Saturday, March 31, 2018

வாய் மணக்க பொய் சொல்லும் தமிழிசை

தாமதம் ஆகவே இல்லையாம் வெகு விரைவில் 9999ல் விரைவாக தீவு கானாப்படும் என்று பாசக சொன்னதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் நலனையும் மக்களையும் கணக்கில் கொண்டு மட்டுமே தான் இந்த முடிவை பாசக எடுத்துள்ளதாகவும், மேலும் வீட்டில் வைதிருக்கும் பணத்தை எல்லாம் மேலும் சில மோடிகள் கொள்ளை அடித்துக்கொண்டு போக வசதியாக இருக்கு பொருட்டும் வங்கியில் செல்லுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார தமிழிசை. ஆகவே தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் தமிழக மக்கள் பாசகவை நேரடியாக ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்றும் இப்படி பினாமி அரசாக பெயர் எடுக்க விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Friday, March 30, 2018

பாசக ஒரு நயவஞ்சக கட்சி என்று அப்பட்டமாக காவிரி பிரச்சனையில் காட்டி இருக்கிறது

 நயவஞ்சம் என்றால் நல்லவிதமாக பேசி நம்பவைத்து கழுத்தறுப்பது என்று அனைவருக்கும் தெரியும். தமிழக மக்களின் நலம் தான் தங்களுக்கு எல்லாம் என்று வெளியில் சொல்லிக்கொள்ளும் பாசகவின் தமிழிசை மற்றும் அனைவரும் தமிழகத்துக்கு ஏதாவது தேவை என்று வந்தால் முதலில் எங்களுக்கு வாக்களித்து அதிகாரத்தில் உட்கார வையுங்கள் பிறகு பார்க்கலாம் என்று கதைகளிலும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பணையமாக பெண்களையும் குழந்தைகளையும் பிடித்து வைத்துக்கொண்டு இதை செய் இல்லனா இவர்களை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவது போல் அல்லவா பாசக மிரட்டுகிறது.

சல்லிக்கட்டுக்கும் இப்படி தான் செய்தார்கள், நீட்டு பரீட்சைக்கு இப்படி தான் செய்தார்கள், கூடங்குளம், நியூற்றினோவுகும், தூத்துகுடிக்கும் இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் எங்களை ஆட்சியில் அமர்த்தவில்லை ஆதலால் பொம்மை அரசை வைத்து இப்படி தான் செய்வோம் என்று மிரட்டி வைக்கிறது பாசக அரசு.

தமிழகத்தில் இந்த பினாமி அரசை வைத்தே தமிழகத்தை குழி தோன்டி புதைத்துக்கொண்டு இருக்கிறது பாசக அரசு. இந்த பினாமி அரசு வீட்டிற்கு போவதற்குள் தமிழர்கள் அனைவரும் தமிழகத்திலேயே அகதிகளாக ஆக்கப்பட்டுவிடுவார்கள் போலும்.

இந்த இலட்சணத்தில் மூச்சு முன்நூறு தடவை தமிழகத்தின் நலனை பேணிகாக்கவும் வாழ்வாதாரங்களை மீட்டு எப்பதற்காத்தான் பாசக தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்று 'இந்துகளின்' பிரதினிதியாக எங்களை தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும் சொல்கிறது இந்த நயவஞ்சக மதவெறி கட்சி.

இப்படி எல்லாம் மட்டமான அரசியல் செய்ய கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல் எந்த மான வெட்கமும் இல்லாமல் எப்படி இந்த தமிழிசை வகையராக்கள் பொதுவெளியில் வந்து சிரித்துகொண்டு பேட்டி எல்லாம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த மானம் கெட்ட வருவாயில் வாங்கி திண்று வயிறு பிழைப்பதற்கு பதில் ........... அது கொஞ்சம் கௌரவமாக இருக்கும்.

ஒரு பினாமி அரசாக இருக்கும் போதே இவ்வளவு நயவஞ்சகமாக தமிழகத்தை அழிக்க முடியும் என்றால் ஆட்சிக்கு எதுவும் வந்தால் அவ்வளவு தான் மொத்தமாக தமிழ்கத்தை விலை பேசி விற்றுவிட்டு நம்மை எல்லாம் அகதிமுகாமில் அடைத்து வைத்துவிட்டு பசனை பாடவைத்து உண்டகட்டியை கையில் கொடுத்து சர்வம் கிருசுணா அர்பணம் என்று சொல்லி செல்வார்கள்..........சாக்குரதை மக்களே கவனம்.......

Tuesday, March 27, 2018

பாமகவும் பாசகவும் ஒன்று தான் என்று பாமகவே கொடுத்து இருக்கும் வாக்குமூலம்

பாசகவின் பேச்சாளர்களும் சரி அமைப்பாளர்களும் சரி இல்லை பொதுவாக பாசக என்றாலே சாதியை சொல்லாமல் ஒருவரையும் குறிப்பிடுவது இல்லை. பெரியாரை கூட இராமசாமி நாயகர் என்று தான் குறிப்பிடும் அளவிற்கு சாதி வெறியேறிய வெறியர்கள் பாசக.

எங்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்று சொல்லும் பாசகவின் அடியாளாக தயாராக இருக்கும் பாமகவின் சுவரொட்டியை பாருங்கள் அதே சாதி பெயரோடு பெயர்கள். கேட்டால் இல்லை அதனால் இதனால் என்று சப்பைகாட்டு கடுவார்கள்.







மாற்றம் முன்னேற்றம் என்று பாசக சொன்ன அதே பசப்பு வார்த்தைகள் தான் அன்புமணி மற்றும் இராமதாசின் மொழிகளும். மொத்தத்தில் அதே கூட்டு களவானி கும்பல் தான் இருவரும். இப்பவாது அடையாளம் கண்டுகொள்ளுங்க மக்காImage may contain: 2 people, people smiling

பாசக எடப்பாடி மற்றும் அனைத்து அதிமுக மக்களும் தூத்துகுடிக்கு குடிபெயறுகிறார்கள்

எடப்பாடி மற்றும் பாசக தூத்துகுடியில் தேவை இல்லாமல் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், தூத்துகுடி மிகவும் பாதுகாப்பாகவும் மக்கள் வசிக்க மிகவும் உகந்த இடம் என்றும் பரப்புரையை நிகழ்த்திவரும் இந்த நிலையில் அவர்கள் சொல்வது உண்மை என்று நிரூபிக்க டெர்லைட்டு நிறுவனத்தின் பாதுகாப்பான தூரம் என்றும் சொல்லும் இடத்தில் இவர்களின் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு இனி வாழ இருப்பதாக அறிவித்து இருக்கிறார்கள்.

அப்படி பாசகவும் அதிமுகவும் தூத்துகுடிக்கு குடி இருக்க வரும் போது மக்கள் குடி நீர்பெறும் இடங்களிலேயே இவர்களும் குடி நீரும் மற்றும் வாழ்வாதாரங்களையும் பெற்று தங்களது பிள்ளை பேரன் பேத்திகளையும் அங்கேயே கொண்டு சென்று வளர்கவும் உறுதி பூண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தூத்துகுடி வாழ் மக்கள் பாசக மற்றும் அதிமுக மக்களை டெர்லைட்டு ஆலைக்கு அவர்கள் பாதுகாப்பாக உள்ளது என்ற இடத்தில் அவர்களை குடியேத்தி வசதிகளை செய்து கொடுக்கும் படி கேட்டுக்கொள்கின்றோம்.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசக மக்கள் தங்களது சொத்துகளை எல்லாம் விற்றுவிட்டு தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் அமைத்தே தீருவோம் என்று சொல்லும் அனைத்து வடமா நில பாசக மக்களும் தங்களது சொத்துபத்துகளை தமிழக மக்களுக்கு கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக நியூட்ரினோ திட்டம் வரும் இடத்தில் தங்களது சொந்த பந்தங்களுடன் குடியேறி தூத்துக்குடி போல் வாழவும் இருக்கிறார்கள். தேனி மாவட்ட மக்களிடம் சொல்லி தாயுள்ளத்துடன் இவர்களை நியூட்ரினோ திட்டம் பாதுகாப்பு தூரத்தில் உள்ள இடத்தில் குடியமர்த்தவும்.

Saturday, March 24, 2018

பாசக 2Gயை எப்படி ஊதி ஊதி பெரிதாக்கியது என்று வெளியிட்டிக்கிறது துக்ளக்கு பதிப்பு


இந்த படத்தில் இராகுல் என்ற இடத்தில் வினோத்து ராய் என்றும், சந்திரபாபு என்ற இடத்தில் மோடி என்றும் மதிய பாசக அரசு என்ற இடத்தில் இந்திய வாக்காளர்கள் என்று இருந்தால் இதே படம் தத்துரூபமாக பாசக எப்படி 2Gயை ஊதி ஊதி பெருதாக்கி இப்போது வெடித்து காற்று வெளியேறிய பலூனாக நொந்து நூலாக பாசக தவிக்கின்றது என்று அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்கள் குருமூர்த்தி வகையராக்கள்.........





Tuesday, March 20, 2018

எடப்பாடி பழனிசாமி கமல் மற்றும் தலைவரின் ஆட்சியும் இப்படி தான் இருக்கும்

பாசக தனது ஆக்டோபசு கரங்களை இடத்திற்கு தகுந்தார்போல் நிறம் மாற்றி உருமாற்றி வலைவிரித்து காத்து இருந்தது. தகப்பன் இல்லாத வீடாக தமிழகம் இருக்கவே ஆளும் கட்சி கலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில். கலைத்துவிட்டு நாம் ஆட்சிக்கு வருவோம் என்று நினைத்து தேர்தலிலும் இறங்கியது. பிறகு தான் நோட்டாவை கூட தாண்டாத தனது நிலையை அறிந்த பாசக தனது வியூகத்தை மாற்றி கமல் விசயகாந்து மற்றும் தலைவர் மூலமாக தனது ஆக்டோபசு கரங்களை நிறம் மாற்றி உரு மாற்றி வெவேற பெயர்களில் அரசியலில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றது.

இந்த அழகில் எதற்கு ஆகாத எடப்பாடியை கைப்பாவையாக வைத்துக்கொண்டு நீட்டும் இடத்தில் எல்லாம் கையோப்பம் இடவைத்து அரசையும் சட்டத்தையும் கேலி செய்கிறது பாசக.

தமிழகத்தில் இருக்கும் இசுலாமிய மற்றும் கிருத்துவ தேவாலையங்களை அடித்து நொறுக்கும் துவக்கமாக தேர் பயணம் ஒன்றை ஓடவிட்டு வெள்ளோட்டம் பார்க்கிறது. மக்கள் கொதித்து எழவே ஊரங்கு உத்தரவை பிறபித்துவிட்டு ஊரங்கு உத்தரவு என்றால் அது உன்னை தான் என்னையோ இல்லை எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களோ இல்லை என்ற இந்துத்துவாவின் அடிப்படை கொள்கையை மறுபடியும் நிறுவி நிற்கிறது பாசகவின் அடிபொடி எடப்பாடி எடுபுடி அரசு.

எந்தவித நேரடி பங்குமே இல்லாத நிலையில் கலவரத்தை தூண்டி குளிர்காய நினைக்கும் பாசக ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல் மக்களை தெருவில் நிற்க வைப்பது திண்ணம்........

Friday, March 16, 2018

தெர்மகோல் அமைச்சர் செல்லூர் ராசு எங்க படிச்சி விஞ்ஞான பட்டம் வாங்கினார்

Institute Of Scientific Research On Vedas  நிறுவனத்தில் பெற்ற அறிவில் தான் அமைச்சர் செல்லூர் ராசு தனது தெர்மகோல் ஆராய்சி முடிவை மக்களுக்கு செய்து காட்டினார் போலும்.

வடிவேல் தனது வசனத்தில் சொன்னது போல் உங்களுக்கு தெரியாத செய்திகள் இல்லை நீங்களே தேடிப்பாருங்கள், அப்படி தேடி ஆதாரம் கிடைக்கவில்லை என்றால் வாருங்கள் ஆதாரம் தருகிறேன் என்று இந்த நிறுவனத்தை நிர்வகிக்கும் அமைச்சர் தெரிவித்து இருக்கிறார் அறிவியல் மாநாட்டில்.

தெர்மகோல் அமைச்சர் செல்லூர் ராசுக்கு இவர்தான் ஆசான் போலும். வாழ்க வளர்க உங்கள் அறிவியல் சேவை, அப்படியே இந்திய இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களையும் கண்டுபிடித்து அம்பாணி நிறுவனத்திற்கு கொடுத்து பிரான்சு நாட்டு ஏற்றுமதிக்கு கொடுக்க சொல்லுங்கப்பா............

தமிழகத்தில் டொனால்டு டிரம்பின் ஆட்சி மலர்ந்தே தீரும்

அமெரிகாவில் ஆட்சியில் இருக்கும் கட்சி, இந்தியாவின் அமெரிக்க தேவைகளை அளவுக்கு அதிக அக்கறையுடன் கவனித்து செய்ய வல்லவரை தலைவராக கொண்ட கட்சி. பணக்காரர்களுக்காகவும் உழைக்கும் மக்களுக்கு வேலைகள் என்றதில் கவனாமாக இருக்கும் கட்சி.

இது தவிர இந்தியாவின் பணம் செல்லவில்லை என்றால் கொண்டுவந்து என்னிடம் கொடுங்கள் பதிலுக்கு அமெரிக்க டாலர்களை தருகின்றேன் என்று சொல்லும் ஏழை பங்காளர்கள் நிறைந்த கட்சி. நாட்டின் நலனை மட்டுமே மனதில் கொண்டு செயலாற்றுகின்ற உலகின் பெரிய கட்சி என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

குடியரசு கட்சி என்று வெறுமனே பெயரில் மட்டும் அல்லாது செயலிலும் காட்டும் ஒரு மிக பெரிய உலக மக்களாட்சி கட்சி தமிழகத்தை ஆளுவதற்கு நாம் எல்லாம் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.

டொனால்டு டிரம்பின் ஆட்சி தமிழகத்தில் நடந்தால் தமிழகம் பெறப்போகும் நன்மைகள் எல்லாம் என்ன என்று பார்ப்போம்.

அமெரிக்கவில் வேலை கிடைக்கும், அமெரிக்க சம்பளத்தில் தமிழக வாழ்கையை அனுபவிக்கலாம்.

தற்பொழுது நீட் தேர்வை நடத்தும் அமெரிக்க நிறுவனம் தமிழகத்திற்கு என்று தமிழர்களை மனதில் கொண்டு மட்டும் நடத்தப்படும். இந்தி தெரிந்து இருக்க வேண்டும் என்று கட்டாயபடுத்தபட மாட்டாது. படிப்பு அமெரிக்காவில் படிக்க அந்த நீட் பரீட்சை. அங்கே மருத்துவ மேற்படிப்புக்கு செல்லும் மக்கள் தற்கொலை செய்துகொள்ள தேவை இருக்காது.

தமிழக மீனவர்கள் ஒருவரேனும் கொல்லப்பட்டால் இலங்கை அமெரிகாவின் எதிரி நாடாக கருத்தப்படும், விளைவு இலங்கையை எந்த ஒரு வர்த்தகமும் செய்யமுடியாமல் ஒதுக்கி வைப்பது மட்டும் அல்லாது தீவிரவாத நாடாக அறிவிக்கப்பட்டு அமெரிக்காவின் படை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்க இராணுவம் இலங்கையில் ஆட்சியை நடத்த வேண்டி வரும்.

தமிழகத்திற்கு தேவைபடும் அணுமின் உற்பதியை இலங்கையில் அணு உலைகளை நிறுவி கடலுக்கடியில் மின் கம்பிகளை புதைத்து பாதுகாப்பாக கொண்டு வந்து கொடுக்கும்.

தமிழகத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் டப்பா கார்களையும் பேருந்துகளையும் எண்ணை மற்றும் மின்சாரத்தில் ஓடும் வண்டிகளை கொண்டு மாற்றி அமைத்து மாசில்லா காற்று மண்டலமாக மாற்றி கொடுக்கும்.

தமிழகத்திற்கு GST வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு அமெரிக்காவின் வரிவிகிதத்தை செயல்படுத்துவார்கள்.ஏன் என்று எந்த மைய அராசாவது கேட்டால் தமிழகம் அமெரிகாவின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ள முடியும் என்று அமெரிக்க அதிபரிடம் இருந்து பதில் வரும்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களின் அனைத்து வியாபாரிகளின் ஏற்றுமதி தமிழகத்தின் வழியாக மட்டுமே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு நடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியும்.

அமெரிக்க பொது தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிக்கவும் வழி செய்யப்படும்.

தமிழகத்தின் தேவைகளை அனைத்தும் எந்த கேள்வியும் கேட்காமல் இந்திய அரசு செய்துகொடுக்கும், அமெரிகாவை பகைத்துக்கொள்ள இந்திய ஆட்சியர்கள் பயப்படுவார்கள்.

தமிழகத்தில் மற்ற மாநிலத்தவர்கள் உள்ளே வர அமெரிக்க அரசின் அனுமதியை பெற்று தான் வரவேண்டும் என்று சட்டம் இயற்றப்படும், இது தமிழகம் அமெரிக்காவின் பகுதியாக கருத போவதால் மக்களின் பாதுகாப்பு கருதி செய்யப்படும்.

தமிழகத்து சாலைகளும் வீடுகளும் அமெரிக்க தரத்திற்கு உயர்த்தபடும், ஊருக்கு ஊர் பயணிக்கும் சாலைகள் அதிவேக மற்றும் பாதுகாப்பான சாலைகளாக மாற்றப்படும். சுங்கவழி சாலை மற்றும் சுங்கமில்லா சாலைகளும் அமைக்கப்படும். கப்பம் கட்ட வேண்டாம் என்று நினைப்போர் சுங்கமில்லா சாலையில் தாராளமாக செல்லலாம்.

அடிப்படை தொழில் புரிவோருக்கு குறைந்தபட்ச சம்பளம் அமெரிக்காவின் தரத்திற்கு உயர்த்தப்படும்.

அமெரிக்க தயாரிப்புகளை நேரடியாக குறைந்த விலையில் தமிழகத்தில் கிடைக்க வழி செய்யமுடியும்.

தமிழர்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்க முப்படையும் தமிழகத்தை சுற்றி பாதுகாப்பிற்கு நிறுத்தி வைக்கும். இந்திய தீவிரவாதம் தமிழகத்தில் தலை எடுக்க முடியாது, மசூதியை இடிப்பேன், கிருத்துசபையை இடிப்பேன், சிலைகளை சிதைப்பேன் என்று உளருபவர்களும் கிளம்புவர்களும் தக்கபடி தண்டிக்கபடுவார்கள்.

தமிழர்களை கண்டபடி சுரண்டலாம் என்று மற்ற மாநில அரசியல்வாதிகள் இனி கனவுக்கூட கானமுடியாமல் திணருவார்கள்.

தமிழகம் மூன்றாம் தர நாட்டின் பட்டியலில் இருந்து முன்னேறிய நாட்டின் பட்டியலுக்கு செல்லும்.

தெற்காசியாவின் வல்லரசாக தமிழகம் மாறும்.

இவைகள் எல்லாம் நடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் தமிழகத்தில் டொனால்டு டிரம்பின் ஆட்சி மலர்ந்தே தீரவேண்டும் சிந்திப்பீர். யார் யார் எல்லாம் கட்சியில் சேரவிரும்புகிறார்களோ https://www.gop.com/ தளத்திற்கு சென்று உறுப்பினராக சேரவும்.

Wednesday, March 14, 2018

மோடியை விட யோகி மிகுந்த தலைமை பண்பு கொண்டவர் என்று மறுபடியும் நிரூபிதுள்ளார்

உபி இடை தேர்தல் முடிவுகள் வெளியானதும் வெற்றி பெற்ற மாற்று கட்சியினரை வாழ்த்தியது மட்டும் அல்லாது எதிர்கட்சிகளின் கூட்டணியை குறைவாக மதிப்பிட்டது தான் தோல்வியின் காரணம் எனவு தெரிவித்துள்ளார்.

எனக்கு தெரிந்த வரை மோடி எந்த ஒரு தோல்விக்கும் இந்த விதத்தில் பொறுப்பாக பதில் அளித்து பார்த்ததே கிடையாது. எப்போதும் நான் தான் என்ற அகந்தையுடன் தான் வலம் வருவார் மோடி.

அதுவும் ஏதேனும் வெற்றி என்று வந்துவிட்டால் இமாயல அளவிற்கு குதிப்பதும் தோல்வி என்று வந்தால் ஒன்று வெளி நாட்டிற்கு ஓடுவதும்(சின்ன சின்ன நாடுகளுக்கோ அல்லது ஏழை நாடுகளுக்கோ). இல்லை பேசவே தெரியாதவர் போல் ஒளிந்து கொள்வதும் தான் மோடியின் பண்பு. கிட்டதட்ட துவக்கப்பள்ளியில் பயிலும் சிறுவனின் குணம் அது.

ஆனால் யோகியோ மிகவும் தைரியமாக தோல்வியை ஒத்துகொள்வதும் மட்டும் அல்லாது காரணத்தையும் வெளியிடும் தைரியசாலியாகவும் இருக்கிறார். வாழ்த்துக்கள் யோகி பாசகவின் அடுத்த பிரதமர் வேட்பாளார் நிச்சயமாக நீங்கள் தான்.......

Tuesday, March 13, 2018

இது தான் புதிய இந்தியா

ஒவ்வொரு நாடும் வளர்ந்து இருக்கிறது என்றதை எந்த அளவுகோள் கொண்டு அளக்கும். பணம் எவ்வளவு வங்கிகளில் சேர்கிறது என்றா அல்லது மக்கள் கட்டிய வரிப்பணம் உயரும் போது அடடா நாடும் அதன் பொருளாதாரமும் வளர்ந்து இருக்கிறது என்று புள்ளியிலில் காட்டுவதா. இல்லை உலக பணக்காரர்களில் இந்தியர்கள் எத்தனை பேர் இடம்பெற்று இருக்கிறார்கள் என்றா.......எப்படி கணிப்பது.

அன்றைக்கு சென்னையை வெள்ளம் தாக்கிய போது அங்கே நடக்கும் அவலம் பார்க்க பொறுக்காமல் கையில் இருக்கும் பணத்தில் என்ன என்ன வாங்க முடியுமோ அவைகளை எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து நின்றார்களே மக்கள் அதில் இருக்கிறது நாட்டின் முன்னேற்றம். சென்னையில் தான் வெள்ளம் நமக்கு என்ன என்று இருக்காமல் தமிழகத்தின் மற்ற பகுதிமக்களும் நிவாரணம் கொண்டு வந்து குவித்தார்களே அதில் இருக்கிறது முன்னேற்றம். சென்னையில் வெள்ளம் வந்தால் எங்களுக்கு என்ன என்று இருக்காமல் பெங்களூருவில் இருந்தும் வந்தார்களே அதில் இருக்கிறது நாட்டின் முன்னேற்றம்.

மெரினாவில் கூடிய அந்த கூட்டத்திற்கு போராட்ட இறுதி நாள் வரை உணவு நீரை கொண்டு வந்து கொடுத்தார்களே அதில் இருக்கிறது தேசத்தின் முன்னேற்றம்.

அன்று அந்த முகம் தெரியா சகோதர சகோதரிகள் கொட்டிய பணத்திற்கு இவ்வளவு செலவு செய்தேன் என்று இது வரையில் கணக்குகளை வெளியிடாமல் இருக்கிறார்களே அதில் இருக்கிறது இந்தியாவின் முன்னேற்றம்.

நேற்று மும்பையை நோக்கி வந்த விவசாயிகளுக்கும் அதே போல் மருத்துவம் முதல் மைல் கணக்கில் நடந்து வந்த காலில் அணிய புதிய காலணிகள் உட்பட கொண்டு வந்து கொடுத்து இருக்கிறார்களே அது முன்னேற்றம்.

மற்றபடி அவன் முன்னேறுகிறான் பார் முன்னேறவிடலாமா என்ற பேச்சுக்குகளை எல்லாம் மக்கள் புறம் தள்ளித்தான் வாழ்கிறார்கள் என்ற உண்மையை என்றைக்கு தான் இந்த பாழாய் போன அரசியல் சமூகம் புரிந்துகொள்ள போகின்றதோ...........

நீங்க வல்லரசு ஆகுங்க ஆகாம போங்க ஆனால் இந்தியாவின் இந்த அபரிவிதமான வளர்ச்சி மிகவும் அவசியமான வளர்சி அந்த வகையில் இந்தியா முன்னேறிய இந்த புதிய இந்தியாவை போற்றி மகிழ்வோம்.......வாழ்க சகோதரத்தும்........

Monday, March 12, 2018

மீனவர்களை கடற்படை கொண்டு மீட்டது போல் விமான படை கொண்டு மாணவர்கள்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை கடற்படை கொண்டு கடைசி மீவர் மீட்கப்படும் என்று வெறும் வசனம் மட்டுமே பேசிய நிர்மலா சீத்தாரம் இப்போது தீ காட்டில் மாட்டி இருக்கும் மாணவர்களை மீட்ட விமான படையை பயன்படுத்த போகிறாராம். அன்று மீனவர்களை அந்த தினம் மட்டும் மீட்க உத்தரவிட்டது போல் இப்போது இந்த மாணவர்களை மீட்க உத்தரவிட்டுள்ளாராம்.

பாசகவின் பேச்சை காற்றில் தான் எழுதனும் என்று ஒவ்வொரு முறை நிரூபித்த பின்பும் இன்ன்மும் அறிகை விட்டுக்கொண்டு இருக்கிறார் நிர்மலா.

இனி தான் தன்னார்வ தொண்டர்கள் இன்னும் தீவிரமாக தேட ஆரம்பித்து இருப்பார்கள், இது வரை மீட்கப்பட்ட 27 பேர் போல் மீதம் இருப்பவர்களையும் தேடி மீட்பார்கள் என்று நம்புவோமாக.

 நிர்மலா சீத்தாராமன் பேசாம பூனை நாய் போன்ற வீட்டு விலங்குகளை எப்படி காட்டு விலங்காக இந்திய அரசியல் அமைப்பில் மாற்றி பீட்டா போடும் பேட்டாவை முறைவாசலாக எப்படி பெறுவது என்று ஆராய்ந்து முடிக்கவும் அதை விடுத்து சும்மனாச்சுக்கும் இந்த வசனம் எல்லாம் எதற்கு.

Sunday, March 11, 2018

மோடியின் பணக்காரர்கள் மும்பைக்கு ஊர்வலமாக சென்று இருக்கிறார்கள்

மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தினமும் சொன்ன செய்தி ஏழைகள் எல்லாம் நிம்மதியாகவும் அமைதியாகவுன் வீட்டில் தூங்குகின்றார்கள்.

அந்த ஏழைகளில் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்த ஏழைகள் எல்லாம் நாட்டைவிட்டு ஓடிப்போய் கொள்ளை கொண்ட பணத்தில் வெளிநாடுகளில் பஞ்ச பரதேசிகளாக தங்கியும் இருப்பதாகவும் மோடி அவ்வப்போது தெரிவித்துக்கொண்டும் இருக்கிறார்.

இந்த நிலையில் இந்தியாவின் திமிர் பிடித்த பணக்காரர்கள் மும்பை நகரை நோக்கி ஊர்வலமாக வந்துக்கொண்டு இருப்பதை ஊடகங்கள் வெளியிட்டு மோடியையும் பாசகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறார்கள் பாருங்கள்.

Thursday, March 8, 2018

இலங்கையை பார்த்து மனித குலமே பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

அன்றைக்கு தமிழர்களை சிங்களர்கள் படு கொலை செய்யும் போது, நாங்களும் தமிழர்களும் வேறு என்று ஒதுங்கி யாருக்கோ என்னமோ நடக்குது என்று இருந்தார்கள் இலங்கையில் ஒரு பிரிவினர்கள்.

இன்றைக்கு அந்த பிரிவினர்கள் தாக்கப்படும் போது உலகுக்கு தெரியாமல் மறைத்து இரும்பு திரையிட்டு பாசகவின் பாணியில் கலவரம் என்ற பெயரில் படுகொலைகள் நடந்துக்கொண்டு இருக்கின்றது.

இரத்த வெள்ளமாக படங்கள் வெளியான போது எல்லாம் வெற்றிலை பாக்கு கறைபடிந்தது போல் பாசாங்கு செய்தவர்களின் ஈர கொலையை அதே பாணியில் இன்று பாசகவின் பாணியில் பிடுங்கி எடுக்கப்படுகின்றது. கோத்ராவின் பெயரில் நடைபெற்ற கருவறுத்தல் போல் அந்த பிரிவினர்களின் கருவை அறுக்கிறார்கள் சிங்களவர்கள்.

தீ அடுத்தவன் வீட்டில் தானே எரிக்கின்றது நம்ம வீட்டுக்கு வரட்டும் தண்ணீர் ஊற்றுவோம் அது வரையில் வாளியில் தண்ணீரை நிறப்பி மட்டுமே வை என்று இருந்தால் நாளை உனக்கு என்ன நடக்கும் என்று காலம் இந்த கொடுமையான நிகழ்வால் உணர்த்துவது வேதனையாக இருக்கிறது.

இனிமேலாவது திருந்துவார்களா மனிதர்கள் இல்லை, பாசகவின் சூழ்சியிலே மாட்டி விட்டில் பூச்சாய் சாகத்தான் போகிறார்களா............

மோடி விரைவில் பாராளுமன்ற தேர்தல் வரும் என்று சொன்னதின் பின்னணி இது தான் போலும்

ஏன்டா சிலைகளை உடைகிறீங்க என்று கேட்டால், லெனின் சிலையை நாங்கள் உடைப்பதற்கும் அதை போல் எங்களுடைய கட்சி/இயக்கம் தவிர மற்ற எல்லா கட்சி/இயக்கம்/மதம் சார்ந்த சிலைகளுக்கும் அடையாளங்களுக்கும் இதே கதி தான் விளையும். காரணம் லெனின் சிலை இரசியாவில் நடந்தது போல் நாங்கள் செய்கின்றோம். அது மட்டும் அல்ல மேலை நாடுகளில் சகிப்புத்தன்மை குறைந்துக்கொண்டு வருகின்றது அதன் காரணமாக எல்லா இடங்களிலும் தங்களின் இயக்கம்/சித்தாந்தம் இல்லா மற்ற எல்லாவற்றையும் அழித்து ஒழித்து தான் வருகிறார்கள் என்று சொல்கிறார்கள். ஒரு வேளை குசராத்தை தான் உலகம் என்று நம்பிக்கொண்டு இருக்கிறர்கள் இந்த அடிப்பொடிகள்.

சரி இந்த அடிபொடிகள் சொல்வது போல் மேலை நாடுகளிலும் வளர்ந்துவரும் நாடுகளிலும் உலகின் வல்லரசு நாடுகளிலும் நடப்பதுலாயே இவர்களும் செய்வார்கள் என்றதை வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும். கீழே இருக்கும் படங்களில் காட்டி இருப்பது போல் அதே மேலை நாடுகளிலும் நாகரீகம் மிக்க நாடுகளிலும் வல்லரசு நாடுகளிலும் செய்கிறார்கள் என்று செய்தால் பாசகவிற்கும் அதன் அடி பொடிகளுக்கும் சம்மதம் என்று தான் சொல்வார்கள் பாருங்கள்.





விவாத களத்தில் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்குமே படிக்காமல் வந்து செய்முறை வைவாவுக்கு பதில் அளிப்பது போல், கேட்ட கேள்விகளை தவிர மற்ற எல்லா செய்திகளையும் விளக்கு விளக்கு என்று விளக்குகிறார்கள். அப்படி விளக்கும் விளக்களத்தில் அள்ளிவிடும் செய்திகளுக்கு ஆதாரம் என்று கேட்டால் எத்தனையோ இருக்கு, எனக்கு அவுங்க சொன்னாங்க இவுங்க சொன்னாங்க என்று சொல்கிறார்கள். அவர்களை எல்லாம் பார்க்கவே பாவமாக இருக்கிறது.

Wednesday, March 7, 2018

அறம் படமும் - The 33 படமும்

The 33 movie

அறம் படம் பார்த்ததும் எழுத வேண்டும் என்று இருந்தேன் மற்ற பதிவுகள் வந்ததில் தள்ளி போனது.

ஆங்கிலத்தில் வந்த The 33 படத்தை அப்படியே தமிழாக்கம் செய்து எடுத்துள்ளார்கள். தமிழாக்கம் என்று சொல்வதை விட கம்மனாக்கம் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

பெயர் போடும் காட்சியில் இருந்து கடைசியில் காட்டும் எழுத்துகள், இவர்கள் யாரும் தண்டிக்கபடவில்லை என்று சொல்லும் வரை அழகாக மாற்றி எழுதி எடுத்து இருப்பார்கள்.

ஆங்கிலத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஒரு சுரங்கத்தில் நடக்கும் விபத்தில் 33 பேர் உள்ளே மாட்டிக்கொள்வார்கள். அவர்களை எப்படி மீட்கிறார்கள் என்றது தான் கதை.

தமிழில் அழாக அதை ஒரே குழந்தையாக மாற்றிவிட்டார்கள்.

ஆங்கிலத்தில் நாட்டை ஆளுபவரின் மகன் அரசியலுக்கு புதிதாக வந்திருபவரின் முதல் கள அனுபவம். தமிழில் மாவட்ட ஆட்சியர் பெண் என்று அழகாக மாற்றியுள்ளார்கள்.

ஆங்கிலத்தில் எங்கள் அனுபவத்தில் இது மாதிரியான விபத்துகளில் அதை செய்வோம் இதை செய்வோம் என்று காலம் கடத்துவோம் பிறகு எல்லோரும் இறந்த பிறகு இரக்க செய்திகளை மட்டும் அலங்காரமாக வெளியிட்டு பணம் மட்டும் கொடுப்போம் என்று சொல்வார்கள்.

தமிழில் கிட்ட தட்ட அதே வசன பிரயோகங்களை பார்க்க முடியும்.

ஆங்கிலத்தில் அந்த முதல் காட்சியில் அந்த சுரங்க தொழிலாளிகளின் எளிய வாழ்கையை காட்சிபடுத்தி இருப்பார்கள் அதையே வறுமைக்கு பிறந்தவர்களாக தமிழில் காட்டி இருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் ஒரு கட்டதில் மீட்பு பணிகளை கைவிடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதும், பிறகு பாதிக்கப்பட்டவரின் அக்கா சொல்லும் வசனம், 'எப்பவுமே நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைத்து தான் செயல்படுவேன் ஆனால் என்னவோ அது எப்பவுமே தப்பியே போகின்றது. ஒரு வேளை எல்லாவற்றையும் தப்பியே செய்யும் பிரவியோ" என்று சொல்லும் வசனத்தில் துளிர்ந்து எழுந்து தப்பி போகின்றாபடியே துளையிட்டல் தான் அந்த அடைத்து இருக்கும் தூணைய் தவிர்த்து துளையிடமுடியும் என்று மீண்டும் ஒரு வழியில் துளையிட்டு வெற்றி காண்பார்கள்.

தமிழில் இனி ஒன்றும் செய்யமுடியாது என்றது ஏன் எதற்கு என்ற காரணமே இல்லாமல் நயன் அழுவதும் பிறகு அந்த பையனை துளைக்குள் அனுப்புவதும் என்று சொதப்பி இருப்பார்கள்.

ஆங்கிலத்தில் கிட்ட தட்ட அந்த போராட்டம் 1 1/2 மாதம் நடக்கும் அதனால் அவர்களின் சொந்த காரர்கள் அங்கேயே தங்கவும் படிக்கவும் வீட்டிற்கு சிலராக சேர்த்து வைத்து உணவு இடம் என்று காட்டி இருப்பார்கள். தமிழிலோ ஒரே நாள் வேலை முடிந்தது என்று காட்டி முடித்திருப்பார்கள்.

இப்போது இரண்டாம் பாகம் எடுப்பதாக வெளியிட்டு இருக்கிறார்கள் எந்த படம் என்று காத்திருந்து பார்ப்போம்.

அறம் படத்தில் அரசியல் சார்ந்த வசனங்களுக்கா பாராட்டியே தீர வேண்டும், அதுவும் வல்லரசு இந்தியாவின் மீட்பு கருவி வெறும் கயிறு மட்டும் தானா என்று கேட்கும் கேள்வி 60 ஆண்டுகால வளர்சியையும் மீண்டும் ஒரு முறை பரீசிக்க வேண்டிய கட்டாயத்தை காட்டியது.

எச்ச சர்மா இலங்கை மத கலவரத்திற்கு ஆள் பத்தலையாம் RSS ஆட்களை அனுப்பவும்

எச்ச சர்மா தான் தமிழ் பேசுவதால் தமிழர் என்று மக்கள் நினைத்துவிடுவார்கள் என்ற நினைப்பில் வலம் வந்துக்கொண்டு இருக்கும் ஒரு வடக்கத்தியர். அதனால் தான் குசராத்து கட்சி தமிழகத்தை ஆள வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்பவர்.

இந்தியா முழுவதும் கொழுந்துவிட்டு எரிய வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கும் பாசகவின் தமிழக ஆக்டோபசு கரமான எச்ச சர்மா தற்பொழுது இலங்கையில் கொழுந்துவிட்டு எரிக்கின்றது மதகலவரம்.

நீங்களும் நீங்கள் சேர்ந்த மதவாத பிரிவினைவாத இயக்கமான பாசகவின் சேவை இலங்கைக்கு இப்போது தேவை. வெறிபிடித்த உங்கள் ஆட்களை அனுப்புங்கள் இலங்கை அரசுடன் இணைந்து உங்கள் இயக்கத்தின் இரத்த தாகத்தை தணித்துக்கொள்ளலாம். இந்தியாவை விட்டு விடுங்கள்.

Tuesday, March 6, 2018

பிரிவினைவாத பயங்கரவாத பாசக நுட்பமான தாக்குதலை துவக்கி இருக்கிறது

தமிழகத்து எதற்கு குசராத்து கட்சியின் ஆட்சி என்று முதலின் எச்ச சர்மா விளக்கட்டும் பிறகு லெனின் எதற்கு என்று நாங்கள் விளக்குகின்றோம்.

வடகிழக்கு மாநிலத்தில் சென்று இராமர் கோவில் கட்டலாம் வாங்கள் கலவரம் செய்து அதை செய்வோம் என்று சொன்னால் வரமாட்டார்கள் அதனால் அங்கு சென்ற முறை ஆட்சியில் இருந்தவர்களை அடித்து நொருக்கி கொன்று கொலைகளை செய்ததோடு மட்டும் இல்லாது அவர்களது அரசியல் தலைவர்களின் சிலைகளையும் நொருக்கி ஆகாகா என்று அரக்கர்கள் சிரிப்பது போல் சிரித்து பேட்டி அளிக்கிறார்கள் இந்த பாசக அரக்கர்கள்.

கோராவில் தங்களின் மக்களை தாங்களே கொளுத்திவிட்டு மற்ற மதத்தினர் கொளுத்திவிட்டார்கள் என்று கூவி அன்றைக்கு கலவரம் என்ற பெயரில் மக்களை கொலை செய்து குவித்தார்கள். இன்று லெனினுக்கு இந்தியாவில் என்ன வேலை என்று கேட்கிறார்கள்.

அட மடையற்களே அதே தான் நாங்களும் கேட்கின்றோம் ரபேல் விமானமும் மிக் விமானங்களும் நமக்கு எதற்கு. தூக்கி குப்பையில் வீசி விட்டு வில் அம்பு கசாயுதம் கொண்டு இந்திய இராணுவத்தை சங்க பரிவாரம் கொண்டு காத்துகொடுங்கள். என்றைக்கு இந்த முடிவை நீங்கள் எடுக்கிறீர்களோ அன்றைக்கு இந்திய இராணுவ மற்றும் அது சார்ந்த அமைப்புகளும் பணியும் வேண்டும் சம்பளமும் வேண்டாம் என்று சொல்லி ஓடும்.

எந்த ஊரில் எந்த சரக்கு விற்கும் என்று தெரிந்து அந்த அந்த இடத்திற்கு தகுந்தார் போல் ஆக்டோபசு முறையில் பாசக தாக்க முயன்று வருகின்றது. இதற்கு நீதிதுறையின் துணையில் தான் பதில் அளிக்க வேண்டும், தவிர பாசக எதிர்பார்ப்பது போல் மற்றவர்களும் உணர்ச்சிவசப்பட்டு துவங்கினால் கோத்ராவின் தாக்குதலை தயங்காமல் நடத்த அனைத்து மாநிலத்திலும் ஆட்களை சங்க பரிவாரம் என்ற பெயரில் தயாராக நிறுத்தி வைத்து இருக்கும் பாசகவின் திட்டத்திற்கு துணை போனது போல் ஆகிவிடும். கட்சி வித்தியாசம் பார்க்காமல் வடகிழக்கு மாநில தாக்குதலுக்கு அனைவரும் கண்டம் தெரிவிப்பதோடு தங்கள் மாநிலங்களில் இந்த மாதிரியான மாயாசாலங்களை பாசக அரங்கேற்றாமல் தடுக்கவும் வேண்டும்.

Monday, March 5, 2018

பொய் சொல்லும் எச்ச சர்மா - தமிழகத்தில் பாசக ஆட்சி அமையும்

தமிழக வாக்காளர் எண்ணைக்கையையும் திரிபுரா எண்ணிக்கையையும் ஒப்பிட்டால் தமிழக வாக்களர்களில் வெறும் 4.3% மட்டுமே மொத்த வாக்காளர்களாக கொண்ட மக்களிடம் வாக்குகள் வாங்கி வெற்றி பெற்ற பாசக அதே போல் தமிழகத்தில்லு வெற்றி பெரும் என்ற கனவை வித்தைத்து இருக்கிறார் சாதி மத அராய்சியாளர் மற்றும் நிபுணர் எச்ச சர்மா.

55 இலட்சம் வாக்காளர்கள் மட்டுமே உள்ள ஒரு மாநிலத்தில் 2 வீட்டிற்கு ஒருவர் என்று அமர்த்தி, வாரத்தில் 4 நாட்கள் வீட்டிற்கு வந்து. பாருங்க சாலைகள் சரியில்லை, பல இடங்களில் சாலைகளே இல்லை. மேலும் உங்கள் வீட்டு பெண்கள் படிக்க பள்ளிகள் கூட இல்லை. மழைக்கு ஒதுங்க ஒரு இடம் கூட இல்லை. வண்டியோ பேருந்தோ கூட இல்லை. இப்படி பட்ட ஒரு வாழ்க்கையா நீங்கள் வாழ்வது என்று சமயம் கிடைகும் போது எல்லாம் ஆடு நனைகின்றதே என்று ஓநாய் அழுததை போல் அழ வைத்தார்கள்.

இன்னும் இதைவிட கேவலமாக குசராத்தில் வாழும் இதே எழுத்தர் உங்களை போல் உள்ளவர்களின் வங்கி கணக்கில் 15 இலட்சம் பணம் இருக்கிறது. அவரவர் கார்களையும் வீடுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள். ஆனால் பாருங்கள் உங்களுக்கோ கூரை வீடு, ஒழுகும் பேருந்து, சகதியுடம் சாலை என்று உதடு பிதுங்க விரக்தியாக கதை சொன்னார்கள்.

வட கிழக்கு மாநிலங்கள் இது வரையில் சொன்ன புகார்களிலே மிகவும் அதிகமாக இடம் பிடித்தது இந்திய அரசு எங்களை எல்லாவிதத்திலும் வஞ்சிக்கிறது மற்றும் எங்களுக்கு என்று எதையும் கொடுப்பது இல்லை என்றும் சொல்லும் குற்றசாட்டுக்கள் எவ்வளவு உண்மை என்று இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது.

நேர்மை நாணயம் உழைப்பு என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பாசக அந்த 3 சொற்களும் ஆட்சியை பிடிக்க பயன் படுத்திய அலங்கார வார்த்தைகள் மட்டுமே என்று 4 ஆண்டுகளாக நிரூபித்து வந்த செய்திகள் கூட வட கிழக்கு மாநிலங்களுக்கு இது வரையில் எட்டவில்லை என்று தெளிவாக அறிவிக்கின்றது இந்த பாசக வெற்றி.

2014ல் மொத்த இந்தியாவும் பாசக வந்ததும் தேவலோக இந்திரன் வானத்தில் இருந்து இறங்கி வந்து பாலாறும் தேனாறும் ஓட விடுவதோடு வீட்டு முற்றத்தில் மேயும் கோழியை காதில் இருக்கும் காதட்டியை கழட்டி வீசி எறிந்து ஓட்டும் நிலையும் வரும் என்றும் தான் மக்களை நம்பவைக்கப்பட்டது.

ஆனால் நடந்ததோ பாசகவின் முதலாளிகள் பொதுமக்களின் பணத்தையும் செல்வத்தையும் கொள்ளையடிதுக்கொண்டு வெளி நாடுகளுக்கு ஓடுவதும் அந்த நட்டத்தை பல்வேறு வகையில் பொதுமக்களிடம் பாசக வசூலிப்பதையும் மக்கள் கண்டு வெறுத்து போயி இருக்கும் நிலையில் பாவம் வடகிழக்கு மாநிலங்கள் இப்போது தான் அந்த மின்மினி பூச்சின் வெளிச்சத்தை நம்பி பாலாறும் தேனாறும் வரும் என்று நம்பி ஏமாந்து இருக்கிறார்கள்.

இனி இந்த மாநிலங்கள் இன்னும் ஒரு 100 ஆண்டுகளுக்கு பொருளாதார அளவிலும் தனி மனித அளவிலும் பின்னுக்கு தள்ளப்பட்டு எல்லோரும் ஓடு ஏந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு வெகு எளிதாக தள்ளும் பாசக. இனி மாடு, மற்றும் கோமிய அரசியல் மட்டுமே அங்கே நடக்கும், வேறு ஒரு மாற்றமும் விளையபோவது இல்லை, இந்தியாவின் மற்ற மாநிலங்கள் போலே.

திருவாளர் சாதி மத அராய்சியாளர் மற்றும் நிபுணர் எச்ச சர்மாவுக்கு இன்னமும் அதோ பார் பசு, இதோ பார் சாணம், அங்கே பார் பசு மூதிரம், இங்கே பார் பசு கறி என்று சொல்லி. ஆடு மாடு பன்றி கோழி நாய் பூனை போன்றவைகளை காட்டுவிலங்காக மாற்றியும், தமிழர்கள் அதிகம் சாப்பிடும் காய்கறிகளை அரிய இன வகை காய்கள் பட்டியலில் சேர்த்து தடை செய்தும் மக்களை வாட்டலாம் என்றும் திட்டம் இருக்கும் போல. அந்த திட்டதின் கனவு தான் அவரை இப்படி எல்லாம் பேச வைக்கின்றது.

எச்ச சர்மா உங்களோடு சேர்ந்து நாங்களும் சொல்கின்றோம் தமிழகத்தில் பாசக ஆட்சி தான் அடுத்த 4 ஆண்டுகளுக்கு. எப்போது அதிமுகவை கலைக்கிறீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும். அந்த வழியில் பாசக தமிழகத்தை ஆளப்போவது உறுதி.

Thursday, March 1, 2018

மோடி நீங்கள் சொல்வது எல்லாம் எச்ச சர்மாவுக்கு தெரியுமா - சோர்டான் மன்னர்

மோடி நீங்கள் சோர்டான் மன்னருக்கு செய்யும் பிரசங்கம் எல்லாம் எச்ச சர்மாவுக்கு தெரியுமா. சமீபமாக அவர் யார் யார் என்ன மதத்தை சார்ந்தவர்கள் என்றும் 'இந்துக்கள்' தவிர மற்ற அனைவரும் தீவிரவாதிகளும் மற்றும் பாக்கிட்தானத்திற்கு போய் வாழ வேண்டியவர்கள் என்றும் அல்லவா பேசி வருகிறார்.

வழக்கம் போல் உங்களின் உபதேசம் ஊருக்கு மட்டும் தான் என்றது எங்களு நன்றாக தெரியும். உங்களையும் சேர்த்து தான் சொல்கின்றோம்.

வெளி நாட்டில் இருந்து ஒருவர் வருகிறார் என்றால் எத்தனை பசப்பு வார்த்தைகள்.

"தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்பது எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல, இளைஞர்களை தவறாக வழி நடத்தும் மனநிலைக்கு எதிரானது." -- அதாவது பசு, பசு மூதிரம், பசு சாணம், பசு கறி என்று இளைஞர்களை வழி நடத்தில், நாளை சாலையில் யாராவது பையை தூக்கிக்கொண்டு வந்தால் அதில் பசுக்கறி இருக்கிறதா என்று கையில் குத்து வாலுடன் அலைய வைத்து இருப்பது போல்.

"இசுலாமில் உள்ள நல்ல மாண்புகளோடு இளைஞர்கள் தங்களை பொருத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் நவீனத்தினை அதனோடு இணைப்பது குறித்தும் சிந்திக வேண்டும்." -- அதாவது பையில் வைத்து இருக்கும் கறி பசுக்கறியா இல்லையா என்று ஆராய ஒரு அராய்ச்சி மாணவர் ஒரு கருவியை வடிவமைத்துக்கொண்டு வந்து நின்றாரே அவரை போல, ஆதார் விபரங்களை திரட்டுவதன் மூதல் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு சாவடிகள் தோரும் எவ்வளவு மதத்தினர் என்ன விகிதா சாரத்தில் இருக்கிறார்கள் என்ற தரவுகளை பெறலாம் என்று அலோசனை சொன்னதை போல். இணையத்தின் மூலமும் இன்னும் பிற தொலை தொடர்பு வழிகளிலும் படங்களை எடுத்து வெட்டி ஒட்டி அமெரிக்காவுல கொடுத்துனுவோ ஆப்பிர்காவுல கொடுத்தானுவோ என்று புளுகுவதை போலும் என்றும் சொல்ல வருகிறீர்களா மோடி.

சோர்டான் மன்னருக்கும் தெரியும் நீங்கள் எவ்வளவு பெரிய பொய்யர் என்று, யாரை ஏமாற்ற இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் என்று உங்களின் மனசாட்சிக்கு தெரிந்தால் சரி. அது சரி 6 நாட்களில் 1,30,000 இசுலாமியரை கர்பிணிகள் வயிற்றை அறுத்து கருவருத்தவர் ஆயிற்றே நீங்களி உங்களிடம் போய் மனசாட்சி பற்றி எல்லாம், கடவுளே.............