே கலககும்பலின் துப்பாக்கி கொலைகள் காவல் துறையின் காதுகளுக்கு எட்ட. கடைக்காரரை நேரில் சென்று விசாரிக்க செல்லும் வழியில், இந்த கலவரங்களை நிகழ்த்தும் மனிதன் யாராக இருக்கும் என்று ஒரு துப்பு கிடைக்கிறது.

இதற்கு இடையில் பசிக்காக உணவகத்தில் நுழைந்த அவன் கேட்டதை இல்லை என்று சொல்ல, இயந்தர துப்பாக்கியின் முனையில் அழகு தத்துவங்களை பேசி முடித்து கேட்டதை பெற்றுக்கொண்டு, உண்டுவிட்டு பணம் கொடுத்து முடித்து விட்டு செல்கிறான்.

செல்லும் வழியில் கிழிந்த தனது சோடுகளுக்கு பதிலாக நல்ல சோடுகளை வாங்க அருகே உள்ள கடையில் நுழைய. கடைக்கரரோ ஒரு பேரினவாதி. கடையில் நுழைந்தவன் சோடுகளை தேடிக்கொண்டு இருப்பவனை பார்த்ததும் கடைக்காரருக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு. இடையில் அருகே நடந்த உணவக இடர்களை விசாரிக்க வந்த காவலர்கள் இந்த கடையில் வந்து இவனை பற்றி விசாரிக்க, இவன் கடையில் இருப்பதை மறைத்து விட்டு காவலர்களை அனுப்பிவிட்டு, இவனுடன் ஓரிண சேர்க்கைக்கு முற்பட. அங்கேயும் ஒரே போடு அவனை, அந்த கையோடு அங்கே இருக்கும் பசூக்காவை எடுத்துக்கொண்டு செல்கிறான்.

இதற்கிடையில் அவனின் முகவரியை கண்டு பிடித்த காவலர்கள் அவனது அம்மாவிடம் சென்று விசாரிக்கிறார்கள் அவன் வீட்டிற்கு போவதாக எல்லோரிடமும் சொல்லி செல்கிறான் எங்கே செல்கிறான் என்று. அங்கு அவனது அம்மா அவனை பற்றிய உருக்கமானதொரு கதையை சொல்கிறார். மிகவும் ஒழுக்கமான தொரு வளப்பில் நாட்டு பற்றுடன் வளர்க்கப்பட்டவன். எதிலும் நேர்மை, நியதி என்ற கொள்கை தவறாதவன். அவனை போல் எல்லோரும் நேர்மையாகவும் நியதியாகவும் இருக்கவும் வேண்டும் என்று எதிர்பார்ப்பவன். அவனது அம்மாவிற்கு அவனது மனைவியும் மகளும் வாழும் இடம் தெரியவே இல்லை என்று உறுதிபடும் போது காவல்துறை சொல்கிறது அவனுக்கு வேலை போய் ஒரு மாததிற்கு மேல் ஆகுகிறது என்றும் வழியில் அவன் செய்து போகும் செயல்களை சொல்லி மேலும் துப்புகளை சேகரிக்க செல்கிறார்கள்.

ஒரு வழியாக வீட்டருகில் வந்ததாக வீட்டிற்கு கூப்பிட்டு அவன் சொல்ல, அவனது மனைவி குழந்தையை கூப்பிட்டுக்கொண்டு வெளியே ஓடுகிறாள் அருகில் இருக்கும் கடற்கடரை மேடையிக்கு. அங்கே இருப்பதை ஊகித்தவனாய் செல்ல, மனைவி மிரண்டு பயந்து நடுங்க. அப்பாவியாய் சொல்வான் எனது மனைவியையும் மகளையும் பார்ப்பது தவறா என்று. மனைவி சொல்வாள் நீங்களும் நானும் சட்டப்படி தம்பதியர் இல்லை, தவிர எங்களுக்கு 100 அடிக்குள் நீங்கள் வருவதே குற்றம் என்று நீதிமன்றம் சொல்லி இருக்கிறது என்று. இப்படியாக வாக்குவாதம் தொடர, அருகில் இருப்பவர்கள் என்ன ஏது என்று கேட்க்க துப்பாகி முனையில் விரட்டபடுகிறார்கள் பொது மக்கள்.

அப்படி இப்படி என்று அவனை தேடி கண்டுபிடித்து அங்கேயே வரும் காவலர் அவனை அங்கே மடக்கி, அவனை காப்பாற்ற அவன் சொல்வான் நேர்மையின் பொருள்விளங்க சொன்ன அத்தனையையும் கடைபிடித்தேன் அதையே கொள்கையாகவும் கொண்டு வாழ்ந்தும் வந்தேன். அதனால் என்னை யாருக்குமே பிடிக்கவில்லை. மற்றவர்கள் எல்லோரும் அதற்கு நேர்மாறாகத்தான் நடக்கிறார்கள், அவர்களுக்கு இந்த உலகம் பொன்னையும் பொருளையும் அள்ளி கொடுக்கிறது என்று. மேலும் பேசுகையில் காவலர் சொல்வார் உனது உயிராக சொல்லும் மகளுக்காவாது நீ திருந்தி வாழக்க்கூடாதா என்றால், நான் கைதியாக இருந்தேன் என்று எனது மகள் கேட்பது நடந்து நான் உயிருடன் இருப்பதில் பொருள் இல்லை என்று சொல்லு, சட்டையில் மறைத்து வைத்திருக்கும் பொம்மை துப்பாக்கியை எடுக்க, காவலர் சரியான அவனை சுட்டுத்தள்ளுகிறார். அவன் தான் இந்த "எவனோ ஒருவன்" என்று காவல் துறை ஊடகத்திற்கு சொல்லி முடிக்கிறது.
இந்த படத்தை எப்படி தமிழ்ழில் எடுப்பது, குடும்பத்தை மதிக்காதவனாக இருக்கும் நாயகனின் படம் எல்லாம் பருத்திவீரன் போல் போவது இல்லை. அதில் கூட அவன் அவளுக்காக தான் கொலைகாரனாக சொல்வது படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று வெகுவாக சொல்வார்கள். அதனால் சீதர் மகாதேவனுக்கு குடும்பம் என்ற பாசம் எப்பவும் உண்டு. நீதி நேர்மை என்று இருப்பவன். குழந்தையை பள்ளியில் சேர்த்துகொள்ள நன்கொடை எல்லாம் கொடுக்க முடியாது என்றும் தனிபாடமாக வீட்டில் படித்தால் தான் முடியும் என்றால் நான் எல்லாம் அப்படி ஒன்றும் படிக்கவில்லையே என்று சொல்வது. அதற்கு என் அப்பா இப்படி ஒரு பாழும் கிணற்றில் என்னை இப்படி தள்ளிவிட்டாரே என்று சொல்லுவதும் வரைக்கும் வேண்டுமானால் தமிழ் படத்தில் சொல்லலாம்.

மற்றபடி "Falling Down" படத்தில் வரும் சமுதாய சீர் கேடுகளை ஆங்காங்கே அடித்து நோருக்குவதை பானக்கடையில் இருந்து அப்படியே தமிழ் படத்திலும் எடுத்து இருக்கிறார். என்ன தமிழகத்தில் நடந்தால் என்ன என்ன நடக்குமோ அவைகளை கொண்டு திரைக்கதையை அமைத்து இருக்கிறார் இயக்குனர்.
அந்த படத்திற்கும் தமிழ் எவனோ ஒருவனுக்கும் உள்ள வித்தியாசம், ஆங்கில படத்தில் அவனை திரையில் பார்க்கும் போது இப்போ பிடித்து விடுவார்களா என்றே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. தமிழ் எவனோ ஒருவனை பார்க்கும் போது, போடு அவனை அப்படி என்று இருக்கிறது.

முடிவு இரண்டு எவனோ ஒருவனுக்கும் மரணம் என்று அமைவதை பார்க்கும் போது, நீதி நேர்மை எல்ல கொள்கைகளையும் பார்த்து மொத்தமாக சாத்தான் சிரிப்பதாக கதை முடித்தற்காக இயக்குனரை கண்டிக்கமல் விடமுடியவில்லை. வேற எப்படி தான் இந்த மாதிரி கதைகளை முடிப்பது என்றால் "சத்தம் போடாதே" பாருங்கள் என்ன சொல்கிறோம் என்று புரியுமென்று சொல்லலாம்.

Monday, March 17, 2008

இளையராசாவின் இந்த கட்சேரிக்கு தான் வேட்டி கட்டி உருமா எல்லாம் கட்டினார்களா வலைஞர்கள்.

அவருடைய எல்லா கட்சேரிகளை போல் தான் இதுவும் இருக்கிறது. என்ன இவருடை குழுவில் கங்கை அமரன் வந்து கலக்குவார் ஆனால் இதிலே அவர் இல்லை. செயராமனும், குட்புவும் வந்து கதைகிறார்கள். ஆனால் கங்கை அமரன் கதைப்பதை போல் இல்லை.

பெண் பாடகர்களில் தமிழ் தெரியாதவர்கள் திரித்து சொன்ன வார்தைகளை திரும்பவும் சொல்கிறார், நன்றாக பாடிய மஞ்சரி பாட்டை விட்டதில் அவருக்கு கோபம் திரும்பவும் பாட சொல்கிறர் அவரது பாடல் பதிவுகளில் நடப்பது போல்.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=54fb0148b017647355b7

தனது பாடல்களை தவறாக பாடும் பாடகர்களை திருத்துவது கூட குற்றம் என்று ஆகிவிட்டது போலும் இப்போது. இவர்கள் கூறும் குற்றம் எப்படி தெரியுமா இருக்கிறது. பள்ளிகாலங்களிலும், கல்லூரி காலங்களிலும் வண்டியிலே மக்களோடு பயணிக்கும் போது இவர்கள் படியில் அடைத்துக்கொண்டு நிற்பார்கள். உள்ளே வருபவர்களை இவர்கள் ஒதுக்கி போகும் படி முறைப்பார்கள். இதுவே இவர்கள் ஏறும் போது யாராவது வழியில் அதுவும் திருப்பி எதுவும் செய்யவோ சொல்லவோ மாட்டார்கள் என்று உறுதியாக தெரிந்தால் உள்ளே போ என்று அதிகாரமாக சொல்லி வழியில் இவர்கள் நிற்பார்கள். அது போல இருக்கிறது இவர்களது விமர்சனம்.

மனதுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவரது தும்மலில் கூட குற்றம் கண்டுபிடிப்பார்கள் மக்கள். இதிலே இரகுமானின் வசூலில் கால் பாகம் கூட இவருக்கு இல்லை என்று நக்கல் வேறு. அவரது காலம் என்ன இவரது காலம் என்ன. இந்த காலங்களிலும் மக்களை அதே கம்பீரத்தோடும் உட்சாகத்தோடும் மேடையேறி பாடவும், பாடலரங்குகளை நடத்தி காட்டவும் வரும் அவரை வரவேற்க கூட வேண்டாம் இந்த மாதிரியான விமர்சனங்களை தவிற்கலாம்.

இளையராசா வந்ததால் விசுவநாதனின் பாடல் களையோ இன்னமும் அதற்கு முன்னால் இசையமைத்தவர்களின் பாடல்களையோ யாரும் இனிமேல் கேட்க்க மாட்டோம் என்று நிறுத்திவிட வில்லை. இன்றைக்கும் வானோலியிலும் சரி காணொலியிலும் சரி அவர்களது ஏறாளமான பாடல்கள் வழிந்து வருவதை பார்க்க முடியும். ஆரோக்கியமான விமர்சனங்கள் வரவேற்க படவேண்டியவையே. அதே நேரத்தில் அங்கே காழ்ப்புக்கு இடமில்லை, இது எனது தாழ்மையான கருத்து.

Sunday, March 16, 2008

இயக்குனர் பாலசந்தரின் இரசிகர்கள் என்னை மன்னிப்பாராக.

பொய் என்று ஒரு திரைபடத்தை பாலசந்தர் கொடுத்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும். அந்த படத்தில் தனது வழக்கமான காதல் கதையை வித்தியாசமான பின்னனியில் கொடுத்திருந்தார். தனக்குள் ஆசையும் வெளியில் விருப்பமும் இல்லாதது போல் இருந்துவிட்டு பிறகு காதலனிடமே உனது காதலுக்கு விலையாக காதலையே தரவேண்டும் என்று கதை பயணிக்கும்.

தனது வழக்கமான திரைகதையில் வருவதை போல் இரசிகர்கள் ஒன்று நினைக்க மற்றொன்று அங்கே நடைபெற்று முடியும் விதமாக கதையை முடித்தும் இருந்தார் . அனேகமாக படத்தை பார்த்த அனைத்து இளகிய மனம் கொண்டோரும் பாலசந்தரை சபித்தும் திட்டி தீர்த்தும் இருக்ககூடும்.

நேர்மைக்கு வள்ளுவனார், அவர் ஒரு அரசியல்வாதி. கம்பன், கல்லூரி முடித்தும் விடலையாகவே இருக்கும் இளைஞன். தனது திறமைக்கு கிடைக்காத மதிப்பும் மரியாதையும் தனது தந்தையின் பெயரால் கிடைப்பதை விரும்பாதவன். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் பிணக்கில் கதை நகரும் போது சாலை விபத்து ஒன்று நடக்கிறது.

அந்த விபத்தில் வள்ளுவனாரின் தனிப்பட்ட வாழ்க்கையில்லும் அரசியல் வாழ்க்கையிலும் புயல் வீச துவங்குகிறது. விதியில் விளையாட்டால் ஓட துவங்கிய கம்பன் இலங்கையில் வந்து மறைவு வாழ்க்கையை மெற்கொள்ள, அங்கே மறுபடியும் விடலை விளையாட்டாய் காதல் கொள்கிறான் கம்பன்.

இது வரையில் படம் ஒரு சாதாரண படமாகத்தான் செல்லும். ஆனால் காதல் தொடங்க அவனுக்கு உதவியாக ஒரு தந்தையையும் , பின்னர் விதியும் என்று இரண்டு கதை பாத்திரங்கள் வரும். இதிலே தந்தையாக வரும் பாத்திரம் ஏன் என்று ஒரு விளக்கம் கூட வரும் ஆனால் விதி பாத்திரம் ஏன் என்று விளக்கம் இல்லாமலே போகும். இவர்கள் இருவரும் கதையில் வந்ததும், இவர்களை சுற்றியே கதை அதன் பிறகு நகரும்.

இதுவரையில் வந்த தெளிவான திரைக்கதை இதன் பின்னர் குழம்பும் குழப்பம் மக்களை தலை சுற்ற வைக்கும். இந்த குழப்பம் ஏன் எதற்கு என்று மக்கள் சிந்திக்கும் முன்னே மக்களால் தாங்க முடியாத ஒரு முடிவை சுமத்தி வீட்டிற்கு அனுப்பி வைப்பார் பாலசந்தர் இந்த பொய்யை சொல்லி.

வித்தியாசமான கதையும், இது வரையில் இல்லாத வசனங்களை அதுவும் பெண் பாத்திரங்கள் பேசுவதாகவும். இது வரையில் கதைகளிலும் கட்டுரைகளிலும் எடுக்காத ஒரு முடிவாக பெண் பாத்திரங்கள் எடுப்பதாக முடியும் வித்தியாசமான படங்களை கொடுத்து வந்த பாலசந்தர், இந்த படத்தையும் ஒரு வித்தியாசமான படமாக கொடுக்கத்தான் அந்த இரண்டு பத்திரங்களையும் கதையில் தேவையே இல்லாமல் சேர்தார் போலும் என்று தோன்றும் முதல் பார்வையில்.

மரணம் வருகிறது என்று சொல்வோமே தமிழில் அந்த மரணத்திற்கு ஒரு ஆசை. கொஞ்ச நாள் விடுப்பில் செல்ல வேண்டும் என்று. அதுவும் இந்த விடுப்பில் மக்கள் ஏன் வாழ்க்கையை விட்டு மரித்து செல்ல இவ்வளவு தயங்குகிறார்கள் என்று தெரிந்துகொள்ள் வேண்டும் என்று.

இதை தேடி வரும் மரணத்திற்கு அதன் விடுப்பு முடியும் வரையில் உடன் இருந்து மரணம் வாழ்க்கையை பற்றியும் ஏன் மனிதன் அதை விட்டு விலக இவ்வளவு தயக்கம் காட்டுகிறான் என்றும் தெரிந்துகொள்ள உதவியாக இருக்க ஒரு மனிதனை தேர்ந்தெடுகிறது.

அப்படி மரணம் தேர்ந்தெடுக்கும் மனிதன் மிகவும் நேர்மையானவர். ஒரு பெரும் பணக்காரரும் கூட. பொதுவாக வசதி வாய்ப்புகள் இருந்தும் நல்லவனாகவும் நேர்மையாளனாகவும் இருப்பவனே உண்மையான நல்லவன் என்று அவரை தேர்தெடுக்கிறது மரணம்.

வருகின்ற அவரது பிறந்த நாள் விழாதான் அவரது கடைசி நாள் என்றும், அது வரையில் விட்டு வைக்க எனக்கு வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள உதவ வேண்டும் என்று கேட்டு வரும் மரணம் ஒரு அழகிய வசிகரனின் உடலை எடுத்துக்கொண்டு அவனது உருவில் வரும். அந்த இளைஞன் தான் இந்த மனிதன் இளைய மகளின் மனதை கவர்ந்தவனாக வருபவன்.

மரணத்திற்கும் அவருக்கும் இடையிலான ஒப்பந்தமோ அல்லது இந்த மனிதனாக வந்து இருப்பது மரணம் என்று யாருக்கவது தெரிவித்தால் அந்த கணமே உயிரை கொண்டு போய்விடுவேண் என்று ஒரு ஒப்பந்தம்.

அன்று முதல் அந்த மனிதனுடனே வளைய வருகிறது அந்த மரணம். நிறுவனத்தின் இரகசிய ஆலோசனையிலும் இடம் பெறும்போது சந்தேகம் வலுக்கிறது அவரது நிறுவனத்தினருக்கு. அவர்களில் ஒரு இளைஞன் இவருக்கு மருமகனாக வர இருப்பவன். வசீகரமான தோற்றம், ஆழ்ந்த சிந்தனை, சின்ன வயதிலே எத்தனை முதிர்ந்த அறிவு என்று வியந்த இவருக்கு பணம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வான் அவன் என்ற விவரம் தெரியும் போதும்.

மூத்த மகள் தந்தையிடம், அம்மாவிற்கு பிறகு உடன் இருந்தே கவனித்தும் கூட என் மீது இல்லாத அக்கறை இளையவளிடம் ஏன் என்று புரியாமல் கேட்கும் போதும் சரி. மனதை கவர்ந்தவனின் உருவில் வந்து இருக்கும் மரணம் வேர்கடலை சட்டினியில் ஆரம்பித்து வாழ்க்கையின் சுவையை ஒன்றோன்றாக சுவைத்து பிறகு பாலுணர்வையும் கண்ட பிறகு அந்த இளையவளையும் தன்னுடன் அழைத்து செல்ல போவதாக அறிவித்த போது துடித்து போன அவர். காதலுக்கும் பாலுணர்வும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருந்தாலும் வெவ்வேறு என்று விளக்கம் சொல்லி புரிய வைப்பதும் என்று மிகவும் அழகான காட்சிகளை காண முடியும் அந்த படத்தில்.

படத்தின் பெயர் "மீட் சோ பிளாக்கு" Meet Joe Black. முதல் காட்சியில் வீட்டில் இருந்து நிறுவனதிற்கு பறந்து செல்லும் தந்தை மகளை அப்படியே மகள் பணியாற்றும் மருத்துவ மனையில் இறக்கி விடுவதாக அழைத்து செல்லும் போது, திருமணமே செய்து கொள்ள போவதாக இல்லையா என்று மகளிடம் கேட்க அவளோ மனதில் இன்னமும் அந்த எண்ணம் எல்லாம் வரவில்லை என்று சொல்ல. காதலும், அதன் அவசியமும் எப்படி தேர்ந்தெடுப்பது என்று தந்தை சொல்லும் விபரங்களைத்தான் பொய் திரையில் மகனிடம் காதலிக்க சொல்லித்தருவாத வரும் காட்சியின் வசனங்கள்.

நேர்மை தவறா அரசியவாதியாக வரும் வள்ளுவனார் இந்த பணக்காரரின் பாத்திரம். உடன் துடிப்பான வசீகரமான இளைஞனாக வரும் சோ பாத்திரம் கம்பன். சோ காதலை உணரும் கதை பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டார் போலும்.

அதே சாலை விபத்தில் மாறும் திரைக்கதையும் மரணம் மனிதனாக வரும் காட்சிகளும்.

சோ பிளாக் போட்டுவரும் அதே ஆடை அலங்காரங்களை அப்படியே பிரகாசு இராசுக்கு போட்டு விட்டு அழகு பார்த்ததும். சோ பிளாக்கை காட்டி நிறுவனித்தில் சர்ச்சைகள் வருவதும், பிறகு இருவரும் சேர்ந்து அதை சமாளிப்பதும், கம்பனால் வள்ளுவனார் அரசியல் வாழ்க்கைக்கு வரும்
நெருக்கடி.

இப்படி முழு திரைக்கதையும் பிரித்து சொல்லிவிடலாம். இவ்வளவும் செய்த மரணம் காதலியாக நினைத்தவளின் மனது நோகாமல் இருக்க உடலுடன் தந்தையை அவரிடம் இருந்து விரித்து செல்லும் கால் காதலனை மீட்டு கொடுத்துவிட்டு போன முடிவையும் கொடுத்து இருக்கலாம். அப்படி இருந்தால், இந்த இரண்டாவது தந்தையும், விதியின் தோன்றலும் எதற்கு என்று நாம் அனைவரும் கேட்ப்போம் அல்லவா..

விதிப்பாத்திரம் பேசும் மொழிகள், இளையவளை பார்க்க மருத்துவமனைக்கு போன மரணத்தி விமர்சிக்கும் வரதானோளிடம் வரும் வசனங்களையுக் ஒத்துபோவதை பார்க்க முடியும்.அனந்து அவர்களின் பிரிவு உங்களுக்கு இவ்வளவு ஒரு பெரிய இழப்பு என்று நாங்கள் இது வரையில் நினைக்கவில்லை ஆனால் இனிமேல் கட்டாயம் நினைப்போம்.